Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
"இது தப்பு!! உங்களுக்கு இன்னொரு பொண்ணு கூட என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு!" என சகுந்தலா கூற..

சர்வேஷ் அவளையே பார்த்தவன் மோவாயை நிமிர்த்தி கல்யாணம் ஆகலயே!! என்றவன் உதட்டில் முத்தமிட்டு கீழ் உதட்டை இழுத்து கடித்தான்.

பிளீஸ்!! என சகுந்தலா திணற... "லுக் சகுந்தலா தேவி!! என் கிட்ட வந்து தப்பு சரி அப்டின்னு ரூல்ஸ் பேசிட்டு இருக்காத! இந்த ரூல்ஸ்க்கு எல்லாம் அப்பாற்பட்டவன் தான் நான். எனக்கு வேணும். உன்கிட்ட எடுத்துப்பேன்." என கழுத்தை கடித்தான்.

ஹக் என துள்ளிய படி அவள் பேச வர.. சைலன்ட்டா இருக்காத!! ஹம் பண்ணு!! அதை விட்டுட்டு வேற எதுவும் உன் திருவாயில் இருந்து வந்தது? அப்புறம் திருவாய் திறக்க முடியாத படிக்கு பண்ணிடுவேன் என முத்தமிட்டான். எல்லை கடந்து.

அய்யோ ஏன் என்னை!. என அவள் சொல்லி முடிப்பதற்குள் விலகியவன். போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா!! இங்கிருந்து போகலாம் அப்படின்ற எண்ணத்தை அடியோட அழிச்சிடு! என அவள் அணிந்திருக்கும் ஜிமிக்கி கம்மலை ஆட்டி பார்த்தவன். குருத்து காதை கடித்து கூச வைத்து விட்டு சென்றான்.

தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் சகுந்தலா தேவி. உள்ளுக்குள் சொல்ல முடியா வேதனை. இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது? என மூளை ஆயிரம் யோசிக்க.. சட்டென கண்கள் பளிச்சிட அவனுக்காக காத்திருந்தாள். இடையில் டர்கிஷ் துண்டை கட்டி கொண்டு தலையை துவட்டிய படி வந்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை கவிழ்த்தாள்.

போய் குளி!! என சர்வேஷ் கூற..

இன்னிக்கி நைட் பதினொரு மணிக்கு கோயம்பத்தூர்க்கு டிக்கெட் புக் பண்ணொருக்கென்.

எதுக்கு?

"எனக்கு வீக் ஆஃப்! அதனாலே மாமா வீட்டுக்கு போகனும். வர சொன்னாங்க நான் ஹாஸ்டல் போகனும்." என சொல்லி முடித்ததும் தான் தலை நிமிர்ந்தது.

அப்படியா? என்றான் சாதாரணமாக..

நான் கிளம்புறேன் சார்!! என அவள் வேகமாக கை பையை எடுத்து கொண்டு நகர..

அப்போ இதை change பண்ணிக்கோ என அவளின் முன் ஒரு பாக்ஸை நீட்டினான் சர்வா.

என்னது இது? என சகுந்தலா கேட்க..

திறந்து பாரு தெரியும். என அவளின் முன் அமர்ந்தான் சர்வேஷ்.

எனக்கு எதுவும் வேணாம் சார்! என சகுந்தலா அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல பார்க்க..

ஹே திறந்து பார்த்திட்டு போடி!! என அதட்டல் குரலில் கூறினான்.

ஒரு பெரு மூச்சை விட்டவள் அந்த பாக்ஸை திறந்து பார்த்தாள். வாயில் வார்த்தைகள் வர மறுத்தது. எதிரில் இருப்பவனை இன்னும் ஆச்சரிய தொனியில் எறிட்டாள்.

எல்லாத்தையும் மாத்திக்கோ!; என்றான் சர்வா.

ஆம் அந்த பெட்டியில் சகுந்தலா நகை கடையில் விற்ற அனைத்து நகையும் அப்படியே இருந்தது. சர்வா மொத்தத்தையும் வாங்கி இருக்கிறான். இவன் ஏன் இதை வாங்க வேண்டும்? என்ன தான் முயற்சி செய்கிறான்? இவன் யார்? நல்லவனா? கெட்டவனா? இவன் எதிலும் பொருந்த மாட்டான் சூது நிறைந்த வல்லவன்.

சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. என்னாச்சு போகலயா?

"எதுக்கு இதையெல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க?"

உனக்கு தேவை இல்லன்னா ஓகே நான் இதை இப்போவே வித்திடுறேன் என சர்வா வாங்க செல்ல..

இல்ல எனக்கு வேணும்! என மார்புடன் அனைத்து கொண்டாள். இதில் அவளுக்கு சென்டிமென்ட் அடங்கி இருக்கிறது. அவள் சரவணனுக்காக வித்த பொருட்களில் சகுந்தலா பெரிய பெண் ஆனதற்காக பிரகாஷ் கால் கொலுசு வாங்கி கொடுத்தார் அதுவும் தங்கத்தில். சாந்தினிக்கு கூட தங்கத்தில் கொலுசு இல்லை. அதே போல தோடு மற்றும் கழுத்து செயின் இரண்டும் பாப்பாத்தி வாங்கி கொடுத்தார். இந்த பொருட்கள் அவளின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.. சகுந்தலா அப்படியே அமர்ந்திருந்தாள்.

"என்னாச்சு அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்ட!" என சர்வேஷ் அவளை பார்க்க..

"சார் இதை நானே காசு கொடுத்து உங்க கிட்ட இருந்து வாங்கிக்கிறேன். பிளீஸ் sale பண்ணாதீங்க" என கையெடுத்து கும்பிட்டாள்.

"டன் பட் ஒரு கண்டிசன் இருக்கு"

என்ன?

உங்க வீட்டுக்கு போகும் போது இதை போட்டுக்க அண்ட் நீயே வச்சுக்க! இங்கே இருக்கும் போது ஹாஸ்பிடல்கு கூட நான் உனக்கு வாங்கி கொடுத்ததை தான் போடணும் என்றான் சர்வேஷ்.

நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் என்ன இருக்கு? ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்குறீங்க? என சகுந்தலா கேட்டாள்.

ரீசன் சொன்னா தொந்தரவு பண்ணாம இருப்பியா? என சர்வேஷ் கேட்க..

ம்ம் என அவனையே பார்த்தாள்.

"எனக்கு impotent" என்றான் சர்வேஷ்.

ஹாங் என அப்பட்ட அதிர்ச்சியில் பார்த்தாள் சகுந்தலா. இதை யாராவது நம்புவார்களா? கண்ணாலே கூட கற்பழிக்க இவனுக்கு தெரியுமே எனும் ரீதியில் இருந்தது சாக்.

இல்ல என சகுந்தலா கூற..

"வெயிட் நான் இன்னும் பேசி முடிக்கல!! என அவளை அழுத்தமாக பார்த்தவன். அன்னிக்கு ராத்திரிக்கு முன்னாடி வரைக்கும் நான் impotentன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். என்னோட டீன்ல இருந்து பெருசா இந்த செக்ஸ் இன்டர்ஸ்ட் இல்ல.. அட் தி சேம் டைம் நானும் அனுஷாவும் லவ் பண்ணும் போது என்னால ஃபீல் பண்ணி முத்தம் கூட கொடுக்க முடியல.. என்னோட சம்மன் வெளியே வந்ததே ரொம்ப ரேர் அது தூக்கத்தில், இல்லனா குடிக்கும் போது என்னையும் அறியாமல் தான் நடந்திருக்கு" என்ற சர்வேஷ் மேலும். சகுந்தலாவை பார்த்து..

அன்னிக்கு ராத்திரி உன் கூட இருந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு ட்ரூத் ரிவீல் ஆச்சு என அவனது முகத்தில் சந்தோஷம் கர்வம் இரண்டும் எட்டி பார்க்க.. நான் impotent இல்ல. என்னை ஆண்மை உள்ளவன்னு நீ ஐ மின் உன்னால நான் என்னை நிருபிச்சுகிட்டேன். என்றான் சர்வேஷ்.

"அதான் தெரிஞ்சிடுச்சுல்ல அப்புறம் என்ன? பிரச்னை முடிந்ததே!"

அது தான் இல்ல!! என்றான் சர்வா.

"என்ன சொல்றீங்க?" என சகுந்தலா அவனை பார்க்க..

உன் கிட்ட இருக்க இந்த இன்டிமேட் இன்டரஸ்ட் வேற யார் கிட்டயும் எனக்கு என்று உதட்டை பிதுக்கினான்.

இதையெல்லாம் கேட்க சகுந்தலாவின் உணர்வுகளும் இதய துடிப்பும் பன் மடங்கு கூடி போனது. தனக்கு பிடித்தவனுக்கு தன்னை பார்த்தால் மட்டுமே உணர்வுகள் உச்சம் பெறுகிறது என கேட்க நன்றாக தான் இருக்கிறது. இன்னும் இனிமை கொடுக்கிறது. ஆனால் என சுய நினைவுக்கு வந்தவள். தட்டு தடுமாறிய படி அத் அதுக்கு நான் என்ன சார் பண்ணனும்? என கேட்டாள்.

சிம்பிள் சகுந்தலா தேவி! நீ எனக்கு வேணும்! ஹாங் என அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவள் என்ன மிட்டாய் கடையா? இந்த மிட்டாய் வேணும் என சொல்லி வாங்கி போய் சாப்பிட..

சார் தெரிஞ்சு தான் பேசுறீங்களா? இது உங்க வீட்டுக்கு அனுஷா மேடம்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? எப்டி அவங்களுக்கு துரோகம் பண்ணிட்டு என் கூட இருப்பீங்க? எனக்கின்னு என தயங்கியவள் எனக்கும் குடும்பம் வாழ்க்கை இருக்கு சார்! யாருக்கும் தெரிஞ்சா என்ன ஆகிறது? என சகுந்தலா கேட்டாள்.

எனக்கு யாரை பத்தியும் கவலை இல்ல சகுந்தலா தேவி. நடந்த விசயத்தை எப்போவும் மாத்த முடியாது. எனக்கு என்னை ஃபீல் பண்ணனும் டி! என அவனது நியாயத்தில் இருந்தான். இது அநியாயம்.

அப்போ நான் உங்களுக்கு கீப்! அப்படி தான!

ச்சீ அந்த அளவுக்கு கேவலமா யோசிக்க மாட்டேன். லிவிங் ல இருக்கலாம். அண்ட் உனக்கு வாய் அதிகமா இருக்கு கொஞ்சம் குறைச்சுக்க என்னை டாமினன்ட் பண்ணி பேசுற அளவுக்கு நீ இன்னும் வளரல என்றான் சர்வேஷ்.

நான் எதுவும் பேசல! இதுக்கு எண்ட் கார்ட் எங்கே இருக்குன்னு சொல்லுங்க? என கேட்டாள்.

எனக்கு எண்ட் கார்ட் போட விருப்பம் இல்ல பட் எனக்கு நீ வேணும். Frank ஆ வேற எவழும் எனக்கும் அட்ராக்டிவா தெரியல. இத்தனைக்கும் உன்னோட கேரக்டர் உன்னோட பிகேவியர் எனக்கு சுத்தமா பிடிக்கல. ஆனால் என்ன பண்ண? எனக்கு நீ வேணும். அவ்ளோ தான்! இந்த அளவுக்கு நான் யாருக்கும் எக்ஸ்ப்லைன் கொடுத்ததே இல்ல. உன்னோட விசயத்தில் என்னால அப்படி இருக்க முடியாது. உன் ஈடுபாடு எனக்கு வேணும்! என்றான் சர்வேஸ் நா கூசாமல் அவளை சர்வீஸ் செய்ய அழைக்கிறான்.

சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்தது. சர்வேஷ் அவளின் முன்னால் அமர்ந்தவன். ரெண்டு வருசம் ஒகேவா?

அவனை முறைத்து பார்த்தாள் சகுந்தலா.

கழுத்தை திருகி போட்டுடுவேன் என திட்டினான்.

அப்போ ஒன் இயர்? என சர்வேஷ் கேட்க.. அதற்கும் அழுகையை தான் பதிலாக கொடுத்தாள் சகுந்தலா.

ஒரு பெருமூச்சை விட்ட சர்வேஷ் எனக்கு மேரேஜ் ஆகிற வரைக்கும் உனக்கு ஓகே தான!! இதுக்கு மேலே இறங்கி போக முடியாது என கூறினான் திட்டமாக.. அதுக்கு இவளையே நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா காலம் முழுக்க சந்தோசமா வாழலாமே டா!

சகுந்தலா அமைதியாக இருக்க.. என்ன சகுந்தலா தேவி!! பேசு!! என அவன் அவள் முன் வந்து அமர்ந்தான்.

இப்படி போய் உங்க அக்கா தங்கச்சி கிட்ட யாரும் சொன்னா நீங்க அனுப்பி வைப்பீங்களா? என சகுந்தலா தேவி கேட்டு விட..

சர்வேஷ் அவளை இயல்பாக பார்த்து பாரின் கள்ச்சர்ல இதெல்லாம் சாதாரணம் அண்ட் என் தங்கச்சி ஒன்னும் சகுந்தலா தேவி இல்லையே என கூறினான்.

இதை விட அவளை கேவலமாக அவமான படுத்திவிட முடியாது.

சகுந்தலா வேறு புறம் திரும்பி கொள்ள.. இதையே வேற ஒருத்தி சொல்லி இருந்தால் இந்நேரம் அவள் வாய் ஒடைஞ்சு போயிருக்கும். ஆனால் நீயா இருக்க போயி விட்டுட்டேன். நான் உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறேன் அதான் கேட்கிறேன். என்றான் சர்வேஷ்.

இல்ல என்னால ஒத்துக்க முடியாது!! என சகுந்தலா கூற..

ம்ம் ஓகே!! என்றவன் அன்னிக்கு என்னோட ரூம் உள்ளே வந்தது நீ தான்! நீ தான் என்னை செட்யூஸ் பண்ணி எல்லாத்தையும் பண்ண அப்டின்னு உன் மேலே கம்ப்லைன்ட் கொடுப்பேன். அண்ட் நீ என்னோட ரூம்ல இருந்து வெளியே வந்தது. எல்லாத்துக்கும் என் கிட்ட ப்ரூஃப் இருக்கு. அதை விட முக்கியமான ரீசன் உன்னோட முன்னால் முதலாளி மிஸ்டர் ஹர்ஷவர்த்தன் தான் என்னை பழி வாங்க உன்னை அனுப்பினார் அப்டின்னு சொல்லி உன்னை ஜெயிலில் போடுவேன். எல்லாரும் என்னை தான் நம்புவாங்க!! ஏன்னா நிறைய பொண்ணுங்க இப்படி திருட்டு வேலை பண்ணி போலீஸ்ல மாட்டியிருக்கு. எப்படி வசதி என்றான் சர்வேஷ் அவளை பார்த்து படி.

சகுந்தலா...?

தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -11
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

samundeswari

Member
Joined
Oct 22, 2024
Messages
74
Pavam writer andha ponu yean eppadi andha sarva sollanum andha ponu ketathu yena thappu avnga sister ah eppadi keta summa erupana evan .

Yean writer endha sarva name vachale thimiru pidichavangala erupangalo yenaku appadi thaan thonuthu
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
144
Achoooo😯 Yenda Sharva paavam da Sagu ippadi threaten panra avala😔😒. Avaley vaazhkaiyila nodinji poi irukaa ithula nee vera avala ippadi torture panra😒. Aadhi ku therinja yedhavadhu help pannuvananu theriyalaiyeh🤔. Sharva character seems to be very unique Sister yentha ragam ney solla mudiyala Yenna oru attitude oru ponnu Avaluku family iruku society la yeppadi yeduthu paanga nu ninaikavey maatengraan mittai kadaila mittai vaangra madhiri ila pesuraan😯🤭🤗.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
88
🥺🥺🥺🥺
 
Top