நிலவில் மூழ்கும் சூரியன்

by Pradhanya kuzhali
698 views

 Episode 51,

 மைவிழி வேகமாக கார்த்திகை தள்ளிவிட்டு   பாத்ரூம் சென்றாள்

இங்கு கார்த்திக்கு என்னாச்சு  விழி விழி விழி என்று அவளைத் தேட குளியலறை கதவின் அருகில் வந்தான்

மைவிழி -கார்த்திக் எனக்கு  ஸ்டொமக் பெயின்

கார்த்திக் -சரி ஓகே விடு  விழிஎன்று கூறிவிட்டு அவன் சென்று படுத்து கொண்டான்

மை விழி-மைவிழிக்கு என்ன செய்ய என்று இருந்தது அவளது கண்களில் இந்தமுறை துளிகூட கண்ணீர் வரவில்லை

அந்தளவு அவளது மனம் கனமாக இருந்தது மைவிழி மனதில் அவன் மனதில் நான் எப்போதும் இருக்க மாட்டேன்

அவன் என்னை மனதால் ஒருபோதும் காதலிக்க மாட்டான் கார்த்திக்கின் மனதில் என்றுமே மகிழினி(மான் விழி) தான் இருப்பாளா அதனால்தான் அவளது பெயரை விழி என்று பச்சை குத்திக் வைத்திருக்கிறான்

இப்போது என்னை நினைத்து தொட்டு இருப்பானா  அவளை நினைத்து தொட்டு இருப்பானா என்று தலை தலையாக அடித்து கொண்டாள்

இதற்கு மேல் என்னால் வாழ முடியாது ஊருக்கு சென்றவுடன் கார்த்திக்கிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்று மனதில் திர்மானத்துடன் வெளியே வந்தாள்

மைவிழி-மனதில் கார்த்திக் விழிவிழி என்று கூப்பிடுகிறான் அவளை நினைத்து தான் நம்மை கூப்பிடுகிறான்

நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் நான் அவர்களைப் பிரித்து இருக்கக் கூடாது கார்த்திக்கின் மனதில் எப்போதும் என்னால் வர முடியாதா என்று மனம் நொந்து அழுது கரைந்தாள் அந்த மைவிழி

கார்த்திக் காலையில் எழுந்தவுடன் தான் அவனுக்கு நினைவு வந்தது நேற்று என்ன நடந்தது என்று மைவிழியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவளிடம் சென்றான்

கார்த்திக் மைவிழி என்ன மன்னிச்சிடு நான் தெரியாம நான் உன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிட்டேன்

மைவிழி- கார்த்திக்கை பார்த்து ஒரு ஏளனப் புன்னகை சிந்தி பரவாயில்லை கார்த்திக் என்று கூறினாள்

காலை வேகமாக  கார்த்திக்கும் மைவிழியும் விமான நிலையம் கிளம்பினர்

மை விழி- ஒரு வார்த்தைகூட கார்த்திக்குடன் பேசவில்லை

கார்த்திக்-மைவிழி என்னாச்சு ரொம்ப silent  ஆ இருக்க

மைவிழி -கார்த்திக் எனக்கு mood swings ஆ இருக்கு என்கிட்ட பேசாதீங்க எனக்கு ஒரு மாதிரி மனநிலை சரியில்லை லீவ் மீ அலோன்

வீட்டிற்கு வந்ததும் மைவிழி நேராக தனது அறைக்கு  சென்று படுத்துக் கொண்டாள் தனது அறையை தாழிட்டு உள்ளே வந்து படுத்தவள்

இந்த ஐந்து நாட்களையும் நினைத்து கொண்டு இருந்தாள் சுய நினைவில் இருக்கும் போது என்னிடம் அவன் தானாக வந்து முத்தமிட்டானே

அதற்குக் காரணம் என்னிடம் ஒரு இனக்கவர்ச்சி மட்டும்தானா என்று நினைத்து நினைத்து கரைந்தாள் அவள்

கார்த்திக் -மனதில் அவள் நம்மை தவறாக நினைத்து விட்டாள் அதனால் தான் என்னிடம் பேச  வில்லை முயற்சி இப்போது என்ன செய்வது ஏதாவது செய் மாறா சாப்பிட வெளியே வருவா அப்போது பார்த்துகொள்ளலாம்

மதியம் ஆனது கார்த்திக் உணவுகளை தயார் செய்து விட்டு அவளை அழைத்தான் கதவுகளை தட்டினான்

கார்த்திக் -மைவிழிவெளியே வா சாப்பிடலாம் மதியம் ஆகிவிட்டது காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடவில்லை

அந்த அறையில் இருந்து எந்த ஒரு சத்தமும் வரவில்லை மைவிழி மைவிழி மைவிழிகதவு திறந்தது

மைவிழி-எனக்கு சாப்பாடு வேண்டாம் ப்ளீஸ் என்ன தனியா விடுங்க தயவுசெய்து என்ன தொந்தரவு செய்யாதீங்க எனக்கு மனசு சரியில்ல

கார்த்திக் -என்ன ஆச்சு மைவிழி மைவிழி அவள் காதுகளை பொத்திக் கொண்டு தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீங்க ப்ளீஸ் என்று தன் அறையில் மீண்டும் கேட்டுக் கொண்டாள்

கார்த்திக் மகிழினிக்கு போன் செய்து அவளிடம் பேசினான் மைவிழி வந்ததிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை என்ன செய்வது என்ன ஆயிற்று எதுவும் சொல்லமாட்டிங்குரா எதுவும் சரி இல்லை

மகிழினி-சரிங்க மாமா நான்  வீட்டுக்கு வரேன் என்று கூறி போனை வைத்தாள்

சூர்யாவும் மகிழினியும் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். மை விழி எதிர்பார்க்க வில்லை கார்த்திக் மகிழினி கிட்ட சொல்லுவான் என்று

உள்ளே சென்ற மகிழினி கார்த்திக் கிட்ட மை விழி எங்கே என்று கேட்க 

கார்த்திக்-அவள் படுக்கை அறையில் இருக்கிறாள் என்று கூறினான்.

சூர்யாவும், சக்தியும் சோபாவில் அமர்ந்து கொண்டனர் . கார்த்திக் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். சூர்யாவும் அவனை கவனித்தான்

மகிழினி-அக்கா கதவை திற நான்  மகிழினி வந்து இருக்கிறேன் என்று கூற 

மை விழி -கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். கண்ணாடி அணிந்து கொண்டு வந்தாள் 

மகிழினி-என்னாச்சு அக்கா உனக்கு 

மை விழி-கொஞ்சம் தலை வலி அப்படியே தூங்கிட்டேன் அது உங்க மாமா வுக்கு தெரியல என்று மிகவும் இயல்பாக நடந்து கொண்டாள்.

மகிழினி-ஓ அப்படியா நான் ரொம்ப பயந்து விட்டேன் சரி வா நம்ப சாப்பிடலாம் 

கார்த்திக் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் மை விழி அவனுடன் பேசவே இல்லை . கார்த்திக் மனம் மிகவும் சங்கடமாக உணர்ந்தான்.

மை விழி சூர்யாவிடம் -மாமா நாளையில் இருந்து உங்க office ல நான் join பண்ணிக்கிறேன் 

சூர்யா-you always  welcome விழி என்று சூர்யா கூறினான். 

சூர்யா-ஏய் நீ எப்போ ஆஃபீஸ் வர போற 

மகிழினி-நான் வரமாட்டேன் 

சூர்யா- why 

மகிழினி-நான் எப்பவும் போல ரகு சார் office தான் போவேன் நான் MBA பண்ண போறேன் 

சூர்யா- அவனோட ஆஃபீஸ் தான் நம்ப ஆஃபீஸ் ல combine ஆகிடுச்சே அப்புறம் என்ன டி உனக்கு

மகிழினி-நான் ஆஃபீஸ் வந்தால் அது நல்லா இருக்காதுங்க  

சூர்யா- நீ வந்தால் எனக்கு help ஆ இருக்கும் டி என்று இரட்டை அர்த்தம் கொண்டு பேச

மகிழினி- first நீங்கள் சாப்பிடுங்க என்று கூறினாள்

மை விழி- மாமா ஒரு வழியா கன்வின்ஸ் பண்ணிடீங்க போல என்று சிரித்து கொண்டே கேட்டாள்

சூர்யா-இல்ல விழி அவள் தான் என்கிட்ட வந்து கெஞ்சினாள் அதனால் தான் சரி பாவம் ன்னு அப்படியே பேசினேன் 

மகிழினி- சூர்யா என்று கூற 

சூர்யா- என் கிட்ட என்னடி சொன்ன பேர் சொல்லி கூப்பிட மாட்டேன்னு இப்போ சூர்யான்னு கூப்பிடற வீட்டுக்கு வா உனக்கு இருக்கு என்று இரட்டை அர்த்தத்தில் கூறினான்.

கார்த்திக் சாப்பிடுவது போல வைத்த கண் வாங்காமல் மை விழியை பார்க்க

சூர்யா- கார்த்திக் கொஞ்சம் plate பார்த்து சாப்பிடுங்க  என்று கூற

கார்த்திக்- தன்னை சுதாரித்து கொண்டே மை விழி எதுக்கு உங்கள் ஆஃபீஸ்க்கு போறா 

சூர்யா-நான் designing dept ஓபன் பண்ணிருக்கேன் அதுல மை விழி join பண்றேன்னு சொல்லி இருக்கா 

மகிழினி-அக்கா நீ மாமா கிட்ட கேட்கலயா 

மை விழி-நான் சூர்யா மாமா கிட்ட கேட்டுட்டேனே 

மகிழினி-நான் உன்கிட்ட கார்த்திக் சார் கிட்ட சொன்னியா ன்னு கேட்டேன்

மை விழி-எதுவும் கூற வில்லை 

கார்த்திக்- விடு மகி அதை உன் அக்கா மறந்து இருப்பா நீ சாப்பிடு என்று கூறினான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு அமர்ந்தனர் . கார்த்திக் மனதில் அவர்கள் கிளம்பிய உடன் பேசலாம் என்று நினைத்து கொண்டான்.

மகிழினி அங்கு சென்று அவர்கள் எடுத்த அனைத்து போட்டோஸ் ம் வாங்கி பார்த்து கொண்டு இருந்தாள் .

சூர்யாவுக்கு அருகில் மை விழி சக்தியுடன் அமர்ந்து இருந்தாள்.

மகிழினி- சூர்யாவிடம் என்னங்க இங்கே பாருங்க செம்மையா இருக்கு இந்த பிக் என்று அவனிடம் காட்டி கொண்டே பார்க்க 

மை விழி-மாமா என்று சூர்யாவை கூப்பிட 

சூர்யா-சொல்லு விழி 

மை விழி-சக்தியை இங்கே விட்டு போறீங்களா 

சூர்யா-உடனே மகிழினி யை பார்த்து கொண்டே கண்கள் மின்ன எனக்கு ok மா 

மகிழினி-இல்ல அக்கா முடியாது என்று கூறி சூர்யாவை முறைத்தாள்

கார்த்திக்-என்ன மைவிழி ரொம்ப விலகி போற மாறி என் மனசுக்கு ஏன் தோணுது என்று நினைத்து கொண்டான்

சூர்யா-மை விழி உனக்கு ஆஃபீஸ் ல நிறைய company இருக்கு தெரியுமா 

மை விழி-யாரு மாமா அவங்க

சூர்யா-கனி இருக்கா 

மை விழியும், கார்த்திக்கும் ஒரு சேர கணியா என்றனர்.

சூர்யா-ஆமா கனி தான் இப்போ பெங்களூர் ல தான் இருக்கா இன்னும் 2 டேஸ் ல opening ceremony 

மை விழி-இப்போ கனி எங்க இருக்கா 

சூர்யா- ஜனனி ன்னு என்னோட மாமா பொண்ணு கூட இருக்கா 

மை விழி-இந்த கார்த்திக் கிட்ட இருந்து அவனை தவிர்க்க வேண்டும் என்று அப்படியா நான் இப்போவே கனிய வர சொல்றேன்.

சூர்யா-அப்புறம் ஆதி, dinesh , ஜெனி , ராம், ராஜி இன்னும் நிறைய பேரு 

கார்த்திக்-தினேஷ் ஆ

சூர்யா- தினேஷ் தான் மகிழினி அத்தை பையன் .

கார்த்திக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது.

மை விழி கனியை வீட்டுக்கு வர சொன்னாள் . ஒரு அரை மணி நேரம் கழித்து கனியும், ஹரிஷம் வந்தனர்.

மை விழி அவளை அணைத்து கொண்டாள்.

சக்தி-என்ன மாமா எப்போ பார்த்தாலும் நீ கனி கூட சுத்துற 

சூர்யா- சக்தி கனிய ஹரிஷ் மாமா க்கு கல்யாணம் பண்ணி வெச்சிடலாம் ok வா என்ன கனி உனக்கு ok வா

கனி-வெட்க பட்டுக்கொண்டே ok அண்ணா என்று கூறினாள் 

மகிழினி- ஹரி  அண்ணா என்கிட்ட கூட சொல்லல ம்ம்ம் 

ஹரி-அப்படி இல்ல மகி மாமாவுக்கு தெரியும் முன்னவே

மகிழினி-கார்த்திக் மாமா என்கிட்ட நீங்கள் சொல்லவே இல்ல

ஹரி-ஏய் நான் சூர்யா மாமாவை சொன்னேன்

கார்த்திக்கு இந்த முறை மிகவும் கோபம் வந்தது முதலில் மகிழினி, மை விழி, என்னோட தங்கை கனி, இப்போ என் கூட இருக்க ஹரிஷ் இப்போ சூர்யா கிட்ட ஒட்டி கிட்டான் என்று கார்த்திக் வேகமாக படுக்கை அறை சென்று விட்டான்

சூர்யா- கார்த்திக் என்னாச்சு என்று கூறி கொண்டே உள்ளே வந்தான்

கார்த்திக்-ஒன்னும் இல்ல சொல்லுங்க சூர்யா

சூர்யா-உங்க கிட்ட thanks சொல்லிட்டு போலாம் னு தான் வந்தேன் 

கார்த்திக்-எதுக்கு

சூர்யா- அன்னிக்கு நீங்கள் என்கிட்ட சொல்லாமல் இருந்தால் இந்நேரம் மகி ரொம்ப கஷ்ட பட்டு இருப்பாள்.

கார்த்திக்-அதனால என்ன பரவாயில்லை விடுங்க

சூர்யா-அப்புறம் life எப்டி jolly யா போகிறதா என்று ஆண்கள் பாஷையில் பேச 

கார்த்திக்-இங்க life ஆரம்பிக்கவே இல்ல சூர்யா மை விழி என்ன avoid பண்றா 

சூர்யா-நீங்களா இல்ல அவளா

கார்த்திக்- அவ தான் சூர்யா இப்போ தான் அவ மேலே எனக்கு ஒரு feeling வந்திருக்கு மை விழி ய எனக்கு பிடிச்சு இருக்கு  இது love ஆ அப்டின்னு எனக்கு தெரியல அவ கூட  life full ஆ  இருக்கணும் அது தான் என்னோட ஆசை 

சூர்யா- ஒரு நிமிஷம் கார்த்திக்

கார்த்திக்-சொல்லுங்க 

சூர்யா-இது மகிழினி அக்கா அப்டிங்கறது னாலதானா இல்ல முழு மனசா சொல்றிகளா

கார்த்திக்-மான் விழி என்னோட பிரஸ்ட்love அது எப்போதும் மாறாது ஆனால் இப்போ அவ மேலே எனக்கு அன்பு இருக்கு காதல் இல்ல அவள் சந்தோஷமா இருக்கனும் 

சூர்யா-அதுக்கு நான் இருக்கேன் கார்த்திக்  என்னோட மான் விழியை பார்த்து கொள்ள got it

கார்த்திக்-ஆனால் மை விழி மேல் எனக்கு அது எப்டி சொல்றது i cannot define , i cannot express in my words

சூர்யா- i  understand  கார்த்திக் நாங்க கிளம்புறோம் 

கார்த்திக்-ok விழியை பத்திரமா பார்த்துகொங்க இப்போ தான் அவ நல்லா இருக்கா பழைய விழி மாறி 

சூர்யா-நீங்கள் சொல்றது கரெக்ட் தான் அவ சூர்யாவோட மான் விழி

 Rate it the story, comment it

 Episode 52,

சூர்யா-நீங்கள் சொல்றது கரெக்ட் தான் அவ சூர்யாவோட மான் விழி  என்று சூர்யா இங்கு சொன்ன

அதே நேரம் அங்கு கனடாவில் வேலை நேரத்திலும் தவறாமல் தனக்கு அவள் வேண்டும் என்றுSPR (சூர்யா பிரகாஷ் ரெட்டி) மகிளினியின் புகை படங்கள் ஒவ்வொன்ரையும் பார்த்து கொண்டே 

SPR-மனதில் பொம்மாயி இந்த மாவய்யா கிட்ட சீக்கிரம் வந்திடு மா உனக்காக  10 வருஷம் நேனு வெய்ட் செஸ்தானு என்று கூறி கொண்டே இதுக்கு மேல என்னால முடியாது டா  நா கொடுக்கு(மகன்) நிதின் பாவம் நேனு  பாவம் என்று நினைத்து கொண்டு நாட்களை எண்ணினான்.

இரண்டு நாட்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை .மை விழி கார்த்திகை மிகவும் தவிர்த்தாள் அவனோடு ஒரு துளி பேச்சும் இல்லை 

ஒரு பார்வை பரிமாற்றம் கூட இல்லை இன்று designing department opening day சூர்யா அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். 

மை விழி இன்று மிகவும் அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டாள். கனி இந்த இரண்டு நாளும் கார்த்திக் வீட்டில் தான் தங்கி இருந்தாள்.

கார்த்திக் opening day க்கு அவனும் தன்னை தயார் படுத்தி கொண்டு அவளை அழைத்து செல்ல காத்திருந்தான்.

கனியை ஹரிஷ் வந்து அழைத்து சென்று விட்டான். இப்போது வீட்டில் கார்த்திக், மை விழி மட்டுமே இருக்க

கார்த்திக்-விழி நீ கீழ போ மா நம்ப ரெண்டு பேரும்  சேர்ந்து போலாம்

மை விழி-தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே என்னை கூட்டிட்டு போக வராங்க மிஸ்டர் கார்த்திக் dont waste your time என்று கூறியவள் வேகவேகமாக சென்று விட்டாள்.

கார்த்திக்-மிஸ்டர் கார்த்திக் சொல்லிட்டு போறா நான் இவளுக்கு stranger மாறி தெரியரெனா என்று அவள் யாருடன் போகிறாள் என்று எட்டி பார்க்க அதை கண்ட கார்த்திக் மனம் கொதித்தது .இந்த மை விழிக்கு என்ன திமிர் இருக்கும் .

இந்த தினேஷ் தான் என்னோட மான் விழி பிரிய காரணம் இப்போ இவன் என்னோட பொண்டாட்டி ய என்கிட்ட இருந்து பிரிச்சு விட்டிடுவான் போலவே 

இப்போ ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ் வேற என்று நினைத்தவன் வேகமாக கிளம்பினான்.

தினேஷ் ம் , மை விழி, உதயன் மூவரும் மிகவும் நெருக்கம் மை விழியும் தினேஷும் ஆதி மகிழினி போல மிகவும் நெருக்கமான தோழமை 

தினேஷ் க்கு ஒரு வருத்தம் என்ன என்றால் தன் மாமன் மகளை கட்டிக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் மட்டுமே வஞ்சனை எல்லாம் இல்லை கார்த்திகை திணேஷ் க்கு பள்ளி பருவத்தில் இருந்தே பிடிக்காது.

மை விழி அமைதியாக வர தினேஷ் அவளை பார்த்தவன்.

திணேஷ்-என்ன மை விழி என்னாச்சு கண்ணாடி போட்டு இருக்க அவன் ஏதாவது உன்னை torture பண்றானா நீ என்கிட்ட சொல்லு மா அவனை நான் பார்த்து கொள்கிறேன்.

மைவிழி-கண்களில் கண்ணீர் இப்போது விழுந்து விட்டது

திணேஷ்-ஏய் லூசு ஏன் இப்போ அழுகிற  என்று கார் நிறுத்தினான்

மை விழி-மாமா என்று அழுது கொண்டே திரும்பி அந்த கார்த்திக் 

திணேஷ்-என்னாச்சு என்று இவன் கண் கலங்கினான் 

மைவிழி-அந்த கார்த்திக் விழி னு பச்சை குத்தி இருக்கான் மாமா என்று தேம்பி தேம்பி அழுதாள்

திணேஷ்-அதனால என்ன அது உன்னோட name தானே என்று ஒரு நிமிடம் கழித்து மான் விழி ய நினைச்சு டாட்டூ போட்டு இருக்கானா

மை விழி-அவள் இரு காதுகளையும் பொத்தி கொண்டாள். வேணாம் மாமா எனக்கு அப்படியே சாகனும் போல இருக்கு இன்னும் இது என்னோட மனசுல வச்சு இருந்தேன்னு வச்சிகொங்களே நான் செத்து போயிருப்பேன் மாமா என்று அழுது கரைந்தாள்.

திணேஷ்-சிறு வயதில் இருந்து மை விழி ஆசைப்படும் அனைத்தும் தினேஷ், உதயன் இருவரும் மாறி மாறி அவளை பார்த்து கொள்வர் மகிழினி அதிகமாக இவர்களுடன் ஒட்டவும் மாட்டாள் இப்போது மை விழி கண்ணீர் சிந்துவது அவனுக்கு மிகவும் வலித்தது.

திணேஷ் அவளை சமாதானம் செய்யும் பொறுத்து ஏய் அப்படி எல்லாம் இருக்காது மை விழி  நீ நல்லா பார்த்தியா . இஷ்டம் கொண்டு தான் உன்னை அவன் கல்யாணம் பண்ணி இருக்கான் 

மை விழி-இல்ல மாமா என்னை கல்யாணம் பண்ணா தான் மகி பக்கத்தில் அவன் இருக்க முடியும் ன்னு  கல்யாணம் பண்ணி இருக்கான் 

திணேஷ்-இது சூர்யாவுக்கு தெரியுமா

மை விழி- ம்ம்ம்ம் மகிழினி  சாதாரணமானவ இல்ல மனசுல அவனை நெனைச்சுக்கிட்டு சூர்யா மாமா வ கல்யாணம் பண்ணி இருக்கா ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல மாமா இந்த கார்த்திக் அவன் அதுக்கும் மேலே இது முன்னவே எனக்கு தெரிந்து இருந்தால் நான்

தினேஷ்-என்ன பண்ணி இருப்ப  உனக்கு தான் எல்லாமே தெரியுமே இந்த டாட்டூ மேட்டர் தான் புதுசு எல்லாமே உன்னோட plan தான நீ இப்போ என்ன பண்ண போற

மை விழி-நான் என்று நிறுத்த

தினேஷ்- நீ எல்லாம் என்கிட்ட இருந்து மறச்சுட்ட மை விழி முன்னவே நீ சொல்லி இருந்தால் இவ்ளோ தூரம் வந்திருகாது

மை விழி-நான் divorce வாங்க போறேன் மாமா 

திணேஷ்-ஒரு நிமிடம் அதுர்ந்து பின் வாங்கி என்ன பண்ணுவ

மை விழி-அவனை விட்டு நான் தூரமா போய்டுவேன் மாமா 

திணேஷ்- லூசு மாதிரி பேசாத மை விழி நீ தானே விருப்ப பட்ட  அப்போ அவன் மனசுல நீ தான் இடம் பிடிக்கனும் புரியுதா அவனை உன்ன நினைக்க வை 

மை விழி-விம்மி கொண்டே மாமா இதுக்கு மேல் என்னால சொல்ல முடியல 

தினேஷ்- இப்போ என்ன அவன் மகிழினி காக தான் உன்கூட இருக்கான்னு நீ நெனைக்கிறியா 

மை விழி-ஆமாம் 

தினேஷ்- இல்ல மை விழி உன்னை போய் அவன் பிடிக்காமல் போய்ட்டானா அவன் ஒரு மனித பிறவியே இல்ல 

எல்லாருக்கும் அவங்க முதல் காதல் மிகவும் முக்கியமான ஒன்னு தெரியுமா நமக்கு பிடிச்சவங்க கிட்ட சில பேர் சொல்லுவாங்க ஆனால் 98% பேர் சொல்ல மாட்டாங்க சோ நீ அந்த மாதிரி தான் 

மை விழி-என்ன மாமா சொல்லறீங்க

திணேஷ்-இப்போ நீ தானே அவனை உயிருக்கு உயிரா காதலிச்ச அவன் யாரை காதலிச்சா உனக்கு என்ன அவனை உண்மையா நீ நேசிக்கிறது நிஜம் அப்படின்னா அவன் உன்னை தேடி வருவான் கண்டிப்பா நடக்கும்

மை விழி- அப்போ மகிழினி கார்த்திக் love உண்மை இல்லையா 

திணேஷ்-அது கார்த்திக் முட்டாள் தனம் அவன் மகிழினி ய நம்பல அதனால் தான் பிரிந்தான் இல்ல நீ பிரிச்ச அப்போ உனக்கு தெரியலையா

மை விழி-அமைதியாக இருந்தாள்

தினேஷ்- ஒன்னு இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும் இதுக்கும் மேலே உன்னோட இஷ்டம்

மை விழி-இல்ல மாமா எனக்கு கார்த்திக் வேண்டாம்

தினேஷ்-நீ வசந்தன் மாமாவையும் வாணி அத்தை யையும் ஒரு நிமிஷம் நினைச்சு பாரு என்று கூறி விட்டு காரை கிளப்பினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வர அதற்கும் முன்பே கார்த்திக் அங்கு இருந்தான்.

கார்த்திக்- மகி உன்னோட அக்கா உன் மாமா கூட வரா பாரு அவள் எங்கே ன்னு கேட்ட தானே இப்போ அவ கிட்ட நீயே கேளு

மகிழினி- அக்கா நீ ஏன் கார்த்திக் சார் கூட வரல தினேஷ் மாமா கூட வர 

மை விழி-  உன்னோட வேலைய பாரு என்னை  question கேட்கிற வேலை வச்சுக்காத புரியுதா 

கார்த்திக்-இப்போ எதுக்கு நீ  அவளை திட்டுற

மை விழி-அவ என்னோட தங்கை நான் என்ன வேணும்னாலும் சொல்லுவேன் அதை கேட்க உங்களுக்கு rights இல்ல புரியுதா

மகிழினி-மாமா விடுங்க அவ tension ஆ இருக்கா

கார்த்திக்- நீ பண்றது சரி இல்ல மை விழி

மை விழி – ஓ அப்படியா ம்ம்ம் ok என்று கூறி விட்டு தினேஷ் மாமா வாங்க போலாம் என்று கூறி கொண்டே உள்ளே சென்றாள்.

கார்த்திக்- என்ன இவ வேற மாறி இருக்காளே

மகிழினி-மாமா நீங்கள் தவறா எடுத்துக்காதிங்க அவ இப்படி தான் மன்னிச்சிடுங்க

கார்த்திக்- நீ ஏன் மன்னிப்பு கேட்கிற மான் விழி அவளை பத்தி எனக்கு தெரியாது இப்போ தான் தெரிஞ்சிக்க ஆரம்பித்து இருக்கிறேன் வா போகலாம் என்று உள்ளே சென்றனர்

கார்த்திக் நேராக தினேஷ் இருக்கும் இடம் நோக்கி சென்றான். 

கார்த்திக்- தினேஷ் உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் 

தினேஷ்-ம்ம்ம் சொல்லு

கார்த்திக்- நீ மை விழி பின்னாடி ஏன் சுத்துற அவ என் பொண்டாட்டி

தினேஷ்- நான் பண்றது இருக்கட்டும் நீ என்ன பண்ணிட்டு இருக்க

கார்த்திக்-நான் என்ன பண்றேன் 

தினேஷ்-சார்  தங்கையை love பண்ணுவாராம் அப்றம் சண்டை போட்டு போவாராம் இப்போ தங்கை க்கு பதில் அக்கவா கல்யாணம் பண்ணிக்குவாராம்  நீ எல்லாம் என்னை கேட்க வந்துட்ட போடா

கார்த்திக்-என்ன பேசுவது என்று தெரியவில்லை . தினேஷ் ஒரு ஏளன பார்வை சிந்திவிட்டு அங்கு இருந்து நகர்ந்தான்.

 மகிழினி  சூர்யா கூடவே சுற்றி கொண்டு இருந்தாள் ஆஃபீஸ் தொடர்பான விஷயங்களை அனைவரிடமும் பேசி விட்டு அணைவரையும் அறிமுகபடுத்தினர்.

கார்த்திக் -மனதில் மை விழிக்கு நம்மை பற்றி எதுவும் தெரிந்து இருக்குமா அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறாளா என்று நினைத்தவன் மூளையில் இப்போது தான் அந்த டாட்டூ நினைவு வந்தது. 

நேராக கார்த்திக்-மான் விழி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று கூறி விட்டு சூர்யாவிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

மை விழி- கார்த்திகை கண்டு கொள்ளவில்லை மனதில் அவன் மேல் வெறுப்பை வளர்த்து கொண்டாள்.

தினேஷ்-மை விழி கார்த்திக் என்கிட்ட வந்து பேசினான் என்று நடந்தவற்றை கூறினான்

மை விழி-  மாமா அவனை பத்தி பேசாதிங்க எனக்கு ஒரு help பண்ணுங்க மாமா என்று கூற மை விழி அவளுக்கு தேவையானது அவனிடம் கூற

தினேஷ்-உன்னோட வீட்டுக்கு வந்து door delivery பண்ணுவாங்க எனக்கு இங்கே work இருக்கு மா  நீ எப்படி இப்போ போவ

மை விழி-சிரித்து கொண்டே மாமா என்னை குழந்தை மாறி treat பண்ணாந்திங்க 

தினேஷ்-மை விழி உன்னை பார்த்தால் நீ சின்ன வயசுல நீ gown போட்டு கிட்டு ரெட்டை குடுமி போட்டு மாமா எனக்கு அது வேனும் இது வேனும் அப்டின்னு என் கால் சுத்தி சுத்தி வருவியே எனக்கு உன்னை பார்த்தால் அந்த குட்டி பொன்னு முகம் தான்  நியாபகம் வருது

மை விழி-கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நின்று இருந்தது. மாமா நான் கிளம்புறேன் என்று கூறி விட்டு 

மை விழி- நேராக தன் வீட்டுக்கு சென்றாள் தன்னிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்தவள் தன் அறைக்கு சென்று தன்னுடைய உடைகளை மாற்றி கொண்டு டெலிவரிக்காக காத்திருந்தாள்.

அவள் நினைத்தது போலவே கதவு மணி அடிக்க அந்த parcel வாங்கி கொண்டாள்.

உள்ளே தனது அறைக்கு இரண்டு கண்ணாடி கோப்பையுடன் சென்று அவளது சோகம் தீர்க்கும் red wine ஆ பருக ஆரம்பித்தாள்.

கார்த்திக் -வீட்டுக்கு வந்தவன்  தனது காலணிகள் கழட்ட அப்பொழுது தான் மை விழியின் காலணிகள் பார்த்தவன் தன்னவளை பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளே செல்ல அவள் படுக்கை அறையில் அரவம் கேட்க அங்கு தான் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் அமைதியாக guest ரூம் சென்று விட்டான்.

இங்கு தேஜு- மனதில் சூர்யா இனி என்னால் முடிந்த அனைத்தும் செய்து விட்டேன் நீ தான் இனி மகிழினி யை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த போட்டோஸ் மெயில் SPR க்கு அனுப்பினாள்.

கமெண்ட் பண்ணுங்க friends ஸ்டோரி பிடிச்சு இருந்தால் like பண்ணுங்க மறக்காமல் ratings கூட உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

 Episode 53,

சூர்யாவுக்கு இன்பா போன் செய்தான்.

இன்பா-ஹலோ மச்சி 

சூர்யா-ம்ம்ம் சொல்லு டா ஆள் adress யே இல்ல

இன்பா-அதை நான் சொல்லனும் 

சூர்யா-சரி விடு அதெல்லாம் கல்யாணம் ஆனால் தான் தெரியும்

இன்பா- ஒரு நிமிஷம் கூட மகிழினி ய விட்டு பிரிய முடியலையா 

சூர்யா-ம்ம்ம் ஆமாம் 

இன்பா-இதெல்லாம் என் காதில் கேட்கணும் னு என்னோட விதி 

சூர்யா-இப்போ எதுக்கு IPS எனக்கு phone பண்ணினீங்க

இன்பா-இல்ல மகிழினி, மை விழி, அந்த ஆதி அப்புறம் ஜெனி இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும் டா

சூர்யா- any thing serious 

இன்பா- ஒரு get to gether டா நீ தமிழ்நாடு  எப்போ வரேன்னு சொல்லு நாம்ப meet பண்ணலாம்

சூர்யா- ok மச்சி  என்று பேசிவிட்டு அவர்கள் வேலையை பார்க்க சென்றனர்.

இங்கு மை விழி அந்த டாட்டூ வை நினைத்து நினைத்து அவளால் முடிய மட்டும் ஒரு bottle முழுவதும் குடித்து தீர்த்தாள்

கார்த்திக்கு கொஞ்ச நேரம் கழித்து மிகவும் காய்ச்சல் வந்து விட்டது அனலாய் கொதித்தது.

அவனுக்கு தண்ணீர் கொடுக்க கூட யாரும் இல்லை . அவன் மை விழிக்கு போன் செய்தான் அவள் எடுக்க வில்லை  அவளே சுயநினைவு இல்லாமல் இருந்தாள்.

காலை வரை அப்படியே இருந்தான் கார்த்திக் ஒரு கட்டத்தில் மயக்கமே வந்து விட்டது.

ஹரிஷ் -கார்த்திக் என்ன செய்கிறான் இந்த இரண்டு நாளும் மாமா தன்னுடன் பேசவில்லை என்று நினைத்து அவனை பார்க்க வீட்டிற்கு வந்தான்.

ஹரிஷ் அழைப்பு மணி அடிக்க யாரும் கதவு திறக்கவே இல்லை மீண்டும் மீண்டும் அடிக்க மை விழி வந்து கதவை திறந்தாள்.

ஹரிஷ்-மை விழி மாமா எங்கே

மை விழி-எனக்கு தெரியாது அண்ணா என்று அவள் மீண்டும் தனது அறைக்கு செல்ல

ஹரிஷ்-மை விழி மாமா நேற்று இருந்து போன் எடுக்கவே இல்ல

மை விழி- ஒரு நிமிஷம் நெஞ்சு பதைத்தாலும் என்கிட்ட சொல்லல அண்ணா 

ஹரிஷ்- நீ கேட்கவே இல்லையா என்று கூறி விட்டு செல்ல போக guest  ரூம் ல இருந்து சத்தம் வரவும் ஹரிஷ் வேகமாக ஓடினான்

மை விழி- இங்கு தான் இருக்கிறானா என்று அவள் அறைக்கு மீண்டும் சென்று விட்டாள்.

இன்று ஒரு நாள் விடுப்பு அனைவருக்கும் நாளை முதல் மை விழி வேலைக்கு செல்கிறாள்.

உள்ளே வந்து ஹரிஷ் பரர்க்கும் போது கார்த்திக் காய்ச்சலில் தகித்து கொண்டு இருந்தான்

ஹரிஷ்-மாமா என்னாச்சு எப்படி திடீரென இப்படி உடம்புக்கு முடியால் போச்சு

கார்த்திக்-கொஞ்சம் தண்ணி தண்ணி என்று கேட்க 

ஹரிஷ் வேகமாக போய் தண்ணீர் எடுத்து வந்து அவனை குடிக்க வைத்தான் பின் வாங்க மாமா ஹாஸ்பிடல் போகலாம் என்று வலுக்கட்டாயமாக அவனை அழைத்து சென்றான்.

இது எதையும் அறியாமல் மை விழி அடுத்து என்ன செய்வது எப்படி இவனிடம் divorce வாங்குவது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

கார்த்திகை ஹரிஷ் வீட்டுக்கு அழைத்து வந்து அவனுக்கு சாப்பாடு கொடுத்து 

ஹரிஷ்-மாமா கனிய வர சொல்லவா உங்களை பார்த்து கொள்ள

கார்த்திக்-இல்ல ஹரி அப்புறம் எங்களுக்குள்ள  இருக்க problem வீட்டுக்கு தெரிஞ்சு போய்டும் 

ஹரிஷ்-இதுக்கு தான் மாமா அப்பவே சொன்னேன் மை விழி வேண்டாம் ன்னு நீங்கள் கேடீங்களா

கார்த்திக்-அப்படி பேச வேண்டாம் நான் இத்தனை நாள் அவளை கஷ்ட படுத்தினேன் ஹரி எனக்கு இப்போது தான் அவளை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்

நீ போய்டு வா நான் நாளைக்கு ஆஃபீஸ் வரேன் என்று கூற ஹரிஷ் கிளம்பினான்.

இங்கு SPR guards  அவனுக்கு போன் செய்தனர்

Guards- அர்ஜுன் சார் நாங்க மேடம் guards 

அர்ஜுன்-சொல்லுங்க என்ன விஷயம்

Guards-மேடம் அந்த சூர்யா சார் ஆஃபீஸ் க்கு தான் போறாங்க dailyயும் அதை சார் கிட்ட சொல்லனுமா

அர்ஜுன்- அய்யோ என்ன நடக்குமோ என்று நினைத்தவன் சரி நான் பார்த்து கொள்கிறேன். என்று வைத்து விட்டான்.

அர்ஜுன்- சார் 

SPR- meeting ல இருக்க

ஒரு important project பத்தி மிக பெரிய மீட்டிங் போய்ட்டு இருக்கு

SPR- என்ன விஷயம் 

அர்ஜுன்-மேடம் 

SPR-என்னாச்சு 

அர்ஜுன்-nothing serious சார் அவங்க சூர்யா சார் company ல work பண்ண start பண்ணிருகாங்க அப்டின்னு guards inform பண்ணாங்க 

SPR- சூர்யா******* என்று சில வார்த்தைகளை கூறியவன் மீட்டிங் கேன்சல் பண்ணு நான் immediate ஆ பெங்களூர் போகனும் 

அர்ஜுன்-சார் என்று பயந்து கொண்டே சார் நான் விசாரித்து விட்டேன் MBA பண்றதுக்கு தான் join பண்ணிருகாங்க போல இன்னும் அந்த paris டிக்கெட் கூட cancel பண்ணல ரெண்டு பேரும் எல்லார் முன்னாடி தான் couple ஆ இருக்காங்க சார் 

SPR-இல்ல எனக்கு பொம்மாயிய பார்க்கனும போல இருக்கு 

அர்ஜுன்-சார் இன்னும் 20 டேஸ் தான் அப்புறம் மேடம் உங்க கோட்டைக்கு வந்திடுவாங்க இப்போ மீட்டிங் போலாம் சார்

SPR- are you sure 

அர்ஜுன்- sure சார் என்று கூறினான்.

அடுத்த நாள் காலை மை விழி இன்று முதல் நாள் ஆஃபீஸ் கிளம்பினாள் யாரடி நீ மோகினி நயன்தாரா மாதிரி 

கார்த்திக் அவனது அலுவலகம் கிளம்பினான் இவளுக்கும் சேர்த்து தான் சமைத்தான் ஆனால் மை விழி சாப்பிட வில்லை அவள் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு கிளம்பி விட்டாள் ஒரு உண்மை என்ன என்றால் மை விழிக்கு சமைக்க தெரியாது

இங்கு மகிழினி RV groups க்கு கிளம்பினாள் வேலை என்று கூறி விடாமல் சூர்யா RV group க்கு வருவதும் போவதும் தான் வேலையாக இருந்தான் .

ஆதி-ஏய் என்னடி உன்னோட சூர்யா குட்டி போட்ட பூனை மாறி உன் பின்னாடியே சுத்திட்டு இருக்காரு என்ன பண்ண

சூர்யா-என்னடா உனக்கு மகி கிட்ட பேச்சு 

ஆதி-ஒன்னும் இல்ல bro இன்னிக்கு நீங்கள் ரொம்ப ஸ்மார்ட் ஆ இருக்கீங்க அதை பத்தி கேட்டு கிட்டு இருக்கேன்.

மகிழினி-சிரித்து கொண்டே அப்புறம் ஆதி உன்னோட track எப்படி போகுது அந்த சிடு மூஞ்சி பேசுறாளா

ஆதி-கரெக்டா சொன்ன மகி என்னால முடியல டி 

சூர்யா- மகிழினி அடி வாங்க போற என்னோட ஜானு உனக்கு சிடுமூஞ்சியா ஆதி நீ ஜானு க்கு support பண்ணாம மகி கூட சேர்ந்து கிண்டல் பண்றியா 

மகிழினி-இல்லை அத்தான் அத்தான் என்று ஜனனி பேசுவது போல பேசி கிண்டல் செய்தாள்.

சூர்யா-மகி இன்னிக்கு வீட்டுக்கு வா  starter ம், வேண்டாம் main courseம்  வேண்டாம் இன்னிக்கு straight ஆ dessert  கொஞ்சம் try பண்ணலாம் என்று கூற 

மகிழினி சட்டென்று அமைதியாக கொஞ்சம் சூர்யாவை பார்ப்பது தவிர்த்து  தனக்குள் சிரித்து கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள்.

கார்த்திக் ஏதோ பறி கொடுத்தது போல இருக்க 

சூர்யா-என்னாச்சு கார்த்திக் 

கார்த்திக்-nothing சூர்யா 

சூர்யா- இப்போ ஆஃபீஸ்ல யாரும் இல்ல எனக்கு ரகு கூட import மீட்டிங் இருக்கு நீங்கள் என்னோட ஆஃபீஸ் போய் ப்ரொஜெக்ட் status  எப்படி இருக்கு அப்டின்னு check பண்றீங்களா

கார்த்திக்-ஏதோ யோசித்தவன் சூர்யா சொன்னத யோசிக்க  உடனே புன்னகையுடன் ம்ம்ம் ok சூர்யா என்று கூறி கிளம்பினான்.

மகிழினி- இப்போ என்னாச்சு ஏன் கார்த்திக் சார் கிட்ட இப்படி ஒரு மொக்க வேலை சொல்லி அனுப்பினீங்க

வெளியே சென்ற கார்த்திக் -மகி உனக்கு பிடிக்கும் னு நான் இன்னிக்கி வெண்டை பொரியல் செஞ்சேன் இந்தா சாப்பிடு என்று கொடுத்து விட்டு கிளம்ப 

ஆதி-என்ன அண்ணா மகிழினி க்கு பிடிச்சது பார்த்து பார்த்து செஞ்சு கொடுத்துட்டு போறாரு நீங்கள் சுத்தம் waste என்று கூற வருவதற்குள் 

சூர்யா-உனக்கு ஜானு இல்ல டா என்று கூறி விட்டு அந்த வெண்டை பொரியல் வாங்கி

சூர்யா-ஏய் இங்க கொடு டி என்று வாங்கி ஒரு வாய் சாப்பிட்டவன் என்ன சொல்வது என்று தெரியவில்லை

மகிழினி-என்னங்க எப்படி வருணிக்க அப்டின்னு தெரியலையா ம்ம்ம்ம் எங்க அக்கா கொடுத்து வச்சவ என்று கூற

சூர்யா-இன்னிக்கு நான் night சமைக்கிறேன் டி சாப்பிட்டு அப்புறம் யாரு கொடுத்து வச்சவங்க அப்டின்னு சொல்லு டி 

ஆதி-மகி enjoy

சூர்யா-நீயும் வர என்று சொல்லிக்கொண்டே கிளம்பினான் ஏய் அவளை கொண்டு வந்து  வீட்டில் விட்டுவிடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று கூறி கிளம்பினான்.

ஆதி-மகி உன்னோட காட்டில் காதல் மழை தான் போல

மகிழினி- அவரு என்னோட சூர்யா புரியுதா  என்று அவனை பொய்யாக முறைத்தாள்

ஆதி-நீ என்னடா னா என்னோட சூர்யா அப்டிங்கற அவ என்னடா னா என்னோட அத்தான் அப்டின்னு சொல்லிட்டு இருக்கா நான் தான் இங்கே ரொம்ப பாவம் 

மகிழினி-feel பண்ணாத டா இப்போ என்ன அவளை உன் பின்னாடி சுத்த வைக்கணுமா

ஆதி-ஆமா செல்லம் அது மட்டும் நடந்திடுச்சு அது போதும் எனக்கு 

மகிழினி- அதுக்கு ஒரு வழி இருக்கு 

ஆதி-என்ன வழி 

மகிழினி- இன்னிக்கி night dinner க்கு அவளை வர வைக்கணும் 

ஆதி-அப்புறம்

மகிழினி-உனக்கு யாரு அதிகமா போன் பண்ணுவா

ஆதி- ஜெனி, ரகு சார், ஹரிஷ் அண்ணா

மகிழினி-அப்போ நீ romanticஆ song select பண்ணி தனியாக செட் பண்ணிடு 

ஆதி-அப்புறம்

மகிழினி-ஜெனி க்கு பதில் sweety  அப்டின்னு அப்புறம் ரகு க்கு பதில் soul அப்டின்னு ஹரிஷ் அப்புறம் darls அப்டின்னு save பண்ணிடு 

ஆதி-இப்படி பண்ணா அவ என்னை விட்டு போய்டுவா டி

மகிழினி- ஆதி லூசு நாம்ப ஜானுவை possesive ஆ டெம்ப்ட் பண்ணனும் டா அவ்ளோ தான் அப்புறம் பாரு 

ஆதி-கண்கள் மின்ன என்ன நடக்கும்

மகிழினி-அது தான் 1000 butterfly flying 

ஆதி-அவளுக்கு fly பண்ணுமா டி 

மகிழினி-கண்டிப்பா என்று ஆதி யை தேற்றினாள்

ஆதி- ஆனால் ஒரு problem இருக்கு டி 

மகிழினி- என்ன அது 

ஆதி-ஜானு உங்க வீட்டுக்கு வர வைக்கணுமே

மகிழினி-ஆமா

ஆதி-மகி செல்லம் அது உன்னால மட்டும் தான் முடியும் 

மகிழினி-நான் அவளை கூப்பிட முடியாது

ஆதி-நீ கூப்பிட வேணாம் உன்னோட மீசையை கூப்பிட சொல்லு டி பிலீஸ் 

மகிழினி- போடா நீ சொல்லு அவர் கிட்ட

ஆதி-அப்போ எல்லாம் waste என்று அவன் கிளம்ப போக 

மகிழினி-இரு சொல்லி தொலையுறேன்

ஆதி- என் மகி என்று கூற 

மகிழினி- சரி நீ கொஞ்சம் வெளிய இரு 

ஆதி-ம்ம்ம்ம் நடத்து நடத்து என்று கூறி வெளியே சென்றான் 

மகிழினி-சூர்யாவுக்கு போன் செய்ய 

சூர்யா ரகு கூட ப்ரொஜெக்ட் தொடர்பாக cliant கிட்ட பேசி கொண்டு இருக்க மான் விழி தன்னவனுக்கு கால் செய்கிறாள்.

சூர்யா அட்டெண்ட் செய்கிறான் . மகி சீக்கிரம் சொல்லு எனக்கு import work இருக்கு 

மகிழினி-தேவ் என்று கூற 

இங்கு சூர்யா -????????

 Episode 54,

மகிழினி சூர்யாவுக்கு போன் செய்து தேவ் என்று கூறியதும்

அந்த கொஞ்சல் மொழி நிறைந்த அந்த இரண்டு எழுத்து தேவ்  என்னும் வார்த்தையில் கரைந்து தான் போனான்.

என்னங்க என்று மீண்டும் அவள் அழைக்க தன்னிலைக்கு வந்தவன் சொல்லு மகி என்றான் சூர்யா 

ஒன்னுமில்லை என்று அவள் கூற ,

அப்புறம் எதுக்கு கால் பண்ண என்று அவன் சிரித்து கொண்டே கூற 

இல்ல night க்கு ஜானுவையும் வர சொல்ரீங்களா தேவ் என்று மகிழினி கூற

அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் ஓரம்

அப்போ இந்த கொஞ்சல் மொழி எனக்காக இல்லயா என்று ஏக்கமாக சூர்யா கேட்டான்.

இல்ல அப்படி இல்ல

நான் உங்களை எப்பவுமே கொஞ்சுவேனே நீங்கள் எனக்காக dinner எல்லாம் செய்றீங்க

சரி ஜனனி யும் இருந்தால் நல்லா இருக்கும் அப்டின்னு தான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல என்று அவள் முடிக்க

அப்போ இன்னிக்கு night நான் dinner செஞ்சு நீ சாப்பிட்டதுக்கு அப்புறம்

உன்னோட cuddling (அரவணைப்பு) கிடைக்குமா என்று சூர்யா கேட்டான்.

ம்ம்ம்ம்  கிடைக்கும் let see what happen என்று அவள் கூறினாள்.

இல்லை எனக்கு love cuddling  வேனும் டி today i want  என்று 

முழுவதும் கூற வர அதற்குள், அவள் நீங்கள் dinner க்கு ஜானுவை வர சொல்லிடுங்க.

என்னை ஆதி கூப்பிடறான் வைக்கிறேன் என்று மகிழினி போன் வைத்தாள்.

போன் வைத்தவள் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் அங்க சுத்தி இங்க சுத்தி அவருக்கு தேவையான இடத்துக்கு வந்திடறாரு என்று மனதில் சிரித்து கொண்டாள் மகிழினி.

இங்கு கார்த்திக் சூர்யாவின் ஆஃபீஸ் வந்தவன் தன்னவள் எங்கு இருக்கிறாள் என்று தேட அங்கு மை விழி அவளது cabin ல சத்ய தேவ் கூட சில நொறுக்கு தீனிகள் அப்புறம் போனில் சில கார்டூன்ஸ் போட்டு பார்த்து சிரித்து கொண்டு இருவரும் சந்தோஷமாக இருந்தனர்.

சக்தி கார்த்திகை பார்த்து விட்டு என்ன என்பது போல புருவத்தை தூக்க கார்த்திக்

அவனிடம் ஒரு விரல் நீட்டி அமைதியாக இருக்குமாறு சைகை செய்து தன்னவளின் அழகையும் அவளின் குரும்புகளையும் பார்த்து ஒரு நிமிடம் லயித்து தான் போனான்.

அவள் சக்தியை கொஞ்சி கொண்டே நீங்கள் இன்னிக்கு சித்தி கூட வீட்டுக்கு வரீங்களா நம்ப இதே மாதிரி நம்ப jolly யா விளையாடலாம்.

அதற்கு சக்தி மைவிழிக்கு பின்னால் இருக்கும் கார்த்திக்கை பார்க்க 

இவன் யாரை பார்க்கிறான் என்று அவள் திரும்பி பார்க்க மிகவும் இன்முகத்துடன் அவளை ரசித்து கொண்டு இருந்தவனுக்கு அவளின் திடீர் பார்வை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை .

ஆனாலும் சமாளித்து அவளை பார்க்க மை விழியோ தன் கண்ணாடி ய எடுத்து போட்டு கொண்டு

நீங்கள் எதுக்கு இங்கே வந்தீங்க

என்று ஒரு வார்த்தையில் கோபாமாக அலட்சிய பதில் கொடுத்தவளை

கார்த்திக் கண்டு கொள்ளாமல் சக்தி வாங்க என்று அவனை அழைக்க அவன் இன்முகத்துடன் கார்த்திக் கிட்ட சென்றான்.

சக்தி என்கிட்ட வாங்க நம்ப ice cream சாப்பிடலாம்

கீழ சூப்பர் kids show ரூம் இருக்கு அங்கே போகலாம் என்று மை விழி கூறினாள்

சத்யதேவ் குட்டி நான் உங்களுக்கு car show ரூம் kids drive பண்ற facility bike இருக்க

அங்கே போலாம் நீங்களும் நானும் என்று கார்த்திக் கூற

நான் உங்க கூட car க்கு வரேன்

jolly தான் சித்து kids ஷோ bore

என்று சத்ய தேவ் கூற மூக்கு புடைக்க அவள் கோவத்தில் அமர்ந்து கொண்டாள்.

சக்தி உன் சித்தி கிட்ட போ செல்லம் இல்ல

அவ bad girl மாறி அழ ஆரம்பித்து விடுவாள் நம்ப நாளைக்கு கண்டிப்பாக போகலாம்

im promiss என்று கார்த்திக் கூற

சித்தி sorry நான் நீ கூட வந்து இருக்கணும்

சித்து பேட் boy என்று கார்த்திக் பற்றி சக்தி கூறினான்.

இப்போ மை விழி அவனை பார்த்து ஒரு ஏளன புன்னகை ஒன்றை சிந்தினாள்.  கார்த்திக்

மை விழி என்ன பண்ணிட்டு இருக்க இது ஆஃபீஸ்

அவள் அதை கேட்க உங்களுக்கு எந்த ரைட்ஸ் ம் இல்ல என்று  பின் இது எங்க மாமா ஆஃபீஸ் நீங்க என்ன பண்றீங்க 

நான் என்று அவன் சிரித்து கொண்டே உங்கள் மாமா i mean  சூர்யாதேவ் தான் என்னை இங்க அனுப்பி வைத்தார் project staus அப்புறம் எல்லாரும் ஒழுங்கா work பண்றாங்களா அப்டின்னு பார்க்க

இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் மிசஸ் மை விழி கார்த்திக் என்று அவன் குறும்பு பார்வையில் கூற

இவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது மை விழி எதுவும் சொல்ல வில்லை அவள் மனதில் இன்னிக்கு night இதுக்கு ஒரு முடிவு கட்டணும் இவனொடு நம்மால் இருக்க முடியாது என்று நினைத்து கொண்டு சக்தியை தூக்கி கொண்டு அங்கே இருந்து சென்று விட்டாள்.

கார்த்திக்-மனதில் இன்னிக்கு ரங்ககம்மா ரொம்ப silent ஆ போறாளே ஏதாவது பின்னாடி வச்சு இருப்பாளோ இவள எப்டி நம்ப வழிக்கு கொண்டு வரது என்று நினைத்து கொண்டே அவன் வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

மாலை ஆக ஆதி , மகிழினி இருவரும் சூர்யாவின் ஆஃபீஸ் சென்று அங்கு சக்தியை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

இங்கு சூர்யா ஒரு 6.30 க்கு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு ஜானுவையும் அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.போகும் வழியில் 

ஜானு இன்னிக்கு வேற நான் dinner செய்யறேன் அப்டின்னு சொல்லிட்டேன் மா எப்படி செய்ய அப்டின்னு கொஞ்சம் depressed ஆ இருக்கு 

என்ன அத்தான் இப்படி சொல்லறீங்க உங்களால் முடியாதது எதுவுமே இல்ல அத்தான் நான் தான் உங்களை cheer up பண்றதுக்கு இருக்கேனே அப்புறம் என்ன

இல்ல மா ok தான் magiy cheer up பண்ணி தூண்டி விட அந்த waste fellow இருக்கான் மா

ஜானு- மாமா எனக்கு அவரு பேசறது  irritating  ஆ இருக்கு matchured ஆ நடந்துக்க மாட்டிங்கிறார் 

சூர்யா அவளை பார்த்து ஆதி ரொம்ப நல்ல பையன் ஜானு உனக்கு தெரியாது மகி மேல ரொம்ப பாசம் தெரியுமா அவளை பத்திரமா பார்த்து கொள்வான்  ஒரு friend கிட்ட இவ்ளோ பாசம் காட்டுறான் அவனை கல்யாணம் பண்ணிக்க போற  உன்னை அப்டியே தாங்குவான் ஜானு 

எனக்கு ஒரு சமயம் ஆதி மேல கார்த்திக் இவ்ளோ ஏன் சக்தி மேல கூட பொறாமை யா இருக்கும்

ஏன் மாமா அப்படி சொல்லறீங்க என்று அவள் கேட்க ஆமா எல்லாரும் ஏன் சண்டைக்கோழி பின்னாடியே சுத்துவானுக அவ அதுக்கும் மேல உரிமை எடுத்து பழகறது 

என்கிட்ட மட்டும் தான் அப்படி இருக்கணும் னு என்னோட ஆசை ஆசை இல்ல அது பேராசை ன்னு கூட சொல்லலாம் அவ எங்கிட்ட மட்டும் தான் அப்டி ஒரு cutee cat, சண்டைக்கோழி, மான் விழி என்று கூறி கொண்டே போனான்

ஜானு-மாமா நீங்கள் மகிழினி அக்காவ இவ்ளோ love பண்றீங்களா 

ஆமா ஜானு என்னோட உயிர் அளவு உப்பு அளவு, சக்கரை அளவு விரும்புகிறேன் என்று கூற

ஏன் மாமா salt, sugar அப்டின்னு சொல்லறீங்க என்று சிரித்து கொண்டே கேட்க 

ஜானு நான் உண்மையா தான் சொல்றேன் உப்பு இல்லாமல் சாப்பிட முடியாது உப்பு ரொம்ப முக்கியம் உப்பிலாத பண்டம் குப்பைக்கு மகிழினி இல்லாமல் நான் வெறும் மண்ணு ஜானு என்று அவன் உணர்ச்சி பொங்க கூற

ஜானு-மாமா சமைக்க things வாங்கிட்டு போகலாம் என்று கடையில்  அனைத்து பொருள்களும் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

அனைத்து பொருள்களும் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தனர் . ஜானுவை பார்த்தவுடன் சக்தி ஓடி அணைத்து கொண்டான் . 

இன்று ஆதி அவளை கண்டு கொள்ள வில்லை சக்தி கூட விளையாடினான். ஆதியும் மகிழினி யும் அவர்கள் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தனர். 

ஜானு மனதில் சூர்யா சொன்ன அனைத்தும் நினைத்து கொண்டு இருந்தவள் ஒரு நிமிடம் அவள் மனம் ஆதியை தேடியது அவனது பாராமுகம் இன்று முதல் முறையாக அவளின் மனதில் ஒரு சிறு வலியை கொடுத்தது. 

இங்கு சூர்யா-  மகி இந்த அப்ரோன் எனக்கு கொஞ்சம் கட்டி விடு என்று அவளை சீண்டும் நோக்கத்தில் torture செய்ய

நீங்கள் சமைக்க வேண்டாம்  நானே பண்றேன்

இது ஒன்னும் மட்டும் please டி வா என்று அழைக்க 

அவள் அருகில் வந்து அந்த அப்ரோன் எடுத்து அவனுக்கு கட்டி விட்டாள். இப்போ அவளை அருகில் இழுத்து ஒரு முத்தம் பதித்து அவளை கொஞ்சம் சிவக்க வைத்து விடுத்தான்

ஜானு ஓர கண்ணால் அவனை அப்போ அப்போ பார்க்க அவன் கண்டு கொள்ளவே இல்லை.

ஜானு ஆதியை பார்ப்பதை பார்த்த மகிழினி ஆதி அருகில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது சரியாக ரகு  கால் பண்ண அப்போது   என்ன விலை அழகே  அந்த பாடல் ஒலி ஆதி போன் ல வர  

மகிழினி அவனிடம் யார் என்று கேட்க அவளிடம் display காட்ட ம்ம்ம் போய் பேசு என்று கூற ஜானுவுக்கு அது யார் என்று மனதில் குழப்பமாக இருக்க 

ஜானு- unicorn ன்னு என் பின்னால் சுத்திட்டு இப்போ என்ன விலை அழகே அப்டின்னு ரிங் tone வச்சு யாரு கிட்ட டா பேசற என்று நினைத்து கொண்டு கொஞ்சம் அமைதியாக இருந்தாள்.

பேசிவிட்டு வந்து மீண்டும்  மகிழினி அருகில் வந்து அமர்ந்து கொண்டான். யாரு ஆதி போன் ல அதுவா அது தான் உனக்கு தெரியுமே அந்த special person import கால் மகி என்று ஆதி கூற

ஜானுவுக்கு இருப்பு கொள்ள வில்லை உடனே எழுந்து சூர்யாவை பார்க்க சென்று விட்டாள்.

மகிழினி-ஆதி work out ஆகுது என்று இருவரும் புன்னகையுடன் ஒரு hifi போட்டு கொண்டனர்.

நீ அவ முகத்தை பார்க்கனும் டா அப்படியே இன்னும் கொஞ்சம் விட்டால் அத்தான் என்று அழுது ஓடி விடுவாள் டா என்று இருவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர்

 Episode 55,

அவ முகத்தை பார்க்கனும் டா  ஆதி அப்படியே இன்னும் கொஞ்சம் விட்டால் அத்தான் என்று அழுது ஓடி விடுவாள் டா என்று இருவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர்.

நிஜமாவே சோகமா இருந்தாளா மகி என்று கேட்க நீ வேற விட்டால் அழுதிடுவாள். ம்ம்ம் இப்போ நீ என்ன பண்ற அப்படின்னா போய் அவர் கிட்ட எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன் அப்டின்னு சொல்லு

சொன்னா 

நீ சொல்லி பாரு டா என்று மகி கூற 

சூர்யாவிற்கு காத்திருந்தான் ஆதி சமையல் செய்ய சூர்யாவுக்கு உதவியாக ஜானு செய்து கொண்டே  ஆதி யாருடன் பேசி இருப்பான் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவை பார்க்க மகிழினி உள்ளே வர jaanu அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றாள்.

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தாள்.

அவன் சமைப்பது அவ்வளவு ருசியாக இருக்குமா என்று அவளுக்கு தெரியாது ஆனால் தனக்கு செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை மிகவும் கவர்ந்தது. 

சூர்யா அழகாக நேர்த்தியாக பொருள்களை எடுத்து செய்வது அவனது முக பாவனை என்று அனைத்தும் அவளை மயக்கியது. 

மகி என்ன பண்றீங்க என்று அவன் கேட்க அப்போதும் அவள் பதில் சொல்ல வில்லை .

மகி உன்னை தான் என்று அவன் வேலை செய்து கொண்டே கூற அவளிடம் பதில் இல்லை.

இப்போது அவள திரும்பி பார்க்க அப்போது தான் அவள் தன்னிலை பெற்றவள் . அங்கு தண்ணீர் எடுக்க போக இப்படியே என்னை  வந்து பார்த்து கொண்டே இருந்த அப்டின்னா அப்புறம் 

நான் straight ஆஅ dessert  ஆ உன்னை சாப்பிட வேண்டி வரும் என்று ஒரு மயக்கும் புன்னகை சிந்த

இல்லைங்க நான் சும்மா வந்தேன்  தண்ணி குடிக்க என்று கூறி அவள் செல்ல போக தண்ணி குடிச்சுட்டு போடி என்று அவளை நிற்க வைத்து கொண்டான்.

உடனே அவள் தண்ணீர் எடுத்து குடிக்க போக அவளது வாயில் உள்ள நீரினை அவன் பூட்டி எடுத்து கொண்டு அவளை விட்டான்.

உடனே அவள் கோபமாக சூர்யா உன்னை என்று பேச வர மகி dessert ஆ விட இந்த தண்ணீர் செம்மையா இருக்கு என்று சொல்ல அவ்ளோ இதற்கு மேல் இங்கு இருந்தால் நம்மை சும்மா விட மாட்டான் என்று அவள் அங்கு இருந்து சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.

சூர்யா அனைத்து உணவுகளையும் தயார் செய்து முடித்து ஜானு அனைத்தும்  எடுத்து வைக்க அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். 

மகிழினி மடியில் சக்தி அமர்ந்து கொண்டான் ஆதியும், மகிழினி யும் அனைத்து உணவுகளையும் பார்த்து விட்டு கொஞ்சம் ஆச்சர்யம் தான் 

அதில் ஒரு உணவை பார்த்து விட்டு ஆதியும் மகியும் ஒரு சேர குட்டி வங்ககாய குர்ரா கத்தரிக்காய் கொண்டு செய்யும் உணவு அது ஒரு ஆந்திர உணவு வகை மகிழ்ச்சி அடைந்து அதை முதலில் சுவைக்க ஆரம்பிக்க

மகிழினி க்கு அதை சாப்பிட்டு என்ன சொல்வது என தெரியவில்லை . ஆதியோ அண்ணா எங்க காலேஜ் ல சாப்பிட்டத விட இது வேற level உண்மையா மகிழினி நீ ரொம்ப lucky டி என்று சாப்பிட

அவள் உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு இது பிடிக்கும் னு என்று கேட்க அவனோ இது secret சொல்ல மாட்டேன் என்று கூற மகிழினி சிரித்து கொண்டே சாப்பிட்டாள். 

சூர்யாவும் ஜானுவும் அதிகமாக அசைவ பிரியர்கள் அதனால் இறால், நண்டு , சிக்கன் என அவன் சமைத்து இருந்தான்.

ஜானு அவனை பார்த்து அத்தான் சூப்பர் ஆ இருக்கு இது அத்தை செய்யறது போல இருக்கு எப்டி நீங்கள் கத்துகிட்டிங்க எனக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க .

சூர்யா சிரித்து கொண்டே உனக்கு எப்போ வேணும்னு சொல்லு டா நான் செய்து தரேன் என்று இவர்களின் பாச மழை பொழிய

ஆதிக்கு, மகிழினி க்கும் கோபம் வர அவன் மகி எனக்கு கொஞ்சம் important person ஆ பார்க்க போகனும் நான் கிளம்புறேன்.

அவளோ ம்ம்ம் போய்ட்டு வா ஆதி என்று கூற இவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு ஆதியை பார்த்தனர். 

சக்தி மாமா க்கு bye சொல்லுங்கி என் வேண்டுும் என்றே கூற

என்னடா மாமா ன்னு கூப்பிட சொல்ற சக்தியை நீ சித்தப்பா தானே என்றான் சூர்யா .

இல்ல மாமா மகி ய நான் என்னோட சிஸ் ஆ பார்க்கிறேன் அதனால என்று ஆதி பாதியில் நிறுத்த

மகிழினி சிரிப்பை அடக்கி கொண்டு அதனால என்று அவனை மூவரும் பார்க்க அவனுக்கு போன் வந்தது ரீங் tone ஸ்நேகிதானே ஸ்நேகிதானே ரகசிய ஸ்நேகிதானே என்று வரவும் அதை மிகவும் புன்னகை முகமாக எடுத்து பேச ஆரம்பித்தான்.

மறுமுனை-ஹரிஷ் தான்

இங்கு ஆதியோ – பிலீஸ் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க உங்களை விட எனக்கு வேறு எதுவும் முக்கியம் இல்ல என்று கூற

ஹரிஷ்-ஏய் என்னடா ட்ரிங்க் பண்ணிருக்கியா அந்த ப்ரொஜெக்ட் பேப்பர் பத்தி உன்கிட்ட ரகு சார் discuss பண்ண சொன்னாரு நீ ஏதோ லூசு மாறி பேசற

ஆதி- டென்ஷன் ஆகதிங்க கண்டிப்பாக நம்ப life பத்தி discuss பண்ணுவோம் என்று ஆதி கூற ஜானுவுக்கு அதற்கும் மேல் சாப்பிட முடியவில்லை .

சூர்யா வேகமாக தன் கைகளை கழுவி விட்டு ஆதி போன் பிடுங்க  ஆதி மாமா பிலீஸ் விடுங்க மாமா நான் உங்களை என்ன பண்ணேன் . 

மகிழினி சிரிப்பை அடக்கி கொண்டே என்னங்க இப்போ என்னாச்சு ஆதி போன் எதுக்கு இப்போ பிடுங்கறீங்க என்று  கூற 

அந்த கால் cut ஆனது உடனே ஆதி அவங்க ஏதாவது நினைச்சா நான் என்ன பண்ணுவேன் மகி சூர்யா மாமா ஏன் இப்படி பண்றீங்க என்று ரொம்ப வருத்தம் கொண்டு பேச

ஜானு அத்தான் விடுங்க என்று மிகவும் சோகமாக பேச  அப்போது மீண்டும் ஹரிஷ் அழைத்தான். அந்த ஸ்நேகிதானே சாங் தான்

அதில் காலர் name darls என்று இருக்க சூர்யா ஆதி ய முறைத்து கொண்டே அதை attend செய்து speaker ல போட 

ஆதியோ வேண்டாம் அண்ணா பிலீஸ் ஒரு பக்கம் மகிழினி வேண்டாம் வேண்டாம் என்று தடுக்க சூர்யா பேசினான்.

சூர்யா-ஹலோ 

ஹரிஷ் – ஏய் ஆதி ட்ரிங்க் பண்ணி சூர்யா மாமா மாறி என்கிட்ட பேசி விளையாடுரியா நான் உன்கிட்ட serious ஆ import ப்ரொஜெக்ட் பத்தி பேசறேன் புரியுதா இல்லயா .

என்று ஹரிஷ் கூற இப்போது ஆதி மகிழினி பின்னால் போய் நின்று கொண்டான் ஜானுவுக்கு அழுகை வந்து விட்டது .

சூர்யாவும் ஜானுவும் ஒரு சேர  டேய் fraud பிராடு என்று கத்த என்ன டேய் யா என்று இப்போது மகிழினியும், ஆதியும் சொல்ல

ஹரிஷ்-இங்கு என்ன நடக்குது என்று கூற சூர்யா cut செய்தான்.

போச்சு மாட்டிக்கிட்டா மகி , சித்து நீயும் தான் என்று சத்ய தேவ் கூறினான்.

சூர்யா இரண்டே எட்டில்  ஆதியை பிடித்து அவன் கழுத்தில் கை போட்டு ஏய் ஜானுவையே கஷ்ட படுத்துறியா. ம்ம்ம் என்று அடிக்க போக

மகிழினி என்னங்க பிலீஸ் விடுங்கள் ஆதி பாவம் பிலீஸ் என்று அவன் கைகளை பிடித்து தடுத்தாள்.

ஆதி யோ அண்ணா பிலீஸ் விடுங்க என்று குரல் அடைக்க கூறினான்.

அவள் ஜானுவை பார்த்து ஏய் என்ன பார்த்து கிட்டு சாப்பிட போற வந்து ஆதியை காப்பாற்று டி

அவளோ அக்கா அத்தான் எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று அவள் கூறி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

சூர்யா அவனை விட்டவன் எவ்ளோ தைரியம் உனக்கு என் ஜானுவை கஷ்ட படுத்தின நீ அவ்ளோ தான் தெரிஞ்சுக்கோ புரியுதா

மகிழினி அவன் அருகில் சென்று அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவனை அசுவாச படுத்தினாள்.

ஆதி சற்று நிதானமாக ஜானுவை பார்க்க அவ்ளோ நன்றாக சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுவி விட்டு வந்து அமர்ந்தாள்.

அவன் மனதில் இவ்ளோ நடந்து இருக்கே என்னை பத்தி அவளுக்கு  கவலை இருக்கா நல்லா நிம்மதியாக சாப்பிட்டு வராலே என்று அவன் அவளை பார்க்க

மகிழினி அவன் அருகில் வந்து sucess ஆகிடுச்சு டா இனி அவ உனக்கு தான் இப்போ என்ன பண்ற வீட்டுக்கு கிளம்புறேன் அப்டின்னு சொல்லிட்டு போ டா என்று அவள் கூற 

ஆதி சூர்யாவிடம் அண்ணா நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று கூறி விட்டு கதவு வரை செல்ல சூர்யா ஏய் ஜானுவை பத்திரமா கொண்டு போய் விட்டதும் அப்புறம் வீட்டுக்கு போடா.

அத்தான் நானே போய்க்குவேன் என்று அவள் கூற ஏய் over ஆ சீன் போடாத டி என்று மகிழினி ஜானுவின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து போய்ட்டு வா என்று அனுப்பி வைத்தாள்.

ஆதி- மகிழினி ,சூர்யாவிடம் விடை பெற்று கிழே சென்று காரில் ஏறி கொண்டு அவளுக்கு காத்து இருந்தான்.

ஜானு பின்னால் அமர போக நான் ஒன்னும் உங்களுக்கு driver இல்ல என்று கூற ஜானு முன்னாள் வந்து அமர்ந்தாள்.

ஆதி காரை எடுத்தான் அவர்களின் காதல் பயணம் ஆரம்பித்தது.

இங்கு சூர்யாவோ ஏய் நீ தானே அவனுக்கு பிளான் பண்ணி கொடுத்த அவள் திரு திருவென முழித்தவள் நானா நான் இல்லையே எனக்கு எதுவும் தெரியாது என்று சமாளிக்க

அவனோ ஏய் மகி பொய் சொல்லாத நீ யாரு என்ன அப்டின்னு எனக்கு தெரியும் என்று அவளை இழுத்து  அருகில் உள்ள சோபாவில் போட்டு அழுத்த பிலீஸ் என்னை விடுங்க என்று அவள் சிணுங்க

அப்பா ஏன் மகியை beat பண்றீங்க என்று சக்தி வந்து இவர்களை பார்த்து தன் மழலை மொழியில் கேட்க

 Episode 56,

அப்பா ஏன் மகியை beat பண்றீங்க என்று சக்தி வந்து இவர்களை பார்த்து தன் மழலை மொழியில் கேட்க.

அப்போது தான் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று உணர்ந்து வேகமாக எழுந்தவன். சூர்யா தன் மகனிடம் என்ன சொல்வது என்று திருத்திருவென முழிக்க அதை பார்த்து மகிழினி சிரித்து கொண்டே 

என்னாச்சு மிஸ்டர் கிரேட் சூர்யா தேவ் என்று அவனை பார்த்து கேட்க அவனோ எனக்கு என்னாச்சு சக்தி இங்க வாங்க நான் அம்மாவை அடிக்க மாட்டேன் செல்லம் 

நீங்களே பாருங்க என்று அவனை அழைத்து மடியில் அமர வைத்து அருகில் இருந்த மகிழினி க்கு கன்னத்தில் முத்தத்தினை கொடுக்க மகிழினி அவனை முறைத்தாள்.

பார்த்தீங்களா சக்தி அம்மாக்கு நான் கிஸ் பண்ணேன் நீங்களும் அம்மாவுக்கு கிஸ் பண்ணுங்க பார்க்கலாம் . என்று கூற உடனே அவனும் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

இப்போது அவன் அவளை பார்த்து தன் புருவத்தை தூக்கி கண் சிமிட்டி காட்ட மகிழினி சூர்யாவை முறைத்தாள்.

அவனோ எனக்கு என்னடி பயம் என் மகன் என்னை மாதிரி தான் இருப்பான் . என்று கூற அவளோ சக்தி வா டா கண்ணா நம்ப தூங்கலாம் என்று அவனை அழைத்து கொண்டு செல்ல

மகி சக்தியை தூங்க வைத்து விட்டு இங்கே வர நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம் என்று சரசமாக பேச நான் வரமாட்டேன் என்று அவள் தன் மகனுடன் போய் தூங்க சென்றாள்.

சூர்யா தன்னுடைய வேலை தொடர்பாக கொஞ்சம் வேலையில் இருக்க இன்னும் அவன் வர வில்லை என்று அருகில் வந்தவள்.

அவனுடைய  கோப்புகளை புரட்டி பார்த்து அவளும் அவளுக்கு தெரிந்த வேலைகளை செய்ய சூர்யா அவளை இழுத்து தன் மேலே போட்டு கொண்டவன் அவளிடம்

மகி நீ இந்த files பார்க்கிறது விட்டு என்னை கொஞ்சம் கவனிச்ச அப்படின்னா நான்  energy யா எல்லா ஒர்க் ம்ம் முடிச்சு விடுவேன் டி என்று அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்று அவளுடைய விருப்பதில் கொஞ்சம் மென்மையாக ஆள தொடங்கினான்.

இங்கு மை விழி வீட்டுக்கு வந்தவள் நேராக தன்னை refresh செய்து கொண்டு உணவினை order செய்தாள். கொஞ்சம் அலுவலக வேலை இருந்தது அவளுக்கு முக்கியமான லண்டன் ப்ரொஜெக்ட் க்கு interior design கொட்டஷன் ரெடி செய்தாள்.

அந்த ப்ரொஜெக்ட் மட்டும் அந்த company க்கு பிடித்து ok ஆனது என்றால் இந்த ப்ரொஜெக்ட் ஒர்க் handle பண்றவங்க லண்டன் போறதுக்கு நல்ல chance இல்ல இந்த கார்த்திக் கிட்ட இருந்து நமக்கு விடுதலை என்று நினைத்து முழு மூச்சாக அந்த வேலையில் ஈடுபட்டாள்.

இங்கு கார்த்திக் மகிழினி கிட்ட மை விழிக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்று கேட்டு அவளுக்கு விருப்பமான அனைத்தும் சமைத்து அவளுடன் சேர்ந்து சாப்பிட காத்திருந்தான்.

மை விழிக்கு delivery க்கு போன் வர அவள் தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேராக parcel வாங்கி கொண்டு tinning table சென்று அமர

கார்த்திக் அவளிடம் மை விழி நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் எனக்காக வெய்ட் பண்ணு நான் வரேன் என்று இவன் guest ரூமில் இருந்து கூற இவள் அதை கண்டு கொள்ளாமல் அவள் order செய்தது பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தாள்.

இவன் குளித்து விட்டு வெளியே வந்தவன் கண்ட காட்சி அவள் ஆர்டர் செய்து மெதுவாக போன் நோண்டி கொண்டே சாப்பிடுவது தான்.

கார்த்திக்கு மிகவும் கோபமாகவும், கவலையாகவும் இருந்தது நேராக அவளிடம் சென்றவன் . இப்போ எதுக்கு நீ ஆர்டர் பண்ணி சாப்பிடற நான் தான் எப்போதும் போல சமைத்து வைத்து இருக்கிறேனே என்று அவன் பொறுமையாக கூற 

மை விழியோ அவனை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்து விட்டு கைகளை கழுவ எழ போக அவளை தன் பக்கம் இழுத்தவன். 

ஏய் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ உன் இஷ்டத்துக்கு போற என்று அவளை தன் பக்கம் இழுத்தான் கார்த்திக்.

அவனை முறைத்தவள் முதலில் என்னோட கைய விடுறீங்களா மிஸ்டர் கார்த்திக் என்று அவள் கூற  அவளின் இந்த பேச்சு அவனுக்கு மிகவும் கோபத்தை தூண்ட இந்த முறை அவன் தன்னிலை இழந்து அவளை பார்த்து 

என்னடி மிஸ்டர் கார்த்திக் ன்னு கூப்பிடற புருஷன் அப்டின்னு உனக்கு மரியாதை இல்ல என் கையை முதலில் விடுங்க பிலீஸ் leave me என்று அவள் கூற

நான் உன் கைய பிடிக்காமல் வேற யார் கைய பிடிக்கிறது சொல்லு என்று அவளை இழுத்து சுவற்றோடு அழுத்தியவன். உனக்கு ரொம்ப திமிர் டி உடம்பு முழுக்க திமிரு அதிகம் ஆகிடுச்சு.

என்று கூறியவன் அவள் விரல்களில் உள்ள உணவுகளை ஒவ்வொரு விரலாக அவன் சாப்பிட

மை விழிக்கு ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் அவளது மொத்த சக்தியும் வடிந்தது போல் இருந்தது.

மை விழியால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை .

ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு உன்னோட taste ஒன்னும் மோசம் இல்ல என்று அவன் அவளை பார்த்து கூற இப்போது சுய நினைவுக்கு வந்தவள்

என்ன விடு டா என்று மை விழி கூற  

அவளை இன்னும் அழுத்தியவன் நான் டி  சொன்னா நீயும்  டா சொல்லுவியா .

ஆமா டா நான் அப்படி தான் சொல்லுவேன் என்று அவனுடன் சண்டை இட

உடனே கார்த்திக் உடனே அவளின் இதழில் குனிந்து ஆழ்த்தி ஆழ்ந்து ஒரு முத்ததில்  மை விழிக்கு தண்டனை கொடுக்க

அவள் தன் கைகளை கொண்டு அவன் மார்பில் குத்த கார்த்திக் அவள் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்து கொண்டான்.

இப்போது பேசினான் ஏய் இப்போ நீ தானே சொன்ன நான் எது செய்தாலும் அப்டியே செய்வேன்னு இப்போ செய் டி என்று கூற அவள் வேகமாக தன் உதடுகளை துடைக்க 

உடனே இந்த திமிர் தான் டி இப்போ உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று அவள் கன்னத்தில் முத்தம் பதித்து அவளை விடுவித்தான்.

அவன் எதுவும் சாப்பிடாமல் நேராக guest ரூம் சென்று படுத்து கொண்டான்.

இவளோ அவன் செய்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் நேராக தன் அறைக்கு சென்றவள் கார்த்திக்கை நினைத்து

இது நீ என்னோட believe ஆ அழிச்சுட்ட கார்த்திக் நீ என்னை நெருங்கி வரது எனக்கு பிடிக்கல இனி நீ வீட்டில் இருக்கும் போது நான் ஆஃபீஸ் போற மாறி shift ல போய்டுவேன் 

உன்னை பார்க்க எனக்கு பிடிக்கல இன்னும் கொஞ்ச நாளில் நான் நெனைச்சது எனக்கு கிடைத்து விடும் நான் உன்கிட்ட divorce வாங்கிட்டு லண்டன் போய்டுவேன் டா என்று மனதில் அளவுக்கு அதிகமாக வெறுப்பு அதிகமாக இருந்தாலும் அவன் மெல் உள்ள காதல் கொஞ்சம் கூட குறையவில்லை மை விழிக்கு 

வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் நான் லண்டன் போகனும் என்று கூறி கொண்டாள்.

இங்கு ஹரிஷ் க்கு போன் செய்தாள் கீர்த்தனா.

ஹலோ அண்ணா

ம்ம்ம் சொல்லு என்றான் ஹரிஷ் 

அண்ணா என்னை மன்னித்து விடு அண்ணா நான் இப்போ தான் எல்லாம் எனக்கு புரிந்தது. என்கூட இப்போ யாருமே இல்லை கனி கூட அங்கே பெங்களூர் வந்துட்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எல்லாரும் என்னை ஒதுக்குவது போல இருக்கு

நான் இனி கார்த்திக் மாமா பின்னாடி சுத்த மாட்டேன் , மகிழினி கிட்ட சண்டை போட மாட்டேன் நான் அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் அண்ணா .

நான் உங்க எல்லாரையும் ரொம்ப miss பண்றேன் என்று கூறி அழ உடனே ஹரிஷ் க்கு மிகவும் வேதனை தந்தது.

சரி அழாத கீர்த்து குட்டி நீ மாறிட்ட தானே அதுவே அண்ணா க்கு ரொம்ப சந்தோஷம் . நான் உன்னை இங்கே கூட்டி வரேன்.

அண்ணா இன்னொரு விஷயம் 

என்ன அது என்று அவன் கேட்க

அண்ணா நானும் ஆஃபீஸ் ல join பண்ணட்டுமா

ஹரிஷ் முகம் மாற 

அண்ணா நீ இப்போ என்னை சந்தேகம் பட வேண்டாம் .

நான் கனி கூட join பண்றது பத்தி கேட்டேன்.

நான் கார்த்திக் மாமா ஆஃபீஸ் ல சொல்லல அண்ணா 

ஹரிஷ் யோசனையாக பார்க்கலாம் என்று கூற

அண்ணா  நீ இப்போ கூட என்னை நம்ப மாட்டிங்குர சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்று அழுது கொண்டே கூற 

ஹரிஷ் மனம் மாறி சரி ok நான் அதுக்கான ஏற்பாடு செய்யுறேன்.

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் கீர்த்தனா ஆனா நீ தான் சின்ன பொண்ணு மாறி அடம் பண்ற டா.

அண்ணா இனிமே நீ வேற கீர்த்தனா வ தான் பார்க்க போற அதாவது உனக்கு பிடிச்ச கீர்த்தனா மாறி அண்ணா  என்று பேசி விட்டு போன் வைத்தவள்.

இனி தான் இந்த வேற ஒரு கீர்த்தனாவ நீங்கள் பார்க்க போறீங்க

மகிழினி , கார்த்திக் மாமா, மை விழி உங்களுக்கு எல்லாம் மொத்தமா ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சு இருக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் கார்த்திக் மாமா எனக்கு தான் மை விழி எல்லாத்துக்கும் நீ தானே காரணம் அதை மட்டும் மாமாவுக்கு தெரிஞ்சா போதும் அப்புறம் மாமாவே உன்னை வேணாம் னு சொல்லிடுவாறு.

இந்த அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து என்னோட மாமாவை என்கிட்ட இருந்து பிரிச்சிடீங்க முக்கியமா மை விழி உன் பேச்சி கேட்டு தான் நான் எல்லாமே பண்ணினேன் நீ சரியான கேடி டி.

உனக்கு இருக்கு டி நாளைக்கு நான் அங்கே வர போகிறேன் என்னோட மாமாவை பார்க்க போகிறேன் என்று ஒரு சூனியகாரி போல 

 Episode 57,

கார்த்திக்கும், மை விழியும் வெவ்வேறு மன நிலையில் அடுத்த நாள் காலையில் எழுந்தனர். 

ஜானு காலையில் தூங்கி எழுந்தவுடன் ஆதியின் நினைவு வந்தது .

நேற்று காரில் இருந்து இறங்கியவுடன் ஆதி அவளின் கைகளை பிடித்து அருகில் இழுத்தவன்.

ஏய் unicorn உனக்கு என் மேல

இஷ்டமா கஷ்டமா

என்று கேட்க  ஜானு அவனை பார்த்து எனக்கு ரெண்டும் என்று கூறி இரண்டு அடி எடுத்து வைத்து செல்ல அப்போது தான் அவள் என்ன சொன்னாள் என்று உணர்ந்வன். 

சிரித்து கொண்டே அப்போ உங்க அத்தான் கிட்ட சொல்லிடு இல்ல  சீக்கிரமே நானே உன்னை தூக்கிட்டு போயிடுவேன் என்று கூறி சிரித்து கொண்டே காரில் எறிக்கொண்டான்.

ஜானு ஆதியை நினைத்து சிரித்து கொண்டே அவள் காலேஜ் கிளம்ப ஆரம்பித்தாள்.

இரண்டு நாள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை . வந்து விட்டாள் கீர்த்தனா .

நேராக சூர்யாவின் அலுவலகம் சென்று அங்கு முதலில் மகிழினி கிட்ட போய், 

என்னை மன்னித்துவிடு மகிழினி உன்னை நான் ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன்.

சூர்யா அருகில் இருக்கிறான் என தெரிந்து கொண்டே கீர்த்தனா மேலும் தொடர்ந்தாள்.

உன்னையும் கார்த்திக் மமாவையும் அப்படி நான் சேர்த்து பேசி இருக்க கூடாது என்று அழுது கரைந்தாள்.

அப்போது தான் அங்கு வந்த கார்த்திக் கீர்த்தனா கூறியதை  மை விழி பார்த்து கொண்டு நின்றி இருப்பதை பார்த்தான்.

மை விழி தினேஷ் கிட்ட மாமா இவ பண்றது எல்லாம் செம்ம act மாமா என்று கூற ஆமா விழி இதை அப்டியே இந்த மான் விழி நம்புவாளா.

அவளோ ஆமா மாமா  அவ எப்போதும் இப்படி தான் இந்த ஒரு விஷயத்தில் தத்தி என்று இருவரும் தங்களுக்குள் பேசி கொண்டு நின்று இருந்தனர்.

இங்கு மகிழினி சூர்யாவை பார்க்க அவனோ எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவளை முறைத்து கொண்டே நின்று இருந்தான்.

கீர்த்தனா அங்கு கார்த்திக் இருப்பதை பார்த்து மாமா என்று எழுந்து அவனிடம் செல்ல

மை விழி தினேஷ் கிட்ட மாமா இப்போ சீரியல் ல மிஞ்சிய அளவுக்கு அவ act பண்ணுவா  நம்ப போலாம் மாமா என்று அவர்கள் சென்றனர்.

கீர்த்தனா கார்த்திக்கை அழுது கொண்டே அணைக்க போக

அவன் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க

அதற்குள் மகிழினி விடுங்க கீர்த்தனா கார்த்திக் மாமாவும் உங்களை மன்னித்து இருப்பார் என்று சூழ்நிலை சகஜமாகா முயர்ச்சித்தாள்.

அதை கண்ட சூர்யாவுக்கு கோபமாக வந்தது மிஸ் கீர்த்தனா நீங்கள் இங்க கனி கூட join பண்ணிக்கோங்க என்று கூறி அவன் அறைக்கு செல்ல மகிழினி அவன் பேச்சில் உள்ள வித்தியாசம் கண்டு அவனை சமாதானம் செய்ய வேண்டுமென்று சூர்யாவின் பின்னால் சென்றாள்.

கீர்த்தனா தன் கண்களை துடைத்து கொண்டு கனி கிட்ட சென்றவள் அவளை அணைத்து கொண்டு இது வெறும் ஆரம்பம் தான் என்று மனதில் சிரித்து கொண்டாள்.

இங்கு சூர்யாவின் அறைக்கு வந்த மகிழினி அவனை பார்த்து அருகில் 

என்னங்க

என்னங்க எனக்கு இந்த file ல ஒரே doubt என்று அவன் அருகில் செல்ல

அவனோ எனக்கு அதை பத்தி தெரியாது நீங்கள் வேனும் னா உங்கள் ட்டுஷன் சார் கிட்ட கேளுங்க அவரு நல்லா சொல்லி தருவார்.

என் மேலே உங்களுக்கு கோபமா என்று அவனை அணைக்க போக இது ஆஃபீஸ் வீடு இல்ல என்று அவளை தள்ள.

அப்போ ok நான் கார்த்திக் சார் கிட்ட போய் கேட்டுக்கரேன் என்று அவள் செல்ல போக அவள் சாரியின் முந்தானை பிடித்து இழுத்தவன் .

எங்க டி போற என்று அவளை தன் மடியில் அமர வைத்தவன் .

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது உடல் வாசனையை இழுத்து கைகளை உலாவ விட

அவள் என்னங்க இது ஆஃபீஸ் வீடு இல்ல  என்று அவள் சூர்யாவிடம் இருந்து எழ போக  அவனோ இந்த கீர்த்தனா சொல்றத பார்த்தால் நீங்கள் ரெண்டு பேரு

ம் நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணி outing போன range மாதிரி இருக்கே என்று அவள் கழுத்தில் கடிக்க

அவள்  ஸ் ஷ்ஷ் என்று சிணுங்கி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல .

அப்புறம் இப்போ வரைக்கும் நான் தான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன் .நீ என்கிட்ட ஒரு love you கூட சொல்லவே இல்ல என்று அவள் இடையில் வருட அவள் கண்களை மூடிக்கொண்டு 

எனக்கு எப்போ தோணுதோ அப்போ உங்க கிட்ட வந்து சொல்லுவேன்

  நீங்கள் கொடுத்த surprice ஆ விட என்னோட பரிசு ரொம்ப ரொம்ப super  ஆ இருக்கும்

என்று  அவனது நெஞ்சில் முகம் புதைக்க மகி இப்போவே என்னோட லவ் ஆ உனக்கு மறுபடியும் காட்டனும் போல இருக்கு என்று அவள் இதழில் சரண் அடைந்து  அவன் அவளின் உடைகளை  களைய   செல்ல உடனே அவனை விட்டு மூச்சு வாங்க எழுந்து 

உங்க லவ் ஆ வீட்டுக்கு போய் காட்டுங்க என்று சொல்லி அவள் ஓட

வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு என்று தன்னை கட்டு படுத்தி கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான் சூர்யா.

இங்கு மை விழி கனியுடன் சேர்ந்து அந்த ப்ரொஜெக்ட் வேலையில் மிகவும் பிஸி ஆக இருந்தாள்.

மை விழி அந்த வேலையை முடித்து சூர்யாவிடம் அதை காட்ட எடுத்து சென்றாள்.

அவனிடம் மாமா அந்த ப்ரொஜெக்ட் ரெடி பண்ணிட்டேன் நீங்கள் ஒரு time correction பார்த்து அவங்களுக்கு அனுப்பி விடுங்கள் என்று கூற

சூர்யா அதை வாங்கி பார்த்தவன் ம்ம்ம் brillient work விழி  பிரஸ்ட் ப்ரொஜெக்ட் ல இவ்ளோ involvement ஆ இருக்க என்று அதை சரி பார்த்தான்.

அவளோ மாமா இது நமக்கு தான் நிச்சயம் கிடைக்கும் என்று சந்தோஷமாக கூற

நமக்கு கிடைச்சா இத handle பண்ண நீ லண்டன் போகணுமே  என்றான் சூர்யா

ம்ம்ம் ஆமாம் மாமா நான் வில்லிங் ஆ தான் இருக்கேன் எனக்கு ok தான் என்று கூற

என்ன மை விழி நீ கார்த்திக் ஆ விட்டு எப்படி போய் இருப்ப என்று அவன் கேட்க 

எனக்கு அவன் கூட வாழ பிடிக்கல மாமா நான் divorce அப்ளை பண்ணலாம் னு இருக்கேன் என்று மிகவும் சாதரணமாக கூறினாள்.

என்ன சொன்ன நீ 

திரும்ப சொல்லு 

இதுல என்ன இருக்கு மாமா நான் divorce வாங்க போறேன் thats ஆல் என்று கூற இவர்கள் இருவரும் கடைசியில் பேசியதை  உள்ளே வந்த கீர்த்தனா கேட்டு விட்டாள்.

மனதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது . நாம் எதுவும் செய்யாமல் divorce வாங்கறாளா ரொம்ப நிம்மதி ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எதுவும் கேட்காதது போல நடித்தாள்.

அவள் வந்ததும் இருவரும் அமைதியாக இருந்தனர். பின் அவள் சில files சரி பார்த்து விட்டு கிளம்பினாள்.

நீ நிஜமாவே  தான் சொல்றியா இதுக்கு என்ன காரணம் ன்னு நான் தெரிஞ்சுகாலாமா .

வேணாம் மாமா உங்க வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல. 

என்ன சொல்ற விழி

அவள் தன் துக்கம் மறைத்து கொண்டு ஒன்னும் இல்ல மாமா என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.

சூர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி பேசுகிறாள் கார்த்திக் இப்போது அவளுடன் ஒத்து போகிறான் இவள் பிரிந்து செல்கிறேன் என்று கூறுகிறாளே. இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

இன்று இரவும் மை விழி தொடர்ந்து வேலை செய்வதாக மாற்றிக்கொண்டாள். அடுத்த நாள் காலை தினேஷ் மை விழியை கொண்டு வீட்டில் விட கார்த்திக் ஆஃபீஸ் கிளம்பி கொண்டு இருந்தான்.

அவள் வீட்டுக்கு வந்து நேராக அவளது அறைக்கு சென்று படுத்து கொண்டாள். அவனுக்கு தெரிந்து விட்டது தன்னிடம் இருந்து தப்பிக்க இந்த ஏற்பாடு செய்து இருக்கிறாள்.

இதற்கு இடையில் ஆதி எப்போதும் ஜானுவின் நினைவில் சுத்தி கொண்டு இருக்க இன்னும் 6 நாட்களில் நிச்சயம் செய்து கொள்ள மகிழினி யை torture செய்து சூர்யாவிடம் சம்மதம் வாங்கி விட்டான்.

இதோ அந்த நாளும் வந்து விட்டது ஜானு மனதில் அவன் மேல் காதல் இருந்தாலும் துளி கூட அதை காட்டிகொள்ள வில்லை .

ஆதியும் அவளை கண்டு கொள்ள வில்லை பிடிக்காமல் தான் அருகில் வருவார்களா

நீ சரியான சிடுமூஞ்சி டி என்று சந்தோஷமாக இருந்தான்.

ஆதி மாப்பிள்ளை க்கு உரித்தான தோரணையில் இருக்க ஜனனி ஸ்ரீ இளம்சிவப்பு வண்ண பட்டு புடவையில் தேவதையாக இருந்தாள்.

சூர்யா மகிழினி கிட்ட சண்டைக்கோழி உனக்கு நியாபகம் இருக்கா நம்ப engagement என்று அவள் அருகில் மெல்லிய குரலில் கூற அவள் அவனை பார்த்து முறைத்தாள்.

இப்போ எதுக்கு என்ன இப்படி முறைக்கிற என்னாச்சு

ம்ம்ம் உங்களுக்கே தெரியுமே நான் எதுக்கு முறைக்கிறேன்னு 

உன்னை நான் என்ன பண்ணேன் என்று அவள் இடையில் ஒரு கிள்ளி வைத்தான். நீங்கள் என்ன பண்ணல 

அப்போ சொல்லு இப்போ பண்ணிடலாம்.

நீீீங்க எதுவும் செய்ய வேணாம்  சும்மா இருந்தால் போதும்

இல்ல இப்போ ஏதாவது செஞ்சே ஆகனும் டி என்று அவன் கூற

போங்க என்று அவள் ஆதியின் அருகில் நின்றுகொண்டாள்.

இப்போது பெண்ணும் மாப்பிள்ளை யும்  மாலையிட்டு மோதிரம் போட சொல்ல ஆதி காதல் பார்வையில் அவள் கைகளில் மோதிரம் போட

ஏய் மானத்தை வாங்காத டா என்று மகிழினி கூற 

ஆதியோ மகி அவ தான் என்னை பார்க்க மாட்டிங்குரா நானவது பார்த்துக்கொள்கிறேனே.

அவளோ  நீ திருந்த மாட்ட டா என்று நின்று கொண்டாள். 

இந்த கார்த்திக் எப்போதும் போல மை விழியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருக்க அவன் பார்வையில் இருந்து தப்பிக்க அவளும் தன்னை மறைத்து கொண்டாள்.

சூர்யா அருகில் வந்த ஹரிஷ் அவனிடம்

என்ன மாமா எனக்கு பண்றேன் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு

இப்போ மொத்தமா அந்த ஆதிக்கு ஹெல்ப் பன்னீட்டிங்க

சூர்யா விடு ஹரி உனக்கு straigt ஆ கல்யாணம் பண்ணிடலாம் என்று அவன் கூற

நிஜமாவா மாமா  என்று  புன்னகையுடன் அங்கு இருந்து நகர்ந்தான்.

நிச்சயம் இனிதாக முடிந்தது ஆதி மகிளினியை வற்புறுத்தி பாட சொல்ல

அவளும் mike வாங்கி பாட ஆரம்பிக்க முதல் வரியில்லேயே சூர்யா அப்படியே நின்று விட்டான்.

அவள் என்ன பாடி இருப்பாள். சூர்யா சந்தோஷத்தில் இருக்க மூவர் வெறுப்பில்  இருந்தனர் யார் அது

உங்களுக்கு ஸ்டோரி பிடிச்சு இருந்தால்  கமெண்ட் பண்ணுங்க review கொடுங்க, like பண்ணுங்க

 Episode 58,

நிச்சயம் இனிதாக முடிந்தது ஆதி மகிளினியை வற்புறுத்தி பாட சொல்ல அவளும் mike வாங்கி பாட ஆரம்பிக்க முதல் வரியில்லேயே சூர்யா அப்படியே நின்று விட்டான்.

ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

என்று அவனை பார்த்து கொண்டே மகிழினிகிட்ட சூர்யா விரும்புகிறேன் என்று சொன்ன அந்த நாளை நினைத்து தன்னை மறந்து பாட 

என்று இந்த ஒரு மாத வாழ்க்கையிலே சூர்யா அவளுக்கு  முழு காதல், காட்டினான்

விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும் மகிழினிக்கு ஒரு நிமிடம் கூட அவனை பிரிந்து இருக்க முடியாத நிலையை கூறி


எனையாளும் எஜமானே

என்றுமே மான்விழி என்ற மகிழினியின் உள்ளத்தை சூர்யா மட்டுமே ஆள்வான் என்று அவள் கண்களில் கண்ணீருடன் பாட

அவள் அருகில் சென்ற சூர்யா அந்த mike ஆ வாங்கி


உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்

என்று சூர்யா அவளை முகம் சிவக்க வைக்க

ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

சூர்யா அவள் கண்களை துடைத்து பாட


விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்

இப்போது ஒரு நிமிடம் கூட உன்னை என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று சூர்யா உணர்த்த


இணையான இளமானே
துணையான இளமானே

எப்போதும் என்னுடைய  மனதிலும் சரி வாழ்க்கையிலும் சரி என்னுடைய துணை நீ தான் என்னுடைய இணை நீ தான் என்று கூறியவன்

 என்று சூர்யா அவனுடைய ஆசைய கூற

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

என்று  பாடி சூர்யா அவளின் இதழ் நோக்கி குனிய அப்போது  ஜெனி, ஜானு வேகமாக கைகளை தட்ட  

ஆதி ஜானுவை பார்த்து ஒரு live கிஸ் மிஸ் ஆகிடுச்சு என்று ரகுவும் கூற ஜானுவும் , ஜெனியும் முறைத்தனர்.

ஆதி மகிழினி கிட்ட ஏய் இங்கே எனக்கு நிச்சயமா இல்ல உனக்கா டி முடியல

உன்ன நான் பாட்டு தான் பாட சொன்னேன் நீங்கள் அதுல அப்டியே  வாழ்ந்து விட்டிங்க. 

மகிழினியோ , வாய மூடு டா ஜானு உன்னை முறைக்கிறா. 

ம்ம்ம் அவ அதை மட்டும் தான் பண்றா டி என்ன பண்றது .

சூர்யா xerox ன்னு நினைச்சேன் ஆனா உன் மீசை அப்டியே ரொமான்ஸ் ல யே ரெண்டு பேரும் any time சுத்துறீங்க.

அவ சிரிப்பாளா இல்லையா னே தெரியல மகி உன் மீசைக்கு வேற அத்தை பொன்னும் அப்டி இல்லனா மாமா பொண்ணு இருக்காங்களா. என்று ஆதி கூற

ஜானு அருகில் வந்து என்னை தவிர எங்கேயாவது யாரையும் பார்த்த அப்டின்னு தெரிஞ்சது மவனே நீ close shut your mouth என்று கூற 

ஆதி பேய் அறைந்தது போல அப்படியே அமைதியாகி விட்டான். மனதில் இவளுக்கு இப்படி கூட பேச தெரியுமா என்று நின்று  கொண்டு இருந்தான்.

இங்கு கார்த்திக்கு ஒரு நிமிஷம் சூர்யாவை பார்த்து கொஞ்சம் பொறாமையாக இருந்தது அவன் மனதில் இருவரும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்தவர்களை போல எப்படி புரிதலோடு இருக்கிறார்கள்.

என்று அவன் நினைத்து கொண்டு இருக்க அப்போது சூர்யா வந்தான். என்னாச்சு கார்த்திக் சார் past க்கு போய்ட்டு வந்தீங்களா.

கார்த்திக் அவனை பார்த்து என்னோட future பக்கத்தில் இருக்கும் போது நான் ஏன் past க்கு போகனும் என்று அவன் கூற சூர்யா சிரித்தான்.

எப்படி மகி உங்க பின்னாடி ஒரு பூனை குட்டி மாறி சுத்துரா என்று கேள்வியாக கேட்க

நான் தான் அவளுக்கு பால் அதனால தான் என்று சிரித்து கொண்டே கூறினான்.

கார்த்திக் உடனே அங்கு இருந்து நகர போக நீ எப்போ உன் பூனைய சுத்த விட போற என்று கூற அவன் அப்படியே நின்றான்.

கார்த்திக் அவனை பார்த்து அவ நான் பார்த்த பொண்ணு மாறி இல்ல விட்டால் என்னை அடித்து விடுவாள் போல ஒன்னும் முடியல .

சூர்யா இப்போது பேச ஆரம்பித்தான் கார்த்திக் நீங்கள் ஏதாவது மறைகிறீங்களா மை விழிக்கு உங்களை பிடிக்கும் ஆனா நீங்க அந்த trip போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி பண்றா

நான் என்ன மறைக்கிறேன் என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான் . நீங்கள் ஏதோ பண்ணி இருக்கீங்க உங்க ஒரு தலை காதல் எல்லாம் அவளுக்கு தெரியும் இப்போ அது problem இல்ல நீங்கள் ஏதோ உங்ககிட்ட ஏதோ இருக்கு அது தான் இப்போ problem என்று கூறி விட்டு

ம்ம்ம் கடைசியாக ஏதோ நினைவு வந்தவனாய் சூர்யா

மை விழியோட லண்டன் ப்ரொஜெக்ட் ss groups க்கு கெடைச்சு இருக்கு

அதனால அவ லண்டன் போறேன்

அப்டின்னு சொல்லிட்டு இருக்கா 

நீங்கள் கொஞ்சம் என்னனு பாருங்க என்று சொல்லி விட்டு சென்றான்.

கார்த்திக் மனதில்  இப்போ என்ன செய்ய இன்னிக்கு night அ இந்த பிரச்சனை பத்தி அவ கிட்ட பேசணும் என்னை விட்டு போகனும் னு வேற மனசுல நினைச்சு கிட்டு இருக்கலா இவள என்று  வீட்டுக்கு போனதும் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

மை விழி ஆதியிடம்-அண்ணா நாங்க கிளம்புறோம் எனக்கு நாளைக்கு ஆஃபீஸ் ல முக்கியமா வேலை இருக்கு என்று கூறி தினேஷ் கூட கிளம்பினாள்.

இது கார்த்திக்கு தெரியாது ஆனால் இது அனைத்தும் கீர்த்தனா பார்த்து கொண்டு இருந்தவள் நேராக இது தான் சரியான தருணம் என்று இன்று கார்த்திக் கூட செல்ல வேண்டும் மை விழி பற்றி  அனைத்து விஷயங்களை கூறி விட வேண்டும் என்று நினைத்தாள்.

கார்த்திக் அவள் எங்கே என்று தேடியவன் அவள பற்றி மகிழினி கிட்ட கேட்க அவளோ மை விழிக்கு போன் செய்து

அக்கா எங்கே இருக்க  , நான் வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்.

யாரு கூட போற ,  அப்டின்னு நான் கேட்கலை உன்னோட சூர்யா மாமா தான் கேட்டாரு

நான் தினேஷ் மாமா கூட போய்ட்டு இருக்கேன்.

நீ சூர்யா மாமா கிட்ட சொல்லிடு அப்புறம் இந்த coming one week நான் வீட்டில் தான் இருக்க போறேன் நீ சக்தியை  கொண்டு வந்து விடு

அவளோ ஏன் அக்கா அதுக்கு அப்புறம் எங்கே போற சக்தி தான் உன்கூட ஆஃபீஸ் ல இருக்கானே.

நான் சொல்றத மட்டும் கேளு என்னை எதுத்து பேச ஆரம்பிச்சுட்டியா வாய மூடு ஒழுங்கா நான் சொல்றத மட்டும் கேளு டி இடியட் என்று கூறி போன் வைத்தாள்.

மகிழினி அவனிடம் என்ன சொல்வது என்று பார்க்க கார்த்திக் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மகி 

அவ என்ன சொன்னான்னு எனக்கு நல்லாவே கேட்டது என்று கூறி நகர போக மகிழினி அவனை அழைத்தாள்.

மாறன் மாமா என்று அவள் அழைக்க ஒரு   நிமிஷம் அவன் அப்படியே நின்றான். நான் தெரியாமல் உங்களுக்கு மை விழியை திருமணம் செய்ய சொல்லி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று அவள் கலங்கி கொண்டே கூற

கார்த்திக்(மாறன்) நீ எதுக்கு விழி வருத்தபடுற உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்.

ஆனால் அவள நான் முதலில் விருப்பம் இல்லாமல் தான் கல்யாணம் பண்ணேன்

ஆனால் இப்போ எனக்கு அவள் இல்லாமல் இருக்க முடியாது மான் விழி என்று  கூறினான்.

மகிழினி(மான் விழி) மிகவும் சந்தோஷமாக சரி மாமா என்றாள்.

மை விழி வீட்டுக்கு சென்றவுடன் வழக்கம் போல தன் அறைக்கு சென்று படுத்து கொண்டாள்.

இங்கு கீர்த்தனாவோ கார்த்திக் கூட சேர்ந்து செல்ல வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி கார்த்திக்கை அவளுடைய வீட்டில் இறக்கி விடும் படி கூற அதே போல் கார்த்திக் அவளை அழைத்து கொண்டு சென்றான்.

காரில் வரும்போது கார்த்திக் கிட்ட பேச்சு கொடுத்தவள் அப்படியே மை விழி பற்றி எல்லா விஷயங்களும் கூறினாள்.

கீர்த்தனா கிட்ட முதன் முதலில் மை விழி தன் தங்கையும் உன் மாமாவும் விரும்பியது முதல் போட்டோ மாற்றியது என அனைத்தும் கூற கார்த்திக்கின் முகம் சட்டென்று கோபத்தில் மாறியது .

நீ சொல்றது எல்லாம் உண்மையா கீர்த்து என்று அவன் கேட்கும் தோரணையில்

அவளோ சத்தியமாக இது அனைத்தும் உண்மை மாமா என்று கூற

அவன் அதே கடுமையுடன் கீர்த்தனா வ இறக்கி விட்டு தன் வீட்டை நோக்கி சென்றான்.

கார்த்திக் மனம் கோபத்திலும் இயலாமாயிலும் கொதித்தது.

என் மான் விழி என்னை விட்டு பிரிய இவள் தான் காரணமா என்று ஒரு மனம் கூற

இன்னொரு மனம் மை விழி தான் உன்னை முதலில் விரும்பி இருக்கிறாள்.

அவளுடைய காதலை பாதுகாக்க எந்த அளவுக்கும் துணிந்து இருக்கிறாள். நீ உன் கோபித்தால் மட்டுமே உன் காதலை இழந்தாய் இதில் அவள் தவறு எதுவும் இல்ல என்று இரு மனம் கொண்டு ஒரு வழியில் வீட்டுக்கு வந்து விட்டான்.

வீட்டின் உள்ளே செல்ல இன்று அவள் இவனுக்காக காத்து இருந்தாள். ஒரு நிமிஷம் கார்த்திக் அவளை பார்க்க மை விழி புன்னகை முகம் கொண்டு கார்த்திக் கிட்ட பேசினாள்.

கார்த்திக் உங்கள் கிட்ட கொஞ்சம் பேசணும் கொஞ்சம் பிரேஷ் ஆகிட்டு வாங்க என்று கூற அவள் பேச்சுக்கு மறு பேச்சு எதுவும் கூறாமல் உடைகளை மாற்றி கொண்டு கார்த்திக் வந்தான்.

மை விழி நிதானமாக அவனிடம் இரு கவர்கள் நீட்டினாள் .

ஒன்று ப்ரொஜெக்ட் லண்டன் போக order கவர

இன்னொன்று எடுத்து பிரித்து பார்த்து அதனை படிக்க இல்லை இல்லை பார்க்க கூட கார்த்திக்கு கோபம் பொங்கியது.

அது என்னவாக இருக்கும்????????

இங்கு SPR க்கு மகிழினி இன்று சூர்யாவை நினைத்து பாடியது அவர்களுடைய இனக்கம் இது அனைத்தும் கண்டு கொலை வெறி போல் கோபம் வர 

அவன் இனி என்னால் தாமதிக்க முடியாது பொம்மாயி

வரேன் உன்னை சீக்கிரமே தூக்கிட்டு வந்திடுவேன் என்று  அவன் ஆயத்தமானான்.

இன்னும் 6 நாட்களில் எல்லாம் மாற போகிறது இது தெரியாமல் சூர்யாவும் மகிளினியும் தங்கள் வாழ்க்கையில் காதல் சடுகுடு ஆட்டத்தில் வர போகிறான் SPR

 Episode 59

அந்த இரண்டாவது கவரை பிரித்து பார்த்த கார்த்திக்கு மிகவும் கோபமாக இருந்தது. அவன் மை விழியை பார்க்க அவளோ சாதாரணமாக அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினாள்.

அவன் அவளை பார்த்து இது என்ன 

உங்களுக்கு படிக்க தெரியும் தானே என்று அவள் அலட்சியமாக பதில் கூற

எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கார்த்திக் கூறினான்.

எனக்கு divorce வேனும் என்னால உங்கள் கூட இருக்க முடியாது.

கார்த்திக் இப்போது நிதானமாக அவளை பார்த்து

உன்கிட்ட அதுக்கு சரியான காரணம் இருக்கா என்னை டிவோர்ஸ் பண்ண என்று கேட்க

அவளோ  எனக்கு உங்களை பிடிக்கல அவ்ளோ தான் 

அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட என்று

அவன் நன்றாக சாய்ந்து கொண்டு எதுவும் தன்னை பாதிக்க வில்லை என்பது போல் மை விழியை பார்த்தான்.

அவள் எதுவும் பேச வில்லை

அவன் ம்ம்ம்ம் பதில் சொல்லுங்க

மிஸ் மை விழி கார்த்திக் என்று கூற உடனே அவளுக்கு கோபம் வர

நான் ஒன்னும் மை விழி கார்த்திக் இல்ல மிஸ்டர் கார்த்திக்

என்னோட பேரு மை விழி வசந்தன் தான் எப்போதும் என்று கூறினாள்.

இல்ல நீ மிசஸ் கார்த்திக் தான் 

இல்ல நான் மை விழி வசந்தன் என்று அவள் கோபத்தில் கத்தினாள்.

கார்த்திக் அவளை பார்த்து சிரித்து கொண்டே   இதை உன் அப்பாகிட்ட போய் சொன்னா கூட அவரு நான் சொல்றத தான் சொல்லுவார் .

மை விழிக்கு கோபத்தில் கண்கள் சிவக்க மேல் மூச்சு கீழ் மூச்சு எடுத்தாள்.

கார்த்திக் அவளை பார்த்து ப்ப்பா செம்ம கோபத்தில் இருக்கீங்க போல காண்டு கண்ணம்மா என்று கூற

மை விழி வேகமாக எழுந்தவள் இப்போ எனக்கு டிவோர்ஸ் கொடுங்க  மிஸ்டர் கார்த்திக் என்று அவள் சிடு சிடுக்க

இப்போ தர முடியாது அப்டின்னு சொன்னா என்னடி பண்ணுவ என்று அவளை அலட்சியமாக பார்த்தான்.

சரி டா நான் உன்னை court ல மீட் பண்ணிக்கிறேன் என்று அவள் செல்ல போக

அங்கே என் மேல் என்ன complient பண்ணுவ எதுக்கு இந்த டிவோர்ஸ் னு கேட்பாங்க என்று அவன் கூற

உன்னோட வேலைய பாரு டா என்று அவள் செல்ல போக கார்த்திக் மை விழியை இழுத்து சோபாவில் தள்ளினான்.

ஏய் என்னடா பண்ற ஒழுங்கு மரியாதையா முதலில் என்ன விடு டா என்று அவள் மிகவும் சிரமப்பட்டு பேச

கார்த்திக் அவள் காதுக்கு அருகில் வந்தவன் நீ தானே சொன்ன உன்னோட வேலைய பாரு அப்டின்னு அதை தான் நான் இப்போ பார்க்க போறேன்.

மை விழி திடுக்கிட்டு அவனிடம் இருந்து தன்னை மீட்க எழ முயற்சி செய்தாள் ஆனால் முடிய வில்லை.

இப்போது கார்த்திக் அவள் கழுத்தில் முகம் புதைத்து

நீ சொன்னது சரி தான் டி நீ மை விழி வசந்தன் உங்கள் அப்பா பொண்ணு தான் 

இன்னும் நீ official ஆ எனக்கு சொந்தம் ஆகுல இப்போ உன்னை official ஆ சொந்தம் ஆகிட்டா

அப்புறம் நீ மை விழி கார்த்திக் என்று அவள் உடலை வருட ஆரம்பித்தான்.

மை விழி அவனிடம் இருந்து விலக போராடிக்கொண்டே நீ பண்றது சரி இல்ல கார்த்திக் என்று கூற

அவன் மயக்கும் புன்னகையில் யார் சொன்னா நான் செய்யறது சரி இல்ல

ஆமா தப்பு தான் ஆனால் நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து செய்தால் சரி ஆகிடும் 

எனக்கு ok தான் இப்போ உனக்கு என்று கேட்க 

ஏய் ஒழுங்கா என்னை விட்டு தள்ளி போடா எனக்கு உன்கூட வாழ இஷ்டம் இல்ல விடு டா என்று மூச்சு வாங்க பேசினாள்.

நான் நம்ப மாட்டேன் நீ பொய் சொல்ற 

ஏய் ஒழுங்கு மரியாதையா என்ன விட்டு போடா என்று அவள் கைகளை கொண்டு அவனை அடிக்க.

நீ பொய் தான் சொல்ற இப்போ நான் prove பண்றேன் என்று மை விழியின் இதழில் ஒரு தீவிரமாக ஒரு முத்தம் கொடுக்க மை விழிக்கு  ஏற்று கொள்ளவும் முடியவில்லை விலகவும் முடியவில்லை.

முத்தம் நீண்டு கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் அவள் கண்களை மூடி அந்த இன்ப வேதனையை ஏற்று கொண்டாள். 

கார்த்திக் அவளது ஒவ்வொரு முக மாறுதலும் ரசித்து கொண்டே அவள் தன்னுள் கரைகிறாள் என்று தெரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு போக  கொஞ்சம் அவனது பிடியை தளர்த்தினான்.

மை விழியின் அறிவு விழித்து கொண்டது அவனிடம் இருந்து மீண்டும் தன்னை மீட்டெடுத்தாள்.

கார்த்திக் அவளது காதுகளில் தன்னுடைய உதடுகளில் வருடி கொண்டே

ஹே இஷ்டம் இல்ல

அப்டின்னு சொன்ன

இப்போ உன்னோட உதடு தான் இஷ்டம் இல்ல அப்டின்னு சொல்லுதுடி

உன்னோட மனசும் உன்னோட மொத்தமும் என்னை விரும்புது என்று அவன் கூற

இப்போது மை விழி பேசினாள் நீங்கள் சொல்றது சரி தான்

உங்களுக்கு என் மேல் இனகவர்ச்சி தானே ok lets do something என்று கூற 

அந்த நொடி கார்த்திக் மிகவும் ஒரு அரக்கனாக மாறினான்.

அவள் மேல் இருந்து எழுந்து அங்கு இருந்த கண்ணாடி டி பாய் மீது ஓங்கி ஒரு தட்டினான் அது நொறுங்கி பெரிய சத்தத்துடன் உடைந்து போனது.

மை விழி வேகமாக எழுந்து நின்றாள். கார்த்திக் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான். 

அவள் மீண்டும் சோபாவில் அவனின் அடி தாங்காமல் கீழ விழுந்தாள். பைத்தியகாரன் போல அங்கும் இங்கும் நடந்தான். 

கண்கள் சிவந்து போனது தண்ணீர் எடுத்து குடித்தவன் தன் கோபத்தை கட்டு படுத்த முயற்சி செய்தான்.

மை விழி இந்த ஒரு அடிக்கு அஞ்சுபவளா அவள் இல்லையே அவள் கிட்ட தட்ட அனைத்து துக்கங்களை தன்னுள் மறைத்து எதுவும் நடக்காதது போல ஒரு முக பாவனையுடன் அமர்ந்து இருந்தாள்.

கார்த்திக் நேராக அவள் கொடுத்த டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு ஹே இந்தா உனக்கு தேவையானது என்று அவள் முகத்தில் விட்டெரிந்தான்.

இதற்கும் மேல் முடியாது என்று இப்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அவன் இரண்டு அடி எடுத்து வைத்தவன் .

பின் திரும்பி அவளை பார்த்து நீ கேட்டதை நான் உனக்கு கொடுத்து விட்டேன் இப்போ நான் கேட்கும் கேள்விக்கு நீ உண்மையான பதில் கூற வேண்டும்.

மை விழி தன்னை சரி செய்தவள் ம்ம்ம் என்ன விஷயம் என்று கேட்க

கார்த்திக் அவளை பார்த்து நீ எதுக்கு மான் விழியை என் கிட்ட இருந்து பிரிச்ச என்று கேட்க 

இதை மை விழி எதிர் பார்க்க வில்லை அவள் அதிர்ச்சியில் அவனை பார்த்து பின்

நீங்கள் என்ன சொல்லறீங்க என்று கேட்க

அவன் ஒரு கொடுங்கோல் போல சிரித்து dont act உன்னோட வேலைய என் கிட்ட வச்சுக்காத 

அவளோ நேராக அவனை பார்த்து ஆமா நான் தான் பண்ணேன் அதுக்கு என்ன இப்போ எல்லாம் நான் தான் பண்ணேன் எனக்கு மகி உங்கள் கூட இருக்கிறது பிடிக்கல அதனால பண்ணேன்.

அவ கூட நான் இருந்தால் உனக்கு ஏன் பிடிக்கமால் போகனும் என்று அவள் கழுத்தை கொஞ்சம் நெறித்தான்.

பின் இயல்பு நிலைக்கு வந்தவன் சொல்லுடி

 ச்சி, நீ எல்லாம் ஒரு பொண்ணு நீ மான் விழி கூட பிறந்தேன் அப்டின்னு சொல்லிட்டு அவ பக்கத்தில் நிற்க்காத அவ தேவதை 

என்று கார்த்திக் கூற ஏய் நிறுத்து டா நீ பெரிய இவன் மாறி நீ ஒழுங்கு மாறி என்னை பேச வந்துட்ட என்று அவனுக்கு அசராமல் பேசினாள்.

கார்த்திக் அவளை பார்த்து mind your words உன்னை நான் என்னமோ நினைச்சேன் ஆனால் என்னைக்கும் நீ மான் விழி கிட்ட இருக்க ஒரு நல்ல விஷயம் கூட உன் கிட்ட இல்ல டி

இந்த வார்த்தையை கேட்டவுடன் தன் இரு காதுகளையும் பொத்தி கொண்டாள் தன்னை மீறி அழுதாள்.

ஆமாம் டா நானும் அவளும் வேற தான் நீ ஒன்னும் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணலேயே அவளுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணி இருப்ப

அவள நினைச்சு தான எனக்கு தாலி கட்டின இப்போ அவள் னு நினைச்சு தான் என்னை என்று கூற வர 

கார்த்திக் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அந்த வார்த்தையை சொல்லாத மை விழி அதுக்கு நீ என்னை கொன்று விடு 

என்று ஒரு ஆறடி ஆடவன் தரையில் வீழ்ந்து அழுதான்.

மை விழி அவனையே பார்க்க என்னோட மான் விழி அவ எப்போதும் என்னோட காதலி தான்

ஆனால் நான் எப்போ உன் கழுத்தில் தாலி காட்டினேனோ அப்போவே என்னோட மனைவி யா நீ தான் என்னோட மனசுல

ஆனால் நானும் சாதாரண மனிதன் தானே அவ சூர்யா கிட்ட இருக்கிறது பார்த்து என்னோட மனசு இயலாமையில் துடித்தது அது யாரலையும் மாற்ற முடியாது.

இப்போவும் சொல்றேன் மான்விழி ய நான் என்னோட உயிர்க்கு மேல நேசிச்சேன்

அதுல இப்போ ஒரு துளி கூட சபலம், காமம் இல்ல bluddy இடியட் 

அவ மேல எனக்கு இருப்பது அன்பு மட்டும் தான்

நான் உன்கிட்ட என்ன எப்டி இதை புரிய வைக்க அப்டின்னு தெரியல என்று அழுதான்.

இப்போ நீ சொன்னயே அந்த வார்த்தையை சொல்ல எனக்கு கூசுது இனகவர்ச்சி

அதை சொல்ல உனக்கு எந்த அருகத்தையும் இல்ல உன் தங்கை காதலனை பிரித்து நீ பிளான் போட்டு கல்யாணம் பண்ணி இருக்க

அது எதுக்கு அப்டின்னு நான் கொஞ்சம் தெரிஞ்சுகாலாமா என்று கேட்க மை விழி விக்கி நின்றாள்

கார்த்திக் சொன்ன அனைத்து வார்த்தையும் களங்கம்  இல்லாத வார்த்தை 

சொல்லுங்க மிஸ் மை விழி வசந்தன் என்று கேட்டான்

அப்புறம் என்ன சொன்ன இந்த வார்த்தை தான் டி என்ன உயிரோட  சாவடிக்குது 

அதை எனக்கு சொல்ல விருப்பம் இல்ல இருந்தாலும்  நான் சொல்றேன்

நான் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட வரும்போது நீ என்னோட பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் அப்டின்ற உரிமையோடு உன் கிட்ட வந்தேன். 

அது என்னோட தப்பு தான் நான் மான் விழியை நினைத்து உன்னை  தேடி வரல அது நான் சுயநினைவில் இல்லை அப்டின்னாலும் உன்னை மட்டும் தான் என் மனசு தேடுச்சு

வேற ஒருத்தர் மனைவி மேல் நான் ஆசை பட நான் ஒன்னும் கீழ்த்தனமான புத்தி உடையவன் இல்ல.

எப்போ எனக்கு கல்யாணம் ஆச்சோ அப்போவே என் மனதில் நீ வந்துட்ட இத இப்போ சொல்லி எந்த பயனும் இல்லை என்று அழுதான்.

இதற்கும் மேல் மை விழியால் அங்கு இருக்க முடியவில்லை வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்.

, Episode 60, 

ஓர் உறவின் முடிவில்  தான் தொடங்குகிறது என்னுடைய வாழ்க்கை ,

ஏன் என்றால்,

நான் அவன் மனதில் வீற்றிறுக்கிறேன்!! இரண்டாவது இடத்தில்.

இதற்கும் மேல் மை விழியால் அங்கு இருக்க முடியவில்லை வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்.

அவள் மனதில் கார்த்திக் கூறிய  இதற்கு மேலும் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

கார்த்திக் மனதில் இப்படி நம்மை நினைத்து விட்டாளே என்று அவன் மனம் மிகவும் வேதனைப்பட்டது

இரண்டு நாட்கள் கார்த்திக்கும், மைவிழியும் அவர் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை

சாப்பாடு தூக்கம் தண்ணீரில்லாமல் இருவரும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் மாற்றி நினைத்துக்கொண்டு

மனதாலும் உடலாலும் தன்னைத்தானே வருத்திக் கொண்டு இருந்தனர்.

மூன்றாவது நாள் முதலில் கார்த்திக் வெளியே வந்தான் வந்தவன் நேராக சமயலறைக்கு சென்று அன்று தேவையான அனைத்து உணவுகளையும் தயார் செய்தான்.

மனது முழுவதும் ரணம் தான் அதற்காக வாழ்க்கையை வாழாமல் விட்டுவிட முடியுமா அவளுக்கு தன்னோடு வாழ விருப்பமில்லை என்றால் அவள் செல்லட்டும்

அவளின் முடிவில் நாம் தலையிடக்கூடாது அவளுடைய விஷயங்கள் எதிலுமே தலையிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டான்

இருந்தாலும் அவன் மனம் துடிக்க தான் செய்தது என் ஏனென்றால் மைவிழியை அவன் விரும்ப ஆரம்பித்து விட்டான் என்று சொல்ல முடியாது விரும்புகிறான்.

ஆனால் மைவிழியோ அவனுக்கு நேர் எதிராக நினைத்துக் கொண்டு இருந்தாள் நான் கார்த்திக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை மான்விழி தான் கார்த்திக்கு பொருத்தமானவள்

நான் தெரியாமல் அவர்களது காதலை பிரித்து விட்டேன் என்று நினைத்து நினைத்து அழுதாள்.

ஒரு கட்டத்தில் அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாப்பாடு தண்ணீர் அனைத்தையும் விடுத்து அப்படியே கிடந்தாள்.

அவள் வெளியே வரவில்லை என்று தெரிந்துகொண்ட கார்த்திக் யாரிடம் சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சரி என்று மனம்  கேட்காமல் அவனே சென்று அவளுடைய அறையின் கதவுகளை தட்ட கதவு திறக்கவில்லை.

மீண்டும் தட்ட அப்பொழுதும் திறக்கவில்லை?

ஏதாவது செய்து கொண்டிருப்பாளோ!

என்று வேகமாக தனது சாவியை எடுத்தவன் வீட்டு சாவியை எடுத்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக

அங்கே அவள் படுக்கையில் படுத்து இருந்தாள் அவள் அருகில் சென்று தொட்டுப்பார்க்க காய்ச்சல் அனலாக கொதித்தது கைகளைக் கொண்டு வரும்போதே கைகள் என்னை தொடாதே என்று கூறுவது போல் அவனுக்கு தோன்றியது.

அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள் மனிதாபிமானம் கருதி கார்த்திக் அவளை மெதுவாக அமரவைத்து அவளுக்கு தேவையானவற்றை செய்தான்.

ஆனால் அப்பொழுதும் மைவிழியின் மனம் தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டோம் என்று உறுத்திக்கொண்டே இருந்தது

ஆனால் ஒரு வார்த்தைகூட  பேசவே இல்லை அவளுக்கு தேவையான உணவுகள் அனைத்தையும் தந்தவன்

நீ சாப்பிடவில்லை என்றால் நான் மகிழினி கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என்று கூற

அவள் அவன் சொன்னதை செய்தாள் மற்றபடி கார்த்திக் அவளிடம் எதுவுமே பேசவில்லை அடுத்த நாள் காலையில் அவள் எழுந்து 

அடுத்த நாள் மைவிழி தன்னை தயார் செய்து கொண்டு எழுந்தவள் வேக வேகமாக தனது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்ப தயாராக இருந்தாள் வெளியே வந்ததும்

கார்த்திக் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் சாப்பிடும் வரைக்கும் அவள் காத்திருந்தாள் சாப்பிட்டு முடித்தவுடன்

அவள்  கார்த்திக்அருகில் சென்று

கார்த்திக்  உங்கள் கிட்ட கொஞ்சம் பேசணும்

சொல்லுங்க மை விழி என்று ஒரு வெற்று புன்னகையுடன் அவளை பார்த்தான். 

என்னை மன்னித்து விடுங்கள்

கார்த்திக் நான் தெரிந்தே உங்கள் மனதை மிகவும் கஷ்ட படுத்தி விட்டேன்.

எனக்கு தெரியாமலும் உங்களை கஷ்ட படுத்தி விட்டேன். 

உங்களோடு வாழ எனக்கு அந்த வார்த்தையை சொல்ல கூட தகுதி இல்லை .

அதனால் உங்களுக்கு உண்டான அந்த விவாகரத்து பத்திரத்தில் நான் இதில் கையெழுத்து போட்டு விட்டேன். 

என்று அவள் அந்த காகிதங்களை நீட்டினாள். கார்த்திக் அதனை வாங்க வில்லை அவள் என்ன பேசுகிறாள் என்று பார்த்து கொண்டு இருந்தான்.

மை விழி அந்த மேசையின் மீது வைத்து விட்டு கடைசியாக அவள் சிறு வயது காதலனை மனதில் நிறைத்து கொண்டு 

ஒரு வலியுடன் புன்னகை சிந்தியவள் அவனிடம் நான் போகிறேன் என்று கூறி வெளியே செல்ல ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தாள்.

கார்த்திக் மனதில் மாறா நீ முன்பு பண்ண தவற மீண்டும் செய்ய வேண்டாம் டா எதுவா இருந்தாலும் அவ கிட்ட ஒரு முறை பேசி முடிவெடு 

அப்படி இல்ல அப்புறம் மை விழி உனக்கு இல்ல டா என்று கூற

மை விழி கதவு வரை சென்றவள் வெளியில் செல்ல போக கார்த்திக் பேசினான். 

மை விழி இப்போ மட்டும் நீ வெளியே போனா எப்போதும் நீ என்கிட்ட வர முடியாது என்று கூற ஒரு 5 நிமிஷம் அப்படியே நின்றாள்.

அவள் அங்கு இப்போது நின்று கொண்டு இருப்பதே கார்த்திக் அவனுக்கான பதில் என்று எடுத்து கொண்டவன் .

வேகமாக அவள் அருகில் சென்று  அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தியவன் மை விழியை பார்த்து 

ஏன் டி இப்படி என்னை torture பண்ற

என்று அவளை அணைத்து கொண்டு அழுதான்.

மைவிழி தேம்பி தேம்பி அழுது கொண்டே நான் போறேன் என்னை விடு கார்த்திக் என்று கூற 

அவனோ எங்கே போவ நீ உன்னால என்னை விட்டு இருக்க முடியாது 

என்னால முடியும்

நீங்கள் ஒரு நல்ல பொண்ணு அப்படி இல்ல கீர்த்தனா வ கல்யாணம் பண்ணிக்கோங்க 

என்று துக்கம் தொண்டை அடைக்க அழுது கொண்டே கூற

கார்த்திக் ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டவன்

நீ இவ்ளோ பேச இடம் கொடுத்தது என்னோட தப்பு டி 

இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை என்று அவளை அருகில் இழுத்து சுவற்றில் சாய்த்து கொஞ்சம் நிதானமாக கேட்டான்.

மை விழி அவனை பார்த்து எனக்கு உங்கள் மனசுல இருக்க ஏன் அதை சொல்ல கூட தகுதி இல்ல என்று அவள் கூற

கார்த்திக்  அவளை நீ பைத்தியம் அகிட்ட அப்டின்னு நெனைக்கிறேன். இவ்வளவு பேசிய மை விழி கார்த்திக் முகத்தை பார்க்கவில்லை.

கார்த்திக் அவள் முகத்தை நிமிர்த்தி கீர்த்தனா இல்ல நீ எந்த பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாலும் யாரும் என்கூட வாழ மாட்டாங்க என்னை விட்டு போயிடுவாங்க

மை விழி வழிந்து ஓடும் கண்ணீர் கண்களுடன் ஏன் என்று கேட்க கார்த்திக் வேகமாக அவன் சட்டை பட்டன் கழட்டி அவன் நெஞ்சை காட்ட

மை விழி அவன் சட்டை பட்டன் கழட்ட போகும் போதே கண்களை இறுக்க  மூடி கொண்டாள்.

அவனோ ஏய் open your eyes என்று கூற

மை விழி அழுது கொண்டே இல்ல கார்த்திக் இதை மறுபடியும் எனக்கு பார்க்க சக்தி இல்ல அதுக்கு நான் செத்து போறேன் என்று அவள் கூற

கார்த்திக் மனதில் அப்படின்னா இவ நான் டாட்டூ போட்டு இருந்தது பார்த்து தான் இப்படி behave பண்றாளா என்று நினைத்தவன்

மை விழி நீ இப்போ பாரு என்று வலுக்கட்டாயமாக  அவளை பார்க்க வைக்க அவளோ உறைந்து போனாள்

அந்த டாட்டூ கார்த்திக் முகம் என மாறி மாறி பார்த்தாள்.

இப்போ கூட நீ என்னை சந்தேகம் கொண்டு தான் பார்ப்ப எனக்கு தெரியும் என்று இரண்டு bill எடுத்து வந்து மை விழி கிட்ட கொடுத்தான்.

ஒன்று முதலில் விழி என்று டாட்டூ போட்டதை எடுத்து விட்டான்.

இரண்டாவது bill புதிதாக மை விழி என்று அவளது பெயரை டாட்டூ போட்டு கொண்டது .

இப்போது கார்த்திக் அவளிடம் வந்து அவள் கைகளை எடுத்து அவன் இதயத்தின் மீது வைத்து நான் உன்னை மனசார விரும்புகிறேன் மை விழி

I love you எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது ஆனால் உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு

உன்னோட attitude , உன்னோட அலட்சியம் இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது அதுவும் நீ மகிழினியால் தான் எனக்கு கிடைத்து இருக்கிறாய்.

அவள் என்கிட்ட சொல்லி இருக்கிறாள் நீ அதாவது இந்த விழிகள் எனக்காக படைக்கப்பட்டது  அது உண்மை தான் என்னோட விழி நீ தான் என்று கூறியவன்.

நீ என்னோட கடைசி காதல் இது எப்போதும் என்னோட கை விட்டு போகாது.

என்னோட முதல் நீ இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னோட முடிவு உன்கிட்ட தான் என்று கார்த்திக் கூறினான்.

I love you மை விழி என்று கார்த்திக் கூற 

மை விழிக்கு இது கனவா இல்ல நிஜமா என்று புரியாமல் நின்று இருந்தாள் இப்போது முன்பை விட கதறி கதறி அழுதாள். தரையில் அப்படியே அமர்ந்தாள்

கார்த்திக் அவளுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்தவன் இனி உன் இஷ்டம் நான் எதிலும் உன்னை கட்டாயம் செய்ய மாட்டேன் என்று கூறி நகர போக அவன் கைகளை பிடித்தவள்.

கார்த்திக் இது நிஜமா நிஜமா என்னை நீங்கள் ஏமாற்ற வில்லை தானே

மை விழி இது நிஜம் தான் கனவு இல்ல அதை எப்டி prove பண்றது என்று அவளை பார்த்தவன். மை விழி கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான்.

மை விழி சிரிக்கும் போதும் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை 

இப்போ எதுக்கு அழற 

இல்ல கார்த்திக் இந்த வார்த்தையை உங்கள் கிட்ட இருந்து கேட்க  நான்14 வருஷம் காத்து இருந்தேன்.

என்னடி சொல்ற எனக்கு மான் விழியை அவ 10 த் படிக்கும் போது தான் தெரியும்.

இல்ல கார்த்திக் நான் 7 th school join பண்ண அப்போவே உங்களை நான் விரும்புகிறேன். 

I love you கார்த்திக் .

நான் உங்களை பைத்தியமா காதலிக்கிறேன்.

நீ அப்போவே என்கிட்ட சொல்லி இருந்தால் இன்னேரம் நம்ம கூட இப்போ ரெண்டு பேர் எஸ்ட்ரா இருப்பாங்க 

நீ time waste பண்ணிட்ட

நான் அப்போவே சொல்லி இருந்தாலும் உங்களுக்கு என்னை புடிச்சு இருக்காது மகி பின்னாடி தான் சுத்தி இருப்பீங்க

இவ்ளோ ஏன் சூர்யா மாமா கூட என்னை தான் பார்க்க வந்தாங்க ஆனால் அவள பிடிச்சு இருக்கு அப்டின்னு கல்யாணம் பண்ணிக்கிடங்க

ஏன் அப்படி சொல்ற மான் விழியை பத்தி தப்பா பேசாத அவ தேவதை

உடனே மை விழி எழ போக

அவளை இழுத்து சுவற்றில் ஒட்டியவன் அவள் மேல் ஒட்டி கொண்டான்.

நீ  ராட்சசி அதுவும் அழகான என்னோட திமிர் பிடிச்ச ராட்சசி 

இப்போ கூட அவள் தான் உங்களுக்கு முக்கியம் என்று மை விழி கூற

ஆமா மான் விழி மட்டும் சூர்யாவை கல்யாணம் பண்ணல அப்படினா என்ன நடந்து இருக்கும். என்று கார்த்திக் கேட்க

Episode 61,

 விளக்க முடியாத மர்மம்!

விழி விளிம்பில் ஈரம்!

மறக்க முடியாத நேசம்!

மனதில் வைத்த பாசம்!

இது அனைத்தும் எனக்கு நீ தான் கார்த்திக்

மான் விழி மட்டும் சூர்யாவை கல்யாணம் பண்ணல அப்படினா என்ன நடந்து இருக்கும். என்று கார்த்திக் கேட்க

என்ன நடந்து இருக்கும்  என்று மை விழி கேட்க

அவன் வேணாம் விழி அதை பத்தி நாம்ப பேச வேண்டாம் 

அப்போ ஹரிஷ் அண்ணா வந்த அப்போ உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போச்சே அது டாட்டூ போட்டதால் தானா என்று அந்த பெயரை தொட்டு பார்த்து கொண்டே கேட்டாள்.

ம்ம்ம் ஆமா 

Sorry கார்த்திக் என்று அந்த டாட்டூ மீது ஒரு முத்தம் பதித்தாள்.

அவன் அவளை அணைத்து கொண்டான் அவளை பிரித்து சரி

நீ என்னை எப்படி லவ் பண்ண அப்டின்னு சொல்லு

எனக்கு ஒரே எஸைட்டிங் ஆ இருக்கு

அதுவா எப்படி சொல்றது என்று அவள் வெட்கம் கொண்டு பேச 

பாரு டா  மை விழிக்கு shy யா இருக்கா அதிசயம் தான் என்று அவளை கிண்டல் செய்ய

போ கார்த்திக் நான் சொல்ல மாட்டேன் என்று அவள் அங்கு இருந்து செல்ல போக

அவளை இழுத்து கார்த்திக் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன். 

மை விழி இப்படி நீ பேசினால் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு டி என்று  அவள் கண்களில் இதழ் பதித்தான்.

அவளோ எப்படி பேசினா புடிச்சு இருக்கு என்று அவள் மின்னும் கண்களோடு ஒரு முயல் போல அவனை பார்க்க

நீ உரிமையா பேசறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் முதல் முறை நீ மனாலி ல பேசின அப்போவே என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல டி

என்று அவளின் இதழ் நோக்கி அவன் குனிய அவள் அவனை தள்ளினாள்.

ஹே என்னாச்சு என்று அவள் அருகில் வர என்னோட bag அங்கே இருக்கு என்று கூற

அதை அப்புறம் எடுத்து கொள்ளலாம் என்று கூற நான் லண்டன் போனும் என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளின் இதழை சிறை செய்தவன்.

அவளை அப்படியே தூக்கி கொண்டு நேராக படுக்கை அறை சென்றான். என்னதான் கொஞ்சம்  அனைவரையும் எதிர்த்து பேசினாலும் துடுக்கு தனமாக இருந்தாலும் கூட இப்போது மை விழியின் பெண்மை மனம் கார்த்திக் அருகில் வரும்போது வெட்கம் கொண்டது.

மை விழி நீ என்னோட drug டி என்று அவளின் இதழை சிறை செய்தான்.

அவளும் அவனை இறுக்க அணைத்து கொண்டாள் அவளுக்கு அனைத்து இடங்களிலும் கார்த்திக் தீண்டலில் பூகம்பம் வெடித்தது.

கார்த்திக் அவளை மிகவும் மென்மையாக கையாண்டான்

மை விழியின் சிணுங்களில் தன்னை தொலைத்தவன் அவளிடம் தேடுதல் தொடங்கினான்

அவர்களுக்கு இப்போது எதுவும் தடையாக இல்லை.

மை விழி கண்களை மூடி கொண்டு கார்த்திக்கின் தீண்டுதலில் தன்னை முழுவதும் தொலைத்தாள்.

அவளிடம் கார்த்திக் இறுதி கட்டத்தில் அவளிடம் மை விழியிடம் கேட்க அவள் மிகவும் மெல்லிய குரலில் தன் சம்மதம் தெரிவிக்க அவளை எடுத்து கொண்டான்.

அவளை இறுக்கி ஒரு ஆழ்த்தி முத்தம் கொடுத்து அவளை அணைத்து படுத்துக்கொண்டான்.

மை விழி 

மை விழி 

ம்ம்ம் என்று அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டே கேட்டாள்

எங்கே எனக்கு புடிச்ச ராட்சசிய காணோம் என்று அவளின் கூந்தலை வருடி கொண்டே கூற அவள் சிணுங்கி கொண்டே

கார்த்திக் பிலீஸ் அமைதியா இரு என்று அவள் மூச்சு காற்று அவன் மார்பில் உரச பேசியவளை அவளின் இதழில் மீண்டும் சிறை செய்தான். 

அவளும் அவனோடு இசைய ஆரம்பித்தாள் இனிமே என் முன்னால் சிணுங்காத டி என்னால கண்ட்ரோல் பண்ண முடியல என்று கூற

அவள் மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள். எப்படியோ கார்த்திக் மை விழியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டான்.

மை விழி 

ம்ம்ம் 

எனக்கு ஒரு குட்டி மாறன் வேனும் என்று கேட்க

அவள் கண்களை திறந்து அவனை பார்க்க

என்ன பார்க்கிற 

தருவியா இல்ல நானே ரெடி பண்ணட்டுமா

அதென்ன குட்டி மாறன் சக்திக்கு துணையா

மகி தான் வேனும் ன்னு கேட்டாளே அன்னிக்கு அதுக்கு தான்

மை விழி அவன் மேல் பொய் கோபம் கொண்டு 

அப்போ உனக்கு குட்டி மாறன் வந்ததும் நீ என் பக்கத்தில் வரவே கூடாது ok வா

அவன் அதிர்ச்சியில் பார்க்க

மை விழி இரு புருவத்தையும் தூக்கினாள்

அப்படி இல்ல மறுபடியும் எனக்கு உன்கிட்ட நெறைய ஒர்க் இருக்கு டி

என்ன ஒர்க் என்று அவள் கேட்க

குட்டி மை விழி வேனும் 

ஓ நிஜமாவா இல்ல சூர்யா மாமா சொன்ன dialogue சுட்டு போட்டு சொல்றியா கார்த்திக்

நான் எதுக்கு சூர்யா கிட்ட சுடனும் எனக்கு நிஜமாவே மை விழி வேனும் என்று அவளை பேசியே மயக்கி மீண்டும் கூடலில் இணைந்தான்.

இப்படியே ஒரு வாரம் இருவரும் ஆஃபீஸ் பக்கம் வரவே இல்லை சூர்யா கண்டு  கொண்டான்.

அவன் மனதில் எப்படியோ என் பொண்டாட்டி ய லவ் பண்ணவன் இப்போ அவ பொண்டாட்டி கூட வாழ ஆரம்பித்து விட்டான்.

இனி என்னோட மகியை மான் விழியை யாரும் நெனைச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க என்று

இவன் நினைத்து கொண்டு இருக்க அங்கே SPR ஒரு நல்ல தருணம் பார்த்து மகிளினியை தூக்க காத்து இருந்தான்.

மான் விழிக்கு இந்த ஒரு வாரம் ஒரு மாதிரியான உணர்வாக இருந்தது. எப்போதும் மாதத்தின் முதலில் வரும் மாத விடாய் 4 நாட்கள் தள்ளி போக ஒரு நிமிஷம் தன் வயிற்றில் கை வைத்து வருடி விட்டவள் சிரித்து கொண்டே  என்னோட தேவ் உனக்கு நான் சூப்பர் gift வச்சு இருக்கேன்.

கண்டிப்பாக என் மனசு சொல்லுது உன்னோட சேட்டை பிடிச்ச பொண்ணு அப்டி இல்லனா பையன் என்னோட வயிற்றில் 

இன்னும் 2 நாள் தேவ் நான் போய் செக் பண்ணிட்டு வந்து உனக்கு ப்ரொபோஸ் பண்ணுவேன் சூர்யா செல்லம் 

அப்புறம் நாம்ப 3பேர் ஆகிடுவோம் செம்மையா இருக்கும் என்று இவள் சந்தோஷமாக இருந்தாள்.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவள் சூர்யாவை விட்டு பிரிந்து செல்ல போகிறாள்.

ராம், கீதா , ஹரிணி, சூர்யா, மகிழினி, சத்ய தேவ் என அனைவரும் பள்ளி கிளம்பினர்

இனி சத்ய தேவ் ஸ்கூல் போக போகிறான் மகிழினி தான் அனைத்தும் ஏற்பாடு செய்தாள்.

அப்பா இந்த மகி என்ன bad girl ஸ்கூல் ல join பண்றா 

சக்தி அப்பா கிட்ட அடி வாங்க போற

எதுக்கு நீ அம்மாவை பேர் சொல்லி கூப்பிடற

விடுங்க அவன் கூப்பிடடும்  எப்படியும் நானும் சக்தியும் பார்க்க அக்கா தம்பி போல் இருப்போம்.

சூர்யா அவளை பார்த்து முறைத்தவன்

நீ இன்னொரு குழந்தை க்கு அம்மா ஆக போற 

நீ சக்திக்கு அக்கா என்னால இதை எல்லாம் கேட்க முடியல டி

இதை கேட்டதும் மகிழினி அமைதியானாள் என்ன டி silent ஆகிட்ட

ஒன்னும் இல்லைங்க

சொல்லு மகி என்று அவன் கேட்க அதற்குள் ஸ்கூல் வர மகிழினி ,சூர்யா,  சக்தி,  ஹரிணி ராம், கீதா  என அனைவரும் பள்ளிக்கு சென்று சத்ய தேவ் க்கு பள்ளியில் சீட் வாங்கினர்

இப்போது அனைவரும் வெளியே வர முதலில் ராம், கீதா அவர்கள் காரில் செல்ல சக்தி ஹரிணி கூட friend ஆனால் தான் ஸ்கூல் ல ஒரு சப்போர்ட் ஆ இருக்கும். என்று 

அப்பா நானும் ஹரிணியும் friend நான் ஹரிணி கூட போறேன் 

என்ன உனக்கு அவ ஹரிணி யா அக்கா சொல்லு டா என மகிழினி சொல்ல

மகி நான் ஹரிணியை கல்யாணம் பண்ணிக்க வேனும் அப்போ தான் ஸ்கூல் ல அவ ஹெல்ப் பண்ணுவா என்று சக்தி கூற

இப்போது ராம், கீதா, மகிழினி மூவரும் சூர்யாவை பார்த்தனர் .

மகிழினி முறைத்தாள்

ராம் கீதாவிடம் இப்போ தான் தெரியுது கீத்து சூர்யா எப்படி சஞ்சனா வ லவ் பண்ணான் அப்படின்னு என்று கூற

ஆமா ராம் அப்பாவுக்கு பிள்ளை தவறாமல் பிறந்து இருக்கு என்று சிரிக்க

சூர்யா மனதில் என் பொண்டாட்டி கிட்ட இருந்து என்னை பிரிக்கிறது தான்  எல்லாரும் பண்றாங்க.

மகிழினி வேகமாக காருக்குள் செல்ல சூர்யா இருவரையும் பார்த்து உங்களை  வந்து பார்த்துக்கொள்கிறேன் என கூறி விட்டு 

மகி சண்டகோழி அப்படி எல்லாம் இல்ல டி அவன் குழந்தை ஏதோ தெரியாமல் பேசிட்டான்.

ராமும், கீதாவும், ஹரிணி, சக்தியுடன் அவர்கள்  வீட்டை நோக்கி சென்றனர் அவர்களுக்கு தெரியும் சூர்யா அவளை சமாதானம் செய்து தான் அழைத்து வருவான் என்று

உங்க புத்தி தானே சக்திக்கும் வரும் என்று முகத்தை தூக்கி கொள்ள

நீ ராம், கீத்து சொல்றது எல்லாம் கேட்காத மகி என்னோட மான் விழி தானே நீ என்று அவள் அருகில் வந்து அவளை அவன் புறம் திருப்ப

இல்ல என்னை நீங்கள் ஏமாத்திடீங்க நீங்கள் fraud அப்டின்னு அவனை தள்ள

நான் எதுக்கு உன்னை ஏமாற்ற போறேன் நீ என்னோட சண்டைக்கோழி என்னோட deer விழி செல்லம் என்று அவளை கொஞ்ச அவளின் முக மாறுதல் கண்டவன் அவளை இழுத்து அவளின் உதடுகளை சிறை செய்தான். 

மீண்டும் அவள் புருவம் சுருக்க மீண்டும் அவளுக்கு ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்தவன் i love you மான் விழி என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான் .

போதும் வீட்டுக்கு போலாம்க என்று அவள் வெட்கம் கொண்டு அவள் இருக்கையில் அமர்ந்து கொள்ள 

அவனோ ஆமா மகி இங்க டிஸ்டர்ப் ஆ இருக்கு நம்ப வீட்டுக்கு போய்  விட்ட இடத்தில் இருந்து continoue பண்ணலாம் என்று கூற

அவள் பொய் கோபம் கொண்டு

ம்ம்ம்ம் ஆசை தான்

அது மட்டும் நடக்காது .

என்று மகிழினி சொல்லும்போதே ஒரு கார் வேகமாக

இவர்கள் இருக்கும் காரை மோதியதில் கார் நிலை தடுமாறியது சூர்யா 

 Episode 62,

ம்ம்ம்ம் ஆசை தான்

அது மட்டும் நடக்காது .

என்று மகிழினி சொல்லும்போதே ஒரு கார் வேகமாக

இவர்கள் இருக்கும் காரை containor மோதியதில் கார் நிலை தடுமாறியது   சூர்யா சாலையை கவனித்துக் கொண்டுதான்  அவன் காரினை ஓட்டினான்

ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென பின்னாலிருந்து ஒரு கன்டெய்னர்  ஒன்றுசூர்யா காரின் மீது மோதியது

தன்னை சுதாரித்துக் கொண்டு அவன் காரை ஓட்ட முற்படுகையில் அந்த கண்டைனர் திடீரென்று வேகமாக தள்ள நிலை தடுமாறி ஒரு மரத்தை மேல் மோதியது அங்க அருகில் உள்ள வாகனங்கள் எல்லாம் அப்படி அப்படியே நின்று கொண்டிருக்க

திடீரென்று சூர்யா மகிழினி மேல் எதுவும் அடி பட கூடாது என்று அவளை தாங்கி கொண்டான்.

ஒரு இடத்தில் கார் மோதி நிற்க உடனடியாக அந்த இடத்திற்கு வேகவேகமாக ஒரு எறும்பு வரிசையில் போல நிறைய கார்கள் வரிசைகட்டி வந்து நின்றது

சூர்யா அரை மயக்க நிலையில் கிடந்தான் திடீரென அருகில் வந்து அருகில் உள்ள மருத்துவமனை மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்ய

சூர்யாவை ஒரு படுக்கையிலும் மகிளினியை ஒரு படுக்கையிலும் அழைத்து சென்றனர்

சூர்யாவின் நெற்றியில் இருந்து ரத்தம்  வழிந்தது மகிழினி  மயக்க நிலைக்கு சென்றாள்

அவள் ஒரு பக்கம் நெற்றியில் மற்றும் கைகளில் சில கண்ணாடித் கீறல்களுடன் அவள் மயக்கத்தில் கிடந்தாள் 


இருவரும் தனித்தனியாக ஆம்புலன்சில் ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் அங்கு சூர்யாவிற்கு  ஒரு மாதிரியாகவும் முதலுதவி செய்யப்பட்டது

அங்கு  விபத்தில் சிக்கியவர்கள் யார் என  கண்டறிந்த போது தான் தெரிந்த தகவல் வைத்து தொடர்பு கொள்ள 

அந்த மருத்துவமனையிலிருந்து சூரியவுக்கு  தெரிந்தவர்களுக்கு  போன் செய்ய ராம் , ரகு, கார்த்திக், மைதிலி , ஹரிஷ் இவர்கள் அனைவரும் வேகமாக மருத்துவமனைக்கு வந்தனர்.

மை விழி ஒரு பக்கம் அழுது கொண்டு இருக்க கார்த்திக் அவளிடம் நீ போய் சக்தியை பார்த்துக்கொள் என்று அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

அப்போது டாக்டர் வெளியே வர கார்த்திக்,   என்னாச்சு டாக்டர் ,

அவங்க இப்போ மயக்கத்தில் இருக்காங்க நிறைய ரத்தம் போயிடுச்சு நாளைக்கு கண் விழித்தால் தான் தெரியும். என்று டாக்டர் கூற

கார்த்திக் அவரிடம் அந்த பொண்ணு எப்படி இருக்காங்க 

எந்த பொண்ணு என்று அவர் கேட்க 

கார்த்திக் அவரிடம் சார் ரெண்டு பேர்க்கு விபத்து நீங்க பொண்ணு பத்தி சொல்லவே இல்லை.

டாக்டர் கார்த்திக் கிட்ட

ஒருத்தர் தான் மிஸ்டர் இங்க அட்மிட் பண்ணாங்க

அதுவும் அவரு male தான் female யாரும் அட்மிட் ஆகலயே

என்று கூறி அவர் சென்றார்.

இப்போது கார்த்திக்கு என்ன செய்ய என்று ஒன்றும் புரியாமல் இருக்க

ராம் கார்த்திக் கிட்ட என்ன சொன்னாரு டாக்டர்

அவனோ ராம் சார் ஒருத்தர் மட்டும் தான் அட்மிட் ஆகி இருக்காங்க அது சூர்யா மட்டும் தானாம் மகிழினி இங்கே இல்ல அப்டின்னு சொல்றாங்க 

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று அவன் கலக்கம் நிறைந்த குரலில் கூற 

என்ன சொல்ற கார்த்திக் எப்படி இது நடந்து இருக்கும் நாம்ப வேற ஹாஸ்பிடல் ல செக் பண்ணலாம்.

வேற இடத்தில் கூட அட்மிட் பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கு நம்ப கொஞ்சம் தேடி பார்க்கலாம் என்று அவன் கூற 

ஹரிஷும் , ஆதியும் சேர்ந்து அங்கு இருக்கும் அனைத்து மருத்துவமனைகள் தேட மகிழினி எங்கும் அட்மிட் செய்ய பட வில்லை.

இருவரும் சூர்யா இருக்கும் ஹாஸ்பிடல் வர விஷயம் அனைத்தும் கூற கார்த்திக், ராம் க்கு மிகவும் கலக்கமாக இருந்தது.

என்ன செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு புறம் யோசிக்க ஒன்றும் பிடி படவில்லை.

விபத்து நடந்த இடம் மீண்டும் எப்போதும் போல அனைத்து வாகனமும் சென்று கொண்டு இருக்க 

ஆதி, ஹரிஷ் இருவரும் அலைந்து திரிந்தது தான் மீதி.

மை விழி இங்கு வீட்டில் இருந்து மகிழினி யை பார்க்க வருவதாக கூற இவனோ வேண்டாம் வேண்டாம் என்று தான் வருவதாகவும் மகிழினி நன்றாக இருக்கிறாள் என்றும்  கூறி அவளை சமாலித்தான்.

இப்படியே ஒரு நாள் கழிந்தது. சூர்யா அடுத்த நாளும் கண் விழிக்க வில்லை

ராம் உடனே இன்பராகவனுக்கு கால் செய்து அனைத்து விஷயமும் கூற இன்பா அனைத்து வேலையும் ஒதுக்கி விட்டு உடனடியாக பெங்களூர் வந்தான்.

நேராக அவன் சூர்யா அட்மிட் செய்த மருத்துவமனைக்கு வந்தான். இன்பா நேராக ராமை பார்க்க செல்ல ராம் அங்கு நடந்த அனைத்து விஷயமும் ஒன்று விடாமல் கூறினான்.

கார்த்திக் இன்பா கிட்ட டாக்டர் கூறிய விஷயம் கூறினான்.

ராம் இன்பாவிடம் இப்போ என்ன பண்றது இன்பா சூர்யா எழுந்தால் முதலில் மகிளினியை தான் தேடுவான். 

நாங்கள் என்ன  சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

இன்பா -நீங்கள் விபத்து நடந்த இடத்துக்கு என்னை ஒரு தடவை கூட்டி போங்க 

ஆதி, ஹரிஷ் இருவரும் இன்பனை விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.

ஒரு மணி நேரம் இன்பா அந்த இடத்தை சோதனை செய்தான் ஆனால் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இன்பா யாருக்கோ போன் செய்து பேசியவன் மீண்டும் சூர்யாவை வைத்து இருக்கும் ஹாஸ்பிடல் வந்தான்.

கார்த்திக்  வேகமாக அவன் அருகில் வந்து மகிய பத்தி ஏதாவது தெரிஞ்சதா என்று கண்களில் கண்ணீர் கீழ விழாமல் கேட்க

இன்பா அவனிடம் இல்லை என்று தலை மட்டும் ஆட்டினான்.

ஒரு இருக்கையில் போய் கார்த்திக் அமர்ந்து கொண்டான்.

இன்பா எப்படி யோசித்து பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை.

அருகில் உள்ள cc tv footage எதாவது அந்த விபத்து நடந்த இடத்தில வழியில் இருக்கிறதா என்று மெதுவாக ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டே வர 

ஒரு இடத்தில் இருந்தது ஆனால் அதில் சூர்யா இருக்கும் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்தது அதை இன்பா ஒரு காப்பி செய்து கொண்டான்.

இன்பா மனதில் எந்த ஒரு clue வும் கிடைக்க மாட்டிங்குது. என்ன பண்ண என்று அவன் விபத்து நடந்த இடத்திற்கே மீண்டும் வந்து நின்று யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த விபத்து நடந்த இடத்தில் உள்ள அனைத்து திசையும் ஒரு முறை செக் செய்தான். 

அந்த containor எங்கு தேடியும் கிடைக்க வில்லை . நேராக சூர்யா இருக்கும் மருத்துவமனை வந்தவன்

ராம் கிட்ட அவன் சேகரித்த விஷயம் பற்றி கூற ஆரம்பித்தான்.

இந்த விபத்து சாதாரண மாக நடக்கவில்லை, அந்த லாரி எங்கும் இல்லை

அதனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்து அப்புறம்

சூர்யாவுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா.

என்ன இன்பா சூர்யாவுக்கு யார் எதிரி அப்படி யாரும் இல்லை.

இன்பா நான் அவனோட கால் logs , லொகேஷன், gps ட்ராக்ஸ் எல்லாம் செக் பண்ண சொல்லி இருக்கேன் அதோட ரிப்போர்ட் இப்போ வந்திடும்.

அவனிடம் கார்த்திக் மகி க்கு என்னாச்சு சார் என்று சுரத்தே இல்லாமல் கேட்க

எந்த ஒரு clue யும் இல்ல கார்த்திக் 

சரி நான் ஹாஸ்பிடல் cc tv footage copy ஒன்னு வாங்கணும் அதுல எதாவது கெடைக்குதா அப்டின்னு பார்க்கலாம்.

என்று இன்பா, மித்ரனை வர சொல்லி இருவரும் தேவையான டீடெயில்ஸ் எடுத்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

முதலில் சூர்யாவின் கால்ஸ் ஹிஸ்டரி அனைத்தும் செக் செய்ய அதில் ஒரு தகவலும் இல்லை.

இன்பா ராம் க்கு கால் செய்து 

நீங்கள் எதுக்கு அங்கே போனீங்க 

சூர்யாவோட மகன் சக்தியை ஸ்கூல் ஜோன் பண்ண தான் போனோம்

இப்போ சூர்யா கிட்ட ஏதாவது அசைவு தெரியுதா

இல்ல இன்பா அப்படியே தான் இருக்கிறான்.என்று அவன் சொல்லிவிட்டு போன் வைத்தான்.

இன்பாவுக்கு இப்போது என்ன செய்ய என்று புரியவில்லை இன்பா போலீசா யோசி டா சென்டிமென்ட் fellow ஆ இருக்காத என்று மனம் சொல்ல

இன்பா இப்போது மித்ரன் கிட்ட வாடா நம்ப அந்த ஸ்கூல் க்கு ஒரு தடவை போய்ட்டு வரலாம் என்று அந்த ஸ்கூல் க்கு போய் செக் செய்ய அங்கே எதுவும் கிடைக்க வில்லை.

உடனே இன்பா வெளியே வந்து அந்த இடத்தை பார்த்தவன் எதிர் திசையில் வண்டியை ஓட்டினான்.

சென்று கொண்டே இருந்தவன் சிறிது தூரத்தில் வண்டியை நிறுத்தினான் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நின்று கொண்டு இருக்க அதன் அருகில் சென்றான்.

பின் அந்த இடத்தை சுற்றி பார்க்க எதுவும் பிடி படவில்லை. இங்கு இருந்து தான் மகிழினி யை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான்.

பெங்களூர் ல் அவனுக்கு தெரிந்த போலீசை வர வைத்து விவரங்களை கூறி கண்டு பிடிக்குமாறு சொல்லிவிட்டு  அவன் இடத்திற்கு செல்ல வண்டி எடுக்கும் போது இன்பாவுக்கு மித்ரன் கிட்ட இருந்து போன் வந்தது.

இன்பா வேகமாக மித்ரனை பார்க்க செல்ல அவன் அந்த cc tv footage ல இருந்து ஒரு சில நபர்களை சுட்டி காட்டினான்.

மித்ரன் கிட்ட இன்பா ஏய் அது தேஜு தானே அவள் என்ன பண்றா .

அவ டீன் ரூம் குள்ள போறா டா 

அப்படின்னா சூர்யா க்கு இப்படி ஆனதுக்கு காரணம் அவ தானா 

இன்பா சூர்யா அங்க இருக்கிறது safe இல்ல அவனை சீக்கிரம் வேற இடத்துக்கு மாத்தனும்.

அப்போ இதுல குரு பிரகாஷ் க்கு ஏதாவது சம்மந்தம் இருக்குமா 

இன்பா -இல்ல மித்ரன் இதுல பெரிய விஷயம் இருக்கு ஆமா மகிழினி இந்த ஆறு மாசம் அவளுக்கு வந்த கால் history அவ எங்கே போனா வந்தா அப்டின்னு எல்லாம் கலெக்ட் பண்ணு டா

என்னடா சொல்ற 

ஆமா மித்ரன் இது சூர்யாவுக்காக நடந்தது இல்ல

அப்படின்னா இது மகிழினி காக நடந்ததா என்று சொல்லும்போதே மித்ரன் குரல் நடுங்கியது.

மித்ரன் – இன்பா இப்போ அவ எங்கே டா இருப்பா 

அங்கே குரு பிரகாஷ் முகத்தில் ஓங்கி ஒரு அரை விழுந்தது.

 Episode 63, 

மித்ரன் இது சூர்யாவுக்காக நடந்தது இல்ல

அப்படின்னா இது மகிழினி காக நடந்ததா என்று சொல்லும்போதே மித்ரன் குரல் நடுங்கியது.

மித்ரன் – இன்பா இப்போ அவள் எங்கே டா இருப்பா ?

அங்கே குரு பிரகாஷ் முகத்தில் ஓங்கி ஒரு அரை விழுந்தது.

குரு கன்னங்களில் ஓங்கி ஒரு அரை விட்டான் SPR 

என்ன அண்ணயா நான் என்ன பண்ணேன் எதுக்கு இப்போ என்ன அடிசீங்க ?

நீ என்ன பண்ணி வச்சு இருக்க என்று SP கேட்க வில்லை அவனது பார்வையே கூறியது.

இப்போது குரு SP ய பார்த்து 

நீங்கள் இப்படியே அவள என்று அவன் கூற 

SP அவனை முறைத்தான்.

என்னை மன்னிச்சிடு அண்ணா

வதினாவ (அண்ணி) இப்போ விட்டு இருந்த அப்புறம்

அவங்க எப்போதும் உனக்கு கிடைக்க மாட்டாங்க.

நான் யோசித்து பார்த்தேன் அதனால் தான் தூக்கினேன் இப்போ என்ன அவங்க எப்படி இருக்காங்க.

என்று குரு பேசி கொண்டு இருக்கும்போதே அவன் கழுத்தை நெறித்தான் SP 

அ!!

ஆ!!

அண்ணா !!!

விடு என்று அவன் தெலுங்கில் கூற அவனை சுவற்றோடு அழுத்தி தூக்கி கீழ விட்டவன்.

குரு தன் தொண்டை பிடித்து கொண்டே SP யை பார்க்க 

அங்கு வந்தாள் ஷீலா  நீலா ஹெல்த் care சென்டர் ல ஒன் அப் the best டாக்டர்

ஷீலா ஒரு ரிப்போர்ட் எடுத்து குரு வின் கைகளில் கொடுத்தாள்.

சார் மேடம் pregnent ஆ இருக்காங்க 

அதனால என்ன அண்ணா அது அந்த சூர்யா குழந்தை அதை நாம்ப அழித்து விடலாம்.

அப்புறம் உனக்கும் பொம்மாயிக்கும் நம்ப நிதின் மாறி ஒரு குழந்தை பிறக்கும்.

 ஷீலா -சார் அவங்களுக்கு கரு களைந்து விட்டது என்று தேஜுவை பார்த்து கொண்டே கூறினாள்.

சூப்பர் அண்ணா இப்போ எந்த பிரச்சனையும் இல்ல என்று குரு சொல்ல

இப்போது தேஜு 

குரு அவர்களால் இனி ஒரு வருஷம் கழிச்சு தான் குழந்தை பத்தி யோசிக்க முடியும் அப்புறம் இப்போ நம்ம கொடுக்க போற drug அதாவது பழச மறக்க வைக்கிறது அவங்களுக்கு கொஞ்சம்  அபாயம் அது தான் இப்போ பிரச்சனை.

 அண்ணா இதுக்கு தான் கவலை பட்டியா முதலில் பொம்மாய நீ சொந்தமாக்கு நமக்கு தான் நிதின் இருக்கானே 

அவன் உனக்கும் பொம்மாயிக்கும் பிறந்தவன் தானே அப்புறம் என்ன என்று குரு சொல்லும்போது

தேஜு உள்ளுக்குள் மறுகினாள் கண்களில் வந்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டாள்.

SP இப்போது தேஜுவை பார்த்து

அவளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது உன்னோட பொறுப்பு

அதே போல் அவள் சுய நினைவுக்கு வந்தவுடன் அந்த சூர்யாவை மறந்து இருக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றான்.

ஷீலா தேஜுவை அழைத்து கொண்டு தங்கள் இடத்திற்கு வந்தனர்.

ஷீலாவை கட்டி கொண்டு தேஜு அழுதாள். ஷீலாவை பார்த்து

நான் எந்த விதத்தில் அவளை விட குறைந்தவள்

ஏன் இந்த sp க்கு  என்னை பிடிக்க வில்லை நான் அவரை எப்படி விரும்புகிறேன் என்னோட உயிருக்கும் மேலாக நான் அவரை விரும்புகிறேன் என்று அவள் அழ

விடு தேஜு நீ கவலை படாதே எப்படியும் சூர்யா வந்து அவளை தூக்கி செல்வான் அது கட்டாயமாக நடக்க தான் போகிறது.

இல்ல ஷீலா எனக்கு நம்பிக்கை இல்லை சூர்யாவுக்கு அந்த நினைவு இழக்கும் drug கொடுத்து இருக்கிறேன் அது குரு மேற்பார்வையில் தான் நடந்தது அதனால் எதுவும் செய்ய முடியாது.

இல்ல தேஜு அந்த drug ஒரு தற்காலிக மருந்து தான் ஒரு மாத காலம் தான் நினைவு இருக்காது அதற்குள் ஏதாவது கண்டிப்பாக செய்ய  முடியும்.

நீ சொல்றது சரி தான் ஷீலா ஆனால் இங்கே ஆந்திரா SPR கோட்டை டி எப்படி சூர்யாவால் முடியும்.

சூர்யா கூட இன்பா இருக்கிறான் நான் அவனை பற்றி படித்து இருக்கிறேன் கண்டிப்பாக அவனுடைய உதவியில் அவளை வந்து சூர்யா கூட்டி செல்வான்.

ஆமா எனக்கு ஒரு சந்தேகம் நீ எதுக்கு அவள் குழந்தை கரு கலைந்து விட்டது என்று சொல்ல சொன்ன  என்று ஷீலா கேட்க

இல்ல ஷீலா அவளுக்கு அந்த drug கொடுத்தால் அவள் மறந்து விடுவாள் இப்போது SPR கூட அவள்  சேர முடியாது

இந்த குழந்தை காரணம் காட்டி பிரித்து விட வேண்டும்

அதனால் தான் நான் உடல் அளவில் அவளுடன் சேர கூடாது என்றும்

குழந்தை இல்லை என்றும் கூறினேன் நான் குழந்தை இருக்கிறது என்று சொன்னால் இந்த

குரு அவள் குழந்தை யை அழித்து விடுவான். அந்த குழந்தை தான் அவளை SPR கிட்ட இருந்து காக்க போகிறது.

ஆனால் நீ அப்படி power ful ஆ அந்த drug prepare பண்ணவே இல்ல தானே

ஆமாம் இது சூர்யாவுக்கும் இவளுக்கும் கொடுத்தது ஒன்னு தான் ஆனால் அதோட வீரியம் வேற

ஆம் ஷீலா அது ஒரு temporary தான் ஆனாலும் அவளுக்கு அது கொஞ்ச காலம் தாக்கு பிடிக்கும்

இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்று தேஜு கேட்க

அவளுக்கு இப்போது தான் bleeding கொஞ்சம் தான் வந்தது மருந்து அதை நிறுத்தி இருக்கிறது

இது கடவுள் துணை தான் இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்தால் கூட அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது.

தேஜு ஷீலா கிட்ட இந்த

ஒரு மாதமும் அவளை கோமா ஸ்டேஜ் ல maintain பண்ணு அதுக்கு அப்புறம் அவளை

நாம் SPR castle க்கு நான் கூட்டி போறேன் நீயும் முக்கியமா வரனும் ஷீலா அவளை ரொம்ப care ஆ பார்த்து கொள்ளனும்

இவளை வச்சு தான் நான் SPR ஆ என் வழிக்கு கொண்டு  வரனும்.

யாருக்கும் சந்தேகம் வர கூடாது அவள் மாசமாக இருப்பது யாருக்கும் தெரிய கூடாது.

ஷீலா எனக்கு SP கெடைப்பானா என்று அவள் அழுது கொண்டே கேட்க அவள்

நீ கவலை படாதே SP உனக்கு தான் என்று பொய் ஆறுதல் கூறினாாள்.

அவனை பற்றி அனைவருக்கும் தெரியும் sp மனதில் இருப்பது ஒருத்தி மட்டுமே அதுஅவன் பொம்மாயி 

இங்கு சூர்யாவின் வீட்டுக்கு வந்த இன்பா, மித்ரன், ஆதி, கார்த்திக் , ராம் மூவரும் வீட்டில் எதுவும் டீடெயில்ஸ் கிடைக்குமா என்று வீட்டை அலசி ஆராய்ந்தனர்.

ரகுவும், ஹரிஷ் ம் சூர்யாவை பார்த்து கொள்ள ஹாஸ்பிடல் ல இருந்தனர்.

அவர்கள் வீட்டின் அனைத்து இடங்களிலும் தேட கார்த்திக் சூர்யா மகிழினி படுக்கை அறை உள்ள அலமாரியில் தேடும்போது அந்த மகிழினி புகைப்படம் பார்த்து அவன் கண் கலங்கியது.

என்னோட மகி இப்படி இப்போ கஷ்ட படுகிறாளே இதற்கு நானும் ஒரு காரணம் தான் இப்போது அவள் எங்கு இருப்பாள் என்று நினைத்து   நெஞ்சு குமிறினான்.

இன்பா, ஆதி, ராம் மூவரும் அந்த புகைப்படத்தை பார்த்து இந்த அளவுக்கு  விரும்பி இப்படி ஒரே நாளில் இவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டதே என்று வருத்தம் கொண்டனர்.

அப்போது கார்த்திக் ஒரு இடத்தில் இருந்து கட்டுகளாக நிறைய கடிதம், லெட்டர் எடுத்து பார்த்து அதனை இன்பாவிடம் கொடுத்தான்.

ஆதி, இன்பா, மித்ரன் மூவரும் அதை பிரித்து பார்க்க அனைத்தும் அதில் பாதி

SPR கார்ப்பரேட்ஸ்,

மீதி நீலா ஹெல்த் car சென்டர் என்று இருந்தது.

உடனே ஆதி இன்பா கிட்ட 

சார் மகி என்கிட்ட ஒரு விஷயம் சொன்ன அவ படிச்சு முடிச்சதில் இருந்து காலேஜ் ல இவங்க  செட் க்கு மட்டும் அடிக்கடி reunion condect பண்றாங்க அதுவும் காலேஜ் ல இருந்துன்னு சொன்னாள்.

அப்புறம் ஒரு நாள் pg பண்றதுக்கு வந்து join பண்ணுங்க அப்டின்னு சும்மா போன் பண்றாங்க அப்டின்னு சொன்னா.

இன்பா கண்டுகொண்டான் இதற்கு அர்த்தம் என்ன என்று

ராம் இன்ப கிட்ட 

எங்களுக்கும் தான் நீலா ஹெல்த் care ல இருந்து 6 moths ஒன்ஸ் செக் பண்றாங்க இதுல என்ன சம்மந்தம் இருக்கு மகி காணாமல் போக

ராம் கிட்ட இன்பா 

இது உனக்காக வைக்கிற செக் up இல்ல மகிழினி ய செக் பண்ண என்று அவன் கூற

இப்போது கார்த்திக்,  ஆதி, ராம் மூவரும் ஒரு அதிர்ச்சி அடைந்து பார்த்தனர்.

கார்த்திக் பேசினான் . 

என்ன சார் சொல்லறீங்க நீங்கள் புதுசு புதுசா எது ஏதோ சொல்லறீங்க என்று கண்ணீர் அடைத்து கொண்டு கார்த்திக் கேட்க

ஆமாம்  கார்த்திக் இதுல இன்னும் நிறைய விஷயம் இருக்கு மகிழினி ய பத்தி இன்னும் எனக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

ராம் கார்த்திககை பார்க்க அவன் இன்பா கிட்ட அவனுக்கு தெரிந்த அனைத்தும் கூறினான்.

அவள் படிச்சது அரசு பள்ளி

ரொம்ப அறிவான பொண்ணு 

அவள் நல்லா பாடுவா,

ஆடுவா, 

கணினி அறிவு ரொம்ப அதிகம்  

இன்பா அவனை பார்த்து அவ்ளோ தானா வேற ஒன்னும் இல்லயா

அவ்ளோ தான் சார் 

முழுவதும் சொல்லுங்க கார்த்திக் நான் போலீஸ்காரன் 

கார்த்திக் ஒரு நிமிடம் அமைதிக்கு பின் 

சார் நான் மகிய விரும்புனேன் என்று சொல்ல ஆதி அவனை வாயடைத்து பார்த்தான்

கார்த்திக் எல்லாவற்றையும் கூறினான் . இறுதியில் 

சார் மகிக்கும் எனக்கும் ஒரே அலர்ஜி அந்த treatment கூட நாங்க அந்த நீலா ஹாஸ்பிடல் தான் பார்த்தோம் என்று கூறினான்.

மித்ரன் இன்பாவிடம் இதுக்கு எல்லாம் அந்த குரு தான் இன்பா காரணம் இப்போ மகிழினி எப்படி இருக்காங்க அப்டின்னு தெரியலையே.

இல்ல மித்ரன் முழுவதும் தெரியாமலேயே முடிவு எடுக்க கூடாது.

இன்பா இப்போது ஆதியை பார்க்க அவன் மகிழினி கல்லுரி காலங்களில் நடந்ததை கூற ஆரம்பித்தான்.

அதை கேட்க கேட்க மித்ரனுக்கு , இன்பாவுக்கும் ஒரு கணம் தூக்கி வாரி போட்டது!

 அப்படி ஆதி என்ன சொல்லி இருப்பான்????

மகிளினிக்கு சூர்யாவின் நினைவுகள் மறந்து போகுமா?

spr யை மகிழினி விரும்பி இருப்பாளா?

இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் நீந்துகின்ற வெண்ணிலா

Episode 64,

இல்ல மித்ரன் முழுவதும் தெரியாமலேயே முடிவு எடுக்க கூடாது என்று இன்பா கூறினான்.

இன்பா இப்போது ஆதியை பார்க்க அவன் மகிழினி கல்லுரி காலங்களில் நடந்ததை கூற ஆரம்பித்தான்.

அதே சமயம் இங்கு spr அவளின் படங்கள் , இவன் சேகரித்து வைத்த அறைக்கு சென்றான்.

Sp இன் நினைவுகள் அவளை முதன் முதலில் சந்தித்த நிகழ்வுக்கு மனம் கொண்டு சென்றது.

சில வருடங்களுக்கு முன்

நீலா மருத்துவமனை என்பது ஒரே ஒரு கிளையாக தான் இருந்தது.

அந்த நேரத்தில் தான் எதிர் பாராமல் ராணுவத்தில் ஒரு போரில் எதிரிகளை தாக்கும் போது திடீரென நடந்த ஒரு பனி சரிவில் மாட்டிக்கொண்ட sp

ஒரு மூன்று நாட்களுக்கு பின் சில மீட்பு படை குழுவினர் உதவியுடன் உயிர் பிழைத்து கொண்டு வர பட்டான்.

ஆனால் அவனது இடுப்புக்கு கீழ் கால்கள், செயல் இழந்து போனது தனியாக நடக்க முடியாது பக்கவாதம் வந்தது போல் அடுத்தவர் உதவியை நாடி இருக்கும் நிலை வந்தது.

ஒரு ஆறு மாதம் மருத்துவம், பிசியோதெரபி என அனைத்தும் செய்தும் நடை பிணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

அப்பொழுது தான் sp இன் அத்தை மாயா அவனை வற்புறுத்தி சில புது புது பிசியோதெரபி கருவிகள் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் குழுக்கள் நீலா மருத்துவ மனைக்கு வர வைத்து sp யை அழைத்து சென்றார்.

Sp wheel chair வண்டியில் அமர வைத்து அழைத்து சென்றார். அப்பொழுது அந்த மருத்துவ மனை மருந்தின் நெடி இது எதையும் பிடிக்காமல் தன்னையே வெறுத்து அங்கு இருந்து தனியாகவே அந்த வண்டியை இயக்கி கொண்டு செல்ல

ஒரு இடத்தை வார்ட் பிரிவை கடக்கும் நேரத்தில் ஒரு நர்ஸ் ஒரு பெண்ணிடம் பேசும் உரையாடல் கேட்டு அந்த இடத்திலேயே நின்று விட்டான்.

அந்த  பெண்- அப்பா நீங்கள் கவலை பட வேணாம் நான் நன்றாக இருக்கிறேன் பாருங்கள் உங்களிடம் நன்றாக தானே பேசுகிறேன்.

எதற்காகவும் நீங்கள் என்னை பற்றி கவலை பட கூடாது இது சாதாரண ஒரு சின்ன அலர்ஜி தானே என்று கொதிக்கும் காய்ச்சலில் தன் அப்பாவுக்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தாள் அந்த பெண்.

இல்ல டா மா இது எதனால் வருகிறது என்றே தெரியவில்லையே நீ கஷ்ட படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

அந்த பெண்- எனக்கு தான் உயிர் இருக்கிறதே நீங்கள் எதற்கு அப்பா கவலை படுகிறீர்கள். என்று சிரித்து கொண்டே தன் அப்பாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள் அவள்.

அவளது அப்பாவை மருத்துவர் அழைக்க அவர் சென்றவுடன் அருகில் ட்ரிப்ஸ் மாற்ற வந்த nurse மாற்றி செல்வதற்கு முன்

அந்த பெண்ணை பார்த்து ஏன் அம்மா நீ சிரித்து கொண்டு இருக்கிறாய் உனக்கு temperarture கூட இது வரை இல்லாத அளவு அதிகமாக இருக்கிறது.

உன் முகத்தில் கை காலில் அந்த சிவப்பு அச்சு பரவி கொண்டே இருக்கிறது உனக்கு வலிக்க வில்லையா கஷ்டமாக இல்லயா.

அந்த பெண்- இல்லை அக்கா எனக்கு வலிக்கவில்ல எனக்காக என் அப்பா வருத்தம் கொள்வது தான் வலிக்கிறது.

என்னை பார்த்து யாரும் பரிதாபமாக பார்க்க கூடாது அது என் அப்பாவுக்கு கஸ்டத்தை கொடுக்கும்.

என்று சின்ன வயதில் இவ்வளவு முதிர்வு

தன் தந்தை மீது கொண்டுள்ள பாசம் என அந்த பெண்ணின் பேச்சு sp யை வெகுவாக கவர்ந்தது.

Sp அவள் முகத்தை பார்க்க வில்லை .நேராக அவன் தன் அத்தை மாயாவை காண சென்றான்.

Sp இன் காதுகளில் நான் உயிருடன் தான் இருக்கிறேன் ! சாக வில்லயே என்ற அந்த வரிகள் மட்டும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்தது.

அந்த வரிகளை நினைத்து கொண்டே மனதிலும் உடலிலும் புது ரத்தம் பாய உத்வேகம் கொண்டு,

அடுத்த ஆறு மாதத்தில் முழுவதுமாக சூர்யா பிரகாஷ் ரெட்டி இப்போது இன்னும் கம்பீரமாக தயராகினான்.

இறுதியில் ஒரு மருத்துவ செக் up க்கு செல்ல டாக்டர் உங்களுக்கு எந்த குறையும் இல்லை ஆனால் பெண்களின் மேல் ஈர்ப்பு உங்களுக்கு தோன்ற வாய்ப்பு குறைவு என்று இந்த விஷயம் கேட்டு அவன் மிகவும் அவமானமாக உணர்ந்தான். 

அப்படி நடக்க வாய்ப்பே இல்ல 

Never 

Never என்று ஒரு பைத்தியகாரனை  போல அவன் கத்த

மருத்துவர் அவனை பார்த்து 

மிஸ்டர் சூர்ய பிரகாஷ் இது நிரந்தரமானது இல்ல.

தற்காலிகமான ஒன்று தான் இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று அவர் சொல்ல

என்ன சொல்லறீங்க டாக்டர்

ஆமாம் இது நிரந்தரமானது இல்ல இப்போ இருக்க உடல் நிலையை வைத்து தான் நாங்கள் கூறினோம்.

அதுவும் இது ஒரு அதிசயம் தான் குறுகிய காலத்தில் மிக பெரிய ஒன்றில் இருந்து நீங்கள் மீண்டு வந்து இருக்கிறீர்கள் என்று டாக்டர் சொல்ல

இது எப்போது சரி ஆகும்.

ஆறு மாதம் கழித்து மீண்டும் செக் செய்து பார்க்கலாம் நீங்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

Sp மனதில் உறுத்தியது.

அதில் இருந்து அவன் மனம் மிகவும் சஞ்சலமாக இருந்தது. 

அந்த பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது அவன் மனதில்

அவளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதில் கேட்டு கொண்டே இருந்தது.

sp யும் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.

ஆனால் அவனுக்கு தெரியாமல் அந்த பெண்ணின் மீது மனதில் ஒரு இடம்  உருவானது.

இப்படியே ஒரு மூன்று மாதங்கள் செல்ல sp யின் மனதில் இடம் பிடித்த விழி அவள் SPR institution ல கல்லூரியில் படிக்க காலடி எடுத்து வைத்தாள்.

அன்று முதன் முதலில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் அனைவரையும் வரவேற்க்க fresher’s dat , celebration நடக்க கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் அழைக்க பட்டனர்.

எல்லா மாணவர்களையும்  கல்லுரி நிர்வாகம் வரவேற்பு செய்ய மாணவர்கள் , மாணவிகள் தங்களுடைய பிடித்தமான திறமைகளை வெளிப்படுத்த

அவள் வந்தாள். யார் அவள்?

அவள் தான் மகிழினி என்கிற மான் விழி அவள் மேடை ஏறும் தோரணையே அனைத்து மாணவர்களையும் மயக்கியது என்று சொல்லலாம்.

அந்த ஊதா நிற தாவணி ,

தலையில் ஒரு 6 மொட்டு மல்லிகை,

திருத்தம் செய்யாத புருவம்,

வலது கன்னத்தில் குட்டி மச்சம்,

கூர் மூக்கு,

முகத்தில் எப்போதும் வந்து அவளை சீண்டும் முடி கற்றை ,

அந்த அதரங்கள் ஒரு உதடு நாவல் பழமும், கீழ் உதடு செர்ரி பழம்,

இடுப்புக்கு கீழ் வரை கூந்தலை பின்னல் இட்டு

முகமெல்லாம் புன்னகையுடன் mike அருகில் வந்து நின்றாள் மகிழினி.

அப்போது தான் sp யும் , குரு பிரகாஷ் உம் காலேஜ் நுழைவு வாயிலில் வந்து கொண்டு இருந்தனர்.

இன்பாவிடம் ஆதி கூற ஆரம்பித்தான் ,

இதேயே தான் SPR யும் மனதில் நினைத்து கொண்டு இருந்தான்.

மகிழினி இங்கு mike பிடித்து பாட ஆரம்பித்தாள்.

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்க வில்லயே

இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கிறது

யாரும் சுகிக்க வில்லயே

என்று இவள் அந்த பாடல்  முழுவதும் பாட சூர்ய பிரகாஷ் ரெட்டி இவள் குரலில் மயங்கி தான் போனான்.

அவன் மட்டும் அல்ல அந்த அரங்கம் முழுவதையும் தன் குரலாலும் தன் கண்களினாலும் அனைவரின் மனதையும் கொள்ள கொண்டாள் மான் விழி(மகிழினி).

Sp இன் கால்கள் தானாக அரங்கம் இருக்கும் திசை நோக்கி சென்றது. குரு அவன் பின்னால்

அண்ணா,

அண்ணா, என்று கூப்பிட்டு கொண்டே சென்றான் ஆனால் அவன் நிற்க்க வில்லை.

நேராக அரங்கத்தின் வாயிலில் யார் அந்த குரலுக்கு உரிமையானவள் என்று sp போய் பார்க்க.

குரு அவன் எங்கு பார்கிறான் என்று திரும்ப அவனும் அவளை ஒரு முறை பார்த்தான்.

நம் அண்ணா முதலில் ஒரு பெண்ணை இவ்வாறு பார்கிறானே யார் அந்த பெண் என்னும் ஆவல் தான்

Sp யை அங்கு கண்டதும் அங்கு உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் அவன் மீது உள்ள பயத்தின் காரணமாக எழுந்து நிற்க 

குரு அவர்கள் அனைவரையும் அமருமாறு கூற அப்பொழுது தான் மகிழினி அந்த பாடலை நிறைவு செய்தாள்.

இப்போது அரங்கில் உள்ள அனைவரும் அவளை ரசித்து பார்ப்பதை பார்த்த spr க்கு மனதில் இனம் புரியாத கோபம் வந்தது.

அவன் மனதில்,

அவள் என்னுடைய பொம்மாயி!

உடனே அரங்கில் அனைவரும் கைகளை தட்டி அவளுக்கு ஊக்கம் கொடுத்தனர் புன்னகையுடன் அன்ன நடை இட்டு ஜெனியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

ஆனால் மகிழினி க்கு தெரியவில்லை இங்கு அவள் SPR மனத்திலும் அமர்ந்து கொண்டாள் என்று

குரு SP கிட்ட 

என்ன அண்ணா அவளை அப்படி பார்க்கிற என்று மகிழினி யை மரியாதை இல்லாமல் பேச spr அவனை முறைத்தான்.

 குரு அவன் அண்ணாவின் பார்வைக்கு உண்டான அர்த்தம் புரிந்து கொண்டு 

சரி வா போகலாம் என்று அந்த அரங்கத்தின் உள்ளே நடக்க அங்கு இருந்த பெண்கள் கூட்டம்  அனைத்தும் spr , குரு பிரகாஷை பார்க்க அவள் மட்டும் ஜெனி கூட தன் கண்களை உருட்டி உருட்டி பேசி கொண்டு இருக்க,

Spr மனம் முதன் முதலில் அவள் தன்னை பார்க்க வேண்டும் என்று அவள் எழுந்தது. ஆனால் இன்னொரு மனம் அந்த மருத்துவ மனையில் சந்தித்த பெண்ணின் நினைவு வந்து வந்து போக 

உடனே அவன் அந்த பெண்ணை முதலில் கண்டறிய வேண்டும். என்று கூற அது இவளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்  என்று மனம் கூறியது.

Sp மகிளினிய நினைத்து மூழ்க

ஆனால் இங்கு இன்னொருவள் அவனை நினைத்து கற்பனை கடலில் மூழ்கி கொண்டு இருந்தாள்.

யார் அவள்?????

அடுத்து என்ன நடக்கும் தொடர்ந்து படிங்க  கதை எப்படி இருக்கிறது என்று கமெண்ட் பண்ணுங்க

 Episode 65, 

ஆதி இன்பாவிடம் மகிழினி கிட்ட முதன் முதலில் பேசியது பற்றி கூற ஆரம்பித்தான்.

அந்த freshers day பொறியியல் கல்லூரி, மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஒன்றாக தான் நடந்தது.

அந்த நிகழ்வுக்கு பின்  ஆதி ப்ரொஜெக்ட் தொடர்பாக லைப்ரரி செல்லலாம் என்று சென்றான்.

அந்த SPR இன்ஸ்டிடியூட் ல யே மிகப்பெரிய லைப்ரரி அது தான் அது பொறியியல் கல்லூரியில் இருக்கிறது.

அதில் கணினி வசதி, வலை தள வசதி,  அங்கு இருக்கும் அனைத்து புத்தகங்களும் மேலை நாட்டு அறிவியல் எழுத்தாளர் புத்தகங்கள் அங்கு புதிதாக வரும் புத்தகங்கள்  soft copy கிடைக்கும் அங்கு சென்று படித்து கொள்ளலாம்.

அதிகமாக பொறியியல் மாணவர்கள் தான் அதை பயன்படுத்துவர் அவர்களுக்கே சில கட்டு பாடுகள் இருக்கும்.

அனைத்து ஆசிரியர், பேராசிரியர் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாஸ் வைத்து புத்தகம் எடுத்து கொள்வர்.

ஆதி நேராக உள்ளே சென்று அவனுடைய id காட்ட ஆதி B.E இறுதி ஆண்டுcomputer science நேராக அவர்கள் துறை பிரிவுக்கு செல்ல அங்கு மகிழினி அவளுக்கு தேவையான புத்தகம் எடுத்து கொண்டு அதனை புரட்டி கொண்டே  தேடி கோண்டு இருந்தாள்.

ஆதி அவளை பார்க்க வில்லை அவனுக்கு தேவையான புத்தகம் அவன் தேட அதற்குள் மகிழினி அந்த புத்தகம் எடுக்க

ஆதி அவளை அழைத்தான்

ஹே girl என்று ஆதி கூப்பிட மகிழினி திரும்பவே இல்லை

மீண்டும் girl என்று மெதுவாக அழைக்க அப்போதும் அவள் பார்க்கமல் இருக்க

லாங் ஹேர் பொண்ணு (long hair ) என்று இவன் அருகில் சென்று கூப்பிட சட்டென்று திரும்பி பார்த்தவள்.

ஆதி யை பார்த்து திரு திரு வென முழித்தாள்

ம்ம்ம் சொல்லுங்க அண்ணா என்று மிகவும் மெதுவாக கூறினாள்.

இல்ல அந்த புக் கொஞ்சம் எனக்கு தரமுடியுமா அதை எடுக்க தான் நான் வந்தேன் அதுக்குள்ள நீங்கள் எடுத்துகிட்டிங்க

இல்ல அண்ணா எனக்கு வேனும்

இல்ல girl எனக்கு ப்ரொஜெக்ட் இருக்கு மா நான் பைனல் year படிக்கிறேன் .

மகிழினி கண்கள் மின்ன என்ன topic அண்ணா என்று கேட்க

ஆதி மனதில் இதை ஏன் இவள் கேட்கிறாள் சரி சொல்லுவோம் நமக்கு புக் வேண்டும் என்று 

அவனுடைய topic கூற

மகிழினி வேகமாக சென்று இன்னும் இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்து ஆதி கைகளில் கொடுக்க

என்ன இது 

உங்க topic க்கு ஏற்ற புக் இது தான் என்று கொடுக்க 

அவன் அந்த புக் ஓபன் செய்து சும்மா இவள் ஏதோ கூறுகிறாள் என்று  கொஞ்சம் அசால்ட்டாக பார்க்க

ஆதி அதிர்ந்தான்

அவன் தலைப்புக்கு ஏற்ற புக் தான் இது

அந்த புக் மற்றும் மகிழினி முகம் என்று மாறி மாறி பார்த்தவன்

அவளை பார்த்து நீங்கள் இங்க

pg MBA பண்றீங்களா  என்று கேட்க

மகிழினி அவள் வாயின் மேல் கைகளை வைத்து அமைதி இது லைப்ரரி என்று சைகை செய்தாள்.

ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை யார் இவள் இவளை இதற்கு முன் பார்த்ததே இல்லையே என யோசித்து கொண்டே

மகிளினியை போலோ செய்தான். அவள் புத்தகம் எடுத்து கொண்டு அங்கு சரஸ்வதி என்ற பெயரில் ID காட்ட

ஆதிக்கு இன்னும் அதிர்ச்சி

இப்போது இன்பா ஆதி கிட்ட யார் அந்த சரஸ்வதி என்று கேட்க

ஆதி அவனிடம் சார் உங்களுக்கு அவரகளை தெரியும் தானே சஞ்சனா அம்மா என்று கூற

ஓ சஞ்சனா அம்மா அந்த காலேஜ் ப்ரொபஸ்ஸோர் ஆஅ இது முன்னவே எனக்கு தெரிந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று இன்பா மனதில் நினைத்து கொண்டான்.

ம்ம்ம் continoue பண்ணுங்க ஆதி

ஆதி வெளியே வந்து மகிழினி யை தேட அவள் வேகமாக நடந்து சென்றாள்.

ஹலோ என்று ஆதி கூப்பிட்டு கொண்டே மகிழினி பின்னால் ஓடினான்.

அவள் திரும்பவில்லை 

ஹலோ long hair பொண்ணு கொஞ்சம் நில்லு மா என்று மூச்சு வாங்க அவள் அருகில் போய் நிற்க

மகிழினி அவனை பார்த்து திரு திரு வென முழித்தாள்.

ஆதி அவளிடம் 

நீங்கள் எந்த துறை, எந்த ஆண்டு என்று கேட்க

மகிழினி இவனை பார்த்து திரும்ப அதே கேள்வி கேட்டாள்.

ஆதி, நான் B.E cs final year

ஓ நான் UG cs 1 st year

என்ன 1st year ஆ

ம்ம்ம் ஆமா

அப்போ உன்கிட்ட எப்டி அந்த மேடம் id என்று ஆதி கேட்க

அவங்க தான் என்னோட இன்ச்சார்ஜ்

என்ன

அவங்களா அவங்க arts and science  காலேஜ் தானே

ம்ம்ம் ஆமா

அப்போ நீ arts and scienceஆஅ

ம்ம்ம் ஆமா என்று மகிழினி கூற

உனக்கு எப்படி அந்த புக் பத்தி தெரியும்

இல்ல அண்ணா அந்த அளவுக்கு தெரியாது எனக்கு கொஞ்சம் இன்டெர்ஸ்ட் சரி நான் கிளம்புறேன்.

இரு girl நீ எந்த பஸ் ? மகிழினி ஆதி கிட்ட

நீங்கள் எந்த பஸ்?

நான் 16 என ஆதி கூற,

நான் 20 B.

“ஓ! சூப்பர் நம்ப ஒரே area ஜூனியர்”  ,என்று ஆதி சிரித்து கொண்டே

நீ எந்த ஸ்கூல்?

நான் govt ஸ்கூல்?

நீங்கள் என்று மகிழினி கேட்க ஆதி சொன்ன பள்ளியின் பெயர் கேட்டதும் அவனை பார்த்து சிரித்து கொண்டே

அண்ணா என்னோட தங்கையும் அந்த ஸ்கூல் தான்

யாரு உன்னோட தங்கை

அவ பெயர் மை விழி என்று கூற

அந்த சிடுமூஞ்சி  உன்னோட தங்கையா என்று ஆதி கூற

மாகிளினி கோபம் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றாள்.

Sorry sorry நிஜமாவே உன் தங்கை அப்டி தான் சுத்துவா  நல்லா வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவா எனக்கு தெரியும் .

சரி ok அண்ணா bye என்று அவள் கிளம்ப ஆதி யும் அவளோடு வந்தான்.

இப்போ நீங்கள் எதுக்கு என் கூட வரீங்க

இல்ல விழி நான் சரஸ்வதி மேடம் பார்க்க வரேன் அவங்க கிட்ட தான் ப்ரொஜெக்ட் பண்றேன்.

இப்போ என்ன சொல்லி கூப்பிடீங்க 

விழி ன்னு சொன்னேன் ஏன் சொல்ல கூடாதா

ம்ம்ம் எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

என்ன பேர் அது

என்னோட name மான் விழி என்னோட அப்பா எனக்கு வச்சது என்று மகிழினி முகம் ஒரு நிமிடம் சோகத்தில் மூழ்கியது.

சரி மா வா போகலாம் என்று இருவரும் சரஸ்வதி யை பார்க்க சென்றனர்.

அடுத்து அந்த ஒரு வருடமும் பேசி இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறினர்.

SPR இந்த ஒரு வருடமும் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தது அதனால் அவன் அதிகமாக காலேஜ் செல்ல வில்லை.

குரு எல்லா பொறுப்புகளையும் ஏற்று கொண்டான். 

மகிழினி, ஆதி, ஜெனி மூவரும் இணை பிரியாத நட்பு ஆகினர்.

ஆதி MBA ஆர்ட்ஸ் and science காலேஜ் ல வந்து சேர்ந்து கொண்டான். ஏன் என்றால் மகிழினி , ஜெனி யை விட்டு அவனால் இருக்க முடியவில்லை அப்பொழுது இருந்து இன்று வரை மூவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இங்கு SPR மகிழினியை படுக்க வைக்க பட்டு இருந்த அறைக்கு வந்தவன் அவளது முகத்தை பார்த்தவன் அவளது நெற்றியில் இரண்டாவது முத்தம் பதித்தான்.

அது என்ன இரண்டாவது முத்தம் அப்போது முதல் முத்தம் எப்போது கொடுத்து இருப்பான் மகிளினிக்கு இது தெரியுமா

அதை அப்புறம் பார்ப்போம் இப்போது spr மனம் அவளிடம் முதன் முதலில் பேசியது நினைவு வந்தது.

இரண்டாம் ஆண்டு மகளீர் தின சிறப்பு விழாவில் தன் அத்தையுடன் முதலில் குரு, மாயா வர 

முதலில் spr நேராக நீலா மருத்துவமனை சென்று அந்த பெண்ணின் விவரம் கேட்க அங்கு உள்ள பணியாளர் யாருக்கும் அது எந்த நோயாளி என்று தெரியவில்லை.

அங்கு உள்ள அனைவரும் நடுங்கி கொண்டே சார் கொஞ்சம் நேரம் தாருங்கள் நாங்கள் பார்த்து சொல்கிறோம் என்று சொல்ல

அவர்களை பார்த்து மிரட்டும் தொனியில்

இன்னும் சரியாக அரை மணி நேரம் 

அரை மணி நேரம் மட்டும் தான் என்று அழுத்தம்  கொண்டு வார்த்தைகளை கத்தி போல சொல்லி விட்டு நேராக காலேஜ் கிளம்பினான்.

பாடல், நாடகம், நடனம் என அனைத்தும் தெலுங்கில் இருக்க மகிழினி க்கு சுத்தமாக பிடிக்க வில்லை என்று  சொல்ல முடியாது கட்டாயத்தில் எதுவும் செய்ய கூடாது என்று நினைப்பவள் .

அதனால் அவள் ஒரு தமிழ் பாடல் தேர்வு செய்து ஆட தன்னை தயார் செய்து கொண்டு அவள் நேரம் வரும் வரை காத்து இருந்தாள்.

அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பாட்டின் பெயரை ஒரு சிறிது நேரம் பார்த்து விட்டு என்ன செய்ய என்று முழிக்க

அனைத்து மாணவர்களும் கத்த தொடங்கினர் அந்த தொகுப்பாளர் அந்த பாடலின் முதல் வரியை கூறி கொண்டு செல்ல

அனைத்து மாணவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

போச்சு யாரு அந்த பொண்ணு இது வரை இந்த மாறி ஒன்னு நடந்ததே இல்ல நான் இதே கல்லூரியில் தான் படித்து இதே கல்லூரிக்கு வந்து பணி ஆற்றுகிறேன்.

ஆனால் இந்த பெண் இவளுக்கு தேவை இல்லாத வேலை என்று அங்கு இருந்த ஆசிரியர், பேராசிரியர் என அனைவரும் சலசலப்பு கொண்ட பேச 

அப்போது நுழைவு வாயிலில் அழுத்தமான காலடி சத்தம் கொண்டு SPR உள்ளே வந்தான்.

அவனை கண்டதும் கிட்ட தட்ட அரங்கமே ஒரு நிமிடம் மிகவும் அமைதியாக இருந்தது.

நேராக அவன் மாயாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டு நேரத்தை எண்ண ஆரம்பித்தான்.

ஏன் என்றால் அரை மணி நேரத்தில் அந்த பெண் யார் என்று தெரிந்து விடும் SPR க்கு இருப்பு கொள்ள வில்லை.

Spr இவ்வாறு யோசித்து கொண்டு இருக்க அவன் நினைத்த பெண் அவன் முன்னால் வந்து நின்று ஆட தன்னை தயார் படுத்தி கொள்ள அது வரை அவன் பார்க்கவே இல்ல

சரியாக அப்போது பாடல் ஒலி கேட்க spr நிமிர்ந்து அந்த பாடலை முதலில் கேட்க அவனுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு

ஆனால் இங்கு குரு அவனுக்கு சுத்தமாக  பிடிக்க வில்லை மகிழினி ஆடுவதை நிறுத்தும் பொருட்டு

குரு எழ முற்படுகையில் இரு கைகள் அவனை தடுத்தது.

ஒன்று SPR!!!!

அந்த இன்னொரு கை யாருடையது?

மகிழினி எந்த பாடலுக்கு ஆடினாள்?

தொடரும்…..

Episode 66, 

  மகிழினி அனைவருக்கும் தன் நாட்டிய பாணியில் வணக்கம் வைத்து பின் அந்த பாடலுக்கு காத்து இருக்க பாடல் துவங்கியது.

ஆனால் இங்கு அந்த பாடலை கேட்ட குரு அதற்கும் மேல் அவனால் அதை கேட்டுகொண்டு இருக்க முடியவில்லை.

குரு அவனுக்கு சுத்தமாக  பிடிக்க வில்லை மகிழினி ஆடுவதை நிறுத்தும் பொருட்டு

குரு எழ முற்படுகையில் இரு கைகள் அவனை தடுத்தது.

ஒரு கையை SPR பிடித்து அவனை மிரட்டும் கண்களோடு பார்க்க இன்னொரு புறம் மிகவும் தன்மையாக மாயா குரு கிட்ட பார்வையில் சொல்ல

குரு வேறு வழி இல்லாமல் முறைத்து கொண்டே அமர்ந்து கொண்டான்.

அப்படி என்ன பாடல் அது 

உன்னை காணாது நான்

இன்று நான் இல்லயே

விதை இல்லாமல் வேர் இல்லையே 

என்று கண்ணனை நினைத்து விஸ்வரூபம் படத்தில் இருந்து அந்த பாடலுக்கு நிஜமாகவே கண்ணனின்  மங்கையாக  அவனை நினைத்து பாடும் மீராவாக, ராதையாக தன்னை நினைத்து கொண்டு மெழுகாக உருகி ஆடினாள்.

அவளது நளின மொழிகளை விட அந்த மை பூசிய கண்கள் ஆயிரம் மொழிகளையும் உணர்வுகளையும் உணர்த்தும் வல்லமை கொண்டது.

அந்த அளவுக்கு அந்த பாடல் முடியும் நேரம் வரை தன்னை மீறி அவளின் நளினங்களை ரசித்து கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக ஆடி முடித்தவள் அதே போல் அனைவருக்கும் ஒரு நன்றி வணக்கம் கூறி ஒரு பட்டாம் பூச்சியை போல ஓடி விட்டாள்.

அவள் சென்றவுடன் தான் தன்னிலைக்கு வந்த sp மகிழினி என்னும் அந்த காந்தம் கொண்ட கண்கள் என்று சொல்ல முடியாது அவளின் நினைவில் இருந்து தன்னை மீட்டு கொண்டவன்.

நேராக கம்பீரமாக கால் மேல் கால் போட்டு கொண்டு இருக்க அந்த அரை மணி நேரத்திற்கு இன்னும் 5 நிமிடங்களே இருந்தது.

அந்த நேரம் போன் வந்தது அது தான் மிகவும் முக்கியமான ஒன்று இந்த கதையின் முதல் திருப்பு முனையாக 

( அதில் விதி சதி செய்ய வில்லை தன் பெண்ணுக்கு நல்லது செய்கிறேன் என்று நினைத்து நாதன் ஒரு காரியத்தை செய்து வைத்து விட்டார்)

இதுவே இந்த கதையின் திருப்பு முனை அப்படி என்ன நடந்தது அதை இனி வரும் பகுதியில் பார்க்கலாம்.

அந்த நேரம் நடனத்தில் பங்கு கொண்ட அனைவரையும் மேடைக்கு பரிசு அளிக்க வர சொல்ல 

இப்போது  தொகுப்பாளர் Spr, குரு, மாயாவை அழைக்க 

Spr மாயாவை பார்த்து அத்தை நீங்கள் மட்டும் போங்க என்று குருவை அங்கேய அமர வைத்தான்.

இங்கே மாயா மிகவும் உற்சாகமாக மேலே சென்றாள் அவளுக்கு மகிழினி யை மிகவும் பிடித்து போனது.

அங்கு சென்ற மாயா அந்த mike வாங்கி ஒரு இரு வார்த்தைகளை பேச அப்போது spr க்கு ஹாஸ்பிடல் ல இருந்து கால் வர இங்கு ஒரே சத்தமாக இருக்கு என்று எழுந்து வெளியே சென்று கொண்டே போன் எடுத்து காதில் வைக்க

மறு முனையில் இருந்து பேசுவது எதுவும் அந்த சத்தத்தில் கேட்க வில்லை.

அதனால் sp

message me  என்று ஒரு SmS  தட்டி விட 

உடனே இங்கு அவன் மொபைல் க்கு செய்தி வர அதனை ஓபன் செய்து அவன் படிக்கும் அதே வேளை

அதே வேளை

மாயா மகிளினியை பார்த்து உன்னோட பெயர் என்ன மா என்று கேட்க

அவள் mike வாங்கி பெயர் சொல்லும் நேரம்

Sp அந்த செய்தியை படிக்கும் அதே நேரம்

அவள் என்னோட பெயர் மகிழினி வசந்தன் என்று அவள்  அந்த பட படக்கும் பட்டாம் பூச்சி கண்களில் கூறவும்

இங்கு sp படிக்கவும் சரியாக இருந்தது.

ஒரு நிமிடம் sp உறைந்தான் இப்போது அவனுக்கு ஒரு கலவையான உணர்வு தோன்றியது.

இது என்ன மாதிரியான உணர்வு

நாம் தேடிய பெண் இவள் தான்?!!

இவள் தான்!

  என்று உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ந்தது sp க்கு 

அவன் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது.

அவன் முதலில் தன் அத்தையின் மொபைல் க்கு கால் செய்து 

அத்தை அந்த பொம்மாயிக்கு 1 st price கொடுத்து விடுங்கள் என்று  கூற

யாரு என்று அவள் மேடையில் இருந்து sp யை பார்க்க

அதுதான் மாவைய்யா (மாயாவின் கணவன் வெங்கட் தமிழ்நாடு )  மொழியில் டான்ஸ் ஆடினாளே அவள் தான் பொம்மாயி என்று அவன் பேச

மாயா ஒரு நிமிடம் திகைத்தாள் 

சூர்யா(sp)இது நிஜமாவே நீ தானா நான் முதல் முறையாக நீ தொடர்ந்து பேசி கேட்கிறேன் என்று மாயா சொல்ல

அவன் அத்தையிடம்  பொம்மாயி க்கு கொடுங்கள் நான் பார்த்து விட்டு கிளம்புறேன் என்று sp கூற 

அவள் சிரித்து கொண்டே மகிழினி யை அழைத்து

முதன் முறையாக சிலரை எதிர்த்து தமிழில் தேர்ந்தெடுத்து ஆடி இருக்கிறாய்

உண்மையில் எதிர்த்து ஆடிய உன்னை முதன் முதலில் சிலர்  ஒரு பார்வையில் என்று கூற மகிழினி தன் விழிகளை உற்று நோக்க

அதாவது இங்கு உள்ள அனைவரையும் உன் ஆட்டத்தில் நீ ரசிக்க வைத்து இருக்கிறாய்

அதனால் இன்று இந்த விழாவின் பெஸ்ட் performer நீ தான் என்று அவள் கைகளில் அந்த மகளீர் தின சிறப்பு பரிசு மற்றும் அந்த காசோலை கொடுக்க மகிளினியின் உணர்வுகள் என்ன என்று சொல்ல முடியவில்லை.

Sp இமைக்க மறந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க

மகிழினி மாயாவின் அருகில் வந்து

ரொம்ப நன்றி  மேடம் என்று கூறி அந்த பரிசுகளை வாங்கி கொண்டு செல்ல போக

மாயா அவளை பார்த்து என்ன மா என்னை பார்த்து மேடம் னு சொல்ற

மகிழினி அவளை பார்த்து திரு திரு வென முழிக்க

எனக்கு உன்னை மாறி பொண்ணே இல்ல என்று கவலையுடன் சொல்ல

அவள் கண்களில் சோகம் கொண்டு உங்களுக்கு பிள்ளைகள் இல்லயா

ம்ம்ம் இருக்காங்க ஒரு மகன் இருக்கிறான்.

ஆனால் உன்னை பார்த்ததும் எனக்கு ஒரு பெண் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

இப்போ ஏன் இவ்வளவு கவலையாக பேசுகிறீர்கள்

இப்போது உங்க பொண்ணு நான் தான் சரியா அம்மா என்று ஆசையாக மகிழினி மாயாவை அழைக்க மாயாவிற்கு  கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

மகிழினிக்கும் மாயாவின் அன்பு தேவை பட்டது ஏன் என்றால் அவளுடைய அம்மா கலைவாணி குணம் தான் உங்களுக்கு தெரியுமே.

மகிழினி அவளை ஆசையாக அம்மா என்று அழைத்து உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன் என்று கூறி அவள் தன் பட்டாளங்கள் கூட செல்ல 

அங்கு மாணவர்கள் கூட்டத்தில் ஆதி எங்கு இருக்கிறான் என்று மகிழினி தேட அவனை பார்த்து ஒரு கையை ஆட்டினாள்.

மாயா sp யை பார்த்து கொண்டே புன்னகையுடன் அவன் அருகில் வந்து அமர்ந்து

என்ன( சூர்யா) sp இப்போ உனக்கு சந்தோஷம் தானே, நீ சொன்னது போலவே அந்த பெண்ணுக்கு கொடுத்து விட்டேன் என்று மாயா அவனை பார்க்க

அவனிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

ம்ம்ம் என்ன பண்ண எனக்கு அவள் போல் ஒரு பெண் இல்லையே இருந்திருந்தால் இன்னேரம் என்னை அம்மா என்று அழைத்து இருப்பாள்

அழகாக அலங்காரம் செய்து கண் குளிர ரசித்து உனக்கு இல்ல இந்த குரு யாருக்காவது பெல்லி(கல்யாணம்) செய்து வைத்து இருப்பேன்  என்று ஆசையுடன் மாயா கூற

பின்னால் இருந்து குரு எனக்கு அவளை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது

அவளிடம் எதுக்கு நீங்கள் அம்மா ன்னு கூப்பிடு

அப்டின்னு எதுக்கு சொன்னிங்க அத்தய்யா 

அவளை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு குரு ஏன் உனக்கு இவ்ளோ கோபம் அவ மேல

எனக்கு இந்த தமிழ் காரங்கள் சுத்தமா பிடிக்காது அந்த வெங்கட் மாமா உங்கள் மனச மாத்தி மயக்கி கல்யாணம் செய்து கொண்டாரே  என்று அவன் கூற

குரு …..!!!!???

என்ற ஒரு கர்ஜிக்கும் சத்தம் sp கிட்ட இருந்து வர உடனே அவன் அமைதியாகி விட்டான்.

அத்தய்யா  நீங்கள் எதுவும் நினைக்க வேணாம் என்று கூறியவன் வாங்க நாம் கிளம்பளாமா என்று sp அழைக்க 

மாயா குரு சொன்னது பற்றி பெரிதாக எடுத்து கொள்ள வில்லை ஏன் என்றால் அவன் எப்போதும் இப்படி தான் 

Sp இன் பார்வை வெளியே செல்லும்போது மகிழினி எங்கு இருக்கிறாள் என்று தன் குலேர்ஸ் சரி செய்த வாறு

ஒரே ஒரு நிமிடம் 

ஒரு நிமிடம் தான் பார்த்தான் அவளை தன் மனம் முழுவதும் நிறைத்து கொண்டு பொம்மாயி என்று மனதில் சொல்லி கொண்டு மிகவும் குட்டியாக ஒரு சிறு புன்னகையுடன் சென்றான்.

மாயா ஆவலாக அவளை பார்க்க அம்மா போய்ட்டு வாங்க!

என்று கள்ளம் கபடம் இல்லாமல் மகிழினி கூற 

மாயா சிரித்து கொண்டே சென்றாள்

ஆனால் குரு அவளை பார்த்து முறைத்து கொண்டே சென்றான்.

தமிழ்நாட்டில் அவர்களுக்காக இருக்கும் வீட்டுக்கு சென்றவன் இரு துப்பறியும் நிபுணர்கள் அழைத்து மகிழினி பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க சொன்னான்.

இங்கு மகிழினி மிகவும் சந்தோஷமாக ஆதி, ஜெனி, மூவரும் food கோர்ட் சென்று எதுவும் சாப்பிடலாம் என்று ஆடர் செய்ய 

அவர்கள் ஆடர் செய்த அனைத்து உணவுகளும் வந்தது ஆதிக்கும், ஜெனிக்கும்  அசைவ  உணவுகள் தான் மிகவும் பிடிக்கும்

எனவே மகிழினி அசைவ உணவுகளை தன் ஒரு மாதம் சேர்த்து வைத்து இருந்த சேமிப்பு எடுத்து வந்து இருந்தாள்.

மகிழினி க்கு சைவ உணவுகள் தான் பிடிக்கும், கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவாள்.

அதனால் சைவ உணவை ஆடர் செய்து அவள் சாப்பிட மூவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டே ஜாலியாக சாப்பிட்டனர்.

இறுதியில் பில் கட்ட மகிழினி சென்ற போது அவளுக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

அதை கேட்டு ஆதியும், ஜெனி யும் அதிர்ச்சி அடைந்தனர்.

என்னவாக இருக்கும்?????

Episode 67,

இறுதியில் பில் கட்ட மகிழினி சென்ற போது அவளுக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

அதை கேட்டு ஆதியும், ஜெனி யும் அதிர்ச்சி அடைந்தனர்.

மகிழினி அவர்கள் அருகில் வந்து பில் கட்டும் இடத்தில் நடந்த உரையாடலை கூறினாள்.

ஆதி இன்னிக்கு food court ல womens day அப்டிங்கறதால் free யாம்.

உடனே ஆதி ஏய் என்ன சொல்ற நானும் இந்த காலேஜ் சேர்ந்து இந்த 5 வருஷத்தில் இப்படி ஒன்னு நடந்ததே இல்ல என்று இவர்கள் அதிர்ச்சியாகி இதை பற்றி பேச

அங்கு வந்த ஒரு பணியாளர்,

இன்னிக்கு பொண்ணுங்களுக்கு மட்டும் தான் free தம்பி

நீ பில் pay பண்ணனும் பா என்று கூற 

மகிளினியும், ஜெனியும் ஆதிய பார்த்து அப்படியே விழுந்து விழுந்து சிரித்தனர்.

இங்கு நடப்பதை எல்லாம் SPR தன்னுடைய வீட்டில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மடிகணினியில் பார்த்து கொண்டு இருந்தான்.

ஏய் மகி,” இன்னிக்கு உன்னோட ட்ரீட் தானே”

நான் ஏன் pay பண்ணனும்

நீ தான் டி கொடுக்கணும் என்று ஆதி கூற

அச்சோ! ஆமா !”நான் மறந்தே விட்டேன்” இருங்கள்

ஒரு நிமிடம் என்று அவள் தன் சேமிப்புகள் எடுத்து அழகாக காசுகளை எண்ணி கொடுக்க,

இங்கு SPR போன் ல சில உத்தரவுகளை பிறப்பித்தான்.

Food court டெபார்ட்மெண்ட் ல இருக்க  அனைத்து பணியாள்கும்  உள்ள முதன்மை பணியாளர் கட்டளை பிறப்பிப்பவர்கள்,

அவர்களை டெலி கால் மீட்டிங் ல  conference போட்டான்.

இப்போது  மகிழினி வசந்தன் என்னும் பெண் எப்போது வருகிறாள் என்ன விரும்பி சாப்பிடுகிறாள். என்று அனைவரும் கவனிக்க வேண்டும்.

அவளுக்காக பிரத்யேகமாக உணவுகளை மிகவும் சுத்தமாக தயார் செய்து கொடுக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அவளிடம் பணம் வாங்க கூடாது

அதை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது

இது தான் உங்களுடைய வேலை.

“அவள் எனக்கு மிகவும் முக்கியமானவள்” என்று

இந்த வாக்கியத்தினை மிகவும் அழுத்தம் கொண்டு SP கட்டளையை பிறப்பிக்க,

அனைத்து பணியாளர்களும் பயந்து கொண்டே “சரிங்க சார் “என்று கூறி வைத்தனர்.

Sp மனதில் அவனுடைய பொம்மாயியை இன்று தான் முதன் முதலில் சந்தித்து இருக்கிறான்.

இன்று அவன் வாழ்வில் முக்கியமான நாள் அவள் என்னுடையவள் என்று அவள் ஆதியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த சிரிப்பு அவனுக்கு அவள் அருகில் sp யை பார்த்து சிரிக்க வேண்டும் .

தன் அருகில் எனக்கு மட்டுமே அவளுடைய சிரிப்பு   சொந்தம் ஆகும்.

இவள் எந்த மாதிரியான பெண் இப்போது தான் எனக்கு தெரிகிறது இது தான் காதலா!!

sp உனக்கு அந்த உணர்வு இவள் கொடுத்து இருக்கிறாள்.

இவள் உலகத்தில் உள்ள அத்தனை அழகு கொட்டி கிடக்கிறது போட்டி போட்டு என் அருகில் வர துடிக்கும் எத்தனையோ  பெண்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் என்னை கவரவில்லை

ஆனால் “இவளுடைய

அந்த  ஆயிரம் கதை பேசும் கண்கள்!

துடிக்கும் உதடுகள்”!

இது” இரண்டும் எனக்கு ஒரு நாள் சொந்தமாகும்”.

அவள் இந்த சூரிய பிரகாஷ்க்கு சொந்தமான நிலா ! என்னோட வெண்ணிலா !

என்று இவன் இங்கு நினைத்து கொண்டு இருந்தான் ஆனால் மகிழினி சூர்யாவுக்கு தான் சொந்தம்  சூர்ய தேவ்க்கா?  சூர்யா பிரகாஷ் க்கா ?

இங்கு ஆதி அந்த விஷயத்தை இன்பாவிடம் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கூறி கொண்டு இருந்தான்.

அப்போது கார்த்திக்கு மை விழி கிட்ட இருந்து போன் வந்தது. ஆதி கூறுவதை நிறுத்தினான்.

கார்த்திக் போன் எடுத்து பேச மறு முனையில் மை விழி கார்த்திக் கிட்ட

இங்கே சக்தி மகிழினி, சூர்யா மாமா வ பார்கணும்னு  ஒரே அடம் பண்றான்  நீங்கள் எங்கே இருக்கிங்க 

மகி எப்டி இருக்கா 

மாமா நல்லா இருக்காங்க தானே  என்று அவள் கேட்டு கொண்டே செல்ல

கார்த்திக் மனம் கனத்து கிடந்தது. 

இல்ல விழி நான் வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கிறேன் உன்கிட்ட சொல்ல நிறைய இருக்கு மா 

நீ கனி வீட்டுக்கு சக்தியை கூட்டி போ என்று கூற

கார்த்திக் இப்போ என்ன நடக்குது அப்டின்னு சொல்ல போறீங்களா இல்லயா 

இப்போ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று மை விழி கோபமாக பேச

நான் மகி வீட்டில் இருக்கிறேன் என்று கார்த்திக் சொல்ல அவள் போன் வைத்தாள்.

இங்கு ஆதி மீதி கதையை கூற ஆரம்பித்தான். இன்பா ஆதியை பார்க்க

அதன் பிறகு நாங்கள் எப்போ food கோர்ட் போனாலும் veg ரொம்ப சூப்பர் ஆ இருக்கும் நானும் கூட அதன் பின் veg தான் மகி கூட சேர்ந்து சாப்பிடுவேன்.

இன்பா ஆதிய பார்த்து ஒரு நிமிடம் ஆதி

என்ன சார் சொல்லுங்க

இல்ல காலேஜ் ல மகிழினி சம்மந்தமா கொஞ்சம் வித்தியாசமாக அவள் இருப்பது இல்லை அவளுடன் வேறு யாராவது பேசுவது அந்த மாறி வேற விஷயம் ஏதாவது உனக்கு தெரியுமா.

ஆதி யோசித்து பின் இன்பனை பார்த்து அந்த மாறி எனக்கு எதுவும் நியாபகம் இல்லை ஜெனி க்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு என்று கூறி நிறுத்திய ஆதி

ஆஅ ஒரு விஷயம் சார் 

மகிழினி கிளாஸ் time ல கூட அந்த பெரிய லைப்ரரி ல இருப்பா எப்போ வேணும்னாலும் போவா வருவா

நான் ஒரு தடவை அவள் கிட்ட இது பத்தி கேட்டேன்.

மகி நீ கிளாஸ் time ல கூட லைப்ரரி போற யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டார்களா.

இல்ல ஆதி நான் permisisson கேட்டு தான் போவேன் அதுவும் அவங்க ரொம்ப ஸ்லோவ நடத்துறாங்க அதுக்கு நான் புக் ல யே படிப்பேன் 

அதுவும் இல்லாமல் லைப்ரரி ல எனக்கு ஒரு என்று அவள் நிறுத்தினாள்.

என்ன சொன்னா மகிழினி என்று இன்பா கேட்க

சார் இவ்ளோ தான் என்கிட்ட சொன்னா

அப்புறம் இன்னொரு விஷயம் நடந்தது இப்போ நீங்கள் சொல்லி தான் எனக்கு அந்த சம்பவம் மேல் சந்தேகமா இருக்கு

என்ன  விஷயம் அது என்று இன்பா கேட்க

சார் நான் ஒரு நாள் மகிய பார்க்கனும் அப்படின்னு கிளாஸ் க்கு போனேன் ஜெனி என் கிட்ட அவ லைப்ரரி போய்ட்டா அப்டின்னு சொல்லவும்

சரி லைப்ரரி போய் பார்க்கலாம் அப்டின்னு நானும் ஜெனியும் லைப்ரரி இருக்க இடத்துக்கு போனோம் என்று ஆதி இடை நிறுத்த

ம்ம்ம் சொல்லுங்க ஆதி

சார் அப்போ லைப்ரரி ல யாருமே இல்ல

நீங்கள் சொல்றது எனக்கு புரியல

I mean லைப்ரரி ல மகிய தவிர யாருமே இல்ல ஆனால் இதுல இன்னொரு விஷயம் அவ யார் கிட்டயோ பேசிக்கிட்டு இருந்தாள் அப்டின்னு மட்டும் எனக்கு அப்போ தோணிச்சு 

உனக்கு ஏன் அப்படி தோணிச்சு அதுக்கு என்ன காரணம்

இல்ல சார் அவ பின்னாடி தான் நாங்க இருந்தோம் அவ ஏதோ ஒரு பேரு சொல்லி கூப்பிட்டா எனக்கு அது சரியா நியாபகம் இல்ல

நீ கேட்க வில்லையா என இன்பா கேட்க

அப்போ நான் அதை பத்தி பெருசா எடுத்துக்கல

அப்புறம் வேற என்ன நடந்தது என இன்பா கேட்க

ம்ம்ம் மகி க்கு எப்போதும் treditional ட்ரெஸ் தான் பிடிக்கும் இதை போல் ஒரு மாறி நாங்க மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கும் போது இந்த dress topic வந்தது.

அப்போ மகி சொன்னா

வீக்லி ஒன் டே மட்டும் ட்ரேடிஷனால் ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும் தானே

என்று நாங்க  பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு அரை மணி நேரம் இருக்கும்

உடனே அதுக்கு ஒரு அறிக்கை வந்தது

வீக்லி ஒன் டே பொண்ணுங்க எல்லாம் தாவணி பாவாடை,

அப்டின்னு சொன்னது மட்டும் இல்லாமல் ஊதா நிற சாரி சீருடை கொடுத்து விட்டார்கள் அனைவருக்கும்!

அதனால் என்ன என்று இன்பா கேட்க 

அங்கே தான் பிரச்சனை என ஆதி கூறினான்.

என்ன பிரச்சனை என இன்பா கேட்க

மகிழினி க்கு பிடிச்ச நிறம் ஊதா , இதுல எனக்கு சந்தேகம் என்ன அப்படினா நாங்க பேசிய ரெண்டு விஷத்தில் ஒன்னு தற்செயலா நடந்து இருக்கலாம்.

ஆனால் ரெண்டும் மகி கிட்ட பேசியதுக்கு அப்புறம் நடந்தது சார் 

என்று ஆதி கூறி கொண்டு இருக்கும் போதே மை விழி வந்தாள் .

உள்ளே வந்தவள் நேராக கார்த்திக் அருகில் சென்று  என்னாச்சு கார்த்திக் என்று கேட்க

கார்த்திக் வேறு வழி இல்லாமல் அனைத்தும் ஒன்று விடாமல் கூறி விட்டான்.

மை விழி அப்படியே தரையில் சரிந்தாள் கருவில் இருந்து பிரியாமல் ஒன்றாக தனக்கு துணையாக தனக்காக எது வேண்டுமானாலும் செய்யும் தன் தங்கைக்கு இப்படி ஆகி விட்டதே இப்போது எங்கு இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டும் தான் மை விழிக்கு.

இன்பா மை விழி கிட்ட உங்களுக்கு இந்த SPR காலேஜ் பத்தி ஏதாவது தெரியுமா என்று நேரடியாக கேட்க,

மை விழி ஒரு நிமிடம் அதிர்ந்தவள்  எனக்கு புரியல நீங்கள் சொல்றது 

இல்ல மா உங்க தங்கை இப்போ காணாமல் போனதுக்கு அந்த காலேஜ் தான் காரணம்

என்ன சார் சொல்லறீங்க என்று அழுது கொண்டே கூற ஆரம்பித்தாள்.

சார் நான் 12 th முடிச்சு காலேஜ் ல join பண்ண எந்த காலேஜ் போலாம் அப்டின்னு தேடும்போது

எனக்கு wanted ஆ சீட் இருக்கு

நீங்கள் கொஞ்சம் கூட பணம் செலவு பண்ண தேவை இல்லை அப்டின்னு சொன்னாங்க 

ஆனாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை அந்த சமயத்தில் எங்க அப்பவோட அண்ணா வீடு கொஞ்சம் கேஸ் போட்டு எங்களுக்கு ஒரே பிரச்சினை இருந்ததினால் நான் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

அந்த காலேஜ் க்கு போய் ஆஃபீஸ் ரூம் ல என்னோட பேரு கேட்டாங்க நான் சொன்னேன்

என்னோட பெயர் மை விழி வசந்தன் அப்டின்னு அவ்ளோ தான் என்னை அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.

நான் நம்மோட பெயர் புதுமையான ஒன்றா இருக்கு அப்டின்னு பார்க்கிறார்கள் என நினைத்து கொண்டேன் இது தான் சார் நடந்தது. என மை விழி கூற

இன்பா மிகவும் குழப்பமாக இருந்தான் உடனே மித்ரன் அவன் கிட்ட 

என்னாச்சு இன்பா இதுக்கு அந்த குரு தான் காரணமா ?

இல்ல மித்ரன் இவங்க சொல்ற விஷயத்தில்  ஏதோ ஒன்னு இடிக்குது

என்ன டா சொல்ற 

ஆம் மித்ரன் இவங்க ஏதோ ஒன்னு விட்டு சொல்றாங்க

மகிழினிகும் அந்த லைப்ரரி க்கும் பெரிய தொடர்பு இருக்கு 

ஆதி நீ ஜெனி ய வர சொல்றியா அவங்களுக்கு ஏதாவது தெரியுதா அப்டின்னு கேட்டு பார்க்கலாம்.

மகிழினி கிட்ட யார் அந்த லைப்ரரி ல பேசி இருப்பார்கள் ????

தொடரும்…..

 Episode 68,

மகிழினிகும் அந்த லைப்ரரி க்கும் பெரிய தொடர்பு இருக்கு 

ஆதி நீ ஜெனி ய வர சொல்றியா அவங்களுக்கு ஏதாவது தெரியுதா அப்டின்னு கேட்டு பார்க்கலாம். என்று இன்பா ஆதியிடம் கூற உடனே ஆதி ஜெனி க்கு கால் செய்தான்.

இங்கு ஜெனி சூர்யாவின் வீட்டுக்கு வந்ததும் ஆதி கூறிய அனைத்து விஷயங்களையும் கேட்டு அவளுக்கு கண் கலங்கி விட்டது.

மை விழியை கார்த்திக் ஒரு chair ல அமர வைத்தான். இன்பா ஜெனியை பார்த்து

சொல்லுங்க ஜெனி 

எனக்கு எதுவும் தெரியாது சார் என்று கொஞ்சம் படபடப்பாக கூறினாள்.

நீங்கள் தான் அவ கூட கிளாஸ் வெளியே உள்ளே எல்லா இடத்திலும் ஒரே ஒரு தோழி அப்பறம் அவ யாரு கூடயும் பேச மாட்டா

உங்களுக்கு தெரியாமல் எப்டி இருக்கும் சொல்லுங்க என்று இன்பா கேட்க

சார் எனக்கு ரெண்டு விஷயம் தான் தெரியும் அப்போ ஆதியும் என் கூட இருந்தான். என்று கூறி நிறுத்தியவள்.

அப்போ அந்த இன்னொரு விஷயம் என்ன என்று மித்ரன் கேட்க

அது  

அது வந்து எப்டி சொல்றது என்று யோசிக்க

ம்ம்ம் சொல்லுங்க ஜெனி என்று கூற

காலேஜ் ல ஒரு நாள் மகி எப்போதும் போல லைப்ரரி போனா எனக்கு ஒரே சந்தேகமா இருந்தது.

இங்க டெபார்ட்மெண்ட் லைப்ரரி இருக்கும் போது எப்போ பார்த்தாலும் இவ எதுக்கு அந்த common லைப்ரரி போறா

அப்படி என்ன தான் பண்றா அப்டின்னு பார்க்க  நான் இவ போய் ஒரு அரை மணி நேரம் கழித்து மோர்னிங் இடைவெளி வந்தது அப்போ பார்க்க போனேன்.

அங்கே லைப்ரரி சைடு யாருமே இல்ல சரி இவ எங்கே இருக்கா அப்டின்னு உள்ளே போலாம் ன்னு போக பார்த்தேன் .

என்று கூறி ஜெனி நிறுத்த ,

அப்புறம் என்னாச்சு என்று இன்பா கேட்க,

அப்போ ஒருத்தர் 

ஒருத்தர் அவளை தூக்கி கிட்டு கார் ல ஏறியது பார்த்தேன்.

என்று ஜெனி கூற அனைவரும் அதிர்ச்சி கொண்டு பார்க்க

என்ன சொல்ற ஜெனி என்று

மை விழி அழுது கொண்டே  அவள் அருகில் வந்தாள்.

ம்ம்ம் ஆமா விழி அந்த ஆள் பின்னால் ஒரு லேடி அழுது கொண்டே வந்தாங்க அவங்க பக்கத்தில் வந்ததும் தான் எனக்கு அவங்க யாரு அப்டின்னு தெரிஞ்சது

அது யாரு மாயா அந்த காலேஜ் ல one of the correspondent

அந்த ஆளு முகத்தை பார்த்தியா என இன்பா கேட்க

இல்ல சார் அவரோட பின்னால் மட்டும் தான்  பார்த்தேன்.

மை விழி ஜெனி கிட்ட அதுக்கு அப்புறம் என்னாச்சு 

அதுக்கு அப்புறம் நான் அந்த மேடம் கிட்ட என்னாச்சு மேடம் அவளுக்கு என்று அழுது கொண்டே  போய் கேட்க ,

அவங்க என் கிட்ட எதுவும் சொல்லல

என்னை பார்த்து நீ அவளோட friend ஆ அப்டின்னு கேட்டாங்க 

ம்ம்ம்ம் ஆமா அப்டின்னு அழுதுகிட்டே சொன்னேன் .

சரி என் கூட வா அப்டின்னு சொன்னாங்க அப்புறம் என்னை கூட்டிகிட்டு நீலா ஹாஸ்பிடல் போனோம். 

அதுக்கு அப்புறம் நான் மட்டும் தான் இருந்தேன் மைவிழி கொஞ்ச நேரம் கழிச்சு நீ வந்தியே 

உனக்கு நியாபகம் இருக்கா 

ம்ம்ம் எனக்கு நியாபகம் வந்திடுச்சு

ஆனால் அப்போ நீ மட்டும் தானே இருந்த 

இல்ல நீ வரதுக்குள்ள எல்லாரும் போய்ட்டாங்க

அவளுக்கு என்னாச்சு அவளுக்கு fever வந்து அந்த food poison ஆகி இருக்கும் என்று மை விழி கூறினாள்.

அப்புறம் இன்னொரு விஷயம் என்று மை விழி கூற 

என்ன என்பது போல் இன்பா பார்க்க

அந்த மாயா ஒரு தடவை எங்கள் வீட்டுக்கு வந்து இருக்காங்க.

என்ன சொல்ற என்று இன்பா கேட்க

ம்ம்ம் ஆமா சார் அதுக்கு அப்புறம் தான் எங்க அப்பா அவசர அவசரமாக எங்க தினேஷ் மாமாவுக்கு கல்யாணம் பண்ணனும் அப்டின்னு அதுக்கான வேலைய ஆரம்பிச்சாங்க 

ஆனால் எனக்கு அப்போ தெரியாது அந்த மாயா பத்தி 

அவங்க அப்பா கிட்ட என்ன சொன்னாங்க அப்டின்னு  எனக்கு தெரியாது 

அதுக்கு அப்புறம் எப்போ பார்த்தாலும் மகி என்ன பண்றா என்ன செயரா அப்டின்னு அதிகமாக பார்த்து கொண்டே இருப்பாரு அந்த ஆறு மாதம் எப்போடா முடியும் அப்டின்னு வெய்ட் பன்னாரு எங்க அப்பா

அப்புறம் எங்க பெரியப்பா வீட்டில் ரொம்ப தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அது சூர்யா மாமா ஹெல்ப் பண்ணி சரி செய்ததாக அப்பா சொல்லுவார் .

மகி படிச்சு முடிச்சு அந்த ஒரு மாசத்தில் வேக வேகமாக சூர்யா மாமாவுக்கு மகியை கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.

மகிளினியை தூக்கி வந்தது குரு பிரகாஷ் ஆ இருக்குமா என்று மித்ரன் சொல்ல

அது அவன் இல்ல என்று ஒரு சேர மை விழியும் , இன்பாவும் கூற 

இப்போது மை விழியை கார்த்திக் பார்த்தான்.

ஏன் மை விழி அவனை உனக்கு தெரியுமா 

மை விழி கார்த்திக் அருகில் வந்து எனக்கு என்ன காரணம் அப்டின்னு தெரியாது கார்த்திக் அவன் பொழுதுக்கும் எங்கள் டெபார்ட்மெண்ட் வந்து என் கிட்ட ஏதாவது சண்டை இல்லனா பிரச்சனை பண்ணி கிட்டே இருப்பான்.

எனக்கு அதுக்கு அப்புறம் தான் தெரிந்தது அவன் தான் காலேஜ் ல எல்லாம் இது அவனோட காலேஜ் ன்னு

அதுக்கு அப்புறம்  நான் காலேஜ் discontinue பண்ணலாம் ன்னு  முடிவு எடுத்து போன அப்போ தான் அதுக்கு மேல அவன் காலேஜ் வரவே இல்ல.

இது தினேஷ் மாமாவுக்கு மட்டும் தான் தெரியும் நான் வேற யார் கிட்டயும் சொல்லல வேற எதுவும் நடக்கல என்னை நம்பு கார்த்திக் என்று மை விழி அவனிடம் கேட்க

கார்த்திக் அவள் கண்களை துடைத்து விட்டு நான் உன்னை நம்பறேன் என்று கூறினான்.

அப்போ அது யாரு என்று ராம் கேட்க 

அது சூர்யா என்று கூறினான்.

சூர்யாவா என்று அனைவரும் ஒரு சேர அதிர்ச்சியாக கேட்க

அது சூர்ய பிரகாஷ் ரெட்டி  என்று மித்ரன் கூற  அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தனர்.

ம்ம்ம்ம் அது SPR என்று இன்பா கூறினான்.

அப்போது ராமிற்கு போன் வந்தது.

ராம் போன் எடுத்து யார் என்று பார்க்க அது ரகு தான்

அவன் போன் எடுத்து காதில் வைத்து பேசி விட்டு 

இன்பனை பார்த்து  

இன்பா சூர்யா கண் முழிச்சுட்டான் டா என்று கூற

இப்போது அனைவருக்கும் இதை கேட்டு எந்த உணர்வு வெளிப்படுத்த வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை.

உடனே அனைவரும் மருத்துவமனை கிளம்பினர்.

அனைவருக்கும் மிகவும் பதற்றமாக இருந்தது சூர்யா என்ன பேச போகிறான் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே இருந்தது.

இன்பா, மை விழி, கார்த்திக், ராம் மூவரும் சூர்யாவை பார்க்க உள்ளே சென்றனர்.

சூர்யா கண் விழித்தவன் அனைவரையும் ஒரு அந்நியரை பார்ப்பது போல பார்த்து 

தன் புருவத்தை சுருக்கி

  நீங்கள் எல்லாம் யாரு,

நான் எங்கே இருக்கேன்

என்று வழக்கம் போல எல்லா கதையில் வருவது போல கேட்க

இப்போது அந்த நால்வரும் என்ன சொல்ல என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள

இன்பாவுக்கு  ஒரு நிமிடம் கண் கலங்கியது

சூர்யாவை பார்த்து மச்சி நான் இன்பா டா, இது ராம் என்று அவனிடம் கூற

சூர்யா அவனது புருவத்தை குவித்து யோசிக்க அவனுக்கு நியாபகம் வர வில்லை

ராம் சூர்யாவை பார்த்து சரி சூர்யா உன்னை ஸ்டரைன் பண்ணிக்க வேணாம் நீ ரெஸ்ட் எடு என்று கூறி வெளியே சென்று 

ராம் இன்பனை பார்த்து 

இப்போ என்னடா செய்யறது, அவனுக்கு எதுவும் நியாபகம் இல்லை அப்படினா மகிழினி ய கூட மறந்து இருப்பானா என்று ராம் சொல்ல

இல்ல ராம் இது டெம்போரரி தான் நம்ப முதலில் சூர்யாவை வேற ஹாஸ்பிடல் இல்ல வீட்டுக்கு கூட்டி போகனும் அதுக்கு அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம்.

இங்க சூர்யாவை  கண்காணிக்க spr ஆளுங்க இருப்பார்கள். அவன் நார்மல் ஆக கொஞ்சம் நாள் எடுக்கும்  அது வரை நாம் காத்திருக்க  வேண்டும் என்று கூறி அடுத்து என்ன செய்யலாம்  என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

இங்கு SPR மகிழினி அருகில் வந்து அவள் கைகளை எடுத்து உள்ளங்கையில் வைத்து கொண்டான். 

அன்று அவளை முதன் முதலில் தொட்டு தூக்கிய அந்த நினைவுகளில் மூழ்கினான். அந்த நாள் மாயா வீட்டை ரெண்டாக ஆக்கி கொண்டு இருந்தாள்.

அசைவ உணவுகளை  அனைத்தும் தயார் செய்தவள் இன்று மகிளினிக்காக தனது கைகளால் செய்தாள்.

இது spr க்கு தெரியாது அவன் நேராக எப்போதும் போல காலேஜ் செல்ல அங்கு அவன் கண்ட காட்சி மகிழினி க்கு சந்தோஷமாக மாயா அவள் ஊட்டி விடுவது தான்.

மகிழினி சிரித்து கொண்டே உணவுகளை ரசித்து உண்டாள்.

Spr அவர்கள் இருவரையும் பார்க்க அம்மா, பெண் போலவே இருந்தது 

என்ன அத்தய்யா பொம்மையிக்கு  பயங்கர விருந்து போல என்று என்றும்  இல்லாமல் மிகவும் சிரிப்புடன் அவன் தெலுங்கில் கேட்டு கொண்டே வர 

மகிழினி spr ஆ பார்த்து ஒரு பதட்டம் கொண்டு  எழுந்து நிற்க 

உட்காரு மகிழினி என இப்போது  மாயா அவளை அமர வைத்து ஊட்ட ஆரம்பித்தாள் திடீரென மகிழினி ஏதோ தலை சுற்றி கீழ விழ

Sp ஓடி சென்று அவளை தாங்கி கொண்டான்.

மாயா வுக்கு மிகவும் பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை .

என்னாச்சு மகி என் செல்லம் என்று அழுது கொண்டே அருகில் வர

தண்ணீர் எடுத்து முகத்தில் தெளிக்க அவள் எழ வில்லை.

Sp யாருக்கோ போன் செய்தவன் அத்தை அவ என்ன சாப்பிட்டா என்று கேட்க

சிக்கன் குழம்பு, பிரியாணி , சூப் என அனைத்தும் சிக்கன் வகைகள் சொல்ல

Sp க்கு தூக்கி வாரி போட்டது அத்தை அவளுக்கு இது ஒத்து கொள்ளாது நீங்கள் கொண்டு வந்து இருக்கிறீர்கள் என மறுக்காமல் எல்லாம் சாப்பிட்டு இருக்கிறாள் இவளை என்ன செய்ய என்று மகிழினி மேல் sp க்கு கோபம் வந்தது.

என்ன சூர்யா சொல்ற என்று மாயா அழுது கொண்டே அவன் பின் போக

அத்தை அவளை நான் மருத்துவமனை கூட்டி செல்கிறேன்

நீங்கள் இன்னொரு கார் ல வாங்க என்று கூறி மகிழினி யை தன் நெஞ்சில் அணைத்து கொண்டு தூக்கி சென்றான்.

அங்கு ஹாஸ்பிடல் படுக்கையில் அவளை படுக்க வைத்து தனக்கு தான் சொந்தமாக போகிறாள் என்று SP தன் முதல் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.

 Episode 69,

 சூர்யா மருத்துவமனையில்  இருந்து வீட்டுக்கு அழைத்து வர பட்டான். இப்படியே 15 நாட்கள் கழிந்தது.

இன்பா spr க்கு சொந்தமான எல்லா ஹாஸ்பிடல், ஹெல்த் care என அணைத்து இடங்களிலும் மகிழினி யை தேட அவள் எங்கும் இருப்பதாக தகவல்கள் இல்லை.

அதனால் இன்பாவும், மித்ரனும் ஹைதராபாத் கிளம்பலாம். என்று முடிவு எடுத்தனர் ஏன் என்றால் ஆந்திர மாநிலம் தான் spr ன் கோட்டை

ராம் இன்பாவிடம் 

என்ன இன்பா இவன் எதுவும் நியாபகம் இல்லாமல் இருக்கிறானே இப்போது என்ன செய்வது.

நீ ஒன்னும் கவலை படாதே ராம் நான் சூர்யாவை பரிசோதனை செய்ய foregion ல இருந்து என்னோட அத்தை பொண்ணு பிரியா அவ  டாக்டர் அது மட்டும் இல்லாமல் பார்மச்சுடிக்கல் research அதுல கோல்ட் மேடலிஸ்ட் 

நான் ப்ரியாவை சூர்யாவுக்கு என்று பிரத்யேகமாக வரவழைத்து இருக்கிறேன் இன்னும் ரெண்டு நாளில் அவள் இங்கு இருப்பாள்.

நீ சூர்யாவை பத்திரமாக பார்த்து கொள் என்று அவன் கூற

இப்போது கார்த்திக் இன்பனை பார்க்க வந்தான்.

சார்  மான் விழிக்கு என்னாச்சு சார் இப்போ அவ எங்கே இருக்கா என்று மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க

நீங்கள் கவலை பட வேணாம் கார்த்திக் இப்போ தான் நமக்கு மகிழினி எங்கே இருக்கிறாள் அப்டின்னு தெரிந்து விட்டதே.

கண்டிப்பாக அந்த spr மகிளினியை எதுவும் செய்து இருக்க மாட்டான் அப்டின்னு எனக்கு தோணுது

இப்போ சூர்யாவுக்கு கொடுத்த மாறி எதுவும் drug மகிழினி க்கு கொடுத்து இருப்பான் . இப்போ மகிளினியை எப்டி அவனோட கட்டு பாட்டில் கொண்டு வருவது அப்டின்னு தான் அவனோட பிளான் இருக்கும் 

நம்மள அவன் நினைக்க மாட்டான்.

இப்போ மகிழினியையும்  சூர்யாவையும் எப்படி ஒருத்தர்க்கு ஒருத்தர் தெரியாதா?

இன்பா கார்த்திக் கை பார்த்து ,

இதுக்கு காலம்  தான் பதில் சொல்லனும் மிஸ்டர் கார்த்திக் 

சக்தியை பத்திரமா பார்த்து கொள்ளுங்கள் இன்னும் ரெண்டு நாள் இல்ல அதுக்கு முன்ன கூட ப்ரியா வந்து விடுவாள்

சூர்யாவை எப்படியும் சரி செய்து விடலாம்.வீட்டுக்கு வந்த சூர்யாவுக்கு அந்த விபத்தில் பெரிதாக அடிகள் எதுவும் பட வில்லை.

இன்பா சொன்னது போலவே இரண்டு நாட்களில் பிரியா வந்தாள். நேராக விமான நிலையம் வந்ததும் இன்பாவிற்கு கால் செய்ய 

ஹலோ இன்பா நான் வந்துட்டேன் டா 

என்னை pick up பண்ண கூட நீ வரல 

இல்ல ப்ரியா நான் அந்த கேஸ் விஷயமா ஹைதராபாத் வந்து இருக்கிறேன். பிலீஸ் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உன்னை வந்து பார்க்கிறேன்.

இப்போது உன்னை கூட்டி போக ராம், கார்த்திக் அப்டின்னு ரெண்டு பேர் வந்து இருப்பார்கள்.

பிலீஸ் அவங்க கூட போ மா

ம்ம்ம் சரி ok என்று பிரியா அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்த்து நேராக அவர்களிடம் சென்றாள்.

பின்னர் அவளுக்கு ஓய்வு தேவை என்பதால் அவளுக்கு என்று புக்  செய்ய பட்ட ஹோட்டல் க்கு கூட்டி செல்ல

பிரியா ராமை பார்த்து 

ஹலோ brother எனக்கு ஹோட்டல் வேணாம் பா, நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடனும் போல் இருக்கு உங்க வீட்டுக்கு கூட்டி போங்க உங்க அம்மா இல்ல மனைவி யாராவது எனக்கு சமைத்தால் நான் இங்கு இருக்கும் வரை நன்றாக சாப்பிடுவேன்.

என்று பிரியா சொல்ல உடனே ராம் கீதா கிட்ட சொல்லி ப்ரியாவுக்கு தேவையான அனைத்தும் தயார் செய்ய சொன்னான் விமான நிலையத்தில் இருந்து town கிட்ட தட்ட 12 கிலோ மீட்டர் அங்கு இருந்து இவர்கள் வீட்டுக்கு ஒரு முக்கால் மணி நேரம்

கார்த்திக்கும், ராமுக்கும், மிகவும் சந்தேகமாக இருந்தது ஏன் என்றால் ப்ரியாவின் குணாதிசயங்கள் அப்படி இருந்தது . அவள் துரு த்ரு என அதையும் இதையும் பேசி கொண்டே வந்தாள்.

கார்த்திக் ராம் கிட்ட சார் இந்த பொண்ணு நம்ப சூர்யாவை சரி செய்யுமா இந்த பொண்ண பார்த்தால் டாக்டர், ரெசேர்ச்சேர் மாறி எனக்கு தோனலேயே.

ராம் சிரித்து கொண்டே ,”இன்பா ஒன்னும் செய்கிறான் என்றால் அது சரியாக இருக்கும்” நீ கவலை பாடாத கார்த்திக் ,என்று கூறி  ராம் வீட்டுக்கு ப்ரியாவை அழைத்து சென்றனர்.

ப்ரியா ராம் வீட்டுக்கு சென்று இல்லாத அலப்பறைகள் இரண்டு நாட்கள் செய்து தனக்கு விருப்பமான அனைத்தும் சாப்பிட்டு விட்டு இப்போது வந்த வேலைக்காக தன்னை தயார் படுத்திகொண்டாள்.

ராம் ப்ரியாவை சூர்யாவின் வீட்டுக்கு அழைத்து சென்றான். ப்ரியா சூர்யா இருக்கும் அறைக்கு சென்றவள் அவனிடம் இயல்பாக பேச்சு கொடுத்து அவனுடைய நிலையை அறிய முற்பட்டாள்.

இறுதியில் அவனிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து கொண்டு வெளியே வந்தவள். இன்பாவுக்கு கால் செய்தாள்.

ஹலோ இன்பா

சொல்லு ப்ரியா 

சூர்யாவுக்கு நியாபக மறதி ஆகி இருக்கு

இது முன்னவே எங்களுக்கு தெரியும் வேற எதுவும் புதுசா தெரிந்து இருக்கா

ம்ம்ம் அதுக்கு தான் அவரோட பிளட் சம்பிளே எடுத்து இருக்கிறேன். எனக்கு கொஞ்சம் லேப் facilities தேவை படுது அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு செய்ய முடியுமா

ம்ம்ம் நீ கிளம்பி நம்ப காலேஜ் போ நான் சூர்யாவை அங்கே தமிழ்நாடு கூட்டி வந்திடறேன் என்று இன்பா சொல்ல

ம்ம்ம் ok அது தான் சரியாக இருக்கும் அப்புறம் இனி தான் அவங்க எதாவது மருந்து கொடுத்து இருந்தால் அதோட side எபெக்ட் இனி தான் காட்டும் அதனால நான் அவருக்கு கொஞ்சம் தூங்க சில sleeping பில்ஸ் கொடுத்து இருக்கிறேன்.

ம்ம்ம் ok ப்ரியா நம்ப நேரில் பார்க்கலாம். என இன்பா கூறி விட்டு போன் வைத்தான்.

இங்கு ஹைதராபாத் ல spr ஆ சந்திப்பதற்காக இன்பாவும், மித்ரனும் பார்வை நேரம் கிடைக்க அப்பய்ண்ட்மெண்ட் கிடைக்க அதற்கான வேளைகளில் இறங்கினர்.

மகிளினியை இங்கு அழைத்து வந்து 8 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் அவள் எழாமல் அப்படியே இருப்பது பார்த்து spr ஷீலா, தேஜு வை அழைத்தான்.

ஷீலாவுக்கு SPR என்றால் மிகவும் பயம் அதனால் பயந்து கொண்டே அவனது அலுவலக அறைக்கு

உள்ளே  வரலாமா சார் என்று கேட்க 

Spr இன் அந்த கை அசைப்பு அவர்களுக்கு பதிலாக கிடைத்தது.

தேஜுவும் அவளோடு உள்ளே வந்தாள். 

Spr சூழல் நாற்காலியில் இருந்து அவர்களை பார்க்க திரும்ப அங்கு ஷீலா மிகவும் பயத்தில் நின்று கொண்டு இருக்க தேஜு spr இன் அந்த கம்பீரமான தோற்றத்தை பார்த்து மயங்கி தான் போனாள்.

ஆனால் அதை spr அவளின் பார்வை மாற்றத்தை கண்டு கொண்டவன் மிகவும் கம்பீரமான அந்த குரலில்

மிஸ் நாதன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று தெலுங்கில் பேச ஆர்மபித்தான்.

உன்கிட்ட நான் என்ன சொன்னேன் ஏன் அவ இன்னும் விழிக்க வில்லை.

தேஜு அவன் கண்களை பார்த்து நேராக

SP அவளோட நிலை சரி இல்ல

என்று அவளை மரியாதை இல்லாமல் பேச கோபம் கொண்டவன்.

கூடிய சீக்கிரமே அவள் மிசஸ் SPR ஆக போறா அவளை நான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்.

அதனால் நீ இப்படி அவள் ன்னு சொல்லாத இந்த castle க்கு என்னோட பொம்மாயி தான் மகாராணி

நீ இங்கே சாதாரண என்கிட்ட வேலை செய்யுற ஒருத்தி அப்டின்னு உனக்கு தெரியும் னு நினைக்கிறேன்.

என்று அவன் கூற தன்னை மீறி விழ இருந்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டாள் தேஜ ஸ்ரீ

அவள் தன்னை சரி செய்து கொண்டு 

அவங்க எழ இன்னும் கொஞ்ச நாள் தேவை

Sp க்கு தேஜுவின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல் உன் கண்காணிப்பில் பொம்மாயி இருந்தது போதும் 

இந்த ரெண்டு நாளில் பொம்மாயி எழ வில்லை என்றால் நான் இந்த நாட்டில் ஏன் இந்த உலகத்தில் இருந்து உள்ள மிகவும் திறமையான மருத்துவர்கள் வர வைத்து அவள எழ வைப்பேன்.

என்று SP கூறவும் தேஜு தன் பதட்டம் எதுவும் வெளியில் காட்டாமல் 

நீங்கள் எங்கு இருந்து அழைத்து வந்தாலும் இது தான் முடிவு நீங்கள் கூறுவதற்காக நான் எதுவும் முயற்சி செய்கிறேன் என்று கூறி விட்டு அவள் ஷீலாவின் கைகளை பிடித்து கொண்டு அங்கு இருந்து சென்றாள்.

தேஜு அங்கு இருந்து சென்றவுடன் sp அர்ஜுனை அழைத்தான்.

சார் கூப்பிடீங்களா என்று அர்ஜுன் உள்ளே வர

இந்த தேஜு அவள் எதோ சரி இல்லை அவளை கொஞ்சம் கண்காணிப்பு செய்யும் வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்

ம்ம்ம் சரிங்க சார் நான் இப்போதே அதற்கான வேலைய முடித்து விடுகிறேன்.

தேஜு நேராக ஷீலாவை அழைத்து கொண்டு அவர்கள் இருக்கும் பிரிவுக்கு வந்தவள்.

ஷீலாவை பார்த்து மிகவும் கோபமாக 

அவன் என்னை என்ன வார்த்தை சொல்லி விட்டான் என்று

நீ பார்த்தாயா ஷீலா என்று கோபத்தள்

அவனுக்கு அவ்வளவு அந்த மகிழினியின் மேல் காதலா 

மகிழினி ! மகிழினி!மகிழினி!

நான் எந்த விதத்தில் குறைந்தவள் அவளை விட அந்த sp பைத்தியம் போல அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தும் கூட அவளை அடைந்தே தீர வேண்டும் என்று இப்படி சுத்துகிறானே.

என்று அழுது கரைந்தவளை தேற்றும் விதமாக அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள் ஷீலா.

மகிழினி நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கோபத்தில் பத்ர்காளியாக மாறிய தேஜு 

உன்னை என்ன செய்கிறேன் என்று பார் என்று நேராக அவளின் பிரத்யேக அறைக்கு சென்றவள்.

ஒரு மருந்து பாட்டில், இன்ஜெக்ஷன் எடுத்து வந்து ஷீலாவிடம் கொடுத்து இதை போய் அவளுக்கு போடு என்று கோபத்தில் மூக்கு புடைக்க உடல்கள் ஆட கொடுக்க

ஷீலா அதை பார்த்து ஏய் வேணாம் தேஜு அவ கர்ப்பிணி பொண்ணு டி என்று கூற 

நான் சொல்றத மட்டும் செய் இது இப்போ அவளுக்கு தேவை அப்போ தான் அந்த sp **** என்று சில வார்த்தைகளை கூறி அவள் அருகில் செல்ல மாட்டான்.

என்று தேஜு கூற ஷீலா வேறு வழி இல்லாமல் அந்த மருந்தை வாங்கி கொண்டு மகிழினி அறைக்கு சென்று அந்த மருந்தை அவளது உடலில் செலுத்தினாள்.

அது என்ன மருந்தாக இருக்கும்??????

இனி சூர்யாதேவ் மகிழினி என இருவரும் காதல் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது  

இருவரும் தன்னை யார் என்றே மறந்த நிலையில் இருவரது காதலும ஒருவருக்கு ஒருவர் என போட்டி போட்டு அவர்கள் காதல் என்னும் சதிராட்டம் ஆரம்பமாக போகிறது.

சூர்யா தேவ் மகிழினி முதல் சந்திப்புக்காக காத்திருங்கள்!!!!

Episode 70, 

இன்பாவும், மித்ரனும் spr யை பார்ப்பதற்காக காத்திருக்க அவன் இவர்களை அலட்சியம் செய்து விட்டு இவர்களை வெளியே அனுப்புமாறு கூறினான்.


மித்ரன் இன்பாவிடம் இப்போ என்ன செய்வது இன்பா அவர் நம்மை சந்திக்காமல் அனுப்புகிறார்.


இன்பா ஒரு ஆழ்ந்த பெரு மூச்சு விட்டவன். பார்த்துக்கலாம் விடு மித்ரன் எப்படியும் இவர் நம்மிடம் வந்து  தான் ஆக வேண்டும்.

இவர்கள் தொடர்பான வழக்கை நாம் தூசி தட்டினால் தானாக நம்மை தேடி வருவார் என்று இன்பா சொல்ல

மித்ரன் செம்ம இன்பா என்று ஒரு புன்னகையுடன் இவர்கள் வெளியே செல்ல அப்போது குரு பிரகாஷ் உள்ளே வந்தான்.

இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஒரு ஏளன புன்னகையுடன் என்ன சார்
இப்போ காலேஜ் கரெஸ்பாண்டெண்ட் ஆ வந்து இருக்கிங்கலா இல்ல ஒன்னுக்கு உதவாத   IPS ஆஃபீஸ்ர் ஆஅ வந்து இருக்கீங்களா என்று அவன் கேட்க

இன்பா அவனை பார்த்து நான் எப்படி வந்தாலும் அது ஒன்னு உங்களுக்கு போட்டியாக இருக்கும் இல்ல என்று ஒரு சிறு புன்னகை செய்தவன்

உங்களை தீர்த்துகட்டுவதாக இருக்கும் என்று சொல்ல அவனுக்கு மிகவும் கோபமாக வந்தது.

மிஸ்டர் இன்பராகவன் என்ன வார்த்தை ஜாலமா

இல்ல மிஸ்டர் குரு பிரகாஷ் நான் உண்மையா தான் சொல்றேன் .

ம்ம்ம்ம் அதையும் பார்க்கலாம் யார் யாரை முடிக்கிறார்கள் என்று

பார்க்கலாம் ன்னு சொல்லாதீங்க மிஸ்டர் குரு

ஏன் என்று குரு கேள்வியாக பார்க்க

நம்மோட அடுத்த சந்திப்பு கொஞ்சம் என்று இன்பா நிறுத்த குரு மனதில் ஒரு அதிர்வு வந்து போனது

ரொம்ப அதிர்ச்சி ஆக வேணாம் கண்டிப்பாக நீங்கள் என்னை நெனைத்தீர்களோ அது தான் நடக்கும்

நான் என்ன நினைத்தேன் நான் ஒன்றும் நினைக்க வில்லை.

அப்போ ok gud bye என்று சொல்லிவிட்டு இன்பா கிளம்பினான்.

அவன் நேராக பெங்களூர் சென்று சூர்யாவை போய் பார்க்க அவன் படுக்கயில்உறங்கி கொண்டு இருந்தான்.

ஜானு மை விழிக்கு கால் செய்து சக்தியை பற்றி கூற
மை விழி போய் சக்தியை அழைத்து கொண்டு சூர்யாவின் வீட்டுக்கு வந்தாள்.

அங்கு இன்பா , மித்ரன், ராம் , கீதா,இருக்க சக்தி அழுது கொண்டே இருக்க

மை விழி அவனிடம் சக்தி இப்போ எதுக்கு என்னோட செல்லம் அழரீங்க என்று அவனை சமாதானம் செய்து கொண்டு இருக்க

இன்பா சக்தியை பார்க்க இது சூர்யாவோட மகன் சத்யதேவ் என்று கூற

சத்யதேவ் என்று இன்பா கூற அவன் இன்பாவை பார்க்க

வாங்க இங்க நீங்கள் good boy தானே

சக்தி அவனை கேள்வியாக பார்க்க

நான் உங்க டாடியோட friend ok வா இங்க வாங்க என்று இன்பா சொல்ல

சக்தி மை விழியை பார்த்தான் அவள் மாமா கிட்ட போங்க என்று கூற
சக்தி மெதுவாக நடந்து இன்பா அருகில் செல்ல இன்பா அவனை அணைத்து தூக்கி மடியில் வைத்து கொண்டான்.

இப்போ சக்திக்கு என்ன வேணும் என்று கேட்க
டாடி வேனும் என்று அவன் ஏக்க குரலில் கூற

சரி ok நம்ப டாடிய பார்க்க போலாம் என்று இன்பா கூற
I love you மாமு என்று கூறி இன்பாவ அணைத்து கொண்டான்

இதை பார்க்க அங்கு இருந்தவர்கள் மனம் கனத்து கிடந்தது.

ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கு
What என்று சக்தி கேட்க
அப்பா க்கு fever அதனால தூங்கி கிட்டு இருக்காங்க நீ டிஸ்டர்ப் பண்ண கூடாது ok வா

ம்ம்ம் ok மாமு என்று சக்தி கூற
சரி வாங்க போகலாம் என்று இன்பா அவனை அழைத்து செல்ல சக்தி தன் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் டாடி என்று சந்தோஷமாக சூர்யாவின் அருகில் போய் அவன் கட்டிக்கொண்டான்.

மாமு என்று  சக்தி அவனை அருகில் அழைக்க என்ன என்று இன்பா குனிந்து பார்க்க

மாமு அப்பாவுக்கு நான் கிஸ் தரட்டுமா என்று இன்பாவின் காதுக்கு அருகில் போய் சொல்ல இன்பாவுக்கு  இதை கேட்டு மனது மிகவும் நொறுங்கி போனது.

ம்ம்ம் நீங்கள் அப்பாவுக்கு கிஸ் கொடுக்கலாம் என்று இன்பா கூற சக்தி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதிக்க சூர்யா தன்னை அறியாமல் மெல்லிய புன்னகை செய்தான்.
இதை  பார்த்த சக்தி மாமு டாடி இப்போ ஸ்மைல் தான

இன்பா ஆமா சத்யதேவ் டாடி சீக்கிரமே உனக்கு கிஸ் தருவாங்க என்று கூறி

இப்போ அப்பாக்கு fever சரி ஆகல நம்ப அப்புறம் வந்து பார்க்கலாம் என்று இன்பா கூற
ok done மாமு என்று சக்தி சிரித்து கொண்டே இன்பா கூட வெளியே வந்தான்.
இன்பா நேராக மை விழி அருகில் சென்று அவனை கொடுக்க சக்தி மை விழியை பார்த்ததும்

சித்தி நீ மகி கிட்ட கூட்டி போ பிலீஸ் 

எனக்கு மகி பார்க்கனும்

அம்மா வேனும்

என்று அழ ஆரம்பித்தான்.

சக்தி கண்ணா அழ கூடாது என்று அவனை அவள் சமாதானம் செய்ய

இன்பா மீண்டும் சக்தியை வாங்கி கொண்டவன் அவன் உச்சியில் ஒரு முத்தம் பதித்து
சக்தி நீங்கள் பெரியவனா வளர்ந்து என்ன ஆக போறீங்க என்று அவன் திசை திருப்ப

சக்தி தன் கண்ணை துடைத்து கொண்டு டாடி போலீஸ் ஆக மகி என்னை டாடி மாறி ஆக சொல்லுவா என்று தன் மழலை மொழியில் கூற

ம்ம்ம் சூப்பர் நீங்கள் gud boy தானே

ம்ம்ம் ஆமா

அப்படினா நான் சொல்றது கேட்டா

நான் அம்மா கிட்ட கூட்டி போவேன்

சக்தி கண்கள் மின்ன promise ஆ என்று கேட்க
ம்ம்ம் நிஜமா என்று இன்பா சொல்ல
என்ன பண்ணனும் மாமு என்று சக்தி கேட்க

நீங்கள் தொல்லை பண்ணாமல் சித்தி கூட இருந்தால் நான் மகி ய கூட்டி வருவேன் கூட நிறைய surprice யும் இருக்கு என்று கூற

ம்ம்ம் நிஜமா uncle

உனக்கு promiss பண்றேன்.மாமு சொல்றது நீ சமத்து பையனா கேட்கணும் ok  வா.

Done  என்று சக்தி மை விழியிடம் சென்றான்.

இப்போது ப்ரியாவை பார்க்க இன்பா சென்றான்.

ஹலோ ப்ரியா மேடம் என்று இன்பா அவளை கூப்பிட

அவள் ஓடி வந்து இன்பனை அணைத்து கொண்டாள்.

இன்பா அவளை விலக்கி நலம் விசாரிக்க 

பிரியா இன்பனை பார்த்து ஒரு பிரச்சனை அப்படின்னா மட்டும் தான் உனக்கு நான் நினைவுக்கு வருகிறேனா.

இப்போ தான் சார் லவ் எல்லாம் பண்றீங்க ஒரே பிஸி போல உன்னோட lover ஆ எப்போ intro கொடுக்க போற

அவ name என்ன அத்தை என்கிட்ட சொன்னங்களே

ஏதோ என்று நியாபகம் வந்தவளாய்

ம்ம்ம் கண்ணுகினியாள் என்னை விட அவ்ளோ அழகா

ஒரு நிமிடம் இன்பாவிற்கு இதயம் கனத்து போனது மனதில் விவேகா எல்லாம் உன்னால தான் டி என்னை  ஏன் டி இப்படி torture பண்ற என்று நினைத்தவன்.

இல்ல பிரியா அப்படி ஒன்னும் இல்ல என்று இயல்பாக பேசி விட்டு அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

இப்போ நெஸ்ட் என்ன பண்ண போறோம் பிரியா

 அவளோ அது தான் நீ சொன்ன மாறி சூர்யாவை தமிழ்நாடு கூட்டி போகலாம் என்று அதற்கான வேலைகளில் இறங்கினர்.

இங்கு நடப்பது எதுவும் உமாவிற்கும், நட்ராஜ் க்கும் தெரியாது. இன்பா சூர்யாவை நேராக அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

உமா, நட்ராஜ் இருவரும் சூர்யா இருக்கும் நிலை கண்டு துடித்து போனார்கள்.

உமா அழுது கொண்டே இன்பா எங்கே பா சக்தியும், மான் விழியும் அவள் எப்படி இருக்கிறாள்.

நான் உடனே என் சக்தியை பார்க்க வேண்டும் மான் விழிக்கு என்ன ஆனது அவளுக்குஉ ஏதாவது ஒன்று என்றால் சூர்யாவுக்கு நான் என்ன சொல்வேன், மான் விழி அப்பாவுக்கு நான் என்ன சொல்வது என்று தன் மகனின் நிலைய கண்டு அவள் கரைய ஆரம்பித்தாள்.

அம்மா இப்போது இருக்கும் சூழலில் சூர்யாவுக்கு சக்தி என்று ஒரு மகன் இருக்கிறான் என்று தெரிய வேண்டாம்.

உமாவும், நடராஜும் அதிர்ச்சியில் பார்க்க 

ம்ம்ம் ஆமாம் அம்மா நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் மான் விழி க்கு இன்னும் சுய நினைவு திரும்ப வில்லை.

அவளை மை விழியும், கார்த்திக் , ராம் என அனைவரும்பார்த்து கொள்கிறார்கள்.

என்ன பா இப்படி சொல்ற நாங்கள் இப்போதே கிளம்புகிறோம் என்று அவர்கள் கிளம்ப போக

அப்பா அம்மா நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் முதலில் சூர்யாவுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டால் மான்விழியை நாம் சரி செய்ய நன்றாக இருக்கும் என்று நடந்த சம்பவம் அனைத்தும் மறைத்து இன்பா கூறினான்.

ஏன் என்றால் எல்லா விஷயமும் தெரிந்தால் சூர்யா மகிழினி வாழ்க்கை பிரச்சனை ஆகி விடும் என்பதால் தான் இன்பா இவ்வாறு கூறினான் 

சரி பா சத்ய தேவ கூட்டி வா நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தங்கள் குடும்ப வாரிசு பற்றி கேட்க ,

இன்பா அவர்களை பார்த்து மை விழி பார்த்து கொள்வாள் அவள் மான் விழியோட தங்கை தானே சக்தி இங்கே வந்து ஏதாவது கேட்டால் இல்லை ஏதாவது செய்தால் உங்களால் சமாளிக்க முடியாது என்று அவன் கூற 

இதற்கும் மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உமா கண்ணீர் சிந்தினாள்.

சூர்யாவை அழைத்து சென்றனர் அவனுக்கு இவர்கள் இருவரையும் அடையாளம் தெரிந்தது. 

அம்மா , அப்பா என போய் அணைத்து கொண்டான். அவனை கண்டவுடன்  உமாவிற்கு கண்ணீரை கட்டு படுத்தமுடிய வில்ல.

இங்கு ஹைதராபாத் ல மகிழினி உடலில் அசைவுகள் வரவும் அனைவருக்கும் சொல்ல பட

சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களை திறந்தாள்.

அவள் முன்னால் தேஜ ஸ்ரீ, மாயா,  ஷீலா மூவரும் இருந்தனர்.

அவள் எழுந்ததும்

தண்ணி!!!

தாகம்!! என்று கூற மாயா அவள்அருகில் செல்ல ஷீலாவும் அவளை மெதுவாக அமர வைத்தனர்.

மாயா அவளை பார்த்து மகிஷவரத்தினி இப்போ எப்டி இருக்கு மா உனக்கு என்று சொல்ல 

இப்போது தேஜு, ஷீலா அதிர்ச்சியில் பார்க்க 

அவளும் இரு புருவத்தை குவித்து 

மகிஷவர்தினி யா???? என்று மெதுவான குரலில் கூறினாள்.

Episode 71,

மகிழினி உடலில் அசைவு தெரிய அதை பற்றி ஷீலா போய் அனைவரிடமும் கூற

மாயா உள்ளே வந்தவுடன் அவள் கண் விழிக்க சரியாக இருந்தது

தண்ணீர்!!

தண்ணீர் !! என்று மிகவும் மெதுவான குரலில் கூற மாயா அவளை எழுந்து அமர வைத்து தண்ணீர் கொடுக்க

பிறகு மகிழினி மாயாவை உற்று பார்த்து

நான் எங்கே இருக்கேன்.

எனக்கு என்ன ஆச்சு

நீ நீங்கள் யாரு என்று கேட்க

மாயா அவளை பார்த்து மகிஷவரத்தினி இப்போ எப்டி இருக்கு மா உனக்கு என்று சொல்ல

இப்போது தேஜு, ஷீலா அதிர்ச்சியில் பார்க்க 

அவளும் இரு புருவத்தை குவித்து 

மகிஷவர்தினி யா???? என்று மெதுவான குரலில் கூறினா

மாயா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்  ம்ம்ம் நீ மகிஸவர்த்தினி வெங்கட் என்னோட பொண்ணு என்று  கூறி உண்மையான பாசம் கொண்டு அவள் நெற்றியில் முத்தம் பதிக்க

இதை பார்த்து கொண்டு இருந்த ஷீலாவுக்கும் தேஜுவுக்கும் வார்த்தைகளே வர வில்லை.

மகிஷவர்த்தினி யாக மாறிய மகிழினி மாயாவை அணைத்து கொண்டாள்.

அம்மா நீங்கள் என்னோட அம்மாவா என்று கண்களில் கண்ணீர் சுரக்க கேட்ட அவளை 

ம்ம்ம் என்னோட தேவதை நீ தான் செல்லம்

இந்த கோட்டை க்கு இளவரசி நீ தான் செல்லம் 

என்னோட மகி குட்டி என்று அவளை சொல்ல இந்த மகி என்னும் பெயர் அவளை எதோ செய்தது.

தேஜு ஷீலாவை பார்க்க அவள் உடனே 

மேடம் அவங்க கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் அதிகமாக சிந்திப்பது அவர்கள் உடலுக்கு நல்லது இல்லை என்று கூற

மாயா மகி தலையை வருடி விட்டு சரி மா அம்மா உனக்கு சாப்பிட எதுவும் எடுத்து வருகிறேன் என்று கூறி அவள் சென்றாள்.

இங்கு சூர்யாவுக்கு எல்லாம் நியாபகம் வருவதற்காக உமா, சூர்யாவின் சிறு வயது புகை படங்கள் அனைத்தும் அவன் காலேஜ் ல படித்த படங்கள் அனைத்தும் காட்டினாள்.

மேலும் அவனுக்கு நியாபகம் வர வைக்க ஜனனியை வர வைத்தாள்.

இங்கு மகி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

மாயா மகியை பார்த்து விட்டு நேராக sp யை பார்க்க சென்றாள்.

ஏன் சூர்யா(s p) இப்படி பண்ற அவள் பாவம் இது தவறு அவள் வேறு ஒருவருக்கு சொந்தமான பெண் 

அதுவும் இல்லாமல் அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் மகிழினி என் வயிற்றில் பிறக்காமல் இருந்தாலும் கூட அவள் என் மகள் தான்

Sp நிதானமாக மாயாவை பார்த்து  பொம்மாயி எனக்கு சொந்தமாகி இருக்க வேண்டும் அத்தை 

அது உங்களுக்கும் தெரியும் தானே அதற்குள் பொம்மாயின் அப்பா எல்லாம் அந்த ஆள் தான் காரணம்

அவர் மட்டும் எனக்கு தடையாக இல்லாமல் இருந்து இருந்தால்

இன்னேரம் பொம்மாயி என்னோடு இத்தனை வருட வாழ்க்கை வாழ்ந்து இருப்பாள்

இல்ல சூர்யா(sp) நீ ஆயிரம் சொன்னாலும் இது தவறு அவள் உன்னை விரும்பவே இல்லை.

அத்தய்யா!!!!!

என்று கத்தியவன் என்னை பிடித்து இருந்ததால் தான் என் பெயரை வைத்த இருக்கும் அவனை திருமணம் செய்து கொண்டாள்.

மாயா அவனை பார்த்து சிரித்தவள் ம்ம்ம் சரி அப்படியே வைத்து கொள்வோம். 

எனக்கு ஒரு சந்தேகம் 

என்ன என்பது போல் அவன் பார்க்க 

அப்புறம் ஏன் மகியின் நினைவுகளை அழித்தாய்.

அதற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அத்தை எனக்கு பொம்மாயி வேண்டும் அவ்வளவு தான் 

என்னோடு வாழ தகுதி இருக்கும் ஒரே பெண் அவள் மட்டும் தான் அவள் எனக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

நீ ஆயிரம் சொல் சூர்யா (sp) ஒரு நாள் அவளுக்கு எல்லாம் தெரிய வந்தால் என்ன செய்வாய் ?

அந்த சூர்யா மகிழினி யை தேடி வந்தால் என்ன செய்வாய்?

அதற்குள் பொம்மாயி மனதிலும் அவள் வாழ்க்கையிலும் நான் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடுவேன்.

அந்த சூர்யா அவன் ஒரு கொடுக்கு அவ்ளோ தான் அவன் எல்லாம் ஒரு விஷயம் இல்லை என்று sp கூற 

நீ செய்வது எதிலும் எனக்கு துளி கூட விருப்பம் இல்ல

காதல் என்பது ஒருவருக்கு இருந்தால் போதாது அது இருவர் மனதிலும் இருக்க வேண்டும்.

நீ செய்வது பைத்தியகாரத்தனம்  என்று மாயா சொல்ல .

ஆமா எனக்கு பொம்மாயி மேல பைத்தியம் தான் நான் அவளை நேசிக்கும் அளவு எனக்கு அது சொல்ல தெரியவில்லை அவள் எனக்கு வேண்டும்.

மாயா இதற்கும் மேல் அங்கு நிற்க முடியாமல் அங்கு இருந்து செல்ல போக.

ஒரு நிமிடம் அத்தை இன்னும் மூன்று நாள் கழித்து எனக்கும் பொம்மாயிகும் நிச்சயம் வைத்து கொள்ளலாம்.

என்று அவன் சொல்ல மாயா எதுவும் சொல்ல முடியாது என்று சரி என்றாள்.

Sp அவளை பார்க்க செல்ல அவள் பால்கனியில் நின்று கொண்டு இருந்தாள் அவள் அருகில் ஷீலா இருந்தாள்.

Sp யை பார்த்ததும் ஷீலா எழுந்து செல்ல அவள் செல்வதை பார்க்க திரும்ப அங்கு sp நின்று கொண்டு இருந்தான்.

இவள் ஒரு அந்நியமாக பார்க்க sp அவள் என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு

பொம்மாயி நான் SPR மாயா அத்தையோட அண்ணா மகன் 

அவள் அவனை பார்த்து நீங்கள் என்னோட அம்மாவுக்கு சொந்தமா என்று அந்த மருண்ட விழிகளில் அவள் கேட்க

ம்ம்ம் ஆமா பொம்மாயி நீ என்னோட அத்தை பொண்ணு நான் உன்னோட மாவையா 

அவள் அப்படின்னா என்ன?

என்று புருவம் சுருக்கி கேட்க  அப்படின்னா மாமா அப்டின்னு அர்த்தம் என்று மகிழினியை நெருங்கி வர 

அவளுக்கு அது ஒரு பயமான ஒரு உணர்வு கொடுக்க அவள் நகர்ந்து சென்றாள்.

என்னாச்சு என்று அவன் அருகில் வந்து கேட்க  ஒன்னும் இல்ல எனக்கு உங்களை நினைவு இல்ல என்று கூறி அவள் செல்ல எத்தனிக்க

ஹே பொம்மாயி இங்கே வா உன்னை நான் ஒரு இடத்திற்கு கூட்டி போறேன் அப்போ உனக்கு நான் யாரு அப்டின்னு தெரியும் என்று sp அவள் கைகளை பிடிக்க மகிளினிக்குள் தேஜு கொடுத்த மருந்துவேலை காட்ட ஆரம்பித்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஒரு நிமிடம் sp பிடித்த கை  வியர்வையாக வழிய ஆரம்பித்தது. முகத்தில் மூக்கு கொஞ்சம் சிவப்பாக ஆரம்பித்தது

Sp யை திரும்பி பார்க்க அவன் பார்வை அன்பாக இருந்தாலும் கூட ஒரு பயத் தர நீங்கள் முன்னால் போங்க நான் வருகிறேன் என்று கூற

Sp மனதில் இப்போது தான் முதல் முறை பார்ப்பதால் இவ்வாறு படபடப்பாக இருக்கிறாள் ஆனால் sp அவள் முக மாற்றங்களை கவனிக்க வில்லை என்று அவன் அவள் கைகளை விட

Sp முன்னே செல்ல மகிழினி அவன் பின்னே சென்றாள். ஒரு  அறைக்கு செல்ல அந்த அறையை பார்த்தவுடன் மகிழினி கண்கள் பெரிதாகின.

அந்த அறை அது ஊதா நிறம் கொண்டது அந்த அறை முழுவதும் இவளது புகை படம் தான்

அதில் கொஞ்சம் படங்களில் மகிழினி காலேஜ் படிக்கும் போது லைப்ரரி ல spr சொல்லி கொடுப்பது இவள் அவனை பார்ப்பது 

அவளை மருத்துவமனைக்கு தூக்கி செல்வது போன்ற அனைத்து படங்களும் இருக்க

Spr அவள் அருகில் வந்தான் ஆனால் அவளை தொடவில்லை 

இப்போது தெரிகிறதா நான் யார் என்று  அவன் கேட்க

இது

இது

நான் தானா 

உண்மையாகவா என்று மகிழினி கேட்க

ம்ம்ம் இது நீ தான் உண்மையாகவே என்னோட பொம்மாயி தான் என்று அவன் சொல்ல

உங்களோட பொம்மாயி???? நானா  உங்க பெயர் என்ன என்று அவள் கேட்க

ம்ம்ம் நீ என்னோட பொம்மாயி தான் உனக்கும் எனக்கும் இன்னும் மூன்று நாளில் நீ பாதி எனக்கு சொந்தம் ஆகிடுவ என்று அவன் கூற

இது உங்கள் மாயா அம்மா விருப்பம் அப்புறம் என்னோட விருப்பமும் தான் என்று கூற

மகிழினி க்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை.

உனக்கு சம்மதம் தானே என்று sp எதிர்பார்ப்பு கொண்டு கேட்க

தேஜு அங்கே வந்தவள் உள்ளே வரலாமா என்று சொல்லி உள்ளே வந்தவள் sp மேடம் க்கு மருந்து சாப்பிடும் நேரம் இது என்று கூற 

Spr அவளை பார்த்து ஒரு கெட்டவன் போல் முறைக்க அவள் அதுக்கு அஞ்சவில்ல.

நீ போ அவள் வருவாள் என்று இப்போது அவள் கைகளை பிடித்து கொள்ள தேஜு பார்வை மகிழினிக்கு சங்கடமாக இருக்க 

அந்த இடத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேஜு அக்கா உங்களை sp என்று சொல்கிறார்கள் 

நான் எப்படி கூப்பிட வேண்டும் என்று அவள் கைகளை எடுத்து கொண்டு கேட்க

நீ என்னை மாவய்யா அப்டின்னு கூப்பிடு பொம்மாயி

சரி உங்க பேரு என்ன என்று மகிழினி கேட்க

அவன் மயக்கும் புன்னகை கொண்டு என்னோட பெயர் சூர்ய பிரகாஷ் ரெட்டி என்று சொல்ல 

மகிழினி கண்கள் அகல விரிந்தது. அதனை கண்டு கொண்ட தேஜு மகிழினி கைகளை பிடித்து கொண்டு

Sp மேடம் சரியான நேரத்திற்கு மருந்துசாப்பிட வில்லை என்றால் மயங்கி விழுந்து விடுவார்.

சரி கூட்டி போ என்று சொல்லி அவன் முன்னே செல்ல

சூர்யா  என்று வாய் விட்டு அவள் கூற போக தேஜு அவள் வாயில் கை வைத்து அடைத்து கொண்டாள்.

Sp திரும்பி அவர்களை பார்க்க தேஜு உடனே மகிழினி தலையில் வருடி விட்டு அழைத்து செல்வது போல் பாவனை செய்தாள்.

Sp மகிழினியை பார்த்து ஒரு புன்னகையுடன் சென்று விட்டான். 

தேஜு அவளை அறைக்கு அழைத்து வந்து மகி நீங்கள் அவர் முன்பு சூர்யா என்று சொல்ல கூடாது.

இல்லை அக்கா அந்த பெயர் சூர்யா 

அந்த பெயர் சூர்யா

எனக்கு எங்கோ கேட்டது போல இருக்கு

தொடரும்….

அடுத்து  சூர்யா மகிழினி சந்திப்பு தான்

சூர்யதேவ் கன்னத்தில் ஓங்கி மகிழினி அரைந்தாள்.

அவன் அவள் கைகளை பிடிக்க

ஹே என் கைய விடு டா 

என் கன்னத்தில்  அரைந்த உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு டி என்று மகிளினியை அருகில் இழுத்து …..?

 Episode 72, 

தேஜு அவளை அறைக்கு அழைத்து வந்து மகி நீங்கள் அவர் முன்பு சூர்யா என்று சொல்ல கூடாது.

இல்லை அக்கா அந்த பெயர் சூர்யா 

அந்த பெயர் சூர்யா

எனக்கு எங்கோ கேட்டது போல இருக்கு என்று சொல்ல தேஜுவுக்கு இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

தேஜு மனதில் இவளை நாம் தமிழ்நாடு கூட்டி சென்று விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இவளுக்கு நியாபகம் வந்து விடும் அப்போது இவளே sp யை வேண்டாம் என்று சொல்லி சென்று விடுவாள் .

அப்பொழுது தான் நமக்கு sp கிடைப்பான் என்று நினைத்தவள். மகிளினியை பார்த்து 

நீ சொல்வது சரி தான் சூர்யா தான் அவருடைய பெயர் அவரது குடும்ப பெயர்  தான் பிரகாஷ் ரெட்டி என்று சொல்ல

மகிழினி மனதில் சூர்யா என்னோட சூர்யா அப்டின்னு என்னோட மனசுக்கு தோணுது அந்த பெயரை கேட்டா எனக்கு ஒரு உணர்வு வருதே அது எப்படின்னு சொல்ல  தெரியல என்று முதல் முறையாக உண்மையாக சிரித்தாள்.

அவள் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்க செல்ல போக அதற்கும் முன் தேஜுவை பார்த்தவள்.

அக்கா எனக்கு உங்கள் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.

ம்ம்ம் செப்பு என்று கூற 

மகி தன் கண்களை அகல விரித்து இங்கு இருக்க எல்லோரும் வேற ஏதோ பேசாரங்க? அப்புறம்

நான் என்ன படிச்சு இருக்கேன்?

இது எந்த இடம் ?

தேஜு மனதில் இதை தான் டி நான் எதிர்பார்த்தேன்.

மகி உன்னோட சொந்த ஊர் இது இல்ல மா, இது உன்னோட அம்மா மாயவோட சொந்த ஊர் உங்க அப்பவோட ஊர் தமிழ்நாடு.

இப்போ நம்ப இருக்க இடம் ஆந்திரா இங்க எல்லாரும் தெலுங்கு பேசுவாங்க

நீ பிறந்தது வளர்த்தது எல்லாமே தமிழ்நாடு தான்

நீ spr காலேஜ் ல b.sc cs படிச்சு இருக்க 

அது உன்னோட மாமா i mean பிரகாஷ் சார் காலேஜ்  என்று தேஜு அவளை பார்த்து ஒரு தீர்க்கமான தோரணையில் கூற

அக்கா எனக்கு எப்படி எல்லாம் மறந்து போச்சு என்று அவள் கேட்க 

அவளின் முக மாற்றங்கள் கவனித்த தேஜு இப்போதைக்கு இது போதும் மகி நான் மீதி அப்புறம் சொல்றேன் நீ இப்போ தூங்கு என்று கூற 

அவளும் சரி என்று உறங்க சென்றாள். 

இங்கு சூர்யாவுக்கு எல்லாம் காட்ட அவனோ அம்மா எனக்கு எதுவும் நியாபகம் வரல மா எனக்கு இங்க வீட்டில் இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு மா

ஜானு அவனை பார்த்து அத்தான் நம்ப வெளிய போகலாமா நான் உங்களை கூட்டி செல்கிறேன்.

உமா சூர்யாவை பார்த்து சரி நீ ஜானு கூட வெளிய போய்ட்டு வா நான் உங்களுக்கு இரவு உணவு செய்கிறேன் என்று சொல்ல.

அத்தான் வாங்க என்று சூர்யாவை கடற்கரை க்கு அழைத்து சென்றாள். அந்த அலையின் சத்தம் கேட்க சூர்யாவுக்கு ஒரு குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது.

சூர்யாவுக்கு தலை எல்லாம் ஏதோ வலிப்பது போல் இருக்க உடனே ஜனனி வா மா வீட்டுக்கு போகலாம் என்று கூறி கொண்டே தலை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தான்.

ஜனனி அவன் அருகில் சென்று அவனை எழுப்ப முயற்சி செய்தாள். உடனே இன்பாவுக்கு கால் செய்து சொல்ல 

இன்பா அவர்கள் இருக்கும் இடம் வந்து சூர்யாவை தூக்கி கொண்டு பிரியா இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

ப்ரியா அவனை பரிசோதனை செய்து பார்த்து விட்டு இன்பா கிட்ட வந்தவள்.

இன்பா பிளட் result வந்து விட்டது என்று சொல்ல 

அதுல எதுவும் தெரிஞ்சதா

ம்ம்ம் சூர்யாவுக்கு கொடுத்த அந்த drug மார்க்கெட் க்கு புதுசு அவரு கொஞ்சம் pressure கொடுத்து யோசித்தாலும் இப்படி தான் நடக்கும்.

இது எப்போ ப்ரியா சரி ஆகும்.

அதுக்கு ஒரு வழி தான் இருக்கு என்று அவள் கூற 

என்ன அது என்று இன்பா கேட்க ஒன்னு நம்ப brain ஷாக் கொடுக்கலாம் . அப்போ ரெஸ்பான்ஸ் பண்ண சான்ஸ் அதிகம் தான்

அப்போ அதை செய்யலாம் பிரியா

ஆனால் அதுல ஒரு சிக்கல் சூர்யா இருக்க நிலையில் இப்போ இப்படி செய்தால் அவன் உயிருக்கு ஆபத்து.

அந்த drug பக்க விளைவு எப்படி இருக்கும் அப்டின்னு நமக்கு தெரியாது கொஞ்சம் கஷ்டம் தான் இன்பா 

அவனோ இதுக்கு வேற சொல்லுஷன் இல்லயா 

இல்லை அப்டின்னு சொல்ல முடியாது இருக்கு 

சூர்யா எதையும் யோசிக்காமல் அவனை கொஞ்சம் பிஸி யாக வைத்து கொள்ளுங்கள். தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்து வீரியம் குறைய எப்படியும் ஒரு 2 மாதம் ஆகும்.

கொஞ்சம் நேரம் அவன் இங்கே இருக்கட்டும் நான் அவனுக்கு சில பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு பிரியா அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இப்படியே இரண்டு நாள் சென்றது சூர்யாவை இன்பா ரகு ஆஃபீஸ் அழைத்து சென்றான். சரவணன் அங்கு இருப்பதால் சூர்யாவை பார்த்து கொள்ள கொஞ்சம் எளிதாக இருக்கும்.

இங்கு மகிழினி கொஞ்சம் இல்லை நிறையவே ஷீலா, தேஜு கூட ஒட்டி கொண்டாள்.

தேஜுவிற்கு அவளை பிடிக்க தான் செய்தது இருந்தாலும் ஒரு ஒதுக்கம் காட்டினாள்.

மகிழினி க்கு இன்னும் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்க இப்போது spr கிட்ட தயக்கம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.

அதை spr தன்னுடைய வெற்றியின் முதல் படி என்று நினைத்து  கொண்டான் ஆனால் அது தேஜு க்கு spr ஐ நெருங்க விதி தானாக ஒரு படியை அமைத்து கொடுத்தது.

மகிழினி spr சாப்பிடும் போது அருகில் வந்து அவள் பரிமாற அமர 

Spr இப்போது இறுக்கம் இல்லாமல் இயல்பாக அமர்ந்து இருந்தான்.

மாவய்யா என்று அந்த அசைவ உணவை எடுத்து வைக்க 

ம்ம்ம்ம் பொம்மாயி 

நான் MBA பண்ணட்டுமா 

Sp அவளை பார்க்க 

உங்களுக்கு வேணாம் அப்படின்னா நான் பண்ணல.

Sp சிரித்து கொண்டே என்னோட பொம்மாயி  கேட்டால் நான் இல்லை என்று சொல்வேனா 

ம்ம்ம் நீ பண்ணு 

Sp இப்போது அவளை பார்த்து எங்கே பண்ண போற

ம்ம்ம் நம்ப காலேஜ் ல தான் என்று கூற

Sp க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஓ இப்போது தான் நீ என்னோட பொம்மாயி 

ஆனால் ஒரு சின்ன request

என்ன என்பது போல் sp பார்க்க 

நான் தமிழ்நாட்டில் பண்ணட்டுமா என்று கேட்க

Sp ஒரு நிமிடம் திகைத்தான்.

மாவய்யா பிலீஸ் பிலீஸ் என்று அவள் கேட்க

அப்படினா நீ எனக்கு சொந்தமானதுக்கு அப்புறம் தான் படிக்க போகனும் இதுக்கு உனக்கு ok வா

மகிழினி என்ன என்பதை போல் பார்க்க

Sp அவளை பார்த்து சிரித்து கொண்டே நீயும் நானும் நிச்சயம் செய்து கொள்ளலாம் . 

அப்புறம் ஒரு 3 மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் ok வா உனக்கு என்று கேட்க

மகிழினி இப்போது ok மிஸ்டர் சூர்ய பிரகாஷ் ரெட்டி நான் நிச்சயம் செய்து கொள்கிறேன் 

அப்போதே உங்களுக்கு பாதி சொந்தம் ஆகி விடுவேனே  அதுக்கு அப்புறம் join பண்ணட்டுமா

இதை நீங்கள் தானே என் கிட்ட சொன்னேங்க என்று அவள் கேட்க 

இந்த அளவுக்கு மறுப்பு சொல்லாமல் நம்மை திருமணம் செய்கிறேன் என்று கூறியவளை பார்த்து ரசித்தவன்.

ம்ம்ம் ok 

நாளைக்கு engagement ok வா பொம்மாயி 

Ok மாவய்யா என்று அவள் எழ போக அவள் கைகளை பிடித்தான் spr 

உடனே அந்த தொடுதல் அவளுக்கு இனம் புரியாத ஒரு கோபத்தையும் வெறுப்பையும் வேக கொடுக்க அவன் கைகளை தட்டி விட சென்றவள்.

தன் கைகளை உருவி கொள்ள செல்ல அப்போ அவள் பார்வை  மாற்றத்தை கண்ட spr 

என்னாச்சு பொம்மாயி  நான் உன் கையை பிடிக்க கூடாதா.

இப்போது அவள் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பிக்க

அப்டி அப்டி இல்ல

என்று ஒரு நிமிடம் தன்னை கட்டு படுத்தி கொண்டு  எதுவும் பேசாமல் நிற்க

Spr அவளை பார்த்து உன்னை நான் எனக்கு சொந்தமாக்கிய பிறகு தொடலாமா என்று அவன் கேட்க

ம்ம்ம் என்று ஒற்றை பதில் சொல்லி மெதுவாக ஓடி விட்டாள்.

Spr க்கு அவளது இந்த தோற்றம் புதுமையாக இருந்தாலும் அவள் திருமனத்திற்கு  ஒத்து கொண்டது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததால் அதனை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.

மகி நேராக அவளது அறைக்கு வந்தவள் மெத்தையில் அமர்ந்து தன்னை அசுவாசபடுத்த நடுங்கும் கைகளால் தண்ணீர் எடுத்து குடித்தாள்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள் ஷீலா மகி எங்கே நம்மை தேடி இன்னேரம் வந்து இருப்பாளே என்று அவளை தேடி வந்து பார்க்க அவள் மயங்கி கிடப்பதை பார்த்து பதறி அவளுக்கு முதலுதவி செய்தாள்.

அடுத்த நாள் மனதுள் சஞ்சலத்துடன் எழுந்தவள் . மகி தன்னை தானே கேட்டு கொண்டாள் . மாவய்யா அருகில் வந்தால் நமக்கு ஏன் இப்படி  தோன்றுகிறது.

மகி இது தவறு அவர் உன்னுடைய சூர்யா இப்படி நீ நினைக்காதே அவருக்கு நீ சொந்தமாக போகிறாய் என்று வலுக்கட்டாயமாக தன் எண்ணத்தை மாற்றி கொள்ள முயற்சி செய்தாள்.

அடுத்த நாள் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்க பட்ட spr க்கு சொந்தமான கோட்டையில் வண்ண விளக்குகள் , பூக்கள் என அந்த இடம் தேவ லோக திருமணம் செயும் இடம் போல காட்சி அளித்தது.

Spr பூரிப்பாக இருந்தான் அவன் நினைத்தது நடக்க போகிறது அவனுடைய பொம்மாயி அவனுக்கு சொந்தமாக போகிறாள்.

அந்த மாநிலத்தின் முக்கிய புள்ளிகள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு நம்மை அழைக்க மாட்டார்களா என காத்து கிடந்தனர்.

யார் யார் வந்தார்களோ அவர்கள் அதிஷ்டம் நமக்கு என அடக்கி வாசித்தனர்.

Spr, குரு, நீலா, பிரகாஷ், வெங்கட், மாயா என அனைவரும் அங்கு இருந்தனர். 

நீலா மனதுள் இந்த பெண்ணுகாக நம்மை பகைத்து இத்தனை வருடம் கழித்து நம்மிடம் பேசி இருக்கிறான்.

இனி அவனுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும் அது தான் அவன் வாரிசு அந்த பெண்ணின் மகன் நிதின் இருக்கிறானே.

ஊதா வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்த இருக்கையில் ராஜதோரணையுடன் ஒரு ராஜாவை போல் வந்து அமர்ந்தான் சூர்ய பிரகாஷ் ரெட்டி

அவன் எதிர்பார்த்த நாள் இது தானே spr அவனுடைய நாயகி அப்படி சொல்ல வேண்டாம் பொம்மாயிக்காக காத்து கொண்டு இருக்க 

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அழகு பதுமையாக அவள் நடந்து வருகிறாளா இல்லை மிதந்து வருகிறாளா என்பது யாருக்கும் தெரியவில்லை.

அப்படி வான் உலகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாக வந்தாள் மகிஸவர்திணியாக மாறிய மகிழினி

அந்த ஊதா வண்ண சாரியில் வேலைப்பாடுகள் எல்லாம் வைர கற்கள் பதித்து இருந்தது. அவளுடைய ஒப்பனை அவளது அழகை குறைக்காமல் ஒப்பனை அதிகம் இல்லை அவளது அழகுக்கு கொஞ்சம் மெருகு ஏற்றியது போல இருந்தது.

அவளுடைய அணிகலன் எல்லாம் spr குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை பாரம்பரிய நகைகள் தான்.

தேஜு விற்கு இதை பார்த்து மனம் கொதித்து கிடந்தது எனக்கு இது இன்னும் கொஞ்சநாளல் கிடைக்கும்.

அவளுடைய கண்கள் மை பூசி மான் விழிகள் போல அங்கும் இங்கும் கீழ குனிந்து கொண்டு இங்கு நடப்பதை ஒரு வித பதட்டம் கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள்.

என மனதில் நினைத்து கொண்டாள். நிச்சயம் நடக்க இருக்கும் முன் எதுவும் சாப்பிட கூடாது என்பது இவர்களின் குடும்ப முறை

அதனால் spr எதுவும் சாப்பிட வில்லை அந்த நிச்சய பத்திரிக்கை வாசிக்க இருவரும்  மோதிரம் மாற்றி கொள்ளும் நேரம் வர இருவரும் எழுந்தனர்.

Spr அவளை பார்த்து பொம்மாயி  உன்னோட கையில் நான் ring போடவா என்று அவன் அவளின் அருகில் வந்து கேட்க

மனமோ வேண்டாம் என்று சொல்ல மகி உதடுகள் ம்ம்ம் என்று கொட்டின

அவன் அவள் விரலை  பிடித்து அந்த வைரம் மற்றும் மரகத கற்கள் பதித்த மோதிரம் போட இப்போது மகி முறையானது.

அவள் நடுங்கும் கைகளில் அந்த மோதிரம் வாங்கி அவனது கைகளில் போடும் நேரம் கண்கள் சொருகி……?????

தொடரும்.

Episode 73, 

அவன் அவள் விரலை  பிடித்து அந்த வைரம் மற்றும் மரகத கற்கள் பதித்த மோதிரம் போட போகும் போதே,

மகி க்கு இது முன்னவே நடந்தது போல தோன்றியது ஆனால் அதை விட அவள் மனது மிகவும் பாரமாக இருந்தது. 

அவள் நடுங்கும் கைகளில் அந்த மோதிரம் வாங்கி அவனது கைகளில் போடும் நேரம் கண்கள் சொருக அவளுக்கு யாரோ மகி கைகளில் மோதிரம் போடுவது போலவும் அந்த ஆடவனுக்கு மகி திரும்ப மோதிரம் போடுவது போல தோன்ற தலை அவளுக்கு சுற்றியது .

அவள் கீழ விழ செல்லும் முன் அவளது இடையை பிடித்து தாங்கியவன். என்னாச்சு பொம்மாயி என்று கேட்க அருகில் வந்த தேஜு ஒன்னும் இல்ல sp 

மகி பிடிவாதமா விரதம் இருப்பேன் அப்டின்னு சொல்லி சாப்பிடவே இல்லை அதனால் தான் என்று அவள் விளக்கம் கொடுக்க 

இப்போது அங்கு இருந்த பண்டிதர்

நிச்சயம் என்பது பெண்ணை உறுதி படுத்த மாப்பிள்ளை செய்யும் ஒரு உறுதி பேச்சு

அது சிறப்பாக நடந்து விட்டது இனி உங்கள் விருப்பம் தான் மோதிரம் அணிவதும் அணியாமல் போவதும் என்று அவர் கூற,

உடனே குரு sp அருகில் வந்து

அண்ணா அது தான் வதினாவுக்கு நீ போட்டு விட்டாயே இனி என்ன

இனி அடுத்து கல்யாணம் தான் என்று கூறினான்.

இல்ல குரு பொம்மாயி எனக்கு போட்டு விடவே இல்லையே அதற்குள் மயங்கி விட்டாளே.

அன்னயா இப்போ அவங்க போட்டு விடணும் அவ்ளோ தானே தேஜு இங்க வந்து வதினா கைய புடி தேஜு இங்கே வா கொஞ்சம் ஹெல்ப் பண்ணு என்று குரு சொல்ல 

 மயங்கிய மகிழினி கைகளை பிடித்து போடுவது போல தேஜு போட்டு விட்டாள். மகிழினி மயங்கியதை பார்த்த ஷீலா பதறி அடித்து கொண்டு ஓடி வந்து அவளை அழைத்து சென்றனர்.

இருந்தாலும் sp க்கு மனம் மிகவும் கவலையாக இருந்தது. அதனை பார்த்த குரு அண்ணா நீ கவலை பட வேண்டாம் வதினா உனக்கு தான்

அங்கு மகிழினி வந்த தோற்றம் கண்டு யார் இந்த  பெண் இவ்வளவு அழகா என்று மனதில் மட்டுமே வர்ணித்து கொண்டனர் வெளியே முகத்தை காட்டினால் உயிர் போய் விடும்.

அங்கு நடந்த நிச்சயம் பற்றி போட்டோஸ் , வீடியோ எடுக்க சில தொலை காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே அழைத்து இருந்தனர்.

இப்போது sp குரு இங்கு வா

என்று அழைத்து நாளை எந்த ஒரு செய்தி தாள்களிலும் பொம்மாயி படங்கள் வர கூடாது யாரும் அவளை ரசிக்க கூடாது என்று கூற

அண்ணா இத நீ சொல்லனுமா  எனக்கு நீ சொல்வதற்கு முன்னவே இந்த வேலையை முடித்து விட்டேன் என்று கூற sp திருப்தியாக அவனை பார்த்து 

உன்னால தான் எனக்கு இப்போ பொம்மாயி கிடைத்து இருக்கிறாள் என்று கட்டி அணைத்து கொண்டான்.

சரி அண்ணா கோபம் மட்டும் என் மேல் பட கூடாது என்று சொல்லியவன் 

அண்ணா நீங்கள் வதினாவ போய் பாருங்கள் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று குரு செல்ல

Sp மகியை பார்க்க சென்றான்.

குரு  கொஞ்சம் தனியாக வந்தவன் அவளது புகைப்படம் தன் போனில் எடுத்து பார்த்து அதை வருடியவன்

ஏய் ஒரு நாள் மட்டும் என்னோட நீ இருந்திருந்தால் உன்னோட அக்காவுக்கு இவ்ளோ பிரச்சனை வந்து இருக்காது டி.

எனக்கு நீ வாழ்க்கை முழுதும் தேவை இல்ல எனக்கு ஒரு நாள் போதும் பார்த்தேன் டி உன்னோட கல்யாணம் உன்னோட புருஷன் நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்.

நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ வாழு அது எனக்கு தேவையில்லை ஒரு நாள் ஒரே நாள் மட்டும் என் கூட என் பக்கத்தில் நீ வேனும்.

உன்னை நான் வர வைப்பேன் இல்ல உன்னை வந்து தூக்கிட்டு போயிடுவேன் என்ன நான் இவ்ளோ நாள் காத்து இருப்பது நீ இஷ்ட பட்டு என் கூட வந்தால் அதை விட வேற எந்த விஷயமும் பெருசு இல்ல.

சரி இப்போ உன்னோட அக்கா எப்படி என்னோட அண்ணாவுக்கு சொந்தமாகி இருக்கிறாள் என்று  நீ பாரு நீ துடிக்கணும் டி நீயா என்கிட்ட வரனும் என்று

சில நிச்சயம் செய்யப்பட்ட போட்டோஸ் எடுத்து அவளது எண்ணுக்கு அனுப்பி வைத்தான்.

குரு யாரை பற்றி பேசுகிறான்????( என்று தெரிந்து இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க)

ஷீலா அவளை படுக்க வைத்து மகி வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க அது நன்றாகவே இருந்தது.

மகிக்கு இப்போது கர்ப்ப கால முதல் மாத அறிகுறிகள் ஆரம்பித்து விட்டது. இன்னும் சில நாட்களில் அனைத்து அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து விடும்.

Sp மகியை பார்க்க முகம் எல்லாம் வெளரி ரத்த பசை இழந்து காணப்பட்டாள்.

Sp அவன் இயல்புக்கு திரும்பியவன் அவளுக்கு எப்போ சரி ஆகும் என்ற  அந்த ஒற்றை கேள்விக்கு ஆயிரம் பதில் பொருள் கேள்வி அடங்கி இருந்தது.

தேஜு மனதில் ஷீலா எதுவும் உளறி விட கூடாது என்று வேகமாக வந்தாள்.

ஷீலா sp யை பார்த்து சார் அவங்களுக்கு கொடுத்த மருந்தோட பக்க விளைவு இப்போ தான் ஆரம்பிக்குது .

இது சாதாரணம் தான் நீங்கள் கவலை பட தேவை இல்லை

அதற்கும் சேர்த்து மருந்து கொடுத்தால் அவர்கள் உடல் நலம் பாதிக்கும்

நீங்கள் கவலை பட வேண்டாம் இன்னும் 10 நிமிடத்தில் கண் முழித்து விடுவார்கள்.

என்று ஷீலா நிதானமாக கூற அதை கேட்டவன். தேஜுவை பின்னால் திரும்பி பார்க்காமல் அவள் வந்த அரவம் கேட்டு

பொம்மாயி எழுந்ததும் சாப்பிட அழைத்து வா என்று கூறி அவன் கிளம்பினான்.

ஷீலா தேஜுவை பார்த்து sp போன திசை பார்த்து கதவை தாழிட்டு தேஜு நல்ல வேலை குழந்தை துடிப்பு நன்றாக இருக்கு

பிலீஸ் நீ தயவு செய்து அந்த மாற்று மருந்து கொடு அப்பொழுது தான் அவள் கொஞ்சம் நன்றாக இருப்பாள்.

நீ நினைத்த மாதிரி இல்லை மகி அவள் கள்ளம் கபடம் அறியாதவள். 

தேஜு அவளை பார்த்து ஒரு ஏளன புன்னகையுடன்

அவள் நல்லவள்!!!! ம்ம்ம்

உன்னை அவள் பக்கம் அதற்குள் இழுத்து விட்டாளா.

ஷீலா அவளை பார்த்து

ஏன் டி அப்டி பேசற

அவள் நல்ல பெண்

அவள் கஷ்ட படுவது என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை.

ம்ம்ம்ம் ஒரு முக்கிய விஷயம் நாளைக்கு குழந்தைக்கு வளர்ச்சி எப்டி இருக்கு அப்டின்னு செக் பண்ணனும்.

என்று இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே மகி தன் கண்களை மெதுவாக சுழற்றி பார்க்க 

அங்கு தேஜு , ஷீலா இருக்க அக்கா எனக்கு பசிக்குது ரொம்ப என்று சிறு பிள்ளை போல் கூற 

வா மகி நாம்ப சாப்பிட போகலாம் என்று ஷீலா அழைத்து  செல்கிறாள்.

நேராக சாப்பிடும் இடத்திற்கு ஷீலா அவளை அழைத்து சென்றாள்.

அங்கு spr இருப்பது பார்த்து அவன் அருகில் சென்ற மகி

என்னை மன்னித்து விடுங்கள் மாவய்யா நான் எப்படி மயங்கினேன்  என்று தெரியவில்லை.

சரி விடு பொம்மாயி இப்போ சாப்பிடலாம் என்று கூற ஷீலா அவளுக்கு பிடித்த சைவ உணவுகளை எடுத்து வந்து கொடுக்க அதை பார்த்து மகி சலுப்பாக எடுத்து இரண்டு வாய் சாப்பிட்டவள்

அங்கு அருகில் அசைவ உணவுகளை பார்த்து முதன் முறையாக சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

ஏன் என்றால் அது அவள் வயிற்றில் உள்ள சூர்யாவோட குழந்தையின் வேலை தான் பொதுவாக கர்ப்ப காலத்தில் உணவுகளில் மிகவும் பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகும். பிடிக்காத உணவுகளை கூட விரும்பி சாப்பிட தோன்றும்.

மகி ஷீலா கிட்ட அக்கா எனக்கு அது வேனும் எனக்கு சாப்பிட தோணுது நிறைய வேனும் என்று சொல்ல ஷீலா அவள் காட்டிய உணவை பார்த்து sp யும் , ஷீலாவும் ஒரு நிமிடம் அதிர்ந்தனர்.

இங்கே சூர்யாவை பரிசோதனை செய்து விட்டு அந்த பரிசோதனை முடிவுகள் இரண்டு நாள் கழித்து கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு அவனை அழைத்து வீட்டில் கொண்டு போய் விட்டான் இன்பா.

சூர்யாவின் வீட்டில் நாளையில்  இருந்து சூர்யா ரகு வின் ஒரு கிளை இங்கு சரவணன் பார்த்து கொள்கிறான்

அந்த ஆஃபீஸ் க்கு செல்ல போவதாகவும்

ஜானுவை நீ எப்போதும் சூர்யாவின் அருகில் இருக்க வேண்டும் என்று கூறி விட்டு செல்ல

சரி அண்ணா என்று ஜானு சொல்ல இன்பா கிளம்பினான்.

அப்பொழுது ஒரு உளவாளி கிட்ட இருந்து sp வீட்டில் ஒரு மிக பெரிய விழா நடந்தது பற்றியும் அவருக்கு நிச்சயம் ஆனது அந்த பெண்ணின் படம் கிடைக்க வில்லை ஆனால் அவள் ஒரு புறம் திரும்பி இருக்கும் படங்கள் போன்ற சில விவரம் இன்பாவின் எண்ணுக்கு செய்தியாக வந்தது.

Sp மகி சொன்னது கேட்டு அதிர்ச்சி  அடைந்து அவளை பார்த்து வேணாம் பொம்மாயி என்று கூற

சிறு பிள்ளை போல் எனக்கு வேனும் சாப்பிட வேனும் பிலீஸ் பிலீஸ் என்று அவள் கேட்க

அங்கே வந்த தேஜு இதை பார்த்து நீங்கள் போய் சாப்பிடுங்கள் என்று மகி கிட்ட சொல்ல i லவ் யூ அக்கா என்று கூறி தேஜு கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து அவள் சிக்கன் சாப்பிட சென்றாள்.

Sp அவளை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா அவள் இதை சாப்பிட்டால் உடம்புக்கு முடியாமல் போய் விடும். முகம் எல்லாம் சிவப்பாக மாறுமே 

தேஜு அவனை பார்த்து என்கிட்ட மருந்து இருக்கு என் டாடி அதற்கு மருந்து கண்டு பிடித்து விட்டார் என்று கூறி அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

Sp தேஜுவை பார்த்து இவள் இவளை புரிந்து கொள்ள முடியவில்லையே. என்று அவன் நினைத்து விட்டு மகி அருகில் சென்று அவளுக்கு நல்ல துண்டுகளாக பார்த்து சாப்பிட கொடுக்க அவள் நன்றாக சாப்பிட்டாள்.

அடுத்த நாள் அனைத்து ஊடகம், பத்திரிகை, செய்தி தாள்களிலும் தலைப்பு , முகப்பு செய்திகள் அனைத்திலும் சூடான செய்தியாக spr மகி நிச்சயம்  தான்

அனைவருக்கும் யார் அந்த பெண் அவ்வளவு அழகா இத்தனை வருடங்கள் காத்திருந்து இப்போது நிச்சயம் செய்து இருக்கிறார்கள் என்றால் அந்த பெண்ணுக்காக தான்  என்று பலர் பேச,

அந்த பெண் spr அத்தையின் மகள் அவள் கோமாவில் இருந்தாளாம் இப்போது தான் எழுந்து இருக்கிறாள் என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதமாக பேசினார்.

இப்படியே இரண்டு நாள் செல்ல மகி நேராக தமிழ்நாடு செல்ல அனைத்து வேலைகளையும் முடித்து தயராக இருந்தாள்.

அவளுடன் ஷீலா , மாயா, தேஜு, வெங்கட் செல்ல sprக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் ஒரு வாரம் கழித்து வருவதாக கூறி 

ஷீலா , தேஜுவை அவள் கூடவே இருக்க வேண்டும் என்றும் நிதினை மாயா கூட இருப்பதாகவும் சொல்லி அனுப்பி வைத்தான்.

மகி முதன் முறையாக நிதினை பார்த்து அவனை ஆசையாக அனைத்து முத்தம் பதிக்க அவன் சக்தியை போல நிதின் ஒட்டி கொள்ள மகி மனதில் ஏதோ மிகவும் கஷ்டமாக இருந்தது.

சக்தியை பிரிந்து இத்தனை நாள் அவள் இருந்தது இல்லை அவளுக்கு  நிதினை பார்த்து இவன் யார் மகன் என்று மகி கேட்க 

மாயா உன்னோட மகன் தான் என்று சொல்ல மகிக்கு அதிர்ச்சி அடைந்தாள்.

மாயா அவளை பார்த்து இது sp யோட மகன் அவனுக்கு அம்மா கிடையாது egg donor முறையில் வாடகை தாய் மூலம் நீ கோமாவில்  இருந்ததால் உன் அத்தை மாமா வற்புறுத்தல் காரணமாக பெற்று கொண்டான்.

என்று அவள் கூற தேஜுவிற்கு அப்படியே ஒரு நிமிடம் செத்து விடலாம் போல இருந்தது.

என்று மாயா கூறியவள் உனக்கு இவனை பிடிக்க வில்லையா நீ sp யை வேண்டாம் என்று சொல்லி விடுவாயா என்று கேட்க 

இல்லை இல்லை எனக்கு இவனை மிகவும் பிடித்து இருக்கிறது. என் மேல் மாவய்யா க்கு அவ்ளோ காதல், பாசமா என்னால் நம்ப முடியவில்லை எனக்காக இவ்வளவு நாள் காத்து இருக்கிறாரா  என்று மகி மனதில் sp பற்றி நினைத்தாள்.

எந்த ஒரு தடையும் இன்றி தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தாள் மகி.

இவள் வருகைக்கு காத்து இருந்தது போல சூர்யாவும் தன் அலுவலகம் செல்ல ஆயத்தமானான்.

மகி அவள் மனதில் சூர்யா மாவய்யா உங்களுக்கு என் மேல் இவ்ளோ காதலா இனி நானும் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.

என்னுடைய காதலை உங்களுக்கு காட்ட போகிறேன் என்று அவள் சொல்ல

அவளுடைய காதலை பெறுவதற்கு சூர்யா கிளம்பினான்.

தொடரும்……

Episode 74, 

மகியின் முக மாற்றங்களை கவனித்த தேஜுவுக்கு முதல் முறையாக கொஞ்சம் பயமாக இருந்தது 

தேஜு மனதில் இவள் sprயை மனதில் நேசிக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் 

இதற்கு ஏதாவது செய்தே ஆக  வேண்டும் என்று நினைத்தவள் மனதில் முதலில் தோன்றிய நபர் இன்பா தான்

தேஜுவை spயோட ஆட்கள் கண்காணித்து கொண்டு இருப்பதும் அவளுக்கு தெரியும்.

இப்போது என்ன செய்வது 

எதுவும் செய் தேஜு இல்லை அவன் வேகத்தை பார்த்தால் சீக்கிரம் இவளை மாற்றி  விடுவான் என்று நினைத்தவள்.

அதற்கான வேலையில் இறங்கினாள்.

இங்கு குரு அனுப்பிய அனைத்து புகை படங்களும் மை விழி எண்ணுக்கு வந்தது. மை விழி ஒரு புதிய எண்ணில் இருந்து மெஸ்ஸேஜ் வர யாரது என்று எடுத்து பார்க்க

பார்த்த வேலையில் போன் தவற விட்டாள். அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

நடுங்கும் கைகளில் அந்த போன் எடுத்து புகை படத்தை பார்க்க  மகிழினி மிகவும் பயந்த மருண்ட விழிகளோடு sp இவள் கைகளில் மோதிரம்  ஏற்று  கொண்டு பின் 

சில புகைப்படங்கள் அவள் சிரித்து கொண்டு இருப்பது போல இருக்க அதை பார்த்த மை விழி தலையில் அடித்து கொண்டே அங்கு உறங்கி கொண்டு இருந்த சக்தியை பார்த்தாள்.

அந்த எண் யார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

மறுமுனை ஏற்க பட்டது ஹே” cute queen”

கியூட் குயின்” நீயா என்கிட்ட போன் பண்ணி பேச, நான் இவ்ளோ வேலை பண்ண வேண்டி இருக்கு ,”

என்று குரு இயல்பாக பேச 

மை விழி ஏன்டா இப்படி என்னை torture பண்ற என்னோட தங்கைய விடு டா அவள் பாவம்

இப்படி என் தங்கை குடும்பம் மொத்தத்தையும் இப்படி கொடுமை பண்றீங்களே நாங்க என்னடா உங்களை செய்தோம்.

ஓ இது வேறயா நீ தான் அக்காவா சரி அது எனக்கு தேவை இல்லாத ஒன்னு நம்ப விஷயத்துக்கு வரலாம்.

மை விழி திகைத்து கொண்டே என்ன நம்ப விஷயமா என்று  கேட்க,

ம்ம்ம் ஆமா 

ந .. நமக்குள்ள என்ன என்று உதடுகள் தந்தி அடிக்க அவள் கேட்க 

ஹே நடிக்காத டி உன்னோட தங்கையை (மகிழினி)விட நீ ரொம்ப நடிக்கிற

நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியவில்லை தயவு செய்து மகிழினி ய விட்டு விடுங்கள்.

அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்று மை விழி அழ

நீ cry பண்றது கூட எனக்கு ஒரு ஓட்கா பாட்டிலை காலி பண்ண மாறி இருக்கு டி 

அவள் தேம்பி தேம்பி அழுதாள் போதும் டி இப்போவே உன்னோட முகம் எல்லாம் ரெட் ஆ மாறி இருக்கும் நீ அழுகிறத நான் ரசித்து விட்டேன்.

இப்போ எனக்கு ஒரு நாள் மட்டும் நீ தேவை என்று குரு சொல்ல

மை விழி இந்த வார்த்தைகளை கேட்டு உறைந்தாள்.

இப்போது அவள் தன் கண்களை துடைத்து கொண்டு அது மட்டும் எப்போதும் நடக்காது.

ஏன் டா நீயெல்லாம் ஒரு மனுஷனா கல்யாணம் ஆன பொண்ண கடத்தி கொண்டு போய் உன்னோட அன்னன் கல்யாணம் செய்யுறான் .

நீ ஒரு கல்யாணம் ஆன பொன்னு கிட்ட வந்து இப்படி பேசற என்று அவள் ஆதங்கம் கொண்டு பேச

நீ இதெல்லாம் என்கிட்ட சொல்றது சுத்தம் waste நான் உன்னை காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போதுல் இருந்து கேட்கிறேன்.

நீ மட்டும் வந்த அப்படின்னா என் அண்ணன் கிட்ட இருந்து  உன்னோட தங்கையை நான் கூட்டி வந்து உன்கிட்ட விட்டு விடுவேன் என்று குரு சொல்ல

மை விழி அவனிடம் உன் பேச்சை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல டா 

நான் வர மாட்டேன் என்னோட தங்கையை எப்படி மீட்கனும் அப்டின்னு எனக்கு தெரியும்.என்று மை விழி சொல்ல

ம்ம்ம் அதையும் பார்க்கலாம் நீயே என்னை தேடி வருவ நான் வர வைப்பேன் டி என்று கூறி 

நான் இப்படியே உன்கிட்ட பேசிட்டு இருந்தால் அப்புறம் என்னுடைய mind மாறி இப்போவே உன்னை தூக்கி என்று அவன் சொல்லி கூட முடிக்க வில்லை மை விழி போன் கட் செய்தாள்.

இப்போது அவளுக்கு என்ன செய்வது இதை யாரிடம் சொல்வது என்று ஒன்றும் புரியாமல் அழுது கொண்டே இருக்க அப்போது அங்கு கார்த்திக் வந்தான்.

அவனை பார்த்ததும் ஓடி சென்று அணைத்து கொண்டாள் மை விழி.

ஹே விழி என்னாச்சு மா ஏன் இப்படி அழற 

அவளிடம் பதில் இல்லை

மை விழி இங்கே பாரு என்று அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க வைக்க

கார்த்திக் என் கூடவே இருப்ப தானே என்னை விட்டு போக மாட்டியே 

லூசு நான் எதுக்கு உன்னை விட்டு போகனும் நான் போக மாட்டேன்

நீ அழ என்ன காரணம்

ஆ , அது எனக்கு மகி நியாபகம் வந்தது அதனால் தான் என்று மை விழி சமாளித்தாள்.

கண்டிப்பாக மகி சீக்கிரமே நம்ம கிட்ட வந்து விடுவாள்.

நீ கவலை படாதே என்று அவன் ஆறுதல் கூறினான்.

இங்கு மாயாவின் வீட்டுக்கு வந்த தேஜு, மகி, ஷீலா, வெங்கட் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.

Sp மகிழினிகாக அவளை பாதுகாக்க சிறப்பாக செயல்படும் 6 பாதுகாவலர் குழுவ நியமித்தான்.

முதன் முதலில் அவளை ஷீலா மருத்துவ மனை அழைத்து சென்று அவள் மயங்கிய நிலைக்கு கொண்டு வந்து அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படி உள்ளது என பரிசோதனை செய்து விட்டு வீட்டுக்கு அழைத்து சென்றாள்.

அன்று இரவு தேஜு ஒரு உயர்ரக கிளப் க்கு சென்று வருவதாக கூறி அவள் சென்றாள்.

அங்கு சென்ற தேஜுவை sp ன் ஆட்கள் follow செய்தனர். தேஜு மிகவும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டே தனக்கு தேவையான பானங்களை wine ஆடர் செய்து தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்தாள்.

பின் அங்கு இருந்து நடுஇரவில் தன் வாகனத்தை இயக்க முடியாமல் போய் ஒரு இடத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாள்.

யாருக்கும் எந்த சேதமும் இல்லை அவளுக்கு மட்டும் சின்ன காயம் இதை கண்டறிந்து அங்கு வந்த காவல்துறை தேஜுவின் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்பட்டது போன்ற வழக்குகள் என சில தண்டனைக்கு உரிய வழக்குகள் தேஜுவின் மேல் போட்டு அவளை காவல்துறை கைது செய்தது.

காவல் நிலையம் உள்ளே வந்த தேஜுவிடம் வீட்டுக்கு கால் செய்து வர சொல்ல அவள் இன்பாவின் எண்ணுக்கு கால் செய்து அவனை வர சொன்னாள்.

ஆம் இது அவளுடைய திட்டம் தான் வெளியில் அவனை சந்தித்தால் கண்டிப்பாக sp கிட்ட மாட்டி கொள்வாள். அதற்காகவே வேண்டும் என்றே ஒரு விபத்து ஏற்படுத்தி இவ்வாறு செய்து இருக்கிறாள்.

இன்பா வந்ததும் அவனிடம் அனைத்து விவரங்களையும் கூறி கூடவே ஒரு pendrive கொடுத்து விட்டு

மிஸ்டர் இன்பா எப்படியாவது மகிழினி யை சூர்யா கிட்ட சேர்த்து விடுங்கள் இன்னும் 20 நாள் கழித்து மகி கும் sp க்கும் திருமணம் அப்டின்னு எனக்கு தெரிய வந்தது.

என்று அவள் சொல்லி பின் இன்னும் 10 நிமிஷத்தில் என்னை வெளியே எடுக்க ஆட்கள் வந்து விடுவார்கள் .

இன்பா அவளிடம் அந்த drug பத்தி சொல்லு என்று கேட்க

அது அது பத்தி எனக்கு தெரியாது அது என் அப்பவோட invention என்று கூறியவள் நாள் ஆக ஆக அதோட எபெக்ட் குறையும் நீ கவலை பட வேணாம் .

மகிக்கு கொஞ்சம்  ratio குறைவா தான் கொடுத்து இருக்கேன் சூர்யாவுக்கு மட்டும் கொஞ்சம் அதிகம் அவ்ளோ தான்

அந்த pendrive ல நாங்கள் மகி எங்கே போறோம் , வருகிறோம் என்ற அனைத்து விவரமும் அதில் இருக்கு என்று தேஜு அந்த போதையில் கூறி மயங்கினாள்.

அவள் சொன்னது போலவே குரு ஆட்கள் தேஜுவை வெளியே எடுக்க வந்தனர் இன்பா எதுவும் பேச வில்லை.

அவர்கள் தேஜுவை வெளியில் அழைத்து சென்றனர் வெளியே செல்லும்போது ஒரு ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல 

இன்பா அவளை பார்த்து கண்களால் நான் இருக்கிறேன் என்பது போல கண்களை சிமிட்டினான்.

தேஜு இப்போது நிம்மதியாக வெளியே சென்றாள்.

தேஜு வீட்டுக்கு சென்றதும் குரு கிட்ட இருந்து போன் வந்தது .

தேஜு என்னாச்சு உனக்கு  அந்த இன்பா அவன் கிட்ட போய் மாட்டி இருக்க

இது அண்ணாவுக்கு தெரியாது

தெரிஞ்சா நீ அவ்ளோ தான்

தேஜு அவனிடம் எதுவும் பேச வில்லை சிறிது நேரம் கழித்து எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆ இருந்தது அது தான் drunk பண்ணேன்.

இப்படி ஆகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை .

சரி கொஞ்சம் கவனமாக இரு தேஜு என்று சொல்லி அவன் போன் வைத்தான்.

அடுத்த நாள் மிகவும் சீக்கிரமே விடிந்தது இன்று மகிழினி க்கு மிகவும் முக்கியமான நாள் இன்னொருவருக்கும் தான் 

மகி , ஷீலா, தேஜு மூவரும் mall க்கு செல்லலாம் என்று செல்ல ஷீலாவும் , மகியும் மிகவும் சந்தோஷமாக சுற்றினர் தேஜு எப்போதும் போல முகத்தை வைத்து கொண்டு இருந்தாள்.

ஆனால் அதனை இருவரும் கண்டு கொள்ள வில்லை . இறுதியில் food court செல்ல

மகி sp க்கு கால் செய்து  மாவய்யா இந்த guards எல்லாரையும் food court க்கு வெளியே போக சொல்லுங்க எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்று சொல்ல

Sp அவள் சொல்வதை எப்போது மீறி இருக்கிறான் அவளிடம் நீ சாப்பிடும் வரை மட்டுமே இந்த அனுமதி

அதற்கு பின் அவர்கள் உன்னை பாதுகாக்க வந்து விடுவர்.

இதுல நான் எதுவும் என்னால எஸ்க்யூஸ் தர முடியாது,

என்று அவன் சொல்ல சரி என்று வைத்து விட்டாள்.

மகி வேறு வழி இல்லாமல் சரி என்றாள் .

ஷீலாவும் , மகியும் தேவையான உணவுகளை ஆடர் செய்து சாப்பிட தேஜு இவர்களை வினோதமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

இறுதியில் ஜூஸ் குடிக்கலாம் என்று தேஜு, ஷீலா இருவரும் ஆடர் செய்ய மகி நானே போய் வாங்கி வருகிறேன் என்று மூன்று juice வாங்கி வர 

ஒன்று ஆப்பிள், இன்னொன்று மாதுளை , மகி அவளுக்காக பைன் ஆப்பிள் juice எடுத்து வர அருகில் வந்து அவரவர்களுக்கு கொடுத்து விட்டு 

மகி அவள் இடத்துக்கு வர  ஷீலா கைகளை கழுவ சென்று இருந்தாள்

 தேஜு ஜுஸ்  ஒரு சிப் குடித்து விட்டு மகியை பார்த்து உனக்கு என்ன ஆடர் பண்ண என்று கேட்க

நான்  பைன் ஆப்பிள் என்று சொல்ல இப்போது தேஜுவுக்கு தூக்கி வாரி போட்டது.

ஒரு அவள குடிக்க விடாமல் வேறு ஏதோ அவளிடம் பேசி கொண்டே ஷீலாவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்ப அவள் வேகமாக வந்தாள்.

மகி ஒரு கட்டத்தில் அக்கா நான் குடிக்கிறேன் எனக்கு இன்னும் குடிக்கனும் என்று அவள் வாயில் வைக்க 

சரியாக அந்த நேரத்தில் ஷீலா வர தேஜு எதுவும் செய் என்று கண்ஜாடை காட்ட 

ஷீலா மகியின் இடையை பின்னால் இருந்து கிள்ள அந்த juice குடிக்க போன அவளுக்கு சுருக்கு என்று கோபம் வர யார் என்று கோபம் கொண்டு அவள் பின்னால் திரும்பி பார்க்க

அங்கு சூர்யதேவ் (என்னோட டார்லிங்) போன் காதில் வைத்து கொண்டு நிற்க அவனை பார்த்து முறைத்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள்.

சூர்யா ஒரு நிமிடம் அதுர்ந்தான்.  தேஜுவுக்கு இப்போது சூர்யாவை பார்த்து ஒரு நிமிடம் ஒரு நிம்மதி வந்தது.

இன்பா அவன் வேலைய ஆரம்பித்து விட்டான்.

மேல் மூச்சு  கீழ் மூச்சு வாங்க

மகி சூர்யாவை பார்த்து

உனக்கு எவ்ளோ தைரியம் டா 

என்னை என்னை இடையில் கிள்ளுவ என்று சொல்ல 

இப்போது சூர்யாவுக்கு கோபம் வர அவன் அவளிடம் பேச போக 

அதற்குள் ஷீலா அவளை தோள் தொட்டு ஏய் நான் தான் உன்னை கிள்ளினேன் என்று ஷீலா சொல்ல

சூர்யா இப்போது மகிழினி அருகில் வர…..????தொடரும்….

Episode 75, 

என்னை நீ எவ்ளோ தைரியம் இருந்தால் என் இடையில் நீ என்று கோபத்தில்  சூர்யாவின் கன்னத்தில் அடிக்க 

உடனே சூர்யா அவள் அருகில் வந்து மகியின் கைகளை இறுக்கமாக பிடிக்க 

அப்போது மகிளினியின் பின்னால் இருந்து ஷீலா ஹே நான் தான் உன்னை கிள்ளினேன் அவர் இல்லை என்று கூற 

இப்போது சூர்யா மகியை எரிக்கும் பார்வையில் பார்க்க அவளோ அசரவில்லை.

என் கையை முதலில் விடு டா தவறு உன் மேல் தான் என் அருகில் நீ ஏன் வந்தாய் என்று அவள் பொரிந்து தள்ள பின் ஷீலாவை பார்த்து

அக்கா இவன்  கிள்ள  வில்லை என்றால் என்ன இப்போது என் கையை பிடித்து இருக்கிறான்.

ஷீலா சூர்யாவை பார்த்து சார் பிலீஸ் மன்னித்து விடுங்கள் இவள் தெரியாமல் செய்து விட்டாள். 

என்று ஷீலா சூர்யாவிடம் கெஞ்சி கேட்க

இது மகிழினி க்கு கோபத்தை ஏற்படுத்தியது. என்ன அக்கா இவன் என் கை பிடித்ததற்கு 

அதற்கு நான் கொடுத்த அரை சரி தான் என்று மகி சொல்ல இப்போது சூர்யாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது.

யாரு டி நீ ?

நீ பெரிய ரதி தேவி யா ?

உன்னோட இடையை நான் எதுக்கு கிள்ளனும்.

இப்போ எதுக்கு டி என்னை அடிச்ச என்று சூர்யா அவளின் கைகளை கொஞ்சம் அழுத்தி பிடித்து

எவ்ளோ திமிரு டி உனக்கு என்று அவன் பேசி கொண்டே போக மகி சும்மா இல்லை அவளும் பேச வர அதற்குள் ஷீலா அவளை தடுத்தாள்.

இப்போது சூர்யா அவளின் இடையை பார்த்து சொல்லுகிற மாறி இங்க ஒன்னும் இல்ல

எவ்ளோ தைரியம் டா உனக்கு எட்டி  பார்கிறாயா என்று அவள் துள்ளி கொண்டு சூர்யா கூட சண்டைக்கு வந்தாள்.

இங்கே என்கிட்ட ட்ராமா போடாத இப்போ உனக்கு கன்னத்தில் நான் அரையவா என்று சூர்யா மகியை நெருங்கி வர 

அவளோ அசராமல் அவனை முறைத்து கொண்டு நின்றாள்.

ஷீலா மகியின் முன்னால் போய் நின்று சார் பிலீஸ் மன்னித்து விடுங்கள் என்று கேட்க 

மகி ஷீலாவை பார்த்து அக்கா நீ எதுக்கு அவன் கிட்ட மன்னிப்பு கேட்கிற என்று அவள் சீறி கொண்டு வர 

சூர்யா மேடம் நான் உங்களுக்காக தான் பார்க்கிறேன் இல்லை உன்னை என்ன செய்வேன் தெரியுமா 

உடனே அவள் டேய் போடா என்று சொல்ல சூர்யா அடுத்து பேச வரும் நேரம் ஜானு அழைத்தாள்.

அந்த போன் கால் பார்த்ததும் சூர்யா முகம் சட்டென்று மலர சொல்லு மா என்று எடுத்து காதில் வைத்து பேசி கொண்டே சென்றான்.

சூர்யா மகியை பார்த்து கண்டிப்பாக ,”இதுக்கு ஒரு நாள் நான் உன்னை revenge பண்ணுவேன் டி “,என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினான்.

மகி கோபத்தோடு வீட்டுக்கு சென்றாள். அங்கு  நிதின் மாயா கூட விளையாடி கொண்டு இருக்க மகி வந்ததை பார்த்து போய் தூக்கு என இரு கைகளையும் நீட்ட அவள் தூக்க போக

அதற்குள் ஷீலா அவளிடம் வேணாம் மகி நீ நிதினை தூக்க வேண்டாம் இப்போ தான் நீ உடம்பு சரி ஆகி எழுந்து வந்து இருக்கிறாய் என்று சொல்ல

நிதின் அருகில் மகி அமர்ந்து கொள்ள அவன் அவளை பார்த்து

மகி  எங்கே போனீங்க? என்று கேட்க 

அவளின் காதுகளில் அது மீண்டும் மீண்டும் கேட்க அவள் இரு காதுகளிலும்

மகி!

மகி!

என ஒரு குழந்தை அழைப்பது போல் இருக்க அவள் உடனே மயங்கி விழுந்தாள்.

ஷீலா பதட்டம் கொண்டு அவள் அருகில் சென்று பரிசோதனை செய்து அவளை அவளது அறையில் படுக்க வைத்தாள்.

இங்கு சூர்யா வீட்டுக்கு வந்தவன் அவளை தான் நினைத்தான். 

என்னையே அறைந்து விட்டாளே!

எவ்வளவு திமிர் அவளுக்கு!

“எனக்கு ஏன் அவள் மேல் கோபமே வர வில்லை “

நிஜமாவே கிள்ளி விட்டு அந்த அறையை வாங்கி இருக்கலாம் சூர்யா என்று மனம் சொல்ல 

ம்ம்ம் சும்மா சொல்ல கூடாது அவ ஹிப் நல்லா தான் இருக்கு

Brain டேய் அவ உன்னை அடித்து விட்டாள்

ம்ம்ம் ஆமா என்னை அடித்து விட்டாள் அவளை நான் சும்மா விட மாட்டேன் என்று அவன் நினைத்து கொண்டு சென்று விட்டான்.

இங்கு மகிழினி மயக்கத்தில் இருந்து எழ அவள் அருகில் மாயா அமர்ந்து இருந்தாள்.

என்னாச்சு மா இங்கே என்ன பண்றீங்க என்று மாயாவின் கவலையான முகத்தை பார்க்க முடியாமல் கேட்க 

மகி நீ நன்றாக தானே இருக்கிறாய் எனக்கு நீ மயங்கி விழுந்த உடன் என் மனசு மிகவும் கவலையா இருக்கு மா என்று அவள் இரு கைகளையும் பிடித்து கொண்டு கேட்க

ம்ம்ம் அம்மா நான் உங்க பொண்ணு நான் சூப்பர் அம்மா என்று அவள் சிரித்து கொண்டே கூற 

இல்ல மா எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு 

நீ நாளைக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்திடு நான் உன்னோட பெயரில் பூஜை சொல்லி இருக்கிறேன் என்று மாயா சொல்ல

சரி மா எனக்கும் மனதுக்கு ஒன்னும் சரி இல்லை நான் போய்ட்டு வரேன் என்று கட்டில் விட்டு கீழ இறங்க போக

மாயா அவளை தடுத்து நீ கீழ இறங்க வேண்டாம் மா உனக்கு என்ன வேணும் அப்டின்னு சொல்லு நான் உனக்கு எடுத்து வரேன் என்று சொல்ல

இல்ல மா நான் நிதின் கூட கொஞ்சம் நேரம் இருக்கேன் பிலீஸ் அம்மா 

நான் நிதினை இங்க கூட்டி வர சொல்றேன் என்று சொல்ல 

அம்மா பிலீஸ் அம்மா எனக்கு bore அடிக்குது என்று மகி சொல்ல 

இல்ல மகி நீ போக கூடாது இது என்னோட ஆடர் என்று சொல்ல 

அவள் அமைதியாக இருக்க மாயா அவளை பார்த்து நான் சொல்றது புரிந்து கொள் கண்ணா என் செல்லம் தானே நீங்கள் என்று அவளை அணைத்து முத்தம் வைக்க 

மகி மாயாவை கட்டி கொண்டாள் அம்மா நீங்கள் இப்படியே இருந்தால் நான் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று சொல்ல

மாயாவுக்கு ஒரு நிமிடம் கண் கலங்கியது.

மாயா மகியின் தலையை வருடி கொண்டே உன்னோட சந்தோஷதில் நான் இல்லை என்றாலும் உன்னோட கஷ்டத்தில் நிச்சயமாக உன்னை பாதுகாக்க உன்கூட இருப்பேன் என்று சொல்ல

மகி அவளை கேள்வியாக பார்த்தாள் , மாயா உடனே பேச்சை மாற்றி இரு மா நான் உனக்கு சாப்பிட எதுவும் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது காலையில் சூர்யா எழுந்து ஆஃபீஸ் செல்ல தயாராகி கொண்டு இருக்க 

ஜானு சூர்யாவின் அருகில் வந்தாள். அத்தான் என்று அழைக்க 

ம்ம்ம் சொல்லு செல்லம் என்று சூர்யா கேட்டான்.

அத்தான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நாம்ப கோவிலுக்கு போய்ட்டு ஆஃபீஸ் போலாமா என்று கேட்க

நீ அம்மாவ கூட்டி போய்ட்டு வா எனக்கு இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு மா என்று சொல்ல

அத்தான் பிலீஸ் அத்தான் ஒரு 10 மினிஷம் (நிமிடம் என்பதை மினிஷம்) பிலீஸ் என்று கேட்க 

ஒரு முயல் குட்டி போல் கேட்கும் அவளை தவிர்க்க முடியாமல் சரி போகலாம் என்று சொல்ல 

ரொம்ப ரொம்ப thanks அத்தான் என்று ஜானு ஓடி சென்றாள்.

சூர்யா மனதில் cute  rabbit  என்று நினைத்து கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

இன்று ஆதியின் பிறந்த நாள் அதற்காக தான் ஜானு அவன் பெயரில் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு செல்லலாம் என்று அதனால் தான் சூர்யாவிடம் கேட்டாள்.

சூர்யா கிளம்பி தயாராக இருக்க ஜானு கிளம்பி வந்தாள்.

இங்கு மகி தன்னவனை தரிசனம் செய்ய சூரியனின் வண்ணத்தில் தாவணி அணிந்து மயில் பச்சை வண்ண பாவாடை free ஹேர் விட்டு எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் அழகாக முகத்திற்கு கொஞ்சம் மஞ்சள் பூசி இருந்தாள்

வேறு ஒன்றும் செய்ய வில்லை நெற்றியில் ஒரு குட்டி பொட்டு வைத்து கொண்டு அருகில் இருந்த குங்குமம் சிமில் பார்த்தவள் பழக்க தோஷத்தில் குங்குமம் எடுத்து நெற்றி வகுட்டிற்கு கொண்டு போக அப்போது தான் இன்னும் நமக்கு திருமணம் ஆகவில்லை என்று யோசிக்க 

அப்புறம் ஏன் இப்படி நமக்கு தோன்றுகிறது என்று அதனை ரொம்பவும் யோசிக்க ஷீலா சொன்னது நினைவுக்கு வந்தது ரொம்பவும் யோசித்தால் மயக்கம் வந்து விடும் என்பது தான்

இப்போது அந்த குங்குமம் எடுத்து அந்த வட்ட போட்டு கீழ ஒரு கீற்று வைத்தவள் .

அவளது சங்கு கழுத்தில் கொஞ்சம் குங்குமம் எடுத்து வைத்து கொண்டாள்.

இப்போது மகி மேல இருந்து மெதுவாக அன்ன நடை இட்டு கீழ வர வெங்கட் அவளை பார்த்து மாயா இங்கே வந்து என்னோட பொண்ண பாரு என்று சிரித்த முகத்துடன் சொல்ல

அந்த சத்தம் கேட்டு ஷீலா, தேஜு, மாயா மூவரும் வர மகியை வைத்த கண் வாங்காமல் பார்க்க மாயாவுக்கு மகி காலேஜ் படிக்கும் போது இப்படி தான் வருவாள்

அது நியாபகம் வர உடனே தன்னிலைக்கு வந்த மாயா என்னோட கண்ணே என் பொண்ணு மேல் வைத்து விட்டேன் என்று மை எடுத்து வந்து திருஷ்டி பொட்டு மகி காதின் பின் வைத்து விட

வெங்கட் மாயாவை பார்த்து இது போதாது கற்பூரம் வைத்து சுற்றி போடு மாயா என்று சொல்ல

அப்பா என்று மகி வெங்கட் அருகில் சென்று கைகளை கட்டி கொள்ள நீ சும்மா இரு மா இதை மட்டும் sp பார்த்தான் உனக்கு இங்கேயே ஒரு கோவில் கட்டி கொடுத்து விடுவான் வெளியே அனுப்பவே மாட்டான் என்று சொல்ல

மாயா அவளிடம் என் பொண்ணு அவ்ளோ அழகு என்று நெட்டி முறிக்க இதை பார்த்து தேஜுவுக்கு அப்படியே பற்றி எரிந்தது.

இங்கு சூர்யாவும் , ஜானுவும் வீட்டில் இருந்து கிளம்பினர்.

இருவரும் நேராக கோவிலுக்கு சென்றனர் உடனே அங்கு இருந்த பூ விற்கும் பெண் ஒருத்தி

சூர்யாவையும் ஜானுவையும் பார்த்து பூ வாங்கி கொள்ள சொல்ல 

சரியாக அந்த நேரம் மகி காரில் வந்து இறங்கினாள்.

தொடரும்….

Episode 76, 

மாயா அவளிடம் என் பொண்ணு அவ்ளோ அழகு என்று நெட்டி முறித்து அங்கு நின்று கொண்டு இருந்த பணிப்பெண் கிட்ட மல்லி சரத்தினை மகியின் இடை அளவு கூந்தலுக்கு எவ்வளவு வைக்க முடியுமோ கூந்தலும் பூ சரமும் ஒரே நீளமாக இருக்க வைத்து விட்டாள் மாயா

மகிக்கு அது பிடிக்க வில்லை என்றாலும் தன் அம்மா வைத்து விடுகிறாள் என்பதற்காக வாங்கி வைத்து கொண்டாள்.

இங்கு சூர்யாவும் , ஜானுவும் வீட்டில் இருந்து கிளம்பினர்.

இருவரும் நேராக கோவிலுக்கு சென்றனர் உடனே அங்கு இருந்த பூ விற்கும் பெண் ஒருத்தி

சூர்யாவையும் ஜானுவையும் பார்த்து பூ வாங்கி கொள்ள சொல்ல 

சரியாக அந்த நேரம் மகி காரில் வந்து இறங்கினாள்.

அந்த பூ விற்கும் பெண் சூர்யாவை பார்த்து தம்பி பூ வாங்கி கொள்ளுங்கள் என்று ஜானுவை பார்த்து கொண்டே சொல்ல

ஜானு பூ வாங்கவா ? என சூர்யா கேட்க 

உங்களுக்கு ok வா என்று கேட்க என்ன தம்பி அந்த பொண்ணு கிட்ட கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் வாங்கி தாருங்கள் என்று சொல்லி அவள் பூவை முழம் போட 

சூர்யா அந்த பூ சரத்தினை பார்த்து விட்டு ஒரு நிமிடம் என்று சொல்ல என்ன தம்பி என்று கேள்வியாக அந்த பெண்ணும் ஜானுவும் பார்க்க

சூர்யா அருகில் இருந்த மல்லி குவியலை சுட்டி காட்டி அதில் இருந்து ஒரு கை பிடி அளவு மொட்டு மல்லிகை அள்ளி அந்த பெண்ணிடம் கொடுத்து ஒற்றை வரியில் இதை கோர்த்து கொடுங்கள் இல்லை கட்டி கொடுங்கள் என்று சூர்யா சொல்ல 

ஜானு சூர்யாவை ஆச்சரியம் ஆக பார்த்தாள் அந்த பூ விற்கும் பெண் சூர்யா சொன்னது போலவே கட்டி கொடுக்க

அதை வாங்கி கொண்ட சூர்யா ஒரு முழத்திற்கு உண்டான பணத்தை கொடுக்க அந்த பெண் நன்றி முகத்துடன் வாங்கி கொண்டவள்.

இவர்கள் இருவரையும் பார்த்து பின் ஜானுவை பார்த்து நீ கொடுத்து வைத்தவள் அம்மா இருவரும் நன்றாக வாழுங்கள் என்று சொல்ல

அந்த நேரம் இல்லை அதற்கு முன்னவே வந்த மகி சூர்யா வந்தது பூ விற்கும் பெண்ணிடம் சொன்னது பணம் கொடுத்தது என அனைத்தும் பார்த்து விட்டு இறுதியில் அந்த பெண் சொல்வதை கேட்டு சூர்யா புன்னகை செய்வதை பார்க்க அதற்கும் மேல் அங்கு நிற்க முடியாமல் கோவிலுக்கு உள்ளே வேக நடை போட்டு சென்று விட்டாள்.

சூர்யா அந்த பூ விற்கும் பெண்ணை பார்த்து ஜானுவின் தலையை வருடிவிட்டு

ஆம் என் தங்கை கொடுத்து வைத்தவள் என்று சொல்ல

ஜானுவுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

மன்னித்து விடு பா நான் தவறாக நினைத்து விட்டேன் இருவரும் ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்ல 

சூர்யா ஒரு சிறு தலை அசைப்புடன் அங்கு இருந்து நகர்ந்தான்.கோவிலுக்குள் செல்லும் போது சரவணன் கிட்ட இருந்து அவனுக்கு போன் வர 

ஜானு நீ உள்ளே போ நான் வருகிறேன் என்று அவன் பேச செல்ல ஜானு நிம்மதியாக கோவில் உள்ளே சென்றாள்.

இவள் அனைத்து பிரகாரமும் சுற்றி விட்டு சிவன் சன்னதிக்கு அர்ச்சனை செய்ய வர அங்கு அபிஷேகம் பூஜை என அனைத்தும் நடக்க அந்த இடம் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.

யார் இவர்கள் இத்தனை காவலாளிகள் யாரை பாதுகாக்க இத்தனை பேர் என்று நினைத்து கொன்டே ஜானு கொஞ்சம் முன்னால் வர 

அங்கு சும்மா ஜெக ஜோதியாக நின்று கொண்டு இருந்த மகியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள்.

ஜானுவுக்கு இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை எல்லை இல்லாத சந்தோஷம் ஆனால் மகி அவளை பார்த்து முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.

இப்போது தன்னிலைக்கு வந்த ஜானு ஸ்நேகமாக அவளை பார்த்து புன்னகை செய்ய  மகி அலட்சியமாக பார்த்தாள்.

அருகில் தேஜு, ஷீலா இருந்தனர்.

அங்கு வந்த குருக்கள் கிட்ட சாமி எனக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்ல 

ம்ம்ம் சொல்லுங்கள் அம்மா என்று அவர் கூற

ஆதி பெயர் 

ராசி , நட்சத்திரம் என அனைத்தும் சொல்லி  ஜானு அர்ச்சனை தட்டுகளை நீட்ட 

உடனே குருக்கள் அம்மா இங்கு என்று மகியை சுட்டி காட்டி அவர்கள் பூஜை சொல்லி இருக்கிறார்கள் அதனால் அது முடிந்து அர்ச்சனை செய்த பின் தான் உனக்கு செய்ய முடியும் உனக்கு சரியா என்று கேட்க

ஜானு வாடி போன முகத்துடன் சரி என்று சொல்ல மகி சந்தோஷம் கொண்டு ஜானுவை பார்த்தாள்.

மகி மனதில் ஓ அவன் பெயர் ஆதியா அவனுக்கு அர்ச்சனை செய்ய தான் இவள் வந்து இருக்க

சூர்யா அந்த போன் கால் பேசி முடித்து விட்டு உள்ளே வர அங்கு உண்மையாகவே

ரதி தேவியாக  நின்று கொண்டு இருந்த மகியை பார்த்து ஒரு நிமிடம் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நின்றான்  சூர்யா அவளை எதுக்கு டா இப்படி பார்க்கிறாய் அவள் உன்னை அடித்து இருக்கிறாள் அவளிடம் விழுந்து விடாதே

 என்று பின் தன்னை  மீட்டு கொண்டு அவளிடம் இருந்து மீட்க முடியாமல் தன் கண்களை  கஷ்டப்பட்டு மீட்டுக்கொண்டு பின் நேராக ஜானுவின் அருகில் வந்து 

ஜானு சாமி கும்பிட்டு விட்டாயா நாம் கிளம்பலாமா என்று கேட்க ,

அத்தான் அர்ச்சனை செய்ய முடியவில்லை இவர்கள் பூஜை க்கு சொல்லி இருக்கிறார்களாம் அதனால் நாம் சாமி கும்பிட்டு விட்டு செல்லலாம் என்று சொல்ல .

சூர்யா மகியின் பக்கம் ஒரு முறை கூட திரும்ப வில்லை . உன்னோட நல்ல மனசுக்கு சாமி உனக்கு நல்லது தான் செய்வார் நீ இப்போ சாமி மட்டும் கும்பிடு நான் உன்னை அப்புறம் அழைத்து செல்கிறேன் என்று சமாதானம் செய்ய

சரி அத்தான் என்று அவள் கண்களை மூடி முதலில் தன் அத்தானும் மகியும் எப்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று வேண்டி விட்டு பின் தன்னவனுக்காக அவள் புன்னகை கொண்டு கண்களை மூடி வேண்டிக்கொள்ள அதை பார்த்து மகி க்கு கோபம் வந்தது.

மகி சூர்யா தன்னை பார்கிறானா என்று பார்க்க சூர்யா ஒரு முறை இல்லை அவன் கண்களை திசை பக்கம் திருப்பவே இல்லை.

மகி மனதில் மிகவும் ஏமாற்றமாக இருந்தது அத்தான் நான் கும்பிட்டு விட்டேன் என்று சொல்ல 

சரி வா செல்லம் நாம்ப போலாம் என்று அவளை அழைத்து செல்ல ஜானு பின்னால் திரும்பி மகியை பார்த்து கொண்டே சென்றாள்.

மகி அவன் பார்கிறானா என்று ஒரு ஆவல் கொண்டு பார்க்க அவன் சென்றே விட்டான் மகிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

பூஜை முடிந்து வரும் வழியில் அவள் அவனை பற்றியே  நினைத்து கொண்டு வந்தாள் அந்த பூ கடையில்  அந்த பெண் சொன்னது இவள் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது.

நீ ஏன் அவனை நினைக்கிறாய் நீ சூர்யா மாமாவை தான் நினைக்க வேண்டும் என்று மூளை ஒரு புறம் சொல்ல மனமோ அது அவன் பின் தான் சென்றது .

அத்தான் அப்படினா என்ன என்று அவளுக்கு யாரிடமாவது கேட்க வேண்டும் என்று தோன்றியது.

உடனே மாயா அறைக்கு சென்றவள் மாயா கிட்ட அம்மா எனக்கு ஒரு சந்தேகம் என்று கேட்க

என்ன சந்தேகம் என்னோட செல்லத்துக்கு என்று கேட்க 

மகி க்கு சூர்யாவின் நினைவு வந்தது உடனே கோபம் கொண்டு அம்மா செல்லம் ன்னு என்னை சொல்ல வேணாம் என்று சொல்ல

மாயா சிரித்து கொண்டே சரி வேணாம் என்னோட தேவதை க்கு என்ன சந்தேகம் என்று கேட்க 

மகி அவளிடம் அத்தான் என்றால் என்ன ? என்று கேள்வியாக கேட்க  மாயா சிரித்து கொண்டே

அப்டின்னா அத்தை மகனை அப்படி சொல்லுவாங்க என்று சொல்லி மாயா அவளை கேள்வியாக பார்த்து விட்டு இதை எதுக்கு மா கேட்டநீ என்று சொல்ல

இல்ல மா நான் கோவிலுக்கு போன இடத்தில் ஒரு பொண்ணு கூப்பிட்டது அது தான் வேற ஒன்னும் இல்லை என்று மகி மாயா கிட்ட நான் ஓய்வு எடுக்க செல்கிறேன் என்று கிளம்பினாள்.

சூர்யா தன்னுடைய அலுவலகம் வந்தவன் அவளை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான் செம்மையா இருக்கா என்ன ஒன்னு ரதி தேவியாக இருக்க அவள் எப்போதும் அக்னி தேவி யா சிவப்பா சுத்திட்டு இருக்கா 

சூர்யா அவளை நினைக்காதே டா அவள் பெரிய இடத்து பெண் போல் இருக்கிறாள். என்று மனம் சொல்ல 

மூளை சூர்யா உனக்கு பிடித்து இருந்தால் நீ எடுத்து கொள் என்று சொல்ல 

பார்க்கலாம் அதற்கு மும் என் கடந்த காலம் தெரிய வேண்டும் என்று நினைத்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்.

மகி இங்கு வீட்டில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தவள் ஒரு அறைக்கு செல்ல அங்கு அறை முழுவதும் ஓவியங்கள் நிறைந்து இருந்தது.

வண்ணங்கள், தூரிகைகள் எல்லாம் இருக்க மகி க்கு இப்போது ஆர்வம் அந்த வண்ணங்கள் மீதும் ஓவியம் மீதும் இருக்க அவள் தூரிகை எடுத்து வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.

அந்த வீட்டின் ஜன்னல் வெளியே இருந்த ஒரு ஜோடி கிளிகள் படம் தான் அது 

மாயா அவள் எங்கு இருக்கிறாள் என்று பார்க்க வர அவள் இந்த அறையில் இருந்து வரைவது தெரிந்தது.

மாயா இங்கு என்ன செய்கிறாய் என்று வந்து பார்க்க அவள் வரைந்து இருப்பது மாயா ம்ம்ம் சூப்பர் மா என்னை விட நன்றாகவே வரைகிறாய்  என்று சொல்லி 

அப்புறம் வரையலாம் செல்லம் வா மா இப்போது சாப்பிடும் நேரம் என்று சாப்பிட அழைத்து சென்றாள்.

அவள் அங்கு அடுக்கி வைக்க பட்டு இருந்த உணவுகளை பார்த்து அவளுக்கு பிடிக்க வில்லை அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்ற சிக்கன் போட்டு கொண்டு சாப்பிட அவள் ஒரு நான்கு வாய் தான் சாப்பிட்டு இருப்பாள் உடனே ஏதோ போல் இருக்க 

Sink சென்று சாப்பிட்ட அனைத்தும் குமட்டி கொண்டு அனைத்தும் வெளியே கக்கி விட்டாள் .

மாயாவுக்கு மிகவும் பயம் , கவலை , பதட்டம் என்று இருக்க அவள் அனைத்தும் எடுத்து விட்டாள் கண்கள் சோர்ந்து போனாள்.

ஷீலாவுக்கு தெரிந்து விட்டது அவளுக்கு அறிகுறிகள் ஆரம்பித்து விட்டது மாயாவும் ஷீலாவும் அவளை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தனர்.

மாயா ஷீலா கிட்ட என்னாச்சு என்று கேட்க சும்மா தான் அவளுக்கு அசைவம் ஒத்து கொள்ளாது அதனால் என்று கூறி விட்டு 

ஷீலா நேராக தேஜுவை பார்க்க சென்றாள்.

தேஜுவை பார்த்து இப்போ என்ன செய்யறது தேஜு அவளுக்கு symtoms ஆரம்பித்து விட்டது.

தேஜு ஷீலாவை பார்த்து..?

Episode 77,


தேஜுவை பார்த்து இப்போ என்ன செய்யறது தேஜு அவளுக்கு symtoms ஆரம்பித்து விட்டது.

தேஜு ஷீலாவை பார்த்து  இயல்பாக இப்போ என்னாச்சு எதுக்கு இவ்ளோ ரியாக்ட் ஆகுற நீ டாக்டர் அப்டின்னு வெளியே சொல்லாத ஷீலா

என்ன சொல்ற தேஜு இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல டி என்று அவள் பதட்டம் கொள்ள

தேஜு லூசு அவளுக்கு வொமிட் வராத டேப்லெட் கொடு அது ஸ்டாப் ஆகிடும் காலை மாலை என இருவேளை கொடு அவ்ளோ தான் என்று சொல்ல 

ஷீலா இப்போது நிம்மதியாக சரி டி நான் ரொம்ப பயந்து விட்டேன் அவள் நன்றாக இருக்க வேண்டும் இல்லை அந்த sp யை எப்டி சமாளிப்பது என்று அவள் சொல்லி கொண்டு இருக்க

தேஜு  ஒரு தந்திர புன்னகை சிந்தினாள்.

இங்கு மகிக்கு களைப்பாக இருந்தால் அவளது அறைக்கு வந்து உறங்கி விட்டாள்.

மாயாவிடம் ஷீலா மகிக்கு அதிகமாக நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும் அந்த மருந்தின் பின் விளைவின் காரணமாக தான் இவ்வாறு வருகிறது என்று சொல்லி விட்டு செல்ல 

மாயாவும் சரி என்று நீர் ஆகாரம் juice என்று தயார் செய்து அவளுக்கு கொடுக்க அவள் கொஞ்சம் மட்டும் தான் சாப்பிட்டாள்.

அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிய 

கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள்  என்றால் சூர்யாவுக்கு மிகவும் பிடிக்கும் அதே போல தான் ஜனனிக்கும் இப்போது டெனட் படம்  வெளியாகி இருக்க ஜானு சூர்யாவிடம் சொல்ல 

Ok கண்டிப்பாக போலாம் என்று மேட்னி ஷோ க்கு இரண்டு டிக்கெட் வாங்க இன்று வார இறுதி நாள் என்பதால் ஆதி க்கு விடுமுறையாக இருக்க  உடனே ஜானு அவனுக்கு போன் செய்தாள்.

ஆதி சிரித்து கொண்டே அவளது போன் எடுக்க 

என்ன பண்றீங்க என்று ஜானு கேட்க

நான் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன் என்று ஆதி சொல்லி பின்

சூர்யா அண்ணா எப்படி இருக்கிறார் . எதுவும் நியாபகம் வருகிறதா என்று கேட்க 

இல்ல ஆனா நான் நேத்து நான் அக்காவ பார்த்தேன் ரெண்டு பேருக்கும் யார் என்று தெரியவில்லை 

எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது அக்கா என்னை பார்த்து கோபமாக முகத்தை திருப்பி கொண்டாள் என்று ஜானு சொல்ல

ஆதி அவளிடம் நீ அவளிடம் பேச முயற்சி செய்தாயா என்று கேட்க

அங்கே சீன் வேற அக்காவுக்கு ரொம்ப பாதுகாக்க 6 பேர் அதுவும் இல்லாமல் கூட ரெண்டு பேர் துணைக்கு அக்கா பாவம் என்று சொல்ல 

இப்போ எப்டி இவங்க ரெண்டு பேரும் சேருவாங்க அந்த sp ரொம்ப மோசமான ஆளு மகி பாவம் என்று வருத்தம் கொள்ள 

நீங்கள் கவலை பட வேண்டாம் இன்பா அண்ணாவுக்கு அந்த sp கூட இருக்கும் ஆள் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கிறார்களாம் அதனால்  உறுதியாக இருவரும் சேர்ந்து விடுவார்கள்.

ஆதி அலுத்து கொண்டு மகி வந்தால் எப்டி இருக்கும் இந்த 6 வருஷத்தில் அவளை விட்டு நான் பிரிந்ததே இல்லை  எனக்கு பரிசுகள், சமையல் ஒரு தோள் கொடுக்க என் தோழி நான் மகிய ரொம்ப மிஸ் பண்றேன் ஜானு

ஜானு அவனை எப்டி சமாதானம் செய்ய என்று இருந்தாள்.

எனக்கு சக்தியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது என்று ஆதி கண் கலங்க 

நீங்கள் கவலை பட வேணாம் சீக்கிரம் அக்கா நம்ப கூட வந்து விடுவார்கள் என்று அவள் தேற்றினாள்.

ஆதி இப்போது அவளிடம் இப்போ எதுக்கு மேடம் எனக்கு கால் பன்னீங்க என்று கேட்க

அது 

அது வந்து 

ம்ம்ம் சொல்லங்க என்று ஆதி சிரித்து கொண்டு கேட்க 

அது ஒன்னும் இல்ல நாளைக்கு வீக் end நீங்கள் அப்டியே பெங்களூர் ல இருந்து flight ல பறந்து வந்திங்கன்னா டெணட் படம் பார்த்து விட்டு அடித்த flight ல திரும்ப பறந்து விடலாம் என்று ஜானு கண்கள் மின்ன சொல்ல

என்ன சொன்ன என்று ஆதி அதுர்ச்சியில் கேட்க 

நான் சொல்றது உங்களுக்கு புரியலையா என்று ஜானு மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திருக்க

ஆதி எப்டி ஜானு நீ இப்படி இருக்க  ஒரு ரோமண்டிக் படத்துக்கு போனா கூட நல்லா இருக்கும் 

ஏன் இந்த படத்துக்கு என்ன என்று ஜானு கேட்க

நீ ஸ்டரைட் ஆ சொல்லு டி நான் உன்னை வந்து பார்க்கிறேன்.

டெணட் படத்துக்கு வர சொல்ற 

நீங்கள் ரொம்ப மோசம் சூர்யா அத்தானும் நானும் போறோம்  சரி engage முடிஞ்சு எங்கேயும் போக முடியல அப்டின்னு உங்களை கூப்பிட்டா நீங்கள் ஓவரா பண்றீங்க நான் போன் வைக்கிறேன் என்று வைக்க போக

ஆதி உடனே அவளிடம் ஜானு ஜானு பிலீஸ் போன் வைக்காத அது கிறிஸ்டோபர் நோலன் படம்  தானே 

இந்த மகி என்னை torture பண்ணி கூட்டி போவா இன்செப்டின், இன்டெர்ஸ்டெல்லர் வீட்டில் பார்த்தோம், பேட்மேன் எல்லா படமும் நானும் அவ , ஜெனி எல்லாம் போவோம் 

கடைசியில் பார்த்தால் படம் முடியும்போது நானும் ஜெனியும் தூங்கி விடுவோம் 

மகி அப்போதும் சும்மா இருக்க மாட்டாள் நடுவில்

எங்களை எழுப்பி படம் பார்க்க சொல்வாள். நாங்களும் வேறு வழி இல்லாமல் பார்ப்போம்

அவ தான் படம் செம்மையா இருந்தது தானே என்று எங்களை torture பண்ணுவா 

இப்போ நீ என்னை torture பண்ற என்று ஆதி சொல்ல ஜானு அவன் மேல் மீண்டும் கோபம் கொண்டாள் .

ஏன் ஜானு இப்படி எப்போ பார்த்தாலும் கோவித்து கொள்கிறாய் என்று ஆதி கெஞ்சல் மொழியில் கேட்க,

நீங்கள் மோசம் நான் தெரியாமல் உங்களின் மேல் இஷ்டம் என்று சொல்லி விட்டேன்.

நான்  வைக்கிறேன் என்று செல்ல போனவள்.

பின் எதோ நியாபகம் வந்தவளாய் நாம் என்ன படம் பார்க்கிறோம் என்பது முக்கியம் அல்ல யாருடன் பார்க்கிறோம் என்பது தான் முக்கியம் உங்களுக்கு அறிவு அவ்ளோ தான் என்று கூறி போன் வைத்தாள்.

அய்யோ இப்படி ஆகி விட்டதே முதன் முறையாக நம்மிடம் இவ்ளோ நேரம் பேசி இருக்கிறாள்.

ஆதி நீ தான் சரி இல்லை ஜானு ஆசையாக உன்னை படத்திற்கு அழைத்து உள்ளாள்.

இதை தவற விட கூடாது என்று ஆதி அவளை சமாதானம் செய்து எந்த theatre என்று கேட்டு  உன்னை வந்து பார்த்து கொள்கிறேன்.

என்னோட unicorn என்று மனதில் நினைத்து கொண்டான்.

இங்கு மகி செய்தித்தாள்களை பார்த்து  கொண்டு இருக்க அதில் டெனட் படத்தை பற்றி அந்த ஆங்கில தாளில் படிக்க அது கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்களில் ஒன்று என்று தெரிய அவளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.

ஆனால் அந்த படத்திற்கு ஏற்கனவே தேஜு இவளை அழைத்து செல்வதாக ஒரு திட்டம் வைத்து இருந்தாள்.

ஆனால் மகியே அவளிடம் வந்து அக்கா நாளைக்கு இந்த படத்துக்கு போலாமா என்று கேட்க 

தேஜு அவளிடம் சரி என்று கூறினாள். அந்த நாளும் வந்தது இங்கு ஆதி flight இல் இருந்து வந்து அந்த theatre ள ஜானுக்காக காத்து இருந்தான்.

ஜானுவின்  இருக்கை என்ன என்று பார்த்து ஆறு இருக்கைகள் ஒவ்வொரு பக்கமும் வாங்கி கொண்டான்.

ஜானுவும் சூர்யாவும் இப்போது வந்தனர் ஆதி கண்ஜாடை செய்ய இவள் அவனை ஒரு மெலிதான புன்னகை மட்டும் சிந்தி விட்டு படம் பார்க்க காத்து இருந்தாள்.

அப்போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது தேஜு ,ஷீலா கூட மகி சில காவலாளிகள்  கூட வர

யாரு இவ ரொம்ப ஸீன் போடறாளே என்று சூர்யா மனதுள் நினைத்து கொண்டு இருக்க

ஆதி அங்கு வந்த மகிளினியை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். மகிழினி இப்படி மாறி விட்டாளே என்று சூர்யாவையும் அவளையும் மாறி மாறி பார்க்க ஆனால் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வில்லை.

அப்போது theatre ல இருந்து அந்த முதலாளி sorry எங்களை மன்னித்து விடுங்கள் டெணட்  படத்திற்கு நீங்கள் கொடுத்த டிக்கெட் காசுகளை இரண்டு மடங்குகளாக திருப்பி தந்து விடுகிறேன்.

இன்று தியேட்டர் ல  முக்கிய நபர்கள் இந்த இடம் முழுவதும் முன்னவே புக் செய்து விட்டனர் என்று சொல்ல 

அங்கு வந்த சில பேர் கோபம் கொண்டு அந்த டிக்கெட் பணம் கூட வாங்காமல் சென்றனர் சிலர் வந்தது வரை லாபம் என்று வாங்கி கொண்டு சென்றனர்.

இதை கேட்டு ஜானுவின் முகம் வாடி போனது இன்று தான் முதன் முறையாக ஆதி கூட பார்க்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் சூர்யா கண்டுகொண்டான் அது அவள் தான் என்று அவன் மனதில் நீ அன்றே அவளை எதிர்த்து இருக்க வேண்டும் இன்று மட்டும் நீ அவளுக்கு பணிந்து சென்றாள் அது மிகவும் அவமானம் என்று அவன் ஒரு முடிவோடு அந்த தியேட்டர் முதளாலிய பார்க்க செல்ல,

ஜானு அவன் கைகளை பிடித்து கொண்டு வேணாம் மாமா என்று சொல்ல,

நீ சும்மா இரு மா இந்த தியேட்டர் மேல நான் கேஸ் போடுவேன் நான் முதன் முதலில் உன்னை அழைத்து வந்து இருக்கிறேன்  என்று

இவன் பேசி கொண்டு பின் அந்த முதலாளி கிட்ட அவன் பேச

இப்போது அவர் என்ன செய்வது என்று முழித்து கொண்டு நேராக தேஜுவை பார்க்க சென்று  அங்கு நடந்த அனைத்து விஷயமும் சொல்ல,

இப்போது தேஜு மகிழினி யை பார்த்து இது எல்லாம் உன்னால் தான் என்று சொல்ல

அக்கா நான் என்ன செய்தேன் என்று அவள் கேட்க

நீ மட்டும் இங்கு வரவில்லை என்றால் அனைவரும் படம் பார்த்து இருப்பார்கள் ஆனால் நீ வருகிறேன் என்று சொன்னதால்

இப்போது sp மொத்த டிக்கெட் அப்புறம் இந்த தியேட்டர் க்கு யாரும் வர கூடாது என்று சொல்லி வைத்து இருக்கிறான்.என்று தேஜு சொல்ல 

இப்போது என்ன செய்வது என்று மகிழினி தேஜு கிட்ட கேட்க

இதுக்கு ஒரு வழி இருக்கு என்று தேஜு கூறி

அதை கேட்ட மகிழினி சரி என்று சொல்ல அந்த தியேட்டர் முதலாளி கிட்ட சொல்ல அவரும் விட்டால் போதும் என்று சரி என்று சொல்லி விட்டார்.

சூர்யா கிட்ட சொல்ல மீதம் இருந்த படம் பார்க்க வந்த அனைவரும் இப்போது சந்தோஷமாக உள்ளே சென்றனர்.

சூர்யாவுக்கு முன்னால் உள்ள வரிசையில் மகிழினி, தேஜு , ஷீலா அமர்ந்து கொள்ள மகிளினி சூர்யாவின் கண்கள் ஒரே ஒரு முறை சந்தித்து கொண்டது ஒரே ஒரு முறை தான் ஆழமான பார்வை

அந்த பார்வை இருவருக்கும் புதிது அல்ல என்பது மட்டும் அவரவர் மனதில் தோன்றியது.

படம் ஆரம்பிக்க சூர்யா மகியை விடுத்து படத்தில் கவனம் செலுத்தினான்.சிறிது நேரம் கழித்து ஆதி ஜானு பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு அவளின் கைகளோடு கோர்த்து கொண்டான்.

ஜானு அவனை ஒரு முறை மட்டுமே பார்த்தாள். அவள் படம் பார்ப்பதில் கண்ணாக இருக்க ஆதி ஜானுவின் மேல் கண்ணாக இருந்தான்.

இண்டெர்வெல் வந்தது சூர்யாவுக்கு அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க மகிழினி உறங்கி விட்டாள் முதல் முறையாக ஏன் என்றால் மாசமாக இருக்கிறாள் அது அவளுக்கு தெரியாது .

படம் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருந்தது படம் முடிவர்தற்குள் கிளம்பி விட வேண்டும் என்று

ஆதி ஜானு கைகளுக்கு ஒரு இதழ் பதித்து அவள் காதுக்கு அருகில் வந்தவன்

i miss you ஸ்ரீ என்று கூற  ஆதியை ஜானு பார்த்து விட்டு கிளம்ப போறீங்களா என்று ஏக்கமாக கேட்க ம்ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தவன்.

சரி டி நான் போயிட்டு வரேன் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் உன்னை விட்டு என்னால போக முடியாது என்று ஆதி சொல்ல 

ஜானு வெட்கத்தல் முகம் சிவந்தாள். லவ் you டி என்று ஒரு கண் சிமிட்டி விட்டு அவன் கிளம்பிவிட்டான்.

ஆனால் சூர்யாவுக்கு இது அனைத்தும் தெரியும் ஆதி வந்தது அவள் அருகில் அமர்ந்தது ஜானு ஆதியை பார்ப்பது என சூர்யாவுக்கு ஜானுவின் மேல் நம்பிக்கை எப்படியும் நம்மிடம் கூறுவாள் என்று விட்டு விட்டான்.

இதே போல் இதை இறுதியில் மகிழினி யும் ஜானு ஆதி கூட பேசி கொண்டு இருப்பதை பார்த்தாள்.

படம் முடிந்தது. அனைவரும் எழுந்து வெளியே வந்தனர் ஷீலா , தேஜு, மகி மூவரும் வெளியே வர சூர்யா ஷீலாவை பார்த்து 

மேடம் நல்ல தூக்கம் போல என்று சொல்ல ஷீலா திரு திருவென முழித்தாள்.

மகிழினி க்கு புரிந்து விட்டது அவன் யாரை சொல்கிறான் என்று

சூர்யா ஷீலா கிட்ட நீங்கள் வீட்டில் தூங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் உங்களுக்கு இந்த மாதிரி படம் எல்லாம் புரியவும் புரியாது புரிய வாய்ப்பு இல்லை 

இப்போது சூர்யா மகிழினி யை பார்த்து

உங்கள் முகத்துக்கும்

உங்கள் குணத்துக்கும்

angry bird  movie போய் பாருங்க என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 Episode 78,

இப்போது சூர்யா மகிழினி யை பார்த்து உங்கள் முகத்துக்கும் உங்கள் குணத்துக்கும் angry bird  movie போய் பாருங்க என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 அவன் சிறிது தூரம் கூட செல்ல வில்லை மகிளினிக்கு மிகவும் கோபமாக வந்தது .

அவள் உடனே சிரித்து கொண்டே” யாரு எதுவும் சொல்றதா இருந்தால் முகத்துக்கு நேராக பார்த்து சொல்ல வேண்டியது தானே “

அதை விட்டு இப்படி என் கிட்ட சொல்ல பயந்து கொண்டு என்று உச்சி கொட்டி விட்டு,

இதுக்கும் மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவள் ஷீலா வின் கைகளை கோர்த்து கொண்டு நடக்க

இப்போது சூர்யாவுக்கு இந்த முறை மிகவும் கோபம் தலைக்கு ஏறியது.

அதனை கண்ட ஜானு அத்தான் பிலீஸ் விடுங்க அவங்க தெரியாமல் ஏதாவது சொல்லி இருப்பார்கள் என்று சொல்ல,

ஜானு பிலீஸ் கைய விடு அவளை என்ன செய்கிறேன் என்று பார் ,

அத்தான் வேணாம் ,

இல்ல ஜானு என்னை பார்த்து அவள் இப்படி சொல்லி விட்டாளே அவள் திமிரை அடக்க வேண்டும் ஜானு என்று சொல்ல

அத்தான் இப்போ நான் சொன்னா கேட்பீங்களா மாட்டீங்களா என்று கொஞ்சம் கோபமாக கேட்க 

இப்போ உனக்கு என்ன வேணும் சொல்லு 

ஜானு சிரித்து கொண்டே இப்போ தான் நீங்கள் என்னோட அத்தான் என்று சொல்லி 

அங்கே பாருங்க game zone இருக்கு அங்கே போய் விளையாடலாம் அத்தான் ஜாலி யா இருக்கும் என்று சொல்ல ,

சூர்யா அவள் தலையை வருடியவன் குட்டி rabbit என்று சொல்லி வா போகலாம் என்று அழைத்து சென்றான்.

இங்கு இவ்வளவு நேரம் மகி அவர்கள் இருவரையும் பார்த்து இப்போது அவளுக்கு பொறாமையாக இருந்தது.

அவளை பார்க்கும் போது மட்டும் மென்மையாக இருக்கிறான் ஆனால் என்னை அனல் கக்கும் பார்வையில் சுடுகிறானே.

ஹே என்ன இப்படி திங்க் பண்ற அவன் யாரு உனக்கு அவனை பத்தி யோசிக்காதே,

உனக்கு உன் சூர்யா மாவய்யா(sp) இவனை விட மிகவும் மென்மையாக நடத்துவார்.

என்று மூளை சொல்ல மனமோ

இந்த அவளுடைய சூர்யாவை தான் நாடியது.

இப்போது ஜானுவும் சூர்யாவும் அந்த gaming zone ல விளையாட மகி சூர்யா தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே எப்படியும் அவனை அவமானம் படுத்த வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

அவர்கள் ஒவ்வொரு game உம் விளையாடி கொண்டே வர இறுதியில் ஜானு சொன்ன game ல மகிழினி விளையாட முதல் சுற்றில் ஏனோ தானோ என்று விளையாடியவள் இவர்கள் வரும்போது தோர்த்து போக 

சூர்யா மகியை பார்த்து சிரித்து கொண்டே ஜானு சில பேருக்கு விளையாடவே தெரியல முதலில் போய் போன் ல candy crush game இல்லனா nokia set ல snake game விளையாட சொல்லு என்று சொல்ல 

ஜானுவும் இந்த முறை சிரித்து விட்டாள்.

இந்த முறை மகிளினிக்கு மிகவும் கோபம் தலைக்கு ஏறியது. 

ஜானு சூர்யாவை பார்த்து அத்தான் நீங்கள் கொஞ்சம் அமைதியா இருங்கள் நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை என்று அவள் சொல்ல

உடனே மகிழினி சரியாக சொன்னாய் உன் அத்தான் என்று முகத்தை அஷ்ட கோணலாக வைத்து கொண்டு 

அவள் ஜானுவை பார்த்து கொஞ்சம் இல்லை செய்வது எல்லாமே தேவை இல்லாத வேலை தான் என்று சொல்லி  மகிழினி ஒரு ஏளன புன்னகை சிந்த

சூர்யா இப்போது அவளை பார்த்து அப்போ உனக்கு இதில் விளையாட தெரியும் அப்டின்னு சொல்ற

ம்ம்ம் definately என்று மகிழினி கூறினாள்.

அப்போது அங்கே ஷீலா மகியை  அழைக்க வந்தவள் இவர்கள் பேசுவது கேட்டு

அவளை வா நாம்ப போலாம் இவர் கிட்ட எப்போ பார்த்தாலும் உனக்கு சண்டை தானா என்று மகி கைகளை பிடித்து அழைத்து செல்ல 

Excuse me மேடம் ஒரு நிமிடம் இருங்கள் 

உங்க தோழி என்கிட்ட ஒரு மேட்ச் க்கு இப்போ வர போறாங்க அது முடிந்தவுடன் நீங்கள் உங்கள் ரதி தேவியை அழைத்து செல்லுங்கள் என்று சூர்யா நக்கலாக கூறினான்.

இப்போது அங்கே வந்த தேஜு அவளை பார்த்து நீயே மேட்ச் ஆடி முடித்து வா நானும் ஷீலாவும் வெளிய வெய்ட் பன்றோம் என்று சொல்லி ஷீலாவை அழைத்து சென்றாள்.

இப்போது ஜானு சூர்யாவை பார்த்து அத்தான் வேணாம் பிலீஸ் நம்ப போலாம்.

சூர்யா அவளை பார்த்து ஜானு நீ கவலை படாமல் போ அத்தான் தான் win பண்ணுவேன் 

வின் பண்ணிட்டு அப்புறம் வைத்து கொள்கிறேன் என்று சொல்ல சரி ஏதோ செய்யுங்கள் நான் வெளிய வெய்ட் பண்றேன் அப்டின்னு ஜானு வெளியே சென்றாள்.

இப்போது சூர்யா மகியை பார்த்து மொத்தம் இதுல 3 rounds நீ 3 லயும் வின் பண்ண தேவை இல்ல 

ஆனால் last ரௌண்ட் ல வின் பண்ணனும் 1,2 ல அவுட் னா கூட problem இல்ல லாஸ்ட் ரௌண்ட் தான் முக்கியம் என்று சொல்ல

சரி ok எனக்கு சம்மதம் என்று மகிழினி சொல்லியவள்

அந்த மானிட்டர் முன் அமர்ந்து ஜாய் ஸ்டிக் வாங்கி கைகள் விரல்கள் பரபறக்க விளையாட ஆரம்பித்தாள்.

1 ரௌண்ட் வின் 

2 ரௌண்ட் ல வின் 

3 ரௌண்ட் லயும் வின் 

இப்போது சூர்யாவின் முறையானது 

1 ரௌண்ட் அவுட்

2 ரௌண்ட்ஸ் வின் 

3 ரௌண்ட் ல வின் 

இப்போ சூர்யா மகிழினி யை பார்க்க மேட்ச் ட்ரா ல முடிந்தது.

மகிழினி சூர்யா கிட்ட இப்போது நான் தான் வின் பண்ணேன் நீயும் தான் உன் கிட்ட வாய் மட்டும் தான் அதிகம் 

என்னை போல் உன்னால் விளையாட முடியாது என்று சூர்யாவின் தன்மானத்தை தட்டி விட 

சரி ok இப்போ 3 மேட்ச் ல யும் வின் பண்ணனும்

நீ ஒன்னு ல கூட அவுட் ஆக கூடாது

அப்டி நீ அவுட் ஆகிட்டா என்ன செய்வ

என்று சூர்யா அவளிடம் கேட்க

நீயே சொல்லு என்று மகிழினி சொல்ல  

நீ எல்லார் முன்னாடியும் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் சரியா என்று கேட்க 

இப்போது மகிழினி நான் வின் பண்ணிட்டா அப்போ 

நீயே சொல்லு என்று சூர்யா கேட்க 

நீ இனி  நான் இருக்க இடத்துக்கு உனக்கு ஒர்க் இருந்தாலும் சரி எப்டி இருந்தாலும் நீ வர கூடாது

ம்ம்ம் ok என்று இருவரும் சொல்லி விட்டு முதலில் மகிழினி ஆடினாள்.

2 ரௌண்ட் ல வின் பண்ணி விட்டு சூர்யாவை பார்த்து ஒரு ஏளன புன்னகை சிந்த

இன்னும் 1 ரௌண்ட் இருக்கு என்று சூர்யா சொல்ல 

இப்போது மகி மனதில் கொஞ்சம் பயம் எட்டி பார்த்தது

ஒரு நிமிடம் தயங்கியவள் விளையாட்டு விளையாட ஆரம்பிக்க சிறிது நேரத்தில் அவுட் ஆகி விட்டாள்.

இப்போது சூர்யா அவளை பார்த்து சிரித்தவன்.

இரு டி நான் வின் பண்ணிட்டு உன்னை வைத்து கொள்கிறேன் என்று

அவளிடம் இருந்து ஜாய் ஸ்டிக் வாங்கி வேகமாக 3 ரௌண்ட் லயும் வின் ஆகி விட்டு நெட்டி முறித்தான் சூர்யா

மகிழினிக்கு உடலில் நடுக்கம் வந்தது

என்னடி முன்ன என்னை பார்த்து சொன்ன  என்று அவன் எழுந்து அவள் அருகே வர

மகிழினி அவனை பார்த்து இப்போது உங்க கிட்ட நான் sorry சொல்லனும் அவ்ளோ தானே sorry என்று அவள் கூறி விட்டு வெளியே செல்ல

இப்போது சூர்யா அவள் கைகளை பிடித்தான்.

என் கைய விடு முதலில் என்று அவள் சொல்ல 

சூர்யா அதை காதில் போட்டு கொண்டதாக தெரியவில்லை.

ஏய் எல்லார் முன்னாடி தானே உன்னை மன்னிப்பு கேட்க சொன்னேன் என்று அவள் அருகில் வர 

மகிழினி அவனை பார்ப்பதை தவிர்த்து இப்போ கைய விடுங்கள்

நான் எப்டி கேட்டால் என்ன அது தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே 

ம்ம்ம் அப்படியெல்லாம் விட முடியாது என்று சூர்யா இப்போது மகிளினிக்கு மிகவும் நெருக்கமாக வந்தவன் .

அவளது முகவாய் பிடித்து சூர்யாவை பார்க்குமாறு செய்தவன் அவள் கண்களை பார்த்து,

அன்னிக்கு நான் செய்யாத தப்புக்கு என்னை எல்லார் முன்னாடியும் கன்னத்தில் அடிச்ச தானே என்று சொல்லியவன்.

இன்னிக்கு நான்  அதை நிஜமாக்க போறேன் டி என்று மகிழினி முகம் நோக்கி குனிய 

ஹே என்னை விடு

என்ன பண்ற நீ

 இது மட்டும் எங்க மாவய்யா என்று அவள்  முழுவதும் கூறி முடிப்பதற்குள்

அவளது அதரங்களை தன் வசமாக்கினான் சூர்யா 

அவள் அவனை தள்ளி விட முயற்சி செய்ய அவளது உடலில் சக்தி எல்லாம் ஒரு நிமிடம் வடிந்து விட்டது.

சூர்யாவும்  இப்படி செய்வான் என்று அவனே நினைக்க வில்லை .

அவளது படபடக்கும் விழிகள் ,

துடிக்கும் உதடுகள்

அந்த கழுத்தில் அவள் ஒவ்வொரு முறை பேசும்போதும் கழுத்து எழும்பில் ஏறி இறங்கும் அந்த மச்சம்

அவனுக்கே தெரியாமல் எல்லை மீறி விட்டான்.

அப்போது அன்று  அவளது இடையை பார்த்தது நினைவுக்கு  வர

அவள் இன்றும் தாவணி பாவாடையில் தான் வந்து இருந்தாள்.

அவள் எப்போதும் போல் இடையில் ஒரு safety பின் இருக்க அதை கழட்டி விட்டு அவளின் இடையில் தன் விரல்களால் வருட 

மகிளினிக்கு உடல் எல்லாம் மின்சாரம் பாயிந்தது அவள் கண்களை மூடிக்கொண்டாள். முதன் முறையாக அவளுக்கு இது புது வித உணர்வு கொடுக்க 

சூர்யா அவளது கண்களை பார்க்க வில்லை பார்த்து இருந்தால் என்னவோ இன்னும் அவள் எதிர் வினை கண்டு விலகி இருக்க மாட்டான்.

சூர்யாவுக்கு அப்போது தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிய அவளை விட்டு விலகினான்.

மகிழினிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் விலகியதும் தன்னிலைக்கு வந்தவள்

அவளது உதடுகளை ஒரு விரலால் தொட்டு பார்த்து விட்டு

அவளது இடையை பார்க்க கோபம் கொண்டவள் அவனை பார்த்து ஏதோ சொல்ல வர 

சூர்யா அவளை பார்த்து sorry நான் ஏதோ ஆத்திரத்தில் கோபத்தில் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடு என்று சொல்ல வர

மகிழினிவேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல 

அவள் இப்போது கண்களில் கண்ணீருடன் சென்றாள்.

சூர்யா அவளின் இடையில் இருந்து எடுத்த safty pin அவன் கைகளில் இருக்க அவன் அதை பார்த்து மனதில் நான் ஏன் இப்படி செய்தேன் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டேனே.

எப்போதும் என்னை பார்த்து சீறிக்கொண்டே இருப்பவள் இப்போது அமைதியாக சென்று விட்டாளே

இன்னேரம்நான் செய்த செயலுக்கு

என் இரு கன்னத்திலும் ஓங்கி அரைந்து இருப்பாள்.

ஆனால்  அழுது கொண்டே ஓடி விட்டாள்

ஆனால் அவள் அழுவது என்னால் தாங்க முடியவில்லையே

அதற்கு அவள் என்னை அறைந்து இருக்கலாம் என்று சூர்யா அவளை நினைத்து கொண்டு இருக்க

அப்போது ஜானு இவனை அழைத்து செல்ல வந்தாள்.

அத்தான் நீங்கள் தானே வின் பண்ணிங்க என்று கேட்க 

ம்ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தவன் ஜானுவை அழைத்து கொண்டு வெளியே வர 

மகிழினி அந்த காவலாளிகள் , தேஜு, ஷீலா கூட காரில் ஏறினாள் .

ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.

சூர்யாவுக்கு அவன் மீதே கோபம் வந்தது ஏன்டா இப்படி பண்ணுன இப்போ அவங்க வீட்டில் சொல்லி விடுவாள்.

அவளை பார்த்தால் பெரிய இடத்து பெண் போல தெரிகிறது என்ன ஆகும்

என்று மகிழினி கார் செல்லும் போது அவள் பார்ப்பாளா என்று ஆவலுடன் பார்க்க  சூர்யா நினைத்தது போலவே மகிழினி அவனை பார்த்து கோபமாக முறைத்து  விட்டு கார் கண்ணாடியை உயர்த்தினாள்.

இங்கு வீட்டுக்கு வந்த சூர்யாவுக்கு அவளின் மேல் தான் எண்ணமே என்ன கண்ணு டா அவ கோபத்தில் பார்த்தால் எனக்கு  குளிர் அடிக்குதே அவளோட வாசனை அது இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் வேனும் னு தோணுதே 

சூர்யாவின் மனமோ நாம்ப இப்படி நினைக்கிறோம் அவள் நம்மை பற்றி நினைப்பாளா இல்லை நம்மை அவள் வீட்டில் சொல்லி எதுவும் செய்து விடுவாளா

பார்க்கலாம் என்று அவள் இடையில் எடுத்த ஹூக் அதை பத்திர படுத்தி கொண்டான்.

இங்கு மகிழினி சூர்யா நினைத்தது போலவே அவனை தான் நினைத்து கொண்டு இருந்தாள்.

எனக்கு முத்தம் கொடுத்து விட்டானே 

எனது இடையை என்று சூர்யா செய்தது தான் ஒவ்வொரு நிமிடமும் மகிளினிக்கு நினைவுக்கு வந்தது.

அவனுக்கு அறிவே இல்லை நாம் மாவய்யா க்கு சொந்தமாக போகிறோம் நிச்சயம் ஆகி விட்டது .

நம்மிடம் இப்படி நடந்து கொள்கிறானே அவன் பக்கம் இனி நாம் போகவே கூடாது அவனை பார்க்கவே கூடாது.

இது மட்டும் மாவய்யா க்கு தெரிந்தால் என்று நினைக்கும் போதே அவளுக்கு பயமாக இருந்தது நம்மால் அவனுக்கு எதுவும் ஆக கூடாது என்று நினைத்தவள் அவனது செயலால் தூக்கம் இல்லாமல்  சுற்றி திரிந்தாள்.

அடுத்த சந்திப்புக்காக காத்திருங்கள்

தொடரும்……

 Episode 79,

சூர்யாவை பற்றியே நினைத்தவள் சாப்பாடு இல்லாமல் உறங்க நடு இரவில் மிகவும் பசி எடுத்தது .

அவள் சமையலறை செல்ல இவள் வரும் அரவம் கேட்டு அங்கு உள்ளே பணிப்பெண்

என்ன மா எதுவும் வேணுமா  என்று மகிழினியை பார்த்து கேட்க ,

ஒன்னும் இல்லை நான் சும்மா வந்தேன் நீங்கள் போய் தூங்குங்கள் என்று சொல்ல ,

உடனே அந்த பணிப்பெண் மகியிடம் இல்ல மா தேஜு மேடம் சொன்னாங்க நீங்கள் night எதுவும் சாப்பிடாமல் படுத்து கொண்டதாக இது மாயா அம்மாவுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவும் என்று சொல்லி 

பின் night நீங்கள் சாப்பிட வருவீர்கள் அப்டின்னு சொன்னாங்க அவள் சொல்ல தேஜுவை நினைத்து  மகிழினி க்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

தேஜு அக்காவுக்கு நம்ம மேல எவ்ளோ பாசம் என்று நினைத்து கொண்டாள்.

மகி பணிப்பெண்ணை பார்த்து எனக்கு ஒரு டம்ளர் பால் அதுல பூஸ்ட் போட்டு வேண்டும் என்று சொல்ல 

அதே போல் அந்த பெண் கொடுக்க அதை கட கட என்று குடித்தவள் இப்போது அந்த பெண்ணை பார்த்து எனக்கு இப்போ வெறும் பால் வேனும் அப்டின்னு கேட்க 

அந்த பெண் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தாள் பின் படி ஏறி அவளது அறைக்கு சென்று படுத்தவள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவளின் நினைவில் அவன் மட்டுமே 

அவளின் சூர்ய தேவ் தான் இருந்தான். யாரு டா நீ எதுக்கு என்னை இப்படி தொல்லை பண்ற நான் வேறு ஒருவருக்கு சொந்தமாக போகிறேன் என்று கனத்த மனம் கொண்டு நினைத்து கொண்டு இருந்தாள்.

சூர்யா தீண்டிய அவளின் இடையை தொட்டு பார்த்தவள் இப்போது உதடுகளை தொட்டு பார்க்க சூர்யாவின் வாசனை அவள் நாசியில் வந்து சென்றது.

எனக்கு ஏன் இப்படி தோணுது  அவன் பக்கத்தில் வந்தாலே அது அவன் பக்கத்தில் இருக்கணும்  போல இருக்கே என்று மகிழினி நினைத்து கொண்டே தூக்கம் வராமல் 

இப்போது எழுந்தவள் நேராக அந்த ஓவியம் வரையும் அறைக்கு சென்று sp புகைப்படம் ஒன்று எடுத்து வைத்து சூர்யாவை

 அவனை நினைக்காதே நீ மாவய்யா வ தான் நினைகனும்

அப்டின்னு மூளை சொல்லி சொல்லி மகிழினி sp ன் படத்தை சூர்யாவை மறக்க வேண்டும் என்று வரைந்தாள்.

ஆனால் எவ்வளவு தான் அவள் மறக்க நினைத்தாலும் இனி அவளால் அவனை விட்டு செல்ல முடியாது .

அங்கேயே ஒரு chair ல அமர்ந்து உறங்கி விட்டாள். இப்போது அவளுக்கு மோர்னிங் சிக் நெஸ் வந்து விட எவ்வளவு தான் மருந்து எடுத்து கொண்டாலும் காலையில் ஒரு முறையாவது வாமிட் வந்து விடுகிறது.

ஷீலா அவள் எங்கே இருக்கிறாள் என்று பார்க்க மகி வாஷ் ரூம் ல இருந்து வெளியே வந்தாள்.

மீண்டும் சோர்ந்து படுத்து கொள்ள சென்றாள்.மகி வா சாப்பிடலாம் என்னாச்சு என்று கேட்க

ஒன்னும் இல்லை அக்கா நீ போ நான் வருகிறேன் என்று படுத்து கொண்டாள்.

இங்கு சூர்யா அவளை நினைத்து கொண்டே தானாக சிரித்தவன் சரியான சண்டைக்காரி என்று நினைத்து கொண்டே அலுவலக வேலையில் மூழ்கி போனான்.

Sp மகிழினியை பார்ப்பதற்கு  தயாராகினான் யார்க்கும் சொல்ல வில்லை இன்ப அதிர்ச்சி யாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

இங்கு சூர்யாவோ தன் வீட்டுக்கு வந்தவன் நேராக அவன் அறைக்கு சென்று மகியின் ஹூக் எடுத்து பார்த்து தனக்குள் சிரித்து கொண்டு வெளியே வர 

ஜானு அங்கு இருந்த ஒரு அறைக்குள் சென்று வருவது தெரிய அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்க அது என்ன அறை என்று பார்க்க அது ஸ்டோர் ரூம் என்று தெரிய அவன் மீண்டும் அவன் வேலையை கவனிக்க sendru விட்டான்.

அடுத்த நாள் யாருக்கும் காத்து கொண்டு இருக்காமல் விடிந்தது.

ஜானு சூர்யாவிடம் அத்தான் மாமாவுக்கும் , அத்தைக்கும் கல்யாண நாள் வருது அதுக்கு நீங்கள் ட்ரெஸ் எடுத்து கொடுக்கணும் வாங்க நாம்ப  கடைக்கு போகலாம் என்று சொல்ல 

ம்ம்ம் ஜானுவுக்கு இது எல்லாம் இன்பா தான் ஒவ்வொரு நாளும் சூர்யாவை எங்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முன்னவே கூறி விட்டான்.

அப்படி இவர்கள் செல்லும் இடத்தில் cctv footage எல்லாம் மாற்றுவது போன்ற வேலைகள் செய்ய சில ஆட்கள் சூர்யாவை பாதுகாக்க 2 போலீஸ் மாறு வேடத்தில் வைத்து உள்ளான்.

இன்பாவுக்கு தேவையான ஒன்று sp அவனை பார்க்க வர வைக்க வேண்டும் அதுவும் அவன் மகியை திருமணம் செய்ய போகும் முன் இது நடக்க வேண்டும்.

இல்ல ஜானு நம்ப ஏன் மால் க்கு போக கூடாது அங்கே நமக்கு வடிவமைப்பாளர் செய்த உடைகள் இருக்கும் நல்ல காலெக்ஷன் நமக்கு கிடைக்கும் ஜானு நீ என்ன சொல்ற என்று கேட்க 

ம்ம்ம் ok அத்தான் நம்ப போகலாம் என்று இவர்கள் மால் க்கு செல்ல

இவர்களுக்கு முன்னவே   தேஜு, ஷீலா, மகி மூவரும் அங்கு இருந்தனர்.

மகி சில உடைகளை வேடிக்கை பார்த்து கொண்டே வர ஷீலா தேஜுவை அழைத்து கொண்டு வித விதமான துணிகள் வாங்கி குவிக்க

மகிழினி இப்படியே நடந்து சென்றவள் திடீரென ஒரு வீட்டுக்கு அழகு பொருள்கள் fancy பொருட்கள் இருக்கும் கடைக்குள் செல்ல 

ஷீலா அவளிடம் நாங்க நெஸ்ட் floor போறோம் வெய்ட் பண்ணவா என்று கேட்க

இல்ல அக்கா நீங்கள் போங்க நான் வருகிறேன் என்று சொல்ல அவர்கள் மேலே சென்றனர்.

சூர்யாவும் ஜானுவும் வெளியே வர இவள் அந்த கடையின் உள்ளே சென்றாள் தன்னவளின் வாசம் அறிந்தானோ என்னவோ சூர்யா ஜானுவிடம் 

ஜானு மா நீ food கோர்ட் போடா நான் ஒரு பொருள் வாங்க மறந்து விட்டேன் என்று சொல்ல

சரி அத்தான் என்று அவனிடம் இருந்து 3 பைகளை வாங்கி கொண்டு இவள் செல்ல அவள் போனவுடன் மீண்டும் அந்த கடையின் உள்ளே வந்த சூர்யா 

அங்கு தொங்கவிடபட்டு  இருந்த அந்த ஒற்றை மான் சாவி கொத்து key செயின் எடுத்து வாங்க சென்றான்.

ஆம் அது அவளுக்காக தான் மகியின் இடையில் இருந்து ஹூக் எடுக்கும் போதே அவனுக்கு அவளது இடையில் இப்படி ஒரு சாவி கொத்து key செயின் தொங்கினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று அவனது மனம் எங்கோ சென்றது.

அதை எடுத்தவன் அதை பார்த்து சிரித்து கொண்டே வருடி விட்டு ஒரு முறை ஆட்டி பார்த்து ரசிக்க இதை எல்லாம் மகிழினி கோபம் கொண்ட கண்களோடு கொஞ்சம் எட்ட நின்று பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் மனதில் சாவி கொத்து வைக்க key செயின் வாங்குகிறாயா உன் அருகில் பெண் அது அவள் தானே அத்தான் அத்தான் என்று உன்னை ஏலம் போட்டு சுற்றி கொண்டு இருப்பாளே.

அவளுக்கு வாங்குகிறாயா என்று மனதில் ஜானு மேல் பொறாமையாக இருந்தது.

அங்கு இருக்கும் அவளுக்கு விருப்பமான லிட்டில் க்ரிஷ்ணா சிலையை எடுத்து கொண்டு பில் போட செல்ல அதற்குள் சூர்யா அவன் வாங்கியதற்கு பில் போட்டு விட்டு லிப்ட் அருகில் செல்ல இவன் முதலில் ஏற மகிழினி க்கு அப்பொழுது ஷீலா கால் செய்ய பேசி கொண்டே இவன் அந்த லிப்ட் ல ஏறியது தெரியாமல் எறிக்கொண்டாள்.

அவள் லிப்ட் உள்ளே ஏறியதும் போன் கட் ஆக இவள் அதை பார்த்து புலம்பி கொண்டே வர 

சூர்யா அப்பொழுது தான் அவள் உண்மையாகவே உள்ளே வந்து இருக்கிறாள் என்று தெரிய அவளுக்கு கேட்கும் குரலில்

லிப்ட் ல ஏறிய பிறகு போன் டவர் போயிடும் மேடம்  என்று சூர்யா சொல்ல 

அச்சோ !அப்படியா ரொம்ப thanks சார் !

என்று அவள் திரும்ப அங்கு சூர்யா இவளை புன்னகை முகம் கொண்டு பார்த்து நிற்க

உடனே அவன் செய்த செயல் key chain எல்லாம் நியாபகம் வர நீயா என்று கோபம் கொண்டு அவன் பக்கம் முறைத்து விட்டு அவள் திரும்பி கொண்டாள்.

அடுத்து அவள் இறங்கும் தளம் வர அவள் இறங்க போக அங்கு உள்ள சுவற்றில் குழந்தைகள் சுவிங்கம் சாப்பிட்டு அதை அங்கு ஒட்டி வைத்து செல்ல அதன் மேல் மகியின் முடி ஒட்டி கொண்டது.

இவள் வெளிய செல்ல முடி ஒட்ட

ஏய் விடு டா 

எனக்கு முடி ரொம்ப வலிக்குது உன்னோட வேலைய என்கிட்ட வைத்து கொள்ளாதே என்று அவள் சொல்லி கைகளை ஓங்கி கொண்டே திரும்ப 

அங்கு சூர்யா அவனுடைய இடத்தில் நின்று கொண்டு இவள் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான். அப்போது தான் அவளுக்கு தெரிந்தது சூர்யா எதுவும் செய்ய வில்லை என்று 

இப்போது லிப்ட் கதவுகள் மீண்டும் மூடி கொள்ள அவள் திரும்பி அந்த சுவிங்கம் அதில் இருந்து அவளுடைய முடியை எடுத்து கொண்டு இருக்க 

சூர்யா அவள் ஏறிய பின் ஏதாவது செய்து கடைசி தளத்திற்க்கு அழைத்து சென்று விட வேண்டும் இன்று அவளுக்காக வாங்கியதை கொடுத்து விடும் எண்ணத்தில் தான் இருந்தான்.

ஆனால் தானாகவே நடக்கும் என்று அவன் எதிர் பார்க்க வில்லை.

சூர்யா அவள் அருகில் வந்து அதை எடுக்க அவள் உடனே கோபம் கொண்டு அவன் கைகளை தட்டி விட்டாள்.

போதும் ஓவரா பண்ணாதீங்க மேடம் என்று அவன் உதவி செய்ய அவனுடைய மூச்சு காற்று அருகாமை மகிழினிக்கு ஏதோ செய்ய  அவனிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று சொல்ல

ஏய் தள்ளி போ எனக்கு எடுக்க தெரியும் என்று கைகளை தட்டி விட 

சும்மா கொஞ்ச நேரம் இரு என்று அவன் அதில் இருந்து முடிகளை பிரித்து எடுத்து பின் 

அதை பார்த்து இப்போ ok என்று சொல்ல 

உடனே லிப்ட் பட்டன் பார்த்த மகி அதனை மாற்ற போய் அவள் செல்லும் தளம் அழுத்த மகி அழுத்திய அதே நேரம் மீண்டும் பின்னால் இருந்து சூர்யா அவளை நெருங்கி அவள் கைகளை பிடித்து லாஸ்ட் floor பட்டன் தட்டி விட

ஒரு நிமிடம் அவள் திகைத்து பின் இயல்பு நிலைக்கு வந்து மகிழினி சூர்யாவை பின்னால் திரும்பி பார்த்து

ஹே என்ன செய்யுற  என்று கொஞ்சம் தள்ளி நிற்க

அவன் சிரித்து கொண்டே பார்த்தால் உனக்கே தெரியும்  என்று அவன் அவள் அருகில் நெருங்க அவள் பின்னே சென்றாள்.

வேணாம் கிட்ட வராத 

வேணாம் பிலீஸ் வராத 

எனக்கு  என்று அவள் கூறும் நேரம் அவள் இதழில் கைகளை வைத்து வருடியவன் 

கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லும்போதே மகிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க 

ஏய் என்னாச்சு என்று இன்னும் சூர்யா அவள் அருகில் வர 

மகிழினி அவள் கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.

சூர்யா அவளை பார்த்து சிரித்து விட்டு அவன் அவளுக்கு வாங்கிய அந்த சாவி கொத்து செயின் எடுத்து இடையில் உள்ள ஹூக் எடுக்க போக மகிழினி அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து அவன் நெஞ்சில் தலையை புதைத்து கொண்டாள்.

அவன் அவள் இடையில் அதை போட்டு விட்டு அதனை ஒரு முறை ஆட்டி விட அப்பொழுது தன்னிலைக்கு வந்தவள் .

அவன் என்ன செய்தான் என பார்க்க அவள் இடையில் உள்ள அந்த மானை பார்த்து மகிழினி மனதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சூர்யாவை நிமிர்ந்து பார்த்தவள் இத 

இதை என்று மின்னும் கண்கள் கொண்டு அவள் சுட்டி காட்ட

இது உனக்காக 

எனக்காகவா என்று மகிழினி  கேட்க

சூர்யா அவளின் இதழ் நோக்கி குனிந்து

ம்ம்ம் என்று சொல்லி

அவளை தன் வசமாக்கினான்.

இந்த முறை மகிழினி அவனை பார்த்து ????

தொடரும்….

 Episode 80,

மகிழினியின்  இடையில் தொங்கவிட பட்ட அந்த செயின் பார்த்துகொண்டே அவள்  இது என்று சூர்யாவிடம் கேட்க 

இது உனக்காக என்று சூர்யா அவள் இதழை நோக்கி குனிந்து தன் வசமாக்க அங்கு உள்ள சுவற்றில் ஆளுயர கண்ணாடியில் இவள் பிம்பம் தெரிய 

சூர்யாவின் காதல் பார்வையில் அந்த கண்ணாடிக்கு கண்கள் இருந்தாலும் கண்களை மூடி கொள்ளும் 

லாஸ்ட் floor சென்று லிப்ட் கதவுகள் திறக்க அது மொட்டை மாடியாக இருந்தது.

மகிழினி கண்களை மூடிக்கொள்ள சூர்யா அவளின் போன் எடுத்து finger print வைத்து unlock செய்து அதில் தன்னுடைய எண்ணுக்கு ஒரு போன் செய்து கட் செய்தான்.

மீண்டும் அவளின் இதழில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து கொண்டே ground floor பட்டன் தட்டி விட 

அவள் முகத்தில் நாணம் கொண்டு அவனை விலகினாள்.

ஹே என்னாச்சு என்று சூர்யா அவள் அருகில் வர 

இப்போது மகிழினி நீ வர வேணாம் போ இது தப்பு என்று சொல்ல

என்ன தப்பு என்று அவள் முகத்தை தன் கைகளால் ஏந்தி கொள்ள மகிழினி அவன் கைகளை தட்டி விட்டு 

பிலீஸ் நான் சொல்றத முதலில் கேளு எனக்கு வேற ஒருத்தர் கூட என்று அவள் சொல்ல வர

சூர்யா அவள் கைகளை விட 

மகிழினி இப்போது கூறினாள் எனக்கு வேற ஒருத்தர் கூட engagement ஆகி விட்டது.என்று மகிழினி கூறவும் அவளது கைகளை பிடித்து கொண்டவன்.

நீ வேற ஒருத்தரை காதலிக்க வில்லை தானே வீட்டில் பார்த்து செய்து வைத்த நிச்சயம் 

அவ்ளோ தானே  இதுல ஒரு பிரச்சனையும் இல்ல நீ வேணாம் ன்னு சொல்லிடு என் கூட வந்திடு

மகிழினி அவனை பார்த்து அது முடியாது உனக்கு எங்க மாவய்யா பத்தி தெரியாது ஆமா நான் எதுக்கு உன்கிட்ட சொல்லனும் உன்னை பார்த்தாலே எனக்கு கோபம் வருது என்று மகிழினி கோபம் கொள்ள

உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல உதடுகளை பொய் கூற சொன்னாள்

அப்போ என்னை உனக்கு பிடிக்கல 

ஆமா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல என்று அவள் முறைக்க 

சூர்யா அவளை அந்த  கண்ணாடி பக்கம் திருப்பி அதை இந்த கண்ணாடியை பார்த்து சொல்லு 

ஏன் என்றால் உன்னை விட இந்த கண்ணாடி இவ்ளோ நேரம் உன்னோட நாண முகத்தை ரசித்து கொண்டு இருந்தது.

என்று கூறியவன் அவளது கழுத்தில் உள்ள மச்சத்தை வருடி விட 

மகிழினி கண்கள் மூடி கொண்டாள்  அது ஒரு நிமிடம் தான் பின் தன்னிலைக்கு வந்தவள்.

என்னை இனி இப்படி தொல்லை பண்ணாத பிலீஸ் என்று அவள் செல்ல போக

சூர்யா அவள் கைகளை பிடித்து தன் புறம் பார்க்க வைக்க 

என் கைய பிடிக்க நீ யாரு என்று அவள் வேண்டும் என்றே கோபம் கொண்டு பேச 

சூர்யா அவளது கூந்தலை ஒதுக்கி விட்டு கொண்டே இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன

என்னோட நெஞ்சில் மயங்கி என் மேல் சாய்ந்து கொண்டாயே

அப்போ உனக்கு நான் stranger மாறி தெரிய வில்லையா இல்லை

அப்போ உனக்கு பிடிக்க வில்லை தானே என்னை தள்ளி விட்டு இருக்கலாமே

அன்னிக்கு யாரோ ஒருத்தர் உன்னோட இடையை கிள்ள அது நான் தான் அப்டின்னு என் கன்னத்தில் அடிச்ச நீ

அன்னிக்கு gaming zone ல உன்கிட்ட நான் advantage எடுத்த போது என்னை அடித்து இருக்கலாம் 

ஏன் நீ என்னை அடிக்கில ம்ம்ம்ம்

என்று இரு புருவங்கள் தூக்கி அந்த கண்ணாடியின் வழியாக தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்த மகிழினி யை பார்த்து சூர்யா கேட்க

அவள் கண்கள் பட பட என அடித்து கொள்ள

நான் அன்னிக்கு

என் மேல தப்பு

உங்க கிட்ட தவறா நடந்து கொண்டேன் அதனால என்று அவள் உளற

சூர்யா அவள் மீது விரல் ஊர்வலம் நடத்தி கொண்டே அப்போ இன்னிக்கு என்று கேட்க 

மகிழினி சொக்கி போய் கண்கள் மூடியவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் கரைய திடீரென தன்னிலைக்கு வந்தவள் 

என்னை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது அதே போல் தான்

உன்னை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது எங்க மாவய்யா என் மேல் உயிரே வைத்து இருக்கிறார்.

அதனால என்னை விட்டு விடு என் பின்னால் சுத்தாத என்று அவள் சொல்ல

நீ உன்னோட மாவாய் அது என்ன whatever நீ விரும்புகிறாயா என்று சூர்யா கேட்க

மகிழினி அவனை பார்த்து திரு திருவென முழிக்க

சூர்யா  அவளிடம் உன்னோட மனசுல நான் தான் இருக்கேன்

உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா எனக்கு உன் மேல கோபம் வெறுப்பு தான் இருக்கு 

உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல என்று அவள் கோப பார்வையில் சூர்யாவை பார்க்க

சூர்யா அவளை பார்த்து சரி ok இப்போ உன்கிட்ட நான் அட்வாண்டஜ் எடுத்ததுக்கு என்னை slap பண்ணிட்டு போ என்று சொல்ல

மகிழினி திகைத்தாள்.

பிலீஸ் slap me என்று அவன் தனது கன்னத்தை காட்ட 

மகிழினி கைகளை ஓங்கி பின் கீழ விட்டவள்.

நான் எதுக்கு உன்னை அடிக்கனும் என்று  மகிழினி கேட்க

என்னோட தொடுதல் உனக்கு பிடிக்கல நீ அடிச்சா நான் உன்னை மறக்க try பண்ணுவேன் 

இல்லனா நீ எனக்கு பக்கத்தில் வேனும் ன்னு தோணும் அப்புறம் mind கொஞ்சம் கிரிமினல் ஆ யோசிக்க தோணும் அது தான்

பிலீஸ் slap me என்று அவள் கைகளை பிடிக்க

I cant do திஸ் என்று மனம் சொல்ல 

அடி டி என்று சூர்யா அவளை பார்த்து கேட்க

உன்னோட பேச்சுலயே என்னை மயக்கு டா என்று மனதில் நினைத்து கொண்டவள் அவன் கன்னத்தில் அரைய சென்று பின் அரையமல் லிப்ட் ல இருந்து இறங்கி செல்ல

ஏய் சண்டைக்கோழி என்று அவன் கூப்பிட கால்கள் தானாகவே நிற்க 

என்னோட deer ஆ கொடுத்து விட்டு போ 

அவள் திரும்பி என்ன என்பது போல் பார்க்க 

சூர்யா அவளை பார்த்து உன்னோட ஹிப் ல இருக்கு அதை சொன்னேன்

மகிழினி முகம் வாடி போக நீ தானே சொன்ன என்னை உனக்கு பிடிக்கல அப்டின்னு அப்புறம் என்னோட deer எதுக்கு உன்னை முட்டனும் என்று அவள் அருகில் வந்து  இடையில் இருந்து அதை எடுத்து கொள்ள

இப்போது சூர்யாவின் கன்னத்தில் அரைந்து விட்டு சென்றாள்.

சூர்யாவின் முகத்தில் நிறைவான புன்னகை இரு டி உன்னை தூக்கறேன் என்று மனதில் நினைத்து கொண்டு அவள் எண் தன் போனில் பதிவு செய்து கொண்டான்.

அந்த key செயின் எடுத்து கொண்டு அந்த fancy ஸ்டோர் க்கு சென்று அதனை அழகாக பேக் செய்து 

அந்த கடை ஊழியர்க்கு சில 500கள் கொடுத்து மகிழினியை  சுட்டி காட்டி இந்த மால் ல இருந்து கிளம்பும் போது அந்த பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல 

அந்த பணியாளன் சரி என்று மகிழினி கிளம்ப காத்து இருந்தான்.

அந்த நேரம் சூர்யா food கோர்ட் உள்ளே செல்ல இங்கு மகிளினியை அழைத்து செல்ல sp வந்து விட்டான்.

ஆனால் சூர்யா அவனை பார்க்க வில்லை.

Sp யும் சூர்யாவை பார்க்க வில்லை  இருவரும் வெவ்வேறு இருவரும் வெவ்வேறு திசையில் சென்றனர்.

இருவரது  பாதைகள் வேறு 

ஆனால் இலக்கு ஒன்று 

அந்த இலக்கு  மகிளினி(மான் விழி) தான்

இங்கு  மகிளினி சூர்யாவை நினைத்துக்கொண்டு

ஒரு முறை நான் மாவய்யா கிட்ட சொல்லி பார்கட்டுமா

எனக்கு உங்களை பிடிக்கும் ஆனால் திருமணம் கணவர் என்ற இடத்தில் உங்களை என்னால் வைத்து பார்க்க முடியவில்லை

சீலாவையும் தேஜுவையும் பார்க்கச் செல்ல அங்கே அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இப்போது அவளுக்கு பயம் தொற்றி கொள்ள sp மகியை பார்த்து கன்னகுளி தெரிய சிரித்து கொண்டே

பொம்மாயி என்னோட சர்ப்ரைஸ் உனக்கு பிடிச்சிருக்கா 

மா

மாவாய்யா

நீங்க எப்ப வந்தீங்க

எஸ் பி யின் முகம் இப்போது இறுக 

இப்போ நான் வந்தது உனக்கு புடிக்கலையா பொம்மாயி

அப்படி இல்ல மாவாய்யா எனக்கு புடிச்சிருக்கு சரி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்.

எனிதிங் ஸ்பெஷல் பொம்மாயி என்று கூறிக்கொண்டே எஸ்பி அவள் கைகளை பிடிக்க அருகில் வர

ம்ம்ம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு 

என்று அவள் விலகி செல்ல sp க்கு கோபம் வர அதை கட்டு படுத்தி கொண்டு 

பொம்மாயி என்று அழுத்தமான குரலில் கூப்பிட அவள் பயந்து கொண்டே அவன் அருகில் வந்து நிற்க sp இப்போது கைகளை அவள் முன் நீட்ட முதல் முறையாக அவள் தயக்கம் காட்டினாள் .

பின் வேற வழி இல்லாமல் கைகளை கொடுக்க sp இப்போது சிரித்த முகத்துடன் வெளியே செல்லும் வழியில் நடந்து செல்ல

சூர்யா இருக்கிறானா என்று கண்களை அலை பாய விட்டு தன்னவனை மகி தேட 

யாரை தேடுகிறாய் என்று sp கேட்க

அது வந்து என்று மகி பயந்து கொண்டே ஏதோ சொல்ல வர

அப்பொழுது அங்கு சூர்யா அனுப்பிய பணியாளர் மேடம் என்று அழைக்க

Sp அவனை பார்த்து முறைக்க அவன் பார்வை கண்டு தூரத்தில் நின்றவன்.

இப்போது பயந்து கொண்டே நிற்க 

Sp அவனை பார்த்து யார் நீ என்று கொடூர பார்வை வீச

சார் மேடம் இத எங்க கடையில் வாங்கி விட்டு வந்து விட்டார்கள் என்று அவன் திக்கி திணற கூற

மகி மனதில் இப்போது இல்லை என்றால் அந்த பணியாளரை எதுவும் செய்து விடுவார் என்று நினைத்தவள்.

ரொம்பவும் நன்றி நான் மறந்தே விட்டேன் கொடுங்கள் என்று அதை வாங்கி கொள்ள

அந்த பணியாளர் விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.

அவன் சூர்யா கிட்ட வந்து கொடுத்து விட்டதாக கூற அவன் இன்னும் சில 500 களை கொடுக்க வாங்கி சென்றான்.

மகிழினி க்கு sp இன் கைகளுக்குள் தன் கையை வைத்து இருப்பது வெறுப்பை தந்தது.

காருக்கு சென்றவுடன் அவள் மிகவும் சோர்வாக இருப்பது போல நடித்து ஜன்னல் அருகில் சாய்ந்து கொண்டாள்

இப்போது sp க்கு மிகவும் சஞ்சலமாக இருந்தது ஏதோ சரி இல்லை என்று நினைத்தவன்

சீக்கிரமே இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்

அப்போது தான் நம்மை விட்டு செல்ல மாட்டாள் என்று sp அவன் மனதில் சில திட்டத்தை வகுத்தான்.

வீட்டுக்கு வந்த உடன் மாவய்யா நான் பிரேஷ் ஆகி விட்டு வருகிறேன் என்று கைகளில் அந்த box எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றாள்.

அது என்ன என்று ஆவலுடன் பிரித்து பார்க்க அவளுக்கு அதில் உள்ள பொருளை கண்டதும் மனதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி 

இவன் இவனை என்ன தான் செய்யறது என்று அந்த மானை எடுத்து பார்த்தவள் என்னை நீ முட்டி உன்னோட வலையில் என்னை சிக்க வைத்து விட்டாயே என்று சந்தோஷ மன நிலையில் இவள் ரெக்க கட்டி பறக்க

அப்பொழுது அவளுக்கு போன் வந்தது புது எண்ணில்  இருந்து வரவும் மகிழினி யார் என்று காதில் வைத்து 

ஹலோ என்று சொல்ல

சூர்யா என்னோட சண்டைக்கோழி இல்லை sorry என்னோட deer key செயின் உங்க கிட்ட டெலிவரி பண்ணிட்டாங்க சோ எனக்கு அது வேனும் என்று அவன் சிரித்து கொண்டே பேச

அதெல்லாம் எனக்கு தெரியாது

என்கிட்ட  கொடுத்தால் அது எனக்கு தான் சொந்தம்.

அப்போ ok என்று சூர்யா சிரித்து கொண்டே சொல்ல

சரி நான் போன் வைக்கட்டுமா என்று அவள் கேட்க 

அவன் பாருடா முதல் முறையாக எனக்கு respect பண்ணி கேட்கறீங்க மேடம் என்று சூர்யா அவளை கிண்டல் செய்ய

ஏய் போடா என்று அவள் போன் வைத்து விட்டு கண்ணாடி முன் நின்றவள் தன்னை தானே பார்த்து சிரித்து கொண்டாள்.

அந்த key chain எடுத்து இடையில் எடுத்து சொருகி கொண்டு அவளையே ஒரு முறை சுற்றி பார்க்க அந்த மான் அது சூர்யாவை தான் நினைவு படுத்தியது.

இவள் சந்தோஷ மன நிலையில்  ம்ம்ம் என்னை பத்தி நல்லா தான் புரிந்து வைத்து இருக்கிறாயடா 

என்னோட ராட்சச்சா !!!!

 Episode 81,

மகிழினி சிரித்து கொண்டே கீழ மெதுவாக இறங்க

என்ன பொம்மாயி சால சந்தோஷங்க இருக்க போல என்று கேட்க

இல்ல மாவய்யா சும்மா தான்

நீங்கள் இன்னிக்கு வந்து இருக்கீங்க தானே

அதனால தான் என்று அவள் சொல்லி கொண்டு ஒரு சோபாவில் அமர்ந்தாள்.

ம்ம்ம்  

அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க என்று sp கேட்க 

நான் நெஸ்ட் week காலேஜ் ல join பண்ண போறேன்.

ம்ம்ம் 

மாவய்யா என்று அவள் அழைக்க 

ம்ம்ம் சொல்லு பொம்மாயி என்று அவன் சொல்ல

உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் 

ம்ம்ம் சொல்லு என்று அவன் அவளை பார்க்க

மகிழினி மனதில் சூர்யா சொன்னது பற்றி சொல்லி விட வேண்டும் என்று

சூர்யாவை நினைத்து

முகத்தில் வெட்கம் பூச , கைகளை பிசைந்து கொண்டு

கண்கள் அங்கும் இங்கும் படபடக்க

தன் கூந்தல் முடிகளை காதுக்கு ஒதுக்கி 

மாவய்யா அது வந்து என்று அவள் திக்கி திணறி சொல்ல வர அவளின் இந்த தடுமாற்றத்தில் sp அவளை ரசித்தவன்.

இங்க வா என்று  அருகில் அழைக்க தன்னிலைக்கு வந்தவள்.

என்ன என்று இரு புருவங்கள் முடிச்சு போட கேட்க

Sp எழுந்து அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடிக்க மகிளினிக்கு இது சரி இல்லை என்று மனம் சொல்ல இதயம் வேகமாக துடித்தது.

அவளை பால்கனி அழைத்து சென்றவன் மகிளினியை பின்னால் இருந்து அணைக்க மகிழினிக்கு அப்படியே உடல் நடுக்கம் கொண்டது கண்களில் கண்ணீர் கோர்க்க

அவள் அவனிடம் இருந்து விலக போராட

ஹே  என்னாச்சு இப்போ சொல்லுங்க என்று கேட்க 

மகிழினி அவனிடம் கொஞ்சம் தள்ளி போறீங்களா என்று சொல்லியே விட்டாள்.

Sp அவளிடம் ஏன் நீ தான் எனக்கு பாதி சொந்தமாகி விட்டாயே என்று அவன் மீண்டும் அருகில் வர 

மகிழினி தன் உணர்வுகளை மறைத்தவள்

மாவய்யா எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு

  நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமா என்று கேட்க 

Sp கோபம் கொண்டவன் என்னாச்சு என்று கேட்க

இல்ல சும்மா தான் என்று அவள் வேகமாக செல்ல 

அவள் கைகளை அவன் பிடிக்க இப்போது அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

பொம்மாயி நீ மாறிவிட்டாய் என்று அவன் சொல்ல

அவள் இல்ல மாவய்யா

எனக்கு ரொம்பவும் சோர்வா இருக்கு சத்தியமா என்று சொல்ல

அவன் அவளை பார்த்து விட்டு சரி போ என்று சொல்ல அவள் வேகமாக தன் அறைக்கு சென்று பூட்டியவள்.

நேராக குளியல் அறை சென்று குளித்தவள் என்ன என்றே தெரியாமல் அழ ஆரம்பித்தாள்.

அய்யோ இப்போது என்ன செய்வது என்று அவள் அழுதவள்.

வெளியே வந்து நேராக துணிகளை மாற்றி கொண்டு

சூர்யாவுக்கு கால் செய்தாள்.

என்ன மேடம் இப்போ கால் பண்ணி இருக்கீங்க என்று சூர்யா கேட்க

எனக்கு உடனே உன்னை பார்க்கனும் போல இருக்கு என்று அவள் அழுது கொண்டே கூற 

சூர்யா அவளிடம் என்னாச்சு ஏன் இப்போது அழற  என்று அவனுக்கு இதயம் படபடத்தது 

இப்போ பார்க்கனும் என்று அவள் சொல்வதையே திரும்பி சொல்ல சரி சொல்லு 

இப்போ நான் எங்கே வரனும்  என்று சூர்யா சொல்ல

மகிழினி தனது வீட்டு முகவரியை கொடுக்க பின் எதையோ யோசித்தவள்.

வேணாம் நீ வர வேணாம்

இங்கே வந்தால் உனக்கு ஆபத்து

என் கிட்ட இப்படியே பேசி கிட்டு இருக்கியா

என்று ஏக்கம் கொண்டு  மகிழினி பேச

சூர்யா ஒரு நிமிடம் யோசித்தவன் சரி பேசலாம் என்ன பேசறது என்று சொல்லி கொண்டே அவன் மகிழினி கொடுத்த முகவரியை பார்த்து விட்டு  ப்ளூ டூத் போட்டு கொண்டே 

வீட்டில் அனைவரும் தூங்கி விட்டார்களா என பார்க்க ஜானு ஸ்டோர் ரூமில் இருந்து வெளிய வருவதை பார்த்தான்.

சண்டைக்கோழி ஒரு நிமிடம் இரு என்று hold ல போட்டு விட்டு மெதுவாக இவன் வெளிய செல்ல 

அத்தான் எங்கே போறீங்க என்று ஜானு கேட்க

ஆஃபீஸ் ல ஒரு file வைத்து விட்டு வந்து விட்டேன் அதை எடுக்க போறேன் 

காலையில் போய் பார்த்துக்கொள்ளலாம் தானே இப்போ போறீங்க

இல்ல மா இது ரொம்ப முக்கியம் நீ போய் தூங்கு செல்லம் நான் சீக்கிரமே வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு அவன் சென்றான்.

உடனே ஜனனி இன்பாவுக்கு கால் செய்து கூறினாள்.

சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று இன்பா வைத்து விட்டான்.

இன்பா mufty போலீசார் கிட்ட சொல்லி சூர்யாவை கண்காணிக்க சொன்னான்.

அப்பொழுது மைவிழி கிட்ட இருந்து இன்பாவுக்கு கால் வந்தது.

என்ன மா இப்போது கால் பண்ணிருக்க என்று கேட்க

மைவிழி அவனிடம் அண்ணா உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்ல 

என்னாச்சு மா எதுவும் பிரச்சனையா எதுவாக இருந்தாலும் மறைக்காமல் என்னிடம் சொல் 

அப்பொழுது தான் எதுவும் செய்ய முடியும் என்று இன்பா சொல்ல 

மை விழி அழுது கொண்டே குரு அவளிடம் கூறியது காலேஜ் ல மைவிழி, குரு மோதல் என அனைத்தையும் கூற

இன்பா நீ இப்போதாவது எல்லாம் கூறினாயே அது வரையில் ok 

நீ கவலை பட வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் மை விழி

நீயும் என்னோட தங்கை தான் என்று கூறி இன்பா போன்  வைத்தவன் 

குரு i will kill you என்று மனதில் சொல்லிக்கொண்டவன்  குரு பற்றிய ஆதரங்கள் சிலவற்றை தயார் செய்து சில முக்கிய ஆதரங்களுக்கு காத்து இருந்தான்.

இங்கு சூர்யா அவளிடம் பேச ஆரம்பிக்க

எங்கே போன இவ்ளோ நேரம்

என்ன நீ என் lover மாறி question பண்ற என்று சூர்யா சொல்ல 

நான் கேட்டதுக்கு பதில் வரல என்று மகிழினி சொல்ல

நான் door lock பண்ண போனேன் மேடம் என்று அவன் சொல்ல

பொய் சொல்லாத 

வெளியே ஜனனி இருந்தால் அவ கிட்ட ரெண்டு வார்த்தை பேசி விட்டு வந்தேன் போதுமா

யார் ஜனனி ?

அது தான் ஜானு என்கூட வந்தாளே என்னுடைய மாமா பொண்ணு என்று சூர்யா சொல்ல 

ம்ம்ம் அவளுக்கு உங்க வீட்டில் என்ன வேலை இன்னேரம் அவ கிட்ட உனக்கு என்ன பேச்சு 

அவ பேசறது பார்த்தாலே அப்டியே எனக்கு நிரம்ப டென்ஷனா ஆகுது

அத்தான்!!!!

அத்தான்!!!

அதை கேட்டாலே எனக்கு கோபமா வருது 

மேடம் ஜானு என்னை கூப்பிட்டால் உங்களுக்கு என்ன கோபம் என்று அவன் கேட்க 

அது 

அது அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு பிடிக்கல அவ்ளோ தான்

ம்ம்ம் அப்போ ok என்று அவன் உள்ளே சிரித்து கொண்டு இப்போது மகிழினி கிட்ட

என்னை அசையா கூப்பிட அவள் மட்டும் தானே இருக்கிறாள் .என்று சூர்யா சொல்ல

இப்போ எப்படி கூப்பிடனும்  என்று அவள் மனதில் நினைத்து வாய் வழியாக சொல்ல

உனக்கு எத்தனை வயசு என்று கேட்க 

எனக்கு தெரியாதே என்று மகிழினி கூற

ஹே பொய் சொல்லாத 

ப்ரோமிஸ் ஆ தெரியாது என்று சொல்ல 

சூர்யா அவளிடம் உன்னை பார்த்தால் எப்படியும் என்னை விட ஒரு 5 வயசு இல்ல ஒரு 4 வயசு சின்ன பொண்ணு மாறி இருக்கு 

அப்போ என்னை ரெஸ்பெக்ட் பண்ணி கூப்பிடு என்று சூர்யா சொல்ல 

எப்டி கூப்பிட என்று மகிழினி கேட்க 

I டோன்ட் know நீ தான் யோசிக்கணும் என்று சூர்யா சொல்லி 

அவள் வீட்டின் அருகில் வந்தவன் மனதில் பெரிய பணக்காரியா இருப்பா போலயே 

இப்போ எங்கே இருக்கா அப்டின்னு தெரியலையே என்று மகிழினி கிட்ட உங்கள் வீட்டில் பால் கனி இருக்கா 

ம்ம்ம் ஆமா ஏன் கேட்கிற 

சும்மா தான் நீ இப்போ என்ன பண்ற 

நான் இப்போ பெட் ல இருக்கேன் 

நீ இப்போ வெளியே வந்து ஸ்டார்ஸ் பாரு உன்னோட கவலை கொஞ்சம் குறையும் அப்டின்னு சூர்யா சொல்ல 

மகிழினி வெளியே வந்து வானத்தை பார்க்க உடனே அவள் எந்த அறை என்று கண்டு கொண்டவன் மறைந்து கொண்டான்.

முதலில் தன்னுடய போன் எடுத்து அந்த வீட்டின் cctv footage எங்கு உள்ளது எப்டி உள்ளே செல்வது ஹேக் செய்வது என்று எல்லாவற்றையும் பிளான் போட்டு விட்டு 

பின் அவளிடம் எனக்கு தூக்கம் வருகிறது போன் வைக்கிறேன் என வைத்து  விட்டான்.

மகிழினி அவன் மேல் கோபம் கொண்டு அறையின் உள்ளே செல்ல சூர்யா எல்லா வேலையும் முடித்து அவள் வீட்டின் உள்ளே இறங்கியவன் .

போன் எடுத்து கொண்டு கார் lock செய்து விட்டு அவள் பால் கணிக்கு சில பைப் ல ஏறி ஒரு வழியாக மேல வந்து விட்டான்.

சூர்யா அவளுக்கு போன் செய்ய அதை எடுத்தவள் 

என்ன எதுக்கு கால் பண்ண என்று கேட்க 

இப்போ எதுக்கு மேடம் க்கு இவ்ளோ கோபம் சண்டைக்கோழி மாறி நிக்கிற என்று சொல்ல 

அவள் எதுவும் பேச வில்லை 

எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு என்று சூர்யா சொல்ல 

அது எப்டி முடியும் நீ தான் உங்க வீட்டில இருக்க நான் இங்கே இருக்கேன் என்று மகிழினி சோக கீதம் வாசிக்க 

உடனே சூர்யா நீ நினைத்தால் முடியும் என்று சொல்ல 

எப்படி நான் இப்போது உன்னை தான் நெனைக்கிறேன்

நீ வந்து விடுவாயா என்று சொல்ல

சூர்யா அவளிடம் அப்போ நீ என்னை தான் நினைச்சு கிட்டு இருக்க என்று கேட்க

அது யார் சொன்னா ???

நான் எதுக்கு உன்னை நெனைகனும் என்று சொல்ல 

ஹே பொய் சொல்லாத டி

நான் எதுக்கு பொய் சொல்ல போறேன் 

சரி ok அப்போ நான் வீட்டுக்கு போறேன் என்று சூர்யா சொல்ல 

இப்போ என்ன சொன்ன நீ

சூர்யா அவளிடம் நான் வீட்டுக்கு போறேன் 

மகிழினி  வேக வேகமாக பால்கனி கதவுகளை திறக்க சூர்யா அவளை பார்த்து 

இரு புருவங்கள் தூக்க!

மேடம் நான் போகட்டுமா?!!!

என்று கேட்க மகிழினி ?????

தொடரும்….

 Episode 82,

மகிழினி  வேக வேகமாக பால்கனி கதவுகளை திறக்க சூர்யா அவளை பார்த்து 

இரு புருவங்கள் தூக்க என்ன என்பது போல் சூர்யா மயக்கும் புன்னகையோடு

மேடம் நான் போகட்டுமா?!!!

என்று கேட்க மகிழினி  வேகமாக வந்து சூர்யாவை அணைத்து கொண்டாள்.

மகிழினி சூர்யாவின் சட்டையை நனைக்க அவள் முகத்தை நிமித்தியவன் .

ஹே என்னாச்சு!

எதுக்கு  அழற ?என்று அவன் கேட்க 

மகிழினி சுற்றியும் பார்த்தவள் அவனை உள்ளே அழைத்து சென்று மீண்டும் அணைத்து கொண்டாள்.

இப்போ என்னாச்சுன்னு சொல்லு 

நீ என்னை ஹக் பண்ணா எனக்கு மூச்சு முட்டுது டி என்று சொல்ல

மகிழினி அவனை விட்டு விலகி இப்போ எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க 

உன்னை பார்க்கனும் போல இருந்தது அது தான் என்று அருகில் உள்ள சோபாவில் சூர்யா அமர்ந்தான்.

சரி அதுதான் பார்த்தாச்சு தானே அப்போ கிளம்புங்க என்று மகிழினி கூற 

அடி பாவி! 

இப்போ தான் டி நான் கஷ்டப்பட்டு பைப்பை எல்லாம் ஏறி,

உன்னை பார்க்க வந்தால்,

எவ்ளோ செக்யூரிட்டி தெரியுமா !

எவ்ளோ கேமரா !

உன்னோட ரூம் எது அப்படின்னு கண்டு பிடிச்சு நான் வறேன்!

நீ உடனே கிளம்பு அப்டின்னு சொல்ற 

மகிழினி பெட் ல அமர்ந்து கொண்டவள் சூர்யா பேசுவதை வைத்த கண் வாங்காமல் ரசிக்க 

சூர்யா அருகில் இருந்த அந்த தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தவன்.

இப்போது அவளை பார்க்க மகிழினி இவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

மேடம் கொஞ்சம் கனவு உலகத்தில் இருந்து வெளியே வரீங்களா

என்னை sight அடிச்சது போதும் என்று சொல்ல 

உடனே தன்னிலைக்கு வந்த மகிழினி

நான் உன்னை sight ஆஅ? 

“கனவில் கூட நடக்காது” என்று அவள் சொல்ல 

பின் சூர்யா அவளை பார்த்து

உன்கிட்ட ஒன்னு கேட்கவா 

ம்ம்ம் கேளுங்க என்று மகிழினி சொல்ல 

உன்னோட பெயர் என்ன 

மகிழினி க்கு இப்போது கோபம் வந்தது 

என் பெயர் கூட தெரியாமலே என் வீட்டுக்கு என்னை பார்க்க வந்தாயா? என்று கோபம் கொள்ள

“காதலுக்கு கண் இல்லை டி” 

இப்போ சொல்ல போறியா இல்ல

நான் கிளம்பட்டுமா.

என்னோட பேரு “மகி” என்று அவள் கூறினாள்.

ஏனோ அவளுக்கு முழு பெயரும் கூற தோன்ற வில்லை.

சூர்யாவுக்கு அந்த பெயரை கேட்டதும் ஒரு சிலிர்ப்பு, மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு,

மகி என்று சூர்யா அழைக்க அவளுக்கு ஒரு ஆத்ம உணர்வு ,

இருவரது கண்களும் பார்த்து கொள்ள ஒரு இரண்டு நிமிடம் இமைக்க மறந்து  ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

சரியாக அந்த நேரம் கதவு தட்ட பட மகிழினி க்கு தூக்கி வாரி போட்டது.

சூர்யா ஜாலியாக அமர்ந்து கொண்டு அங்கு உள்ள புத்தகங்கள் புரட்டி பார்க்க

மகிழினி எழுந்து அவன் அருகில் சென்று யாரோ வந்து விட்டார்கள்

நீ போய் ஒளிந்து கொள் பிலீஸ் என்று கேட்க 

போக முடியாது என்று அவன் அவளை பார்த்து குறும்பாக சொல்ல

ஹே பிலீஸ் பிலீஸ் என்று  மகி கெஞ்ச

அப்டின்னா

ஒரு கிஸ் கொடு நான் போறேன்  

நீ முதலில் போ நான் கண்டிப்பாக வந்து தருகிறேன் என்று சொல்லி சூர்யாவை ட்ரெஸ்ஸிங் ரூம் உள்ளே தள்ளினாள்.

இவள் தூங்கி கொண்டு இருப்பது போல் தன்னை சரி செய்து வெளியே வர 

அங்கு தேஜு நின்று கொண்டு இருந்தாள். 

இவள் கண்களை தேய்த்து கொண்டே

அக்கா இங்க என்ன பண்றீங்க என்று கேட்க

நீ இவ்ளோ நேரம் என்ன பண்ண என்று தேஜு கேட்டாள்

நீ சாப்பிட வரல அதனால sp உன்னை வர சொன்னாரு அது தான் 

அக்கா நீயே சமாளி பிலீஸ்

அவர் கேட்டால் நான் தூங்கி விட்டேன், அப்டின்னு சொல்லு நான் காலையில் அவரை பார்க்கிறேன் என்று மகிழினி சொல்ல 

இவள் அறையில் இருந்து ஏதோ சத்தம் வர தேஜு எட்டி பார்த்தாள்.

மகிழினி பதட்டத்துடன் அக்கா என்ன பார்க்கிறாய் என்று இவள் கேட்க 

தேஜு உள்ளே ஒரு முறை நோட்டம் விட்டு ஒன்னும் இல்ல என்று இருவரும் பேசி கொண்டு இருக்க 

Sp பொறுமை இழந்து மகிழினியை பார்க்க வந்தான். 

பொம்மாயி சாப்பிட வரலையா என்று ஒரு குரல் கேட்க 

ம …..

மாவய்யா

எனக்கு பசிக்கல என்று இவள் கூறி கொண்டே தேஜுவின் கைகளை பிடித்து கொண்டாள்.

கொஞ்சம் பால், பழம் ஏதாவது சாப்பிடு என்று sp தேஜுவை பார்க்க அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவள்.

மகி நான் உனக்கு எடுத்து வருகிறேன் என்று அவள் செல்லும் போது ஒரு தந்திர புன்னகை சிந்தி விட்டு சென்றாள்.

மகிழினி மனதில் அக்கா போகாதே என்று சொல்லி கொண்டாள்.

Sp அவளை நெருங்கி வர அவள் கீழ குனிந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

பொம்மாயி  ஏன் சாப்பிட வரல என்று அவளிடம் மீண்டும் கேட்க 

எனக்கு பசிக்க வில்லை என்று அவள் மருண்ட விழிகளில் வாய் தந்தி அடிக்க கூற 

Sp மகியின் கூந்தலை காதுக்கு பின்னால் ஒதுக்கி அவளை பார்த்து கன்னகுளி தெரிய சிரிக்க அவள் தன் கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

மகிழினி க்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது.

மகிழினி முகத்தினை நிமிர வைத்தவன் அவளை பார்த்து என்னாச்சு என்று மெதுவான குரலில் கேட்க 

எனக்கு உங்களை பார்த்தால் பயமா இருக்கு என்று சொல்ல 

Sp க்கு ஏதோ போல் ஆகி விட்டது

ஏன் என்னை பார்த்தால் உனக்கு பயம்

என்று கவலையான முகத்தில் கேட்க 

உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவள் சொல்ல 

Sp மனதுள் ஒரு நிம்மதி

ஆனால்…… என்று அவள் இழுக்க

ம்ம்ம் சொல்லு 

நீங்கள் இப்போ என் அருகில் என்று அவள் சொல்ல 

அவன் அவளை நெருங்க சரியாக அந்த நேரம் தேஜு வந்தாள்.

Sp க்கு இப்போது ஒன்றும் பேச முடியவில்லை .

மகிழினி நடுங்கும் கைகளோடு tray வை வாங்கியவள் உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு 

Sp யை பார்க்க

இப்போது ஏதோ சொன்ன அதை சொல்லி முடிக்கவே இல்லை என்று கம்பீரமாக குரலில் கேட்க 

மாவய்யா நான் காலையில் சொல்கிறேன் எனக்கு தூக்கம் வருது என்று சொல்லியவள்.

குட் night , ஸ்வீட் dreams என்று சிரித்த முகத்தோடு சொல்ல sp கன்னகுளி தெரிய சிரித்து விட்டு சென்றான்.

தேஜுவை பார்த்து ஒரு புன்னகை மகி சிந்தினாள்.

தேஜு மனதுள் ஸ்வீட் dreams  தான் கூடிய சீக்கிரமே எனக்கு வரும் என்று சொல்லி விட்டு அவள் அறைக்கு சென்றாள்.

உள்ளே வந்த மகிழினி வேக வேகமாக சூர்யாவை பார்க்க செல்ல அவன் ட்ரெஸ்ஸிங் ரூம் ல இல்லை

அவள் பதட்டத்துடன் சுற்றி சுற்றி சூர்யாவை தேட

ஹே எங்கே டா இருக்க என்று கேட்டு கொண்டே தேடினாள்.

கண்களில் கண்ணீர் கொஞ்சம் விட்டால் பாய்ந்து  விடும்

திடீரென சூர்யா அவளது தவிப்பை பார்த்து இதற்கும் மேல் முடியாது என்று அவளை பின்னால் இருந்து சூர்யா அணைத்து கொண்டான்.

தன்னவனின் வாசத்தை உணர்ந்த மகி அவனை திரும்பி அணைத்து கொண்டாள்.

என்னாச்சு மகி இப்போ ஏன் இப்படி நடுங்குற என்று சூர்யா கேட்க 

அவள் எதுவும் பேச வில்லை அவனை சிறிது நேரம் அணைத்து கொண்டு நின்றாள் கண்களில் சிறு துளி  கண்ணீர் எட்டி பார்த்தது.

மகி சூர்யாவின் நெஞ்சில் முட்டி கொள்ள சூர்யா அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் ஒரு இதழ் பதித்தான்.

மகிழினி  கண்களை மூடி கொண்டாள். மகி வா வெளியே போகலாம் என்று அழைத்து செல்ல  சூர்யா அவளை மெத்தையில் அமர வைத்து விட்டு சோபாவிற்கு செல்ல 

மகி அவன் கைகளை பிடித்து அருகில் அமர வைத்து கட்டி  கொண்டாள்.

அவள் ஏன் இப்படி ஒரு மாதிரி நடந்து கொள்கிறாள். நடுகுகிறாள் , அழுகிறாள் என்னாச்சு என்று சூர்யாவின் மனதில் ஓடி கொண்டே இருக்க 

மகியை இயல்பு நிலைக்கு கொண்டு வர சூர்யா அவளை பார்த்து சண்டைக்கோழி எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம் என்று சொல்ல

மகி அவனை பார்த்து எனக்கும் என்று சொல்ல சூர்யா அந்த tray எடுத்து வர அதில் நான்கு கிளாஸ் பால்  இருந்தது.

மகி தேஜுவை பற்றி ஏன் அக்கா 4 கிளாஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு பின் அதை விடுத்தவள்.

சூர்யாவுக்கு கொடுக்க அவன் ஒரு கிளாஸ் பால் குடித்தவன் இவளை பார்க்க

மகி முதலில் பூஸ்ட் போட்டு இருக்கும் பால் குடித்து விட்டு பின் வெறும் பால் குடிக்க

என்ன மகி இப்படி ஒரு டேஸ்ட் ஆ உனக்கு என்று சிரிக்க அவள் முறைத்தாள்.

பின் ஆப்பிள், மாதுளை என சாப்பிட சூர்யா அவள் சாப்பிடுவதை பார்த்து ரசித்தான்.

அனைத்தும் சாப்பிட்டு விட்டு அவள் எழ

ஹே ஒரு நிமிடம் டி

என்ன என்பதை போல் மகிழினி பார்க்க இங்கே பாரு

பால் ,

பழம்,

அப்புறம் ,

நீ ,

நான் ….

இதுல இருந்து என்ன தெரியுது மகி என்று அவளை இழுத்து அணைக்க 

மகிழினி அவனை பார்த்து அவன் சொல்ல வருவதை புரியதவள் போல்

எனக்கு ஒன்னும் தெரியல விடுங்கள் நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் என்று அவள் சென்று விட்டாள்.

அவள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தோரணையில் சூர்யா அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

முந்திய எடுத்து இடையில் சொருகி கொண்டு அனைத்து முடிகளையும் அள்ளி கொண்டை இட்டு கொண்டே இவனை பார்க்க 

சூர்யாவுக்கு எங்கே பார்க்க என்று இருந்தது.

சரி நேரம் ஆகி விட்டது நீ வீட்டுக்கு கிளம்பு என்று இவள் சொல்ல 

ஹே  atleast ஒரு முத்தம் ஆவது கொடு டி என்று கேட்க 

அவள் சிரித்து கொண்டே தன் ஆள்காட்டி விரலால் அவனை வர சொல்ல 

சூர்யா  மோகத்துடன் அவள் அருகில் செல்ல அவனின் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க 

சரி மகி இப்போ நான் தருகிறேன் என்று அவளை இழுத்து இதழில் தஞ்சம் அடைந்தான்.

பெண் அவள்  நாணம்  கொண்டு அவனுள் கரைந்தாள் .

சூர்யாவின் இருவிழி பார்வையில்

மான் விழி தன்னை தொலைத்தாள்.

சூர்யா தன் தேடுதல் தொடங்க அவன் விரல் ஊர்வலம் போக அவன் இதழ் அவளின் இதழில் ஒட்டி கொண்டது.

அவன் விரல் செல்லும் இடங்கள் எல்லாம் மின்னல் ஒரு கோடி இவள் தேகங்களில் தோற்றுவித்தான் சூர்யா 

இருவரும் மூச்சு முட்ட விலக சூர்யா அவளை விட மனம் இல்லாமல்  சரி  மகி நான் கிளம்புறேன் என்று சொல்ல 

மகிழினி சூர்யாவை பார்த்து சரி அப்புறம் இன்னொரு விஷயம் என்று அவன் அருகில் வந்து 

நான் எப்போ ஆக போகிறேன்

மிசஸ் மகி……

மிசஸ் மகி surname  என்று அவள் நிறுத்த 

அவன்  மனதில் என்னுடைய பெயர் தெரிந்து கொள்ள வார்த்தை ஜாலமா

சரியான சண்டைக்கோழி டி நீ  என சூர்யா சிரித்து கொண்டே

மிசஸ் மகி சூர்ய தேவ் என்று சொல்ல  

மகிழினியின் பிடி இறுகியது 

உன்னோட பெயர் சூர்யாவா ??????

தொடரும்…..

 Episode 83,

மகிழினி அவனிடம் 

என்னோட பெயர் எப்போ மிசஸ் மகி இன்றி இவள் நிறுத்த 

சூர்யா புரியாமல் மகியை பார்க்க 

மீண்டும் அவள் என்னோட பெயர் என்று நிறுத்தி நிதானமாக

மிஸ் மகி ல இருந்து மிசஸ் மகி ……….

என்று கேள்வியாக சூர்யாவை பார்க்க 

இப்போது சூர்யா சிரித்து கொண்டே

ம்ம்ம்ம்

நீ ரொம்ப ஸ்மார்ட்

மிசஸ் மகி சூர்யதேவ் என்று சொல்ல 

மகிழினி ஒரு நிமிடம் உறைந்தாள் .

சூர்யாவின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு எதிர்பார்ப்பு நிறைந்த கண்களுடன் 

உ……

  உன்…….

உங்க பெயர் என்ன?

சூர்யா கேள்வியாக அவளை பார்த்து என்னோட பெயர் சூர்யதேவ்

என்னுடைய முழு பெயர் சூர்யதேவ் நட்ராஜ் என்று சொல்ல 

மகிழினி ஒரு நிமிடம் மயக்க நிலைக்கு செல்ல போனவளை கீழ விழாமல் பிடித்து கொண்ட

சூர்யா ஹே மகி என்னாச்சு டி என்று அவளை மெத்தையில் படுக்க வைத்து அருகில் உள்ள தண்ணீர் எடுத்து முகத்தில் தெளிக்க 

மகிழினி அப்பொழுது மெதுவாக கண்களை திறக்க சூர்யாவின் கவலையான முகம் தான் கண்ணில் பட்டது.

இவளிடம் அசைவு தெரிய சூர்யா மகி கைகளை பிடித்து கொண்டான்.

மகிழினி எழுந்து அமர்ந்தவள்  சூர்யாவை பார்த்து

நீ நிஜமாவே சூர்யாவா என்று சிறு குழந்தை போல் அவள் கேட்க ,

ஹே இப்போ அதுவா முக்கியம் உனக்கு இப்போ என்னாச்சு வா நம்ப டாக்டர் கிட்ட போகலாம்.

மகி அவன் கைகளை பிடித்து கொண்டு சொல்லு பிலீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு 

உன்னோட பெயர் நிஜமாவே சூர்யா தானா

அவன் மகியை பார்த்து ம்ம்ம் ஆமா என்னோட பெயர் சூர்யா தேவ் தான் 

உனக்கு proof வேணுமா என்று தன் போனில் உள்ள சில id எடுத்து காட்ட 

நான் சும்மா கேட்டேன்

நீ சூர்யா தான்

  என்னுடைய சூர்யா என்று மனதில் நினைத்தவள் அவனை அணைத்து கொள்ள 

என்ன மகி உனக்கு எதுவும் பிரச்சனையா என்னோட பெயர் கேட்டு மயங்கி விழுந்து விட்டாய்

மகிழினி இப்போது முதல் முறையாக சூர்யாவ அருகில் அழைத்து  அவன் தோள் மேல் தன் கைகளை மாலையாக்கி கொள்ள 

சூர்யா அவளை பார்த்து என்னடி உன் கிட்ட நான் இத எஸ்பக்ட் பண்ணல 

என்ன அது என்று அவள் கேட்க

இல்ல நீ இப்படி என் பெயர் சொன்னால் பக்கத்தில்  வருவ அப்டின்னு தெரிந்து இருந்தால் உன்னை பார்த்த முதல் நாளே சொல்லி இருப்பேன்.

ம்ம்ம் ஆசை தான் என்று அவனை பொய்யாக முறைக்க 

சூர்யா அவளிடம் இப்போ நீ நல்லா இருக்க தானே 

ம்ம்ம் 

சரி நான் கிளம்புறேன் என்று சூர்யா சொல்ல 

மகிழினி மனம் இந்த வார்த்தைகள் கேட்டு கனத்து போனது.

அவள் மெதுவாக சூர்யா என்று அழைக்க அதுவும் முதல் முறையாக அழைக்கிறாள்.

அவன் தானாக சொல்லு மகி 

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போறீங்களா என்று தன் தலைய கீழ குனிந்து கொண்டே

மரியாதையுடன் சொல்ல நம் சூர்யா அவளிடம் விழுந்து விட்டான்.

சூர்யா அவள் அருகில் என்னடி ஒரு மார்க்கமா  பேசுற என்று கேட்க 

அவன் மேல் கோபம் கொண்டவள் இப்போ இருப்பியா மாட்டியா சொல்லு

இப்போது தான் என்னோட சண்டைக்கோழி நான் இருக்கேன் டி என்று அவன் சோபாவுக்கு செல்ல 

சூர்யா என்று அவனை அழைக்க

ம்ம்ம் மகி சொல்லு 

இங்கே வா சூர்யா என்னோட பக்கத்தில் என்று சொல்ல 

மகி வேணாம் டி அப்புறம் நான் எதுவும் உன்னை பண்ணிடுவேன்.

பிலீஸ் சூர்யா i feel lonely நான் உன் மேல சாய்ந்து கொள்ளனும் வாடா இங்க 

இவள என்ன பண்றது என்று நினைத்து அவள் அருகில் செல்ல 

மகிழினி அவன் வந்ததும் சூர்யாவின் மார்பில் போய் தன் தலையை புகுத்தி கொண்டாள்.

சூர்யாவுக்கு அவள் அருகாமை கொஞ்சம் கஷ்டமாக இருக்க 

சூர்யா என்று அவள் அழைக்க 

ம்ம்ம் 

என்னை கொஞ்ச மாட்டியா நீ 

அவ்ளோ தானா என்று மகிழினி கேட்க

அவ்ளோ தானாவா  நான் ஏன் கொஞ்சாமல் 

என்னோட மகி, என்னோட சண்டைக்கோழி, என்னோட deer , என்னோட மொத்தமும் நீ தான் என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க

மகிழினி இப்போது அவள் முதல் முத்தத்தினை சூர்யாவின் இதழில் எதிர்பாரா நேரத்தில் கொடுத்து விட்டாள்.

அவள் விலகும் நேரம் சூர்யா அவளை விட வில்லை அவள் கூந்தலை ஒரு பக்கத்தில் பிடித்து தலையை கொஞ்சம் சாய்க்க 

மகிழினி சூர்யாவின் பின் தலை முடியை தன் இரு கைகளிலும் கோதி கோர்த்து கொண்டாள்.

கண்களை மூடி மகிழினி சூர்யாவின் சூடான மூச்சு காற்றில்  மெழுகாக உருகினாள். 

இப்போது கழுத்தில் தஞ்சம் புகுந்தவன் அவளுடைய பிரத்யேக வாசனையில் தன்னை தொலைத்தவன்.

மீண்டும் ஒரு இதழ் வேட்கை கொண்டு அவளை மெதுவாக தன்னுள் கரைத்தான் சூர்யா.

சூர்யா என்று மெல்லிய குரலில் கூற 

ம்ம்ம்ம்

நான் உன் நெஞ்சில் தூங்காவா எனக்கு இந்த இடம் ரொம்ப பாதுகாப்பா இருக்கு 

இதை கேட்டு சூர்யா அவள் உச்சியில் முத்தம் வைத்து அவளை மார்போடு கட்டி கொண்டு உறங்கினான்.

இந்த இரவு இப்படியே நீளாதா என்று இருவர் மனதும் தனித்தனியாக நினைத்து கொண்டதே தவிர இவர்கள் சொல்லிக்கொள்ள வில்லை.

மகிழினி மனம் இப்போது நிம்மதியாக இருந்தது அவள் சூர்யாவின் பழக்கப்பட்ட வாசனையில் உறங்கி போனாள்.

சூர்யா சரியாக அதிகாலை 3 மணிக்கு எழுந்தவன் தன்னை கட்டி கொண்டு தூங்கும்

அவளை தன்னிடம் இருந்து பிரிக்கவும் மனமில்லை

இங்கு இருந்து மகியை விட்டு செல்லவும் மனமில்லாமல் எழுந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து அவள் உறக்கம் களையாதவாறு “சண்டைக்கோழி நான் கிளம்புறேன் டி  “என்று இவன் சொல்லி கிளம்ப போக

சூர்யாவினுடைய வாசம் அருகில் இல்லாமல் அவளுக்கு தெரிந்ததோ என்னவோ 

மகி  தூக்கத்தில் “என்னை விட்டு போகாத தேவ்”

என்று உளற சூர்யாவுக்கு ஒரு நிமிடம் என்ன செய்ய என்று இருந்தது.

அவள் அழைத்தது தான் அவனால் அவளை விட்டு செல்ல முடியவில்லை.

“நான் சீக்கிரமே உன்னை என்னோடு அழைத்து செல்வேன் மகி” என்று அவள் இதழில் ஒரு முத்தம் வைத்தான்.

எப்படி வந்தானோ அதே போல் ஏறி கீழ வந்து யாருக்கும் தெரியாமல் தன் காருக்குள் சென்றான். 

ஆனால் அவனுக்கு தெரியவில்லை சூர்யா வந்ததில் இருந்து ஒருவர் அவனை கண்காணித்து கொண்டு இருக்கிறார் என்று அது யாராக இருக்கும்.

(கமெண்ட் பண்ணுங்க)

சூர்யாவுக்கு எண்ணம் நினைவு எல்லாம் மகிழினி மேல் தான் இருந்தது. அவள் போன் செய்து அழுதது அங்கு சென்றவுடன் அணைத்து கொண்டது சிறிது நேரம் கழித்து கைகள் நடுங்க அருகில் வந்தது 

அவன் மனதில் ஏன் அப்படி நடுங்கினாள் அவளுக்கு என்ன ஆச்சு ஏதோ சரி இல்லை அவளை சீக்கிரமே அழைத்து வந்து விட வேண்டும்.

சூர்யாவின் மூளை அது உன்னால் முடியுமா சூர்யா அவள் பெரிய இடத்து பொண்ணு அவளது வீட்டில் ஒத்து கொள்வார்களா?

“அவள் என்னுடையவள்”  யாரும்  ஒத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

அவளுக்கு அங்கு ஏதோ சரி இல்லை என்னோடவள் கஷ்டப்படுவது போல் எனக்கு திரும்ப திரும்ப தோணுது அதற்கான வேலைய பார்க்க வேண்டும் என்று தன் வீட்டுக்கு வந்தான்.

இங்கு மகிழினி தன்னவனின் வாசனை அருகாமையில் இல்லை என்று தெரிந்து கொண்டவள் அவன் சென்ற சிறிது நேரத்தில் எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று வந்து தண்ணீர் குடிக்க

அந்த வெறும் தண்ணீர் அப்படியே வாமிட் செய்தாள் வெறும் தண்ணீர் தான் உடனே களைப்பில் மெத்தையில் படுத்து கொண்டாள்.

சூர்யாவிடம் இருந்து அழைப்பு வர எடுத்தவள் எதுவும் பேசாமல் இருக்க 

மகி என்று இவன் ஆசையாக அழைக்க இங்கு மகிழினி மிகவும் சோர்வான குரலில்

உன் கூட நான் பேசமாட்டேன் போ

ஏன் டி இப்படி சொல்ற

எனக்கு மட்டும் உன்னை விட்டு போகனும் அப்டின்னு ஆசையா

கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்

அப்புறம் என்னை வைத்து கொண்டு நீ தான் கஷ்ட படுவ அது தான்

நான் சீக்கிரமே உன்னை வந்து அழைத்து செல்கிறேன் மகி

நிஜமாவே வா என்று குழந்தை போல அவள் சந்தோஷ மன நிலையில் கேட்க 

ம்ம்ம் சத்தியமா என்று இவன் கூறி பின் 

என்னாச்சு மகி ஏன் ஒரு மாதிரி பேசுற 

அது ஒன்னும் இல்ல தெரியல வொமிட் ஆ இருக்கு ஏதோ சாப்பிட்ட உணவு ஒத்து கொள்ள வில்லை.

சூர்யா சிரித்து கொண்டே அது தான் காரணமா இல்லை என்னோட முத்தத்தில் நீ கன்சிவ் ஆகி விட்டாயா என்று இவன் கிண்டல் செய்ய 

அவள் முகம் சிவந்து  இப்போ எதுக்கு தேவயில்லமல் பேசுற நான் போன் வைக்கிறேன் என்று சொல்ல.

நல்லா நடிக்காத டி

ரொம்ப ஸீன் போடாத

நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும் டி   என்று சிறிது நேரம் பேசி விட்டு இருவரும் அப்படியே உறங்கி போனார்கள்.

காலையில் எழுந்து சூர்யா மிகவும் உற்சாகமாக அலுவலகம் கிளம்பினான்.

ஜானு எழுந்து வெளியே வந்தவள் சூர்யாவை பார்த்து அத்தான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல

சூர்யா சிரித்து கொண்டே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஜானு  என்று சொல்ல 

உமா அவர்களுக்கு உணவு பரிமாறவும் சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் கிளம்பினார்கள்.

இங்கு மகிழினி அதன் பின் 10 மணி வரை உறங்கியவள் அவள் வயிறு பிலீஸ் என்னையும் கொஞ்சம் கவனி என்று சொல்ல 

எழுந்தவள் நேராக முகத்தை கழுவி அப்படியே காலை கடன், குளியல் என அனைத்தும் முடித்து விட்டு கீழ வர

அங்கு sp இவள் வருகைக்கு காத்து இருந்தான்.

ஷீலா அவளுக்கு மாதுளை juice எடுத்து வந்து தர 

அவள் அதை வாங்கி ஒரு இரண்டு சிப் குடித்து இருப்பாள்.

அவள் வந்ததில் இருந்து என்ன செய்கிறாள் என்று sp தன் போன் நோண்டி கொண்டே பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது வெளியே இருந்து ஒரு சத்தம் கேட்டது

அண்ணா நான் வந்து விட்டேன் என்று குரு வந்தான்.

சூர்யாவுக்கு மகி யார் என்று தெரியவருமா??

மகி சூர்யாவின் மேல் உள்ள காதல் பற்றி sp கிட்ட சொல்லுவாளா?

Sp மகி கிட்ட திருமணம் பற்றி பேச காத்து இருக்கிறான் அவள் ஒத்து கொள்வாளா???

தொடரும்…..

 Episode 84, 

மகி கீழ வந்தவள் நேராக சோபாவில் போய் அமர்ந்து கொள்ள காலையில் ஷீலா எப்போதும் போல் juice கொடுக்க

அதை வாங்கி ஒரு இரண்டு சிப் குடித்து கொண்டே தமிழ் செய்தி தாளை புரட்டினாள்.

அவள் வந்தது முதல் அவளது சின்ன சின்ன அசைவுகளையும் பார்வையில் அவளை பருகி கொண்டு இருந்தான் சூர்யா (sorry sorry spr)

அப்பொழுது வெளியே இருந்து சத்தம் கேட்க திரும்பி பார்த்தால்

அண்ணா நான் வந்து விட்டேன்  என்று சொல்லிக்கொண்டே உள்ளே  வந்தான் குரு 

இவள் திரும்பி அவனை பார்த்து புன்னகைத்தாள். 

வாங்க மாமா என்று இவள் சொல்ல

குரு மனமோ மை விழி சொல்வது போல இருந்தது.

இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமல் அவளை பார்த்து ஒரு சின்ன புன்னகை ஏன் என்றால் மகிழினி யை  குருவிற்கு  சுத்தமாக பிடிக்காது.

அதற்கு காரணம் அவள் தான் sp மனதில் எப்போதும் முதல் இடத்தில் இருந்த குரு இடத்திற்கு மகிழினி வந்தது தான் . 

இன்னொரு முக்கியமான விஷயம்

அவ தமிழ் பொண்ணு

தன் செல்ல அத்தை மாயாவை காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கட்  சொந்த ஊர் ,தமிழ் நாடு, மொழி, தமிழ்

அது போல் மகிழினி யும் தன் அண்ணனை மயக்கி விட்டாள்.

Sp அவனை பார்த்து நான் சொன்ன வேலை எல்லாம் முடித்து விட்டாயா என்று இவர்கள் இருவரும் வேலை தொடர்பாக பேச 

இது தான் சரியான தருணம் என்று மகிழினி எழுந்து தன் அறைக்கு செல்லலாம் என்று போகும் நேரம்.

Sp அவளிடம் பொம்மாயி …..

மாவய்யா என்று வரவழைக்கப்பட்ட புன்னகை கொண்டு அவள் திரும்ப

நீ இன்னும் சாப்பிடவே இல்லை வா சாப்பிடலாம் என்று குரு கிட்ட பேசியதை பாதியில் விட்டு sp செல்ல

அண்ணா என்று அவன் கூப்பிட

Sp ஒரு பார்வையை மட்டும் பார்த்தான்.

மகிழினி sp கிட்ட மாவய்யா

நான் போய் சாப்பிடுகிறேன் அவர் உங்களை கூப்பிடறார் போங்க என சொல்ல

அங்கு அருகில் இருந்த அர்ஜுன் மகிளினியிடம் 

மேடம் சார் இன்னும் break fast சாப்பிடல என்று சொல்ல

மகிழினி க்கு இப்போது சங்கடமாக இருந்தது.

மேடம் அவர் உங்களுக்காக தான் காத்து கொண்டு இருக்கிறார் என்று அவன் சொல்ல 

அர்ஜுன் என்று அழுத்தம் கொண்டு sp அழைக்க 

Sorry சார் என்று அர்ஜுன் கூறினான்.

இப்போது இதை கேட்ட மகிழினி 

அச்சோ! மாவய்யா நீங்கள் முன்னவே சொல்லி இருக்கலாம் தானே என்று அவள் அவனிடம் 

சரி வாங்க சாப்பிடலாம் நான் உங்களுக்கு serve பண்றேன் என்று அவனை கூப்பிட்டாள்.

Sp மனம் நிறைந்த கன்னகுளி தெரிய ஒரு புன்னகை சிந்தி விட்டு அவள் பின் சென்றான்.

போகும்போது அர்ஜுனை பார்த்து முதன் முறையாக புன்னகை சிந்தி உனக்கு 10 % bonus என்று கூற

அதற்கும் அர்ஜுன் பயந்தான்.

மகிழினி தன் உடைகளை சரி செய்து கொண்டு அவனை அமர சொல்ல 

அவன் அமர்ந்தான் 

அவனுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

மகிழினி சாப்பிடும் நேரம் அதிகமாக ஆக தேஜு அங்கு வர அவள் கண்ட காட்சி 

Sp உணவை சாப்பிடுவதை விட பார்வையில் மகிழினியை சாப்பிடுவது தான் தெரிந்தது.

வேண்டும் என்றே புரை ஏறுவது போல் இவன் நடிக்க மகிழினி அவன் தலையை தட்டி விட்டு தண்ணீர் கொடுக்கும் காட்சி 

தேஜு இதை பார்த்து கடுப்பானவள்

மேடம் என்று அழைக்க  மகிழினி க்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

அக்கா என்று அவள் அழைக்க நீங்கள் சீக்கிரம் சாப்பிடனும் இல்லை என்றால் உங்கள் உடல் நிலைக்கு மயக்கம் வந்து விடும் என்று தேஜு சொல்ல 

Sp அவளை பார்த்து தேஜு பொம்மாயிக்கு வந்து serve பண்ணு என்று சொல்லி அருகில் இருந்த நாற்காலியை இழுத்து sp மகிழினி யை அருகில் அமர வைத்து கொண்டான்.

தேஜுக்கு பற்றி எரிந்தது இவனுக்கு வெட்கமே இல்லயா அடுத்தவன் பொண்டாட்டி ய thooki வந்து இருக்கிறானே . என மனதில் நினைத்து கொண்டாள்.

மகிழினி க்கு பரிமாறவும் அதன் வாசம் எதுவும் அவளுக்கு பிடிக்க வில்லை இறால் தொக்கு அருகில் இருக்க 

இவள் சைவ உணவு விட்டு தேஜு அக்கா எனக்கு அது வேண்டும் என்று இறால் காட்ட 

ம்ம்ம் serve பண்ணு என்று sp அதட்ட தேஜு அவனை முறைத்து கொண்டே அந்த உணவு எடுத்து வைக்க 

மகிழினி மின்னும் கண்களில் அதனை ரசித்து ருசித்து சாப்பிட 

Sp தேஜுவை பார்த்து எனக்கும் கொஞ்சம் வை 

அவள் அவனுக்கும் வைத்தாள்.

மகிழினி சப்பு கொட்டி சாப்பிட அதை கேட்ட sp க்கு அந்த சத்தம் ஒரு போதையை தந்தது.

அவள் சாப்பிட்டு முடிக்க அப்பொழுது sp மகிழினி குடித்து விட்டு வைத்த தண்ணீர் கிளாஸ் எடுத்து குடிக்க 

அதை பார்த்த மகிழினி

மாவய்யா அது என்னோட எச்சில் என்று சொல்ல 

Sp அவள் உதட்டை பார்த்து கொண்டே இன்னும் கொஞ்ச நாளில் எல்லாமே எனக்கு சொந்தம் என்று சிரித்து கொண்டே சொல்லி விட்டு  கைகளை கழுவ போக 

மகிழினிக்கு  இதை கேட்டு  உடல் எல்லாம் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது. 

சமையல் அறைக்கு சென்று வந்த தேஜுவின் காதில் இதை கேட்டு s p யை அப்படியே கழுத்தை நெறிக்கும் கொலை வெறி வந்தது.

வேகமாக கைகளை கழுவிக்கொண்டு மகிழினி கண்களில் கண்ணீர் எப்போ விழுவேன் என்ற நிலையில் அவள் அறைக்கு சென்று கதவுகளை அடைத்து கொண்டாள்.

உடனே சூர்யாவுக்கு போன் செய்ய அவன் முதல் அழைப்பில் எடுக்க வில்லை.

பின் இரண்டாவது அழைப்பில் எடுக்க மகிழினி அழுதாள் .

ஹே என்னாச்சு மகி என்று சூர்யா பதட்டம் , படபடப்புடன் எழுந்து நின்று பேச 

மகிழினி அவனிடம் சூர்யா என்று பெயர் மட்டும் சொல்லி அழுதாள்.

ஹே என்னாச்சு டி எதுக்கு அழற ,

மகி எனக்கு பயமா இருக்கு டி 

நீ இப்படி பண்றது  அழறது என்னால் தாங்க முடியல டி

சூர்யா ….

சூர்யா….

என்னை சீக்கிரம் கூட்டிகிட்டு போ என்று அவள் அழ

என்னாச்சு நீ சொன்னால் தான் நான் எதுவும் பண்ண முடியும் என்று சூர்யா சொல்ல 

மகிழினி sp சொன்ன வார்த்தை , அவன் செய்தது அதை சூர்யாவிடம் சொல்ல 

சூர்யா அருகில் இருந்த ஒரு பொருளை எடுத்து வீச அங்கு இருந்த அழகுக்கு வைக்க பட்ட கண்ணாடி சிலை பெரிய சத்தத்துடன் கீழ விழுந்தது.

சூர்யா அவனை ******* சில வார்த்தைகளை பயன் படுத்தி திட்டி விட்டு 

நீ ஒரு நிமிடம் கூட

அங்கே இருக்க வேணாம்

நீ கிளம்பு

அவனை நான் என்ன செய்றேன் அப்டின்னு பாரு என்று அருகில் உள்ள மேஜை மீது ஒரு குத்து விட 

மகிழினி பயந்து கொண்டே அழுதவள் இதுக்கு தான் நான் உன்கிட்ட சொல்லல என்று தேம்பி தேம்பி அழ 

ஹே அறிவு இருக்கா டி உனக்கு 

நீ என்கிட்ட நேத்தே சொல்லி இருந்தால் நான் அப்போவே உன்னை தூக்கி இருப்பேன் டி 

சூர்யா உனக்கு என்னை பத்தி ஒன்னும் தெரியாது நான் யாரு தெரியுமா

எனக்கு நிச்சயம் பண்ணது யார் கூட தெரியுமா

Spr , சூர்ய பிரகாஷ் ரெட்டி சூர்யா என்று இவள் சொல்ல 

சூர்யாவோ யார் அவன் என்று கேட்க 

Spr college, spr schools

institutions, அப்புறம்

neela hospitals, fertility centre

logistics , என்று மகிழினி சொல்லி கொண்டே செல்ல

Candy stick  chocolate  factory owner 

Spr acting studio owner

Spr constructions, harbours இது எல்லாம் அவரோடது தான் ஆந்திர, ஹைதராபாத் அவங்க கோட்டை சூர்யா  அவங்கள எப்படி சூர்யா உன்னால எதுக்க முடியும்

இது இல்லாமல் அரசியல் அப்புறம் அவர் Ex service man என்று மகிழினி சொல்ல 

சூர்யா எந்த ஒரு சலனமும் இன்றி இதெல்லாம் அவன் கிட்ட இருந்தால் எனக்கு என்ன 

எனக்கு சொந்தமான உன்னை எப்டி அவன் நெருங்க முடியும் அவனை துண்டு துண்டாக வெட்டனும் டி 

அய்யோ சூர்யா நீ தான் அவனுக்கு நிச்சயம் ஆன பொண்ண விரும்பர டா என்று அவள் கதறி அழ 

சூர்யா இப்போதும் அலட்டி கொள்ளாமல் உன்னோட மனசுக்கும் சரி உன்னோட மொத்ததுக்கும் நான் தான் டி சொந்தம் .

அவன் யாரா இருந்தால் எனக்கு என்ன நீ என்னோடவள் உன்னை எப்டி தூக்கணும் ன்னு எனக்கு தெரியும் என்று சூர்யா சொல்ல 

பிலீஸ் எதுவும் பண்ணாத டா 

பிலீஸ் உன்னை எதுவும் செய்து விடுவார்கள் உனக்கு எதுவும் ஆனா என்னால தாங்க முடியாது நான் செ….

Shut your mouth டி நீ அந்த வார்த்தையை எப்போதும் சொல்ல கூடாது நான் இருக்க வரைக்கும் 

நீ கவலை படாதே நான் என்ன செய்கிறேன் என்று பார் 

பிலீஸ் சூர்யா ஒரே நிமிடம் நான் சொல்றது கேளு 

கேட்க முடியாது டி 

பிலீஸ் சூர்யா 

பிலீஸ் என்று அவள் கெஞ்ச 

சொல்லு 

நான் எங்க அம்மா கிட்டயும், அப்பா கிட்டயும் ஒரே ஒரு முறை சொல்லி பார்க்கிறேன் .

எப்டி சொல்லுவ வீட்டில் அவன் இருப்பானே

இல்ல சூர்யா நாளைக்கு சிவன் கோவிலுக்கு அம்மாவையும் , அப்பாவையும் கூட்டி வந்து அங்கே கோவில் ல சொல்றேன் 

எங்க அம்மா கண்டிப்பாக நான் சொல்றது கேட்பாங்க எங்க அம்மாவுக்கு நான் என்றால் உயிர் சூர்யா பிலீஸ் ஒத்துக்கோ 

சிறிது அமைதிக்கு பிறகு சரி என்றான் 

ஆனால் ஒரு கண்டிஷன் 

என்ன என்று மகிழினி கேட்க 

நானும் கோவிலுக்கு வருவேன் உங்க மாம், டாட் மீட் பண்ணி பேசுவேன் என்னை பத்தி அவங்களுக்கு புரிய வைப்பேன்.

மகிழினி சரி என்று புன்னகை முகம் கொண்டு பேச 

ஹே மகி இனி நீ உன் ரூம் விட்டு வெளியே போகவே கூடாது 

நான் சொல்றத நல்லா கேட்டுக்கொள்

ம்ம்ம் சரி 

நாளைக்கு வரை உன்னோட ரூம் க்கு சாப்பாடு தண்ணி எல்லாம் அங்கே தான் 

நீ என் பக்கத்தில் வர வரைக்கும் எனக்கு நெருப்பில் நிற்பது போல இருக்கு டி 

நீ too late மகி 

நேத்தே நீ சொல்லி இருக்கலாம் என்று சூர்யா சொல்ல

மகிழினி????

மகிழினி சொல்வதை மாயா ஏற்று கொள்வாளா?

Sp க்கு சூர்யா மகிழினி காதல் விஷயம் தெரிய வருமா?

சூர்யாவின் அடுத்த நகர்வு என்ன???

சூர்யா vs sp  சூர்யா பிரகாஷ் ரெட்டி சந்திப்புக்கு காத்திருங்கள் 

தொடரும்…..

Episode 85,

சூர்யாவுக்கு அவன் கோபத்தை கட்டு படுத்த முடியவில்லை.

மகிழினி அவனிடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இவ்வளவு கோபம் வேண்டாமே என்று அவள் சமாதானம் செய்ய 

சூர்யா தன் நிதானத்துற்கு வந்தவன் 

சூர்யா அவளிடம் நீ நேற்று சொல்லி இருக்கலாமே ஏன் டி இப்படி பண்ண என்று அவன் சொல்ல 

மகி அவனிடம்

இல்லை  சூர்யா  நானே அவர் கிட்ட சொல்லி புரிய வைக்கலாம் அப்டின்னு இருந்தேன்.

ஆனால் அவர் இப்படி என் மேல் தீவிரமாக இருப்பார் ன்னு நான் expect பண்ணல 

ஆனால் அவருக்கு என் மேல் பாசம் அதிகம் என்று   மகிழினி சொல்ல 

இப்போது ஒன்றும் ஆக வில்லை எனக்கு ஜானு இருக்கிறாள்

 நீ அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று சூர்யாவுக்கு கோபம் வந்து பேச 

ஓ என்னை விட்டு நீ அவளை திருமணம் செய்யவாயா ஆனால் அவள் ஆதியை தான் திருமணம் செய்வாள்.

ஆதி யார் என்று கேள்வியாக சூர்யா கேட்க

அன்னிக்கு கோவில் ல ஒரு நாடகம் நடத்துனீங்க தானே அப்போது அவள் அந்த பெயருக்கு தான் அர்ச்சனை செய்தாள்.

ம்ம்ம் இதெல்லாம் நோட் பண்ணிருக்க

ஆனாலும் சும்மா சொல்ல கூடாது டி அன்னிக்கு நீ அப்டியே செம்மையா இருந்த தெரியுமா

என்னோட கண்ணு உன்னை பார்க்கிறது விட்டு நகரவே இல்ல தெரியுமா 

நான் ரொம்ப கஷ்டப்பட்டு உன்னை தவிர்த்தேன் டி

அப்படினா அப்போவே உனக்கு என்னை புடிக்குமா

அப்படியெல்லாம் இல்லை என்று சமாளித்தவள்.

மகிழினி யே தொடர்ந்தாள்.

அன்னிக்கு theatre ல படம் பாரக்கும்போது படத்தில் லவ் ஸீன் இல்ல அப்டின்ற காரணதுக்கு அவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் லயே வாழராங்க

சூர்யா மகியிடம்

உனக்கு என்ன அதை பத்தி உனக்கு அவனை தானே பிடிக்கும் அவன் பேரு என்ன ஏதோ சொல்வியே ரொம்ப வில்லேஜ் பொன்னு மாறி

உடனே மகி அவன் பெயரை கூப்பிட்டாள்.(மாவய்யா)

ம்ம்ம் பிலீஸ் dont repeat again கேட்க முடியல

ஹே அப்படி இல்ல சூர்யா

எனக்கு அவர் மேல் ஒரு மரியாதை மாமா அப்டின்னு வேற ஒன்னும் இல்ல

ஓ அதனால தான் என்னோட பேரு என்ன அப்டின்னு கேட்டாயா

அவன் name அப்டின்றதால என்னை உனக்கு பிடிச்சு போச்சா 

ஹே உனக்கு jealous ஆ இருக்கா மகிழினி அவனிடம்

நம்ப 1 st மீட் ல இருந்து இவ்ளோ நாள் கழிச்சு இப்போ தானே நான் பேர் கேட்டேன் 

அவர் பெயர் அப்டின்றதால இல்ல

எனக்கு நீ ரொம்ப special தெரியுமா

உன் கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லனும் 

ஆனால் நீ அதை எப்படி எடுத்துக்குவ அப்டின்னு தெரியல 

சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க 

மகி அவனை சமாதானம் செய்யும் எண்ணத்துடன் தேவ் என்று மிகவும் மெதுவாக அழைக்க 

மகியின் மாய வலையில் சூர்யா மாட்டிக்கொண்டான்.

தேவ்….

தேவ்….

ம்ம்ம் சொல்லு டி 

நாளைக்கு நீ எனக்கு பூ வாங்கி வருகிறாயா கோவிலுக்கு

என்று சொல்ல

இப்போது சூர்யா அவள் பேச்சில் கரைந்தான்.

ம்ம்ம் என்னோட சண்டைக்கோழிக்கு பூ தானே வாங்கி வருகிறேன். 

மகி நான் மறுபடியும் சொல்றேன் நீ வெளிய வர கூடாது டி 

ஹே நான் வர மாட்டேன் போதுமா 

இல்ல என்னால உன்னை நம்ப முடியவில்லை.

சூர்யா ஓவரா பண்ணாத நான் போக மாட்டேன் believe me 

பார்க்கலாம் டி நான் உன்னை கண்காணித்து கொண்டே இருப்பேன்.

எப்டி செய்வ என்று அவள் கேட்க 

உன்னோட மனசு என்னோடது அது என் கிட்ட சொல்லிடும் என்று சூர்யா  சொல்ல 

மகிழினி அவனிடம் ஹே ரொம்ப ரோமண்டிக் ஆ try பண்ணாத 

ஹே நான் serious ஆ சொல்றேன் 

சீக்கிரமே உங்கள் வீட்டுக்கு உள்ள வருகிறேன் பாரு டி என்று சூர்யா மனதில் நினைத்து கொண்டான்.

Wait and see சண்டைக்கோழி என்று பேசி சூர்யா போன் வைத்தவன் இப்போது அவன் முகத்தில் இருக்கும் மென்மை மாறி கடுமையான முகத்துடன்  சரவணனை பார்க்க சென்றான்.

இங்கு இன்பா ப்ரியாவை பார்க்க சென்றான். அவள் அமர்ந்து கொண்டு நன்றாக நம்ம ஊர் உணவுகள் அனைத்தும் ஆடர் செய்து சாப்பிட்டு கொண்டு இருக்க 

ஹே ப்ரியா என்ன பண்ற 

பார்த்தால் தெரியல பசிக்குது இன்பா என்று அவள் சாப்பிடுவதில் கண்ணாக இருக்க

நான் உங்கிட்ட ஒரு கேஸ் கொடுத்தேன் அதை பத்தி உனக்கு நியாபகம் இருக்கா 

அதுல கொஞ்சம் கண்டு பிடித்து இருக்கிறேன் என்று அவள் சில விவரங்களை கொடுக்க இன்பா அதனை வாங்கி கொண்டு 

அவளை பார்த்து ஒரு file கொடுத்து நீ இதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடி என்று கொடுக்க

ப்ரியா அந்த கோப்பு  முகப்பு பக்கத்தை பார்த்து கண்கள் மின்ன,

இதை இதை தான் இன்பா உன்னிடம் நான் எதிர்பார்த்தேன்.

என்னுடைய அறிவுக்கு இது ஒரு நல்ல தீனி என்று சொல்லி பிரியா அவள் வேலைய ஆரம்பித்தாள்.

இன்பா மனதில் குரு உன்னை நெருங்கி விட்டேன் என்று சொல்லி ஒரு தந்திர புன்னகை சிந்தினான்.

இங்கு மகிழினி சூர்யா சொன்னது போலவே அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

மாயா மகிழினி யை தேடி வந்தாள். 

மகி மா என்னடா நீ காலையில் இருந்து வெளிய வரவே இல்ல

என்னாச்சு என்னோட  செல்லத்துக்கு என்று அவளின் தலையை வருடி விட்டு முத்தம் பதிக்க 

அம்மா ஒன்னும் இல்ல சும்மா தான் என்று  சொல்லியவள் .

அம்மா என்று அழைக்க 

ம்ம்ம் சொல்லு மா என்று அவள் தலையை வருடி விட்டு 

முதலில் நீ இதை குடி என்று ஆப்பிள் ஜூஸ் கொடுக்க அவள் அதை ஒரு இரண்டு சிப் குடித்து விட்டு 

உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்று மகி சொல்ல 

ம்ம்ம் சரி சொல்லு ஆனால் இங்கே வேண்டாம் நம்ப painting  ரூம் க்கு போகலாம் என்று அவளை அழைத்து செல்ல 

இல்ல மா நான் எங்கேயும் வரல 

மகி அம்மா  தான் உன்கூட இருக்கேன் நீ ரூம் ல இருந்தால் அடைச்சு வச்சது போல் இருக்கும் வா என்று சொல்ல 

அம்மாவின் பேச்சை மீற கூடாது என்று சரி மா என்று இவர்கள் இருவரும் அந்த அறைக்கு சென்றனர்.

மாயா ஒரு தூரிகை எடுத்து ஒரு இயற்கை காட்சியை வரைந்து வண்ணம் தீட்ட 

மகிழினி அந்த தூரிகை எடுத்து வரையும் நேரம் sp அவளை தேடி கொண்டு வந்தான்.

பொம்மாயி என்ன பண்ற ஏன் என்னை பார்க்க வரவே இல்லை நீ 

மகி க்கு இப்போது சூர்யா சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வந்தது வெளியே போகாதே மகி என்று அவ்ளோ தூரம் சொன்னார் 

நான் அம்மா பேச்சை கேட்டு வந்து விட்டேன் என்று இவள் மனதில் நினைத்து கொண்டு 

ஒன்னும் இல்ல என்று மெதுவான குரலில் சொல்ல 

அங்கு இருந்த ஒரு sp புகைப்படம் பார்த்து என்னோட போட்டோ எப்படி இங்க வந்தது .

உடனே மாயா -சூர்யா  நம்ப மகி சூப்பர் ஆ வரைகிறாள்.

உன்னோட படம் கூட வரைந்து இருக்கிறாள் என்று இவள் சொல்லி கொண்டே போக 

Sp மகியை பார்த்து பொம்மாயி இப்போ நீ என்னை வரைந்து தருகிறாயா என்று அவன் கேட்க 

மகி அமைதியாக இருக்க மாயா கண்டிப்பாக என் பொண்ணு உனக்கு வரைந்து தருவாள் 

மகி வரை பார்க்கலாம் என்று சொல்ல

Sp அவளுக்கு பார்த்து வரைய ஏதுவாக chair போட்டு அமர்ந்து கொண்டான்.

மகிழினி க்கு இப்போது என்ன செய்ய என்று புரிய வில்லை.

Sp யை பார்க்க அவன் மயக்கும் புன்னகை அந்த கன்னகுளி தெரிய இவளை பார்த்து சிரிக்க 

ஒரு முறை தான் அவள் sp யை பார்த்தாள். அந்த தூரிகை பிடித்த கைகள் தானாகவே நகர ஆரம்பித்தது. 

அந்த நீண்ட அடர்த்தியான கேசம் அந்த முகம் அமைப்பை வரைந்தவள்.

பின் அந்த அடர்த்தியான புருவம்,

அந்த கடுமையான பெண்கள் என்றால் மயக்கும் கண்கள் ,

ஆண்கள் என்றால் ஆழ் கடல் போல் இருக்கும் இரு விழிகள்

அந்த கூர்மையான நாசி

அந்த உதடுகள். கன்னம்

என மகிழினி மனதில் இருந்த உருவத்தை வரைய

அது  அவள் மனதுள் வீற்றிருக்கும் மகிழினி நாயகன் அவன் தான் சூர்ய தேவ்

ஒரு நிமிடம் மகிழினி  மனதில் சந்தோஷம் இருந்தாலும் ஒரு பக்கம் மிகவும் பயமாக இருந்தது.

மகிழினி brainy என்னடி நீ சூர்யாவை வரைந்து வைத்து இருக்கிறாய்

அவள் மனமோ என்னோட மனசில் சூர்யா என் சூர்யா தான் இருக்கிறான்.

இது மட்டும் மாவய்யா க்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா என brain சொல்ல 

அச்சோ இப்போது என்ன செய்வது என்று மகிழினி க்கு வியர்க்க ஆரம்பித்தது .

அவள் வரைவது போலவே நடித்து கொண்டு இருக்க sp அவள் அருகில் வரைந்து விட்டாளா என பார்க்க எழ 

பொம்மாயி வரைந்து விட்டாயா என்று சொல்லி எழுந்த sp அவள் அருகில் வர

Spயின் ஒவ்வொரு காலடி ஓசைகளும் மகிழினி க்கு நடுக்கத்தை தந்தது.

மகிழினி க்கு ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகங்கள் போல் இருந்தது. 

அவன் சரியாக இவள் அருகில் வரும் நேரம் ஒரு போன் வர sp அதனை எடுத்து cut செய்து விட்டு 

மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க 

மகிழினி க்கு பேச்சே வர வில்லை என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

இன்னும் இரண்டு அடிகள் தான் இவன் அந்த painting அருகில் வரவும் குரு அவனை அழைக்கவும் சரியாக இருந்தது.

அண்ணா உனக்கு நான் கால் பண்ணேன் என்ன பண்ற நீ என்று சொல்லி அவன் உள்ளே வர 

Sp அவனை பார்த்து கொன்று விடுவேன் என்பதை போல் அவன் பார்வை இருந்தது.

அண்ணா முக்கியமான விஷயம் இவளை அப்புறம் வந்து பார்த்து கொள் என்று தெலுங்கில் கூற 

மகிழினி திருத்திருவென முழித்தாள். 

Sp அவளை பார்த்து ஒரு நிமிடம் இரு பொம்மாயி நான் வந்து விடுகிறேன் என்று sp வெளியே செல்ல 

இப்போது தான் மகிழினி இயல்பாக மூச்சு விட்டாள்.

மகி sp வருவதற்குள் எதுவும் செய் என்று சூர்யாவின் படத்தை எடுத்து பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் அந்த வண்ணங்கள் காய வைத்து விட்டு 

மகிழினி ஏற்கனவே sp யின் படத்தை வரைந்த அந்த painting எடுத்து ஆங்காங்கே சில மாறுதல் செய்து இப்போது வரைந்தது போல்  செய்து விட்டு தன்னை ஆசுவாச படுத்தி கொள்ள தண்ணீர் குடித்தாள்.

5 நிமிடம் என்று 4 நிமிடத்தில் sp உள்ளே வர இவள் தண்ணீர் குடித்து விட்டு அந்த பாட்டிலை எடுத்து கீழ வைக்கவும் .

Sp மகிழினி அருகில் வரவும் சரியாக இருந்தது.

மாவய்யா வரைந்து விட்டேன் இதோ பாருங்கள் என்று அவள் காட்ட அதை பார்த்து sp யின் கண்கள் மின்னின

மகிழினி கைகளில் உள்ள அந்த தூரிகை வாங்கி அவளையும் சேர்த்து இழுத்தவன் . 

Sp யின் அருகாமை எப்போதும் போல் அவளுக்கு வெறுப்பு கொடுக்க நடுங்கி கொண்டே கண்களில் எப்போது கீழ விழுவேன் என்று கண்ணீர் முட்டி நிற்க

 Sp அவள் காது மடலுக்கு அருகில் கொஞ்சம் மெதுவாக பொம்மாயி என்று சொல்லி கொண்டே அவளது விரல்கள் பிடித்து கீழ பொம்மாயி spr என்று எழுத 

இந்த முறை மகிழினி ????

தொடரும்….

 Episode 86,

 அவள் வரைந்த படத்தினை sp க்கு காட்ட அவன் அருகில் பார்க்க வருகிறான் என்று நினைத்து மகிழினி நின்று கொண்டு இருக்க

ஆனால் sp இவள் அருகில் நெருங்கி வந்து நின்றவன். 

மகிழினி முதுக்கு பின்னால் sp ஒரு கையால் அவள் கையை பிடித்து எழுத 

அவள் தூரிகை வைத்து இருந்த கைகளை பிடித்து  மகி வரைந்த அந்த ஓவியத்திற்கு கீழ பொம்மாயி பின் அதன் பக்கத்தில் spr என்று எழுத 

அந்த நெருக்கம் மனதில் ஒரு பயத்தை கொடுக்க உடனே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. மனதில் சூர்யா …சூர்யா … என சொல்லிக்கொண்டாள்.

அவன் எழுதி முடிக்கவும் அந்த நெருக்கம் அப்படியே மகிழினி மயங்கி கீழ விழ போக sp அவளை தாங்கி பிடித்து கொண்டான்.

அப்போது எதுவும் மகிழினி sp கிட்ட பேசுவாள் என நினைத்து வெளியே போன மாயா அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என  நினைத்து வர மகிழினி மயங்கி கிடப்பதை sp பதட்டம் கொண்டு அவளை தூக்கி அவள் அறைக்கு செல்வது தான் 

உடனே மாயா பதட்டம் கொண்டு என்னாச்சு sp என் பொண்ணுக்கு என்னாச்சு என உண்மையாகவே அழுது கொண்டே அவள் பின்னால் வேக நடை போட 

உடனே அத்தை ஷீலா வ வர சொல்லுங்க என்று கூற 

ஷீலா பதட்டதோடு அவளை சோதிக்க பின்னால் தேஜுவும் வந்தாள்.

ஷீலா sp யை பார்த்து சார் அவங்க கொஞ்சம் பயம் , பதட்டம் , எதுவும் ஆனா இப்படி தான் நடக்கும்.

இப்போது ok ஆனால் இதுக்கும் மேல இருந்தால் அப்புறம் அவங்களுக்கு ஆபத்து தான் என்று சொல்ல 

Sp முகம் இறுகி போனது இவளை நாம் என்ன  செய்தோம் அருகில் வந்ததற்கே இப்படி என்றால் இன்னும் அவளை இன்னும் நெருங்கினால் என அவன் யோசிக்க 

உடனே தேஜு அவனை பார்த்து நீ அட்வான்டேஜ் எடுக்க try பண்ணாத அப்புறம் அவ உயிருக்கு ஆபத்து தான் என்று சொல்ல 

இப்போது sp உடைந்து போனான். என்னுடைய தொடுதல் அவளுக்கு பிடிக்க வில்லையா என்னுடைய மூச்சு காற்று கூட அவள் மேல் பட கூடாதா என்று இவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே

அங்கு வந்த குரு தன் அண்ணனின் முகத்தில் உள்ள கவலையான ரேகையை படித்தவனாய்

அண்ணா நீ கவலை பட வேண்டாம் அந்த மகிழினி உனக்கு தான் என்று சபதம் போட்டு கொண்டான்.

அண்ணா என்று அழைக்க sp கவலையான முகம் ஆனால் வெளியில் காட்டி கொள்ள வில்லை ஆனால் ஷீலாவை தவிர 

மீதி மூவருக்கும் ஏன் sp இவ்வாறு இருக்கிறான் என்று நன்றாகவே தெரியும்.

குரு அவனை வெளிய அழைத்து சென்று பேசியவன் பின் அவன் அறைக்கு சென்றான்.

மகிழினி சிறிது நேரம் கழித்து கண் விழித்தவள் சுற்றியும் பார்க்க அங்கு ஷீலா, மாயா இருவரும் இருந்தனர் 

என்னாச்சு மகி இப்போ உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல தானே என்று அழுது கொண்டே மாயா கேட்க 

உடனே அவள் அம்மா நான் நல்லா இருக்கிறேன் கொஞ்சம் மதியம் சரியா சாப்பிடல 

அதனால் தான் மயக்கம் இல்லனா  உங்க பொன்னு பத்தி உங்களுக்கு தெரியாதா  என்று அவள் இயல்பு நிலைக்கு பேசி கொண்டே வந்தாள்.

சரி நான் உனக்கு சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று மாயா கிளம்ப 

ஷீலா கிட்ட மகிழினி

அக்கா நீங்கள் போங்க என்று அனுப்பி விட்டாள்.

மாயா கொண்டு வந்த உணவுகளை மாயவே மகிழினி க்கு ஊட்டி விட்டாள்.

பின் மாயா அவளிடம் நீ கொஞ்சம் ஓய்வு எடு மா நான் போறேன் 

அம்மா ஒரு  நிமிடம் 

மாயா என்ன என்பதை போல் பார்க்க 

அம்மா நாளைக்கு நீங்கள் , நானு, அப்பா நம்ப மூன்று பேரும் கோவிலுக்கு போகலாமா என்று கேட்க 

மாயா முகத்தில் சட்டென்று ஒரு மின்னல் வந்து போனது 

சரி மா நம்ப மூன்று பேரும் போகலாம் என்று சொல்லி கிளம்ப போக 

மகிழினி அவளிடம் அம்மா நான் கோவிலுக்கு  வந்து உங்கள் கிட்ட முக்கியமான விஷயம் பேச போறேன் மா

சொல்ல போறேன் மா என்று இவள் சொல்ல 

என் பொன்னு எது செய்தாலும் சரி சொன்னாலும் சரி அது சரியாக தான் இருக்கும் என்று மகிழினி கிட்ட மாயா கூறி விட்டு சென்றாள்.

மாயா சென்றவுடன் மகிழினி அசையாமல் மெதுவாக வெளியே சென்றவள் நேராக ஓவியங்கள் வரையும் அறைக்கு சென்று அங்கு ஒளித்து வைத்து இருந்த சூர்யாவின் அந்த paintings அப்படியே ஒரு போட்டோ தன் போனில் எடுத்தவள்

பின் அந்த ஓவியத்தை யாராவது பார்கிறார்களா  என நோட்டம் விட்டு கொண்டே இவள் உள்ளே நுழைய அதை வெறுப்பாக இரு கண்கள் பார்த்து கொண்டு இருந்தது.

மகிழினி நேராக தன் அறைக்கு வந்து பூட்டியவள் அவள் வரைந்த சூர்யாவின் படத்தை எடுத்து சில முத்தங்கள் வைத்து அதை நெஞ்சோடு அனைத்து கொண்டாள்.

டேய் சண்டைக்காரா எப்டி டா உன்னை நான் ஒரு நான்கு நாட்கள் பார்த்து இருப்பேனா அதற்குள் என்னை மயக்கி விட்டாய்.

என்கிட்ட காலையில் என்ன சொன்ன உன்னோட மனசு என்னோடது அப்டின்னு 

ம்ம்ம் எனக்கு இப்போ புரியுது சூர்யா அது உன்னோட மனசு தான் அப்டியே உன்னை நான்  வரைந்து வைத்து விட்டேன்.

என்று அவள் அந்த படத்தினை வருடி கொன்டே சில முத்தங்கள் அணைப்புகள் என கொஞ்சி கொண்டு இருந்தாள்.

சரியாக அந்த நேரம் சூர்யாவிடம் இருந்து மகிழினி க்கு போன் வந்தது .

மகி என்ன பண்ற 

நான் உன்னை கொஞ்சிக்கிட்டு இருக்கேன் சூர்யா 

என்னய்யா எப்டி 

நான் உன்னை வரைந்து வைத்து இருக்கிறேன்.

அதில் உன்னை கொஞ்சி கிட்டு இருக்கேன்.

சூர்யா அவளிடம் நீ ஏன் ஒரு ஓவியத்தில் கொஞ்சனும்  சொன்னா நானே நேரில் வருவேன் 

நீயும் கொஞ்சலாம் நானும் உன்னை …..என்று சூர்யா நிறுத்த

மகிழினி என்னை….

ஹே நானும் உன்னை கொஞ்சலாம் ன்னு சொல்ல வந்தேன் டி 

ஒன்னும் வேணாம் நாளைக்கு தான் நேரில் பார்க்க போகிறோமே அப்புறம் என்ன என்று மகிழினி கூறினாள்.

இப்போது சூர்யா அவளிடம் மகி நீ என்கிட்ட எதுவும் மறைக்கிறியா

இல்ல தேவ் நான் எதுக்கு மறைக்கனும்.

நீ பொய் சொல்ற 

இல்ல தேவ் 

ஹே நீ பொய் சொல்ற உண்மைய சொல்லு இல்ல நான் இப்போ அங்கே இருப்பேன் அப்புறம் அவனை நான் என்று சூர்யா ஆரம்பிக்க 

என்னை மன்னித்து விடு சூர்யா 

ம்ம்ம் ஆமா நான் உன்கிட்ட ஒரு விஷயம் மறைத்து விட்டேன்.

என்ன விஷயம் 

அது ….

அது…

அது வந்து எப்டி சொல்ல உன்கிட்ட

இப்போ சொல்ல போறியா இல்ல 

சரி சரி நான் சொல்றேன் என்று அவள் கொஞ்சம் விஷயம் மறைத்து கொஞ்ச விஷயம்  மட்டும் கூறி முடிக்க

நான் சொல்றத எதுக்கு டி கேட்காமல் போன 

அ…

அது… 

அம்மா கூப்பிட்டங்க அதனால் தான் நான் அம்மா கூட போனேன்.

மகி நீ பண்றது சரி இல்லை டி என்னை பத்தி உனக்கு தெரியாது 

சரி ரொம்ப மிரட்டல் கூடாது அப்டின்னு நான் விட்டால் என்னை எதிர்த்து நீ போற 

இல்ல சூர்யா அப்படி இல்ல என்று அவள் புரிய வைக்க 

உனக்கு நாளைக்கு இருக்கு உங்கள் அப்பா அம்மா கிட்ட பேசி விட்டு உன்னை வைத்து கொள்கிறேன்.

என அவன் கூறி விட்டு போன் வைக்க 

உடனே மகிழினி மீண்டும் சூர்யாவுக்கு அழைத்தாள்.

அவன் அப்போதும் எடுக்க வில்லை

உடனே மகிழினி அவள் வரைந்த  படம் எடுத்து வாட்ஸ் ஆப் செய்ய 

சூர்யா இப்போது அவளுக்கு அழைத்தான்

இவளும் முதல் அழைப்பு வேண்டும் என்றே தவர விட்டாள்.

மீண்டும் சூர்யா அழைக்க உடனே அவள் எடுத்து காதில் வைத்தாலே thavr வேறு எதுவும் பேச வில்லை.

மகி …. பதில் இல்லை 

என்னோட சண்டைக்கோழி ….  பதில் இல்லை

Deer ….. இப்போதும் அவள் அமைதியாக இருக்க 

உடனே சூர்யா ஹே இப்போ நீ பேசல அப்புறம் நான் போன் வைத்து விடுவேன் என்று சொல்லி அவன் வைக்க போக 

உடனே மகிழினி வைக்காத சூர்யா என்று சொல்ல 

சூர்யா அவளிடம் நீ தேவ் ன்னு சொல்லி கூப்பிடு எனக்கு  கேட்கணும் போல இருக்கு 

ம்ம்ம் நீ கெட்டவன் என்னையே நீ திட்ற 

எங்க  அம்மா கூட என்னை திட்டியது  இல்லை உனக்கு தெரியுமா முதலில் 

நீ திட்டுற நீ மோசம் போ நான் உன்னை கூப்பிட மாட்டேன்.

மகி நான் உன்னை எதுக்கு திட்டினேன் அப்டின்னு உனக்கே தெரியும் டி.

எனக்கு பயமா இருக்கு டி உனக்கு எதுவும் ஆகிடுமோ அப்டின்னு 

நீ சமத்து பொண்ணு என்னோட deer தானே  என்று சூர்யா கொஞ்ச அவள் அவனிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாள்.

ம்ம்ம்ம் என்னோட சண்டைக்கோழி இவ்ளோ அழகா paint பண்ணி இருக்கீங்க 

இவ்ளோ நேரம் கழிச்சு உன்னோட காம்ப்ளிமெண்ட்  இப்போ  தான் எனக்கு கெடைச்சு இருக்கு  என்று மகிழினி சலுப்பாக கூற

மகி நீ இப்போ பக்கத்தில் இருந்தால் என்னோட பாராட்டு வேற மாதிரி இருக்கும் டி என்று சூர்யா சொல்ல 

பேச்சு எங்கோ செல்கிறது என்று புரிந்து கொண்ட மகிழினி

ம்ம்ம் அதை பக்கத்தில் இருக்கும் போது பார்த்து கொள்ளலாம் என்று  கூறியவள்.

நாளைக்கு அம்மாவும் , அப்பாவும் கோவிலுக்கு வராங்க அதனால நீ சரியான நேரத்துக்கு வந்து விடு என்று சொல்ல 

ம்ம்ம்  சரி 

அப்புறம் 

அப்புறம் என்ன என்று இவள் சொல்ல

எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு 

அது தான் நாளைக்கு கோவிலில் பார்ப்போமே அப்புறம் என்ன வேணும் சூர்யா சார் க்கு

எனக்கு இப்போ நீ வேனும் என்று சூர்யா சொல்ல 

மகிழினி க்கு அவனிடம் இருந்து வந்த இந்த வார்த்தை கேட்டு அவளுக்கு நாணத்தில் வார்த்தைகள் வர வில்லை.

சூர்யா அவள் முகம் நாணத்தில் இப்போது சிவந்து இருக்கும் என யூகித்தவன்.

Miss பண்ணிட்டேன் டி என்று சொல்ல 

என்ன என்று மகி கேட்க 

இப்போ உன் முகத்தை பார்க்க தான் அவ்ளோ அழகா இருக்குமே என்று சூர்யா சொல்ல 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல டோன்ட் தின்க் ஓவர் imagination

 ஹே உன்னோட நாடகம் எல்லாம் நான் நம்ப மாட்டேன். 

ம்ம்ம் என்ன பண்றது எப்போ நீ என் பக்கத்தில் வரது நான் உன்னை அள்ளி அணைக்கறது என்று சூர்யா சொல்ல 

சீக்கிரமே வந்திடுவேன் தேவ் உன்னோட பக்கத்தில் நீயும் நானும் மட்டும் கட்டி அணைத்து தூங்கலாம் என்று சொல்ல

ம்ம்ம் im waiting டி 

I miss you சூர்யா

நான் உன்னை  miss பண்ண மாட்டேன்  என்னுடைய மிசஸ் ஆக்கிடுவேன். என்று சொல்லி சில முத்தங்கள் பதித்து போன் வைத்தான்.

அவனிடம் பேசிய சந்தோஷ மன நிலையில் மகிழினி நிம்மதியாக தூங்க 

சூர்யாவும் அவளை நினைத்து கொண்டு இருந்தானே தவிர உறங்க வில்லை.

அவனுக்கு நாளை எதோ தவறாக நடக்க போகிறது என்று தோன்றியது.

இன்னொருவரும் தான் உறங்க வில்லை அது sp தான் அவனுக்கு மகி நம்மை விட்டு சென்று விடுவாளா என்று ஒரு பயம் முதன் முதலாக தோன்றியது.

இவர்களது இந்த முகங்களை பார்க்க  முடியாமல் நிலவு மேகங்களில் மறைந்து கொள்ள சீக்கிரமே சூரியன் தன் கதிர்களை வீச தயராகினான்.

அடுத்த நாள் மகிழினி தன்னை மிகவும் என்று சொல்ல தெரியவில்லை மிதமான என்ற சொல் சரியாக இருக்கும்.

OK மிதமான ஒப்பனை சூர்யாவுக்கு பிடித்த நிறத்தில் கரு நீல தாவணி அணிந்து கொண்டு மாயா, வெங்கட் கூட தலையில் சூர்யா வாங்கி கொடுக்கும் பூவை சூடிக்கொள்ள கிளம்பினாள்.

சூர்யாவும் அவளுக்கு ஏற்ற நிறத்தில் சட்டை, வேஸ்டி என கிளம்பினான்.

இன்னும் இருவர் கிளம்பினார்கள்???? 

அடுத்து என்ன நடக்கும்?????

தொடரும்.. . 

 Episode 87, 

மகிழினி தன்னை தயார் படுத்தி கொண்டு கிளம்ப இங்கு சூர்யா அவளுக்கு இணையாக (அது ஏன் இணையாக இருவரும் இணை தானே) கிளம்பினான்.

அவன் அறையில் இருந்து வெளியே வர அப்போது ஜனனி 

அத்தான் ஆஃபீஸ் போக நான் ரெடி என்று சொல்லி கொண்டே சூர்யாவை பார்க்க 

அவன் சிரித்து கொண்டே ஜானு எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு நீ ஒரு மணி நேரம் வெய்ட் பண்ணு டா 

நான் போய்ட்டு வந்து உன்னை கூட்டு செல்கிறேன்.

ம்ம்ம் ok ok என்று இவள் கிண்டலாக சொல்ல 

சூர்யா சிரித்து கொண்டே சென்றான்.

இங்கு மகிழினி தன்னை தயார் படுத்தி கொண்டு கீழ வர அங்கு sp அமர்ந்து கணினியில் தன் அலுவலகம் தொடர்பான வேலை செய்து கொண்டு இருக்க 

மகிழினி க்கு அவனை பார்த்து விட்டு பேசாமல் செல்ல மனம் வர வில்லை எப்படியும் அம்மா கிட்ட சொல்லி விட்டால் சூர்யாவை அம்மா எனக்கு திருமணம் செய்து விடுவார்.

மாவய்யா பாவம் அவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க அங்கே இவள் அருகில் வந்தாள் தேஜு 

மகி என்ன பண்ற என கேட்க தேஜுவை பார்த்த மகிழினி மனதில் ஒரு எண்ணம் உதிர்த்தது.

மாவையா வ தேஜு அக்கா கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்

தேஜு அக்கா மாவய்யா விரும்புவது போல எனக்கு தோணுது என்று அவள் நினைத்து கொண்டு இருக்க 

அப்பொழுது அவள் தோள் தொட்டு மகி உன்னை தான் என்ன பண்ற நீ என்று கேட்க தன்னிலைக்கு வந்த மகிழினி 

ஒன்னும் இல்ல அக்கா சும்மா தான் என்று சொல்ல 

ம்ம்ம் சரி காலையில் சாப்பிட்டாயா நீ 

ம்ம்ம் அக்கா சாப்பிட்டேன் என்று இருவரும் பேச மகிழினி வந்ததில் இருந்து sp யை பார்த்து கொண்டு இருந்தது அனைத்தும் sp கவனித்தவன்.

அவளை தவறாக புரிந்து கொண்டான். அவள் தன்னை தான் ரசிக்கிறாள் தன் மேல் அவளுக்கு விருப்பம் என்று ஒரு மனம் சொல்ல 

இன்னொரு மனமோ அவளுக்கு நம்மை பிடிக்க வில்லை என்று நினைத்து முகத்தை இன்னும் சோகமாக வைத்து கொண்டான்.

உடனே மகிழினி அவன் முகத்தை பார்த்து விட்டு மாவய்யா என்று அழைக்க

அவளை ஒரு ஏக்க பார்வையில் ம்ம்ம் என்று பதில் அளித்தான்.

நான் கோவிலுக்கு போய்ட்டு வருகிறேன்

உங்களுக்கு …..

உங்கள் கிட்ட என ஆரம்பித்தவள் பாதியில் நிறுத்தி விட 

Sp என்ன என்பதை போல் பார்க்க 

நான் வந்து சொல்கிறேன் என்று புன்னகை முகத்துடன் செல்ல 

இங்கு sp க்கு ஒன்றும் புரியவில்லை .

தேஜு மனதில் ஒரு வேளை இவள் சூர்யாவை பற்றி வந்து சொல்வாளா 

ம்ம்ம் இன்டெரெஸ்டின்க் உன்னோட மனச இவ்ளோ சீக்கிரமே சூர்யா மாற்றி விடுவான் அப்டின்னு எனக்கு தெரியாமல் போச்சே மகி என்று நினைத்து சிரித்து கொண்டவள் 

நேராக தன் மகனை காண சென்றாள் .

அது யார் ?????

தேஜு க்கு மகன் இருக்கிறானா ???

கமெண்ட் பண்ணுங்க 

இங்கு மகிழினி உற்சாகமாக செல்ல அங்கு மாயாவும், வெங்கட் யும் தயாராக இருந்தனர்.

என்ன டா பூ வைத்து விடவா அம்மா உனக்கு 

என் பொண்ணு இன்னிக்கு தேவதை மாதிரி இருக்காளே 

அவ என் பொண்ணு என்று வெங்கட் அவள் கைகளை எடுத்து அவர் கைகளுக்குள் வைத்து கொண்டார்.

அப்பா போங்க பா என்று மிகவும் சந்தோஷமாக பேசி கொள்ள 

அம்மா நான் கோவிலில் பூ வைத்து கொள்கிறேன் என்று சொல்லி மூவரும் கார் ல  கிளம்ப 

இவர்கள் சென்று சரியாக 10 நிமிடம் கழித்து குரு வேகமாக கீழ வர 

அவன் நேராக ஒரு கார் எடுத்து கொண்டு சென்றான்.

குரு வேகமாக செல்வதை தன் மகனை கொஞ்சி விட்டு வந்த தேஜு பார்த்து விட்டு 

மனதில் இவன் ஏன் இப்படி வேகமாக செல்கிறான் ஏதோ இருக்கிறது என்று நினைத்த தேஜு 

அவள் குரு எங்கே செல்கிறான்  என அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

சூர்யா நேராக கோவிலுக்கு சென்றவன் மகிளினி பூ கேட்டது நினைவு வர அங்கு இருந்த பூ விற்கும் பெண்ணிடம் பூ வேண்டும் என்று சொல்ல 

அந்த பெண் சூர்யாவை அடையாளம் கண்டு கொண்டவளாக

என்ன பா உன் தங்கைய காணோம் ?

அவங்களுக்கு பூ வாங்குகிறாயா?

என்று கேட்க சூர்யா சிறு புன்னகை சிந்தியவன்.

இல்ல மா இது என்னை கல்யாணம் செய்து கொள்ளும் பொண்ணுக்கு என்று சூர்யா சொல்ல 

அந்த பெண் முக மலர்சியுடன்

“நீங்கள் ரெண்டு பேரும் சந்தோஷமா ஒற்றுமையாகஇருக்க வேண்டும்” .

சூர்யா சிரித்து கொண்டு இருக்க அப்பொழுது அவனுக்கு ஆஃபீஸ் ல இருந்து சரவணன் போன் செய்ய 

பூ விற்கும் பெண்ணிடம் நான் வருவதாக கூறி விட்டு கோவிலுக்கு பக்கதில் சூர்யா நடந்து கொண்டே பேச போக 

சூர்யா போகவும் மகிழினி காரில் வரவும் சரியாக இருந்தது.

மகிழினி, மாயா, வெங்கட் மூவரும் இறங்கி கோவில் உள்ளே செல்ல போக 

வெங்கட்  மாயாவிடம் 

மாயா மகிக்கு பூ வாங்கி கொடு பாரு என் பொண்ணு பொக்குன்னு இருக்க மாறி இருக்கு 

ம்ம்ம் சரிங்க என்று மாயா சொல்ல 

இப்போது மறுப்பு பேச முடியாமல் மகிழினி மாயாவுடன் பூ கடைக்கு சென்றாள்.

அங்கு சென்றவுடன் மாயா நெறைய சரமான பூ முளம் வாங்க

மகிழினி அங்கு அருகில் கட்டி வைக்க பட்டு இருந்த பூவை பார்த்து மாயாவிடம் 

அம்மா எனக்கு இது வேண்டும் என்று கேட்க 

மாயா அந்த பூவை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி தான் 

ஏன் மகி மா இது வேனும் இவ்ளோ முடி உனக்கு இருக்கும் போது சரமா வைத்தால் தானே நல்லா இருக்கும் 

மகிழினி எப்போதும் போல அவளுடைய கொள்கையை கூற மாயாவுக்கு ஒரு பக்கம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒரு பக்கம் மிகவும் கவலையாக இருந்தது.

அந்த ஒரு 10 மொட்டு மல்லிகை எடுத்து கையில் பார்த்து அதனை மகிழினி முகர அவளுக்கு சூர்யாவின் நினைவு வந்தது.

அந்த பூ விற்கும் பெண் இது வேறு ஒருவர் வந்து சொல்லி விட்டு போனது மா

மாயா அவளிடம் என் பொண்ணு ஆசையாக கேட்கிறாள் அதனால் இன்னொரு பூ கட்டி கொடுத்து விடுங்கள்.

அந்த பெண்ணும் சரி என்று சொல்ல மகிழினி இறுதியில் சூர்யா வாங்கி வைத்து இருந்த பூவை சூடிக்கொண்டாள்.

மாயவிற்கு மகியை பார்க்க காலேஜ் ல எப்படி இருந்தாளோ அதே போல தோன்றியது.

மாயா மகிக்கு நெட்டி முறித்தவள் சரி வா மா உள்ளே போகலாம் என்று மூவரும் உள்ளே செல்ல 

பூஜை சாமான்கள் எல்லாம் வாங்கி கொண்டு பூஜை செய்ய தயராக சென்றனர்.

சரியாக அப்பொழுது குரு கோவிலுக்கு உள்ளே வந்தான்.

இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி ஒரு இடத்தில் அமர்ந்து மகிழினி சூர்யாவுக்காக காத்து கொண்டு இருந்தாள்.

அவள் தவிப்பு பார்த்து மாயவுக்கு புரிந்து போனது.

மகிழினி மனதில் சரி நீயே அம்மாவிடம் சொல்லி விடு என்று நினைத்து அவள் 

அம்மா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்று சொல்ல போக 

அங்கு வந்த குரு வதினா !!!!! என்று அழைக்க மகிழினி அதிர்ந்தாள்.

அவள் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்தி விட்டு 

குரு முகத்தை பார்த்து மாமா நீங்கள் ??

மாயா, வெங்கட், இருவரும் குரு முகத்தை பார்க்க 

அவன் தந்திர புன்னகை சிந்தி கொண்டே வதினா வாங்களே ஒரு தடவை இந்த கோவிலை சுற்றி வரலாம் 

நான் குரு பகவான்  சன்னதியில் உங்களுக்கு சிறப்பாக ஒரு பூஜை சொல்லி இருக்கேன்.

என்ன சொல்ற குரு என்று மாயா கேட்க 

ம்ம்ம் ஆமா அத்தய்யா நான் வந்து சொல்றேன்

இப்போது பூஜை செய்ய தயாராக இருக்கா அப்டின்னு நானும் வதினவும் பார்த்து விட்டு வருகிறோம் என்று சொல்ல,

எதுக்கு இந்த பூஜை திடீரென என்று வெங்கட் கேட்க 

சும்மா தான் வதினா உடம்புக்கு சரியில்லை அப்டின்னு அன்னையா ஏற்பாடு செய்தது என்று இவன் சொல்ல 

மகிழினி வேறு வழி இல்லாமல் மாமா சரி வாங்க போகலாம் என்று குரு பின்னால் செல்ல 

இப்போது சூர்யா கொஞ்சம் தாமதமாகி விட்டதே என்று அந்த பூவை கூட மறந்து கோவில் உள்ளே செல்ல அப்பொழுது மகிழினி யாரோ ஒருவரின் பின்னால் பயந்து கொண்டே செல்வதை பார்த்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும் குரு தன்னுடைய இயல்பான முகத்துக்கு வந்தவன்.

மகியை பார்க்க அவளும் குரு முகத்தை பார்த்தாள்.

சூர்யா கொஞ்சம் பகுதியில் மறைந்து கொண்டு அந்த புதியவன் மகி கிட்ட தவறாக நடந்து கொள்கிறானா என கண்காணிக்க நின்று கொண்டான்.

குரு மகிழினி முகத்துக்கு நேராக அவனுடைய போனில் உள்ள புகை படம் காட்ட மகிழினி க்கு தூக்கி வாரி போட்டது.

மருண்ட விழிகளுடன் கைகள் நடுங்க 

மகிழினி குரு கிட்ட 

மாமா அது வந்து என்று பேச ஆரம்பிக்க 

நிறுத்து !

உன்னோட விளக்கத்தை நான் இங்கே கேட்க வரல 

உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் 

எங்க அன்னையா க்கு இந்த விஷயம் தெரிஞ்சது அப்டின்னு வை 

ஒரு கொடூர புன்னகை சிந்தியவன் அவளை பார்க்க 

மகிழினி கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

குரு தொடர்ந்தான்

உன்னை எதுவும் செய்ய மாட்டான் அந்த புகை படத்தை காட்டி கிலோஸ் தான் 

நான் இப்போவே சொல்லட்டுமா என்று புன்னகை சிந்தியவன் அவளை பார்க்க 

மகிழினி அவன் அருகில் சென்று அழுது கொண்டே பிலீஸ் பிலீஸ் மாமா என்று அவள் கெஞ்ச

அங்கேயே நில்லு என்று கூறியவன் நீ மட்டும் தான் அவனை நினைத்து நினைத்து சுற்றி கொண்டு இருக்கிறாயா 

இல்லை இந்த slum dog ம் உன்னை லவ் பண்றானா என்று கேட்க 

மாமா நான் 

நான் மட்டும் தான் இன்னும் அவர் கிட்ட நான் பேசியது கூட இல்லை 

எனக்கு அவரை பிடித்து என்று சொல்ல வர

உன் வாய மூடு 

பொய் சொல்லாத உண்மைய சொல்லு வதினா 

என் மேல் சத்தியமா மாமா 

குரு அவளை பார்த்து அவன் உன்கிட்ட ஒவ்வொரு முறையும் சண்டை தான் போட்டு இருக்கிறான்.

ஒவ்வொரு முறையும் மோதல் தான் ஆனால் எங்க அண்ணன் உன்னை எப்டி பார்த்து கொள்கிறான் 

ஆனால் அப்போதும் கூட உன் புத்தி உன்னோட கேவலமான புத்தி எண்ணம் மனசு அவன் பின்னாடி போகுது 

ம்ம்ம்ம் அவ்ளோ தைரியம் உனக்கு 

இல்ல மாமா  என்று அழுது கொண்டே ஏதோ அவள் சொல்ல வர

உன்னோட பேச்சை நம்ப நான் spr, மாயா, அந்த மாயாவோட கணவர் இல்லை 

நான் குரு பிரகாஷ் எனக்கு உன் மேல் எப்போதும் நம்பிக்கை இருந்தது இல்ல 

எங்க அண்ணா அப்படினா எனக்கு உயிர் 

நீ இங்கே தமிழ்நாடு போகனும் அப்டின்னு சொன்ன அப்போ நான் சாதாரணமாக தான் நினைத்து இருந்தேன் 

ஆனால் நீ அந்த thetre ல படம் பாத்தது எல்லார்க்கும் பெர்மிசின் கொடுத்த அப்போவே எனக்கு உன் மேல சந்தேகம் வந்து விட்டது.

Sp காக தான் உன்னை விடுகிறேன் இல்லை உன்னோட கழுத்தை திருகி போட்டு இருப்பேன் 

மகிழினி அழுது கொண்டே பயந்து அவனை பார்த்து கொண்டு இருக்க 

எனக்கு இப்போது ஒரு விஷயம் சொல்லு அவனும் உன் பின்னாடி சுத்துரானா 

இப்போ நீ உண்மைய சொல்லல அப்புறம் நான் 

மகிழினி அவன் அருகில் வந்து மாமா சத்தியமா இல்ல மாமா அவரை எனக்கு பிடித்து இருந்தது.

நான் இப்படி நெனைக்கிறேன் அப்டின்னு அவருக்கு தெரியாது 

பிலீஸ் 

பிலீஸ் நம்புங்க

நீங்கள் நம்ப நான் என்ன செய்யனும் நான் என்னோட விருப்பத்தை சொல்லவே இல்லை என்று அவன் கால்களை பிடித்து கொண்டு கெஞ்ச

ஹே எழு 

நீ எங்க அண்ணாவுக்கு பொண்டாட்டி ஆக போறவ

மகிழினி அழுது கொண்டே எழுந்து நிற்க

இப்போது ஒரு game விளையாடலாம் எனக்கும் ரொம்ப bore அடிக்குது என்று குரு அவளை பார்த்து சிரிக்க

மகிழினி நடுங்கினாள்

குரு அவளை பார்த்து சிரித்து கொண்டே 

இப்போது நீ போய் அத்தை கிட்ட 

அம்மா நான் மாவய்யா வ கல்யாணம் உடனே பண்ணிக்க சம்மதம் அப்டின்னு சொல்ற 

மகிழினி அவனை வலி நிறைந்த கண்களுடன் பார்க்க

அப்புறம் நீ இதுல எதுவும் ட்ரிக் பண்ணி தப்பிக்கலாம் அப்டின்னு நினைக்காத 

உன்னோட இந்நாள் காதலன் அவன பத்தி நீ சொன்னது உண்மையா இல்ல பொய்யா அப்டின்னு நான் spy அனுப்பி இருக்கிறேன் .

மகிழினி க்கு இப்போது அங்கேய செத்து விடலாம் போல இருந்தது.

நான் சொல்றத நம்ப மாட்டீங்களா மாமா என்று இவள் கேட்க 

நான் ஒன்னும் sp இல்ல

முட்டாள் இல்ல 

எங்க அண்ணா உன் மேல் பைத்தியமா இருக்கான்

ஆனால் நீ எவ்ளோ கேடி 

சரி அதை விடு நம்ப game க்கு வரலாம்

உன்னோட இந்நாள் காதலன் அதுவும் நீ இன்னும் ப்ரொபோஸ் பண்ணல அப்டி தானே 

ஆம ஆமா மாமா 

குரு இப்போது உச்சி கொட்டியவன்

ம்ம்ம் ரொம்ப பாவம் 

அந்த உன்னோட இந்நாள் காதலனை நம்ப ஆஃபீஸ் ல இல்ல ஏதோ ஒரு வகையில் நான் join பண்ண ரெடி பண்ணிட்டேன்.

இப்போது அவன் முன்னாடி தான் அண்ணா கூட உனக்கு கல்யாணம் அதுவும் நீ சிரித்து கொண்டே எங்கள் அண்ணாவுக்கு பார்த்து பார்த்து caring ஆ இருக்கணும் 

ஒரு லவ் couple மாதிரி

கல்யாணம் பண்ணிக்கனும் அப்பொழுது தான் அவன் உயிரோடு இருப்பான்

இல்லை …..

மாமா 

மாமா என்னை கொன்று விடுங்கள் பிலீஸ் என்று மகிழினி இதை எல்லாம் கேட்க முடியாமல் சொல்ல

அது எப்படி நேத்து வந்த அவன் உனக்கு ரொம்ப முக்கியமா போயிட்டான் 

இன்னும் ப்ரொபோஸ் பண்ணி double side லவ் அப்படினா நீ இன்னேரம் அவன் கூட போயிருப்ப

ம்ம்ம்ம் இன்டெரெஸ்டிங் 

இப்போ நீ போய் சரி சொல்கிறாயா 

இல்ல அவனை நான் தீர்த்து கட்டவா

என்று குரு சொல்ல 

மகிழினி?????

இதையெல்லாம் சூர்யா கேட்டு கொண்டு இருந்தானா??

சூர்யா அடுத்து என்ன செய்ய போகிறான்????

தொடரும். ..

Episode 88, 

மகிழினி சூர்யாவை விரும்புவதை தெரிந்து கொண்ட குரு அவளிடம்

இப்போ நீ போய் அத்தையிடம் எனக்கு sp யை திருமணம் செய்து கொள்ள சம்மதம் அப்டின்னு போய் சொல்லணும் இல்லையென்றால்,

 உன் கண் முன்னாடியே உன்னோட காதலன் ஸ்வாஹா …..

வேணாம் மாமா நான் இப்போவே அம்மா கிட்ட போய் சொல்றேன் என்று கனத்த இதயத்துடன் மகிளினி கிளம்பினாள்.

இதை கேட்ட சூர்யா வேகமாக கோவிலில் இருந்து வெளியே சென்றான்.

நேராக வீட்டுக்கு செல்லாமல் அலுவலகத்திற்கு சென்றான் தனது அறைக்கு சென்றவன்  இருக்கையில் அமர்ந்தவன் மகிளினி பேசிய அனைத்து வார்த்தைகளும் காதில் கேட்டுகொண்டே இருந்தது.

சரவணன் சூர்யா வந்ததை பார்த்து அவன் அறைக்கு வந்தவன் அவனை பார்த்து

என்னாச்சுசூர்யா உன்னோட முகம் சரியில்லையே 

உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் நமக்கு spr ல இருந்து பெரிய புராஜக்ட் கிடைச்சு இருக்கு டா நான் இப்போ தான் ரகு கிட்ட பேசினேன் எல்லாரும் ஹாப்பி இன்னிக்கு அவங்க வீட்டில்  டின்னர் சொல்லி இருக்கிறார்கள் என அவன் சொல்லி கொண்டே போக

சூர்யா அவனை பார்த்து

சரவணா….

ம்ம் சொல்லு சூர்யா….

நீ லவ் பண்ணிருக்கியா?

இதை கேட்ட உடனே சரவணன் அமைதியானான்.

என்னாச்சு நான் எதுவும் தவறாக கேட்டு விட்டேனா?

இல்ல சூர்யா என்று சொல்லி அங்கு உள்ள இருக்கயில் அமர்ந்து தன் முடியை கோதிக்கொண்டே தன் தாடியை தடவி கொண்டவனாக ம்ம்ம் நான் லவ் பண்றேன் என்ன பன்றது அவள் என்னை தேடி எனக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறாள். என் மேல அவளுக்கு நம்பிக்கை காதல் எல்லாமே அதிகம் ஆனால்…

ஆனால்..என்ன சரவணா ….

எனக்கும் அவளுக்கும் தகுதி இல்லை சூர்யா அவளுக்கு நிச்சயம் ஆகி விட்டது.

சூர்யா ஒர் கசந்த புன்னகை சிந்தியவன் எப்டி டா உன்னை மனசுல நெனைச்சு கிட்டு வேற ஒருவர் கூட கல்யாணம்

இல்ல சூர்யா நான் தான் அவள வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டு விட்டேன்.

நீ யாரையோ விரும்புற தானே 

ம்ம் ஆமா ….

ஆனால் அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாமல் போயிடுச்சு

என்ன சொல்ற நீ 

சூர்யா, அவளுக்கு என்னோட வீரத்தின் மேல் நம்பிக்கை இல்லை நான் ஆண்பிள்ளை தான் அப்படினு நிரூபிக்கனும் அவள் யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல எனக்கு அவ வேணும்.

என்னடா சொல்ற 

எனக்கு அவ மேலே ரொம்ப கோபம் ஆனால் அவளை நான் விட்டு தர மாட்டேன் 

அவங்க என்ன பண்றாங்க சூர்யா 

அவளுக்கும் நிச்சயம் ஆகிடுச்சு ஆனால் கல்யாணம்  அப்டின்னு ஒன்னு நடந்தால் அது என் கூட தான் 

நீயாவது உன்னோட காதல ஜெயிக்க வச்சுக்கோ டா

ம்ம் கண்டிப்பாக நான் அவளை மிஸ் பண்ண மாட்டேன்

உன்னை மாதிரி நான் ஒன்னும் கோழை இல்ல.. 

சரவணன் அவனிடம் ம்ம் நான் நீ சொல்ற மாதிரி கோழை தான் சூர்யா 

ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ சரவணா நமக்கான ஒன்னு வாழ்க்கையில் ஒரு முறை தான் கெடைக்கும் ஏன்னா இங்க லைஃப் ஒரு முறை தான் அதனால நம்ப அதை எதுக்காகவும் விட்டு தர கூடாது.

நான் சொல்றது உனக்கு இப்போ புரியாது நீ அந்த நிலைக்கு வந்தால் தான் புரியும் என்று சொல்லி விட்டு அவன் கதவுக்கு அருகே செல்ல

அந்த பொண்ணு யாரு சூர்யா? 

அவன் அலட்டிக்கொள்ளாமல்” SPR “ரோட அத்தை பொண்ணு” மகி” என சொல்ல அவன் அதிர்ச்சியில் சூர்யாவை பார்க்க அவனோ 

சரவணாவை பார்த்து ,”நாளைக்கு டின்னர் கு போகலாம் எனக்கு கொஞ்சம சோர்வா இருக்கு நாளைக்கு போய் அவள பார்த்து கொள்கிறேன்”. என கூறி சூரியா நேராக மதுபான கடைக்கு சென்று சில உயர் ரக ஒயின்கள் வாங்கி கொண்டு ஸ்டோர் ரூம் சென்று லாக் செய்தவன் மகிளினியை நினைத்து குடிக்க ஆரம்பித்தான்.

அவன் சென்றவுடன் சரவணன் மனதில் சுபா நான் சூர்யா சொன்னது போல கோழை சுபா ஆனால் நீ எனக்கு வேணும் சுபா நான் என்ன செய்யட்டும் என புலம்பினான்.

இங்கு மகிழினி நேராக தன் அம்மா அப்பாவிடம் சென்றவளை மாயா அவள் முகத்தை பார்த்தே கண்டு கொண்டார் எதோ சரி இல்லை.

மகியின் பின்னால் குரு எதுவும் நடக்காதது போல வர அம்மா , அப்பா வீட்டுக்கு போகலாம். வெங்கட் எதோ சொல்ல வர மாயா அவர் கைகளை பிடித்து தடுத்தார்.

Spr மகியை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தான். பொம்மாயி எனக்கு நீ வேணும் …

நீ எனக்கு கிடைப்பாயா….. என்று இவன் நினைத்து கொண்டு இருக்கும் நேரம் காரில் இருந்து மாயா, வெங்கட், மகிழினி, குரு இறன்கி உள்ளே வர அவர்கள் உள்ளே செல்லும் நேரம் காரில் தேஜு வந்து இறங்கினாள்.

இவர்கள் அனைவரும் உள்ளே செல்ல குரு மகியை பார்க்க அவள் உடனே அம்மா, அப்பா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்….

மாவையா உங்க கிட்டயும் தான், என சொல்ல அனைவரும் அவள் என்ன சொல்வாளோ!… என்று இருக்க முக்கியமாக தேஜூ, spr இருவரும் ஒரு வித கலவையான உணர்வுடன் மகிழினியை பார்க்க 

அவள் அனைவரின் மீதும் தன் பார்வையை ஓட விட்டு இறுதியில் தன் அம்மாவின் முகத்தை பார்த்து “அம்மா நான் மாவய்யாவை  கல்யாணம் செய்து கொள்கிறேன்”.

என்ன மகி சொன்ன அம்மா எனக்கு மாவய்யாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் என்று தன் உதடுகளை கடித்து கொண்டு இவள் சொல்லி முடிக்க தேஜுவுக்கு தூக்கி வாரி போட்டது.

Spr இந்த வார்ததைகளை கேட்டு மகியின் அறுகில் வந்து அவள் கைகளை பிடித்து பொம்மாயி நீ சொல்றது உண்மையா என கேட்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் சூர்யாவை நினைத்து மனது வெந்து கொண்டு இருக்க 

ம்ம் என்று ஒற்றை பதில் கண்ணீர் கீழ் விழ பொம்மாயி…. ஏன் அழர 

அண்ணயா அது ஆனந்த கண்ணீர் அப்படி தானே வதினா…. என்று குரு மகியை பார்க்க அவள் ம்ம் என்று பதில் அளித்து விட்டு அவள் அறைக்கு ஓடி விட்டாள்.

அண்ணா இனி என்ன அடுத்து வர முகூர்த்த நாளில் கல்யாணம் வைத்து கொள்ளலாம். இப்பொ உனக்கு சந்தோஷம் தானே என குரு கூற 

மாயா என்ன சொல்வதென்றே தெரியாமல் அவளது அறைக்கு செல்ல பின்னல் வெங்கட் சென்றார்.

Spr குரு வை கட்டி அணைத்து கொண்டு எப்படி குரு என்னால் நம்பவே முடியல… எனக்கு எப்படி இருக்கு தெரியுமா! “ஐ கேநாட் எக்ஸ்பிளைன் இன் மை வேர்டஸ்” … என அவன் தன் கண்ணகுழி தெரிய சிரிக்க 

அண்ணா கண்டிப்பாக கல்யாணம் நடக்கதான் போகுது பொம்மாயி கூட நீ சந்தோஷமா வாழ போற நீ , பொம்மாயி, நிதின் ஒரு குடும்பமா செம்மையாக இருக்கும்.

ஆனால்…..

ஆனால் என்ன குரு?

அண்ணா அந்த சூர்யா அவன் முன்னாடி தான் நீ தாலி கட்டணும்….

ஏன் குரு ?

அண்ணா அப்போ தான் உனக்கும் முழு மனதோடு அவளை நீ அடைந்தது போல் இருக்கும். நான் சொல்றத யோசித்து பாரு

சிறிது நேரம் கழித்து ம்ம்ம் நீ சொல்றது கூட நல்லா தான் இருக்கு அவன் அந்த ராஸ்கல், ஸ்கவுன்றல், ஸ்லம் டாக் முன்னாடி பொம்மாயி  கூட நான் சந்தோஷமாக என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்.

ஆனால் அவன் பைத்திக்காரன் மாறி எல்லாம் மறந்து யாருக்கோ கல்யாணம் மாதிரி இருப்பான். என்று இவர்கள் சந்தோஷத்தில் திளைத்தனர்.

மாயா உள்ளே வர வெங்கட் கதவை தாழிட்டு என்ன மாயா மகி வாழ்க்கை இப்படி ஆக கூடாது.

நீ எதாவது செய்யணும் இல்லை…. நான் செய்வேன்….. அவ யாருன்னு தெரியாமல் அவள் சுயத்தை மறந்து இருக்கிற இந்த நேரத்தில் இது தவறு இது பாவம் மாயா…. இதுவே நீ உன்னோட வயிற்றில் பிறந்த பெண்ணுக்கு இப்படி நடக்க விடுவாயா…. என்ன வெங்கட் இப்படி பேசுறீங்க எனக்கு வருண் எப்படியோ அது போல் தான் மகியும் கண்டிப்பாக நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்.

உங்களுக்கு மகிய பற்றி தெரியாது எதோ தவறா நடந்து இருக்கு அவ அதனால தான் இப்படி பேசுறா நீங்கள் கவலை படாதிங்க என்று தன் கண்களை துடைத்துக் கொண்டு அவளிடம் பேசலாம் என்று முடிவெடுத்தாள்.

இங்கு சூர்யா அந்த ஒயின் பாட்டிளை ஓபன் செய்து அதை ஒரு கோப்பையில் ஊற்றியவன் முதலில் வாஷ் ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்த சென்றான்.

மகி நீ எனக்கு தான் உன்னை எப்டி என்னோட கூட்டு வரணும்னு எனக்கு தெரியும் டி ….

I hate you நான் உன்னை வெறுக்கும் அளவுக்கு உன்னை நான் காதலிக்கிறேன் டி…. நேசிக்கிறேன்… உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லாமல் போச்சு ம்ம்ம்ம் ….

என் மேல் உனக்கு நம்பிக்கை வரும் நான் ஆண்பிள்ளை அப்டின்னு அந்த குரு, spr எல்லார் முன்னாடியும் நிரூபிச்சு உன்னை தூக்குறேன் டி ….

இப்போ உன் மேல் இருக்க கோபத்தை அதிக படுத்தினால் தான் என்னால் ஜெயிக்க முடியும் அதுக்கு தான் இந்த ஒயின் வரேன் டி…

என இவன் ஒரு ஆளுயர கண்ணாடியில் பேசி விட்டு வெளியே வர 

அதற்குள் ஜனனி ஸ்டோர் ரூமில் வழக்கம் போல போய் செய்யும் வேலைக்காக உள்ளே வந்து சிரித்து கொண்டே அவள் வேலையை பார்க்க சூர்யா உள்ளே வந்தது  அவளுக்கு தெரியவில்லை.

சூர்யா உள்ளே வந்தவன் அங்கு யாரோ இருக்கிறார்கள் என சத்தம் கேட்க சூர்யா ஜானு என்ன செய்கிறாள் எனபார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்..

ஜனனி… 

அ.. அத்…

அத்தான் …. என பதட்டம் கொண்டு இவள் தன் கையில் இருப்பதை மறைக்க போக 

சூர்யாவின் கோபப்பர்வையில் அவள் நடுங்கி நிற்க ம்ம்ம் என்ற ஒரு அதட்டல் அவள் கண்களில் கண்ணீருடன் அவள் கையில் வைத்து இருந்ததை சூர்யாவிடம் நீட்டினாள்.

அதை வாங்கி பார்த்த சூர்யாவுக்கு முகத்தில் கலவையான உணர்வு தோன்றியது உடம்பெல்லாம் முறுக்கேறி கோபம் கொண்டான்.

ஜானு இதுக்கு என்ன அர்த்தம்….

அத்தான் அது வந்து ….

அப்போ உனக்கு எல்லாம் தெரியும் அப்படித்தானே ம்ம் 

ஆமா அத்தான்

இதை ஏன் என் கிட்ட இருந்து எல்லாரும் மறச்சீங்க இன்னும் என்ன எல்லாம் இருக்கு எனக்கு இப்போவே எல்லா விஷயமும் தெரிந்து ஆக வேண்டும்.

அவளுக்கு என்னாச்சு அவனுக்கு இப்போவே போன் பண்ணி கொடுக்கற  நீ இப்போவே…..

அத்தான் இன்பா அண்ணா கிட்ட என்று அவள் எதோ சொல்ல வர 

நான் சொன்னதை  செய் என்று அவன் கூறி தன் கோபத்தை கட்டுபடுத்த முயற்சி செய்தான்.

SPR I will kill you , குரு உன்னை ****** …

வரேன் டா ….

ஹே மகி உனக்கு இருக்கு டி ….. 

தொடரும்….

அடுத்து சூர்யா, மகிழினி, spr  மூவரின் சந்திப்புகாக காத்திருங்கள்.

இனி தொடர்ந்து படியுங்கள் டெய்லி update பண்றேன் அப்படியே உங்களோட கமென்ட்க்கு I’m eagerly waiting 😊 

Episode 89,

சூர்யா வாங்கி வந்த மதுவினை குடிக்க ஸ்டோர் ரூம் சென்றான் தன் ரூமிற்க்கு ஒரு வேலை அம்மா, ஜானு யாராவது வந்து விட்டால் தேவை இல்லாமல் பிரச்சனை வந்து விடும் என்று எண்ணி இவன் இங்கு ஸ்டோர் ரூம் வர அங்கே ஜனனியை பார்த்து விட்டான்.

அப்படி ஜனனி என்ன தான் செய்து கொண்டு இருந்தாள். ஜனனி சூர்யாவின் வீட்டுக்கு வந்ததில் இருந்து அந்த ஸ்டோர் ரூமில் சூர்யா மகிழினி திருமண புகைப்படங்கள் மற்றும் ஆல்பம், சத்ய தேவ் படம், அவளது வளைகாப்பு என அனைத்தும் மறைத்து வைத்து இருந்தனர் அதில் திருமணம் மற்றும் வளைகாப்பு படங்களில் மகிளினியோடு ஆதி இருக்க அவன் நியாபகம் எப்போது வந்தாலும் அதனை பார்க்க வந்து விடுவாள்.

ஆனால் சூர்யா இரண்டு முறை அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அப்போது ஒன்றும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை இன்று உண்மை அனைத்தும் தெரிந்து கொண்டான்.

அந்த புகைப்படத்தை அருகில் இருந்த டீ பாயில் விரித்து வேக வேகமாக தன் தலையை கோதி கொண்டு உதட்டை மடித்து கடித்து கண்களை மூடியவன் அப்படியே அந்த சோபாவில் அமர்ந்தான்.

ஜனனி ஒரு ஓரமாக நின்று கொண்டு அவனை அத்தான் என்று சொல்ல

அவளை கோப கண்களால் பார்த்தவன் அந்த ஆதியை இப்போவே இங்கே வர சொல்..

அவர் பெயர் உங்களுக்கு எப்படி…

அத்தான் இன்பா அண்ணா கிட்ட சொல்ல!

என்று அவள் வார்த்தை வாயில் இருக்கும் போதே அந்த மதுகோப்பகளை தள்ளி விட்டவன்.

 இப்போ நான் சொல்றத மட்டும் செய்….

உடனே தன் போன் எடுத்து வேக வேகமாக ஆதிக்கு கால் செய்தவள் என்னங்க…

என்னாச்சு ஜானு உன்னோட குரல் ஒரு மாறி இருக்கு !

என்னங்க அத்தான் எல்லாமே பார்த்து விட்டார் நீங்க , அக்கா இருக்க போட்டோஸ் என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவள் போனை பிடுங்கிய சூர்யா ஹே இன்னிக்கு சாயங்காலம் 6.00 குள்ள நீ இங்கே என் முன்னாடி வர இல்லை நான் உன்னை என்று அவன் முடிக்கும் முன் 

ஆதி சூர்யாவின் அந்த கடுமையான அழுத்தமான பேச்சில் மிரண்டு ,”அண்ணா நான் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கு இருப்பேன்” என்று அவன் பேசி அடுத்து வார்த்தைசொல்லும் நேரம் சூர்யா அழைப்பை துண்டித்தான்.

அத்தான் என்னை மன்னித்து விடுங்கள். என்று அவள் அழுது கொண்டே சூர்யாவின் அருகில் வர இப்போ நீ வெளியே போ லீவ் மீ அலோன் ….என்று அவன் சொல்லவும் குற்ற உணர்வில் ஜனனி அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன் சூர்யா அந்த கதவினை பூட்டியவன் அந்த புகை படங்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

மகி எப்படி  டி நீ என்னை விட்டு போன ,

எப்படி டி உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லாமல் போச்சு….

நீ என்னோட பொண்டாட்டியா…

உனக்கும் எனக்கும் குழந்தை இருக்கா…

 என்று தன் மகனின் படத்தை பார்த்தவனுக்கு தன் அழகான குடும்பம் தன் குழந்தை , மனைவி என இருந்த  குடும்ப கூட்டினை களைத்தவர்களை துண்டு துண்டாக சிதைக்கவேண்டும் என்று  வெறி தோன்றியது.

அவன் மனம் ,இது ஒன்றும் சிறிய அளவிலான பிரச்சனை இல்லை திட்ட மிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி அதனால் நாம் இதை கொஞ்சம் நம் அறிவை யுக்தியை பயன்படுத்தி மகியை அங்கே இருந்து மீட்க வேண்டும் என்று கொஞ்சம் நிதானம் அடைந்தான்.

சூர்யாவின் மனதில் கோவிலில் இன்று மகி பேசியதை பார்த்தால் அவள் கட்டாயத்தில் தான் அங்கு இருக்கிறாள் என்று நன்றாக தெரிந்து கொண்டான். அவள் சூர்யாவை விட்டு ஏழு கடல் தாண்டி இருந்தாலும், தன் சுயத்தை மறந்து இருந்தாலும் கூட தன் நினைவுகளும் அவள் நினைவுகளும் ஒரு காந்தம் போல் தன்னோடு இணைய துடித்து இருக்கிறாள் என இன்னும் தன்னவளின் மேல் காதல் ஓங்கியது.

நமக்கு உண்மை தெரியாமல் இருந்திருந்தால் நாம் மகியை பார்க்காமல் இருந்திருந்தால் அதை நினைக்க கூட சூர்யாவால் முடியவில்லை.

சூர்யா தன் மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்தான். இங்கு ஆதி மதியம்  இரண்டு மணிக்கு அவசர அவசரமாக  கெம்ப்கௌடா இன்டர் நேஷனல் விமான நிலையம் வந்து சேர்ந்தவன் சென்னைக்கு டிக்கெட் காரில் வரும்போதே டிக்கெட் பார்க்க 4.15 க்கு இண்டிகோ ல ஒரு பிளைட் இருக்க வெறு வழி இல்லாமல்  புக் செய்தான் . பின் ஜனனிக்கு போன் செய்து அவளை சமாதானம் செய்யும் போது இவனுக்கு அடி வயிறு கலங்கியது.

ஒரு 5.15 க்கு சென்னை வந்து சேர்ந்தவன் நேராக சூரியாவின் வீட்டுக்கு சென்றான். ஜனனி அங்கு முகமெல்லாம் வீங்கி அழுது கொண்டு நின்று கொண்டு இருந்தாள். உமா நட்ராஜ் இருவரும் தன் மகன் மருமகள் சீக்கிரமாக ஒன்று சேர வேண்டும் என்று தங்கள் குல தெய்வ கோவிலுக்கு இன்று தான் கிளம்பி சென்றனர்.

ஜானு அழாத டி எனக்கே பயமா இருக்கு

அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு சரி விடுங்கள் எல்லாம் என்னோட தவறு நான் அத்தான் கிட்ட சொல்லி இருக்கணும் என அவள் சொல்ல 

சரி விடு ஜானு என அவன் அருகில் செல்ல ஹே ராஸ்கல் …. என சத்தம் வர ஆதியும் ஜனனியும் பயத்துடன் மேலே பார்க்க சூர்யா அவனை மேலே வாடா …. என்று கூறினான்.

வேக வேகமாக ஆதி படிகளில் ஏறி சூர்யா இருக்கும் அறைக்குள் சென்றான். சூர்யா அங்கு இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு ஆதியை கொல்லும் கண்களோடு பார்க்க அண்ணா நான் எல்லாம் சொல்லி விடுகிறேன். என்று சூர்யா மகிழினி திருமணம், காலேஜ் , பள்ளி, spr , கார்த்திக், மை விழி , சத்ய தேவ் மற்றும் இன்பா சொன்னது ஆதி மகிழினி நட்பு, ஆதி ஜானு நிச்சயம் என அனைத்தும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

சூர்யா ஆதியை பார்த்து என்னோட மகி என்கிட்ட வரும் வரைக்கும் நீ ஜானு பக்கத்தில் வரவே கூடாது …

இப்போ நீ போகலாம் …என்று அவன் சொல்ல ஜானுவை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு அவன் நகர

ஜானு இனி நீ தான் என்னோட காதலி…. என சொல்ல ஒரு நிமிடம் ஆதி சூர்யாவை பார்க்க என்ன டா பார்க்கிறாய்.. அவள் என் மாமன் மகள் உன் முன்னால் தானே சொன்னேன் கிளம்பு 

அத்தான் என்று அவள் அழுது கொண்டே அருகில் வர நான் உன்னை மட்டும் மன்னிக்கிறேன். நான் சொல்வதை பொறுமையாக கேள் என்று ஜானுவிடம் அனைத்தும் கூறினான் இதை எல்லாம் ஆதி வெளியே ஒட்டு கேட்டு கொண்டு இருந்தான். 

அப்பாடா எப்டியோ வெறும் நடிப்பு தான் என்று அவன் தன்னை அசுவாச படுத்திகொண்டு திரும்ப அங்கு சூர்யா நின்று கொண்டு இருக்க அண்ணா நான் தெரியாமல் என்று அவன் எதோ சொல்ல வர 

சூர்யா அவனிடம் நாளைக்கு சத்ய தேவை நான் பார்க்க வேண்டும் என சொல்ல ஆதி அவனை அணைத்து கொண்டான். அண்ணா நான் கூட்டி வருகின்றேன்.

வேண்டாம் ஆதி எனக்கு வீடியோ கால் பண்ணு நான் என்னோட பையனை நேரில் பார்க்க வரும் போது அவளோடு (மகிழினி) தான் வருவேன்.

ம்ம்ம்ம் சரி  அண்ணா நீங்கள் கவலை பட வேண்டாம் கார்த்திக், மை விழி இருவரும் அதுவும் மைவிழிக்கு சக்தி என்றால் உயிர் கார்த்திக்கு மான் விழியின் மகன் சக்தி அதனால் அவரும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.

மகி ஒரு நாள் கூட சக்தியை பிரிந்து இருந்தது இல்லை . இப்போது அவள் சக்தி யார் என்றே தெரியாமல் ஒரு நிலையில் இருக்கிறாள்.

சரி அண்ணா நான் ராம், இன்பா சார் கிட்ட சொல்லி விடவா இன்பா சாருக்கு கொஞ்சம் இந்த பிரச்சனையை சரி செய்ய எளிதாக இருக்கும்.

வேண்டாம் ஆதி….

ஏன் என்பது போல் ஆதி பார்க்க நான் எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று இன்பாவுக்கு யாருக்கும் தெரிய கூடாது. அவன் அவனுடைய வழியில் இதற்கு தீர்வு காணட்டும் நான் என் வழியில் செல்கிறேன்.

ம்ம் சரி அண்ணா நான் கிளம்புகிறேன் என சொல்ல ஜானு அவனை அனுப்பி வா … என்று சூர்யா சொல்லி விட்டு மேலே சென்றான்.

சூர்யா சென்றதும் ஜானு அவனோடு வெளியே செல்ல ஹே ஶ்ரீ தள்ளி போ டி … என் கிட்ட வராதே.. ஏன் என்று ஜனனி அவன் கைகளோடு கோர்த்து கொள்ள நீ தான் உன் அத்தான் கூட லவ் பண்ண போறியே… ம்ம் ஆமா ஆதி ஜாலி ஜாலி என்னோட அத்தான் எனக்கு உயிர் தெரியுமா…. என்ன பண்றது எல்லாம் என்னோட விதி அதுக்குள் மகி அக்கா கூட கல்யாணம் ஆகி விட்டது என்று ஆதியை சீண்டும் எண்ணத்தில் சொல்ல, ம் மம் நீ சொல்லுவ டி இப்போ மட்டும் மகி இருந்தால் உன்னோட அத்தானயும் உன்னையும் ஒரு கை பார்த்து விடுவாள் ஐ மிஸ் யூ மகி என்று இவன் சொல்ல உடனே அவன் கையை விட ஹே நீ மட்டும் என்னை டீஸ் பண்ணலாம் ஆனால் நான் பண்ணா மேடம்கு கோவம் வேற வந்திடுது… 

நான் பண்ணுவேன் நீ பண்ண கூடாது… என்னடி மரியாதை குறையுது …அப்படி தான் டா பேசுவேன் நானே உன்னை வேணாம்ன்னு சொன்னாலும் நீ தான் என்னை கன்வின்ஸ் பண்ணனும் என்று அவள் முகத்தை திருப்பி கொள்ள உடனே ஆதி அவளை கைகள் பிடித்து ஒரு முத்தம் வைத்து அணைத்தவன் ஶ்ரீ நமக்கு மட்டும் கல்யாணம் ஆகட்டும் டி….

ஆனால் என்ன பண்ணுவீங்க …என அவள் அவனை தட்டி விட்டு கேட்க உன்னை எப்டி கண்வின்ஸ் பண்றேன் அப்டின்னு மட்டும் பாரு என்று சொல்லி விட்டு அவள் இதழில் தட்டான்பூச்சி தண்ணிரை உரசுவது போல ஒரு முத்தமிட்டு பாய் டி மிஸ் யூ  ஶ்ரீ என்று சொல்லியவன் மகி சீக்கிரம் உன் புருஷன் கூட சேர்ந்து விடு டி ,இல்லனா என்னோட ஜானுவும் நானும் தான் இதுல ரொம்ப அப்பெக்ட் ஆகுரோம் … சும்மா ஜானுவ சீண்டும் எண்ணத்தில் சொல்லி விட்டு கிளம்பினான்.

ஜானு அவன் கொடுத்த முதல் முத்தத்தில் இருந்து தன்னை மீட்டு கொண்டு வெட்கம் கொண்ட முகத்தோடு உள்ளே சென்றாள். உள்ளே சென்றதும் ஜானுவிடம் நாளைக்கு என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று சூர்யா ஜானுவுக்கு சொல்லி கொடுத்தவன் அவளிடம் நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன்.. ஜானு என்னை மன்னித்து விடு…

அத்தான் இப்படி நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு என் அத்தானை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் அக்காவோட சேர வேண்டும்.

ஆமா மகிழினி என்ன செய்கிறாள். அவளது அறைக்கு வந்த மகி சூரியாவின் புகைப்படத்தை அணைத்து கொண்டு சூர்யா நான் உனக்கு வேண்டாம் சூர்யா என்று அழுது கரைந்தாள்.

ஆனால் நான் நீ இல்லாத வாழ்ககை எனக்கு அது வேண்டாம் என்று தன் கண்களை துடைத்துக் கொண்டு நான் உன்னை விட்டு ஏன் இந்த உலகத்தை விட்டே சென்று விடுவேன். என்னோட மனதும் , மெய்யும் உனக்கு மட்டும் தான் உனக்கு இல்லாதது அது மண்ணுக்கு  தான் என் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் என் உடல் மண்ணுக்கு போய் விடும் என்று ஒரு தீர்மானத்துடன் இருந்தாள்.

அடுத்த நாள் விடிந்தது இன்று வரும் இரவு மிகவும் முக்கியமான இரவு மகிழினி,சூர்யா, spr, தேஜு, குரு , மாயா, என அனைவரும் ஒவ்வொரு மன நிலையுடன்  இந்த இரவை எதிர் நோக்கி நானும்…..

தொடரும்….

 Episode 90, 

சூர்யா ஒரு கருப்பு நிற கோட் ஷூட்டில் மிகவும் அழகாக தன்னை அலங்கரித்து கொண்டான் ஏன் என்றால் தன்னவள் தன்னில் பாதியானவளை காண செல்கிறான்.

மகிழினிக்காக நிறைய காதலும் நிறைய கோபமும் , வெறுப்பும் என அனைத்தும் கொண்டு செல்கிறான்.

ஜனனி சிவப்பு நிற புடவையில் சில அணிகலன்கள் குட்டி தேவதையாக சூர்யாவுக்கு இணை என்ற வார்த்தை என்னால் சொல்ல முடியவில்லை நன்றாக இருக்கிறாள்.

சரவணன் எப்போதும் போல் அதே மிடுக்குடன் கிளம்பினான். மூவரும் ஒன்றாக காரில் குரு பிரகாஷ் சொன்ன இடத்திற்கு மாலை 6.30 மனிக்கு கிளம்பினர்.

இங்கு மகிழினிக்கு சூர்யா வருகிறான் என்று தெரியாது எதோ ஒரு முக்கிய டின்னர் என்று மாயா சொல்லி கிளம்ப சொன்னாள்.

தேஜு மனதில் வேறு ஒரு திட்டத்தினை போட்டு இருந்தாள். அவளும் தன்னை அலங்கரித்து கொண்டு அந்த டின்னெருக்காக கிளம்பினாள்.

Spr கருநீல பிரண்டட் கோட் ஷூட் , மகிழினி இன்று ஊதா வண்ணம், சந்தன நிற உடையில் தேவதையாக தெரிந்தாள்.

Spr  அவனும் மகிழினிக்கு இணையாக தன்னை தயார் படுத்தி கொண்டு கிளம்பினான்.

அந்த அறை முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் மகிளினிக்கு பிடித்த ஊதா நிற மலர்கள் வேலைப்பாடுகள் என அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மகிழினி எப்பொதும் போல தாவணியில் அழகு பதுமையாகவே இருந்தாள் ஆனால் கண்களில் உயிர்ப்பு இல்லை. 

இதோ வந்து விட்டான் சூர்ய தேவ் ஜானுவின் கைகளை தன் கைகளொடு. கோர்த்து கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே பேசிக்கொண்டே மூவரும் வந்தனர்.

அவர்களை அங்கு இருந்த சோபாவில் அமருமாரு spr உதவியாளன் அர்ஜுன் அழைத்து வந்து அவர்களுக்கு குடிக்க கொடுத்து விட்டு அமர வைத்து விட்டு இன்னும் சிறிது நேரத்தில் சார் வந்து விடுவார் என சொல்லி விட்டு சென்றான்.

முதலில் குரு, தேஜு இருவரும் வர சூர்யா தேஜுவ தெரிந்தது போல் காட்டி கொள்ள வில்லை.

சரவணன் குரு கிட்ட அந்த புராஜக்ட் பற்றி ஒரு சில வார்த்தைகள் என பேசி தன்னை அறிமுகம் செய்து சூர்யாவை அறிமுகம் செய்தான்.

குரு – சூர்யா இருவரும் ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டனர்.

அடுத்து மாயா , வெங்கட் இருவரும் வந்தனர் மாயவுக்கு சூர்யாவை பார்த்ததும் மிகவும் சந்தோஷம் ஆனால் அருகில் ஜனனி இருப்பதை பார்த்து விட்டு அவளுக்கு கோபம் சட்டென்று வந்து விட்டது.

என் பெண் இருக்கும் இடத்தில் இவளை பிடித்து கொண்டு இருக்கிறான். அன்று என் மகியை பார்க்க வீடு எல்லாம் எகிறி குதித்து வந்தான். என் பெண்ணை மறந்து விட்டானா  எனக்கே பார்க்க கஷ்டமாக இருக்கிறதே மகிழனி  பார்த்தால் எப்படி வருந்துவாள்  என அவள் மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே spr, கையணப்பில் மருண்ட விழிகளில் மான் குட்டி போல் பயந்து கொண்டே வந்தாள் மகிளினி.

ஒரு அழுத்தமான காலடிகளுடன் spr உள்ளே நடந்து வர அனைவரும் திரும்பி பார்க்க சூர்யா மட்டும் பார்க்க வில்லை. ஜானு சூரியாவின் காதிர்க்கு அருகில் அத்தான் அக்கா என சொல்ல அப்பொழுதும் சூர்யா திரும்பி பார்க்காமல் அமர்ந்து இருந்தான்.

Spr வந்தவுடன் குரு அண்ணா! என்று அழைத்து மகிழினியிடம் சூர்யாவை கண்களால் காட்டினான். உடனே அவள் சூர்யாவை ஏக்க கண்களால் பார்க்க அவன் ஒரு பார்வை கூட இவளை பார்க்க வில்லை.

SPR இதை கவனிக்க வில்லை ஏன் என்றால் குரு சரவணனை அறிமுகம் செய்தான். Spr க்கு தெரியும் சூர்யா இங்கு தான் இருக்கிறான் என்று இப்போது சரவணன் சூர்யாவை spr கிட்ட அறிமுகம் செய்ய அந்த ஒரு நிமிடம்  இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று மோதியது.

சூர்யாவின் கைகள் இறுகிக் கொள்ள அதே போல் தான் sprயும் இப்பொழுது கர்வமாக spr பார்வை சூர்யாவை நோக்கி 

SPR: மனதில் 

 ஸ்லம் டாக், ராஸ்கல்” நேற்று உன்னோட பொண்டாட்டி ,இப்போ என்னோட பொம்மாயி அவ கூடிய சீக்கிரம் எனக்கு மனைவி ஆக போகிறாள்”…..

அதுவும் உன் கண் முன்னால் முழுதாக அவள் எனக்கு சொந்தமாக போகிறாள்….

சூர்ய தேவ்: மனதில்

நீ நினைப்பது எப்பொதும் நடக்காது ***, “அவ இப்போவும் அவ என் பொண்டாட்டி டா”,நீ பெரிய காஸ்டில்க்கு கிங் ஆக இருந்ததாலும், உன்னோட எண்ணம் ஸ்லம் டாக்  அதை விட மோசம் டா ….

என பார்வையில் தீ பொறி பறக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அந்த இடத்தின் சூழல் ஏதோ போல் இருக்க  சரவணன் சூர்யாவிடம் மீட் மிஸ்டர் சூரிய பிரகாஷ் spr கார்ப்பரேசன் சி. இ. ஒ என்று அறிமுகம் செய்தான்.

மிஸ் பண்ணிடேன் பட் இனிமே இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது என சூர்யா சொல்ல spr எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனை பார்க்க  ஆனால் அங்கு இருந்த அனைவரும் குழப்பம் கொண்டு சூர்யாவை பார்க்க   

ஐ மின் ,நேற்று நடக்க வேண்டியது எல்லாம் என்னால் தானே தாமதமானது…. என்று இவன் அனைத்தும் புதிராகவே முடிக்க இது மகிழினிக்கு புரிந்தது.

ஆனால் சூரியாவின் பார்வை தன்னை ஒரு முறை கூட தீண்ட வில்லையே ….என்று மனம் ரணமாக கொதித்தது.

இப்போது அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். மகிழினிக்கு அருகில் ஒரு புறம் SPR ஒரு புறம் மாயா spr ன் இன்னொரு புறம் தேஜு அமர்ந்து கொண்டாள். அடுத்து குரு , வெங்கட்

அதற்கு இவர்களை பார்க்குமாறு போடப்பட்ட சோபாவில் சரவணன், சூரியா, ஜனனி என அமர்ந்து கொண்டனர்.

இப்போது சரவணன் அந்த புதிய புராஜக்ட் பற்றி விளக்கம் கொடுக்க கூட சூர்யாவும் அதை பற்றிய முழு விவரமும் எந்த ஒரு திணறல் , நிறுத்துதல் இல்லாமல் கம்பீரமாக விளக்க, spr நாணும் உனக்கு சளைத்தவன் இல்லை என்பதை போல் சில கேள்விகள், சில பதில்கள் என அந்த அரை மணி நேரமும் மிகவும் குளிர் பிரதேசம் போல் நடுக்கமாக இருந்தது.

அடுத்து குரு அண்ணா போதும் டின்னர் சாப்பிடலாம் என்று கூற இல்ல மிஸ்டர் குரு நாங்க கிளம்புறோம்…

என்ன மிஸ்டர், நான் இதற்காக தான் உங்களை வர சொன்னேன், நீங்க இப்படி சொல்லிட்டீங்க. இனி தான் எல்லாம் ஆரம்பம் ஆக போகுது. ஐ மின் நம்ப பிஸ்னஸ் ,பிளீஸ் ஜாயின் அஸ்….

என்ன ஜானு உனக்கு ஓகே வா ….

ம்ம் ஓகே அத்தான்… என்று அவள் மெதுவாக சொல்ல குரு ஜானு வை பார்க்க சூர்யா ஜானுவின் தோள்களில் கை போட்டு கொண்டான்.

(அவளை பாதுகாக்கும் காவலனை போல)

குரு தன் பார்வையை மாற்றி கொண்டு அவர்களை சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்றான்.

மகிழினி மனம் சூர்யா ஜானுவின் தோளில் கைகள் போட அதை இயலாத கண்களோடு பார்த்து கொண்டு இருந்தாள்.

அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு வர சூர்யாவும், sprயும் ஒரே நேரத்தில் அமரும் இருக்கையை ஜனனி, மகிழினி இருவருக்கும் இழுத்து அமர வைத்தனர்.

ஜனனி இன்முகத்துடன் சூர்யாவை பார்த்து அமர சொல்ல இங்கு மகிழினி முகத்தில் எல்லாம் வடிந்தது போல் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.

கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க அப்படியே  ஒரு பார்வை சூர்யாவை யாரும் பார்க்காமல் இவள் ஒழிந்து ஒழிந்து தன் கண்களால் அவனை மனதில் நிறைத்து கொள்ள ஆரம்பித்தாள்.

அனைவருக்கும் பரிமாறபட்டது ஜானுவிற்கு சூர்யா அனைத்தும் பரிமாற அவள் சாப்பிட்டு கொண்டே சூர்யாவிடம்

அத்தான் ,அக்கா பாவம் இன்னும் கொஞ்சம் விட்டால் அழுது விடுவார்கள் ….

இது போதாது ஜானு இன்னும் அவளை நான் சும்மா விட மாட்டேன்…

குரு இப்பொழுது சூர்யாவிடம் நீங்கள் ரெண்டு பேரும்…. என நிறுத்த

 ம்மம் நீங்கள் சொல்றது சரி தான் கூடிய சீக்கிரத்தில் என்னோட மாமா பொண்ணுக்கு கல்யாணம் ஆக போகிறது நிச்சயம் முடிந்து விட்டது என சூர்யா சொல்ல 

இதை கேட்டு மகியின் மனம் மேலும் சுக்கு நூறாக உடைந்தது. அப்போ என்னை அவன் விரும்ப வில்லையா எல்லாம் பொய்யா இல்லை அந்த ஆதி அவன் அவனை தானே இவள் விரும்புகிறாள்.

இப்போது என் சூர்யாவுடன் ஒட்டி கொண்டு இருக்கிறாளே. என் சூர்யா என்று சொல்ல எனக்கு தான் உரிமை இல்லையே ஆனாலும் ஒரு நல்ல பெண்ணை சூர்யாவுக்காகவே இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும்.

ம்ம் சூப்பர் வாழ்த்துககள் மிஸ்டர் சூர்யா

நன்றி மிஸ்டர் குரு 

சேம் சிட்டுவேசன் 

என்னோட அத்தை பொண்ணுகும் எங்க அண்ணாவுக்கும் கூட இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நீங்க கண்டிப்பாக கல்யாணத்துக்கு உங்க பார்ட்னர் கூட வந்து விரடுங்கள்.

ம்ம் கொஞ்சம் கஷ்டம் மிஸ்டர் குரு நாங்க என்னோட கல்யாண வேலை இருக்கு அதுவும் பார்க்கணும் , சோ பார்க்கலாம்.

பின் ஜானு அவளது போனில் ஆதி மகியின் காலேஜ் புகைப்படங்கள் அனுப்ப அதை சூர்யா வாங்கி ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்.

ஜானு இதுல கியூட்

இல்ல அத்தான் இது பாருங்க அதை விட செம்ம

இது .. இது அதை விட சூப்பர் என  ஜானு காட்ட  

அதை விட இப்போ இருக்க Structure தான் என்னால கண்ணை எடுக்க முடியல என்று சூர்யா சொல்ல ஜனனி வெட்க முகம் கொள்ள இந்த வார்த்தைகள் கேட்ட மகி க்கு இங்கேயே செத்து விடலாம் போல் இருந்தது.

இதை கேட்டு spr மனதில் ஓ இவளை கல்யாணம் பண்ண போரயா உன்னோட முகத்துக்கு இவளே அதிகம் ஆனால் இவள் அந்த ஆதின்னு ஒருத்தன் கூட நிச்சயம் ஆச்சு அதுக்குள் என்னோட பொம்மாயி மனச மாற்றின மாதிரி இவளையும் வசியம் பண்ணி இப்போ இவ இவன் பின்னாடி சுத்துறா

எத்தனை பொண்ணுங்க டா உனக்கு சஞ்சனா, ராஜி, என்னோட பொம்மாயி, இப்போ இவ உன்னோட பயோ டேட்டா பார்த்தேன் டா ,இதே வேலை தான் உன்னை போய் அந்த வசந்தன் என்னோட பொம்மாயிக்கு கட்டி வச்சு இருக்கானே .எனக்கு என் பொம்மாயி தான் முக்கியம் அவ எனக்கு மட்டும் தான்.

தொடரும்….

Episode 91, 

SPR மகிழினிக்கு இப்பொழுது அவள் மிகவும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துண்டுகளை எடுத்து “பொம்மாயி இதை சாப்பிடு ” என கொடுக்க அவள் வேறு வழி இல்லாமல் அதனை எடுத்து வாயில் போட்ட சிறிது நேரத்தில் புரை எற மெதுவாக சாப்பிடணும் என்று கூறிக்கொண்டே அவள் தலையை வருடி விட சூர்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை அவன் கோபத்தில் எழ போக அத்தான் கன்ட்ரோல் யூர் செல்ஃப் என ஜானு அவன் காதுக்கு அருகில் கூறினாள்.

சூர்யா மனதில் என் பொண்டாட்டிய என் முன்னாடி பொம்மாயி ன்னு கொஞ்சுகிரான் எவ்ளோ திமிர் இவனை என்று இரத்தம் சூடானது.

அவள் அவளுக்கு எல்லாம் மறந்து விட்டது ஆனால் என் காதல் தன் சுயத்தை மறந்து என் மேல் காதல் கொண்டவள் அவனை எப்படி ஏற்றுகொள்ள மனசு வந்தது .

மகி இதுக்கு எல்லாம் உனக்கு இருக்கு டி மொத்தமாக உன்னை இவன் முன்பு தான் கவனிக்க போகிறேன். என சொல்லியவன் இப்பொழுது சாப்பிட ஆரம்பித்தான். 

சாப்பிட்ட பின் அனைவரும் கிளம்ப குரு spr கிட்ட அண்ணா, இவங்க நம்ப முக்கியமான கிளைன்ட் , அதனால் நீயே கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணு அண்ணா.

ம்ம் என்று அர்ஜுனை வர சொல்ல அவன் கைகளில் கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்து சூர்யாவிடம் நீட்ட அவன் நிச்சயம் வருகின்றேன் என சிரித்த முகத்துடன் கூற மகிழினிக்கு மயக்கம் ஒன்று தான் வர வில்லை.

அப்புறம் நீங்களும் எங்க வீட்டு கல்யாணத்துக்கு நிச்சயம் வரனும் சார் உங்க முன்னாடி தான் எங்க வீட்டு கல்யாணம் நடக்கும் சரி தானே ஜானு

ம்ம் ஆமா அத்தான். 

சரி நாங்கள் வருகிறோம் என்று சொன்னவன் வந்ததில் இருந்து இப்போது கூட ஒரு முறை ஏன் ஒரு நொடி கூட மகிழினியை பார்க்க வில்லை அவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க மயங்கி கீழே விழுந்தாள்.

அவளை கை தாங்களாக பிடித்த தேஜு குரு , spr இருவரையும் முறைத்து பார்த்து விட்டு அவளை அழைத்து கொண்டு அவள் அறைக்கு சென்றனர்.

இங்கு சரவணனை அவனது வீட்டுக்கு அருகில் இறக்கி விட்டு ஜனனி, சூர்யா இருவரும் தங்கள் வீடு நோக்கி காரை செலுத்தினர்.

ஜனனி சூர்யாவிடம் அத்தான் ….

ம்ம் சொல்லு டா…

உங்களுக்கு எல்லாம் நியாபாகம் வந்து விட்டதா

இல்ல ஜானு நான் பாஸ்ட் பற்றி யோசித்தாலே எனக்கு தலை ரொம்ப வலிக்குது மா .

ம்ம் சரி ஓகே  டென்ஷன் ஆகதீங்க 

அத்தான், அக்கா ரொம்ப பாவம் …

Spr அவளை அவளது அறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தான். மனது மிகவும் பாரமாக இருக்க அவள் முகத்தையே கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

அதற்குள் ஷீலா அங்கு வந்தவள் பதட்டம் கொண்டு அவளை பரிசோதித்து விட்டு அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க அது வியர்த்து இருக்க அவளது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது.

என்னாச்சு ….

சார் மகிகு இரத்த அழுத்தம் இந்த இரண்டு நாளும் ரொம்ப அதிகமாக இருக்கு.

அவங்க சரியாக எதுவும் சாப்பிடவில்லை; இப்போ கொஞ்ச நேரத்தில் கண் விழித்து விடுவார்கள். இப்போது கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.

Spr மனம் கனமாக இருந்தது. அவன் அவள் தலையை வருடி விட்டு சென்றான்.

வெளியே வந்த sp யிடம் தேஜு இப்போ உனக்கு சந்தோஷமா…. அவன் அதே இடத்தில் நின்று அவளை பார்த்தான். 

அவள் உன்னோடு வாழ்ந்தால் சீக்கிரம் செத்து விடுவாள். என்று அவள் சொல்ல அவன் இரண்டு எட்டில் அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்.

அவள் கண்களில் கண்ணீர் வர அவளை விட்டவன் திரும்பும் நேரம் தேஜு அவன் கைகள் பிடித்து sp யை பின்னால் இருந்து அணைத்து “ஐ லவ் யூ சூர்ய பிரகாஷ் ” என்று சொல்ல உடனே அவன் அவளை வேகமாக விலக்கி விட 

ஹே தள்ளி போ…. எனக்கு தெரியும் டி ஆனால் நான் தான் தவறாக நினைத்து விட்டேன் என்று நினைத்தேன்; இத்தனை நாள் உன்னோட பார்வையே சரி இல்லை .

எவ்ளோ திமிர் டி உனக்கு என் மனதில் எப்போதும் என் பொம்மாயிக்கு மட்டும் தான் இடம்

 அப்போ நிதின் என்னோட வயிற்றில் இருக்கும் போது என்னை நீ எப்படி பார்த்து கொண்டாய் அது பொய்யா!….

அது என்னோட  மகிக்கும் எனக்கும்  பிறக்க போகும் குழந்தை உன் வயிற்றில்  அந்த ரீசன் மட்டும் தான் வேற ஒன்னும் இல்லை….

நீ ஒரு வாடகை தாய் அவ்ளோ தான்… உன்னோட முழு சம்மதத்தோடு தானே ஒத்துகொண்டாய்.

அது அவளுக்கும் தெரியும் ஆனால் spr அவளுக்கு வேண்டும்.

அவ கிட்ட அப்படி என்ன தான் இருக்கு, நீ ஸ்லேவ் மாறி பிஹவ் பண்ற

நான் அவளை விட அழகு, அவளை விட எல்லா வற்றிலும் சிறந்தவள். நீ ஏன் அவ பின்னாடி போற சூர்யா (sp).

நீ அவள் இல்லையே ….

எனக்கு மகி வேண்டும்….

இன்னொரு விஷயம் இப்போ நான் உன்னை விட்டு செல்ல இரண்டே காரணம் தான். 

நிதின் அண்ட் மகி 

பொம்மாயி இப்போ என்கூட இருக்க நீ தான் காரணம் எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆன உடன் நீ இங்கு இருந்து சென்று விட வேண்டும்.

என்று கூறி அவன் ஒரு இரண்டு அடிகள் செல்ல 

நானும் உன் கிட்ட ஒன்னு சொல்லணும். இப்போது sp நின்றான். நீ சொல்வது போல் நான் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆன உடன் சென்று விடுகிறேன். ஆனால் ஒரு வேளை கல்யாணம் நடக்க வில்லை என்றால் நிச்சயம் நடக்கும் என்று sp சொல்ல 

நடக்க வில்லை என்றால்?

நடக்கும் !

 நீ சொல்வது நடக்காது என்று அவன் சினம் கொண்டு கூறினான்.

சரி ஒரு வேளை நடக்காமல் போனால்

நீயே சொல்லு…

நீ அப்போதே என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் குழல் கூந்தலை முன்னால் போட்டு கொண்டு அவன் முன்னால் ஒரு பெண் புலியை போல் நடந்து வந்தாள்.

Sp எதுவும் பேசாமல் அப்படியே நிற்க அவனை பார்த்து சிரித்தவாரே 

என்னாச்சு  தி கிரேட் சூரிய பிரகாஷ் ரெட்டி  ம்ம்….

என்ன பயமா இருக்கா… 

அப்போ ஓகே நீ இப்போவே தோல்விய ஒத்து கொள் கேவலமாக சூர்யாவிடம் தோர்த்து விட்டாய் என்று அவள் சிரிக்க

சரி  எனக்கு இதில் சம்மதம் ….

தேஜு ஆல் தி பெஸ்ட் spr என்று சொல்லி அவள் நகர 

ஒரு நிமிடம் …

ம்ம் .

Sp அர்ஜுனை அழைத்து அவளுக்கு பிரத்யேகமாக பெண் கண்காணிப்பாளர் நால்வரை நியமித்தான்.

இவள் என்ன செய்கிறாள் என்று ஒவ்வொரு நிமிடமும் கண்காணியுங்கள் என்று சொல்லி அவள் ஃபோன் வாங்கி கொண்டான். அவளை வீட்டு காவலில் வைத்தான். 

இப்போது அவளை பார்த்து நான் பொம்மாய கல்யாணம் பண்ண உடன் உன்னை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவேன் டி என்று சொல்லி விட்டு சென்றான்.

தேஜு இப்போது ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவள் நிதினை காண சென்றாள். நீ எப்போதும் என் மகன் தான் ஒரு வேளை மகி உன் அப்பாவை திருமணம் செய்து கொண்டால் நான் உன்னை கூட்டி கொண்டு கண் காணாத இடத்திற்கு சென்று விடுவேன் என்று தன் மகனை கட்டி அணைத்தாள்.

இங்கு சூர்யாவிடம் ஜானு அத்தான் இப்போ அக்கா என்ன செய்வார்கள் நீங்கள் அவங்க மனசு கஷ்ட படும் படி பேசி விட்டீர்கள். என புலம்பி கொண்டே வர 

ஜானு பிளீஸ் கொஞ்சம் கூல் ஆகு 

என்னோட கெஸ் சரியாக இருந்தால் இப்போ அவ எனக்கு ஃபோன் பண்ணுவா என்று சூர்யா சொல்லி வாய் மூட வில்லை மகிழினி அழைத்தாள்.

அத்தான் நீங்க வேற லெவல் … அக்கா கிட்ட கோவமா பேசாதீங்க நான் வெளியே வெயிட் பண்றேன் என அவள் செல்ல சூர்யா காரை நிறுத்தினான்.

ஜானு வெளியே சென்றதும் சூர்யா சிரித்து கொண்டே ஃபோன் எடுத்து காதில் வைத்தான்.

ஹலோ யாரு நீங்க?

சிறு அமைதிக்கு பின்  ஹலோ எனக்கு டைம் இல்ல சரி நான் வைக்கிறேன். 

ஜானு யாரோ தவறான எண்.. என்று அவன் வேண்டும் என்றே கூற 

சூர்யா… என்று அந்த கவலை நிறைந்த  குரல் 

ம்ம் நான் சூர்யா தான் நீங்க யாரு என வேண்டும் என்றே பேசினான்.

நான் மகி பேசறேன் அதுக்குள்ள என்னை நீ மறந்து விட்டாயா.. 

மகியா எந்த மகி ?

மறுமுனை அமைதியாக இருக்க 

ஓ நியாபகம் வந்து விட்டது நீங்கள் மகிஷவர்ததினி spr future வைஃப் வருங்கால மனைவி தானே 

சாரி மேடம் சொல்லுங்க 

சார் எதுவும் சொன்னாரா 

ஆமா நீங்க எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி இருக்கீங்க

சூர்யா பிளீஸ் என்னை இப்படி பேசி கொள்ளாத பிளீஸ் 

பின்ன எப்படி பேச சொல்றீங்க மேடம் !

நீ ஜானு வை கல்யாணம் பண்ணிக்க போறியா !

ம்ம் ஆமா! 

ஜானு ஆதிண்ணு ஒருத்தர விரும்புகிறாள் எப்படி உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டாள்.

அதை பற்றி உங்களுக்கு என்ன மேடம். அவ கிட்ட வீட்டில் கேட்டாங்க நான் வேணுமா ஆதி வேணுமா அப்டின்னு அவ நான் தான் வேணும் அப்டின்னு அவனை தூக்கி எரிந்து விட்டு என் கூட வந்து விட்டாள்.

இது உங்களுக்கு புதுசா இருக்காது அப்படி தானே மேடம் .

சூரியா பிளீஸ் என்னை நீ கொல்லாத உன் வார்தை என்னை வெட்டுவது போல் இருக்கு 

என்னடி சீன் போடுறயா….

உன் நடிப்ப நிறுத்திக்கோ

என் ஜானு ஒன்னும் உன் புத்தி கிடையாது உடனே விரும்பியவனை தூக்கி போட ஆதிக்கும் ஜானுவுக்கும் தான் கல்யாணம் நான் பேசியதை நீ தெளிவா கேட்க வில்லை.

இன்னொரு முறை சொல்றேன் கேட்டுக்கோ 

எங்க மாமா பொண்ணுக்கு கல்யாணம் அப்டின்னு தான் சொன்னேன்.

இப்போது மகிழினி சந்தோஷமாக அப்போ நீ ஜானுவ கல்யாணம் பண்ணல தானே

ஒரு நிமிடம் நீ ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் ஜானுவுக்கும்,  எனக்கும் கல்யாணம் ஒரே மேடையில் தான் ஜனனி ஆதி, சூர்ய தேவ், அமுத சுரபி என்னோட வருங்கால மனைவி பெயர் அமுத சுரபி இப்போ புரியுதா.

அமுத சுரபியா! ….

அப்போ நீ என்னை விரும்ப வில்லையா? ….

எல்லாமே பொய்யா!

அத நான் உன்கிட்ட திருப்பி கேட்கிறேன் நீ பதில் சொல்லு டி????

தொடரும்…..

Episode 92,

சூர்யா மகிளினியிடம் எனக்கும் ஜனனிக்கும் கல்யாணம் இல்லை என்று சொன்னதை கேட்டு மகிளினி சந்தோஷம் கொள்ள 

ஹே ஓவரா சந்தோஷ படாத …இப்போ நீ இதுல சந்தோஷபடுகிற அளவுக்கு ஒன்னும் இல்லை….

ஏன் சூர்யா இப்படி கஷ்ட படுத்துறமாதிரி பேசுற….

பின்ன உன்கிட்ட எப்படி பேச சொல்ற .. சரி அதை விடு இப்போ என்ன கேட்ட 

ஆதிக்கும் ஜனனிக்கும், அப்புறம் எனக்கும் …. என்று நிறுத்திய சூர்யா மகி சண்டக்கோழி பிளீஸ் சாரி டி உன்னை என்னால இப்படி பேச ரொம்ப கஷ்டமா இருக்கு என்று நினைத்தவன்.

ம்ம் சொல்லு சூர்யா…

உனக்கும்….

எனக்கும் அமுத சுரபிக்கும் கல்யாணம்!

அமுத சுரபியா!  யார் அது ? 

ஏன் உனக்கு அத்தை பையன் இருக்கும்போது எனக்கு அத்தை பொன்னு இருக்காதா என்ன…. என்று ஏளன புன்னகை சிந்தினான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருந்தாள்.

ம்ம் பதில் சொல்லுங்க மேடம்…

அப்போ… அப்போ… நீ என்னை விரும்பியது எல்லாம் பொய்யா சூரியா!

முதலில் அதை நீ சொல்லு டி ….

உன்னோட மாமா பேரு சூர்யா அதனால் தானே நீ என்னை விரும்பியது போல் பார்த்து இருக்கிறாய்

சொல்லு டி….

அப்படி எல்லாம் இல்ல சூர்யா 

நான் என்ன சொல்லணும்?

நீ என்னை விரும்பியது பொய்யா என்னை ஏமாற்ற தான் என்னை காதலிப்பது போல் நடிச்சயா…..

ம்ம் சொல்லு டி ….

சூர்யா நீ என்கிட்ட முதன் முதலில் பேசும்போதே நான் சொன்னேன் தான 

என்ன சொன்ன ?

அது தான் எனக்கு நிச்சயம் ஆகிடுச்சு….

ம்ம் சொன்ன தான் …

சரி அப்போவே நான் உன்னை டைம் பாசுக்கு தான் உன் கூட சுத்துறேன் அப்படின்னு சொல்லி இருக்கலாமே என்று சூர்யா கேட்க 

நானா…. நானா….

ம்ம் நீ தான்…

இதற்கும் மேல் இவனிடம் பேசி பயனில்லை என்று நினைத்தவள்.

ம்ம் நீ சொல்றது சரி தான் சூரியா நீ உன் அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு என்று கூறி போன் வைத்து விட்டாள்.

இந்த வார்த்தைகளை கேட்டு சூர்யாவுக்கு மனது ரணமாக கொதித்தது. எவ்ளோ தைரியம் டி உனக்கு வேற ஒருத்திக்கு என்னை விட்டு கொடுக்கணும் அப்படின்னு நினைக்கிற என்னை சந்தோஷமா இரு அப்படின்னு வேற சொல்ற உன்னை நான் என்ன செய்யட்டும்.

என்று தன் தலையை கோதியவன் தன் உதடுகளை அழுத்தி கடித்து கொண்டு கோவத்தை கட்டுபடுத்த முயற்சி செய்து தோர்த்து போனான்.

ஒரு வார்த்தை ஒரே வார்த்தை சூர்யா என்னை வந்து கூட்டி கிட்டு போ அப்படின்னு உன்னால சொல்ல முடியல ம்ம் 

என்னால உன்னை விட்டு இருக்க முடியாது அப்படின்னு உனக்கு சொல்ல முடியல சாதாரணமா வேற ஒருத்திக்கு தூக்கி கொடுக்கற 

உன்னை என் மனசுல ஏற்றி கொண்டு என்னால எதுவும் செய்ய முடியல டி என்னை நீ சாவடிக்கிற டி 

உன்னை இப்படியே விட்டால் நீ எதாவது செய்ய கூட வாய்ப்பு இருக்கு சீக்கிரம் உன்னை தூக்குறேன் டி என சொல்லிக்கொண்டான்.

இங்கு போன் வைத்த மகிளினி  படுக்கையில் படித்தவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. 

ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை மகி என் கூட வந்திடு அப்படின்னு ஏன் சூரியா நீ சொல்லல….

ஒரே ஒரு வார்த்தை நீ எனக்கு வேணும் அப்படின்னு சொல்லி இருந்தால் கூட நான் உன் கூட வந்திருப்பேன் டா.

நான் உனக்கு வேண்டாமா சூர்யா என நினைத்து அழுது கரைந்தாள்.

நான் இருக்க வேண்டிய இடத்தில் நீ வேறு ஒரு பெண்ணை வைத்து பார்க்க உனக்கு எப்படி மனசு வந்தது.

நீ என்னோடவனாக இருக்கும் போதே நான் உன்னோடவளாக இந்த மண்ணை விட்டு என் உயிர் பிரிய வேண்டும் சூர்யா நீ உன் அத்தை பெண்ணுடன் சந்தோஷ ….

அதற்கும் மேல் பேச முடியாமல் இதயத்தை பிடித்து கொண்டு அழுதாள். மேலே fan சுற்றி கொண்டு இருப்பதை பார்த்தவள் ஒரு முடிவுடன் தன்னை மாய்த்து கொள்ள முடிவெடுத்து ஒரு தாவணியை எடுத்து fan நிறுத்தி விட்டு அந்த தாவணியை அதில் போட்டு முடிச்சிட்டு சூர்யா நான் எப்போதும் உன்னோடவளாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி அடுத்த கட்டத்திற்கு செல்ல

சரியாக அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க இவள் யார் அது என்பது போல் பித்து பிடித்தவளாக அப்படியே கதவினை திறக்க மாயா கைகளில் பூஸ்ட் ஒரு டம்லர் , பால் இன்னொரு டம்ளர் என வைத்து கொண்டு நின்றிருந்தாள்.

மகி என்னடா உன் முகமே சரி இல்ல என்னாச்சு என் பொண்ணுக்கு என்று கூறிக்கொண்டே அவள் உள்ளே வர மகி இப்போது அவளை எது எதோ சொல்லி அப்படியே திருப்பி அனுப்பும் எண்ணத்தில் படபடப்பில் பேசிக்கொண்டு இருக்க.

மாயாவுக்கு அவளிடம் எதோ தவறு இருக்கிறது என்று நினைத்தவள் . மகி என்று அவளை அதட்டி கொண்டே உள்ளே செல்ல பார்த்து விட்டாள். அவளின் வேலையை  வேக வேகமாக மகிழினியை உள்ளே இழுத்து  கதவினை சாத்தியவள்.

மகிழினி கண்ணத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள். அம்மா… என்று கண்களில் கண்ணீருடன்  அவளை அணைக்க போக  என் பொன்னு இல்ல நீ என் பக்கத்தில் வராதே….

அம்மா பிளீஸ் மா …. என்று அவள் அழ அதை தாங்கி கொள்ள முடியாமல் ஏன் டி இப்படி பண்ணுன இப்போ ஒரு நிமிடம் நான் கொஞ்சம் தாமதமாக வந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்.

அம்மா பிளீஸ் மா நான் எதோ தெரியாமல் செய்து விட்டேன் பிளீஸ் மா என்று மாயாவை அநணைத்துக் கொண்டு  அப்படியே மயங்கினாள்.

மாயா அவளிடம் அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்து பதறி அவளை கை தாங்கலாக  படுக்கையில் படுக்க வைத்து அவள் கையில் நாடி பிடித்து பார்த்தவள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்தாள்.

மீண்டும் ஒரு நிமிடம் பிடித்து பார்த்து உறுதி செய்து கொண்டவள் சந்தோஷத்தில்  மாயாவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

இது உண்மை தானே உண்மை தான் மகி மாதமாக இருக்கிறாள் நிச்சயம் இது சூர்யதேவ் வாரிசாக தான் இருக்க வேண்டும். 

அப்படியென்றால் தேஜு, ஷீலா இருவரும் இதை மறைத்து இருக்கின்றனர். நல்ல வேளை இல்லையென்றால் இந்த குரு இந்த குழந்தையை அழித்து இருப்பான்.

எப்படியோ இந்த குழந்தையே மகிய சூரியதேவ் கூட சேர்த்து வைத்து விடும் முதலில் இந்த பெண்ணுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்று மாயா நினைத்து கொண்டாள்.

இருந்தாலும் நாளைக்கு ஒரு முறை யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிடல் கூட்டி சென்று பரிசோதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

மகி …. மகி….

எழு மா … மாசமாக இருக்கும் பெண்ணை நான் அடித்து விட்டேன் அய்யோ  என்னை மன்னித்து விடுங்கள் கடவுளே என வேண்டிக் கொண்டாள்.

மகி என்று அருகில் உள்ள தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளிக்க அவள் மெதுவாக கண் திறந்தாள்.

அம்மா என்று மீண்டும் அழ போனவள மாயா கட்டி அணைத்து முகமெல்லாம் முத்தமிட்டாள்.

அம்மா என்னாச்சு ….

ஒன்னும் இல்ல என்னோட செல்லம் …. என்னோட தேவதை டா நீ …. உனக்கு அம்மா நான் இருக்கிறேன் நீ எதுவாக இருந்தாலும் என் கிட்ட சொல்லு உன்னோட கண்ணை பார்த்தே நீ மனதில் என்ன நினைக்கிறாய் அப்படின்னு என்னால கண்டு பிடிக்க முடியும்.

அம்மா ஒன்னும் இல்ல மா 

மகி பொய் சொல்லாதே, உங்கிட்ட குரு எதுவும் சொன்னானா….

மகிழினி அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமாக பார்க்க உன் மனசுல யார் இருக்காங்க அப்படின்னு எனக்கு நல்லா தெரியும் அதுக்காக நீ ஒன்னும் கவலை பட வேண்டாம் ஏன்னா நானே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவ…..

நீ என்னோட பொன்னு உன்னோட போல்ட்னஸ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இல்ல மா சூர்யா வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க போறான் மா நான் என்ன செய்யட்டும் என்னால எதுவும் செய்ய முடியாது நான் ஒரு கோழை மா….

மாயா அவளை பார்த்து சிரித்தவள். உன்னை விட்டு எப்பவும் சூர்யா வேறு பொண்ணை அப்டின்ற வார்த்தைய நினைத்து கூட பார்க்க மாட்டான். 

அப்புறம் அப்புறம் ஏன் மா இன்னிக்கு என்னை ஒரு தடவை கூட பார்க்கவே இல்லை என அவள் அழ ஆரம்பிக்க

அடி மக்கு நீ spr கூட அமர்ந்து இருந்த தானே அந்த பொறாமை 

அப்போ எனக்கும் மாவையா க்கும் கல்யாணம் அது எப்படி நிறுத்துவது அதை நீ கவலை பட தேவை இல்லை மகி சூர்யா வருவான் .

நிஜமாவா மா 

சத்தியமா உன்னை வெறுப்பேர்ற அவன் எதுவும் செய்து கொண்டே இருப்பான் அதுக்கு நீ சோர்ந்து போக கூடாது..

நீயா இது அப்படின்னு சூர்யதேவ் ஒரு நிமிடம் டென்ஷன் ஆகனும் இனி தான் நீ போல்டா இருக்கணும்

ம்ம் சரி மா …. 

அப்புறம் இன்னொரு விஷயம் இனி எப்பவும் இந்த வேலை செய்யவே கூடாது வாழக்கை தோல்வி தான் நம்மை பார்த்து பயந்து ஓடனும் ஆனால் ஒரு நாளும் நம்ப இதை எப்பொதும் நினைக்க கூடாது.

உன்னை சூர்யதேவ் கூட சேர்த்து வைப்பது என்னோட பொறுப்பு இனி நீ சந்தோஷமா இருக்கணும் புரியுதா….

அம்மா எப்படி உங்களுக்கு தெரியும்.. மாயா அவள் காதை வலிக்காமல் மெதுவாக திருகி விட்டு அன்னிக்கு சூர்யா வீட்டுக்குள்ள வந்த போதே நான் பார்த்து விட்டேன். 

அம்மா சாரி மா என இப்போது தெளிவான முகத்துடன் மகிழினி தன் காதுகளை பிடித்து கொண்டு மன்னிப்பு கேட்க 

ம்ம் என்று சிரித்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள்.

அம்மா ….

ம்ம் சொல்லு மகி ….

இன்னிக்கு என் கூட தூங்கரீங்களா….

இதை கேட்டு மாயா அவளை அனைத்து கொண்டு ம் நான் என் செல்ல பொன்னு கூட நம்ப ரெண்டு பேரும் தூங்க போறோம் என சொல்ல மகி அந்த இரண்டு கிளாஸ் முழுவதுமாக காலி செய்து விட்டு மாயாவை கட்டி அணைத்து நிம்மதியாக உறங்கினாள்.

தொடரும்…..

 Episode 93, 

வீட்டுக்கு வந்த சூர்யாவுக்கு மகிழினியின் நினைவுகள் மட்டுமே இருந்தது. அந்த spr இன் கைகளை பயந்து கொண்டே ஒரு மான் குட்டி போல் பிடித்து கொண்டு வந்தவளை அப்படியே கூட்டி கொண்டு வந்து விட வேண்டும் என்று மனம் ஓலமிட்டது.

ஆனால் அந்த சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் தவித்தான்.

சூர்யாவுக்கு தெரியும் அவனை அந்த இடத்தில் ஜானுவுடன் எப்போது பார்த்தாளோ  அவள் அதரங்கள் மௌன மொழியை தத்தெடுத்து கொள்ள கண்களோ ஆயிரம் ஏக்கங்கள், தவிப்புகள், சோகங்கள்  என வெளிப்படுத்தியது.

சூரியாவின் கண்கள் தான் அவளை தீண்ட வில்லை ஆனால் சூரியாவின் மொத்த ஆன்மாவும் அவளை சுற்றி தான் இருக்கிறது.

நான் உன் பக்கத்தில் இருந்து உனக்கு பரிமாறுவதை அந்த ராஸ்கல் செய்து கொண்டு இருக்கிறான்.  என்ன செய்ய எல்லாம் உன்னால டி …. இல்ல இதுக்கு நானும் தான் காரணம்….  

வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஏனோ சூரியாவின் மனது சரி இல்லை. என்னமோ தவறாக நடக்க போவதாக தோன்ற உடனே ஒருவருக்கு போன் செய்தான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவும் உடனே சிஸ்டர் அவ எப்படி இருக்கா…. ஓகே  எந்த பிராப்ளமும் இல்லை…. இனி எதுவாக இருந்தாலும் பிளீஸ் மெசேஜ் பண்ணுங்க கால் பண்ண வேணாம்…. சாரி சிஸ் ஒரு நிமிடம் பிளீஸ் …. சொல்லுங்க …. அவளை தனியாக விட வேணாம் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு…. மறுமுனையில் ஒரு சின்ன சிரிப்பு நீங்க கவலை பட வேண்டாம் அவ கூட மாயா மேடம் இருக்காங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தூங்குகிறார்கள். ம்ம் ஓகே சிஸ்டர் எதாவது பிராப்ளம் அவளுக்கு அப்படின்னா எப்போ வேணும்நாளும் போன் பண்ணுங்க… ம்ம் ஓகே என்று சொல்லவும் வைத்து விட்டான்.

மறுமுனையில் பேசியது யார் ??? கமென்ட் பண்ணுங்க 

அதே நேரம் இங்கு spr க்கும் அவளை பார்க்க வேண்டும் என்று தோன்ற அவன் அவள் அறைக்கு செல்ல அப்போது தான் அங்கு இருந்த பணியாள் spr கிட்ட மேடம் மாயா அம்மா கூட தூங்குகிறார்கள் என்று கூறவும் இப்போது நிம்மதியாக சென்றான்.

அவள் மயங்கி விழுந்தது முதல் spr நினைவு முழுவதும் மகிழினி தான் இருந்தாள்.

இங்கு மாயா அவளின் முகத்தை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மகி நீ எனக்கு மகளா பிறந்து  இருந்தால் நான் உன்னை எப்படி பார்த்து இருப்பேன் தெரியுமா.

உனக்கு ஒரு வேளை பழைய நியாபகம் வந்தால் என் கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதே மகி என்னால் தாங்க முடியாது. Sp இவளோ செய்ததை நான் பார்த்துக் கொண்டு இருந்தது என்னோட தப்பு தான் ஆனால் உன்னை நான் அப்படியே விட மாட்டேன்.

எனக்கு என் அண்ணா பசங்கள விட இப்போ நீ தான் முக்கியம் என்று கண்ணீர் சிந்தியவள்.என்னோட செல்லம் வயிற்றில்  குட்டி மகி எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா  என்ன என்னால் உன்னோட வாரிசை பெற்று எடுக்கும் போது  இருக்க முடியுமா எனக்கு அந்த பாக்கியம் இருக்காது என்று வருத்தப்பட்டாள்.

ஆனால் அதற்கு காலம் நிச்சயம் மாயாவின் ஆசையை நிறைவேற்றும். 

அடுத்த நாள் மகிழினி பழைய குறும்பு துருதுருவென  தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தாள். 

மாயா சொன்னது போல் சூர்யா நம்மை தேடி வர வேண்டும் அதனால் நீ கவலை பட கூடாது என காலை உணவை முடித்து விட்டு தெளிவான மனநிலையில் மகி அவள் அறைக்கு செல்ல அப்போது அவளுக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருக்க மயங்கி விழும் நேரம் மாயா வந்து அவளை தாங்கி கொண்டு அவள் அறைக்கு செல்ல உடனே சிறிது நேரத்தில் வாந்தி வரவும் போய் எடுத்து விட்டு உடனே சோர்ந்து விட்டாள். 

என்னாச்சு மகி …

ஒன்னும் இல்ல மா கொஞ்ச நாளாக எது சாப்பிட்டாலும் இப்படி தான் ஆகுது என்னோட வாய்க்கு எந்த சாப்பாடும் பிடிக்க மாட்டிங்குது… சரி வா அம்மாவுக்கு கொஞ்சம் 6 மந்த் ஒன்ஸ் செக் பண்ண போகனும் நீயும் வா நம்ப போகலாம்…. ம்ம் சரி மா … 

கீழ வந்தவள் அங்கு spr ஐ கண்டதும் எந்த சலனமும் இல்லாமல் எப்பொதும் போல் பேசினாள். பின் மாயா அவனிடம் சொல்லி விட்டு மகியை கூட அழைத்து செல்வதாக கூற மகியின் இந்த புத்துணர்வான முகத்தைப் பார்த்து மம்ம் பத்திரம் அத்தை …. 

நான் அம்மாவை பார்த்து கொள்கிறேன் மாவய்யா…. 

Spr கண்ணகுலி தெரிய சிரிக்க உடனே இப்போ தான் உங்க முகம் பார்க்க நல்லா இருக்கு…. என்று கூறி இவள் ஒரு நான்கு அடி செல்ல 

பொம்மாயி… 

இவள் என்ன என்பதை திரும்பி சொல்லுங்க மாமா….

நீ எப்போதும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் அது தான் எனக்கு ரொம்ப முக்கியம் என சொல்ல 

ம்ம் ஓகே டன் என்று ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு தன் அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு சென்றாள்.

இங்கு இன்பாவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது சூர்யாவுக்கு உண்மை தெரிந்தது மற்றும் மகி சூர்யா காதல் இதை எல்லாம் கேட்டு ம்மம் நல்ல முன்னேற்றம் என்னோட சூர்யா கம் பக் கொடுக்க போறான் அவன் காதலியை அவன் பார்த்து கொள்வான்.

நான் இந்த குரு தொடர்பான ஆதாரம் மட்டும் தயார் செய்ய வேணும் என்று அந்த வேளையில் மிகவும் பரபரப்பாக இருந்தான்.

மகிளினியை நீலா மருத்துவமனைக்கு கூட்டி செல்லாமல் மாயா அவள் தோழியின் வீட்டுக்கு அழைத்து சென்று செக் செய்து பார்த்து விட்டு வெளிய வந்த மாயாவின் தோழி

ம்ம் கங்கிரட்ஸ் மாயா உன் பொன்னு இப்போ மாசமா இருக்கா  முதல் மூன்று மாத கரு இப்போ தான் சிம்டம் ஆரம்பிக்கும் என சொல்ல மாயாவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

ரொம்ப தேங்க்ஸ் டி இது யாருக்கும் தெரிய வேணாம் …

ம்ம் சரி டி ஆனால் அவள ரொம்ப மன அழுத்தம் வராத மாறி  பார்த்துக்கோ இதய துடிப்பு குழந்தைக்கு ஓகே ஆனால் உன் பொண்ணுக்கு கொஞ்சம் அதிகமா துடிக்க கூடாது. 

ம்ம் சரி நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்லி அவர்கள் கிளம்பினர்.

மகிழினி மாயாவிடம் அம்மா அவங்க என்ன சொன்னாங்க…. எல்லாம் நல்லா இருக்கு அப்படின்னு சொன்னாங்க…. 

மா எனக்கு ரொம்பவும் பசிக்குது எதுவும்  சாப்பிடலாமா….

அவ்ளோ தான ஓகே உனக்கு என்ன வேனும் என்று பேசிக்கொண்டே சில பாதுகாவலர்களுடன் ஒரு ஹோட்டல் உள்ளே சென்றனர். 

மாயா அவளுக்கு தேவையான உணவை ஆடர் செய்ய மகிழினி அவளுக்கு விருப்பமான உணவுகளை ஆடர் செய்து இப்போது மனமும் வயரும் நிறைய திருப்தியாக சாப்பிட்டாள்.

மாயாவுக்கு வருண் ( மாயா -வெங்கட் மகன்) பாரின்ல இருந்து கால் செய்ய  அவள் ஃபோன் பேசிக்கொண்டே மெதுவாக உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருக்க

மகி சாப்பிட்டு முடித்து கைகளை கழுவ வாஷ் ரூம் சென்றாள். அப்போது தான் ஒரு முக்கிய புராஜக்ட் மீட்டிங் முடித்து மதிய உணவை மகி சாப்பிடும் அதே ஹோட்டலில் சூர்யா தன் கிளைன்ட் கூட சாபிட்டவன். 

வாஷ் ரூம் சென்று வெளியே கைகள் கழுவ வரும் நேரம் மகிழினி உள்ளே சென்றாள். இது தற்செயல் தான் பா…. 

இவள் கைகளை கழுவி விட்டு திரும்பும் நேரம் சூர்யா ஒரு ஓரமாக கைகளை கட்டி கொண்டு இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் சூர்யாவை பார்த்ததும் ரெக்கை கட்டி பறந்த மனத வலுக்கட்டாயமாக மீண்டும் எடுத்து ரெக்கயை மடிதது  விட்டாள். 

அவனை ஒரு பார்வை அதுவும் எளன பார்வை பார்த்து விட்டு அவனை கடந்து செல்லும் நேரம் ஹலோ கல்யாண பொன்னு எப்டி இருக்கீங்க… அவள் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தை கோவமாக வைத்து கொண்டு அந்த கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க  

சூரியா அவள் கைகளை பிடித்து அவன் புறம் இழுக்க மகிழினி சூர்யாவை பார்த்து ஒரு முறை முறைத்தாள். அவனையும் கைகளையும் மாறி மாறி பார்த்து முறைத்து கொண்டே அவள் எதோ சொல்ல வர 

ஹே என்னடி முறைக்கிற….

வசியக்காரி , நடிப்பு கள்ளி  யூ ராஸ்கல்… என் கையை விடு…. யாரு டா நீ… என் கைய பிடிக்க… என்று மகிழினி சொல்லவும் சூர்யாவுக்கு ஒரு நிமிடம் நேற்று பார்த்தவளா… இவள் இப்படி மாறி விட்டாளே !அதற்குள் என்னாச்சு …

ஹலோ மிஸ்டர் என் கைய விடுரீங்களா…

உடனே கையை விட்டவன் அவள் திரும்பி சிரித்து கொண்டே செல்ல 

மறுபடியும் சூர்யா மனதில் நீ எதுக்கு டா அவ கைய விட்ட அவ உன் பொண்டாட்டி சத்ய தேவ்ன்னு உனக்கு பையன் இருக்கான் நீ போய் அவ கைய பிடி டா முடிஞ்சா இப்போவ அவளை வீட்டுக்கு தூக்கிட்டு போக கூட உனக்கு உரிமை இருக்கு என சொல்ல

இப்போது சூர்யா அவளுக்கு முன்னால் போய் நின்றவன் ஹே இப்போ என்னடி சொன்ன….

அவள் அவனை போலவே பார்த்து ராஸ்கல் மறுபடியும் சொல்லட்டுமா உன்னோட வேலை அப்படி தானே இருக்கு 

நகரு நான் போகனும்….

ம்ம் ஆமா நான் ராஸ்கல் தான் டி அப்போ இந்த ராஸ்கல் என்ன பண்ணுவான் அப்படின்னு தெரிஞ்சு கிட்டு போடி என்று சூர்யா அவளை இழுத்து சுவற்றில் சாய்த்ததும் மகிழினி ஹே என்னை விடு டா அய்யோ யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ஹே விடு டா என்று கோபம் கக்கும் விழிகளில் சூர்யாவை பார்த்தாள்.

ஹே இப்போ எதுக்கு டி கத்துற என்று அவள் வாயில் கைகளை வைக்க ஒரு விரலை அவள் கடித்து வைக்க 

கோபம் கொண்ட சூர்யா ஒரே நாளில் எவ்ளோ திமிர் டி உனக்கு இப்போ உன்னை சும்மா விட்டேன் அது எனக்கு ரொம்ப அவமானம் என்று அவள் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்தவன். 

என்ன டி சொன்ன நான் யாரா 

ம்ம் நான் யாருன்னு இப்போ காட்டுகிறேன் டி….

தொடரும்….

கமென்ட் பண்ணுங்க, அப்டியே ratings பிளீஸ் dears 

Episode 94, 

சூர்யாவுக்கு மகிழினியின்  பேச்சை கேட்டு மிகவும் அதிர்ச்சி கலந்த கோபம் தான், ஒரு நாள் கூட முழுதும் ஆக வில்லை; ஒரே ஒரு இரவு தான் அதற்குள் நம்மிடம் இப்படி பேசுகிறாள்…. எவ்வளவு திமிர் அதற்குள் என்னை தூக்கி எறிந்து விட்டாளா…. என்று  அவள் முன்னால் போய் நின்றவன்.

மகிழினியிடம் அவன் ஹே நீ சொல்ற மாதிரி நான் ராஸ்கல் தான் டி ;இப்போ ராஸ்கல் என்ன பண்ணுவான்,அபடின்னு உனக்கு காட்டுகிறேன்… என்று அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து அவள் அருகில் நெருங்கி அவள் தாடையை பிடிக்க 

ஹே விடு டா …. ஹெல்ப் …ஹெல்ப் …யாரவது என்னை காப்பார்றுங்கள் என சொல்ல ஹே இப்போ எதுக்கு கத்துர என அவள் வாயை அடைக்க ஹே விடு என்னை என்று திணறி பேசி அவன் விரலை கடித்தாள்.

இப்போது சூர்யாவுக்கு மிகவும் கோபம் வந்தது ஸ்ஸ்ஸ்…. 

ஹே இப்போ எதுக்கு டி  என் விரல கடிச்ச… என்று அவன் கைகளை எடுக்க உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு டா…. என்னடி செய்வ என்று இன்னும் அவளை நெருங்கினான். 

இப்போது அவன் அருகாமை அவளுக்கு எதோ செய்ய  நான்… என்று அந்த மான் விழியை உருட்டி, உருட்டி, நான் என்னோட மாவாய்யா கிட்ட உன்னை….  அந்த வரிகளை முழுவதும் கூட அவள் முடிக்க வில்லை 

SPR பற்றி  அவள் சொல்லியது தான் தாமதம் இங்கு சூர்யாவுக்கு கோபம் உச்சிக்கு செல்ல அவள் பின் தலையை அவனை நோக்கி இழுத்து சூர்யா அவள் இதழ்களை வன்மையாக ஆக்கிரமித்தான். 

மகிழினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் கைகளை கொண்டு மார்பில் அடித்து தள்ள முடியாமல் சோர்ந்து போனாள். அவளுக்கு அந்த முத்தம் பிடிக்காமல் இருக்குமா அது அவளுக்கும் பிடித்து தான் இருந்தது  ஆனாலும் அவனை சும்மா விட கூடாது.

சூர்யா அவள் அவனை விலக்குவது அவனுக்கு இன்னும் கோவத்தை இப்போது அவள் இதழ்களில் இருந்து பிரிந்தவன் அவளின் கோபமான பார்வையையும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து பார்த்து  மகி தன் உதடுகளை வேண்டும் என்றே துடைத்து கொண்டே எதோ அவள் சொல்ல வர …..

நான் கொடுத்த முத்ததை துடைக்கிறாளே…. அது மட்டுமா உன்னை கைய வச்சு  தள்ளி விடுறா சூர்யா …..என மூளை சொல்ல

நீ  !உன்னை…. என மீண்டும் அவளின் இதழில் விழுந்தான்.

இப்போது அவள் கைகளை வலுக்கட்டாயமாக அவன் கழுத்தில் போட வைத்தான் சூரியா மனதில் ஒரு முறையாவது அவள் ஆசையுடன் தன்னை பார்க்க மாட்டாளா…. என்று இப்போது ஏக்கம் வந்து விட்டது.

மகிழினிக்கு இப்போது மாயா சொன்னது நினைவு வந்தது சூர்யா உன்னை தவிர யாரையும் விரும்ப மாட்டான். அவனுக்குப் பொறாமை எப்படியும் உன்னை தூக்கி செல்வான்.

ஒரு கட்டத்தில் அவன் மென்மையாக இதழ் முத்தத்தில் ஆழ்த்த அவள் இப்போது அவனுடய தூண்டுதல் இல்லாமல்  அவன் மேல் மெழுகாக உருக ஆரம்பித்தாள். சூர்யா மனதில் “இப்போ தான் டி நீ என்னோட பொண்டாட்டி “என மகிழ்ச்சியுடன் அவள் கழுத்து ,இடுப்பு, பின் கழுத்து என அவன் தேடுதல் தொடங்க பெண் அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

மகிளினிக்கு சூர்யா அமுத சுரபி என்னும் பெயர் சொன்னது நினைவுக்கு வர  போதும் மகி அவன் கிட்ட விழாதே என்ன என்ன பேசினான் இன்னும் அவனை சும்மா விட கூடாது என்று நினைத்தவள் கன்னம் சிவக்க வேகமாக அவனை விலக்கி விட்டு வாஷ் ரூம் உள்ளே சென்று விட்டாள்.

உதடுகள் வீங்கி சிவந்து இருப்பதை தொட்டு பார்த்து கொண்டே நடிப்பு கள்ளன் நீ தான் டா நான் இல்ல…. ரஸ்கல் என்ன பண்ணி வச்சு இருக்க நீ அம்மா முன்னாடி போய் நான் எப்படி நிற்கட்டும் என்று தன் உடைகளை சரி செய்து முகம் கழுவி மீண்டும் அதே கோபத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வரும் போது அங்கே சூர்யா இல்லை இவள் தன் அம்மாவை தேடி செல்ல ஆச்சர்யம் தான் சூர்யா மாயாவிடம் பேசி கொண்டு இருப்பதை பார்த்து இவளும் எதுவும் தெரியாதது போல் முகத்தை வைத்து கொண்டு மாயா அருகில் சென்றவள்.

மா வீட்டுக்கு போகலாம் என்று தெலுங்கில் திடீரென பேச மாயாவும் தெலுங்கில் பதில் அளித்து கொண்டே சூர்யாவை ஒரு பார்வை பார்க்க அவனோ அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

என்ன பார்ததும் தெலுங்கில் பேசுற உன்னை… உன்னை மொத்தமா கவனிச்சு இருக்கணும் டி .

இப்போது மகிழினி தமிழில் அம்மா இங்க  நெல்லூர்  ஸ்டைல் சிக்கன் செப்பு புலுசு சூப்பர்ஆ இருக்கு இது மாவய்யக்கு பிடிக்கும் வாங்கி போகலாமா….

ம்ம்ம் , எனக்கு கூட நியாபகம் இல்ல நான் ஆடர் பண்றேன் மகி என மாயா ஆடர்  செய்ய இப்போது சூர்யாவுக்கு இவளை திமிரு எவனுக்கோ பிடிக்கரது பத்தி நியாபகம் வச்சு இருக்க ஆனால் உன் புருசன மறந்துறு டி சரியான ராட்சசி, நடிப்பு கள்ளி.

சூர்யா எதுவும் செய் அவ உன்னை ரொம்ப பங்கம் பண்றா. அப்போது சரியாக சரவணன் போன் செய்ய சிரித்து கொண்டே அதை எடுத்து காதில் வைத்தவன் அமுள் பேபி என்ன இப்போ கால் பண்ணி இருக்கீங்க ….

மறு முனை சூர்யா நான் சரவணன் 

சூர்யா மீட்டிங் எப்படி போச்சு 

அது எல்லாம் சூப்பர் அமுல் பேப் … 

என்னாச்சு முழு பேரு கூப்பிட சொல்றீங்க மேடம்…. சரி ஓகே ஒரு நிமிடம் இருங்க  டார்ல்ஸ் (டார்லிங்)

அமுத சுரபி ஓகே வா , பின்ன அமுது இது , ஓ அப்போ சுரபி ஓகே வா…

என்ன ….

ஓ விக்கல் எடுக்குதா ….ஆமா சுரபி எப்பொதும் மாமா உன்னோட நினைப்பில் தான் சுத்துறேன் அமுது…. 

சரி சரி நான் இப்போ ஆபீஸ் போகனும் போனதும் உனக்கு கால் பண்றேன்.

இப்போ மாமா வைக்கட்டா… 

ம்ம் ஓகே ஓகே டா… 

மிஸ் யூ டா  அமுது…. நைஸ் நேம் என்று இவன் சொல்ல

இங்கு மகிழினி முகம் சிவந்து இருந்தது வெட்கத்தால் இல்லை கோபத்தால்  அமுல் பேபி, அமுது, சுரபி, டார்லிங் வேற என்று கோப பார்வையில் தீ மட்டும் இருந்தால் எரித்து விடுவாள் மகிழினி.

மாயா இவன் போன் பேசிக்கொண்டு இருக்கும் போதே வாஷ் ரூம் சென்று விட்டாள்.  மேடம் ஃபயர் சர்வீஸ் க்கு கால் பண்ணட்டுமா உடனே அவள் முறைக்க உன் முகம் சிவந்து இருப்பது பொறாமை அப்படினு எனக்கு பச்சயா தெரியுது டி.

நீயா என் கிட்ட வந்து சொல்லிடு இல்ல…. 

ஹே போடா… என்று சொல்லி விட்டு கோபமாக தன் அம்மாவை கூட்டி கொண்டு கிளம்பி விட்டாள்.

சூர்யா மீண்டும் மாயாவிடம் இரு வார்த்தை பேசி விட்டு அவளை பார்வையால் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

அவர்கள் இருவரும் கிளம்பிய பின் அவர்களின் கார் சென்ற திசையை பார்த்த சூர்யாவுக்கு மகிழினி நான் தப்பு பண்ணிட்டேன் டி…. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி நான்கு வருடம் இருக்கும் அட்லீஸ்ட் இன்னும் ஒரு ப்ரோடக்ட் மட்டும் நான் ரிலீஸ் பண்ணி இருந்தால், இந்நேரம் நல்லா இருந்து இருக்கும்.. . இப்படி உன்னை ஒருத்தன் தூக்கிட்டு போக கொஞ்சம் யோசித்து இருப்பான். 

நம்ப நாலு பேரு  நம்ப குடும்பம் …உனக்கு துணையா என்னோட பையன் இருப்பான் இன்னொரு பொன்னு அப்படி இல்லனா என்ன அப்படி தான் எனக்கு ஒரு பொன்னு தான் வேணும்… ம்ம் இனி என்னோட அடுத்த முக்கியமான வேலையே இது தான் என்று சொல்லி புன்னகைத்து கொண்டே சூர்யா ஆபீஸுக்கு சென்றான்.

இங்கு காரில் என்ன மகி சூர்யா உங்கிட்ட பேசினாரா. சூர்யா என்று சொன்னதும் மகியின் நினைவுகள் அவனது முத்தம் தான் நினைவுக்கு வந்தது. 

மகி…. மகி …

ம்ம் அம்மா சாரி சாரி …

ம்ம் அவன் என்கிட்ட பேசினான்..

உடனே மாயா கோபம் கொண்டு என்ன இது அவன் இவன் அப்படினு பேசுற அப்படியெல்லாம் பேச கூடாது மகி….

என்னாச்சு மா நான் அவனோட பொண்டாட்டி இன்னும் ஆகளயே….

மாயா மனதில்  இந்த பொன்னு இருக்காளே நான் என்னத்தை சொல்லட்டும்…

மகி அம்மா சொன்னா கேட்பயா இல்ல மாட்டாயா…

சரி மா நான் இனி வாங்க போங்க அப்டின்னு கூப்பிடறேன் ஓகே வா….

ம்ம் அப்புறம் இன்னொரு விஷயம்

சொல்லுங்க மா

நீ சூர்யாவை வெறுப்பேற்ற தான் அந்த உணவு வாங்கினாயா.

அப்படி அப்படியெல்லாம் இல்ல மா

அம்மா சொல்றது தவறா நினைத்து கொள்ள வேணாம் நீ எப்போதும் போல் spr கூட பேசு அவ உன் மேல் ரொம்ப அன்பு வைத்து இருக்கிறான். நீ ஒரு வேளை திடீரென பேசாமல் போனால் அவன் ரொம்ப கஷ்ட படுவான் மகி …

சரியான நேரம் வரும் அப்போ அவனுக்கு புரியும் சரியா

அம்மா என்ன மா இப்படி சொல்லிட்டீங்க நான் அப்டிஎல்லாம் நெனைக்கல மா . எனக்கு அவர பிடிக்கும் ஆனால் நான் எப்பொதும் கல்யாணம், கணவர் அப்டின்னு நினைச்சது இல்ல. அவரு புரிந்து கொள்வார் அவர் கிட்ட சொல்லணும் அதற்கு நீங்க சொல்வது போல் சரியான நேரம் வரும்.

ம்ம் அது தான் என் செல்லம் என்று சொல்லி பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

உள்ளே சென்றதும் spr முக்கியமான மீட்டிங் இருக்க அவனும் குருவும் வேலை செய்து கொண்டு இருக்க மகி நேராக spr ஐ பார்க்க சென்றாள்.

மாவாய்யா….என்று கொஞ்சம் கத்தி கொண்டே உள்ளே வர குரு அவளை பார்த்து முறைத்தவன். ஹே அறிவு இல்லையா உனக்கு என்று அவன் தெலுங்கில் சொல்ல 

உடனே அவன் குரு  என வீடே அதிரும் படி கத்த அண்ணா …

அங்கு இருந்த பணியாளர், தேஜு, ஷீலா, வெங்கட், நிதின், மாயா என அனைவரும் அங்கு சத்தம் கேட்டு வந்து விட்டனர்.

மகிழினி ஒரு நிமிடம் பயந்து விட்டாள்.

சாரி நான் தெரியாமல் வந்து விட்டேன் என்று அவள் செல்ல போக பொம்மாயி….

நில்லு.. 

அங்கு ஓடி வந்த அனைவரையும் ஒரு பார்வை பார்க்க எல்லாரும் மீண்டும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர்.

ம்ம் இங்க வா… என sp மகியை அழைக்க 

குரு கோபமாக எழுந்து சென்று விட்டான்.

சாரி மாவாய்யா என்னால் தான் ….

எனக்கு நீ தான் முக்கியம் என்று சொல்லி அவன் லேப் டாப் மூடி வைத்து விட்டு ம்மம் என்ன விஷயம்… மகிக்கு இந்த வார்த்தை கொஞ்சம் சங்கடமாக இருந்தது. 

அது ஒன்னும் இல்ல உங்களுக்காக நெல்லூர் ஸ்பீசயல் சீ புட் புலுசு வாங்கி வந்தேன் அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன் ஆனால் எனக்கு தெரியாது நீங்க முக்கிய வேலை என்று சொல்ல

குரு எதற்கோ வந்தவன் இதை கேட்டு விட்டு அண்ணா இவ கொடுப்பது எதுவும் வாங்கி சாப்பிடாதே என்று தெலுங்கில் கூற 

மகிளினிக்கு குரு பேசியது புரியாவும்  கண்களில் கண்ணீர் வந்து விட்டது. மாமா நீங்க சாப்பிட வேண்டாம் என்று அவள் சொல்லி ஓட 

 அண்ணா அவள் சீக்கிரமே தெலுங்கு கற்று கொண்டாள் நீ அவளை கல்யாணம் செய்து தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம் சரியான  காரியகாரி இவள் 

அந்த நேரம் மாயா, வெங்கட், நிதின் தேஜு விடம் அப்பா கிட்ட போகனும் அப்படின்னு சொல்லவும் கீழ அழைத்து வர spr குரு கண்ணத்தல்  பளார் என்று ஒரு அரை விட அதை அங்கு வந்த அனைவரும் பார்க்க இவனுக்கு மிகவும் அவமானமாக போனது.

அண்ணா அவளுக்காக என்னையே அரைந்து  விட்டாயா… 

Spr அவனை கண்டு கொள்ளாமல் பொம்மாயி என்று சொல்லிக் கொண்டே செல்ல 

இங்கு குரு பிரகாஷ் க்கு மிகவும் அவமானமாக இருந்தது. 

அவள் அந்த சாப்பாட்டை சாப்பிடும் இடத்தில் வைத்து விட்டு போக இப்போது spr தேஜு இங்கே வா ….

தேஜூ வந்தாள்…. 

அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே மகி வாங்கிய உணவை  சாப்பிட்டு கொண்டே தேஜு விடம் எதோ சொல்கிறான்.

அதை கேட்டு அவள்….?

தொடரும்….

Comment please.. 

Episode 95, 

 Spr குரு கண்ணத்தில் ஓங்கி அறைந்து விட்டு மகியை காண செல்ல அவள் வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள்.

மாயா அவன் செல்வதை பார்த்து அருகில் போய் விடு sp அவள் கொஞ்சம் தனியாக இருக்கட்டும்.

ம்ம் சரி அத்தை என்று அவள் அறையை பார்த்து கொண்டே இங்கு உணவு சாப்பிடும் மேஜைக்கு அருகில் வந்தான். மாயா அவனுக்கு பரிமாற போக அத்தை தேஜூ வை வர சொல்லுங்க.

நீங்க நிதின் கூட இருங்க..

சரி என்று மாயா நிதினை தூக்கி கொண்டு சென்று விட இப்போது spr தேஜு வை அழைத்தான்.

அவள் பின்னால் காவலாளி கண்பானிப்பளர் இருக்க உடனே இவன் கடைக்கண் பார்வையை புரிந்து கொண்டு கொஞ்சம் வெளியே காத்துக்கொண்டு இருந்தனர்.

தேஜூவுக்கு அவன் அழைப்பு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. அவள் புன்னகை முகத்துடன் spr அருகில் வர ,

ம்ம் சர்வ் மீ…. என்று மகி வாங்கி வந்த அந்த உணவினை பரிமாற சொன்னான். அவளும் எதுவும் சொல்லாமல் எடுத்து பரிமாறினாள். அந்த உணவை நேர்த்தியாக சாப்பிட்டவன் ம்மம் அப்புறம் என் கையால நீ சாவது யாராலும் தடுக்க முடியாது.

அவனை உற்று நோக்கியவள் என்ன என்பது போல் பாக்க இது மகி எனக்காக வாங்கி வந்து இருக்கிறாள். இன்னும் ஒரு வாரம் தான் அப்புறம் நான் கட்டிய தாலியோட எனக்காக வாங்கி வந்தவள் எனக்காக சமைத்தும் கொடுப்பா அதை நீ உன் கண்ணால் பார்க்க தான் டி போற….

உடனே அவள் அவன் பேச்சு பிடிக்காமல் எழுந்து செல்ல போக அவள் கைகளை அழுத்தமாக பிடித்தவன். ஒரு கொடூர பார்வை பார்க்க தேஜு கண்களில் கண்ணீருடன் அவனை ஏக்கமாக பார்த்தாள்.

இனி நீ நிதின் கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா தள்ளி இருக்க ஆரம்பித்து விடு என் பையன், நான்,என்னோட பொம்மாயி கேட்கவே நல்லா இருக்கு இன்னும் அது இப்போ உண்மையாக போகுது அவளுக்கு என் மேல் இருக்க இன்டரெஸ்ட் பார்த்தால் இன்னும் ரெண்டு மாசத்தில் எனக்கும் மகிக்கும் அதாவது நிதின் க்கு ஒரு தங்கை வர சான்ஸ் அதிகம் …. இந்த வார்த்தகளை கேட்டு அவள் கைகளை வேகமாக உதறி விட்டு

நிதின் நா கொடுக்கு… உனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்னை பற்றி உனக்கு முழுசா தெரியாது; என்னால உன்னை மகி மாதிரியே மறக்க வைக்க முடியும் ,ஆனால் அது எனக்கு தேவையில்லாத ஒன்னு …

ம்ம் பார்த்துகிட்டே இரு உன்னோட பொண்டாட்டியா நான் தான் வர போறேன்… என்று மிரட்டும் தொனியில் கூறி,

நீ வைத்த இந்த நாலு காவல் நாய்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனக்கு ம*** மாதிரி என்று கூறி விட்டு நேராக தன் மகனை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் பேசியது அவளது கண்களை பார்த்து ஒரு நிமிடம் தடுமாறி போனான். இந்த கண்கள்…. இந்த கண்கள் … பொம்மாயி … என யோசித்து கொண்டு இருந்தவன் மாயாவின் குரலில் தன்னிலைக்கு வந்தான்.

என்னாச்சு சூரியா… தேஜூ என்கிட்ட இருந்து நிதினை வேகமாக வாங்கி செல்கிறாள்.

ஒன்னும் இல்ல அத்தை…

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க பொம்மாயி எப்படி இருக்கா அப்டின்னு பாருங்க என சொல்லி கை கழுவி விட்டு கிளம்பினான்.

மகி உள்ளே வந்தவள் குரு சொன்ன வார்த்தைகள் அவளை கொஞ்சம் கஷ்ட படுத்தியது அதில் இருந்து மீள பால்கனியில் வேடிக்கை பார்த்து கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள்.

பின் தன் போனில் சூர்யாவுடன் பேசிய அந்த சில செய்திகளை எடுத்து பார்த்து கொண்டு சிரித்தவள். இன்று அவன் செய்கையை நினைத்து முகம் சிவந்தாள்.

சூர்யா நீயா வந்து என்னை கூட்டி போவ எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு டா….

என்று படுக்கையில் அவன் படத்தை பார்த்து கொண்டே உறங்கி போனாள். இரவு உணவை மேலே அறைக்கு எடுத்து வர சொல்லி சாப்பிட்டாள். கீழே எப்படியும் குரு இருப்பான் நம்மால் எந்த பிரச்சனையும் வர கூடாது என்று அவள் அறையிலேயே உணவு உண்டாள்.

Sp அடித்ததும் குரு வேகமாக கோவமாக வெளியே சென்று விட்டான். அதனால் அலுவலகம் புதிய புராஜக்ட் தொடர்பான அனைத்து வேலையும் தனியாக sp செய்யும் நிலை வர இரவு உணவை தவிர்த்து வேலை செய்தான்.

 இரவு 10.30 மணி இருக்கும் அவளுக்கு பசி எடுக்க பால், பூஸ்ட் குடிக்க மகி கீழே வர அங்கு ஸ்டெடி ரூமில் விளக்கு எரிவதை பார்த்து உடனே மகி சாதாரணமாக எட்டி பார்க்க அங்கு மும்பரமாக sp வேலை செய்து கொண்டு இருக்க அப்போது தான் மகிக்கு குரு சொன்னது சரி தான் நாம் தொந்தரவு செய்து விட்டோம் பாவம் மாவாய்யா என நினைத்து உள்ளே சென்றவள் .

அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று பார்க்க இவளின் வாசனை அறிந்த sp இன்னும் தூங்கலயா பொம்மாயி…

இல்ல எனக்கு தூக்கம் வரல மாமா …

நீங்க சாபிடீர்களா….

ம்ம் என்று வேலை செய்து கொண்டே பதில் அளிக்க…

பொய் சொல்ல வேணாம் இந்த பால் குடிங்க என்று கொடுக்க இப்போது sp அவள் முகத்தை பார்க்க அதில் களங்கம் இல்லாத அன்பு மட்டுமே தெரிந்தது.

வாங்கி வேக வேகமாக குடிக்க மெதுவா என்று உச்சி கொட்டியவள் அந்த லேப் டாப் ல தன் கண்களை மேய விட மகியின் கைகள் sp கிட்ட இருந்து லேப் டாப் வாங்கி அந்த கோப்புகளை சரி பார்த்து அதனை ஆடார் செய்து அவனிடம் காட்ட மம்ம் சூப்பர் என்று அவன் சொல்ல 

அவளும் sp யோடு இணைந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தாள். Sp யின் தனிப்பட்ட பெர்சனல் லேப் டாப் ல இவள் வேலையை செய்ய குரு லேப் டாப் ல sp தன் வேலையை ஆரம்பித்தான்.

அந்த அறையில் தட்டச்சு செய்யும் சத்தம் மட்டுமே கேட்டது. Sp அவளின் திறனை பார்த்து ஒரு நிமிடம் வியப்பு , அதிர்ச்சி தான்

ஏன் இந்த அதிர்ச்சி அது தான் இந்த கதையின் இரண்டாம் திருப்பு முனை ,( முதல் திருப்பு முனை பாகம் 66இல் )

Sp அவளின் திறனை பார்த்து மெய் சிலிர்த்து அவனும் அவளோடு வேக வேகமாக வேலையை செய்ய ஆரம்பித்தான்.

குரு மனதில் இருப்பு கொள்ள வில்லை எப்படியும் சிறிது நேரத்தில் தன்னை சமாதானம் செய்யும் அண்ணன் இன்னும் வர வில்லை ஒரு போன் கூட செய்ய வில்லையே என நினைத்தவன். நேராக தன் அண்ணனை தேடி செல்ல அங்கே அவன் கண்ட காட்சி மகி sp கூட சேர்ந்து வேலை செய்வது தான்.

என்னோட இடத்தை வந்து பிடித்து விட்டாளே…. என் அண்னனின் லேப் டாப் நான் கூட பயன் படுத்தியது இல்லை இவளுக்கு கொடுத்து இருக்கிறான்.

வீட்டில் , இப்போது வேலையில் ஏற்கனவே மனதில் இவளை தான் நினைத்து பைத்தியமாக சுற்றி கொண்டு இருக்கிறான் இதை இப்படியே விட கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு உன்னை … என் அண்ணனிடம் இருந்து என்னை பிரிக்கிராயா என்று நரநரத்து கொண்டு கிளம்பினான்.

மணி 12.00 இருக்கும் ம்ம்ம் இன்னிக்கு ரொம்ப ஹேப்பி ரொம்ப நாள் கழித்து என்னோட விரல்களுக்கு இன்னிக்கு சந்தோஷம் மாவாய்யா… என்று அவள் சொல்ல, அவள் சோம்பல் முறித்து நெட்டி முறிக்கும் அழகை பார்த்து ரசித்தான் sp …

இவள் தான் உண்மையான பொம்மாயி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தான் அவளிடம் நெருங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ம்ம்ம் சரி நீ தூங்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…

போதும் போதும் என்று சொல்லி குரு லேப் டாப் இவளே மூடி வைத்து விட்டு போங்க போய் தூங்குங்க நாளைக்கு மீதி வேலை செய்யுங்க …

ம்ம் என்று அதட்ட sp அவளை பார்த்து கண்ணகுளி தெரிய சிரித்து விட்டு எழுந்து அவன் அறைக்கு சென்றான்..

அடுத்த நாள் சீக்கிரம் விடிய மகி நன்கு தூங்கி கொண்டு இருந்தாள். நேற்று கண் விழித்து செய்த வேலை பயன்…

கல்யாண வேலைகள் இரு வீட்டிலும் நடக்க இன்று முகூர்த்த புடவை எடுக்க செல்லலாம் என்று நீலா சொல்ல ம்ம் வந்து விட்டாள் நீலா குரு ஏற்பாடு தான்…

நீலா, பிரகாஷ், என இருவரும் தன் பேரனை பார்க்க வந்து விட்டனர்.

சூர்யாவுக்கு உடனே செய்தி செல்ல அந்த நபருக்கு நன்றிகள் கூறி ..

ஜானு இன்னிக்கு முகூர்த்த புடவை எடுக்க போகலாம் என்று சொல்லியவன்,மகி இன்னிக்கு வந்து இன்னும் கொஞ்சம் உன்னை கவனிக்கிறேன் டி… என்று சொல்லி கிளம்பினான்.

இங்கு இது எதையும் அறியாமல் மகிழினி எழுந்து மெதுவாக காலையில் குளித்து முடித்து விட்டு மெதுவாக உணவு சாப்பிட கீழ வர அங்கு அனைவரையும் பார்த்து விட்டு அதிர்ந்து நேராக தன் அம்மா மாயவிடம் ஓடி சென்றாள்.

அம்மா என்னாச்சு…

மாயா விஷயம் சொல்ல அவள் மனது படபடத்தது  உடனே மாயா நான் இருக்கிறேன் என்பதை போல் கைகளை பிடித்து கொண்டாள்.

நீலா ,பிரகாஷ் இருவரும் தன் பேரனுடன் இருப்பதாக சொல்ல

குரு தேஜூவை கட்டாயமாக அழைத்து வந்தான். தேஜூ, குரு, sp, மாயா, மகி, அது இல்லாமல் ஒரு நான்கு பணி பெண்கள் என கிளம்ப மகிக்கு மிகவும் பயம் கலந்த முகத்தோடு கவலையில் சென்றாள்.

ஆனால் அங்கு சென்றவுடன் மகிழினி உற்சாகமாக மாறினாள். வந்து விட்டான் அவளின் நாயகன் சூர்யா …

சூரியா,spr பார்வை மோதி கொள்ள

இன்னிக்கு நீ பார்ப்ப டா அவள என்னோட பொம்மாயா. …

சீ…. அவ என் பொண்டாட்டி நீயே கூடிய சீக்கிரத்தில் அவள என்னோடு அனுப்பி வைப்பயா டா…

 இப்போது சூர்யாவும், மகியும் ஒருவரை ஒருவர் ஒரு நிமிடம் பார்த்து கொண்டனர்.

வந்து விட்டாயா டா நீ … ம்ம் நான் இதை எதிர் பார்க்க வில்லை டா… இன்னிக்கு இருக்கு டா உனக்கு…

ஹே இன்னிக்கு உன்னை அவன் முன்ன உன்னை கவனிக்கிறேன் டி… என் பொண்டாட்டி…

தொடரும்….

Episode 96,

இங்கு மகிழினி மனதில் ஒரு வித கவலையுடன் வெளியில் எதையும் காட்டி கொள்ளாமல் புடவை கடைக்கு கிளம்பினாள்.

Spr இருக்கும் வசதிக்கும்,பணத்திருக்கும் வீட்டுக்கே புடவை கடையை கொண்டு வரலாம் ஆனால் spr ஒரு முறை கூட மகிழினியோடு வெளியே சென்றது இல்லை அதனால் இன்று அவளுகாகவே விடிய விடிய வேலை செய்து இன்று அவளுடன் நேரத்தை செலவிட கிளம்பினான்.

இன்று ஆபீஸ் செல்வது போல உடை அணியாமல் வீட்டில் இருப்பது போல் அலட்டி கொள்ளாமல்  உடை அணிந்து இருந்தான். ஆனால் கம்பீரம் மட்டும் குறைய வில்லை. மகிழினி முகமே காட்டி கொடுத்தது அவள் பயந்து இருக்கிறாள் என்று அதை பார்த்த sp பொம்மாயி என்னாச்சு….  இல்ல மாவாய்யா நான் நல்லா தான் இருக்கேன்…. நீ என்னை உன்னோட மாமாவா பார்க்க வேண்டாம்…. நீ என்னை உன்னோட பிரென்ட் ஆ பாரு … என்று அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர உண்மையாகவே கூறினான்.

இப்போது கண்கள் மின்ன நிசங்காவா…. ம்ம் பக்கா…. ம்ம்  சரி ஓகே என்று அவனுடன் அருகில் பேசிக்கொண்டே நடந்து சென்றாள்.

இங்கு சூர்யா ஒரு பார்மல் உடையில் வந்து இருந்தான். அவனுடன் ஜானு, சுபா (இன்பாவின் அக்கா) சரவணன், வெண்பா சரவணனின் தங்கை என இவர்கள் வந்து இருந்தனர்.

என்னடா முகூர்த்த புடவை எடுக்க பெரியவங்க தான் வருவாங்க இவங்க மட்டும் வந்து இருக்கிறார்கள் என்று நீங்க நினைக்கலாம். மகிழினி எல்லாம் மறந்து இருப்பது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தான்… இங்கே அவர்களை அழைத்து வந்தால் அனைவருமககும் எல்லாம் தெரிந்து விடும் sp எதுவும் செய்து விட்டால் என்ன செய்வது வேறு ஒன்றும் இல்லை.

சூர்யா இன்பாவின் மேல் கோபமாக இருந்தான். இவ்வளவு பெரிய உண்மையை தன்னிடம் இருந்து மறைத்த காரணத்துகாக அதன் பின் இருவரும் சமாதானம் ஆகி இன்பா குரு விஷயத்தை முடிக்க, சூர்யா spr விஷயத்தை கையாள முடிவெடுத்தனர்.

சூர்யா ஜானுக்கு தேர்ந்து எடுக்க சுபா ஒரு புறம் சரவணவை ஏக்க கண்களால் பார்த்து கொண்டு இருந்தாள். வென்பா ஜாணுவை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.

சரியாக கடைக்குள் மகி,spr இருவரும் சிரித்து பேசி கொண்டே உள்ளே வர அங்கு ஒரு புறம் ஜானு, ஒரு புறம் சுபா என சிரித்து கொண்டு புடவையை பார்க்க சரவணன் இப்போது சுபாவை பார்வையால் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

ஹே சூர்யா உன்னோட ஆளு உள்ளே வந்தாச்சு…  

ம்ம் வந்து என்ன பண்ண சுபா அவளுக்கு என்னை யாருன்னு தெரியாத மாதிரி இப்போ அப்படியே ஆக்ட் விடுவா பாரு…

அத்தான் நீங்க தான் எப்போவும் சீண்டி கிட்டே இருக்கீங்க ….

நீங்க இப்போவே போய் தட்டி தூக்க வேண்டியது தானே….

இல்ல ஜானு சில சம்பவம் செஞ்சு தான் அவளை ஏங்க வச்சு தூக்கனும்….

உடனே சரவணன் சூர்யா மகி கூட sp பின்னாடி குரு எல்லாரும் வராங்க டா…

வரட்டும் டா நான் சொன்னது எல்லாம் சரியான நேரத்துக்கு தயாரா இருக்கா….

சரவணன் சுபாவை பார்க்க என்ன என்னை பார்த்தால் நான் என்ன செய்யட்டும்….

நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நாங்க பார்த்துக் கொள்வோம்… என சரவணன் சொல்ல

சூர்யா உன் பிரென்ட் ரொம்ப ஓவரா பண்றான் ஸாரி பண்றாங்க நான் உனக்காக தான் வந்தேன் இந்நேரம் என்னோட வினய் எனக்காக கல்யாணம் அடுத்து ரிசப்ஷன் க்கு ட்ரெஸ் செலக்ட் பண்ண நாங்க போலாம் அப்டின்னு இருந்தோம்… இன்பா சொன்னான் உன் லவ் க்கு ஹெல்ப் பண்ணனும் அப்டின்னு ஒரே காரணம் தான்….

இதை கேட்டு சரவணன் மனது துடித்து போனது அவளோட வினய் அப்போ நான் யாரு…

அப்போ சுபா என்னை வேண்டாம் என்று உதறி விட்டாளா….

இப்போது சரவணன் சூர்யாவை பார்த்தான் தன் காதல் மனைவி அதுவும் இல்லாமல் சுயத்தை இழந்த நிலையில் கூட ஒருவரை ஒருவர் இப்படி நேசிக்கிறார்கள். நான் இது பற்றி இன்னும் யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

வென்பா சரவணா அண்ணா நீ எதுக்கு எப்போ பார்த்தாலும் இன்பா அண்ணா , சுபா மேடம் அவங்க என்னோட லேடி பாஸ் கிட்ட இப்படி முகம் காட்டுற….

சரி சாரி வென்பா மா….

என் கிட்ட கேட்காத சுபா அக்கா கிட்ட கேளு….

சாரி மிஸ் சுபத்ரா…

உன்னோட சாரி எனக்கு தேவை இல்ல சூர்யா ஏற்கனவே நானும் இன்பாவும் ஆல்ரெடி பக்காவா பண்ணிட்டோம்…

இன்பாவுக்கு மூளை கொஞ்சம் கம்மி தான் சுபா பட் உனக்கு செம்ம மூளை இந்த மாதிரி எனக்கு ஒரு அக்கா இல்லயே…

அண்ணா உங்களுக்கு நான் இருக்கேன் எனக்கு அறிவு ஜாஸ்தி பட் பிரைன் குட்டி தான்…

ஓகே ஓகே இப்போ சீரியஸ் மோட்…

நான் சிக்னல் கொடுக்கும் போது நம்ப ஆரம்பிக்கவேண்டியதுதான்.

ம்ம் டன் என அனைவரும் கை காட்டி கொண்டனர்.

மகி இவர்கள் 5 பேரும் பேசிக்கொண்டு இருக்க sp அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மகிழினி கைய பட்டும் படாமல் கைகளை பிடித்து போக அவளும் சிரித்து கொண்டே சென்றாள்.

என்னடா சூர்யா….  என்று சுபா சொல்ல 

விடு விடு சுபா என்று வாய் மொழியாக கூறினாலும் மனதில் வெந்து கொண்டு இருந்தான்.

நாமாக யாரிடமும் பேச கூடாது அவர்கள் தான் நம்மிடம் பேச வேண்டும் அதே கொள்கையில் சூர்யா அந்த புடவையை பார்த்து கொண்டு இருக்க உடனே குரு வந்தான்.

என்ன சரவணன் இங்கே….

ஹலோ சார்…. சூர்யா வீட்டில் முகூர்த்த புடவை எடுக்க வந்தோம்.

ஓ அப்படியா …. நாங்களும் அதே பற்பஸ் தான் ஓகே நீங்கள் பாருங்க….

இப்போது கொஞ்சம் அருகஅருகே  வர இப்போது சூர்யா சிக்னல் செய்ய முதல் மெஷின் ஆரம்பம் ஆனது. அது பெருசா ஒன்னும் இல்லை spr பற்றிய ஒரு அனானிமஸ்  செய்தியை சில வலைபக்கங்களில் போட்டு விட்டான். 

சரவணா ஓகே வா….

பயமா இருக்குடா …. சுபா, வேஸ்ட் பெல்லோ ….

ஹே நீ ரொம்ப ஓவரா பேசுற….

சுபா விடு …..

உன் ப்ரெண்ட ஃபோன் கொடுக்க சொல்லு நானே பண்றேன்….

அவள் பேசிய பேச்சில் செய்தியை போட அது காட்டு தீயாக பரவியது.

இங்கே மகி சூர்யாவை பார்க்க அவன் சிரித்து உரசி கொண்டு சுபாவிடம் பேசுவது தெரிய….

ஓ இவள் தான் அமுத சுரபியா அழகு தான் என்னை விட அழகாக தான் இருக்கிறாள்.

அப்போ நான் என்று ஒரு புடவையை வைத்து கொண்டு கண்ணாடி முன்பு போய் நிற்க

பின்னால் சுபா வெயிட் செய்தாள்….

ஹலோ கொஞ்சம் நகருங்க நீங்க பார்த்து விட்டீர்களா….

இல்ல என மகிழினி சொல்லி நீங்க பாருங்க நான் அப்புறம் பார்க்கிறேன்….

ஓ ரொம்ப நன்றி என கூறிய சுபா….

சூர்யா …. ஹே சூர்யா சீக்கிரம் வா டா….

ஹே இரு இரு இப்போ வரேன்… ம்ம் பார்த்து சொல்லு….

ஹே இது நல்லா இல்லை சுபா…

அப்போ இது ….

நாட் வர்த் என இவர்கள் செய்யும் அந்த நடிப்பில் மகி கண்களில் கண்ணீர் மட்டும் தான் வர வில்லை.

இதை பார்த்த சூர்யா ம்ம் பத்தாது பத்தாது இன்னும் கொஞ்சம் உன்னை எதுவும் செயானும் டி….

இப்போது மகி sprயை அழைத்தாள்…

மாவா … சீக்கிரம் வாங்க…

ம்ம் பொம்மாயி…. என அவள் அருகில் வர நீங்க பார்த்து சொல்லுங்க எனக்கு எது நல்லா இருக்கும்…. 

இப்போது சுபாவை பார்க்க இப்போது வேறு வழி இல்லாமல் பேசினாள்.

ஹலோ சார் எப்படி இருக்கீங்க…

ம்ம் குட் உங்க ஜோடி எங்கே .. .

அவரு கொஞ்சம் பிசி அதநால நான் என்னோட ஜூனியர் ஐ மின் சூர்யாவுக்கு கல்யாணம் அதனால் அவங்க பார்ட்னர் க்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.

அப்போ இவங்க அமுத சுரபி இல்லையா … எங்க டி இருக்க நீ இந்த சூரியா உனக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறான்….

இவனை …. என மனதில் மகி அர்ச்சித்து கொண்டு இருக்க 

நீங்க என சுபா கேட்க இவங்க என்னோட பார்ட்னர் ஆக என spr சொல்லி முடிக்க வில்லை…

அண்ணா… அண்ணா…. என கத்தி கொண்டே வந்தான் குரு

ஏன்ட்ரா …. 

அண்ணா சீக்கிரம் வா இங்கே பாரு…. 

Sp உடனே அந்த இடத்தில் இருந்து வெளியே கிளம்பினான்.

ம்ம் பரவாயில்லை சுபா இந்த கலர் அமுது க்கு சூப்பர் ஆ இருக்கும் நீ என்ன நினைக்கிற….

சுபா மகியை பார்க்க அவள் முகம் கோபத்தில் இருக்க…

சூர்யா காதில் சுபா ஹே அவ செம்ம கோபத்தில் இருக்கா டா..

சூரியா இப்போ எனக்கு கொஞ்சம் இந்த இடம் சரி இல்லன்னு நினைக்கிறேன் நான் ஜானு கிட்ட போறேன் நீ என்னமோ பண்ணு டா… என சொல்லி அவள் ஜானு விடம் செல்ல

இப்போது டிரெஸ்ஸிங் ரூம் ட்ரயல் ரூம் அருகில் இருவரும் இருக்க..

தங்களை சுற்றி யாரும் இல்லை என்று அறிந்து கொண்ட சூரியா போன் எடுத்து மீண்டும் சரவணனுக்கு அழைத்து

 ஹே அமுது இப்போ அனுப்புகிறேன் செலக்ட் பண்ணு ….

நீ பக்கதில் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா ஐ மிஸ் யூ டி….

இப்போது மகி கோபமாக அங்கு இருந்த ஒரு கூடையில் போட்டவள் வேக நடை கொண்டு செல்ல

சூர்யா அவளை ஒரே இழுப்பில் தன்னை நோக்கி இழுக்க ஹே விடு…

டிஸ்கஸ்டிங் என்று அவள் சொல்ல

ட்ரயல் ரூம் திறந்து அவளை உள்ளே தள்ளியவன் எதுக்கு டி நான் போற இடத்துக்கு எல்லாம் என்னை ஃபாலோ பண்ற என்று sp பிடித்த கைகளை சூரியா முறுக்கினான்.

தொடரும்….

 Episode 97, 

சுபா அவனிடம் சொல்லி விட்டு சென்ற நேரத்தில் அங்கு சூர்யா மட்டும் இருக்க உடனே மகிழினி அவன் மேல் உள்ள கோபத்தில் வேக நடையிட்டு செல்ல எத்தணிக்க 

சூரியா அவள் கைகளை பிடித்து அந்த ட்ரயல்  இழுத்து சென்றான். ஹே என் கையை விடு என்று மகிழினி சொல்ல அவளை ஒரு பொருட்டாகவே அவன் மதிக்க வில்லை.

ரொம்ப சீன் போடாத ஒரே ஒரு நிமிடம் என்று அவளை அழைத்து சென்று அந்த ஆளுயர கண்ணாடியில் நிறுத்தியவன். அங்கு அருகே சுபா செலக்ட் செய்து வைத்து இருந்த புடவைகள் ஒவ்வொன்றாக அவள் மேல் போட்டு பார்த்தான்.

மகிக்கு ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு புறம் குழப்பம் இவன் என்ன செய்கிறான் என்று இவள் பொம்மை போல் நிற்க,

ஒவ்வொரு புடவையையும் மேலே போட்டு பார்த்து தோள்களில் கை வைத்தவன், அவளை  சுற்றிச்சுற்றி பொறுமையாக நேர்த்தியாக பார்த்து எடுத்தான்..

பெண்ணவளுக்கு அவனுடய இந்த பார்வை அந்த கூர்மை மிகவும் புதிது அவன் தொடுதல் அவளுக்கு உயிர் வரை சிலிர்த்து போனது 

சிகப்பு, நீலம், இளம்சிவப்பு, ஊதா என கொண்டே இருந்தவன். இறுதியாக  ஒரு பேபி பின்க் நிற புடவையை தேர்ந்து எடுத்து ம்ம் என்று உச்சி கொட்டி விட்டு 

ஓகே மேடம் இப்போ நீங்க போகலாம்….

என்ன இப்போ என்ன பண்ணுன நீ…

நானா நான் என்ன பண்ணினேன்….

இப்போ எதுக்கு என் மேல் புடவை போட்டு பார்த்த நீ …

அதுவா ஸாரி, சாரி, மேடம் என்னோட அமுது சுரபி க்கு எது நல்லா இருக்கும் அப்படின்னு பார்த்தேன்.

இப்போது கடுப்பானவள்  அதை எதுக்கு என் மேல்…

அது உங்களை விட என்னோட அமுது அவளுக்கு மாடலா.. . எனக்கு கன்வீனியன்ட்டா இல்ல… ஐ மின் சுபா, ஜானு, அவங்க கிட்ட எப்படி பக்கதில் போய் எப்படி… பட், நீங்க அதுக்கு சரிபட்டு வருவீங்க அப்டின்னு தோணிச்சு அதனால் எனி வே ரொம்ப தேங்க்ஸ்… மேடம்…

இப்போது மகிழினி கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 

அவன் சென்றவுடன் ஒரு சில நிமிடம் உள்ளே தன்னயே கண்ணாடியில் வெறித்து பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள் மகிழினி.

சூர்யா போய் செலக்ட் செய்த அந்த புடவையை ஜானுவிடம் சொல்லி கொடுத்து விட்டு இப்போது ஜானுவுக்காக பார்த்து கொண்டு இருந்தனர்.

இப்போது அவள் வெளியே வந்ததை பார்த்த சுபா சூர்யாவிடம் டேய் என்னடா பண்ண… அவ முகம் இப்படி இருக்கு… சும்மா சுபா நான் எதுவும் பண்ணல… ஹே சொல்லு சூர்யா , அண்ணா அக்கா பாவம் அழுக போறாங்க போல சாரி சாரி அழுது இருக்காங்க …

அது ஒன்னும் இல்ல வெண்பா சும்மா கொஞ்சம் பொசசீவ் இன்ஜெக்சன் போட்டு விட்டு வந்து இருக்கிறேன்….

அப்படினா… 

சூர்யா உள்ளே நடந்த விஷயத்தை அவர்களிடம் சொல்ல  அத்தான் போச்சு போச்சு அக்காவுக்கு மட்டும் அமுத சுரபி பற்றி தெரிந்தால் என்ன ஆகும் அவளே உங்களை என்னை விட பைத்தியமா சுத்துனா….

இது அவளுக்கு தெரிந்தாலும் பிரச்சனை , அக்காவுக்கு தெரிந்தாலும் பிரச்சனை…. இப்போது சூர்யா, தெரிஞ்சாதானே உனக்கு தெரியாது ஜானு என் முன்னாடி  எனக்கு பிடிக்காது அப்டின்னு தெரிந்தும் அவன் கைகளை பிடித்து கொண்டு போறா….

சுபா சூர்யாவிடம் நீ செய்வது சரி தான் சூர்யா இங்கே சில பேரு இல்ல எல்லாருமே லவ் பண்ணிட்டு அதை சொல்ல தைரியம் இல்லாமல் அதை ஃபேஸ் பண்ண கூட முடியாமல் சுத்துறாங்க கண்டிப்பா உன்னோட முயற்சி வெற்றி பெறும்.. 

அப்போது சரியாக சரவணன் வந்தவன் சுபா சொன்ன எல்லாம் கேட்டு விட்டான்.

மகி அழுது கொண்டே தன் அம்மாவை கட்டி கொண்டாள்…. என்னாச்சு மகி…. அம்மா அவன்… யாரு சூர்யாவா… ம்ம் அந்த ராஸ்கல் தான் அவன் என்று தேம்பி கொண்டே அங்கு நடந்தவற்றை கூறினாள்.

உடனே மாயாவுக்கு கோபம் வர என் பொண்ணை அழ வைக்கிறானா இவனை என்று ஒரு படி செல்ல உடனே வெங்கட் பின்னால் இருந்து சிரித்து கொண்டே மாயா சூரியா மகிய  டீஸ் பண்ணி இருக்கான்.

இப்போது இவள் பின்னால் திரும்பி பார்த்து அப்பா என்ன சொல்றீங்க….

ம்ம் ஆமா ஒரு ஆண் என்ன நினைப்பான் செய்வான் அப்டின்னு இன்னொரு ஆணுக்கு தெரியும் உன்னை வேண்டும் என்றே சீண்டி விட்டு இருக்கிறான்.

அப்போ அந்த அமுத சுரபி என கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் கேட்கும் தன் மகளை பார்த்து வெங்கட் அமுத சுரபி ஆப்டின்னு ஒரு பொன்னு இருக்கா அது சூர்யாவோட அத்தை பொன்னு தான் ஆனால் அந்த பொண்ணு இப்போ பாரின் ல டாக்டர் கடைசி வருஷம் ஒன் இயர் ட்ரெயிநிங் ல இருக்கு ….

அதனால்… 

இப்போது மாயா சிரித்து கொண்டே அதுவும் பொய் தான்…

என் கிட்ட மாயா சொன்ன அப்போவே நான் கெதர் பண்ணிட்டேன்.

ஹே சூரியா வரேன் டா … வரேன் உனக்கு எந்தா தைரியம் உண்டோ மள்ளி மள்ளி  நூவு நேனு சம்பேஸ்தானு டா என மனதில் தெலுங்கில் அவனை திட்டி கொண்டு இருந்தாள்.

இங்கு spr என்ன செய்து கொண்டு இருக்கிறான்.

அவன் அந்த பெயர் தெரியாத கணக்கில் இருந்து வந்த செய்தியை பார்த்து இப்போது அதை பரவ விடாமல் தடுக்கும் முயற்சயில் ஈடு பட்டான்.

குரு spr கிட்ட அண்ணா இதை தேஜூ வால மட்டும் தான் சரி செய்ய முடியும்…. அண்ணா இப்போ நீ யோசித்து எந்த பயனும் இல்லை… உன்னால நிஜமா ஷாட் அவுட் பண்ண முடியாது.

சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே யோசித்தான். ம்ம் வர சொல்லு அந்த ஒற்றை சொல் …

குரு தேஜு வுக்கு போன் செய்ய அவள் சிரித்த முகத்துடன் மம் சொல்லு குரு…. அவன் அனைத்தும் கூற .. மம் இன்டர்ஸ்டிங் நான் வரேன் .. 

ஒகே தேஜு,  ஒரு நிமிடம் ..  

குரு என்ன என்பதை போல் கேட்க… 

Spr கிட்ட நான் பேசணும் என்னை கூப்பிட சொல்லு…

சரி என சொன்னவன். அண்ணா தேஜு உன் கிட்ட பேசனுமா….

Spr கடுப்புடன் அந்த போனை வாங்கி அவனை பார்க்க குரு சென்று விட்டான். 

ம்ம் சொல்லு….

பெருசா இன்னும் இல்ல நீ அவளுக்கு என்ன புடவை எடுத்து கொடுக்கிறாயோ அதே புடவை எனக்கும் வேண்டும் …..

வாட் ….

ஐ மின் ரெண்டு செட் ஆர்டர் பண்ணிடு ….

Spr அமைதியாக இருக்க… இந்த மெசேஜ் உனக்கு எவ்ளோ அவமானம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அப்படி தானே அதும் உன்னோட … 

சரி… ஆனால் ஒன்னு டி இதுக்கு எல்லாம் உனக்கு இருக்கு… என் கையாள தாண்டி உனக்கு சாவு… 

ம்ம் அது கூட எனக்கு சந்தோசம் சூர்யா பிரகாஷ்.. 

அதுக்கு தான் நான் வெயிட் பண்றேன் sp….

இப்போது sp இருக்கும் இடம் தேடி தேஜூ வந்தவள் கடகடவென்று  தட்டச்சு எதோ மாயம் செய்தாள்.அதை எல்லா பக்கங்களில் இருந்தும் நீக்கி விட்டாள்.

இவன் ஒரு புறம் அவள் ஒரு புறம் முடித்து நெட்டி முறித்தவள் அப்பாடா இப்போ தான் ரொம்ப நாள் அப்புறம் என்னோட விரல்களுக்கு நான் விடுதலை கொடுத்து இருக்கிறேன்…. என தேஜூ சொல்ல sp இப்போது அவளை அதிர்சியாக பார்த்தான்.

ஹே இப்போ என்ன சொன்ன…

ஹே இப்போ என்ன சொன்ன சொல்லு …

நான் என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லல

உன்னோட விரல் விரலுக்கு …  என கூறிகொண்டே spr தேஜு வின் அருகில் வந்து விட்டான் மிகவும் அருகில் அவள் தாடையை பற்றி ஹே சொல்லு டி….

தேஜு வுக்கு முதன் முறையாக அவனுடய நெருக்கம் அவளுக்கு எதோ இனம் புரியா உணர்வு ..  

ம்ம் சொல்லு … உதடுகள் தந்தி அடிக்க விரல்களுக்கு விடுதலை என்று சொல்ல …

அவள் சொல்லும் போது அவளுடைய கண்களையும் உதடுகளையும் மாறி மாறி பார்த்தான் என்ன இவள் இவளை பார்த்தால் நமக்கு ஏன் இப்படி தோன்றுகிறது…

அந்த நேரம் சரியாக மகிழினி spr ஐ தேடி வந்தவள் இவர்கள் நெருக்கத்தை பார்த்து விட்டாள்.

மனதில் இப்போது ஒரு நிம்மதி அப்போ நான் நினைத்தது சரி தான் தேஜு அக்கா மாவாவை விரும்புறாங்க ….

அப்போ மாவையா அவர் என்னாச்சு என் பின்னாடி சுற்றுகிறார். ஒரு வேளை அத்தை பொன்னு தான் கல்யானம்பண்ணனும் அப்டினு எதுவும் இருக்குமா . தேஜு  அக்கா தான் விருபுகிரார்களா …. அப்போ மாவாய்யா இல்லயே அவர் என்னை பார்க்கும் விதம் அதிக அன்பு அதிக காதல் ஆனால் எனக்கு தான் அந்த காதல் பார்வையை ஏற்று கொள்ள முடிய வில்லை …

ம்ம் பார்கலாம் இது எங்கே போய் முடியுமோ…என நினைத்து அவள் அங்கே இருந்து வந்து விட்டாள்.

சூர்யா திமிர் பிடித்தவனே… இரு டா …. இனி என் ஆட்டம் ஆரம்பம்….

உடனே spr சுயநினைவுக்கு வந்தவன் அவளிடமிருந்து விலகி  தேஜு வை பார்த்து நீ அவளை மாதிரி ஆகனும் அப்படினு ட்ரை பண்னாத….

உன்னால அவளை மாதிரி ஆக முடியாது என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த அவள் இவன் என்ன சொல்கிறான். நான் யாரை மாதிரி ஆகனும் அப்டின்னு முயற்சி பண்றேன்…. சரி ஒகே நல்லா தான் போகுது கேம்….

இன்பா இது நீ தானு எனக்கு தெரியும்…. ஓகே லெட் சீ வாட் ஹெப்பன்….

இங்கே மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்த மகிழினி அருகே spr வந்தவன் . பொம்மாயி ….

இவள் புன்னகை முகத்துடன் மாவைய்யா…

எதுவும் பிரச்சனை யா….

இல்ல …

நீ ….

உங்களை தேடி தான் வந்தேன்…

புடவை செலக்ட் பண்ண போலாமா….

ம்ம் எனக்கு இதெல்லாம் தெரியாதே….

சரி ஓகே நான் போறேன்…

Spr சிரித்தவன் ஹே நான் சும்மா சொன்னேன் வா போகலாம்….

மகி மனதில் சூர்யா இதோ வரேன் டா … ஹிஹிஹி… என மனதில் சிரித்து கொண்டே அவனுடன் உள்ளே சென்றாள்.

அங்கு சூர்யா ஜானுவுடன்  வரவேற்புக்கு உண்டான ஒரு ட்ரெஸ் செலக்ட் செய்து கொண்டு இருக்க

இவள் கொஞ்சம் சத்தமாக உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்…

ஜானு திரும்பி பார்த்தாள். சிகப்பு ….ம்ம் நானும் அதை தான் நெனைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க…

அத்தான் அக்கா, அண்ணா அவங்க என்று வெண்பா சொல்ல சூர்யா இது அவ டர்ன் என்று சுபா சிரிக்க 

சூர்யாவுக்கு இங்கு தன் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

இவளை என்ன பன்றது… இங்கே மகி spr கிட்ட 

பிளீஸ் சூஸ் இட்…

மகி அருகில் spr அந்த புடவை எடுத்து அவள் மேல் போடும் நேரம்

ஒரு நிமிடம்… ????

 ஒரு குரல் யார் அது????

தொடரும்….

Episode 98,

சூர்யாவுக்கு இங்கு தன் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

இவளை என்ன பன்றது… இங்கே மகி spr கிட்ட 

பிளீஸ் சூஸ் இட்… என்று மகிழினி spr கிட்ட சொல்ல அவன் ஒரு சிகப்பு நிற வெள்ளி மற்றும் தங்க ஜரிகை வைத்த ஒரு அழகான வேலைப்பாடு உள்ள ஒரு புடவையை பார்த்தவன் அதை எடுத்து

மகி அருகில் spr அந்த புடவை எடுத்து அவள் மேல் போடும் நேரம்

ஒரு நிமிடம்… என்று ஒரு குரல் கேட்க இப்போது சூர்யா மட்டுமல்ல அங்கு உள்ள அனைவரும் யார் என்று திரும்ப வேறு யார் தேஜூ தான் ஒரு புலியை போல தன் கூந்தலை ஒரு பக்கம் போட்டு கொண்டு ஒவ்வொரு அடிகளாக அங்கு இருந்த அனைவரயும் அவளது காந்த பார்வையால் கவர்ந்த படி நடக்க மகிழினி தேஜூவை பார்த்து விட்டு அனைவரையும் பார்க்க எல்லோரும் தேஜு வருவதை பார்த்து கொண்டு இருக்க

சூர்யா மகியை பார்த்து விட்டு இவள் வேஸ்ட்… என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு உடனே தன் பார்வையை இப்போது தேஜுவை ரசிப்பது போல் பார்க்க ….

இப்போது மகிழினிக்கு கோபம் வந்தது. சூர்யா ஐ வில் கில் யூ …. ஸ்கௌன்ட்ரல்….

திட்டிக்கோ… என்ன வேணா பண்ணிக்கோ…

சூர்யா உள்ளுக்குள் சிரித்தான்… இன்னும் உனக்கு நிறைய வெயிட்டிங் டி…

இப்போது கோபம் வர ஆனால் spr ஒரு நிமிடம் தான் அவளை பார்த்தான். பின் அவன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டான்.

Spr அருகில் வந்தவள் க்கும், மகி நானும் செலக்ட் …

Spr அருகில் தேஜு வரவும் அவன் அந்த புடவையை அப்படியே போட்டு விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டான்.

இப்போது மகிளினி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க தேஜூ மகியை இழுத்து ஒவ்வொரு புடவையாக அவள் மேல் போட மகியின் கண்கள் தன்னை அறியாமல் சூர்யாவை பார்க்க அவனும் இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு புடவையும் வைக்க சூரியாவின் பார்வை வெளிப்படுத்தும் கண் ஜாடயில் இவள் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் அவன் மொழிகளை புரிந்து கொண்டு

 சூரியா புருவம் நெருக்கினால் வேணாம் அக்கா… 

அவன் வேறு புறம் திருப்பினால் நன்றாக இல்லை…

இப்படி தன்னவனின் ஒவ்வொரு அசைவையும் படித்து கொண்டு இருந்தாள் அந்த காதல் பேதை.

சூர்யா இறுதியில் ஒரு புடவையில் அவன் முகம் பிரகாசிக்க மகி அதனை திருப்தியாக மேலே போட்டு கொண்டு பார்க்க 

தேஜு spr ஐ பார்க்க அவன் கோப கண்களால் அவளை பார்க்க ஹே போடா **** சில வார்ததைகளை மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

Spr மனதில் இந்த தேஜு இவளை பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும். இவ்வளவு நாள் எந்த ஒரு சலன பாரவையும் என்னை பாதிக்க வில்லை ஆனால் இன்று என மகியை ஒரு பார்வை பார்த்தான்.

பொம்மாயி … சால பாக உந்தி , மீரு அந்தன்கா கணிபிஸ்த்துன்னாரு…(ரொம்ப நல்லா இருக்கு, மிகவும் அழகாக இருக்கிறாய்)

உடனே மகிழினி புன்னகை முகம் கொண்டு சாள தன்யவாதாலு மாவைய்யா..  (மிகவும் நன்றி)

என்று சூர்யா தேர்ந்து எடுத்த புடவையே spr யும் தேர்ந்தெடுத்தான்.

 சூர்யா மனதில், என் பார்வையோட அர்த்தம் தெரிஞ்ச இவளுக்கு என் மனசுல என்ன இருக்கு அப்டின்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறா ஃப்ராடு…

ம்ம் அப்போ எனக்கும் ஓகே என்று தேஜூ spr கிட்ட சொல்லி விட்டு உனக்கு ஓகே தானே sp….

இப்போது மகி கேள்வியாக என்ன மாவா அக்கா என்ன சொல்றாங்க…

Sp இப்போது அவளை பார்க்க 

ம்ம் சொல்லு உன்னோட பொம்மாயி கிட்ட …. என ஒரு தந்திர புன்னகை சிந்தினாள்.

பொம்மாயி வீட்டுக்கு போலாம் ஐ ஃபீல் டையர்ட்….

ம்ம் போலாம் என்று அந்த பேச்சை அதோடு நிறுத்தி கொண்டு கிளம்பினர்.

சூர்யா அங்கு நடந்த அனைத்தும் பார்த்து விட்டு ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது. இந்த தேஜுவுக்கும் sp க்கும் நடுவில் எதோ இருக்கு அதை கண்டு பிடிக்கனும் என்று நினைத்து கொண்டு கிளம்பினான்.

சரியாக அவர்கள் கடையில் இருந்து வெளியே வரவும் குரு sprயை நோக்கி வேகமாக நடந்து வந்தான்.

கண்டுபிடிச்சிட்டியா…..

குரு அவனை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்…

ஏன்ட்ரா ….

அண்ணா இது ஆர்மி ஹெட் குவாட்ரஸ் ல இருந்து வந்து இருக்கு ஆனால் யார்ன்னு கண்டு பிடிக்க முடியல….

அப்போது தான் சூர்யா ,சரவணன் முன்னே நடக்க ஜாணு, வெண்பா, சுபா மூவரும் பேசிக்கொண்டே தொலைவில் வர

சூர்யாவுக்கு அப்போது spr பேசிய அனைத்தும் கேட்டு விட்டான்.

ம்ம் பார்க்கிறேன் யாரு என் முதுக்குகு பின்னாடி இவளோ வேலை செய்யுராங்க…

அவனுங்க எல்லாம் பொ***** பசங்க என்று spr சொல்ல இது அத்தனையும் சூர்யா கேட்டு விட்டான்.

உடனே அவன் கைகள் பரபரக்க நரம்புகள் புடைக்க அவனை அடிக்கும் நோக்கில் செல்ல சரவணன் சூர்யாவை இழுத்து ஜனனியும் சேர்ந்து கொண்டு அழைத்துச் சென்று விட்டாள்.

சரவணா விடு டா… என்று அவனை தட்டி விட ஜானு அவன் தள்ளி விட்ட வேகத்தில் சுபாவின் மேல் போய் விழுக சுபா அவளை தாங்கி கொண்டாள்.

அத்தான் …. சாரி சாரி ஜானு இப்போ ஓகே தான..  அடி எதுவும் படல தானே எதுக்கு என் பக்கத்தில் வந்த நான் இப்போவே அந்த*”*”என அவன் சில வார்த்தை பேச வர சரவணன் சூரியாவின் வாயை பொத்தினான்.

ஹே சூர்யா..  என்று சரவணன் அவனை இழுத்து சென்றான்.

ஹே பைத்தியமா டா நீ ….

அவ என் பொண்டாட்டி டா, எனக்கு தெரியாமல் இவன் தூக்கி வந்து அவ சுயத்தை மறக்க வச்சு இப்போ கல்யாணம் பண்ணிக்க போறான். அதுவும் என் மகியோட விருப்பம் இல்லாமல் மிரட்டி பண்ண போறான்… இப்போ  யாருடா பொ** சொல்லு சரவணா….

என்று அவன் அங்கும் இங்கும் நடந்தான் தன் தலையை வேகமாக கோதி கொண்டவன். தன் உதடுகளை அழுத்தி கடித்து கொண்டான்.

இனி கண்ணா மூச்சி ஆட்டம் போதும் அடுத்து உன்னை நேரடியாக தான் சந்திப்பேன் அவளும் என்னை இப்படி தானே நினைத்து இருப்பாள். 

இருக்கு டா வரேன்…. என சூரியா கருவினான்.

இங்கு spr கிட்ட குரு அண்ணா எனக்கு ஒருததர் மேல டவுட்டு ….

எவரு….

அந்த சூரியா அவனா இருக்குமா  ….

அவனா அவன் நம்ம முன்னாடி தானே இருக்கான்….

அதுவும் இந்த விஷயம் யாருக்குமே தெரியாது இது எனக்கு, நாதன், தேஜு என நிறுத்த…

தேஜு வா இருப்பாளா…. அண்ணா தேஜு வ இப்படி நினைத்து விட்டாய்…

வாய்ப்பே இல்லை….

பார்க்கலாம் யாருன்னு தெரியட்டும் அப்புறம் அவங்கல அதுக்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்..

ம்ம் முக்கிய விசயம்….

இது பொம்மாயி, மாயா ,வீட்டில் அம்மா ,நாநா யாருக்குமே தெரிய கூடாது. என்று சொல்லி பேசி விட்டு வீடு கிளம்பினர்.

அடுத்து சூர்யா வீட்டுக்கு சென்றவன் அன்று வாங்கி வைத்து இருந்த மொத்த ஒயின்களை எல்லாம் ஒரே நேரத்தில் குடித்து தீர்த்தான்.

Spr சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் காதில் கேட்டுகொண்டே இருந்தது. அவன் மனம் மூளை நரம்பு எல்லாம் ரௌத்திரம் மட்டுமே….

மூன்று நாட்கள் வேகமாக சென்றது.

அடுத்த நாள் விடிந்தது இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இருந்தது.

கடந்த மூன்று நாட்களும் மகிழினிக்கு சூர்யாவின் நினைவுகள் மட்டும் தான் மனது எதோ தவறாக நடக்க போவதாக சொல்லியது.

இதற்கும் மேல் இன்னும் ஒரு நிமிடம் இங்கு இருந்தாலும் பைத்தியம் பிடித்து விடும் என்று நினைத்தவள். சூர்யாவிடம் பேச முயர்சி செய்தாள்.

முதலில் இரு முறை அழைக்க அழைப்பு சென்றது. ஆனால் எடுக்க வில்லை. அதற்கு அடுத்த முறை மகி அழைக்க அணைக்க பட்டு விட்டது என்று வரவும் இப்போது மகிழினி க்கு கிளி பறந்தது.

சூர்யா நீ என்னை மறந்து விட்டாயா, இல்லை கோபமாக இருக்கிறாயா… என்னோட தப்பு தான் இப்போ உன்னை பார்க்கனும் எனக்கு இப்போ என்ன செய்வது அப்டின்னு தெரியலையே… என அழுதாள்.

அடுத்த நாள் மருதாணி வைக்கும் விழா அதிலும் அரை மனதுடன் கலந்து கொண்டு கைகளில் வைத்து கொண்டாள்.

இன்னும் இரண்டு நாட்கள் .. இரண்டே நாட்களில் கல்யாணம் சூர்யா எந்த ஒரு அடியும் எடுத்து வைக்க வில்லை என்று தெரிந்து கொண்ட மாயா தன் மனதை கல்லாக்கி கொண்டு ஒரு காரியத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வைத்தார்.

இங்கு spr மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் ஆசைப்பட்டது இப்போது இன்னும் இரண்டு நாட்களில் அவன் கைகளில் மகிழினி கிடைக்க போகிறாள்.

திருமணத்திற்கு உண்டான அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடக்க இங்கு மகி விடாமல் அவன் எண்ணுகு முயற்சி செய்தாள். அது அவள் குழல் கண்ணனுக்கு கேட்டது போலும்… சூர்யா இந்த முறை போன் எடுத்தான்.

அவன் போன் எடுத்த மகிழ்ச்சியில் இவள் சூரியா…

என்ன வேனும்…. என்று வெறுப்பு நிறைந்த குரல் தான் அவளுக்கு கிடைத்தது.

இவள் கண்களில் கண்ணீர் வர, எனக்கு உன்னை பார்க்கனும், பேசணும்…

அதற்கு சூர்யாவோ , எனக்கு டைம் இல்ல எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லு எனக்கு வேலை இருக்கு…

மகி தன் கண்ணீரை கட்டு படுத்தி கொண்டு, நான் நேரில் உன்னை பார்த்தே ஆகனும்….

ம்ம், வந்து பார்த்து விட்டு போ…. என சூரியா சொல்ல…

மகிக்கு புரிந்து விட்டது இதற்கு எல்லாம் அவள் தானே காரனம்..இப்போது அவளே அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று 

எப்போ வரனும்?

எங்கே வரனும் சொல்லு சூர்யா?

தொடரும்…

சூர்யாவிடம் என்ன பேச போகிறாள்?

இன்னும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது சூர்யா என்ன செய்ய போகிறான்…

மகிழினியும் சூர்யாவும் ஒன்று சேர்வார்களா.???.

இல்லை சூர்யாவின் உயிர் காக்க spr யை திருமணம் செய்து கொள்வாளா….

அடுத்த பகுதியில் பார்க்கலாம் 

 Episode 99, 

சூர்யாவிடம் மகிழினி எங்கே வர வேண்டும் என்று கேட்கவும் அவனுடைய கெஸ்ட் ஹவுஸ் வர சொன்னான்…

இன்னிக்கே வரட்டுமா….

இன்னிக்கு நான் ரொம்ப பிசி… இந்த மாதிரி உன் கிட்ட பேச எனக்கு சுத்தமா நேரம் இல்ல…

அப்போ நாளைக்கு வரட்டுமா…

ம்ம் உனக்கு வெறும் 10நிமிடம் தான் டைம் வந்தத சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்.

அவன் வார்த்தை கத்தி போல் வீசுவதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 ம்ம் சரி நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி போன் வைத்தாள்.

போன் வைத்தவுடன் அவள் மனதில் ஆயிரம் கேள்விகள், அடுத்த நாள் இவர்கள் சந்திப்பு எதிர் பார்த்து சூரிய தேவன் சீக்கிரம் வந்தான். அதாவது விடிந்து விட்டது.

மகிழினிக்கு என்ன செய்ய என்று ஒன்றும் புரியாமல் என்ன செய்வது எப்படி கேட்டு செல்வது என்று இவள் யோசித்து கொண்டே கீழ வந்தாள்.

அவள் நேராக spr யை பார்க்க சென்றாள்..

பொம்மாயி…

ம்ம் மாவா.. 

என்ன உன் முகம் ஒரு மாதிரி இருக்கு….

ஒன்னும் இல்லை மாவா …

சொல்லு …

எனக்கு கொஞ்சம் டிபிரஸ்ட் ஆ இருக்கு அதனால் வெளியே போயிட்டு வரட்டுமா…

இதென்ன கேள்வி உன் விருப்பம் என்றான்…

சரி கிளம்பு… நானும் உன் கூட வரேன்…

மகி இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. 

மாவா நான் மட்டும் போயிட்டு வரட்டுமா…

நீ மட்டுமா… அந்த நேரம் அவனுக்கு போன் கால் வர அதை பேசியவன்….

அதை வைத்து விட்டு ம்ம் எங்கே போற….

நானா நான் அப்படியே மால் க்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்.

வேற எங்கேயும் போக வேணாம் அதுவும் இன்னும் ரெண்டு நாளில் பெல்லி …

மாவா நான் நம்ம மால் க்கு தான் போறேன் அங்க கூட போக கூடாதா…

சரி ஓகே நீ போயிட்டு வா ….

அப்போ நீங்க வராலயா…

எனக்கு கொஞ்சம் முக்கியமா வேலை இருக்கு..

ம்ம் சரி நான் போயிட்டு வரேன்…

அவள் வெளியே செல்கிறாள் என்று தெரிந்ததும் நிறைய பாதுகாப்புடன் ஏர்பாடு செய்தான்.

அவள் மாலுக்கு உள்ளே வந்ததும் கூடவே பெண், ஆண் என அவளை சுற்றி கார்ட்ஸ் இருக்க எப்படி இவர்களை விட்டு செல்வது என யோசித்தாள்.

உடனே அங்கு இருந்த ஒரு சாப்ட்வர் கடைக்குள் சென்றவள் ஒரு லேப் டாப் எடுத்து அந்த இடத்தில் உள்ள பாதுகாப்பு கேமரா எல்லாம் ஒரு நோட்டம் விட்டு கண்டறிந்தவள். 

சில வேலைகள் செய்து பின் வெளியே வந்தவள் அருகில் உள்ள அழகு நிலையம் உள்ளே சென்றவள்.

அவள் கூடவே பெண் கார்ட் எல்லாம் பின்னோடு வர இப்போது spr க்கு போன் செய்தாள்.

மாவா பார்லர் உள்ள கூட ஃபாலோ பண்றாங்க..

எனக்கு டென்ஷன் ஆகுது…

சரி ஓகே நான் பார்க்கிறேன் விடு…

உடனே அவர்கள் வெளியே நிற்க அடுத்த வேலையை ஆரம்பித்தாள்.

பின் பக்கம் உள்ள நுழைவு வாயில் வழியாக கிளம்பி விட்டாள்.

ஒரு ஆட்டோ பிடித்து சென்றாள். அவள் போனை அந்த அழகு நிலையம் உள்ளே வைத்து விட்டாள்.

இவ்வளவு காவல் வைத்து இருக்கும் அவன் spr கண்டிப்பாக ட்ராக் எதுவும் வைத்து இருப்பான்.

இந்த வேலை எல்லாம் முடிக்கவே மணி 11.00 ஆனது. நேராக சூரியாவின் கெஸ்ட் ஹவுஸ் சென்றாள். அவளை பார்த்ததும் உள்ளே விட்டார் அந்த வீட்டின் வேலை ஆள்.

அம்மா எப்படி இருக்கீங்க…. சின்ன தம்பி நல்லா இருக்காகளா…

இவள் வந்த பதட்டத்தில் ம்ம்…

சூர்யா இருக்காரா…

நீங்க உள்ளே போங்க மா அவரு உள்ளே தான் இருக்காரு…

ரெண்டு பேரும் தனியாக வந்து இருக்கீர்கள்…

இதை சொன்னதும் அந்த பணியாளரை வித்தியாசமாக பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றதும் அந்த வீட்டின் முன்னால் அமர்ந்தாள். 

கதவை தட்ட கதவு திறந்தது.

சூர்யா போனில் யாருடனோ பேசி கொண்டே அவளை உள்ளே விட்டான்.

சோபாவை காட்டிட அவள் அங்கே அமர்ந்தாள்.

சூர்யா அவனுடய லேப் டாப் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான். அவளை கண்டு கொள்ளவே இல்லை  மகிழினி காத்திருந்தாள்.

சூர்யா…

ஒரே ஒரு பார்வை அதன் அர்த்தம் காத்திரு என்று சொல்வது போல் இருந்தது.

வீட்டின் வெளியே இருந்து சூர்யாவின் அம்மா செய்து கொடுத்த உணவை எடுத்து வந்தாள் ஜனனி.

அப்போது அங்கே வந்த ஜானு கைகளில் மதிய உணவு கொண்டு வர 

பின் ஜனனி இவளை பார்த்து சிரித்த முகத்துடன் ஒரு மாதுளை ஜூஸ் போட்டு அவளிடம் நீட்ட உடனே முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு அவள் சூரியாவிடம் அத்தான் சாப்பிடுங்கள் நான் கிளம்புகிறேன் 

இவள் ஜனனியைப் பார்த்ததும் கோபம் வர  முறைத்து கொண்டு இருக்க..

சூர்யா மகிழினியை கண்டு கொள்ளாமல் ஜானு ஊட்டு என்று சொல்ல,

அத்தான்!!!… 

ம்ம் சீக்கிரம் எனக்கு பசிக்குது…

ம்ம் என்று அதட்ட உடனே வேறு வழி இல்லாமல் அவள் ஊட்டி விட்டாள்.

மகிழினிக்கு பசி எடுக்க வேறு வழி இல்லாமல் அந்த ஜுஸ் எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு அவனை பார்த்தாள்.

அவன் மிகவும் மெதுவாக பொறுமையாக சாப்பிட்டான்.

ஜனனி எதுவும் சொல்லாமல் ஒவ்வொரு ஸ்பூனாக ஊட்டி விட்டாள்.

மகி கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை இயற்கை அழைக்க தண்ணி குடிப்பது ரெஸ்ட் ரூம் செல்வது என இருக்க இப்போது சூரியா அவள் முகத்தைப் பார்த்தான்.

ஜனனி சூர்யா சாப்பிட்டு முடித்ததும் அக்கா…

ஒரு கோப பார்வை…

கொஞ்சம் சாப்பிடுங்க என சொல்ல 

தேவை இல்லை….

ஜானு… 

அத்தான்…

உன் வேலை முடிஞ்சது தானே …

ம்ம் …

அப்போ கிளம்பு…

ஜானு இருந்தும் மனம் கேட்காமல் இன்னொரு கிளாஸ் ஜுஸ் வைத்து விட்டு சென்றாள்.

மணி இப்போது 1.30 ஆக  சூரியா அவளை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க இவனை கோப பார்வையில் பார்த்து கொண்டு இருந்தாள்.

அருகில் இருந்த ஜுஸ் எடுத்து பசியில் குடித்தவள் மீண்டும் ரெஸ்ட் ரூம் சென்றாள்.

அப்போது ரெஸ்ட் ரூம் அருகே உள்ள ரூமுக்குள் அவள் கால் வைக்க போக 

க்கும்…

சும்மா உள்ளே பார்க்க வந்தேன். சூர்யா அவள் கைகளை பிடித்து தரதரவென இழுத்து கீழ கூட்டி வந்தான்.

அவள் எதுவும் பேச வில்லை அவன் கூட அமைதியாக வர அவளை சோபா பக்கம் நிற்க வைத்தவன். இப்போது சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

ம்ம் சொல்லு…

சூரியா …

பதில் இல்லை ஆனால் அவள் முகத்தைப் பார்த்தான்.

சூர்யா ….

ம்ம் ம்ம் என்ற அழுத்தமான சத்தம்…

எனக்கு நாளைக்கு கல்யாணம்…

ம்ம் கங்கிரட்ஸ்…

இப்போது கண்களில் கண்ணீர் வந்து விழுந்தது.

சூர்யா என்ன சொல்ற நீ …

கல்யாணம் சொன்னால் இது தான் எல்லாரும் சொல்லுவாங்க மிஸ் மகி

சாரி சாரி மகிஷவர்தினி சரியா…

சூர்யா பிளீஸ் நான் செய்தது தவறு தான் என்னை மன்னித்து விடு 

நீங்க என்ன தவறு செய்தீர்கள்…

இவள் அனைத்தும் பட்டியல் போட, ம்ம் இப்போ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.

உனக்கு நான் வேண்டாமா….

இப்போது எழுந்து அவள் அருகில் வந்தவன் அவளை சோபாவில் தள்ளி,.

நீ எதுக்கு என்னை விட்டு கொடுத்த … 

நா.. நான் அது வந்து…

சொல்லு நீ தானே அன்னிக்கு போன் ல நீ யாரயாவது கட்டி சந்தோஷமா இரு அப்டின சரியா…

ஆமாவா… இல்லையா…

அவன் கோப விழிகளை பார்த்து பயந்தவள்..

ம்ம் ஆமா…

அப்போ இப்போ எதிக்கு இங்க வந்த…

நான் தெரியாமல் சொல்லி விட்டேன் என்னை மண்ணித்து விடு பிளீஸ்…

ஓகே இத அப்புறம் பார்க்கலாம்.

இப்போ எதுக்கு யாருக்கும் தெரியாமல் வந்த..

போய் சொல்லி இருக்க வேண்டியது தானே நான் சூர்யாவை ஐ மின் சூர்ய தேவ் அ தான் விரும்பினேன் .

அவள் கண்களில் நீர் வந்து கொண்டே இருந்தது.

எனக்கு பயமா இருக்கு உன்னை எதுவும் செய்து விட்டால் இந்த வார்த்தை கேட்டு கோபத்தினால் தகித்தான்.

இப்போது ஒரு ஏழன புன்னகை சிந்தியவன். அப்போ நான் ஆண்பிள்ளை இல்லன்னு சொல்ற …

சூர்யா என்று ஒரு அழுத்தமான சத்தம் குரல்

பின்ன எப்படி … ம்ம் சொல்லு.. 

அவன் கிட்ட நான் ஆண் பிள்ளை அப்டின்னு உன் கண் முன்னாடி நிரூபிக்கிறன் டி..

ஓ! நான் ஆண்பிள்ளை யா அப்படினு உனக்கு சந்தேகமா இருக்கு தான அதனால் தான் அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா…

சூர்யா பைத்தியமா நீ… 

எதுக்கு என்னை இப்டி கொல்ற…

நான் அன்னிக்கே செத்து இருக்கனும்….

என்ன சொன்ன இப்போ… இந்த வார்த்தகளை கேட்ட உடன் அவன் கோபம் எங்கே போனது என தெரிய வில்லை.

ஒ ஒன்னும் இல்லை…

ஹே சொல்லு டீ…. பிளீஸ் நீ போ… நான்… என்னை தேடுவார்கள்…

ஹே என்னடி இப்போ சொன்ன….

அன்னிக்கு …. எப்போ என்ன பண்ணுன… 

அது ஒன்னும் இல்ல…

இப்போது அவளை நெருக்கியவன் அவள் கழுத்தை நெரித்து சொல்லு…

நான் என்று ஆரம்பித்து அன்று நடந்த விஷயம் சொல்ல ….

சூர்யா அவள் கன்னத்தில பளார் என்று ஒரு அறை விட்டான்…

இதை மகி சற்றும் எதிர்பார்க்கவில்லை. சூர்யா அவளின் நெஞ்சில் கை வைத்து இது என்னோட உயிர் உன்னோட மொத்தமும் எனக்கு சொந்தம் இந்த உயிர நீ எதும் செய்ய உனக்கு உரிமை இல்லை ….

யாரை கேட்டு நீ இந்த வேலை பண்ணுன பைத்தியமா டி நீ ….

ஒரு வேளை மாயா அவங்க வராமல் போயிருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்தவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவள் முகமெல்லாம் முத்தமிட்டான்.

இப்போது தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று உணர்ந்தவன் அவளை விட்டு தள்ளி நின்று கொண்டான்.

உடனே சூரியாவின் கைகளை மகிழினி அழுத்தமாக பிடித்து கொள்ள 

ஒரு நொடி அவளை பார்த்தவன் அவளின் இதழ் மேல் மையல் கொண்டான். அது என்ன உணர்வு என்று சொல்ல தெரிய வில்லை அவள் வேண்டும் என்று சூரியாவின் ஒவ்வொரு அணுவும் ,மகிளினிக்கும் அது போல தான்…

இப்போது அவளை விட்டவன் மகி உனக்கு எது சரியா படுதோ அதை செய் இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். என்று கூறி கதவருகில் சென்றவன் 

அப்போ நான் மாவாவை கல்யாணம் பண்ண உனக்கு பிரச்சனை இல்லை….

அப்போ நீ அமுத சுரபி ய கல்யாணம் பண்ணிக்க போறியா….

சூர்யா திரும்பி அவள் அருகில் வந்தவன் இப்போ உனக்கு என்ன டி பிரச்சனை கொஞ்சம் வாய திறந்து சொல்லு….

சூர்யா எனக்கு நீ வேணும் ஐ லவ் யூ ….

என்று மகி அவளின் முதல் முத்ததினை அவன் உயரத்திற்கு இவள் எட்டி அவன் இதழில் முத்தம் கொடுக்க அவன் அவள் இதழ்களை விட வில்லை.

ஒரு 5 நிமிடம் நீடித்தது. அவளை விட மனம் இல்லாமல்  விட்டவன்.

மகி  எனக்கு இப்போ ஐ நீட் யூ …

அவள் பின்னால் திரும்பி கொண்டு எடுத்துக்கோ சூர்யா….

ஹே ஆர் யூ சீரியஸ்…. ஐ யம் சீரியஸ் சூர்யா ….

ஹே நான் சும்மா சொன்னேன் ….

நான் சும்மா சொல்லல உன்னோட லவ், நீ எனக்கு கிடைச்சாலே எனக்கு போதும்…. 

உன்னை எடுத்துக்குவேன் ஆனால் இப்போ இல்லை. முதலில் அவன் முன்னாடி நான் ஆண் பிள்ளை அப்டின்னு நிரூபிச்சு அதுக்கு அப்புறம் தான் உன்னை எடுத்துப்பேன். என்று மனதில் கூறி கொண்டான்.

அடுத்து சூர்யா கேட்கும் கேள்வியில்

மகிழினி அதிர்சி முகத்தை காட்ட!!!

தொடரும்….

Episode 100.

என்னை எடுத்துக்கோ சூர்யா…

நிஜமா தான் சொல்றியா அப்புறம் இதை நெனைச்சு நீ வருத்த பட கூடாது.

இல்ல நான் ஃபீல் பண்ணல என்று தலை குனிந்து கொண்டே அவள் சொல்ல 

அருகில் வந்தவன் அவளை தூக்கி கொண்டு படுக்கை அறை சென்றான்.

படுக்கை அறை சென்றவன் அவளை மெதுவாக  படுக்கயில் கிடத்தினான். 

இப்போது அவளை ஒரு முறை பார்க்க சூர்யாவின் பார்வையில் தேகம் கூச வேறு புறம் திரும்பி கொண்டாள்.

ஹே இங்கே பாரு டி…

அவள் திரும்ப வில்லை…

மகி என்னை பாரு …

இப்போது அவள் திரும்ப அவள் அதரங்களை அவன் வசமாக்கினான். தன் சட்டை பட்டன் ஒவ்வொரு பொத்தான்களையும்  கலட்டி கொண்டே ஒரு புறம் முத்தமும் நீண்டு கொண்டே போனது. அவள் கூந்தலில் களைத்து விட்டான். அவள் கழுத்து பகுதியில் மோகம் கொண்டவன் இப்போது மெதுவான குரலில் மகி …

பதில் சொல்லு….

மகி …

ம்ம்…

அவள் காதுக்கு அருகில் வந்து ஒரு வேலை நான் உன்னை எல்லாம் முடிச்சு ஏமாற்றினால் என்ன செய்வ ….

மகிழினி இப்போது அதிர்ந்து சூர்யாவை பார்த்தவள். நான் உன்னை இப்போ நிஜமாவே ஏமாற்ற போறேன் என்று அவன் வேண்டும் என்றே வன்மையாக இதழில் முத்தமிட்டு இப்போது கழுத்து பகுதியில் சில பல் தடங்கள்  செய்தான்.

அப்போதும் அவள் எந்த ஒரு எதிர் வினையும் செய்யாமல் இருக்க இப்போது எழுந்து அருகில் அமர்ந்து கொண்டான். 

இப்போது அவள் சிரித்து கொண்டே சூரியாவின் அருகில் வந்தவள் இது என்னோட சூர்யா இப்போ தெரியுதா…

இப்போது மகிளினி பேசினாள். ஒரு வேளை நீ என்னை ஏமாற்றினால் நான் யாருக்கும் சொந்தமாகி வாழ மாட்டேன்.

உன் குழந்தைய மட்டும் தான் இந்த வயிற்றில் சுமப்பேன் டா…

உடனே சூரியா அவளை அணைத்து கொண்டான். ஐ லவ் யூ டி… நீ இதே நம்பிக்கை கொண்டு வீட்டுக்கு போ…

மகி இப்போது சூர்யாவை பார்த்து நான் உனக்காக காத்திருப்பேன் சூர்யா என் கழுத்தில்  நீ கட்டுவது தான் தாலி இல்லை நான் செத்து விடுவேன்.

ஹே லூசு மாதிரி பேசாதே…

ம்ம் சரி ஓகே எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு என அணைத்து கொண்டாள்.

சூர்யா அவளை பத்திரமாக அந்த மாலில் கொண்டு போய் விட்டு அவள் கிளம்பியவுடன் வீட்டுக்கு வந்தான்.

மகிழினி முகம் இப்போது தெளிவாக இருந்தது.

இங்கு பிரியா இன்பாவிடம், இன்பா நீ சொன்னது போலவே இது எல்லாம் சரோகசி மற்றும் இந்த DNA மாற்றம்  எல்லாம் பண்ணி இருக்காங்க அதுள நமக்கு ப்ரூஃப் எல்லாம் அந்த பெங்களூர் பிரான்ச் ல இருந்து தான் கிடைத்து இருக்கு…

அப்புறம் இன்னொரு விஷயம் இதுக்கான ஆதாரம் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன். என்று ஒரு கோப்பினை நீட்டினாள். 

இன்பா அதை வாங்கி பார்த்தவன் ம்ம் ஓகே பிரியா … அப்புறம் இந்த சூர்யாவுக்கு கொடுத்த மருந்துக்கு மாற்று மருந்து என்னாச்சு…

ஹே அது கொஞ்சம் டைம் எடுக்கும் …

ஹே சீக்கிரம் ரெடி பன்னு…

ம்ம் சரி என பிரியா சொல்ல இன்பா இப்போது சந்தோஷ மன நிலையில கிளம்பினான்.

குரு நாளக்கு இருக்கு டா உனக்கு என நினைத்து கொண்டவன் இந்த ஆதாரம் பற்றி யாரிடமும் பேச வில்லை.

அப்போது இன்பாவுக்கு ஒரு போன் கால் வரவும் எடுத்து காதில் வைத்தவன் வாயில் வார்த்தைகள் வர வில்லை அவ்வளவு சந்தோஷம் மட்டுமே ..

ஒரே கல்லில் நிறைய மாங்காய்கள்… 

இங்கு மகி spr வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். அவள் மிகவும் உற்சாகமாக இருப்பதை பார்த்து spr மந்திலும் உற்சாகம் எட்டி பார்த்தது.

அவள் கன்னம் மட்டும் கொஞ்சம் சிவந்து இருந்தது..

அதை பார்த்த sp பொம்மாயி…

மாவா.. 

உன் கன்னத்தில என்ன…

அது ஒன்னும் இல்லை கொஞ்சம் ஃபேஷியல் பண்ணும் போது இப்படி ஆகி விட்டது.

ம்ம்…

அவள் உள்ளே ஓடி விட்டாள்.

உள்ளே சென்றவள் தன் போனில் அந்த ட்ராக் கால் ரெகார்ட் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தாள்.

மாலை ஆனது வீட்டில் கல்யாணத்துக்கு உண்டான கலை வந்தது. 

மகி மற்றும் spr இருவரையும் அழைத்து கைகளில் கங்கணம் கட்டி விட்டனர்.

அவள் மனதில் கொஞ்சம் மட்டும் வருத்தம் ஆனால் எப்படியும் சூர்யா காலைல வந்து கூட்டி செல்வான் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது.

திருமணத் தை கொஞ்சம் சிம்பிளா வைத்து கொண்டு வரவேர்ப்பு  ஆந்திராவில் இவர்கள் கோட்டை போன்ற வீட்டில் இரு நாட்கள் கழித்து வைத்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

நாளை சூர்யதேவ், சூர்ய பிரகாஷ் , மகி, தேஜு, குரு , ரங்கநாதன் (தேஜூவின் அப்பா), இன்பராகவன் அனைவருக்கும் ஒரு புதிய விடிவு கொடுக்க காத்து கொண்டு இருந்தது.

திருமணததிற்கு குறைவான நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து இருந்தாலும் கூட அந்த திருமண அலங்காரம் பார்க்க தேவ லோக திருமணம் போல் காட்சி அளித்தது.

புதிய விடியல் எழுந்தது, அதாவது விடிந்து விட்டது காலையில் நேரத்திலே மகிளினி யை எழுப்பி விட்டு அவளை குளிக்க சொல்லி பின் பிரத்யேக அழகு கலை நிபுணர்கள் வர வைத்து இருந்தான் spr அவர்கள் மகி க்கு அலங்காரம் செய்ய அதனை மாயா தவிப்புடன் பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

இங்கு spr அவனது அறையில் அந்த பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் அழகாக வானத்தில் இருந்து இறங்கி வந்த இந்திரன் போல் காட்சி அளித்தான்.

முகத்தில் புன்னகை அந்த கண்ணகுளிக்கு கூட வலிக்கும் அந்த அளவு ஆனந்த கடலில் இருந்தான்.

இப்போது மண மேடை இன்று வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண ரோஜாவில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண பந்தலிலே தன் மகன் நிதின் கைகளை பிடித்து கொண்டு ராஜ நடையில் போய் ஓம குண்டததின் முன்னால் போய் அமர்ந்தான்.

அருகே இருந்த ஐயர் மந்திரம் ஓத இவனும் சில மந்திரங்களை ஓதிய படி தன்னவளுக்காக காத்திருந்தான்.

இதோ வந்து விட்டாள் அவனின் நாயகி சிவப்பு வண்ண தங்க ஜரிகை புடவையில் அதற்கு கான்ட்ரெஸ் கலர் ல அதாவது கரும் பச்சை வண்ணத்தில் ஆரி வொர்க் போன்ற டிசைன் செய்யப்பட்ட புடவை, பிளவுஸ் அப்புறம் அவள் நிறத்துக்கு ஏற்ப மேட் ஃபினிஸ் முக அலங்காரம், சிவப்பு வண்ண ரோஜா இதழ்மாலை,spr ன் பாரம்பரிய பரம்பரை நகைகளை அணிந்து கொண்டு தலையில் மல்லிகை பூ சூடி கொண்டு வானுலக மங்கை அழகு பதுமையாக வாசம் செய்தாள்.

அவள் அங்கு இருந்து நடந்து வரும் போதே வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் spr. 

சூர்யா பொம்மாயி உனக்கு இப்போ சொந்தமாக போகிறாள். இன்னும் சில நிமிடங்கள் தான் உள்ளது. என மனதில் நினைத்துக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

இங்கு மகிக்கு இப்போது ஒவ்வொரு அடிகளும் மிகவும் பயமாக இருந்தது. அவள் எண்ணம் , சிந்தை முழுவதும் சூர்யா மட்டுமே இருந்தான்.

மிகவும் மெதுவாக நடந்தாள். சூர்யா… பிளீஸ் சூர்யா சீக்கிரம் வந்து விடு….

சூர்யா…

சூர்யா…

..

… சூர்யா என ராம ஜெயம் சொல்வது போல் சூர்யாவை நினைத்துக் கொண்டு வந்தாள். ஆனாலும் கண்களில் கண்ணீர் எப்போது விழுவேன் என நின்று கொண்டு இருந்தது.

இதோ அருகிலும் அமர்ந்து விட்டாள். அவள் அமரும் நேரம் இங்கே சூர்யா அவன் வேலையை தொடங்கினான் .

Spr கார்பரேட் மொத்த சைட் முழுவதும் ஹேக் செய்ய ஆரம்பித்தான். ஆதிக்கு போன் செய்தவன் ரகு, ராம், கார்த்திக்,சரவணன், சுபத்ரா என அவர்களுக்கு சில வேலைகள் கொடுத்து spr பங்குகளை வாங்க ஆரம்பித்தான்.

முதலில் அங்கு இருந்த பணியாளர்கள் சதாரனமாக  அந்த தளத்தில் பார்க்க அதில் பங்கு சந்தை புள்ளிகள் சரிவு ஏற்பட ஆரம்பித்தது 

இங்கு மந்திரம் ஓத தொடங்கினர் மகியோ

சூரியா…

சூர்யா… 

சூரியா… என்று மனதில் தன்னவனின்  மந்திரத்தை கூற ஆரம்பித்தாள்.

Spr நெற்றியில் நெற்றி பட்டை அதே போல் மகிழினிநெற்றியில் நெற்றி பட்டை என கட்டி அடுத்து மந்திரங்கள் ஓத ஆரம்பித்தனர்.

சரியாக அந்த நேரம் அர்ஜுன் வேகமாக spr அருகில் வந்தான்.

சார்…. என பயந்து கொண்டே அவசரத்தில் அழைக்க 

அதே நேரம் துப்பாக்கி சத்தம் கேட்க ஏற்கனவே படபடப்பில்  இருந்த மகிழினி அந்த சத்தத்தில் மயங்கி spr மேல் சாய்ந்தாள்.

பொம்மாயி …. 

பொம்மாயி… என அவள் கண்ணங்களில் தட்ட  அருகில் மாயா அவள் அருகில் வந்து மகி மகி என கண்களில் கண்ணீர் கொண்டு அவள் மேல் தண்ணீர் தெளிக்க போக,

இங்கு குரு யார் என திரும்ப அங்கு இன்பராகவன், கண்ணகுளி தெரிய புன்னகை முகத்துடன் சிரித்து கொண்டே வந்தான். பின்னால் மித்ரன், சாதனா, இன்னும் சில காவலர்கள் என இன்பா முன்னே நடக்க இவர்கள் பின்னால் வந்தனர்.

குரு என்னடா எதுக்கு இங்கே வந்த….

இது ரெண்டுல ஒன்னு தொடு குரு … என இன்பா தன் விரல்கள் நீட்ட,

குரு அவனை பார்த்து முறைக்க ,

இதுக்கு தான் அங்கே இருந்து வந்தாயா..

சும்மா தொடு….

குரு இன்பாவை  நோக்கி அவன் சட்டைய பிடிக்க வர…

ஹே சில் சில் இப்போ எதுக்கு இவலோ கோபம் விடு நானே செலக்ட் பண்ணிக்கிட்டேன்.

ம்ம் இப்போ,

இங்கே யாருக்கோ கட்டாய கல்யாணம் பண்றாங்க அப்டின்னு எனக்கு கம்ப்ளைன்ட் வந்தது….

என்ன உளருர….

நானா … யார் அது கொடுத்தது….

அது சொன்னா எப்டி  சப்புன்னு போயிடும் குரு நான் வேனும் னா அந்த கம்ப்ளைண்ட் காப்பி தரேன் பாருங்க பாஸ்….

குரு வேகமாக இன்பாவின் அருகில் அந்த காப்பியை பிடுங்க வர,

ஒரு நிமிடம் என்று கூறி கொண்டே spr தன் கழுத்தில் உள்ள மாலையை தூக்கி வீசி எழும் நேரம் 

ஒரு நிமிடம்….

இன்னொரு குரல் கேட்க இப்போது spr, குரு , இன்பா, என அனைவரும் யார் என்று திரும்பி பார்க்க….

யார் அது???

தொடரும்….

You may also like

Leave a Comment