Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
சர்வேஷ் அவளை சாதாரண தொனியில் பார்த்து புருவம் உயர்த்தியவன். உன்னோட முடிவை சொல்லு! என அவளை பார்த்தான்.

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? என சகுந்தலா தேவி அவனை பார்த்து உடைந்த மனதுடன் கேட்க..

அது இருக்க போயி தாண்டி பொறுமையா பேசிட்டு இருக்கேன். உன்னோட டேஸ்ட் என்னோட டேஸ்ட் பட்ஸ்ல ஒட்டி கிச்சு அதை அப்படியே கண்டின்யூ பண்ணனும்னு நினைக்கிறேன். பட் நீ முரண்டு பிடிக்கிற!! என சர்வேஷ் கூறினான்.

சகுந்தலா தலையை பிடித்தபடி நிற்க.. இன்னொரு விசயம்!! அன்னிக்கு உன்னை பார்க்க வந்தானே அவன் யாரு? என்று கேட்டான் சர்வேஸ்.

அவள் அமைதியாக இருக்க.. ஹே காது என்ன செவுடா? என்று அதட்டினான்.

அது என்னோட மாமா பையன் சரவணன்.

ஓ லவ்விங்கா! என புருவம் தூக்கியவன். அவன் உனக்கு நல்லாவே இல்ல. என்றான் உதட்டை பிதுக்கி.

சகுந்தலா அவனை முறைத்து பார்க்க.. சரி நான் மேட்டருக்கு வரேன். நீ இந்த ஆறு மாசம் மட்டும் அவாய்ட் பண்ணிடு! எந்த பையன் கிட்டயும் பேசுற வேலை வச்சுக்காத.

நான் இன்னும் ஒத்துக்கவே இல்ல! நீங்க சொல்றத எல்லாம் என்னால பண்ண முடியாது. நீங்க என்னை கட்டாய படுத்துறீங்க. என சகுந்தலா கூற..

நீ ஒத்துக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் சகுந்தலா தேவி என்றவன் அவளின் அருகில் நெருங்கி.. இங்கே வாயேன் உனக்கு என்னென்ன வாங்கி வச்சிருக்கேன் தெரியுமா? இது நைட் நீ என் கூட இருக்கும் போது. இது மார்னிங்ல நீ போட ட்ரஸ், இது ஹேன்ட் காப், உன்னை வித விதமா பண்ணனும் டி!! என நா கூசும் வார்த்தைகளை சாதாரணமாக கூறினான் சர்வேஸ்.

இவன் தீர்க்கமான முடிவுடன் தான் இருக்கிறான். கட்டாயமாக நம்ம விட மாட்டான் என சகுந்தலா ஒரு பெரு மூச்சை விட்டபடி நீங்க உங்க கண்டீசனை சொல்லிட்டீங்க தானே எனக்கும் சில கண்டிசன்ஸ் இருக்கு.

அப்போ உனக்கு ஒகேவா? என அவளின் உதட்டில் முத்தமிட்டான்.

அவனை விட்டு விலக முடியாமல் துடித்து நின்றாள்.

என்ன கண்டிசன்? என கழுத்தில் முகம் புதைத்தான்.

என்னோட வீக் ஆஃப்ல மட்டும் தான் நான் உங்க கூட இருப்பேன். முக்கியமா ஹாஸ்டல்ல தான் ஸ்டே பண்ணுவேன்.

No way!! என கத்தினான் சர்வேஸ்.

ஆறு மாசம் கழிச்சு உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் இந்த ஹாஸ்பிடல்ல இருந்து வேலைய விட்டு போயிடுவேன். அதுக்கு பிறகு எப்போவும் என்னை தேடி நீங்க வரவே கூடாது. நீங்க யாரோ நான் யாரோ! என்னை பிளாக் மெயில் பண்ண மாட்டேன்னு சொல்லுங்க. நான் ஒத்துக்குறென். என்றாள் சகுந்தலா.

சர்வேஷ் தீவிரமாக யோசித்தவன். அங்கும் இங்கும் நடக்க..

சகுந்தலா வெட்கி போயி நின்றாள். இதயமெல்லாம் கனத்து போனது போல ஒரு உணர்வு.

சர்வேஷ் முகம் பளிச்சிட.. ஓகே உன்னை பிக் அப் பண்ண நான் தான் வருவேன். கூடவே ட்ராப் கூட நான் தான் பண்ணுவேன். இதுக்கு ஒகேவா?

அப்படி என்ன செய்து விட போகிறான் என நினைத்தவள். என்னை ஹாஸ்டலில் தான் ட்ராப் பண்ணனும். இங்கே வர மாட்டேன். வீக் ஆப் மட்டும் தான் வருவேன் என உறுதியாக சகுந்தலா கூறி விட..

ஓகே என்றவன். சரி புறப்படு போலாம் என்றான்.

எங்கே? என சகுந்தலா கேட்க..

அதான் உங்க மாமா வீட்டுக்கு போகனும்னு சொன்னியே!! உன்னை ட்ராப் பண்றேன்.

இல்ல நானே பஸ்டான்ட் போய்க்குவேன் என சகுந்தலா புறப்பட..

ஹே நான் உன்னை கோயம்புத்தூர் ட்ராப் பண்றேன் எனக்கும் கொஞ்சம் ஒர்க் இருக்கு என சர்வேஷ் கூற..

சகுந்தலாவின் முகம் வியர்த்து போனது. இல்ல வேணாம் நான் பார்த்துக்கிறேன் சார். உங்களுக்கு எதுக்கு சிரமம்.

நீ என் கூட வர!! என அழுத்தம் திருத்தமாக கூறி விட்டு அவன் முன்னால் செல்ல.. சகுந்தலா தேவி அதே இடத்தில் நின்றாள்.

என்னாச்சு வா போலாம். என சர்வேஷ் மீண்டும் அழைக்க..

சகுந்தலாவுக்கு வார்த்தைகள் வற்றி போன நிலை.. அவள் முகத்தில் இருக்கும் வியர்வையை பார்த்தவனுக்கு அனைத்தும் யூகிக்க முடிந்தது. கதவை லாக் செய்து விட்டு வந்து ஸோபாவில் ஆமர்ந்தவன் போனை எடுத்து அவர்களது அபீசியல் வாட்ஸ் அப் க்ரூப்பில் சில முக்கியமான விவரத்தை தட்டி விட்டான்.

அந்த நேரம் சர்வேஷ்க்கு ஆதியிடமிருந்து போன் கால் வர.. சகுந்தலாவை பார்த்து கொண்டே அட்டன் செய்தான்.

சகுந்தலா அவளது போனில் நெட் ஆன் செய்தாள். செய்திகள் வரிசை கட்டி கொண்டு வந்தது. தேங்க்ஸ் சார்!! என அனைவரும் க்ரூபிள் செய்தி அனுப்பியிருந்தார்கள்.

டேய் சர்வா எதுக்கு டா ரெண்டு நாள் வீக் ஆஃப் கொடுத்த? என ஆதி கேட்க..

இந்த பக்கம் சர்வேஸ் க்ரூப்பில் போட்ட செய்தியை படித்தாள். வாரத்துல ரெண்டு நாள் வீக் ஆஃப். அதுக்கு ஏத்த மாதிரி டியூட்டி டைம் டேபிள் மாற்றப்படும். அந்த இரண்டு நாட்களும் முக்கால் சம்பளம் வழங்கப்படும். விடுமுறை நாட்கள் வேலைக்கு வந்தால் இரண்டு சம்பளம் கொடுக்க படும். அதே போல 35 விடுமுறை நாட்களை எகனாமிக் இயரில் சரண்டர் செய்து பணமாக மாற்றி கொள்ளலாம். இது வேலையை விட்டு செல்பவர் கூட சரண்டர் செய்து பெற்று கொள்ளலாம் என்று போட்டிருந்தான். அதை படித்ததும் அதிர்ச்சியுடன் தனக்கு எதிரில் இருப்பவனை பார்த்தாள் சகுந்தலா.

இங்கே சர்வா ஆதியிடம் போனில் இப்போ என்ன டா!! இது நல்ல change தானே எல்லாருக்கும் நல்லது. நிறைய பேர்க்கு நிறைய தேவை இருக்கும். அவங்களுக்காக தான் உடனே டிசிசன் எடுத்தேன். அண்ட் இப்போ காலேஜ் ட்ரெயின் நர்ஸ் வருவாங்க. அப்போ இன்னும் நமக்கு டென்ஷன் இல்ல என்றான்.

என்னமோ பண்ணு! என்று விட்டு ஆதி போனை வைத்தான்.

எதுக்கு இப்படி ஒருவேளை பண்ணீங்க?

சர்வேஷ் போனை ஸோபாவில் தூக்கி போட்டவன். அதை விடு அப்போ என்னை அவாய்ட் பண்ண தான் ஊருக்கு பொய் சொல்லிருக்க? அப்படி தான அவளை பார்க்க..

சகுந்தலா வேறு புறம் திரும்பி கொண்டாள். சர்வேஷ் அவளுக்கு உடையை எடுத்து கொடுத்தான். இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா நைட் டின்னர் சாப்பிடணும். இனி தான் எல்லாத்தையும் ஆரம்பிக்கனும் என கூறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் முன் இருந்தாள். பழங்கள் அதனுடன் கோதுமை தோசை, வேர்கடலை சட்னி, ஆம்லெட் என அவளுக்கும் அவனுக்கும் எடுத்து வைத்தான். இதோ ஆர்டர் செய்த சிக்கன் தந்தூரி. சுட சுட இருந்தது.

சிக்கன் வேணுமா?

நான் சைவம் என ஒரு வார்த்தையில் முடித்து கொண்டாள்.

உணவு முடித்தாகி விட்டது. பாத்திரங்களை சிங்கிள் போட்டு விட்டு சர்வேஷ் வர.. அனைத்தையும் அவள் கழுவி வைத்தாள்.

சகுந்தலா தேவி!! என சர்வேஷ் அழைக்க..

உள்ளுக்குள் பயபந்து உருண்டது. சமையலறையில் இருந்து கால்கள் நகர மறுத்தது.

சகுந்தலா தேவி!! என அதிகாரத்துடன் மீண்டும் குரல் கேட்க..

எட்சிழ் கூட்டி விழுங்கியவள் மெல்ல புறப்பட்டாள்.

தன்னை மஞ்சத்தில் கிடத்த அழைப்பவன். தன் சாபத்தை போக்க விமோட்சனமாக வந்தவன். ஆனால் அருகில் செல்ல மனம் பதைக்கிறது. ஆறு மாதத்துக்கு மஞ்சத்தில் கிடந்து அவனுக்கு சொர்க்கத்தை காட்ட வேண்டும். அவன் ஆண்மையை என்னுடன் கூடி நிரூபித்து கொள்ள வேண்டும் என நினைக்க நினைக்க வயிறு வாயெல்லாம் பற்றி கொண்டது.

இதோ இரண்டு அடிகளில் படுக்கை அறை..

சகுந்தலா தேவி!! என மீண்டும் அழைத்தவன் கண்கள் அவள் முகத்தை பார்த்ததும் ஒரு நொடி நின்றது. வலவளத்த இரவு உடையில் அவன் வழுக்கி கொண்டு செல்ல தயாராக இருக்கிறான் என சர்வாவின் கண்கள் அப்பட்டமாக காட்டி கொடுத்தது.

சார் என அவள் ஆரம்பிக்க..

Too irritating.. இனி சர்வான்னு சொல்லு!! என கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தான். கண்களில் நீர் திரையிட்டு கொண்டது.

அவள் முகம் தலை தாழ்ந்து இருக்க.. dreams comes true.. என அவனது குரலும் உதடும் தாபத்தை வெளிபடுத்த.. சட்டென விடுபட முயன்றவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டான். கைகள் இரண்டும், இரண்டு உணர்ச்சி புள்ளிகளை நோக்கி பயணம் செய்ய உதடுகள் அவளின் கழுத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தது. மென்மை என்பது இரண்டாவது முத்தத்தில் வேகமும் வன்மையுமாக மாறி போக..

இதோ சர்வாவின் உணர்வுகள் அறுபட அனுஷாவிடமிருந்து போன் வந்தது..

சகுந்தலா தேவி...?

தொடரும்..






























.
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி-12
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeni Shiva

Active member
Joined
Oct 29, 2024
Messages
102
Hospital owner, doctor maadhiri illa Ivan ... Nalla mollamaari thanam pannuran... Fraud. LOL
 

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
144
Sharva nee yengirunthu da vandha😖😖😖🤭😳. Omg Sagu Baby really sooo paavam😔. Pudhusu pudhusa rules ah poduraan mathuraan Achooo 😒. Please Aadhi konjam save pannen pa namma Sagu Baby ah😌🤗. Ithula Anusha vera ivana pathi theriyama foreign poi iruka😖🤗.
 

samundeswari

Member
Joined
Oct 22, 2024
Messages
74
Pavam sagunthala pls andha ponuku even husband ah varanum pls writer endha mathiri character person erukave kudathu
 
Top