Mister ARROGANT PART 7

by Pradhanya kuzhali
442 views

EPI 231

சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும்  அவர்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். 

சித்தார்த் கீழே உள்ள  அறைக்கு செல்ல..  அவளும் பின்னால் சென்றாள். 

சித் ஒரு வித களைப்புடன் அந்த அறையில் அமர்ந்தான். 

அவனது முகத்தை பார்த்தாள். அறையை சுற்றி பார்த்தாள். அவர்கள் அறையை விட இது கொஞ்சம் சிறிது! சிறிது என்றால் மிகவும் சிறிது இல்லை. சோபா, பால் கணி, பாத்ரூம் என அனைத்தும் இருக்கிறது. அதை விட இந்த அறையில் உள்ள வண்ணம் அவனுக்கு பிடிக்க வில்லை. 

இதன்யா அவனுக்கு அருகில் வந்தவள். நம்ம ரூம்க்கு போலாமா! 

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்! ஆனால் அதை சித் காட்டி கொள்ள வில்லை. ஏன் உனக்கு இங்கே பிடிக்குமே! இட்ஸ் ஓகே என்டு கூறினான். 

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு எனக்கு இந்த ரூம விட அந்த ரூம் தான் பிடித்து இருக்கு அது நம்ம ரூம்! அதனால்! இப்போ வரீங்களா? இல்லையா? 

சித் உடனே எழுந்து கொண்டு போலாம்! என அவளின் பின்னால் சென்றான். 

இதன்யா சிரித்து கொண்டே அவன் பின்னால் சென்றாள். 

இப்போ எதுக்கு சிரிக்கிற? என்ன நடந்தது? 

அது ஒன்னும் இல்ல!. 

சொல்லு இதன்யா! என்று கொஞ்சம் கடுமையான குரலில் கூறினான்.

அது ரூமுக்கு வாங்க சொல்றேன்! என்று கூறி விட்டு முன்னால் சென்றாள். 

இருவரும் அறைக்கு சென்றதும் ம்ம் சொல்லு என்ன விசயம்? 

அது ஒன்னும் இல்ல! என்று அவள் பால் கணி பக்கம் செல்ல போக.. 

சித்தார்த், சொல்லு இதன்யா என்று கையை பிடித்து கொண்டான். 

உங்களுக்கு உங்க அறைய விட்டு கொடுக்க முடியல! அதை விட இங்கே தான் நீங்க ரொம்ப கம்ஃபார்ட்டா ஃபீல் பண்றீங்க! அதை சொல்ல வந்தேன். 

சித் புருவம் நெருக்கி கொண்டே அப் அப்படி எல்லாம் இல்லையே! நீ சொன்னதால் தான் நாம்ப இங்கே வந்தோம்! எனக்கு அங்கேயே ஓகே தான்! 

பொய்! பொய் நடிக்காதீங்க! உங்களுக்கு எல்லாம் இத்தனை வீடு!  இதுல எவ்ளோ ரூம் இருக்கு!  உங்களுக்குன்னு!  ஆனால் பாருங்க எங்க வீட்டில் என்று எதையோ யோசித்தாள். ம்ம் ஒரு படுக்கை அறை தான் இருந்தது. அப்புறம் எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் ஒரு ரூம் பக்கத்தில் சித்தாலை ஒட்டி கட்டினோம்! அட்டை தான் போட்டு இருக்கோம்! எங்க மாமா வரும் போது நாங்க அங்கே படுத்துக்குவோம். எங்க அண்ணா கயித்து கட்டிலில் வெளியே படுத்துப்பான். ம்ம் முக்கியமா இந்த ரூம் அளவுக்கு தான் எங்க வீடே இருக்கும்! என்று சிரித்து கொண்டே கூறினாள். 

சித்தார்த்துக்கு எதுக்கு டா அவள் கிட்ட இந்த கேள்வி எல்லாம் கேட்ட? என்பது போல ஆனது. 

இதன்யா எதையும் பெரிதாக யோசிக்காமல் பால் கனி பக்கம் சென்றாள். 

அங்கே அவளை தூரத்தில் இருந்து ஒரு உருவம் ரசித்து பார்த்து கொண்டு இருந்தது. 

எப்போ என் கிட்ட வர போற? என நவீன் அவளை பார்த்து புலம்பி கொண்டே காரில் சாய்ந்து இருந்தான். அவன் மனதில்  அவள் நம்பர் வாங்கிட்டு போனதில் இருந்து அவளின் அழைப்புக்காக காத்து கொண்டு இருந்தான். 

அன்று சித்தார்த் அப்படி சொல்லி விட்டு போனதில் இருந்து உள்ளுக்குள் சீக்கிரம் அவளை தன்னிடம் அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவள் மேல் எதற்கு இப்படி ஒரு பைத்தியகார தனம் என்று அவனுக்கே தெரிய வில்லை.

இப்பொழுது அடிக்கடி இங்கு வந்து விடுகிறான். அந்த பால் கணியையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான். 

இங்கே ராதிகா கத்தி கொண்டும் ஒரு வித பதட்டத்துடனும் சுற்றி கொண்டு இருந்தார். 

மேகா தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியாமல் அமர்ந்து இருந்தாள். இதன்யாவின் விரல் அச்சு அப்படியே பதிந்து போய் வீங்கி போனது. கூடவே கன்னத்தில் வலி தாங்க முடியாமல் நெறி கட்டி கொண்டது. 

ராதிகா, என்ன டி இது சாட்டையில் இழுத்த மாதிரி இருக்கு! முகம் எல்லாம் கணு கணுனு வீங்கி இருக்கு! இது எப்படி ஆச்சு! 

மேகா கஷ்ட பட்டு வாயை திறந்து ஷூட்டிங்ல ஒரு சீன் மா! அதான்! ரியலா இருக்கணும்னு இப்படி! என சமாளித்தாள். 

என்னமோ! போ! நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை. 

மேகா, அம்மா சித்தார்த்!. என்று பேச வர. 

ராதிகா சுற்றிலும் பார்த்தார். என்!. என்ன மா!. 

இல்ல அந்த ரிஷி பைய இருக்கானா என பார்த்தேன். என்று சொல்லி கொண்டே அருகில் வந்தவள். அந்த சித்தார்த்துக்கு கல்யாணம் ஆகிடுச்சு! அதுவும் யார் தெரியுமா மேகா! அந்த இதன்யா! அதான் ரெட்டை பிள்ளைக போல இருப்பாலுங்களே! உன் கூட ஸ்கூல் அந்த புள்ளை ஹான் நிதன்யா! அவளோட தங்கச்சிய தான் சித்து யாருக்கும் தெரியாமல் கட்டி இருக்கான். 

மேகா தெரிந்தது போல காட்டி கொள்ளாமல் உனக்கு எப்! எப்படி என்று வலியை பொறுத்து கொண்டு உனக்கு எப்படி மா தெரியும்? 

எனக்கு பவானி போன் பண்ணி சொன்னா! ஆனால் முழுசா சொல்லல.. பார்த்தியா! அவளுக்கு வந்த வாழ்வை!. 

மேகா கொஞ்சம் அடித்த வலியை பொறுத்து கொண்டு அவங்க பொய் சொன்றாங்க! 

என்ன டி சொல்ற? 

மேகா, ஆமா! மா! இது சும்மா! ஒரு கண் துடைப்பு! உனக்கு தெரியாதா! அவளை போய் சித்தார்த் எப்படி கல்யாணம் பண்ணுவான்! அவனுக்கு என்னை மாதிரி பொண்ணு தான் செட் ஆகும்! 

ராதிகா கொஞ்சம் கோபமாக முகத்துடன் மேகா! நீ பண்றது சரி இல்லை! அந்த பையன் நீ நினைக்கிற மாதிரி இல்ல என்று சொல்லி கொண்டு இருக்க..

மேகா மெதுவாக அவளுடைய கப்போட் திறந்து இரு ஒயின் பாட்டிலை எடுத்து வைத்தாள். 

ராதிகா திடுக்கிட்டு என்ன டி பண்ற? மேகா! இது சரி இல்ல அப்பா பார்த்தால் அவ்ளோ தான்!  

மேகா பற்களை கடித்து கொண்டு என்னை என்ன பண்ண சொல்ற வலி தாங்க முடியல.. போ போய் சீக்கிரமா சிக்கன் செய்து கொண்டு வா! இப்போவே ம்ம் என்று அதட்டி கொண்டே பாட்டிலை திறந்து அப்படியே வாயில் சரித்தாள். 

தயகாரன் புன்னகையுடன் உள்ளே வந்தவர். ராதி! ராதி! என்று அழைக்க.  

என்ன தயா என தயக்கத்துடன் ராதிகா வெளியே வந்தார். 

எங்க அம்மா மேகாவுக்கு பிடிச்ச  பாசிப்பருப்பு பாயசம் செய்து இருக்காங்க. நாட்டு சக்கரை கூடவே நெய் வாசம் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு! மேகா ஷூட்டிங் முடிந்து எப்போ வருவா! அவளுக்கு சூடு பண்ணி கொடு!. 

மேகா இன்னும் சிக்கன் வராமல் இருக்க உள்ளே இருந்து மா! சீக்கிரம் கொண்டு வா என்று கத்திட..

அட வீட்டில் தான் இருக்காளே! சரி நான் போய் கொடுக்கிறேன் என அவர் செல்ல..

ராதிகா பதட்டத்துடன் தயா! தயா! நில்லு நான் போய் கொடுக்கிறேன். நீங்க அது பாயாசத்தை ஒரு தடவை சூடு பண்ணனும் கொடு! என்று சொல்ல.. 

அவரும் சரி என்று கொடுத்தார். ராதிகா வேறு வழி இல்லாமல் சூடு செய்து ஊற்றி அறைக்கு கொண்டு போய் அவளிடம் நீட்ட கிளாஸ் கீழே விழும் சத்தம் கேட்டது. 

ஹே ஹே மேகா அப்பா வந்தாச்சு டி! கத்தாத கொஞ்சம் அமைதியா இரு! அய்யோ கொட்டி விட்டாயா? 

மேகா சத்தமாக நான் உன் கிட்ட என்ன சொன்னேன்? இது என்ன.? இதை உன் கிட்ட கேட்டேனா! போ போய் சிக்கன் செய்து எடுத்து வா கடுப்பை கிளப்பி கொண்டு இருக்க!  என்று கத்தும் சத்தம் தயாகரன் காதில் விழுந்தது. 

ராதிகா, ஹே அப்பா ஆசையா கொண்டு வந்தார்கள்! எதுக்கு மேகா இப்படி பண்ற! 

மேகா, உங்களுக்கு இந்த தூக்கு சட்டியில் பிச்சைக்காரர்கள் போல தூக்கிட்டு வர பழக்கம் மட்டும் போகாது போல! என்ன தான் நாயை குளிக்க வச்சு கூட்டி வந்தாலும் அது நடு தெருவுக்கு தான் போகும்!  அது போல.. நீங்க அய்யோ ச்ச! என்னால் இதை எல்லாம் என்று காச்சு மூச்சு என்று கத்த ஆரம்பித்தாள். 

அவளுக்கு அருகில் சித்தார்த் வந்து நிற்க உடனே அவள் உள்ளே சென்று விட்டாள். ஏனோ தெரிய வில்லை. மேகா சொன்னதை போல நான் இவனுக்கு எந்த இடத்தில் இருக்கிறேன்? இவனுக்கு இத்தனை வசதிகள் இத்தனை ராஜபோகம் தேவை! ஆனால் நான்! எதோ ஒரு மூலையில் நல்ல முறையில் மூன்று வேளை சோறு, நன்றாக படிக்க வேண்டும். நிம்மதியாக தன் அம்மா, அண்ணன், அக்கா இவர்களுடன் வாழ வேண்டும்! அவளுடைய கனவு! பேங்க் மாப்பிள்ளை! ஸ்கூட்டி, கவர்ன்மென்ட் வேலை! இதெல்லாம்! வெறும் கற்பனை தான்! இவனை பார்க்காமல் இருந்து இருந்தால் தன் வாழ்க்கை! நினைத்த இலக்கை அடைய முயற்சி எடுத்து இருக்கும். இப்பொழுதே ஒரு செமஸ்டர் முடிய போகிறது. செமஸ்டர் தேர்வுகள் வர இருக்கிறது.  

சித் அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவனாக நீ ஒன்னும் multi dimensional poverty ல வரல ஓவரா பேசாத! என்னை டென்ஷன் பன்றத தான் தொழிலா வைத்து இருக்கிறாள். 

இதன்யா புரியாமல் அவனை பார்க்க, சித் ஒரு பெரு மூச்சை விட்டு எல்லாத்துக்கும் இவளுக்கு விளக்கம் கொடுக்கணும் போல! என்று நினைத்து multi dimensional poverty இந்தியாவிலேயே அதிகமா இருப்பது பீகார் தான் அங்கே 100 ல 25 பேரு poor ரொம்ப ஏழை! சோ அதை கம்பேர் பண்ணும் போது 100ல வெறும் விரல் விட்டு சொல்லாத  பேர் தான் தமிழ் நாட்டில் 1.4% இருக்காங்க ரொம்ப கம்மி! அதுலயும் நீ இருக்கிற ஈரோடு பணக்கார நகரம்! சொல்ல போனால் நீயே பணக்காரி தான் டி! உன் அப்பா வழியில் உன் அண்ணனுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு, சொந்த வீடு இருக்கு இத்தனை வச்சு கிட்டு மனசார ஏழை அப்டின்னு சொல்ற! உங்க அம்மா சும்மா இல்ல கவர்மென்ட் பென்சன் வருது! உங்க அப்பா வேலையில் இருக்கும் போது தானே இறந்து போனாரு! விட்டால் இன்னும் பேசுவா! 

இதன்யா, ஆனால் எங்க கையில் காசு நிக்கவே மாட்டிகிது! எவ்ளோ செலவு இருக்கு தெரியுமா! அப்போ மேகா என எதோ சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி விட்டாள்.

சித், என்ன? 

அது ஒன்னும் இல்ல!..

சித், as per economical psychology படி மக்களுக்கு சம்பாதிக்க தெரியும்! ஆனால் அந்த சம்பாதித்த பணத்தை செலவு பண்ண தெரியுமே தவிர அதை எப்படி மறுபடியும் பணம் பண்ணனும் அப்டின்னு போதிய அறிவு இல்ல! அப்போதைக்கு தாம் தூம் என செலவு பண்ணிடுவாங்க! 

இதன்யா அவனை பிரம்மிப்புடன் பார்த்து கொண்டே உங்களுக்கு இத்தனை விசயம் தெரியுமா? எப்டி? நீங்க பிசிக்ஸ்ல மட்டும் தான் நாலேஜ் அப்டின்னு நினைச்சேன். 

சித், ஒன்னு சொல்லவா! 

என்ன? 

உன் அண்ணன் சம்பாதிக்க போயிருக்காங்க தானே அதுவும் பாரின்! 

ஆமா! அதுல என்ன பிரச்னை! 

சித், நம்ம இந்திய ரூபாய் மதிப்பு வெளிநாடுகளை அங்கு உள்ள பணத்தொட மதிப்பை விட கம்மி தான் ஆனால் அதுக்குன்னு உங்க அண்ணா வேலைக்கு போய் சம்பாதிக்க மட்டும் தான் இருப்பானா? அவனுக்குண்ணு சில தேவை! பொருளா, சாப்பாடு போக்கு வரத்து இந்த மாதிரி நிறைய இருக்கும் அப்போ அவன் செலவு பண்ற காசு அங்க இந்திய மதிப்பில் ஒரு 5000 த்துக்கு செலவு பண்ணலாம். அதை விட ஃப்ளைட் டிக்கெட் 25k இருக்கும் அவன் மிச்சம் பிடிக்கிற காசு எல்லாம் இப்படியே செலவு ஆகுடும். நிம்மதியான வீட்டு சாப்பாடு இருக்காது. அதுக்குன்னு மோசமான வேலை ன்னு சொல்லல.. உங்க அண்ணன் ஏற்ற படிப்புக்கு வேலை செய்கிறான் ஒரு இடத்துக்கு போகும் போது அங்கே இருக்கும் சூழலுக்கு ஏற்ப பணம் விலை வாசி எல்லாம் மாறும்! 

இதன்யா தலையை சொரிந்து கொண்டே இது எல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாதே! அதை விட எங்களுக்கு சொல்ல யார் இருக்கா! நந்து என்ன கஷ்ட படுகிறானோ! என தன் அண்ணனை நினைத்து கண் கலங்க!  

சித், உங்க வீட்டுக்கு பணம் அனுப்புறானா? 

ம்ம் என்று ஒற்றை பதில் கூறினாள்.

சித், பார்ட் டைம் வேலை பார்க்கிறான். 

இதன்யா வருத்தத்துடன் கண்கள் கலங்கினாள். 

சித், இப்போ எதுக்கு டி அழர! ச்ச நான் சொல்லீருக்கூடாது. 

இல்ல அது எனக்கு நந்து நினைப்பு வந்திடுச்சு! 

அப்போ போன் பண்ணி பேசு! 

வேணாம்! அப்புறம் அவனுக்கு வீட்டு நியானகம் வந்துவிடும். என் நந்து பாவம்! என்று அழ ஆரம்பித்தாள்.

சித் அவளின் அருகில் வந்து நான் ஒன்னு சொல்ல போய் அது வேற எங்கேயோ போயிடுச்சி இனி எதையும் சொல்ல மாட்டேன். 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு ஒரு பெரு மூச்சை விட்டவள். இனி என்னால் என் அண்ணனுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன். நான் படிச்சு கவர்மென்ட் வேலைக்கு போக தான் போறேன்.

அப்டியா வாழ்த்துக்கள். என்றான். 

இதன்யா உடனே புத்தகத்தை எடுத்து படிக்க அமர படு பாவி! உடனே படிக்கிரா! ஒரு வேளை டீச்சர் ஆகிடுவாளா? இவள் கவர்மென்ட் வேலைக்கு படிக்கிறா! நான் ஒரு கவர்மென்ட்டையே நடத்துற அளவுக்கு இருக்கேன். அதை விட இவழுக்காக ஸ்கூல் காலேஜ் இவளோட லீட்க்கு வெயிட் பண்ணுது. அண்ணன் கஷ்ட படுறான் என தெரிந்ததும் பாசம் பொங்கிகொண்டு கிலம்பி விட்டாள். என நினைத்து கொண்டு இருந்தான். 

அதன் பின் அவன் நினைவில் மேகாவை இதன்யா அடித்தது நினைவு வர.. அந்த நேரம் ரத்ன குமார் போன் செய்தார்.

சித்து, சாரி ரத்னா! 

அட்லீஸ்ட் நாளைக்காவது வருவீங்களா? ரொம்ப டைட்! என்று அவர் கேட்க.. 

சித்து, தப்பு என் மேல தான் இனி ஒரு நாள் தவறாது! நாளையில் இருந்து தொடர்ந்து சூட் பண்ணலாம்! எதாவ்து அவுட் டோர் ஷூட்டிங் இருக்கா! 

ரத்ன குமார் அவனிடம் ஆமா சித்து கேரளா எர்ணாகுளம் பக்கம் கொஞ்சம் சூட் இருக்கு! நீங்களும் மேகாவும் நடிப்பது போல சில காட்சிகள்! 

சித், இன்னிக்கி ஷூட் நடந்ததா? எனக்கு ஒரு முக்கிய வேலை அதான் வர முடியல.. 

இட்ஸ் ஓகே சித்து இனி டிலே பண்ண வேணாம்!. 

அதன் பின் சித்தார்த் போனை வைத்து விட்டு பிரியாவுக்கு அழைத்தான். 

ஹலோ சித்து!. 

வீட்டுக்கு போடீங்களா! 

ம்ம் சித்து வந்து ரொம்ப நேரம் ஆகுது! என்றாள். 

சரி எதுக்கு மேகாவை அவள் அடித்தாள்? என்ன விசயம்! 

பிரியா சாக் ஆகி உங்க கிட்ட குண்டு சொல்லிட்டாலா! நான் அதை பற்றி பேசினதுக்கு சண்டைக்கு வந்தாலே இப்போ எப்படி உங்க கிட்ட அதை சொன்னாள்? 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! என்ன நடந்தது? 

பிரியா, அப்போ அவள் உங்க கிட்ட சொள்ளலாலயா? என்னை உங்க கிட்ட சொல்ல வேணாம் என சொல்லி இருக்கா! நான் எப்டி சித்து! 

சித் கடுமையான குரலில் அப்டியா! நீ தான் அவளுக்கு நல்லது செய்யர பிரென்ட் அப்டின்னு நினைச்சேன். பட் இட்ஸ் ஓகே! நான் பூஜா கிட்ட கேட்டு கொள்கிறேன். என்று வைக்க போக.. 

சித்து சித்து வேணாம் இருங்க நானே சொல்றேன்! 

ம்ம் சொல்லுங்க! 

எதோ எனக்கு தெரிந்த விசயத்தை மட்டும் சொல்றேன்! என ஒரு சில விசயங்கள் மட்டும் கூறினாள். 

அப்டியா! இது உண்மையா! 

அப்படி தான் சொன்னாள்! நான் இதயாவை இப்படி பாத்ததே இல்லை. ஆனால் இந்த மேகா அவளை எதோ சொல்லி இருக்கா! அதுல இதயா ஹைட்ரஜன் பாம் மாதிரி ஆகி விட்டாள். ரெண்டு அரை பளார் பளார் என விட்டாள். எனக்கு என்னமோ உங்களை அவளுங்க ரெண்டு பேரும் பெட்டு கட்டி இருப்பாளிங்க போல தோணுது! 

வாட் தி ஹெல்? 

ஹெல் இல்ல சித்து டெவில் ஹெல்!. அந்த மேகா ரெண்டு பேக் ல கட்டு கட்டா பணம் எடுத்திட்டு வந்து இதன்யா  கிட்ட கொடுத்தாள். 

சித்தார்த்தின் கண்கள் சிவந்து போனது எவ்ளோ கொழுப்பு இருக்கும். அவளை அந்த மேகா! என்று நினைத்து கொண்டான். 

பிரியா, அவ்ளோ தான் சித்து!. 

சரி ஒரு முக்கியமான விசயம்! 

என்ன சொல்லுங்க!.

சித், ஆஷிஷ் க்கு நாளைக்கு பர்த் டே அதனால் உன்னை இன்வைட் பண்ணி இருக்கான். 

பிரியா, அப்டியா ஆனால் பார்ட்டிக்கு எப்டி வரது! 

அதை நீயே முடிவு பண்ணிக்க அதுக்கு தான் போன் பண்ணேன். என சொல்லி வைத்து விட்டான். 

இங்கே உள்ளே இதன்யா தீவிரமாக படித்து கொண்டு இருக்க அவளுக்கு எதிரில் அமர்ந்தான். அவளின் நோட்டை எட்டி பார்த்தான். 

உடனே அவள் மறைக்க..

ஹே காட்டு டி!..

அது அது வந்து இந்த ஆர்கானிக் ல கொஞ்சமே கொஞ்சம் வீக்!.

கொடு நான் பார்க்கிறேன் என வாங்கினான். 

அவனுக்கு அதை பார்த்ததும் உதட்டில் நமட்டு சிரிப்பு! 

இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க? 

சித், இடியட் இடியட் மேல அந்த ஈக்குவேசன் பேலன்ஸ் தப்பா பண்ணி இருக்க! முக்கியமா பிரியா கூட சேராத அப்புறம் cofee.. banana தான்! 

என்ன என வாங்கி பார்த்தாள். உடனே தலையில் அடித்து கொண்டே அதை சரி செய்தாள். இப்போ ஓகே வா என்று காட்ட வாங்கி பார்த்து விட்டு ம்ம் கொட்டினான். 

சித், என் கிட்ட எதுவும் நீ சொல்லனுமா! 

என்ன? 

சித், எதாவது என் கிட்ட ஷேர் பண்ணனுமா அப்டின்னு கேட்டேன். 

என்ன இருக்கு என்று இதன்யா யோசிக்க ஆரம்பித்தாள். 

சித், நல்லா யோசி எதுவும் இன்னிக்கி எதாவது interesting or drastic changes incident எதுவும் சொல்லனுமா! 

இதன்யாவுக்கு மேகாவை அடித்தது தான் நினைவுக்கு வந்தது. 

சித் அவளையே பார்த்து கொண்டு இருக்க..

இதன்யா அவனை பார்த்தாள்.

சித், ம்ம் என்ன சொல்லு! 

அவள் எதுவுமே நடக்காதது போல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே! என்று சொல்லி விட்டாள். 

அவ்வளவு தான்..

சித்..? 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

அடங்காத அதிகாரா ud இன்னிக்கி வராது! 

EPI 232

இதன்யா எதுவுமே நடக்காதது போல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே! என்று சொல்லி விட்டாள். 

அவ்வளவு தான்.. சித்தார்த் அவளை முறைத்து பார்த்து விட்டு படுக்கையில் அமர்ந்து லேப் டாப்பை எடுத்து வைத்தான். 

என்ன ஆச்சு இவனுக்கு? முகத்தை இத்தனை கேவலமா வச்சு இருக்கான். என இதன்யா நினைத்து விட்டு சிறிது நேரத்தில் படிக்க ஆரம்பித்தாள்.  

இப்படியே நேரம் கடந்தது. சாப்பிடும் நேரம் வந்தது. மதி போனில் அழைத்தார். ஏன் என்றால் சித்தார்த் வேலா வேலைக்கு சாப்பிட வேண்டும். 

ம்ம் மதி மா! 

கண்ணு சாப்பாடு! 

நீங்க ரூமுக்கு அனுப்பி வைங்க! என சொல்லி கொண்டே வேலையை கவனித்தான். 

உணவுகள் எடுத்து வர பட்டது. சித் அமர்ந்த இடத்திலேயே கதவுகளை திறக்க விட்டான். 

இதன்யா அங்கு வைக்கப்பட்டு இருக்கும் உணவுகளை பார்க்க சித் எழுந்து கொண்டு நேராக உணவை பரிமாறி கொண்டான். 

சித் அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் போட்டு கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். 

இதன்யா, ஹலோ!. ஹலோ!. என்று அழைக்க அவன் திரும்பவே இல்லை கடுப்பானவள் அவனுக்கு அருகில் சென்று அவனுடைய தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். 

சித், ஹே என்ன பண்ற? 

இதன்யா அவனுக்கு எதிரில் அமர்ந்து பசிக்கிது! அது தான் சாப்பிடுறேன்! ஆமா உங்களுக்கு பார்த்தால் எப்டி தெரியுது? 

சித், ஹே ஹேன்ட் வாஷ் பண்ணியா? 

அது ரொம்ப பசித்தது! அதனால் ஒன்னும் தப்பு இல்ல!. 

டர்ட்டி கேர்ல்! என சொல்லி கொண்டே இன்னொரு தட்டில் உணவுகளை போட்டு சாப்பிட ஆரம்பித்தான். 

நீங்க எத்தனை தட்டு போட்டு சாப்பிட்டாலும் பிடுங்கி சாப்பிடுவேன்! என்று அவன் அருகில் சென்றாள். 

எதுக்கு டி இப்படி பண்ற? என்ன டிரை பண்ற? 

நானா உங்களை தான் டிரை பண்றேன்! ஒர்க் அவுட் ஆக மாட்டிக்குதே! 

என்ன? என்று கண்கள் வெளியே வரும் அளவுக்கு பார்த்தான். 

இதன்யா  வேண்டும் என்றே மறுபடியும் சொல்லவா? நீங்க கேட்க விரும்புறீங்களா? நான் உங்களை டிரை என்று அவள் ஆரம்பிக்க உடனே அவளின் வாயில் பேசாத வண்ணம் கை வைத்து அடைத்தான். 

இதன்யா அவன் கையில் இருக்கும் உணவுகளை சுவைக்க ஆரம்பித்தாள். 

ஹே! ஹே! என்ன டி பண்ற? என ஆண்மகனின் உணர்வுகள் சிலிர்த்து கொண்டது. 

இதன்யா சிரித்து கொண்டே புருவம் நெருக்கி டேஸ்டா இருக்கே! ம்ம் என்றாள். 

சித் வேகமாக கையை விடுவித்து கொண்டான். என்ன ஆச்சு? 

போடி போய்  சாப்பிட்டு படிக்கிற வேலையை பாரு! என்று சாப்பிட ஆரம்பித்தான். 

எல்லாம் எங்களுக்கு தெரியும்! என்று அவள் பேசி கொண்டு இருக்க.. பவானியிடம் இருந்து போன் வந்தது. 

சித் உடனே எழுந்து கையை கழுவி கொண்டு அழைப்பை ஏற்றான். என்ன மாம்? 

சித்து ஒரு பிரச்னை நடந்து போச்சு! 

என்ன? என்று உடனே அவனுடைய குரல் கடுமையானது. 

பவானி, இந்த ரோஸ்னி வெளியே போனாள் டா இன்னும் வீட்டுக்கு வரல.. எப்டி எங்கே போனாள் என்றே தெரியல…

சித் கோபத்துடன் என்ன மாம் இது? நான் என்ன சொன்னேன்! இப்போதைக்கு இருக்கும் சூழலில் அவளை எதுக்கு தனியா வெளியே விட்டீங்க! என்னை டென்ஷன் பண்றீங்க? என்று கத்தி பேசினான். 

பவானி, இல்ல டா சித்து கூட ரம்யா இருக்கா! ரேவதி வேற அழுது கொண்டு இருக்காள்.  அவளை காணாமல் அப்போ தான் எனக்கே விசயம் தெரிந்தது. 

இதன்யா வேகமாக உணவு முடித்து விட்டு கையை கழுவி கொண்டே சித் அருகில் வந்து என்ன ஆச்சு? என்று பதட்டமாக கேட்டாள்.  அவன் போனில் கவனம் செலுத்தி கொண்டு இருக்க.. 

அந்த நேரம் சித்தார்த் வீட்டு நுழைவு வாயில் காவலர்கள் அவனுடைய லேண்ட் லைன் அழைத்தது. 

இதன்யா அதை எடுக்க சென்றாள். 

இங்கே சித்தார்த் வீட்டின் நுழைவு வாயிலில் கொஞ்சம் பதட்டத்துடன் ரம்மி! இப்போ நம்ம வந்தது சித்தார்த்துக்கு தெரிந்தால் என்னை அடி கூட அடிப்பான் டி உன் கூட சேர்ந்து வந்தது பெரிய தப்பு எனக்கு வேற பயமா இருக்கு என்று ரோஸ்னி புலம்பி கொண்டு இருந்தாள். 

ரம்யா சாதாரண தொனியில் இப்போ எதுக்கு இவ்வளவு பில்ட் அப் விடுற! நீ தானே என் கிட்ட நான் மிஸ்டர் ரிஷிய பார்க்கணும் அப்டின்னு புலம்பி கிட்டே இருந்த? அதான் நான் கஷ்ட பட்டு கார்ட்ஸ் கண்ல மண்ணை தூவி விட்டு இண்டு இடுக்கில் எல்லாம் புங்குது உசுறை கொடுத்து ஓட்டிட்டு வந்தேன். ஆனால் இப்போ அப்படியே அந்தர் பல்டி அடிக்கிற! என்ன ரோசு!. 

ரோஸ்னி கைகள் வியர்க்க “உனக்கு அவனை பற்றி தெரியாது. அய்யோ பயமா இருக்கே! மாதேஸ்வரா! என்னை காப்பாற்று!” என்று வேண்டி கொண்டு இருந்தாள்.  

ஹலோ சொல்லுங்க! 

மேம் இங்கே வெளியே நம்ம வீட்டு கார்! சந்திர மௌலி ஐயா வீட்டு காரு நிக்கிது! உள்ளே விடவா? 

இதன்யா, ஒரு நிமிடம் இருங்க நான் அவர் கிட்ட கேட்டு சொல்றேன்! என்று அவள் போனை காதில் வைத்து கொண்டே சித்தார்த்தை பார்த்தாள். 

அந்த நேரம் போனில் என்ன பண்றீங்க? இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? என்று ரம்யாவின் குரல் கேட்க.. அதற்கு பின்னால் ரோஸ், ஹே கொஞ்சம் கம்முன்னு இரு ரம்மி என்று கூறினாள்.

சித்தார்த் போனில் கொஞ்சம் கடுமையான குரலில் நீங்க ஒன்னும் கவலை பட வேணாம் கூடிய சீக்கிரத்தில்  இப்போவே நான் ரோஸ்னி ரம்யா ரெண்டு பேரையும் தேட சொல்றேன். என்று கூற..

இதன்யா கொஞ்சம் திடுக்கிட்டு என்னங்க அவங்க நம்ம வீட்டுக்கு வெளியில் காரில் வெயிட் பண்றாங்க! என்று சத்தமாக கூறினாள். 

சித் இதன்யாவை பார்த்து கொண்டே அருகில் வந்து போனை வாங்கினான். 

அவர்களிடம் விவரத்தை கேட்க இருவரும் ஏமாற்றி விட்டு இங்கு வந்து இருக்கிறார்கள் என்று தெரிந்தது. 

சித்து என்ன டா ஆச்சு? என்று பவானி கேட்க.. 

சித் கோப கண்களில் மாம் அந்த ராஸ்கல்ஸ்…. என்று பெரு மூச்சை விட்டவன் புருவத்தை நெருக்கி கொண்டே  ரெண்டு ஃபோர்ஜெரியும் இங்கே தான் வந்திருக்காங்க! 

பவானி ஒரு பெரு மூச்சை விட்டு சித்து என்று அழைக்க வர ஐ வில் பேக் மாம் என்று போனை கட் செய்தவன். வேகமாக அவர்கள் இருவரையும் உள்ளே வர சொன்னான். 

ஓகே சார் என்று பாதுகாவலர்கள் காரை உள்ளே விட நுழைவு வாயிலை திறந்து விட்டார்கள். 

ரம்யா, பார்த்த தானே என்னோட குரலுக்கு எவ்ளோ பவர்! யாரும் என்னை ஒன்னும் சொல்ல முடியாது என சொல்லி கொண்டே காரை உள்ளே கொண்டு வந்தாள்.

ரோஸ் விலவிலத்து கொண்டே ஆப்பு இனி தான் ஆரம்பம் ஆக போகுது! என்று சொல்லி கொண்டே கண்ணை மூடி கடவுளை வேண்டினாள்.

கோபத்துடன் போகும் சித்தார்த் பின்னால் எதுவும் செய்யாதீங்க என்று கெஞ்சி கொண்டே இதன்யா ஃபாலோ செய்தாள். 

என்னங்க! பிளீஸ்! அவங்க எதோ தெரியாமல் பண்ணி இருப்பாங்க! சின்ன வயசு பிள்ளைங்க! 

சித், நீ அறுபது வயசு ஓல்ட் லேடியா! உன் வேலையை பார்த்திட்டு போ! இந்த விடயத்தில் தலையிட்ட.. உன்னோட கண்ணம் பழுத்து விடும்! என்று சொல்லி கொண்டே சென்றான். 

ரம்யா எந்த தப்பும் செய்யாதவள் போல வீட்டுக்குள் நுழைய.. ரோஸ் நடுங்கி கொண்டே உள்ளே நுழைந்தாள்.

என்னங்க பிளீஸ்! பிளீஸ் என்று கெஞ்சி கொண்டே அவள் வர..

சித் அரக்கன் போல அவளை முறைத்து விட்டு உள்ளே வரும் இருவரையும் பார்த்தான். 

ரம்யா புன்னகையுடன் ஹே சித்து! மாமா பையா எப்டி இருக்க? உனக்கு இப்போ ஹெல்த் ஓகேவா! எதோ ஷூட்டிங்ல குண்டு பட்டது போல சொன்னாங்களே இப்போ நீ ஓகே வா!. என்று கேட்டு கொண்டே அருகில் வந்தாள். அவளுக்கு பின்னால் ரோஸ் தயங்கி கொண்டே உள்ளே வர..

சித் பற்களை நரணரக்கும் சத்தம் இதன்யாவுக்கு கேட்க அவள் அவனுடைய கையை பிடித்தாள். அதை தட்டி விட்டவன் வேகமாக ரோஸ்னி மேல் பார்வையை செலுத்தினான். 

அண்! அண்ணா! என்று தயக்கதுடன் அவள் வாய் திறக்க..

ரம்யா, அது ஒன்னும் இல்ல சித்து! பாவம் ரோஸ் க்கு ரிஷி நினைப்பு போட்டு வாட்டி எடுத்து விட்டது. கனவில் வந்தவன் கம்முன்னு போயிட்டான். திரும்ப எப்போ வருவான் என சொல்லவே இல்லை அதை கேட்க தான் வந்தோம்! என்று அவள் இஷ்டத்துக்கு பேசி கொண்டு இருக்க..

ஒரு அரை பளார் என கேட்டது. அந்த இடத்தில் உள்ள அனைத்து பணிப்பெண்களும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை குனிந்து கொண்டே அவர்களுடைய தங்கும் இடத்துக்கு சென்று விட்டார்கள். 

ரம்யா ஒரு வித அதிர்ச்சி நடுக்கத்துடன் பார்த்து கொண்டு இருக்க..

இதன்யா, முருகா என்று சொல்லி கொண்டே மூச்சு வாங்க திறந்து பார்த்தாள். 

ரோஸ் கண்ணைத்தை பிடித்து கொண்டு நடுங்கி கொண்டே கண்ணீர் வழிய பார்த்தாள். 

ரம்யாவின் முகம் வியர்த்து போனது. அவள் கொஞ்சம் நடுங்கி கொண்டே சித் சித்து என்று பேச வர.  

சித் பற்களை கடித்து கொண்டு அந்த அடி உனக்கு கொடுக்க வேண்டியது. அவள் என்னோட தங்கை அவளை அடிக்க எனக்கு உரிமை இருக்கு! ஆனால் நீ யாரோ! ஒரு ஸ்ட்ரேஞ்சர் தான்! 

ரம்யாவின் கண்கள் கலங்கி போக சித் சித்து!. என்று அழைத்தாள். 

சித், என்ன நினைத்து கொண்டு இருக்க? ஓவரா வாய் பேசுவது ஆட்டம் போடுவது எல்லாம் அந்த சந்திர மௌலி வீட்டோட வச்சுக்க! நீ மிஸ்டர் ரவி சந்திரன் அவர்களின் தங்கை மகள்! உன்னோட அதிகாரம் ஆட்டம் எல்லாம் இங்கே ம்ம்….ஹீ.. ம்ம்!. 

ரோஸ் வலியில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

சித், என்ன ரொம்ப துளிர் விட்டு போச்சு போல! ஆட்டம் ஜாஸ்தி போடுற! என்ன? பதில் சொல்லு! என்று பார்வை ரோஸ் மேல் சென்றது. 

ரோஸ், இல் இல்ல அண்ணா! என்று அவள் சொல்ல..

சித், நீ இங்கே வேணாம் கிளம்பு! நான் இப்போவே பவாவுக்கு போன் பண்றேன்! நீ கிளம்பு! 

அண்ணா பிளீஸ்! பிளீஸ் நான் எதோ தெரியாமல்!  

சட் அப் பிளடி இடியட்! எவனாவது பாம் அப்படி இல்ல அட்டெம்ட் மர்டர் வச்சிருந்தால் என்ன பண்ணி இருப்ப! நேரா ரிஷிகேஸம்  கைலாசம் போயிருக்கலாம்! 

ரம்யா உடைந்த மனதுடன் உதட்டை மடித்து கடித்து கொண்டே நின்றாள். 

சித் அடுத்து ரோஸ் பக்கம் திரும்பி பேச வர..

இதன்யா, போதும் விடுங்க இப்போ அவங்களுக்கு ஒன்னும் ஆகல! நீங்க எதுக்கு தேவை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க! ரோஸ் நீங்க போய் ப்ரெஸ் ஆகுங்க! ரம்யா நீங்க உங்க ரூம் க்கு போங்க! என்று கலைத்து விட்டாள். 

ரம்யா நேராக மேலே செல்லாமல் வாயிற் கதவை நோக்கி நடக்க..

ஹே எங்கே போற? 

ரம்யா எதுவும் பேசாமல் வேகமாக நடந்தாள். 

சித், இப்போ நிக்கல! இரு உன் மம்மிக்கு கால் பண்ணி அந்த ஓல்ட் மேன் கிட்ட சொல்றேன்! 

என்னால் நிக்க முடியாது நான் போறேன்! உங்க யாருக்கும் நான் தொந்தரவு கொடுக்க விரும்பல.. என்று அவள் பேசி கொண்டே செல்ல..

சித், உங்க வீட்ல இப்படி தான் எல்லாரும் கலண்ட கேஸ் போல சுற்றி கொண்டு இருப்பீங்களா!..

ரம்யா, ஓவரா பேசுற! 

அந்த நேரம் சதீஸ் பதட்டத்துடன் சித்து ரோஸ் என்று சொல்ல வந்தவன். அங்கே இருவரையும் பார்க்க..

சித், சதீஸ் அவளை தூக்கிட்டு வா! 

சதீஷ், நான் மறுபடியும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகணுமா! 

இதை கேட்டதும்  இதன்யா சிரிக்க.. அந்த அடி வாங்கி கொண்டும் கூட ரோஸ் அழுது கொண்டே சிரித்தாள்.

ரம்யா சதீசை அடிக்க ஆரம்பித்தாள்.

சித், சதீஸ்! சொல்றத செய்! I’m யுவர் பாஸ்! 

யெஸ் பாஸ் என்று விரைப்புடன் சொன்னவன். வேகமாக அவளை கைகளை பிடித்து துள்ள துள்ள இழுத்து வந்தான். 

இதன்யா நேராக ரம்யா அருகில் சென்று கையை பிடித்து கொண்டு நாளைக்கு ஆஷிஷ் சார் பர்த் டே! உங்களை ரோஸ் அப்புறம் சதீஸ் அண்ணா எல்லாரையும் இன் வைட் பண்ணி இருக்காரு! அங்கே போனால் நீங்க விதவிதமா குடிக்கலாம்! இப்போ நீங்க கிளம்பினா அது எல்லாம் எப்டி கிடைக்கும்! சோ இங்கேயே இருங்க! என்று கூறினாள்.

இவ்வளவு நேரமும் விறைப்பாக நின்று கொண்டு இருந்த சித்து.. இதன்யா பேசியதை கேட்டதும் உதடு கடித்து சிரிப்பை அடக்கினாள். சதீஷ் ஒரு பக்கம் சிரிக்க இன்னொரு பக்கம் ரோஸ் கன்னத்தை தேய்த்து விசும்பி கொண்டே சிரித்தாள். 

ரம்யா அவளை முறைத்து கொண்டே நானும் உன் புருசன் போல பார்ன் இன் சில்வர் ஸ்பூன்! இப்போ சொல்றத பார்த்தால் நான் ஓசி குடிக்கு அலையுற மாதிரி இருக்கு! என்ன நினைத்து கொண்டு இருக்க உன்னோட புருசன் என்னை டைரக்டா அவமான படுத்தினான். நீ சுற்றி வளைத்து அவமான படுத்துர போல!  நான் போறேன்! என் தாத்தாக்கும்  இதே ஸ்ட்ரீட்ல பெரிய வில்லா இருக்கு! நான் அங்கே போறேன்! 

சித், இப்போ இந்த வீட்டுக்கு வந்ததால் நீ என்னோட ரெஸ்பான்சிபிலிடி சோ பிரச்னை பண்ணாமல் உள்ளே போ! 

ரம்யா, என்னால் முடியாது! என்று கூறி கொண்டு இருந்தாள் 

இதன்யா முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு எனக்கு இந்த  பார்ன் இன் சில்வர் ஸ்பூன் எல்லாம் தெரியாது. நான் எங்க வீட்டில் தான் பிறந்தேன்! உங்களை போல பணக்காரி நான் இல்ல! உங்க விருப்பம்! நான் எதாவது தப்பா சொல்லி இருந்தால் சாரி! என்னை பொறுத்த வரைக்கும் தப்பா எதுவும் நான் சொல்லல..  அப்படி இருந்தாலும் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என சொல்லி கொண்டே திரும்பி கொண்டாள். 

சித் அவளின் அருகில் நெருங்கி நீ எதுக்கு இதுல சாரி கேட்கிற? அதை விட பிறந்ததில் இருந்து இங்கே யாரும் ஸ்பூனோட பிறக்கல.. போகும் போது அதை விட மோசம்! உயிரோட வேல்யூ அவளுக்கு தெரியல.. அவங்க அம்மா அவளை உன்னை போல நாலு அடி வச்சு இருந்தால் அவள் இந்த ஆட்டம் ஆடி இருக்க மாட்டாள். 

ரம்யா, என்னை சொல்ல உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு! ஹே இதன்யா நீ ஓவரா பண்ணாத! எல்லாரும் என்னை கன்வின்ஸ் பண்ணனும்! ஆனால் நீங்க ரெண்டு பேரும் இங்கே கூட உங்க காதல் ஓவியத்தை காட்டி கொண்டு இருக்கிங்க! 

சதீஷ், சரி பிரச்னை முடிஞ்சது! ரம்மி போய் ரெஸ்ட் எடு! போ! 

ரம்யா கோபத்துடன் உதடு பிதுக்கி கொண்டே ஹே அவன் என்னை ஹர்ட் பண்ணி பேசிட்டு இருக்கான் நீ பாட்டுக்கு கிளம்பி போற! 

சதீஷ், நான் கொஞ்ச நேரம் இருந்தால் அவன் என்னையும் பேச ஆரம்பிப்பான். 

ஹே ராஸ்கல்! என்று சித் கூறிட

சதீஷ் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு பாஸ் சாரி பாஸ் நான் கிளம்பி போறேன்! 

ரம்யா அடுத்து பேச வர உடனே சித், ஒழுங்கா உள்ளே உன்னோட ரூம்க்கு போயிடு இல்லன்னா இப்போவே அந்த ஓல்ட் மேன் சந்திர மௌலி கிட்ட உன்னை இப்போவே ஜெட் வச்சு அனுப்பி விடுவேன். அவரு உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்ப மாட்டாரு! .

சொல்லு டா எனக்கு என்ன பயமா? 

சித் போனை எடுத்து உடனே கால் செய்து கொண்டே சத்யா! 

பாஸ்!  

டேய் சத்யா! என்று கடுப்புடன் அழைத்து கொண்டே போனில் எண்களை பொட்டாம் 

சொல்லு சித்து என்று சதீஸ் சொல்ல..

சித் ரம்யாவை பார்த்து கொண்டே உனக்கு ஒரு விசயம் தெரியுமா அந்த ஓல்ட் மேன் கிட்ட நான் எது சொன்னாலும் பூம் மாடு போல தலை ஆட்டி கேட்பார் டா!  . 

அப்டியா என்று சதீஸ் கேட்க..

சித், அது மட்டுமா! இந்த ரம்மிய டம்மி ஆக்கி இனி வீட்டுக்கு உள்ளேயே சாரி அவளோட ரூம் உள்ளே பூட்டி வைக்க சொல்ல போரன்! என்று தந்திர புன்னகை செய்தான். 

இதன்யா அமைதியாக பார்த்து கொண்டு இருக்க ரம்யாவுக்கு அவளுடைய தாத்தாவின் குணம் நன்றாக தெரியும்!  இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்க..

ரிங் போகுது என்று சித் கூறிட..

ரம்யா எட்சிலை கஷ்ட பட்டு விழுங்கி கொண்டே சித்தார்த் பிளீஸ் டா தாத்தா கிட்ட சொல்லாத! பிளீஸ் டா! என்று கெஞ்ச ஆரம்பித்தாள். 

இதன்யா அவளை பார்த்து சிரித்து கொண்டு இருக்க..

ரம்யா, ஹே என்ன டி சிரிக்கிற! உன் புருசன் கிட்ட சொல்லு டி! 

அவள் வேண்டும் என்றே அவர் எது செய்தாலும் அது சரியா தான் இருக்கும்!  சோ! 

சோசோ!..இது தான் நீங்க பில்ட் அப் விடுற நேரமா! ஹே சொல்லு டி! டேய் சித்து பிளீஸ்! என்று ரம்யா மீண்டும் கெஞ்சிட..

சித் இளன புன்னகையுடன் இனி இந்த அதிக பிரசங்கி தனம் பண்ணுவியா! 

ரம்யா, நான் ஒன்னும் இல்ல எல்லாம் உன்னோட தங்கச்சி தான் டெய்லி அந்த ரிஷி பற்றி என் கிட்ட சொல்லி சொல்லி காது இரத்தம் வருது! நீ போன் பேச வைத்ததில் இருந்து ஓவர் ஆட்டம் போட்டாள். அப்போ தான் என் கிட்ட கெஞ்சி கேட்டாள். நான் சொன்னேன் சித் ரொம்ப ஸ்டிரிக்ட் அப்டின்னு ஆனால்! 

சித், உன்னோட பில்டிங் பிளாக் கம்பி கட்டும் வேலையை விட்டு போய் சாப்பிடு என்று சொல்ல..

ரம்யா அடுத்த நொடி மிகவும் கொண்டாடத்திடன் கிளம்பி விட்டாள். ஆனால் ரோஸ் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க..

சித், நீ  சாப்பிடாமல் கூட தூங்கு உன்னை நான் சாப்பிட சொல்ல மாட்டேன்! உன் கிட்ட அந்த ஆளு புத்தி தான் இருக்கு! என்று சொல்ல..

இதன்யா அவனை முறைத்து விட்டு ரோஸ்னியை அழைத்து சென்றாள். 

அடுத்த நாள் ஆஷிஷ் பிறந்த நாள் விழா!. 

ரம்யா குடி போதையில் ஒரு காரின் முன்னால் போய் விழுகிறாள். 

யார் அது? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 232

இதன்யா எதுவுமே நடக்காதது போல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே! என்று சொல்லி விட்டாள். 

அவ்வளவு தான்.. சித்தார்த் அவளை முறைத்து பார்த்து விட்டு படுக்கையில் அமர்ந்து லேப் டாப்பை எடுத்து வைத்தான். 

என்ன ஆச்சு இவனுக்கு? முகத்தை இத்தனை கேவலமா வச்சு இருக்கான். என இதன்யா நினைத்து விட்டு சிறிது நேரத்தில் படிக்க ஆரம்பித்தாள்.  

இப்படியே நேரம் கடந்தது. சாப்பிடும் நேரம் வந்தது. மதி போனில் அழைத்தார். ஏன் என்றால் சித்தார்த் வேலா வேலைக்கு சாப்பிட வேண்டும். 

ம்ம் மதி மா! 

கண்ணு சாப்பாடு! 

நீங்க ரூமுக்கு அனுப்பி வைங்க! என சொல்லி கொண்டே வேலையை கவனித்தான். 

உணவுகள் எடுத்து வர பட்டது. சித் அமர்ந்த இடத்திலேயே கதவுகளை திறக்க விட்டான். 

இதன்யா அங்கு வைக்கப்பட்டு இருக்கும் உணவுகளை பார்க்க சித் எழுந்து கொண்டு நேராக உணவை பரிமாறி கொண்டான். 

சித் அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் போட்டு கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். 

இதன்யா, ஹலோ!. ஹலோ!. என்று அழைக்க அவன் திரும்பவே இல்லை கடுப்பானவள் அவனுக்கு அருகில் சென்று அவனுடைய தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். 

சித், ஹே என்ன பண்ற? 

இதன்யா அவனுக்கு எதிரில் அமர்ந்து பசிக்கிது! அது தான் சாப்பிடுறேன்! ஆமா உங்களுக்கு பார்த்தால் எப்டி தெரியுது? 

சித், ஹே ஹேன்ட் வாஷ் பண்ணியா? 

அது ரொம்ப பசித்தது! அதனால் ஒன்னும் தப்பு இல்ல!. 

டர்ட்டி கேர்ல்! என சொல்லி கொண்டே இன்னொரு தட்டில் உணவுகளை போட்டு சாப்பிட ஆரம்பித்தான். 

நீங்க எத்தனை தட்டு போட்டு சாப்பிட்டாலும் பிடுங்கி சாப்பிடுவேன்! என்று அவன் அருகில் சென்றாள். 

எதுக்கு டி இப்படி பண்ற? என்ன டிரை பண்ற? 

நானா உங்களை தான் டிரை பண்றேன்! ஒர்க் அவுட் ஆக மாட்டிக்குதே! 

என்ன? என்று கண்கள் வெளியே வரும் அளவுக்கு பார்த்தான். 

இதன்யா  வேண்டும் என்றே மறுபடியும் சொல்லவா? நீங்க கேட்க விரும்புறீங்களா? நான் உங்களை டிரை என்று அவள் ஆரம்பிக்க உடனே அவளின் வாயில் பேசாத வண்ணம் கை வைத்து அடைத்தான். 

இதன்யா அவன் கையில் இருக்கும் உணவுகளை சுவைக்க ஆரம்பித்தாள். 

ஹே! ஹே! என்ன டி பண்ற? என ஆண்மகனின் உணர்வுகள் சிலிர்த்து கொண்டது. 

இதன்யா சிரித்து கொண்டே புருவம் நெருக்கி டேஸ்டா இருக்கே! ம்ம் என்றாள். 

சித் வேகமாக கையை விடுவித்து கொண்டான். என்ன ஆச்சு? 

போடி போய்  சாப்பிட்டு படிக்கிற வேலையை பாரு! என்று சாப்பிட ஆரம்பித்தான். 

எல்லாம் எங்களுக்கு தெரியும்! என்று அவள் பேசி கொண்டு இருக்க.. பவானியிடம் இருந்து போன் வந்தது. 

சித் உடனே எழுந்து கையை கழுவி கொண்டு அழைப்பை ஏற்றான். என்ன மாம்? 

சித்து ஒரு பிரச்னை நடந்து போச்சு! 

என்ன? என்று உடனே அவனுடைய குரல் கடுமையானது. 

பவானி, இந்த ரோஸ்னி வெளியே போனாள் டா இன்னும் வீட்டுக்கு வரல.. எப்டி எங்கே போனாள் என்றே தெரியல…

சித் கோபத்துடன் என்ன மாம் இது? நான் என்ன சொன்னேன்! இப்போதைக்கு இருக்கும் சூழலில் அவளை எதுக்கு தனியா வெளியே விட்டீங்க! என்னை டென்ஷன் பண்றீங்க? என்று கத்தி பேசினான். 

பவானி, இல்ல டா சித்து கூட ரம்யா இருக்கா! ரேவதி வேற அழுது கொண்டு இருக்காள்.  அவளை காணாமல் அப்போ தான் எனக்கே விசயம் தெரிந்தது. 

இதன்யா வேகமாக உணவு முடித்து விட்டு கையை கழுவி கொண்டே சித் அருகில் வந்து என்ன ஆச்சு? என்று பதட்டமாக கேட்டாள்.  அவன் போனில் கவனம் செலுத்தி கொண்டு இருக்க.. 

அந்த நேரம் சித்தார்த் வீட்டு நுழைவு வாயில் காவலர்கள் அவனுடைய லேண்ட் லைன் அழைத்தது. 

இதன்யா அதை எடுக்க சென்றாள். 

இங்கே சித்தார்த் வீட்டின் நுழைவு வாயிலில் கொஞ்சம் பதட்டத்துடன் ரம்மி! இப்போ நம்ம வந்தது சித்தார்த்துக்கு தெரிந்தால் என்னை அடி கூட அடிப்பான் டி உன் கூட சேர்ந்து வந்தது பெரிய தப்பு எனக்கு வேற பயமா இருக்கு என்று ரோஸ்னி புலம்பி கொண்டு இருந்தாள். 

ரம்யா சாதாரண தொனியில் இப்போ எதுக்கு இவ்வளவு பில்ட் அப் விடுற! நீ தானே என் கிட்ட நான் மிஸ்டர் ரிஷிய பார்க்கணும் அப்டின்னு புலம்பி கிட்டே இருந்த? அதான் நான் கஷ்ட பட்டு கார்ட்ஸ் கண்ல மண்ணை தூவி விட்டு இண்டு இடுக்கில் எல்லாம் புங்குது உசுறை கொடுத்து ஓட்டிட்டு வந்தேன். ஆனால் இப்போ அப்படியே அந்தர் பல்டி அடிக்கிற! என்ன ரோசு!. 

ரோஸ்னி கைகள் வியர்க்க “உனக்கு அவனை பற்றி தெரியாது. அய்யோ பயமா இருக்கே! மாதேஸ்வரா! என்னை காப்பாற்று!” என்று வேண்டி கொண்டு இருந்தாள்.  

ஹலோ சொல்லுங்க! 

மேம் இங்கே வெளியே நம்ம வீட்டு கார்! சந்திர மௌலி ஐயா வீட்டு காரு நிக்கிது! உள்ளே விடவா? 

இதன்யா, ஒரு நிமிடம் இருங்க நான் அவர் கிட்ட கேட்டு சொல்றேன்! என்று அவள் போனை காதில் வைத்து கொண்டே சித்தார்த்தை பார்த்தாள். 

அந்த நேரம் போனில் என்ன பண்றீங்க? இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? என்று ரம்யாவின் குரல் கேட்க.. அதற்கு பின்னால் ரோஸ், ஹே கொஞ்சம் கம்முன்னு இரு ரம்மி என்று கூறினாள்.

சித்தார்த் போனில் கொஞ்சம் கடுமையான குரலில் நீங்க ஒன்னும் கவலை பட வேணாம் கூடிய சீக்கிரத்தில்  இப்போவே நான் ரோஸ்னி ரம்யா ரெண்டு பேரையும் தேட சொல்றேன். என்று கூற..

இதன்யா கொஞ்சம் திடுக்கிட்டு என்னங்க அவங்க நம்ம வீட்டுக்கு வெளியில் காரில் வெயிட் பண்றாங்க! என்று சத்தமாக கூறினாள். 

சித் இதன்யாவை பார்த்து கொண்டே அருகில் வந்து போனை வாங்கினான். 

அவர்களிடம் விவரத்தை கேட்க இருவரும் ஏமாற்றி விட்டு இங்கு வந்து இருக்கிறார்கள் என்று தெரிந்தது. 

சித்து என்ன டா ஆச்சு? என்று பவானி கேட்க.. 

சித் கோப கண்களில் மாம் அந்த ராஸ்கல்ஸ்…. என்று பெரு மூச்சை விட்டவன் புருவத்தை நெருக்கி கொண்டே  ரெண்டு ஃபோர்ஜெரியும் இங்கே தான் வந்திருக்காங்க! 

பவானி ஒரு பெரு மூச்சை விட்டு சித்து என்று அழைக்க வர ஐ வில் பேக் மாம் என்று போனை கட் செய்தவன். வேகமாக அவர்கள் இருவரையும் உள்ளே வர சொன்னான். 

ஓகே சார் என்று பாதுகாவலர்கள் காரை உள்ளே விட நுழைவு வாயிலை திறந்து விட்டார்கள். 

ரம்யா, பார்த்த தானே என்னோட குரலுக்கு எவ்ளோ பவர்! யாரும் என்னை ஒன்னும் சொல்ல முடியாது என சொல்லி கொண்டே காரை உள்ளே கொண்டு வந்தாள்.

ரோஸ் விலவிலத்து கொண்டே ஆப்பு இனி தான் ஆரம்பம் ஆக போகுது! என்று சொல்லி கொண்டே கண்ணை மூடி கடவுளை வேண்டினாள்.

கோபத்துடன் போகும் சித்தார்த் பின்னால் எதுவும் செய்யாதீங்க என்று கெஞ்சி கொண்டே இதன்யா ஃபாலோ செய்தாள். 

என்னங்க! பிளீஸ்! அவங்க எதோ தெரியாமல் பண்ணி இருப்பாங்க! சின்ன வயசு பிள்ளைங்க! 

சித், நீ அறுபது வயசு ஓல்ட் லேடியா! உன் வேலையை பார்த்திட்டு போ! இந்த விடயத்தில் தலையிட்ட.. உன்னோட கண்ணம் பழுத்து விடும்! என்று சொல்லி கொண்டே சென்றான். 

ரம்யா எந்த தப்பும் செய்யாதவள் போல வீட்டுக்குள் நுழைய.. ரோஸ் நடுங்கி கொண்டே உள்ளே நுழைந்தாள்.

என்னங்க பிளீஸ்! பிளீஸ் என்று கெஞ்சி கொண்டே அவள் வர..

சித் அரக்கன் போல அவளை முறைத்து விட்டு உள்ளே வரும் இருவரையும் பார்த்தான். 

ரம்யா புன்னகையுடன் ஹே சித்து! மாமா பையா எப்டி இருக்க? உனக்கு இப்போ ஹெல்த் ஓகேவா! எதோ ஷூட்டிங்ல குண்டு பட்டது போல சொன்னாங்களே இப்போ நீ ஓகே வா!. என்று கேட்டு கொண்டே அருகில் வந்தாள். அவளுக்கு பின்னால் ரோஸ் தயங்கி கொண்டே உள்ளே வர..

சித் பற்களை நரணரக்கும் சத்தம் இதன்யாவுக்கு கேட்க அவள் அவனுடைய கையை பிடித்தாள். அதை தட்டி விட்டவன் வேகமாக ரோஸ்னி மேல் பார்வையை செலுத்தினான். 

அண்! அண்ணா! என்று தயக்கதுடன் அவள் வாய் திறக்க..

ரம்யா, அது ஒன்னும் இல்ல சித்து! பாவம் ரோஸ் க்கு ரிஷி நினைப்பு போட்டு வாட்டி எடுத்து விட்டது. கனவில் வந்தவன் கம்முன்னு போயிட்டான். திரும்ப எப்போ வருவான் என சொல்லவே இல்லை அதை கேட்க தான் வந்தோம்! என்று அவள் இஷ்டத்துக்கு பேசி கொண்டு இருக்க..

ஒரு அரை பளார் என கேட்டது. அந்த இடத்தில் உள்ள அனைத்து பணிப்பெண்களும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை குனிந்து கொண்டே அவர்களுடைய தங்கும் இடத்துக்கு சென்று விட்டார்கள். 

ரம்யா ஒரு வித அதிர்ச்சி நடுக்கத்துடன் பார்த்து கொண்டு இருக்க..

இதன்யா, முருகா என்று சொல்லி கொண்டே மூச்சு வாங்க திறந்து பார்த்தாள். 

ரோஸ் கண்ணைத்தை பிடித்து கொண்டு நடுங்கி கொண்டே கண்ணீர் வழிய பார்த்தாள். 

ரம்யாவின் முகம் வியர்த்து போனது. அவள் கொஞ்சம் நடுங்கி கொண்டே சித் சித்து என்று பேச வர.  

சித் பற்களை கடித்து கொண்டு அந்த அடி உனக்கு கொடுக்க வேண்டியது. அவள் என்னோட தங்கை அவளை அடிக்க எனக்கு உரிமை இருக்கு! ஆனால் நீ யாரோ! ஒரு ஸ்ட்ரேஞ்சர் தான்! 

ரம்யாவின் கண்கள் கலங்கி போக சித் சித்து!. என்று அழைத்தாள். 

சித், என்ன நினைத்து கொண்டு இருக்க? ஓவரா வாய் பேசுவது ஆட்டம் போடுவது எல்லாம் அந்த சந்திர மௌலி வீட்டோட வச்சுக்க! நீ மிஸ்டர் ரவி சந்திரன் அவர்களின் தங்கை மகள்! உன்னோட அதிகாரம் ஆட்டம் எல்லாம் இங்கே ம்ம்….ஹீ.. ம்ம்!. 

ரோஸ் வலியில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

சித், என்ன ரொம்ப துளிர் விட்டு போச்சு போல! ஆட்டம் ஜாஸ்தி போடுற! என்ன? பதில் சொல்லு! என்று பார்வை ரோஸ் மேல் சென்றது. 

ரோஸ், இல் இல்ல அண்ணா! என்று அவள் சொல்ல..

சித், நீ இங்கே வேணாம் கிளம்பு! நான் இப்போவே பவாவுக்கு போன் பண்றேன்! நீ கிளம்பு! 

அண்ணா பிளீஸ்! பிளீஸ் நான் எதோ தெரியாமல்!  

சட் அப் பிளடி இடியட்! எவனாவது பாம் அப்படி இல்ல அட்டெம்ட் மர்டர் வச்சிருந்தால் என்ன பண்ணி இருப்ப! நேரா ரிஷிகேஸம்  கைலாசம் போயிருக்கலாம்! 

ரம்யா உடைந்த மனதுடன் உதட்டை மடித்து கடித்து கொண்டே நின்றாள். 

சித் அடுத்து ரோஸ் பக்கம் திரும்பி பேச வர..

இதன்யா, போதும் விடுங்க இப்போ அவங்களுக்கு ஒன்னும் ஆகல! நீங்க எதுக்கு தேவை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க! ரோஸ் நீங்க போய் ப்ரெஸ் ஆகுங்க! ரம்யா நீங்க உங்க ரூம் க்கு போங்க! என்று கலைத்து விட்டாள். 

ரம்யா நேராக மேலே செல்லாமல் வாயிற் கதவை நோக்கி நடக்க..

ஹே எங்கே போற? 

ரம்யா எதுவும் பேசாமல் வேகமாக நடந்தாள். 

சித், இப்போ நிக்கல! இரு உன் மம்மிக்கு கால் பண்ணி அந்த ஓல்ட் மேன் கிட்ட சொல்றேன்! 

என்னால் நிக்க முடியாது நான் போறேன்! உங்க யாருக்கும் நான் தொந்தரவு கொடுக்க விரும்பல.. என்று அவள் பேசி கொண்டே செல்ல..

சித், உங்க வீட்ல இப்படி தான் எல்லாரும் கலண்ட கேஸ் போல சுற்றி கொண்டு இருப்பீங்களா!..

ரம்யா, ஓவரா பேசுற! 

அந்த நேரம் சதீஸ் பதட்டத்துடன் சித்து ரோஸ் என்று சொல்ல வந்தவன். அங்கே இருவரையும் பார்க்க..

சித், சதீஸ் அவளை தூக்கிட்டு வா! 

சதீஷ், நான் மறுபடியும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகணுமா! 

இதை கேட்டதும்  இதன்யா சிரிக்க.. அந்த அடி வாங்கி கொண்டும் கூட ரோஸ் அழுது கொண்டே சிரித்தாள்.

ரம்யா சதீசை அடிக்க ஆரம்பித்தாள்.

சித், சதீஸ்! சொல்றத செய்! I’m யுவர் பாஸ்! 

யெஸ் பாஸ் என்று விரைப்புடன் சொன்னவன். வேகமாக அவளை கைகளை பிடித்து துள்ள துள்ள இழுத்து வந்தான். 

இதன்யா நேராக ரம்யா அருகில் சென்று கையை பிடித்து கொண்டு நாளைக்கு ஆஷிஷ் சார் பர்த் டே! உங்களை ரோஸ் அப்புறம் சதீஸ் அண்ணா எல்லாரையும் இன் வைட் பண்ணி இருக்காரு! அங்கே போனால் நீங்க விதவிதமா குடிக்கலாம்! இப்போ நீங்க கிளம்பினா அது எல்லாம் எப்டி கிடைக்கும்! சோ இங்கேயே இருங்க! என்று கூறினாள்.

இவ்வளவு நேரமும் விறைப்பாக நின்று கொண்டு இருந்த சித்து.. இதன்யா பேசியதை கேட்டதும் உதடு கடித்து சிரிப்பை அடக்கினாள். சதீஷ் ஒரு பக்கம் சிரிக்க இன்னொரு பக்கம் ரோஸ் கன்னத்தை தேய்த்து விசும்பி கொண்டே சிரித்தாள். 

ரம்யா அவளை முறைத்து கொண்டே நானும் உன் புருசன் போல பார்ன் இன் சில்வர் ஸ்பூன்! இப்போ சொல்றத பார்த்தால் நான் ஓசி குடிக்கு அலையுற மாதிரி இருக்கு! என்ன நினைத்து கொண்டு இருக்க உன்னோட புருசன் என்னை டைரக்டா அவமான படுத்தினான். நீ சுற்றி வளைத்து அவமான படுத்துர போல!  நான் போறேன்! என் தாத்தாக்கும்  இதே ஸ்ட்ரீட்ல பெரிய வில்லா இருக்கு! நான் அங்கே போறேன்! 

சித், இப்போ இந்த வீட்டுக்கு வந்ததால் நீ என்னோட ரெஸ்பான்சிபிலிடி சோ பிரச்னை பண்ணாமல் உள்ளே போ! 

ரம்யா, என்னால் முடியாது! என்று கூறி கொண்டு இருந்தாள் 

இதன்யா முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு எனக்கு இந்த  பார்ன் இன் சில்வர் ஸ்பூன் எல்லாம் தெரியாது. நான் எங்க வீட்டில் தான் பிறந்தேன்! உங்களை போல பணக்காரி நான் இல்ல! உங்க விருப்பம்! நான் எதாவது தப்பா சொல்லி இருந்தால் சாரி! என்னை பொறுத்த வரைக்கும் தப்பா எதுவும் நான் சொல்லல..  அப்படி இருந்தாலும் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என சொல்லி கொண்டே திரும்பி கொண்டாள். 

சித் அவளின் அருகில் நெருங்கி நீ எதுக்கு இதுல சாரி கேட்கிற? அதை விட பிறந்ததில் இருந்து இங்கே யாரும் ஸ்பூனோட பிறக்கல.. போகும் போது அதை விட மோசம்! உயிரோட வேல்யூ அவளுக்கு தெரியல.. அவங்க அம்மா அவளை உன்னை போல நாலு அடி வச்சு இருந்தால் அவள் இந்த ஆட்டம் ஆடி இருக்க மாட்டாள். 

ரம்யா, என்னை சொல்ல உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு! ஹே இதன்யா நீ ஓவரா பண்ணாத! எல்லாரும் என்னை கன்வின்ஸ் பண்ணனும்! ஆனால் நீங்க ரெண்டு பேரும் இங்கே கூட உங்க காதல் ஓவியத்தை காட்டி கொண்டு இருக்கிங்க! 

சதீஷ், சரி பிரச்னை முடிஞ்சது! ரம்மி போய் ரெஸ்ட் எடு! போ! 

ரம்யா கோபத்துடன் உதடு பிதுக்கி கொண்டே ஹே அவன் என்னை ஹர்ட் பண்ணி பேசிட்டு இருக்கான் நீ பாட்டுக்கு கிளம்பி போற! 

சதீஷ், நான் கொஞ்ச நேரம் இருந்தால் அவன் என்னையும் பேச ஆரம்பிப்பான். 

ஹே ராஸ்கல்! என்று சித் கூறிட

சதீஷ் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு பாஸ் சாரி பாஸ் நான் கிளம்பி போறேன்! 

ரம்யா அடுத்து பேச வர உடனே சித், ஒழுங்கா உள்ளே உன்னோட ரூம்க்கு போயிடு இல்லன்னா இப்போவே அந்த ஓல்ட் மேன் சந்திர மௌலி கிட்ட உன்னை இப்போவே ஜெட் வச்சு அனுப்பி விடுவேன். அவரு உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்ப மாட்டாரு! .

சொல்லு டா எனக்கு என்ன பயமா? 

சித் போனை எடுத்து உடனே கால் செய்து கொண்டே சத்யா! 

பாஸ்!  

டேய் சத்யா! என்று கடுப்புடன் அழைத்து கொண்டே போனில் எண்களை பொட்டாம் 

சொல்லு சித்து என்று சதீஸ் சொல்ல..

சித் ரம்யாவை பார்த்து கொண்டே உனக்கு ஒரு விசயம் தெரியுமா அந்த ஓல்ட் மேன் கிட்ட நான் எது சொன்னாலும் பூம் மாடு போல தலை ஆட்டி கேட்பார் டா!  . 

அப்டியா என்று சதீஸ் கேட்க..

சித், அது மட்டுமா! இந்த ரம்மிய டம்மி ஆக்கி இனி வீட்டுக்கு உள்ளேயே சாரி அவளோட ரூம் உள்ளே பூட்டி வைக்க சொல்ல போரன்! என்று தந்திர புன்னகை செய்தான். 

இதன்யா அமைதியாக பார்த்து கொண்டு இருக்க ரம்யாவுக்கு அவளுடைய தாத்தாவின் குணம் நன்றாக தெரியும்!  இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்க..

ரிங் போகுது என்று சித் கூறிட..

ரம்யா எட்சிலை கஷ்ட பட்டு விழுங்கி கொண்டே சித்தார்த் பிளீஸ் டா தாத்தா கிட்ட சொல்லாத! பிளீஸ் டா! என்று கெஞ்ச ஆரம்பித்தாள். 

இதன்யா அவளை பார்த்து சிரித்து கொண்டு இருக்க..

ரம்யா, ஹே என்ன டி சிரிக்கிற! உன் புருசன் கிட்ட சொல்லு டி! 

அவள் வேண்டும் என்றே அவர் எது செய்தாலும் அது சரியா தான் இருக்கும்!  சோ! 

சோசோ!..இது தான் நீங்க பில்ட் அப் விடுற நேரமா! ஹே சொல்லு டி! டேய் சித்து பிளீஸ்! என்று ரம்யா மீண்டும் கெஞ்சிட..

சித் இளன புன்னகையுடன் இனி இந்த அதிக பிரசங்கி தனம் பண்ணுவியா! 

ரம்யா, நான் ஒன்னும் இல்ல எல்லாம் உன்னோட தங்கச்சி தான் டெய்லி அந்த ரிஷி பற்றி என் கிட்ட சொல்லி சொல்லி காது இரத்தம் வருது! நீ போன் பேச வைத்ததில் இருந்து ஓவர் ஆட்டம் போட்டாள். அப்போ தான் என் கிட்ட கெஞ்சி கேட்டாள். நான் சொன்னேன் சித் ரொம்ப ஸ்டிரிக்ட் அப்டின்னு ஆனால்! 

சித், உன்னோட பில்டிங் பிளாக் கம்பி கட்டும் வேலையை விட்டு போய் சாப்பிடு என்று சொல்ல..

ரம்யா அடுத்த நொடி மிகவும் கொண்டாடத்திடன் கிளம்பி விட்டாள். ஆனால் ரோஸ் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க..

சித், நீ  சாப்பிடாமல் கூட தூங்கு உன்னை நான் சாப்பிட சொல்ல மாட்டேன்! உன் கிட்ட அந்த ஆளு புத்தி தான் இருக்கு! என்று சொல்ல..

இதன்யா அவனை முறைத்து விட்டு ரோஸ்னியை அழைத்து சென்றாள். 

அடுத்த நாள் ஆஷிஷ் பிறந்த நாள் விழா!. 

ரம்யா குடி போதையில் ஒரு காரின் முன்னால் போய் விழுகிறாள். 

யார் அது? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

AA நாளைக்கு வரும்!  

EPI 233

இதன்யா அவனை முறைத்து விட்டு ரோஸ்னியை அழைத்து செல்ல 

சித்தார்த் கொஞ்சம் கடுமையான குரலுடன் அவளை கன்சோல் பண்ணாத! அவள் மேல தப்பு புரியுதா! ஹே நில்லு டி! என்று குரலை உயர்த்தினான். 

ரோஸ், நீ விடு! எனக்கு பசிக்கல..என்று முகம் உப்ப கண் கலங்கினாள். 

இதன்யா நீங்க எதுக்கு அழனும்? உன் அண்ணா ஒன்னும் ஒழுங்கு கிடையாது. என்று சொல்லி கொண்டே அவனை பார்த்தவள்.  நீங்க ரொம்ப ஹானரபில் மாதிரி பில்ட் அப் விடாந்தீங்க! என்று அவளை அழைத்து சென்றாள்.  

சித், நீ அவள் கூட சேராத! என்று நின்று கொண்டு இருக்க..  

இதன்யா ரோஸ்னியை அழைத்து சென்று விட்டாள். 

சதீஷ், என்ன டா உன்னை கண்டுக்காம போறா! என்று அவனை பார்க்க சித்தார்த் முறைத்தான். 

ரொம்ப தேங்க்ஸ் மச்சி! உன்னால் தான் டா! நீ நீ தான் டா காரணம்! இப்போ நான் இங்கே இருக்கேன்! என்று அணைத்து கொண்டான். 

சித் போதும் தள்ளி போ! என்று சொல்ல..

சதீஷ், பாசமா உன் கிட்ட என்னோட ஃபீலிங்க சேர் பண்றேன் டா! தள்ளி போ அப்டின்னு சொல்ற! 

சித், அதை தள்ளி நின்னு சொல்லு! 

சதீஷ் கொஞ்சம் சலித்துக் கொண்டு உன்கிட்ட வந்து பேசுவேன் பாரு! என்னை  சொல்லணும்!  என்று தள்ளி செல்ல.. 

உடனே சித்தார்த் அவனிடம்  ஹே வெயிட் பண்ணு! உன்கிட்ட ஒடிஷா ப்ராஜெக்ட் விஷயமாக கொஞ்சம் பேசணும்!  என்று ஸ்டடி ரூம்  சென்றான். 

இங்கே இதன்யா அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்து ரோஷினியின் கண்ணத்துக்கு வலி தெரியாமல் இருக்க அதற்கு என்ன மாத்திரை போடவேண்டுமோ! அதை அவளுக்கு கொடுத்து அறைக்கு அனுப்பி வைத்தாள்.

ரோஷினி இன்னும் கவலையான முகத்தில் வைத்துக் கொண்டிருக்க..

இதன்யா,  எதுக்கு ரோஸ் இப்படி இருக்கீங்க?  அவரு சொல்றதும் கரெக்ட் தானே! என்று சொல்ல.. 

ரோஷினி,  அவனுக்கு தானே நீ சப்பொட் பண்ணுவ! என்னை  பத்தி நீ நெனச்சு பாத்தியா?  என்று அவள் கேட்டாள்.

இதன்யா, அவரு எவ்வளவு பெரிய கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்திருக்கார்னு உங்களுக்கு தெரியாது! ஆனா என் கண்ணு முன்னாடி அவர் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கேன்! அந்த கோபம் தான் உங்களையும் ரம்யாவையும் திட்டி இருக்காரு! என்று பெரு மூச்சை விட்டவள் உங்களுக்கு தெரியாது.. அந்த குண்டடி பட்டு அவரால் கையை தூக்க முடியாத நிலையில்  அதைவிட கொடுமையா யூரின் பேக் எல்லாம்  வச்சு இருந்தார்கள்.  அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா?  நீங்க அந்த மாதிரியான சித்தார்த்தை பாத்திருக்கீங்களா?  என்று கோபத்துடன் கேட்டாள்.

ரம்யா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க..

ரோஷினி கண்களில் நீருடன் நின்று கொண்டிருந்தாள்.

இதன்யா, அவ்வளவு கஷ்டத்தை ஃபீல் பண்ண அவரு நீங்க கஷ்டபடனும் என நினைப்பாரா?  இல்ல அவர சார்ந்தவங்க கஷ்டப்பட கூடாதுன்னு நினைப்பாரா?  அவரோட வார்த்தையில வேணா ரம்யாவை தனித்து விட்டு ஒதுக்கி தள்ளி பேசலாம்!  ஆனால் உண்மையாகவே அவருக்கு எல்லார் மேலயும் பாசம் இருக்கு! அதை வெளிக்காட்ட மாட்டார்! என்று கூறினாள்.

ரோஷினி மிகவும் வருத்தமான குரலில் பிளீஸ் இதன்யா! நான் பண்ணது தப்புதான்!  எனக்கு ரிஷி நினைப்பு,   கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேலாக போகுது!  அதனால தான் நான் இங்கே வரேன்னு சொன்னேன்.  ஆனா ரம்யா கூட்டிட்டு வருவானு, எனக்கு தெரியாது! 

உடனே இதன்யா , சரி விடுங்க நடந்தது நடந்து போச்சு! ஆனா இனிமே கேர்ஃபுல்லா இருங்க! நீங்க எல்லாரும் தான் அவருக்கு பலம்! அதே போல  அவருக்கு கஷ்டப்பட்டு இப்படி ஓடிட்டு இருக்குறதுக்கு காரணம் யாரு? நீங்க எல்லாரும் தான்! நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு தான் , அவர் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.  ஆனால் நீங்களே இப்படி ஒரு புரிஞ்சுக்காம அவரோட ரூல்ஸ் மீறி நடந்து விட்டால் அவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 

ரம்யா,  நான் பண்ணது தப்பு தான்! எனக்கு தூக்கம் வருது! என்று அவள் கிளம்ப.. ரேவதியிடம் இருந்து அழைப்பு வந்தது.அச்சச்சோ இந்த மம்மி கால் பண்ணுது என்று போனை எடுத்துக் கொண்டே சென்று விட்டாள்.

அதன் பின் ரோஷினி அங்கேயே நின்று கொண்டிருக்க..

இதன்யா அவளை அழைத்துக்கொண்டு அறையில் விட்டு வந்தாள்.

அனைவரும் அவரவர் வேலையில் பிஸியாகி விட்டனர். சித்தார்த்தின்  ஸ்டடி ரூம் லைட்  எரிந்து கொண்டிருந்தது. அவனுடன்  சதீஷ்  வேலை செய்து கொண்டிருந்தான்.

இதன்யா,  இவருக்கு எப்பவுமே இதே வேலை தான்! கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டாரே! துருதுரு துருன்னு ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருக்காரு! என்று நினைத்து சிரித்தவள். நேராக அவர்களின் படுக்கை அறை சென்று விட்டாள்.

சித்தார்த் வருவான்! வருவான் என காத்து கொண்டு இருந்தாள். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவன் வரவே இல்லை.  அவருக்காக வெயிட் பண்ணு! வெயிட் பண்ணு! தூங்காத! சின்னு தூங்காத டி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தவள். அப்படியே உறங்கி விட்டாள். 

அவள் தூங்கியதும் சிறிது நேரம் கழித்து அவனுடைய வேலையை முடித்துவிட்டு  சித்தார்த் சரியாக 12 மணிக்கு வந்தான்.  சதீஷ் அந்த ப்ராஜெக்ட் சம்பந்தமான  சில பைல்கள் கோப்புகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வில்லாவுக்கு சென்று விட்டான்.

சித்தார்த் அறையின் உள்ளே வர அங்கே இதன்யா அந்த படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

உடனே சித்தார்த் அவனுடைய கோப்புகள் மற்றும் வேலை தொடர்பான அனைத்தையும் சரியான இடத்தில் வைத்துவிட்டு நேராக படுக்கைக்கு அருகில் வந்தான்.

அவனுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்ததுm

சித்தார்த் நினைவில் இதன்யா தன்னை விட்டு சோபாவில் போய் படுத்துக் கொண்டது.  அதன் பின் தன்னை நிராகரித்த தருணங்கள், என அனைத்தும் ஒவ்வொன்றாக கண் முன் வந்தது.

அவள் படுக்கையை பரப்பிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவளை பார்த்ததும் அவனுக்கு வருத்தம் இல்லை. தன்னில் பாதி! தனக்கானவள் சந்தோஷம் தான் ஆனால் அவள்? அவளுடைய முடிவு  தீர்க்கமான முடிவாக எடுத்து விட்டு தான் தன்னை நெருங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.

அதன் பின் சித்தாத்துக்கு உறங்க சங்கடமாக இருந்தாலும் கூட சோபாவில் விரிப்புகளை  அடுக்கி போட்டவன் தலையணையை வைத்து போர்வையுடன் படுத்துக் கொண்டான். அந்த சோபா ஒருவர் தடுப்பதற்கு ஏற்றவாறு இருந்தாலும், சித்தார்த்துடைய நீண்ட உயர்ந்த உடல் வாகுக்கு கால்களை நேராக நீட்ட முடியவில்லை. குறுக்கிக்கொண்டு தான் உறங்குவது போல இருந்தது.

ஆனால் இப்பொழுது வேறு வழி இல்லை இங்கு தான் தூங்க வேண்டும் என்று நினைத்தவன். அதன் பின்பு படுத்துக்கொண்டான். படுத்த அடுத்த நொடி நித்ரா தேவி அவன் தூக்கத்தை எடுத்துக் கொண்டாள். நன்றாக ஆழ்ந்த உறங்கினான்.

இன்று அவனுடைய அறையில் அதுவும் அருகில் இதன்யா இருக்கிறாள். என்ற சந்தோஷத்துடன் உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது.

இதன்யா 5 மணிக்கு எழுந்து கொண்டாள். சித்தார்த் அப்பொழுது அசரிக்கையாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அவள் அருகில் அவனுடைய வாசனை இல்லை. இந்த சித்தார்த்  இன்னுமா வேலை செஞ்சுட்டு இருக்காரு! இவரை என்ன செய்றது? ஐயோ! விடிய விடிய வேலை செஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகிறது? என்று நினைத்துக் கொண்டே தலையை சொரிந்து கொண்டு எழுந்து அமந்தாள்.அவள் சோம்பல் முறித்துக் கொண்டே திரும்பிப் பார்க்க..

அங்கே சித்தார்த்தன் சோபாவில் படுத்திருப்பது தெரிந்தது.  இதன்யாவிற்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. இவர் எதுக்கு அங்கே  படுத்திருக்காரு? இவரோட மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காரு? என்று  எழுந்து இதயம் படபடக்க அவனது அருகில் வந்து நின்றாள்.

அவன் உடலை குறுக்கிக் கொண்டு அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பி தூங்கிக் கொண்டிருந்தான்.

இதன்யாவிற்கு தன்னுடைய தவறை எண்ணி தன் மேலேயே கோபம் வந்தது.  எவ்வளவு மனசு கஷ்டப்படுத்தி இருந்தால், இந்த மனுஷன் தன்னை விட்டுட்டு இப்படி தள்ளி படுப்பாரு! இதுக்கெல்லாம் காரணம் நான் தானே! என்னால தானே எல்லாமே! என காலையில் கண்ணீர் முட்டி கொண்டது. அவள் அப்படியே ஒரு சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தாள்.

சித்தார்த் சரியாக 5.30 மணிக்கு  தான் எழுந்தான். அவனுக்கு எதிரில் அவள் நின்று கொண்டு இருப்பது தெரிய வில்லை. சோம்பல் முறித்துக் கொண்டே பெருமூச்சு விட்டவன் எழுந்து கை கால்களை உதறிக் கொண்டே கண்களை திறந்தான். 

அப்பொழுது தான்  அங்கே இதன்யா நின்று கொண்டிருக்கிறாள் என தெரிந்தது. 

குட் மார்னிங்? என்று சொன்னவன் ஒரு நிமிடம் அமர்ந்து இருக்க..

அவள் அசையாமல் பார்த்து கொண்டு இருந்தாள். 

சித்,எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு நின்னுட்டு இருக்க?  என்று அவளை பார்க்காமல் படுக்கையின் விரிப்புகளை சரி செய்தான். 

 இதன்யா அவனை பார்த்து நீங்க எதுக்கு படுக்கைய விட்டு சோபால வந்து தூங்குறீங்க? இதுக்கு காரணம் என்ன என்று கேட்டாள்.

உடனே சித், சும்மா தான் ஒன்னும் இல்ல..  எனக்கு இங்கே தூங்கணும் போல தோணுச்சு! அதனால என்று சமாளித்தான்.

இதன்யா உதட்டை கடித்துக் கொண்டே நீங்க பொய் தான சொல்றீங்க? உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும்!  என்று  கூற..

சித், உனக்கு  என்ன என்னை பற்றி தெரியும்? என்று அவளை பார்த்தான்.

இதன்யா, நீங்க இன்னும் எதையும் மறக்கவில்லை அப்படி தானே! இட்ஸ் ஓகே நான் பண்ணது தப்பு தான்! ஆனா இன்னுமும் அதை நினைச்சுட்டு இருக்கீங்களா? என்று அழ ஆரம்பித்தாள்.

சித்தார்த் அவளுக்கு அருகில் வந்தவன். அவளது முகத்தை ஏந்தி கொள்ள அருகில் வந்தவன். அந்த நொடி என்ன நினைத்தானோ வேகமாக அவளிடம் இருந்து விலகி கொண்டான். அதன் பின் அவளிடம் பிளீஸ் அழாத!   என் முன்னாடி அழாத! இப்போ என்ன ஆச்சு? என்று கேட்க.. 

 இதன்யா அவன் அருகில் நெருங்கி என்ன? வந்ததும் விலகி போறீங்க? நீங்க பண்றது ரொம்ப வித்தியாசமா இருக்கு! நாளைக்கு!..  நீங்க!  என்னை விட்டு தள்ளி போற மாதிரி  எனக்கு தோணுது!  இட்ஸ் ஓகே என்று அவள் அவனை பார்த்து சொல்லி விட்டு திரும்பி கொண்டாள். 

சித்தார்த் உதட்டை கடித்துக் கொண்டே ஒரு நிமிடம் இங்கே உட்காரு! 

இதன்யா நான் காலேஜ் கிளம்பறேன் என்று சொல்லிக்கொண்டே குளிக்க செல்ல..

உடனே சித்தார்த் ஒரு நிமிஷம் உட்காரு! அட்லீஸ்ட் எனக்காக உட்காரு!  எனக்காக.. நீ  உக்காருவியா?  என்று தயங்கி கொண்டே அவளின் முகத்தை பார்த்தான்.

 இதன்யா அவனுக்கு எதிரில் அமர்ந்தாள். 

சித் சோபாவில் அமர்ந்து கொண்டே இப்போ என்ன சொன்ன?என்று கேட்டான்

இதன்யா, நீங்க விலகி போற மாதிரி தோணுது! என்று கூற..

உடனே சித்தார்த் தெளிவான பார்வையில் என நீ விலகிப் போக கூடாதுன்னு தான் நான் உன் பக்கத்துல வரதில்ல! என்று கூறினான்.

இதன்யா ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க..

சித், உனக்கு என்ன டி தெரியும்? என்ன தெரியும்? என்று கேட்டான்.

இதன்யா அவனை ஏக்கத்துக்கும் பார்க்க..

சித்தார்த் ஒரு நிமிடம் மௌனம் காத்து அதன் பின்“ நான்!.. இது!.. நமக்குள்ள நல்லா இருக்குன்னு தோணுது! .

என்ன சொல்றீங்க என்று கண்களை துடைத்துக்கொண்டே பார்த்தாள்.

சித், ஆமா! இது ஓகே தான்! இப்போ பாரு நீ நல்லா இருக்க, நானும் நல்லா இருக்கேன்! நம்ம ரெண்டு பேரும் நார்மலா பேசுகிறோம்!  எங்கே தூங்கினால்  என்ன?

இதன்யா, என்ன சொல்றீங்க? நாம ரெண்டு பேரும் என்று அவள் ஆரம்பிக்க.

சித்,  ப்ளீஸ் இதுக்கு மேல என்னால நார்மல் ஆக முடியல! நான் பண்ணது தப்பு தான்! அத நான் ஒத்துக்குறேன்! ஆனா இந்த விஷயத்தை..  இதில் எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு! உன்னை என்னால் பார்க்க முடியவில்லை!

இதன்யா, இதை இன்னும் நீங்க தான் மறக்காம புடுச்சுட்டு இருக்கீங்க! நான் கடந்து வந்துட்டேனே!

 சித்தார்த்,  தப்பு பண்ணது நான் உனக்கு பிரச்னை இல்லை. நீ என்னால் பாதிக்கப்பட்டு இருக்க!

இப்போ எதுக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? 

சித்,  நான் தப்பு பண்ணிட்டேனே! உன்னோட மனசுல அது ஆழமாக பதிஞ்சிடுச்சுல்ல! என்று கூறினான்.

இதன்யா அவன் அருகில் நெருங்கி பக்கத்தில் வந்த அமர்ந்தவள். சரி  எப்போ என் பக்கத்துல வருவீங்க? எப்போ இயல்பா இருப்பீங்க? அதுக்கு பதில் சொல்லுங்க? என்று அவன்  கைகளை பிடித்துக் கொண்டாள்.

சித், போகட்டும்! இதை இப்படியே போகட்டும்! ஒரு நாள் மாறும் பார்க்கலாம்! என்று கூறிக் கொண்டே எழுந்து விட்டான்.

இதன்யா எழுந்து கொண்டு இதுக்கு சரியான பதில் இது இல்லை? அப்போ இனிமே எப்படியும் இப்படியே தான் இருக்க போறீங்களா? என்று கேட்டாள்.

சித்தார்த், அப்படி சொல்ல முடியாது! ஆண்  அப்படி கூட வச்சுக்கலாம்! என்று புரியாமல் ஒரு பதிலை பேசிவிட்டு சென்றான்.

இதன்யா , நில்லுங்க  நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி! மறந்து போச்சா! 

சித்தார்த், அப்போ எந்த ஃப்லேவருமே இல்லாமல் நீ ரெடியா இருக்கியா! அதுக்கு!  என்று அவளை பார்த்து கேட்டான் .

இதன்யா அதே இடத்தில் நின்று கொண்டாள். அதற்கு என்ன பதில் சொல்வது என தெரிய வில்லை. 

சித்  சிரித்துக்கொண்டே இப்ப கூட உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை! அது உன் முகத்தில் நல்லா தெரியுது! நீ என்னோட மனைவி தான்! நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்! அந்த இடம்!  நீ மட்டும் தான்! இந்த உரிமையை நான் வேற ஒருத்திக்கு கொடுக்க மாட்டேன். ஆனால் அதே உரிமையை நான் எடுத்து   நிறைய அனுபவிச்சிட்டேன்.  இனிமே இது!.. இது எனக்கு வேண்டாம்! போதும்! ஹான் முக்கியமா பயப்படாத! உன்னை நான் எதும் செய்ய மாட்டேன்  என்று சொல்லிக்கொண்டே குளிக்க சென்று விட்டான்.

இதன்யா அதே இடத்தில் நின்றாள். அவன் குளித்து முடித்து வரும் வரை அந்த சோபாவில் அமர்ந்து கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். 

மேகாவிடம் சவால் விட்டது. இப்பொழுது இதன்யாவுக்கு  நினைவு வந்தது. ஒருவேளை இதில் தோர்த்து விடுவோமோ! நானே போய்  வழிய அவர்கிட்ட பேசணுமா? அப்படியே பேசினாலும் என்னை கேவலமா தானே நினைக்கிறாரு! இப்போ நான் என்ன பண்ணட்டும்? என்று அவளுடைய மனம் துடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க..

மூளையோ, இதன்யா நீ நீயாக இரு!  நீ வழிய போய்  கெஞ்சி பேசணும்னு அவசியம் இல்ல! உன்னோட மனசு உனக்கு தெரியும்! அதை விட உன்ன பத்தி எல்லாமே எனக்கு தெரியும்! அதனால நீ இதை பெருசா எடுத்துக்காத! எப்பவும் போல இயல்பா  இரு! எல்லாத்தையும் என் அழகு முருகன் பார்த்து கொள்வார் என்று கூறியது.

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டவள். இதை விடு இனிமே இத பெரிசு படுத்த வேண்டாம் . அவர் எதுக்கு சோபால படுக்கணும்? அவரு அவருடைய படுக்கையில் படுத்துக்கட்டும்.  நான் சோபாவில படுத்து கொள்கிறேன். எப்பவும் போல இருக்கலாம்!  என்னைக்கு மாறுதோ! அது அன்னைக்கு மாறட்டும்!  அவர் மேல இருக்குற  என்னோட காதல் எப்பவும் பொய்யில்லை! அது அவருக்குண்டான  எண்ணம்! அவர் மேல மட்டும் தான்! யார் மேலயும் எனக்கு அந்த மாதிரியான ஒரு உணர்வு! இதை அவர் சீக்கிரமே புரிந்து கொள்வார். இனி நான் நானாக இருக்க போகிறேன். என அவள் வெளியே வந்ததும் குளிக்க சென்றாள். 

இதன்யா  குளித்து முடித்து உடை அணிந்து கொண்டு கீழே வந்தாள்.

சித் உணவு உண்டு கொண்டிருந்தான். அவள் வேகமாக சமையல் அறை சென்று காலை,  மதிய வேளை என இரு நேரத்துக்கும்  உணவை எடுத்துக் கொண்டு கல்லூரி கிளம்பி விட்டாள்.

சித்தார்த் அவளைத்தான் கண்காணித்துக் கொண்டிருந்தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை. இதன்யாவும் அவனை கண்டுகொள்ளாமல் கிளம்பி விட்டாள்.

அவளுக்காக வெளியே கார் காத்துக் கொண்டிருந்தது.  சித்தார்த்தன் மனதில் இப்போ அவ  ஏறுவாளா? மாட்டாளா? காலையில பேசினதுக்கு என்ன பண்ணுவாளோ?  என்று கலக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தான். 

இதன்யா எதுவும் செய்யாமல்  நேராக கல்லூரி சென்று விட்டாள். சித்தார்த் ஒரு பெருமூச்சியை விட்டு..  அவள் அவளாக மாறிவிட்டாள்! எனக்காக எதையும் மாற்றிக்கொள்ளவில்லை! அதுதான் எனக்கு வேண்டும்!  என் கிட்ட இயல்பா வரணும்! மற்றபடி செயற்கையான அன்பு, செயற்கையான பாசம் , எதுவும் எனக்கு வேண்டாம்! என்று நினைத்து நிம்மதியுடன் சூட்டிங் கிளம்பினான். 

மாலை வீடு வந்தவள் வழக்கம் போல் அவளுடைய பாடங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். ப்ளூ பிரிண்ட் மற்றும் சைக்காலஜி, இந்தியன் எஜுகேஷன் சிஸ்டம், இங்கிலீஷ், கணிதம், இயற்பியல் தாவரவியல் என அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தாள்.அனைத்து பகுதிகளில் இருந்தும் தனித்தனியாக 25 மதிப்பெண்கள். அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அத்தனயும் திட்ட மிட்டு கொண்டு இருந்தாள். 

சித் சரியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். நேராக அரைக்கு சென்றான்.  பார்ட்டிக்கு  வரலையா? என்று கேட்டான்.

இதன்யா, இதோ இப்ப கிளம்புறேன்! என்று உள்ளே சென்று  உடையை மட்டும்  மாற்றிக் கொண்டு வந்தாள். இந்த டிரஸ் உங்களுக்கு ஓகேவா? என்று கேட்டாள்.

சித்தார்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு உனக்கு எது பிடிச்சிருக்கோ!அத போட்டுக்க! என்று கூறினான்.

இதன்யா,  அப்போ இது எதையுமே நான் போட மாட்டேன்! 

சித், அப்படியே வர போறியா என்று கேட்டான்.

இதன்யா அதற்கு சிரிக்கவில்லை. நேராக உள்ளே சென்று வேறு ஒரு உடைக்கு மாறி  வெளியே வந்தாள். 

சித் சென்று அவனுக்கான உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

இதன்யா அவனை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் கீழே இறங்கினாள்.

சித்தார்த் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டே இருந்தவன்.

காரில்  அவளிடம் இதைப் பற்றி கேட்க நினைத்தான்.

இதன்யா, அவனிடம் ஒரு விஷயம்! 

ம்ம சொல்லு!

ரம்யா, ரோஸ்  வரலையா? என்று கேட்க

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வருவாங்க என்று கூறினான்.

அப்படியா சரி ஓகே என்று வெளியே வேடிக்கை  பார்த்துக் கொண்டு வந்தாள்.

சித்தார்த், க்கும் என்று தொண்டையை கணைத்தான். அவள் அப்பொழுதும் திரும்பி பார்க்கவில்லை.

உடனே சித், அப்! அப்போ நீ எதையுமே மறக்கல!  உன்னோட மனசுல இன்னும் அதை நினைச்சுட்டு இருக்க தானே! எப்போவும் சில விசயம்  மாறாது இத்தனை நாளும் நீ அதை நினைது கொண்டு இயல்பாக இருப்பதை போல என் கிட்ட என சொல்லிக் கொண்டிருக்க.

இதன்யா அவனை பார்க்காமல் “ நீங்க!… மமம் நான் என்ன தான் எக்ஸ்பிளைன் பண்ணாலும்?  நீங்க தான் கேட்கிற நிலையில் இல்ல! இட்ஸ் ஓகே அதேபோல இந்த ஒவ்வொரு தடவையும் சொல்லி சொல்லி எனக்கு நீங்க தான் எனக்கு  ஞாபகப்படுத்துறீங்க!  நான் அதை எப்பவோ மறந்துட்டேன்! ஹான் இன்னொரு விஷயம்!  நீங்க சொல்றது சரிதான்! 

என்ன? என சித் கேட்க..

இதன்யா முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு நமக்குள்ள நடக்கிறது! ஐ மின் நடக்க போறது! நமக்குள் நடக்க போற விசயத்தை அது அது வந்து!  அது நீங்க என்னை  கட்டாயப்படுத்தல! அதே போல  நானும் உங்களை நீ கட்டாயப்படுத்த மாட்டேன்! என்று சொல்லிக் கொண்டு போன எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். 

அதன் பின் நேராக ஆஷிஷ் கவுடாவின் ஹோட்டலுக்கு கார் சென்றது.  சித்தார்த்துக்கு வழக்கத்தை விட அதிகமாக பாதுகாவலர்கள் இருந்தார்கள்.  ஏனென்றால் இப்பொழுது இந்த குண்டு வெடிப்பு சம்பவம்.. அதனால் அதிகமாக ஒரு பாதுகாப்பை  ஏற்படுத்த காவலாளிகள் நிறைந்து இருந்தார்கள். 

அவர்கள் அங்கு இறங்கியதும் இருவர் இதன்யாவையும் சித்தார்த்தையும் உள்ளே அழைப்பார்கள்.  ஆஷிஷ் கவுடாவின்  நட்பு வட்டங்கள் சினிமா வட்டங்கள் என அனைத்தும் கூட்டங்களும் அங்கே நிறைந்து இருந்தது. 

ஆஷிஷ் இவர்களைப் பார்ப்பதும் வெல்கம் சித்தார்த்! அண்ட் மிஸஸ் சித்தார்த்  என்று சொல்லிக் கொண்டே நேராக அருகில் வந்தான்.

அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்ததும் இதன்யாவின் கைகள் தன்னிச்சையாக சித்தார்த்தின் கையோடு கோர்த்துக் கொண்டது.

அவனும் அவளை அவளின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

இந்த பிடிப்பு!.. அது இருவருக்கும் உள்ளுக்குள்..? 

தொடரும்.. 

ரம்யா போதை மயக்கத்தில் ஒரு காரின் முன்னால் மோதி மயங்கி விழுந்தாள்.

Comment pannunga ratings konjam like share pannunga..

Sorry for late ud and no ud.. nan marriage function la iruken! Romba romba busy AA try pandren பார்க்கலாம்! 

EPI 234

அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்ததும் இதன்யாவின் கைகள் தன்னிச்சையாக சித்தார்த்தின் கையோடு கோர்த்துக் கொண்டது.

அவனும் அவளை அவளின் கைகளை தான் தேடினான். அருகில் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். உடனே சித் நேராக திரும்பி கொண்டவன்.  ஒன்னும் பயம் வேணாம்! இப்போ தாரா, சதீஸ், பிரியா , எல்லாரும் வந்துடுவாங்க அவங்க கிட்ட விடுரேன். என்று கூறினான். 

ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தாள். 

ஆஷிஷ் அவர்களுக்கு ஹாட் டிரிங்க்ஸ் மற்றும் சாப்ட் ட்ரிங்க்ஸ் எடுத்து வர சொன்னான். 

இதன்யா அங்கு வந்திருக்கும் அனைவரையும் சுற்றிலும்  பார்த்து கொண்டு இருந்தாள். அந்த மனிதர்களை போல் அவளால் ஒரு போதும் நடந்து கொள்ள முடியாது. 

சித்தார்த்தை அங்கு வந்திருந்த சிலர் பார்த்து விட்டு அருகில் வந்து நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். 

நல்லா இருக்கேன் என்று ஒற்றை பதிலுடன் முடித்து கொண்டான். அருகில் உள்ள இதன்யாவை பார்த்தார்கள். 

இவங்க!. என்று தயங்கி கொண்டே சித்தார்த்திடம் விசாரித்தார்கள். 

உடனே இதன்யா அவன் முகத்தை பார்த்தாள். 

சித், இவங்க என்னோட கேர் டேக்கர்! என்றான். 

 அவன் சொன்ன பதிலில் இவ்வளவு நேரமும் பிடித்து இருந்த விரல்களை விட்டு விட்டாள். 

சித் எதுவும் கண்டு கொள்ள வில்லை. 

அவள்  புன்னகையுடன்“ ஹாய் ஐம் இதன்யா அவரால் நடக்க முடியல பாவம் அதனால் நான் கேர் டேக்கரா அவரை கேர் பண்ணி பாத்து கொள்ள வந்து இருக்கேன்! ஹலோ மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணா!  இப்போதைக்கு உங்களுக்கு  சாப்ட drinks  கொடுக்கக் கூடாது! அதுக்கு காரணம்  இப்பதான் உங்களுக்கு ஆபரேஷன் முடிஞ்சிருக்கு! உங்களோட பிசினஸ் பாக்கறீங்க அதனால குடிக்கிறத கொஞ்சம் அவாய்ட் பண்ணனும்! ஆஸ் அ கேர் டேக்கரா! உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன். 

சித்தார்த் அவளை இமை வெட்டாமல் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தான். 

அங்கு இருப்பவர்கள் அங்கு இருப்பவர்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் உன்னிடம் பார்த்துவிட்டு சரி நீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். 

இதன்யா அவர்கள் சென்றதும் ஆசிஷ் கொடுத்து விட்டுச் சென்ற உணவுகளை சாப்பிட ஆரம்பித்தாள்.

சித், கரெக்டா நான் சொன்னதுக்கு தகுந்த மாதிரி பேசுற?  

இதன்யா  சிரித்துக் கொண்டே உணவுகளை ருசித்துக்கொண்டும் ஆமா நீங்க!..   அதாவது நான் உங்களுக்கு சரியா இருக்கணும்ல்ல! நீங்க பேஷண்டா இருந்தால், நான் தான் கேர் டேக்கர்! சோ நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்க்கு இது போதும்!  என்று எழன புன்னகையுடன் நின்றாள். 

அவனுக்கு  என்னவோ போல் ஆகிவிட்டது. எதுக்கு இவ இப்படி எல்லாம்  பண்றா? இவளுக்கு விளக்கம் கொடுக்கணுமா? என்று தோன்றியது. எதையோ யோசித்தவன் பேச வர..

அவனை முழுவதும் புரிந்து கொண்டவளாக இதன்யா , உங்களோட விளக்க உரை எல்லாம் எனக்கு வேண்டாம்!  கேட்டால் உன்னை நான் வெளியே யாருக்கும் காட்ட விரும்பல, அண்ட் உன்னை யாருக்கும் தெரியாது,  அதனால கல்யாணம் பத்தி வெளியில யாருக்கும் தெரியாது , அதனாலதான்… என்று   இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட டயலாக் பேச போறீங்களா?  என்று பார்த்தாள்.

 சித்தார்த் கொஞ்சம் திடுக்கிட்டு  இல்லையே! என்று கூறியவன் .

அதன்பின் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

இதன்யா எவ்வளவுதான் முயற்சி பண்றீங்க? ஆனா! இந்த இதன்யா அப்படியே தான் இருப்பா!  என்று நினைத்து சிரித்துக்கொண்டாள்.எவ்வளவு திமிர்! கூடவே கொழுப்பு! பார்க்கிறேனே! என நினைத்து கொண்டாள். 

அந்த நேரம் ஆசிஷ் அருகில் வந்தான் . எப்பொழுதும் போல சித்தார்த் எதுவும் பேசாமல் போன் நோண்டிக் கொண்டிருக்க..

இதன்யா அவனை பார்த்து புன்னகை செய்தாள்.

ஆஷிஷ் என்னடா செய்து கொண்டிருக்கிறாய்? இங்க வந்து கூட போன தான் ஓடிக்கிட்டு இருக்கியா?  எப்போ பாரு வேலை! பிசினஸ் தான்! இன்னைக்கு என்னோட பிறந்த நாள்! அதுக்கு ஒரு விஷ் பண்ணியா? நீ ? என்று கேட்டான்.

சித் கொஞ்சம் சலித்துக் கொண்டே நான் எதுக்கு உனக்கு விஷ் பண்ணனும்? ஆக்சுவலா உங்க அம்மா அப்பாவுக்கு நான் ஆறுதல் சொல்லணும்! இப்படி ஒரு பயண  பெற்று போட்டு விட்டீர்களே?  என்று என்னை எல்லாம் இப்படி தொல்லை கட்டுறான்! என்று கூறிக்கொண்டே அவனது வேலையை பார்த்தான்.

இவன் எப்பவும் இப்படித்தான் என்று சலித்துக் கொண்டே ஆஷிஷ் திரும்ப…

இதன்யா புன்னகையுடன் ஹாப்பி பர்த்டே சார்! நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்! என்று கைகளை நீட்டினாள்.

 ஆஷிஷ் சந்தோச மனநிலையில்  நீ தான்! ம்ம் நீ தான் இதை தனியா சரி என்று கூறினான். 

சித்தார்த்தின் பார்வை இதன்யாவின் மீது சென்றது. 

ஆசிஸ், டேய் அவளை  எதற்கு முறைக்கிற?  நான் ஒன்னும் பண்ணல!  எனக்கு பர்த்டே விஷஸ் தான் சொல்லி இருக்கா! 

சித் பற்களை கடித்து கொண்டு “இப்ப நான் உன்னை ஏதாவது சொன்னானா?  எதுவுமே சொல்லல  தான! வாய மூடிட்டு நில்லு! என்று சொல்லிக் கொண்டே நோண்ட ஆரம்பித்தான்.

இதன்யா அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அந்த நேரம் ரம்யா சதீஷ் ரோஷினி மூவரும் வந்தார்கள்.. ரோஸ் கூடவே ரிஷியை அழைத்து இருந்தாள். 

சித் அவளை ஒரு  பார்வை பார்க்க… 

அவளோ அவனிடம் புன்னகையுடன்  நீங்க இங்க உங்க வேலையை பாருங்க! நான் அவங்க கூட போய் ஜாயின் பண்ணிக்கிறேன்! என்று புன்னகையுடன் சென்றாள்.

அவள் செல்வதை பார்க்க ஆஷிஷ்,  இரு இதன்யா நானும் வரேன்! இவன் கூட எல்லாம் யாருமே பேச முடியாது! இப்படியே தனி காட்டு ராஜா மாதிரி மூஞ்ச வச்சுட்டு எல்லாத்தையும் ரூல் பண்ணிட்டு இருப்பான்! என்று சொல்லிக் கொண்டே அவளின் பின்னால் சென்றான்.

சதீஷ் அவனுக்கு ஒரு பரிசை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினான்.  ரம்யா எதுவும் கொண்டு வராமல் வந்திருந்தாள்.

ரோஷினி மற்றும் ரிஷி இருவரும் ஆஷிஷ் கவுடாவிற்கு ஒரு பரிசை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஆஷிஷ் அவர்களுடன் சிரித்து  கொண்டு நன்றி சொல்லிவிட்டு ரம்யாவை பார்த்தவன். ரம்மி நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?  என்று கேட்க..

ரம்யா, நானா? நான் உன்னோட பர்த்டே ஃபங்க்ஷனுக்கு வந்ததே உனக்கு மிகப்பெரிய கிப்ட்! அதனால நான் சும்மாதான் வந்தேன்! 

சும்மா வந்தியா? எதுக்குடி நீ சும்மா வந்தா? 

ரம்யா, போடா என்று சொல்லி கொண்டே அவள் சாப்ட் ட்ரிங்க்ஸ் இருக்கும் பக்கம் சென்றாள். 

இதன்யா அவனிடம்  “நீங்க கேக் கட் பண்ணிட்டீங்களா? உங்க மம்மி டாடி வரலையா? என்று  கேள்விகளை அடுக்கி கொண்டே கேட்டார்.

அவங்களுக்கு எல்லாம் வீட்டிலேயே பங்க்ஷன் முடிஞ்சிடுச்சு ! இப்போ இங்கே  என்னோட பெர்சனல் பார்ட்டி என்று புன்னகையுடன் கூறினான்.

அதன் பின் ஆஷிஷ் இதன்யாவிடம்   உன்னோட வாலு எங்கே? விட்டால் நாலு முழுசும் பேசிட்டே இருப்பா! அவன் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு! ஆனா கேட்டதுக்கு அப்புறம் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும்! என்று ஆசிஸ் கூற..

சதீஷ்,  உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும்! என்று விரைப்புடன் அவனைப் பார்த்தான்.

ஆஷிஷ் சாதாரண தொனியில் இதுல என்னடா இருக்கு? என்று சொல்ல..

சதீஷ், அவ பேச்சுக்கே எனக்கு மட்டும்தான் பைத்தியம் பிடிக்கணும்! இனிமே அவ கூட எல்லாம் பேசாதே!  

எதுக்குடா இதை பெரிசு பண்ற? 

சொல்றது புரியும் தான! 

ஆஷிஷ், நீ என் வெயிட் அண்ட் வாட்ச்!  சொடக்கு போடுற நேரத்துல பிரியாவை நான் வளச்சு விடுவேன் பாக்குறியா.  ஓவரா பண்ற.. 

சதீஷ் கொஞ்சம்  நெஞ்சு புடைக்க டேய் அவ என்னோட ஆளு! தெரியும்ல!  இந்த மோதுர வேலை எல்லாம் இங்க வச்சுக்காத! என்று சொல்ல..

இதன்யா ப்ளீஸ் ரெண்டு பேரும் சண்டை போடுறது நிறுத்துறீங்களா ? அவள் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. 

அவ சரியான ப்ராடு என்று  சொல்லி கொண்டு இருக்க..

ரோஷினி , சதீஷ் அருகில் வந்து சத்யா! நீ லவ் பண்றியா? என்ன. என்று புரியாமல் கேட்க.

ரிஷி அந்த இடத்துக்கு வந்தவன் .  சத்யாவா? நீங்க சதீஷ்ன்னு தானே நீங்க!  அப்போ சத்ய ஜித் 

 இதன்யா அவனுடைய மொத்த வரலாறையும் நான்கு வரிகளில் ரிஷியிடம்  கூற

அவன்  ஷாக் ஆகி எப்படி உங்களுக்கு அந்த மக்கு பிடிச்சிருக்கு.  அவ எப்பவுமே சரியான அடங்காத ராட்சஸி! என்ன தனு  இதெல்லாம் நீ சொல்ல மாட்டியா? என்று கேட்க..

ரோஷினி கொஞ்சம் விரைப்புடன் ஆமா மிஸ்டர் ரிஷி சொல்றதுக்கு கூட கரெக்ட் தான்! உனக்கு டேஸ்டே இல்ல..  சத்யா நான் இப்பவே மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன். 

சதீஷ் அவளை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது ரோஷினி அவள பத்தி கொஞ்சம்  என சதீஷ் முகம் எல்லாம் புன்னகையுடன் சொல்ல ஆரம்பிக்க.  சரியாக அந்த நேரம் இதன்யாவிற்கு ஃபோன் வந்தது. 

இதன்யா அவளிடம்  எங்க டி இருக்க?  வரியா? வரலையா?  என்று பிரயாவிடம் கேட்க..

பிரியா, நான் வந்துட்டேன் டி குண்டு ஆனால் உள்ளே  வரதுக்கு எனக்கு பயமா இருக்கு டி!  என்று கூறினாள்.

இதன்யா, என்னடி பயமா இருக்கு? என்று புருவம் நெருக்கி கொண்டே பேசினாள்.

அவள் அடுத்து பேச வர .. ஆசிஷ் போனை வாங்கி பிரியா நீ அங்கேயே நில்லு! நானும் இதன்யாவும் அங்கே வரோம் என்று சொல்ல..

உடனே சதீஷ் ஆஷிஷ் கிட்ட  இருந்து போனை வாங்கி கட் செய்தவன்.இதன்யா நீ என்னை தான் கூட்டிட்டு போற?  பாப்பா!… நீ உன்னோட அண்ணா நான் தானே! நீ என்னை  அண்ணா  தான சொல்லி  கூட்டிட்டு போவ என்று கேட்க..

இன்னொரு பக்கம்  ஆசிஷ்,  என்னோட பெர்த் டேகு நான் தான் இன்வைட் பண்ணன்.

சதீஷ், இல்ல பிரியாவையும் நான் தான்.. தூக்கி போவேன். 

 நம்ம போலாம் என்று இதன்யா மாட்டிக் கொண்டாள்.

இங்கே சித் எதையும் கண்டு கொள்ளாமல் அவனுடைய வேளையில் முழு கவனமும் செலுத்தி கொண்டு இருந்தாள். 

அந்த நேரம் அந்த ஹோட்டல் மேகா அவளுடைய ஃபாரின் நட்பு வட்டங்களை கூட்டிக்கொண்டு இரவு பப்புக்கு வந்திருந்தாள். 

இப்போது அடுத்து என்ன நடக்குமோ? 

*மேகாஅந்த இடத்துக்கு வந்து இருக்காள்?

* சித்தார்த் மற்றும் இதன்யா இரண்டு பேருக்கும் நடுவுலயும் இப்போ ஒரு விரிசல் ஆனா எப்பவும் அவங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு பிரிய மாட்டாங்க

*இந்த சூழ்நிலைல  ரம்யா வேற குடிச்சிட்டு யாரோட கார் மேலயோ போய் விழுந்துடுறா!  இதுக்கெல்லாம் பதில் என்ன?

தெரிஞ்சுக்க நாளைக்கு படிங்க..

தொடரும்

நான் கல்யாணத்துல இருக்கேன் அதனால தான் அதையே இல்ல வேற இல்ல..

Comment pannunga ratings konjam like share pannunga.  

EPI 235

இப்படியே இருவரும் பேசி கொண்டு இருக்க.. 

இதன்யா சதீசை சமாதானம் செய்யும் விதமாக அண்ணா நீங்க தானே அவளை லவ் பண்றீங்க? 

ஆஷிஷ், இவன் ஓவரா போறான்! நான் என்ன சொல்லிட்டேன்? அதை விட உன் கிட்ட பேசினால் அந்த சித்து முறைக்கிறான்! பிரியா பற்றி பேசினால் இவன் சீன் போடுறான்? உங்க மனசுல என்ன டா நினைத்து கொண்டு இருக்கீங்க? 

ரோஸ், ஹே சத்யா, ஆசிஷ் உங்க ரெண்டு பேருக்கும் வேற மூஞ்சியே கிடைக்கலயா? 

ரிஷி, ரோஸ் சொல்றது சரி தான்! அந்த பிரியா சாதாரண ஆள் கிடையாது. மினி ரவுடி! இதன்யாவை இப்படி அடங்காதவளாக மாற்றியதே அவள் தான்! 

ஆஷிஷ், நீ சொல்றது சரியா இருந்தாலும் எனக்கு வேற ஆள் இல்லையே! 

சதீஷ், டேய்! நீ ஓவரா பண்ற? பாப்பா! என்று கத்தி கொண்டே திரும்பி பார்க்க அங்கே இதன்யா இல்லை. அவள் எப்பொழுதோ பிரியாவை அழைக்க சென்று விட்டாள். 

சதீஷ் கடுப்புடன் எல்லாம் உன்னால டா? என்று சொல்லி கொண்டே நுழைவு வாயிலின் பக்கம் சென்றான். 

 அங்கு வந்திருக்கும் டைரக்டர்கள் மற்றும் சில புரோடுயூசர்கள் சித்தார்த்திடம் பேசி கொண்டு இருக்க அவன் பார்வை இதன்யாவை தேடி கொண்டே  அவர்களிடம் பேசியவன் ஜஸ்ட் அ மினிட் என்று சொல்லி விட்டு நேராக ஆஷிஷ் அருகில் சென்றான். 

ஹே எங்கே டா அவள்? 

ஆஷிஷ் பிரமிப்புடன் அடேங்கப்பா சார் கண்ணில் மேடம் பட்டு கொண்டே இருக்கணுமா!  அவள் போய் ஒரு நிமிடம் கூட ஆகல அதுக்குள் மோப்பம் பிடித்து கொண்டு வந்துட்ட? ஹே ரோஸ்னி உன்னை உன் அண்ணன் விசாரித்தானா? ஆனால் பொண்டாட்டி அப்படி நகர்ந்ததும் உடனே கேட்க வந்துட்டான். 

சித் கடுமையான குரலில் என் கிட்ட அடி வாங்கி சாகாத ஆஷிஷ்!  அண்ட் ரிஷி நீ தானே இவளை கூட்டி வந்த? நானா கூட்டி வந்தேன்?  ஒழுங்கா சொல்லிடு? அவள் எங்கே? 

ரிஷி, மாமா! தனு காரிடார் போயிருக்கா! பிரியாவை பிக் அப் பண்ண!. அண்ட் கூட சதீஸ் சார் போயிருக்காரு! 

சித் எதுவும் பேசாமல் விசயத்தை கேட்டு விட்டு நேராக டைரக்டர் மற்றும் புரோடுயூசர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றான். 

ரோஸ், என்ன ஆஷிஷ் நீ அந்த பிரியாவை லவ் பன்றயா? 

ஆஷிஷ் சிரித்து கொண்டு சும்மா! ஜஸ்ட் சத்யாவை கிண்டல் பண்ண சொன்னேன்! வேற ஒன்னும் இல்ல!  என்று சொல்லி கொண்டு இருக்கவே அவர்கள் அனைவரும் உள்ளே வந்தார்கள். 

இதன்யா, எப்டி டி வீட்டில் சொன்ன? உன்னை கேள்வி கேட்கலயா? 

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு உன்னை ஹாஸ்டலில் பார்க்க போறேன். உன் கூட ஸ்டே பண்றேன் அப்டின்னு சொல்லிட்டு வந்திட்டேன். எப்டி?

இதன்யா அதே இடத்தில் நின்று அவளை அதிர்ச்சி மற்றும் கோபத்துடன் திரும்பி பார்க்க.. 

பிரியா சிரித்து கொண்டே வேற என்ன குண்டு நான் சொல்லட்டும்? சொல்லு! 

உன்னை கொலை பண்ண போறேன்! எதுக்கு டி என்னை கோர்த்து விடுற? நாளைக்கு நீ எதும் பண்ணிட்டு போயிட்டா! நான் என்ன பண்ணுவேன்! இளங்கோ அப்பாவும், கலைமாவும் என்னை சுற்றி வளைப்பாங்க!. 

பிரியா நடந்து கொண்டே என்னடி குண்டு நான் என்ன பண்ணிட்டு போவேன்! 

வர வர உனக்கு போட்டி அதிகமா போயிட்டே இருக்கு! இப்போ ஆக்டர் அப்புறம் அதுக்கும் முன்னாடி ஏற்கனவே ரெண்டு பிஸ்னஸ் மேன் உன் மேல பைத்தியமா இருக்காரு! என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சதீஸ் அவர்களுக்கு முன் வந்து நின்று குட் ஈவ்னிங் இதன்யா மேம் சித்து சார் உங்களை தேடிக்கிட்டு இருந்தார்! என்று கூற.. 

இதன்யா கொஞ்சம் சிரித்து கொண்டே என்னை? அவரு?.. கூப்பிட்டாரு? என்று விட்டுவிட்டு கேட்க..

சதீஷ், நிஜமா! மேம்!. 

பிரியா அவனை பார்த்ததும் கடுப்புடன் எதுக்கு குண்டு இந்த கூஜாவை எங்கே பார்த்தாலும் சித்து கூட்டிட்டு வராரு!. 

இதன்யா, எனக்கு தெரியாது நீ அவர் கிட்டயே கேளு! என்று நடந்து சென்று விட்டாள். 

அவள் போனது தெரிந்ததும் சதீஸ் பிரியாவின் அருகில் நெருங்கினான். 

பிரியா, ஹே ஹே என்ன கிட்ட வர.. 

சதீஷ், அப்போ நீ வா!.  என்று கையை பிடித்தான்.

பிரியா அவனை தள்ளி விட்டு வேகமாக உள்ளே சென்றாள். 

சதீஷ் அவளின் பின்னால் சென்றான். ஹே நில்லு பிரியா! அப்படியே ஓடினால் நான் விட்டு விடுவேனா? என்று பின்னால் சென்றான். 

பிரியா மூச்சு வாங்க சுற்றிலும் பார்த்து கொண்டே போய் ஒருவரின் மேல் மோதி விட்டாள். 

ஹே யூ! என்று அவளை அரைய மேகா கோபத்துடன் திரும்பினாள்.  

பிரியா கொஞ்சம் திடுக்கிட்டு ஹே நீயா?  ஹாய் மேனா மினுக்கி! நான் வேணும்னு பண்ணல.. 

மேகா அவளை கேவலமாக பார்த்து கொண்டே ஹே ஜஸ்ட் சட் அப்! பாய்ஸ் எங்கே இருக்கீங்க? இடியட்ஸ்! என்று கத்திட.. 

மேகாவை சுற்றி நான்கு தடியடி ஆட்கள் வந்து நின்றார்கள். 

மேகா, என்ன டி! இங்கே இருக்கும் மீதியை பொறுக்கி தின்ன வந்தியா? இவளை இந்த ஹோட்டலில் இருந்து துரத்தி விடுங்க! என்னை கீழே தள்ளி விட்டாள். இந்த ஹோட்டல் செக்யூரிட்டி எங்கே? என்று கத்தி கொண்டு நின்றாள். 

அந்த மேகாவின் ஆட்கள் பிரியாவை நெருங்க..

மேகா, அவளை கழுத்தை பிடித்து தள்ளி விடுங்க.. 

பிரியா சண்டைக்கு செல்ல போக அதற்குள் அவளின் முன்னால் சதீஸ் வந்து விட்டான். அவர்களை பார்த்து முறைத்து கொண்டே  யாரு மேல கை வைக்க வரீங்க? தர மட்டம் ஆக்கிடுவேன்! 

மேகா சதீசை பார்த்ததும் ஹே சித்தார்த் வந்திருக்காரா? என்று பின்னால் பார்க்க..

ஆஷிஷ், என்ன பிரச்னை என்று இன்னொரு பக்கம் வந்தான். 

மேகா, ஹே நான் தான்! மிஸ்டர் ஆஷிஷ்!. அப்புறம் முக்கியமான விசயம். நானும் என்னோட காலேஜ் மெட்ஸ் எல்லாரும் இங்கே கெட் டூ கெதர்கு வந்தோம்! வந்த இடத்தில் இந்த லோ கிளாஸ் பிட்ச் என் மேல் மோதி பிரச்னை பண்றா? இவளால் எப்டி இங்கே ? அதுவும் ஹை க்லாஸ் லக்ஸ்சூரியஸ் ஹோட்டலில் அதான் இந்த இடத்தை க்லீன் பண்றேன். 

சதீஷ், ஹே இன்னொரு வார்த்தை பேசின அவ்ளோ தான்! 

ஆஷிஷ், என்னோட கெஸ்ட்டை வெளியே போக சொல்ல நீங்க யாரு? என்று சதீசை விலக்கி அவனுக்கு அருகில் கொண்டு வந்தான். 

மேகா அவனை முறைத்து கொண்டே இந்த ஹோட்டல் இஞ்சார்ஜ் அண்ட் ஓனர் யாரு நான் இப்போவே கம்பிலைன்ட் பண்ண போறேன். இந்த மாதிரி ஒரு ஹோட்டலில் என்று ஆரம்பித்து கொண்டே அங்கே இருக்கும் ஹோட்டல் பணியாளரை அழைத்தாள். 

ஆஷிஷ் அவர்களை வர சொல்லி கண்களில் சைகை காட்டினான். 

அவர்கள் அனைவரும் வரிசையாக வந்தார்கள். மேகா அவர்களிடம் காச் மூக் என்று கத்தி கொண்டு இருக்க..

பிரியா, ஆசிஷ்! சாரி பா! நான் கிளம்பி விடவா? என்னால் இங்கே பிரச்னை வேணாம்! 

ஆஷிஷ், அடி வாங்க போற? இன்னிக்கு பெரிய ஸ்டேஜ் வெயிட்டிங்! நீ, நான், ரம்மி எல்லாம் பாடலாம்! ஜாலியா இருக்கும்! என்று சொல்லி கொண்டு இருந்தான். 

இதன்யா புருவம் நெருக்கி கொண்டே என்ன இன்னும் அவங்கள ஆளை காணோம்! என்று நினைத்து கொண்டே சுற்றி பார்த்தாள். 

அங்கு இருக்கும் வெயிட்டர்ஸ் அனைவரும் எதோ பிரச்னை என்று பேசி கொண்டு இருக்க.. உடனே இதன்யா மனதில் அய்யோ பிரியாவுக்கும் சதீஸ் அண்ணாவுக்கும் பிரச்னை வந்து இருக்குமா? என்று நினைத்து கொண்டே வேகமாக செல்ல..

ரிஷி, ஹே தனியா எங்கே போற? 

அவள் ஆளையே காணோம்! பிரியாவை கூட்டி வரேன். எதோ பிரச்னை போல  என்று சென்றாள். 

ரிஷி, இரு நானும் வரென் என்று அவளுடன் சென்றான். 

ரோஸ் தன் அண்ணன் கிட்ட எப்படியாச்சும் சமாதானம் ஆவது என்று சித் அருகில் சென்றாள். 

ரிஷி, பதட்ட படாத! சதீஷ் இருக்காரு அவரு பார்த்து கொள்வார்! 

இதன்யா, அய்யோ சீனியர் சண்டையே அவங்க ரெண்டு பேருக்கும் தான் வரும்! அதனால் தான்! என்று ஓடினாள். நான் என்னோடயே கூட்டி வந்து இருக்கணும்? பெரிய தப்பு பண்ணிட்டேன். என்று அவர்கள் செல்ல அங்கு நடந்த சம்பவமே வேறு!. 

ரிஷி அந்த இடத்தை அடைந்ததும் பார்வை கூறானது. மேகா! என்ன பண்ணிட்டு இருக்க? என்று கடுமையான குரல்..

மேகா பேச்சை நிறுத்தி விட்டு தன் அண்ணன் இருக்கும் திசையை பார்த்தாள். 

ஆஷிஷ், ஹே மேன் உனக்காக தான் இந்த கேர்ல விடுறன்! ஒவெரா பேசுறா!. 

மேகா, யாரை பார்த்து என்ன சொல்ற? ஹே மேனேஜர் ஹோட்டல் ஓனர் எங்கே இப்போவே உங்க எல்லாரையும் என்ன செய்கிறேன் பாருங்க! 

சதீஷ், ஆசிஷ் கவுடா தான் இந்த ஹோட்டல் ஓனர்! இப்போ என்ன பேச போற? 

இதன்யா பிரியாவின் அருகில் வந்து என்ன ஆச்சு டி!. 

பிரியா அங்கு நடந்த விசயத்தை இரண்டு வரிகளில் கூறி முடித்தாள். 

சதீஷ் சொன்ன விசயத்தை கேட்டதும் மேகா ஒரு நிமிடம் அமைதி ஆகி திடுக்கிட்டு பார்த்தாள். 

ஆஷிஷ், இப்போ மேடம் என்ன பண்ண போறீங்க? 

இங்கே என்ன நடக்குது? என்று குரல் கேட்டது. 

அவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே சித்தார்த் வந்து கொண்டு இருந்தான். 

மேகாவின் கண்கள் மின்னியது. அவள் அவன் அருகில் செல்லும் முன் இதன்யாவை பார்த்தாள். அன்று அவர்கள் பேசிய விசயம் நினைவுக்கு வந்தது.  மேகா மனதில் ஹோ மேடம் தடுக்க வர மாட்டாள். இன்னையில் இருந்து என்னோட ஆட்டம் ஸ்டார்ட் ஆகுது! உன்னை எப்டி சித்தார்த் கிட்ட இருந்து அடிச்சு துரத்தி விடுகிறேன் என பாரு டி என்று நினைத்து கொண்டே சித்து! என்று அழைத்து கொண்டே  அருகில் சென்றாள். 

அவர்கள் அனைவரும் சித்தார்த்தை பார்க்க ரிஷி, மேகா! இப்போ எதுக்கு பிரச்னை பண்ற? 

மேகா அவனை கண்டு கொள்ளாமல் சித்து இந்த கேர்ள் என் மேல் மோதி என்னோட ட்ரெஸ்சை என்ன பண்ணி இருக்காள் பாரு! நான் எதுமெ பண்ணல.. என்னை நம்பு! இங்கே இருக்கும் எல்லாரும் என்னை எப்டி பேசுறாங்க தெரியுமா? ஒரு பொண்ணு கிட்ட உன்னோட P.A ரூடா பேசுறான். அந்த ஆசிஷ் நல்ல ஆக்டர் போல இல்ல.. என் அண்ணா அதுக்கும் மேல பேசுறான். 

ஆஷிஷ், சித்து இவள் பொய் சொல்றா? 

சித்தார்த், பிரியா நீ சொல்லு! 

பிரியா இரண்டு வரிகளில் பிரச்சனை யை கூற..

சித் ஒரு பெரு மூச்சை விட்டு இப்போ என்ன வேணும்? சொல்லு! 

மேகா,  இங்கே இருக்கும் எல்லாரும் என் கிட்ட சாரி கேட்கணும்? முக்கியமா அவள்? என்று பிரியாவை கை காட்டினாள். நான் இதே ட்ரெஸ் போட்டு எப்டி கெட் டூ கெதர் அட்டன் பண்ண முடியும்? என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை என்ன நினைப்பார்கள். 

சித், ட்ரெஸ் தானே வேணும்! 

ரிஷி, மாமா அவள் பொய் சொல்றா? 

பிரியா, என்ன இதயா அமைதியா நிக்கிற? அவள் எவ்ளோ பொய் சொல்றா? நீ சித்து கிட்ட சொல்லு! 

இதன்யா அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டே நம்ம அமைதியா இருக்க வேண்டிய நேரம்! அதை விட மிஸ் மேகா ராஜ் அவங்க சாதாரண பொண்ணு இல்லையே கிரேட் சித்தார்த் கிருஷ்ணா கூட படம் பண்ற பொண்ணு.. இப்போ பிரச்னை ஆனால் அவரோட படம் பாதிக்க பட்டால்? அதை விட இது ஆசிஷ் சார் பர்த் டே பக்ஸன் இதுல பிரச்னை வேணாம். 

பிரியா, அட போ இதயா என்று பெரு மூச்சை விட்டு பார்த்தாள். 

சித், சதீஸ் எல்லாரையும் கூட்டி கொண்டு உள்ளே போ! 

ஆஷிஷ், மேனேஜர் இந்த லேடியோட புக்கிங் கேன்சல் பண்ணிடுங்க! அதுக்கு எவ்ளோ ரிட்டன் கொடுக்கணுமோ அதை விட அதிகமா கூட நான் தரேன்.  இனி இந்த லேடி நம்ம ஹோட்டல் உள்ளே வந்தால் உங்க வேலை போயிடும். 

 ரிஷி அந்த இடத்தில் அவமானத்துடன் தலை பிடித்து கொண்டு நின்றான். 

சித், என்ன ஆசிஷ்! விடு இதை பெருசு படுத்த வேணாம்!.. ரிஷி நீ இதுக்காக ஃபீல் பண்ண வேணாம்! என்று சொல்லி கொண்டே சதீஷை பார்த்தான். 

பிரியா இதன்யாவிடம் என்ன டி சித்து இப்படி பேசிரார்! 

அது நமக்கு தேவையில்லை வா உள்ளே போலாம் என்று சொல்லி கொண்டே முன்னால் நடந்தார்கள். 

மேகா கொஞ்சம் குளைவுடன் சித்து இப்போ நான் என்ன பண்ணட்டும்! என்று மிகவும் பாவமான முகத்துடன் நின்றாள். 

சித் அவனுடைய வெலட்டில் இருந்து அவளிடம் சில பண தாள்களை நீட்டினான்.

மேகா அவனை விநோதமாக என்ன இது என்று கேட்டாள். 

சித் பார்த்தால் தெரியலையா? இது மனி! அண்ட் உனக்கு ட்ரெஸ் வாங்க தான்! பிரியா உன்னோட ட்ரெஸ் அ மிதித்து விட்டாளே!. 

மேகா, என் கிட்ட இல்லாத பணமா!. 

சித்  அவளை பார்த்து பணம் இருந்தால் போதுமா! உன் கிட்ட முக்கியமான விசயம் இல்லையே! 

என்ன?  

சித், உன் கிட்ட முக்கியமா மூளை இல்ல! என்று வெளிப்படையாக கூறினான். 

மேகாவுக்கு கோபம் தாறுமாறாக வந்தது. உடனே அவள் தன்னை கட்டு படுத்தி கொண்டு பேச வர..

சித், அப்போ நான் கொடுத்தால் வாங்கிக்க மாட்டியா? 

மேகா கொஞ்சம் சிரித்து கொண்டே நீ என் கூட வந்து ட்ரெஸ் சூஸ் பண்ணி வாங்கி கொடுத்தால் நல்லா இருக்கும். 

சித், ஹான் வர நான் ரெடி! 

மேகா இந்த வார்த்தைகளை கேட்டதும் அவனை கட்டி அணைக்க வர.. 

சித், அதுக்கு முன்னாடி ஒரு விசயம்? 

என்ன? என்று மேகா அவனை அணைத்து கொண்டாள். 

சித் அப்படியே நின்றவன். மே ஐ கால் யூ நீ பிட்ச் 

மேகா சட்டென அவன் முகத்தை பார்த்தாள். 

சித், ம்ம் அப்போ நீ பிட்ச் தானே! அப்டின்னா என்ன? தெரு நாய்! அதை விட சொல்ல போனால் என சில வார்த்தைகளை சொல்ல..

மேகா வேகமாக அவனிடம் இருந்து விலகினாள். அவள் விலகிய அடுத்த நொடி சித் அவனுடைய மேல் கோட் கழட்டி அருகில் இருந்த டஸ்ட் பின்னில் போட்டவன். அவளை பார்க்க..

மேகா பற்களை நரணரத்து கொண்டே உஷ்ண மூச்சுடன் அவனை பார்த்தாள். 

சித், பிட்ச் க்கி அர்த்தம் சரியா பிட்ச் என்று அவளை டிஸ்யூ கொண்டு அவனுடைய கழுத்து மற்றும் கையை துடைத்து கொண்டே பார்த்தான். 

சித்து என்று மேகா கத்திட..

சித், பிரியா உன்னை மாதிரி சீப்பான ஆள் இல்லை எவ்ளோ தைரியம் இருந்தால் நீ சொல்லுவ.. இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க! 

மேகா, சித்து நிஜமாவே உனக்கு அவங்களை பற்றி தெரியல.. அவளுங்க  உன் கிட்ட இருக்க சொத்தை எல்லாம் பிடுங்க தான் வந்திருக்காங்க! 

சித், அதை பத்தி உனக்கு என்ன டி கவலை! இந்த டி எப்போவும் இதன்யாவுக்கு மட்டும் தான் சொந்தம்! இந்த டி சொல்றவன் கூட அவளுக்கு தான் சொந்தம்! உன்னோட தேவையில்லாத வேலையை கொஞ்சம் மூட்டை கட்டிக்க.. இல்லனா என்னை பற்றி உனக்கு முழுசா தெரியாது. அடுத்த முறை பார்த்து கொண்டு இருக்க மாட்டேன். என சொல்லி கொண்டே நடந்தான். 

மேகா வேகமாக அவன் அருகில் வந்து பின்னால் இருந்து அணைத்து கொண்டாள். அவனுக்கு கோபம் தலைக்கு ஏற.. அவளை தள்ளி விடாமல் நின்றான் இது பொது இடம் அதை விட இந்த ஹோட்டலில் நிறைய ஆட்கள் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தார்கள். 

மேகா அவனுடைய பின் சட்டையில் முத்தம் பதித்தவள் நீ எனக்கு தான்! உன்னை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன். என்று சொல்லி சென்று விட்டாள். 

சித் கோபத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். இவளை என்ன பண்றது? பெரிய தலைவலியா இருக்கா! என்று நினைத்து கொண்டே அறை பக்கம் சென்றான். 

ஆசிசை பார்க்க வரும் போது சித்தார்த் எப்பொழுதும் தங்கும் அறை 114 அந்த அறைக்கு சென்றான். 

புதிதாக ஒரு ஆடையை வீட்டில் இருந்து எடுத்து வர சொன்னான். ஆடையும் வந்து சேர்ந்தது. 

இங்கே பிரியா, என்ன டி சித்து இன்னும் வரல.. 

அவரு வருவாரு நீ என்ஜாய் பண்ணு! என்று அவள் வேறு எதுவும் பேச வில்லை. 

சித்தார்த் சிறிது நேரம் கழித்து வேறு ஒரு உடையில் வந்து சேர்ந்தான். இதன்யா அவனது பக்கம் கூட திரும்ப வில்லை. 

ஆஷிஷ் அவன் அருகில் சென்று என்ன டா பண்ணி வச்சு இருக்க? அவள் ஜாலியா பப் உள்ளே போறா! 

சித், ஜஸ்ட் ரிலாக்ஸ் ஆசிஷ்! அவள் என்னோட கம் பேக் படத்தோட ஹீரோயின், அண்ட் ரிஷியின் தங்கை இந்த காரணத்துக்காக தான் நான் அவளை சும்மா விட்டேன். 

ஆஷிஷ் இன்னும் கோபத்துடன் அவள் பிரியாவை என்ன சொன்னாள் தெரியுமோ! இந்த மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்லை! எனக்கு இரிட்டிங்கா இருக்கு! என்று பொங்கி எழுந்தான். 

சித் அவனை சமாதானம் படுத்தும் விதமாக அவளுக்கு நாளைக்கு இருக்கு! நீ இதை விடு என்று சொல்லி சமாதானம் செய்தான். 

சதீஷ் அதை விட கோபத்தில் கண்கள் சிவக்க ஒரு இடத்தில் விரைப்புடன் நின்று இருந்தான். சித் நேராக அவன் அருகில் சென்றான். 

சித்தார்த்தை பார்த்ததும் அவன் விலகி செல்ல..

சித், நில்லு சத்யா! 

நீ என்ன பண்ணி இருக்க தெரியுதா? 

சித் அவனிடம் விவரத்தை கூறி கொண்டு இருந்தான். 

ரிஷி பிரியாவின் அருகில் வந்து சாரி பிரியா என்று மன்னிப்பு கேட்டான்.

பிரியா, டேய் ரிஷி விடு! உன் தங்கை இப்படி தான் இருப்பா! அதுக்கு என்ன பண்ண முடியும்! நான் பெரிசா எடுத்துக்கல.. என்று அவனை கிண்டளுடன் சீண்ட ஆரம்பித்தாள். 

ரிஷி, பிரியா என்ன மா! இப்படி சொல்ற! 

பிரியா, டேய் அதை விடு! எதுக்கு டா இந்த கொலை வெறி உன் ஆளு தமிழை கொன்று கொண்டு இருக்காளாமே! 

இதன்யா புரியாமல் அவளும் என்ன என்பதை போல பார்க்க..

பிரியா சிரித்து கொண்டே நீங்க பெரிய காவிய காதல் பண்றீங்களா? உனக்காக அவள் தமிழ் டிகிரி காப்பி கூட வாங்க முடியாது. ரொம்ப மக்கு! அவளை போய் அ முதல் ஃ  வரை எழுத சொல்லி கல்யாணம் பண்ணிக்க டா! இல்லனா அவள் இந்த ஜென்மத்தில் பாஸ் பண்ண மாட்டாள். 

ரிஷி, உனக்கு பொறாமை! எதுக்கு என்னோட ரோஸ் பற்றி இப்படி பேசுற! 

பிரியா, அவள் பேரு ரோஷ்னி அப்படியே ரோசு ரோஸின்னு இளிக்கிற..

ரிஷி, தனு பாரு! இதுக்கு தான் என்று அவன் பிரியாவை திட்ட ஆரம்பிக்க. 

இதன்யா, சரி சரி பிரியா அமைதியா இரு! 

பிரியா, ரிஷி ஒத்த ரோசா ஓகேவா! 

ரிஷி அவளின் தலையில் கொட்டு வைக்க ஆசிஷ் வந்தான். 

ஹே என்ன பிரியா பேபிய அடிக்கிற.. 

பிரியா உடனே ஆசிஷ் பக்கம் திரும்பி மெனி மெனு ஹேப்பி பர்த் டே ஆசிஷ்! என்று கைகளை நீட்டினாள். 

ஆஷிஷ் சிரித்து கொண்டே தேங்க்ஸ் பேபி! 

பிரியா, சோ ஸ்வீட் பேபி! என்று கண் அடித்தாள். அதன் பின் அவளுடைய பையில் இருந்து ஒரு சில்வர் காப்பு போல ஒன்றை அவனுக்கு முன் நீட்டினாள். 

ஆஷிஷ், என்ன பேபி இது? 

பிரியா, இது எனக்கு முடிஞ்ச எனக்கு தெரிஞ்ச கிப்ட் உனக்கு பிடிச்சு இருக்கா பேபி! 

அந்த நேரம் இதன்யா அவனிடம் ஒரு கீ செயின் பொம்மையை நீட்டினாள். 

ஆஷிஷ் ஆச்சரியத்துடன் இது என்ன இதயா? 

இதன்யா, ஹேப்பி பர்த் டே சார் என்னோட பிரென்ட்க்கு இந்த மாதிரி தான் நாங்க வாங்கி கொடுப்போம்! உங்களுக்கு பிடிச்சு இருக்கா! என்று இருவரும் ஆர்வத்துடன் கேட்டார்கள். 

ரோஸ், இது என்ன ஒரு 100 ரூபி இருக்குமா! என்ன தனு நீ அண்ணா கிட்ட  சொல்லி இருந்தால் உன்னை கிப்ட் சாப் வீடே ஓபன் பண்ணி கொடுத்து இருப்பான் நீ இதை போய்! அந்த கேர்ள் தான்  மிடில் கிளாஸ் நீயும்! இப்படி!  என்று சொல்ல. 

பிரியா மற்றும் இதன்யாவின் முகம் வாடி போனது. ஆனால் பிரியா அடுத்த நொடியே அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் முகத்தை மாற்றி கொண்டு இயல்பாக மாறி பேச வர..

ரிஷி ரோஸ்னியை முறைக்க ஆரம்பித்து திட்ட வாய் எடுக்க ஆஷிஷ் சிரித்து கொண்டே  இந்த பர்த் டேல என்னோட பெஸ்ட் கிப்ட் இது ரெண்டும் தான்! எனக்கு இது ரொம்ப பிடிச்சு இருக்கு! எனக்கு இந்த மாதிரி யாருமே கிப்ட் பண்ணது இல்ல.. இது என்று அவ்வளவு சந்தோசத்துடன் பிரியா வாங்கி கொடுத்ததை கையில் போட்டு கொண்டான். 

இதன்யாவின் கீசைன் எடுத்து அவனுடைய கார் சாவியில் போட்டு கொண்டவன். நான் வச்சு இருக்கும் பாரின் காருக்கு இந்த கீ எப்படியோ அதே போல இந்த கீ சைன்! உங்க ரெண்டு பேருக்கும் என் மேல உண்மையான ஒரு அன்பு இருக்கு! இதை நான் யார் கிட்டயும் ஃபீல் பண்ணது இல்ல! இந்த பர்த் டே எனக்கு ரொம்ப ஸ்பெசல்! என்று அவர்களை பார்த்தான். 

ரிஷி, ஒரு உண்மையான ஒழுக்கமான ஆண் எதிர் பார்க்கும் விசயம் இவ்வளவு தான்! என்ன பொருள் என்பதில் முக்கியம் இல்லை அதை கொடுக்கும் மனசு தான் முக்கியம்! ஆனால் ரோஷ்னி நீ மட்டும் உன்னோட குணம் அப்படியே தான் இருக்கு! என்று அவன் நகர்ந்து விட.. 

ரோஸ் வருத்தத்துடன் ரிஷி பின்னால் சென்றாள். 

பிரியா, ஆசிஷ் இன்னிக்கி செம்மையாக இருக்க! 

அவன் சிரித்து கொண்டே தேங்க்ஸ்! ஆனால் என்ன இப்படியே நான் மொட்டை பையனா இருக்கேனே! என்று கீ சைன் பொம்மையை பார்த்து கொண்டு இருந்தாள். 

இதன்யா சிரித்து கொண்டே நான் கொடுத்த அந்த மெழுகு சிலை பொம்மை போல உங்களுக்காக ஒருத்தி பிறந்து வளர்ந்து எங்கேயாப்து ஒரு இடத்தில் இருப்பாள். சொல்ல போனால். இங்கே இந்த ஊரில் கூட இருக்கலாம்! சோ அடுத்த பிறந்த நாளில் நீங்க உங்க ஜோடி புறா கூட தான் இருப்பீங்க! 

ஆஷிஷ்…? 

சித் அவர்கள் மூன்று பேரும் சிரித்து பேசுவதை பொறாமையுடன் பார்த்து கொண்டு இருந்தான். 

அடுத்து ரம்யா காட்சிகள்.

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga..

EPI 236

உங்களுக்குன்னு சீக்கிரம் ஒரு ஜோடி புறா வரத்தான் போகுது!  நீங்க வெனால் பாருங்களேன்! அடுத்த பிறந்தநாள் அப்போ  உங்களோட ஜோடி புறா உங்க கிட்ட வந்து சேர்ந்து இருப்பா! ம்ம்  அப்போ எங்களோட ஞாபகம் எல்லாம் உங்களுக்கு இருக்குமா? என்று  இதன்யா கிண்டல் செய்தாள். 

இதன்யாவுடன் பிரியாவும் சேர்ந்து கொண்டாள். அவள் சொல்றது சரிதான் அடுத்த வருஷம் நீங்க வேற லெவல்ல இருப்பீங்க என்று கூறிக் கொண்டே சிரித்தாள.

 இதன்யா மற்றும் பிரியா இருவரும் ஆசிசுடன் இயல்பாக பேசுவதை பார்த்து சித்தார்த் மற்றும் சதீஷ் இருவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அங்கு பேசிக் கொண்டிருக்கும் மூவரையும் சித்தார்த் வைத்த கண் வாங்காமல் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சதீஷ் பிரியாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டே சித்தார்த்திடம் “எப்படித்தான் இந்த பொண்ணுங்கள மயக்குறானுங்கன்னு தெரியல! இதுக்காகவே பர்த்டே பார்ட்டி கொண்டாடுவார்களோ? நீ எப்படா சித்து பர்த்டே பார்ட்டி கொண்டாடுன? என்று சித்தார்த்தின் பக்கம் திரும்பினான்.

அவனுடைய பார்வை இன்னும் விகாரமாக இருந்தது.  சதீஷ் எச்சிலை கஷ்டப்பட்டு விளங்கிக் கொண்டே என்னடா சித்து அப்படி பார்த்துட்டு இருக்க? என்று கேட்க…

அவன் எதுவுமே பேசவில்லை. சதீஷ்  அவனது கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில்  உன் கிட்ட ஒரு விசயம்?

என்ன? என்பது போல் சித் பார்வை இருந்தது.

சதீஷ், ஆமா எதுக்கு கோட் மாத்திட்டு வந்திருக்க? என்ன விஷயம்? என்று கேட்டான்.

சித்தார்த்,  சொல்லியே ஆகணுமா? என்று கடுமையான குரலில் அவனைப் பார்த்தான்.

சொன்னா சொல்லு சொல்லாட்டி போ என்று சதீஷ்  இரண்டு அடிகள் எடுத்து வைக்க..

சித்தார்த், அந்த மேகா என்னை ஹக் பண்ணிட்டா!  அதுக்கு தான் டிரஸ் மாத்திட்டு வந்தேன்! 

சதீஷ் ஷாக் ஆகி திரும்பி சித்தார்த்தை பார்த்தான்.உடனே அருகில் வந்து என்னடா சொல்ற? 

சித், கூடவே  என்னை கிஸ் பண்ணிட்டா! அதனால எனக்கு சுத்தமா பிடிக்கல,  போய் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன். என்று கடுமையான குரலில் கூறினான்.

சதீஷ்  அப்படியே உறைந்தது போல் நின்று கொண்டிருந்தான்.

சித்தார்த் , இப்போ எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்க? என்று கேட்க..

சதீஷ் தன்னிலைக்கு வந்து என்னடா பண்ணி இருக்க? எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணிட்டு வந்திருக்க? இது இதுன்யாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? என்று கேட்க…

சித்தார்த்,  நீ வேணா போய் அவ கிட்ட சொல்லு!  இத சாதாரணமா கடந்து போயிடவா! என்று கூறினான்.

சதீஷ் புரியாமல் என்னடா சொல்ற? நீ அவளோட புருஷன்! உன்ன ஒரு பொண்ணு கிஸ் பண்ணா! அவ சும்மா விடுவாளா? என்று கூறினான்.

உடனே சித்தார்த்,  நீ போய் அவகிட்ட சொல்லி  பாரு படத்துல கிஸ் பண்ற மாதிரி, என்னை ரொம்ப கேவலமாவும் சாதாரணமாக நினைப்பா என்று பெரு மூச்சை விட்டான்.

சதீஷ் அவன் அருகில் நெருங்கி எதுக்கு இப்படி பேசுற என்று கேட்க.

சித் உதட்டை கடித்துக் கொண்டே ரொம்ப பிளாக்கா இருக்கு! எனக்கு அன் சர்டெயினிட்டியா இருக்க மாதிரி பீல் ஆகுது! என்று கூறினான்.

சதீஷ் அதெல்லாம் ஒன்னும் இல்ல.  இப்போ  முக்கியமான விஷயம் சொல்ல போறேன். 

என்ன? 

சதீஷ், இந்த விஷயத்தை அந்த மேகா சொல்றதுக்குள்ள நீயே போய் பாப்பா கிட்ட  சொல்லிடு என்று கூறினான்.

சித்தார்த்,  நான் எதுக்கு சொல்லணும்?  தெரிஞ்சா, அவளை வந்து கேட்கட்டுமே! என் சட்டை பிடிச்சு கேட்கட்டும்! அதுக்கு அவளுக்கு உரிமை இருக்கு தானே ! என்று பார்த்தான்.

சதீஷ் எதுக்குடா இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? தப்பு பண்ணது நீ! 

சித்தார்த்  முறைத்துக் கொண்டு நானா? நான் என்ன தப்பு பண்ணன்?  அதை நீ என்ன தப்பு  கண்டுபிடிச்சிட்ட? என்று அருகில் வர…

சதீஷ்,  நான் ஒன்னும் சொல்லல என்னமோ பண்ணி தொலைங்க என்று சொல்லிக் கொண்டு சென்று விட்டான்.

அவன் சென்ற ஒரு சில நொடிகளில் மேகா  சித்தார்த்தை கட்டி அணைத்த வீடியோ மற்றும் அவனுக்கு முதுகில் முத்தம் கொடுத்தது என்று அனைத்தையும் இதன்யாவிற்கு பிரத்தியேகமாக ஒரு எண்ணில் இருந்து வந்தது.

இதையெல்லாம் யார் அனுப்பியது? அதை கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன்!

இதன்யா போனை எடுத்து அந்த படங்களை பார்த்தாள். இதயம் வேகமாக துடித்தது.  சட்டென சித்தார்த் எங்கு இருக்கிறான் என்று பார்த்தாள். அவனுடைய சட்டையையும் பார்த்தாள். அந்த இடத்தில் அதற்கு மேல் அவளால் நிற்க முடியவில்லை. மூச்சு முட்டியது.  அதனால் அந்த இடத்தை விட்டு செல்ல..

பிரியா,  ஏய் எங்கடி போற என்று கேட்க..

இதன்யா ,  ரெஸ்ட் ரூம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டாள்.

பிரியா கொஞ்சம் குழப்பத்துடன் என்னாச்சு?  இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்தா! திடீர்னு இப்போ என்ன ஆச்சு? என்று அப்படியே நின்று கொண்டிருக்க..

இங்கே இதன்யா நேராக வாஷ் ரூம் சென்று உள்ளே புகுந்து கொண்டாள். அவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் ஓடியது.  அவள் அணைத்தது, அவள் முத்தமிட்டது, அது என்னோட புருஷன்! எனக்கானவர்! எனக்கு மட்டும்தான்! எனக்கு மட்டுமே சொந்தம்!நான் அவரை லவ் பண்றேன்! ஆனால்  எப்படி அவ முத்தம் என்று அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றாள். என்று அவளுக்கே தெரியவில்லை.

அவள் அழுது கொண்டே இருக்க திடீரென்று ஒரு சத்தம்  கேட்டது .

என்ன பண்ற?  இவ்வளவு நேரம்!  என்ன பண்ணிட்டு இருக்க?  எதுவும் உடம்புக்கு முடியலையா.  என்று பழக்கப்பட்ட குரல்..  வேற யார் அது சித்தார்த்தாகத்தான் இருக்க முடியும். என்ன செய்து கொண்டிருக்கிறாய் எவ்வளவு நேரம் ஒரு இடத்தில் இருக்கிறாய்? என்று அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

சித்தார்த் தான் அங்கே இதன்யா  கிளம்பியதும் ஐந்து நிமிடங்களில் அவள் எங்கே இருக்கிறாள்?  என்று சுதாகர் கண்டுபிடித்து வந்து விட்டான்.  அவளும் வெளியே வருவாள் என்று காத்துக் கொண்டிருக்க.. இதுவரை வெளியே வரவில்லை.

இதன்யா, நான் நல்லா தான் இருக்கேன் வரேன் என்று கூறியவள் வேகமாக முகத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு வெளியே வந்து முகத்தில் தண்ணீரை வாரி அடித்துக் கொண்டாள். அவளின்  முகத்தை நன்றாக கழுவிக்கொண்டு, அவளது கை குட்டியை வைத்து முகத்தை துடித்துக் கொண்டு, எதுவுமே தன்னை பாதிக்கவில்லை என்பது போல வெளியே வந்தாள்.

சித்தார்த்,  என்ன ஆச்சு? எதுக்கு வேகமா வந்த? 

இதன்யா,  எனக்கு ரெஸ்ட் ரூம் வந்தது அதனால வந்தேன் என்று இரண்டு அடிகள் முன்னால் வைத்தாள்.

சித்தார்த் , ரொம்ப ஜாலியா இருக்க போல!  இங்கே இருக்கிற எல்லா கூடமும் நல்லா டைம் ஸ்பென்ட் பண்ற இந்த மாதிரி விஷயம் , எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குமா?  வீட்ல இருக்க பிடிக்கலையா?  என்று கடைசியாக வந்து நிறுத்தின. 

இதன்யா,  அவனை பார்த்து ஏன் என்னுடைய இடத்துக்கு வேற யாரையாவது கூட்டிட்டு வர போறீங்களா? என்ன? என  வேண்டும்என்றே கேட்டாள்.

சித், அப்போ உனக்கு வேற யாராவது வேணும் தோணுதா? என்று கேட்டான்.

எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது. என்று அவள் அடுத்து பேச வர்

சித்தார்த்,  ப்ளீஸ் டென்ஷன் பண்ணாத வா என்று அழைத்துச் சென்றான்.  அங்கு சென்றதும் இருவரின் மனதும்  மாறிப்போனது. அவர்கள் நேராக ஆஷிஷிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு  கிளம்பினார்கள். 

ஆஷிஷ் அவனிடம் என்ன சித்து விட்டுட்டு போற ? 

சித் பெரு மூச்சை விட்டு எனக்கு நாளை காலை ஷூட்டிங், அண்ட்  மேடம்க்கு காலேஜ் இருக்கு,  அதனால நாங்க கிளம்புறோம். என்று கூறினான்.

ஆஷிஷ், என்ன சித்து நீ! உனக்குன்னு பிரத்தியேகமா பிரத்யேகமாக ஒரு ரூம் இருக்கு! அங்க ஸ்டே பண்ணிக்கலாமே? ப்ளீஸ் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ!  நீங்க எல்லாரும் போயிட்டா, எனக்கு ரொம்ப போர் அடிக்கும் என்று  கூறினான்.

உடனே சித்தார்த் அதனால என்ன இந்த வாரம் நீ வீட்டுக்கு வா! நீ எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்!  உன் கூட மனசு விட்டு பேச தானே இதன்யா மேடம்  தான் இருக்காங்கலே என்று கூறினான்.

ஆஷிஷ், எப்ப வேணாலும் வருவேன் என  இதன்யாவை பார்க்க…

உடனே பிரியா  அருகில் வந்து இதன்யாவிடம் என்னடி  குண்டு என்னை   விட்டுட்டு போறியா? நான் எப்படி வீட்டுக்கு போறது?

இதன்யா,  நீ ஹாஸ்டல்ல தானே ஸ்டே பண்ணி இருக்கேன்னு சொன்ன, புதுசா கிட்ட கொண்டு போய் விடுவாரு. சோ சேட் பண்ணிட்டு வீட்டுக்கு போயிட்டு எனக்கு கால் பண்றேன்.. 

கால் பண்ணல!  என்ன பண்ணுவேன் என  எனக்கே தெரியாதுடி என்று பவி உங்க வீட்டில் இருந்து போன்..

உடனே சதீஷ் , என்ன மேடம் எப்படி உங்களை உங்க வீட்ல தங்கி இருக்குன்னு தானே சொல்லிட்டு வந்தாங்க!  அவங்கள எப்படி ஹாஸ்டல்ல விட முடியும் அவ்வளவு சேர்த்து இல்ல மேடம் என்று கூற..

சித்தி நீங்க கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க..

சித்,  எனக்கு முக்கியமான வேலை இருக்கு அவன் கூட போ ஏதாவது பிரச்சனைனா, எனக்கு கால் பண்ணு!  நான் பாத்துக்குறேன் என்று சித்தார்த் கூறிவிட்டு முன்னால் வேகமாக நடந்தா அவனுக்கு பின்னால் சென்றாள். 

பிரியா ஒரு பெருமூச்சு விட்டு அதே இடத்தில் நிற்க..

ஆஷிஷ்,  பிரியா என  வந்தவன் பேபி நீ வேணா என்கூட இன்னும் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு!  ஆமா நான் உன்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல விடுறேன்.  உனக்கு ஓகேவா என்று கேட்க..

சதீஷ் உங்க வேலையை நீங்க பாருங்க சார் எங்களுக்கு தெரியும் என்று பற்களை கடித்துக் கொண்டே புரியவன்.  பிரியாவின் கைகளை இழுத்துக் கொண்டு வந்தான்.

பிரியா கோபத்துடன் டேய் என்னடா பண்ற?  எல்லாரும் நம்மள தான் பாக்கறாங்க!  எல்லாரு  முன்னாடியே உன்னை அடிக்கவா?  என்று கையில் ஓங்கி கொண்டாள்.

சதீஷ் , அடிக்க போறியா?  கையில எப்படி?  முத்தம் கொடுக்க முடியும்?  எல்லா டிரிக்கும் உனக்கு எல்லாவற்றையும் தெரியும் போலயே என்று சதீஷ் கூறினான்.

உன் வாயில ஆசிட்  ஊற்றனனும்! என பிரியா கைகளை உதிரி கொண்டே ஆடினாள். 

சதீஷ் கொஞ்சம் அமைதியா வாடி உன்ன பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும் என்று வெளியே வந்தார்கள். 

அந்த நேரம் ஒரு காரில் இருந்து சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் அவர்களுடைய காரில் ஏறுவதையும்,  இதன்யாவின் முகத்தையும் ரசித்து ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போ அந்த வீடியோ ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு போலயே.  இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் நீ என்கிட்ட வந்துருவ! என்னோட லக்கிச் சாரர்ம் என்று சொல்லிக் கொண்டே நவீன் குமார் ஜன்னல் வழியாக இதன்யாவையும் சித்தார்த்தையும் பார்த்தான்.

இதன்யா காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். சித்தார்த் முன் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான். 

நவீன் குமார் சிரித்துக் கொண்டே என்ன ஒரு கண்கொள்ளா காட்சி?  இதுதாண்டா?  ஆரம்பம்… உன்னை எப்படி பிடிக்க? நீயே கூடிய சீக்கிரத்தில்  உன்னை  எப்டி அவள் கிட்ட என்ன மட்டும் பாரு என்று நினைத்துக் கொண்டே காரை ஸ்டாட் செய்ய..  ஒரு உருவம் அவனுடைய காரின் முன் பக்கத்தில் படுத்து கொண்டிருந்தது.  அச்சச்சோ இந்த நேரத்தில் பேய் வந்து இருக்குமா? என்று நினைத்துக் கொண்டு பார்க்க..

அங்கே தலையை சாய்த்து கொண்டு ஒரு பெண் படுத்து இருந்தாள்.  நவீன் குமார் கோபத்துடன் அருகில் சென்றவன் யார் நீ.  என்று அதட்ட ஆரம்பித்தான்.

ஹே ஹலோ எந்திரி? எதுக்கு என்னோட கார் முன்னாடி படுத்திருக்க? யாரு நீ? என்று பேச ஆரம்பித்தான் .

உடனே அந்த பெண் கூந்தல் அவளின் முகத்தை மறைத்துக் கொண்டிருக்க.. 

நவீன் கடுப்பாகி ஏய் உன்ன தான் எந்திரிச்சுக்கோ!  எதற்கு என்னோட கார்ல இப்படி சாய்ந்து கொண்டு இருக்க? என்று சொல்லிக் கொண்டிருக்க மெதுவாக அவள் தலையை பிடித்து கொண்டே பார்த்தான்.

நவீன் குமார் நின்று கொண்டிருந்தார் அவனின் முன்னால் நின்றால் நவீன் குமார் அவளின் முகத்தை பார்க்க ஒன்றும் சரியாக தெரியவில்லை..அவர்கள் கொஞ்சம் வெளிச்சம் இல்லாத பகுதியில் இருந்தார்கள்.

ஆனால் ரம்யா கண்டுகொண்டாள்.  ஹே நவீ என்று சொல்லிக் கொண்டே அவன் அருகில் நெருங்க..

நவீன் குமார் நவீன் குமார் இரண்டடி பின்னால் எடுத்து வைக்க..

ரம்யா,  சாரி சாரி ப்ளீஸ் என்கிட்ட ஒரு பெரிய ஹெல்ப் கேட்க தான் உன்னை தேடிக்கிட்டே இருந்தேன். ஆனா உனக்கு போன் பண்ணவும் இல்ல , உனக்கு காண்டாக்ட் பண்ணவும் இல்ல,  என்று வழக்கம்போல் லூசு மாதிரி பேசிக் கொண்டிருந்தாள்.

நவீன் குமார் அவளை வினோதமாக பார்த்து என்ன லூசு மாதிரி பேசுற? இவள்   கிட்ட எல்லாம் நான் டைம் வேஸ்ட் பண்ணனுமா? என்று நினைத்தவன். 

தள்ளிப்போ!  நான் கிளம்பனும் என்று அவன் செல்ல போக..

உடனே ரம்யா அவனின் கையில் பிடித்துக் கொண்டவள்.  ஒரு நிமிஷம் நில்லு! 

நவீன், ஹே நீ தானே அன்றைக்கு எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தேன்.  உன்கிட்ட நான் வேலைக்கு ஜாயின் பண்ணனும் என்று சொல்லி கொண்டே அவனுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தாள். 

இங்கே சித் – இதன்யா…. ?

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 237

அவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க..  பார்க்கிறான் பாரு! பார்க்கிறான் பாரு! அவனோட கண்ணை நோண்டி காக்காய்க்கு போடணும்! அதை விட அவனோட கண்ணை கொல்லி கட்டை வைத்து கருக்கணும்! என்று சொல்லி கொண்டே பிரியா சதீஷை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள். 

நீ இப்படி சொல்றதுக்கு எல்லாம் அசரும் ஆளு நான் இல்ல டி! என்று சதீஸ் தீவிர பார்வையுடன் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். 

பிரியா அப்படியே அமர்ந்து கொண்டு இருக்க தொண்டையை சிரும்பினான். அவளிடம் எந்த பதிலும் இல்லை. சதீஷ் உடனே காரில் இருந்து இறங்கி பின் பக்கம் சென்றான். 

அவனுடைய காரை சுற்றி கடும் பாதுகாப்பு கிட்ட தட்ட இரண்டு கார்கள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆட்கள் பின் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள். 

பிரியா தன்னிலைக்கு வந்து திரும்ப அருகில் சதீஸ் இருந்தான்.

என்ன மேடம் அப்படி ஒரு சிந்தனை? என்று அவளை பார்த்து கேட்டான். 

பிரியா, டேய் ராஸ்கல் எப்டி நீ இங்கே வந்த? 

சதீஷ் சிரித்து கொண்டே அது தெரியாமல் தான் இவ்வளவு நேரமும் என்னை டைட்டா ஹக் பண்ற மாதிரி சைட் அடித்து கொண்டு இருந்தயா? 

பிரியா கோபத்துடன் நான் எதுக்கு டா உன்னை சைட் அடிக்கணும்! ச்சீ ச்சீ ச்சீ!..

சதீஷ் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்தான். 

பிரியா, இப்போ எங்கே இருக்கோம்! என்று திரும்பி பார்த்தாள். பவா லேடீஸ் ஹாஸ்டல்! என்று மின்னி கொண்டு இருந்தது. 

அடேங்கப்பா! சித்தார்த்துக்கு எவ்ளோ புரோபர்ட்டி என்று நினைத்து கொண்டு அவள் எழுந்து செல்ல திரும்பினாள். 

சதீஷ் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து இருக்க.. 

பிரியா வெளியே இறங்கி கொண்டு ஹே ஹலோ! என்று அவனை அழைத்தாள். 

சதீஸ் முகம் சுணங்கி இருந்தது. பிரியா மனதில் அப்படியே இஞ்சி தின்ன தேவாங்கு போல இருக்கான்! ம்ம் நல்ல திருஷ்டி களிக்கும் முகம்! என்று பார்த்தாள். ஹே உங்களை தான்! 

சதீஷ் அப்பொழுதும் அப்படியே இருந்தான். 

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு ஹே நீ எப்படியோ முகத்தை வச்சுக்க.. அப்புறம் சித்து இதன்யா ரெண்டு பேர் கிட்டயும் நான் பத்திரமா வந்த விசயத்தை சொல்லிடு! நான் வரேன் என சென்று விட்டாள். 

ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தாள். 

சதீஷ் அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். பிரியா, டேய்! 

எந்த பதிலும் இல்லை. 

பிரியா அவன் முன் சொடக்கு போட்டு அழைத்தாள். 

அவன் மெதுவாக திரும்பி பார்த்தான். 

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு இப்படி லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடி எதுக்கு நின்னுட்டு இருக்க? சீக்கிரம் கிளம்பு என்று சொல்லி விட்டு அவள் திரும்ப..

அடுத்த நொடி கதவு திறந்தது. அவள் உள்ளே வந்து விட்டாள். இல்லை இல்லை. சதீஷ் அவளை உள்ளே இழுத்து கொண்டான். 

டேய் தண்ட மாடு என்ன பண்ற! எதுக்கு டா! என்று அவள் பேச வர அதற்குள் சதீஸ் அவளின் வாயை பொத்தினான். 

பிரியா டேய் ம்மிம் என்று முக்கி கொண்டே அவனை பார்த்தாள். 

சதீஷ் கதவை லாக் செய்து அவள் பக்கம் நன்றாக திரும்பி கையை எடுத்தான். 

பிரியா மூச்சை இழுத்து பிடித்து கொண்டு என்ன டா! எதுக்கு என்னை உள்ளே இழுத்த! 

சதீஷ் அவளின் முகத்துக்கு அருகில் நெருங்கி அவளின் இதழையும் கண்களையும் மாறி மாறி பார்த்தான். 

பிரியா, டேய்! 

சதீஷ், ஸ்ஸ்! இப்போ நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு! எதுக்கு என்னை இங்கே இருந்து கிளம்ப சொன்ன? நான் எந்த இடத்தில் இருந்தால் உனக்கு என்ன டி? நீ உன்னோட வேலையை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே! மிம்ம் சொல்லு!.

பிரியா கண்களை உருட்டி கொண்டே எதையோ யோசித்து நான் சாதாரணமா சொன்னேன்! எதோ நமக்கு தெரிந்த பையன். அதனால் சொன்னேன்! போனால் போ! இல்லன்னா இங்கேயே குடி இருந்து கிரகபரவேசம் கூட பண்ணு! எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. என்று அவள் முகத்தை திருப்பி கொண்டாள். 

சதீஷ் அவளின் மோவாயை பற்றி அவள் பக்கம் திருப்பியவன். எனக்கு என்ன குறை? என்னை ஏன் உனக்கு பிடிக்க மாட்டிக்கிது? ஒரு காரணம் சொல்லு டி! 

பிரியா என்ன சொல்வது என்று யோசித்தாள். அப்படி ஒரு காரணம் கூட அவளிடம் இல்லையே! 

சதீஷ், என்னை பாரு! 

அவள் வேறு பக்கம் திரும்பி கொள்ள..

சதீஷ், பாரேன் டி! என்று வலு கட்டாயமாக திருப்பி கொண்டான்.

பிரியா, விடு டா! 

சதீஷ் அவளின் கண்களை பார்த்து கன்னத்தை ஏந்தியவன். நீ இப்போ மாறிட்ட! முன்னை போல இல்லை. 

என்ன? என்ன மாரிட்டென்!. 

சதீஷ், ஒன்னும் இல்ல என்று சமாளித்தான்.  

பிரியா, ஹே சொல்லு! அப்படி என்ன டா கண்டு பிடிச்ச? நீ சொல்வது போல எதுவும் மாறல! ஓவரா பில்ட் விடாதே! என்று முகத்தை திருப்பி கொண்டாள். 

சதீஷ் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை அவன் புறம் திருப்பினான். 

ஹே சதீசு! என்! என்ன பண்ண போற? என்று அவனுடைய இதழ்களை பார்த்தாள். அவளுக்கு  இதழுடன் கூடவே ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. 

சதீஷ் அவளின் இதழில் நெருங்கி முத்தமிட ஆரம்பித்தான். பிரியா கண்களை மூடி கொண்டாள். இப்பொழுது அடிக்கடி ஐயாவுக்கு கிஸ் பண்ண தோணுது! இல்ல இல்ல கூடவே அம்மணிக்கும் கூட நிறைய தோணுது கண்ணை மூடினால் சதீஸ் அவளை எது எதோ செய்கிறான். அவனை நினைக்காத நாளை தேடி கொண்டு இருக்கிறாள். அப்போ அப்படி பார்த்தால் எல்லா நாட்களும்… அவளுடைய எல்லா நாட்களையும் சதீஸ் தான் ஆக்கிரமித்து இருக்கிறான். 

பிரியா கண்களை மூடி கொண்டு உஷ்ன மூச்சுடன் அப்படியே சொக்கி கொண்டு அமர்ந்து இருக்க..

சதீஷ் அவளின் முடியில் ஊர்வலம் நடத்தி கொண்டே ஏன் டி என்னை இப்படி ஒதுக்கி வைக்கிற? நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா பிரியா! ம்ம் அது எல்லாம் உனக்கு எங்கே தெரிய போகுது! ஒவ்வொரு தடவையும் என்னை பார்க்கும் எல்லா நேரமும் கஷ்ட படித்துற மாதிரி தானே பேசுற! எனக்கு உன் மேல இருக்க உணர்வு அத்தனையும் அப்படியே உனக்கும் என் மேலே இருக்குன்னு தெரியும் டி! ஆனாலும் நீ அதை ஒத்து கொள்ள மாட்டுக்கிற! என்னோட அவஸ்தையை நீ அனுபவிக்கும் போது தெரியும் டி! என்று அவளின் காதை மெதுவாக கடித்தான். 

உடனே பிரியா வெடுக்கென அவனிடம் இருந்து பிரிந்தாள். 

சதீஷ் அவளை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தான். 

பிரியா அவனிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக இறங்கி கொண்டு ஹாஸ்டல் உள்ளே ஓடினாள். 

அங்கு இருக்கும் பெண் மணி இவளை பற்றி விசாரிக்க.. அந்த நேரம் சதீஸ் போன் செய்து அவளை பூஜாவிடம் அனுப்ப சொன்னான். அப்படியே பூஜாவுக்கும் அழைத்தான். 

ஹலோ! வதினா! 

ஹலோ யாரு என்று பூஜா புரியாமல் கேட்டாள். 

சதீஷ் சிரித்து கொண்டே நான் சதீஸ் பேசுறேன். வதினா!..

பூஜா ஒன்றும் புரியாமல் திரு திருவென முழித்து கொண்டே  என்ன சொல்றீங்க? என்னோட பேரு புதினா இல்ல..

உடனே சதீஸ் சிரித்து கொண்டே அது புதினா இல்ல வதினா அப்டின்னா அண்ணின்னு அர்த்தம். 

பூஜா ஒன்றும் புரியாமல் நீங்க எதுக்கு என்னை அண்ணி சொல்றீங்க? 

சதீஷ், நீங்க என்னோட ஒரே ஒரு உடன்பிறப்பு அபிஜித்தை லவ் பண்றீங்க! சோ நீங்க எனக்கு வதினா அச்சோ சாரி அண்ணி சரி தானே! 

அவன் சொன்ன விளக்கத்தை கேட்டதும் பூஜா கண்களில் நீர் கோர்த்து கொண்டது. தான் முதன் முதலில் விரும்பியவன் இப்படி தன்னை அவனுடைய அண்ணனுக்கு ஜோடியாக அண்ணியாக நினைக்கிறான். என்று வருத்தத்துடன் நின்றாள். 

சதீஷ், அண்ணி லைன்ல இருக்கீங்களா? 

பூஜா தன்னை சமன் செய்து கொண்டே பிளீஸ் நீங்க பூஜா சொல்லுங்க அண்ணி வேணாம்!  இப்போ எதுக்கு கால் பண்ணீங்க? 

சதீஷ், அது பிரியா உங்க கூட ஸ்டே பண்ண வந்து இருக்காள். அதான் உங்க கிட்ட பேச கால் பண்ணேன்.

பூஜா கனத்த இதயத்துடன் பிரியா இன்னும் வரலயே!  

சதீஷ், இப்போ வருவா பாருங்க! அதுக்கு தான் கால் பண்ணேன். 

அப்டியா சரி! என்று அவள் வைக்க போக 

சதீஸ், என்னை பற்றி கொஞ்சம் நல்ல விதமா சொல்லுங்க அண்ணி! பிளீஸ்! அவள் அடங்கவே மாட்டிக்குறா! 

பூஜா எதுவும் பேசாமல் லைனில் காத்திருந்தாள். 

ஹே ஹே என்ன பண்ற பிளீஸ் என் காரை விட்டு தள்ளி போ என்று நவீன் சொல்லி கொண்டு இருக்க..

ரம்யா, டேய் இங்கே பாரு உன்னோட விஸ்டிங் கார்டு! அதுல என் பேரு போட்டு இருக்கு! சோ நான் உன்னை விட்டு நகர மாட்டேன். என்று போதையுடன் கூறினாள். 

நவீன் கொஞ்சம் யோசித்தான். இவள் யாரு? எங்கேயோ பார்த்தது போல இருக்கே! என்று அப்படியே நின்று கொண்டு இருந்தான். 

 தலையை சாய்த்து கொண்டே ரம்யா அவனை பார்த்தவள். அதே இடத்தில் மயங்கி விட்டாள்.

நவீன் பதட்டத்துடன் ஹே ஹே! கேர்ள் கேர்ள்! என்று கூச்சலிட்டான். ரம்யா காரின் முன்னால் இருந்து அப்படியே கீழே சரிந்தாள். 

நவீன் வேகமாக அவளை பிடித்து கொண்டு அய்யோ! இந்த பொண்ணை! என்று கடுப்புடன் அவளை காருக்கு உள்ளே கொண்டு சென்றான். அப்பொழுது அவள் கையில் இருக்கும் விசிட்டிங் கார்டை பார்த்து விட்டு காலையில் கேட்டு கொள்வோம் என்று அந்த இடத்தில் இருந்து கிளம்பி விட்டான். 

அதே நேரம் இங்கே சித் இதன் யாவிடம் எதோ சொல்ல உடனே அவள் சித்தார்த்தின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டாள். சித் அதே இடத்தில் நின்று அவளை பார்த்தான். 

இதன்யா எதுக்கு சித்தார்த்தை அடித்தாள்? 

இந்த மேகா என்ன ஆனா? 

இன்னும் நிறைய கேள்விகள் எல்லார்த்துகும் பதில் நாளைக்கு..

இன்னிக்கி பாய்!..

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 238

இங்கே சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சித்தார்த் மனதில் மற்றவர்கள் சொல்லி தெரிவதை விட நம்மலே சொன்னால் நன்றாக இருக்கும். நாளைக்கு இதை ஒரு காரணம் காட்டி நம்மிடம் சண்டை போடுவாள். என்று நினைத்தான். 

இதன்யா அவர்களின் வீட்டின் உள்ளே நுழைவு வாயிலின் அருகில் செல்ல.. அந்த நேரம் சித்தார்த், க்கும்.. 

அவள் எந்த சலனமும் இல்லாமல் அப்படியே சென்றாள். 

சித், டீச்சர் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!  

சொல்லுங்க என்று முகத்தை கஷ்ட பட்டு இயல்பாக வைத்து கொண்டு திரும்பினாள். 

சித், இன்னிக்கி மேகா வந்தாள். என்று சொல்லி கொண்டே அவளை பார்த்தான். 

ம்ம் சரி! என்று திரும்ப நடந்தாள். 

மேடம் இருங்க..

இதன்யா கண்களை மூடி ஒரு பெரு மூச்சை விட்டு அவனை பார்த்தாள். 

சித், அவள் என் கூட மூவி பண்றா! அதை விட இன்னிக்கு நம்ம மீட் பண்ண இடம் ஒரு பப்ளிக் பிளேஸ்! அவள் பண்ணது தவறா இருந்தாலும், அது இன்டைரக்டா என்னோட பட நடிகை என்ற பெயரை தான் டேமேஜ் பண்ணும்.

இதன்யா அவனை புரியாமல் பார்த்தவள். இதை எதுக்கு என் கிட்ட சொல்றீங்க! ஆல்ரெடி எல்லா விசயமும் தெரியுமே!.

சித், அது ஓகே மேம் பட் அதுக்கு அப்புறம் ரெண்டு விசயம் நடந்தது. 

என்ன? 

சித், என்னை அவள் ஹக் பண்ணிட்டா! என்று சொல்லி கொண்டே அவளின் முகத்தை பார்த்தான். 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

சித், அது மட்டும் இல்லாமல் என்னை கிஸ்ஸ்!.. என்று இழுத்தான். 

இதன்யா கொஞ்சம் அசரிக்கையாக இப்போ என்ன சொல்ல வரீங்க? என்று அவனை பார்த்தாள். 

சித் ஒன்னும் இல்ல இது ஷூட்டிங் இல்ல அதே போல எனக்கு அதில் துளி கூட இஷ்டம் இல்லை. சொல்ல போனால் அவள் அப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல.. ஆனால் இதை சொல்லாமல் மறைக்க I mean உன் கிட்ட சொல்லாமல் மறைக்க எனக்கு விருப்பம் இல்லை. 

இதன்யா எதுவும் சொல்லாமல் திரும்பி  கொண்டாள். 

சித் அவளின் முன்னால் போய் நின்றவன். மேம் எதுவும் சொல்லிட்டு போங்க! நாளைக்கு யாராவது இதை போட்டோ எடுத்து அனுப்பி என்னை பற்றி எதுவும் சொன்னால் நீங்க அப்படியே நம்பிட்டு என் மேல ஹாராஸ், ரேப், இந்த மாதிரி கேஸ் போட்டு விட்டால்! அதை என்று அவன் பேச வர…

இதன்யா பற்களை கடித்து கொண்டு அவன் கன்னத்தை பார்த்து ஓங்கி அறைந்தாள்..

சித் இதை எதிர் பார்க்காமல் அவளை புருவம் நெருக்கி ஒரு நிமிடம் பார்த்தான். அதன் பின் அவளை தாண்டி கொண்டு நடந்தான். 

இதன்யா அவனுக்கு முன்னால் சென்றவள். கோபத்துடன் அவனுடைய சட்டை காலைரை இழுத்து கொண்டு சென்றாள். சித் அவளுடைய கை பிடிக்கு ஏற்றது போல சென்றவன். மேம் இப்போ நான் சொன்னதில் என்ன தப்பு! இப்போ கூட நான் ட்ரெஸ் பண்ணதை பார்த்து எதுவும் என்னை ரொம்ப ரொம்ப மோசமான ஒரு ஆளு மாதிரி நினைத்து கொண்டால் என்ன பண்றது. நான் எப்போவும் பத்தினி கணவன் தான்! 

இதன்யா மூச்சு வாங்க மேலே ஏறி வந்தவள். அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து பார்த்தாள். சித், உண்மை தான்! என்று அவளை பார்த்தான். 

இதன்யா அவனுடைய சட்டையில் இருந்து கையை எடுத்தவள் அதே இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். 

சித், இப்போ எதுக்கு அழற? சந்தேகமா? அப்போ இப்போவே கிளம்ப போறியா? அந்த நவீன்!.. என்று ஆரம்பிக்க..

இதன்யா ஆவேசமாக எழுந்தவள் அவனுடைய இன்னொரு கன்னத்தில் அறைந்து காதை பிடித்து திருக ஆரம்பித்தாள். 

ஹே உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன் டி! 

இதன்யா கண்கள் சிவக்க டேய் உன்னை கொல்லாம விட மாட்டேன். என்று இன்னும் அவனை அடிக்க ஆரம்பித்தாள். சித்தார்த் அவள் கைகளை பிடித்து கொண்டவன். ஹே நீ அப்படி தானே பேசுவ! என்னை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவ.. என்னை சந்தேக கண்ணோட பார்ப்ப? 

இதன்யா உதடு துடிக்க நான் அப்படி தான் பார்ப்பேன்! அப்படி தான் பேசுவேன்! சண்டை போடுவேன்! சந்தேக படுவேன்! அதுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லணும்! அப்படி நான் கேள்வியே கேட்கலன்னா! நமக்கு நடுவில்..  என்னை பொறுத்த வரை ஒரு பந்தம் இருக்கு! அதுக்கு எந்த அர்த்தமும் இல்ல.. நான் கேட்காமல் போனால் தான் தப்பு! சரியோ தப்போ மனசுல வைக்க எனக்கு பிடிக்காது. 

சித் அவளை இரு புருவம் தூக்க இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 

இதன்யா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்களில் வழியும் நீரை உள் இழுத்து கொண்டு மூக்கு விடைக்க..  டேய் அவள் கிட்ட லிமிட்ல இரு! எனக்கு பொறாமையாக தான் இருக்கு! உன் கிட்ட எவள் பேசினாலும் எனக்கு பிடிக்காது. என்று சொல்ல.. 

சித்தார்த் திருப்தியான மனநிலையில் அவளை பார்த்தான். அப்படியே அவனை இன்னும் நெருங்கினாள்.

சித், ஹே! 

பேசாத டா! மூச்! வெளுத்து போடுவேன்! வாய மூடு! என்று இதழ் பதித்தாள். சித் விரைப்புடன் நின்றான். இதை அவன் எதிர் பார்க்க வில்லை. அவன் அவளை விட்டு விலக முயற்சி செய்ய.. 

இதன்யா கண்களை விழித்து கொண்டு அவனை பார்த்தவள். என்ன டா! என்ன? என்று அவன் இதழில் வன் முத்தம் கொடுத்தவள் ஹே என்ன டா! நீ மட்டும் தான் ஹராஸ் பண்ணுவயா! நானும் பண்ணுவேன். உன்னை என்ன தெரியுமா பண்ணனும்! அப்படியே ரெண்டு கை ரெண்டு கால் கட்டி தொங்க விட்டு என்று நிறுத்தி விட்டு அவனுடைய இதழில் மீண்டும் முத்தமிட ஆரம்பித்தாள். 

சித் ஒரு நிமிடம் அவனையே அறியாமல் அவளின் இடையை பிடித்து கொண்டான். இதழ்கள் அவுட்புட் கொடுக்க ஆரம்பித்தது. மொத்தத்தில் அந்த இடத்தை சுற்றிலும் முத்த சத்தம் தான்! சித்தார்த்தின் மூச்சு சூடாக உணர்வுகள் அதிகமாக தொடன்கியது. 

அந்த நொடி! அதே நொடி! வேகமாக இதன்யா அவனை விட்டு பிரிந்தாள். 

சித் ஏக்க பார்வையுடன் அவளை பார்க்க… இதன்யா கோபத்துடன் உன்னை அடிக்க கொல்ல, இந்த முத்தம் கொடுக்க இப்படி  எல்லார்த்துக்குமே எனக்கு தான் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு! இப்போ பேசின பேச்சுக்கு உன்னை இரு டா இனி நீ இதன்யாவை பார்க்க போற! என்று சொல்லி விட்டு  எழுந்து உள்ளே சென்றாள். 

சித் அதே இடத்தில் அமர்ந்த நிலையில் இருந்தான். அவனுக்கு என்ன சொல்வது? இப்பொழுது என்ன செய்வது என ஒன்றும் புரிய வில்லை..

சித் அவளின் அரையை நினைத்து பார்த்தான். அந்த வெட மூக்கு இன்னும்  விடைத்து கொண்டது.  ம்ம் ஒரே ஃபயர்  தான்! என்று நினைத்து கொண்டு எழுந்து நின்றான். அதன் பின் தலையை கோதி கொண்டே உள்ளே செல்ல..

அங்கே சித்தார்த் கண்ட காட்சி இதன்யா படுக்கையை சுற்றி தலையணை வைத்து நன்றாக தயார் செய்து இருந்தாள். 

சித் அதே இடத்தில் கைகளை கட்டி கொண்டு உடலை வளைத்து சாய்த்து பார்த்து கொண்டு இருக்க…

இதன்யா நிம்மதியான மன நிலையில்  படுக்கையில் படுத்து கொண்டாள். 

சித், ஹே என்ன இது! என்று பேச வர..

அதற்குள் இதன்யா, ஸ்ஸ்!.. என்ன? என்ன? சொல்லு எதுக்கு பார்க்கிற? ஹான் என்ன? என்னை கேள்வி வேற கேட்கிற? 

சித், ஓவரா பேசுற டி!..

அவள் கடுப்புடன் நீ பண்றது எல்லாமே ஓவர் தான் டா! இதுல என்னை போய் ஓவர் அப்டின்னு சொல்ற! போடா! 

சித் கொஞ்சம் நேரம் அமைதி ஆகி விட்டு அதன் பின் நான் எங்கே படுப்பென்! இப்பிடி நீயே மொத்த படுக்கையையும் ஆக்குபை பண்ணிட்ட..

அவள் சிரித்து கொண்ட நீ நேற்று எங்கே படித்தியோ அங்கே போய் தூங்கு இனி இந்த படுக்கை முழுசும் என்னுடையது தான். 

சித்  அப்படியே திரும்பி கொண்டு நான் என வெளியே ஒரு அடி வைக்க..

உடனே  சிரிப்பு சத்தம் கேட்டது. வேறு யார்? இதன்யா தான்! 

சித், என்ன மேம் சிரிக்குறீங்க! 

நீங்க இந்த அரையை விட்டு ஒரு அடி எடுத்து வச்சாலும் நான் இப்போவே உங்களை அத்தை கிட்ட போன் பண்ணி சொல்லுவேன். 

சித் புருவம் நெருக்கி கொண்டே என்ன டி சொல்லுவ! 

இதன்யா, உங்களை பற்றி! இவுஸ்வு பெரிய வீட்டில் இவ்வளவு பெரிய அறையில் என்னை விட்டு தனியா நீங்க வெளியே போய் தூங்கரீங்க தானே அதை சொல்லுவேன்.  என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தான் தெரியுது? நான் அவ்ளோ இளக்காரம் ஆன பொண்ணு இல்ல.. 

சித், அவளை புருவம் உயர்த்தி பார்த்தான். 

இதன்யா, என்ன டா? என்ன? இந்த இடத்தில் தானே அண்ணிக்கு என்னை விட்டு தூங்கின அதே போல இப்போ தூங்குங்க!  என்று அந்த புது மெத்தையில் ஜாளியாக படுத்து கொண்டாள். 

சித் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க..

என் கண் முன்னாடி எனக்கு எதிரில் காலை கஷ்ட பட்டு குறுக்கி கொண்டு இனி நீங்க படுத்து தூங்குவதை நான் பார்க்கணும்! 

சித் எதுவும் பேசாமல் உடையை மாற்றி கொண்டு வந்தான். 

இதன்யா, டேய்!  என்று போர்வையின் இடுக்கில் பார்த்தாள். 

அடிங்க! என்ன டி! டேய் சொல்ற? 

இனி மரியாதை உனக்கு சுத்தமா இல்ல போடா! போய் தூங்கு என்று சொல்லிக்கொண்டே ரொம்ப நாள் கழித்து நிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தாள்.

சித் அவள் பேசியது அத்தனையும் நினைத்து பார்த்து கொண்டே படுக்கையில் விழுந்தான். 

இங்கே சித் மற்றும் இதன்யா இருவரும் நிம்மதி என்ற வார்த்தையில் கொஞ்சம் நெருங்கி வர..

அங்கே ஒருவன் சித்தார்த்தை பழி வாங்க காத்து கொண்டு இருக்கிறான். 

பார்ப்போம்..

என்ன நடக்கும்? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 239சித் அவளுக்கு எதிரில் உள்ள சோபாவில் காலை குறுக்கி கொண்டே படுத்து கொண்டான். அவளின் முகத்தை பார்த்தான். ஏனோ நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் சந்தோசமாக இருந்தது.  சொல்ல போனால் மிகவும் நிம்மதியாக தூங்கினான்.

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. காலையில் எழுந்து சித் வழக்கமாக ஜிம் சென்று விட்டான். அவன் காலை உடற்பயிற்சி அத்தனையும் முடித்து விட்டு வரும் நேரம் இதன்யா சொட்ட சொட்ட முடியை தொங்க போட்டு கொண்டே புடவையின் முந்திய சரி செய்து கொண்டு வந்தாள். 

சித் அவளை கண்டு கொள்ளாமல் குளிக்க உள்ளே செல்ல..

ஹே சித்தார்த் கிருஷ்ணா! இங்கே வா!  என்று கூறினாள். 

சித் அவளை பார்த்து முறைக்க.. வாடா! என்று அழைத்தாள். 

அவன் காலையில் எழுந்ததுமே நல்ல மன நிலையில்  இருந்தவன் அதை வெளி காட்டி கொள்ளாமல் அவள் முன் வந்து நின்றான். 

இதன்யா பிலீட்ஸ்சை சரி செய்து கொண்டே “ஹே எனக்கு மடிப்பு களைந்து இருக்கு அதை சரி பண்ணி விடு!”

சித் புரியாமல் பார்க்க..

இதன்யா, கீழே உட்காரு டா! இந்த மடிப்பை நீட் பண்ணி விடு! அழகா நீவி விடு! என்ன அப்படி பார்க்கிற? சீக்கிரம்! என்று அதட்டினாள்.

சித் அவளுக்கு முன் கீழே அமர்ந்து அவளின் புடவையில் இருக்கும் மடிப்புகளை சரி செய்து நீவி விட்டு கொண்டு இருந்தான்.  இதன்யா அவனை குனிந்து பார்த்தாள். ஒரு பெரு மூச்சை விட்டாள். இவனை பாதுக்காக்க என்னோட முந்தியில் தான் முடிந்து வைக்கணும்! ஹ என்ன பண்றது? என்று நிமிர்ந்தாள். 

சித் அதை சரி செய்து விட்டு எழுந்து செல்ல போக உடனே எழுந்து செல்ல..

இதன்யா கூந்தலை துவட்டி கொண்டே ஹே எங்கே போற? எனக்கு தலை துவட்டி விடு வா!.. என்று துண்டை அவன் மேல் வீசி விட்டு அமர்ந்து கொண்டாள். சித் ஹீட்டர் எடுத்து வந்து அவளுடைய முடியை பதமாக தொட்டு அள்ளி எடுத்து உளர்த்தினான்.

அதன் பின் எழுந்து நின்றவள். இப்போ போடா! என்று அவள் ஒப்பனை செய்ய டிரெஸ்ஸிங் டேபிள் சென்றாள். 

சித் உள்ளே சென்று குளித்து முடித்து வெளியே வந்து உடை எடுக்க செல்ல அவனுக்கு ஏற்கனவே இதன்யா அனைத்து உடைகளையும் எடுத்து வைத்து இருந்தாள்.  

ஒரு மென்னகை பட்டும் படாமல் உதிர்த்து விட்டு எடுத்து அணிந்து கொண்டு வாட்ச் சரி செய்து கொண்டே வெளியே வந்தான். 

இதன்யா அவனுக்கு முன்னால் அவனுக்காக காத்து கொண்டு இருந்தாள். அவளைக் கடந்து அந்த இடத்தை விட்டு கதவை நோக்கி சென்றான். 

ஏய் என்னடா? என்று பின்னால் குரல் கேட்டது.

சித்தார்த் கடுப்புடன் என்ன வாய்! ரொம்ப ஓவரா போகுது! வார்த்தைக்கு வார்த்தை டா சொல்றா! இவளோட மனசுல அப்படி என்னதான் நினைச்சுட்டு இருக்கா? மரியாதை ரொம்ப தேயிதே!

இதன்யா அவளது உடைய நீவி கொண்டே இன்னிக்கி நான் அழகா இருக்கேனா?  நான் இப்போ ஓகேவா? சாப்பிட போலாமா? என்று கேட்டாள்.

சித்  திரும்பி கொண்டு அதெல்லாம் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல! எனக்கு டைம் ஆகுது என்று அவன் இரண்டு அடி வைக்க..

இதன்யா, நில்லு டான்னு சொல்றேன்ல? என்ன நீ இஷ்டத்துக்கு போற.என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள்.

சித்தார்த் , கடுப்புடன் என்ன வாய்? என்று சொல்லிக் கொண்டு திரும்ப..

 இதன்யா மீண்டும் அவனிடம் என்ன பார்த்தா எப்படி இருக்கு? நான் அழகா இருக்கேன் தான?  அதுக்கு பதில் சொல்ல தெரியாதா என்று கேட்டாள்.

சித்தார்த் சரியா தான் இருக்கு! என்று திரும்ப…

என்னை பார்த்து சொல்லுங்க! என்று அவனது மோவாயை பிடித்து திருப்பினாள்.

சித்தார்த் மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் எல்லாம் சரியா இருக்கு! போலாம். 

 இதன்யா அவனுக்கு  முன்னால் நடக்க பின்னால் சித்தார்த் வந்து கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஒரு விஷயத்தை கவனித்தான் அவளது இடை மறைக்காமல் இருந்தது. எப்பவுமே ஒரு படிதா மாதிரி தான் இந்த புடவை கட்டிட்டு போவாள். இன்னிக்கு என்ன ஹிப்பு ஏக்கர் கணக்குல தெரியுது? என்று நினைத்துக் கொண்டே நடந்தான். 

அவள் படிக்கட்டில் இறங்க செல்ல.. சித்  ஏய் ஒரு நிமிஷம் நில்லு! 

 இதன்யா என்ன என்று திரும்பி பார்க்க.. 

சித் தயங்கி கொண்டே உன்னோட அது தெரியுது! 

எது? 

அதுதான்!.. அது தெரியுது! நீ நடக்கும்போது பின்னாடி தெரியுது!

இதன்யா,  என்ன தெரியுது?  என்று சொல்லி கொண்டே மீண்டும்  முன்னால் நடக்க..

சித் அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன். உன்னோட ஹிப் தெரியுது! 

இதன்யா சிரித்துக்கொண்டே எனக்கு தெரியலையே! என்று நடக்க..

உடனே சித்தார்த் எப்பவும் உன்னோட இடுப்புல ஒரு பின் நிற்குமே! இன்னிக்கு எங்கே? உடனே பின் வச்சு மறை! அதை மறைச்சுக்கோ! 

அதெல்லாம் முடியாது என்று அவள் நகர.. 

சித் அவளின் அருகில் வந்தவன் பண்ணுடி என்று கைகளில் சேப்டி பின்னை திணித்தான் .

இதன்யா, என்னால பண்ண முடியாது!  தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும்! உங்களுக்கு என்ன ? உங்க வேலையை நீங்க போய் பாருங்க! என்று அவள் நகர..

சித்தார்த் கடுப்புடன் சொல்றதை கேளு! ஒழுங்கா அதை பின் பண்ணி சரி பண்ணிட்டு போ! என்று கூறினான்.

இதன்யா முடியாது என்று மீண்டும் அவனை தள்ளிவிட்டு நடக்க..

நானே பின் பண்ணி விடுகிறேன் வா என்று கையில் பிடித்து அழைத்து பின்னை எடுத்துக் கொண்டான்.

இதன்யா அவனை ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கmm

சித்தார்த் அருகில் வந்து முகத்தை வேறு எங்கோ திருத்திக் கொண்டு நின்றான்.

இதன்யா, ஜாலியாக நின்று கொண்டு இருந்தாள். 

சித் அவளின் இடை தெரியாதவாறு பின்னை எடுத்துக் கொண்டு அருகில் சென்றான்.  மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் தயங்கி கொண்டே எனக்கு ரொம்ப ஆக்வடா இருக்கு! தயவு செய்து நீயே பின் பண்ணு!

இதன்யா, முடியாது நீங்க தள்ளுங்க என்று விளக..

சித் ஒரு நிமிடம் கண்ணை மூடி உதட்டை கடித்தவன் ஒரு பெருமூச்சு விட்டு சட்டென புடவையை சரி செய்து கொடுத்துவிட்டு பின் செய்துவிட்டு நகர்ந்து கொண்டான்.

இதன்யா அதே இடத்தில் நின்று ஒரு சில நொடிகள் அவனுடைய அவஸ்தையை ரசித்து பார்த்தாள். 

இங்கே அடுத்த நாள் காலை சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்த அமர்ந்தால் ரம்யா! ச்ச பார்ட்டியை என்ஜாய் பண்ண முடியல.. மதி மா! மதி மா! என்று கத்தி கொண்டே அமர்ந்தாள்.

 அப்பொழுது தான் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள். நம்ம எங்கே இருக்கோம்! என்று மண்டைக்குள் குடைய.. அவளுடைய கையில் நவீன் குமார் விஸ்ட்டிங் கார்டு இருந்தது. 

ரம்யா புரியாமல் என்ன இவன் கார்ட் நம்ம கையில் இருக்கு! அச்சோ! அப்போ இவன் கூட நைட்! எதுவும் சம்பவம் என யோசித்து கொண்டே வெடுக்கென எழுந்து நின்றாள். 

அந்த நேரம் காலடி சத்தம் கேட்டது. ரம்யா வேறு வழி இல்லாமல் போச்சு இவன் கிட்ட நம்ம மாட்டி கொண்டோமே! என நினைத்து கொண்டே  திரும்பி பார்க்க  அங்கே மோகன் கதவை தட்டினான். 

மேம்! 

ரம்யா பதட்டத்துடன் கதவை திறந்து பார்க்க 

நீங்க எழுந்தாச்சு தானே! எங்க பாஸ் உங்களை வர சொன்னாரு! 

ரம்யா, வந்தே ஆகணுமா! என்று நெளிந்து கொண்டே கேட்டாள். 

மோகன், ஆமா மேம்! என அவன் முன்னால் நடக்க..

நவீன் அவளை பார்த்த அடுத்த நொடி உனக்கு அறிவு இருக்கா இல்லையா? எதுக்கு என் கார் மேல வந்து வாமித் பண்ணி இருக்க? அதை விட நீ என்று அவன் ஆரம்பிக்க..

ரம்யா தலையை பிடித்து கொண்டு சாரி என்னை மண்ணிச்சு விடுங்க! பிளீஸ் நான் கிளம்புறேன். என்று நகர.. அவளின் கையில் இருந்து அந்த விஸ்டிங் கார்டு கீழே விழுந்தது. 

நவீன் அதை பார்க்க மோகன் எடுத்து நீட்டினான். 

ரம்யா ஒரு பெரு மூச்சை விட்டு எப்படியோ இவன் கிட்ட இருந்து நம்ம தப்பித்து விட்டோம் என்று நகர.. 

ஒரு நிமிடம்..  என்று நவீன் அழைத்தான்.

 ரம்யா கண்ணை மூடிக்கொண்டு அச்சோ எதுக்கு கூப்பிடுறான்? என்று திரும்பி.. சொல்லுங்கள் சார்! என்ன ஆச்சு? எதுக்கு? ஏதாவது பே பண்ணணுமா ? உங்க கார்ல வாமிட் பண்ணதுக்கு,  நான் என்னோட என்று தன் அம்மா மற்றும் அப்பாவின் சொத்துக்களை பற்றி  நினைத்த ரம்யா உடனே அதை தள்ளி வைத்துவிட்டு.. “சார் என்னோட சம்பாத்தியத்தில் உங்களுக்கு நான் அந்த காருக்கு உண்டான பணத்தை, நான் உங்க காரை டேமேஜ் பண்ண பணத்தையும் கொடுத்து விடுகிறேன்.”

நவீன் அவளிடம் “இந்த விசிட்டிங் கார்டு உனக்கு எப்படி கிடைத்தது? நான் உனக்கு கொடுத்த நியாபகமே இல்லையே என்று கூற..

 ரம்யா  இது என்னோட பிரண்டு கொடுத்தான். என்று கூற..

நவீன் குமார் மோகனை திரும்பி பார்த்து நம்ம என்று அவன் ஆரம்பிக்க..

உடனே மோகன், பாஸ் இந்த பர்சனல் விசிட்டிங் கார்ட நீங்க யார் யாருக்கு கொடுத்து இருக்கீங்கலோ என்கிட்ட ஆதாரம் இருக்கு! ஆனா இவங்களோட ஃப்ரெண்ட் யாருன்னு தெரியல? பாஸ்..

உடனே ரம்யா வேகமாக இதயா என்று சொல்லக்கூடாத.. 

இப்படி என்று மாற்றி விட்டாள். ரம்யா இதன்யா ஐ மின் இதயா! என்றாள். 

. இதன்யா என்ற பெயரை கேட்டதும் பளிச்சிட்டது. அவன்  ரம்யாவையும் பார்த்தான்.  அவ்வளவுதான் இனி என்ன நடக்க போகுதோ? என்று மோகன் நின்று கொண்டிருக்க..

நவீன் குமார் என்று எழுந்து அவளின் அருகில் வந்தவனே நீங்க இதன்யாவோட ஃபிரண்டா என்று கேட்டான்.

அதற்கு ரம்யா தயங்கி கொண்டு நின்று கொண்டிருக்க..  நவீன் குமார் அத்தோடு விடாமல் சொல்லுங்க! நீங்க இதன்யாவோட பிரண்டா? என்று மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தான். 

ரம்யா அதுக்கு என்ன பதில் சொல்ல போற?  பாப்போம்!..

இங்கே ஷூட்டிங் ஸ்பாட்ல சித்தார்த் கிப்ட் பேக்  படித்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருக்க…

மேகா ராஜ் ஆரவாரத்துடன் வந்து இறங்கினாள்.

அங்கு இருக்கும் அனைவரின் பார்வையும் மேகாவின் மீதுதான் இருந்தது.

சித்…? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga டா!. 

EPI 240

அவன் பார்வை அவளை விட்டு விலகாமல் சொல்லுங்க! உங்க கிட்ட எப்படி இந்த விஸ்டிங் கார்ட் கிடைச்சது? 

இவன் எதுக்கு இப்படி பார்த்து கொண்டு இருக்கான்?  நான் யாருன்னு சொல்லிடலாமா? இவனும் பெரிய பிஸ்னஸ் மேன் தான்! நம்ம தாத்தா வீட்டில் என்னை வெறும் மேல் பார்வைக்கு ஒப்புக்கு மட்டும் தான் வைத்து கொள்வார்கள். இந்த சித்து அரக்க ராஜா போல நடந்து கொள்கிறான். இந்த கார்ட் வச்சு இவன் கிட்ட…  அதை விட இப்போ நான் என்ன பதில் சொல்றது? என யோசித்து கொண்டே நின்றாள்.  

சொல்லுங்க!  என்ன ஆச்சு? 

ரம்யா கொஞ்சம் குரலை சரி செய்து கொண்டு ஆமா மிஸ்டர் நான் அவளோட ப்ரெண்ட். அப்புறம் வேலை தேடிட்டு இருக்கேன்.  அவளை மீட் பண்ண தான் அந்த ஹோட்டல் போனேன்.  அப்போ கொஞ்சம் ட்ரிங்க் பண்ணிட்டேன். என்று கூறினாள்.

நவீன் என் கிட்ட ஒர்க் பண்ண உங்களுக்கு ஓகே வா? 

ரம்யா, அதெப்படி உடனே வேலை கொடுக்கிரீங்க? 

நவீன், வாங்க போலாம்! உட்கார்ந்து கொண்டே பேசலாம். 

ரம்யா, no மிஸ்டர் இத்தனை நாள் நான் வேலையில்லாமல் சும்மா இருக்க ஒரு காரணம் இருக்கு! உங்க வேலையை ஏற்று கொண்டால் அதை கைவிடுவது போல ஆகிடும். 

நவீன் புருவம் நெருக்கி கொண்டே அப்படி என்ன கொள்கை? சொல்லுங்க கேட்போம்! 

ரம்யா, எனக்கு சிபாரிசு வேலை வேணாம்! என்னோட படிப்புக்கு ,என்னோட திறமைக்கு இல்லாத அங்கீகாரமும் வேலையும் ,இந்த சிபாரிசுல என்னோட பேக் ரவுண்ட்ல கிடைக்குதுன்னா அப்படி ஒரு வேலை எனக்கு வேணாம். என்று சொல்லி கொண்டே சென்றாள். 

நவீன் குமார் அவளை ஒரு நிமிடம்  பார்த்து விட்டு அதன் பின் நடக்க தொடங்கினான். 

அவள் அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல.. உடனே உன்னோட படிப்புக்கு என் கிட்ட என்ன வெக்கன்சி இருக்கோ! அதில் பாட்டிசிபெட் பண்ணு! உனக்கு விருப்பம் இருந்தால் நீ அட்டன் பண்ணு! ஒரு வேளை செலக்ட் ஆனா நீ ஜாயின் பண்ணிக்கலாம். 

ரம்யா திரும்பி அவனை பார்த்தாள். 

நவீன் கொஞ்சம் சிரித்து கொண்டே உன்னோட குணம் கிட்ட தட்ட உன்னோட பிரென்ட் போல! ஹான்ஸ்ட்டா இருக்க ஐ லைக் இட்! 

ரம்யா இரு புருவமும் தூக்கி கொண்டே ஓகே என்று நடந்தாள். 

ஆமா நீ எந்த ஊர்? உன்னோட நெடிவ் என்ன? என்று நவீன் கேட்க.. 

ரம்யா நான் இங்கே தான் லோக்கல்! ஆமா எங்கே இன்டர்வியு? எப்போ? 

மோகன், மேம் கமிங் சாட்!. 

நவீன், டுமாரோ!.. என்றான். 

மோகன் வேறு வழி இல்லாமல்  ஓகே பாஸ் என்று நின்றான். 

ரம்யா நிம்மதி பெரு மூச்சுடன் வெளியே சென்றாள். 

மோகன்,  இந்த பொண்ணை எங்கேயோ பார்த்தது போல இருக்கே பாஸ்! நம்ம எதுவும் விசாரிக்காமல் எப்டி? 

நவீன் கொஞ்சம் கோபத்துடன் இதன்யா சம்மந்த பட்ட விசயத்தில் யோசிக்க என்ன இருக்கு! இவளை வேலைக்கு வைத்து கொள்வோம்! இவளை வைத்து நான் என்னோட லக்கி சார்ம அடைந்து விடுவேன். அவளை பார்த்தால் நல்ல புத்திசாலி பொண்ணு மாதிரி தான் இருக்கு, சோ அடுத்த கட்டமாக சீக்கிரம் ஆரம்பிக்கணும். 

இங்கே வெளியே வந்த ரம்யா நேராக சுற்றிலும் பார்த்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள். இவன் லூசா இருப்பானா? ஒரு காட்டுக்குள்ள வீடு கட்டி இருக்கான். இங்கே இருக்க எல்லா வீடும் இப்படி தான் இருக்கு.  இப்போ எப்படி நான் இங்கே இருந்து போறது! இந்த சித்து பையனுக்கு தெரிந்து இருக்குமா? ஓ காட் என்று நடந்தவள் நவீன் வீட்டுக்கு  எதிரில் வரும்  வண்டியை பார்த்து கையை நீட்டினாள். 

ஹலோ எக்ஸ்கியூஸ் மி சார்! பிளீஸ் லிஃப்ட்!. என்று கேட்டு கொண்டே நிறுத்தினாள். 

ஐயா என்று ஓட்டுநர் பின்னால் இருப்பவரை பார்க்க..

ம்ம் நிறுத்துங்க! 

காரை நிறுத்தியதும் ரம்யா வேகமாக ஜன்னலை எதிர் பார்க்க மெதுவாக இறக்க பட்டது. 

ஹலோ அங்கில் என்னை கொஞ்சம் சிட்டில திராப் பண்ண முடியுமா பிளீஸ்!. 

இல்ல மா நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். 

ரம்யா கொஞ்சம் அவசரத்துடன் அங்கிள் பிளீஸ் பிளீஸ் எனக்கு வீட்டுக்கு போகனும் ரொம்ப எமர்ஜன்சி!..

அவர் ஒரு பெரு மூச்சை விட்டு சரி மா ஏறிக்க.. 

ஓட்டுநர், ஐயா உங்களுக்காக சின்ன ஐயா வெயிட் பண்ணுவாரு! நான் வீட்டில் விட்டு இந்த பொண்ணை கொண்டு விடவா! 

ரம்யா, அங்கிள் பிளீஸ் பிளீஸ்!  என்னை விட்டு போங்க சாரி என்னை இறக்கி விட்டு போகாதீங்க! அச்சோ இங்கே இறக்கி விட்டு போகாதீங்க! என்னை ஸ்டாப்ல இறக்கி விடுங்க!. என்று உளறினாள். 

அவர் சிரித்து கொண்டே சரி சரி மா! நான் உன்னை விட்டு வீட்டுக்கு போறேன். வண்டிய அந்த பொண்ணு சொல்ற வழியில் விடுங்க! 

அந்த நேரம் சதீஸ் அழைத்தான். ரம்யா பதட்டத்துடன் போனை எடுத்து காதில் வைத்தாள் சத்யா! 

சதீஷ், எங்கே டி இருக்க? சித் உன்னை கேட்கிறான் என்னால் சமாளிக்க முடியல.. நைட் எங்கே ஸ்டே பண்ண? 

ரம்யா கொஞ்சம் சத்தமான குரலில் டேய் கொஞ்சம் சமாளி நான் இப்போ வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். பிளீஸ் டா! அவன் தாத்து கிட்ட சொல்லிட்டா நான் ஹவுஸ் ஹரஸ்ட் டா! 

சரி சீக்கிரம் வா என்று போனை வைத்தான். 

ரம்யா ஓட்டுனரிடம் ரைட்டு லெஃப்ட் என்று வழி சொல்ல அது நேராக சித்தார்த் கிருஷ்ணா கேஸ்டில் முன் போய் நின்றது. 

 மாதேஸ்வரா! என்று வேண்டி கொண்டே இறங்கி பின்னால் திரும்பி ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் என்று இறங்கி கொண்டாள். 

அவள் கேட்டை திறக்க அங்கே சித்தார்த்தின் கார் வெளியே வர சரியாக இருந்தது. 

ஓட்டுநர் வண்டியை திருப்ப.. ஒரு நிமிடம் என்று ராஜ சேகர் கூறினார். 

ஆம் ரம்யாவை இங்கே இறக்கி விட்டது ராஜ சேகர் வந்த கார் தான். இந்த பொண்ணு! என்று அவர் யோசித்து கொண்டே பார்க்க.. ரேவதி பெண் என்று நினைவு வந்தது. இவள் எதுக்கு நம்ம நவீன பார்க்க போயிருப்பா? சரி அதை அப்புறம் பார்ப்போம்! என்று நினைத்தவர் சித்தார்த்தை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. இன்று மாலை வந்து பார்க்கலாம் என்று சென்று விட்டார். 

சித் ரம்யாவை பார்க்க.. ஹே நான் ஆஷிஷ் கூட அங்கேயே ஸ்டே பண்ணிட்டேன். இப்போ தான் தூங்கி எழுந்து வந்தேன். 

சித் எதுவும் சொல்லாமல் அவளை முறைத்து பார்த்து விட்டு வண்டியில் ஏறி கொண்டான். அதன் பின் இதன்யா வந்தாள். அவளை ஏற்றி கொண்டு கார் நேராக கல்லூரி சென்றது.

 இவன் கூட எப்டி இவள் இருக்கா? இது உலக அதிசய கூத்து என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றாள். 

அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டு டேய் நான் எப்டி இருக்கேன். 

ம்ம் குட்!. 

அவள் கடுப்பாகி டேய்  என்ன சின்ன புள்ளை  நோட்டு கரக்சன் பண்ண கொடுத்த மாதிரி அந்த நோட்ல மிஸ் குட் போடுற மாதிரி சொல்ற? 

சித் அவளை பார்த்தான். 

டேய் என்ன பார்க்கிற? 

சித் கண்களை விரித்து ரொம்ப வாய் நீலுது பின்னாடி ரொம்ப கஷ்ட படுவ வாய அடக்கிக்க.. டா வார்த்தையை விடு!.  

முடியாது போடா! என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

ஓட்டுநர் காரை எடுக்க சித் வெயிட் பண்ணுங்க என்று அவள் போகும் வரை பார்த்தான். அவளின் பின்னழகு கோனை நடை என அனைத்தும் தோரணையாக இருந்தது. அவன் உதட்டில் புன்னகை. தொங்கா (திருடி) என்று  வண்டியை கிளப்பினான்.

இங்கே ஷூட்டிங் ஸ்பாட்ல சித்தார்த் இறங்கியதும்  அவனுக்காக பணியாள் காத்துக் கொண்டிருந்தான்.

சித் அவனுடைய கேரவன் அருகில் சென்று அமர்ந்ததும் அவர் முன்னால் வந்து நின்றான். எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க? என்னாச்சு? என்று கேட்க..

சார் உங்களுக்கு ஒரு கிப்ட் வந்து இருக்கு! அதை கொடுத்துட்டு போக தான் வந்தேன்!..

சித்தார்த்தின் புருவங்கள் வளைந்து எனக்கா? எனக்கென்ன கிப்ட் என்று அவன் அருகில் அமர்ந்து அதை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான்.

யார் கொடுத்தாங்க? என்னவா இருக்கும்? என்று யோசனையாக இருந்தது.  ஏனென்றால் இப்போ அதிகமாக அந்த வெடிகுண்டு பிரச்சனை, துப்பாக்கி சூடு அதிலிருந்து அவன் மிகவும் கவனமாக இருக்கிறான். சித்  அந்த கிஃப்ட்டை பார்த்துக் கொண்டிருக்க..

அந்தப் பணியாளர் அதே இடத்தில் நின்றான். நீங்க ஏன் இங்கேயே நிற்கிறீங்க? 

சார் கிப்ட் எப்படி இருக்குன்னு கேட்டுட்டு வர சொன்னாங்க! 

சித்தார்த் புருவத்தை நிறுத்திக் கொண்டேன் யார் கேட்டு வர சொன்னா?  

அந்த நேரம் மேகா ராஜ் ஆரவாரத்துடன் வந்து இறங்கினாள். 

அந்த பணியாளின் பார்வை அங்கு வந்த மேகாவின் மேல் சென்றது. சித்தார்த் அதை கண்டுபிடித்து விட்டான்.  இவளுக்கு வேலையே இல்லையா? இவளை எல்லாம் ஒரு கன் எடுத்துப் போடணும்!  ச்ச என்னை ஓவரா டென்ஷன் பண்றா?  என்று சித் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தான். 

மேகாவின் கண் அசைக்க பணியாள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். சித்து உனக்காக என்னோட ஸ்பெசல் கிப்ட் தெரியுமா! பிளீஸ் ஓபன் மி!. 

சித் கடுப்புடன் அவளை பார்த்தான். 

மேகா, நீ ஓபன் பண்ண மாட்ட நான் பண்றேன். என்று சொல்லி கொண்டே அவனுக்கு எதிரில் அமர்ந்து அதை திறந்து வசீகர புன்னகையுடன் அவனை பார்த்தாள். 

சித் அவள் பக்கம் திரும்பவே இல்லை. 

ஹே கமான் சித்து இது உனக்கு ரொம்ப பிடிக்கும்! என்று சொல்லி கொண்டே அவன் முன் தள்ளினாள். 

சித் கடுப்புடன் எழ செல்ல.. மேகா அவனுடைய கையை பிடித்து வலு கட்டாயமாக அவன் முன் அந்த பரிசை பிரிக்க ஆரம்பித்தாள். 

மேகா திறந்து விட்டு மோக புன்னகையுடன் சித்தார்த்தை பார்த்து சீ திஸ்! உனக்காக..  ம்ம் இல்ல நமக்காக பாரு எப்டி இருக்கு! இது ஓல்ட் ஒயின் கலெக்சன் அது கூட இந்த c*** பிளேவர் இது ரொம்ப பெக்கூலியர் ஸ்மெல் உனக்கு பிடிக்கும்! இந்த பசங்களுக்கு பார்த்ததும் ஸ்டிமுலெட் ஆகுமாமே ஆனால் எனக்கு தான் உன்னை பார்த்ததும் ஒவ்வொரு செல்லும் ஸ்டிமுலேட் ஆகுது! என்று அவள் சொல்லி கொண்டே போக..

சித்தார்த் அவளை கேவலமாக பார்த்தான். நீ எப்டி பார்த்தாலும் எனக்கு கவலை இல்ல சித்து ஐ நீட் யூ! என்று அருகில் நெருங்கினாள். 

சித் வேகமாக அவளை விட்டு எட்ட சென்றான். 

மேகா, நீ என்ன பண்ணாலும் சரி உன்னை அடையாம நான் விட மாட்டேன். என்னை கூடிய சீக்கிரத்தில் நீ புரிந்து கொள்வ அப்புறம் இதை எப்போ டிரை பண்ணலாம்! சொல்லு! என்று விச பாம்பு போல உடலை வளைத்து கொண்டு அவனை பார்த்தாள். 

குட் மார்னிங் சித்து என்று சொல்லி கொண்டே அந்த நேரம் நவ்யா வந்து சேர்ந்தாள். 

அவளை பார்த்ததும் மேகா அந்த பரிசு பொருளை எடுத்து கொண்டு ஒயின் பாட்டிலை மட்டும் அவன் முன் வைத்தவள். நவ்யாவை முறைத்து கொண்டே சென்று விட்டாள். 

நவ்யா நேராக சித் அருகில் வந்து அமர்ந்ததும் அவன் எழுந்து கொண்டான். 

என்ன சார் ஆச்சு? 

சித், ரத்னா எங்கே? என்று கேட்டு கொண்டே நேராக அவரை பார்க்க சென்றான். 

என்ன ஆச்சு சித்து? என்று அவர் அருகில் வர..

இன்னிக்கி என்னோட காட்சி எல்லாம் முதலில் பினிஸ் பண்ணிடுங்க நான் சீக்கிரம் கிளம்ப வேணும்! 

ஒகே அப்படியே பண்ணிடலாம் என்று சொல்லி கொண்டே அவர் அனைத்து பட குழுவினரையும் வேகமாக தயார் செய்ய சொன்னார். 

இப்போ என்ன ஆச்சி? நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க? 

சித், ஒன் ஹம்பில் ரெக்வஸ்ட்.. 

என்ன? 

அந்த மேகா சீனை சீக்கிரம் ஃபினிஸ் பண்ணுங்க!..

ரத்ன குமார் சிரித்து கொண்டே என்ன சித்து உங்க பொண்டாட்டி மிரட்டினார்களா? 

சித், ரத்னா! என்று அதட்டினார். 

ரத்ன குமார் சிரித்து கொண்டே விட்டால் அடித்து விடுவீர்கள் போல..

சித், அடிக்கணும்! ஒரே ஒரு ஸ்லாப்ல நான் யாருன்னு அவளுக்கு தெரியணும்! 

ரத்ன குமார், அதுக்குன்னு அடிக்கவா முடியும்! நவ்யா அண்ட் மேகா ஸ்லாப் சீன் தான் இருக்கு! நீங்களும் மேகாவும் அடிக்கிற மாதிரி சீன் இல்லையே! 

சித், அதனால் என்ன உங்களால் முடியும் ரெடி பண்ணிடுங்க! 

ரத்னா தயங்கி கொண்டு நிற்க..

சித் சாதாரண தொனியில் இந்த படத்தோட ஹிந்தி டப் அண்ட் ரிலீஸ் அண்ட் புரோமோசன் எல்லாத்தையும் தேவ் கபூர் வச்சு நான் பண்ணி தருவேன். உங்களுக்கு எப்டி வசதி? 

ரத்னா பேச வருவதற்குள் சித் கிளம்பி விட்டான். 

ரத்னா மேகாவிடம் ஸ்லாப் சீன் என்று சொல்லி அழைத்து வந்தார். ஆனால் அங்கே சித் நின்று கொண்டு இருக்க.. மேகாவிடம் எது எதோ சொல்லி அழைத்து வந்து விட்டார். 

மேகா அப்பொழுதும் கூட மிகவும் சாதாரணமாக வந்தாள். அவளுக்கு சித்தார்த்தை பற்றி தெரிய வில்லை.  ரத்னா தயாராக இருக்க அங்கு இருக்கும் படகலைஞர்கள், டெக்னீசியன் என அனைவரும் தயாராக இருக்க சித் மற்றும் மேகா இருவரும் அவர்களுடைய இடத்தில் வந்து நின்றார்கள். 

கிளாப் போர்ட் அடிக்கபட்டு ஆக்சன் சொல்ல பட்டது. மேகா அந்த கதைக்குள் மாறி சித்தார்த்தை தன் கணவனாக பார்த்து கொண்டு பேச வர.. ஒரு அரை! அந்த அறையின் வீரியத்தில் மேகா பொத்தென விழுந்தாள். 

ரத்ன குமார் முதற்கொண்டு அங்கு இருக்கும் அனைவரும் சித்தார்த்தை பார்த்து கொண்டு இருக்க..

சித், ரத்னா ஓகே வா பாருங்க இல்லன்னா இன்னொரு டேக் போலாமா! என்று கூலாக கேட்டான். 

இன்னொரு டேக்கா? என்று தடித்த கன்னத்தை பிடித்து கொண்டு கண்களில் நீருடன் நிமிர்ந்து பார்த்தாள். 

அங்கு இருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் கட் கட் மேடம வந்து தூக்குங்க.. அன்ட் சார் சாட் சூப்பரா வந்து இருக்கு! பட் ஸ்கிரிப்ட்ல இந்த மாதிரி சீன் இல்லையே!. மேகா மேம் தான் நவ்யா மேம அடிக்கனும்! 

சித் அவனுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டு மேகா ரொம்ப சூப்பரா நடிச்சாங்க! ரியலா இருந்தது. அதனால் இந்த சாட் இதை டெலிட் பண்ண வேணாம். இந்த படத்தோட புரோமோ சீனுக்கு இதை யூஸ் பண்ணுவோம்! என்ன  ரத்னா சொல்றீங்க? 

ரத்ன குமார் பேய் அறைந்தது போல நின்று கொண்டு இருந்தார். 

மேகா சித்தார்த்தை முறைக்க கூட முடியாமல் வலியில் துடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

சித், அடுத்த சாட் ரெடியா? மேகா மேம் உங்களுக்கு ஓகே தானே!. 

மேகா வலியில் திணறி கொண்டே வந்து நின்றாள். 

நவ்யா சித்தார்த்தை பார்த்து கொண்டே போய் நின்றாள். 

சித், ரத்னா என்று அழைக்க..

சொல்லுங்க சித்து!. 

சித், நவ்யாவுக்கு மேகா போல இந்த சீன் சரியா வராது. அதனால் ஒரு தடவை மேகா நடிப்பை காட்டுங்க…

இதை கேட்டதும் மேகா…? 

நாளைக்கு ரம்யா இன்டர்வியூ போக போறா? 

ராஜ சேகர் சித்தார்த்தை பார்க்க வருகிறார். அதே சமயத்தில் சந்திர மௌலி வீட்டில் இருந்து சித்தார்த்துக்கு அழைப்பு வருகிறது. 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 241

சித்தார்த் பொறுமையாக பார்வையை சுழல விட்டு கொண்டே நவ்யாவுக்கு மேகா போல இந்த சீன் சரியா வராது. அதனால் ஒரு தடவை மேகா மேமுடய மாஸ்டர் பீஸ் சீனை நவ்யா மேம்க்கு காட்டுங்க? 

இதை கேட்டதும் மேகா அவனை திரும்பி பார்க்க.. 

நவ்யா சித்தார்த்தை அதிர்ச்சி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  அசிஸ்டன்ட் டைரக்டர் அவளை அழைத்து அந்த சீனை காட்ட நவ்யா அதை கூர்ந்து கவனித்தாள். மேகாவுக்கு சித்தார்திடம் வாங்கிய அரை காது எல்லாம் கொய் என்று சத்தம் கேட்க அவளுடைய தலையில் எதோ பாரத்தை வைத்தது போல வலி பின்னி எடுக்க ஆரம்பித்தது.  

 சார் நான் சாட்க்கு ரெடி என்று நவ்யா வந்து நின்றாள். 

கிளாப் போர்ட் அடிக்க பட்டது. நவ்யா அவளுடைய வசனங்களை கூற அவளுக்கு பின்னால் இருந்து அசிஸ்டன்ட் டைரக்டர் அவர்களுடைய சீனை சொல்ல சொல்ல அதே போல இருவரும் செய்தார்கள். கன்னத்தில் அடிக்கும் காட்சி வர அனைவர் பார்வையும் இருவர் மீது இருந்தது. 

நவ்யா அவளிடம் ஆவேசமாக பேசி கொண்டே அருகில் நெருங்க மேகா அவளின் கன்னத்தில் அடிக்க ஓங்கினாள். மேகாவின் அரை அவ்வளவு வேகம் இல்லை. ஆனால் நவ்யாவை அடித்ததும் கட் கட் என்று சத்தம் வர.. மேகா பொத்தென கீழே மயங்கி விழுந்தாள். 

ரத்னா, என்ன ஆச்சு? சீன் நல்லா வந்திருக்கு! கண்டின்யூ பண்ணுங்க! 

அசிஸ்டன்ட் டைரக்டர், சார் மேகா மேம் மயங்கி விட்டார்கள். என்று சொல்லி கொண்டே அருகில் வந்தார்கள். 

சித் எழுந்து அருகில் வந்தவன். அவளை எழுப்ப வந்த டெக்னீசியன ஒரு பார்வை பார்த்தான். அவள் பயந்து கொண்டு  அந்த மொத்த பாட்டிலில் உள்ள தண்ணீரையும் அவளின் முகத்தில் ஊற்றினான். 

ரத்னா கொஞ்சம் திடுக்கிட்டு தடுக்க போக..

சித் , மேடம்!. மேகா மேடம்!  மேகா ராஜ் மேடம்! வேக் அப்! என்று சத்தம் கொடுக்க…

அந்த டெக்னீசியன் மொத்தமும் ஊற்றி விட்டாள். 

அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வர எழுந்து பார்த்தாள். அவளை சுற்றி ஆட்கள் சுற்றி நின்று இருந்தார்கள். 

ரத்னா அவளை பார்த்து மேடம் எப்டி இருக்கீங்க!  

மேகா மேடம் இப்போ நீங்க ஓகேவா! வலி அதிகமா இருக்கோ! ஒரு வேளை அடிச்சதால இப்படி!  காட் நான் ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினேன். நீங்களும் அப்படி ஒரு டேலன்ட்டுன்னு நினைச்சேன். பட் இட்ஸ் இட்ஸ் ஓகே!. என்று சித்தார்த் மகா நடிகனாக ஒரு நடிப்பை வெளி படுத்தி கொண்டு இருந்தான். 

மேகா பற்களை கடித்து கொண்டே இல்ல சித்தார்த் நான் ஓகே! 

 நீங்க ரெஸ்ட் எடுங்க! உடனே வீட்டுக்கு கிளம்புங்க! மீதி பொறுமையா  ஷூட்  பண்ணுவோம்! இன்னும் பத்து நாள் தான் இங்கே ஷூட் இருக்கு.  அதுக்கு அப்புறம் செகண்ட் ஆஃப் கேரளா எர்ணாகுளம் ஆலப்புழா பக்கம் கொஞ்சம் காட்சிகள் இருக்கு! என்று ரத்னா கூறினார். 

சித்தார்த் அவனுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். இனி நவ்யாவுடன் நடிக்கும் காட்சிகள் தான் அவள் வரும் வரை எடுப்பார்கள். 

மேகா சித்தார்த்தை வலி நிறைந்த க்ரூர பார்வையுடன் கடந்து சென்றாள். அவனுடைய பார்வையில் போ திரும்பி கண்ணில் படாதே என்று இருந்தது. “டி” இல்லை.  அந்த டி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி மணைவி , பொண்டாட்டி இதன்யா தான.. 

நவ்யா அடுத்த காட்சிக்கு ஒப்பனை செய்து கொண்டு வந்தவள் ஸ்கிரிப்ட் படிக்க ஆரம்பித்தாள். 

ஃபோர்சா ஸ்ளாப் பண்ணிட்டாளா? ரொம்ப பெயினா இருக்கா? இல்ல ஓகே வா? என சித் அவளிடம் கேட்டான். 

நவ்யா அவனை முறைத்து பார்த்துவிட்டு அக்கறை இருக்க மாதிரி நடிக்க வேணாம் சார்! உங்க அக்கறைக்கு நன்றி! 

அவன் புருவத்தை நெருக்கி கொண்டே என்ன ஆச்சு இவளுக்கு? என்று அவனுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

அந்த நாளின் முடிவு வரை நவ்யா அப்படியே இருந்தாள். சித்தார்த் அவளை கண்டு கொள்ள வில்லை. நவ்யாவுக்கு அவள் தன்னோடு நடிக்கும் ஒரு சக நடிகை அவ்வளவு தான். 

நான் உங்க மேல கோவமா இருக்கேன் என்று அவனுக்கு முன் வந்து நின்றாள். 

இருந்திட்டு போ! என்று சித் கூறினான். 

ஏன்னு கேட்க மாட்டீங்களா? 

நான் எதுக்கு கேட்கணும் என்று சித் அவளிடம் கேட்டான். 

நவ்யா கொஞ்சம் கோபத்துடன் நீங்க அந்த மேகாவை பார்த்து என்னை நடிக்க கத்துக்கோ அப்டின்னு சொன்னீங்க? எதுக்கு அப்படி சொன்னீங்க? 

அதுல என்ன தப்பு இருக்கு? சரியா தானே சொன்னேன்! நீ ரொம்ப ஓவரா திங்க் பண்ற அதை கொஞ்சம் குறைச்சுக்கோ! என்று சித்தார்த் கூறி கொண்டே எழுந்து நின்றான். 

எங்கே போறீங்க என்று கேட்டு கொண்டே  எழுந்தாள். 

எனக்கு சீன் ஃபினிஷ் ஆகிடுச்சு மா வீட்டுக்கு போறேன்! என சித் கூறினான். 

என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்லை.. 

இப்படி பச்சை பொய் சொல்லிட்டு இருக்காத மா! அந்த சீன் முடிஞ்சு வந்ததுமே கேட்டேனே!  என்று நடந்து கொண்டே பேசினான். 

அவள் புருவம் நெருக்கி கொண்டே என்ன பச்சை பொய்யா? இதை உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தது? இது எங்க ஊர்ல தான் இந்த மாதிரி பேசுவாங்க! என்று நவ்யா அவனை பார்த்தாள். 

அந்த நொடி சித்தார்த்தின் இதழ்கள் கொஞ்சம் விரிந்து சிரித்தது. இதன்யா கண் முன் தோன்றினாள். 

 அடேங்கப்பா என்ன சிரிப்பு பயங்கரமா இருக்கு! நான் மேகா கிட்ட அடி வாங்கணும் என தானே நினைசீங்? என நவ்யா கேட்க..

சித் ஒரு பெரு மூச்சை விட்டு நீ சரியான மரமண்டை அவளை அடிச்ச கிளிப் உனக்கு போட்டு காட்ட சொன்னேனே அப்போ கூட நீ திங்க் பண்ணலயா? 

என்ன? என்று அவன் பின்னால் ஓடினாள். 

இதை நாளைக்கு வரை யோசி ஷூட்டிங்ல மீட் பண்ணுவோம்! என சொல்லிவிட்டு சித் கிளம்பி விட்டான். 

நவ்யா ஒன்றும் புரியாமல் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க..

மேடம் இன்னும் கிளம்ப வில்லையா? லிஃப்ட் வேணுமா! என்று ரத்ன குமார் அவளின் அருகில் வந்தார். 

ஒன்னும் இல்ல சார் இதோ இப்போ கிளம்புகிறேன்! என்று அவள் நகர..

என்ன மேடம் முகம் டல்லா இருக்கு என்று அவர் கேட்க..

அவள் ஒரு பெரு மூச்சை விட்டு சித்தார்த் கிட்ட நடந்த உரையாடலை மொத்தமாக கூறினாள். 

இதை கேட்ட ரத்னா சிரித்து கொண்டே நகர..

இப்போ நீங்க எதுக்கு சிரிக்கிரீங்க? என நவ்யா அவர்களை பார்க்க.

உனக்கு என்ன தான் புரியும்! என்று விசயத்தை சுருக்கமாக கூறினார். மேகாவை அனைவரின் முன்பும் அசால்ட்டாக அவமான படுத்திய விசயத்தை இப்பொழுது தான் நவ்யா புரிந்து கொண்டாள். 

ரத்னா சொன்னதை கேட்ட நவ்யாவின் மனதில் சித்தார்த் இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிந்து போனான். உதட்டில் புன்னகை அரும்பியது. நேராக அவளுடைய காரில் கிளம்பினாள். 

அந்த நேரம் பார்த்து அவளுடைய மேனேஜர் அழைக்க.. சொல்லுங்க சித்து!. என்று புன்னகையுடன் கூறினாள். 

மேடம் நான் கவிதா! உங்க அசிஸ்டன்ட்! என அவள் பதில் கூறினாள். 

உடனே தலையில் அடித்து கொண்ட நவ்யா நாக்கை கடித்து கொண்டு சாரி சாரி! கவி என்று சமாளிக்க ஆரம்பித்தாள். 

மேடம் உங்களுக்கு ஸ்வர்ணம் புரொடக்ஷன் கம்பனியில் இருந்து புதுசா ரெண்டு ஸ்கிரிப்ட் வந்திருக்கு அதுக்கு தான் கால் பண்ணேன். நீங்க ரெடியா அதை பற்றி டிஸ்கஸ் பண்ணலாமா? 

சரி ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன டவுட்! என நவ்யா கேட்டாள். 

சொல்லுங்க மேம்!  

அது மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணா அந்த ஆக்டர் லீனா கூட இன்னும் ரிலேசன் ஷிப்ல இருக்காரா?  

கவிதா ஒன்றும் திடுக்கிட்டு மேம் என்று  புரியாமல் அழைக்க..

நவ்யா சமாளித்து கொண்டே சும்மா கேட்டேன். உனக்கு அதை பற்றி எதுவும் தெரியுமா! 

இல்ல மேம்! சித்தார்த் சார் இப்போ அவங்க கூட இல்ல.. அவங்க ரெண்டு பேரும் பிரிந்து விட்டார்கள். 

கவிதா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நவ்யாவின் காதுகளுக்கு தேன் வந்து பாயிந்தது போல இருந்தது. 

கவிதா அடுத்து பேச வர அதற்குள் நவ்யா, இப்போ முக்கியமான வேலை இருக்கு! நான் என்னோட வீட்டுக்கு போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு கூப்பிடுறேன். நம்ம ஸ்டோரி டிஸ்கஸ் பண்ணுவோம் என்று கிளம்பி விட்டாள். 

சித்தார்த் வீட்டுக்கு வர  அவர்களின் வீட்டுக்கு வெளியில் ராஜ்சேகரின் கார் காத்திருந்தது. 

இந்த கார்? என்று யோசித்து கொண்டே திரும்பி பார்த்தவன். ஒரு நிமிடம் நிற்க.. ராஜ சேகர்  ஜன்னல் கண்ணாடியை இறக்கி கொண்டே புன்னகையுடன் அவனை பார்த்தார். 

சித் அவரை சாந்தமாக பார்த்தவன். உள்ளே வாங்க! என்பது போல சைகை செய்து விட்டு முன்னால் சென்றான். 

இங்கே ஹாலில் சித்தார்த்துக்கு எதிரில் அவர் வீல் சேரில் அமர்ந்து இருந்தார். 

சொல்லுங்க என்ன விசயம்? என் பவா கிட்ட பேச டிரை பண்ணீங்களா? 

அவர் முறைத்து கொண்டே என்ன கேள்வி இது? இப்போ அதுவா முக்கியம்! நீ எப்டி இருக்க? உன்னோட ஹெல்த் இப்போ ஓகேவா உன்னை பார்க்கணும் போல தோணுச்சு அதான் பார்க்க வந்தேன். 

சித் மெலிதாக புன்னகைத்த படி அப்டியா? எனக்கென்ன? நான் நல்லா இருக்கேன்! உங்களுக்கு என்னை பார்த்தால் எப்டி தெரியுது சொல்லுங்க? என்று கேட்டான்.  

ராஜ சேகர் பெருமையாக அவனை பார்த்து விட்டு சரி உன்னோட ஹெல்த் நல்லா பார்த்துக்க என்று சொல்லி விட்டு திரும்ப.. 

சித், ஒரு கெட் டூ கதர் பண்ணலாமா? நீங்க என்னோட பவா மட்டும்! 

இது சரி வருமா! 

சித், என்னோட கணிப்பு எப்போவும் தப்பாது! அதை விட என்னோட குயின் சொன்னது ரொம்ப சரி! நீங்க எப்போ ஃப்ரீ சொல்லுங்க! அண்ட் இதை பற்றி நீங்க யார் கிட்டயும் சேர் பண்ணிக்க வேணாம்! 

ராஜ சேகர் திரும்பி அவனை பார்த்து நீ யாரை சொல்ற? என்று கேட்க.  

அந்த நேரம் நுழைவு வாயிலில் மிகவும் சத்தமாக இருக்க உடனே சித்தார்த்துக்கு அழைப்பு வந்தது. 

ஹலோ! என்ன சத்தம்! 

பாஸ் நம்ம ரிஷி சாரோட அம்மா ராதிகா ராஜ் வந்திருக்காங்க! அதுவும் உங்களை பார்க்கணுமாம்! 

சித்…? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 242

சித்தார்த் போனில் ஹலோ! என்ன சத்தம்! 

பாஸ் நம்ம ரிஷி சாரோட அம்மா ராதிகா ராஜ் வந்திருக்காங்க! அதுவும் உங்களை பார்க்கணுமாம்! என்று காவலாளி கூறினான். 

ராஜ சேகர் அதே இடத்தில் நின்று அவனை பார்க்க போனை வைத்த சித் அவரின் அருகில் வந்து வாங்க போலாம் என்று வீல் சேரை தள்ளி கொண்டே சென்றான். 

எதும் பிரச்சனையா? 

நத்திங்! அண்ட் எங்கே ஸ்டே பண்ணி இருக்கீங்க? 

இதென்ன கேள்வி என்னோட வீட்டில் என் பையன் இங்கே தானே இருக்கான். என்று நவீன் பற்றி கூறினார். 

சித், நவீன் உங்களோட தம்பி பையன்னு நான் மறந்து போயிட்டேன். 

இந்த வீட்டில் யார் யார் இருக்கீங்க? ரேவதி பொண்ணு இங்கே தான் இருக்காளா? 

சித் ஒரு பெரு மூச்சை விட்டு ஆமா அந்த டெவில் இங்கே தான் இருக்கு! அவளால் தான் என் பொண்டாட்டி என்னோட பேச்சை கேட்காமல் சரியான ஆட்டம். சரியான வால்.. அந்த ரம்யாவுக்கு வால் மட்டும் தான் இல்லை. என்று கூறினான். 

ராஜ சேகர் ஒரு நிமிடம் சித்தார்த்தை திரும்பி பார்த்தார். 

என்ன ஆச்சு என்று இரு புருவம் தூக்கினான். 

அவர் சிரித்து கொண்டே என் கிட்ட இவ்வளவு பேசுற? எல்லாரும் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். நீ எப்போவுமே அதிகமா பேச மாட்டியாமா? அது உண்மையா? 

ம்ம் பட் உங்க வேவ் லெந்த்ல நான் சிங்க் ஆகிட்டேன். இந்த விசயத்தில் நவீன் லக்கி பெல்லோ! ஏன்னா நீங்க அவன் கூட இருக்கீங்க!. 

உடனே ராஜ சேகர் அவனுடைய கையை பிடித்து கொண்டு நீ பேசுற அளவுக்கு கூட அவன் என் கிட்ட பேச மாட்டான். வீட்டுக்கு என்னை பார்க்க கூட வர மாட்டான். என் மேல பாசம் அதிகம். ஆனால் டெய்லி போனில் அவனோட p.a கிட்ட என்னை பற்றி விசாரிப்பான். அவன் கேரக்டர் ஒரு மாதிரி!  

அது எனக்கு தேவையில்லை ஜஸ்ட் சொன்னேன். அடுத்த மீட்டிங் பவா கூட தான்! 

ராஜ சேகர் அவனிடம் நீ ரொம்ப ஃபாஸ்ட்டா போற மாதிரி தோனுது.. 

உங்களுக்கு ஒன்னும் தெரியல, ஒரு பொண்ணை பிடித்து இருந்தால் விடாம அவங்கள மீட் பண்ணிட்டே இருக்கணும். அவங்க கண்ணில் எதாவது ஒரு வகையில் நம்ம பட்டு கொண்டே இருக்கணும் அப்போ தான் அவங்க மனதில் முதன் முதலில் அடிக்கடி பார்க்கும் முகமா நம்ம பதிவோம். அதுக்கு அப்புறம் நெக்ஸ்ட் ஸ்டெப்.. 

ராஜ சேகர் சிரித்து கொண்டே நீ சொல்றது சரி தான்! நான் முதலில் வாணி கிட்ட பேசிட்டு அடுத்து உங்க தாத்தா கிட்ட பேசி இருக்கணும். எப்படி பார்த்தாலும் சூப்பர் ஸ்டாரா இருந்த, இப்போ இருக்க உன் அப்பாவை தானே வாணிக்கு பிடித்தது. 

சித் முகம் கொஞ்சம் கடுமையாக மாறி  தப்பு உங்க மேல..  இந்த காதல் யார் கிட்ட வந்தாலும் போய் சொல்லிடனும். அண்ட் இன்னொரு தடவை அந்த ஆள் பற்றி என் கிட்ட பேசாதீங்க! என காருக்கு அருகில் விட்டு விட்டு அவரை திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான். 

ராஜ சேகர் அவனை சிரம பட்டு திரும்பி பார்த்து சித்தார்த் என்று அழைக்க..

அவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான். 

ஐயா அவரு போயிட்டாரு! என்று பணியாள் கூறிட. அவர் ஒரு பெரு மூச்சை விட்டு  உள்ளே ஏற வாகாக நகர்ந்து அருகில் வந்தார். 

சித்தார்த் நேராக சோபாவுக்கு சென்று அமர்ந்தவன்.  அப்படியே கண்களை மூடி கொண்டே ஒரு சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தான். 

கார்ட்ஸ் உள்ளே வந்து ராதிகா பற்றி மீண்டும் கூறிட.. 

உள்ளே வர சொல்லுங்க! என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்தான். 

ராதிகா கோபத்துடன் உள்ளே வந்தவர். பேச ஆரம்பிக்க..

சித் எந்த சலனமும் இல்லாமல் ஹாய் ஆன்டி வாங்க டீ சாப்பிடுங்க! மதி மா என்று அழைத்தான். 

உன்னோட மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? என்ன பண்ணி வச்சு இருக்க? உனக்கு நான் பயப்படுவேன் என நினைச்சியா! என்று ராதிகா பேசி கொண்டே செல்ல.. 

சித் எதுவும் பேசாமல் அவர் பேசுவதை கவனித்து கொண்டு இருந்தான். 

மதி டீயை கொண்டு வந்து வைக்க..

ராதிகா முறைத்து கொண்டே உங்க டீ வேணாம். முதலில் எதுக்கு என் பொண்ணை அடித்த? கேட்பதற்கு ஆள் இல்லன்னு நினைச்சியா? இரு உன்னை பற்றி இப்போவே பவானி கிட்ட சொல்றேன். என்று அவர் பின்னால் திரும்ப.. 

சித், கொஞ்சம் தண்ணி குடிங் ஆண்டி எவ்ளோ எனர்ஜி ட்ரயின் ஆகி இருக்கும். என்று அவரின் முன் நீட்டினான். 

ராதிகா கோபத்துடன் அடுத்த இரண்டு அடிகள் எடுத்து வைக்க.. சித், மிசஸ் ராதிகா தயாகரன் நீங்க பேசியதை நான் கேட்டேன். ஆனால் நான் இன்னும் பேசி முடிக்கில.. என்னோட பேச்சை கேட்காமல் நீங்க வெளியே போனால் அதோட விளைவுகள் ரொம்ப என்று நிறுத்தி விட்டு இதுக்கு மேல் சொல்லனுமா! இல்ல வந்து உட்காருறீங்களா? என்று பார்த்தான். 

ராதிகா அவனை கொஞ்சம் பயந்து கொண்டே  திரும்பி பார்க்க..

மதி சமையல் அறையில் இருந்து கொண்டே போய் உட்காரு மா! போ! என்று கூறினார். 

சித்தார்த்தின் முன் ராதிகா அமர்ந்து இருக்க… மம் என்ன விசயம்? என்று இன்னொரு கிளாசில் தண்ணீரை ஊற்றி கொடுத்தான். 

ராதிகா அதை வாங்கி ஒரு மிடுக்கு குடித்தவள். மெதுவாக மேகா பற்றி கூற ஆரம்பித்தார். 

சித், ம்ம் அடுத்து! .

ராதிகா அவனை பார்க்க..

அவ்ளோ தானா இன்னும் வேற இருக்கா! 

நீ பண்ணது என்று அவர் பேச வர..

இதுக்கு பதில் நீங்க உங்க பொண்ணை தான் கேட்கணும். 

ராதிகா அவனை பார்த்து பேச வர..

சித், எனக்கு கல்யாணம் ஆனது உங்களுக்கு தெரியும் தானே! உங்க பொண்ணு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நான் வேறு ஒருத்திக்கு சொந்தமானது தெரிந்து கூட என் கிட்ட வலுக்கட்டாயமாக வந்து என்று நிறுத்தினான். அதுக்கு மேல் சொன்னால் அது அசிங்கம். இத்தனை நாள் நான் ரிஷிக்காக அண்ட் உங்க ஹஸ்பென்ட் தயா அவரு ரொம்ப நல்ல டைப் அதுக்காக தான் பொறுத்து கொண்டேன். அவள் அதையும் மீறி ஓவரா பண்ணா! நான்.. 

உடனே ராதிகா அவனை பார்த்தார். சித் சிரித்து கொண்டே நான் எதும் செய்ய மாட்டேன். இது அப்படியே பவா காதுக்கு போகும்! இப்போ கூட நீங்க என் மம்மி கிட்ட பேச போனீங்க தானே! போங்க! 

அவன் பேசுவதை ராதிகா யோசிக்க ஆரம்பித்தார். 

சித் இலன புன்னகை சிந்தி கொண்டே உங்க பொண்ணை இப்போ கரண்ட்லி ரவிசந்திரன் மனைவியா இருக்க ரதி தேவி போல மிசஸ் மேகாவ அவங்க நினைத்து விட்டால் ரிஷி – ரோஸ்னி மேரேஜ் ஸ்வாகா தான்! அப்டின்னு நான் சொல்லல may be அவங்க நினைக்கலாம். 

ராதிகாவுக்கு அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை. அத்தனை அவமானமாக இருந்தது. அவன் முன் கூனி குறுகி அமர்ந்து கொண்டு இருந்தார். 

சித், நான் deep ஆ போகல ஜஸ்ட் மேலோட்டமாக தான் சொன்னேன். அதே போல என்னை ரவி சந்திரன்ன்னு நினைச்சுகாதீங்க! நான் யாரையும் என் கூட கம்பேர் பண்ண மாட்டேன். நான் தயாகரன் போல பத்தினி புருசன் என்னோட மனசுல எப்போவும் இதன்யா தான்! 

ராதிகாவுக்கு குற்ற உணர்வு அதிகமாக கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. 

சித், உங்க மொடிவ் என்னன்னு எனக்கு தெரியும். உங்க மனசுல அந்த பழைய வாழ்க்கை பணம் இருக்க சொகுசு வாழ்க்கை மரியாதை எல்லாம் வேனுன்னு தான் ரிஷிய ரோஸ்னிக்கு கட்டி வைக்கிரீங்க! 

ராதிகா கொஞ்சம் திடுக்கிட்டு இல் என்று சொல்ல வர..

சித் நன்றாக சாய்ந்து கொண்டே இல்லையா என்று கேட்டான். 

ராதிகா அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. 

 AA1 என்று சித் அழைத்தான். அவர் வந்து நிற்க..

சித், இனி இந்த குடும்பத்தில் சம்மதம் வைத்து கொள்ள நீங்க தான் முடிவு பண்ணனும். நான் நினைச்சால் இப்போ இந்த நிமிடம் ரோஸ்னிக்கு முன்னாடி ரிஷிய கெட்டவனா மாற்றி இந்த கல்யாணத்தை  நிறுத்த ரொம்ப நேரம் ஆகாது. 

ராதிகா திடுக்கிட்டு பார்க்க..

நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். முடிவு உங்க கையில்.. ஹான் முக்கியமா இதை நீங்களே டீல் பண்ணுங்க! அடுத்த தடவை அவள் என்னோட வழியில் வந்தால் இந்த சித்தார்த் கிருஷ்ணா யாருன்னு காட்டுவேன். 

ராதிகா எழுந்து பல யோசனையுடன் நடந்தார். 

அவர் சென்று கொண்டு இருக்க பின்னால் சித் குரல் கேட்க.. அவன் சொன்ன விசயத்தை கேட்டதும் ஒரு நிமிடம் நடுக்கம் வந்தது ( அப்படி சித் என்ன சொல்லி இருப்பான்? அது தான் இந்த கதையுடைய மெயின் twist) 

சித் அந்த விசயத்தை சொல்லி முடித்து விட்டு கடைசியாக இதன்யா என்னுடையவள். என்னோட பொருள்! அவளை கொஞ்சம் கஷ்ட படுத்தினாலும் அவங்களை நான் தரை மட்டம் ஆக்கிடுவேன். என்னை விட்டு பிரிக்க நினைக்க ஆயிரம் திட்டம் போட்டாலும் அதெல்லாம் இங்கே செல்லுபடி ஆகாது.மனசுல வச்சுக்கோங்க! என்று கூறி எழுந்தான். 

ராதிகா அவன் முதலில் சொன்ன விசயத்தை கேட்ட நடுக்கத்தில் இருந்தே இன்னும் மீண்டு வர வில்லை. வழியும் வியர்வையை துடைத்து கொண்டே பதட்டத்துடன் வந்தார். 

மேம் காரில் ஏறுங்க உங்களை வீட்டில் விடுகிறேன். 

இல்ல இல்ல என்று தலை அசைக்க..

பாஸ் சொல்லி இருக்காரு. வாங்க என்று அழைத்து சென்றார். 

 அப்பொழுது தான் காலேஜ் முடித்து விட்டு வீட்டுக்கு வந்த இதன்யாவின் கண்களில்  அங்கு ராதிகா காரில் ஏறுவதை பார்த்தாள். 

என்ன ராதிகா மா இங்கே வந்து இருக்காங்க? என்று நினைத்து கொண்டே உள்ளே வந்தாள். 

அங்கே யாரும் இல்லை மதி மா வழக்கம் போல சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருக்க..  மதி மா அத்தை வந்திருக்காங்களா? என கேட்டு கொண்டே வந்தாள். 

இல்லையே கண்ணு! 

இல்ல ராதிகா மா வந்திட்டு போறாங்க! என்ன விசயம்? 

அவங்க சித்தார்த் தம்பிய பார்க்க வந்தாங்க!. 

எதுக்கு மதி மா!. .

எனக்கு எப்டி கண்ணு தெரியும்! அதை சித்து தம்பி கிட்ட தான் கேட்கணும் என்று இதன்யாவின் கையில் தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பத்தையை நீட்டிட..

இப்போ நீங்க சொன்னால் தான் வாங்குவேன். இல்ல போங்க! 

இல்ல கண்ணு எனக்கு தெரியாது. 

பொய் சொல்றீங்க உங்களுக்கு எல்லாமே தெரியும். இந்த வீட்டில் பவானி அத்தைக்கு அடுத்து அவரு உங்க கூட ரொம்ப க்ளோஸ் ஆனால் நீங்க!  என் கிட்ட பொய் சொல்றீங்க. 

மதி சிரித்து கொண்டே நான் இந்த வீட்டு வேலைக்கார கிழவி! 

இதன்யா, போங்க மதி மா நீங்க போங்கு பண்றீங்க! என அவள் கோபித்து கொண்டு செல்ல ..

சரி சொல்றேன்! இங்கே வா!  

அவள் ஆர்வத்துடன் அருகில் வர.. மதி, நம்ம ரிஷி மாப்பிளையுடைய தங்கை மேகாவுக்கு ஷூட்டிங்ல அடி பட்டு விட்டது அதை பற்றி கேட்க வந்திட்டு போனாங்க! அவ்ளோ தான். 

இதன்யா புருவம் நெருக்கி கொண்டே என்ன அடி? 

அது எல்லாம் தெரியாது. இப்போ முதலில் நீ இதை குடிக்கிறயா இல்ல நான்.

ஒன் மினிட் மதி மா நான் ஃப்ரெஷ் ஆகி ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என கிளம்பி விட்டாள். 

இதன்யா படிகளில் ஏறி கொண்டே ரிஷிக்கு அழைத்து விவரத்தை கேட்டாள். 

ஆமா கண்ணம் பழுத்து என் முன்னாடி படுத்து இருக்கா! அன்னிக்கே எனக்கு லைட்டா சந்தேகம் தான்! மாமா எப்போவுமே அமைதியா போனால் பின்னாடி பெரிய ஆப்பு இருக்கும். அவள் அன்னிக்கு பேசின பேச்சுக்கு இன்னிக்கு அடி வாங்கி படுத்து இருக்கா! 

மேகா, டேய்* ரிஷி என்று கோபமாக கத்திட..

ரிஷி அந்த இடத்தை விட்டு தள்ளி வந்து அவளுக்கு பைத்தியம் முத்தி போச்சு நீ எதும் நினைச்சுகாத! என்று பேசி விட்டு போன் வைத்தான்.

மேகா வஞ்சனை மற்றும் வன்மத்தில் படுத்து கொண்டு இருக்க..

இங்கே இதன்யா உறைந்த தோற்றத்தில் அறைக்கு வந்தாள். அவன் எப்படி அடித்து இருப்பான் என்று நினைத்தவளுக்கு அவளுடைய கண்ணம் வலிப்பது போல் தோன்றியது. 

சித் குளித்து முடித்து தூண்டை கட்டி கொண்டு வெளியே வந்தவன். அங்கே இருக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று குண்டடி பட்ட இடத்தை பார்த்து அவனுடைய உடர்கட்டை ஆராய்ந்து கொண்டு இருந்தான். தண்ணி கூட எடுக்காம டயட் இருந்து ஜிம் போகனும் அப்போ தான் இன்னும் சிக்ஸ் பேக் வரும்! என்று தலையை கோதினான். எக்சர்சைஸ் ஜிம் எல்லாம் பண்ணா ஹேர் ஃபால் ஆகுமே அதுக்கு என்ன பண்றது?  என்று யோசித்து கொண்டே  தாடியை தடவினான். அவனை பார்த்து கொண்டே உள்ளே வந்தாள். 

அவளை பார்த்ததும் வேகமாக டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் நகர்ந்தான். 

இதன்யாவுக்கு உடனே கோபம் வர ஹே நில்லு! நில்லுன்னு சொன்னேன்! 

என்ன டி!..

இப்போ எதுக்கு என்னை பார்த்ததும் உள்ளே போரிங்க!. நான் ஒன்னும் கடிச்சு முழுங்க மாட்டேன். 

சித் கதவை திறக்க போக.. ஹே உள்ளே போன! அப்புறம் உன்னை இங்கே இருந்து வெளியே விடவே மாட்டேன். நில்லு டா! என்று அருகில் நெருங்கினாள். 

என்ன சொல்லு! எனக்கு இப்போ ஆபீஸ் மீட்டிங் இருக்கு! 

என்ன டா உன் மனசுல நினைச்சுட்டு இருக்க காலையில் ஷூட்டிங் போற? உன்னோட இஷ்டத்துக்கு வீட்டுக்கு வர எந்த நேரம் வந்தாலும் அப்படியே அடுத்த வேலைக்கு போயிடுற! என் கூட எப்போ டைம் ஸ்பென்ட் பண்றது? 

என்ன ஸ்பென்ட் பண்ணனும்! நமக்குள் என்ன இருக்கு! மேடம் இப்போ TET க்கு படிக்க போறீங்க! ஸ்கூட்டில போகனும்! காட்டன் சுடியில் கூடவே ஒரு பேங்க் மாப்பிள்ளைய என்று அவளை பார்த்தான். 

இதன்யா கோபத்துடன் அவன் அருகில் நெருங்கி அவனுடைய துண்டை உருவ முயற்சி செய்தாள்.  என்ன டா சொன்ன? இப்போ சொல்லு! சொல்லு டா!. 

ஹே என்ன டி பண்ற தள்ளி போ! என்று அவன் நகர முயற்சி செய்தான். 

இதன்யா அவனை படுக்கையில் தள்ளி விட்டவள். இதே போல நான் எத்தனை தடவை சொல்லி இருப்பேன். என் பேச்சை நீ கேட்கவே இல்லையே! அப்போ நீ சொல்ற பேச்சை நான் ஏன் கேட்கணும். என்று அவனுடைய முகத்துக்கு அருகில் வந்து விட்டாள். 

ஹே என்று அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு கண் மூடி கொண்டான். 

அவள் அவனுடைய இதழில் முத்தம் பதிக்க முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு கண்ணை மூடி இருந்தான். 

டேய் பாரு! என்னை பாரு! முழி டா! என்று முத்தம் கொடுத்து கொண்டே இருந்தாள். 

சித் அப்படியே இருந்தான்.  இதன்யா அவனுடைய கழுத்தில் முத்தம் பதிக்க.. அவன் கண்களை மூடி கொண்டே சிரிக்க ஆரம்பித்தான். 

ஹே எதுக்கு டா சிரிக்கிற? சொல்லு!. என்று முத்தமிட்டு கொண்டே கேட்டாள். 

எனக்கு கூசுது அணீசியா இருக்கு சோ தள்ளி போடி! எதுவும் ஆகல காமெடி பண்ணாத!  

என்ன? உனக்கு ரொமான்டிக்கா ஃபீல் ஆகளையா! அய்யோ முருகா ஆக்சிடன்ட்ல எதுவும் ஆகி போச்சா!  அதனால் தான் தள்ளி போறயா டா! எப்போ பாரு செகண்ட் மேரேஜ் பற்றி பேசுற! முருகா என் புருசனுக்கு என்ன ஆச்சு! கடவுளே நான் சஸ்டி விரதம் இருக்கணுமா! 

சித் வெடுக்கென கண்ணை விழித்தவன். எதுக்கு டி இப்படி எக்ஸ்டிரீம் தாட்ஸ்க்கு  போற! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நான் மெண்டலா பிரிபெர் ஆகல.. தள்ளி போ! 

எப்டி தான் ஆவது? என்று மீண்டும் இதழில் முத்தம் பதித்தாள். 

சித், இதன்யா இது செய்யற்கையா இருக்கு போடி! வேணாம்! 

அப்போ எப்டி பண்றது சொல்லு நான் இப்போவே தள்ளி போறேன்! 

நெவர் மாட்டேன். 

அவள் சிரித்து கொண்டே அப்போ நான் போ மாட்டேன். இப்படியே உன்னை லிப்ல கிஸ் பண்ணிட்டே இருப்பேன். என்று முத்தமிட ஆரம்பித்தாள். 

ஸ்ஸஸ் விடு டி! என்னை ஹராஸ் பண்ற! 

மாட்டேன். ஆனால் எனக்கு ஒரு டவுட்டு எப்டி கிஸ் பண்றது? நீ நிறைய படத்தில் கிஸ் பண்ணி இருப்ப அதுவும் லிப் கிஸ் ஹான் தாரா மேம் கூட அந்த (a+b) படத்தில் கிஸ் அடிச்ச.. 

சித் அவளை முழித்து பார்த்து அதுக்கு vfx அணிமேட் ஒர்க் பண்ணுவோம். ரியலா கிஸ் பண்ணல போதுமா!. 

அப்போ எனக்கு vfs வேணாம்! ரியலா வேணும் என்று மீண்டும் முத்தமிட ஆரம்பித்தாள். அவளின் மென்மை அனைத்தும் அவனை வேறு விதமாக உணர்வை தூண்டி விட.. விறைக்க தொடங்கினான். 

அவனுடைய பதில் முத்தத்தில் வித்தியாசம் கண்டவள். சிரித்து கொண்டே முத்தமிட ஆரம்பித்தாள். சித்தார்த் என்ன பண்ற? இடியட் அவளை விட்டு தள்ளி போ!  அவனுடைய மூளையோ பிரதர் வேற பீக் ஆகிட்டான். என்று கூற..

டேய்*  சித்தார்த் என்று மீண்டும் அதட்டி கொண்டவன் வெடுக்கென முழித்து கொண்டு அவனுடைய கைகள் அவளின் இடையை தழுவி கொண்டு இருக்க இவளை பார்த்தால் மட்டும் மானம் போகுது! என்று நினைத்து நொந்து கொண்டு ஹம்  தள்ளி போ இதன்யா!. 

கொஞ்சம் கம்முன்னு இரேன் டா!. 

சித் அவளை விட்டு விலக அப்படியும் இப்படியுமாக ஆடினான். 

டேய் நீ தான் மெண்டலா பிரிபெர் ஆகளையே! நான் என்ன பண்ணா உனக்கு என்ன அப்படியே இரு! என்று அவளுடைய கொண்டையை அவிழ்த்து விட்டு தலையை ஆட்டி கொண்டே அவனை பார்த்தாள். 

சித்தார்த் எட்சிளை கஷ்ட பட்டு விழுங்கி கொண்டே இன்னிக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கா போலயே! அய்யோ அய்யோ! என்று அவளை பார்த்தான். 

ஹே கண்ணாடியை கழட்டி அப்படி போடு!. 

ஹே வேணாம் டி!. 

போடு டா!. ம்ம் அப்போ நீ போட மாட்ட இட்ஸ் ஓகே நான் போடுறேன்! என சொல்லி கொண்டே கண்ணாடியை கழட்டி அருகில் போட்டாள். இன்னிக்கு உன்னை எதாவது பண்ணியே ஆகனும்! விட மாட்டேன். என்று கண் அடித்து கொண்டே அவளின் இறுக்கமான உடையில் இருக்கும் அனைத்து ஹூக் பின்களையும் கழட்டி போட்டாள். 

சித் கண்களை மூடி கொண்டான். ஆனால் கீழே! .. 

இதன்யா அவனுக்கு நடக்கும் மாற்றத்தை பார்த்து சிரித்து கொண்டே டேய் பிராடு! பாரேன்! ஆக்டிவேட் ஆகிடுச்சு!. 

சித்தார்த் வேகமாக கண் இமைக்கும் நொடியில் அவளை விட்டு விலகி பாத் ரூம் பக்கம் செல்ல போக.. 

ஹே சித்து நில்லு! என்று பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள். 

விடு இதன்யா இதெல்லாம் உன்னால டி! என்று சித் விலக முயற்சி செய்ய..

நானே அதுக்கு ரெஸ்பான்ஸ் எடுத்துக்குறேன். நில்லுங்க போகாதீங்க.. என்று அவன் முன் வந்து நின்றவள் முத்தமிட ஆரம்பித்தாள். 

நெவர் வேணாம்! இப்போ இது!. என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவளின் கைகள் உரச ஆரம்பித்தது. 

சித்தார்த் கண்கள் சொக்க வேக மூச்சுடன் அவளை பார்த்தான். தலையை குனிந்து கொண்டு நின்றாள். 

அவன் உணர்ச்சி பொங்க அவளை அணைக்க துடித்த கைகளை கட்டு படுத்தி கொண்டு நின்றான். 

அவள் நிமிர்ந்து இப்போ விட்டு போகவா! என்று நகர..

சித்தார்த் புருவம் நெருக்கி ஹே செத்திருவேன் டி! எதுக்கு டி என்னை டார்ச்சர் பண்ற? என்று பின்னால் அவளை அணைத்து கொண்டான். 

இதன்யா வேலையை ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் முடிந்தது. அவள் அவனுடைய முகத்தை பார்க்க..

என்ன அப்படி பார்க்கிற? 

நீங்க கூட இதை தனியா பண்ணிக்க முடியும் தான செம்ம!. 

ச்சீ!  ரொம்ப பேட் கேர்ள் ஆகிட்ட! என சொல்லி கொண்டே ரெஸ்ட் ரூம் சென்று விட்டான். அதன் பின் இதன்யா ஃப்ரெஷ் ஆகி நேராக மதி மா கிட்ட சென்றாள். சித்தார்த் எங்கே பா? 

அவன் வெளியே வந்ததும் உடையை மாற்றி கொண்டு அவள் வருவதற்குள் ஸ்டடி ரூம் சென்று விட்டான். 

இங்கே சந்திர மௌலி வீட்டில்.. என்ன மேடம் நீங்க மாறி விட்டீர்களா? நீங்க சித்தார்த்தை நீங்க தான் காப்பாற்ற முயற்சி பண்ணீங்கன்னு சொல்றாங்க என்று ரஞ்சிதா கேட்டு கொண்டு இருக்க..

ரதி தந்திர புன்னகை சிந்தியவள். எனக்கு சித்தார்த்துடய நம்பிக்கை வேணும்! ஆக்சுவவலி நானே ஒரு கடத்தல் செட் பண்ணி இது எல்லாம் பண்ண பிளான் பண்ணேன்  ஆனால் எனக்கும் முன்னாடி வேற யாரோ அவனை பிளான் பண்ணி சுட்டு விட்டார்கள். அது எதிர் பார்க்காத ஒன்னு!  அதுக்குள் இந்த சம்பவம் நடது போச்சு! அவனை உண்மையா தான் காப்பாற்ற முயற்சி பண்ணேன். இந்த ஆரவ் எதுக்கும் லாயக்கு இல்ல.. அந்த உயிர் போகும் நிலையில் தான் ஒரு விசயம் எனக்கு புரிந்தது. சித்தார்த்தை எனக்கு மகனா என் பையனுக்கு காவலனா மாற்றனும்! அவன் என்னோட பேச்சை கேட்கணும். பழைய படி இந்த மொத்த குடும்பத்துக்கும் நான் ராணி ஆகனும். நான் சொல்ற பொண்ணை எனக்கு கட்டு படும் பொண்ணை அவன் கட்டிக்கணும்! என்னோட சாவு பெரிய ஆடம்பரமாக நடக்கணும்! அதனால் என்னோட இருப்பு அந்த அளவுக்கு இருந்தால் தான் இது எல்லாம் சாத்தியம் அதனால் இனி அவனோட நம்பிக்கையை சம்பாதிக்கணும். என்று கூறினார். 

சூப்பர் மேடம்! இதை தான் நானும் சொல்ல வந்தேன் ஆனால் இந்த பவானி, அப்புறம் பவானியின் மருமகள்? 

ரதி புருவம் நெருக்கி கொண்டே அதுக்கு எதுவும் பண்ணனும்! அவள் அவனோட வாழ்க்கையில் இருக்க கூடாது. அவங்க ரெண்டு பேரும் இல்லன்னா! சித்தார்த் ஒன்னும் இல்ல அவனோட வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் வரும் அப்போ அவனுக்கு துணையா நம்பிக்கையா நான் வருவேன். நான் பார்க்கிற பொண்ணை அவன் கல்யாணம் செய்வான். 

அது நடக்குமா மேடம்! 

ரதி, நடக்கணும்! என்று சபதம் எடுத்து கொண்டாள். 

என்ன நடக்குமோ! 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga 

 EPI 243

அடுத்த நாள்  ரம்யா அந்த இன்டர்வியூ அட்டேன் செய்ய வந்து இருந்தாள். அவளை உள்ளே வர சொல்லு! 

ஒகே பாஸ் என்று மோகன் ரம்யாவை உள்ளே அழைத்தான். 

நவீன் குமார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவனை விட வேகமாக பதில் கூறினாள். அவளை சாதாரணமாக பார்த்த அவனுடைய பார்வை மாறி நீ எங்கே படிச்ச? எந்த காலேஜ்? என்று கேட்டான். 

ரம்யா ஒரு நிமிடம் திடுக்கிட்டு எதுக்கு கேட்கிறீங்க? 

உன்னோட ஸ்கில் எல்லாமே ரொம்ப யுனிக்கா இருக்கு.. என்று உண்மையாகவே கூறினான். 

மோகன் வித்தியாசமாக பார்த்தான். இது நவீன் தானா? என்பது போல இருந்தது. 

ரம்யா முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே அது எதோ எனக்கு தெரிந்தது தான் நான் கொஞ்சம் நல்லா படிப்பேன். அதான் ஸ்காலர்ஷிப்ல படிச்சேன். என்று பொய்யாக கூறினாள். 

 ஆல் செட் இன்னிக்கு நீங்க ஜாயின் பண்ணிக்க முடியுமா? 

இல்ல புரியல.. என்று ரம்யா கேட்டாள். 

நவீன் புருவம் நெருக்கி கொண்டே நீங்க இன்னிக்கு ஜாயின் பண்ண முடியுமானு தான் கேட்டேன். 

ரம்யாவுக்கு உள்ளுக்குள் உற்சாகம் ஆச்சரியம் சந்தோசம் என அனைத்தும் பொங்கி கொண்டு வந்தது. முதல் முறையா அவளோட திறமையில் கிடைத்த வேலை..  அவள் இதயம் வேகமாக ஓடி கொண்டு இருந்தது. 

நவீன், என்ன ஆச்சு மேடம்? 

ரம்யா பதட்டமான குரலில் நான் அது வந்து இன்னிக்கு வேலை கிடைக்கும்ன்னு நினைக்கல.. அதனால நாளைக்கு ஜாயின் பண்ணவா? 

நவீன் மென் புன்னகையுடன் சரி என்றான். அந்த நேரம் மோகனுக்கு அழைப்பு வந்தது. அவன் வெளியே வந்து அழைப்பு ஏற்க.. ராஜ சேகர் காத்திருந்தார். 

குட் மார்னிங் சார்!  

உன் பக்கத்தில் நவீன் இருக்கானா? என்று ராஜ சேகர் கேட்டார். 

இல்லங்க சார் நான் வெளியே இருக்கேன். இப்போ பாஸ் இன்டர்வியூ எடுத்திட்டு இருக்காரு. என்ன விசயம் எதுவும் முக்கியமா சொல்லனுமா என்று மோகன் கேட்க..

ராஜசேகர்  தீவிரமாக உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன். ஆனா அத போய் நீ நவீன் கிட்ட கேட்கக்கூடாது. சொல்லவும் கூடாது. இத  யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க கூடாது. 

மோகன் என்னடா இது இப்படி சொல்றாரு என்று நினைத்துக் கொண்டே சொல்லுங்க சார். என்று கூறினான்.

ராஜசேகர்,  இப்போ இண்டர்வியூல ஒரு பொண்ணு வந்திருக்கா? 

 ஆமா சார்

நேத்து நம்ம வீட்டில் இருந்து வெளியே வந்ததே அதே பொண்ணு தானா? என்று கேட்டார்.

மோகன் கொஞ்சம் திடுக்கிட்டு ஆமா சார் அதே பொண்ணு தான்! என்ன ஆச்சு சார்? என்று கேட்டார். 

ராஜசேகர், எப்படி அறிமுகம் அந்த பொண்ண பத்தி கொஞ்சம் சொல்லு என்று கேட்டார்.

மோகன் நடந்த அனைத்து விஷயங்களையும் கூற அப்படியா சரி ஓகே, அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா? என்று கேட்டார். 

மோகன் , இல்ல சார் தெரியாது, அந்த பொண்ண பாஸ் தான் கூட்டிட்டு வந்தாரு ஆனா அந்த பொண்ணோட பேக்ரவுண்ட் அத பத்தி தெரியல, ஏதோ காலேஜ் ஸ்டுடென்ட்ன்னு நினைக்கிறேன்.  என்று கூறினான்.

ராஜசேகர் மனதில் அப்போ ரம்யா நவீன் கிட்ட அவளோட பேக்ரவுண்ட்டை மறைச்சிருக்கா! என்று நினைத்தார்.

சார்!.. சார்!.. என்று  குரல் வர ராஜசேகர் தன்னிலைக்கு  வந்து சொல்லு மோகன்! 

சொல்லுங்க சார்? என்ன ஆச்சு? என்று கேட்க..

ராஜசேகர், இப்போ உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன். அந்த விஷயத்தை நீ உன்னோட வச்சுக்கணும்! 

அதுதான் முன்னாடியே சொல்லிட்டீங்களே சார்!.. என்ன விசயம்..

அந்த பொண்ணு சந்திரமௌலி குடும்பத்தோட மகள் வாரிசு! என்று கூறினார் .

மோகன் கொஞ்சம் அதிர்ச்சியாக சார் புரியல! என்று கூற..

ராஜசேகர்,  அந்த பொண்ணு ரேவதி ரவிச்சந்திரனோட தங்கச்சி  ரேவதியோட மகள்தான் ரம்யா! அவ அங்க எதுக்கு வேலைக்கு வந்திருக்கான்னு எனக்கு தெரியல, என்று கூறினார்.

மோகன், சார் இதை பாஸ் கிட்ட..

ராஜசேகர் , கொஞ்சம் கம்முனு இருக்கியா உன்னோட பாஸ் அடுத்த கட்டத்துக்கு போகணுமா? வேண்டாமா? என்று கேட்டார்.

மோகன் குழப்பமாக நின்றான். அவன் மனதில் உங்களோட மனசுல இப்படி நினைச்சுட்டு இருக்கீங்களா? நீங்க வேற ட்ராக் போடுறீங்க! ஆனா பாஸ் இதன்யா மேம் கிட்ட போகும் ட்ராக்ல இருக்காரு! என்று நினைத்தான்.

ராஜசேகர் நான் சொல்றது புரியுதா? இல்லையா? என்று அதட்ட..

மோகன் ஓகே சார் நான் பாத்துக்கிறேன் என்று சொல்ல..

ராஜசேகர் அந்த பொண்ணோட பேக்ரவுண்ட் சப்போஸ் நவீன் குமாருக்கு தெரிய வர மாதிரி இருந்தா, அது தெரியக்கூடாது. அதை நீதான் பார்த்துக்கணும், அவள் யாருன்னு நவீன் குமாருக்கு தெரியவே கூடாது! எப்படியாவது நவீன் அடுத்த கட்டத்துக்கு போகணும்! அத தான் நான் ஆசைப்படறேன். என்று கூறினார்.

மோகன் கொஞ்சம் நெளிந்து கொண்டே உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்! என்று தயங்கிக்கொண்டே கூறினான்.

ராஜசேகர் அவனை புரிந்து கொண்டவனாய் என்ன நவீன் குமார் சித்தார்த்தாவோட மனைவிய விரும்புகிறானா? என்று பட்டென போட்டு உடைத்தார்.

மோகன், அதே தான்  சார்! அத தான் எனக்கு எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல! 

சித்தார்த் சிங்கம் இல்ல புலி மாதிரி அவன் பதுங்கிட்டு இருக்கான்னா, பின்னாடி பெருசா பாய போறான்னு அர்த்தம், ஆனா நவீன் குமார் எனது உயிர். அவனை பத்திரமா பாத்துக்கணும்.  சித்தார்த் இதன்யாவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான். இதெல்லாம் கனவுல கூட நடக்காது. அதனால நவீன்குமார்  அவன் கிட்ட மோத முடியாது.  அத நான் இப்போ சொன்னாலும் அவன் புரிஞ்சுக்கிற மனநிலை இல்லை.  அதனால எப்படியாவது நவீன் குமார் அப்புறம் ரம்யாவும் சேர்ந்தா போதும் மத்தபடி நவீன் நவீன் அப்படியே ரம்யா பக்கம் போயிட்டானா சித்தார்த் ஒன்னும் பண்ண மாட்டான். என்று ராஜ சேகர் கூறி முடித்தார். 

எனக்கு புரியுது சார்! ஆனால் பாஸ்!. என்று மோகன் 

 சித்தார்த் பத்தி  உனக்கு தெரியும் தானே!. 

மோகன் அமைதியாக ஓகே சார் நான் என்னோட பெஸ்ட்ட கொடுப்பேன் என்று கூறினான்.

ராஜசேகர்,  நீ என்னோட விசுவாசியான எம்ப்ளாய் என்று நவீன்குமார்க்கு தெரியாது. அது உனக்கு தெரியும் தானே! 

 மோகன்,  ஆமா சார் நான் உங்களால தான் நான் இங்கே வந்து ஜாயின் பண்ணி இருக்கேன்.  நீங்க!..உங்களுக்காக தான் நான் வேலை செஞ்சிட்டு இருக்கேன் என்று கூறினான். 

ராஜசேகர் அதுதான் மோகன் எனக்கு வேணும். நீ அவன கொஞ்சம் பாத்துக்கோ அவன பத்தியான விஷயத்தை எனக்கு அப்டேட் பண்ணிட்டே இரு! முக்கியமா ரம்யா பத்தி அவனுக்கு எதுவும் தெரியக்கூடாது. என்று கூறிவிட்டு போன் வைத்தார். 

*

சதீஷ் அவளின் பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டு இருந்தான். 

பிரியா இறங்கி வந்ததும் ஆடி கொண்டே நடக்க… இவள் என்ன பண்ண போறா? என்று சதீஸ் சோர்வுடன் நின்று கொண்டு இருந்தான். 

பிரியா அந்த இடத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க.  அங்கே சதீஸ் இருப்பது போல தோன்ற.. எல்லா இடத்திலும் இவனே தெரியுறான்? எப்படி? அய்யோ இவனை பார்க்காமல் பைத்தியம் ஆகிடுச்சு போல அந்த பார்ட்டி நடந்து பத்து நாள் இருக்குமா? என்று யோசித்து கொண்டே வந்தாள். 

ஹே என்ன டி யோசிக்கிற? என்று குரல் கேட்டது. 

உன்னை பத்தி தான்; என்று சொன்னவள் வெடுக்கென நின்றாள். 

செம் எக்ஸாம்க்கு ஸ்டடி லீவ் விட்டு இருக்காங்க! இன்னும் ஒரு வாரத்தில் எக்சாம் அத பத்தி உன்கிட்ட பேசறதுக்கு தான் வந்தேன் எல்லாம் மெட்டீரியல்ஸும் ரெடியா வச்சு இருக்கியா? இல்ல! இனிமேல்தான் செராக்ஸ் பண்ண போறியா? என்று சதீஸ் கேட்டான். 

பிரியா என்னோட எக்ஸாம் பத்தி உனக்கு என்னடா அக்கறை? நான் எல்லாம் மெட்டீரியல்ல படிக்கிற ஆள் கிடையாது. நான் புக்குல படிக்கிற ஆளு.

சதீஷ், பார்த்தேனே உன்னோட லைப்ரரி புக் ஹிஸ்டரியை தான்! என்று கூறினான்.

பிரியா புருவதை நெருக்கிக்கொண்டே இப்போ உனக்கு என்ன வேணும்? என்று முறைத்துக் கொண்டே கேட்டாள். 

சதீஷ், ஒழுக்கமா படிச்சு பாஸ் பண்ணு டி நீதான சொன்ன ஜெர்மனிக்கு phd பண்ண போறேன்னு! இப்போ இப்படி வந்து பேசுற!..

பிரியா அவன் சொன்ன விசயத்தில் சாக் ஆகி எப்படா சொன்னேன்  என்று கேட்டாள்.

 சதீஷ் அன்னைக்கு அந்த ஆசிஸ் கூப்டான்னு குடிக்க போனியே! அன்னைக்கு முழு போதையில் வந்தல்ல  ஜெர்மனி போய் படிக்கணும்! அதுக்கப்புறம் பிஎச்டி வாங்கணும்! என்று சதீஷ் கூறிக்கொண்டே அவளது முகத்தை பார்க்க..  அவள் தீவிரமாக கேட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே சதீஷ் மனதில் அப்போ அன்னைக்கு பேசினதெல்லாம் அவளுக்கு ஞாபகம் இல்லை போல! என்னை லவ் பண்றான்னு சொல்லி பார்ப்போம்  என பிரியா பேசாததையும் சொல்லிப் பார்ப்போமே! என்னதான் பண்றா என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே நிற்க..

பிரியா, டேய் முழுசா சொல்லு என்ன சொன்னேன். 

சதீஷ், அது தான் ஜெர்மனி போய் படிக்கணும்னு சொன்ன, பிஹெச்டி வாங்கணும்னு சொன்ன, அப்புறம் என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன, அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் ஒரு பொண்ணு, அதுக்கப்புறம் ஒரு பையன் பெற்றுக்கொள்ளலாம் சொன்னியே! என்று கூறினான்.

பிரியா இப்படி வானவில் வண்ணத்தில் ரீல் சுற்றி  பொய் சொல்லிட்டு இருக்காத அப்படி எல்லாம் நான் சொல்லி இருக்கவே மாட்டேன்.

சதீஷ், நீ எனக்கு ஐ லவ் யூ கூட சொன்ன தெரியுமா!

நானா? உனக்கு! சான்சே இல்ல  சொல்லி இருக்க மாட்டேன். ஆஷிஷ்க்கு கூட சொல்லி இருப்பேன்.  என்று பிரியா கூற.. 

சதீஷ்க்கு கோபம் வர அவள் கையை பிடித்து இழுத்தான்.

பிரியா,  உனக்கு என்னடா வேணும்?  விடு இது நடு ரோட்ல பிடிச்சுட்டு இருக்க! அது தெரியுமா நாயே! என்று தட்டி விட..

 சதீஷ் விளையாடாத பிரியா நான் ரொம்ப உன் மேல சீரியஸா இருக்கேன்.

ப்ரியா, நீ சீரியஸா இருந்தா போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகு! என்கிட்ட வந்து எதுக்கு பேசிட்டு இருக்க?

சதீஷ், ஒழுங்கா இந்த எக்ஸாம்ல பாஸ் பண்ற வழிய பாரு! பெயிலான உன்ன தூக்கிட்டு போயி! 

பிரியா, என்னடா பண்ணுவ? என்று மிரட்டி கொண்டு கேட்க..

சதீஷ்  சிரித்துக்கொண்டே ஒன்னும் பண்ண மாட்டேன். உன் கைய கால கட்டி பின்னாடி படுக்க போட்டு ஒரு பெரிய குச்சி எடுத்து அடிக்க ஆரம்பிப்பேன். எதுக்குடி பெயில் ஆனேன் எதுக்கு இப்படி ஆடிட்டு இருக்க அப்டின்னு பளுக்க அடிப்பேன். 

பிரியா, என்ன இப்படி எல்லாம் யாராவது பண்ணுவாங்களா ?

நீ என்ன நினைச்ச என்று சதீஷ் கேட்க..

நானா? நான் ஒன்னும் நினைக்கலையே!

சதீஷ்,  நீ பயங்கரமா தப்பா யோசிப்பது எனக்கு தெரியும் டி! நீ எப்படியாப்பட்ட கேடின்னு நீ எனக்கு தெரியாதா? என்று கூறினான்.

பிரியா உள்ளுக்குள் சிரித்தாள். அதை வெளி காட்டி கொள்ளாமல் தயவு செய்து என்னை பார்க்க வராத! என்னோட படிப்புக்கும் என்னோட ஜெர்மனி கணவுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! உன்னோட வேலை மயிரை பாத்துட்டு நீ போடா! என்று கூறினாள்.

மயிர் அப்படின்னா என்ன?  என்று கேட்டான் .

தமிழ்நாட்டில பொறந்துட்டு இந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியலையா? இந்த பிரீசியஸ் வேர்ட்க்கு நான் எல்லாம் அர்த்தம் சொல்ல மாட்டேன் என்று நடக்க ஆரம்பித்தாள்

ஹே  சும்மா சொன்னேன் டி என்று சமாளித்தவன். ப்ளீஸ் படிச்சுரு! உனக்கு நான் வேணா சொல்லித் தரவா? என்று கேட்டான்.

உடனே பிரியா எனக்கு ஹெல்ப் பண்றதுன்னு நினைச்சா  எனக்கு ஒரு பார்ட் டைம் ஜாப் பார்த்து கொடுக்கிறியா? இந்த செமஸ்டர் லீவுல நான் ஜாயின் பண்ணிக்கிறேன்! எனக்கு நிறைய பணம் தேவைப்படுது என்று  கூறினாள்.

சதீஷ் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தவன். பிரியா பேபி இவ்வளவு பொறுப்பா பேசிராலே என நினைத்து நான் உனக்கு வேலை வாங்கி தரேன்! என்று சொல்ல வர..

உடனே ப்ரியா, நீ எல்லாம்.. வேணாம் வேணாம்! தெரியாம உன்கிட்ட கேட்டுட்டேன். நான் அபி கிட்ட கேட்டுக்குறேன். அவனுக்கும் இப்ப எக்ஸாம் நடக்கும்.கண்டிப்பா அவன் எக்ஸாம் முடிச்சு செம் லீவ்ல வேலைக்கு போவான் . நான் அவன் கூட போய் ஜாயின் பண்ணிக்கிறேன். என்று சொல்லிவிட்டு அவள் நடக்க ஆரம்பித்தாள்.

சதீஷ், ஏய் என்ன காலைல அஞ்சு மணிக்கு போன் பண்ணுவேன். நீ  ஒழுங்கா எழுந்து படிக்கிற..

பிரியா, நீ போன் பண்ணா நான் எடுக்க மாட்டேன்! போடா!..

அப்படியா அப்போ உங்க மாமா போனுக்கு பண்ணட்டுமா?  என்று கேட்டான் .

பிரியா திடுக்கிட்டு திரும்பி பார்க்க..

சதீஷ் சிரித்துக்கொண்டே உங்க அம்மாச்சி போன் நம்பர், உங்க மாமா,  உங்க அத்தை, எல்லாரோட நம்பரும் என்கிட்ட இருக்கு.  நீ மட்டும் அஞ்சு மணிக்கு எந்திரிச்சு படிக்கல..  அவங்க எல்லாருக்கும் கால் பண்ணுவேன். என்று இரு புருவம் தூக்கினான். 

 பிரியா, நாயே தயவு செய்து அப்படி பண்ணி தொலைக்காத, நான் எந்திரிச்சு படிக்கிறேன் போதுமா என்று சொல்லிக் கொண்டே வேகமாக கோபத்துடன் நடக்க ஆரம்பித்தாள்.

சதீஷ் அவளின் அருகில் வந்து பிரியா!  கோகுல பிரியா! என்று அழைக்க..

ஒழுங்கா ஓடிப் போயிடு! என் கண்ணு முன்னாடி படாத மூட்டை பூச்சி மாதிரி நசுக்கி போட்டுருவேன் டா! 

சதீஷ் கெஞ்சலாக பிரியா எனக்கு ஒரே  ஒரு கிஸ் கொடுத்துட்டு போடி என்று சொல்ல..

எடு செருப்ப நாயே என்று ஓடிப் போயிடு ஒழுங்கா ஓடிப் போயிடு! உன் மேல செம கோபத்தில் இருக்கேன்! என்று அவள் திரும்ப..

சதீஷ் அவளுக்கு கன்னத்தில் முத்தம் வைத்து ஓடி விட்டான்.

அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தாள். ஒரு நாய் நரி கூட இல்லை.. எப்படி இவன் என்னை பார்க்க வரும் போது மட்டும் அந்த இடம்  யாருமே வர மாட்டேங்குறாங்களே!  அந்த நேரத்துல வந்து  யூஸ் பண்ணி என்னை ஏதாவது பண்ணிட்டு போயிடுறான். திருட்டு பையன் அவத்த பைய சிவத்த பைய அழிச்சாட்டியம் பண்றான் என்று நினைத்து சிரித்துக்கொண்டே அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

அங்க இன்னொருத்தர் கூட  இருந்தாங்க வேற யாரு சதா தான்?  சரி செய்து கொண்டு அவனுக்கு வயிற்றில் குண்டடிபட்ட காயங்களை சரி செய்து கொண்டு நன்றாக தேறி, அவனுக்கு எதிரில் இருக்கும் அனைவரையும் பழிவாங்க வந்துவிட்டான்.  ( இதில் ஜெயிக்கப் போவது யார் அது போக போக தெரியும் சித்தார்த் ஜெயிப்பான்ன நினைக்காதீங்க சதாவும் ஜெயிக்க மாட்டான் இது இன்னொரு ட்விஸ்ட்) 

சதா கொஞ்சம் கரகரத்த குரலில் அந்த வீரசிம்மாவோட ஒரு கொடுக்கு இந்த அம்மாய் பின்னாடி சுத்திட்டு இருக்கு! இன்னொரு கொடுக்கு? என்ன பண்ணுது? என்று கேட்க ..

அருகில் இருக்கும் அவனுடைய விசுவாசி அவரும் இந்த பொண்ணு பின்னாடி தான் பாஸ் சுத்திட்டு இருக்காரு! என்று கூறினான்.

 சதா சிரித்துக்கொண்டே அப்படியா? அப்போ இன்னும் வசதியா போச்சு! ஆனாலும் எங்க அப்பா சரியான முட்டாள் எனக்கு நீ சொல்ற வார்த்தைல நம்பிக்கை இல்ல. வீர சிம்மா பற்றி என் அப்பனுக்கு ஒன்னும் தெரியாது. சரியான கேடி! ஹஹ இங்கே யார் யாரு பின்னாடி சுத்துறா? யாரு என்ன பண்றான்னு? சரியா தெரிஞ்சி ஸ்கெட்ச் போட்டு அந்த சித்தார்த்த எப்படி அடிக்கணுமோ!அப்படி அடிப்பேன் . அந்த மாஸ்க் எக்ஸ்பட் ரிசர்ச்சர் வந்தாச்சா?  எனக்கு நான் சொன்ன  ஃபேஸ்ல நான் கொடுத்த போட்டோல இருக்கிற மாஸ்க் எனக்கு வேணும்! ரெடி பண்ண சொல்லுங்க! யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கணும். என்று கூறினான்.

அவனுடைய விசுவாசி, ஓகே பாஸ் அவங்க ஆல்ரெடி வந்தாச்சு இனிமேல் வேலைய ஆரம்பிக்க வேண்டியது தான் என்று கூறினான்.

சீக்கிரம் ஆரம்பிங்க அதுக்குள்ளாட்டியும் இவங்கள நான் அப்சர்வ் பண்ணனும். என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு அவனுடைய இடத்திற்கு சென்றான். 

சதீஷ் நேராக சித்தார்த்தை பார்க்கச் சென்றான்.  தினமும் அவர்களுடைய வேலைக்கான மீட்டிங் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை சித்தார்த் ஷூட்டிங் முடித்து வர எப்பொழுது சவுகரியமாக இருக்குமோ அப்பொழுதுதான் மீட்டிங் வைப்பார்கள். இப்பொழுது ஒடிசா பவர் ப்ராஜெக்டில் வீரசிம்மாவும் இணைந்து இருப்பதால் அந்த வேலைக்கு உண்டான அனைத்து பொறுப்புகளையும் சதீஷ் என்னும் சத்யஜித் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 சித்தார்த் அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிட்டு கேள்விகளுடன் மீட்டிங் என்று அந்த ஒன்றரை மணி நேரமும் மிகவும் கடுமையாக சென்றது. அது அனைத்தும் முடித்து  மணி 11 ஆகிவிட்டது. சித் லேப்டாப்பை மூடி வைத்தவன் எதிரில் இருக்கும் சதீஷை பார்த்தான்.

என்ன முகம் இப்படி இருக்கு? அவள் கிட்ட போய்  அடி வாங்கினியா என்ன?  என்று சித் கேட்டான். 

சதீஷ், இப்போ நீ என்னோட ஃப்ரண்டா இருக்கியா? இல்ல! என்னோட பாசா இருக்கியாடா? உன்னை புரிஞ்சுக்கவே முடியல சித்து..

சித், சொல்லு என்னாச்சு என்று கேட்டான்.

சதீஷ், எனக்கு அந்த ஆஷிஷ் பயலுக்கு அவ கைல ஒரு ப்ரேஸ்லெட் போட்டு விட்டாலே! அது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லைடா! அது தான் யோசிச்சிட்டு இருந்தென். 

சித்தார்த் ,அப்போ நீ மீட்டிங்ல கான்சென்ட்ரேஷனா இல்லையா?  அந்த ப்ரேஸ்லெடடை பத்தி தான் நினைச்சிட்டு  உட்கார்ந்துட்டு இருந்தியா என்று கடுமையான குரலில் கேட்டான்.

சதீஷ், ஐயோ உண்மையை உளறிட்டேனே! என்று பதட்டத்தில்  இல்ல டா அப்படி இல்லையே நான் சும்மா  சந்தோஷமா சொன்னேன் என்று சமாளித்தான்.

சித், வேலை நேரத்தில் வேலையை மட்டும் தான் கவனிக்கனும். அதை விட்டுட்டு அடுத்த தடவை இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணிட்டு இருந்த, உன்ன கொண்டு போய் உங்க அப்பா கிட்ட விட்டுடுவேன்.

சதீஷ், சித்து! சித்து நீ ரொம்ப ஓவரா போற! என்று எழுந்து செல்ல…

சித்தார்த், சரி உட்காரு என்ன சொல்ல வந்த?  என்று கேட்க..

ஒன்றும் இல்லை என்று முகத்தை திருப்பி கொண்டான்.

சத்யா சொல்லுடா என்று தலையை கோதிக் கொண்டு கேட்டான்.

சதீஷ்,  அதுதாண்டா அந்த பிரியா அந்த ஆஷிஷ் பையனுக்கு ஒரு காப்பு வாங்கி கொடுத்தாலே! அது மேல எனக்கு கண்ணா இருக்குடா! என்று கூறினான்.

சித், அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல.  அவன்கிட்ட போய் அதை வாங்கிட்டு வந்துடு!  என்று சாதாரணமாக கூறினான். 

சதீஷ் சிரித்துக்கொண்டே  என்னடா சொல்ற? இதுக்கு அப்படி பண்ணலாமா? ரொம்ப சீப்பா இருக்காதா?  என்று கேட்க..

போடா அது எல்லாம் அப்படி இல்ல. ஆஷிஷ் கையில் இருந்து அந்த பேரேஸ் லெட் கழட்டி அதை இழுத்துட்டு வா! அப்படி அவன் தர மாட்டேன்னு சொன்னா? கட்டிங்பிளேட் எடுத்து கட் பண்ணு! நீ  வாங்கிட்டு தான் வர! என்று சித் தீவிரமாக கூறினான். 

சதீஷ் அவனை தெய்வீகமாக பார்த்தவன்.  என்னோட லவ் மேல உனக்கு அவ்ளோ அக்கறையா டா ? நானும் பிரியாவும் சேர உனக்கு அவ்ளோ ஆசையா மச்சி! உன்ன மாதிரி ஒரு பிரிண்ட் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் டா!  என அவன்  உருகி பேசிக் கொண்டிருந்தான்.

சித்தார்த்  கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டு சரி! சரி  அப்படியே அவனோட அந்த ஆடி காரையும் தூக்கிட்டு வந்துடு! குறிப்பா சாவியோட தூக்கிட்டு வர! என்று கூறினான்.

சதீஷ் ஒன்றும் புரியாமல் என்ன சொல்ற? சாவியோட தூக்கிட்டு வரணுமா? உன் கிட்ட தான் ஆடி கார் இருக்கே! அதைவிட விலை அதிகமான BMW, லம்போகினி, கார் கூட வச்சிருக்கியேடா! நீ எதுக்கு அந்த கார் மேல!..  உனக்கு இப்படி ஒரு டேஸ்ட்.. என்று கேட்டான்.

சித்,  அதெல்லாம் தெரியாது  முக்கியமா எனக்கு அந்த சாவி வேணும்! என்று முடிக்க..

 சதீஷ் ஒன்னும் சரியில்லையே என்று கொஞ்சம் தீவிரமாக யோசித்தவன். அட பாவி! என்று அவனைப் பார்த்து முறைக்க..

சித்தார்த் தலையை கோதி கொண்டே இப்போ எதுக்குடா என்னை முறைக்கிற?  என்று கேட்க..

சதீஷ்,  இதன்யா ஆசிஸ்க்கு அந்த கீசெயின் கொடுத்தது உனக்கு பிடிக்கல தானே!..

எனக்கு சுத்தமா பிடிக்கல! அதை போய்  நான் வாங்குனா ரொம்ப பெருசா ஒன்னும் இல்ல! ஈசியா வாங்கிடுவேன் தான்!  இருந்தாலும் நீ போறல்ல அப்படியே அந்த கார் எனக்கு வேணும்! அந்த கீசெயின்  வேணும். அது எனக்கு சொந்தம். என்று சித்தார்த் கூறினான். 

 சதீஷ் எப்படி டா ஒருத்தர இப்படி லவ் பண்ண முடியுமாடா?  பாப்பா நகம் கடிச்சு போட்டால் என்ன பண்ணுவ? 

அதை வைத்து ஒரு மெழுகு சிலை செய்வேன். 

சதீஷ் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்தார்த், ஒழுங்கா போய் அந்த காரையும் முக்கியமா கீ செயினும் வாங்கற.. அவன் காப்பு கூட வச்சா வச்சிட்டு போறான்.முக்கியமா  அந்த கீ செயின் எனக்கு வந்தாகணும்! அதுக்கு பதிலா இந்த bmw கொண்டு போய் அவங்க வீட்டு முன்னாடி நிறுத்திடு. 

சதீஷ்,  அப்போ கீ செயின் கேட்டா என்ன பண்றது ? அவன் தரமாட்டான் டா! அவன் அது மேல ரொம்ப செண்டிமெண்டா இருக்கான்!  அன்னைக்கு பார்க்க குடு டான்னு கேட்டதுக்கூட என்னை முறைத்து பார்த்து கொடுக்கவே இல்லை.

சித், அதெல்லாம்  எனக்கு தெரியாது! நாளைக்கு சாயந்திரம் நம்ம வீட்டு முன்னாடி அந்த கார் நிக்கணும்! அந்த கீசெயின் நம்ம வீட்ல தொங்கனும்! 

சதீஷ் அவனை பிரமிப்பாக பார்த்தான். ஆனால் ரொம்ப டூ மச் சித்து! எல்லாம் எனக்கு பண்ற மாதிரியே பேசிட்டு கடைசியா உனக்கு தாண்டா பிளான் பண்ணி இருக்க! அப்போ நீ என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணல! அப்படித்தானே!

சித்தார்த் புருவத்தை நெருக்கிக்கொண்டே என்னோட லவ்வுக்கு சாரு என்ன ஹெல்ப் பண்ணீங்க? 

 சதீஷ் பதட்டத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நானா? நான் உனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன்! என்று கூறினான்.

சித்தார்த் எழுந்து கொண்டு எட்டி உதைச்சேன்னு வச்சுக்க, அப்புறம் இனிமே அவளை பார்க்க உனக்கு வேலை இருக்காதுன்னு நினைக்கிறேன்.  எங்கடா எனக்கு ஹெல்ப் பண்ண?  நான் உன்கிட்ட பேச வரும்போது எல்லாம் பாஸ்! பாஸ்! அப்படின்னு என்னை எவ்வளவு கடுப்பு பண்ண? இப்போ நீ லவ் பண்றதுனால தானே இப்படி என்கிட்ட வந்து அவளை பத்தி பேசுற? எத்தனை நாள் டா நீ எனக்கு போன் பண்ண ? என்று  கேட்டான்.

சதீஷ், இல்ல சித்து உன்ன பாத்தா பாஸ் மோட்லயே தான் இருக்க! நீ எப்போ  ஃப்ரெண்ட் மோட்ல இருக்க? எனக்கு கண்டு பிடிக்க முடியல டா..

 சித்தார்த் நான் எப்பவும் அப்படித்தான் இருப்பேன் . நீ தானே என்னோட ஃப்ரெண்ட் அதுக்கு தகுந்த மாதிரி தான் நீ  என்கிட்ட பேசணும்.

 உடனே சதீஷ், நானா உனக்கு ப்ரெண்ட்?  என்ன விட அந்த குரு பிரகாஷ் தான் உனக்கு பிரண்டு அவன் கூட தானே நீ வாழியண்டரியா போன் பண்ணி பேசுவ? எனக்கு எத்தனை தடவை பேசி இருக்க? என்று கேட்டான்.

சித்தார்த் டென்ஷனாகி போ உனக்கு என்னடா வேணும் மயிறு மாதிரி.. என்று கூறினான்.

சதீஷ், சித்து உன்கிட்ட ஒரு பெரிய டவுட் கேக்கணும் டா ? எனக்கு இதை மட்டும் சொல்லி குடுக்குறியா ? என்று கேட்டான்.

என்ன? 

 இப்போ ஒரு வார்த்தை சொன்னியே மயிறு! அதுக்கு அர்த்தம் என்னடா? என்று கேட்டான் .

சித்தார்த் இதை கேட்டு சிரித்துக்கொண்டே அவ சொன்னாளா? என்று கேட்டான்.

சதீஷ் ஷாக் ஆகி  எப்படி டா சரியா சொல்ற?  அவ தான் சொன்னா! பாப்பா இதை  அடிக்கடி யூஸ் பண்றாளா? நீ யார்கிட்ட கத்துக்கிட்ட இதன்யா அத சொல்லுவாளா? என்று கேட்க..

சித், லிட்டில் ஹார்ட் பத்தி இப்படி எல்லாம் பேசாத , அவளுக்கெல்லாம் இந்த வார்த்தையோட அர்த்தமும் தெரியாது. அவ பியூர் ஹார்ட் என்று கூறினான்.

சதீஷ் புருவம் நெருக்கிக்கொண்டே அப்போ இதுக்கு அர்த்தம் என்ன என்று கேட்டான்.

சித், அதாவது உன் தலையில் இருக்கிற முடிதான் இதுக்கு அர்த்தம் என்று கூறினான்.

சதீஷ் அடிப்பாவி அவள்  வாயில வரதெல்லாம் இப்படித்தான்டா இருக்கு. என்னென்னமோ பேசுறா!  இன்னைக்கு புதுசா இன்னொன்னு சொன்னா? அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியல! என்று சொல்ல..

சித் சிரிக்க ஆரம்பித்தான்.அவனது சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அமைதியான பச்சை பிள்ளை  தோற்றத்திற்கு வர..

சதீஷ், என்னடா முகம் மாறுது என்று பார்க்க வெளியே இதன்யா கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

சித், எதுக்கு இப்படி பார்க்கிறான்னு கேளு என்று சதீஷ் கிட்ட கூற.

அவனோ பாப்பா என்று சிரித்துக் கொண்டே திரும்பினான்.

இதன்யா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மணி என்ன ஆகுதுன்னு தெரியுமா? அவரை எப்ப தான் விடுவீங்க! மணி 12 ஆகுது தூங்க வேண்டாமா?  காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சு போறாரு என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

சதீஷ்,  நல்லா பண்றடா நீ லவ்வு! என்று சொல்லிவிட்டு அப்படியே நிற்க.. 

அவளை போ  சொல்லு மச்சி  நான் வரேன் என்று கூறினான். 

அண்ணா என்று  அவள் அதட்ட.. 

சதீஷ்,  நீ போதும்டா சாமி நான் இங்க இருந்து கிளம்புறேன்.

சித், டேய் அந்த கீ  என்று சொல்ல வர..

நாளைக்கு வீட்டில் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சதீஷ் கிளம்பி விட்டான். 

தொடரும்…

https://pocketfm.onelink.me/2IE7/vry8mikg

உனக்கும் எனக்கும் pocket fm link 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 244

சித்தார்த் அந்த அறையை பூட்டி விட்டு வெளியே வந்தவன். திரும்ப அவனுக்கு எதிரில் கைகளை கட்டி கொண்டு இதன்யா நின்று கொண்டு இருந்தாள். 

எனக்கு ரொம்ப தூக்கம் வருது என கண்களை சொக்கியபடி சொல்லி கொண்டே நடக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள். 

சித் உள்ளுக்குள் இத்தனை நாள் இவள் கிட்ட தப்பித்து கண்ணில் படாத படி டிமிக்கி கொடுத்தால் இன்னிக்கு அந்த சத்யா டாக்! அந்த நாயால மாட்டிகிட்டேன் என்ற ஒரு பெரு மூச்சை விட்டு  திரும்பி என்ன டீச்சர்! அங்கேயே நிக்கிரீங்க? 

இப்போ தான் உங்க கண்ணுக்கு நான் தெரிகிறேன் போல.. என்று அந்த இடத்தை விட்டு இதன்யா நகர வில்லை. 

சித் இல்ல டீச்சர்! நான் எவ்ளோ பிஸி அது உங்களுக்கே தெரியும் தானே! அதான்! 

ரொம்ப கஷ்டபட்டு யோசிச்சு இருக்கீங்க போல.. சரி போங்க! நான் எதும் கேட்கல.. என்று சொல்லி விட்டு அதே இடத்தில் நின்றாள். 

அவள் பின்னால் வருவாள் என நினைத்து கொண்டு சித்தார்த் அறைக்கு சென்றான். ஆனால் இதன்யா வரவே இல்லை அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.

“வா எனக்கு தூக்கம் வருது நாளைக்கு ஷூட் இருக்கு”

மாட்டேன்! என்று அவனை முறைத்து பார்த்தாள். 

சித்தார்த் அவளின் அருகில் வந்து என்ன பண்ணனும்! 

ஒன்னும் பண்ண வேணாம்! உங்க வேலையை பாத்துக்கிட்டு நீங்க போங்க என காட்டமாக கூறினாள். 

“தூக்கிட்டு போகவா டீச்சர்!” என்று அருகில் நெருங்கினான். அவளின் முகத்தில் ஒரு நிமிடம் புன்னகை பரவியது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அதே இடத்தில் அப்படியே இருக்க .

சித்தார்த் அவளை அழகாக தூக்கி கொண்டவன் படுக்கை அறைக்கு சென்றான். 

இதன்யா வேண்டும் என்றே உங்களால் தூக்க முடியுமா? இறக்கி விடுங்க! எதும் ஆகிட போகுது! குண்டடி வேற நடந்து இருக்கு வெடி குண்டு வெடிச்சு இருக்கு! அதான்! 

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவளின் முகத்துக்கு அருகில் வந்தான். டீச்சர்க்கு வாய் அதிகமா இருக்கே! என்று மூக்குடன் மூக்கு உரசினான். ஆமா இருக்கும்! என்ன பண்ணுவ!  

சித் முகம் மாறி இப்படி கூப்பிடாத ஐ கான்ட் டைஜஸ்ட்!  

எப்டி கூப்பிடனும்? 

அது உனக்கு தெரியும்! என்று அவன் சொல்ல..

எனக்கு தெரியாதே!  

பொய் சொல்லாதீங்க டீச்சர்! என்று அவளின் முகத்தை பார்த்தான். 

அதுக்கு பதில் உங்களுக்கே தெரியும்! நான் கண்ணாடி மாதிரி! நீங்க என்ன பண்றீங்களோ! அதை தான் திருப்பி பண்ணுவேன். 

அவன் இரு புருவம் தூக்கி கொண்டே அப்டியா? நீங்க அந்த அளவுக்கா! 

ம்ம் ஆமா! என்றாள். 

அறைக்கு வந்ததும் ஹே என்ன அங்கே படுக்கவை!  என்று அதட்டினாள்.

ஹே இதன்யா! இப்படி சொல்லாத! 

அப்படி தான் டா சொல்லுவேன். என்று கூற அவளை படுக்கையில் மெதுவாக கிடத்தினான். இதன்யா அவனுடைய கழுத்து செயினை பிடித்து இழுக்க.. 

சித் அவளை இரு புருவம் தூக்க பார்த்தான். 

அந்த குண்டடி எப்டி இருக்கு என அவளின் கைகளை அதை வருடியது. அப்படியே அவளின் கைகள் அவனுடைய கன்னத்துக்கு வர.. 

சித்தார்த் அவளின் கன்னத்தை தடவ ஆரம்பித்தான். 

க்கும்.. என்று அவளின் கையை விலக்கி கொண்டாள். 

ம்ம் என்று அவள் மேல் படற சென்றான். 

ஹே என்ன டா பண்ற? 

சித் கொஞ்சம் கிறக்கத்துடன் கண்ணை முழித்து கொண்டே என்ன? என்றான். 

அவள் இரு புருவம் தூக்க என்ன பண்றீங்க? ஹான்! 

நான்! அது நீ!.. நீ தானே!.. என்று திக்கினான். 

உங்க இடத்துக்கு போங்க! 

எங்கே? என்று சித் அவளை பார்க்க..

அதோ என்று ஆள் காட்டி விரலை சோபாவை நோக்கி காட்டினாள்.

ஏன்? 

அவள் கண்கள் விரிய இப்போ என்ன சொன்னீங்க? என்று அவளின் பார்வை அவனை துளைத்தது. 

ஹே எதுக்கு டி என்னை இப்படி பண்ற? என சிணுங்கி கொண்டே எழுந்தான். 

பாஸ்! நீங்க தானே அங்கே போய் படுத்தீங்க? எவ்ளோ வீர வசனம்! அதுக்கு எல்லாம் என் கிட்ட சாரி லிட்டில் ஹார்ட் ம்ம் அது இல்லன்னா ரெட் பேபி! இப்படி சொல்லி சாரி கேட்டால் உடனே இங்கே என் பக்கத்தில் நான் உங்க கைக்குள்ள.. என்று அவனை பார்த்தாள். 

சித், சாரி எத்தனை வேணும்! சொல்லு இப்போ வாங்கி தரேன்! 

செம்ம காமெடி! இப்போ உங்க படத்துல போடுங்க! வாமிட் மாதிரி இருக்கு!  என்று கூறினாள். 

சித், நீ என்ன சொல்ற? என அப்பாவியாக கேட்டான். 

ஹே நடிக்காத டா நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும்! கேளு! இப்போ கேளு! உடனே கேளு! நான் ரெடி வா! என எழுந்து உடலை முறுக்கி சோம்பல் முறித்தவள். கண்களை ஒரு மாதிரி மூடி திறந்தாள். 

அவனுடைய தொண்டை குழி எதோ செய்தது. இப்போ அவள் கிட்ட பணிஞ்சு போனால் காலம் பூரா இதை சொல்லி காட்டுவா! அவள் தான் என்னை தேடி வரனும் சித்தார்த் என்று கூறி கொண்டு நேராக சோபாவுக்கு சென்றான். 

ஹே சித்தார்த் கிருஷ்ணா! ஹலோ mister perfect!. 

சித் அவளை முறைத்து கொண்டே போடி! என சொல்லி கொண்டே திரும்பி உறங்க ஆரம்பித்தான். 

ஹே சித்து வாயேன்! இங்கே என் பக்கத்தில் வெளியே வெதர் நல்லா இருக்கு! உள்ளே ac ச்ச! இது எல்லாம் என்ன க்லைமெட் தெரியுமா! எதுவும் சொல்ல மாட்டேன். எந்த பனிஸ்மென்டும் இல்ல வாயேன்! 

சித்தார்த் திரும்பிப் பார்த்தவன். நிஜமா!. 

ஹான் ஆனால் உன்னை டேய் வாடா சித்து! டேய் போடா சித்து! நில்லு டா இதைவிட மட்டமா இறங்கி கூட பேசுவேன் அதுக்கு சம்மதமா! என்று இதன்யா பார்த்தாள். 

அவன் பக்கம் இருந்து தூங்கிட்டேன் என்று சத்தம் கேட்டது. 

இதை கேட்டதும் அவள் சிரித்து கொண்டே தூங்க ஆரம்பித்தாள். 

இங்கே சதீஸ் நேராக  ஆஷிஷ் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். 

யார் நீங்க என்று ஹோட்டல் ஆட்கள் கேட்க…

நான் சத்ய ஜித் வந்திருக்கேன். ஆஷிஷ் கவுடாவை பார்க்கணும்!  

அவர்கள் உடனே உள்ளே சென்று விவரத்தை சொல்ல உடனே சதீஸ் உள்ளே சென்றான். 

நீ மட்டும் வந்துருக்கியா? இல்ல பிரியா பேபி உன் கூட வந்து இருக்காளா? 

சதீஷ் டென்ஷன் ஆகி எல்லாம் அந்த வாயாடி பண்ண வேலை! பேசியே விழ வைக்கிறா என முகத்தை தீவிரமாக வைத்து கொண்டான்.  

ஹே பதில் பேசு!  

சதீஷ் முகத்தை அழுத்தி துடைத்தவன். அவளை விடு இப்போ லைட்டா பார்ட்டி பண்ணலாம். என்று ஒரு பாட்டிலை எடுத்து வைத்தான்.

என்ன புது அக்கறை! 

அன்னிக்கு பர்த் டேல பாதியிலேயே போயிட்டேன். அதான் இன்னிக்கு அத செலப்ரேட் பண்ணி முடிக்கலான்னு வந்தேன்.  ஏன் நான்  வரக்கூடாதா என்று சதீஸ் கேட்டான். 

ஆஷிஷ் முகம் மலர “அப்படியா மச்சி?  எவ்வளவு பாசம் டா என் மேல..   நம்ம எந்த கிளாஸ் ஒண்ணா படிச்சோம்?  ஒன் இயர் ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சோம்! அதுக்கப்புறம் நீ பாரின் போயிட்ட! என்னை  எல்லாம் நீ ஞாபகம் வைச்சிருப்பியான்னு  நினைத்தேன்.  ஆனா இந்த அளவுக்கு என் மேல பாசம் இருக்குன்னு நான் எதிர்பார்க்கல மச்சி!” என்று சொல்லிக் கொண்டே பிரியா போட்டு விட்ட அந்த காப்பையை அழகாக கையில் தள்ளிக்கொண்டே அவனைப் பார்த்தான்.

சதீஷின் கவனம் அனைத்தும் அந்த காப்பின் மேல் இருந்தது.

ஆஷிஷ் எழுந்து சதீஷின் அருகில் அமர்ந்து கொண்டு ஊத்து மச்சி! எங்கிருந்து வாங்கிட்டு வந்த? இந்த மாதிரி கலெக்ஷன் எல்லாம் அதிகமா இந்த சித்து தான் வச்சிருப்பான். இது ரொம்ப ரேர் பீஸ் மச்சி! என்று அந்த ஒயினை வாங்கி முகர்ந்து பார்த்தான். ஐயோ வாசனையே போதை ஏறுதுடா.. 

சத்தியஜீத் சிரித்துக் கொண்டே உனக்காக தான் மச்சி நாளைக்கு உனக்கு ஷூட்டிங் இருக்கா டா? என்று கேள்வியாக கேட்டான்.

ஆஷிஷ், நாளைக்கு ஈவினிங் தான்  ஷூட் போக போறேன் என்று கூற..

சதீஷ் அதுதானே நமக்கும் வேணும் என்று  தந்திர சிரிப்புடன் அந்த ஒயினை இரண்டு கோப்பைகளில் ஊற்றினான்.

ஆஷிஷ் அதை முகர்ந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பருக ஆரம்பித்தான். மச்சி செம்ம டேஸ்ட் ஒர்த் டா என்று ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆஷிஷிற்கு போதை ஏற..

சதீஷ் ஒவ்வொரு மிடுக்காக குடித்து கொண்டிருந்தான். என்ன கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற? 

அது ஒன்னும் இல்ல நாளைக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க் வெளியே போகணுமா?  சித்தார்த் வேற வர சொல்லுவான்!  அதனாலதான் கொஞ்சமா குடிச்சிட்டு இருக்கேன். என்று குடித்துக்கொண்டே சர்வரை அழைத்து சைடிஸ்கள் அனைத்தையும் அசைவத்தில் ஆர்டர் செய்தார்கள்.

அதன் பின் ஆசிசுக்கு நன்றாக போதை ஏறி இருக்க..

சதீஷ் அவனிடம் மச்சி அது உன் கையில் இருக்கே! நீ  போட்டு இருக்கியே அது ரொம்ப அழகா இருக்கே? 

ஆஷிஷ், இது  என சிரித்து கொண்டே பார்த்தான்.  

எதுக்குடா சிரிக்கிற என்று சதீஷ்க்கு கொஞ்சம் பொறாமை இப்படி பார்க்க..

ஆஷிஷ், இது ப்ரியா பேபி வாங்கி கொடுத்தா! நல்லா இருக்குல்ல! ரொம்ப யூனிக்கா இருக்கு தானே! என் கைக்கு போட்டதும் எவ்ளோ அழகா இருக்கு பாரேன்! என்று கூறினான்.

அப்டியா கொஞ்சம் கொடு நான் பார்த்திட்டு தரேன். 

இல்ல.. மாட்டேன்..

சதீஷ், கொடுடா என அவன் கைகளை வலுக்கட்டாயமாக எடுத்து உருவ ஆரம்பித்தான்.

ஆஷிஷ் கண்ணை தேய்த்துக் கொண்டே என்னடா பண்ற? எனக்கு அது வேணும்! அது என்னோட ரொம்ப சென்டிமெட்.. அதுவும்  எனக்காக ஒரு பொண்ணு முதல் முதலில் வாங்கி கொடுத்தது. அது எல்லாம் உன்கிட்ட தரமாட்டேன்! என்று கூறினான். 

உடனே சதீஸ் அவள் உனக்கான பொண்ணு இல்ல என்னோட கேர்ள் she is mine so அதுவும் எனக்கு தான் சொந்தம்.  தெரியுமா அதனால இதுவும் எனக்கு தான் சொந்தம் கொடு!..

ஆஷிஷ், ஹே நீ அவள்  கிட்ட கேளு,  அவள்  வாங்கி தரவா, இது என்னோட பர்த்டேக்கு எனக்காக வாங்கி கொடுத்தது.  இதெல்லாம் நான் உனக்கு தரமாட்டேன்.  என்று எழுந்து தள்ளாடி கொண்டே படுக்கைக்கு சென்று விட்டான். 

ஆஷிசை பிடித்துக் கொண்ட சதீஷ் அவன் அவனிடமிருந்து அந்த காப்பை கஷ்டப்பட்டு வாங்க முயற்சி செய்தான். 

அதன் பின்னர் எப்படியோ ஒரு வழியாக கடைசியில் கிட்ட இருந்து அந்த காப்பை வாங்கியவன் அதேபோல் இன்னொரு காப்பை தொடாதீங்க கையில் போட்டு விட்டான். 

ஆஷிஷ் அப்படியும் இப்படியும் போதையில் உளறிக்கொண்டே படுத்திருக்க..  சதீஸ் சிரித்து கொண்டே ஆசிஸ் மச்சி நான் கிளம்புறேன்! டாட்டா என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான். 

அப்பொழுதுதான் அந்த காரின் நினைவு வந்தது. அந்த கீசெயின் மட்டும் காரோட எடுத்திட்டு போகல.. அந்த சித்  மறுபடியும்  இந்த ஆஷிஷ் கிட்ட மாட்டி விடுவானே!  அதனால இப்போ உடனே இந்த கார மாத்தியே ஆகணும் என்று அங்கே இருக்கும் ஹோட்டல் பணியாளிடம் சென்றான். 

சார் என்று அனைவரும் அவனுக்கு மரியாதை கொடுக்க . 

சதீஷ்  நெற்றியை  தேய்த்துக் கொண்டே  ஒன்னும் இல்ல என்னோட BMW காரில் வந்தேனா. ஆடி கார் பார்த்தேன். அத ஓட்ட தோணுது. அதனால ஆஷிஷியோட அந்த ஆடி கார் சாவி கொடுங்க என்று கேட்டான். 

அந்த பணியாட்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நான் யாருன்னு தெரியுமா? சத்தியஜித்!.. இந்த  சத்யஜித் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? ஆசிசோட ஃப்ரெண்ட்!.  அதைவிட சித்தார்த் கிருஷ்ணாவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்! அதைவிட வீரசிம்மாவோட பையன்! என்கிட்ட அந்த கார் சாவி கொடுக்க மாட்டீங்களா? என்று மிரட்டும் தொனியில் கேட்டான்.

இப்பொழுது அவனைப் பார்க்க கொஞ்சம் வீரசிம்மா போலவே இருந்தது. அவர்கள் ஒரு நிமிடம் நிமிடம் திட்டிக்கிட்டு சார் அது! வந்த எப்படி!  உங்களுக்கு எப்படி சார் காரை நாங்க தர்றது என்று தயங்கினார்கள். 

உடனே சதீஷ்,   நான் ரெண்டு காரயும்  எடுத்துட்டு போறேன்னு சொல்லல!.  பிஎம்டபிள்யூய விட்டுட்டு போறேன். ஆடி கார் எடுத்துட்டு போறேன். இது சித் கார் அப்புறம் பிரஸ்  கண்டுபிடிச்சிட்டா பிரச்சனையாகும். அதனாலதான் ஆசிஷ் காரை கேட்கிறேன். என்று குழப்பி விட்டான்.

அந்த பணியாளர்களுக்கு என்ன பேசினோம் என இப்பொழுது மறந்து போனது. ஏனென்றால் சத்யஜித் அப்படி மிரட்டி கொண்டிருந்தான்.

உடனே அவர்கள் தயங்கிக் கொண்டு அது பாஸோட ரூம்ல தான் இருக்கு! என்று கூறினார்கள். 

சதீஷ், அப்படியா ஒன்னும் பிரச்சனை இல்ல. நானே போய் எடுத்துக்கிறேன். என்று நேராக உள்ளே சென்றவன். அங்கே இருக்கும் கீயை எடுத்துக்கொண்டு அதில் உள்ள பொம்மையை பார்த்தான்.  காதல் ஜோடி ஒரு குட்டி பெண் புடவையில் இருக்க அந்த மணமகனும் வெள்ளை வேஷ்டி சட்டையில் அழகாக குட்டி தஞ்சாவூரு பொம்மை போல இருந்தது. பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. இதன்யா சூஸ் யினிக் தான் என நினைத்துக் கொண்டவன். அதை  எடுத்துக்கொண்டு கைகளில் சுற்றிக்கொண்டே வெளியே வந்தான்.

சித்தூ மிஷன் சக்சஸ் டா என்று சொல்லிக் கொண்டே கீழே வந்தவன். காரை எடுத்துக் கொண்டு நேராக  அவனுடைய வீட்டில் காரை நிறுத்திவிட்டு சத்தியத்தை சதீஷ் உடைய வீட்டின் காரை நிறுத்திவிட்டு அடுத்த நாள் காலை அவனுக்கு காட்டுவதாக நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றான் .

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது இதன்யா உடலை முறுக்கிக் கொண்டே சாம்பல் சோம்பல் முறித்து ஹலோ குட் மார்னிங்!  என்று கூற..

சித்தார்த் அவளை முறைத்துக் கொண்டே திரும்பியவன் ஷூட்டிங் கிளம்பி விட்டான். 

ரத்னகுமார் உடைய சொந்த வேலை காரணமாக நான்கு நாட்கள் சூட்டிங் ஒத்தி வைக்கப்படுகிறது. அதனால் தீவிரமாக இந்த ஒரு வாரத்தில் படப்பிடிப்பு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதேபோல் ஸ்டடி லீவ்  முடிந்து இதன்யா மற்றும் பிரியா என அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடைய செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  சதீஷ் தான் கடவுளை வேண்டிக்கொண்டு தினமும் காலை பிரியாவிற்கு முன்பாக எழுந்து அவளுக்கு போன் செய்து படி டி! படி டி என்று ஆயிரம் முறை கூறியிருப்பான்.

பிரியா தலையை சொரிந்து கொண்டே எதுக்குடா என்னை டார்ச்சர் பண்ற? நான் 39 பக்கத்தையும் ஃபில் பண்ணிடுவேன்! என்று கூறினாள்.

உடனே சதீஷ் நீ 39 பக்கத்தை fill பண்றது முக்கியமில்லை. அதுல ரியாக்ஷன் மெக்கானிசம் போட்டால் தாண் டி மார்க் போடுவாங்க என்று கூற..

பிரியா, எதுக்கு இந்த காலேஜ்ஜ University ல இன்னும் வச்சிருக்கீங்க அதான் autonmous ஆ மாத்துங்க என்று கூற..

சதீஷ் புருவத்தை நெருக்கி கொண்டு இப்பொ எதுக்கு autonmous மாத்தணும்? 

பிரியா, நான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்க தான். யுனிவர்சிட்டியில் கொஞ்சம் கஷ்டம் ஆனால் autonmousல ஈஸி எப்படி என்னோட ஐடியா ?

சதீஷ், ரொம்ப கேவலமா இருக்கு! ஒரு குச்சி ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீ மட்டும் சொதப்பு ….  உனக்கு இருக்குடி என்று கூறினான்.

படிக்கிற பிள்ளைக்கு போன் பண்ணி எதுக்கு டா நாயே டிஷ்டப் பண்ற..

சதீஷ் , அம்மா தாயே நீ  படி நான் போன் வைக்கிறேன் என்று வைத்து விட்டான்.

 அந்த ஒரு வாரத்தில் அனைவருக்கும் பரிட்சையும் முடிந்தது. அதே நேரத்தில் ரதி நேராக சந்திரமௌலியை பார்க்க சென்றிருந்தார்.

சந்திரமௌலி  எப்பொழுதுமே அவளிடம் கோபமாகவோ இல்லை மோசமாகவும் நடந்து கொள்ள மாட்டார். எல்லாரையும் நடத்துவது போல தான் பேசுவார்.

அதேபோல அதேபோல ரதியை அழைத்தார். இப்போ உடம்பு எப்படிமா இருக்கு? உனக்கு பரவாயில்லையா?

நான் நல்லா இருக்கேன் மாமா! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

என்னமா என்று கேட்டார்.

ஒன்னும் இல்ல  நம்மளோட ஆரவ் அப்புறம் நிஷா இரண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பலாம். அப்படின்னு ஒரு ஐடியாவில் இருக்கேன். மாமா! என்று கூற..

இதை கேட்டதும் சந்திர மௌலிதும் அது சரியாகதான் பட்டது. இப்பொழுதுதான் கல்யாணம் ஆகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான ஒரு தனிமை வேண்டும் அல்லவா. அதனால் அவர் யோசித்துக் கொண்டிருக்க..

அதே நேரம்  ரதி மீண்டும்  மாமா இன்னொரு விஷயமும் சொல்லணும்?  என்னம்மா என்பது போல் சந்திரமௌலியன் பார்வை இருந்தது.

சித்தார்த்  அப்புறம் நம்ம வீட்டு மூத்த மருமக இதன்யாவை கூட அனுப்பலாம். இரண்டு ஜோடியும் போயிட்டு வரட்டுமே என்று கூறினார்.

இந்த வார்த்தையை கேட்டதும் ரவிச்சந்திரனுக்கு புர எற ஆரம்பித்தது.

இது அவதானா? இந்த மாதிரி எல்லாம் பேச தெரியுமா? என்று ரவிச்சந்திரன் வாய பிளந்து  கொண்டு ஒரு நிமிடம்  திரும்பி பார்த்தார் .

இப்பொழுது ரவிச்சந்திரன் ஒரு படத்தில் கமிட்டாக இருக்கிறார் .அவரும் ஒரு பக்கம் நடித்துக் கொண்டு பவானியிடம் பேச்சு கொடுப்பது,  அவரிடம் நேராக வழியை சென்று பேசுவது, அவருக்கு பரிசுகளை கொடுப்பது எப்படியாவது பவானியின் மனதை மாற்றிவிட வேண்டும். என்று இன்னொரு பக்கம் போராடிக் கொண்டிருந்தார்.

சந்திரமௌலி யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்க..

ரதி என்ன மாம்மா யோசிக்கிறீங்க? நான் சொன்னதுல ஏதாவது தப்பா ?

இல்ல மா அது!

ரதி, நான் சாகுற நிலைமைக்கு.. என்னோட மரணப்படுக்கைக்கு போனதுக்கப்புறம் தான் எனக்கு அறிவே வந்தது. எனக்கு சித்தார்த் கூட என் பையன்  தான். நான் ஆயிரம் தப்பு பண்ணி இருந்தாலும் அப்போ நான் உணர்ந்தேன் மாமா. இந்த வீட்டோட மூத்த பையன் சித்தார்த் அவனுக்கு தான் எல்லாமே கிடைக்கணும். அதேபோல என்னோட மூத்த மருமகள் இதன்யா தான் அதனால அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா தான் சீக்கிரம் நமக்கு ரெண்டு பேர பிள்ளைங்க கிடைக்கும்.   அவங்கள நான்தான் வளர்ப்பேன்.   பவானி கொடுக்கலனா கூட அவங்கள என்கூட கூட்டிட்டு வந்து நான் தான் வளர்ப்பேன்.  இதை யாரும் என்கிட்ட இருந்து தட்டி பறிக்க முடியாது. என்று கூறினாள்.

சந்திரமௌலி தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க ரதி, ஒரு நல்ல முடிவா சொல்லுங்க மாமா என்று மீண்டும் கெஸ்ட் ஹவுஸ் சென்று விட்டார்.

ஏனென்றால் சித்தாத் அன்று பேசியதிலிருந்து அவள் பெரிய வீட்டிற்கு வருவதே கிடையாது. கெஸ்ட் ஹவுசில்  தான் தங்கி இருக்கிறாள்.

சந்திரமௌலி இது தொடர்பாக பேச வேண்டும் என்று பவானியை அழைத்து இருந்தார்.

சித்தார்த் அப்பொழுது தான் ராஜசேகர் மற்றும் பவானி இருவர் கூடவே ஒரு கெட் டூ கேதர் டின்னர் ஏற்பாடு செய்திருந்தான். அது முடித்துவிட்டு பவானி நேராக பெங்களூர் செல்ல வேண்டும்.

பவானி வழக்கம்போல் அந்த டின்னரில் அமர்ந்து கொண்டே யாரை பார்க்க போறோம்? தாத்தா வர சொல்லி இருக்காங்க டா எனக்கு டைம் ஆகுது. 

தாதாவா? இப்போ தானே நான் அவர் கிட்ட பேசினேன். 

 பவானி, சித்து  என்னோட அப்பா இல்லடா! உன்னோட தாத்தா சந்திரமௌலி வர சொல்லி இருக்காரு! என்று கூறினார்.

சித் முறைத்துக் கொண்டே அவர் என்னோட தாத்தா கிடையாது. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? அந்த குடும்பத்தை பத்தி எப்பவும் நினைக்காம இருக்க முடியாதா? உங்களால!..  இல்ல..  இன்னும் அந்த ஆள நினைச்சுட்டு இருக்கீங்களா? என கரகரத்த குரலில் கேட்டான்.

பவானி , வாய மூடு நீ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் நீ அந்த வீட்டு பையன் தான் புரியுதா? என்று கூறினார்.

அந்த நேரம் ராஜசேகர் வந்து கொண்டிருக்க சரி கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? என்னோட கெஸ்ட் வந்தாச்சு என்று எழுந்து நின்றான். 

பவானி கொஞ்சம் புரியாமல் யாரு அது என்று திரும்பி பார்க்க..

அங்கு ராஜசேகர் வந்து கொண்டிருந்தார் அவரின் புன்னகையான முகத்தை பார்த்ததும். 

சித்தார்த்  மனதும் இப்போ இந்த இடத்தில் இருந்து நம்ம கிளம்புனுமே! என்று நினைத்தவன்.  ஸ்டார்ஜியாவுக்கு அழைத்தான். அவள் ஒரு வேலையாக இங்கே தான் வந்திருக்கிறாள்.

பாஸ் என்று அவள் பதிலளிக்க

சித், நீ உடனே இந்த ஹோட்டலுக்கு  இதன்யாவை கூட்டிட்டு வா என்று கூறினான்.

ஓகே பாஸ் என்றாள்..

சித் அவளிடம் பேசி விட்டு  திரும்பி பார்க்க அங்கே ராஜசேகர் வந்து கொண்டிருந்தார். 

எப்படி இருக்கீங்க ராஜ சேகர்! என்று பவானி  மரியாதை நிமித்தமாக  கேட்டார்.

நான் நல்லா இருக்கேன் பவா  நீங்க எப்படி என்று சொல்ல வந்தவர் உடனே பவானி நீங்க எப்டி இருக்கீங்க? என்று பேச்சை  பவா இருக்கீங்க என்று சொன்னவன் உடனே பவானி நீங்க எப்படி இருக்கீங்க? என்று பேச்சை மாற்றினார். 

சித்தார்த் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான். 

பவானியின் பார்வை தன் மகன் மீது . சித்து நீ எதுக்கு அங்கே போய் உட்கார்ந்த? இங்கே அம்மா பக்கத்தில் வாடா! .

இட்ஸ் ஓகே மாம் எனக்கு இங்கே கம்ப்பார்ட் தான்! என்று கூறினான். 

பவானிக்கு இங்கே என்ன பேசுவது  என்று தெரிய வில்லை. 

ராஜ சேகர் அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே பவானியை பார்த்தார். 

பவானி, வேற என்ன சித்து யார் வர போறா! எனக்கு flight க்கு டைம் ஆகுது.. 

சித்,  அதை பத்தி நீங்க கவலை பட வேணாம் மாம்! மிஸ்டர் ராஜ சேகர் கூட பெங்களூர் தான் போக போறாரு! ஆமா தானே! என்று அவரை பார்த்தான். 

அவர்..? 

சித்…?

இந்த ஹனி மூன் பிளான் எங்கே போய் முடியுமோ? 

சதா வேற ஒரு பக்கம் என்னென்னமோ பண்றான்? 

பார்ப்போம்! 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 245

பவானி, வேற என்ன சித்து! எனக்கு ஏற்கனவே மிஸ்டர் ராஜசேகர தெரியுமே பிசினஸ்ல  கான்ஃபரன்ஸ்ல நிறைய தடவை மீட் பண்ணி இருக்கோம். இப்போ என்ன விஷயம் அதை விட எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சு…

சித்,  அதை பத்தி நீங்க கவலை பட வேணாம் மாம்! மிஸ்டர் ராஜ சேகர் கூட பெங்களூர் தான் போக போறாரு! ஆமா தானே! என்று அவரை பார்த்தான். 

 ராஜசேகர், ஆமா நானும் இப்போ எங்க வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. என்று கூறினார் .

பவானி அப்படியா என்று சிரித்துக் கொண்டு சித்துவை முறைத்தார்.

அவன் திரும்பி கொண்டான். 

 மீண்டும் பவானி பேச வர..

சித்தார்த் இருங்க மாம் நான் எதுவும் ஆர்டர் பண்றேன்! என மெனுவை பார்த்து கொண்டு இருந்தான்.

ராஜசேகர் அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே பவானியை ஓர கண்களால் பார்த்தார். அப்படியே இருக்கிறாள்! அந்த பூ முகம் மாறவே இல்லை. எத்தனை கம்பீரம். ஆனால் அந்த முகத்தில் அத்தனை கவலை.. கல்யாணமாகி ஆறு வருடங்களிலேயே குழந்தைகள் சிறு வயதில் இருக்கும்போது விவாகரத்து! அதுவும் மிகப்பெரிய கதாநாயகனை திருமணம் செய்து கொண்டு… அவன் வேண்டாம் என்று இவளை உதரி தள்ளிவிட்டு ஒரு சினிமா துறையில் ஒரு பெண்ணை மணந்து கொண்டு வந்து நின்றிருக்கிறான். எப்படி இருக்கும்? பெண்ணவளால் எப்படி இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்? ஆனால் அதையும் மீறி இத்தனை வருடங்கள் ஒழுக்கமாக அவளுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்திருக்கிறாள். ராஜசேகருக்கு பவானியை பார்க்க  மிகவும் பெருமையாக இருந்தது. 

பவானி தண்ணீரை ஒரு மிடுக்கு குடித்து கொண்டே கைக்குட்டையை மடித்து கொண்டே சித்தார்த்தை பார்த்தார். இன்னும் எவ்வளவு நேரம் சித்து! யாரு வர போறா? எனக்கு டைம் ஆகுது? 

ராஜ சேகர் இப்பொழுது அவளை திரும்பி பார்த்தார். 

உங்களுக்கு தெரியுமா சார்? இப்போ யார் வர போறாங்க? எங்க வீட்டிலேயே இந்த டிஷ் எல்லாம் செய்து சாப்பிடலாம்! தேவையில்லாம ஹோட்டல் ரெஸ்டாரன்ட் எல்லாம் எதுக்கு வரணும்? என்று பவானி ராஜ சேகரை பார்த்து கூறினார். 

அப்போ நெஸ்ட் மீட் நம்ம வீட்டில் வச்சுப்போம். என சித் தன் அன்னையை பார்த்தான். 

பவானி முறைத்து கொண்டே எதுக்கு இவன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்? ஒன்னும் சரி இல்லையே! என்று அவனையே பார்த்தார். 

சித், பவா ஓவரா பண்ற? இப்போதான் செம் எக்ஸாம் முடிஞ்சு இதன்யா வீட்ல இருக்கா! நாளைக்கு அவங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னா,  திரும்ப இங்க வரதுக்கு மினிமம் ஒரு டூ வீக்ஸ் ஆகும்! அதனால உன்னை  மீட் பண்ண வைக்கிறதுக்கு தான் இன்னிக்கி அவள வர சொன்னேன்.  ஆனா நீ ரொம்ப ஓவரா பண்ற என்று கூறினான்.

பவானி அப்பொழுதும் அவனை முறைத்து பார்த்தார். இப்போ எதுக்கு பவா முறைக்கிற? உனக்கு பிடிக்கலைன்னா கெளம்பு, நானும் அவளும் டின்னர் போறோம்.  இன்னொரு ரெஸ்டாரன்ட் இங்க இருக்கு. அங்கே போறோம் என்று கூறினான்.

பவானி கீழே குனிந்து கொண்டு போன நோண்டிக் கொண்டிருந்தார். அவரது மனதில் டின்னருக்கு இதன்யாவ கூப்பிட்டால் ஓகே,  அவ என்னோட மருமக,  ஆனால் எதுக்கு இந்த இடத்தில் தேவையே இல்லாம இந்த ராஜசேகர் வந்திருக்காரு? என்று நினைத்தார். அதை வெளிப்படையாகவும் சித்தார்த்திடம் கேட்க முடியவில்லை. 

ராஜசேகர் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க சித்தார்த் ஃபோனை எடுத்து அவருக்கு மெசேஜ் செய்தான்.  என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 

உன் முன்னாடி தானே சேர்த்து உட்கார்ந்து இருக்கேன்! என்று ராஜ சேகர் தட்டி விட..

அது எனக்கு தெரியாதா? எதுக்கு சும்மா இருக்கீங்க?

என்ன பண்ண சொல்ற? என்று ராஜசேகர் கேட்டார்.

சித்தார்த்,  என் மம்மி கிட்ட பேசுங்க?

என்ன பேசுறது? அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லன்னு நினைக்கிறேன். இது செட் ஆகுமா? என்று அனுப்பிவிட்டார்.

சித்தார்த், இப்படி டி மோட்டிவேட்டா பேசக்கூடாது. இது உங்களுக்கு கிடைச்சாl செகண்ட் சான்ஸ். இதுல மட்டும் சக்சஸ் ஆகிட்டீங்க! பவா  உங்க கூட தான் இருப்பாங்க! அதாவது இந்த வாழ்க்கைகிறது  சின்ன வயசுல இருந்து சேர்ந்த லவ் பண்ணி ஆட்டம் அமர்க்களம் பண்ணி வாழ்றதில்ல… அதுக்கு பதிலா ஆட்டம் கண்டு  கடைசியா நம்ம கையை கோர்த்துக்கிட்டு வரும் துணை  தான்!  வாழ்க்கையோட மொத்த அர்த்தமுமே! அது உங்களுக்கு மறுபடியும் கிடைக்க இன்னொரு சான்ஸ்! எங்க அம்மாவுக்கு ஒரு நல்ல துணை வெனும்னுனு  நான் நினைக்கிறேன். அந்த துணை நீங்களா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்.  என்று சித்தார்த் தட்டி விட்டான். 

ராஜசேகர், நீ சொல்றது எனக்கு புரியுது சித்து! இருந்தாலும் ஏற்கனவே ஒரு தடவை நான் இதுல ஹார்ட் ப்ரோக் ஆயிட்டேன். இப்போ மறுபடியும் என்ன நடக்கும்னு, எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. பவானியை நான் எட்ட நின்னு பார்த்தா அட்லீஸ்ட் அவ என் கூட பேசுவா! நான் பக்கத்துல  நெருங்கி போயி என்கிட்ட பேசாமலே போய்ட்டால் ஒவ்வொரு தடவ என்னை பார்க்கும்போது ச்சீனு போயிட்டானா அது இன்னும் எனக்கு கஷ்டமா இருக்கும்.. சித்து! என்று அனுப்பி விட்டார். 

சித்தார்த் அது அப்படி இல்ல நானும் என்னோட வாழ்க்கையில அதாவது காதல் வாழ்க்கையில தோத்து போனவன் தான் ஆனா இப்போ என்ன பாத்தீங்களா எனக்கானவ என் பக்கத்துல இருக்கா அவ்வளவுதான் உங்களுக்கும் அதே போல தான் கண்டிப்பா நடக்கும் நீங்க கவலைப்படாதீங்க உங்க கூட நான் இருக்கேன் என்று தைரியம் கூறி செய்தியை தட்டி விட்டான்.

ராஜசேகர் அவனை நிமிர்ந்து பார்த்து நம்பிக்கையுடன் மீண்டும் நான் டிராவல்ல அவ கிட்ட பேசுறேன் என்று தட்டிவிட்டார்.

சித்தார்த் சரி என்று புன்னகைத்துக் கொண்டு தலையாட்டினான். 

இன்னும் இதன்யா வரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க சித்தார்த் பவானியை பார்த்து முறை தான் அதன் பின்பு அவனை அமைதியாகிவிட்டார் ராஜசேகர் அதுவரைக்கும் நீங்க ஏன் பசியோட இருக்கீங்க இதுவும் ஆர்டர் பண்ணுங்க என்று மெனுவை மீட்டார்.

சித்தார்த் ஆமா இந்த யோசனை எனக்கே வரல என்று அவருக்கு ஜால்ரா அடித்தான்.

பவானி கடுப்புடன் சிரித்துக்கொண்டே இல்ல மிஸ்டர் ராஜசேகர் நான் என் மருமகளுக்காக வெயிட் பண்றேன்.

 சித்தார்த் அம்மா நீ ஆர்டர் பண்ணி சாப்பிடு என்று கூறினான்.

அந்த நேரம் இதன்யா அத்த என்று அழைத்துக் கொண்டே வந்தாள்.

சித்தார்த் எதுவும் பேசாமல் இருக்க.. இதன்யா பவானியின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

ராஜசேகரை சித்தார்த் அறிமுகம் செய்த வைக்காமல் மெனு கார்டை திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்க..

ராஜசேகர் இதன்யாவையும் பவானியையும் மாறி மாறி பார்த்தார்.

 பவானி வேறு வழியில்லாமல் இது மிஸ்டர் ராஜசேகர்!

உடனே இதன்யா சிரித்துக்கொண்டே தெரியும் அத்தை இவங்கள நான் அந்த பார்ட்டில பாத்திருக்கேன்! நல்லா இருக்கீங்களா அங்கிள்! 

நான் நான் நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க!. என்று அவரும் பேசினார். 

ராஜசேகருக்கும் பவானிக்கும் இடையில் இதன்யா அமர்ந்திருக்க..

சித்தார்த், மிஸ்டர் ராஜசேகர்!.

சொல்லு சித்து!. 

நீங்க அந்த பக்கம் போயிட்டு, என் மனைவியை இந்த சீட்டுக்கு அனுப்ப முடியுமா! 

 உடனே பவானி ஏன்டா என்னோட மருமக என் பக்கத்துல உக்கார கூடாதா! 

சரிமா அப்போ நீ இந்த சைடு வந்துட்டு அவளை இந்த சைடு விடு! அவள் என் பக்கத்துல வரட்டும்!..

இதன்யாவின் மனதில் “இவனுக்கு என்ன ஆச்சு? வெளியில வந்தா மட்டும், அதுவும் அவங்க அம்மாவ பாத்தா மட்டும் என் மேல அக்கறை இருக்கிற மாதிரி ஓவரா நடிப்பான். ஆனா வீட்ல என் பக்கத்துல  வரமாட்டான், நான் என்னமோ 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற மாதிரி என்னை பார்த்ததும் நலம் விசாரிப்பான். சரியான பிராடு பைய படத்துல நடிக்கிற மாதிரியே டெய்லியும் என்கிட்ட நடிச்சிட்டு இருக்கான்!”

உடனே பவானி கொஞ்சம் அமைதியா இரு  அவரை எதுக்குடா சிரம  படுத்துற என்று கூறினார்.

அப்போ நீங்க சீட்டுக்கு வாங்க நான் அவள் பக்கத்தில் உட்காரனும்.  என்று சொல்லிக் கொண்டே சித்தார்த் எழுந்து நின்றான். 

பவானி எழாமல் அப்படியே அமர்ந்து இருக்க.. 

சித் ராஜசேகரனின் அருகில் வந்தான். 

ராஜசேகர் சிரித்து கொண்டே நகர முயற்சி செய்ய…

இதன்யா,  எதுக்கு நீங்க இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க! கொஞ்சம் அமைதியா உட்காருங்க.. 

சித்தார்த் எதுவும் பேசாமல் ராஜசேகரை  மாற்றிவிட்டு  இதன்யாவிற்கு அருகில் சவந்து அமர்ந்து கொண்டான்.

ராஜசேகர் சிரித்துக்கொண்டே அமைதியாக இருக்க..

பவானி தலையில் கை வைத்து கொண்டே எதுக்கு  இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கானோ? என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

அவர்கள் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க.. 

உடனே பவானி இதன்யாவிடம் ஊருக்கு போறியா? 

எந்த ஊருக்கு அத்தை!.   நான் இங்கே தான் இருக்க போறேன். என்று கூறினாள்.

பவானி சித்தார்த்தை முறைத்துக் கொண்டு என்ன இங்கே தான் இருக்கியா? உங்க வீட்டுக்கு போறன்னு இவன்  சொன்னானே! என்று கூற..

சித்தார்த் அது  அவ போறான்னு நான் சொல்லவே இல்லையே! என்று பேச்சை மாற்றினான்.

உடனே பவானி சித்தார்த்தை இப்போ ஓவரா நீ ஏதோ ரொம்ப வித்தியாசமா பண்ணிட்டு இருக்க! இதுக்கு இருக்குடா! உனக்கு என்று வாய்மொழியாக கூறினார்.

இதை கேட்டு ராஜசேகர் சிரிக்க..

உடனே சித்தார்த் இதன்யாவை முறைத்தான்.

அவள் சிரித்து கொண்டே இல்லங்க அங்கில் நான் சும்மா சொன்னேன்.  நான் ஊருக்கு போறேன் அத்தை. அம்மாவை பார்த்து ஒரு மாசம் ஆகுது. அதனால நான் போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்.

 அப்படியா சரி போயிட்டு வா மா  என்று பவானி கூறினார். 

அதன்பின் உணவுகளை ஆர்டர் செய்தார்கள். உணவுகளை சாப்பிட்டு முடித்து விட்டு சித்தார்த் உடனே எழுந்தான். 

பவானி டிஸ்யூ கொண்டு துடைத்து கொண்டே சித்தார்த் என்ன எழுந்துட்ட? 

சித்  அத்தைக்கு நான் கொஞ்சம் திங்ஸ் வாங்கி கொடுக்கணும்  அதான் பை பை பவா.. என அவளின் கையை பிடித்து கொண்டு வேகமாக சென்றான்.  

பவானி சட்டென எழுந்து நின்றார். 

 அங்கே ராஜசேகர்  மட்டும் அமர்ந்து கொண்டிருக்கார். 

பவா, என்னடா சித்து அவரை விட்டுட்டு போற!.. என்று சொல்ல.. 

உடனே சித்  திரும்பி கூட பார்க்காமல் ம்மா இப்போ அவரும் நீங்களும் தானே ஒட்டுக்கா பெங்களூர் போறீங்க! அதனாலதான் நீங்க அவரை ட்ராப் பண்ணிடுங்க! என்று சொல்லிக் கொண்டே கிளம்பினான்.

இதன்யா திரும்பி அங்கிள் என்று அழைக்க வர..

சித்தார்த் அவளின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு செல்ல.. 

 பவானி வேகமாக செல்லும் சித்தார்த்தை  முறைத்து பார்த்தார். 

இதன்யா,  என்னங்க பண்றீங்க?  அத்தை கிட்ட நான் சரியா கூட பேசல!..

 ஓவரா நடிக்காதடி! பேசின வரைக்கும் போதும், என்ன அப்படியே பெருசா பேசிட போற.. என்று அவளை அழைத்து சென்றான். 

 பவானிக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.

ராஜசேகர், எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல! நீங்க என்ன நினைச்சு நீங்க கவலைப்பட வேண்டாம்! நீங்க கிளம்புங்க பவானி,  நான் பாத்துக்குறேன் என்று கூறினார்.

பவானி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஒண்ணாவே போலாம். நான் தள்ளவா!.  என்று அவருடைய வீல் சேரை பிடித்து கொண்டார்.  

 ராஜசேகருக்கு சந்தோஷமாக இருந்தது.  இல்ல பரவால்ல பவானி!  நான் பாத்துக்குறேன், நீங்க கிளம்புங்க..  முக்கியமான வேலைன்னு சொன்னிங்களே!

பவானி வேண்டுமென்று ஆமா என்னோட மாமனார் கூப்பிட்டு இருக்காரு. அதனால அங்க போகணும்.

அப்படியா சரி ஓகே என்று அதற்கு மேல் எதுவும் பேசவில்லை..

சித் வேகமாக இதன்யாவின் கையை பிடித்துக்கொண்டு வேகமாக ஓரிடத்தில் ஓடி ஒளிந்தான். 

இதன்யா , மூச்சுவாங்க என்னங்க பண்றீங்க? உங்களுக்கு என்ன லூசா புடிச்சிருச்சு? என்ன டா? என்று கலந்து பேச ஆரம்பித்தாள்.

என்னடி மரியாதை ரொம்ப தேயுது!  எங்க அம்மா இங்கதான் இருக்காங்க! உன்ன சொல்லிடுவேன்!  என சித்தார்த் அங்கு  தீவிரமாக  எட்டி பார்த்துக் கொண்டிருக்க..

இதன்யாவும் அவன் எங்கு பார்க்கிறான்? என்று பார்க்க.. அங்கே ராஜசேகரை பவானி  வீல்சேரில் தள்ளிக்கொண்டு சென்றார். 

இதன்யா, ஆமா என்ன அவ்வளவு தீவிரமா பாத்துட்டு இருக்கீங்க?  அங்க உங்களுக்கு என்ன தெரியுது? என்று கேட்க..

ஒன்றும் இல்லை என்று சொன்னவன் திரும்பிக்கொண்டான்.

இதன்யா,  நீ ரொம்ப ரொம்ப ஓவரா பண்ற டா 

போடி என்று அவன் நகர.. 

இதன்யா அதன்பின்  அவனிடம் எதுவும் பேசவில்லை.

அவள் பேசாமல்  தள்ளி நடப்பதை உடனே சித்தார்த் அருகில் சென்று என்ன டீச்சர் முகத்தை இவ்வளவு கேவலமா வச்சிருக்க? 

ஆமா என்னை பாத்தா உங்களுக்கு கேவலமா தானே தெரியும்!

 சித்தார்த் அவளிடம் சரி உனக்கு நான் இன்னிக்கு சாரி வாங்கி தரட்டுமா?  நம்ப ரெண்டு பேரும் ஒட்டுக்கா தூங்கலாமா? 

அவள் கொஞ்சம் சிரித்து கொண்டே  நான் உங்ககிட்ட சாரி எல்லாம் கேட்ட மாதிரி தெரியலையே? 

 சித், அப்போ சாரி வேணாமா அப்ப டெஃபனைட்ல இன்னிக்கு ஒட்டுக்கா தூங்கலாம்!..

அப்படி இல்ல சாரின்னா மன்னிப்பு வேண்டுகிறேன் “மன்னித்துவிடு இதன்யா” அப்படின்னு தமிழ்ல சொன்னா இன்னும் கூட நல்லா இருக்கும். நம்ம ரெண்டு பேரும் பிரியாம தூங்கலாம். 

சித், மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு தான், அதுக்கு பதிலா உனக்கு சாரி வாங்கி தரேன்.  நான் கமிட் பண்ணலாமா? 

தேவையில்ல போடா..

ஓவரா பேசுற டி 

இதன்யா, நான் இன்னைக்கு ஊருக்கு போறேன்..

நான் உன்னை கொண்டு வந்து விடட்டுமா என்று சித்தார்த் கேட்டான்.

நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் உங்க வேலைய நீங்க பாருங்களேன். அதுதான் பயங்கரமா நடிச்சிட்டு இருக்கீங்களே! அதை கண்டினியூ பண்ணுங்க! என் மேல அக்கறை இருக்கிற மாதிரி சீன் போட வேண்டாம்! என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தாள். 

சித்தார்த் தலையை கோதி கொண்டே இப்போ உனக்கு என்ன வேணும்? என்று கேட்டான்.

இதன்யா முகத்தை தூக்கிக் கொண்டு நடக்க ..

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு அந்த ராஜசேகர்!..  அவரை தான் நான் எங்க அம்மாவுக்கு பார்ட்னர் ஆகணும்னு நினைச்சேன். அதனாலதான் இந்த டின்னர் ஏற்பாடு பண்ணினேன். இது உனக்கு கேவலமா தோணும்ல!. என்று கூறினான்.

இதன்யா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள். இதுல என்ன கேவலம் இருக்கு?

 சித்தார்த் உதட்டை கடித்துக் கொண்டே ஒரு அம்மாவுக்கு அவங்களோட பையன் கல்யாணம் பண்ணி  வைக்கிறதுக்கு, ஒருத்தரை தேடி கொடுக்கிறது, இதை எல்லாம்  உலகம் தப்பாதான பேசும். என்று கூறினான்.

இதன்யா சிரித்துக் கொண்டே  நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி இந்த மாதிரியான விஷயத்துல நீங்க சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க! நான் இந்த இடத்துல இருந்திருந்தால் இதைத்தான் பண்ணியிருப்பேன்!  டைரக்டா அவங்கள பேச வச்சிருப்பேன் தெரியுமா?  ஆனால் நீங்க ரொம்ப தயங்குனிங்கன்னு உங்கள பார்க்கும் போதே எனக்கு தெரியுது.  என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.‌

சித்தார்த், என்ன சொல்ற?  என்ற குழந்தையாக கேட்டான்.

இதன்யா, ஆமா நீங்க பண்றதுல எந்த தப்பும் இல்லை. இந்த சமூகம் உலகத்துல ஆயிரம் பேர் ஆயிரம் தப்பு பண்றாங்க.. நீங்க  நல்லது தான் பண்றீங்க..  கடைசி காலத்தில் இந்த கையை கோர்த்து பிடிக்கவும்,  நம்மள தாங்கி பிடிக்கிறதுக்கு ஒரு துணை வேணும்.  அதுவும்  உங்க அம்மாவுக்கு கட்டாயம் வேணும்.  என்னோட வார்த்தையை பெருசா எடுத்துக்கிட்டு இவ்வளவு தூரம் நீங்க பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்! நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..  என்னோட வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பா? 

 உடனே சித்  சிரித்துக் கொண்டே உனக்கெல்லாம் யார் சொன்னது?  நீ சொல்லித்தான் நான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேனா?  இப்படி எல்லாம் நீ நினைச்சுட்டு இருக்கியா? 

இதன்யா,  டேய் பிராடு நான் தானே உன் கிட்ட இத சொன்னேன். என்று சிந்தித்துக்கொண்டே கூறினாள்.

சித்தார்த் கோபமாக தயவுசெய்து எனக்கு மரியாதை கொடுத்து பேசு டி. இந்த மாதிரி பேசினா எனக்கு வேற யார்கிட்டயோ நீ பேசுற மாதிரி தோணுது! 

இதன்யா,  நீங்களும் எப்பவும் போல பேசுங்க. நானும் உங்ககிட்ட எப்பவும் போல பேசுவேன். அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட சாரி கேக்கணும்!என்று இருவரும் சண்டையிட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

சித்தார்த் படியேறி கொண்டிருக்கும்போது. இதன்யா அவனிடம்  நான் கூட நீங்க டின்னருக்கு கூப்பிட்டதும்..  நான் வேற ஒன்னு நினைச்சேன்!.

 சித்தார்த் என்ன என்று கேட்க..

இதன்யா எதிர்பார்ப்புடன் அதுதான் அந்த கல்யாணம் மேரேஜ்  ரெஸ்டாரன்ட்னு சொன்னிங்களே! கல்யாணம் ஆன கப்பிள்ஸ் மட்டும் வருவாங்கன்னு, அங்கே கூட்டிட்டு போவீங்கன்னு நினைச்சேன், ஆனா இத நான் எக்ஸ்பெக்ட் பண்ணல!..

 சித்தார்த் ,  அப்போ அதுக்கு ரெடியா? போலாமா ? என்று அவளை பார்த்தான்.

எதுக்கு ரெடி என்று இதன்யா அவனை பார்க்க..

சித்தார்த் சீலிங்கை பார்த்து கொண்டே  கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற எல்லாமே நடக்கும். பிபோர் மேரேஜ், ஆஃப்டர் மேரேஜ், அப்புறம் கொஞ்சம் ஹனி! கொஞ்சம் மூணு! உனக்கு ஓகேவா என்று கேட்டான். 

இதன்யா எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பார்க்காமல் சட்டென   சித்தார்த்தின் அருகில் வந்தவள் அவனுடைய சட்டையை பிடித்துக் கொண்டு நிஜமாவா? உங்களுக்கு ஓகேவா என்று மின்னும் கண்களில் பார்த்தாள். 

சித்தார்த் இதை எதிர்பார்க்காமல் என்ன இப்படி கேட்கிற? என்று கேட்டான்.

இதன்யா கொஞ்சம் மூச்சு வாங்க முகம் எல்லாம் சிலிர்க்க புன்னகை பூக்க அதுதானே கொஞ்சம் ஹனி கொஞ்சம் மூணு அப்படின்னு சொன்னீங்க..

 சித்தார்த் ஓவரா இமாஜினேட் பண்ணிக்காத.. அது அப்படி இல்ல..

பின்ன எப்படி? 

நீ அன்னிக்கு பண்ணியே அதை சொன்னேன்!..

என்னைக்கி என்று இதன்யா கேட்க..

அதுதான் அன்றைக்கு என் பக்கத்துல வந்தியே! அன்னைக்கு நடந்தது தான் கொஞ்சம் ஹனி கொஞ்சம் மூணு நீ எனக்கு… அதை… எனக்கு என விட்டு விட்டு அவளின் கைகளை பிடித்து தடவினான். 

இதன்யா புரியாமல் நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலயே?

சித், நடிக்காத அன்னைக்கு நீயா வந்து எனக்கு எதிர் நிறுத்தி விட்டான்.

இதன்யா அவனை முறைத்து பார்த்தாள்.

சித்தார்த், இப்போ எதுக்கு முறைக்கிற?

அப்போ இதுதான் சொன்னீங்களா? 

சித் கூர் பார்வையுடன் நீ என்ன நெனச்ச என்று கேட்டான் 

நானா? ஒன்னும் நினைக்கல போடா! நீ ஒரு மாங்கா மண்ட! நீ ஒரு மரமண்டை! நீ எல்லாம் எதுக்குடா என்னை கல்யாணம் பண்ண ? போடா! என்று சொல்லிக் கொண்டு வேகமாக அவர்களுடைய அறைக்கு ஓடினாள். 

சித்தார்த் அதே இட அதே இடத்தில் நின்றவன். கொஞ்ச நேரம் சிரிக்க ஆரம்பித்தான். இந்த அளவுக்கு ஈகரா இருக்காளே! என்று நினைத்தவன் முகம் உடனே கொஞ்சம் கடுமையாக மாறியது. அவன் விரக்தி புன்னகையுடன் நின்றான்.

அன்னைக்கு இதே போல தானே எல்லாமே ஸ்டார்ட் ஆச்சு, ஆனா ஆனா எல்லாமே ஒரு பிரச்சனைல முடிஞ்சிடுச்சு. அதனால உன் கிட்ட எதையுமே ட்ரை பண்ண மாட்டேன். எனக்கு பயமா இருக்கு மறுபடியும்  எதாவது நடுங்கி என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளி விட்டால் அது நான் சாவதற்கு சமம் என  அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அதே இடத்தில் நின்றான்.  

இங்கே பெங்களூர் ஏர் போர்டில் மாஸ்க் அணிந்து கொண்டு அவர் காத்திருந்தார். 

பவானி பெங்களூரில் இறங்கியதும் ராஜ சேகருடன் வெளியே வந்தார். அவரின் முன் ரவிசந்திரன் மாஸ்க் அணிந்து கொண்டே வாணி என்று அழைக்க.. 

பவானி அந்த இடத்தை சுற்றி பார்த்தார். உடனே ராஜ சேகர், பவானி உங்க ஹஸ்பண்ட் வந்திருக்காரு நீங்க போங்க! என்னோட வீட்டில் இருந்து இப்போ என் தம்பி வந்திடுவார்.

ரவி சந்திரன் வேண்டும் என்றே வாணி போலாமா! அப்பா உன்னை பிக் அப் பண்ணிட்டு வர சொன்னாரு! 

பவானி ராஜ சேகரை விட்டு விலகாமல் என் பேர் பவானி கிருஷ்ணா! அண்ட் எனக்கு அப்பாயின்ட்மென்ட் நாளைக்கு காலையில தான் மிஸ்டர் ரவி சந்திரன். அதை விட சின்ன வயசுல இருந்து இந்த பெங்களூர் எனக்கு நல்லாவே தெரியும். அதை விட மிஸ்டர் சந்திர மௌலி வீட்டை ஒரு ஆறு வருசமா தெரியும். சோ என்னை நினைச்சு கவலை பட வேணாம். எனக்கு வர தெரியும். அதே போல எனக்காக என் பையன் இருக்கான். யாரும் தேவையில்லை.. சோ பிளீஸ் உங்க வேலையை நீங்க பாருங்க என சொல்லி கொண்டே ராஜ சேகரின் வீல் சேரை தள்ளி கொண்டே சென்றார். 

ரவி அத்தோடு விட்டு விடுவாரா? நேராக பவானியின் பின்னால் சென்றார். 

பவா! வாணி!. பவானி என்று அழைத்து கொண்டே சென்றார். 

ராஜ சேகர், பவானி நீங்க போங்க! நான்!  

நான் ஒரு டாக்டரும் கூட அதை விட நான் ஒரு மனுஷி! உங்களை எனக்கு பிஸ்னசில் தெரியும். நான் ஏன் உங்களை விட்டு போகனும். உங்களை வீட்டில் விட்டு என்னோட வீட்டுக்கு போறேன். என்று சொல்லி கொண்டே அவர் ரவியின் பேச்சை காதில் வாங்காமல் வெளியே வந்தார். 

பவானி இப்போ எதுக்கு இப்படி பண்ற? என ரவி வேகமாக அருகில் சென்று விட்டார். 

கிருஷ்ணாவின் கார் அங்கே காத்து கொண்டு இருக்க..  அங்கே வந்த ஆட்கள் பவானி, ரவி, ராஜ சேகர் என மூவரையும் பார்த்தார்கள். 

பவானி…? 

இதன்யா…? 

சித்…? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 246

இதன்யா அறைக்கு வந்ததும் பொத்தென படுத்து கொண்டாள். இன்னும் எல்லாத்தையும் நியாபகம் வச்சு என்னை எப்டி பழி வாங்குறான்? இப்போ மணி என்ன? இன்னிக்கி டைம் ஆயிடுச்சு நான் நாளைக்கே ஊருக்கு கிளம்புறேன். என்னை விட்டு இவன் தனியா கஷ்ட பட்டால் தான் என்னோட அருமை தெரியும் என்று தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள். 

கொஞ்ச நேரத்திலேயே சித் அறைக்கு வந்தான். அவளிடம் எந்த பேச்சும் கொடுக்காமல் சோபாவில் படுத்து கொண்டான். நான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன். என சொல்லி விட்டு லைட் ஆஃப் செய்தாள். 

சித் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் நான் கொண்டு வந்து விடாட்டுமா? உங்க அம்மாவுக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்க நினைச்சேன். நாளைக்கு ஷாப்பிங் முடிச்சு அதையும் வாங்கி கொடுக்கிறேன். உன்னை அப்படியே கொண்டு விடுகிறேன். 

ஒன்னும் தேவையில்லை. எங்க அம்மாவுக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்க நீ யாரு டா? உன்னோட நடிக்கிற வேலையை என் கிட்ட இங்கே வச்சுக்காத. 

சித் லைட் ஆன் செய்து எதுக்கு இத்தனை கோபம் நீ என்ன நினைக்கிறயோ அதை நேரடியாக சொல்லு! உனக்கு இது நியாபகன் இருக்காதுன்னு நினைக்கிறேன். நான் வெனா மறுபடியும் நியாபக படுத்துறேன் அந்த அக்ரிமெண்ட் படி நான் உன்னை தொட கூடாதுன்னு சொல்லி இருக்க அதுக்கு நான் இப்போது கூட கட்டுபடுறேன். ரூல்ஸ்சை என்னால் மீற முடியாது. 

இதன்யா அவனை முறைத்து பார்த்தவள். வேகமாக எழுந்து வந்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

சித் திடுக்கிட்டு என்ன டி பண்ற? எதுக்கு அடிக்கிற? 

என்னை ரேப் பண்ண தானே! அதுக்கு என்ன பதில் சொல்ல போற? 

சித், அதுக்கு தான் இத்தனை சித்ரவதையும் அனுபவிக்கிறேன்.

டேய் நடிக்காத! உன்னை நான் நாய் குட்டி மாதிரி கொஞ்சனும். ஆனால் நீ நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு கடைசில இப்படி என்று அடிக்க ஆரம்பித்தாள். 

சித், ஹே இர் ரி இரு இரு! இப்போ என்ன என்ன பண்ணனும்? நான் வெனா உனக்கு.. 

இதன்யா, இதுக்கு அர்த்தம் என்ன? போதும் டா இனி உன் கூட என்னால் இருக்க முடியாது. இனி நான் ஸ்கூல் ஹாஸ்டலில் ஸ்டே பண்ணிக்கிறேன்.

சித் அவளின் கையை பிடித்து நான் தப்பா எதுவுமே சொல்லலையே! நான் உன்னோட பெர்மிஷன் கேட்டு தானே உனக்கு என… விரலை பிடிக்க வர . 

இதன்யா ஒரு வித கலக்கத்துடன் பெரு மூச்சை விட்டவள். தப்பு தான் உங்க புரிந்து கொள்ளாமல் உங்க பேச்சை மதிக்காமல் நானா எதோ நினைத்து கொண்டது என்னோட பெரிய தப்பு! அதுக்கு அப்புறம் எதோ தெரியாமல் கோப தாபத்தில் நடந்திடுச்சு? அது நடந்து இப்போ மூணு மாசத்துக்கு மேலே ஆக போகுது ஆனால் இன்னும் நீங்க அதை மனசுல வச்சிட்டு என்னை வார்த்தையால கொல்ட்ரீங்க.. நீங்க ஒரு சார்ட் டெம்பர் நல்லா தெரியுது. போதும்!  என எழுந்து கொண்டாள். 

சித் எதுவும் பேசாமல் அவளை தீவிரமாக பார்க்க.. 

நீங்க என்னை கல்யாணம் பண்ணல! காட் இட்! என்னோட கழுத்தில் நான் போட்டு இருக்கும் தாலி! என்னோட அத்தை போட்டு விட்டது. அதனால் என்னை அக்ரிமெண்ட் போட்டு நிறுத்தும் உரிமை தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்ல.. ஆனால் எனக்கு தன்மானம் ஜாஸ்தி நான் இனி ஸ்கூல் ஹாஸ்டலில் ஸ்டே பண்ணிப்பேன். என சொல்லி விட்டு அவளுடைய இடத்துக்கு சென்று படுத்து கொண்டாள். 

சித் அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். என்ன தான் செய்தாலும். அவளை கஷ்ட படுத்தியது மனதை விட்டு செல்ல மறுத்தது. 

இங்கே ரவி வேகமாக பவானி இப்போ எதுக்கு இப்படி பண்ற? என நடந்து கொண்டே வர. 

அங்கே கிருஷ்ணாவின் கார் அங்கே காத்து கொண்டு இருக்க..  அங்கே வந்த ஆட்கள் பவானி, ரவி, ராஜ சேகர் என மூவரையும் பார்த்தார்கள்.

ராஜ சேகர், பவானி நீங்க கிளம்புங்க நான் மேனேஜ் பண்ணிப்பேன். 

ரவி பவானியின் கையை பிடித்து கிருஷ்ணனுடய பணியாளை பார்த்து நீங்க கிளம்புங்க! வாணி என் கூட வருவா!.

பவானி வெடுக்கென கையை உதறி விட்டு தயவு செய்து அவமானபடாதீங்க போயிடுங்க! என்னோட கைய விடுங்க! என்று உதரினார். 

ராஜ சேகர் எதையும் கண்டு கொள்ளாமல் போனில் அவருடைய தம்பி குண சேகருக்கு கால் செய்ய..

பவானி பணியாள பார்த்து இவரை காரில் ஏற ஹெல்ப் பண்ணுங்க! 

இல்ல பவா! இட்ஸ் ஓகே நான் பார்த்துப்பேன். 

ரவி கொஞ்சம் கோபமாக இப்போ எதுக்கு  மிஸ்டர் ராஜ சேகரை வீடு வரைக்கும்  கொண்டு போய் விடுகிற? இந்த பெங்களூரிலேயே ஒரு கலக்கு கலக்கிய  இவருக்கு இங்கே இருந்து அவரோட வீட்டுக்கு போக தெரியும்! அப்பா உன்ன கூப்பிட்டாரு வா நாம போலாம்.. என்று மீண்டும் கையை பிடித்தார்.

பவானி முறைத்துக் கொண்டு நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன? வீணாக இங்கே என் பின்னாடி வந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! ஐ திங்க் உங்க பொண்டாட்டி  மெடிக்கல் ஷாப்  போயிட்டு வர சொன்னாங்களா? வழி தவறி இங்கே வந்துட்டீங்க போல! இப்போ படத்தில் வேற நடிக்கிரீங்க? ஏற்கனவே உங்க பின்னாடி பூக்கள் தான் சுற்றி இருக்கும் இப்போ இன்னும் சுற்றும். இதுல இந்த கிளவிய பார்க்க வேணுமா! உங்களுக்கு எதுவும் உருப்படியான வேலை இருந்தால் பாருங்க! என சொன்னவர். அந்த பணியாளர் அனைவரையும் முறைத்து பார்க்க அவர்கள் அருகில் வந்து ராஜ சேகரை எழுந்து நிற்க வைத்து மெதுவாக உள்ளே அமர உதவி செய்தார்கள். 

ரவி சந்திரன், என்ன மிஸ்டர் ராஜ சேகர்! இப்போ ரீசன்ட் டைம்சா நான் உங்களை அடிக்கடி பார்க்கிறேன். அதுவும் இதுக்கு காரணம்  என்னோட பையன் சித்தார்த் தான்னு தெரியும். நீங்க ஓவரா கற்பனை பண்ணிக்க வேணாம். நீங்க நினைக்கிறது எல்லாம் இங்கே நடக்காது. 

பவானி ரவியை முறைத்து விட்டு இன்னொரு பக்கம் ஏறி கொண்டார். 

ரவி, வாணி உன் பின்னாடி தான் வரேன். ஒன்னும் பிரச்னை இல்ல! வீட்டில் மீட் பண்றேன். என சொல்லி கொண்டே அவரது காரை எடுக்க சொல்ல அப்படியே பின் தொடர ஆரம்பித்தார். 

ராஜசேகர் எதுவும் பேசாமல் அமைதியாக வர பவானி நீங்க எதுக்கு அமைதியா வந்தீங்க? என்று கேட்டார்

நான் என்ன கேட்க முடியும் அது உங்க குடும்ப விஷயம் இல்லையா என்று ராஜசேகர் கூறினார்.  

பவானியின் மனதில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அதன்பின் அமைதியாக வந்தார். ரவிச்சந்திரனின் கார் அவர்களை பின்தொடர்ந்து வந்தது. 

ராஜசேகரின் வீட்டுக்கு அருகில் கார் நின்றது.  குணசேகரனுக்கு அவர் போன் செய்து காத்திருக்க..

பவானி சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துட்டீங்களா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?

 “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” 

 “என்ன எதுவும் சித்தார்த் கூட பிசினஸ் கமிட் பண்ணி இருக்கீங்களா?”

 ராஜசேகர் சிரித்துக்கொண்டேன் அதெல்லாம் ஒன்னும் இல்ல பர்சனலா உங்ககிட்ட பேசணும்! 

 பர்சனலா வா  உங்களுக்கும் எனக்கும் நடுவுல என்ன பர்சனல் இருக்கு?..  

ராஜசேகர் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓப்பனா சொல்றன் வாணி…  எனக்கு இப்பவும் உன்ன பிடிச்சிருக்கு.. என்று பட்டென மனதில் இருப்பதை கூறிவிட்டார்.

பவானிக்கு கோபம் ஆத்திரம் என எதுவுமே வரவில்லை. அது சிறுவயதில் இருப்பவர்களுக்கும் , பதிண்ம வயதில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மாதிரியான உணர்வுகள் ஏற்படும். அவர் முதிர்ந்த பெண்மணி அதனால் அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக..“ உங்க வீடு வந்துருச்சு, எப்போ உங்க தம்பி வருவாரு? நான் கொஞ்சம் கிளம்பனும்”

 ராஜசேகர் சிரித்துக்கொண்டே நீ என்ன அவாய்ட் பண்றேன்னு தெரியும். ஆனாலும் இத்தனை வருஷமா உன்கிட்ட நான் என்னோட விருப்பத்தை ஒரு தடவை கூட சொல்லல..

பவானி புருவத்தை சுருக்கி கொண்டு “நீங்க பேசுறது ரொம்ப சின்ன பிள்ளை தனமா இருக்கு. எனக்கு வயசு என்னன்னு தெரியுமா? நான் அரைக்கிழவி ஆயிட்டேன்! எனக்கு பேரன் பேத்தி வரப்போகுது.”

 அதனால என்ன? காதலுக்கு வயசு  இருக்கா? நான் உன் மேல அது எப்படி டிபைன் பண்றதுன்னு தெரியல.. எனக்கு உன்ன புடிச்சிருக்கு, அதுக்குன்னு நம்மளால சித்தார்த் இதன்யா மாதிரி வாழ முடியாது. ஆனா அவங்கள மாதிரியும் நம்மளால வாழ முடியும்! எனக்கு ரிலேஷன்ஷிப் தேவை இல்லை.. உன்னோட துணை தான் தேவை.

பவானி ஷாக்காக “நீங்க பேசுறது ஏதாவது அர்த்தமா இருக்கா? என்னையும் என்னோட எக்ஸ் ஹஸ்பன்ட் மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா?

ராஜசேகர் நான் சொல்றது உனக்கு புரியல பவானி, நான் இத்தனை வருஷமா… அது  நான் உன்ன உங்க அப்பா கிட்ட அத்தனை பேருக்கும் முன்னாடி  பொண்ணு கேட்டிருந்ததுக்கு பதிலா நேரடியா உன்கிட்ட வந்து என்னோட விருப்பத்தை சொல்லி இருக்கணும்.  அப்போ  நீ என்னை  விரும்பி இருப்ப இல்ல..

பவானி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

ராஜசேகர், உன்னோட மனசுல என்ன விட ரவிச்சந்திரன் தான் இருக்காருன்னு எனக்கு தெரியும்.

பவானி திரும்பி அவரை பார்த்து முறைத்தார்.

ராஜசேகர் இப்போ உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனால் எதுக்கு அந்த டைம்ல சொன்னேன்? அது எனக்கே தெரியல .  எனக்கு உன் மேல அப்போ இருந்த பிரியம் தான் இப்பவும் இருக்கு.  என்னோட வாழ்க்கையை நானா தான் இப்படி ஆக்கிட்டேன். உன்ன பார்த்ததுக்கு அப்புறம் வேற எந்த பொண்ணையும் எனக்கு மனசால நினைக்க தோணல.. அதனாலதான் நான் இப்படியே இருந்துட்டேன்.

 பவானி, என்னை இப்படி குற்ற உணர்ச்சியில் தள்ளாதீங்க, அதேபோல இது கனவில் கூட நடக்காது.  நான் இப்படி கல்யாணம் பண்ணிட்டு  எல்லாரும் முன்னாடியும் நிண்ணா எல்லாரும் கேவலமா பேசுவாங்க.

 ராஜசேகர் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ல வரல. நீ என்கூட இருன்னு சொல்றன் ,உன் கைய பிடிச்சுக்கணும் ,உன் கூட  பேசி நிறைய ஷேர் பண்ணனும், இன்னும் நான் எத்தனை வருஷம் இருக்க போறேன்னு தெரியல,  அதனால இருக்கிற வரைக்கும் உன் கூட பேசிக்கிட்டே, உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். இதுக்கு மத்தவங்க என்ன பேரு வைப்பாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் என் மனசுல உள்ளது சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்.  நீ என்ன தப்பா நினைக்கிறதா இருந்தாலும் நினைச்சுக்கோ , இந்த  30 வருஷமா என் மனசுல சுமந்துகிட்டு இருந்த ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்லிட்டேன்.  இப்ப கூட நீ எனக்கு ரவிச்சந்திரன்  பொண்டாட்டியா தெரியல,  நீ என்னோட காதலியாக தான் தெரியுற. அதுக்குன்னு கல்யாணம் பண்ணி இந்த ஹனிமூன் இது இந்த கட்டை எதிர் பார்க்கல..   உன்னோட பேச்சுக்கள் தான் எனக்கு தேவையே தவிர அன்யோன்யமா இருக்கிறது தேவையில்லை, எனக்கு என்னோட கைய புடிச்சுக்கவும் என்னோட தோளில் சாயவும் ஒரு துணை… நான் ஆசைப்பட்ட இந்த விசயம்.. உன் பையன் எனக்கு மீட்டெடுத்து இருக்கான். எனக்கு சித்தார்த்தை  சம்டைம்ஸ் எப்பவுமே அட்மியராக தான் பார்ப்பேன் அவன் அப்படி தான் இருப்பான். எவ்ளோ பிரச்னை வந்தாலும்  ஒரு இடத்துல கூட அவன பலவீனமா இருந்தது இல்லை.  அந்த முகம் எந்த உணர்ச்சியும் காட்டாது.  அது உன்னோட குணத்தை நிறைய பிரதிபலிக்குது  நீ யோசிச்சு சொல்லு நான் உனக்கு காத்துட்டு இருப்பேன். ஆனா தயவு செய்து என்னை அவாய்ட் பண்ணிடாத பிடிக்கலைன்னா சொல்லி.டு அட்லீஸ்ட் பிரண்ட்ஸா  இருக்கலாம். உன் கூட ஏதாவது ஒரு பாண்டிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கணும். அவ்வளவு தான்.. பவானி யோசிச்சு சொல்லு..  இந்த கிழவன் மேல கொஞ்சம் கருணை காட்டு என்று சொல்லிக் விட்டு கதவை திறந்தார்.

பவானி  திரும்ப அங்கே குணசேகர் வந்து நின்றார். அவர் தன் அண்ணனை தாங்கி பிடித்து வீழ்ச்சேரில அமர வைத்து பவானியை பார்த்து ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லிவிட்டு உள்ளே கூட்டி சென்றார்.

பவானி இதுக்கெல்லாம் காரணம் அந்த ராஸ்கல் தானா?  அவனை!.   உனக்கு இருக்குடா என்று மிகவும் கோபத்துடன் கிருஷ்ணனின் வீட்டுக்கு கிளம்பினார்.

ரவிச்சந்திரன் அப்பொழுதும் விடவில்லை பின்னாலேயே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.  பவானி கிருஷ்ணனின் வீட்டுக்குள் நுழைய.. நுழைவு வாயிலில் ரவிச்சந்திரன் கார் தடுக்கப்பட்டது.

இப்போ கதவை திறங்க நான் யாருன்னு தெரியும்ல! ரவிச்சந்திரன்!..  இந்த வீட்டோட மருமகன்… மறந்து போச்சா?

அதன் பின் அவர்கள் வேறு வழியில்லாமல் கதவை திறந்து விட..

பவானி கோபமாக காரை விட்டு இறங்கியவர். உள்ளே செல்ல போக.. ரவிச்சந்திரன் வேகமாக வந்து பவானியை பிடித்தார். என்னடி நினைச்சுட்டு இருக்க?  அவன் கூட உனக்கு என்ன பேச்சு?  இது கண்டிப்பா உன்னோட வேலையா இருக்காது! நான் பண்ண தப்பால பிறந்து இருக்கானே, அவன் தானே இதுக்கெல்லாம் காரணம்?

 பவானி நான் யார் கூட பேசிட்டு வந்தா உங்களுக்கு என்ன?  நான் இதேபோல உங்களை வேவு பார்த்துட்டு இருக்கேனா? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நம்ம ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகி 22 வருஷம் ஆகுது. அதனால தயவு செய்து என் பின்னாடி வரத நிறுத்திட்டு உங்க பொண்டாட்டி பின்னாடி போங்க. புரியுதா? பேரன் பேத்தி எடுக்கிற வயசுல நீங்க எதுக்கு என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க..

ரவிச்சந்திரன் பவானியின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டே நீ இன்னமும் என் பொண்டாட்டி தான்! எப்பவும் நீ எனக்கு சொந்தமானவ…

பவானிக்கு கோபம் வர அடிக்கவே கையை ஓங்கினார்.

ரவிச்சந்திரன் சிரித்துக்கொண்டே“ நீ அடிப்ப வா நீ உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் ஏதோ தப்பு பண்ணிட்டேன். ஆனா அதுக்காக உன்னை நினைக்காமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியல..  ஏதாவது ஒரு விஷயத்துல நீ என்னோட நினைப்புல இருந்துகிட்டே தான் இருப்பேன். ஆனா நான் ரதியோட எப்படி அந்த ஒரு நாள் வாழ்ந்தேனு எனக்கு சத்தியமா தெரியல.. அது!. அது! என் வாழ்க்கையில நடந்திருக்காம இருந்திருந்தால் சித்தார்த் நம்ம கூட இருந்திருப்பான். ரோஷினி என்கூட இருந்திருப்பா. இப்போ  எல்லாமே டோட்டலா ஸ்பாயில் ஆயிடுச்சு..  ஆனா எனக்கு ஒரு சான்ஸ் குடு இது எல்லாத்தையும் சரி பண்ணி நம்ம எல்லாரும் சேர்ந்து வாழலாம்.”

வானி விரக்தியான சிரிப்புடன் அப்போ ரதிதேவியையும் ஆரவையும் என்ன பண்ண போறீங்க?

அவங்க ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்..

பவானி,  நீங்க!.  உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டியா? நீங்க அவதார புருஷன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? அதெப்படி இந்த சினிமாவில் இருக்கிற எல்லாருமே இப்படி தானா?  உள்ளே ஒன்னையும் வெளியே ஒன்னையும் வச்சுக்கிட்டு , எல்லார் முன்னாடி நடிச்சிட்டு இருப்பீங்க.. நான் ஓப்பனா சொல்றேன், நான் ஓரமா இருந்துட்டு போறேன். என்னோட வாழ்க்கையில தலையிடனும்னு நீங்க நினைக்காதீங்க. நான் அந்த வீட்டுக்கு வரத்துக்கான ஒரே காரணம்  உங்களோட பையன் பொண்ணோட உரிமையா நிலை நாட்ட தான்.. உங்களுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகி இந்த உறவு முடிஞ்சு என்னைக்கோ  மண்ணுல புதைஞ்சிடுச்சு.. அதை மறுபடியும் எடுக்கணும் வெளியே தோண்டி எடுக்கணும்னு நீங்க நினைக்காதீங்க. அது எப்பவும் நடக்காது.

 அப்போ அந்த ராஜசேகர நீ என்று சொல்ல வர..

பவானி ஓங்கி ரவிச்சந்திரனின் கன்னத்தில் அறைந்தார்.

ரவிச்சந்திரன் சிரித்துக்கொண்டே இது புதுமையா இருக்கு வாணி, எனக்கு இப்போ உன்ன ரொம்ப புடிச்சிருக்கு, இந்த மாதிரி டைம்ல கூட காதல் வருமா? என்ன? அதை பத்தி எனக்கு தெரியல.  இத்தனை வயசு ஆகி கூட எனக்கு ரொம்ப அழகா தெரியுரடி! என்று அருகில் நெருங்கினார்.

பவானி என்னை விட்டு தள்ளிப் போங்க உங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கல.. பத்திகிட்டு வருது. 

ரவிச்சந்திரன் பரவால்ல பேபி நீ என்னைக்கும்  என்னோட பவானி தான்! நான் உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அந்த ரதி உனக்கு இருக்கக் கூடாதா? சொல்லு? என்ன பண்ணலாம்?

(My mind voice.. என்னடா இது இவர்  பேசுறது அப்படியே சித்தார்த் போலவே இருக்கே?  அப்படின்னு உங்க எல்லாத்துக்கும் தோணும்.. ரவிச்சந்திரன் சித்தார்த் வாரிசு!  என்ன ரவிச்சந்திரன் xtrem level சித்தார்த் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவன். அவன் ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி. அதுல இதன்யா மட்டும்தான். மத்தவங்களுக்கு எல்லாம் அவ ரொம்ப கெட்டவன். அவனுடைய  antihero தன்மையோட கான்சென்ட்ரேஷன்  அளவை இங்க எக்ஸ்பிளைன் பண்ண முடியல.. ஆனால் போக போக உங்களுக்கே தெரியும். )

பவானி அவரை வேகம் கொண்டு தள்ளிவிட..

அந்த நேரம் பார்த்து என்ன ஆச்சு என்று சத்தத்துடன் கிருஷ்ணன் வெளியே வந்தார்.

ரவிச்சந்திரன், மாமா!..

 கிருஷ்ணன் எதுவுமே பேசவில்லை. பவானி வேகமாக தன் தந்தையின் அருகில் சென்றார்.

 ஒன்னும் இல்ல மாமா நாளைக்கு அப்பா பவானியை அழைத்து வர சொன்னாங்க. அதுக்காக தான் நான் வீட்டுக்கு வந்தேன். சரிங்க மாமா அவள பாத்துக்கோங்க. என்று சொல்லிவிட்டு எதுவுமே நடக்காதது போல் ரவிச்சந்திரன் அங்கிருந்து கிளம்பினார்.

 கிருஷ்ணன் பவானியிடம் என்ன இவர் கூட வந்து இறங்குற? நீ ராஜசேகர் கூட வரலையா?

 பவானி அதிர்ச்சியுடன் அப்பா நீங்களுமா?  இது அந்த சித்தார்த்த நாயோட வேலையா? அவங்க அப்பன் புத்தி அப்படியே இருக்கு பாருங்க!என்று சொல்லிக் கொண்டே இந்த மாதிரி என்கிட்ட என்ன யாருன்னு நினைச்சீங்க! நீங்க உங்களுடைய எண்ணத்தை மாத்திக்கோங்க! நான் சாகப் போறவ பா! எனக்கு எதுக்கு இந்த அதிகப்பிரசிங்கி தனமான வேலை எல்லாம் ..   என விரக்தியுடன் அவர் உள்ளே செல்ல..

கிருஷ்ணன் தன் மகளின் பின்னால் நான் 76 வயசு கிழவன் மா, இருந்தாலும், என் பொண்ணு கடைசி காலத்துல ஒரு துணையோடு இருக்கணும்னு எனக்கு ஆசைதான். இத நீ எப்படி நினைச்சாலும் நினைச்சுக்கோ! இந்த மாதிரி ஃபாரின்ல எவ்வளவு கல்ச்சர்ஸ் எவ்ளோ இருக்கு.  கடைசி காலத்துல கூட கல்யாணம் பண்ணிக்கிற ஆளுங்கள நான் நிறைய பேர பாத்து இருக்கேன். ஆனா நீ ஏன் இப்படி பேசுற ?உனக்கு ஒன்னும் வயசாகல புரிஞ்சுதா! உனக்கு ஷேர் பண்ணிக்குறதுக்கு ஒருத்தர் வேணும்.  சித்தார்த்தி எடுத்த முடிவு சரிதான். என்று சொல்ல..

அப்பா என்று ஆக்ரோஷமாக கத்தியவர். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க! என்று சொல்லிக்கொண்டே அவருடைய அழைப்பு சென்றார். 

அடுத்த அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சித்தார்த் இதன்யாவையே கவனித்துக் கொண்டிருந்தான். அவள் காலையில் எழுந்து குளித்து முடித்து உடையை பேக் செய்து கொண்டு ஈரோடு கிளம்பினாள். 

அவனை ஒவ்வொரு இடத்திலும்  தவிர்த்துக் கொண்டே வந்தாள்.

ஆனால் சித்தார்த்த அதையும் மீறி கார் ஸ்டார்ட் செய்து அவள் அருகில் வந்தான் நான் விடுகிறேன்!.

உங்களுடைய உதவி ஒன்னும் தேவையில்லை.நான் வேற கார்ல போயிக்குவென்.

அதைக் கேட்டதும் அவனுக்கு மனம் நிறைவாக இருந்தது. நல்ல வேலை பஸ்ல போறேன்! நடந்து போறேன்னு சொல்லாம இருந்தாலே, அதுவரைக்கும் சந்தோஷம். என்னைக்கும் அவ மனசுல நான் தான் இருப்பேன். என்று சொல்லிக் கொண்டான்.

இதன்யாவிடம் கட்டாயமாக  பையை வாங்கிக்கொண்டு நான் தான் உன்னை கொண்டு போய் விடுவேன். அதுக்கு முன்னாடி உங்க அம்மாவுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும்?

 இதன்யா உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா எங்க அம்மாவுக்கு எந்த கிப்டுமே வேண்டாம். உங்க கிட்ட நான் கேட்டனா? எதுக்கு என்னை டார்ச்சர் பண்றீங்க?

 சித்தார்த் அப்போ சாரி வாங்கி தரவா உனக்கு…

இதன்யா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர..

அத்தைக்கு சாரி வாங்கி தரவா? 

இதன்யா, யாருக்கு யார் அத்தை?

சித்தார்த், எங்க அம்மாவ நீ அத்தன்னு  கூப்பிடும்போது உங்க அம்மாஎனக்கு அத்தை தாண்டி! எனக்கு ஒரே ஒரு அத்தை உங்க அம்மா மட்டும் தான்.

 நான் உருகி கரைய மாட்டேன் தயவு செய்து என்னை இறக்கி விட்டுடுங்க. நான் நிம்மதியா எங்க வீட்ல இந்த 20 நாள் இருந்துட்டு வரேன்.

 அப்போ எல்லா நாளும் அங்க தான் இருக்க போறியா என்று ஏக்கத்துடன் கேட்டான்.

இதன்யா நக்கலாக இங்கு இருந்தா மட்டும் நீங்க என்ன பண்ண போறீங்க? நான் அதுக்கு எங்க வீட்டிலேயே இருப்பேன்ல! என்ற வேண்டுமென்றே சீண்டும் நோக்கத்தில் கூறினாள்.

சித் அவளின் பேச்சை கண்டுகொள்ளாமல் அதுவும் சரிதான் என்று  நேராக கார் ஒரு கடைக்குள் சென்று காட்டன் புடவைகளை இதன்யாவை நினைத்து எடுத்துக் கொடுத்தான்.

ஏனென்றால் இதன்யா அவளது அம்மாவை போலத்தான் இருக்கிறா. அதன் பின் கார் நேராக பஸ் டான்ட் சென்றது. சித் அவளை சுற்றி பார்த்துக் கொண்டிருக்க இதன்யா ஒரே ஒருமுறை மட்டும் அவனைப் பார்த்தாள். மாஸ்க் அணிந்து கேப் போட்டுக்கொண்டு சாதாரண முறையில் அழகாகவே இருந்தான். அவன் கண் ஜாடையில் யாரிடமோ பேசுவது போல தெரிந்தது.

அவள் சுற்றிலும் பார்த்தாள்இந்த மனுஷங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ? இவங்க எல்லாம் யாரு. என்று கேட்க..

சித்தார்த் எனக்கு எப்படி தெரியும் நீ தானே ஈரோடு! இவங்க எல்லாம்  உங்க ஊர்காரங்களா தான் இருப்பாங்க..

 இதன்யா எனக்கு நல்லா  தெரியும் என்னை வேவு பார்க்கிறதுக்காக இவங்களையெல்லாம் நீங்க தான் செட் பண்ணி இருக்கீங்கன்னு, எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டே பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.

சித்தார்த் அங்கேயே காத்திருந்தான். ஆனால் அவள் ஒரு தடவை கூட திரும்பி பார்க்கவில்லை. பேருந்து கிளம்பியது.

சித்தார்த் உடனே காரில் சென்று விட்டான்.

இதன்யா ஒரு பெருமூச்சியை விட்டு இவன என்னதான் பண்றது? நான் தான் ஏதாவது பண்ணனுமா? ஆனால்  என்னை ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டா? என்ன பண்றது? என்று ஆயிரம் யோசனையை  யோசித்துக் கொண்டே அப்படியே கண்களை மூடிக்கொண்டு சரி பாட்டு கேக்கலாம் என்று போன் எடுத்து வேணாம் இப்போ  பிரியா கிட்ட பேசலாம்! ஹான்  ஏதோ பார்ட் டைம் ஜாப் போறேன் அப்படின்னு சீன போட்டுட்டு இருந்தாலே!  என்று போனை எடுத்து  அவளுக்கு கால் செய்யப் போக…

உடனே பஸ் நின்றது  அவள் கண்டு கொள்ளவில்லை பயணிகள் ஏறுகிறார்கள். என்று அமைதியாக போன் செய்ய போக..

அந்த நேரம் போனில் சித் கால் செய்தான்.   ஹலோ? 

என்ன ?

கொஞ்சம் கீழே இறங்கி வரயா! 

நானா?  நான்! என்னால் வர முடியாது. இந்த முடிவ நான் எப்பவும் மாத்திக்க மாட்டேன்.

சித், ப்ச்ச.. கொஞ்சம் இறங்கி வா சொல்றேன்! 

நான்தான் சொல்றேன்ல நீங்க என் கால்ல விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்டால் கூட நான் திரும்ப வரமாட்டேன்.

சித், நீ திரும்ப  எல்லாம் வர வேண்டாம். ஜஸ்ட் இறங்கி மட்டும் கீழே வா. உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! 

இதன்யா,  ஏன்டா என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க என்று எட்டிப் பார்த்தாள்.

யாரும் இல்லை பஸ் கண்டக்டர் இதன்யாவே பார்த்துக் கொண்டிருக்க..

அவள் வேறு வழி இல்லாமல் கீழே இறங்கினாள்.

அவளின் பின்னால் கண்டக்டர் அவளுடைய பையை எடுத்து  வெளியே வைத்துவிட பஸ் கிளம்பியது.

கொஞ்ச நேரம் தூரம் சென்றதும் பஸ் மீண்டும் நிற்க கிட்டத்தட்ட 15 நபர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு  ஆறு டூவீலர்கள் வர அவர்கள் சிட்டாக பறந்து விட்டார்கள்.பாதிப்பேர் ஆட்டோவில் ஏறி சென்று விட்டார்கள் .யார் இவங்க ? எ இங்கே என்ன நடக்குது? என்று திரும்பிப் பார்க்க..

இதன்யாவின் அருகில் வந்து கார் நின்றது .

சித்தார்த் கதவை திறந்து விட்டான். என்னால ஏற முடியாது.

 இது நேத்து நைட்டே என்கிட்ட கேட்டு இருக்கலாம்ல்ல! அப்பவும் உங்களை மன்னிக்க மாட்டேன் என்று கூறினாள்.

சித் சிரிப்பை அடக்கிக் கொண்டே ஐயோ கடுப்பு பண்றாளே! என்று நினைத்தவன்.

உன்னை எங்க அம்மா வர சொன்னாங்க!

இதன்யா, அதான் பெங்களூர் போயிட்டாங்களே! நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன் என்று அவள் மறுபடியும் சொல்ல..

இப்ப நாம ரெண்டு பேரும் பெங்களூர் போறோம்.

ஏன்டா ரெண்டு நாள் லீவு கிடைச்சா கூட என்னை பெங்களூர் கூட்டிட்டு போய்ட்ற? நான் எப்படா என்னோட சாதி சனத்தை பாக்கறது?

சித்தார்த் அம்மா ஏதோ முக்கியமான விஷயமா கண்டிப்பா வர சொன்னாக..

இதன்யா, எங்க போறோம் கிருஷ்ணன் தாத்தா வீட்டுக்கா? இல்ல உங்க தாத்தா வீட்டுக்கா? 

சித்தார்த் இப்படியே பேசிட்டு இருந்தினா உன் வாயை உடைச்சிடுவென்னு  நினைக்கிறேன்..

ஓ அப்டியா டேய் இப்போ ஒடை டா பார்க்கலாம்..

 சித்தார்த் ஏண்டி இப்படி பண்ற? எங்க அம்மா வர சொன்னாங்க. அந்த சந்திரமௌலி வீட்டுக்கு! என்று ஓட்டுனரை பார்த்து கொஞ்சம் வேகமா போங்க என்று கூறினான் .

இதன்யா மறுபடியும் பேச வர அந்த நேரம் பவானி கால் செய்தார்.

சொல்லுங்கம்மா..

பவானி கொஞ்சம் கடுமையான குரலில் இதன்யாவுக்கு பாஸ்போர்ட் இருக்கா?

அவ என்ன கல்யாணம் பண்ணதுமே ரெடி பண்ணிட்டேன் என்று சித் சொல்ல..

அப்படியா சரி சீக்கிரமா  அவளை கூட்டிட்டு வா என்று பற்களை கடித்துக் கொண்டே பேசினார்.

சித் அவருடைய குரலில் வித்தியாசம் கண்டுபிடித்து பவா என்று அழைக்க அதற்குள் போன் கட் ஆனது. 

பாஸ் போர்ட் எதுக்கு? 

அது honeymoon பிளான் தான் ஆனால் ரதி பிளான்!..

என்ன நடக்குமோ? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 247

போனில் யாரு? 

என் பவா தான்! என சொல்லி கொண்டே அமைதி ஆகினான். 

என்ன இருக்கா இல்லையான்னு பேசிக்கிட்டீங்க? என்ன விசயம்? என இதன்யா கேட்க.. 

அது சும்மா ஒன்னும் இல்ல.. 

ஹே ஹே ஒரு நிமிசம் இப்போ எதுக்கு என்னை கூட்டி போறீங்க? 

அது எனக்கே தெரியாது.  அங்கே போனால் தான் தெரியும்! 

அப்புறம் நீங்க ஏன் சூட்டிங் போகல? என அவள் அடுத்த கேள்வியை தொடுத்தாள். 

ஏன் டி இப்போ அமைதியாகவே இருக்க மாட்டியா? இனி அந்த பிரியா கோடா சேராத!. நச நசன்னு பேசிட்டே இருக்க? அதான் நைட்டு முழுக்க பிரண்டு பிரண்டு படுத்தியே இப்போ காலையில் ரெண்டு இட்லி சாப்பிடதுக்கு இந்நேரம் தூக்கம் வரணுமே! என எதேட்சயாக அவளை திரும்பி பார்த்தான். 

அவள் உதடு பிதுங்க வெடுக்கென திரும்பி கொண்டு அவனிடம் இருந்து தள்ளி கார் கதவினை ஒட்டி அமர்ந்தாள். 

சித் அவளின் அருகில் தள்ளி அமர்ந்து கைகளை போட வர..

ஹே தள்ளி போ! என அவனை முறைத்து பார்த்தாள். 

இல்ல இதன்யா…  அது… நான் எனக்கு மட்டும் என்ன தெரியும்? நானும் உன் கூட தான் வரேன் திடீர்னு அம்மா போன் பண்ணாங்க! அதான் டி! டென்ஷன் ஆயிட்டேன். உனக்கு மட்டும் தான் மூட் ஸ்விங் வருமா? எனக்கு வரும்! 

உங்களுக்கு பீரியட்ஸ் வந்தா கூட எனக்கு என்ன? என அவள் கோபமாக திரும்பினாள். 

என்ன பேசுரா? என சாக் ஆகி பார்த்தான். 

அய்யயோ! என அவனை திரும்பி பார்த்தாள். 

சித் அவளை பார்க்க.. 

நான் சொன்னதுல என்ன தப்பு! நீங்க என்னை மட்டும் சொல்றீங்க? 

சித்,  என்னோட டைரக்டர் பெர்சனல் ஒர்க் அதனால் ஷூட்டிங் கேப் போட்டிருக்காங்க.  அண்ட் முக்கியமா  நீ அத்தைகிட்ட  ஊருக்கு வரலைன்னு சொல்லிடு அவங்க எதிர்பார்ப்பாங்க  என  சொல்லி முடித்து திரும்பி கொண்டான். 

பெரிய அக்கறை போடா! சீன் காரா! நடிப்பு கள்ளா! என அவள் அப்படியே சாய்ந்து கொண்டாள். ஆறு மணி நேரம் கழித்து அவர்கள் சந்திர மௌலி வீட்டுக்கு வந்தார்கள். ஹே ஹலோ! டீச்சர்!  மேடம்!  

ம்ம் என்று அவனுடைய நெஞ்சில் முகம் புதைத்தாள். 

உங்க ஜொள்ளு நேரா என்னோட இதயத்துக்கு போயிடுச்சு. கொஞ்சம் எழுந்தால் பரவால்ல வீடு வந்திடுத்து!. 

பெட் எப்டி வீடா மாறுச்சு!. 

ஹான் நான் உனக்கு படுக்கை மாதிரி இருக்கேனா?  எழுந்திரு! எனக்கு கொஞ்சமா பசிக்குது.  

அவள் வேகமாக கண்ணை முழித்து பார்க்க அங்கே சித்தார்த் கையை இருக்கையில் விரித்து கொண்டே அவளை தாங்கி இருந்தான். அவளுடைய மொத்த உடலையும் எடையையும் அவன் மேல் போட்டு தூங்கி இருக்கிறாள். 

ச்ச! ச்ச எதோ தெரியாமல் தூக்கத்தில் வந்துட்டேன். சுய நினைவில் இருந்தால் பக்கத்தில் கூட வந்திருக்க மாட்டேன். போடா! என இறங்கினாள். 

உனக்கு ஒரு முக்கிய விசயம் சொல்லணும்! 

என்ன? 

அது இங்கே என்னை வாங்க போங்க சொல்லு! இங்கே எல்லாரும் இருப்பாங்க! அதான்! நீ வாடா போடா சொன்னால் அது அது நல்லாவே இருக்காது. என நடந்து கொண்டே பார்த்தான். 

அப்டியா சரி சித்தார்த் என நடந்தாள். 

அவன் ஒரு நிமிடம் நின்று அவளை பார்க்க.. 

என்ன சித்தார்த் வா! உனக்கு பசிக்குதுன்னு சொன்ன தானே! வா!. என்ன அப்படியே உறைஞ்சு பார்க்கிற? 

அவன் அவளை மேலும் கீழுமாக பார்த்தான். 

கமான் சித்தார்த் வா போலாம். 

என்ன டி! என்ன இது? 

என்ன சித்தார்த்? என அவனை பார்த்தாள்.

இல்ல வார்த்தைக்கு வார்த்தை சித்தார்த் சொல்ற? 

அச்சோ சாரி சித்தார்த் கிருஷ்ணா! அய்யோ சாரி சாரி சித்தார்த் ரவிச்சந்திரன் ஓகே வா! அது தானே சித்தார்த் உன்னோட முழு பேரு! என சொல்லி கொண்டே சிரித்தாள். 

போதும் டி இதுக்கு மேல பேர் சொல்லாத! 

சொல்லுவேன்! 

சொல்லாத டி!  

அப்படி தான் டா சொல்லுவேன்!. என இருவரும் உள்ளே வந்தார்கள். 

க்கும்.. என அதட்டல் குரல் கேட்டது. 

என்னங்க? என உடனே மாற்றி கொண்டாள். 

சித் திரும்பி பார்க்க பவானி போனில் “மாமா அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க!”

பவா! என அவன் நேராக சென்றான். இதன்யா அவன் பின்னால் சென்றாள். 

இதன்யா நீ ஃப்ரெஷ் ஆகு! என பவானி செல்ல..

பவா! பவா!..

இப்போ எதுக்கு என் பேரை கத்தி கூப்பிடுற.. 

இப்போ எதுக்கு வர சொன்னீங்க? இதண்யா ஊருக்கு போகனும்ன்னு சொன்னேனே! என சித் எதுவுமே நடக்காதது போல் பேசி கொண்டே வந்தான். 

பவானியின் அறைக்குள் சென்றதும் அவனை திரும்பி பார்த்தவர். பளார் என கன்னத்தில் அரை விட்டார். 

அவனுக்கு எறும்பு கடித்தது போல கூட இல்லை. பவா! என்ன விசயம் எதுக்கு வர சொன்ன? என சித் மீண்டும் பேச..

பவானி இன்னொரு கன்னத்தில் அடித்தார். சித் சிரித்து கொண்டே ம்ம் எவ்ளோ அடிக்கணும்? ஃபர்ஸ்ட் டைம் இத்தனை வருடத்தில் நான் பிறந்ததில் இருந்து முதல் முறையா ஸ்லாப் பண்ணி இருக்க? 

பவானி கோபத்தில் கண் கலங்கி சிவக்க என்னை என்ன நினைச்சிட்டு இருக்க? யாரை கேட்டு என்னை அந்த ராஜ சேகர் கூட இந்த மாதிரி அசிங்கம் பிடித்த தனமா என்னை சேர்த்து வைக்க தோணுச்சு? 

யாரை கேட்கணும்? எதுக்கு கேட்கணும்? எது அசிங்கம்! யாரு அசிங்கம்! அப்போ நான் கூட அசிங்கம் தானே! லீனா கூட லிவிங்ல இருந்திட்டு இப்போ இதன்யா கூட இருக்கேன். அப்போ நான் தப்பு சோ அவளை டைவர்ஸ் பண்ணிடவா? 

*

பூஜா பள்ளியில் இருந்து வேலையை முடித்துவிட்டு ஹாஸ்டல் வந்தாள். இதன்யா இப்பொழுது ஸ்கூலுக்கு வருவதில்லை. ஏனென்றால் அவள் சித்தார்த்தின் மனைவி அவ்வப்போது வருவாள். அவளுக்கு அதிகமாக யாரும் வேலையும் கொடுக்க மாட்டார்கள். அவள் பெரிய வீட்டு மருமகள். முக்கிய தலைமை பொறுப்புகளுக்கு அவளை பற்றி தெரியும். அதனால் அவளுக்கு வேலை இருக்காது.  என்றாலும் இது ஒரு எழுதப்படாத விதி.

பூஜா மிகவும் சோர்வாக அமர்ந்தாள்.‌  வேலைக்கு போய் சம்பாதிக்கிற பணம் எல்லாமே காலேஜ்  பீஸ்க்கு சரியா போயிடுது. அவளுக்கு மிச்சம் பிடிக்கிறதுக்கு எந்த பணமும் இல்லை. என்ன பண்றது என்று கவலையுடன் அமர்ந்திருந்தாள்.‌

அந்த நேரம் அவளுடைய  ஹாஸ்டல் ரூம் மேட் என்னாச்சு பூஜா? என்று கேட்க.. 

ஒன்றும் இல்லை திவ்யா எனக்கு ஸ்கூலுக்கு போய் சம்பாதிக்கிறது எல்லாமே  படிக்கிறதுக்கும், பீஸ் கட்றதுக்குமே சரியா இருக்கு.ஏதாவது பாட் டைம் ஜாப் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. என்று வருத்தமாக கூறினாள்.

திவ்யா பூஜாவின் நிலையை பார்த்து என்ன பூஜா? காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் ஸ்கூலுக்கு போற, அதுல நடுவுல சில நாள் காலேஜ் போற, இதுல உனக்கு எப்படிடி நடுவுல வேலைக்கு போறதுக்கு டைம் கிடைக்கும்? ரொம்ப வீக்கா ஆகிடுவடி என்று கூற..

பூஜா ஒரு பெருமூச்சை விட்டு அது எனக்கு புரியுது! ஆனா என்னோட செலவுகளுக்கு என் கிட்ட காசு இல்லடி. வீட்டிலயும் கேட்க முடியாது. எங்க வீட்டுல கொஞ்சம் கஷ்டம் அதனாலதான் நான் காசு கட்டி நானே சம்பாதிச்சு படிச்சுட்டு இருக்கேன் என்று வருத்தமாக கூறினாள்.

உடனே திவ்யா சிரித்துக்கொண்டே நீ ஒன்னும் கவலைப்படாதே எங்க ஹாஸ்பிடல் ஒரு வேலை இருக்கு என்று சொல்ல..

பூஜா ஒரு பெருமூச்சு விட்டு நைட் ஷிப்ட் என்னால் பண்ண முடியாது. ஏன்னா ஏற்கனவே ஸ்கூல், அப்புறம் காலேஜ் எல்லாம் போயிட்டு வந்துட்டு இருக்கேன். அது எனக்கு ஒத்து வராதுடி வேற ஏதாவது வேலை தான் பாக்கணும். ஒரு ரெண்டு மணி நேரம் , அப்படி இல்லானா 3 மணி மிஞ்சி மிஞ்சி போனால்  ஒரு நாலு மணி நேரம் அந்த மாதிரி ஸ்கூல் போயிட்டு வந்துட்டு தாண்டி பாக்கணும்.

 உடனே திவ்யா நீ கவலையை விடு அந்த மாதிரி தான் ஒரு வேலை இருக்கு என்று கூற..

என்ன சொல்ற என்று பூஜா அவளை பார்க்க..

நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடல்ல ரிசப்ஷனிஸ்ட் அதாவது ஈவினிங் டைம்ல ஒரு opd போகும். அங்க மெயின் அங்க ரிசப்ஷனிஸ்டா ஆள் தேவை! ஹாஸ்பிடல் எப்பவுமே பிஸியா இருக்கும். ஆனா ஈவினிங் கொஞ்சம் அதிகமா பேஷன்ட் எமர்ஜென்சிக்கு வரதால ரிசப்ஷனிஸ்ட் வேகன்ட் போட்டு இருக்காங்க.. அதனால தான் சொன்னேன். நாலு மணி நேரம் நீ என்ட்ரி பண்ணி  அவங்கள அனுப்புவது மட்டும் தான் உனக்கு வேலை.  டெலிகால் அட்டென்ட் பண்ணு அவ்வளவு தான் எந்த பிரச்சனையும் இல்லை… என திவ்யா கூறினாள். 

பூஜாவுக்கு இதை கேட்டதும் சரி எனப்பட்டது. அப்படியா? ஹாஸ்ப்பிட்டல் எங்க இருக்கு? ஹாஸ்பிடல் பெயர் என்ன? 

திவ்யா நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் பேரு VSA மல்டி ஸ்பேசாலிட்டி ஹாஸ்பிடல்.. என கூறினாள். 

பூஜா சரிடி அப்படின்னா  கேளு என்று சொல்ல..

திவ்யா உடனே போன் செய்து பூஜாவை பற்றி கூறினாள்.

அந்த ஹாஸ்பிடலில் இருக்கும் ஹெச் .ஆர், சரி அவங்கள இன்னைக்கு ஈவினிங் வர சொல்லுங்க, சும்மா ஃபார்மாலிட்டிக்கு இன்டர்வியூ எடுத்துட்டு, நாளையிலிருந்து அவங்க ஜாயின் பண்ணிகkட்டும் என்று கூறினார்.

 பூஜா பதட்டத்துடன் என்ன சொன்னாங்க? என்று கேட்க..

திவ்யா சிரித்துக்கொண்டே சக்சஸ் நாளையிலிருந்து நீ ஜாயின் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க. பார்மாலிட்டிக்கு மட்டும் இன்னைக்கு ஈவினிங் உனக்கு ஒரு இன்டர்வியூ, அதுக்கு அப்புறம் நீ ஜாயின் பண்ணிக்கலாம். இப்போ ஹேப்பியா பூஜா!

பூஜா சிரித்துக்கொண்டே ரொம்ப சந்தோஷம்டி சேலரி எவ்வளவு கொடுப்பாங்க? என்று கேட்க..

அதெல்லாம் இன்னிக்கு ஈவினிங் உனக்கு சொல்லுவாங்க  may be ஒரு எட்டு தருவாங்கடி என்று கூறினாள்‌.‌

பூஜா அதிர்ச்சியாகி 8000மா! அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல நான் வேலை செய்ய போறேனா? கண்டிப்பா அது பெரிய ஹாஸ்பிடலா தான் இருக்கும். என்று அவள் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் படுத்தாள்.

அந்த இடம் தான் அவளது வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது பார்ப்போமே என்ன நடக்கிறது?

*#@

லீனா கூட லிவிங்ல இருந்திட்டு இப்போ இதன்யா கூட இருக்கேன். அப்போ நான் தப்பு சோ அவளை டைவர்ஸ் பண்ணிடவா? என சித் கேட்க

பவானி இன்னொரு கன்னத்தில் ஆக்ரோசமாக அடித்தார். 

சித் சிரித்து கொண்டே நான் எதுக்கு டைவர்ஸ் பண்ணுவேன்?  எனக்கு எப்போவும்  இதன்யா இருக்கா! ரோஸ்னிக்கு ரிஷி இருக்கான். தாத்தா காலம் அது நமக்கு தெரியாது. அப்போ உனக்கு யார் இருக்கா! 

டேய் வாய மூடு!. என அவர் கத்த கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

அவன் எதுவும் பேசாமல் அப்படியே நிற்க.. 

பவானி கதவை திறந்தார். அத் அத்தை தாத்தா வந்தாச்சு! 

ம்ம் என்று பவானி முன்னால் சென்றார். 

சித் எந்த சலனமும் இல்லாமல் பின்னால் சென்றான். 

பவானி ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்க்காமல் இன்னிக்கி நைட் உங்களுக்கு ஸ்விட்சர்லாந்துக்கு ஃப்ளைட் சோ நீங்க ரெண்டு பேர் அண்ட் ஆரவ், நிஷா ரெண்டு பேரும் சேர்ந்து ஐ மீன் மொத்தமா ரெண்டு ஜோடி ஹனி மூன் போக போறீங்க!  வாங்க இப்போ லைட்டா சாப்பிட்டு அப்புறம் இதன்யா நம்ம ஷாப்பிங் போகனும்! என நடந்தார். 

நான் இப்போ என்னால் முடியாது. என சொன்னது சித்தார்த் தான். 

பவானி திரும்பி அவனை முறைத்து பார்க்க.. ஆல்ரெடி உன்னோட டைரக்டர் கிட்ட பேசிட்டேன். இப்போ கிளம்புற!. 

இதையெல்லாம் என்னை கேட்டு முடிவு பண்ணனும்? உங்க இஷ்டத்துக்கு என்னால் வர முடியாது. 

என்ன? என்ன சொன்ன? என்று பவானி அவனை நோக்கி வர அந்த நேரம் அங்கே அனைவரும் வந்து இருந்தார்கள். 

இதன்யா காதுகளில் அந்த ஹனி மூன் என்ற வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தது. 

அதன் பிறகு சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க..

என்னமா ஆச்சு?  பவானி என்று சந்திரமௌலியின் குரல் கேட்டது.

ஒன்னும் இல்ல மாமா என்று அவர் சொல்ல..

ரேவதி!  ரதி தேவி  அப்புறம் உங்க அண்ணன், ஆரவ், நிஷா எல்லாத்தையும் வர சொல்லு.. இன்னொரு தடவை சொல்லிடலாம். என்று கூறினார்.

சித்தார்த் கடுப்புடன் போய் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

ரவிச்சந்திரன் அவருடைய அறையில் இருந்து வெளியே வந்தார்.

பவானி அருகே போய் நிற்க..

அவரை ஒரு பார்வை துலைத்துக் கொண்டிருந்தது.

சித்தார்த் வேகமாக எழுந்து தன் அன்னையின் அருகில் சென்றவன். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சோபாவில் அமர வைத்தான். 

ஏய் சித்தார்த் என்னடா பண்ணிட்டு இருக்க? உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன்!

நீ கோவமா இருந்தா இருந்துக்கோ! அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை.  அந்த ஆளு உன்னை பார்க்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல!  உன் பக்கத்துல வந்து நிக்கிறார். அவரோட பார்வையே சரியில்லை..

ரவிச்சந்திரன்,  டேய் அவ என்னோட பொண்டாட்டி. அப்படியா அப்போ அங்க வரது யாரு? என்று ரதிதேவியை பார்த்து கேட்டான் .

சந்திரமௌலி ரவிச்சந்திரனை பார்த்து சிரிக்க..

இதன்யா! அடியே!  ஏய் அங்க என்னடி ஸ்டாச்சு மாதிரி நின்னுட்டு இருக்க? இங்க வா என் பக்கத்துல உக்காரு!. என்று இதன் யாவை அதட்டினான்.

அவள் என்னங்க என்று அருகில் செல்ல போக..

இதன்யா என்று ஒரு குரல் கேட்டது. வேற யார் ஸ்வர்ணம் தான்..

அம்மாச்சி நல்லா இருக்கீங்களா?  என்று ஸ்வர்ணத்தின் அருகில் சென்றாள்.

இவகிட்ட எத்தனை தடவ சொன்னாலும் நான் எதை செய்யாதே, என்று சொல்கிறனோ! அதை தான் செய்றா! யாரிடம் போய் உறவு கொண்டாடிட்டு இருக்காலோ! என்று கைகளை நசுக்கினான்.

டேய் மாடு வலிக்குது என்று ஒரு குரல் கேட்க..

 சாரி பவா சித்தார்த் என சொன்ன சித்தார்த் அதே போல இனிமேல் நீ இங்க வந்து தங்கவே கூடாது.  நீ கிருஷ்ணன் தாத்தா வீட்டுக்கு போயிடு. அதே போல இந்த ஹனி மூனை கேன்சல் பண்ணிடு..

“கேன்சல் என்னால் முடியாது! எனக்கு பேர குழந்தை வேணும்!”

அதை அவள் கிட்ட கேளு! எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல என சித் கூறினான். 

டேய் உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சா? எதுக்கு இப்படி எல்லாம் லூசு மாதிரி எது எதோ பண்ணிட்டு இருக்க? 

நான் நல்லா தான் இருக்கேன். என அவன் அமைதியாக இருக்க அந்த நேரம் ரதி சித்தார்த்தை வந்தார். 

பவானி எழுந்து நிற்க முயற்சி செய்ய சந்திர மௌலி சிரித்து கொண்டே உட்காரு பவானி! என் பேரன் உன் மேல அவ்ளோ பாசம் வச்சிருக்கான். 

சரியா சொன்ன ஓல்ட் மேன்! எனக்கு வேற பவாவை பத்திரமா பாத்துக்கணும்னு ரொம்ப கவலையா இருக்கு. இங்கே விட்டுப் போனா பிரச்சனையாகிடும்ன்னு தோணுது. ஏன்னா இங்க பாதுகாப்பே இல்லை. அதுதான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தேன். 

இன்னும் என்ன நீ நம்பலையா சித்து! இப்போ நான் மனப்பூர்வமா மாறிட்டேன். என்று சொல்லிக் கொண்டே ரதிதேவி சித்தார்த்தின் அருகில் வர..

சித், உங்கள நான் சொல்லுவேனா இப்போ நான் சொல்ற ஆளு வேற!  நீங்க இல்ல.. உங்கள பத்தி எனக்கு தெரியாதா? என்று இரு பொருள் கூட பேசினான்.

ரதிதேவி, நீ யார சொல்ற? சரி அதை விடு இப்போ உன்னோட உடம்பு எப்படி இருக்கு? பரவாயில்லையா என்று கேட்டார். 

எனக்கு என்ன?  நீங்க எப்படி இருக்கீங்க? என்று கேட்டான்.

பவானி இது எதையும் கண்டுகொள்ளாமல் கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.

ரதி தேவி சிரித்துக்கொண்டே நான் நல்லா இருக்கேன் சித்து! உன்னோட பொண்டாட்டி இதன்யா எப்படி இருக்கா? அவகிட்ட கூட நான் மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன். என்று திரும்பி பார்க்க..

இதன்யா ஸ்வர்ணத்தின் அருகில் நின்று கொண்டிருந்தாள்.

ரதிதேவி நேராக அவளிடம் சென்று என்னை மன்னிச்சிடுமா! நான் உன்ன தப்பா.. உனக்கு நிறைய  செஞ்சிருக்கேன்! அதையெல்லாம் மனசுல வச்சுக்காத! நானும் உன்னோட அத்தை தான்! அட்லீஸ்ட் என்னை மூணாவது மனுஷியாவது மதிமா! அதுக்கு கூட நான் தகுதி இல்லைன்னு தோணுது. என்று மிகவும் வருத்தத்துடன் பேசினாள்‌.

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பரவால்ல மேடம் இட்ஸ் ஓகே என்று நேராக பவானி அருகில் போய் நின்று கொண்டாள். 

ரதிதேவி ஒரு பெருமூச்சு விட்டு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றதுக்கு தான் பவானி அக்கா உங்க ரெண்டு பேரையும் வர சொல்லி இருக்காங்க..

சித்தார்த்தின் பார்வை  ரவிச்சந்திரன் மேல் ஒரு நிமிடம் சென்றது. எதுக்கு இந்த ஆளு எங்க அம்மாவை எப்படி பார்த்துட்டு இருக்காரு? நான் எப்படித்தான் விட்டுட்டு போவேன்? ஐயோ என்று புலம்பினான்.

ரதிதேவி மேலும் தொடர்ந்தார் . “ நம்ம எல்லாரும் இனி ஒண்ணா நம்மளோட சந்தோஷத்தையும் இனி வரப்போற எல்லா சூழ்நிலையும் சந்திக்க போறோம். அதனால அதுக்கு முதல் அடியாக சித்தார்த், இதன்யா, நிஷா, ஆரவ் இவங்க எல்லாரையும் சுவிட்சர்லாந்து ஹனி மூன்  அனுப்பலாம்னு மாமா கிட்ட சொன்னேன். அதை பத்தி பவானி அக்கா கிட்ட கூட பேசினேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. அதனால நீங்க நாலு பேரும் எல்லா பிரச்சனையும் மறந்து சந்தோஷமா போயிட்டு வரணும்கிறது எங்களோட ஆசை!” என்று கூறினார். 

சித்தார்த் இதுக்கு சுவிட்சர்லாந்து தான் போகணும்னு எதுவும் அவசியம் இருக்கா என்ன? ஏன்னா எதுக்கு சொல்றேன்னா? எங்களுக்கு கிடைக்கிற நேரத்துல இதன்யா ஹனிமூன் செஞ்சுட்டு தான் இருக்கா! என்று கூறினான்.

அனைவரும் அவனை ஷாக்காக்கி பார்க்க..

இதன்யா என்னங்க என்று அவனை கிள்ளினாள்.

உடனே சித்தார்த் தன்நிலைக்கு வந்து இல்ல.. இல்ல.. அப்படி சொல்ல வரல எங்களுக்கு கல்யாணம் ஆகி இப்போ ஆறு மாசத்துக்கு மேல ஆகப்போகுது.  எங்களுக்கு ஹனிமூன்…  எங்கே இருந்தால் என்ன? யார் கூட இருக்கோம் அது தான் முக்கியம்.  நம்மளோட மனசு தான்.. எங்க ரூமே எங்களுக்கு சுவிட்சர்லாந்து மாதிரி தான் இருக்கு.  நான் சொல்றது சரிதானே!.  எனக்கு நிறைய வேலை இருக்கு அதனால நாங்க இதுக்கு .. என்று அவன் சொல்ல வர..

பவானி , சித்தார்த் இதன்யா இரண்டு பேரும் ஹனிமூன் வருவாங்க! என்று சொல்லிவிட்டு சித்தார்த்தை திரும்பி பார்த்தார்.

அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ரவிச்சந்திரன் பார்வை சித்தார்த்தின் மீது இருந்தது. அவருடைய மனதில்  இந்த ராஸ்கல் இங்கே இருந்து கிளம்புனா தான் பவானி  மனச நம்ம மாத்த முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். 

சந்திரமௌலி அவர்கள் நால்வரையும் பார்த்து இதுல எல்லா பகையும் விட்டுடுங்க. தயவுசெய்து அமைதியா போயிட்டு வாங்க. ஏதோ இன்னைக்கு தான் என் குடும்பத்துக்கு ஒரு நல்ல காலம் வந்து இருக்குன்னு நினைக்கிறேன்.

ஆரவ், அவன் தான் எப்பவும் என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான் என்று விரைப்புடன் கூற..

சித்தார்த் ,  அப்போ இவனை தனியா போக சொல்லுங்க இவனுக்கு தனியா ஒரு இடத்துக்கு போயிட்டு கூட திரும்பி வர முடியாது. 

பாத்தீங்களா நீங்க இருக்கும் போதே எப்படி பேசறாங்க அங்க போய் எங்கள பழி கூட வாங்குவான்.

கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கியா அவன் உன்னோட அண்ணன் என்று ஒரு குரல் வேறு யார் ரதி தேவி தான். 

பவானிக்கு தான் இங்கு நடப்பது எதுவுமே சரியாக படவில்லை. ஆரவ் அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க .

பவானி மாமா நானும் என் மருமகளும் கொஞ்சம் ஷாப்பிங் போகணும். போயிட்டு வந்துட்டு சித்தார்த் இதயாவும் கிளம்புவாங்க. என்று இதன்யாவை பார்க்க..

ஸ்வர்ணம், அவளை சாப்பிட வச்சு கூட்டிட்டு போ..

இல்லங்க அத்தை நான் அங்க அவளுக்கு வாங்கி கொடுத்துடுவேன். சித்தார்த் நீ காரை எடு என்று சொல்லிக்கொண்டே அவர் முன்னாள் நடக்க..

இதன்யா  பின்னால் சென்றாள்.

சித்தார்த் பெருமூச்சு விட்டு அவர்களின் பின்னால் சென்றான். 

பவானி நேராக காரில் அமர்ந்து கொள்ள இதன்யா சித்தார்த்தின் அருகில் வந்து பாரு ஹனிமூன் வேண்டாம் என்று கொஞ்சம் ஃபோர்சா சொல்லி இருக்கலாம்ல்ல..

என்ன சொல்ற?

ஆமா அங்க போயி எப்படியும் எதுவும் நடக்க போறது இல்ல.

சும்மா போறதுக்கு எதுக்கு காசு எல்லாம் செலவு பண்ணிட்டு போகணும். அதுக்கு தான்!.என்று அவனை பார்த்து கண்ணடித்தாள். 

சித்தார்த்தால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. நீ இப்படியே இரு இன்னும் கொஞ்ச நாளில் உன் மேல முள்ளு முளைச்கும் . சரி நான் அத்தை பக்கத்துல ஒக்காந்துக்குறேன். என்று காருக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.

இங்கே ரிஷியின் வீட்டில் அம்மா எனக்கு இன்னைக்கு நைட் ப்லைட்!..

எங்கே டி என ராதிகா கேட்க..

 டைரக்டர் பெர்சனல்லா லீவ் போட்டு இருக்காரு. நான் ஒரு 4 டேஸ் எனக்காக லீப் போட்டு இருக்கேன்.

என்ன விஷயம் ? எந்த ஊருக்கு ஃபிளைட்? என்று ராதிகா கேட்டார்.

மேகா , கொஞ்சம் மைண்ட் சரியில்ல அதனால நான் சுவிட்சர்லாந்து போலாம்னு இருக்கேன். அதுக்கு தான்! சோ உன்னோட புருஷன் கிட்ட சொல்லிடு. என்ன கிராஸ் கொஸ்டின் எல்லாம் கேட்க கூடாது. அதுக்கப்புறம் வந்ததும் நான் புதுசா அந்த லக்சூரியஸ் ஸ்ட்ரீட்ல ஒரு வில்லா தாத்தாவை வாங்க சொல்லி இருக்கேன். அவருக்கு விருப்பம் இருந்தால் நம்ம கூட வரட்டும் இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம ஷிப்ட் ஆகலாம். 

ராதிகா அவளை திடுக்கிட்டு பார்க்க..

*

பாஸ் நீங்க சொன்ன மாதிரி அந்த ரெண்டு மாஸ்கும் இப்போ ரெடியா இருக்கு என்று சதாவின் முன்னால் இரண்டையும் வைத்தார்கள்.

இப்போ ட்ரை பண்றீங்களா பாஸ்? என்று அதில் ஒருவன் கேட்டான்.

 அவன் நேராக ஒரு கண்ணாடியின் முன்  நின்றவன் அந்த பூனை நிற கண்களை மறைக்கும் விதமாக ஒரு லென்ஸை எடுத்து இரண்டு கண்ணுக்கும் வைத்துக் கொண்டான். 

அதன் பின் இரண்டு மாஸ்க்கையும் போட்டு பார்த்தான். அந்த அடியாட்கள் வாயை பிளந்து பார்த்தார்கள். சரியா இருக்கு! பாகுந்தி! என புன்னகையுடன் எப்டி இருக்கேன்? என சதா திரும்பி கேட்டான். 

இதன்யா – சித் Honey moon எப்டி இருக்கும்? 

மேகா..? 

பூஜா வாழ்க்கை அடுத்த முன்னேற்றம் எப்போ? 

இப்படி அடுத்தடுத்து நிறைய twist ஆனால் முடிஞ்ச வரைக்கும் பாஸிட்டிவ் தான் டிரை பண்றேன். 

நாளை பார்ப்போம்

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga

உனக்கும் எனக்கும் படித்து பாருங்க different ஆ try பண்ணி இருக்கேன். 

EPI 248

டெல்லியில் இருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில்  ஸ்விட்சர்லாந்து 14 மணி நேரம் பயணம் சித்தார்த் மற்றும் ஆரவ் இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு அவரவர் இணையை கை பிடித்து கொண்டு விமானத்தில் ஏறினார்கள். 

இதன்யா சின்ன குழந்தை போல அவன் பின்னால் சென்றாள். அவள் அக்கம் பக்கம் சுற்றி பார்க்க.. 

என்ன தேடுற? 

இல்ல எப்போவுமே உங்க பின்னாடி ஒரு ஆய்த படை போல கூட்டம் கூட்டமாக வருவாங்க! இன்னிக்கு யாரையுமே காணோம் என்று இதன்யா கேட்க

அவங்களயெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று அவனுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தான்.

அது பிசினஸ் கிளாஸ் மிகவும் நேர்த்தியாக அந்த விமானம் இருந்தது.  இதன்யார் சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.

இப்போ எதுக்கு இப்படி சுத்தி சுத்தி பார்த்துட்டுருக்க? 

அது இல்ல நாம எப்பவுமே வர பிளைட் மாதிரி இது இல்ல! கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு! அதே போல நீங்க ஜெட் பிளைட் வச்சிருப்பீங்களே! அதுபோல இல்லையே?

சித், ஆமா இது பிசினஸ் கிளாஸ் இப்படித்தான் இருக்கும். என்று கூறினான். 

உங்களோட தம்பி எங்கே அவரு? என்று சுற்றிலும் பார்க்க..

சித்தார்த் அவளின் கையை இறுக்கி பிடித்தவன். என்ன? எனக்கு தம்பியா? எனக்கு ஒரே ஒரு தங்கச்சி மட்டும் தான்! அவ பேரு ரோஷினி!

அப்போ அவங்க யாரு! 

எத்தனை தடவை உனக்கு சொல்றது. அவங்க எல்லாம் யாருமே எனக்கு தெரியாது. அதே மாதிரி இன்னொரு தடவை அவங்களை பத்தி நினைக்கிற வேலையை விட்டுவிடு. இனிமே அவங்க யாரோ! நம்ம யாரோ!  நம்மளோட நாலு நாள் செட்யூல்ல  நம்ம சுத்தி பார்த்துட்டு வரப்போறாம் புரியுதா!. இல்லை இல்லை நீ சுத்தி பார்க்க போற..

இதன்யா, அப்போ நீங்க? 

அத நான் அங்க போய் சொல்றேன். என்ற சீட் பெல்ட் போட்டு விட்டான்.

நிஷா மற்றும் ஆரவ் இருவருக்கும் பின்னால்  நான்கு இருக்கைகள் தள்ளி இருந்தது. அவர்களுக்கு இது சாதாரண பயணம் போல் தோன்றியது. ஏனென்றால் இதுபோல ஆரவ் நிஷா இருவருமே நிறைய முறை பாரின் சென்று இருக்கிறார்கள்.  நிஷா கனடாவில் தான் படித்தாள். 

சித்தார்த் வழக்கம் போல் விமானத்தை மேலே எடுக்கும் நேரம் கொஞ்சம் பயம் எட்டி பார்க்க அவளின் கைகளை கோர்த்து கொண்டான். 

இதன்யா ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

ஹே சிரிக்காத!..

ஆமா நீங்களே ஜெட் வச்சிருக்கும் போது எதுக்கு இதுல புக் பண்ணி போறீங்க? 

சித், லேண்டிங் சார்ஜ், அண்ட் ஹாண்ட்லிங் சார்ஜ் air traffic controlல நிறைய ஃபார்மாலிட்டி இருக்கு! 

அது ஓகே ஆனால் நீங்க பெரிய பிஸ்னஸ் பண்றீங்க? அதுக்கு பர்மிட் வாங்கி இருப்பீங்க தானே! என அவள் கேட்க..

சித், ம்ம் இருக்கே! 

அப்போ எதுக்கு இதுல போறோம்! 

நீயும் நானும் மட்டும் போறதா இருந்தால் அதை யூஸ் பண்ணி இருப்பேன். கூடவே அந்த டூ அனிமல்ஸ் வருதே! அதை என்ன பண்றது. அதான் என்னோட ஜெட்ல அவங்க ஏற கூடாது. 

இவ்வளவு சுய நலமா இருக்கீங்க? 

ஆமா அப்படி தான் இருப்பேன். இப்போ என்ன எல்லாமே எனக்கு தான்! அதுவும் எனக்கு கீழே தான் இருக்கனும். என சித் கூறினான். 

இப்போ போற இடத்துக்கு நீங்க ஏற்கனவே போயிருக்கீங்களா? 

சித், இல்ல.. 

அப்போ போயிருக்கீங்க தானே!  

ஆமா! 

அவள் ஆர்வமாக எப்போ போனீங்க? என கேட்க ஆரம்பித்தாள். 

சொல்லியே ஆகணுமா! 

ஆமா!. 

சித், லீனாவுக்கு யூரோப் கண்ட்ரீஸ் ரொம்ப பிடிக்கும். எனக்கு வெனிஸ் பிடிக்கும். அப்போ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என அவளை பார்த்தான். 

சொல்லுங்க நான் எதுவும் நினைக்கல..

சித், நானும் அவளும் சேர்ந்து வந்தோம். ரொமான்டிக்கா ஹோட்டல், ஸ்கிடிங், பஞ்சி ஜம்பிங், பாராசூட், அண்ட் இங்கே சர்ச் நிறைய இருக்கு அங்கெல்லாம் போனோம்.  

அப்டியா! ம்ம் என்று தலையசைத்தாள்.  

சித்தார்த் அவளை திரும்பி பார்க்க மிகவும் இயல்பாக முகம் இருந்தது. 

அதன் பின் அவள் ஸ்விட்சர்லாந்துக்கு டிக்கெட் எவ்ளோ? 

ஏன்? 

எனக்கும் ஆசை நான் என்னோட புருசன் கூட இங்கே வர ஆசை! அங்கே போனதும் எல்லா இடத்தையும் சுற்றி பார்த்திட்டு வருவோம். என அவள் கூறினாள். 

யார் அது! 

ச்ச வேணாம்!. 

அந்த பெர்சன் யாரு? அன்னிக்கு என்னை ஹாஸ்பிடலில் பார்க்க வந்த அப்போ சொன்ன? 

எனக்கு மறந்து போச்சு! ம்ம் இதை கேளுங்க! நான் பாரின் எல்லாம் வர மாட்டேன். ஹிமாச்சல் பிரதேசம் கூட சூப்பரா இருக்கும். அங்கே போவேன் என்னோட பட்ஜெட்க்கு சரியா இருக்கும். 

சித், எதுக்கு இந்த போட்டி! நீயா தானே கேட்ட! அதான் நான் லீனா பத்தி சொன்னேன். 

இப்போ நான் மட்டும் என்ன பண்ணேன். எனக்கு பிடிச்ச விசயத்தை சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு! என இதன்யா அவனை பார்த்தாள். 

சித் அவளின் அருகில் நெருங்கி அப்படியே இதழை கவ்வி கொண்டான். அவள் கண்கள் பெரிதாக விரிய கண்கள் ஒரு நிமிடம் மூடியவள் விலக முயற்சி செய்தாள்.அவன் கைகள் அவளின் முதுகுக்கு பின்னால் அணைத்தவாறு இருக்க.. கொஞ்சம் மென்று கொஞ்சம் தின்று கொண்டே இருந்தான். 

அந்த நேரம் ரெஸ்ட் ரூம் சென்று வெளியே வந்த நிஷாவின் பார்வையில் அவர்கள் ஒட்டி கொண்டு இருப்பது தெரிய நேராக ஆரவை பார்த்தாள். .அவன் விமான பணிப்பெண்ணிடம் கடலைபோட்டு கொண்டு இருந்தான். 

க்கும்..

ஆரவ் உடனே விரைப்புடன் அமர்ந்து கொண்டு வா பேபி! என அழைத்தான். 

நீ நீ எல்லாம் எதுக்கு இருக்க? அந்த சித்து பாரு எவ்ளோ ரொமான்டிக்கா இருக்கான் தெரியுமா! 

என்ன ரொமான்டிக்? நான் தான் எங்க ஃபேமிலில ரொம்ப ரொமான்டிக் தெரியுமா! 

ஆமா இந்த மூணு மாசத்துல அப்படி என்னத்தை பண்ண? என நிஷா அவனை கேவலமாக பேச..

ஹே இப்போ என்ன ஆச்சு? எதுக்கு இப்படி குதிக்கிற?  லைட்டா ட்ரிங்க் டேஸ்ட் பண்ணி பாரு என ஆரவ் கூற. 

நிஷா, அங்கே சித் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். இங்கே இருந்தே அவங்க ஹனி மூன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க! ஆனால் நீ! இங்கே இருக்க பொண்ணுங்க கிட்ட வழிஞ்சிட்டு இருக்க.. 

ஆரவ் ஆச்சரியத்துடன் நிஜமாவா இப்படி பப்ளிக் பிளேஸ்ல எல்லாம் இந்த மாதிரி பிஹேவ் பன்றானா? அவன் இப்படி பண்றான்? இது எல்லாம் அதிசயம் தான்! ஹான் என ஒரு பெரு மூச்சை விட்டான். 

இப்போ நீ எதுக்கு சோகமா சொல்ற..

எனக்கும் கிஸ் கொடு!. 

ஆரவ் ஹே அவன் கூட இருக்க பொண்ணு அவ்ளோ அட்ரேக்டிவா இருக்கா! அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! என் மம்மி அத்தனை பிளான் போட்டு அந்த லீனாவை அவன் கிட்ட இருந்து பிரிச்சும் கூட இப்படி சின்ன வயசில தொக்கா மாட்டி இருக்கு! நானே எக்ஸ்பக்ட் பண்ணல! அவனுக்கு அமையுது! நான் கூட லீனாவை டிரை பண்ணேன். ஆனால் அவள் திரும்பி கூட பார்க்கல.. சித்துவை விட்டு அந்த JK கூட சித்திட்டு இப்போ புதுமுகம் டிரெண்ட்ல இருக்க ஒருத்தன் கூட கமிட் ஆகிட்டா! என உண்மையை அனைத்தும் புட்டு புட்டு வைத்து கொண்டு இருந்தான். 

நிஷா அவனை கோபம் பொங்கும் கண்களுடன் பார்க்க.. 

ஆரவ் கொஞ்சம் ஓவரா சொல்லிட்டேன் போல என நிதானித்து கொண்டு ஜஸ்ட் kidding பேபி!. 

நிஷா, நீ ரொம்ப மோசமா இருப்பன்னு நான் எதிர் பார்க்கல.. உங்க அப்பா புத்தி தானே உனக்கும் இருக்கும். ச்சீ!.

ஆரவ் சிரித்து கொண்டே இதையெல்லாம் அந்த சித்து முன்னாடி சொல்லு அவன் ரியாக்ட் ஆவான். ஆனால் நான் எதுக்கும் ரியாக்ட் ஆக மாட்டேன். 

நிஷா அவனை கேவலமாக பார்க்க..

ஆரவ், நீ வர்ஜின் இல்லன்னு எனக்கு தெரியும்! ஆனால் பாரு நான் அதை பெருசா எடுத்துக்கல..

நிஷா கொஞ்சம் திடுக்கிட்டு பார்க்க..

ஆரவ் சிரித்து கொண்டு நீ எனக்கு பார்ட்னர். இதுக்கு முன்னாடி நான் மோசமா இருக்கலாம். ஆனால் உன்னை கல்யாணம் பன்னதும் கொஞ்சம் என்னையே கஷ்ட பட்டு மாற்றி கொண்டேன். அதான்.. சோ நம்ம எதையும் நினைக்காமல் போனால் நம்ம லைஃப் ஸ்மூதா போகும். 

நிஷா எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள். .

ஆரவ், சரி விடு என அவளின் கையை கோர்த்து கொண்டு முத்தம் பதித்தான்.

நிஷா, இனி நீ யாரையும் நினைக்க மாட்ட தானே! 

ம்ம் மாட்டேன்! என் பேபி உன் ஸ்டோமக்ல மட்டும் தான் கொடுப்பேன். என ஆரவ் பார்த்தான். 

நிஷா அவனுடைய இதழில் ஒரு முத்தம் வைக்க 

இங்கே இதன்யா அவனிடம் இருந்து கஷ்ட பட்டு விலகினாள். 

சித் அவன் கையில் இருக்கும் மேகசீனை புரட்டி பார்க்க ஆரம்பித்தான். 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இரவு வானத்தை பார்த்து கொண்டே வந்தாள். அவளுக்காக பெட் சீட் எடுத்து கொடுத்தான். 

இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. இரவு உணவு வைக்க பட்டது. சாப்பிட ஆரம்பித்தார்கள் .

ஆனால் எதுவும் பேசி கொள்ள வில்லை. 

எப்டி கிஸ் பண்ணேன்னு தெரில..

அப்டியா நான் கேட்கவே இல்லையே! 

சித், தெரியாமல் பண்ணிட்டேன். 

இதன்யா, நீங்க ஜலஸ்ல கிஸ் பண்ணுற்றீங்கன்னு நினைசிட்டென். நீங்க எதுக்கு பொறாமை படுறீங்க? நீங்க பெரிய நடிகர் உங்களை சுத்தி ஆயிரம் அழகான பொண்ணுங்க இருக்கும் இப்படி நீங்க கண் அசைச்சா கூட உங்க காலில் வந்து விழுவாங்க..

ஆயிரம் பொண்ணையும் என்னால ஹாண்டிள் பண்ண முடியும்! ஆனால் எனக்கு அதுல இன்றஸ்ட் இல்ல.. ஆனால்..

ஆனால்! என்ன? டிரை பண்ணுங்க நான் கேட்க மாட்டேன். 

சித், தானா என்னை தேடி வரும் ஆயிரம் பொண்ணை விட ரேர் பீசா இருக்க நீ என்னை தேடி வந்தால் அதுல ஒரு கிக் இருக்கு! ஆனால் உன்னை கவுக்க முடியலயே ஓபன் ஸ்டேட்மெண்ட்.. 

இதன்யா…? 

தொடரும்..

சித்தார்த் charactor ஒரு actor.. so இந்த ஸ்டோரி ஒரு actor life background family and அவனோட lifeல middle class girl வந்தால் எப்டி இருக்கும்? அப்டின்னு தான் write பண்ணி இருக்கேன். இந்த கதை ஒரு flowல போயிட்டு இருக்கு. அதுக்காக cultural differences பார்க்காமல் இஷ்டத்துக்கு end கொடுக்க மாட்டேன் readers.. story எழுதிறதுக்கு முன்னாடி அதோட one line baseக்கு ரொம்ப மெனக்கெட்டு நிறைய படிச்சு தான் இந்த different journar choose பண்ணி இருக்கேன். நீங்க சொல்ற மாதிரி write பண்ணா என்னோட way change ஆகிடும். ஆனால் promise end of the story நல்லா தான் இருக்கும். நிறைய epi போனால் தான் audio book போகுது.. சண்டைக்காரா story கம்மி epi கம்மி words அதனால் audiobook waiting list போயிடுச்சு.. I’m so sad.. 😭 இதை audiobook கொண்டு போக ஆசை அதான் eloberate பண்ணி எழுதுறேன். So என்னையும் புரிஞ்சுக்கோங்க 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 249

சித், தானா என்னை தேடி வரும் ஆயிரம் பொண்ணை விட ரேர் பீசா இருக்க நீ என்னை தேடி வந்தால் அதுல ஒரு கிக் இருக்கு! ஆனால் உன்னை கவுக்க முடியலயே ஓபன் ஸ்டேட்மெண்ட்..  என்று கூறினான். 

நான் எப்போ வேனாமுனு சொன்னேன். ஆனால் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சாரி!. அதே போல பழைய சித்து வேணும். 

சித், உன் மேல அட்வான்டஜ் எடுத்ததுக்கு என்னால் முடிஞ்ச அளவுக்கு சாரி சொல்லிட்டேன்னே!. 

இதன்யா அவனை முறைத்து பார்த்து  எப்போவுமே இப்படி தான் இருக்க போறீங்களா? உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?  

உன்னை கஷ்ட படுத்த கூடாது. 

அடப்பாவி நீ நிமிசத்துக்கு நிமிஷம் என்னை கஷ்டப்படுத்துற வேலையை மட்டும் தான் செஞ்சிட்டு இருக்க என்று மனசு மனதில் நினைத்தாள்.

இப்போ எதுக்கு அமைதியா இருக்க? எதுவும் பேசு! அப்புறம்… ஹான் சாரி நான் உன்ன கிஸ் பண்ணதுக்கு!..

இதன்யா அவனை வித்தியாசமாக பார்த்தவள். நம்ம இந்த ட்ரிப் முடிஞ்சு வீட்டுக்கு போனதும்  ஸ்ட்ரைட்டா அபி அண்ணாவை ஹாஸ்பிடல்ல போய் பாக்கணும்!..

ஏன் என்னாச்சு? 

 “நீங்க அந்த பாம் ப்ளாஸ்ட் குண்டடிப்பட்டதிலிருந்து கொஞ்சம் டிஃபரண்டா பிகேவ் பண்றீங்க!.  ஐ திங்க் நீங்க பைத்தியம் ஆகிட்டீங்கன்னு எனக்கு தோணுது!”

நான் நல்லா தான் இருக்கேன்.

இல்ல நீங்க சரி இல்ல?  எதுக்கு மாத்தி மாத்தி பேசுறீங்க? நீங்க பொண்ண மாறிட்டீங்களா?

ஹே என்ன டி!. விட்டால் ஓவரா பேசிட்டு போற!. 

இதன்யா “அன்னைக்கு பக்கத்துல வரமாட்டேன்னு சொல்றீங்க! இன்னிக்கு பக்கத்துல வந்து கிஸ் பண்றீங்க! நானா பக்கத்துல வந்தா வேண்டான்னு சொல்லி போறீங்க! இப்போ உன்ன உஷார் பண்ண முடியலன்னு சொல்றீங்க! உங்களுக்கு என்னதான் ஆச்சு?”

நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. என்று சாப்பிட ஆரம்பித்தான்.

சரி என்கிட்ட இருந்து என்ன தான் எதிர்பார்க்கிறீங்க? அதையாவது சொல்லுங்களேன்!..

சித்தார்த் அவளை பார்த்தான் நான் ஒரு விசயம் உன் கிட்ட எதிர்பார்க்கிறேன். அது கிடைக்குமான்னு தெரியல.

என்ன சொல்லுங்? 

அன்னிக்கு நீ எனக்கு…  அது மாதிரி இந்த ட்ரிப்ல பண்ணி விடுவியா!. 

இதன்யாவுக்கு கோபம் வர அவன் கன்னத்தில் அடித்தாள்.

சித்தார்த் அவளின் கையைப் பிடித்துக் கொண்டவன். நீ கேட்ட நான் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு. எனக்கு புடிச்சிருக்கு நீ!. 

ஹே நிறுத்து நிறுத்து இது உனக்கே கொஞ்சமாவது நல்லா இருக்கா? என இதன்யா பொங்கினாள். 

உடனே சித்தார்த் இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு சத்தியமா தெரியலடி!.

உனக்கு என்னதான்டா தெரியும்! எனக்கு பிசிக்ஸ் தெரியும்! 

எனக்கு பழைய சித்தார்த் வேணும்! நீ எனக்கு உன்னை பிடிக்கல.. 

எனக்கும்  இதன்யா வேணும்!. அவ்ளோ தான்!. 

நான் இதன்யாவா தான் இருக்கேன். 

சித்தார்த், உனக்கு மட்டும் தான் நான் வித்தியாசமா தெரியரேன். ஆனா எனக்கு நீ ஒரே மாதிரி தான் தெரியுற!..

நீங்க எப்பவுமே இப்படியே புதிரா பேசிட்டு இருந்தால் நம்ம வாழ்க்கை எதை நோக்கி போறது! கொஞ்சம் நிறுத்துறீங்களா!..

சரி இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்று லேப்டாப்பை எடுக்க ஆரம்பித்தான். அதை தடவுங்க உட்கார்ந்து!.  உங்களுக்கு அது தான் வேலை… 

அப்படியே 14 மணி நேரங்கள் கடந்தது. ஜெனிவா வந்து இறங்கினார்கள். அவள் கீழே இறங்குவதற்கு முன் குளிர் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்வட்டர், மற்றும் தலைக்கு கட்டுவது என அனைத்தையும் போட்டு விட்டவன். கைக்கு கிளவுஸ் காலுக்கு புதிய வகையான ஷு என அனைத்தையும் போட்டு விட்டான்.

அவர்களின் பின்னால்  ஆரவ், நிஷா மற்றும் இருவரும் வந்தார்கள். அந்த நேரம் சித்தார்த் இதன் யாவை சுற்றி வாட்டசாட்டமாக 8 நபர்கள் வந்து நின்றார்கள் இவங்க எல்லாம் யாரு? என திடுக்கிட்டு பார்த்தாள் .

சித்தார்த்,  என்னுடைய பாதுகாப்புக்காக சந்திரமௌலி ரெடி பண்ணிருக்காரு..

நம்ம ஊருல தான் உங்களுக்கு நிறைய எதிரிகள் இப்போ இங்கே என்ன பிரச்னை?   இங்கேயும் அதே போல இருக்காங்களா? என்று கேள்வியாக கேட்டாள்.

ஆமா என்று ஒற்றை பதிலுடன் முடித்தான். 

இப்போ பிரெஷாகிட்டு டின்னர் சாப்பிடலாம் என்று நிஷா சொல்ல..

சித்தார்த் எதுவும் பேசாமல் முன்னால் சென்றான். அவன் பின்னால் ஆரவ்,  நிஷாவும் சென்றார்கள்.

அங்கே சென்று சந்திரமௌலி அவர்களுக்காக புக் செய்த ஹோட்டலுக்கு சென்றனர். பிரஷாகி வெளியே வந்தவர்கள் நால்வரும் பிரேக்ஃபாஸ்ட் ஒரே இடத்தில் சாப்பிட்டார்கள்.

இதன்யாவிற்கு அந்த உணவுப் பழக்கம் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை. சாப்பிட்டு முடித்ததும், சித்தார்த் நாங்க கிளம்புறோம்! என்று கூறினான்.

எங்க கிளம்புற? என்று ஆரவ் கேட்க..

சித்தார்த் அவனை முறைத்து பார்த்தான். அப்படி இல்ல என்று தயங்க..

சித்தார்த் வந்த வேலையை நீ பாரு! எனக்கு நிறைய வேலை இருக்கு! அதனால நாங்க கிளம்புறோம்! அதே போல 4 டேஸ் ட்ரிப் முடிஞ்சு ஜெனிவா ஏர்போர்ட்டுக்கு வந்துடுங்க. என்று அவன் செல்ல..

இதன்யாவும் அவன் பின்னால் சென்றாள். 

இங்கே உனக்கென்ன வேலை! ஹனிமூன் தானே வந்திருக்க? 

சித், அதே தான் நானும் சொல்றேன். உன் பக்கத்துல எனக்கென்ன வேலை!  நீ ஹனிமூன் தான் வந்திருக்க.. அந்த வேலையை நீ பாரு! என்று அந்த காவலாளிகளை பார்த்தான்.

அதில் நான்கு பேர் ஆரவ் அருகில் நின்று கொண்டார்கள். நிஷா இவங்க யாரு? என்று கேட்க..

சித்தார்த் இவங்க நாலு பேரும் உங்க ரெண்டு பேருக்கு பாதுகாப்பு என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

நம்ம இப்போ எங்க போறோம் என்று மூச்சு வாங்க பேசினாள்.

அது உனக்கு எதுக்கு என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றார்கள்..

சித், ரண்டு நாளைக்கு தேவையான ட்ரஸ் எடுத்துக்கோ!. ம்ம் உனக்கு ஒன்னும் தெரியாது நானே எடுத்து வைக்கிறேன். என்று சொல்லி ஒரு சின்ன ட்ராலியை எடுத்தவன். அந்த பேக்கை திறந்தான். அதில் உள்ள உடைகளை பார்த்ததும் என்னடி இது?. இந்த டிரஸ்?

 என்ன?  என்று திரும்பிப் பார்த்தாள்.

சித், இத தான் நீ என் முன்னாடி போட்டுக்க போறியா? அப்படியா இது போட்டு காமி என்று கூறினான்.

அய்யோ ச்சீ வியாக்!. அதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது..  எப்படி இதெல்லாம் இங்க வந்துச்சு? 

ஹே நடிக்காத டி! நீதான போயி எங்க அம்மா கூட பர்ச்சேஸ் பண்ண! சும்மா நடிக்காத எதோ ஒரு பிளான் இருக்கு என்று கூறினான்.

இதன்யா,  சத்தியமா அந்த ட்ரஸ் எப்படி இதுல வந்ததுன்னு தெரியாது!  அத்தை எனக்கு வேற டிரஸ் தான் வாங்கி கொடுத்தாங்க!  இது பாருங்க இந்த சூட் தான் வாங்கி கொடுத்தாங்க!  இது எப்படி வந்துச்சுன்னு எனக்கு சத்தியமா தெரியாது? நான் பேக் பண்ணும் போது இது இல்லையே!

சித் சிரித்துக்கொண்டே அப்போ சரி சரி விடு!.  இங்கேயே இருந்திபோம் எங்கேயும் போக வேணாம்.

ஏன்? 

நீ எல்லா ட்ரெஸ்ம் போட்டு காமி ஒரு ஃபேஷன் ஷோ நான் கண் குளிர பார்ப்பேன். 

கொண்ணு போடுவேன். கிரகத்தை இதை யார் போடுவா!. என இதன்யா சிணுங்கினாள். 

அப்போ நீ போக போட போறதில்லையா?  என்று ஏக்கமாக கேட்டான்.

நான் எல்லாம் இதையெல்லாம் போட மாட்டேன் பா. சீ என்று முகத்தை ஒரு மாதிரி வைத்தாள்.

சரி என்று  சித் பெருமூச்சு விட்டு அதிலிருந்து தள்ளினான்.

இதன்யா எல்லா டிரஸ்ம் இதே மாதிரி தான் இருக்கா! ஐயய்யோ எனக்கு இந்த டிரஸ் எல்லாம் வேண்டாம். நான் இதை போட மாட்டேன். நான் இப்போ போட்டு இருக்க ட்ரெஸ் அதையே துவைத்து காயவைத்து திரும்ப இதையே போட்டுக்குறேன். என்று கூறினாள்.

இங்கே பனி எப்படி இருக்குன்னு பார்த்தல்ல!  அப்புறம் உறைஞ்சு போயிடுவ!  அதுவும் நாம இப்ப போற இடம் அது வேற மாதிரி இருக்கும். என்று கூறினான்.

இப்ப நாம எங்க போறோம் என்று கேள்வியாக கேட்டாள்.

சித்தார்த் போனதுக்கு அப்புறம் உனக்கே தெரியும் என்று சித்தார்த் கூறினான்.

அப்போ எனக்கு ட்ரெஸ் வேணுமே என்று அவள் சினுங்க 

சித்தார்த்  சிரித்துக்கொண்டே சரீ முதல ஷாப்பிங் போலாம்!  நமக்கு பிளைட்டுக்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு.  ஷாப்பிங் முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் போவோம்.. என்று பாஸ்போர்ட், விசா மற்றும் சில பொருட்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டவன்.

நேராக அதை காவலாளிகளிடம் கொடுத்துவிட்டு நீங்க வெயிட் பண்ணுங்க. நாங்க ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டரோம்..

பாஸ் என்று அவன் அழைத்தான்.

இட்ஸ் ஓகே எனக்கு பாதுகாப்பு இருக்கு..

இருந்தாலும் நீங்க பாதுகாப்பா இருக்கணும் என்று ஒரு கண்ணை கொடுத்தார்கள்.

அதை வாங்கி அவன் சேஃப்டிக்காக உள்ளே வைத்துக் கொண்டான்.

கிளம்பலாமா என்று இதன்யா ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வர…

ம்ம் போலாம் என்று முதலில் ஷாப்பிங் போனார்கள். அவளுக்கான உடையை தேர்வு செய்தார்கள். இது எவ்வளவு?   உனக்கு எது வேணுமோ அதை மட்டும் சூஸ் பண்ணு!  இது எவ்வளவு காசு? அப்டின்னு கணக்கு போட்டுட்டு இருக்காத!..

கேட்டால் என்ன?

கேட்காத டி டென்ஷன் பண்றா என்று கூறினான்.

சரி சரி ஓவரா பண்ணாதீங்க என்று இரண்டு உடைகளை ஜூஸ் செய்தாள். அழகாகத் தான் இருந்தது.

இப்பவே டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறியா? 

பண்ணவா!..

சித், ம்ம் இப்போ  வேண்டாம் வேண்டாம் இங்க வேண்டாம்!  நம்ம அங்கே போனதுக்கு அப்புறம் நம்ம இடத்துக்கு போனதுக்கு அப்புறம் சேஞ்ச் பண்ணிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கிளம்பினார்கள்.

 ஜெர்மாட் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று வாசகங்கள் எழுதி இருந்தது. 

மேகா சுவாசத்தை இழுத்து விட்டு அந்த குளிர் காற்றை உள்ளுக்குள் நிரப்பினாள். F*  இப்பதான் நல்லா இருக்கு. இதே போல என் மைன்ட் எப்பவும் இருக்கணும்.. ஆனால் நான் தனியா இருக்க கூடாது. என் கூட   அவன் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கண்ணை திறந்தாள்.

அதன் பின் ஒரு ட்ரெயினில் ஏறி அவள் தங்கும் இடத்திற்கு சென்றாள் . ஹோட்டல் கிறிஸ்டியானா மிகவும் புகழ்பெற்ற ஹோட்டல்..

 இப்போ நம்ம எங்க போறோம்? 

நம்ம இப்போ ஜெர்மாட் போறோம்.. என சித் கூறினான். 

ஜெர்மாட்டா அது எங்க இருக்கு?

நீ வா நான் கூட்டி போறேன்.

உடனே இதன்யா போனை எடுத்து ஜெர்மாட் என டைப் செய்ய போக.. 

அவளின் கையில் இருந்து போனை பிடிங்கியவன் ஜஸ்ட் அங்க வந்து பாரு டி! இப்போவே உனக்கு என்ன அவசரம்.  என்று கையை கோர்த்துக் கொண்டவன் மிகவும் ஆர்வத்துடன் இருந்தான்.

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு ஜெனிவாவில் இருந்து ஜெர்மாட் வந்து இறங்கினார்கள். இது எந்த இடம்!. என கேட்டு கொண்டே இறங்கி வந்தவள். உடனே உறைந்து நின்றாள். 

என்ன மேடம் சத்தத்தையே காணோம்! என  சித்தார்த் இதன்யாவின் முகத்தை பார்த்து எப்படி இருக்கு? என்று கேட்டான்.

இதன்யா வாயை பிளந்து அந்த இடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.  செம்மையா இருக்கு! 

 சித், அதுக்கு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.  இங்க நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். நிறைய இடத்துக்கு போலாம்.  இங்க மூன்று ரைட் ரொம்ப பேமஸ் அதுல முதலில் அண்டர் கிரவுண்ட் ட்ரெயின் ஒன்னு இருக்கு, அதுக்கு அப்புறம் கேபின் ரைட் அதாவது இந்த பனிக்கு நடுவுல ரோப்ல போகும்..  கேபின் ரைட்..

எப்படி  சர்னு போகுமா? 

ம்ம் ஆமா சர்ருன்னு போயிட்டு வரும் அது நல்ல எக்ஸ்பீரியன்ஸ்  போலாமா! என இரு புருவம் தூக்கினான். 

ம்ம் போலாமே என்று அவளும் சந்தோஷமாக கை பிடித்துக் கொண்டாள். 

அதன் பின் தயக்கத்துடன் கைகளை விட்டவள்.  இங்கே எல்லாம் இங்கே லீனா கூட வந்திருக்கீங்களா?

 அவளும் நானும் இங்கெல்லாம் வந்ததே இல்லையே என்று கூறினான்.

ஹே நேத்து தானே சொன்னீங்க? 

என்ன சொன்னேன்? 

 இதன்யா பிளைட்ல வரும்போது சொன்னிங்களே! லீனா கூட நான் வந்து இருக்கேன் யூரோப் கண்ட்ரிஸ் பிடிக்கும் அப்படின்னு சொன்னீங்க!

சித், யூரோப் கண்ட்ரிஸ்ல ஸ்விட்சர்லாந்து மட்டும் தான் இருக்கா என்ன? 

 ஏன் வேற என்ன இருக்கு என்று அவளும் கேட்டாள்.

 சித்தார்த், ஆக்சுவலா ஸ்விட்சர்லாந்து வர பிளான் தான்!  மேரேஜ் அப்புறம் ஹனிமூன்க்கு அவளை கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.  அதுக்கு அப்புறம் மேரேஜ் ஆச்சு! ஹனிமூன் வந்தோம்!.

என்ன?  என்று உதட்டை கடித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

மேரேஜ் ஆச்சு டி! உனக்கும் எனக்கும் என புருவம் உயர்த்தி இதோ ஹனிமூன் வந்துட்டோம் என்று கூறினான்.

 இதன்யா,  அப்போ அவங்க கூட நீங்க எங்கேயும் போனதில்லையா?

நான் நியூசிலாந்து போயிருக்கேன் என்னோட ஃபிரண்ட்ஸ் மலேசியா சிங்கப்பூர்ல இருக்காங்க..

நான் அதை கேட்கல.. 

வேற என்ன? 

இதன்யா, அவங்க கூட போனதை பத்தி கேட்கிறேன். 

சித், அவளை அடிக்கடி  இத்தாலி கூட்டிட்டு போயிருக்கேன். அங்க ஒரு சர்ச் இருக்கும். வழக்கமா வருஷத்துக்கு ஒரு தடவை அந்த சர்ச்சுக்கு நானும் அவளும் போயிட்டு வருவோம்.  ரெண்டு வருஷம் ஒட்டுக்கா போனோம்.

அப்போ மூன்றாவது வருஷம் என்று  தயங்கினாள்.

அவ்ளோ தான் முடிஞ்சு போச்சு. என சித் கூறினான். 

இட்ஸ் ஓகே என்று இப்போ அவங்க எப்படி இருக்காங்க? ஏதோ சர்ஜிகல் என்று சொன்னீர்களே! 

சித், அதுவா  தெரியல அதுக்கப்புறம் நான் அவ கிட்ட பேசவே இல்ல..

 பொய் சொல்லாதீங்க..

சித், உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன வரப்போகுது?  என்று அழைத்துச் சென்றான்.

அதன் பின் ட்ரெயினில் ஏறி சென்றார்கள். மிகவும் நேர்த்தியாக கட்ட பட்ட நிறைய கட்டிடங்கள் வில்லா என அனைத்தும் அழகாக இருந்தது. 

 சித், ஜெனிவால – 5 டிகிரி ஆனால் இங்கே அதை விட கம்மி பாரு.. இதன்யா இறங்கியதும் அங்கு இருக்கும் பணிசிதறலை பார்த்தாள். அருகில் சென்று அள்ள போக..

ஹே ஹே என்ன டி பண்ற? 

அவள் வெடுக்கென திரும்பி பார்க்க..

சித்,  இப்போ நம்ம தங்கும் இடத்துக்கு போயிட்டு தூங்கிட்டு ஈவ்னிங் உன்னை கூட்டு போறேன். வா! அடி வாங்க போற! க்லவ்ஸ் கழட்ட கூடாது. ரெண்டு பக்கமும் காது அடைச்சு இருக்கணும் 

இதன்யா, சரி சரி என அந்த இடத்தை பிரமிப்புடன் பார்த்தாள். 

சித், வாடி! என அவன் நடக்க ஆரம்பித்தான். 

என்ன நடந்து போறோம்! 

சித், இங்கே கார் கிடையாது. கவர்மெண்ட் வெஹிக்கில் மட்டும் தான். அது இல்லனா நடந்து தான் போகனும்! 

இங்கே உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா! 

அது உனக்கு எதுக்கு? என நடக்க ஆரம்பித்தார்கள். 

எனக்கு எனக்கு குளிருது!. 

பக்கத்தில் வா என சித் அவளுடன் ஒட்டி நடக்க ஆரம்பித்தான். 

அவர்கள் பாதி தூரம் வந்து விட.. சித்தார்த் என்று குரல் .

அங்கில்! என குரலை வைத்து கண்டு பிடித்தான். 

You always sharp என பொனிடிக் proper ஆங்கிலத்தில் அவர் கூறினார். 

சித், she is my wife.. இதன்யா சித்தார்த்! 

அவர் புன்னகையுடன் சுவீட்டி நைஸ் to மீட் யூ வெல்கம் ஜெர்மாட்.. என சித்தார்த்தின் கையில் இருந்து ட்ராலியை வாங்கி கொண்டார். 

இட்ஸ் ஒகே அங்கில் என அவன் வாங்க வர.. 

You are my guest.. என முன்னால் நடந்தார். 

யாருங்க இவரு? என இதன்யா கேட்க..

சித், இன்னிக்கு இவருடைய own treditional house இங்கே இருக்கு! அங்கே தான் நம்ம ஸ்டே பண்ண போறோம்! இங்கே இருக்க வீட்டில் ஸ்டே பண்றது நல்லா ஃபீல்! நமக்கு full day schedule அங்கிள் prepare பண்ணி வச்சுட்டாரு ஜஸ்ட் நம்ம என்ஜாய் பண்ண போறோம்! என நடந்து கொண்டே அந்த அழகாக அலங்கரிக்கப்பட்ட வில்லாவுக்கு வந்தார்கள். 

ஹே ஹேன்ட்சம் பாய்! வெல்கம்! Who’s this? பிரிட்டி கேர்ள்? 

She is his wife.. 

சித், ஆன்டி ஹவ் ஆர் யூ என அன்புடன் கட்டி அணைத்தான். 

அம் குட்! என அவர் இதன்யாவை பார்த்தார். 

இதன்யா சித்தார்த் ஆன்டி! How is it? 

கார்ஜியஸ் ஹேண்ட்சம் என அவளை பார்த்தார். 

சித், ஹே அவங்களை ஹக் பண்ணு! வணக்கம் சொல்லு!. 

வணக்கம்! என கை கூப்பினாள். 

சித், இதன்யா எப்டி இருக்கீங்கண்ணு கேளு டி! 

உடனே அவர் சிரித்து கொண்டே லீவ் இட்.. ஹேவ் அ குட் டே.. we will meet tomorrow.. and இதன்யா என அவளை பார்த்தார்.

ம்ம் பாய் ஆன்டி என அவள் கை அசைத்தாள். 

சித் நேராக அவர்கள் சென்றதும் கதவை சாத்த போக..

மேகி, சித்தார்த்தின் கையை பிடித்து எதோ கூறினார். .சித் சிரித்து கொண்டே ம்ம் definately definately! என தலையை அசைத்தான். 

மேகி, நாட்டி பாய் மைன்ட் இட் என சொல்லி விட்டு சென்றார். 

சித் கைகளில் உள்ள கையுறை கழற்றி கொண்டே கேம் ஃபயாரை இன்னும் அதிக படுத்தினான். 

இவங்க ரெண்டு பேரும் யாரு? இவங்கள பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே! 

சித், இவங்க கிருஷ்ணன் தாத்தாவுடய பிரென்ட்  பையன் ஜார்ஜ் அவங்களோட மனைவி மேகி!..

இதன்யா ஆச்சரியத்துடன் நெருப்பின் பக்கத்தில் வந்து அமர்ந்தவள். ஆமா அவங்க போகும் போது என்ன சொல்லிட்டு போறாங்க! 

சித் சிரித்து கொண்டே ஒன்னும் இல்ல என கூறினான். 

சொல்லுங்க! .

சித், எனக்காக வெல்கம் கேக் பண்ணாங்க போல! நம்ம ஹனிமூன் வந்திருக்கோம்ன்னு தெரிந்து இருக்க அதுக்கு தகுந்த நம்மளை வெல்கம் பண்ணிருப்பாங்களாம்! 

அப்டியா! இங்கே என்ன ஸ்பெஷல் .

கிரீன் ஃபேரீ ( green fairy).. என சித் கூறினான். 

அப்போ நானும் அதை டிரை பண்றேன். 

என்ன? நிஜமாவா! 

ம்ம் என அவனை பார்த்தாள்.

சித் குதுகலத்துடன் சரி ஓகே இப்போ வா நம்ம இந்த வீட்டை சுற்றி பார்க்கலாம். என ஒவ்வொரு அறையாக பார்த்துவிட்டு இறுதியில் படுக்கைக்கு வந்தார்கள். 

இதன்யா உள்ளே அறையை பார்த்ததும் அந்த பெட் அவளுக்கு உள்ளே புகுந்து கொள்ள தோன்றியது. வேகமாக கைகளை தேய்த்து கொண்டே அவள் ஆசையுடன் படுக்கைக்கு செல்ல..

ஹே என்ன பண்ற? 

எனக்கு எனக்கு ரொம்ப குளிருது லைட்டா அப்படியே அந்த பெட் உள்ளே போக தோணுது! 

சித், கொஞ்சம் உன்னோட இந்த நடுக்கத்தை குறைக்கவா! என அருகில் நெருங்கினான். 

இதன்யா அவனை பார்த்தாள். சித் அவளுக்கு அருகில் வந்தவன். அங்கே இருக்கும் ஸ்விட்ச்ல அறையின் வெப்ப நிலையை கொஞ்சம் அதிகம் செய்தான்.எதிரில் இருக்கும் சன்ஸ்  மாய்சரய்சிங் மற்றும் லிப் ஸ்டிக் என எடுத்து அவளுக்கு தடவி விட ஆரம்பித்தான். 

சித்தார்த்தின் மூச்சு சூடாக அவளை தீண்ட அவனுடைய கைகள் கொஞ்சம் சூடாக இருந்தது. 

இதன்யா அவனை எட்சிலை விழுங்கி கொண்டே பார்த்தாள். 

என்ன ஆச்சு? 

சித், கொஞ்சம் green fairy குடி குளிர் தெரியாது.. என பச்சை வண்ணத்தில்  ஒரு பானத்தை  கண்ணாடி கோப்பையில் எடுத்து வந்தான். 

இதன்யா அதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அதன் வண்ணம். இது குளிர் தெரியாது தானே! 

ம்ம் ஆமா! 

அவனிடம் இருந்து வாங்கி வேகமாக குடிக்க 

சித் அவளையே பார்த்தான். 

என்ன? இது ஒரு மாதிரி இருக்கு! 

உனக்கு பிடிக்கலயா!. 

இல்ல எதோ ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு என ஒரே மூச்சில் குடித்தாள். 

சித், சரி படுத்துக்க.. நான் வெளியே போயிட்டு வரேன். 

இல்ல இல்ல நீங்களும் என் கூட இருக்கணும். 

ஹே ஷாப்பிங் போயிட்டு வந்துடுறேன். காலையிலேயே நீ சரியா சாப்பிடல உனக்கு fish பிடிக்கும் தானே! அதை உனக்கு சமைச்சு தரேன். 

இதன்யா அவனை பார்த்தாள் .

என்ன அப்படி பார்க்கிற? 

ஒன்னும் இல்ல..

சித், சரி என கிளம்பினான். சில கடல்வகை உணவுகளை வாங்கி வந்தவன். அவளுக்காக சமைக்க சென்றான். இதன்யாவுக்கு அவன் சென்றதும் தூக்கம் வர அப்படியே தூங்கி விட்டாள். 

மாலை மூன்று மணிக்கு எழுந்தாள். அவள் கீழே நடுங்கி கொண்டே வர..

உணவின் வாசம் அவளை இழுத்தது. ம்ம் என சத்தம் வர…

நானே வர நினைச்சேன். நீயே வந்துட்ட.. வா வா! சாப்பிடு!. பாரு உனக்கு முள் இல்லாத மீன் சூப்பரா இருக்கும் டிரை பண்ணு!  

இதன்யா, எனக்கு ரசம் சாதம் வேணும்!. 

சித் அவளை பெரு மூச்சுடன் முறைத்து பார்த்தான். 

என்ன முறைக்குறீங்க? எனக்கு வயிறு கும்முன்னு இருக்கு பசிக்கவே இல்ல!. 

சித், எப்போ பாரு ஃபுல் மீல்ஸ் தான்! ரசம் சோறு, பப்பு புளுசு!. ச்ச உனக்கு செஞ்சேன் பாரு என்னை சொல்லணும் டி! என அவன் ஆப்ரானை கழட்டி வைத்து விட்டு உணவு மேஜையில் அமர்ந்தான். 

ஹே சாரி சாரி! என அவள் சாப்பிட வர.. 

ஹே ஹேன்ட் வாஷ் பண்ணு!  அங்கே ஹீட் வாட்டர் இருக்கு.. என அவளுக்காக காத்திருந்தான். 

உருளைகிழங்கு வாசம் அதிகமாக வீசியது. என்ன பொட்டேடோ ஸ்மெல் அடிக்குது!. 

அதிகமா அது தான் இங்கே ஸ்பெசல், அப்புறம் மேக்ரோனி சீஸ் இது நல்லாருக்கும். Desserts இன்னும் நல்லா இருக்கும் உனக்கு ஸ்வீட் தான பிடிக்கும். ஆண்டி கேக் செஞ்சாங்க! என அவளுக்கு பரினாரினான். 

ஹே இந்த போக் எடுத்துக்க.. இந்த நைஃப் எடுத்து இப்படி ஸ்லைஸ் பண்ணி சாப்பிடு! என சித் சொல்லி கொடுக்க..

இதன்யா, ஆமா இதுல எங்கே சாதம் இல்ல, குழம்பு இல்ல!..

சித் அவளை விநோதமாக பார்த்தான். 

இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? 

சித், நம்ம ஊரில் தான் இந்த ஃபுல் மீ்ல் இங்கே இப்படி தான்! என நேர்த்தியாக சாப்பிட ஆரம்பித்தான். 

இதன்யா சாப்பிட தெரியாமல் சிரம பட.. சித் அவளின் அருகில் வந்தான். என்ன ஆச்சு? 

ஒன்னும் இல்ல.. 

சித் அந்த கறியை ஊட்டி விட்டான். 

அப்சந்தி ஒரு மிடுக்கு குடிக்க வைத்தான். 

இந்த ட்ரிங்க் சூப்பரா இருக்கு! நம்ம ஊர்ல கிடைக்குமா! 

சித், உனக்கு வேணுமா! 

ஹான்! 

சரி ஆ காட்டு.. 

உண்மையாவே உங்க சமையல் டேஸ்டா இருக்கு. ஆனால் இது மீன் மாதிரி தெரியலையே? 

சித், இது பிரான்!. அதை அவண் ல செய்தேன். சிக்கன் கொஞ்சம் சாப்பிடுறயா! புதுசா டிரை பண்ணிருக்கென். என எழுந்து மைக்ரோ அவண் பக்கம் சென்றான். 

அவன் சிக்கனை எடுத்து வருவதற்குள் green fairy மொத்தத்தையும் குடித்து இருந்தாள். 

சித் கொஞ்சம் திடுக்கிட்டு ஹே என்ன பண்ற? எங்கே ரெண்டு கிளாசும் எம்டியா இருக்கு!. 

நல்ல நல்லா இருந்தது. நான் குடுச்சிட்டென்.. என சிரித்து கொண்டே கூறினாள். 

ஓ காட்! இவள்! இவளை உண்மையை சொல்லி இருக்கலாமோ! என சிக்கனை எடுத்து வந்தான். 

அந்த வாசனையை மோப்பம் பிடித்தாள். 

சித், இது ஆரஞ்சுல எக்ஸ்ட்ராக்ட் எடுத்து அதுல மீட்டை மேரிநெட் பண்ணி குக் பஞ்சிருக்கென். எப்டி அரோமா!. 

ம்ம் சூப்பர் புத்தா! 

அவன் திடுக்கிட்டு பார்க்க..

புத்தா எனக்கு ஊட்டி விடு இந்தா நைஃப்.. என நீட்டினாள். 

சித் ஒரு லெக் பீசை எடுத்து அவளிடம் நீட்டினான். மாலை ஆக ஆகவே கொஞ்சம் குளிர் அதிகமாக தொடங்கியது. அதனால் சித் அப்சந்தியை எடுத்து ஊற்றி கொண்டே அவன் வர.. வெடுக்கென அவன் கையில் இருந்து அதை பிடுங்கினாள். 

ஹே என்ன டி பண்ற? ஹே ஹே don’t do that குடிக்காத..

புத்தா குச்சிட்டென்! ம்ம் என்று உதடுகளை நாவை கொண்டு வட்டம் அடித்தாள். 

குச்சுட்டென்!  குடி.. குட்ச்சிட்டேன்.. என்ன டங்கு டிங்கு மாறுது.. டி வலள புத்தா!. 

சித், ஹே அது ஆல்கஹால் கண்டென்ட் டி!. 

என்ன? 

சித் மீண்டும் கூற..

இப்போ குளிக்க கூட முடியாதே! அய்யோ தப்பு பண்ணிட்டேன்! மூணு கிளாஸ் கவுத்துட்டா! இவளை என்ன பண்றது? என அவன் தலையை நீவினான். 

சாப்பிடு புத்தா! ம்ம்..

சித் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். 

புத்தா நீ அககா (அழகா) eat பண்ற!.. 

சித் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து எடுத்து வைக்க அவள் பின் தொடர்ந்தாள். 

மணியை பார்த்தான். 4 ஐ தாண்டி இருந்தது. 

இது எந்த இடம்? வா நம்ம வீட்டுக்கு போலாம்! வா புத்தா!  போலாம்..

சித் அவளின் நிலையை பார்த்தான். போதை குறைந்ததும் தான் அவளை வெளியே அழைத்து செல்ல முடியும். என எங்கே போறது? வா நம்ம டீவி பார்ப்போம்! 

இல்ல இப்போ போறோம்! வா! வா! வா! என கையை பிடித்து இழுத்தாள். 

சித், சரி இரு ட்ரெஸ் மாற்றி வரேன். நானும் மாற்றவா! 

வேணாம்! வேணாம்!. உன்னோடது ஒகே!. என உடையை சரி செய்து கொண்டே அவளுக்கு கை உறைகளை எடுத்து வந்தான். 

போலாமா!..

ம்ம்.. என இதன்யா தலையை அசைத்தாள். 

சித், உன் கிட்ட கொஞ்சம் detail 5 mark questions கேட்பேன் சரியா ஆண்சர் பண்ணா ஹீரோ பேனா வாங்கி கொடுப்பேன். 

ஹை ஜாலி! ஹீரோ பேனா ஜாலி கேளு புத்தா!.

சித், என்ன புத்தா சொல்ற? என்ன ஆச்சு? ஒரு வேளை green fairy உள்ளே போனதும் உள்ளே இருக்க என்னோட fairy வெளியே வராளா? என்னை லவ் பண்றயா?

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 250

சித் அவளுடைய கழுத்தில் ஸ்காப் சுற்றி விட்டு தலையில் குல்லா, கைகளுக்கு கைஉறை மற்றும் காலுக்கு பனியில் நடப்பதற்கு ஏதுவான ஷூ என அனைத்தையும் போட்டு விட்டான். 

இதன்யா அவளது கூந்தலை நீவி அதை சுருட்டி கொண்டே வீட்டுக்கு போக இத்தனை செய்யணுமா புத்தா! என கண்களை அழகாக சிமட்டி கொண்டே கேட்டாள். 

அது இப்போ எக்சாம் நடக்க போகுது? 

என்ன பரிட்சை? என அவனை கண்கள் மயக்க பார்த்தாள். 

சித், உன் கிட்ட கொஞ்சம் detail 5 mark questions கேட்பேன் சரியா ஆண்சர் பண்ணா ஹீரோ பேனா வாங்கி கொடுப்பேன். 

ஹை ஜாலி! ஹீரோ பேனா ஜாலி கேளு புத்தா!.

சித், என்ன புத்தா சொல்ற? என்ன ஆச்சு? ஒரு வேளை green fairy உள்ளே போனதும் உள்ளே இருக்க என்னோட fairy வெளியே வராளா? என்னை லவ் பண்றயா? என வரிசையாக கேள்விகளை அடுக்கினான். 

இதன்யா உதட்டை பிதுக்கி கொண்டே ஒன்னு ஒன்னா ரெண்டு ரெண்டா கேட்டா ஓகே.. மூணு மூணு நாலு நாலு கேட்டால் எப்டி சொல்ல முடியும்! எனக்கு அந்த green colour வேணும் 7up வேணும்!. 

சித், அது 7 up இல்ல டி! உன்னை நாலு அப்பு அப்பனும்!  அப்போ தான்டி போதை தெளியும் என்று கூறினான்.

என்ன?  என்ன சொல்றீங்க?  என்று இதன்யா கண்களை தேய்த்துக் கொண்டே எனக்கு சுத்தமா கேட்கல? என்று சினங்கினாள்.

சித்தார்த் , சரி சரி உனக்கு அந்த ஜூஸ் வேணுமா?  அந்த பச்சை கலர் ஜூஸ்! என்று கேட்டான்.

இதன்யா நாவினால் உதட்டை வட்டமிட்டு கொண்டே ஆமா எனக்கு வேணும்! அது ரொம்ப நல்லா இருக்கு!..

உடனே சித்தார்த்,  அப்போ நான் கேட்ட கேள்விக்கு டக்கு டக்குனு பதில் சொல்லு! என்று கையைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டு கதவை திறந்து வெளியே வந்தார்கள்.

இதன்யா அவன் வெளியே வந்ததும் என்ன கேள்வி? கேளுங்க நான் சூப்பரா பதில் சொல்லுவேன். 

சித்,  அதுதான் இப்போ டீடைல் கொஸ்டின் கேட்டிருக்கேன்ல!  பைவ் மார்க்,  அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்!  நீ இப்போ எதுக்கு என்னை புத்தான்னு  சொல்லி கூப்பிடுற?

 இதன்யா சிரித்துக்கொண்டே வாயின் மேல் கை வைத்து சொல்ல மாட்டேன் என்பது போல் விரலை வைத்து  காட்டினாள்.

சித்தார்த்தன்,  இதுக்கு என்ன அர்த்தம்?  என்று கேட்டான்.

இதன்யா, நான் சொல்ல மாட்டேன்! என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

சித்தார்த் வெளியே அந்த நகரின் வாயிலில் நடக்க ஆரம்பித்தவன். அல்லி  சொல்ல மாட்டியா என்று அவள் முகத்தில் ஊதினான்.

 ஜெர்மாட்டிலுள்ள பணியின் சூழல் காரணமாக அவன் ஊதிய  மூச்சு காற்று புகையை போல் போனது.

இதன்யா ஆர்வமாக கண்ணை விரித்து கொண்டே  நானும் பண்ணவா! என்று அவளும் ஊதினாள். 

சித், அது நான் பண்ணா மட்டும்தான் வரும்!  நீ பண்ணா வராது!. 

அப்போ அதுக்கு என்ன பண்றது?  என்று குழந்தையாக  அவள் சினுங்க…

சித்,  அப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு!  அப்பதான் நான் உனக்கு புதுசா ஒரு ஹீரோ பேனா வாங்கி தருவேன்! அப்புறம்  ஜாமென்ட்ரி பாக்ஸ் வேணுமா? வேண்டாமா?  செம்மையா இருக்கும்!  அதுல வச்சு நீ டிரா பண்ணி பாரு சூப்பரா வரும்!..

ஜாமென்ட்ரி பாக்ஸ்சா என்று கண்களை விரித்து கேட்டாள்.

ஆமா வேணுமா?  வேணாமா? என்றான்.

இதன்யா வேணும் என்று கூற..

சித்தார்த், சொல்லு பார்க்கலாம்!  எதுக்கு நீ என்னை புத்தான்னு கூப்பிடுற? என்று மீண்டும் கேட்டான்.

இதன்யா எனக்கு உங்களை அப்படி கூப்பிட தான் புடிச்சிருக்கு! அதை இங்கிருந்து கூப்பிடுறேன் என்று காட்டினாள். 

சித், எங்கே எனக்கு சரியா தெரியலையே? என்று அவளைப் பார்த்தான். 

இதன்யா ,  நீ லூசு புத்தா இங்கே பாரு! என இதயத்தை காட்டி இங்கிருந்து கூப்பிடுறேன். புத்தா உனக்கு கேக்குதா?  புத்தா! என்று கூற..

உடனே சித்தார்த்,  அப்படியா? சரி இத்தனை நாளா ஏன் புத்தான்னு கூப்பிடல?

இதன்யா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். அவள் நடுவில் நின்று கொண்டாள். 

சித்தார்த் அவளை பார்த்து என்ன ஆச்சு? அங்கேயே நின்னுட்ட என்று அவள் கையைப் பிடித்து இழுக்க..

நான் ரொம்ப ரொம்ப சோகமா இருக்கேன்! என்று கூறினாள்.

அதான் என்ன ஆச்சு? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல..

அவள்  சித்தார்த்தை சோகமாக பார்த்துக் கொண்டே “அந்த புத்தா இருக்கான்ல அவன் என்னை லிட்டில் ஹார்ட் அப்படி சொல்லி கூப்பிடவே மாட்டிக்கிறான்! 

சித் சிரித்துக் கொண்டே அப்போ வேற என்னன்னு சொல்லி கூப்பிடுறான்? என்று கேட்டான். 

இதன்யா சோகமாக என்னை இதுன்யா சொல்றான்!  அவன் எப்பவுமே அப்படி கூப்பிட்டதே இல்லை! தெரியுமா?  என்னை பாத்ததுல இருந்து ஒரு தடவை கூட அப்படி கூப்பிட்டதே இல்லை!  ஆனா இப்போ இதன்யா சொல்றான்   அது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? 

 சித்தார்த் , இதன்யா தானே உன்னோட பேரு! அப்போ உன்னோட பேர சொல்லி தானே கூப்பிட முடியும்! 

இதன்யா கடுப்பாகி  அவனுக்கு நான் அவ்வளவு தூரத்தில் இருக்கிறேனா?  நான் அவனுக்கு பக்கத்துல இருக்கேன் தான!  புத்தா! அவன்  புத்தா என்னோட இதயத்தில் இருக்கும் போது அவன் என்னை லிட்டில் ஹார்ட் என்று தானே சொல்லணும்?  ஏன்னா என்னோட லிட்டில் ஹாட்டுக்குள்ள தானே புத்தா இருக்கான்

இதை கேட்டது அவனுக்கு சிரிப்பு வந்தது உடனே சரி அதை விடு உன்னை ஏன் அவன் லிட்டில் ஹார்ட் என்று கூப்பிடனும் அதுக்கு என்ன காரணம் என்று கேட்டால் இதன் யார் உனக்கு ஒரு ரகசியம் தெரியுமா என்று கேட்டால் என்ன ரகசியம் என்று பக்கத்தில் வந்து காதில் ஊதினான் அவள் கூச்சத்தில் நெளிந்து கொண்டே நானு புத்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன. 

சித்தார்த்தி இதை கேட்டதும் இதன்யாவை பார்த்து முறைத்தான். 

இப்போ நீ எதுக்கு என்னை முறைக்கிற?  நான் கூட கோபமா முரயோன் தெரியுமா? நான் முதல்ல யாருன்னு தெரியுமா? நான் ஸ்கூல் டீச்சர்! உன்னை குச்சி எடுத்து அடிப்பேன்! உன்னை முட்டி போட வைப்பேன்! நீல் டவுன் பண்ணுடா..

சித்தார்த், ஆமா நீ அவனை பொய் சொல்லி தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட என்று சொல்லிவிட..

இதன்யா, நான் ஒன்னும் பொய் சொல்லி கல்யாணம் பண்ணல! எனக்கு  புத்தா கிடைக்க மாட்டான்னு தோணுச்சு! அதனால இந்த வாய்ப்பு மிஸ் பண்ண கூடாதுன்னு. நான் புத்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  அவனும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.  ஆனா அவன் எவ்ளோ என்ன கொடுமை படுத்தினான் தெரியுமா?

சித்தார்த், அவன் ரொம்ப மோசமானவனா?  உன்ன ரொம்ப கொடுமை படுத்திட்டானா?  அவனை என்ன செய்யலாம் சொல்லு! அவனை நான் என்று சொல்ல வர..

இதன்ய,  அவன் கையைப் பிடித்து உன்ன அடிப்பேன்!  புத்தாவை  எதுவும் செய்யக் கூடாது! அவன் என்னோட புத்தா!. 

ஏன் அடிக்க கூடாது? 

அதான் சொல்றேன்ல அது புத்தா!  

சித்,  சரி இவ்ளோ பேசுற  அப்புறம் லவ்  பண்ணாம எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட? என்று கேட்டான்.

இதை கேட்டதும் இதன்யாவுக்கு சிரிப்பு வந்தது. 

என்ன சிரிக்கிற? நான் காமெடியா எதுவும் சொல்லலயே!..

 யார் சொன்னது? 

எல்லாரும் சொல்கிறார்கள்!. நீ அவனை லவ் பண்ணலன்னு எனக்கு தெரியும்.  என சித் கூறினான். 

இதன்யா, உனக்கென்ன தெரியும்? நான் புத்தாவை ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் தெரியுமா?  அதை சொன்னா கண்ணு போட்டுடுவாங்கன்னு தான் நான் சொல்றதில்ல..

சித்தார்த் மனசுக்கு றெக்க மட்டும் தான் கட்டவில்லை..  அப்படி ரெக்கை இருந்து இருக்க அவன் அவளை தூக்கிக்கொண்டு சொர்கத்துக்கே சென்று விடுவான்.  அந்த அளவுக்கு சந்தோஷத்தில் இருந்தான்.  உடனே அவளிடம்  என்ன?  சித்தார்த்தை நீ லவ் பண்றியா? 

உடனே இதன்யா டிங்கு டிங்கு என்று ஆமா!  என்னை மாதிரி  புத்தாவை யாருமே லவ் பண்ண முடியாது! அவன் பேரு சித்துவே கிடையாது. என் புத்தா என்று கூறினாள்.

 சித்தார்த்,  நீ அவ்வளவு லவ் பண்ணி கூட அவன் உன்ன கஷ்டப்படுத்திட்டானே! அந்த பார்ட்டில? அவன் ரொம்ப மோசம் தானே! அவன நம்ம ஏதாவது செஞ்சுடலாம்? என்று கூற.

இதன்யா,  நான்தான் தப்பு பண்ணிட்டேன். நான் அவனை புரிஞ்சுக்காம பேசிட்டேன். அவனும் தப்பு பண்ணான். இருந்தாலும் நான்  ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என் புத்தா ரொம்ப பாவம் தெரியுமா? அவனை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

 நிஜமாவே வா அப்போ கன்ஃபார்ம்  தானே பொய் இல்லையே? என சித் கேட்க.. 

உடனே அவள் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?  இதயத்தில் இருக்கிறத சொல்றதுக்கு அந்த  இதயத்துக்கு எப்போ கான்சியஸ் வரும்  தெரியுமா? 

எப்போ கான்சியஸ் வரும் ?

இதன்யா கிறங்கி கொண்டே  அந்த! அந்த மனுஷன்   கான்சியசா இருக்கிற நேரத்துல இதயத்துக்கு கான்ஷியஸ் வராது! 

 சித்தார்த், ஒன்றும் புரியாமல் நீ என்ன சொல்ற?  நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியலையே! 

 இதன்யா ஒரு மனுஷன் நிதானத்தோட இருக்கும்போது இதயம் பொய் சொல்லும்.

அப்படியா? என்று சித் கேட்க..

இதன்யா, ஆமா அதுவே அந்த மனுஷன் தூங்கிட்டு இருக்கும்போதோ! அப்படி இல்லன்னா தூக்கத்துல இருக்கும்போதோ! அந்த இதயமும் மூளையும் நிதானத்துல  இருக்கும்.  அப்படின்னு அதுக்கு..

என்ன அர்த்தம் என்று சித்தார்த் கேட்க..

இதன்யா, எல்லார் முன்னாடியும் பொய் சொல்ற இதயம் யாருமே இல்லாங் நேரம் தான்  உண்மையை பேசும் தெரியுமா என்று கூறினாள் .

சித் ஆச்சரியமாக அப்படியா என்று கேட்க..

ஆமாம்பா யாராவது ஏதாவது சொன்னால் வாயிலிருந்து வர வார்த்தை எல்லாம் உண்மையாகவே இருக்காது. அவங்க தனியா போயி  அவங்களுக்கு அவங்களே அவங்களோட உண்மையான ஃபீலிங்ஸ் வெளிப்படுத்துவார்கள் தெரியுமா? 

எனக்கு தெரியாதே!..

இதன்யா, நான் சொல்லி கொடுக்கிறேன்.  இப்போ என்னோட இதயமும் மூளையும் உண்மையா தான் சொல்லுது. நான் சித்தார்த்தை அந்த அளவுக்கு லவ் பண்றேன்.  என் புத்தாவை அவ்வளவு லவ் பண்றேன்! நான் இப்ப தூங்கிட்டு இருக்கேன் தெரியுமா?   புத்தா என் பக்கத்துல படுத்து இருக்கான்.  நான் தூங்கி எழுந்ததும் அவன் எனக்கு லஞ்ச் செய்து தரேன்னு சொல்லி இருக்கான்.  நான் மீன் சாப்பிட போறேன். என்று உளறி கொண்டிருந்தாள். 

அவர்கள் நடந்து கொண்டே வெகு தூரம் வந்திருந்தார்கள்.  இதன்யா அந்த இடத்தை பார்த்ததும் இந்த இடம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கே!  இந்த இடத்தை நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு போய்டலாமா? என்று கேட்க..

சித்,  இந்த இடத்தை எப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியும் ?

புத்தா அழகா இருக்குடா அங்க பாரேன்!..

சித்தார்த்,  நீ எதுக்கு வாடா போட சொல்ற?  சித்தார்த் உன்ன விட பெரியவன் தானே என்று கேட்டான்.

இதன்யா முகத்தை கோபமாக வைத்துக் கொண்டே அவன் மட்டும் என்னை இதன்யா! இதன்யா! சொல்றான்.  அதனால் தான் நான் அவன வாடா போடான்னு கூப்பிடுறேன். அவன் எப்போ என்னை லிட்டில் ஹார்ட்! ரெட் பேபி என்று கூப்பிடுகிறானோ? அப்பதான் நான் அவன புத்தா  கூப்பிடுவேன் என்று கூறினாள்.

சித் அந்த ஊரின் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அவளை பார்த்தான். 

ஹே என்ன பார்க்கிற? என இரு புருவம் தூக்கினாள். 

சும்மா என கண்ணை சிமிட்டினான். மனம் மிகவும் சந்தோசமாக இருந்தது. Finally அவளோட மனசுல நான் இருக்கேன். நான் மட்டும் தான் இருக்கேன்!  So she is mine! அதை விட அவளுக்கு நான் தான்! ம்ம் ஊஊஊ!.  என கத்தினான்.

இதன்யா கொஞ்சம் நடுங்கி கொண்டே முருகா! முருகா! முருகா! என கூற..

சித், என்ன ஆச்சு? என அவளின் அருகில் நெருங்கினான். 

எனக்கு ரொம்ப குளிறுது!  

சித் அவளின் அருகில் வந்து கண்ணம் பிடித்து சரி வீட்டுக்கு போலாமா!  

இதன்யா பல் டைப் அடிக்க ஹே என்னால நடக்க முடியாது. என்னை தூக்கிட்டு போயிடு!..

ரொம்ப தாங்க முடியலயா! என அவளின் கன்னத்தை பிடித்து கேட்டான். சித் மற்றும் இதன்யா இருவரும் நெருங்கி இருந்தனர். 

ஆமா! என்ன பண்றது? எதுவும் பண்ணு டா!  

சித், அது ஒரு முத்தம் கொடுத்தால் குளிர் கம்மி ஆகிடும்..

இதன்யா கண்கள் சொக்க.. அப்போ கொடு இல்ல நான் கொடுக்கிறேன். என அவனுடைய உதட்டில் முத்தம் வைத்தாள்.

சித்தார்த் இரண்டு உதட்டையும் கவ்வி ஒரு சில நிமிடங்கள் கழித்து விட்டான். 

இதன்யா சொக்கி கொண்டே ஹே கிஸ் மி புத்தா! என மீண்டும் இதழில் ஒட்டி கொண்டாள். 

சித் அவளின் தாடையை பிடித்தான். இதன்யா அவனுக்கு அருகில் மிகவும் நெருங்கி கால்களை எட்டி நின்று குதி காலில் முத்தம் பதிக்க ஆரம்பித்தாள். 

சித் கஷ்ட பட்டு அவளை விட்டு பிரிந்தான்.ஹே என்னை விட்டு தள்ளி போகாத குளிர்து! என அணைத்து கொண்டாள்.

சித், வீட்டுக்கு போலாமா டி!  என அவளை கேட்க..

ம்ம் போலாம்!  என்னை தூக்கிட்டு போ புத்தா! என கூற..

சித் ஒட்டி கொண்டே  அவளை அழைத்து செல்ல..

ஹே முத்தம் கொடு! எனக்கு குளிருது!. என அவள் சொல்ல…

சித் அவளின் கீழ் உதட்டை கவ்வி கொண்டே ம்ம் ரெட் பேபி கூட்டி போறேன். என இருவரும் முத்தமிட்டு கொண்டே ஒரு வழியாக அவர்கள் வீட்டுக்கு வந்து சித் கதவை சாத்தினான். 

ஹே don’t leave me? Kiss me!. என நெருங்கினாள். 

சித், லிட்டில் ஹார்ட் இப்போ வேணாம் டி!..

அவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். என்னை எவ்ளோ கஷ்ட படுத்தின புத்தா! நான் உன்னோட வாசம் இல்லாம எப்படி தவிச்சென் தெரியுமா? உன்னை கட்டி தூங்காம நான்? எனக்கு உன்னை பார்க்க பார்க்க கட்டிக்க முத்தம் கொடுக்க தோணும்! ஆனால் நான் பக்கத்தில் வந்தால் நீ என்னை கேவலமா நினைப்ப! அப்படி தானே!  

இல்ல டி! அப்படி இல்ல என அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான். 

இதன்யா, உன் கிட்ட அப்படியே ஒட்டிகிட்டே இருக்க தோணுது! அதனால நீ என்னை விடாத! எனக்கு இப்போ எனக்கு எதோ பண்ணுதே! என அவள் கூற..

சித், ம்ம் பண்ணலாம் ஆனால் நீ கான்சியஸ்ல இருக்கணும்.. ம்ம் சரியா! பேபி! இன்னிக்கி ரெட் பேபி இல்ல க்ரீன் பேபி! என அவளை படுக்கையில் பூ போல போட்டான். 

இதன்யா படுக்கையில் நெளிந்து கொண்டே எனக்கு குளிரை கம்மி பண்ணு! எதுவும் பண்ணு! குளிரை கம்மி பண்ணு!  என அவள் கத்த ஆரம்பித்தாள்.

சித் அந்த அறையில் வெப்ப நிலையை கொஞ்சம் இதமாக வைக்க நிலக்கரி மற்றும் நெருப்பை வைத்து பற்ற வைத்தான். இப்பொழுது கொஞ்சம் நன்றாக இருக்க..

இங்கே இதன்யா ஹே என்ன டா பண்ற? எனக்கு குளிர் குளிர்!  என கத்த ஆரம்பித்தாள். சித் அவ்ளோ தான் வந்துட்டேன். வந்துட்டேன் என  போர்வையில் அவளுடன் புகுந்து கொண்டான்.  

என்ன லிட்டில் ஹார்ட்!. 

குளிர் கம்மி பண்ண கிஸ் பண்ணு!  என அவனை இழுத்தாள். 

சித் அவளின் தாடையை பிடித்து முத்தமிட ஆரம்பித்தான். மம்.. இப்போ இனி குளிராது! ஹான் என கவ்வி கவ்வி இழுத்து கடித்தான். 

இதன்யா வேக மூச்சுடன் அவனுடன் ஒட்டி கொள்ள.. இப்போ ஓகே வா!  

அவள் பேசாமல் சொக்கி கிடந்தாள். 

அதன் பின் சித்தார்த்தின் கைகள் அவளின் அங்கங்களுக்கு சென்றது. அவள் ஒரு வித போதையில் கிறங்கி கிடந்தாள். 

சித் மெதுவான குரலில் லிட்டில் ஹார்ட் இப்போ உன்னை…? 

தொடரும்.

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 251

இதன்யா வேக மூச்சுடன் அவனுடன் ஒட்டி கொள்ள..  சித் அவளிடம் மெதுவாக குரலில் இப்போ ஓகே வா!  என கேட்டு கொண்டு அவளுடைய உடைகளுக்குள் முன்னேறினான். 

அவள் கண்களை மூடி அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். சித்தார்த்தின் கைகள் அவளின் அங்கங்களை ஸ்பரிசித்து பார்த்து கொண்டே அப்படியே உடையின் மேல் உதடுகளை வைத்து முகடுகளுக்கு முக்தி கொடுத்து கொண்டிருந்தான். அவள் ஒரு வித போதையில் கிறங்கி கிடந்தாள். 

சித் ,“இத்தனை நாள் எனக்காக பண்ண உனக்கு இன்னிக்கி நான் வேற ஒரு வேல்டை காட்ட போறேன் டி! ”என இடைக்கு தாவினான். 

இதன்யா, புத்தா எங்கே இருக்க? என அவளுடைய கைகளை காற்றில் தேட சித் அவளுடைய இடையில் எட்சிள் செய்து விளையாட ஆரம்பித்தான்.

அவளோ கூசுது தள்!. தள்ளி போங்க!  என மோகத்தில் திளைத்து கொண்டே கூறிட..

சித் அதற்குள் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டான். 

இதன்யாவின் இரண்டு கால்களையும் விரித்து விட்டவன். பன்னீர் ரோஜாவை வருடி கொடுக்க ஆரம்பித்தான். இதன்யா கண்களை திறந்து கைகளால் அவனை தடுக்க வர வேகமாக அவளுடைய இதழை கவ்வி கொண்டான். 

இதழ்கள் துவண்டு போக அங்கு மலர் வருட வருட இதன்யா உச்சத்தில் துடிக்க ஆரம்பித்தாள். அவனை தள்ளி விட கைகளை எடுக்க.. சித் இரண்டு கைகளையும் கிடுக்கு பிடி கொடுத்து “ஹே பேபி! கொஞ்சம் கொஞ்ச நேரம்! அவ்ளோ தான்! இப்போ peakல இருக்க! ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணி, கண்ணை மூடி என்ஜாய் பண்ணு! என விரலுக்கு வேகம் கொடுத்தான். 

அவள் உடல்கள் தள்ளாட அவனுடைய விரல் மாயத்தில் பறப்பது போல ஒரு நிலைக்கு வந்தவள். புத்தா! என ஒரு சினுங்களில் உச்சம் அடைந்து பெரு மூச்சை விட்டாள். அவனும் கண்டு கொண்டான். விரல்களில் wet.. அவ்ளோ தான் எப்டி இருந்தது. என அவளின் முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டு கொண்டே கேட்டான். 

இதன்யா கண்கள் தூக்கத்தில் சொக்க என்னை என்ன பண்ண? 

சித், ஜஸ்ட் இது ஒரு outdoor game எப்டி இருந்தது? சொல்லு?

அவள் அவன் மார்பில் விழுந்து எனக்கு பறக்கிற போல இருந்துச்சு! இன்னொரு தடவை என்னை பறக்க வைக்கிறயா? என இதன்யா போதையிலும் தூக்கத்திலும் உளறினாள். 

சித்தாரத்துக்கு அவள் சொன்னது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அவன் புன்னகையுடன் “எனக்கு ஓகே தான்!  உனக்கு நான் எவ்வளவு வேணாலும்…   ஆனா இத நீ சுயநினைவில் சொல்லுவியா?  என்ன பண்ணுவியோ? என்னை கைமா பண்ணிடுவடி! அதுவும் இப்போ நீ சொன்ன அந்த பறக்கிற விசயத்தை நான் சொன்னால்,  வெட்கப்பட்டு வெட்கப்பட்டு உருகி கூட போயிடுவன்னு தோணுது! ஆனா நீ அந்த peakல துடிக்கும்போது அவ்வளவு அழகா இருந்த?” என்று கூறினான். 

ஆனால் இதன்யா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். சித்தார்த்  அவளின் தலையை வருடிவிட்டவன் தன் நெஞ்சில் இருப்பவளின் உச்சந்தலைக்கு முத்தம் கொடுத்தான்.  சித்தார்த் அவனுடைய விரல்களை முகர்ந்து பார்த்தான். “உன்னோட வாசம் தனித்துவமா இருக்கு!”

இதன்யா முணுமுணுக்க தொடங்கினாள் சித்தார்த் அவளின் தலையை வருடிக் கொண்டே ஏதோ  முனகல் சத்தம் கேட்குதே! என்ன? என்று அவளைப் பார்த்தான்.

புத்தா! புத்தா! நீ நீ எனக்கு மட்டும் தான்! நீ என்னை விட்டு போகவே கூடாது.  நான் உன்ன!.. நான் உன்ன!..நீ எனக்கு வேணும் என்று கூறினாள்.

இதை கேட்டதும் சித்தார்த் நான் உன்கூட தான்  இருப்பேன். உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன் டி! நீ என் பொண்டாட்டி சரியாஎன் லிட்டில் ஹார்ட்! ரெட் பேபி!..

ம்ம் புத்தா! என குறட்டை சத்தம் வந்தது. 

சித் சிரித்து கொண்டே பறக்கணும் போல இருக்கா?  அப்போ உன்ன எப்பவும் பறக்க வைத்துக்கொண்டே இருப்பேன்.  என்று சிரித்தான். 

 சித்தார்த் மனதில் இப்போ காலைல அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா?  சரி காலையில என்னதான் பண்றான்னு பாப்போமே! அதுக்கு தகுந்த மாதிரி நம்ம நடந்துப்போம். அவ சுயநினைவோட என் பக்கத்துல வந்தால், அப்போ அவ விருப்பத்தோட அடுத்த கட்டத்துக்கு போகலாம்!  இல்லனா இத இப்படியே விட்டுடனும் அவ அவளா தான் வந்து கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டான்.  அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தான்.   

அவன் எவ்வளவு முத்தம் வைத்தான்?  என்று சித்தார்த்துக்கு தெரியவில்லை. சித்,“ எப்பவும் உன்ன என்ன விட்டு பிரிய விட மாட்டேன். நீ என்னோடவள். என்னோட உயிர்ன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா அந்த உயிர் கூட நிரந்தரம் இல்லை அதனால் நீ என்னோட பொருள்! உன்னை நான் என்னோட உயிரை கொடுத்து கூட காப்பாற்றுவேன்.  நீ என்னுடையவள்!” என்று சொல்லிக் கொண்டான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.  இதன்யா எழுந்து பார்க்க அவள் மட்டும்தான் படுக்கையில் இருந்தாள்.

சித்தார்த் அந்த நேரம் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவன். குட் மார்னிங் என முகம் உற்சாகத்தை வெளிபடுத்த கூறினான். 

இதன்யா தலையை சொரிந்து கொண்டே உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லை!. 

என்ன டி பண்ணேன்!

ஆனா நீங்க ரொம்ப ரொம்ப ஓவரா பண்றீங்க!.  இதை நான் உங்க கிட்ட எதிர் பார்க்கல..

சித்தார்த், என்னடி சொல்ற?  நான் என்ன பண்ணேன்?  எல்லாம் நீ தான். நேற்று இரவு நடந்ததையும், அவள்  குடித்த விஷயத்தை பற்றியும் பேச வர…

இதன்யா , எனக்கு பசிக்குமே! நான் பாவமே அப்டின்னு நீங்க நினைக்கலல்ல நேற்று மதியானம் எனக்கு மீன் எல்லாம் செஞ்சு வச்சு இருக்கேன்னு சொன்னீங்க? என்னை எழுப்ப வேண்டியதுதானே!  பாருங்க நான் காலையில எந்திரிச்சு இருக்கேன். ஒரு நாள் முழுக்க தூங்கி இருக்கேன். என்று கூறினாள்.

சித்தார்த் அவளையே உற்றுப் பார்த்தான்.

இதன்யா,  இப்போ எதுக்கு அப்படி பாக்குறீங்க?

 அப்போ நேத்து என்ன நடந்ததுன்னு உனக்கு ஞாபகம் இல்லையா? 

 இதன்யா புருவத்தை நெருக்கிக் கொண்டே  நேத்து அப்படி என்ன நடந்தது?  நீங்க கடைக்கு போறேன்னு சொன்னது தான் நியாபகம் இருக்கு! அதுக்கப்புறம் என்ன நடந்தது?  நான் தான் படுத்து தூங்கிட்டேனே!. 

 சித்தார்த், அது ஹான் அப்படியா!.  ம்ம் அப்படி தான் ஆமா நீ தூங்கிட்ட.. என்று சிரித்துக் கொண்டே கூறினான். 

இதன்யா  அவனை கூறாக பார்த்து “என்ன? இன்னைக்கு சிரிப்பு எல்லாம் பலமா இருக்கு! என்னை தூங்க வச்சுட்டு நீங்க எங்க போனீங்க?”

 சித்தார்த் , இது என்னடி  கொடுமையா இருக்கு. நான் எங்கே போனேன்? நான் உன்னை விட்டு  எங்கேயும் போகல இங்க தான் இருந்தேன். 

இதன்யா, அப்போ எனக்கு செஞ்சு வச்ச மீனை நீங்களே சாப்பிட்டீங்களா?  நீங்க ஒரு பிராடு! எனக்கு தான் நல்லா தெரியுமே?  மோசக்காரர்! என் மேல கொஞ்சம் கூட உங்களுக்கு அக்கறை இல்லையா? எனக்கு பசிக்கும் அப்டின்னு உங்களுக்கு தோணல!  

சித்தார்த், ஆமா டி! நீ இன்னும் சொல்லுவ? இதுக்கு மேலயும் சொல்லுவ? என்றவன் பேசிக் கொண்டிருக்க..

உடனே இதன்யா திடுக்கிட்டு எழுந்து நின்று அய்யோ என கத்தினாள்.. 

சித் மனதில் ஓ காட்  அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். இப்போ என்ன பண்றது என அவளை பார்த்து “இதன்யா நீ பறக்குறது போல இருக்குன்னு சொன்ன! அதனால தான் நான் ட்ரை பண்ணேன்!  அதுவும் நான் உன்னை எதுவுமே பண்ணல!  ஜஸ்ட் play அதுவும் for என ஆரம்பிக்க.. 

இதன்யா வேகமாக அருகில் வந்தவள். யோவ்! எனக்கு அர்ஜெண்டா ஒன்னுக்கும் ரெண்டுக்கும் வருது! என்று பாத்ரூம்குள் ஓடி கதவை அடைத்தாள்.

சித்தார்த்துக்கு சிரிப்பாக வந்தது. அப்போ இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா? இது கூட நல்லதுக்கு தான்! எப்படி சுயநினைவில்  நம்ம கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்றான்னு பார்ப்போம். ரொம்ப நாள் எடுத்துக்காம  இந்த ரெண்டு நாளிலேயே சொல்லிடு டி இங்கேயே பறக்க பறக்க perform பண்ணலாம் கூடவே play பண்ணலாம். ரொம்ப ஜாலியா இருக்கும்.  என்று நினைத்தான்.

சித்தார்த்துக்கு இப்பொழுது அவள் மேல் எந்த ஒரு தயக்கமும் இல்லை. என்னோட இதன்யா! எனக்கு மட்டும்தான் சொந்தம்! என்னோட லிட்டில் ஹார்ட்! என்று அவள் மேல் மொத்த காதலும் பாசமும் தான் வழிந்து இருந்தது. ஐ லவ் யூ சொல்லி இருக்கா! ரொம்ப ரொம்ப லவ் யூ சொல்லி இருக்கா! என்னை மிஸ் பண்ண கூடாதுன்னு தான்  கல்யாணம் பண்ணி இருக்காலாமே!  அதுவும் நல்லதுக்கு தான் ஒரு வேலை அவ கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா?  என்னோட வாழ்க்கை வேற மாதிரி கூட நடந்து இருக்குமே! என்று யோசித்துப் பார்த்தான். 

அதன் பின் சித்தார்த்   கீழே வந்து காலையில் அவளுக்கு ப்ரேக் பாஸ்ட் செய்ய ஆரம்பித்தான். பிரட் ஆம்லெட் மற்றும் ஸ்வீட் கான் வைத்து லைட்டாக ஒரு டிஷ் மேலும் பிரான்களை வறுத்து அது ஒரு தட்டில் வைத்திருந்தான்.  ஆப்சந்தியை எடுத்து கொஞ்சம் குடித்துக்கொண்டிருக்க..

அந்த நேரம் இதன்யா அனைத்து காலைக்கடனையும் முடித்துவிட்டு குளிரில் நடுங்கிக்கொண்டே  ஹே சித்து சூடா எனக்கு ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு! என்னால குளிர் தாங்க முடியலையே? எங்கே டா இருக்க? என்று புலம்பிக் கொண்டே கீழே வந்தான்.

சித்தார்த் குடித்துக்கொண்டே அவளை திரும்பி பார்க்க..

அவள் வேகமாக அருகில் வது எனக்கும் குடுங்க என்று வாங்க வர…

வேணாம் இதை குடிக்க கூடாது. 

இல்ல எனக்கு வேணும்! என அவள் பிடுங்க….

சித், ஏ இது ஓவரா குடிச்சா அப்புறம் தூக்கமே வந்து கிட்டு இருக்கும் என்று கூறினான்.

என்ன சொல்றீங்க?  என்று கேட்டாள்.

சித், ஆமா நேத்து அதனாலதான் நீ தூங்கிட்டே இருந்த அதனால இது வேண்டாம்! என கையில் இருந்து பிடுங்கி வைத்தான். 

சரி இப்போ  என்னால எப்படி குளிர தாங்க முடியும் என்று கேட்டாள்.

சித்தார்த், குளிச்சியா? குளிச்சா கொஞ்சம் குளிர் குறையும்!.

இதன்யா,  அங்க பாத்ரூம்ல ஐஸ் கட்டி தான் மிதக்குது நான் எங்கே எதுல குளிக்கட்டும் ? என்று கேட்டாள் .

ஹீட்டர் இருக்கு நான் உனக்கு போட்டு விடுறேன். 

இதன்யா,  எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது!  நேத்து சாப்பிட்டது என்று கூற..

சித்  சிரித்துக் கொண்டே சரி வா முதல்ல சாப்பிடு! அதுக்கு அப்புறம் போய் குளி என்று அவளுக்கான உணவுகளை எடுத்து வைத்து ஒரு சின்ன அவுன்ஸ் மூடியில் ஒரு நான்கு மூடிகள் இதன்யாவிடம் அந்த ஆப்சந்தி என்னும்  கிரீன் பாரியை கொடுத்தான்.

இதன்யா,  இதை குடிச்சா தூக்கம் வரும்னு சொன்னிங்களே? 

சித் சிரித்துக் கொண்டே கொஞ்சம் குடிச்சா தூக்கம் வராது.  குளிருக்கு இது தேவை என்று கூறினான்.

சரி என்று இதன்யா உணவுகளை சுவைத்துக் கொண்டே நிஜமாகவே ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கு!  நீங்க இதையெல்லாம் எங்கே கத்துக்குறீங்க?  உங்களால மட்டும் தான் இப்படி பண்ண முடியும்! நீங்க வேற லெவல் தெரியுமா என்று கூறினாள்.

சித்,  சரி சரி சீக்கிரம் சாப்பிடு இன்னிக்கி நிறைய இடத்துக்கு நம்ம போக போறோம். என்று கூறினான்.

எங்கே போக போறோம் என்று கேட்டாள்.

இந்த ஜெர்மனாட்ட நம்ம சுத்தி பாக்கலாம். ஒரு அண்டர் கிரவுண்ட் ட்ரெயின் இருக்கு, அதுல போலாம்!  அதுக்கப்புறம் வந்து கேபின் ரைடு இருக்கு. அங்கேயே லஞ்ச்  அதுக்கு போலாம்.  என்று கூறினான்.

சரி என்று இதன்யாவும் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடித்து மேலே சென்று குளித்து விட்டு நடுங்கிக்கொண்டே வெளியே வர…

அவளின் நடுக்கத்தை பார்த்து  வெளியே ஹீட்டரை சரி செய்து விட்டவன். அவளிடம்  இதன்யா!  நல்லா கவனி  வெளிய வந்ததும் பர்ஸ்ட் இந்த லோசன் உடம்பு முழுக்க போட்டுக்கோ!  அதுக்கப்புறம் இந்த கிரீமை முகத்துக்கு போட்டுக்க, அப்புறம் வந்து லிப்ஸ்டிக் போட்டுக்கோ! என்று அனைத்தையும் எடுத்து கொடுத்து  அவளுக்கான உடைகளையும் எடுத்துக் கொடுத்தான்.

 இதன்யா கண்களை விரித்து இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கே? என்று கேட்க…

சித், இது நேற்று ஜெர்மாட்டில பார்த்தேன். திங்ஸ் வாங்க போகும்போது பார்த்தேன்.  உனக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு,  அதனால வாங்கிட்டு வந்தேன். என்று கூறினான்.

சரி நான் போட்டுக்கிறேன் என்று கஅவன் சொன்னது போலவே அனைத்தையும் செய்தாள்.

இந்த முடிய என்ன பண்றது? என நீவி  கொண்டிருக்க…

சித்தார்த்  அதை அப்படியே ஃப்ரீயா விடு! அழகா இருக்கு! என்று கூறினான்..

இதன்யா, ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! வெறும் வாய் மட்டும்தான்.

சித்தார்த் கேள்வியாக அப்போ என்னை என்ன  பண்ண சொல்ற? 

அப்பா சாமி ஒன்னும் பண்ணல பண்ண சொல்லல  நம்ம கெளம்பலாமா என்று கேட்டாள்.

சித்தார்த் அழகாக உடைய அணிந்து கொண்டு அவளுக்கு கிளவுஸ் , ஸ்காப் என அனைத்தையும் எடுத்து வந்து கொடுத்தவன். இதெல்லாம் போட்டுக்கோ! இந்த ஷூ ரொம்ப முக்கியம் என்று அவளை தயார் செய்து வெளியே அழைத்துச் சென்றான். 

அங்கு சென்றதும் ஜெர்மாட்டில் அவர்கள் இருவரும் முதலில் அண்டர் கிரவுண்ட் ட்ரெயினில் பயணம் செய்தார்கள்.  இந்த ட்ரெயின்ல போக எப்படி இருக்கு?…

 இதன்யா, சூப்பரா இருக்கு நான் இந்த மாதிரி போனதே இல்லை!.. இன்னொரு நாள் வரனும்!  என கூறினாள். 

அங்கு இருக்கும் அனைவரும் அதிகமாக யூரோப் கண்ட்ரி வெளிநாட்டவர்கள் மிகவும் வெள்ளையாகவும் அந்த ஊருக்கு தகுந்தது போல உடைந்து கொண்டும் இருந்தார்கள்.  அந்த ட்ரெயின் அவளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுத்தது.. 

என்னாச்சு? 

இதன்யா,  எனக்கு விரல் ஒரு மாதிரி இருக்கு!..

சித், அப்போ  கிளவுஸ் ரிமூவ் பண்ணிட்டு கையை உதறிட்டு மறுபடியும் கிளவுஸ் போட்டுக்கோ!. நம்ம இறங்கினதும் வாம் பண்ணிக்கலாம். 

ம்ம் சரி என அதே போல செய்தாள். 

சித், அடுத்து நான் உன்ன இன்னொரு வேற மாதிரியான ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன். உனக்கு ஜாலியா உனக்கு தெரியும் என்று  அந்த அண்டர் கிரவுண்ட் ட்ரெயினில் பயணம் செய்து முடித்ததும் அவர்கள் நேராக கேபின் ரைடுக்கு சென்றார்கள்.

மலைகளின் மேல் இருக்கிறது. பனிமலைகளின் மேல் இருக்கிறது.  கம்பிகளில் ரோக்களில் கேபின் போன்று அமர்ந்து அந்தப் பக்கமும் இந்த பக்கமும் மக்களை ஏற்றி கொண்டு வந்து விட்டது.

அவள் குதுகளத்துடன் ஹே ஐஸ் கிரீம் மாதிரி எல்லா இடத்திலும் ஸ்னோ இருக்கே! இதுல ஐஸ்கிரீம் செய்வாங்களா?  

சித்தார்த்  அவளை வினோதமாக பார்த்தான். 

அவள் உற்சாகத்தில் என்னங்க! நான் கொஞ்சம் எடுத்துக்கவா? என்று கீழே குனிய செல்ல..

சித், no no..

எனக்கு ஆசையா இருக்கு!

சித் சிரித்துக் கொண்டே என்னடி பண்ற?   நீ கெமிஸ்ட்ரி தானே படிச்சிருக்க?  இந்த இடத்தோட என்விரான்மென்ட் இதோட ஸ்ட்ரக்சர்க்கு தகுந்த மாதிரி இங்கே ஸ்னோ இருக்கு! அதனால இங்க வாட்டர் ஐஸா இருக்கு!  இதுல போய் இங்க ஐஸ்கிரீம் செய்வார்களா? அப்டின்னு கேட்கற?

இதன்யா தன்னை தானே திட்டிக்கொண்ட ஆமாம்ல!  எனக்கு தெரியும் ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுட்டேன்!  எனக்கு அதை தொட்டு பாக்கணும் போல இருக்கு! ஆசையா இருக்கு! ஒரு கிளாஸ் இருந்ததுன்னா நான் அதுல ஸ்னோ எடுத்து உள்ள போட்டு விளையாட நினைச்சேன். 

 சித்தார்த், அதுக்கு நாளைக்கு போகலாம்! இன்னிக்கு இத முடிச்சிட்டு  கேட்டின் லஞ்ச் சாப்பிட்டு  போகணும். கேபின் ரைடு போகனும். அண்ட் ஈவ்னிங் டவ்ன் பக்கம் போலாம். அங்க நல்லா இருக்கும்!..

ம்ம் சரி!..

அதன் பின் அவர்கள் அங்கு மேலே சென்றார்கள்.  அங்கே சென்றதும் டிக்கெட் வாங்கிக் விட்டு  இதன்யா,  இதுல எப்படி போக போறோம்? 

சித்  அங்க பாரு என்று காட்டினான்.

அப்படியா?  கீழே விழமாட்டேன் தானே! 

சித், நீ சயின்ஸ் ஸ்டுடென்ட் தான?

ஆமா!

அப்போ கீழ விழமாட்டோமான்னு கேக்குற? என சித் அவளை பார்க்க.. .

இல்ல சும்மா கேட்டேன்!..

அவர்கள்  ஏறும் நேரம் வர இதன்யா கொஞ்சம் பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க.. சித் அவளின் கையை பிடித்து இழுத்தான்.

எனக்கு!. எனக்கு!.. கொஞ்சம் பயமா இருக்கு.

சித், நான் கூட இருக்கேன் வா போலாம்! 

 அதன் பின் அவன் கைகளை கோர்த்துக்கொண்டு உள்ளே சென்று அதை பிடித்து கொண்டு அமர்ந்தார்கள். 

 ஒரு பனி மலையில் இருந்து இன்னொரு பனி மலைக்கு  சென்றது . அங்கிருந்து ஜெர்மனாட்டை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.  அந்த ஊர் வசீகரத்தை பெற்றிருந்தது. அவளைச் சுற்றி பனி மலைகள்!.. குளிர்!.. கூடவே அவன்!.. அவ்வளவு இனிமை!

இதன்யா அவன் கைகளை இறுக்கமாக கோர்த்துக் கொண்டே அதில் அமர்ந்து கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்போ எதுக்குடி இப்படி பண்ணிட்டு இருக்க? கை நடுங்குது!. 

எனக்கு பயமா இருக்குங்க? 

இதுக்கு போய் யாராவது பயப்படுவாங்களா? என கையை வருடி கொடுத்தான். 

இதன்யா, பிளைட்ல வரதுக்கு என்ன பயம்?   நீங்க சயின்ஸ் ஸ்டுடென்ட் தானே? என்னை சொல்லாதீங்க!. 

சித்,  ஆமா எனக்கு பயம் தான்! ஆனால் நீ இப்போ இதுல வரத்துக்கு பயப்படுற? 

நானும் மனுஷி தானே!  ஏதாவது ஒரு விஷயத்தில் எனக்கும் பயம் இருக்கும் தானே!  என்று கொஞ்சலாக கூறினாள்.

இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை..

ஹே பயமா இருக்கு டா!..

சித், நான் இருக்கேன் என்று கூறினான். 

இதன்யா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர அந்த ரைடு நின்று இறக்கி விடும் நேரம் வந்தது. அவனுடைய கையை இறுக்கி பிடித்து கண்ணை மூடிக்கொள்ள…

சித் திடிரென  அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.  மற்றவர்கள் இறங்கிக் கொள்ள..

இதன்யா வெடுக்கென அவனைப் பார்த்தாள். 

சித்தார்த் இறங்கலாம் என்று கையை பிடித்து  அழைத்துச் சென்றான்.

இதன்யா ஆமா இப்போ என்ன பண்ணீங்க?  என்று வேகமாக அவன் முன்னால் சென்றாள்..

இறங்கலாம்னு சொன்னேன்!..

 இப்போ என்ன பண்ணீங்க ? ஒழுங்கா சொல்லுங்க? என்று பக்கத்தில் நெருங்க..

நான் ஒன்னும் பண்ணலையே!..

இல்ல என் கன்னத்தில் என்ன பண்ணீங்க?  என்று மிரட்டலுடன் கேட்க..

சித் ஏளனமாக ஒரு பார்வையை பார்த்து உன்ன கிஸ் பண்ணேன்! என்று கண்ணை மெதுவாக  சிம்ப்டினான்.

 ஹே தைரியத்தை!.  எதுக்கு கிஸ் பண்ண? 

சித், சும்மா பண்ணேன்! என்று நடந்து கொண்டே கூறினான்.

இதன்யா  பின்தொடர்ந்து  இப்போ எதுக்கு கிஸ் பண்ண?  எனக்கு பதில் சொல்லிட்டு போ!..

சொல்ல முடியாது போடி!..

சொல்லு என டார்ச்சர் செய்தாள்.

இப்போ எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம் என்று கைப்பிடித்து அழைத்து சென்றான்.

இதன்யா இப்போ எதுக்கு கைப்பிடிக்கிற? முத்தம் கொடுக்கிற? என்கிட்ட என்ன டிரை பண்ண பார்க்கிற? 

ஒன்னும்  ட்ரை பண்ணல வா சாப்பிட போலாம்!. என அவன் பேச்சை முடிக்க..

இதன்யா, எதுக்கு முத்தம் கொடுத்த? 

எதுக்கு முத்தம் கொடுத்த?

எதுக்கு முத்தம் கொடுத்த என்று சாப்பிட்டு  முடியும் வரை கேட்டுக் கொண்டே இருந்தாள்.

சும்மா கொடுத்தேன்! என அவன்  அவளை தவிர்த்துக் கொண்டே வந்தான்.

இதன்யா ஒரு பக்கம் அவனை இழுத்துச் சென்று எதுக்கு எனக்கு முத்தம் கொடுத்த? இப்போ கை புடிச்சு இழுத்துட்டு போற உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? 

சித்தார்த் அவளை  பார்த்து இந்த கிளைமேட் நல்லா இருந்துச்சு!  நீ பயப்பட்டது! அதைவிட எனக்கு புடிச்சிருந்துச்சு! ரொமான்டிக்  மோட் அதனால கிஸ் பண்ணேன்!  போதுமா இனி இதை திரும்ப கேட்காத!. 

இதன்யா வாயைத் திறந்து அதே இடத்தில் நின்று கொண்டிருக்க..

சித்தார்த், இப்போ வரயா?  இல்லையா? 

 இதன்யா  எதுவும் பேசாமல் அவன் பின்னால் வர…

நான் கிஸ் பண்ணுது பிடிக்கலையா? 

அவள் கோபத்துடன்  அங்கு யார் இருக்கிறார்கள் என்று பார்க்கவில்லை க்லவுசை  எடுத்துவிட்டு கன்னத்தில் அறையச் சென்றாள்.

சித்தார்த் , இப்போ அறஞ்ச இந்த கண்ணத்திக்கும்  முத்தம் கொடுப்பேன் பரவாயில்லையா? என்று கேட்டான். 

இதன்யா,  ஓ அப்படியா வாடா வந்து கொடு!. 

அந்த இடத்தை சுற்றிலும்  மனிதர்கள் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சரி சாரி என்று  அவள் முன்னால் நடக்க..

சித்தார்த்,  எதுக்கு விட்டு போற!  என் கையை எப்பயும் விடக்கூடாது! என்று கோர்த்துக் கொண்டான்.

இதன்யா அவனைப் பார்த்தாள்.

என்ன அப்படி பார்க்கிற?  என சித் கேட்க..

இல்லை இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு!..

சித், ஆமா உனக்கு எல்லாமே கனவு தானே!  இதெல்லாம் நனவோ அது புரியாது!  நனவா இருக்குற எல்லாம் கனவா தெரியும் ! கனவா இருக்கிறது எல்லாம் என்று ஏதேதோ கூறினான்.

நீங்க என்ன சொல்றீங்க? 

 ஒன்றும் இல்லை வா போலாம் என்று கேபின் ரைட்டரில் மீண்டும் அந்தப் பக்கத்திலிருந்து இந்த பக்கத்துக்கு வந்தவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

இங்க வண்டி எல்லாம் இல்லையா?  நடந்து தான் போகணுமா ? ஆமா இங்க அதிகமா நடக்கத்தான் செய்வாங்க! என்று மலையிலிருந்து கீழே வந்தார்கள்.

இந்த அனுபவம் மிகவும் புதுமையாக இருந்தது .அதைவிட சித்தார்த் பேசியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதன்யா, இப்போ எனக்கு டீ குடிக்கணும் போல இருக்கு!..

 சித்தார்த்,  எனக்கு ஆல்கஹாலிக் டிரிங்க் குடிக்கணும் போல இருக்கு!

 இதன் அவனை முறைத்து என்ன? குடிக்க போறீங்களா? ஆல்கஹால் ட்ரிங்க்கெல்லாம் குடிக்க கூடாது.

சித்  அடிப்பாவி நான் ஒரு பாட்ல ஃபுல்லா அந்த  கிரீன் ( fairy )பேரிய முடிச்சுட்டு மனசார ஆல்கஹால் குடிக்க கூடாதுன்னு சொல்றாளே! குளிருக்கு இதமா அப்பப்ப ஒரு கட்டிங் போட்டுக்கிட்டு ஆல்கஹால் குடிக்க கூடாதுன்னு சொல்றாளே! என்று நினைத்தான். 

இப்போ எதுக்கு பாக்குறீங்க? இந்த குடிக்கறதுக்கெல்லாம் என்கிட்ட நடக்காது. 

 சித்தார்த், அடி டக்கு  டீச்சர் இது பனிப்பிரதேசம் டி! இங்க குடிக்காம யாராலயுமே உயிர் வாழ முடியாது. ஆடு மாடுகளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி தோல் கடவுள் படைச்சிருக்கார். ஆனா அதுக்கு பதிலா மனுஷனுக்கு அறிவ படைச்சிருக்கான். அதனால நம்மளை எந்த அளவுக்கு சூடா வச்சுக்க முடியுமோ அந்த இதத்தை தேடி நாம போகணும்! அப்பதான் நம்மளோட ரத்தம் உறையாமல் இருக்கும். புரியுதா! இல்லனா இந்த பணியில் நம்மளோட ரத்தமும் உறைய வாய்ப்பு இருக்கு. உயிர் கூட போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால இங்க ஆல்கஹால் அதாவது குடிக்கிறது  இங்க சாதாரண ஒரு விஷயம்.

இதன்யா ,அப்போ நம்ம ஊர்ல ஏன் குடிக்க கூடாதுன்னு சொல்றாங்க? நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க!..

சித் சிரித்துக் கொண்டே “நம்ம ஊரோட தட்பவெப்ப நிலை வேற , அந்த இடத்துல  குடிக்கக்கூடாது. ஆனா அளவுக்கு மீறினால் எல்லாமே விஷம் போல தான?  ஆனா இங்க வந்து குடிக்காம மனுஷனால உயிர் வாழ முடியாது. அங்க  நம்மளோட உடல்நிலை எல்லாமே நல்லா இருக்கும்.  அதனால ஒரு ஜாலிக்காக தான் நம்ம ஊர்ல குடிக்கிறாங்க. அதுவே ஜம்மு காஷ்மீர் அதுக்கப்புறம் வந்து உத்தரப்பிரதேசம் ஹிமாச்சல் பிரதேசம் எல்லாம் பனி ரொம்ப அதிகமா இருக்கும். அவங்களோட உணவுல ஒரு பகுதியா மருந்து மாதிரியாவது குடியை எடுத்துக்குவாங்க. இதுதான் விசயம்!  சோ நம்ம இருக்கிற இடத்துக்கு தகுந்த மாதிரி நம்ம உணவு பழக்க வழக்கமும் இந்த மாதிரி விஷயமும் இருக்கும்  சோ குடிக்காம இங்க நம்மளால இருக்க முடியாது!” என்று கூறினான். 

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? எனக்கு தெரியாதே!

சித்தார்த், இப்போ தெரிஞ்சிருச்சுல்ல அதனால நான் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்.

 இப்போ குடிக்க போறீங்களா என்று கோபத்துடன் கேட்க..

ரொம்ப குளிருதுடி  குடிக்கிறதுக்கு பதிலா என்னை சூடா வச்சுக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? 

நானும் குடிக்கணுமா?  வேற எப்படி சூடா வச்சுக்க முடியும்? 

சித் எதார்த்தமாக நம்ம கூட எதாவது  சூடா வச்சுக்கலாம். அதேபோல கூட பக்கத்துல ஒரு சூடு ஹார்டா ஒருத்தி இருந்தா இன்னுமும் சூடா இருக்கும். அவன் விளையாட்டாக தான் கூறினான் .

உடனே இதன்யா அந்த இடத்திலேயே நின்று அவனை திரும்பி அவனை பார்க்க.

சித்தார்த் ஒரு நான்கடி பின்னால் வந்தவன். என்னடா ஆள காணோம்? என்று பின்னால் திரும்பி, இதன்யா! என்ன ஆச்சு? ஏன் அங்கேயே நின்னுட்ட?

ஒன்னும் இல்ல என்று நடக்க ஆரம்பித்தாள்.

அதன் பின் அவர்கள் அப்படியே ஜெர்மனாட்டின் முக்கிய பகுதிக்கு வந்தார்கள். பார்ட்டி, கேளிக்கை விடுதிகள் கிளப்புகள், உணவகங்கள் ,ரெஸ்டாரன்ட் என துணிக்கடைகள்,  மற்றும் பொருட்கள் வாங்கும் ஒரு மெயின் இடத்திற்கு வந்தார்கள்m அந்த இடத்தில் சுற்றிக்கொண்டு சில உணவுகளை இதன்யாவிற்கு வாங்கி கொடுத்தான்..

அவளுக்கு மிகவும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. சித்தார்த் கிட்ட அவள் ஏதாவது ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தாள். அந்த நேரம் சித்தார்த் மற்றும் இதன்யா தங்கி இருக்கும் வீட்டின் வில்லாவின் உரிமையாளர் ஜார்ஜ் அழைத்தார்.

ஹலோ அங்கிள்?

அவர் சொன்ன விஷயத்தை கேட்டு  ஒகே ஐ வில் பி தேர் இன் 20  மினிட்ஸ் என்று கூறினான். .

சித் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு  உள்ளே வந்த நேரம்.. அவனுக்கு   அழைப்பு வந்தது.

இவ எதுக்கு இப்போ கால் பண்றா? 

யார் அவள்? 

Guess பண்ணுங்க!. 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga…

EPI 252 

இதன்யா என்னங்க அங்க போலாம்? அங்க ஏதோ பார்பிக்யூன்னு  போட்டு இருக்கு என்று அவனை பிடித்து இழுத்தாள். 

இல்ல டி  நம்ம இப்போ வீட்டுக்கு கிளம்பலாம். என்று அவளை கை பிடித்து கூட்டி சென்றான். 

என்ன சொல்றீங்க? இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாமே! இன்னும் நிறைய கடை இருக்கு! நான் உங்களுக்கு கிப்ட் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்! அத்தைக்கு,  அம்மாவுக்கு ஏதாவது திங்க்ஸ் வாங்கணும்?  என்று அவள் மிகவும் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருக்க…

சித், இப்போ இங்க கொஞ்சம் பனிப்புயல் ஸ்டார்ட் ஆக போகுதுன்னு! நியூஸ் வந்தது. அதனால நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.

அவர்கள் உள்ளே நுழையவும் அங்கே ஜார்ஜ் மற்றும் மேகி இருவரும் அவர்களை வரவேற்றார்கள். 

இதன்யா, ஹாய் ஆன்ட்டி! ஹாய் அங்கிள்! என்று மரியாதை நிமித்தமாக சிரித்துக் கொண்டே பேசினாள். 

சித்தார்த் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே நுழைய அந்த நேரம் அவனுக்கு மெலினாவிடமிருந்து ஃபோன் வந்தது.

சித்தார்த் அழைப்பை ஏற்று லீனா எப்படி இருக்க?  எப்பவும் மெசேஜ் தான் பண்ணுவ? ஆனால் இன்னிக்கு கால் பண்ணி இருக்க? என்ன விஷயம்? என்று கேட்டான்.

லீனா, சித்து நீ இப்போ  எங்க இருக்க?  என்று கேட்டாள்.

நான் இதன்யாவை கூட்டிகிட்டு கொஞ்சம் வெளியில வந்து இருக்கேன்.

 லீனா, நான் சுவிட்சர்லாந்தில் இருக்கேன்.

சித் புருவம் தூக்கி என்ன விஷயம்? சர்ஜரி எல்லாம் முடிஞ்சிடுச்சா? என்று எப்பொழுதும் போல் சாதாரணமாக கேட்டான்.

மெலினா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! என்ன? இப்போ உடனே வந்து பார்க்க முடியுமா? என்று கேட்டாள்.

சித், இங்கே கொஞ்சம் சைக்லோன்! நான் ஜென்மார்ட்ல இருக்கேன்! எப்படி வரது? அவள விட்டுட்டு என்னால வர முடியாது!. என்று கூற..

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்! சித்து டார்லிங் வா! இது உனக்கு ரொம்ப முக்கிய விசயம் 

 சித்தார்த் ஒரு நிமிடம் இதன்யாவை திரும்பி பார்த்தான்.

அவள் என்ன? என்பது போல் கேட்க..

ஒன்னும் இல்ல என தலையாட்டிவிட்டு “லீனா சரி நான் வரேன் இப்போ எங்க இருக்க?”

லீனா நான் இப்போ ஹோட்டல் பீனிக்ஸ்ல இருக்கேன் ஆனா அதுக்கு முன்னாடி…

சித்தார்த் நேராக ஜார்ஜ் மற்றும் மேகி அருகில் வந்து “அங்கிள் ஆன்ட்டி நான் இப்போ எனக்கு ஒரு சின்ன வேலை நீங்க கிளம்புறதா இருந்தா! கிளம்புங்க! இப்போ நான் போயிட்டு வந்துடுறேன்.

 இதன்யா அவனைப் பார்த்து அருகில் வந்து என்ன? அதுக்குள்ளாட்டியும் வேலை! இப்பதான் புயல் வருதுன்னு சொல்லிட்டு இருக்காங்க! நீங்க இந்த டைம்ல போறீங்க? எங்கே போறீங்க?

 எனக்கு ஒரு முக்கியமான வேலை டி நான் போயிட்டு வந்துடறேன் என்று சொல்ல..

 இதன்யா அவனை கொஞ்சம் தவிப்புடன் பார்த்தாள்.

சித் அவளின் கைப்பிடித்து நான் போயிட்டு வந்துடுவேன் டி கொஞ்சம் முக்கியமான வேலை! அர்ஜெண்டா போகணும்! ப்ராமிஸ் உடனே வேலையை முடிச்சிட்டு  வந்துருவேன். 

நீ பத்திரமா இரு!.. என்று சொல்ல..

மேகி, நாங்க பார்த்துக்கிறோம்! இட்ஸ் ஓகே ஆன்ட்டி! என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே வந்தான்.

அந்த நேரம் பீட்டர் மற்றும் கெவின்  என  சித்தார்த்துடைய பாதுகாவலர்கள் வந்து நிற்க..

சித்தார்த் அவர்களிடம் வீட்டை சுத்தி கொஞ்சம் பாதுகாப்போடு இருங்க! அண்ட் முக்கியமா கவனமா இருங்க! மேடமை பத்திரமா பாத்துக்கணும்! என்று சொல்ல..

உடனே  பீட்டர்,  ஓகே என்று சொல்லிவிட்டு நேராக அவர்களுடைய ஆட்கள் ஒவ்வொரு இடத்தில் மறைமுகமாக நின்று கொண்டார்கள்.

பாஸ் நாங்க ஓகே! இப்போ எங்க போறீங்க?  என்று பீட்டர் கேட்க…

நான் எனக்கு முக்கியமான வேலை வந்துடுறேன்!

பாஸ் இப்போ தான் புயல்னு சொல்லி இருக்காங்க.. நீங்க..

சித், நான் வந்துடுறேன் மேடம் பத்திரம் என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

 அங்கே சித்தார்த்த நேராக ஆல்பம் ரிசார்ட்க்கு வந்தான் லீனா அவன் வந்ததும் புன்னகையுடன் வந்து அணைத்துக் கொண்டால் சித்தார்த் கொஞ்சம் பார்வையை கூறாக வைத்துக்கொண்டு என்ன விஷயம் இதுக்கு வர சொன்னேன் என்று கேட்க 

சித்தார்த் அங்கிருந்து நேராக பீனிக்ஸ் அருகில்   பீனிக்ஸ் ஹோட்டல் உள்ளே இருக்கும் பப்புக்கு சென்றான்.

 இதன்யாவின் மனம் சஞ்சகமாக இருக்க உடனே கேட்காமல் போன் செய்தாள்.

ஹலோ எங்க இருக்கீங்க?  எப்போ வீட்டுக்கு வருவீங்க?

சித்தார்த், நான் வந்துடுவேன்டி! இன்னும் கொஞ்ச நேரம்.. ஒருத்தர பார்க்க வேண்டியதிருக்கு! பிசினஸ் விஷயமா நான் பாத்துட்டு.. பேசிட்டு உடனே கிளம்பி வந்துடுறேன். நீ சாப்பிட்டு தூங்கு! நீ இன்னிக்கி சரியாவே சாப்பிடல!  நீ தூங்கு நீ ரொம்ப டயர்டா இருப்ப?  ரொம்ப குளிருச்சினா நல்லா போத்திக்க!.  என்று கூறினான்.

இதன்யா சரி என்று வைக்க.. 

இதன்யாவிற்கு அடுத்த காலில் மேகா வந்தாள்.

என்ன ஹலோ என்று அவள் கேட்க.. 

இதன்யா,  ஹலோ என்று மென்மையான குரலில் அழைத்தாள்.

 நான் மேக ராஜ் பேசுறேன் இப்பொழுது இதன்யாவிடம் பதில் இல்லை…

 மேகா குரூரமாக சிரித்துக்கொண்டே  மேடம் இப்போ ஹனிமூன்ல இருக்கீங்க போல?  ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா? 

 இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ண..

 மேகா, நானும் இப்போ சுவிட்சர்ல தான் இருக்கேன்! இப்போ என்னை பாக்குறதுக்கு தான் சித் வராரு! அதை உன் கிட்ட  சொன்னாரா? 

இதன்யா புரியாமல் அப்படியே அமைதியாக இருந்தாள்.

உடனே மேகா சிரித்துக்கொண்டே நீ அமைதியா இருக்கிறத பார்க்கும்போதே தெரியுது! சித்தார்த் உன்கிட்ட எதையுமே சொல்லலைன்னு! சரிதான? பாரு! இனி எதுவுமே சொல்ல மாட்டாரு! 

இதன்யா, சரி ஓகே மேகா! என சொல்ல

மேகா சிரித்துக்கொண்ட இதுக்கு என்ன அர்த்தம்? 

என்ன அர்த்தம்! என இதன்யா கேட்க..

மேகா,  உன் புருஷன் எனக்கு கொடுக்க போறியா என்ன ?

இதன்யா, ஹே வார்த்தையை அளந்து பேசுடி! என்று கூற…

உடனே மேகா சிரித்துக்கொண்டே நான் எதுக்கு அளந்து பேச போறேன்! இனிமே நீ எந்த இடத்தில் இருக்கிறேன்னு  அளந்துக்க!. ஏன்னா சித் எனக்கு  இன்னைக்கு எனக்கு சொந்தமாக போறான்! 

 இதன்யா , அப்படியா?  சரி ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள். என போனை வைத்து விட்டாள். 

இங்கே நேராக சித்தார்த் பீனிக்ஸ் மால் உள்ளே இருக்கும் பப்புக் வந்து சேர்ந்தான்.

சித் லீனாவுக்கு போன் செய்து இப்போ எங்கே இருக்க? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

 நான் ரைட் சைடு இருக்கேன் என்று லீனா கூற..

அந்த நேரம்  மேகா அவளுக்கு கால் செய்தாள்.

லீனா, சித்தார்த் வந்தாச்சு! இப்போ  என்னை தேடி வர போறான்.  என சொல்ல வர.. 

மேகா நான் எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்.நீ அவன்  கிட்ட பேச ஆரம்பி! 

லீனா கொஞ்சம் பதட்டத்துடன் இப்போ நீ என்ன பண்ண போற?

 மேகா சிரித்துக்கொண்டே  எனக்கு சித்தார்த் கிட்ட பேசணும்! அவ்வளவுதான்! அவனை நிறைய குடிக்க வைக்க போறேன் . குடிக்க வைத்து அவனை எனக்கு சொந்தமாக்க போறேன்..

லீனா, ஹே இது இது எல்லாம் வேணாம்! 

மேகா, ஹே இதுல நீ தலையிடாத!. 

லீனா,  இனி தேவையில்லாத பிரச்சினைகளை மாட்ட போற!.

மேகா இளனமாக  உனக்கு அந்த அமௌன்ட் வேணுமா? வேண்டாமா? இத இந்த அளவுக்கு சித்தார்த் கூட உனக்கு கொடுத்திருக்க மாட்டான்! என்று மேகாக்கு சொல்லிக் கொண்டிருக்க..

சித் நேராக லீனாவுக்கு எதிரில் வந்து நின்றான்.  லீனா சிரித்துக் கொண்டே எழுந்து நிற்க..

மேகா,  வாய்ஸ் நோட்டில் அவனை தொடர வேலை வச்சுக்காத! அவன் எனக்கு சொந்தமானவன்!

 லீனா சிரித்துக்கொண்டே உட்கார்ந்து என்று சொல்ல எதிரிகள் அமர்ந்து கொண்டான்.

உடனே சித்தார்த் நீ எதுக்கு என்னை வர சொன்ன? என்று கேட்க..

எனக்கு உன்ன பாக்கணும் போல தோணுச்சு! எனக்கு சர்ஜரிக்கு நீ தானே ஹெல்ப் பண்ண! அதனாலதான் என்று அவள் பேசிக் கொண்டிருக்க.. 

அங்கே அனைவரும் ஆடி கொண்டும் Tj இசையை ஓட விட அதற்கு ஏற்ப மதுவில் தங்களை மறந்து கிறங்கி கொண்டிருந்தார்கள். 

சித், எனக்கு இப்போ வேலை இருக்கு! நான் இதன்யாவ  தனியா விட்டு வந்திருக்கேன். நான் அவகிட்ட போகணும்.

 லீனா, உனக்கு இதன்யா பொருத்தமானவ இல்ல! நான் சொல்றதை கேளு! என்று சொல்ல வர..

சித்தார்த் இதை சொல்றதுக்கு தான் நீ கூப்டியா! 

 லீனா, நீ ஏன் மேகாவ ட்ரை பண்ண கூடாது என்று கேட்டாள்.

சித்தார்த்,  உன் வேலையை நீ பாரு! உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு, இதுதான் உபகாரமா? என்று கேட்டான்.

 லீனா அப்படி இல்ல மேகா ரொம்ப நல்ல பொண்ணு! அவ உன் மேல அவள்  ரொம்ப உன்ன ரொம்ப காதலிக்கிறா. என்று சொல்லிக் கொண்டிருக்க..

அந்த நேரம் வெய்டர் வந்தார்கள்.

சார் என்ன ஆர்டர் பண்றீங்க? என்று கேட்க..

சித், எனக்கு எதுவும் வேண்டாம்! என்று எழுந்து நிற்க..

லீனா முதலில் சரி சரி கூல் கூல் கொஞ்சம் ட்ரிங்க் கம்பனி கொடு!. என ஆப்சந்தி சொல்ல..

இரண்டு கோப்பையில் அந்த மது கொடுக்க பட.. 

மேகா ப்ளூ டூத்ல இதை ஒன்னை மட்டும் குடிக்க வச்சிடு! இனி அடுத்து வரதை நான் பார்த்துக்கிறேன். என லீனாவிடம் கூற 

லீனா, ஹே சித்து ஜஸ்ட் கம்பனி கொடு! இதை பினிஸ் பண்ணிட்டு நீ குட் பாய் சொல்லிட்டு கிளம்பிடு! 

சித் ஒரு மிடுக்கு குடித்து கொண்டே இப்போ எதுக்கு திடீர்னு அந்த மேகா பத்தி பேசுற? 

லீனா, அவள் உனக்கு ரீல் ஜோடில சுப்பெரா இருக்கா! அதே போல ரியல் ஜோடில நல்லா இருக்கும். 

சித், என்னோட பொண்டாட்டி இதன்யா தான்! என எழுந்து செல்ல போக…

ப்ளீஸ் சித்து!  என்று இன்னொரு குரல் கேட்டது. அங்கே மேகா வந்தாள். அவன் அருகில் அமர்ந்து மூணு ஆப்சந்தி என்று கூற..

 மேகா, சித்து நிஜமாவே பாரு! உன்னுடைய எக்ஸ் லவ்வர் லீனாவே சொல்றாளே! நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்றேன். நீ இப்போ சொல்லு! இப்போ உடனே  இதன்யாவை நம்ப யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சிடலாம்! நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம்!..

 சித்தார்த் அப்படி எனக்கு எந்த எண்ணமும் கிடையாது. என்று சொல்லிக் கொண்டிருக்க..

மேகா அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

சித், உனக்கென்ன பைத்தியமா? அவள் என்னோட பொண்டாட்டி! 

வெயிட்டர் மீண்டும் ஆப்சந்தியை ஊற்றி வைக்க லீனா எடுத்து குடித்து கொண்டே அவர்களை பார்த்தாள். 

சித் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான். மற்ற படி எதுவும் பேச வில்லை. 

மேகா அந்த மதுவை வேகமாக குடிக்க ஆரம்பித்து கொண்டே லீனாவை பார்க்க…

லீனா, ஓகே சித்து நான் கிளம்புரேன் என எழுந்து கொண்டாள். 

சித், எனக்கும் இங்கே வேலை இல்ல! சோ நானும் கிளம்புறேன். 

மேகா சிரித்து கொண்டே கிளம்புறயா சரி கிளம்பு பார்ப்போம்! 

லீனா மற்றும் சித் இருவரும் திரும்பி பார்க்க..

மேகா அந்த பாட்டு சத்தத்தில் வைப் செய்து ஆடி கொண்டே இன்னிக்கி நீ என் கூட தான்!  என்னோட படுக்கையில்! என சொல்ல..

சித்தார்த், அப்படியே நினைச்சிட்டு இரு! என நடக்க ஆரம்பித்தான். 

மேகா அதே இடத்தில் அமர்ந்து கொண்டு பார்க்க..

லீனா, ஹே என்ன பண்ண போற? அவன் குடிக்கல அதனால சித்து கிளம்பிடுவான். நீ உன் மனசை மாத்திக்க பாய் என்று நடக்க போக..

மேகா சிரித்து கொண்டே ஹோ உன் முன்னால் காதலனுக்கு சப்பொட் பண்றயா B*..

லீனா கோபமாக யாரை பார்த்து b* சொல்ற? 

மேகா, ஹே என்ன டி! நான் கொடுத்த காசுக்கு எனக்கு விசுவாசம் இல்ல.. என எழுந்து நின்றாள். 

லீனா அவளை கோபத்துடன் பார்த்து கொண்டே அருகில் வர..

மேகா சிரித்து கொண்டே என்ன அவனை காப்பாற்றி விடுவதை போல தெரியுது! ஆனால் அதுக்கு முன்னாடி உன்னை காப்பாற்ற யார் வருவா! என பின்னால் ஒருவனை பார்த்தாள். 

அவர்கள் நேராக லீனா அருகில் வந்து அவளை பிடிக்க வர..

லீனா, ஹே என்ன பண்ற என அவளை பிடிக்க வர…

மேகா சிரித்து கொண்டே நீ குடிச்ச அந்த அப்சந்தில மயக்க மருந்து கலந்திருக்கென். சோ இப்போ நீ தூங்க வேண்டிய நேரம்!  என லீனா விடம் இருக்கும் போனை பிடுங்கி கொண்டாள்.

லீனா, நான் தப்பு பண்ணிட்டேன் சித்து உன்னை கூப்பிட்டு இருக்க கூடாது. என பேசும் நேரம் அவளை இரண்டு வெள்ளை மனிதர்கள் தூக்கி கொண்டு செல்ல..

மேகா, பாய் என ஒரு மார்க்கமாக சொன்னவள் அப்படியே சித்தார்த்தை பார்க்க.. 

அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க ஆரம்பித்தான். 

மேகா சிரித்து கொண்டே அருகில் வந்தவள். நீ குடிச்ச அந்த அப்சந்தில மயக்க மருந்து அப்புறம் அது கூடவே என்னை ஸ்டிமுலேட் பண்ண உனக்கு கொஞ்சம் மருந்து போட்டுருக்கேன். என அவன் அருகில் நெருங்கினாள். 

சித்தார்த்தின் கண்கள் கிரங்க அவளை விட்டு விலகி வேகமாக போனை எடுத்து பீட்டருக்கு அழைக்க செல்ல..

மேகா, பாரு டா! பாவா! வா பாவா! என கண்கள் சொக்க அவனை அழைத்தாள். 

சித் அவளை தள்ளி விட..

டேய் பாய்ஸ் என் டார்லிங்க தூக்கிட்டு வாங்க டா!  என அவள் முகம் எல்லாம் சிவக்க உடல் சிலிர்க்க அவளுடைய அறையை நோக்கி முன்னால் நடந்தாள். 

சித், ஹே ஒழுங்கா விடுங்க டா! லீவ் மி என மயக்கத்தில் அவர்களிடம் இருந்து விடு பட ஆடி கொண்டே வந்தான். 

தொடரும்..

அடுத்து என்ன நடக்கும்? நாளைக்கு பார்ப்போம்! 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 253

இதன்யா அதே இடத்தில் அப்படியே அமர்ந்து கொண்டாள். அவளுக்கு இப்பொழுது சிந்தையில் வெற்றிடம் மட்டுமே நிறைந்து இருந்தது..மேகி அவளின் அருகில் வந்து என்னாச்சும்மா? ஏன் உன்னோட முகம் சரியில்ல? சித்தார்த் கிட்ட பேசுனியா? அவன் எப்போ வருவான்? என்று ஆங்கிலத்தில் கேட்க…

இதன்யா ஒரு விரக்தி  புன்னகையுடன் அவர் இனி வரவே மாட்டாரு என்று தமிழில்  கூறினாள்.

What? What did you say? I’m didn’t understand baby! 

இதன்யா ஆங்கிலத்தில் சாரி ஆன்ட்டி அவரு வந்துடுவாரு!  நீங்க கிளம்பறதா இருந்தால் கிளம்புங்க, நான் பாத்துக்குறேன்! என்று சொல்ல..

ஜார்ஜ், இதன்யா என்று அழைக்க..

வாமா சாப்பிடலாம்! டின்னர் பினிஷ் பண்ணிட்டு, சித்தார்த்துக்காக வெயிட் பண்ணலாம். என்று அழைத்தார்கள்.

இட்ஸ் ஓகே அங்கிள், எனக்கு பசிக்கல என்று கூற..

மேகி, come on baby come come  என்று அழைத்துக் கொண்டே அவளை அமர வைத்தார்கள். 

இதன்யாவால் அதற்கு மேல் முடியாமல்  எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு! எனக்கு வேண்டாம் , நீங்க சாப்பிடுங்க ஆன்டி என்று வேகமாக அவர்களை தவிர்த்து விட்டு அவளுடைய அறைக்கு ஓடிவிட்டாள்.

 மேகி, என்னாச்சு இந்த பொண்ணுக்கு என்று கேட்க..

ஜார்ஜ், அவளுக்கு சித்தார்த்த பாக்கணும் போல! அதனால தான் இப்படி இருக்கா! எப்ப வருவானோ?

மேகி, ட்ரை பண்ணுங்க என்று கூற..

ஜார்ஜ் போனை எடுத்துக் கொண்டு சித்தார்த்துக்கு ட்ரை செய்து  ரிங் போயிட்டு இருக்கு! எடுக்க மாட்டேங்கறான்! அப்போ அவன் முக்கியமான வேலையா இருப்பான். வருவான். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கலாம்!

நீங்க வாங்க சாப்பிடறீங்களா? என்று மேகி கேட்க

இல்ல சித்தார்த் வரட்டுமே! இந்த நேரத்துல இப்படி இந்த பையன் பண்ணிட்டானே! நான் சந்திர மௌலிக்கும், கிருஷ்ணனுக்கும் என்ன பதில் சொல்லுவேன்? அந்த பொண்ணு வேற சோகமா மேல போயிட்டா! என்று அவர் அமர்ந்து பனிப்புயல் பற்றிய செய்திகளை டிவியில் பார்க்க ஆன் செய்தார்.

இங்கே மேகா அவனை  பீனிக்ஸ் ஹோட்டலில் இருக்கும் அவளுடைய அறைக்கு சித்தார்த்தை தூக்கி வர சொல்லி விட்டு அவள் முன்னால் நடந்தாள்.

சித்தார்த், ஹே விட்டுடு சொல்றத கேளு! You b* இதுக்கு நீ நிறைய அனுபவிப்ப! என்னை  பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது!. என்று அவன் உளறிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் வர..

மேகா,  விடதான போறேன்.  என்ன சித்து நீ இப்படி இருக்க?  நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?  மேட்லியா உன்ன லவ் பண்றேன்! ஆனா நீ  இப்படி பேசலாமா? என அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே  அவனை அருகில் இருக்கும் ஒரு சேரில் அமர வைக்க சொன்னாள்.

சித், ஹே லீவ் மி பாஸ்டர்ஸ்! என அவன் நாக்கு உலர தலை ஒரு இடத்தில் நிற்காமல் ஆடி கொண்டே கூற…

மேகா, ம்ம் இந்த சேர்ல உட்கார வைங்க! அவனோட கைய மட்டும் கட்டி போடுங்க! என்று கூறினாள்.

அதே போல் அந்த அடியாட்கள் கட்டிப்போட்டார்கள்.

மேகா, ஹான்  வேல முடிஞ்சது. அந்த லீனாவை கவனமா பாத்துக்கோங்க!  இந்த ஒரு இரவு தாண்டனும்! அதுக்கப்புறம் எல்லாமே மாறப்போகுது! என்று மேகா நினைத்துக் கொண்டு அவளை கண்காணிங்க என்று  அனுப்பி வைத்தாள் .

சித்தார்த்தின் தலை தொங்கிக் கொண்டே எழ நிறைய முறை முயற்சி செய்தான். ஆனால் அவனால் எழ முடியவில்லை.

மணி என்ன? வாட் ஈஸ் அ டைம்? என்று கடுமையான குரலில் கேட்க..

மேகா,  இதுல எந்த கலர் எனக்கு நல்லா இருக்கும்?  என்று டார்க் ரெட் மற்றும் டார்க் பிளாக் என இரண்டு வண்ண நெட் சாரி புடவையும்  சித்தரத்திடம் காட்டினாள்.

சித்தார்த் கண்களை முழிக்க கூட முடியாமல் திணறிக் கொண்டே மணி என்ன? என்னை விட்டுடு அது தான் உனக்கு நல்லது. நீ நினைக்கிறது நடக்காதுடி! நடக்காது என்று கூறினான்.

மேகா,  நீ நினைக்கிறது தான் சித்து நடக்காது! நான் நினைக்கிறது கண்டிப்பா நடக்கும்! இதோ  இன்றைக்கு நடக்க தான் போகுது! என்று சிரித்துக்கொண்டுசரி சரி சொல்லு எந்த கலர் போடட்டும்? எல்லாத்துக்கும் ஒரு புரோசிஜர் இருக்கு தான என்று இரண்டையும் அவன் முன்னால் நீட்டினாள்.

என்னை விடுடி! என்னை விட்டுடு! தேவையில்லாத பிரச்சினைல  மாட்டிக்காத! நான் இதன்யா கிட்ட போகணும்! என்று சொல்லிக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான்.

மேகா இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவள். இதன்யாவின் பெயரைக் கேட்டதும் உனக்கு ஏன் அவளை புடிச்சிருக்கு? அவ ஒரு பிச்சைக்காரி! அது தெரியுமா? அவ  அதவிட மோசமானவ!  அவளை எதுக்கு நீ புடிச்சிருக்குன்னு சொல்ற! உன்னோட தகுதி என்னன்னு தெரிஞ்சுக்கோ? சித்து சித்துது!.. சித்தார்த் இங்க பாரு! என்னை  பாரு என்று அவனுடைய கண்ணத்தை பிடித்தவள்.

அவனிடம் நான் மேகா!  எவ்ளோ அழகா இருக்கேன்! பாரு உனக்காக நான் இந்த ட்ரெஸ் எல்லாம் போட்டுக்க போறேன்.  உனக்கு என்னை பாத்து எதுவும் தோணலையா? 

 சித்தார்த்,  உன்ன கொல்ல தோணுது! என்னை விடு டி! மணி என்ன?

மேகா,  என்னை அங்க கொல்லு! என்று படுக்கையை காட்டினாள்.

சித்தார்த், என்ன கலந்து கொடுத்த?  இப்போ டைம் என்ன?  என்று  திரும்ப திரும்ப கேட்..

மேகா சிரித்துக்கொண்டே சித்து மணி இப்போ சிக்ஸ் 7.15, 16  என்று கூறினாள்.

சித்தார்த், உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் ஒழுங்கா என்ன விட்று! 

 மேகா,  வாய்ப்பே இல்லடா கண்ணா!  இன்னிக்கி நீ என் கூட தான்!  சரி இதுல நானே ஒரு ட்ரெஸ்ஸ சூஸ் பண்ணிக்கிறேன்.  இப்போ எனக்கு ரெட் ரொம்ப புடிச்சிருக்கு. என்று வேகமாக சென்றவள். அந்த dark Red வண்ண புடவையை கட்டிக்கொண்டு, அழகாக லிப்ஸ்டிக், மற்றும்  வாசனை திரவியம் என அனைத்தையும் அடித்துக் கொண்டாள் .

ஒரு கோப்பையில் இப்பொழுது ஒயினை ஊற்றி ரெட் ஒயினை ஊற்றிக் கொண்டே அவனை நோக்கி வந்தாள். 

மேகா அவனிடம் சித்தார்த் உனக்காக ரெட் வைன்!  கூடவே இந்த பியூட்டி ரெட் குயின் என்று கூறினாள்.

சித்தார்த் தயவுசெய்து தேவையில்லாத பிரச்சனைல மாட்டிக்காத!  உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.

மேகா, பத்து நிமிஷமா அதுக்குள்ள உன்னால் முடியுமா!  என்னடா கண்ணா? நான் இன்னைக்கு ராத்திரி ஃபுல்லா பண்ணலாம்ன்னு என்று நினைத்தேனே! என்று சொல்லிக்கொண்டே அவனை மோகத்துடன் பார்த்தாள்.

சித்தார்த்துக்கு இப்பொழுது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

மேகா காத்திருந்தாள் அந்த மாத்திரையை கொடுத்து சரியா அரை மணி நேரம் ஆகப்போகுது. இப்போ  வேலை செய்ய ஆரம்பிக்கும்ன்னு என்று நினைக்கிறேன். என்று சித்தார்த்தை பார்க்க..

அவன் கண்கள் எல்லாம் கொஞ்சம் சிவந்து மூச்சை வேகமாக இழுத்து விட ஆரம்பித்தான்.

 மேகா சிரித்துக் கொண்டே அவ்வளவுதான்டா கண்ணா!  நீ இப்போ ரெடி ஆயிட்ட! இப்போ நம்மளோட பயணத்தை ஆரம்பிக்க போறோம்! என்று அவனுடைய கைக்கட்டை அவிழ்த்து விட்டாள்.  வேகமாக அவனை கட்டி அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.

அவனை கட்டிக்கொண்டு இதழில் முத்தமிட வர சித்தார்த், என்ன பண்ற என்று அவளை அவளை தள்ளிவிட முயற்சி செய்தான்.

மேகா அவன் இதழில் கை வைத்து அவனுடைய இரண்டு கைகளையும் எடுத்து அவளின் இடையை பிடிப்பது போல நிற்க வைத்தவள். ஹே  என்ஜாய் பண்ணு! பாவா! அதுக்கப்புறம் நான் உன்ன எங்கேயோ கூட்டிட்டு போயிடுவேன்!  என்று கூறிக் கொண்டே மேகா முத்தமிட..

சித்தார்த் அவளின் இடையைப் பிடித்து தள்ளிவிட சென்றவன்.  அந்த மருந்தின் வீரியம் காரணமாக அவளுடன் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். 

மேகா அவனுடைய முத்தத்தில் மோகம் பற்றி கொள்ள அவ்வளவுதான் சித்து! என்று முத்தத்தை முடித்துக் கொண்டு அவள் அவனை படுக்கையில் தள்ளிவிட.. 

சித் கண்ணை மூடி கொண்டே கைகளில் தேட . மேகா அவனுடைய சட்டையில் கை வைக்க அவளின் கையை பிடித்தவன். இதன்யா!  ரெட் பேபி! ரெட் பேபி! லிட்டில் ஹார்ட்! இதுக்கு மேல முடியாது டி! நான் உன்னை இன்னிக்கு எடுத்துப்பேன். இன்னிக்கி உன்னை எடுத்துக்கவா?  என இதன்யாவிடம் பேச ஆரம்பித்தான். 

 மேகாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது. என்ன இதன்யாவா?  ரெட் பேபியா? அவளை நினைச்சா எனக்கு முத்தம் கொடுத்த!  டேய் நான் மேகா! என்று  சித்தார்த்தின்  முடியை பிடித்து ஹே கண்ணை திற? நான் மேகா!  இப்போ மேகாவுக்கு முத்தம்  இதழில் ஒற்ற மேகா என்று பெயர் அந்த இதழ் ஒற்றல் அவனுக்கு எதோ அசிங்கம் சித்தார்த்தின் உதட்டில் பட்டது போல அசுரனாக மாறியவன் வேகமாக மேகா என்ற வார்த்தையை கேட்டதும் சித்தார்த் கோபமாக அவளை தள்ளிவிட்டான். 

அவள் இதை எதிர்பார்க்காமல் படுக்கையை தாண்டி உருண்டு கீழே விழுந்தாள். மேகா வலியில் துடித்துக் கொண்டே சித்தார்த் நான் மேகா!  என்னை தள்ளிவிட உனக்கு எவ்வளவு தைரியம்? என்று வேகமாக எழுந்து வர..

அவன் சுதாரித்துக் கொண்டே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து கொண்டே  தள்ளாடி கொண்டே  மணியை  பார்த்தான்.

இப்போ டைம் என்ன? என சித் எழுந்து செல்ல போக.  

மேகா டேய் எங்கே போற.. என்று அருகில் வர.. 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

 சித்தார்த் மணி என்ன என்று திரும்பத் திரும்ப டைமை பற்றிய கேட்டுக் கொண்டிருந்தான்.

கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்க மேகா ஒரு நிமிடம் பயந்தாள்.‌

இவ்வளவு நேரமும் கிலம்புவதுள் குறியாக இருந்தவன் இப்பொழுது அருகில் உள்ள குளியலறை சென்று சவரை திறந்து விட்டு ஒரு நிமிடம் நின்றான். 

மேகா கதவை திறக்க பயந்தாள். சித் சிரித்துக் கொண்டே வெளியே வந்தவன்.  என்ன  அப்படி பார்க்கிற? இப்போ மணி ஏழரை தானே!  இந்த நிமிஷத்திலிருந்து உனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆயிடுச்சு டி! என்று கூறினான். 

மேகா  அவன் பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருடா உன்னை வந்து வச்சுக்கிறேன்! இனிமே ஸ்ட்ரைட்டா உன்னை என்ன பண்றேன்னு பாரு! என்று யாரா இருக்கும் ஒருவேளை லீனா தப்பிச்சிட்டாளா? என்று சொல்லிக் கொண்டிருக்க…

சித்தார்த் அருகில் உள்ள ஜக்  தண்ணீரை எடுத்து ஆவேசமாக தலைக்கு ஊத்திக் கொண்டவன். அந்த அறையின் வெப்பநிலையை ஆஃப் செய்தான். இப்போதைக்கு அவனுக்கு மயக்கம் வர கூடாது. அந்த சபல எண்ணம் வரவே கூடாது. அதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

என்னடி நினைச்ச?  நான் அவ்வளவு முட்டாள்ன்னு  நினைத்தாயா? என்று சித் சிரிக்க ஆரம்பித்தான்.

மேகா ஒன்றும் புரியாமல் என்னடா?  என்று அவன் அருகில் வர..

சித்தார்த் வேகமாக தள்ளாடிக் கொண்டு எழுந்தவன். அவளை படுக்கையில் தள்ளி விட்டான். நான்  சித்தார்த் கிருஷ்ணா டி என்னையவே பிளான் கடத்திற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய கிரிமினலா? அப்போ நான் யாரு டி? 

மேகா புரியாமல் பார்க்க கதவு வேகமாக தட்டப்பட்டது ஒரு நிமிடம் கழித்து சாவி போட்டு திருடும் சத்தம் கேட்டது. கதவை யார் சாவி போட்டு திறக்கராங்க? என மேகா பார்க்க..

சித் அந்த சேரில் கொஞ்சம் தள்ளாடி கொண்டே அனர்ந்தவன். அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுற? உனக்கு வெக்கமா இல்ல ? இத்தனை நாள் உன்னை சும்மா விட்டது பெரிய தப்பு!. என்னை அவ்ளோ கேனயனா நினைச்சு இருக்க? 

மேகா கஷ்ட பட்டு எழுந்து கொண்டே சித்து என அருகில் வர…சித் அவளின் கொத்து முடியை பிடித்து தள்ளி விட்டவன். நான் வீட்டில் இருந்து  நான் கிளம்பும்போதே உன்னோட ஜாதகம் மொத்தத்தையும் எடுத்துட்டேன்டி!.. என கைகளை இறுக்கி மடக்கி  வேகமாக மேகாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான்.

மேகா, சித்து நான் உன்ன லவ் பண்றேன்! அது உனக்கு ஏன் புரிய மாட்டிக்கிது? என சொல்ல…

அந்த நேரம்  கதவு தடாலடியாக திறந்தது.

சித்தார்த் அந்த இடத்தில் ஒருவித மயக்கத்தில் நின்று கொண்டிருக்க..

பாஸ்!. 

சித் கடுமையான குரலில் கெவின் வரதுக்கு இவ்வளவு நேரமா? என்று கேட்டான் .

சாரி பாஸ் என்று உள்ளே வந்ததும் மேகாவை இருவர் பிடித்துக் கொண்டார்கள்.

சித்தார்த் தள்ளாடிக் கொண்டே எழுந்து வர..

கெவின் சித்தார்த்தை பிடித்துக் கொண்டு வெளியே அழைத்து  வர. 

சித்து போகாத! சித்து போகாத! என மேகா கத்த ஆரம்பிக்க…

சித்தார்த் கோபமாக மீண்டும் அவளின் அருகில் வந்து கொத்து முடியை பிடித்து சுவற்றில் ஒட்டி அப்படியே தூக்கினான்.

சித்து சித்து என்று அவள் திணறிக் கொண்டு கர்த்த..

சித்தார்த், என்னை அவ்வளவு சாதாரணமா நினைச்சியா என்று சிரிக்க ஆரம்பித்தான்.

மேகா மூச்சுக்காக திணறிக் கொண்டே கால்கள் தளர  கண்கள் இரண்டும் சுழல போக அப்படியே அந்தரத்தில் தொங்கினாள்.

கெவின், பாஸ் என்று அழைக்க..

சித்தார்த் அவளை படுக்கையில் வீசியவன். க்ரூர புன்னகையுடன் நீ எனக்கு மயக்கம் மருந்து கலந்தியா?  என்று சிரித்துக் கொண்டே அவளை தள்ளாடி கொண்டும் பார்த்தான்.

மேகா, சித்து  இதன்யா கிட்ட போகாத!  என்று அவள் அடியையும் வலியையும் மறந்து எழுந்து வர..

உடனே சித், ஹே முட்டாள்.  எனக்கு மட்டும்தான் மயக்கம் மருந்து கலந்தியா? இல்ல! உனக்கும் கலந்துகிட்டயா ? என்று கேட்டான்.

மேகா புரியாமல் அவனை பார்க்க..

சித்தார்த்,  நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் கொஞ்சமே கொஞ்சம் தான் நல்லவன்.  புரியுதா!..

மேகா கொஞ்சம் பயத்துடன் பார்க்க…

சித், நீ குடிச்ச அப்சந்தில மருந்து!  என நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.

மேகா, என்ன சொல்ற? 

சித் சிரித்து கொண்டே இன்னும் கொஞ்ச நேரத்துல நீ உன்னையே மறக்க போற! என்று கூறினான்.

மேகா பதட்டத்தில் அவனை பார்க்க..

 சித்தார்த்  முட்டாள் கொஞ்சம் நல்லா யோசி! என்னை அடியாட்கள் தூக்கிட்டு வரும் போது ஏன் மேடம் வளைஞ்சு வளைஞ்சு போனீங்க?  சாரி நடந்தீங்க?

மேகா கொஞ்சம் யோசிக்க அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆம் அவள் சித் முன்னால் தள்ளாடி கொண்டே நடந்து வந்தாள். அது அவளுக்கு தெரியவில்லை. இப்பொழுது  கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு போதை தலைக்கேற ஆரம்பித்தது.

நான் சித்தார்த் கிருஷ்ணன் டி! நீ எனக்கு பிளான் பண்றதுக்கு முன்னாடியே நான் உனக்கு பிளான் பண்ணிட்டேன்!  என்று கூறி கொண்டே தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றினான். 

 மேகா உதடுகள் தந்தி அடிக்க போதையில் கண்கள் சொருக என்னடா பண்ண? எனக்கு என்னடா கொடுத்த? என உளற ஆரம்பித்தாள்.  

சித்தார்த் தண்ணீரை எடுத்து அவனுடைய முகத்தில் அடித்து கொண்டே ஒரே ஒரு சின்ன விசயம் என்னன்னா? நான் கொடுத்தது ஸ்ட்ராங் போதை! சோ உன்னை நீயே மறந்து சுற்றினால் கூட  ஆச்சரியம் இல்ல!

மேகா, சித்து!..

சித், நீ எனக்கு கொடுத்ததை விட பல மடங்கு நான் உனக்கு கலந்து கொடுத்துட்டேன். ஆனால் எப்டி கொடுத்தேன் என்ன நடந்தது? ஹான் என கேட்க..

கெவின் பயந்து கொண்டே சித்தார்த்தை பார்த்தான். அவன் பேசும் தமிழ் புரியவில்லை. ஆனால் எதோ பெரிய விசயத்தை தான் ஆக்ரோசமாக சொல்லி கொண்டு இருக்கிறான். 

மேகா, என்னை விட்டு போகாத சித்து! என்ன சித்து என்னென்னமோ சொல்ற.. என கிரக்கத்துடன் அவள் எழுந்து கொண்டாள். 

சித், அதே சஸ்பென்ஸோட இரு! அண்ட் அடுத்த மீட் முடிஞ்சா  நம்ப ஷூட்டிங்ல மீட் பண்ணா மீதி கதை சொல்கிறேன். டாட்டா என்று கிளம்பி விட்டான் .

கெவின் கதவை சாத்தி விட..

சித்தார்த் அந்த  கதவை இன்னும் கொஞ்ச நேரத்தில் திறந்து கிட்டு அவலே போக போறா? என ஆங்கிலத்தில் கூற…

கெவின் சித்தார்த்தை ஒருவித பயத்துடன் பார்க்க.. 

சித்  என்னை எனக்கே தெரியாம ஸ்கெட்ச் போட்டு! இவ தூக்குறாளா? நான் அவ்ளோ வீக்குன்னு நினைச்சா போல! இனி அது வேஸ்ட்!  நானும் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்!  என் பேச்சை கேட்டாளா?  இனி இந்த சித்தார்த்தை பத்தி  கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்க போறா! என்று சொல்லிக் கொண்டு சித்தார்த்  தள்ளாட நடந்தான்.

கெவின்,  பாஸ் லீனா மேடம்!  அவ இப்போ தூக்கத்துல இருக்கா!அவளை பத்திரமா நாளைக்கு ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க! என்று  சித்தார்த் தள்ளாடிக்கொண்டே செல்ல..

கெவின் சித்தார்த்தை  பிடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சித்தார்த் உடல்கள் எல்லாம் ஏதேதோ செய்ய.. ஹே கெவின் அபிக்கு கால் பண்ணு!. Where is my phone? 

கெவின் பாஸ் இதோ  வாங்கியாச்சு என்று நீட்டினான். 

உடனே அபிக்கு கால் பண்ணு. நான் டாக்டரை பாக்கணும்! என்று சொல்லிக் கொண்டு இருக்க வண்டியை வீட்டுக்கு விட்டார்கள்.

அங்கிருந்து அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.  மணி இரவு 8.15 ஆக..  சித்தார்த் மெதுவான குரலில்  நம்ப இப்போ எங்க வந்திருக்கோம்?  என்று உடல்கள் ஆட்டம் காண கேட்டான்.

பாஸ் நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!. 

வீட்டுக்கு எதுக்கு கூட்டிட்டு வந்த? என்று சித் கேட்க..

 கெவின்,  பாஸ்  மிஸ்டர் ஜார்ஜ் தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வர சொன்னாரு! வெளியில தங்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு.  இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை நடந்துருச்சு!.

சித், எனக்கு அட்வைஸ் பன்றயா! 

பாஸ்!. 

சித்,  என்னை உடனே  வேற எங்கேயாவது கூட்டிட்டு போ என்று சொல்ல..

 அதற்குள் பீட்டர் வந்து சித்தார்த்தை உள்ளே கஷ்ட பட்டு கூட்டி வந்தார்கள். 

இங்கே இதன்யா அந்த அறையில் ஒரு இடத்தை நிலை குத்தி பார்த்து அழுது கொண்டிருந்தாள். முகம் எல்லாம் சிவந்து போனது. 

சித், நான் டாக்டர் வர சொல்ல சொன்னேனே? என்ன ஆச்சு?

 பாஸ் இங்கே புயல்னால, யாரும் வெளியே வர மாட்டிங்கறாங்க!  இப்போதைக்கு உள்ளே போங்க நான் அழைச்சிட்டு வரேன்.

ஜார்ஜ் மற்றும் மேகி இருவரும் எழுந்து வந்து சித்தார்த்தை பார்த்தார்கள். 

ஜார்ஜ், what happen சித்தார்த்? என்று அருகில் வர நோ நீங்க போய் தூங்குங்க!  நான் பாத்துக்குறேன்! என்று அவன் தள்ளாடிக்கொண்டே செல்ல..

மேகி அருகே வந்தார் .

நோ ஆன்ட்டி நோ என்று கத்த ஆரம்பித்தான்.

ஜார்ஜ், மேகி நீ போ நான் பார்த்துக்கிறேன். என அவளை அனுப்பி விட்டு  சித்தார்த்தை கீழே இருக்கும் ஒரு பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றார். 

கெவின் மற்றும் பீட்டர் இருவரும் உள்ளே விட ஜார்ஜ், என்ன ஆச்சு? என கேட்க நடந்த விசயத்தை அவர்கள் சுருக்கமாக சொல்லி கொண்டிருக்க.. சித் வேகமாக குளியலறை சென்றான். 

இங்கே  இதன்யா விரக்தியுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு  அப்படியே நாம் செத்து விட வேண்டும். என்று தோன்றியது. என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! நான் சந்தோஷமா இருக்கிறது இங்கே யாருக்குமே பொறுக்காதா?  என்னோட சித்துக்கூட இப்பதான் நான் இந்த ரெண்டு நாள் எல்லா பிரச்சனையும் மறந்து  சந்தோஷமா இருந்தேனே!  ஒரு வேலை அவர் எனக்கு கிடைக்க கூடாதுன்னு இப்படி நடக்குதா? அவர் வாழ்க்கையில் நான் paasing cloud ஆ எனக்கு அவர் கூட இருக்க தகுதி இல்லையா?  என அவள் நினைத்து புலம்ப..

அவளின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.  மேகி  தான் கதவை தட்டினார்.  இதன்யா கண்களை துடைத்து விட்டு கதவை திறக்க..

மேகி ஒரு வித பதட்டத்தில் நின்று இருந்தார். 

 என்ன ஆச்சு  ஆன்டி?

மேகி,  சித்தார்த் கீழ இருக்கான். உனக்கு என்னாச்சு? முகம் கவலையா இருக்கே?. 

 இதன்யா  உடனே எப்படி?  எப்படி வந்தார்? என இதயம் படபடக்க கேட்டாள்.   

மேகி, ஜார்ஜ் அவன் கூட இருக்காரு! என அவர்கள் இறங்க இதன்யா மனதில் அப்போ அந்த மேகா வேணும்னு நம்மல அழக்களிக்க இப்படி பண்ணிருக்கா? எதுக்கு அப்படி சொன்னா? என யோசித்து கொண்டே சித் இருக்கும் அறைக்கு முன் வந்தார்கள். 

ஜார்ஜ் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் மேகி அருகில் வந்தவர். கம் baby! இப்போ நம்ம கிளம்பும் நேரம்! என கையை பிடித்து தனியாக அழைத்து சென்றான். 

மேகி, என்னங்க என்னாச்சு? இந்த நிலைமையில் எப்டி அவங்க ரெண்டு பேரையும் விட்டு போக முடியும்? 

 ஜார்ஜ், இதன்யா அவனோட மனைவி சோ அவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும். இதன்யா அவனை மேனேஜ் பண்ணிப்பா? என்று  மேகியை கையுடன் அழைத்து வந்தார்.

இங்கே இதன்யா நேராக உள்ளே செல்ல.. அங்கே யாரும் இல்லை.. அவள் சுற்றிலும் பார்த்து கொண்டே எல்லா  லைட்டும் போட்டாள்..

மேகி அவரின் கையை உதறி  என்னங்க ஆச்சு? 

ஜர்ஜ் இப்ப நாம இங்க இருக்கிறது சரி வராது வா! இத்தனை வயசு ஆகுது சொல்றதை புரிஞ்சுக்க மாட்டியா? என வெளியே அழைத்து கதவை சாத்தி லாக் செய்து பீட்டர் மற்றும் கேவினை பார்த்து வெளியில் உங்க  ஹோட்டலுக்கு போயிடுங்க!  இப்போ புயல் ஸ்டார்ட் ஆக போகுது! சித்தார்த்தை உங்க ஹோட்டல் ரூம்ல இருந்து வாச் பண்ணுங்க! இங்கே யாரும் ஆபத்தா வர மாட்டாங்க! இங்க இருக்கிற மேயர் எல்லாமே நமக்கு தெரிஞ்ச ஆளுங்க தான்! யாரும் இங்க வர மாட்டாங்க நீங்க உங்களோட ஹோட்டலுக்கு போயிடுங்க.. என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

 சித்தார்த் குளியலறையில் உஷ்ண மூச்சுடன் இருந்தான். இதன்யா  சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க… அவளுக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டது. 

ஆம் சித்தார்த் இருக்கும் அந்த அறையின் குளிர் மிகவும் அதிகமாக இருந்தது.  அந்த அறையின் வெப்பநிலையை ஆப் செய்து இருந்தான்.  

வெளியே பனி புயல் கூடி பனியுடன் குளிர் காற்று வீச தொடங்கியது.  அதே போல  இங்கே உள்ளே பனிப்புயல் வெளியே வீச தொடங்கியது. 

வெகு நேரமாக பாத்ரூம் குள்ளயே குளியலறைக்குள்ளே இருந்தான். 

இதன்யா, மேகி சொண்ணாங்களே! இங்கே தான் இருக்காங்கன்னு? எங்கே? என அவள் அருகில் உள்ள சின்ன ரூம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூம் என அனைத்தையும் பார்த்தாள். ஒரு வேளை பாத்ரூம்! என அங்கே செல்ல..எவ்வளவு நேரம்!… இவ்வளவு நேரம் குளிப்பாங்களா? என்ன ஆச்சு ஒண்ணுமே புரியலையே என்று அவள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

சித்தார்த் ஒரு வித நடுக்கத்துடன் வெளியே வந்தான். தலையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நீயா? இங்கே என்ன பண்ற? உன்னோட ரூமுக்கு போ!.  என அவளை பார்க்காமல் கூறினான். 

இதன்யா ஏன் மேகவா பார்த்துட்டு வந்திங்களா? நான் உங்களை சந்தேக பட மாட்டேன். 

 சித்தார்த் அமைதியாக அவள் பக்கம் திரும்பாமல் நீ எதுக்கு இங்க வந்த?  உன்னோட ரூமுக்கு போ என்று கத்தினான். 

அவனிடம் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.  இப்பொழுது அந்த மயக்கத்தின் வீரியம் குறைய அந்த அந்த மருந்தின் வீரியம் அதிகரித்தது.

இதன்யாவிற்கு மனதில் நம்ப மறுபடியும் தப்பா நினைக்க கூடாது என்ன ஏதுன்னு ஒரு தடவை கேட்டிடலாம் என்று நினைத்தவள்.

உங்களுக்கு என்ன ஆச்சு?  என்று கேட்டாள்.

ஒன்றும் இல்லை! நீ கிளம்பு! வெளியே போ! என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தான்.

இதன்யா மனம் கேட்காமல் அருகில் வந்த ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?  உங்க கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு! என வேகமாக ஓடி சென்று ஒரு டவள் எடுத்து அவன் தலையில் திவட்ட வர.. அவனது உடல்  பனிப்பாறை போல் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது.

சித் உடனே அவளின் கையை தட்டி விட்டான். அவளை வேகமாக இழுத்து வந்து வெளியே தள்ள வர..

இதன்யா நான் போக மாட்டேன்! என்ன ஆச்சுன்னு சொல்லுங்க? என்று கத்த ஆரம்பித்தாள்.

சித்தார்த், ஒன்றும் இல்லை!. 

சரி சொல்ல வேண்டாம் என்று அவள் கோபமாக நகர..

சித்தார்த்  என்னை அந்த மேகா  பிளான் பண்ணி டிராப் பண்ணிட்டா! 

இதன்யா உதட்டை கடித்து கொண்டே அப்போ உங்களுக்குள்ள!. .

சித்தார்த் உதடுகள் அதிர நான் அவ்வளவு முட்டாள் இல்லடி! என்று  வேகமாக மறுபடியும்  குளியலறைக்குள் சென்றான்.

இதன்யா அவன் பின்னால் செல்ல..  சித்தார்த் கதவை அடைத்துக் கொண்டு தண்ணீரில் நின்றவன்.  தயவுசெய்து கிளம்பிடு! நீங்க இருக்காத உன்னோட அறைக்கு போயிடு! பிளீஸ் என்று கூறினான்.

இதன்யா ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்க? என்று கண் கலங்க ஆரம்பித்தாள். 

சித்தார்த்,  அவர் எனக்கு ஏதோ கொடுத்துட்டா! என்னால முடியல!. 

 இதன்யா,  என்ன சொல்றீங்க?  எனக்கு புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க…

சித்தார்த், நான் சரி ஆனதும் அவளை சும்மா விட மாட்டேன். என முனக ஆரம்பித்தான். கொல்லும் வெறி தோன்றியது.

என்னங்க? 

சித்தார்த், எனக்கு  ஒன்றும் இல்லை!  ப்ளீஸ் நீ போ நான் பாத்துக்குறேன். இப்போ டாக்டரை  வர சொல்லி இருக்கேன்… என்று அவளை வெளியே தள்ள முயற்சிக்க..

இதன்யா திரும்பி அவன் இதழில் முத்தமிட ஆரம்பித்தாள்.‌

அப்படி சித்தார்த் என்ன சொல்லி இருப்பான்? ஒரு வேளை மொத்த உண்மையும் சொல்லி இருப்பானா? 

அங்கே மேகா என்ன நிலைமையில் இருக்கா? 

இப்போ அடுத்து என்ன நடக்கும்? 

ஒருவழியா இந்த மேகா ஆட்டம் இனி கொஞ்ச நாளைக்கு இல்ல. அடுத்து இதன்யா – மேகா மோதல் தான். இல்ல இல்ல சித்தார்த் – இதன்யா காதல்..

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 254

இதன்யா அதே இடத்தில் அப்படியே அமர்ந்து கொண்டாள். அவளுக்கு இப்பொழுது சிந்தையில் வெற்றிடம் மட்டுமே நிறைந்து இருந்தது..மேகி அவளின் அருகில் வந்து என்னாச்சும்மா? ஏன் உன்னோட முகம் சரியில்ல? சித்தார்த் கிட்ட பேசுனியா? அவன் எப்போ வருவான்? என்று ஆங்கிலத்தில் கேட்க…

இதன்யா ஒரு விரக்தி  புன்னகையுடன் அவர் இனி வரவே மாட்டாரு என்று தமிழில்  கூறினாள்.

What? What did you say? I’m didn’t understand baby! 

இதன்யா ஆங்கிலத்தில் சாரி ஆன்ட்டி அவரு வந்துடுவாரு!  நீங்க கிளம்பறதா இருந்தால் கிளம்புங்க, நான் பாத்துக்குறேன்! என்று சொல்ல..

ஜார்ஜ், இதன்யா என்று அழைக்க..

வாமா சாப்பிடலாம்! டின்னர் பினிஷ் பண்ணிட்டு, சித்தார்த்துக்காக வெயிட் பண்ணலாம். என்று அழைத்தார்கள்.

இட்ஸ் ஓகே அங்கிள், எனக்கு பசிக்கல என்று கூற..

மேகி, come on baby come come  என்று அழைத்துக் கொண்டே அவளை அமர வைத்தார்கள். 

இதன்யாவால் அதற்கு மேல் முடியாமல்  எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு! எனக்கு வேண்டாம் , நீங்க சாப்பிடுங்க ஆன்டி என்று வேகமாக அவர்களை தவிர்த்து விட்டு அவளுடைய அறைக்கு ஓடிவிட்டாள்.

 மேகி, என்னாச்சு இந்த பொண்ணுக்கு என்று கேட்க..

ஜார்ஜ், அவளுக்கு சித்தார்த்த பாக்கணும் போல! அதனால தான் இப்படி இருக்கா! எப்ப வருவானோ?

மேகி, ட்ரை பண்ணுங்க என்று கூற..

ஜார்ஜ் போனை எடுத்துக் கொண்டு சித்தார்த்துக்கு ட்ரை செய்து  ரிங் போயிட்டு இருக்கு! எடுக்க மாட்டேங்கறான்! அப்போ அவன் முக்கியமான வேலையா இருப்பான். வருவான். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கலாம்!

நீங்க வாங்க சாப்பிடறீங்களா? என்று மேகி கேட்க

இல்ல சித்தார்த் வரட்டுமே! இந்த நேரத்துல இப்படி இந்த பையன் பண்ணிட்டானே! நான் சந்திர மௌலிக்கும், கிருஷ்ணனுக்கும் என்ன பதில் சொல்லுவேன்? அந்த பொண்ணு வேற சோகமா மேல போயிட்டா! என்று அவர் அமர்ந்து பனிப்புயல் பற்றிய செய்திகளை டிவியில் பார்க்க ஆன் செய்தார்.

இங்கே மேகா அவனை  பீனிக்ஸ் ஹோட்டலில் இருக்கும் அவளுடைய அறைக்கு சித்தார்த்தை தூக்கி வர சொல்லி விட்டு அவள் முன்னால் நடந்தாள்.

சித்தார்த், ஹே விட்டுடு சொல்றத கேளு! You b* இதுக்கு நீ நிறைய அனுபவிப்ப! என்னை  பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது!. என்று அவன் உளறிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் வர..

மேகா,  விடதான போறேன்.  என்ன சித்து நீ இப்படி இருக்க?  நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?  மேட்லியா உன்ன லவ் பண்றேன்! ஆனா நீ  இப்படி பேசலாமா? என அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே  அவனை அருகில் இருக்கும் ஒரு சேரில் அமர வைக்க சொன்னாள்.

சித், ஹே லீவ் மி பாஸ்டர்ஸ்! என அவன் நாக்கு உலர தலை ஒரு இடத்தில் நிற்காமல் ஆடி கொண்டே கூற…

மேகா, ம்ம் இந்த சேர்ல உட்கார வைங்க! அவனோட கைய மட்டும் கட்டி போடுங்க! என்று கூறினாள்.

அதே போல் அந்த அடியாட்கள் கட்டிப்போட்டார்கள்.

மேகா, ஹான்  வேல முடிஞ்சது. அந்த லீனாவை கவனமா பாத்துக்கோங்க!  இந்த ஒரு இரவு தாண்டனும்! அதுக்கப்புறம் எல்லாமே மாறப்போகுது! என்று மேகா நினைத்துக் கொண்டு அவளை கண்காணிங்க என்று  அனுப்பி வைத்தாள் .

சித்தார்த்தின் தலை தொங்கிக் கொண்டே எழ நிறைய முறை முயற்சி செய்தான். ஆனால் அவனால் எழ முடியவில்லை.

மணி என்ன? வாட் ஈஸ் அ டைம்? என்று கடுமையான குரலில் கேட்க..

மேகா,  இதுல எந்த கலர் எனக்கு நல்லா இருக்கும்?  என்று டார்க் ரெட் மற்றும் டார்க் பிளாக் என இரண்டு வண்ண நெட் சாரி புடவையும்  சித்தரத்திடம் காட்டினாள்.

சித்தார்த் கண்களை முழிக்க கூட முடியாமல் திணறிக் கொண்டே மணி என்ன? என்னை விட்டுடு அது தான் உனக்கு நல்லது. நீ நினைக்கிறது நடக்காதுடி! நடக்காது என்று கூறினான்.

மேகா,  நீ நினைக்கிறது தான் சித்து நடக்காது! நான் நினைக்கிறது கண்டிப்பா நடக்கும்! இதோ  இன்றைக்கு நடக்க தான் போகுது! என்று சிரித்துக்கொண்டுசரி சரி சொல்லு எந்த கலர் போடட்டும்? எல்லாத்துக்கும் ஒரு புரோசிஜர் இருக்கு தான என்று இரண்டையும் அவன் முன்னால் நீட்டினாள்.

என்னை விடுடி! என்னை விட்டுடு! தேவையில்லாத பிரச்சினைல  மாட்டிக்காத! நான் இதன்யா கிட்ட போகணும்! என்று சொல்லிக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான்.

மேகா இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவள். இதன்யாவின் பெயரைக் கேட்டதும் உனக்கு ஏன் அவளை புடிச்சிருக்கு? அவ ஒரு பிச்சைக்காரி! அது தெரியுமா? அவ  அதவிட மோசமானவ!  அவளை எதுக்கு நீ புடிச்சிருக்குன்னு சொல்ற! உன்னோட தகுதி என்னன்னு தெரிஞ்சுக்கோ? சித்து சித்துது!.. சித்தார்த் இங்க பாரு! என்னை  பாரு என்று அவனுடைய கண்ணத்தை பிடித்தவள்.

அவனிடம் நான் மேகா!  எவ்ளோ அழகா இருக்கேன்! பாரு உனக்காக நான் இந்த ட்ரெஸ் எல்லாம் போட்டுக்க போறேன்.  உனக்கு என்னை பாத்து எதுவும் தோணலையா? 

 சித்தார்த்,  உன்ன கொல்ல தோணுது! என்னை விடு டி! மணி என்ன?

மேகா,  என்னை அங்க கொல்லு! என்று படுக்கையை காட்டினாள்.

சித்தார்த், என்ன கலந்து கொடுத்த?  இப்போ டைம் என்ன?  என்று  திரும்ப திரும்ப கேட்..

மேகா சிரித்துக்கொண்டே சித்து மணி இப்போ சிக்ஸ் 7.15, 16  என்று கூறினாள்.

சித்தார்த், உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் ஒழுங்கா என்ன விட்று! 

 மேகா,  வாய்ப்பே இல்லடா கண்ணா!  இன்னிக்கி நீ என் கூட தான்!  சரி இதுல நானே ஒரு ட்ரெஸ்ஸ சூஸ் பண்ணிக்கிறேன்.  இப்போ எனக்கு ரெட் ரொம்ப புடிச்சிருக்கு. என்று வேகமாக சென்றவள். அந்த dark Red வண்ண புடவையை கட்டிக்கொண்டு, அழகாக லிப்ஸ்டிக், மற்றும்  வாசனை திரவியம் என அனைத்தையும் அடித்துக் கொண்டாள் .

ஒரு கோப்பையில் இப்பொழுது ஒயினை ஊற்றி ரெட் ஒயினை ஊற்றிக் கொண்டே அவனை நோக்கி வந்தாள். 

மேகா அவனிடம் சித்தார்த் உனக்காக ரெட் வைன்!  கூடவே இந்த பியூட்டி ரெட் குயின் என்று கூறினாள்.

சித்தார்த் தயவுசெய்து தேவையில்லாத பிரச்சனைல மாட்டிக்காத!  உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.

மேகா, பத்து நிமிஷமா அதுக்குள்ள உன்னால் முடியுமா!  என்னடா கண்ணா? நான் இன்னைக்கு ராத்திரி ஃபுல்லா பண்ணலாம்ன்னு என்று நினைத்தேனே! என்று சொல்லிக்கொண்டே அவனை மோகத்துடன் பார்த்தாள்.

சித்தார்த்துக்கு இப்பொழுது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

மேகா காத்திருந்தாள் அந்த மாத்திரையை கொடுத்து சரியா அரை மணி நேரம் ஆகப்போகுது. இப்போ  வேலை செய்ய ஆரம்பிக்கும்ன்னு என்று நினைக்கிறேன். என்று சித்தார்த்தை பார்க்க..

அவன் கண்கள் எல்லாம் கொஞ்சம் சிவந்து மூச்சை வேகமாக இழுத்து விட ஆரம்பித்தான்.

 மேகா சிரித்துக் கொண்டே அவ்வளவுதான்டா கண்ணா!  நீ இப்போ ரெடி ஆயிட்ட! இப்போ நம்மளோட பயணத்தை ஆரம்பிக்க போறோம்! என்று அவனுடைய கைக்கட்டை அவிழ்த்து விட்டாள்.  வேகமாக அவனை கட்டி அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.

அவனை கட்டிக்கொண்டு இதழில் முத்தமிட வர சித்தார்த், என்ன பண்ற என்று அவளை அவளை தள்ளிவிட முயற்சி செய்தான்.

மேகா அவன் இதழில் கை வைத்து அவனுடைய இரண்டு கைகளையும் எடுத்து அவளின் இடையை பிடிப்பது போல நிற்க வைத்தவள். ஹே  என்ஜாய் பண்ணு! பாவா! அதுக்கப்புறம் நான் உன்ன எங்கேயோ கூட்டிட்டு போயிடுவேன்!  என்று கூறிக் கொண்டே மேகா முத்தமிட..

சித்தார்த் அவளின் இடையைப் பிடித்து தள்ளிவிட சென்றவன்.  அந்த மருந்தின் வீரியம் காரணமாக அவளுடன் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். 

மேகா அவனுடைய முத்தத்தில் மோகம் பற்றி கொள்ள அவ்வளவுதான் சித்து! என்று முத்தத்தை முடித்துக் கொண்டு அவள் அவனை படுக்கையில் தள்ளிவிட.. 

சித் கண்ணை மூடி கொண்டே கைகளில் தேட . மேகா அவனுடைய சட்டையில் கை வைக்க அவளின் கையை பிடித்தவன். இதன்யா!  ரெட் பேபி! ரெட் பேபி! லிட்டில் ஹார்ட்! இதுக்கு மேல முடியாது டி! நான் உன்னை இன்னிக்கு எடுத்துப்பேன். இன்னிக்கி உன்னை எடுத்துக்கவா?  என இதன்யாவிடம் பேச ஆரம்பித்தான். 

 மேகாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது. என்ன இதன்யாவா?  ரெட் பேபியா? அவளை நினைச்சா எனக்கு முத்தம் கொடுத்த!  டேய் நான் மேகா! என்று  சித்தார்த்தின்  முடியை பிடித்து ஹே கண்ணை திற? நான் மேகா!  இப்போ மேகாவுக்கு முத்தம்  இதழில் ஒற்ற மேகா என்று பெயர் அந்த இதழ் ஒற்றல் அவனுக்கு எதோ அசிங்கம் சித்தார்த்தின் உதட்டில் பட்டது போல அசுரனாக மாறியவன் வேகமாக மேகா என்ற வார்த்தையை கேட்டதும் சித்தார்த் கோபமாக அவளை தள்ளிவிட்டான். 

அவள் இதை எதிர்பார்க்காமல் படுக்கையை தாண்டி உருண்டு கீழே விழுந்தாள். மேகா வலியில் துடித்துக் கொண்டே சித்தார்த் நான் மேகா!  என்னை தள்ளிவிட உனக்கு எவ்வளவு தைரியம்? என்று வேகமாக எழுந்து வர..

அவன் சுதாரித்துக் கொண்டே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து கொண்டே  தள்ளாடி கொண்டே  மணியை  பார்த்தான்.

இப்போ டைம் என்ன? என சித் எழுந்து செல்ல போக.  

மேகா டேய் எங்கே போற.. என்று அருகில் வர.. 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

 சித்தார்த் மணி என்ன என்று திரும்பத் திரும்ப டைமை பற்றிய கேட்டுக் கொண்டிருந்தான்.

கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்க மேகா ஒரு நிமிடம் பயந்தாள்.‌

இவ்வளவு நேரமும் கிலம்புவதுள் குறியாக இருந்தவன் இப்பொழுது அருகில் உள்ள குளியலறை சென்று சவரை திறந்து விட்டு ஒரு நிமிடம் நின்றான். 

மேகா கதவை திறக்க பயந்தாள். சித் சிரித்துக் கொண்டே வெளியே வந்தவன்.  என்ன  அப்படி பார்க்கிற? இப்போ மணி ஏழரை தானே!  இந்த நிமிஷத்திலிருந்து உனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆயிடுச்சு டி! என்று கூறினான். 

மேகா  அவன் பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருடா உன்னை வந்து வச்சுக்கிறேன்! இனிமே ஸ்ட்ரைட்டா உன்னை என்ன பண்றேன்னு பாரு! என்று யாரா இருக்கும் ஒருவேளை லீனா தப்பிச்சிட்டாளா? என்று சொல்லிக் கொண்டிருக்க…

சித்தார்த் அருகில் உள்ள ஜக்  தண்ணீரை எடுத்து ஆவேசமாக தலைக்கு ஊத்திக் கொண்டவன். அந்த அறையின் வெப்பநிலையை ஆஃப் செய்தான். இப்போதைக்கு அவனுக்கு மயக்கம் வர கூடாது. அந்த சபல எண்ணம் வரவே கூடாது. அதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

என்னடி நினைச்ச?  நான் அவ்வளவு முட்டாள்ன்னு  நினைத்தாயா? என்று சித் சிரிக்க ஆரம்பித்தான்.

மேகா ஒன்றும் புரியாமல் என்னடா?  என்று அவன் அருகில் வர..

சித்தார்த் வேகமாக தள்ளாடிக் கொண்டு எழுந்தவன். அவளை படுக்கையில் தள்ளி விட்டான். நான்  சித்தார்த் கிருஷ்ணா டி என்னையவே பிளான் கடத்திற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய கிரிமினலா? அப்போ நான் யாரு டி? 

மேகா புரியாமல் பார்க்க கதவு வேகமாக தட்டப்பட்டது ஒரு நிமிடம் கழித்து சாவி போட்டு திருடும் சத்தம் கேட்டது. கதவை யார் சாவி போட்டு திறக்கராங்க? என மேகா பார்க்க..

சித் அந்த சேரில் கொஞ்சம் தள்ளாடி கொண்டே அனர்ந்தவன். அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுற? உனக்கு வெக்கமா இல்ல ? இத்தனை நாள் உன்னை சும்மா விட்டது பெரிய தப்பு!. என்னை அவ்ளோ கேனயனா நினைச்சு இருக்க? 

மேகா கஷ்ட பட்டு எழுந்து கொண்டே சித்து என அருகில் வர…சித் அவளின் கொத்து முடியை பிடித்து தள்ளி விட்டவன். நான் வீட்டில் இருந்து  நான் கிளம்பும்போதே உன்னோட ஜாதகம் மொத்தத்தையும் எடுத்துட்டேன்டி!.. என கைகளை இறுக்கி மடக்கி  வேகமாக மேகாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான்.

மேகா, சித்து நான் உன்ன லவ் பண்றேன்! அது உனக்கு ஏன் புரிய மாட்டிக்கிது? என சொல்ல…

அந்த நேரம்  கதவு தடாலடியாக திறந்தது.

சித்தார்த் அந்த இடத்தில் ஒருவித மயக்கத்தில் நின்று கொண்டிருக்க..

பாஸ்!. 

சித் கடுமையான குரலில் கெவின் வரதுக்கு இவ்வளவு நேரமா? என்று கேட்டான் .

சாரி பாஸ் என்று உள்ளே வந்ததும் மேகாவை இருவர் பிடித்துக் கொண்டார்கள்.

சித்தார்த் தள்ளாடிக் கொண்டே எழுந்து வர..

கெவின் சித்தார்த்தை பிடித்துக் கொண்டு வெளியே அழைத்து  வர. 

சித்து போகாத! சித்து போகாத! என மேகா கத்த ஆரம்பிக்க…

சித்தார்த் கோபமாக மீண்டும் அவளின் அருகில் வந்து கொத்து முடியை பிடித்து சுவற்றில் ஒட்டி அப்படியே தூக்கினான்.

சித்து சித்து என்று அவள் திணறிக் கொண்டு கர்த்த..

சித்தார்த், என்னை அவ்வளவு சாதாரணமா நினைச்சியா என்று சிரிக்க ஆரம்பித்தான்.

மேகா மூச்சுக்காக திணறிக் கொண்டே கால்கள் தளர  கண்கள் இரண்டும் சுழல போக அப்படியே அந்தரத்தில் தொங்கினாள்.

கெவின், பாஸ் என்று அழைக்க..

சித்தார்த் அவளை படுக்கையில் வீசியவன். க்ரூர புன்னகையுடன் நீ எனக்கு மயக்கம் மருந்து கலந்தியா?  என்று சிரித்துக் கொண்டே அவளை தள்ளாடி கொண்டும் பார்த்தான்.

மேகா, சித்து  இதன்யா கிட்ட போகாத!  என்று அவள் அடியையும் வலியையும் மறந்து எழுந்து வர..

உடனே சித், ஹே முட்டாள்.  எனக்கு மட்டும்தான் மயக்கம் மருந்து கலந்தியா? இல்ல! உனக்கும் கலந்துகிட்டயா ? என்று கேட்டான்.

மேகா புரியாமல் அவனை பார்க்க..

சித்தார்த்,  நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் கொஞ்சமே கொஞ்சம் தான் நல்லவன்.  புரியுதா!..

மேகா கொஞ்சம் பயத்துடன் பார்க்க…

சித், நீ குடிச்ச அப்சந்தில மருந்து!  என நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.

மேகா, என்ன சொல்ற? 

சித் சிரித்து கொண்டே இன்னும் கொஞ்ச நேரத்துல நீ உன்னையே மறக்க போற! என்று கூறினான்.

மேகா பதட்டத்தில் அவனை பார்க்க..

 சித்தார்த்  முட்டாள் கொஞ்சம் நல்லா யோசி! என்னை அடியாட்கள் தூக்கிட்டு வரும் போது ஏன் மேடம் வளைஞ்சு வளைஞ்சு போனீங்க?  சாரி நடந்தீங்க?

மேகா கொஞ்சம் யோசிக்க அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆம் அவள் சித் முன்னால் தள்ளாடி கொண்டே நடந்து வந்தாள். அது அவளுக்கு தெரியவில்லை. இப்பொழுது  கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு போதை தலைக்கேற ஆரம்பித்தது.

நான் சித்தார்த் கிருஷ்ணன் டி! நீ எனக்கு பிளான் பண்றதுக்கு முன்னாடியே நான் உனக்கு பிளான் பண்ணிட்டேன்!  என்று கூறி கொண்டே தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றினான். 

 மேகா உதடுகள் தந்தி அடிக்க போதையில் கண்கள் சொருக என்னடா பண்ண? எனக்கு என்னடா கொடுத்த? என உளற ஆரம்பித்தாள்.  

சித்தார்த் தண்ணீரை எடுத்து அவனுடைய முகத்தில் அடித்து கொண்டே ஒரே ஒரு சின்ன விசயம் என்னன்னா? நான் கொடுத்தது ஸ்ட்ராங் போதை! சோ உன்னை நீயே மறந்து சுற்றினால் கூட  ஆச்சரியம் இல்ல!

மேகா, சித்து!..

சித், நீ எனக்கு கொடுத்ததை விட பல மடங்கு நான் உனக்கு கலந்து கொடுத்துட்டேன். ஆனால் எப்டி கொடுத்தேன் என்ன நடந்தது? ஹான் என கேட்க..

கெவின் பயந்து கொண்டே சித்தார்த்தை பார்த்தான். அவன் பேசும் தமிழ் புரியவில்லை. ஆனால் எதோ பெரிய விசயத்தை தான் ஆக்ரோசமாக சொல்லி கொண்டு இருக்கிறான். 

மேகா, என்னை விட்டு போகாத சித்து! என்ன சித்து என்னென்னமோ சொல்ற.. என கிரக்கத்துடன் அவள் எழுந்து கொண்டாள். 

சித், அதே சஸ்பென்ஸோட இரு! அண்ட் அடுத்த மீட் முடிஞ்சா  நம்ப ஷூட்டிங்ல மீட் பண்ணா மீதி கதை சொல்கிறேன். டாட்டா என்று கிளம்பி விட்டான் .

கெவின் கதவை சாத்தி விட..

சித்தார்த் அந்த  கதவை இன்னும் கொஞ்ச நேரத்தில் திறந்து கிட்டு அவலே போக போறா? என ஆங்கிலத்தில் கூற…

கெவின் சித்தார்த்தை ஒருவித பயத்துடன் பார்க்க.. 

சித்  என்னை எனக்கே தெரியாம ஸ்கெட்ச் போட்டு! இவ தூக்குறாளா? நான் அவ்ளோ வீக்குன்னு நினைச்சா போல! இனி அது வேஸ்ட்!  நானும் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்!  என் பேச்சை கேட்டாளா?  இனி இந்த சித்தார்த்தை பத்தி  கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்க போறா! என்று சொல்லிக் கொண்டு சித்தார்த்  தள்ளாட நடந்தான்.

கெவின்,  பாஸ் லீனா மேடம்!  அவ இப்போ தூக்கத்துல இருக்கா!அவளை பத்திரமா நாளைக்கு ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க! என்று  சித்தார்த் தள்ளாடிக்கொண்டே செல்ல..

கெவின் சித்தார்த்தை  பிடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சித்தார்த் உடல்கள் எல்லாம் ஏதேதோ செய்ய.. ஹே கெவின் அபிக்கு கால் பண்ணு!. Where is my phone? 

கெவின் பாஸ் இதோ  வாங்கியாச்சு என்று நீட்டினான். 

உடனே அபிக்கு கால் பண்ணு. நான் டாக்டரை பாக்கணும்! என்று சொல்லிக் கொண்டு இருக்க வண்டியை வீட்டுக்கு விட்டார்கள்.

அங்கிருந்து அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.  மணி இரவு 8.15 ஆக..  சித்தார்த் மெதுவான குரலில்  நம்ப இப்போ எங்க வந்திருக்கோம்?  என்று உடல்கள் ஆட்டம் காண கேட்டான்.

பாஸ் நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!. 

வீட்டுக்கு எதுக்கு கூட்டிட்டு வந்த? என்று சித் கேட்க..

 கெவின்,  பாஸ்  மிஸ்டர் ஜார்ஜ் தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வர சொன்னாரு! வெளியில தங்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு.  இப்ப பாருங்க எவ்வளவு பிரச்சனை நடந்துருச்சு!.

சித், எனக்கு அட்வைஸ் பன்றயா! 

பாஸ்!. 

சித்,  என்னை உடனே  வேற எங்கேயாவது கூட்டிட்டு போ என்று சொல்ல..

 அதற்குள் பீட்டர் வந்து சித்தார்த்தை உள்ளே கஷ்ட பட்டு கூட்டி வந்தார்கள். 

இங்கே இதன்யா அந்த அறையில் ஒரு இடத்தை நிலை குத்தி பார்த்து அழுது கொண்டிருந்தாள். முகம் எல்லாம் சிவந்து போனது. 

சித், நான் டாக்டர் வர சொல்ல சொன்னேனே? என்ன ஆச்சு?

 பாஸ் இங்கே புயல்னால, யாரும் வெளியே வர மாட்டிங்கறாங்க!  இப்போதைக்கு உள்ளே போங்க நான் அழைச்சிட்டு வரேன்.

ஜார்ஜ் மற்றும் மேகி இருவரும் எழுந்து வந்து சித்தார்த்தை பார்த்தார்கள். 

ஜார்ஜ், what happen சித்தார்த்? என்று அருகில் வர நோ நீங்க போய் தூங்குங்க!  நான் பாத்துக்குறேன்! என்று அவன் தள்ளாடிக்கொண்டே செல்ல..

மேகி அருகே வந்தார் .

நோ ஆன்ட்டி நோ என்று கத்த ஆரம்பித்தான்.

ஜார்ஜ், மேகி நீ போ நான் பார்த்துக்கிறேன். என அவளை அனுப்பி விட்டு  சித்தார்த்தை கீழே இருக்கும் ஒரு பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றார். 

கெவின் மற்றும் பீட்டர் இருவரும் உள்ளே விட ஜார்ஜ், என்ன ஆச்சு? என கேட்க நடந்த விசயத்தை அவர்கள் சுருக்கமாக சொல்லி கொண்டிருக்க.. சித் வேகமாக குளியலறை சென்றான். 

இங்கே  இதன்யா விரக்தியுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு  அப்படியே நாம் செத்து விட வேண்டும். என்று தோன்றியது. என்னோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! நான் சந்தோஷமா இருக்கிறது இங்கே யாருக்குமே பொறுக்காதா?  என்னோட சித்துக்கூட இப்பதான் நான் இந்த ரெண்டு நாள் எல்லா பிரச்சனையும் மறந்து  சந்தோஷமா இருந்தேனே!  ஒரு வேலை அவர் எனக்கு கிடைக்க கூடாதுன்னு இப்படி நடக்குதா? அவர் வாழ்க்கையில் நான் paasing cloud ஆ எனக்கு அவர் கூட இருக்க தகுதி இல்லையா?  என அவள் நினைத்து புலம்ப..

அவளின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.  மேகி  தான் கதவை தட்டினார்.  இதன்யா கண்களை துடைத்து விட்டு கதவை திறக்க..

மேகி ஒரு வித பதட்டத்தில் நின்று இருந்தார். 

 என்ன ஆச்சு  ஆன்டி?

மேகி,  சித்தார்த் கீழ இருக்கான். உனக்கு என்னாச்சு? முகம் கவலையா இருக்கே?. 

 இதன்யா  உடனே எப்படி?  எப்படி வந்தார்? என இதயம் படபடக்க கேட்டாள்.   

மேகி, ஜார்ஜ் அவன் கூட இருக்காரு! என அவர்கள் இறங்க இதன்யா மனதில் அப்போ அந்த மேகா வேணும்னு நம்மல அழக்களிக்க இப்படி பண்ணிருக்கா? எதுக்கு அப்படி சொன்னா? என யோசித்து கொண்டே சித் இருக்கும் அறைக்கு முன் வந்தார்கள். 

ஜார்ஜ் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் மேகி அருகில் வந்தவர். கம் baby! இப்போ நம்ம கிளம்பும் நேரம்! என கையை பிடித்து தனியாக அழைத்து சென்றான். 

மேகி, என்னங்க என்னாச்சு? இந்த நிலைமையில் எப்டி அவங்க ரெண்டு பேரையும் விட்டு போக முடியும்? 

 ஜார்ஜ், இதன்யா அவனோட மனைவி சோ அவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும். இதன்யா அவனை மேனேஜ் பண்ணிப்பா? என்று  மேகியை கையுடன் அழைத்து வந்தார்.

இங்கே இதன்யா நேராக உள்ளே செல்ல.. அங்கே யாரும் இல்லை.. அவள் சுற்றிலும் பார்த்து கொண்டே எல்லா  லைட்டும் போட்டாள்..

மேகி அவரின் கையை உதறி  என்னங்க ஆச்சு? 

ஜர்ஜ் இப்ப நாம இங்க இருக்கிறது சரி வராது வா! இத்தனை வயசு ஆகுது சொல்றதை புரிஞ்சுக்க மாட்டியா? என வெளியே அழைத்து கதவை சாத்தி லாக் செய்து பீட்டர் மற்றும் கேவினை பார்த்து வெளியில் உங்க  ஹோட்டலுக்கு போயிடுங்க!  இப்போ புயல் ஸ்டார்ட் ஆக போகுது! சித்தார்த்தை உங்க ஹோட்டல் ரூம்ல இருந்து வாச் பண்ணுங்க! இங்கே யாரும் ஆபத்தா வர மாட்டாங்க! இங்க இருக்கிற மேயர் எல்லாமே நமக்கு தெரிஞ்ச ஆளுங்க தான்! யாரும் இங்க வர மாட்டாங்க நீங்க உங்களோட ஹோட்டலுக்கு போயிடுங்க.. என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

 சித்தார்த் குளியலறையில் உஷ்ண மூச்சுடன் இருந்தான். இதன்யா  சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க… அவளுக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டது. 

ஆம் சித்தார்த் இருக்கும் அந்த அறையின் குளிர் மிகவும் அதிகமாக இருந்தது.  அந்த அறையின் வெப்பநிலையை ஆப் செய்து இருந்தான்.  

வெளியே பனி புயல் கூடி பனியுடன் குளிர் காற்று வீச தொடங்கியது.  அதே போல  இங்கே உள்ளே பனிப்புயல் வெளியே வீச தொடங்கியது. 

வெகு நேரமாக பாத்ரூம் குள்ளயே குளியலறைக்குள்ளே இருந்தான். 

இதன்யா, மேகி சொண்ணாங்களே! இங்கே தான் இருக்காங்கன்னு? எங்கே? என அவள் அருகில் உள்ள சின்ன ரூம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூம் என அனைத்தையும் பார்த்தாள். ஒரு வேளை பாத்ரூம்! என அங்கே செல்ல..எவ்வளவு நேரம்!… இவ்வளவு நேரம் குளிப்பாங்களா? என்ன ஆச்சு ஒண்ணுமே புரியலையே என்று அவள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

சித்தார்த் ஒரு வித நடுக்கத்துடன் வெளியே வந்தான். தலையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நீயா? இங்கே என்ன பண்ற? உன்னோட ரூமுக்கு போ!.  என அவளை பார்க்காமல் கூறினான். 

இதன்யா ஏன் மேகவா பார்த்துட்டு வந்திங்களா? நான் உங்களை சந்தேக பட மாட்டேன். 

 சித்தார்த் அமைதியாக அவள் பக்கம் திரும்பாமல் நீ எதுக்கு இங்க வந்த?  உன்னோட ரூமுக்கு போ என்று கத்தினான். 

அவனிடம் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தது.  இப்பொழுது அந்த மயக்கத்தின் வீரியம் குறைய அந்த அந்த மருந்தின் வீரியம் அதிகரித்தது.

இதன்யாவிற்கு மனதில் நம்ப மறுபடியும் தப்பா நினைக்க கூடாது என்ன ஏதுன்னு ஒரு தடவை கேட்டிடலாம் என்று நினைத்தவள்.

உங்களுக்கு என்ன ஆச்சு?  என்று கேட்டாள்.

ஒன்றும் இல்லை! நீ கிளம்பு! வெளியே போ! என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தான்.

இதன்யா மனம் கேட்காமல் அருகில் வந்த ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?  உங்க கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு! என வேகமாக ஓடி சென்று ஒரு டவள் எடுத்து அவன் தலையில் திவட்ட வர.. அவனது உடல்  பனிப்பாறை போல் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது.

சித் உடனே அவளின் கையை தட்டி விட்டான். அவளை வேகமாக இழுத்து வந்து வெளியே தள்ள வர..

இதன்யா நான் போக மாட்டேன்! என்ன ஆச்சுன்னு சொல்லுங்க? என்று கத்த ஆரம்பித்தாள்.

சித்தார்த், ஒன்றும் இல்லை!. 

சரி சொல்ல வேண்டாம் என்று அவள் கோபமாக நகர..

சித்தார்த்  என்னை அந்த மேகா  பிளான் பண்ணி டிராப் பண்ணிட்டா! 

இதன்யா உதட்டை கடித்து கொண்டே அப்போ உங்களுக்குள்ள!. .

சித்தார்த் உதடுகள் அதிர நான் அவ்வளவு முட்டாள் இல்லடி! என்று  வேகமாக மறுபடியும்  குளியலறைக்குள் சென்றான்.

இதன்யா அவன் பின்னால் செல்ல..  சித்தார்த் கதவை அடைத்துக் கொண்டு தண்ணீரில் நின்றவன்.  தயவுசெய்து கிளம்பிடு! நீங்க இருக்காத உன்னோட அறைக்கு போயிடு! பிளீஸ் என்று கூறினான்.

இதன்யா ப்ளீஸ் என்னாச்சுன்னு சொல்லுங்க? என்று கண் கலங்க ஆரம்பித்தாள். 

சித்தார்த்,  அவர் எனக்கு ஏதோ கொடுத்துட்டா! என்னால முடியல!. 

 இதன்யா,  என்ன சொல்றீங்க?  எனக்கு புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க…

சித்தார்த், நான் சரி ஆனதும் அவளை சும்மா விட மாட்டேன். என முனக ஆரம்பித்தான். கொல்லும் வெறி தோன்றியது.

என்னங்க? 

சித்தார்த், எனக்கு  ஒன்றும் இல்லை!  ப்ளீஸ் நீ போ நான் பாத்துக்குறேன். இப்போ டாக்டரை  வர சொல்லி இருக்கேன்… என்று அவளை வெளியே தள்ள முயற்சிக்க..

இதன்யா திரும்பி அவன் இதழில் முத்தமிட ஆரம்பித்தாள்.‌

அப்படி சித்தார்த் என்ன சொல்லி இருப்பான்? ஒரு வேளை மொத்த உண்மையும் சொல்லி இருப்பானா? 

அங்கே மேகா என்ன நிலைமையில் இருக்கா? 

இப்போ அடுத்து என்ன நடக்கும்? 

ஒருவழியா இந்த மேகா ஆட்டம் இனி கொஞ்ச நாளைக்கு இல்ல. அடுத்து இதன்யா – மேகா மோதல் தான். இல்ல இல்ல சித்தார்த் – இதன்யா காதல்..

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 255

சித்தார்த் அவளுக்காக டீ எடுத்து வந்தவன். இன்னும் தூங்கி கொண்டிருக்கும் அவளை பார்த்தான். 

இதன்யா! இதன்யா!. என அழைத்தான். பதில் இல்லை..

“ஹே லிட்டில் ஹார்ட்” என்று அழைக்க ம்ம் புத்தா! என கூறினாள். 

எழுந்து ஃப்ரெஷ் ஆகு! உனக்காக டீ போட்டிருக்கேன். ம்ம் பேபி!. 

அவள் அப்படியே படுத்திருக்க.. சித் அருகில் வந்து அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான். 

இதன்யா சிணுங்கி கொண்டே திரும்பவும் பண்ணனுமா! 

சித், ஆமா ரெட் பேபி!..

என்ன என வெடுக்கென எழுந்தாள். 

அவன் சிரித்து கொண்டே சும்மா சும்மா சொன்னேன். திரும்ப எல்லாம் பண்ண வேண்டாம் என அவளின் கைக்கு முத்தம் பதித்தான். 

இதன்யா தலையை சொரிந்து கொண்டே என்ன? டீ உபசரிப்பு எல்லாம் பலமா இருக்கு! 

மகாராணி சேவை எனக்கு தேவை! அது தான்! என அவளின் கையை முத்தமிட்டான். 

என்ன பண்றீங்க? கை எல்லாம் பிசு பிசுப்பா இருக்கு! 

சித் அவளை பார்த்து அப்போ உனக்கு பிடிக்கலயா கஷ்ட பட்டு செஞ்சயா? என முகம் மாறியது. 

இல்ல யார் சொன்னது கஷ்டம் எல்லாம் இல்லை. நீங்க seventh heaven feel பண்ணும் போது எனக்கும் ஹேப்பி தான்! உங்களுக்கு சுத்தம் தானே பிடிக்கும். அதுக்கு தான் கை அழுக்கா இருக்குன்னு சொன்னேன். 

சித், கை வீக்கமா இருக்கு போல வலிக்குதா! 

இதன்யா அவனிடம் இருந்து விலகி கொண்டு இல்லையே நான் நான் நல்லா இருக்கேன். 

இனி உன்னை கஷ்ட படுத்த மாட்டேன். என அவன் நகர போக..

யோவ் உன்னை கொலை பண்ண போறேன். எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? நான் பொண்ணு! எனக்கும் வெட்கம் இருக்கும்! சும்மா சும்மா எப்டி இருக்கு? அப்படி இருக்கா? கஷ்டமா இருக்கா? இப்படி நை நைன்னு கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்ணாத! என இதன்யா கூறி விட்டாள். 

இதை கேட்டதும் சித்தார்த் கொஞ்சம் சிரித்தான். சரி இனி எதும் கேட்க மாட்டேன். டீ எடுத்துக்க லிட்டில் ஹார்ட்! 

என்ன லிட்டில் ஹார்ட்டா? 

ம்ம் வேற என்ன கூப்பிடட்டும்? என்று கெட்டிலில் இருந்து ஊற்றி கொடுத்தான். 

இதன்யா, இங்கே என்னை பாருங்க இத்தனை நாள் கழிச்சு உங்களுக்கு இன்னைக்கு தான் கூப்பிட தோணிச்சா?  என்று அவனைப் பார்த்தால் சித்தார்த் இத்தனை நாள் நீ கொஞ்சம் விலகி இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு ஆனா நேத்து நைட்ல இருந்து ரொம்ப பக்கத்துல வந்துட்ட அதனால.. 

என்ன பக்கத்துல? என்று அவனைப் பார்த்தாள்.

சித்தார்த், எல்லாம் நீ செஞ்ச மாயம் இல்ல! உன்னோட கை செஞ்ச மாயம்! அப்பதான் எனக்கு தெரிஞ்சது!

இதன்யா அவனை முறைத்து பார்த்து அப்போ இத்தனை நாள் உங்களுக்கு தெரியலையா? 

சித்தார்த், நீ எப்போ? என்கிட்ட வந்து சொன்ன? எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குன்னு? இதுவரைக்கும் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருப்பியா? நீ காண்ட்ராக்ட்காக தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட? உங்க அண்ணனுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட! அந்த பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட! என்று வேண்டுமென்றே கூறினான்.

இதன்யா ,தயவு செய்து நிறுத்துங்க! தெரியாம உங்ககிட்ட கேட்டுட்டேன்!  சாமி என்று ஒரே மூச்சில் அந்த டீயை குடித்து முடித்தாள்.

சித்தார்த், எதுக்குடி இப்படி சுடு தண்ணிய  ஊத்தின மாதிரி வெடுக்குன்னு குடிச்சு முடிக்கிற! 

இதன்யா ,உங்ககிட்ட இனிமேல் பேசி எதுவும் பிரயோஜனம் இல்லை. எல்லாமே உங்களுக்கு  சொல்லனுமே!  எத்தனை தடவை நான் உங்ககிட்ட சொல்றது!

சித்தார்த் அவளை அணை கட்டியவன். என்ன சொன்ன? எத்தனை தடவை சொன்ன? என்று கேட்டான்.

சரி சரி நான் எதையும் பேச விரும்பல! நான் குளிக்க போறேன் என்று கிளம்பினாள் .

நானும் வரவா என்று கேட்டான் அவள் வெடுக்கென திரும்பி வாங்க என்று கூறினாள்.

சும்மா சொன்னேன் போய்ட்டு வா!.

உன்ன என்று அங்கிருந்து பில்லோவை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.

ஹே ஹே அடிக்காத டி உன்ன இன்னிக்கு நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போகணும் என்று கூறினான். 

அதன்பின் சித்தார்த் இதன்யா இருவரும் கீழே வந்தார்கள். அவளுக்காக கொஞ்சமாக சில உணவுகளை தயார் செய்தவன். சாப்பிட வைத்து வெளியே அழைத்து வந்தான்.

ஆமா இப்போ அந்த மேகா என்ன ஆனாங்க? நேத்து என்கிட்ட நீங்க காலையில எழுந்ததும் சொல்றேன்னு சொன்னீங்களே? என்ன ஆச்சு? என்று கேட்டாள்.

சித்தார்த், இப்போ அது எதுக்கு நினைக்கிற? 

ஐயோ சொல்லுங்க அவங்க மேல எனக்கு ரெஸ்பான்ஸ் இருக்கு! அவங்க ரிஷியோட தங்கை!..

 சித்தார்த் அவளை கோபமாக பார்த்தான். இப்போ எதுக்கு கோவமா பாக்குறீங்க?

ஆயிரம் சொன்னாலும் நீ ஏண்டி இப்படி இருக்க?  இப்படி எல்லாம் இருக்காத! உன்னை ஈஸியா ஏமாத்திட்டு போயிடுவாங்க!

இதன்யா, அவங்கவங்க பண்ண விஷயத்துக்கு அவங்க  கண்டிப்பா அனுபவிச்சு தீர்வாங்க! ஆனாலும் நாம யாரையும் கஷ்டப்படுத்த கூடாது!

சித்தார்த் அவளை கட்டி இதழில் முத்தம் பதித்தான்.

இதன்யா அவனை ஆச்சரியமாக பார்க்க ஏன் அப்படி பார்க்கிற?  இது எப்பவுமே கொடுக்குறது தானே! என்று அவளைப் பார்த்தான். 

இந்த மாதிரி நீங்க முத்தம்  எப்போ கொடுத்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?  ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி என்று உதட்டை சுழித்தாள்.

சித்தார்த் அவளை அந்த ஸ்வெட்டருடன் அணைத்து கண்ணம் உரசியவன்.மூக்கை இரண்டு பக்கமும் பிடித்து ஆட்டி மீண்டும் இதழில் முத்தம் பதித்து, அவளிடம் அப்போ இருந்த சூழ்நிலை வேற!  எனக்கு உன்ன பாக்க பயமா இருந்துச்சு! அதைவிட ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு! ஆனா இப்போ அப்படி இல்ல என்று கூற..

குற்ற உணர்ச்சியை தான் பார்த்தேனே!  அந்த ஒருத்தன்? அவன் பேரு ஹான் அந்த காஸ்மெடிக்காரன் அவன் கிட்ட என்னை இன்ட்ரோ குடுக்குறீங்கன்னா? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அப்பவே என்கிட்ட ஏதாவது துப்பாக்கி இருந்தால் உங்கள சுட தோணுச்சு!.

சுட்டிருக்க வேண்டியதுதானே! நான் சந்தோஷமா தான் சேர்த்திருப்பேன்!

இதன்யா இதை கேட்டதும்  அவனை அணைத்துக் கொண்டாள். இருவரும் sketing விளையாடும் பக்கம் சென்றார்கள். 

அந்த நேரம் சித்தார்த் நினைவில் நவீன் குமார் சவால் விட்டது நினைவு வர இதன்யாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

லிட்டில் ஹார்ட்!. 

சொல்லுங்க என்று ஒரு இடத்தில் குவிந்து கிடந்த ஸ்னோ எடுத்து கைகளில் உருட்ட ஆரம்பித்தாள்.

என்னடி பண்ற? 

நானா இதுல விளையாடனும்னு ஆசை என்ன போட்டோ எடுக்கிறீங்களா?  இதை அம்மா கிட்ட காட்டணும் , பிரியா கிட்ட, நந்து கிட்ட எல்லாம் காட்ட போறேன் என்று சிரித்துக் கொண்டே கூற..

நீ எங்க போனன்னு கேட்டா என்ன சொல்லுவ? 

ஆமால்ல சரி சரி நான் பிரியா கிட்ட மட்டும் காட்டுகிறேன். என்று தீவிரமாக விளையாடும் நோக்கத்தில் இருந்தாள்.

உடனே சித்தார்த் ஹே  யாராவது உன்னையும் என்னையும் பிரிக்கணும்னு  பிளான் பண்ணா நீ என்ன பண்ணுவ? 

இதன்யா ஒன்றும் புரியாமல் என்ன சொல்றீங்க? அப்படி யாரு நினைக்க போறா?  அந்த மேகா தான் அப்படி நினைப்பாங்க! அது ஒன்னும் பிரச்சனை இல்ல! யாரு என்ன நினைச்சாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை! என்று கூற..

சித்தார்த், அப்படி இல்ல ஒருவேளை உன்ன எவனுக்காவது புடிச்சி இருந்து, அவன் உன்னையும் என்னையும் பிரிச்சு கல்யாணம் பண்ணிக்க..  அதாவது உன்ன கல்யாணம் பண்ணிக்க நினைச்சால் நீ என்ன பண்ணுவ? 

அப்படியா அந்த அளவுக்கு நான் நல்லா இருக்கேனா? 

சித்தார்த், அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? என்று முகத்தை கோபமாக கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டான்.

இதன்யா, எதுக்கு கோபப்படுறீங்க நான் அப்படி சொல்லல என்னோட சித்தார்த்துக்கு மட்டும் தான் நான் அழகா தெரிவேன்!  நான் யாரோட மனசையும் சஞ்சல படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்.

சித்தார்த் அவளை பார்த்த முறைக்க..

இதன்யா,   ரிஷி அண்ணா அப்படி நினைப்பாங்கன்னு எனக்கு தெரியாது! ஆனால் இப்போ எல்லாம் ரிஷி அண்ணா மேகாவை விட என் மேல தான் ரொம்ப பாசம் தெரியுமா?

 சித்தார்த் சரி அதைவிட நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..

 இதன்யா இதுல பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு ஒரே ஒரு பதில் தான்!.

என்ன? என்று இதயம் படபடக்க கேட்டான்.

இதன்யா சிரித்துக் கொண்டே நான் நான் இதன்யா! என்னோட கணவர் சித்தார்த் கிருஷ்ணா! அவ்வளவுதான் பதில் முடிஞ்சது!

சித், அதையும் மீறி  உன்னை ஏதாவது  டார்ச்சர் பண்ணா? என்ன பண்ணுவ! அவங்க உன்னை பிளர்ட்  பண்ற மாதிரி!.

ஒருத்தர் அப்படி பேசினால் அப்படியே மயங்கி விழுந்து அவங்க பின்னாடி போவென்னு எப்டி நீங்க நினைக்கலாம்! 

உன்னோட மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும் ஒருவேளை அவங்க உன்ன போஸ்ட் பண்ணா நல்லவங்க மாதிரி நடிச்சா அப்போ என்ன பண்ணுவ என்று கேட்டான்.

இதன்யா சிரித்துக்கொண்டே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  உங்ககிட்ட சொன்னேன்?

என்ன சொன்னேன்? என சித் அவளை பார்க்க..

உன்னை ஒரு கன் எடுத்து  சுட்டுடுவேன்ன்னு சொன்னேன். 

சித், அப்போ அவனை சுட போறியா? என்ன? 

சுட எல்லாம் மாட்டேன் . பிளேடு வச்சிருக்கேன். அப்படியே பக்கத்தில் வந்தால் கழுத்தை அறுத்து போட்டுருவேன்! என்று கோபமாக கூறினாள்.

சித்  ஷாக் ஆகி என்னடி சொல்ற?

ஆமா நான் தான் பிடிக்கலைன்னு சொல்றேன்ல!  அதுவும் நான் இன்னொருத்தருக்கு  சொந்தமானவ! அப்படி இருக்கும் போது. இந்த மாதிரி நினைக்கிறவங்கள எல்லாம் இப்படி தான்  பண்ணனும்!  

சித்,  அப்போ நான் மேகா கழுத்தை அறுத்து போட்ற வா!

அவங்க இப்படி சுத்த  காரணம் நீங்கதான்!

நான் என்ன பண்ண?  நான் அவகிட்ட பேசினது கூட கிடையாது. என்று கூறினான் .

இதன்யா நமக்கு கல்யாணம் ஆன விஷயம்

சித்தார்த், நீ மறைச்சிருக்க தானே! அவகிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே! 

அது அப்படி இல்ல ஆனா சில பேர நம்ம என்ன பண்ண முடியும்?

சித்,  அப்போ வருங்காலத்தில் உன்னை யாராவது முயற்சி பண்ணா? 

அவள் தீவிர முகத்துடன் ஒரே ஒரு உதை உதைப்பேன்! அதுக்கப்புறம்  அந்த மாதிரி நினைப்பே வராது!

 அப்போ என்னையும் உதப்பயா? 

பியூச்சர்ல வாய்ப்பு இருக்கு! என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

சித், இதே மாதிரி  நான் எத்தனை தடவை பக்கத்துல வந்து கொஞ்சம் இல்ல நிறையவே  பண்ற மாதிரி நடந்து இருக்கேன் ! முத்தம் கொடுத்து இருக்கேன் அப்ப எல்லாம் நீ ஏன் பிளேடு எடுத்து என் கழுத்தை கட் பண்ணல?

 இதன்யா,  சரியான மாங்கா மடையன்! இவனுக்கு எல்லாத்தையுமே சொல்லி புரிய வைக்கணும்! இவனுக்கெல்லாம் என்ன கேடு? இதுல வேற ஒருத்திய லவ் பண்ணி, பிரேக்கப் பண்ணி, அவ கூட லிவிங்ல வேற வாழ்ந்து இருக்கான்! என்று நினைத்தாள்.

ஏய் கேட்டதுக்கு பதில் சொல்லுடி! என்று சித்தார்த் மீண்டும் அவளை பார்க்க..

சொல்ல மாட்டேன் டா என்று மனதில் நினைத்துக் கொண்டவள். அதுவா நான் நிறைய தடவ ட்ரை பண்ணி இருக்கேன். பட் அது மாதிரியான சிச்சுவேஷன் கிடைக்கல! 

என்ன?  என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அவன் அவளைப் பார்க்க..

மாங்கா மடையா!  என்று கூறிக்கொண்டு அவன் மேல் ஒரு ஸ்நோ பாலை உருட்டி தூக்கி போட்டாள்.

என்னடி சொன்ன? மாங்கா மடையனா? என்று அவளை துரத்த ஆரம்பித்தான். இருவரும் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்கள்.

அங்கே ஒரு இடத்தில் பனியை சரிசமமாக செய்து சம்படுத்த பட்ட ஒரு  மிகப்பெரிய கிரவுண்டில் நிறைய பேர் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள்.

10 மணி இருக்கும். கொஞ்சமே வெயில் அந்த பனியை அப்படியே  மின்னிக்கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது .

என்னங்க எனக்கு இதுல ஸ்கேட்டிங் பண்ணும் போல, ஆசையா இருக்கு! வாங்க பண்ணலாம்!..

இதை எடுத்ததும் ப்ராப்பரா ஒரு பயிற்சி இல்லாமல் பண்ண முடியாதுடி. நீ கீழ விழுந்துடுவே!

நீங்க இருக்கீங்களே கைய புடிச்சுக்கோங்க! நம்ம ரெண்டு பேரும் பண்ணலாம்! அங்க பாருங்க  எல்லாம் அந்த ஜோடி எவ்வளவு அழகா பண்றாங்க!..

சித்தார்த் அது அப்படி இல்ல டி according to physics theory என்று அவன் ஆரம்பிக்க.. 

அப்பாசாமி எதுக்கு எடுத்தாலும் பிசிக்ஸ், பயாலஜி , கெமிஸ்ட்ரி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களா? என் கூட இருக்கும் போது அதெல்லாம் மறந்துடுங்களேன்.

 அதெல்லாம் மறக்க முடியாது அதெல்லாம் லைப் மா.

சரி இப்போது எனக்கு அதில் போகணும்! இதே ஷி ல பண்ண முடியாது. அதுக்கு ஸ்கேட்டிங் ஷி வேணும்!

அப்டியா? 

இரு அதுக்கு ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிக்கொண்டே ஸ்கேட்டிங் பண்ண தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வாங்கி வந்தவன்.   அவளின் காலில் கட்டி விட்டான்.

எனக்கு பயமா இருக்கு? என்று அவள் சொல்ல..

ஹே மெதுவா! அவ்வளவுதான்..

அவள் பயத்துடன் இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு! ரெண்டு பேரும்! அய்யோ முருகா முருகா முருகா!நான் கீழே விழுந்துடுவேன்! புத்தா காப்பாத்து என்று கத்தினாள்.‌

புத்தா என்னை காப்பாத்து! கீழ விழுந்துடுவேன்! ஐயோ அவமானமா இருக்கு! எல்லாரும் என்னை பாத்து சிரிக்க போறாங்க! என்று அவள் புலம்பி தள்ள..

சித்தார்த் அவளின் கையைப் பிடித்து இறுக்கமாக  இங்க பாரு? என்னை பாரு என்று பார்க்க வைத்தான்.

எனக்கு பயமா இருக்கு புத்தா!

சித்தார்த் இங்க பாரு போன்ல இதோட புரோசிஜர் தேடி பாப்போம்! அதே போல  நம்ம செஞ்சோம்னா கீழ விழமாட்டோம்!  எனக்கே இதுதான் ஃபர்ஸ்ட் டைம் தெரியுமா?  என்று போனை எடுத்து பிசிக்ஸ் தியரியை படிக்க ஆரம்பித்தான்.

அவள் நொந்து கொண்டு என்னடா? இவன் இப்படி இருக்கானே? என்று சிணுங்கினாள்.‌

சித்,  இதில் என்ன போட்டிருக்குன்னா?  உன்னோட body அதை லூசா விட்டு! ஜஸ்ட்  உன்னோட காலை  கரெக்டா வச்சு மூவ் பண்ணனும்! நீ பாஸ்டாவோ உன் பாடிய வந்து ஃபுல்லா கஷ்டப்பட்டு பண்ணும் போது கீழே விழுந்துடுவேன். சோ இதுல பொறுமை, நிதானம், ரொம்ப அவசியம்.

 என்ன நீங்களும் ஸ்கேட் பண்ணதில்லையா?  இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பண்ண போறீங்களா? 

ஆமா இதுல படிச்சு பார்த்தேன் மொமண்டம், வெலாசிட்டி இது தான் லிட்டில் ஹார்ட்  முக்கியம் என்று ஆரம்பிக்க..

தயவுசெய்து நிறுத்துங்க!  நீங்க பண்ணுங்க! அப்புறம் நான் பண்றேன் என்று கூறினாள்.

சித்தார்த் ஒரு நிமிடம் பிரக்டிஸ் செய்து பார்த்தவன்.  நேராக அங்கே சென்று நின்று சாதாரணமாக ஸ்கேட் செய்து கொண்டே அவளின் அருகில் வந்தான்.

இதன்யா வாயை திறந்து பார்த்துக் கொண்டிருக்க..

என்ன டி அப்படி பார்க்கிற? 

 எப்படிங்க சூப்பரா பண்றீங்க? உங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே! 

ஹே உன் முன்னாடி தான் டிரை பண்ணேன். அவ்வளவுதான் எல்லாமே பிசிக்ஸ் தான் என்று கூறினான்.

ஐயோ எனக்கும் பண்ணனும்னு ஆசையா இருக்கு!..

அப்போ வா! என்று கையை கொடுத்தான்

இல்ல நான் வரமாட்டேன்!.

வாடி!  நான் தான் இருக்கேன்ல கைப்பிடி! உன்னோட body லூஸ் பண்ணு!  நிதானமா கால வை! என்று அவன் சொல்லிக் கொடுக்க..

அங்கிருக்கும் அனைவரும் அவர்களையே பார்த்தார்கள்.

அவள் இதயம் படபடக்க இல்ல என்னால வர முடியாது! என்று அவள் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை..

சித்தார்த்,  அங்க பாரு  சின்ன குழந்தை எல்லாம் அழகா பண்ணுது! உனக்கு என்ன? வான்னு சொன்னேன்? 

இல்லங்க பயமா இருக்கு! 

சித், அந்த பயத்தை விடு!.. இந்த மாதிரி முயற்சி பண்ணாம இருந்தால் எனக்கு பிடிக்காது. எதுவா இருந்தாலும் தைரியமாக பேஸ் பண்ணனும்! கீழ விழுந்தால் இப்ப என்ன? 

இல்ல எனக்கு அவமானமா இருக்கும்! நான் வரமாட்டேன் வரமாட்டேன்! என்னை விடுங்க…விடுங்க என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..

சித்,  இப்படி எல்லாம் சொன்னால் வரமாட்ட என்று வேகமாக கையை பிடித்து இழுத்தான்.

அவள் பயத்தில் அழுது கொண்டு புத்தா! டேய்! எல்லாரும் என்னை பார்த்து சிரிக்கிராங்க! டேய் வாடா! என அவள் பேச..

சித், நீ பேசுற தமிழ் இவங்களுக்கு புரியாது டி! ஒழுங்கா டிரை பண்ணு! 

ஹஹஹ..

அவளின் இந்த குழந்தைதன நடவடிக்கையை பார்த்து அங்கே இருக்கும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கு பயமா இருக்கு! என்று அவள் நடுங்க ஆரம்பிக்க..

சித், ஏண்டி இப்படி என்னை மானத்தை வாங்குற எல்லாரும் உன்ன தான் பாக்குறாங்க கைய புடி! என்ன பயம்? என்று அவளை அணைத்துக் கொள்வது போல பிடித்துக் கொண்டான்.

இல்ல என்னால.. முடியாது.  பயமா இருக்கு! நீ என்னை கொடுமை படுத்துற!   என்று உலர ஆரம்பித்தாள்.

சித்தார்த் , உன்னால ஒன்னுமே பண்ண முடியாது!  இதுல நான் உன்னை பஞ்ஜி ஜம்பிங் பண்ண கூட்டி போனால் நீ எங்கே  இருந்து பண்ண போறியோ!. 

அப்டின்னா என்ன?  என்று கவலையான தோற்றத்துடன் கேட்டாள்.

சித், அது மலையில் இருந்து நம்ம காலை கட்டி அந்த கயிறை அவங்க பிடிச்சுக்கிட்டு  அப்படியே நம்மள கீழே தள்ளி விடுவாங்க! 

இதை கேட்டதும் இதன்யா  எனக்கு உச்சா வருது! நீ என்னை ஹனி மூன் கூட்டி வந்தியா இல்ல கொல்ல கூட்டி வந்தியா? 

சித் ஒரு பெரு மூச்சை விட்டு  நீ!.. உன்ன வச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது! என அவளின் கையை விட்டான்.

இதன்யா முருகா முருகா போச்சு  நான் கீழே விழுந்துடுவேன்  என்று அவள் பொத்தென கீழே  விழ.. 

அங்கு இருக்கும் அனைவரும் அவர்களை தான் பார்த்தார்கள். 

 சித்தார்த் அவளை தூக்கி கைகளைப் பார்த்தான்.  அவள் உதட்டை பிதுக்கி கொண்டு அங்கிருக்கும் அனைவரும் அனைவரையும் பார்த்தாள்.

சித் இதன்யாவை பார்த்து கொள்வதையும் அவளுக்கு சறுக்க சொல்லி தருவதையும் அங்கிருக்கும் ஜோடிகள் ஆசையாக பார்த்து கொண்டிருக்க… 

எல்லாம் உங்களால்? எல்லாரும் என்ன பார்த்து சிரிக்கிறாங்க..

 சித்தார்த், யாரும் உன்னை பார்த்து சிரிக்க மாட்டாங்க!  கீழே விழுந்தா என்ன தப்பு? அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்ல! எந்திரி என்று அவளை அழைத்துச் சென்று அவளின் கையை பார்த்து ரொம்ப வலிக்குதா?

 இல்ல இப்ப பரவாயில்ல! இனிமே இந்த அபாயகரமான விளையாட்டு எல்லாம் நான் விளையாட மாட்டேன்.

சித் கடுப்புடன் நீ இப்படி இருந்தா? என்ன ஆகிறது? நீயே இப்படி பயந்தால் நமக்கு பாப்பா வந்ததும் உன்னை பார்த்து அதுவும் பயப்படும்! நான் டான்ஸ் கிளாஸ் எல்லாம் அனுப்ப நினைச்சேன். ஆனால் நீ! 

அவ ஆடட்டுமே! எனக்கு என்ன? நான்  இதெல்லாம் பண்ண மாட்டேன்.

சித்தார்த்,  நீ ஒரு நடிகனோட பொண்டாட்டி டி!  பாட்டு பாட தெரியுமா? 

எனக்கு தெரியாது! 

டான்ஸ் ஆட தெரியுமா? 

இதன்யா,  அதுவும் எனக்கு தெரியாது.

அப்போ என்ன தான் தெரியும்? என பெரு மூச்சுடன் கேட்டான். 

எனக்கு! எனக்கு! ஸ்கூல்ல எனக்கு என்ன தெரியும்? என்று அவனை பார்த்தாள்.

எனக்கு படிக்க மட்டும் தான் தெரியும்! நான் டீச்சர்.  என்னை கிண்டல் பண்ணாதீங்க.

சித் சிரித்து கொண்டே If you happy and you know it clap your hands இது மட்டும் தான தெரியும்! அதையாவது முழுசா தெரியுமா?  சொல்லு பாக்கலாம்! 

புத்தா! உன்னை! என அவள் அடிக்க கை ஓங்கி அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.  ஒரு ஜோடி இவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புத்தா உடனே திரும்பி பார்க்காத ஒருத்தங்க நம்மளையே பார்த்துட்டு இருக்காங்க! அதுவும் வெச்ச கண்ணு வாங்காம..   என்று  இதன்யா தோரணையாக கூற..

சித் வெடுக்கென திரும்ப…

அப்படி பார்க்காதன்னு சொன்னா! நீ திரும்பி பாக்குற!..

சித்,  யார் பார்க்கிறா? என்று கேட்டான்.

அதோ அவங்க என்று காட்டினாள்.

சித்தார்த் எழுந்து  என்ன என்று  கேட்க வர அவர்கள் சிரித்துக் கொண்டே அருகில் வந்தார்கள்.

 அந்த ஸ்பானிஷ் பெண் நான் உங்க ரெண்டு பேரையும் போட்டோ புடிச்சுக்கலாமா?  என்று அவர் ஸ்பானிஷில் கேட்க..

எதுக்கு என்று சித்தார்த் கேட்டான்.

உங்கள பார்க்கும்போது அது ஒரு ஓவியம் மாதிரி தோணுச்சு! ரொம்ப யூனிக்கா இருக்கு! நீங்க ரெண்டு பேரும் இங்க வந்த கப்பில்சிலேயே டிஃபரண்டா இருக்கீங்க! அது என்னை ரொம்ப  அட்ரக்ட் பண்ணுச்சு!  நான் ஒரு டிராவலர், இந்த மாதிரி யுனிக்கா இருக்கிறத போட்டோ பிடிக்கிறது எனக்கு ஆசை!  நீங்க ரெண்டு பேரும் நிக்கரீங்களா? 

 அப்படியா என்று சித்தார்த் யோசனையிடன்  அப்படியே நிற்க அவர் என்ன சொன்னாரு? கச கச முசான்னு  ஏதோ பேசினாரு! எனக்கு ஒண்ணுமே புரியல! என்ற இதன்யா சொல்ல..

அவர் கசமுசானு பேசல ஸ்பானிஷ்ல பேசினாரு! 

அவள் ஆச்சரியமாக இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?   இப்போ அவங்களுக்கு என்ன வேணுமா? 

அந்த ஜோடி வைத்த கண் வாங்காமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க..

அவருக்கு நம்மள போட்டோ புடிக்கணுமா என்று கூறினான்.

அதுக்கு என்ன தாராளமா பிடிச்சுக்கோங்க! நான் நிக்கிறேன்!

சித், இப்படியே இந்த கால வச்சிட்டு நிக்க போறியாடி! கொஞ்சம் டீசன்ட்டா நில்லு!  என அவர்கள் நின்று போஸ் கொடுக்க..

அதில் ஒருவர்  ஆர்வமாக போட்டோ புடிக்கலாமா என்று கேட்க..

சித்தார்த் ஒரு நிமிஷம் அருகில் வந்து அவர்கள் இருவரின் மொத்த டீடெயில்ஸ், போன் நம்பர், விவரங்கள் அனைத்தையும் வாங்கிட..

எதுக்கு சார் இதெல்லாம் வாங்குறீங்க என்று கேட்டான்.

சித், இல்ல நீங்க நிஜமாலுமே டிராவலரா இல்லையான்னு செக் பண்றதுக்கு தான்! 

அந்த ஸ்பானிஷ் பெண், இவளோ செக் டூ மச்! 

சித், அவ என்னோட மனைவி நான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளனும்!என்று கடுமையான குரலில் கூறினான்.

சார் அந்த அளவுக்கு உங்க மனைவி லவ் பண்றீங்களா? 

ஆமா என்று கூறினான்.

இதன்யா  அவர்களின் வாயை  புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன பேசுகிறார்? அது என்ன மொழி ஸ்பானிஷ் ஆ! அது கீரைய தானே அப்படி சொல்லுவாங்க! 

சித் சிரித்து கொண்டே அது ஸ்பின்ச் இது ஸ்பானிஷ்! 

ஸ்பானிஷ் பெண்மணி  இதன்யாவின் அருகில் வந்து டூ யூ நோ இங்கிலீஷ்? 

Yes ஐ அண்டர்ஸ்டன்ட் என்று அவள் பார்க்க..

 யூ ஆர் லக்கி!. And யுவர் ஹஸ்பண்ட் என்று சொல்ல வர..

சித், ம்ம் போதும் போதும் போட்டோ எடுங்க என்று ஸ்பானிஷ் கூறினான்.

இதன்யா புகை படங்களுக்கு போஸ் கொடுத்து கொண்டே உங்களுக்கு இந்த மொழி எப்டி தெரியும்? 

சித், சின்ன வயசில எக்ஸ்ட்ரா கரிகுளர்க்கு சும்மா கொஞ்சம் படிச்சேன். என அவளை நெற்றியில் முட்டி கொண்டே போஸ் கொடுத்தான். 

இதன்யா என்ன ஒரு மொழி கற்று கொள்வது உங்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுளரா? என அவனை திரும்பி பார்த்தாள். அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு போசும் சக் சக்கு ஸக்கு என்று எடுத்து தள்ளினார்கள். 

Perfect shoot.. photo genic couples என்று எடுத்து முடித்தார்கள். 

இதன்யா, எனக்கு ஒரு தடவை பார்க்கணும் போல தோணுது! வாங்கி கொடுங்க! என கேட்க அதே போல சித்தார்த் அவர்களிடமிருந்து கேமராவை வாங்கி ஒவ்வொரு புகைப்படத்தையும் தள்ளி காட்டினான்.

இதன்யா கண்கள்  ஆசையாக இந்த போட்டோவை,  நம்ம வீட்ல பெருசா மாட்னா, சூப்பரா இருக்கும்! என்று கூறினாள்.

அவன் சிரித்துக் கொண்டே அதற்கு தனியா உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்! 

 இதன்யா என்ன? எங்கே போறோம்? 

அதை அங்க போயிட்டு சொல்றேன்.

இல்ல எனக்கு இப்போவே சொல்லுங்க..

சித், அந்த இடம் வரும்போது சொல்றேன் என்று கூறினான்.

அந்த போட்டோவை அந்த ஜோடிகளிடம் கொடுத்துவிட்டு  சித், இந்த போட்டோ எல்லாத்தையும் நீங்க ராங்கா யூஸ் பண்ண கூடாது. அதேபோல இது எல்லாத்தையுமே எனக்கு மெயில் பண்ணி விடுறீங்க. 

சரி என்று அவர்கள் கிளம்பினார்கள். அந்த இடத்தில் இருந்து சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் பேசிக்கொண்டே நடந்து கொண்டே வர..

அங்கே படம் வரைபவர்கள் அமர்ந்திருந்தார்கள். அது யாரு?

அது நம்மள அப்படியே டிரா பண்ணிக் கொடுப்பாங்க! 

அப்படியா அப்ப நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்று பண்ணிக்கலாமா?

சித்தார்த், அது இப்போ வேண்டாம்!   வீட்டுக்கு போலாம்!

அப்புறம் எப்ப பண்றது? எனக்கு இப்போவே வேணும்! 

சித், அதுக்காக உன்னை ஒரு பிளேஸ் கூட்டிட்டு போறேன். அங்க பண்ணிக்கலாம்! 

நிஜமா கூட்டிட்டு போவீங்களா? 

நெஜமா கூட்டிட்டு போறேன் என்று இருவரும் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே சிரித்துக்கொண்டே அவர்கள் உள்ளே  நுழைய..

அபி அமர்ந்திருந்தான்.

அண்ணா! நீங்க எங்கே இங்கே என்று சொல்ல..

சித்தார்த் நேராக கிச்சன் சென்றான்.

அபி, சித்தார்த்  நான் வந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லவே இல்லயா பாப்பா? என்று கேட்டான்.

இதன்யா நிஜமாகவே என்கிட்ட சொல்லல அண்ணா ! ஹான் அப்புறம் முக்கியமான விஷயம் அவருக்கு ஏதோ பெரிய பிரச்சனை ஆயிடுச்சு! 

என்ன ஆச்சு? 

அண்ணா அவருக்கு நைட்டு  புல்லா என்று இதன்யா சொல்ல வர..

சித்தார்த்,  என்னடி பண்ற?  என்று கத்த..

 அபி, என்ன ஆச்சு?  நைட்டு ஃபுல்லா என்னாச்சு?  என்று கேட்க..

சித்…? 

இதன்யா..? 

நாளை பார்ப்போம்!  

தொடரும்..

Comment யாருமே பண்ண மாட்டிக்கிரீங்க? கதை பிடிக்கலயா? Negative ஆ போற மாதிரி தான் இருக்கும் ஆனால் positive ஆ தான் முடிப்பேன். 

Comment pannunga ratings konjam like share pannunga..

உனக்கும் எனக்கும் படிச்சு பாருங்க! உங்களுக்கு பிடிக்கும். 

You may also like

Leave a Comment