Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
வர மாட்டேன்னு சொன்னாரு ஒருத்தர் என்று வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள் சகுந்தலா.

ஆமா சொன்னேன்! இப்போ என்ன மேடம்? வர மாட்டீங்களோ! என்று ஆதி கூறி கொண்டு அவளை பார்த்தான்.

இருவரும் முறைப்பது போல பார்த்து சிரித்து கொண்டார்கள் ஒரே நேரத்தில்..

என்ன விசயம்? ஊருக்கு? என சகுந்தலா கேட்க..

என்னோட சிஸ்டர் இளமதிக்கு மேரேஜ் புரோபோசல் ஒன்னு வந்திருக்கு. அது சம்பந்தமாக தான் ஊருக்கு போறேன். என்றான் ஆதி.

அப்படியா? அப்போ வீட்ல விசேஷம்ன்னு சொல்லுங்க என்றாள் புன்னகையுடன்..

சரி வா!! என்ன சாப்பிடுற? என இருவரும் நேர்த்தியான ஹோட்டல் உள்ளே நுழையும் நேரம் சர்வேஷ் காரை ஓரமாக பார்க் செய்து விட்டு காத்திருந்தான்.

ஆதி மற்றும் சகுந்தலா இருவரும் ஹோட்டல் சென்றதை பார்த்து கொண்டு தான் இருந்தது அவனது கண்கள்.

உனக்கு என்ன வேணும்? என ஆதி கேட்க..

நான் தான் டின்னருக்கு கூப்பிட்டேன். நீங்க சொல்லுங்க! என அவள் புருவம் சுருக்கி கூற..

"எனக்கு இட்லி, அண்ட் ஒரு ரவாதோசை"

இது போதுமா?

ம்ம் போதும்!

ஓகே எனக்கும் அதுவே ஓகே! என உணவு பண்டங்களை ஆர்டர் செய்தாள்.

ட்ரெயின்ல போலாம்ல? எதுக்கு பஸ்? என சாப்பிட்டு கொண்டே கேட்டாள் சகுந்தலா.

அது உனக்கு பாய்ஸ் அலர்ஜி மாதிரி எனக்கு ட்ரெயின் அலர்ஜி! ட்ரெயின் பாத்ரூம் அண்ஹைஜீன்ல இருக்கும் அதான் நான் பஸ்ல போறேன். எனக்கு கம்பார்ட்.

நீங்க சொல்றது ரொம்ப புதுசா இருக்கு. என்றாள் சகுந்தலா.

சீரியஸ்ஸா சொல்லிட்டு இருக்கேன். எனக்கு ட்ரெயின் டாய்லெட் சேராது. அதான் பஸ்ல போறேன். என்றான் ஆதி.

ஓகே டாக்டர் நான் எதுவும் கேட்கல என சகு சொல்லி விட்டு இருவரும் உணவில் கவனம் செலுத்த, லோன்லியா இருக்குன்னு சொன்னியே? என்னாச்சு? என கேட்டான் ஆதி.

சட்டென சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவனை ஏறிட்டு பார்த்தாள்.

ம்ம் சொல்லு என ஆதி கூற..

இப்போ லோன்லியா இல்ல. அதான் நீங்க இருக்கீங்களே! என்றாள் புன்னகையுடன்..

எதுவும் பிரச்சனையா சகு? என ஆதி கேட்க..

கண்டிப்பா அப்படி எதுவும் இருந்ததுனா உங்க கிட்ட தான் சொல்லுவேன் என்றாள் சகுந்தலா.

இருவரும் சாப்பிட்டு முடித்து பொதுவான விடயங்களை பேசி கொண்டே வெளியே வந்தார்கள்.

ஆதி நேரத்தை பார்த்து விட்டு, நீ புறப்படு சகுந்தலா. நான் இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் தான் என்றான்.

இல்ல நானும் வரேன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் என சகுந்தலா கூற..

இல்ல சகு! இங்கே இந்த நேரத்தில் பொண்ணுங்க தனியா போறது அவ்ளோ நல்லதுக்கு இல்ல. நான் சொல்றத கேளு ஹாஸ்டல் புறப்படு! என ஆதி திட்டமாக கூறினான்.

இதோ கிளம்பி விட்டாள் அவனுக்கு கை அசைத்து கொண்டு..

ஆதி அவளின் உருவம் மறையும் வரை பார்த்து விட்டு பஸ் ஸ்டான்ட் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.

இதோ சட்டென காருக்குள் இழுக்கப்பட்டு அவனது கை சிறைக்குள் இருந்தாள் சகுந்தலா.

அய்யோ!! என கத்தியபடி பயமும் பதட்டமும் சேர்ந்து முத்து முத்தாக வியர்வை துளிகள் சரித்து விட.. பயத்துடன் பார்த்தாள் சகுந்தலா.

சர்வேஷ் அவளின் முகத்தை புருவம் சுருக்கி பார்க்க...

நீங்களா? என்ன பண்றீங்க? என கோபத்தில் கேட்டாள்.

நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணது போல தெரியலயே என்று சர்வேஸ் கூறினான்.

நான் அது வந்து.. என்று தயங்கிய சகுந்தலா ஒரு பெரு மூச்சை விட்டு, நான் இப்போ ஹாஸ்டல் போகனும் என்னை விடுங்க, அன்ட் மண்டே அன்ட் சன்டே மட்டும் தான் நமக்குள்ள இருக்கு. இப்போ ஒண்ணுமில்ல.. பிளீஸ் இனி இப்படி பண்ணாதீங்க! என்று விட்டு அவள் கார் கதவை திறக்க முற்பட..

அவளின் அருகில் நெருங்கியவன் சீட் பெல்ட்டை போட்டு விட்டபடி கழுத்தில் முத்தம் பதித்தான். டாக்டர் என்ன பண்றீங்க? பிளீஸ் என வெட்கி போயி அவள் சீட் பெல்டில் கை வைக்க..

சர்வேஷ் காரை ஸ்டார்ட் செய்தபடி எதுவும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் கிஸ்! அவ்ளோ தான்! கம்முன்னு வா! என ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

நீங்க ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க? என சகுந்தலா முறைத்து கொண்டே கூற..

அவளின் ஹாஸ்டல் எதிரில் வண்டியை நிறுத்தியவன். தலையை கோதியவாறு அவள் பக்கம் திரும்பினான்.

சகுந்தலா வேறு புறம் திரும்பி கொள்ள, சர்வேஷ் மெல்ல அவளின் தோலின் மேல் கைகளை வைத்தான்.

அப்படியே அமர்ந்திருந்தாள்.

ப்ச் திரும்பு டி! என அவளின் முகத்தை நிமிர்த்தி உதட்டில் முத்தமிட்டான் அழுத்தமாக.

சகுந்தலா கண்களை மூடி கொண்டு அமர்ந்திருந்தாள். முத்தங்கள் அரை மணி நேரம் சென்றது.

சகுந்தலா தேவி! வீட்டுக்கு வரியா? நான் ரொம்ப மிஸ் பண்றேன். என்னால கட்டு படுத்த முடியல டி! உன்னை பார்த்ததும் நேரம் காலம் பார்க்காமல் பாய தோணுது. என முத்தங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருந்தான். அவனது முத்தங்களை விட வார்த்தைகள் இன்னும் மயக்கியது அவளை..

இது எத்தனை நாளைக்கு? அவன் முன் உணர்வுகளை காட்டி விட்டால், விட மாட்டான் காலத்துக்கும். உள்ளுக்குள் இருக்கும் காதலை வெளியே காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

மணி ஒன்பதை தாண்டிடுச்சு விடுங்களேன்! என மெல்லிய குரலில் கூறினாள் சகுந்தலா.

வந்திடு என் கூட என அவனது முத்தத்தில் சிலிர்த்து சிவந்து போன முகத்தை பார்த்து கூறினான் சர்வேஷ்.

"எனக்கு போகனும்" என்று மெல்லிய குரலில் பதில் கூறினாள்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து "விடுறேன்." என்றான்.

அவள் இறங்க செல்ல..

"இரு அதுக்கு முன்னாடி ஒரு டிமான்ட்!"

என்ன என்பதை போல சகுந்தலா பார்க்க..

உதட்டை ஈர படுத்திகொண்டு அவளை பார்த்தவன். எனக்கு ஒரு முத்தம் கொடுத்திட்டு போ!

இரண்டு கண்களும் வெளியே வந்துவிடும் அளவுக்கு பார்த்தாள் சகுந்தலா.

நீயாவே!! கொடு விடுறேன் என்றான் திட்டமாக..

முடியாது என்றாள் எடுத்த எடுப்பில்..

அப்போ நீ போக முடியாது என சர்வேஷ் பக்கவாட்டாக அவளை பார்த்தான்.

இப்படியே அடுத்த அரை மணி நேரம் காருக்குள் அமர்ந்திருந்தாள். அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. அதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

சர்வேஷ் கதவை அன்லாக் செய்து விட்டு நேராக அமர்ந்தான்.

சகுந்தலா எதுவும் பேசாமல் இறங்கி கொண்டாள்.

அடுத்த நொடி வேகமாக கார் சீறி பாய்ந்து சென்று விட்டது. சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்தது. வேகமாக ஹாஸ்டலுக்குள் நுழைந்தாள்.

**

அவள் கிட்ட எதுக்கு முத்தம் கேட்ட? பைத்தியக்காரனாடா நீ? அவளை நீ என்ன லவ்வா பண்ற? முத்தம் கொடுன்னு கேட்கிற? யூ bit* என தன்னை தானே திட்டி கொண்டான் சர்வேஷ். கையில் மது கோப்பை.. கண்ணை திறந்தால் மூடினால் என சகுந்தலா தேவி தான் முன்னால் வருகிறாள். அவனால் என்ன செய்ய முடியும்? ஆதியிடம் 32 பற்களையும், அது கூட 206 எலும்பும் சேர்ந்து தெரியுது. ஆனால் என்னை பார்த்தால் சப்த நாடிகளும் அடக்கி கொள்கிறாளா? இல்லை என்னை எப்படி நினைக்கிறாள்? என்று இன்னும் ஆற்றாமை அதிகரித்து கொண்டது.

சர்வேசுக்கு தெரியும். அவள் அனைத்து ஆண்களிடமும் வழியும் குணம் கொண்டவள் இல்லை. அவள் உண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பவள். சர்வேஷ் அவளை பற்றி தெரிந்து கொண்ட விசயத்தில் இருந்து சரவணன் அவளின் உறவுக்கார பையன். மற்ற படிக்கு யாரிடமும் தேவையில்லாமல் அவள் பேசியது கூட இல்லை. அவள் அனைத்திலும் சிறந்தவளாக இருந்தாலும்... இருந்தாலும் எதோ ஒன்று தடுக்கிறது. இப்படியே அவளை பற்றிய நினைவில் உழன்று கொண்டிருந்தவன். சற்று தெளிந்து, சகுந்தலா தேவி! இன்னிக்கி சொல்றேன் டி! நீயாகவே என்னை தேடி வருவ! என்னை கட்டிப்ப! என சொல்லிய படி உறங்கி போனான்.

ஆனால் சகுந்தலா தேவி? அவளின் நிலை.. நேராக உள்ளே சென்றவள் குளித்து முடித்து படுக்கைக்கு வந்து சேர்ந்தாள். எண்ணம் முழுவதும் சர்வேஷ் மட்டுமே இருந்தான். அவள் மட்டும் முத்தமிட்டிருந்தால் அது முற்று புள்ளியாக இருந்திருக்காது. அனைத்துக்கும் தொடக்கமாக இருக்கும். "எனக்கு பிடிக்கும் உங்களை.. ரொம்ப புடிக்கும். என வெட்கி போயி சிணுங்கியவள் அவனது தீண்டலையும் முத்தங்களையும் நினைத்து நினைத்து உருகினாள். சர்வேஷ் ஐ லவ் யூ!! அது நடக்காதுன்னு தெரியும். என்னோட வாழ்க்கை அது உங்களுக்கு மட்டும் தான் என மானசீகமாக தன் மனம் கவர்ந்த கண்ணாளனை நினைத்தபடி உறங்கி போனாள்.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சர்வேஷ் இன்னும் உக்கிரமாக இருந்தான். அனைவரிடமும் எரிந்து தான் விழுந்தான். முக்கியமாக அவளிடம் இயல்புக்கு மாறாக பேசவே இல்லை. சகுந்தலாவின் மனதில் அப்போ ஒப்பந்தம் எல்லாத்தையும் மறந்துட்டார் போல என்று நினைத்து கொண்டு இருந்தவழுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இது எத்தனை நாளைக்கு?

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -16
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top