Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
ரகுவரன் சீதாவின் உதட்டை வருடியபடி "உனக்கு பிடிக்கல சரி தானே?"


சீதா எதுவும் பேசாமல் அசதியுடன் கிடந்தாள். இதோ இப்பொழுதே அவனை தள்ளி விட்டு பிடிக்கல டா! நீ பக்கத்தில் வந்தாலே பத்திகிட்டு எரியுது டா என கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் என்ன செய்ய? இப்போதைக்கு வேறு வழியும் இல்லை.அதனால் பற்களை கடித்து கொண்டு பொறுமையாக இருந்தாள்.



சீதாவின் அமைதியை அவன் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனலாம். அவனது வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மெல்ல ஆட்டங்கள் அரங்கேற துவங்கியது. எனக்கு பிடிச்சிருக்கு! இந்த பைட் மார்க்கை



ஆயிசுக்கும் நான் நினைப்பில் வச்சிருப்பேன். இதை பார்க்கும் போது நம்ம முதலிரவு நினைப்பு வரணும். என முத்தமழை பொழிந்தான் அவளின் நெஞ்சத்தில்..




இப்படியே அரை மணி நேரம் சென்றது. "கொஞ்சம் என்னை விடுறீங்களா? குளிக்கணும்."




ஹோ தாராளமா குளிக்கலாமே என விட்டான். விட்டது அப்படியே விடுவதற்காக இல்லை. விட்டு பிடிக்க..இதோ பிரமாண்ட குளியலறையில் அங்கே படுக்கையறையில் நடந்த அத்தனை சம்பவங்களுக்கு மேல் இப்பொழுது குளியலறையில் அரங்கேறி கொண்டிருந்தது.




பிளீஸ் எனக்கு ரெண்டு தையும் வலிக்குது! தைஸ்ன்னா என்னன்னு இந்த ரவுடிக்கு தெரியுமா? என நினைத்தவள். பிளீஸ் எனக்கு தொடை ரெண்டும் வலிக்குது எனக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுங்க இப்படியே போனால் நான் செத்து போயிடுவேன். என்றாள் விக்கிய குரலுடன்..




அவளின் முகத்தில் முத்தமிட்டு உதட்டில் வந்து முடித்த ரகுவரன். அவளது தொடையை மென்மையாக அழுத்தி விட்டான். பிளீஸ் வேணாம் என சீதா மீண்டும் ஆரம்பிக்க..




நீ தான வலிக்கிதுன்னு சொன்ன! கொஞ்சம் அமைதியா இரு! என சொல்லி விட்டு மாலிஷ் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்து விட்டவன். அவளை சூடான நீர் நிரம்பிய பாத் டப்பில் மெல்ல படுக்க வைத்தான்.




கண்களை மூடி உரங்கியே விட்டாள் சீதா. அவளுக்கு அத்தனை வலி. இரண்டு ஜோடி உதடுகளும் கதறும் அளவுக்கு அவளுக்கு ஆர்கஸத்தை வெரைட்டியாக காட்டியிருக்கிறான். அவளின் அங்கங்கள் இரண்டும் தொட்டால் சிணுங்கி போல சுருங்கி கொள்ளும் ரகுவரனை பார்த்தால் அத்தனை வேலை தனத்தை செய்திருக்கிறான்.




அப்படியே அரை மணி நேரம் பாத் டப்பில் கிடந்தவள் முதுகு வலியால் மெல்ல கண் திறக்க.. எதிரில் ஜானகியின் நாயகன் ரகுவரன்.




என்கிட்ட என்ன இருக்குன்னு அப்படி பார்க்கிறீங்க? இத்தனை நேரமும் இதே இடத்தில் நின்னு என்னை பார்த்திட்டு இருந்தீங்களா? என சீதா அவனை அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.




எப்படி சொல்வான்? வருசம் 365 நாட்கள் பத்தவில்லை ரகுவுக்கு 465 நாட்களாக இருந்தாலும் சரி இன்பினிட்டி நாட்களாகாக இருந்தாலும் சரி சீதாவின் மேல் உள்ள ஈர்ப்புகளுக்கு எத்தனை இன்பினிட்டி ஈடாகும்?




அதற்கு மேல் சீதா அங்கிருக்கவில்லை வேகமாக குளித்து வெளியே வர.. இங்கே கீழே சுமதி முனகலுடன் நின்றிருந்தார். என் மகனை மயக்கி விட்டாள் சண்டாளி என முனகிய படி நிற்க..




அத்தை எந்த வீட்ல இப்படி நடக்கும்? உங்க மூத்த பையன் முதல் ராத்திரிக்கு உங்க மூத்த மருமகள தூக்கிட்டு போனது கூட விட்டுடலாம். ஆனால் இந்த கொடுமை! அய்யோ என்னோட வாயால நான் எப்படி சொல்லுவேன் என உஷா இன்னும் தூண்டி விட..




அத்தை நானும் படிச்சவ தான்! இந்த காலத்து பொண்ணுங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் அதுக்குன்னு இப்படியா? முதல் ராத்திரி நேரம் பத்தாம கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம மத்தியானம் ஒரு மணிக்கு ரூமை விட்டு வரது அக்குறுமமா தெரியல? அய்யோ வாய் கூசுது என பத்தி விட்டாள் சிந்துஜா.




சுமதி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க.. இது இன்னும் அடுக்குமா? காலைல ஆறு மணிக்கு வெளிச்சம் வரதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு குளிச்சு வெளியே வந்து விளக்கு போடுவாங்க! இதென்ன மட்ட மத்தியானத்தில் விளக்கு போட வந்திருக்கா? இப்போ விளக்கு போட்டு என்னைக்கு இந்த குடும்பம் விளங்க? இன்னிக்கி மாமாவோட அம்மா சின்ன தாய் பாட்டி வராங்க அவங்க இதையெல்லாம் பார்த்தால் என்ன நினைப்பாங்க? என தேவையான அளவுக்கு தன் அத்தையின் காதில் ஊதி விட்டு அமைதியாக எதுவுமே தெரியாததை போல நின்று கொண்டார்கள் உஷா மற்றும் சிந்துஜா.




சீதாவின் முகத்தில் அத்தனை வேதனை. இவ்வளவு நேரம் ஆகுமென அவள் எதிர்பார்க்க வில்லை. விட்டால் தானே ரகுவரன்? ஒட்டுண்ணி போல அவளை ஒட்டி கொண்டு அல்லவா இருக்கிறான்.




இவ்வளவு நேரமும் முறைத்து கொண்டிருந்த உஷா மற்றும் சிந்துஜா இருவரும் முகத்தில் பதட்டத்துடன் அவ்விடத்தை விட்டு வேகமாக சமையலறை சென்று விட்டார்கள். காரணம் ஆம் கட் பனியனில் சீதாவின் பின்னால் மீசையை தடவியபடி இறங்கினான் ரகுவரன். அய்யோ வில்லன் வந்துட்டார் நமக்கு எதுக்கு வம்பு என வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டிருந்தார்கள்.




சுமதி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் வாமா சீதா வந்து விளக்கு போட்டுட்டு சாப்பாடு அவனுக்கு எடுத்து பரிமாரிட்டு நீயும் சாப்பிடு என அழைத்தார்.




சீதா நேராக பூஜையறை வந்து விளக்கு ஏற்றி விட்டு நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு திரும்பினாள். வாம்மா வா! என அனைத்து உணவு ஹாட் பாக்சையும் ஒவ்வொன்றாக கொடுத்து விட்டார் சுமதி.




ரகுவரன் டைனிங் டேபிளில் போனை நோன்டியபடி அமர்ந்திருக்க.. சுமதி மெல்ல தன் மகனை எட்டி பார்த்தவர். அப்பளத்தை அவளிடம் கொடுத்து கொண்டே..இன்னும் மெல்ல எழுந்து வெளியே வந்திருக்கலாம்ல. என்ன அவசரம். சூரியன் மறைஞ்சு போன பொழுதுல விளக்கு போட்டிருக்கலாம். என சிரித்து கொண்டே கூறியவர். நல்லா வளர்த்திருக்காங்க உன்னை. என்ன செய்ய? என் பையன் என் பேச்சை கேட்டிருந்தால் இந்த வீட்டுக்கு என் அண்ணன் மக மாளவிகா மருமகளா வந்திருப்பா! எல்லாம் நேரம்! கேடு காலம் பிடிச்சு ஆட்டிட்டி இருக்கு. என வாய் மொழியாக நொறுக்கி விட்டார் அப்பளம் போல அவளின் மனதை...




சீதாவின் கண்களில் நீர் கொட்டியது. கடவுளே இந்த பேச்சையெல்லாம் நான் கேட்கணுமா? என நொந்துபோன படி டைனிங் டேபிள் சென்றாள்.




எனக்கு பரிமாற வேணாம். முதல்ல நீ சாப்பிடு என ரகுவரணின் பேச்சில் உயிர் பெற்றாள்.




ப்ச் நான் தான் சொல்றேன்ல! எனக்கு நீ பரிமாற வேணாம் உட்காரு என அவளின் கையை பிடித்து அமர வைத்தவன். அவளுக்கு பிடித்த உணவுகளை எடுத்து வைத்தான். அதாவது ரகுவரன் சீதாவுக்கு பரிமாறினான்.




பாத்தீங்களா அத்தை உங்க பையன் பண்ற வேலைய? இதெல்லாம் எந்த குடும்பத்தில் நடக்கும்? என உஷா சொல்ல.. அங்கிருக்கும் அனைவருக்குமே அதிர்ச்சி தான். சொல்ல போனால் சுமதிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் சேர்ந்து வந்தது.




இந்த ரகுவரன் இப்படியெல்லாம் செய்வானா? தனக்கு கூட இப்படி ஒரு கொடுப்பன இல்லையே! சதாசிவத்தை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவன் சாப்பிட்ட பின் தான் அவள் சாப்பிடுவாள். சதாசிவத்தின் கம்பீரத்தில் மயங்கி கட்டி கொண்டாள். முரட்டு மனிதனிடம் இந்த ரொமான்டிக் எதிர்பார்க்க முடியுமா? படுக்கையில் மட்டும் தான் சுமதியின் ராஜ்ஜியம். அவளின் காலை கூட தலையில் வைத்து கொள்வார் சதாசிவம். ஆனால் வெளியில்? இதற்கு எல்லாம் தாண்டி தனது சின்ன மகன்கள் பரத் மற்றும் சந்துரு கூட இப்படி இல்லையே? ஆனால் என் பையன்! எனக்கு மட்டுமே கட்டுப்படும் என் மகன் அவனுக்கு என்னாச்சு? கண்டிப்பா இந்த சீதா சிறுக்கி என் மகனுக்கு கேரளாவில் இருந்து மருந்து வாங்கிட்டு வந்து வசியம் பண்ணிறுக்கா! என முடிவே செய்து விட்டார்.




ரகுவரன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவன் கண்ணும் கருத்துமாக தனது கண்மணிக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தான். எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? எல்லாரும் என்னை தப்பா பேசுவாங்க; அது தானே உங்களுக்கு வேண்டும் என அவளின் கண்களில் நீர் திரையிட்டது.




ம்ம் வாயை திற? என திட்டமாக ரகு கூற வேறு வழியில்லாமல் வாயை திறந்தாள். நீ ரொம்ப வீக்கா இருக்க! என்னை தினமும் தாங்கிக்க நிறைய சாப்பிடணும்.




"எனக்கு ரெண்டு கை இருக்கு நானே சாப்பிட்டுக்குவேன் பிளீஸ் விடுங்க" என அழுகையுடன் சீதா சொல்ல..




ரகு அதை காதில் போட்டு கொள்ளவில்லை. மொத்த உணவையும் அவளுக்கு ஊட்டினான். அவனது அதட்டலில் இன்று அதிகமாகவே சாப்பிட்டாள் சீதா. ஆனால் அது எப்படி என்று தான் தெரியவில்லை.




எப்படியோ சாப்பிட்டு முடித்தேன். என நிம்மதியுடன் அவள் எழுந்து கொள்ள..




சீதா உனக்கு ரெண்டு கை இருக்கு தான! என அவளுக்கு ஊட்டி விட்ட உணவு பருக்கை கையில் ஒட்டி இருக்க ஒவ்வொரு விரலையும் ரகு அவளை பார்த்து கொண்டே சப்பு கொட்டினான்.




சீதா பற்களை கடித்தபடி வேறு புறம் திரும்பி கொள்ள.. .




உனக்கு தான் ரெண்டு கை இருக்குல்ல வந்து எனக்கு ஊட்டி விடு என சீதா பதில் சொல்வதற்கு முன் அவளை அமர வைத்து ஆ காட்டினான்.




எப்படியும் விட மாட்டான் என தெரியும் வேறு வழியில்லாமல் கூனி குறுகியபடி அனைத்து உணவையும் அவனுக்கு ஊட்டினாள் சீதா.




இதோ சாப்பிட்டு முடிக்க மணி 3 ஆனது. எல்லாம் அவனால தான் அவள் அரை மணி நேரம் மட்டுமே சாப்பிட்டாள். ஆனால் ரகுவரன் சாப்பிட்டு முடிக்க ரெண்டு மணி நேரம் ஆனது.




என்னடி பண்றீங்க என சுமதி தனது மருமகள்கள் இருவரையும் பார்க்க..




மூத்தாரு இப்போதைக்கு அங்கிருந்து எழுந்துக்க மாட்டார் அத்தை! எங்களுக்கு பசிக்குது. அதான் இங்கேயே தட்டில் போட்டு சாப்பிடுறோம் என இருவரும் கூற.. . சீதா கைகளை கழுவி கொண்டு திரும்பி பார்க்க..




சீ
தா சாப்பிட்ட எட்ச்சில் இலையை எடுத்து கொண்டு போய் பின்பக்கம் போட்டு விட்டு வந்தான் ரகுவரன்.




இதை சீதா மட்டும் பார்க்கவில்லை. சுமதியும் பார்த்தாள்.




தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: போதை -4
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
144
Superb👌 Raghu voda love for Seetha Murattu Kaathal thaan but romba deep love 💕💕💕 pola Sis🤗 Interesting 👌👌👌🔥🔥🔥👍😍.
 

Jeni Shiva

Active member
Joined
Oct 29, 2024
Messages
102
I have read many stories but this story is quite different. Raghu is reminding our village side boys who has more love for their partner. But they do not know how to show that or they do not want to... May be Seetha knows about Raghu's true motivation she would love him back
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
88
Superrrrrrrrrr
 
Top