Home Uncategorizedஎன் போதை தேனே

என் போதை தேனே

by Pradhanya kuzhali

EPISODE -6

மோஹித்தின் போன் அடித்துக் கொண்டே இருந்தது. எடுத்துப் பார்க்க அதில் கரன் என வர,  வேறு வழி இல்லாமல் போனை அட்டென் செய்தான். அருகில் அருவி உறங்கிக் கொண்டிருந்தாள். காரின் ஓட்டம் அவளுக்கு தாலாட்டு போல இருக்க உறங்கி விட்டாள். 

“ஹலோ என்ன டா பண்ணிட்டு இருக்க எப்போ வர போற? புது பட வேலைகள் ஆரம்பிச்சிடுச்சு. தலைக்கு மேலே வேலை இருக்கு நீ என்னடான்னா இப்படி பொறுப்பே இல்லாம இருக்க?” என திட்டினான் கரன். 

“சட் அப்” என காரே அதிரும் படி கத்தினான் மோஹித். அம்மாடியோஓஓஓ! என சத்தம் வந்தது.  அவளிடம் இருந்து… ஓ f* இவள் வேற என வாய் மொழியாக முனுமுனுத்தான் கடுப்புடன்..

என்ன டா மோஹித் பக்கத்தில எதோ குரல் கேட்குது? உன் கூட தான் ஹாரிகா இருக்காளா? என கரன் சந்தேகத்துடன் வினவினான். 

“மச்சி அது வந்து நான் கல்யாணம் பண்ணிட்டேன் டா! ஒரு பட்டிகாட்டை என் தலையில் கட்டி வச்சுட்டாங்க! என் ஹாரி பேபிககு விசயம் தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு தெரியல…’ என்றான் மோஹித். 

கரண் நம்ப முடியாமல் பொய் சொல்லாத. யாருக்கோ லிஃப்ட் கொடுத்திருக்க..  உடனே என் கிட்ட உடான்ஸ் விடுற.. ஆனால் நான்? என்னால நம்ப முடியாது என விளையாட்டாக கூறினான். 

அப்போ நீ வீட்டுக்கு வா? இவளை என்ன பண்றதுன்னு தெரியல.. வீட்ல என்ன சொல்ல போறேன்னு ஒன்னும் புரியல என்றான். மோஹித் தி கிரேட் டைரக்டருக்கு பயமா? அதை நாங்க நம்பனுமா என அவன் சிரித்தான். 

டேய் உண்மை டா என அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் மோஹித் அதை கேட்டதும் கரன் வாய் பேசவே இல்லை மவுனம் ஆனான். டேய் எதுவும் பேசு என மோஹித் உசுப்ப.. நல்ல ஸ்கிரிப்ட் மச்சி ஹீரோ இன்றோ விட ஹீரோயின் இன்றோ வேற லெவல் உன்னோட கற்பனையே கற்பனை.. என கிண்டலடித்தான். 

அதற்குள் வேகமாக போனை கட் செய்தான் மோஹித். தலையை கோதிய படி என்ன செய்வது என யோசனையுடன் வீட்டை அடைந்தான். மோஹித் இயல்பாக பேசி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆள் கரன் தான்.. கரணை தாண்டினால் அனைவரிடமும் கரடு முரடு தான். தன் தந்தையிடம் பயம் கலந்த மரியாதை தன் தாயிடம் பாசம் கலந்த மரியாதை அதனால் இருவரிடமும் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டான் வீட்டில் யாரிடமும் மோகித் அவ்வளவு நெருக்கம் கிடையாது.  அப்படி இருந்தும்  ஹாரிகா அவனுடன் எப்படி வந்து  சேர்ந்து கொண்டாள் என்று தெரியவில்லை. 

இங்கே ராமச்சந்திரனின் வீட்டில் ஜனார்த்தனன் எழுந்து “சம்பந்தி இதுல ஹாரிகாவோட ஜாதகம் இருக்கு.  நான் ஏற்கனவே மோகித்துக்கும் என் பொண்ணுக்கும் பாத்துட்டேன்.  பொருத்தம் எல்லாம் கரெக்டா இருக்கு.  நீங்க பார்த்து சொல்லுங்க” என்று தன் பதட்டத்தை மறைத்து நீட்டினார். 

கண்ணாடியை போட்டுக் கொண்டே  வாங்கிய ராமச்சந்திரன் ஆமா ஹாரிகா என்ன ராசி? என்று கேட்டார். 

உடனே அமலா குறுக்கிட்டு அவ மேஷ ராசி என்று வெடுக்கென கூறினாள். 

மேஷ ராசியா?  மோஹித் கன்னி ராசி என்று சுதா சொல்ல… உனக்கு என்ன தெரியும்  அமலா?   அது ஹாரிகா மேஷ ராசி கிடையாது.  அவ ரிஷபம் என்று கூறினார். 

ராமச்சந்திரன் மற்றும் சுதா இருவரும்  ஜனார்த்தனையும் அமலாவையும் மாறி மாறி பார்க்க… அவர் புன்னகையுடன் அது ஹாரிக்கா பெரிய மனுஷி ஆனா போது அந்த டைம்ல போய் ஜோசியம் பார்த்தோம் சம்பந்தி.  அப்போ மேஷ ராசினு வந்தது.  ஆனால் அவள் பிறந்த நேரத்த படி அவளோட ஜென்ம ராசி ரிஷபம் என்று கூறினார். 

அப்படியா சரி என்று ராமச்சந்திரன் அவளின் ஜாதகத்தை சுதாவிடம் நீட்ட…  அவர் வாங்கும் நேரம் வேகமாக பணியாள் ஓடி வந்தான். ஐயா ஐயா என என கத்திக்கொண்டு உள்ளே வர ஜனார்த்தனனின் அழுத்தமான பார்வையை முத்துவின் மீது படிந்தது.  ஆனால் ராமச்சந்திரன் அப்படி இல்லை.  அவர் அனைவரிடமும் கனிவாக பேசுபவர்.  மரியாதையுடன் நடந்து கொள்ளும் நல்ல பண்புமிக்கவர். 

ஜனார்த்தனனை பார்த்ததும்  முத்து அப்படியே அமைதியாகிவிட…  என்ன முத்து என்னாச்சு என்று கேட்டார் ராமச்சந்திரன். 

அது வந்து மோகித் தம்பி வந்துடுச்சு என்று கூறினார்.

என்ன சம்பந்தி இது? என்னோட மாப்பிள்ளையை மரியாதை இல்லாம வந்துடுச்சுன்னு சொல்றான்?  என்று ஜனார்த்தனன் அதட்ட…

ப்ச் சின்ன வயசுல இருந்து இங்க வேலை செய்றாரு சம்பந்தி.  அதனால அவருக்கும் மரியாதை கொடுக்கணும். என்று சூசகமாக பேசி முடித்தார் அவர். 

ஜனார்த்தனனுக்கு மிகவும் அவமானம் ஆகி போக முதல்ல ஹாரி இந்த வீட்டுக்குள் வந்தது. ரெண்டு பசங்களையும் ஆட்டி வைக்கிற ஆட்டத்துல மொத்த சொத்துக்கும் என் பொண்ணுங்க தான் மகாராணி.  அதுக்கப்புறம் உங்களுக்கு இருக்கு? என்று நினைத்துக் கொண்டார். 

என்ன முத்து பதட்டத்தோட ஓடி வரீங்க என்று சுதா கேட்க… 

அது தம்பி கூட ….  என முத்து தயங்கினார்.  

என்ன ஹாரிகா கூட வந்திருக்காளா? என்று அமலா சிரித்தபடி கேட்க… ஜனார்த்தனனுக்கு பெருமை தாளவில்லை. 

சுதா மற்றும் ராமச்சந்திரனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டார்கள். 

அது வந்து ஐயா ஹாரிக்கா அம்மா இல்ல… வேற ஒரு பொண்ணு தம்பி கூட என்று முத்து  முடிக்க அனைவரது முகமும் கேள்வி படிந்தது. 

அதில் முக்கியமாக ஜனார்த்தனன் அமலா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  என்ன சொல்றாரு? என்று அமலாவின் ஜனார்த்தனனின் முகம் மாற…  

அமலா  தன் தந்தையின் முகத்தை பார்த்து இருங்கப்பா என்று கண்களால் சைகை செய்தபடி,  தன் கணவரை கணவன் லோகேஷை  பார்த்தாள்‌. 

ப்பா நான் பார்க்கிறேன் என்று வெளியே செல்ல அந்த நேரம் ராமச்சந்திரன் சுதா என அனைவரும் எழுந்தார்கள்.  

கரன் ஒன்றுமே புரியாமல் இங்கு என்ன நடக்கிறது என்ற தோரணையுடன் உறைந்து நின்று கொண்டிருந்தான். 

ஆனால் தேனருவியோ மோகித்தின் கைகளை இறுக்கி பிடித்து இருந்தாள். 

என்ன டி!! என  எரிந்து விழுந்தான் அவன். 

எனக்கு பயமா இருக்கு நீங்க என்னை  எங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க?  பூச்சாண்டிக்கிட்டயா என்று அவள் பயத்துடன் கேட்க… 

ஆமா உன்னை புடிச்சு கொடுக்க போறேன்.  நீ பண்ண வேலைக்கு எல்லாம்? என்னை  சொல்லணும்? என்னை எங்க கொண்டு வந்து விட்டிருக்க பாத்தியா?  என்று வாய்மொழியாக புலம்பியவன்.  கையை விடு அருவி என்று கத்தினான். 

அவள் பயத்தில் கையை உதற கரன் தன்னிலைக்கு வந்து ஏன்டா அந்த பெண்ணை இப்படி திட்டுற?  அவ உன்னோட பொண்டாட்டி! என் தங்கச்சி! எவ்ளோ  அழகா இருக்கா? என்ன லட்சணம் தெரியுமா?  ஹீரோயின் கூட  தோற்றுப் போயிடும் அந்த அளவுக்கு தேவதை மாதிரி இருக்கா!  என்று கரன் கூற.. 

சட் அப் கரன் நாங்க ஒன்னும் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல.  இது ஆக்சிடென்டல்ல எல்லாம் நடந்துருச்சு என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க…  அதற்குள் வீட்டில் இருந்த ஆட்கள் வெளியே வந்தார்கள்.  இப்போ நான் எப்படி சமாளிக்க போறேன் என்று மோகித்துக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. 

அருவி அங்கே இருக்கும் நபர்களை வித்தியாசமாக பார்த்தாள். அவள் ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை.  செருப்பு கூட மோகித் தான் வாங்கி கொடுத்திருக்கிறான்.  அந்த அளவுக்கு ஒன்னாம் நம்பர் ஒன்றும் தெரியாதவள். அறிவிலி இல்லை. முட்டாளும் இல்லை. தெரியாமல் இருப்பது ஒன்றும் தவறு இல்லையே. அப்படி ஒன்றும் அவளை குறை கூற முடியாது.  ஏனென்றால் அவள் சிறுவயதில் இருந்து வளர்ந்த விதம் அப்படி. 

அப்பாஆஆஆ!! என அதிர்ச்சியுடன் கத்தினான் லோகேஷ். 

அந்த சத்தத்தில் பொத்தென அருவி மயங்கி விழ… டேய் டேய் தங்கச்சி டா! டேய் மோஹி பிடி டா என கரன் சொல்ல.. 

இவள் வேற கொஞ்சம் சத்தம் போட்டாலும் பொத்து பொத்துன்னு விழுகுறா என்றவன் அவளை தாங்கிக் கொண்டு ஹே அருவி! அருவி என கன்னத்தை தட்டினான். 

மோஹித்து உண்மைய சொல்லு. இந்த பொண்ணை அம்மா ஆக்கிட்டியா? நான் மாமாவா என கரன் கேட்க..  f*uck you என்றவன். தண்ணி கொண்டு வாடா என அவளின் கன்னத்தை தட்டினான். 

மோஹித் என்ன இது? என லோகேஷ், ஜனார்த்தனன், அமலா என அனைவரும் கேட்க..  அவர்களை தீர்க்கமாக பார்த்தவன்.  உள்ளே வந்து சொல்றேன் டாடி என பார்வை மொத்தமும் தந்தையை பார்த்து கூறினான். 

என்னங்க இது? யார் இந்த பொண்ணு என சுதா பதட்டத்துடன் ராம சந்திரனிடம் கேட்க.. அவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்றார். அவளை மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்குள் அழைத்து வந்தான் மோஹித். 

அருவி அவனது சட்டையை பிடித்துக் கொண்டு மருண்ட விழிகளில் பார்த்தாள். அமலா மற்றும் ராணி இருவருக்கும் என்ன சங்கதி என தெரிந்து விட ராணி தன் கணவனை பார்த்தாள். அமலா தன் தந்தையை பார்த்தாள். ஜனார்த்தனுக்கு உள்ளுக்குள் இரத்தம் கொதித்தது. 

மனைவியின் பார்வையில் துனுக்குற்ற லோகேஷ் கோபத்துடன் என்ன டா இது? யார் இவள்? என ஆவேசமாக கேட்க.. 

மிசஸ் மோஹித் அது என கரன் கூறினான். 

ஹே என லோகேஷ் குரலை உயர்த்த..

 என்ன மாமா இது? மோஹித் என்ன இது? உங்களுக்காக ஹாரிகா காத்துட்டு இருக்கா! என்ன இது விலையாடாதீங்க என்றாள் அமலா. 

அனைவரும் மாறி மாறி கேள்வி கேட்க.. மோஹித் பார்வை தந்தையின் மீது மட்டுமே இருந்தது. அமலா பார்வையாலேயே அருவியை எரித்து விடும் அளவுக்கு பார்த்தாள். 

சிறிது நேரம் கழித்து என்ன மோஹித் இது? யார் அந்த பொண்ணு? என சுதா கேட்க..  

இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற? பதில் சொல்லு மோஹித் என ராம சந்திரன் வாய் திறந்தார். 

ஆமா டாடி! She is my wife என அருவியின் கையை பிடித்துக் கொண்டான் மோஹித். 

வாட் என அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, அதே நேரம் பின்னால் மோஹித் பேபி வந்துட்டியா என வேகமாக உள்ளே நுழைந்தாள் ஹாரிகா. 

வேகமாக வந்ததோடு இல்லாமல் நேராக அவனை அனைவர்க்கும் முன்னால் அணைத்துக் கொண்டாள் ஹாரிகா. இவ்வளவு நேரமும் அவனை பிடித்திருந்த அருவியின் கைகள் உடனே விலக்கி கொண்டது. 

மோஹித் அருவியை பார்க்க அவள் ஹாரிகாவை பார்த்துக் கொண்டே கரன் பின்னால் போய் நின்றாள். 

வருவாள்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.