Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
டேய் ரவுடி ஷட் அப் யுவர் மவுத் என கோபமாக கூறினாள் சீதா.

"இதை இன்டன்சனா சொல்றயா?" என ரகுவரன் பார்க்க..

ஆமா இன்டன்சனா தான் சொல்றேன். இப்போ என்ன அதுக்கு? என சீதா அவனை பார்க்க..

நானும் நீயும் பத்து வருசம் வித்தியாசம் தெரியும் தானே என குரல் கடுமையை தத்தெடுத்து கொண்டது.

சரி அதுக்கு என்ன ரவுடி? என சீதா அவளை பார்க்க..

நான் உன்னை பழி வாங்க தான் டி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன். உன்னை என்ன பண்றேன்னு பாரு! கட்டி போட்டு அடி வெளுக்க போறேன் என ரகுவரன் முகம் இறுகி போய் கூற..

சீதா அவனை விதிர்விதிர்த்து பார்த்தவள். என்ன சொல்றீங்க? எனக்கு ரொம்ப பயமாவே இல்ல போடா ரவுடி!! என வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள்.

அப்போ பயம் இல்ல. அப்படி தான என ரகுவரன் கேட்க..

நான் எதுக்கு பயப்படனும்? எனக்கு ஆள் இருக்கு என்றாள் சீதா.

அது யாரு? என ரகுவரன் கேட்க..

ரவுடி ரகுவரன்! எல்லாத்துக்கும் ரகுவரன் வில்லனா இருக்கலாம். எனக்கு ரகுவரன் ஹீரோ!! ஆன்டிஹீரோ பேர்ல இருக்க ஒரு சாப்ட் ஹீரோ என்றாள் புன்னகையுடன்..

ரகுவரன் சிரிப்பை வெளி காட்டி கொள்ளாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

பாக்கியம் அவளை பார்த்ததும் சீதா லட்சுமி என அழைக்க.. பாட்டி என புன்னகை முகத்துடன் ஓடி அவரை அணைத்து கொண்டாள்.

என் பேரனை போய் சந்தேக பட்டுட்டடி! கண்ணு! அதுல எனக்கு வருத்தம் என்றார் பாக்கியம்.

இல்ல பாட்டி! எனக்கு என்ன சந்தேகம்? என் புருசன் மேலே! அது என்னைக்குமே வராது. என்றாள் சீதா.

கன்னத்தில் கை வைத்தபடி பாட்டி புருவத்தை உயர்த்தி கொண்டு கேட்க..

என்ன பாட்டி அப்படி பார்கூறீங்க? என சீதா கேட்க..

என் பேரனை விட கெட்டிகாரியா தாண்டி மா இருக்க. என புன்னகையுடன் கூறினார்.

அதுவும் நல்லதுக்கு தானே பாட்டி என அவள் புன்னகையுடன் கூற..

பாட்டி சாப்ட்டீங்களா? என ரகுவரன் கேட்டு கொண்டே வந்தான்.

நான் சாப்பிட்டேன் ராமா இப்போ தான் உங்க அம்மா எனக்கு சோறு போட்டாள். என அவர் சொல்லி கொண்டிருக்க..

சீதா படியில் ஏறிய படி தன் கணவனுக்கு சைகை காட்டினாள். மேலே வரும் படி..

ரகுவரன் பாட்டியின் மேல் கவனம் செலுத்தினான். அதான் பின் நேராக தன் அம்மாவை பார்க்க சென்றான். இதோ அவனது போன் சிணுங்கியது.

ம்ம் சில்லி கேர்ள்!! மேலே இருந்துட்டு போன் பண்றா! என போனை சைலண்டில் போட்டான். சுமதி அறைக்குள் படுத்திருந்தார். சதாசிவம் ஸோபாவில் அமர்ந்து வெங்கடாஜலபதியுடன் போன் பேசி கொண்டிருக்க...

ரகுவரன் நேராக தன் அன்னையின் முன்னால் சென்று அழைத்தான். மா!! என்றபடி..

ரகு என அழுதபடி எழுந்தார். மா அழாதீங்க!! அப்பா அடிப்பார்ன்னு நான் எஸ்பக்ட் பண்ணல!! வலிக்குதா மா? ஹாஸ்பிடல் போயி ஒரு இஞ்சக்சன் போட்டுட்டு வரலாமா என கேட்டான்.

அவள் பண்ண காரியத்துக்கு நீ சமாதானம் பண்ண பார்க்கிறயா ரகு? என சதாசிவம் குரலை உயர்த்த.. சுமதி இன்னும் அழுதார்.

ஹே இனி தில்லு முள்ளு வேலை பண்ணிட்டு இருந்த நடக்கிறதே வேற!! என மிரட்டினார்.

ப்பா கம்முன்னு இருங்க என அவரை அமைதி படுத்தினான்.

"அந்த SI உன்னை புடிச்சிட்டு போன போது அந்த புள்ளை எப்டி துடிச்சு போனது தெரியுமா? நான் கண்ணால பார்த்தேன் டா ரகு. உன் மேலே ரொம்ப நேசம் வச்சிருக்கு. நான் ஒத்துக்குறேன் நம்ம குடும்பத்துக்கு சம்மந்தம் வச்சுக்க தகுதி இல்லாத இடத்தில் இருந்து தான் அந்த புள்ளை வந்திருக்கு. ஆனால் உன் மேலே நேசம் அதிகம்."

" அந்த புள்ளை அது உண்டு அது வேலை உண்டுன்னு இருக்கு. வந்த மூணு மருமகள்ல உன்னோட பொண்டாட்டி ஒரு தனி ரகம் உன்னை போலவே!.." என்றவர் சுமதியை பார்த்து "நம்ம பையனும் மருமகளும் சந்தோசமா இருந்தால் அதை பார்த்து சண்டை மூட்ட கூடாது பிரிக்க வழி தேட கூடாது. எட்ட நின்னு மனசார வாழ்த்திட்டு வந்திடனும் அதை விட்டு இட்டு கட்டி சிண்டு முடிஞ்சு பேசி பிரிக்கிற வேலை எதுக்கு? இனி இப்படி நடந்தது. உன் அண்ணன் பெரிய ரோஷக்காரன் வீட்டுக்கு கிளம்பி போயிடு" என சொல்லி சதாசிவம் எழுந்து வெளியே சென்று விட்டார்.

சுமதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கண்ணீர் மட்டும் கொட்டி கொண்டிருந்தது. ரகுவரன் கண்களை துடைத்து விட்டபடி, சீதா நல்ல பொண்ணு மா! உனக்கு அவளை பிடிக்கல இட்ஸ் ஓகே. ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு பிடிச்ச மாளவிகாவுக்கு என்னை பிடிக்கல கிரிய தான் பிடிச்சிருக்கு. இதுக்கு என்ன பண்ணலாம்? விடு மா என்றான்.

அதான் அப்பாவே சொல்லிட்டார்ல நீ போ ரகு! அவள் கூட சந்தோசமா வாழு! நான் எதுலையும் தலையிட மாட்டேன் என்றார்.

ரகுவரன் கடைசியாக மா இதை மட்டும் நியாபகம் வச்சுக்கோங்க! உங்களுக்கும் சீதாவை பிடிக்கும். இதை நீங்களே என் கிட்ட சொல்ல தான் போறீங்க அப்படி ஒரு நாள் வர தான் போகுது. வெயிட் அன்ட் சீ என்று விட்டு சென்றான்.

என்ன பண்றான்? இந்த ரவுடி ரங்கா? என மீண்டும் அழைத்தாள்.

எத்தனை தடவை மேடம் கூப்பிடுவீங்க? நாங்க மேலே வரதுக்கு நேரம் கொடுக்கணும் தானே? என ரகுவரன் சட்டையை கழட்டினான்.

என்ன பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரம்? என சீதா அவனை முறைத்து பார்க்க..

என்னோட அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்.

என்னவாம் உங்க அம்மாவுக்கு? என சீதா முகத்தை தூக்கிய படி கேட்க..

"என் அம்மா இல்லன்னா நான் இல்ல தெரியும் தானே!"

தெரியும் தெரியும். ஆனால் உங்க அம்மாவுக்கு தான் என்னை பிடிக்காதே! இந்த வீட்ல என்னை மதிச்சு பேசுறது மூணு ஆள் தான் ஒன்னு ரவுடி, இன்னொன்னு ரவுடியோட பாட்டி அடுத்து ரவுடியோட தங்கச்சி என்றாள் சீதா.

உஷா, சிந்து, சந்துரு, பரத், என்னோட அப்பா? என ரகு கேட்க..

அவங்களுக்கு நான் ஏலியன் மாதிரி ரவுடி!! என்றவள் அவன் அருகில் நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டாள்.

என்ன டி பண்ற? என ரகு கேட்க..

பார்த்தால் எப்டி தெரியுது? கிஸ் பண்றேன். என இரண்டு பக்கமும் முத்தமிட்டவள். நீ ஏன் டா ரவுடியா பிறந்த? ஒரு என்ஜினியரிங் படிச்சிட்டு அப்படியே ஐடி ல ஜாயின் பண்ணிட்டு என்னை வந்து சைட் அடிச்சிட்டு லவ் பண்ணி அதை டெவலப் பண்ணி அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாமே!

ரகுவரன் சிரித்தபடி அப்படி இருந்தால் நான் உன்னை பார்த்திருக்க மாட்டேன். என்னோட ஐடி சர்கில்ல ஒரு பெண் தோழிய பார்த்து நீ சொன்ன எல்லாத்தையும் பண்ணி கல்யாணம் பண்ணி இந்நேரம் என்னோட குழந்தை என அவன் சொல்ல வர வாயை பொத்தினாள் சீதா.

ரகுவரன் திகைத்து விழிக்க.. நீ ரவுடியா இரு எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல என்றாள்.

அப்போ என்னை பண்றியா?

என்ன?

அதான் லவ்!! என ரகுவரன் கேட்க..

நீ தான் என்னை லவ் பண்ற? பண்ண என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட! நான் உன்னை லவ் பண்ணல நீ ஜஸ்ட் என்னோட ரவுடி ரங்கா என்றாள் சீதா லட்சுமி.

சரி விடு நான் குளிச்சிட்டு வரேன் என ரகுவரன் உள்ளே செல்ல..

ஹே நான்!! என சொல்ல வந்தவள் வார்த்தையை விழுங்க.. அவளை குளியலறை இழுத்து சென்று விட்டான்.

என்னங்க விடுங்க!!

சேர்ந்து குளிப்போம் என ஷவரை திறந்து விட்டான்.

சீதாலட்சுமி நீருடன் அவனது உதட்டில் முத்தமிட்டாள்.

ஹே என்னடி இன்னிக்கு கொஞ்சம் ஹாட்டா இருக்க? என ரகுவரன் முத்தத்தின் இடைவெளியில் கேட்க..

ம்ம் என்னமோ தெரியல டெய்லி பச்சோந்தி நிறத்தை மாத்திகிற போல ஒவ்வொரு நாளும் ரவுடி வில்லன் என்னோட கண்ணுக்கு உத்தமன் வில்லனாவும் ஹீரோவாகவும் தெரியுறான் என்றாள் சீதா.

தண்ணீர் கொட்டும் சத்தம் ஒரு பக்கம் ஆக்கிரமிக்க.. முத்தமிடும் சத்தமும் சிணுங்கும் சத்தமும் கூடவே தண்ணீரே கூச்சபட்டு ஆவியாகும் அளவுக்கு வேலையை செய்தார்கள் இருவரும்.

இதோ இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் பேச ஆரம்பித்தாள் சீதா.

என்னங்க!! என அவனது தோள்களை இறுக்கி பிடித்தாள்.

ம்ம் சொல்லுங்க மினி ரவுடி!! சீதா லட்சுமி என கீழ் உதட்டை கவ்வினான்.

நம்ம எப்போ தனியா போக போறோம்? என சீதா கேட்க ஆரம்பித்தாள். அவளை இருக்கி அணைத்து சொர்க்கம் சென்று வந்தவன். என்ன சொன்ன? என முத்தமிட்டு கொண்டே கேட்டான்.

நம்ம எப்போ தனியா போக போறோம்.? என அவனை பார்த்தாள்.

அதான் சொன்னேனே!! சுபாவுக்கு கல்யாணம் ஆனதும் தனியா போலாம் என ரகுவரன் அவளை தூக்கி கொண்டு வெளியே வந்தான்.

எனக்கு தெரியாது. சீக்கிரமா இங்கிருந்து போகனும் என சீதா முகத்தை திருப்பி கொள்ள..

ரகு அமைதியாகவே இருந்தான். எதுவும் பேசவில்லை.

சீதா அவன் முன்னால் வந்து நின்றவள். மாளவிகாவும் கிரி அண்ணாவையும் பாருங்க! எவ்ளோ ஜாலியா அவங்களுக்குன்னு ஒரு வீடு!! அவங்க ரெண்டு பேரும் தனியா எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்காங்க. எனக்கு இந்த ரவுடி கூட்டத்தில் நீங்க இருக்கறது பிடிக்கல என கூறினாள்.

அதான் சொல்லிட்டல்ல சீக்கிரமா பண்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என ரகுவரன் சமாதானம் கூறினான்.

எல்லாமே நல்லா போனால் அது எனக்கும் புடிக்காது கதையில் வரும் பாத்திரங்களுக்கும் போர் அடிக்கும்.

இதோ சீதா வீட்டை விட்டு வெளியே செல்லும் நிகழ்வும் கூடிய சீக்கிரத்தில் வந்து சேர்ந்தது

தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: போதை -24
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeni Shiva

Active member
Joined
Oct 29, 2024
Messages
102
கிறுக்குத்தனம் செய்யலன்னா அது சீதா கிடையாது... ஏதாவது பண்ணிட்டே இருந்தா தான் இந்த உலகம் நம்மள பார்த்துட்டே இருக்கும்
 

sagin tineka

New member
Joined
Apr 20, 2025
Messages
10
Author neega website la post panniruka novels eppoum intha website la irukum thana. Azhagiya asura novel website la varuma illa youtube la varuma , and unga Amazon account eppo sariyagum? Please reply when you have time author please 🙏
 
Top