Episode -13

அவனையும் நம்ம பாப்பாவையும் தப்பா பேசினால் என்ன பண்றது? என நிவாஸ் தன் அண்ணனை பார்த்தான். 

இதை நீ சொல்றயா? என நிதின் முன்னால் நடந்தான். 

அண்ணா நான் என்ன பண்ணேன்? என நிவாஸ் ஒன்றும் புரியாமல் கேட்க, “நீயும் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு கூட ரெண்டு வருஷமா யாருக்கும் சொல்லாம தனியா இருந்திருக்க. சோ நீ நிலா அங்கே இருக்கிறத பத்தி கேட்கலாமா?” என்றான் நிதின். 

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான் நிவாஸ். நிதின் தன் தம்பியை தீர்க்கமாக பார்த்து, சத்ய தேவ்வ எதிர்த்து பேசுற? திமிரா? இல்ல பிஸ்னஸ் மேன்னு கொழுப்பா? 

அண்ணா அது அப்படி இல்ல என நிவாஸ் தயங்கினான். 

அவன் எனக்கும் பெரியவன். என்னை விட மூத்தவன். எனக்கும் அவனுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும். நான் பேசினால் எனக்கு ஜால்ட்ரா தட்டுவியா நீ! அவனை உனக்கு பிடிக்கலன்னா எட்ட நின்னுக்க! இனி மரியாதை இல்லாம பேசின! நாக்கு இருக்காது. அண்ட் அந்த ருத்ரன் அப்படிபட்ட ஆள் இல்ல. நான் சத்ய தேவ்வ நம்பி தான் நிலாவை விட்டு போறேன். அவள் இருக்கட்டும். நீ கூப்பிட்டியே நிலா வந்தாளா? என கேட்டான் நிதின். 

நிவாஸ் எதுவும் பேசாமல் தன் அண்ணனின் முன் அமைதியாக நின்றான். கிளம்பு உன்னோட நிச்சயத்தப்ப கூப்பிடலாம் என நிதின் சொல்லிக் கொண்டே சென்றான். 

இன்பா போனை வைத்ததும் சத்ய தேவ் டாக்டருக்கு அழைத்து பேசி விட்டு ரிப்போர்ட்டை அனுப்பி வைத்தான். நிலா தவிப்புடன் உள்ளே இருந்தாள் என்னாச்சுன்னு தெரியலையே! அவர் எப்படி இருக்கார் பெருமாளே! அவருக்கு ஒன்னும் ஆகபடாது! என வேண்டி கொண்டாள். 

ஹே சத்ய தேவ் பிளீஸ் பிளீஸ் என பின்னால் சுற்றினாள் ரிதம். 

முடியாது பால்கணில போயி டிரை பண்ணு என ருத்ரனை பார்க்க சென்றான் சத்ய தேவ். 

ஹே பிளீஸ் டா! என கத்திக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள். 

“முடியாது டி! ஒழுங்கா போயிடு” என சத்ய தேவ் ருத்ரனை பார்க்க, என்னாச்சு? என இரும்பபிக் கொண்டே எழுந்தமர்ந்தான் ருத்ரன். 

அவள் கிடக்கிறா! இப்போ உனக்கு ஓகே தான? இரு சாப்பிட எடுத்திட்டு வரேன் என நேராக சக்தி சமையலறை சென்றான். 

“என்ன வேணும்? எதுக்கு இப்படி அவரை தொந்தரவு செய்யற?” என ருத்ரன் கேட்க, அவன் என்னை வெளியே கூட்டி போக மாட்க்கிறான். எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு. நான் வெளியே போய் ஒரு வாரம் ஆகுது. சொல்லு டா அவன் கிட்ட.. எனக்கு வெளியே போகனும். என ரிதம் கூறினாள் சோகமாக.. 

முடியாது. நீ என்ன சொன்னாலும் யார் கிட்ட சொன்னாலும் கூட்டி போக மாட்டேன். என உணவு தடுக்களுடன் சத்ய தேவ் வந்து சேர்ந்தான். 

மாமா கூட்டிட்டு போயிட்டு வாங்க! அவளுக்கு nature air வேணுமாம் என ருத்ரன் வேகமாக உணவை பிசைந்து விழுங்கினான். 

பிளீஸ் பிளீஸ் எனக்காக வேணாம். உன்னோட பப்பாவுக்காக கூட்டி போடா! பிளீஸ் பிளீஸ் என ரிதம் கெஞ்ச, ஒரு பெரு மூச்சை விட்டவன். சரி வா போலாம் என அவளை அழைத்துச் சென்றான். 

ருத்ரன் சிரித்துக் கொண்டே உணவை சாப்பிட்டவன். அவனது போனை பார்க்க தன் அன்னை விவேகாவின் அழைப்புகள் நிறைய இருந்தது. என்ன டா உனக்கு பிரச்னை என? ரிதம் கத்துவது மீண்டும் கேட்க, சத்ய தேவ் தடாலடியாக உள்ளே வந்தவன். “தீரா சாப்பிட்டதும் டேப்லட் போட்டுடு”

சரி மாமா என அவன் சொல்வதற்குள் ரிதம் சத்ய தேவ்வை தரதரவென இழுத்து சென்றுவிட்டாள்.  “ஹலோ மா!”

எப்போ தீரா வர? நான் தனியா இருக்கேன். என அன்னை விவேகா கூறினார். “வரேன் மா! அவரு வந்துட்டாரா?”

“உங்க அப்பா ஸ்டேசன் போயிட்டார்! உங்க அக்கா எப்டி இருக்கா? என விவேகா கேட்க, ம்ம் மா மாமா நல்லா பார்த்துக்கிறார் ஒரே ராவாடி அவளையெல்லாம் அடக்குறது ரொம்ப கஷ்டம். என சாப்பிட்டு கொண்டே பேசியவனுக்கு திடீரென புரை ஏறியது. 

தீரா என விவேகா திடுக்கிட்டு அழைக்க, அவன் இரும்பிய படி தண்ணி ஜக்கை பார்த்தான் காலியாகி இருக்க, இரும்பிக் கொண்டே மா இருங்க என இரும்பிக்கொண்டு அவன் திரும்ப அவன் முன் தண்ணீரை நீட்டினாள் நிலா. வேகமாக வாங்கி குடித்தான். அவளின் தலையை தட்டி விட்டவள். முதுகை மெல்ல வருடினாள். 

ருத்ரன் தன்னை நிலை படுத்திக்கொண்டு போனை எடுக்க சிரமப்பட, அவளே போனை காதில் எடுத்து வைத்தாள். 

“தீரா என்னாச்சு? இத்தனை இருமல்..”

“இல்ல மா அது சாப்பிட்டுட்டு இருந்தேன் புரை எரிடுச்சு. வேற ஒண்ணுமில்ல.”

சரி தங்கம் நீ சாப்பிடும் போது நான் தொந்தரவு பண்ணல நீ பாரு தீரா குட்டி அம்மா உன்னை அப்புறம் கூப்பிடுறேன் என சொல்லிவிட்டு விவேகா வைக்க .. 

“ம்ம் பேசி முடிச்சாச்சு!” என ருத்ரன் கூற, போனை அருகில் இருக்கும் மேஜையில் வைத்துவிட்டு திரும்பினாள். 

ஒரு நிமிசம் என அவளை நிறுத்தினான் ருத்ரன். என்ன என்பதை போல நிலா பார்க்க..? 

“உன்னை நான் தண்ணி கேட்டேனா? ஹான்!. தவுச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறது புண்ணியம் கொடுக்கலன்னா பாவம் தான். ஆனால் உன் கையில் தண்ணி குடிச்சா உயிரோட இருந்தாலும் செத்ததுக்கு சமம் டி! அப்படியே பெரிய அன்னை தெரசா மாதிரி சீன் போடுற? போனை எடுத்து காதில் வைக்கற? என்ன பிளான் பண்ற? உன்னோட ஆக்டிங் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? நீ யாரு என்னன்னு எல்லாமே எனக்கு தெரியும் டி!” என ருத்ரன் இஸ்டத்துக்கு திட்டினான். 

நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென சரிந்தது. சுடும் சொற்களை பேசுபவன் முன் பனியாக உருகினாள் பாவை. உன்னை வெளியே போன்னு சொல்றதுக்கு எனக்கு அருகதை இல்ல. ஏன்னா இது என் வீடு இல்ல. என ருத்ரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக அறையிலிருந்து சென்றிருந்தாள் நிலா. 

போகும் அவளை திருப்தியுடன் பார்த்தான் ருத்ரன். அருகில் இருக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு பால்கனி பக்கம் சென்றான். 

என்ன டா? எங்கே டா கூட்டிட்டு வந்திருக்க? எதுக்கு டா என்னை இப்படி டார்ச்சர் பண்ற? என ரிதம் முறைத்து பார்த்தாள். 

ஆம் சத்ய தேவ் அவளை கூட்டி வந்த இடம் டெரஸ். அதை விட கையில் கைவிலங்கு வேறு போட்டிருந்தான். 

சத்ய தேவ் போனை நோண்டியபடி நின்று கொண்டிருக்க, “டேய் உன்னை கொல்ல போறேன். என handcuff பார்த்தவள் என்ன டா இது குழந்தைய கட்டி போடுற மாதிரி இருக்கு? என்ன இந்த கைவிலங்கு different ஆ இருக்கு. பிங்க் கலர்ல மொசு மொசுன்னு துணி இருக்கு. என்ன இது? இப்படி ஒரு handcuff அ நான் பார்த்ததே இல்லையே!” என ரிதம் கணவனின் சட்டையை பிடித்து “டேய் சொல்லு டா” என உலுக்கினாள். 

சத்ய தேவ் அவளை ஏற இறங்க பார்த்தான். “என்ன அப்படி பார்க்கிற? என்னடா?” என ரிதம் அதை அவிழ்க்க முயற்சி செய்தாள்.  

“பச்சை பொய் புழுகி! இது என்னன்னு உனக்கு தெரியவே தெரியாது. அப்படி தான” என சத்ய தேவ் அவளின் முகத்தை நிமர்த்தினான். 

“என்ன இது?” என ரிதம் கண்களை பாவமாக சிமட்டினாள். 

சத்ய தேவ் உதட்டை கடித்தபடி “எனக்கு இன்னும் கூட நினைப்பிருக்கு. பாப் கார்ன் போட்டுட்டு டீவில கசகசா படம் பார்த்திட்டு இருந்தவளுக்கு இப்போ இந்த ஹேன்ட் காப் எதுக்குன்னு தெரியல அப்படி தான”

“தெரியாது!”

ம்ம் ரைட்டு விடு! ஹான் மறந்துட்டேன். இது சைலஜாவுக்காக வாங்கினேன். அவளை பண்ணும் போது இதை அவளோட கையில் போட்டுகிட்டு என சத்ய தேவ் பார்க்க, ரிதமின் முகம் மாறியது. முகத்தை வேறு புறம் திரும்பிக் கொண்டாள். 

ஹே முழுசா கேளு டி! என அவளை கைக்குள் கொண்டு வந்தான். விடு நான் கேட்கல! எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும். வீட்லயே கொண்டு போய் என்னை அடைச்சிடு என ரிதம் லிஃப்ட்டின் பக்கம் சென்றாள். 

மெல்ல அவளை இழுத்து சுவற்றில் ஒட்டியவன். ஹே ராவ்டி! என கண்ணத்தொடு கண்ணம் உரசினான். விடு தொடாத!.  ச்சீ தள்ளி போ!. 

நான் உன்னை தொடல! என்னோட பாப்பாவை  டச் பண்றேன் என்றவன். மெல்ல அவனது கைகளை இடைக்குள் விட்டான். கண்களை இறுக்கி திறந்து மூடியவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க, விட்ரா என கத்தினாள். ராவடி! You worth it தான.. என உதட்டில் முத்தமிட்டான். அழுத்தமாக.. 

சத்ய தேவ்! டேய் விடுடா பையா! உன்னை அங்கேயே எட்டி உதைப்பேன். 

சொல்றவ செய்ய மாட்டா என அவசர அவசரமாக முத்தமிட்டான். உதட்டில், கன்னகுளியில், கழுத்தில் உடைக்கு மேல் துருத்தி கொண்டிருக்கும் இரண்டு இடத்திற்கும் காகாய் போல கடித்துக்கொண்டான். 

“ஹிஸ்ஸ் ஹஅ சத்ய தேவ் விடு இது பப்ளிக் பிளேஸ்” என முனகி கொண்டே நெளிந்தாள். 

இருக்கட்டுமே என இடையில் வருடி முத்தமிட்டான் வேகவேகமாக.. “சத்ய தேவ்!”

“ஹே சண்டாலா!”

“ம்ம்”

“எனக்கு டைவர்ஸ் வேணும் பிளீஸ் கொடுத்திடு” என ரிதம் சொல்ல.. அவள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் வேலையில் தீவிரமாக இறங்கினான். இன்னும் இன்னும் கைகள் எங்கெங்கோ சென்றது. டைவர்ஸ் கேட்ட வாய் அவனது பற்களில் மாட்டி கொண்டு படாத அவஸ்தை பட்டுகொண்டிருந்தது. 

ரிதம் சில நொடிகளிலேயே சோர்வாகி போனாள். அவன் மேல் சாயும் நிலைக்கு வந்திருந்தாள். 

இனி டைவர்ஸ் பத்தி பேசின இது போல தான் உன்னோட கைய லாக் பண்ணி சிவியரா உன்னை என கீழ் உதட்டை கடித்து இழுத்தான். 

அதற்குள் டாக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. 

கைய விடு நான் வீட்டுக்கு போகனும்! என ரிதம் முகத்தை திருப்பிய படி சொல்ல, நானும் வரேன் வா! என அவளுடன் வீட்டுக்கு சென்றான். லாக் ரிலீஸ் செய்த அடுத்த நொடி வேகமாக பாத்ரூம் சென்றாள். 

மெதுவா போடி என கதவை தட்டிடபடி பார்த்தான் நிலா படுக்கையில் உறங்கியிருந்தாள். 

ருத்ரன் பால்கனி ராக்கிங் சேரில் அமர்ந்தபடியே உறங்கி போனான். சத்ய தேவ் உடனே டாக்டருக்கு அழைத்தான். 

டாக்டர்..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.