ACTION அசுரா (AAA old version) 6

by Pradhanya kuzhali
415 views

EPISODE 161 (161 to 180)

Indian armed force ( indian army ) selection லெட்டர் வந்திருக்கு அதுவும் ருத்ரணுக்கு?  யாரு அப்ளை பண்ணது? என சத்ய தேவ் இன்பாவை பார்க்க..  விவேகாவின் பார்வை கோபத்துடன் இன்பாவின் மீது திரும்பியது. 

என்ன பண்ணி வச்சிருக்க எதுக்கு அப்ளை பண்ண என்று கோபத்துடன் விவேகா இன்பாவின் அருகில் வந்து சட்டையைப் பிடிக்க.. நான் தான் அப்ளை பண்ணேன் என உணர்ச்சி துடைத்த முகத்துடன் இறங்கி வந்தான் ருத்ரன் sorry ரௌத்திரன். 

என்ன என்று ஒன்றும் புரியாமல் ரிதம் விவேகா சத்தியதேவ் இன்பா முதற்கொண்டு அனைவரும் அங்கே  நடந்து வரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். இன்பாவுக்கு தனது மகனை பார்த்ததும் மிகவும் வேதனையாக இருந்தது.  அதுவும் அவனது கண்களில் இருந்த அந்த கவலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.  ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்? என்று. 

ரிதம் சிரித்தபடி ஏதோ கிண்டலாக பேச வர சத்யதேவ் அவளின் கையில் அழுத்தி பிடித்தான். ஹே வாய மூட்ரி! உன் தம்பி கிட்ட அடி வாங்காத! என்று காதில் கூறியவன்.  என்ன தீரா இது? என விவேகா கேட்க 

இன்பா விவேகாவின் கையை தட்டி விட்டு  நேராக ருத்ரனின் பக்கம் சென்றவர். உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வா! நீங்க யாரு என்ன பேசினாலும் என்னோட முடிவுல இருந்து நான் மாற மாட்டேன்! இது தான் என்னோட முடிவு என்று இரு பொருள் பட பேசினான் ருத்ரன். 

விவேகா ருத்ரனின் அருகில் சென்று நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் நீ எங்கேயும் போகக்கூடாது என்று அவனை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தார். இப்படி இப்படித்தான் உன் பயணம் நன்றாக பார்த்துக்கோ! இப்படிதாண்டி நானும் நீ லண்டன் என்ன விட்டு போனியே இப்படி தான் இருந்தேன் என்று கூறினார் இன்பா. 

ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக அப்படியே நிற்க எதுவும் பேசுடா இப்போ என்னடா நடந்தது? இல்ல மா! நான் போகனும்! என விடாப்பிடியாக கூறினான். 

தீரா உன் கிட்ட மாமா பேசணும்னு சொன்னாங்க! பேசிட்டு வா! போ! அத்தை நீங்க அவனை விடுங்க என சத்ய தேவ் விவேகாவை அவர்களிடம் இருந்து பிரித்தான். விவேகா அழுது கொண்டே தன் மகனை பார்க்க, இப்போ இவனுக்கு என்ன ஆச்சுன்னு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கான்? என ரிதம் அங்கு நடக்கும் காட்சிகளை வினோதமாக பார்த்தாள். 

சத்யதேவ் அவன்கிட்ட சொல்லுடா நீ அங்கே எல்லாம் போக வேணாம் இங்கேயே காலேஜ்ல வேலை செய்யட்டும். அவன் எங்கேயும் போக வேண்டாம் என்று விவேகா கதறினார்.

சத்திய தேவ் விவேகாவை அழைத்துக் கொண்டு வர,  இன்பா ருத்ரனின் தோள்பட்டையில் கை போட்டு அழைத்துச் செல்ல.. 

டாடி என்று அழைத்தாள் ரிதம். 

அந்த நேரம் பட்டென புடனியில் ஒரு அடி விழுந்தது.

ஹே ஹா!.. என சிணுங்கினாள் ரிதம். வேறு யார் சத்தியதேவ் தான்..

டேய் எதுக்குடா என்னை அடிச்ச?  டாடி இவன் அடிச்சிட்டான் என்று ரிதம் சொல்ல வர..

அடி வாங்க போற ஒழுங்கா உட்காரு அவங்க ரெண்டு பேரும் போறாங்கல்ல இப்போ என்ன?  எதுக்கு உங்க அப்பாவ கூப்பிட்ட?  என்று சத்திய தேவ்  ரிதமை மிரட்டினான். 

அது என்னோட டாடி எப்படி அவ மேல கை போட முடியும்? என்று ரிதம் பேச விவேகாவுக்கு கோபம் வர அவளின் காதை பிடித்து திருகியவர். அவ என்னோட பையன் டி!  என்று அழுது கொண்டே கூறினார். 

உன் பையன் தான்!  அது எப்படி டாடி என்னோட டாடி என்று விரதம் தன் அம்மாவை இயல்பாக்கும் பொருட்டு வம்புக்கு இழுத்தாள். 

 இங்கே வெளியே ஓரிடத்தில் நிலை குத்திய பார்வையுடன் ருத்ரன் நின்று கொண்டிருக்க,  இன்பா அதே போல் இன்னொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். 

என்ன திடீர்னு இந்த முடிவு?  உனக்கு தான் போலீஸ்ன்னா சுத்தமா பிடிக்காதே!  என்று மெதுவாக பேச்சு கொடுத்தார். 

ருத்ரன் உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டு “நீங்க சொன்ன நடந்துடிச்சு. எனக்கு இந்த இனி  காதல் கிடைக்காது.  என்னோட வாழ்க்கையில காதல் என்கிற அத்தியாயமே இல்லை என்று விட்டோதியாக கூறினான். 

இன்பா அவனது தோள் மேல் கை போட்டு இங்க பாரு என்னை பாரு என்று முகத்தை திருப்ப ருத்ரனின் கண்ணில் நீர் கோர்த்திருந்தது ஆனால் அவன் அழவில்லை.

இது மாதிரி நானும் பீல் பண்ணி இருக்கேன் உங்க அம்மா என்ன விட்டுட்டு போகும்போது..  விட்டுட்டு போனா உன்ன மாதிரியே துடிப்போட அவளை மறக்கணும்னு  போனேன். ஆனா என்னால மறக்க முடியவில்லை அவளாகவே என்ன தேடி வர வச்சேன். ஆனா நீ இப்போ எடுத்திருக்கிற முடிவு அதுக்கான காரணம் மறக்கறதுக்கா?  இல்ல மரித்துக்கொள்வதற்கா?  என்று கேட்டார். 

அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க முடியாது என்று வெம்பிக் கொண்டே நின்றான் ருத்ரன்.

இன்பா ஒரு பெருமூச்சை விட்டபடி  இது நமக்கும் மீறிய விஷயம்? சொல்றத புரிஞ்சுக்கோயேண்டா என்று இன்பா அவனது தோலை அழுத்தி பற்ற.. 

என்னால இந்த பெயின லோட் பண்ண முடியல,  சொல்ல போனா எனக்கு சாகனும் போல இருக்குது. என்று ரணத்துடன் பேச..  இன்பா அவனை பார்த்து வேகமாக அணைத்துக் கொண்டார். 

இப்படி இருக்காதடா நல்லா இல்ல!  இது உங்க அம்மா பார்த்தா தாங்க மாட்ட உயிரை விட்டுருவா! என்று இன்பா கலங்கியபடி அவனிடம் கூறினார். 

முடியலப்பா!!!  என்னால முடியல என்னால முடியல டாடிஇஇஇஇ!! என்று உடல் நடுங்க தன் தந்தையை அணைத்துக் கொண்டு அழுதான் ருத்ரன்.

இங்க பாரு!  என்ன பாரு! உன்னுடைய இழப்பு..  இந்த இழப்புக்கு எதையுமே ஈடு கொடுக்க முடியாது. ஒரு பொண்ணு பத்து மாசம் சுமந்து பிறக்கிற குழந்தையும்,  ஒரு பையனோட மனசுல இருக்குற அந்த காதலும் அத இழக்கறது அப்படிங்கறது மிகவும் நரகத்தை விட கொடுமையானது.  எனக்கு புரியுது.. ஆனா நீ இப்படி இருந்தா உங்க அம்மா அவ நிம்மதியா இருக்க மாட்டாங்கிரா!  நான் சொல்றதை கேளு!  என்று இன்பா அவனது பின் முதுகை வருடி கொடுத்தார் இன்பா. 

இந்த பெயின் என்னோட இதயத்தை வெட்டி எடுக்கணும் போல இருக்கு டாடி! நான் என்னை மறக்கணும்? என்னையே மறந்தால் என்னோட கோல்ட் ஃபிஷ் என தளுதளுத்தான் ருத்ரன். 

நான் சொல்றத கேளு ருத்ரா! என்று இன்பா அவனது ஒரு முகத்தை பார்க்க.. 

ருத்ரன் பெருமூச்சு விட்டபடி இப்போதைக்கு நான் இங்கே இருந்தா அம்மாவால என்னோட இந்த நிலையை பார்த்து தாங்க முடியாது  பா! நான் அம்மாச்சி வீட்டுக்கு , ரவி தாத்தா வீட்டுக்கு போனாலும், இதே சூழல்தான் அவங்களாலயும் தாங்க முடியாது அதுக்கு ஒரே தீர்வு இது மட்டும் தான் என்னோட கோபத்தையும் என்னோட தனிமையையும் நான் அங்க போக்கிக்கிறேன். இதுக்கு மேல இங்கே என்னால இருக்க முடியாது.  டாடி!!  ப்ளீஸ் அம்மாவ நீங்க பார்த்துக்கோஙக! ரிதம் இருக்கா சக்தி மாமா இருக்காங்க! நான் போறேன் டாடி! என்று ருத்ரன் மூச்சு விடாமல் பேசினான். 

வெடிக்கென ருத்ரனின் கழுத்தைப் பிடித்த இன்ப போறேன்னு சொல்லக்கூடாது.  போயிட்டு வரேன்னு சொல்லு என்று அழுத்தினார். 

மாட்டேன் என்று விடாப்பிடியாக ருத்ரன் முறுக்கிக் கொண்டு நிற்க..

சொல்லுடா!! உங்க அம்மா உனக்காக காத்துட்டு இருப்பா!  இப்ப சொல்லு?  போயிட்டு வரேன்னு சொல்லு? என்று அதட்டினார். 

ஒரு சில நொடிகள் அப்படியே மௌனமாக கழிய சரி போயிட்டு வரேன் என்று கூற மீண்டும் அனைத்து விட்டு மேபி உனக்காக பிறந்தவ அவ இல்லையோ என்னவோ? 

ருத்ரன் அதை வெட்டி விடும் விதமாக எனக்காக பொறந்தவ அவ மட்டும்தான்!  அவ இல்ல அப்போ எனக்கும் வாழ்க்கை இல்லை. தட்ஸ் இட் ருத்ரனுடைய அத்தியாயம் இதோட முடிஞ்சது என்று கூறினான். 

இன்பா அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை.  ஏற்கனவே நொந்து கிடப்பவனிடம் மீண்டும் கிளர வேண்டாம் என விட்டு விட்டார். இது மட்டும் விவேகாவுக்கு தெரிந்தால் ஒரு ஆட்டமே ஆடி விடுவாள். 

இன்பா அவனது தோளில் கை போட்டபடி கொஞ்ச தூரம் வந்தவன்.  உங்க அம்மா இருக்கா நீயே அவகிட்ட சொல்லி சமாளிச்சு கிளம்பு.  எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  என்று விலகிக் கொண்டார். 

டாடி நீங்க தான் சொல்லணும் வாங்க என்று கையில் பிடித்து அழைத்து வந்தான் ருத்ரன். 

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நீயாச்சு!  அவளாச்சு!  அவகிட்ட போய் பேசிக்கோ.  கையை எடுடா என்று விலக்கிக் கொண்டவர். நேராக வந்து ரிதம் பக்கம் அமர்ந்து கொண்டார். 

ஆமா அவன்கிட்ட போய் என்ன பேசினீங்க?  என்று மகள் அவனை துருவித் துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க… இந்த முறை விவேகாவை அழைத்துக் கொண்டு ருத்ரன் தனியாக சென்றான். 

அரை மணி நேரம் ஒரு மணி நேரமானது. ஒரு மணி நேரம் 3 மணி நேரமானது . அப்படியே மாலை இரவு என ஆகிவிட சத்தியதேவ் ஒரு பக்கம் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்தான்.

மாமா என்ன நடக்கும்?  என்று மெதுவாக கேட்க எனக்கு தெரியாது அவனும் அவளும் கிட்டத்தட்ட ஒன்னு… சோ  ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு.  அவங்க அவங்களோட முடிவுல தான் நிப்பாங்க.  அது அவங்க பாடு டா மாப்ள்ளை என்று கூறினார் இன்பா. 

டாடி நீங்க இன்னும் அவனிடம் என்ன பேசினன்ன்னு என்று என்கிட்ட சொல்லவே இல்ல. என்று அவள் தலையை ஆட்டி கேட்க.. 

அதுவா என்ன திடீர்னு போலீசாக போறேன்னு சொல்ற? என்னோட ஹெல்ப் உனக்கு என்னைக்குமே இருக்காது.  நான் எப்பவுமே என் பொண்ணுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்.  தெரிஞ்சுக்கோ!  அப்படின்னு மிரட்டினேன். என்று இன்பா சொல்ல..

சத்திய தேவ் சிரித்தான். 

டாடி பாருங்க அவன் சிரிக்கிறான்.  அவனுக்கு இதே தான் வேலை.  என்ன மதிக்க மாட்டேங்கிறான் டாடி. நான் எவ்ளோ பெரிய போலீஸ் தெரியுமா?  என்று ரிதம் கை காலை ஆட்டிக்கொண்டே அவனைப் பார்க்க..

நீ எவ்ளோ பெரிய போலீசா இருந்தாலும் எனக்கு பொண்டாட்டி!! டிஇஇஇ! என்று சத்திய தேவ்  கூறிக்கொண்டே மாமா இப்ப சொல்லுங்க நான் சொன்னது கரெக்ட்டா? இல்லையா? என்று கேட்க

 டாடி சொல்லுங்க என்று ரிதம் சண்டைக்கு வந்தாள். அதை விடு அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு போய் பாத்துட்டு வரலாம் வா! உன்னோட பேபி என்ன பண்றான்னு பார்ப்போம் என்று வலுக்கட்டாயமாக இன்பா பேச்சை  மாற்றிவிட்டு அழைத்து சென்று விட்டார். 

விவேகா ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க,  ருத்ரன் விழி அகலாமல்  தன் அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒத்துக்கொண்ட பாடில்லை. இருவரும் நேராக விவேக அருகில் சென்றார்கள். 

நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்.  உன் பயனால ஆர்மி எல்லாம் தாங்கிக்க முடியாதுடி.  இவனே ஒரு தொட நடுங்கி.  இவனையெல்லாம் ஆர்மியில் செலக்ட் பண்றாங்கன்னா காமெடியா இருக்கு.  உன் கூட இருக்கட்டும் என்று இன்பா வேண்டுமென்றே விவேகாவை தூண்டிவிட்டார். 

விவேகா சேலையின் தலைப்பால் கண்களை   துடைத்துக் கொண்டே இப்படி எல்லாம் பேசினா அனுப்பிவிடுவேன்ன்னு  நீ கனவு காண்றியா?  அவன் எங்கேயும் போக முடியாது. போகக்கூடாது.  என் கண் முன்னாடி தான் என் பையன் இருக்கணும். என்று மீண்டும் மீண்டும் விவேகா அழ..

அட கண்டுபிடிச்சிட்டாலே என்று இன்பா நினைத்தபடி இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது. என்று ருத்ரனின் பக்கம் திரும்பி உதட்டை பிதுக்கினார்.

சக்தி அந்த இடத்திற்கு வந்தவன் ருத்ரனை பார்த்தபடி மாமி அனுப்புங்க.  அவனுக்கு எதுவும் ஆகாது. ஜஸ்ட் அவனோட மைண்ட் ரிலாக்ஸ்க்கு ஒரு ஆல்டரேஷன் தான்.  இங்க இருந்தா நீங்க அவனை நினைச்சு கவலைப்படுவீங்க.  ஏன்டா டெய்லி போன் பண்ணுவியா மாமிக்கு?  சொல்லு? என கண் காட்டினான். 

ஹான் மா கண்டிப்பா டெய்லி போன் பண்ணுவேன் என்று ருத்ரன் தன் அன்னையைப் பார்க்க..

அப்புறம் என்ன மாமி அனுப்பி விடுங்க. 

மாட்டேன் அவனை பார்க்காமல் என்னால இருக்க முடியாது. என்று மீண்டும் அவர் பேச வர..

சத்தியதேவ் ருத்ரனிடம் அதுக்கு ஒரு ஐடியா இருக்கு பேசாம மாமிய நீ டெல்லி கூட்டிட்டு போய்டு அங்க இருந்து என்று சொல்ல வர..

டெல்லியா அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்!  அவன் ரிஜெக்ட் ஆயிடுபான்  நீ கவலைப்படாத!  உனக்காக நான் எல்லாம் எடுக்கிறேன்.  இப்போதைக்கு அவன் சும்மா போயிட்டு வரட்டும்!  என்று இன்பா விவேகாவிடம் கூற.. என் பையன என்கிட்ட இருந்து பிரிக்கிறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷமா?  குறுக்கு புத்திக்காரா என்று விவேகா கூற..

ருத்ரன் விவேகாவின் அருகில் வந்தவன்.. அம்மா நான் சொல்றதை கேளுங்க.. ப்ளீஸ் எனக்காக என்று தெளிவாக பார்த்து கேட்டான். 

சரி ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு என்று விவேகா கூற..

என்ன கண்டிஷன் என்று ருத்ரன் கேட்டான். 

எனக்கு பிராமிஸ் பண்ணு. 

முதல்ல கண்டிஷன் என்னன்னு சொல்லுங்க? 

விவேகா சத்தியதேவ் மற்றும் ரிதம் இருவரையும் பார்த்துக் கொண்டே  நாளைக்கு சத்யதேவ் ரிதம் இரண்டு பேருக்கும் குழந்தை பிறக்கும் போது காது கத்துவாங்க பாத்தியா?  அப்போ என்று விவேகா பேச வர.. 

அய்யோ மாம் அதுக்கு நீ அவங்க கிட்ட தான் ப்ராமிஸ் வாங்கணும்!  மாமா கிட்ட  இன்னும் முக்கியமா ரிதம் கிட்ட சொல்லு!  அவ தான் இன்னும் அவுத்துவிட்ட கழுதை மாதிரி சுத்திக்கிட்டு இருக்கா என்று தன் அன்னையிடம் இயல்பாக இருப்பது போல பேசினான் ருத்ரன்.

டேய் என்று விவேகா அதட்ட ரிதமுக்கு என்ன செய்வதென தெரியாமல் தலையை சொரிந்த படி நின்றாள்.  சத்திய தேவ்  ஒரு முறை அவளைப் பார்த்தவன்.“ பக்கத்திலேயே நெருங்க விட மாட்டேன்றா! அப்படியே பக்கத்துல போனாலும் பாகிஸ்தான் பார்டர் மாதிரி அங்க தொடக்கூடாது! இங்கே பார்க்க கூடாது.  இங்க தொட கூடாதுன்னு  கண்டிசன். இதுல என்னைக்கு எனக்கு குழந்தை பிறக்கிறது? இதெல்லாம் இந்த அத்தியாயத்துல நடக்குமா?” என்ன என்று பெருமூச்சு விட்டான். 

இங்கே விவேகா ருத்ரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஏய் நடக்கும் தானடி என்று கேட்க..

ஹ… ஹான் நடக்கும் நடக்கும்..

என்ன?

நடக்கு மாம்  என்று ரிதம் தலையாட்டினாள். 

இன்பா விவேகாவை நிம்மதியுடன் பார்த்தார். 

என்னமா அதுக்கு நான் வரணும் அவ்ளோ தான தாராளமா என   ருத்ரன் கூற..

உன்னை தனியா வர சொல்லல!  ஐ மீன் அப்போ உன் கூட உன்னோட மனைவி இருக்கணும்.  என்னோட மருமகள்.

வாட் வாட் என ருத்ரன் கையை விலக்கிக் விலக்கிக் கொள்ளப் போராட..

நான்  சொல்லிட்டேனே! உன்ன விட்டு போன பொண்ண பத்தி நீ நெனச்சிட்டு இருக்காத!  அப்படி நீ அவளையே நெனச்சிட்டு இருக்குறதா இருந்தா! இப்பவே உன் கூட நானும் செத்துப் போறேன்!  என்று விவேகா சொல்ல..

அம்மாஆஆஆஆ!! என்று கத்தினான் ருத்ரன். 

இன்பா விவேகாவின் அருகில் வந்து தோலை பற்றியவர்.  உங்க அம்மா என்ன சொல்ல வரான்னா!  உன் மாமனுக்கும் உங்க அக்காளுக்கும் குழந்தை பொறக்கறதுக்குள்ள.  நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்ல வரா. அதுக்குள் இங்கே நம்ம வீட்டில் நல்லது நடக்கணும். நீ ஜோடியா வரணும் கரெக்டா என்றார். 

முடியாது என்று கையை வேகமாக விலகிக் கொண்டான். 

விவேகா அந்த இடத்திற்கு அந்த இடத்தை விட்டு சென்றவர் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டார். 

இன்பா  அங்கு நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு பக்கம்  போன்  நோண்டிக் கொண்டிருக்க,  ருத்ரன் அங்கும் இங்கும் நடந்தான். 

சத்யதேவ் வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ரிதம் அவளது கள்ள பார்வையை அவனின் மேல் பதித்தவள்.  இல்லை  இப்போ உடனே பிரக்னன்ட் ஆக முடியாது!! முதல்ல அவன் என்னிடம் காதலே சொல்லலையே? என நினைத்தவள். ருத்ரன் பக்கம் திரும்பி டேய் டேய் உன்னை தான் ருத்ரா!? என அழைத்தாள். 

என்ன?

குழைந்தை பிறக்க அதுக்கு இன்னும் பத்து வருஷம் கூட ஆகும்.  நீ அம்மாகிட்ட தைரியமா சொல்லிட்டு நீ போயிட்டு வாடா!  என்று ரிதம் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க..

என்ன? இப்போ என்ன சொல்லிட்டு இருக்க என்று விவேகா அருகில் வந்தார்.

அது ஒன்னும் இல்லமா என்று ரிதம் நேராக இன்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

என்ன நடந்தாலும் சரி எது நடந்தாலும் சரி என்னோட முடிவுல இருந்து மாற மாட்டேன் நான் போக தான் போறேன் என்று யாரையும் கண்டுகொள்ளாமல் ருத்ரன் மேலே ஏறிவிட்டான்.

பாத்தியா உன் புள்ள உன்னை எங்க தூக்கி போட்டுட்டான்னு?  என் பொண்ணு போல  மாதிரி வருமானடி, நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக ரிதம் சத்யதேவ கல்யாணம் பண்ணி இருக்கா.  என்று சொல்ல…

சத்யதே திரும்பிக்கொண்டே ரிதமைப் பார்த்தான்.

ரிதம் கள்ளமுழியுடன் திரும்பி கொண்டாள். 

நான் சொன்னது சரிதான மாப்பிள என்று இன்பா சத்யதேவை பார்த்து கேட்க.. 

அத நீங்க உங்க பொண்ணு  ரிதம் கிட்ட தான் மாமா கேக்கணும் என்று சத்யதேவ் கலண்டு கொண்டு ருத்ரன் இருக்கும் பக்கம் சென்று விட்டான். 

விவேகா மீண்டும் அழ ஆரம்பித்து விட்டார்.  ருத்ரன் ஒரு பக்கம் ஜன்னல் பக்கம் நின்று கொண்டிருக்க.. என்னடா இது தீரா நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க?! என்று சொல்லிக் கொண்டே வர..

அதையே தான் மாமா நானும் கேட்கிறேன்.  என்னோட மீனாட்சி என்னை  விட்டு போய் கொஞ்ச  நாள் கூட ஆகல… அதுக்குள்ளாட்டியும் எங்க அம்மா என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க என்று விரக்தியாக பேசினான். 

அவ கூட ஒன்னும் நீ கல்யாணம் பண்ணி வாழலையே என்று சத்திய தேவ்  சொல்ல..

உங்களுக்கு அது புரியாது மாமா ஏன்னா நீங்க எனக்கு தெரிஞ்ச ஹரினி அக்காவை லவ்வே பண்ணலன்னு தான் நான் சொல்லுவேன். 

அப்படி எல்லாம் இல்லையே என்று சத்திய தேவ் மறுத்து பேச.. 

இப்போ என்னால மீனாட்சிய மறந்துட்டு மீனாட்சி இருந்த இடத்துல இன்னொருத்திய வெக்கவே முடியாது மாமா..ஆனால் எங்க அம்மா இப்படி பேசுறது தான் எனக்கு என்று அவன்…  நின்று கொண்டிருக்க…

சரி இனிமே உன்னோட விஷயத்துல நான் தலையிட மாட்டேன் உன்னோட முடிவு என்று சென்று விட்டான்.. 

இப்படியே இரண்டு நாட்கள் சென்றது விவேகா எதுவும் சாப்பிடாமல் இருக்க இன்பா நேராக ருத்ரன் அருகில் சென்றவர்.. உங்க அம்மா எதுவும் சாப்பிடல!  நீ ஆர்மி போய் ஒன்னும் புடுங்க வேண்டாம்.  இங்கே ரூம்குள்ள அடைஞ்சு உன் காதலிய நினைச்சு அழுது சாவு. அவ கண்ணு முன்னாடி நீ இரு!  எனக்கு அது போதும் என்று திரும்பினார். 

நான் போய் தீருவேன் என்று உறுமி கொண்டே எழுந்தான்  ருத்ரன்.

அவனைப் பார்த்து சிரித்தபடி போ போய் தான் பாரேன்! நீ போறதுக்குள்ள உன்ன வேணான்னு சொல்ற அளவுக்கு,  என்ன பண்ண வைக்க முடியும்.. உன்ன தொரத்தி அடிக்கிற அளவுக்கு என்னால பண்ண வைக்க முடியும்.  பண்ணட்டுமா?? என்று கேட்டார் இன்பா.

இப்போ நீங்க என்னதான் சொல்ல வரீங்க?. என்று ருத்ரன் கேட்க..

உனக்காக ஒருத்தி இனிமே பொறக்க போறாளோ!!  இல்ல ஏற்கனவே பிறந்திருக்காளோ?  அது எனக்கு தெரியாது!

டாடிஇஇஇ! என்று அவன் கத்த.. 

டேய் நிறுத்துடா!  சும்மா ஆடாத!! அது  என்னமோ நடக்குது.  சும்மா உங்க அம்மாகிட்ட உங்க அம்மாகிட்ட ஒப்புக்கு வாக்கு கொடுக்கறதுல என்னடா உனக்கு கேடு?  எனக்கு உன்ன விட அவ தான் முக்கியம்.. வந்து அவகிட்ட  பேசு.. அவ என்ன கேக்குறாளோ! அதை ஓத்துக்கிட்டு  சொல்லிட்டு கிளம்பு.  இல்லையென்றால் நீ அவ முன்னாடி இரு என்று சொல்லிவிட்டு இன்பா சென்றார். 

அடுத்த அரை மணி நேரத்தில் கழித்து ருத்ரன் தன் அன்னையின் அருகில் வந்து கீழே சம்மன்னிட்டு அமர்ந்தான்.

விவேகாவின் கண்ணம் அழுது அழுது கண்களில் நீர் வற்றி போயிருந்தது. 

அம்மா என்று உயிரோட்டமாக அழைத்தான் ருத்ரன். 

விவேகா எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொள்ள.. 

சரிமா நீங்க சொன்ன மாதிரியே உங்க விருப்பப்படி நான் நடந்துக்கிறேன் என்று ருத்ரன் கூற..

நெஜமாவா என்று கண் கலங்கி கொண்டே கேட்டார் விவேகா.

உங்க விருப்பப்படி நீங்க என்ன சொல்றீங்களோ நான் கேட்கிறேன். இப்போ நான் போகவா என்று அவன் சொல்ல வர..

இன்பா அவனது காதை துருக்கி போயிட்டு வரேன்னு சொல்லு நாயே!! என்று அதட்டினார். 

விவேகா இன்பாவின் கையில் ஒரு அடியை போட்டு தட்டிவிட்டு போய்ட்டு வரணும் சரியா!  டெய்லியும் எனக்கு போன் பண்ணனும்! பண்ணுவியா?  என்று கேட்க

கண்டிப்பா பண்றமா என்று கூறினான் ருத்ரன். 

அடுத்த ஒரு வாரத்தில் செலக்சன் ப்ராசஸ் என அனைத்தும் முடிந்து அவனுக்கு ஹிமாச்சல் பிரதேஷ்  பக்கமாக அழைப்பு வந்துவிட்டது இதோ ருத்ரன் கிளம்பி விட்டான். 

நம்முடைய நாயகி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பயிற்சியை ஆர்மி கேம்பில் இருந்து பணியில் ஆரம்பிக்கிறாள். பார்ப்போமே அடுத்து என்ன நடக்கிறது என்று. 

தொடரும்…

EPISODE 162

மாமா எதுல புக் பண்ணிருக்கான்? என கேட்டுக் கொண்டே சத்ய தேவ் இன்பாவின் பக்கம் வந்து அமர்ந்தான். நான் ஃப்ளைட்ல தான் மாப்ளை போக சொன்னேன். நாயி டிரெயின்ல போறான் என கூறினார் இன்பா. 

டிக்கெட் கேன்சல் பண்ணிடுங்க! ரெண்டு ஃப்ளைட்ன்னனா கூட பரவால்ல. அவன் பிளைட்ல போகட்டும் ட்ரெயின்ல வேண்டாம் மாமா என்று கூறியபடியே போனை நோண்டிக் கொண்டே டிக்கெட்டை பார்த்தான் சத்தியதேவ். 

ஏன் என்னாச்சு என்று  இன்பா கேட்க..

சத்தியதேவ் போனை பார்த்துக் கொண்டே ஏன்னா?  இங்க இருந்து இந்த ஒன்றரை வருடமும் ஒவ்வொரு தடவையும் அவன் தான் அந்த பொண்ண கொண்டு போய் வீட்ல விட்டுட்டு கூட்டிட்டு வந்திருக்கான்.  டிராவல் பண்ணும்போது ஒவ்வொரு தடவையும் டிரெயின்ல தான் போயிருக்கான்.  இப்போ மறுபடியும் டிரெயின்ல போனா பழைய ஞாபகம் எல்லாம் வரும் என்று திரும்பிப் பார்த்தான். 

இன்பாவுக்கு பேச்சே வரவில்லை.  உடனே ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணு என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.  சத்யதேவ் புக் செய்து விட்டு திரும்ப.. ரிதம் இரவு பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.  இன்னிக்கு ஒரு நாள் லீப் போடலாமே! நாளைக்கு உன்னோட தம்பி வேலைக்கு போக போறான். கொஞ்சம் வீட்டில் இரேன். 

நான் என்ன உன்ன மாதிரி வெட்டியா சும்மா இருக்கேன் நினைச்சியா? நான் போலீஸ் டா! என்று புருவத்தை ஏற்றி இறக்கியவள்.  நான் வேலைக்கு போய் ஆகணும். எங்க வீட்ல உக்காந்துட்டு இங்க நடக்கிற டிராமாவை எல்லாம் என்னால பார்க்க முடியாது. என்று திரும்பி பார்க்க..

 ருத்ரன்  விவேகா இருவரும் அருகில் அமர்ந்திருந்தார்கள். விவேகா அவனுக்கு அறிவுரைகளையும் அவன் முகத்தைப் பார்த்து கொஞ்சமும் பேசவும், அழுகவும் என ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சி குவியலாக ஒரு பாச படமே ஓடிக் கொண்டிருந்தது. 

போ நீயும் போயி அவன் கூட ஒட்டிக்க.  எப்போ பாரு உன் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருக்கான். என்று  ரிதம் சொல்ல

ஆமா அவன் தான் என் பின்னாடி சுத்திட்டு இருக்கான். உனக்கு தான் என் மேல கொஞ்சம் கூட மரியாதையே இல்லையே! என்று சத்திய தேவ் சொல்ல.. 

உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்?  நீ அப்படி என்னத்த வெட்டி முறிக்க போற? என்று அலட்சியமாக பேசினாள் ரிதம். 

சத்திய தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. சரி சரி இன்னும் எத்தனை நாள் இங்கேயே டெரா போடுறதா யோசிச்சு வச்சிருக்க?  மாமனார் வீட்டில் இருக்கோமேன்னு கொஞ்சமாவது உனக்கு கூச்சம் இருக்கா? இல்லையா?  வந்து இங்கேயே செட்டில் ஆகிட்ட! உனக்கு என்ன ராஜா மாதிரி இருக்க? அப்புறம் எதுக்குடா பெருசா வெட்டி வீராப்பு அன்னிக்கு பேசின? என் காசில் தான் என் பொண்டாட்டிக்கு எல்லாமே செய்வேன்னு ஓவரா அன்னைக்கு பேசின?  அப்போ அதெல்லாம் சும்மா!   பேச்சுக்கு மட்டும் தானா? என்று ரிதம் அவனை கேவலமாக பேசினாள்.

சத்யதேவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..  நாளைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்!  புரியுதா?  இங்கு வந்துட்டு எனக்கு என்னோட ஸ்டேஷன் போறதுக்கு ரொம்ப டயர்டு ஆகிறது.  அதனால நாளைல இருந்து நம்ம வீட்ல இருந்து தான் போறோம். அங்க வந்து சும்மா இருக்கலாம்ன்னு மட்டும் கனவுல நினைக்காத! எல்லா வேலையும் நீ தான் செய்யணும்.  என்னோட யூனிபார்ம் அயர்ன் பண்ணி ஸுவுக்கு பாலிஷ் பண்றதுல இருந்து எல்லாமே பக்காவா ரெடி பண்ற!  நீ என்ன வேலையை வெட்டி முறிக்க போற?  நானும் உன்ன பாத்துட்டு தான் இருக்கேன்! சும்மா தான் இருக்க! போ எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்டு எடுத்து வை என்று அதட்டினாள்.

சத்யதேவ் எதுவும் பேசாமல் கிச்சன் பக்கம் சென்று அவளுக்கான உணவுகள் அனைத்தையும் போட்டுக் கொண்டிருக்க,  அதற்குள் மகி வீட்டுக்கு வந்தார்கள். சத்திய தேவுக்கு பிடித்த சைவ உணவுகள் மற்றும் ரிதமுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் தயார் செய்து எடுத்து வந்தவள். ரிதம் இருக்கியா தங்கம்? என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்.  

அக்கா என எழுந்த விவேகா இருவருக்கும் தண்ணீர் எடுக்க உள்ளே செல்ல, அங்கே சத்ய தேவ் உணவுகளை போட்டுக் கொண்டிருந்தான். சக்தி என்ன கண்ணா பண்ற? 

அது அவளுக்கு பசிக்கிதாம் அதான் மாமி என அவன் சொல்ல வர சட்டென விவேகாவின் கையிலிருந்த நீர் நழுவியது. என்னாச்சு மாமி? என சத்ய தேவ் அருகில் வர, இது சரியில்ல சக்தி அவள் உனக்கு எதுக்கு வேலை சொல்றா? எவ்ளோ கொழுப்பு இருக்கும். இதை இப்படியே விட்டுட்டாத சக்தி! அவளுக்கு திமிர் கூடி போயிடும். உன்னோட கட்டு பாட்டில் அடக்கமா மாத்து டா! என விவேகா வேதனையுடன் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க, சத்ய தேவ் சிரித்த படி அதனாலே என்ன மாமி! அவளுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா! அவள் என் பொண்டாட்டி! அதுவும் போலீஸ் பொண்டாட்டி! எவ்ளோ வேலை இருக்கும் செஞ்சு கொடுக்கிறதுல எந்த சிரமமும் இல்ல. என கூறினான் சத்ய தேவ். 

உண்மையாகவே என் பொண்ணு புண்ணியம் பண்ணிருக்கா! உன்னை மாதிரி ஒரு புருசன் கிடைக்க, என விவேகா கண் கலங்க..  மாமி என்ன இது என சத்ய தேவ் சிரிக்க வைத்தான். 

சக்தி என மகியின் குரல் கேட்க, என் கிட்ட கொடு நான் எடுத்திட்டு வரேன். அம்மா பார்த்தால் என்ன நினைப்பாங்க? என கேட்ட படி தட்டை வாங்கிக் கொண்டார் விவேகா. 

மகி என புன்னகையுடன் வெளியே வந்தான் சத்ய தேவ். ரிதம் சூர்யாவுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள். இங்கே தான் நம்ம வீடும் இருக்கு. நாலு வீடு தள்ளி ஆனால் அது கண்ணுக்கு தெரியல இங்கேயே இருக்க எப்போ பாரு? ஆனால் என் மருமகள் உன்னை மாதிரி இல்ல டெய்லி என் கூட தான் ப்ரேக் பாஸ்ட் டின்னர் தெரியுமா? என கூறினார். 

அது அப்படி இல்ல மாமி! என் அக்காவுக்கு என் மம்மி செய்யர சாப்பாடு பிடிக்காது அதனால் அங்கே வந்துட்டா என ருத்ரன் கவுண்டர் கொடுத்தான். விவேகா வேகமாக சென்று தன் மகனை அணைத்துக் கொண்டார். 

சத்ய தேவ் அவனை கண்டு கொள்ள வில்லை தன் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான். இல்ல மகி அப்படியெல்லாம் இல்ல என உணவை பார்த்தான். இதோ உனக்கு உனக்காக செஞ்சேன் அல்வா புட்டு தங்கம். என எடுத்து ஊட்டி விட்டார். 

சூப்பர் மா! என சாப்பிட்டு கொண்டே ஆமா எங்கே உங்க கூட வால் மாதிரி ஒருத்தன் ஒட்டிட்டு வருவானே? மிதுன்? எங்கே? 

அவன் வசந்தன் தாத்தா வீட்டுக்கு போயிட்டான். என மகி ஊட்டி விட்டுக்கொண்டே கூறினார். அந்த நேரம் சத்ய தேவ்க்கு போன் வர மா வரேன் இருங்க என போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்றான் சத்ய தேவ். 

அண்ணா! என அழைத்தாள் நிலா! 

பிஸியா செல்லம் என சத்ய தேவ் கேட்க, அது கேம்ப்ல இருந்தேன். இங்கே டவர் இஸ்யுன்னா சரி என்ன விசயம் எதுவும் பிரச்னை இல்லையே டூ டைம் போன் வந்திருக்கு? அண்ணா அண்ணி கன்சீவா? என கண்ணகுழி தெரிய சிரித்துக் கொண்டே கேட்டாள் நிலா. 

அப்படி நடந்தால் கண்டிப்பா சொல்றேன். இப்போதைக்கு சான்ஸ் இல்ல என்றவன். இப்போ எங்கே இருக்க? என கேட்டான். 

நான் மாறிகிட்டே இருப்பேன் அண்ணா! எமர்ஜென்சி பொறுத்து shuffle பண்றாங்க.. என்றாள் நிலா. 

சரி ஓகே அது என சத்ய தேவ் கொஞ்சம் தயங்க.. என்ன விசயம் அண்ணா சொல்லுங்க? என நிலா கேட்க.. 

ருத்ரன் அங்கே ஹிமாச்சல்ல பார்டர் எல்லை  BSFல ஜாயின் பண்ணிருக்கான். அந்த பக்கம் கேம்ப் போட்டால் அப்பப்போ உன்னோட கொலிட்ஸ் கிட்ட சொல்லி கொஞ்சம் கண்காணிக்கிறயா? என்றான் சத்ய தேவ். 

நிலாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன அண்ணா சொல்றீங்க? என அதிர்ச்சியுடன் கேட்டாள். Unfortunately ஒரு incident.. சரி அதை விடு நிலா மா! கொஞ்சம் அப்பப்போ பார்த்து எனக்கு ஒரு மெஸேஜ் போடு செல்லம். 

அவனது பேச்சில் தன்னிலைக்கு வந்த நிலா டிரை பண்றேன் அண்ணா! என ஒற்றை வார்த்தையில் முடித்தாள். சத்ய தேவின் முதுகுக்கு பின்னால் காலடி தடம் சத்தம் கேட்க, சரி மா நீங்க பாருங்க என சொல்லிக் கொண்டே திரும்பினான் சத்ய தேவ். 

யாரு மாமா போன்ல என  ருத்ரனின் குரல் வெகு நாட்களுக்கு பிறகு அவளின் செவியில் ஏறி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்தது அவளின் உணர்வுகள். உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டவள். தப்பு நிலா! வேற ஒருத்திக்கு சொந்தமானவர்! அவர் மீனாட்சிக்கு சொந்தமானவர் என மருகிய படி போனை கட் செய்தாள் நிலா. 

நான் யார் கிட்ட பேசினால் உனக்கென்ன? என சொல்லிய படி சத்ய தேவ் நகர.. மாமா என் மேலே இப்போ உங்களுக்கு என்ன கோபம்? என தடுத்தான் ருத்ரன். நீங்க பெரிய ஆள் உங்க கிட்ட என்ன பேச முடியும் மிஸ்டர் ருத்ரன். நகருங்க என சத்ய தேவ் செல்ல.. மாமா என ருத்ரன் பொங்கி வழிந்த அழுகையை கட்டு படுத்திக் கொண்டு பார்த்தான். 

ரொம்ப பெரிய ஆள் கிட்ட பேச பயமா இருக்கு! உங்க முடிவுல எந்த இடத்திலும் நான் தலையிட மாட்டேன். என் வேலையை பார்க்க விடுங்க மிஸ்டர் ருத்ரன். என சத்ய தேவ் கூர் பார்வையுடன் அவனை பார்த்தான். 

சாரி காலில் விழவா என ருத்ரன் பட்டென விழுந்தான். 

டேய் என்ன டா பண்ற? எழுந்திரு? என சத்ய தேவ் அதட்ட.. நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன். நீங்க இப்படி முகத்தை வச்சுட்டு இருந்தால் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? சொல்லுங்க என ருத்ரன் கூற, சரி சரி எழு.. எழு டா என அதட்ட.. 

ருத்ரன் எழுந்து சத்ய தேவை அணைத்துக் கொண்டான். அந்த நேரம் வெளியே வந்த ரிதம் கண்களில் இந்த காட்சிகள் பட.. டாடி! இங்க வாங்களேன் இங்கே பாருங்க இந்த அசிங்கத்தை மாமி! மாமா! அய்யோ அய்யோ என கத்தினாள் ரிதம். 

என்ன? என்ன? என்னாச்சு என அனைவரும் வெளியே ஓடி வர.. அப்பொழுது தான் இருவரும் ரித்தமை பார்த்தார்கள். எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க என்று ருத்ரன் மற்றும் சத்யதேவ் இருவரும் கேட்க நீங்களே பாருங்க இந்த அநியாயத்தை? இந்த சத்தியத்தை இவன கட்டிப்பிடித்து நின்னுட்டு இருக்கான் டாடி என்று ரிதம் சினுங்க..

சத்யதேவ் வேண்டுமென்றே அவர்களின் முன்னால் இப்ப என்ன? அவனை கட்டிப் பிடிச்சது தப்புன்னு சொல்ல வரியா? சரி என்று தன் அம்மா, அப்பா, மாமனார் ,மாமியார், மச்சான் என அனைவரும் இருப்பதை பொருட்படுத்தாமல் அருகில் வர.. 

எங்கடா பக்கத்துல வர?  என்று ரிதம் தள்ளி சென்றாள். உன்னையும் கட்டிப்பிடிக்கிறேன்! வாடிஇஇஇ!! என்று அவர்களின் முன்னால் இறுக்கமாக அணைத்து இடையை கிள்ளினான்.

ரிதம் அப்பட்டமான அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க.. விவேகா சந்தோசத்துடன் தீரா அப்போ உனக்கு இந்த ஆறு மாசத்தில் பொண்ணு பார்த்திடுறேன். என்றார். 

கட்டி பிடிச்சா குழந்தை பிறக்காது மா! என ருத்ரன் கொஞ்சம் காட்டமாக கத்த.. அதில் தன்னிலைக்கு வந்த ரிதம். க்கும் டாடி, மாமி, மாமா நான் டியிட்டிக்கு கிளம்புறேன் என நகர்ந்தாள். 

ஹே நாளைக்கு அவன் ஊருக்கு போறான் இன்னிக்கி இரென் டி! என விவேகா சொல்ல.. அவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? அவன் கூட நான் வளரவே இல்ல.. நான் இறக்கிறத விட நீங்க இருங்க என சென்று விட்டாள் ரிதம். 

எப்படி மாமா இவள் கூட இருக்கீங்க? நீங்க ரொம்ப பாவம் மாமா! என  ருத்ரன் சக்தியிடம் ஒட்டிக் கொண்டான். ரிதம் சொன்னது நடந்து விட்டது. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. விவேகாவின் முகம் ஒப்பு இருந்தது. இன்பா அவளின் அருகில் வந்து நின்று எதுக்கு இப்படி முகத்தை வைத்திருக்கிறாய் இங்க நம்ம ஊர்ல தானே வேலை செய்யப் போறான் அவன் ஃபாரின் போற மாதிரி நீ பில்டப் கொடுக்குற இந்த அக்கறை கொஞ்சமாவது ரிதம் போன நேரத்துல உனக்கு இருந்ததா 

விவேகா சேலையின் தலைப்பால் மூக்கை துடைத்தபடி ருத்ர நலன நான் கைக்கூலியே வச்சு வளர்த்தேன் அந்த ராவடி ஆடுகளியை பறந்து இரக்கப்பட்டு உலகத்தை சுத்தனா அவளை பத்தி எனக்கு கவலை இல்லை அவை எங்க இருந்தாலும் பொழச்சுக்குவா என் புள்ள அப்படியா ஒண்ணும் தெரியாதவன் என்று அழும் நிலைக்கு வந்துவிட்டார். 

ஏய் மனசாட்சி இருக்கா அவன் பத்தாவது படிக்கையில் இருந்து அந்த புள்ளையை லவ் பண்றானா பத்தாவது ஏழாவது பிஞ்சிலேயே பழுத்தது இதுதான் நாட்டுக்கு இப்ப பாரு என்ன விட அவங்க மிஞ்சிட்டான் ஒருவேளை அவன் அந்த வருவனோட ஜீனும் நினைக்கிறேன் உங்க குடும்பத்துல அதிதியை வரும் சின்ன வயசுல இருந்து லவ் பண்ணி இருப்பான் போல என் பையனுக்கும் அதே சீன் வந்துருச்சு உன் குடும்பமே இப்படித்தானா என்று இன்பா அவளை கிண்டல் செய்தார். 

விவேகா பாத்திரத்தை தம் என வைத்தவர் இன்பாவை பார்த்தபடி அது அப்படி சொல்லலாமா? இப்படி கொஞ்சம் வரலாமா சரவணன் சின்ன வயசுல இருந்து சுபா அண்ணி லவ் பண்ண தான் எனக்கு ஞாபகம் கரெக்டா இல்ல கன்ஃபார்ம் பண்ண போன் பண்ணட்டுமா உங்க அப்பாவுக்கு இல்ல ஸ்ட்ரெயிட்டா சரவணன் அண்ணாக்கு போன் பண்ணவா என்று கேட்க இன்பாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போக ஆப் ஆகி கிளம்பி விட்டார். 

விவேகாவின் குமுறல் நீண்டு கொண்டே சென்றது ஒருவேளை அந்த பொண்ணு உயிரோட இருந்திருந்தால் என் பையன் சந்தோஷமா என் கையிலேயே கைக்குள்ளேயே இருந்திருப்பான் இல்ல என்று வருத்தத்துடன் பேசிக்கொணடிருக்க இந்த வாழ்க்கை எதுவும் நம்ம கையில இல்ல நம்மளோட வாழ்க்கை நிறைய அதிசயங்களை வைத்திருக்கு நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது இத பத்தி பெருசா யோசிக்க வேண்டாம் நீ அந்த பொண்ண பத்தி நெனச்சு அவனுக்கும் அந்த நினைப்பு வந்துட போகுது விடு என்று இன்பா கூறினார். 

அந்தப் பொண்ணு அவ்ளோ லட்சணம் தெரியுமா? லட்சுமி கடாட்சம் இப்படி ஒரு அசம்பாவிதம் துருமரனும் உண்மையாலும் அவங்க வீட்ல இருக்குறவங்களுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும் என்று விவேகா அழ ஆரம்பித்தார் ஏன் போதும்டி என்று இன்பா அவளை சமாதானப்படுத்தி கூட்டி வந்தார் அனைவரும் ஏர்போர்ட் செல்ல ருத்ரம் புருவம் சுருக்கி பேச வர டிக்கெட் போட்டாச்சு இரண்டு பிளைட் நீ ஒரே இடத்தில இறங்கி மாற போற அதுதான் கரெக்ட் என்று அவனை ஆப் செய்தார் நான் ட்ரெயின்லதான போறேன்னு சொன்ன எதுக்கு நீங்க அதை கேன்சல் பண்ணீங்க என்று ருத்ரன் சண்டைக்கு வர எத்தனை நாள் போவ அஞ்சு டிராவல் பண்ணுவியா டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன் என்று இன்பா திட்டினார் அது அது வந்து நான் பர்ஸ்ட் டேஸில் தான் புக் பண்ண எதுல போனா என்ன நீ பிளைட்ல போ என்று அகற்றியவர் ஏ சொல்லுடி என்று பயணத்தில் கவனம் செலுத்தினார் சிவன்யா பவன்யா இதழினி ஆத வ் இனியா என அனைவரும் ருத்ரனை சென்ட் ஆப செய்ய வந்திருந்தார்கள் 

வெற்றி இதயன் மிதுன் நிவாஸ் இவர்கள் எல்லாம் வரவில்லை ஏனென்றால் அவர்களுக்கும் ருத்திரனுக்கும் கொஞ்சம் கூட ஆகாது அதுவும் நிவாஸ்மிதும் எதிரிகளைப் போலத்தான் பார்த்துக் கொள்வார்கள் அவர்களுடன் மகி சத்யதேவ் சூரியதேவ் ரிதம் நேராக ஏர்போர்ட் வந்து விட்டாள 

விவேகாவின் கண்கள் சிவந்து கொண்டே இருக்க..  போதும் அழாத! உன்னையும் நான் பார்டர்ல சேர்த்து விடவா?  சமையல்காரியா போயிடு!  உப்புமா செஞ்சு போடு! ஸ்ட்ரெயிட்டா பாகிஸ்தானுக்கு தள்ளிவிடு நேபால் சைனாவுக்கெல்லாம் பார்டர்ல போய் உப்புமாவை காட்டு..  அவங்க ஓடியே போய்டுவானுங்க என்று இன்பா கிண்டலடிக்க..

ருத்ரன் நேராக தன் அம்மாவின் அருகில் சென்று தோள்பட்டையை பிடித்துக் கொண்டவன்.  நெற்றியில் முத்தம் பதித்து கட்டி அணைத்துக் கொண்டான். 

தீரா வேண்டாண்டா என்று சொல்ல.. 

இல்லம்மா எனக்கு ஒரு சேஞ்ச் வேணும் நான் போயிட்டு வரேன் என்று உறுதியாக கூறினான். 

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போக மகி விவேகாவை கொஞ்சம் தேற்றினார். உள்ளே போர்டிங் பாஸ் எடுக்கும் நேரம் வர..  ரிதம் அவன் கையை குலுக்கி எதையும் நினைச்சுக்காத!  பெருசா நீ ஓவர் திங்க் பண்ணாத! லவ் பேயிலியர் எல்லாம் பெரிய விஷயம் இல்ல!  எனக்கு எத்தனை லவ் ஃபெய்லியர் நடந்திருக்கு தெரியுமா? என்னை அத்தனை பேர் லவ் பண்ணாங்க! என்று ரிதம் அறிவுரை கூற..

சத்தியதேவ் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். ருத்ரன் தன் அக்காவை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க..  இதழினி அழுது கொண்டே ஒரு பக்கம் நின்றிருந்தாள்.

எதுக்குடி இப்போ அழற? என இதழினியின் அருகில் வர.. 

இல்ல நீ இப்படி தூரமா போறியே எப்ப உன்னை பார்க்கிறது என்று கேட்க..

வீடியோ கால் போடுடி உன்ன பாத்துக்கிறேன் என்று ருத்ரன் கூறினான். 

சரி போயிட்டு வா என்று அவன் கையில் ஒரு டைரி மில்க் சாக்லேட் கொடுத்தாள். வாங்கிக் கொண்டவன்.  எனக்கு ஒரு ஹக் குடுக்க மாட்டியா?  என்று கேட்க பிராடு என்று கட்டிக் கொண்டாள்.அவன் பார்வை இன்னொரு ஆளை தேடினான். யாரை டா தீரா தேடுற? என இதழ் கேட்க.. 

இல்ல பவா! என சொல்லி முடிப்பதற்குள் பூங்கொத்துடன்  வந்தாள்.  பவாஆ! என்று கண்கள் மின்ன ருத்ரனின் பார்வை அவள் மீது சென்றது.  பவன்யா ஓடிச் சென்று ருத்ரனை அணைத்து கொண்டே.. இப்படி இருக்காத ருத்ரன் எப்போவும் சிரிச்சிட்டே இருக்கணும். என உண்மை பாசத்துடன் கூறினாள்.

Try பண்றேன். என ருத்ரன் அவளின் கையை பிடித்த படி கூறினான். 

இனி நமக்கு எல்லாமே நல்லா தான் நடக்கும். நீ எதை பத்தியும் கவலைப்படாதே! என்று ஆறுதலாக பேசினாள். 

உன்னை மிஸ் பண்ணுவேன் பவா என்று கைகளைப் பிடித்துக் கொண்டான். 

கவலைப்படாம தீரா போய்ட்டு வா என்று வழி அனுப்பினான். இனியா டாட்டா அண்ணா என கூற..   அனைவரிடமும் விடை கொடுத்தவன்.  நேராக இன்பாவிடம் வந்து தலையைத்தான். 

போயிட்டு வரேன்னு சொல்லுடா என்று காதை திருக வர..

போயிட்டு வரேன் என்று முகத்தை சுருக்கி கொண்டே கூறினான். 

சத்யதேவ் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க மாமா என்று கண்ணீருடன் கட்டிக் கொண்டான். 

ரிதமுக்கு தான் எரிச்சலாக வந்தது.  பேசாம நான் ருத்ரனா பொறந்து இருக்கலாம்?.அப்பவாச்சும் அவனோட பாசம் மொத்தமா எனக்கு கிடைத்திருக்கும் என்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டாள் ரிதம். தம்பி மேலயே பொறாமை.

சத்தியதேவ் அவனது கழுத்தைப் பிடித்து போயிட்டு பத்திரமா திரும்பி வர புரியுதா? சரி நான் திரும்பி வரது இருக்கட்டும்.  நேத்து அம்மா சொன்னது நினைப்பு இருக்கா?  சீக்கிரம் பிராசஸ் பண்ணிடுவீங்களா என்று கேட்க..

டேய் நான் உன் மாமா டா! நீ என் மச்சான்!  அவ  அக்காடா!!

ஆமா நான் உங்க மச்சான் தான்.  நீங்க இன்னும் ஹரிணியே நினைச்சுட்டு இருக்காதீங்க!  எங்க அக்கா கூட வாழ பாருங்க!  நான் அவளோட தம்பியா பேசிட்டு இருக்கேன் என்று பொறுப்பாக பேசினான் ருத்ரன். 

அடேங்கப்பா பொறுப்பு பருப்பு போயிட்டு வாடா என்று சத்தியதேவ் வழி அனுப்பினான்.சரி மாமா என்று அனைவருக்கும் விடை கொடுத்தவன். 

மீண்டும் ஓடி வந்து விவேகாவை மீண்டும் ஒருமுறை கட்டி அணைத்துவிட்டு கிளம்பினான். 

பனி பிரதேசத்துக்கு..  பணி சிலையை பார்க்க..  பார்ப்பானா?  பார்க்க மாட்டானா? காலம் தான் பதில் சொல்லும். 

வருவான். 

EPISODE 163

சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கதவை திறந்ததும் சோர்வுடன் ஷூவை மூலைக்கு ஒரு பக்கம் உதறி விட்டவள்  போனை நோண்டியபடி  சாக்ஸ்சை கழட்டி விட்டு அதையும் அதே போல தூக்கி எரிந்தவள். பெல்ட் கழட்டி சோபாவில் வீசி விட்டு அப்படியே படுக்கை அறை பக்கம் சென்றாள். 

“ரிதம் நில்லு!” என கர்ஜனையான குரல். வேறு யார் சத்ய தேவ் தான். 

என்ன என்று தெனாவட்டாக ஒரு பதில் கொடுத்தாள். 

என்ன பண்ணி வச்சிருக்க? ஷூ ஒரு பக்கம்! சாக்ஸ் ஒரு பக்கம்! பெல்ட் ஒரு பக்கம்ன்னு நீ பாட்டுக்கு வீசிட்டு போற? என்ன பழக்கம் இது? என அவளிடம் கேள்வியாக கேட்டான் சத்ய தேவ். 

அப்படியா என அனைத்தையும் பார்த்தவள். சரி எல்லாத்தையும் க்லீன் பண்ணிடு! நாளைக்கும் ஷூ பாலிஷ் பண்ணி வச்சிடு யூனிபார்ம் ரெண்டையும் வாஸ் பண்ணிடு டெய்லி எனக்கு ப்ரெஸ் வேணும்! என அவளின் நீல நிற தொப்பியை டிவியின் முன் வைத்து விட்டு சென்றாள். 

உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க?  இதெல்லாம் உன்னோட வேலை!  இத எதுக்கு நான் செய்யணும்? என்று சத்திய தேவ் கேட்டான். 

உனக்கு அதைவிட முக்கியமான வேலை, வேற ஏதாவது இருக்கா?  என்ன வெட்டி முறிக்கிற வேலை?  நீ சும்மா தான இருக்க? எடுத்து செஞ்சா என்னடா குறைஞ்சு போயிடுவியா?  என்று அதட்டலுடன் கூறினாள் ரிதம். 

அப்படி பாத்தா பயந்துடுவேனா?  போ!!  எல்லாத்தையும் எடுத்து வை!  எனக்கு  காலைல டிபன் வேணும்! இட்லி, சாம்பார், சட்னி அதுவும் ரெண்டு சட்னி வேணும். என ஆர்டர் போட்டுவிட்டு அறைக்குள் புகுந்து லாக் செய்து கொண்டாள்.

சத்யதேவ் வந்து கொண்டே அந்த இடத்தை பார்த்தவன் ஷூ இரண்டையும் ஒரு ஓரமாக எடுத்து வைத்துவிட்டு சாக்ஸ் மற்றும் பெல்ட் என அனைத்தையும் அது அது இருக்கும் இடத்தில் சரியாக வைத்தவன்.  அழுக்கு சாக்ஸ் செய்யட்டு அடுக்கு கூடையில் போட்டுவிட்டு,  அவள் சொன்னது போல யூனிபார்மை சரி செய்து வாஷிங்மெஷினில் போட்டான். 

 முக்கால் மணி நேரத்தில் அவள் சொன்னது போல அனைத்தையும் செய்து முடித்தான். சைவத்தில். மகி ஏற்கனவே மாவு கரைத்து கொடுத்து அனுப்பி இருந்தார்.  அது இட்லி செய்து கெட்டி சட்னி , தேங்காய் சட்னி இன்னொன்று தக்காளி சட்னி அனைத்தையும் கமகமவென்று தயார் செய்துவிட்டு, அவளின் அறையை தட்டினான். 

என்னடா எதுக்கு இப்ப கதவை தட்டின?. என்று ரிதம் கேட்க..  நீ சொன்னது போல எல்லாமே ரெடி!!  வந்து சாப்பிடு என நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டே கூறினான். என்ன என்று ஹெட் போனை எடுத்துக் விட்டு கேட்டாள். 

சமைச்சுட்டேன் எல்லாமே ரெடியா இருக்கு வந்து சாப்பிடுன்னு சொன்னேன் என்று சத்திய தேவ் கூறினான். 

அப்படியா சரி இரு வரேன் என்று அவள் வெளியே வந்தாள்.  டீசன்டாக அவளது உடை இருந்தது. ஏனென்றால் அவனது பார்வை எக்கு தப்பாக பட்டு வேறு ஏதாவது அவன் தன் மேல் பாய்ந்து விட்டால்? என்ன செய்வது? என்று கவனமாக இருந்தால் அவளது உடையில். 

சத்ய தேவ் கைகளை துடைத்துக்கொண்டே அவனுக்கான தண்ணீரை எடுத்து வரும் ஒரு சிலமணி துளியில் ஹே எங்க டா போன?  என்று மீண்டும் அதட்டினாள். 

என்ன ஆச்சு என்று கேட்டபடியே சத்யதேவ் வெளியே வந்தான். 

நீ பாட்டுக்கு வெச்சிட்டு போயிட்ட!  இதையெல்லாம் யாரு சர்வ்வ் பண்றது? ஒழுங்கா எனக்கு பரிமாறு என்று முறைத்துக் கொண்டே கூறினாள். ஒரு பெருமூச்சு விட்டவன் அதையும் அவளுக்கு செய்தபடி அருகில் அமர்ந்து உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டான்.  இதில் இருப்பது அனைத்தும் ஆர்கானிக் ஃபுட்ஸ்.  அதனால் அவன் அனைத்தையும் சாப்பிடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. 

சரியாக சத்யதேவ் பிளேட்டில் கை வைக்கும் நேரம் கதவு காலிங் பெல் அடித்தது.  ஹே என்ன? என்ன பாக்குற? போய் கதவை திற! போ! என்று அதற்கும் அதட்டினான். ஒன்றும் சொல்லவில்லை சத்யதேவ் ரிதம் மனதில் என்ன ரொம்ப அமைதியா இருக்கான்? பின்னாடி எதுவும் பண்ணட்டும்!  இதே சாக்கா வச்சு நான் மாமி வீட்டுக்கு போயிடுவேன்! அங்கே அவனால என்னை எதுவும் பண்ண முடியாது. என்ற மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள் ரிதம்.  அதையும் பார்க்கலாமே!  அடுத்து என்ன நடக்கிறது? என்று. 

கதவை திறந்ததும் அங்கே சோனியா மற்றும் சோனாலி இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.  கிட்டத்தட்ட அவர்கள் இருவரையும் அவன் டேராடூனில் பார்த்தது.  இப்பொழுதுதான் பார்க்கிறான்.  இருவரையும் பார்த்து  என்ன இந்த பக்கம்?  என்று புன்னகையுடன் கேட்டான். 

யார் அது என்று ரிதம் கடுமையாக கேட்க..  உள்ளே வாங்க என இன்முகத்துடன்  சத்திய தேவ் அழைத்தான். யாரது என இட்லியை பிட்டபடி ஒரு வாய் வைத்தவளுக்கு அப்படியே கோபம் மூக்கு புடைக்க வந்தது. வாங்க மா சாப்பிடுங்க. என அவர்களை அழைத்தான் சத்ய தேவ். 

ஹாய் ரிதம்! என இரு பெண்களும் கை அசைத்தார்கள். ம்ம் எதுக்கு வந்தீங்க? என வெடுக்கென கேட்டாள் ரிதம். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. சும்மா சொன்னேன். என பற்களை கடித்தபடி கூறினாள். 

சோனியா மற்றும் சோனா இருவரும் அதே இடத்தில் நிற்க, வாங்க உங்களுக்கும் இருக்கு. இட்லி ரெண்டு சாப்பிடுங்க! என இருவருக்கும் தட்டில் வைத்து அவர்களை அழைத்தான். ஓகே சார் என இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். 

ஒரு வாய் பிட்டு வைத்தவர்கள். சார் வேற லெவல் நீங்க ரொம்ப லக்கி பெல்லோ ரிதம் சூப்பரா சமைக்கிரா! என மனம் விட்டு அவர்கள் பாராட்ட, ரிதம் அவர்களின் முன் சீன் போட வேண்டும் என்ற முனைப்பில் இதை சமைச்சது மிஸ்டர் சத்ய தேவ் தான் உங்க கிரெடிட்ச அங்கே கொடுங்க என கூறினாள். 

சோனா மற்றும் சோனாலி ஒருவரை பார்த்தபடி நீ ரொம்ப கொடுத்து வச்சவ நாங்க மிஸ் பண்ணிதோம் என்றார்கள். சத்ய தேவ் சிரித்த படி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே! நான்  வீகன் அதனால் சைவம் எல்லாம் சூப்பரா பண்ணுவேன். என சமாளித்து சாப்பிட்டான் சத்ய தேவ். 

நாங்க நாங்க கூட சைவம் தான் சார்! ஆனால் என்ன பண்றது? என பெரு மூச்சுடன் சத்ய தேவை பார்த்தார்கள். ரிதம் அவர்களின் பார்வையை அப்படியே கழுகு போல உள்வாங்கினாள். சத்ய தேவ் மீது பார்வை சென்றது. அவனது ஆறடுக்கு வயிற்று படிகட்டு அதன் கூடவே முறுக்கி கொண்டு நிற்கும் புஜங்களை அழகாக எடுத்துக் காட்டியது அந்த கை இல்லாத பனியன். உள்ளுக்குள் எரிமலை தகிக்க ஆரம்பித்தது. 

ரிதம் கொடுத்து வச்சவ லக்கி பெல்லோ! நாங்க expect பண்ணவே இல்ல. எப்டி சார் உங்களுக்கு மேரேஜ் ஆச்சு? என சோனா மற்றும் சோனாலி இருவரும் கேட்க, ரிதம் இட்லியை பிசைந்தாள். கோபம் பீரிட்ட படி வந்தது. அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த சத்ய தேவ் என்னாச்சு எதுவும் வேணுமா? போட்டு வரவா! என கேட்டான். 

இல்ல வேணாம் என ரிதம் எழுந்து சென்று கை கழுவ.. unexpected ஆ மேரேஜ் நடந்து போச்சு இன்வைத் பண்ண முடியல மா என புன்னகையுடன் கூறியவன் இன்னொரு இட்லி வச்சுக்க சோனியா என பாத்திரத்தை காட்டினான். அவளும் வைத்துக் கொண்டாள். சோனாலி அந்த சட்னி ரொம்ப பிடிச்சிருக்கா இன்னும் போட்டு சாப்பிடு மா என இருவரையும் ஒரே போல டீர்ட் செய்தான். ஒரு வாழை பழத்த்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள். அவர்களின் பேச்சை கவனித்தாள். 

சோனா மற்றும் சோனாலி இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்துக் கொள்ள.. எதுவோ என் கிட்ட சொல்ல வரீங்க ஆனாலும் ட்வின் கேர்ள்ஸ் நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டா எனக்கு எப்படி தெரியும் என இருவரை பார்த்தும் கேட்டான் சத்ய தேவ். 

இருவரும் மவுனமாக நாங்க ரெண்டு பேரும் உங்களை.. உங்களை பிடிக்கும் சார் ரொம்ப.. என ஒரே போல சொல்ல கைகளை இறுக்கி மடக்கினாள் ரிதம். சத்ய தேவ் அதை சாதாரணமக்கும் பொருட்டு எனக்கும் பிடிக்கும் மா நீங்க ரெண்டு பேரும் சிங்க பெண்கள். ஃபர்ஸ்ட் அட்டம்ட்ல பாஸ் பண்ணி இப்போ கெத்தா போஸ்டிங் ல இருக்கிறது நம்ம ஊருக்கு பெருமை என கூறினான் சத்ய தேவ். 

அது வந்து பெர்சனல்லா உங்களை எங்களுக்கு பிடிக்கும். நாங்க expect பண்ணவே இல்ல உங்களுக்கு மேரேஜ் ஆகும்ன்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து புரோபோஸ் பண்ணி அதுல நீங்க யாரை செலக்ட் பண்ணாலும் இன்னொருத்தர் விட்டு கொடுக்கிறதா இருந்தோம்..  சாரி ரிதம் எங்களுக்கு இதை எக்ஸ்பிரஸ் பண்ண தோணுச்சு. என இரு பெண்களும் ஒரே போல சொல்ல சத்ய தேவ்க்கு முதுகு தண்டு சில்லிட்டது பனிமலை போல முகத்தை வைத்திருக்கும் ஒருத்தியின் உள் உறங்கும் எரிமலை தகித்து கொண்டிருப்பதை உணர்ந்தான். 

வேறு யார் ரிதம் தான்! 

சத்ய தேவ் அதை இயல்பாக்கும் பொருட்டு புன்னகையுடன் அவர்களிடம் பேச தடுமாறியவன் அப்படியே நீங்க சொன்னாலும் நான் அக்சப்ட் பண்ணிருக்க மாட்டேன். 

ஏன் என இரு பெண்களும் கேட்க.. சத்ய தேவ் புன்னகையுடன் இது தப்பு! உங்க பாண்ட் மாறிடும்! அதை விட எனக்கு உங்க மேல அந்த மாதிரி ஒரு தாட் இல்ல.. அதே போல ரிதம் மேலே இருக்க பார்வை உங்க மேல எனக்கு இருந்ததில்லை என கூறினான் சத்ய தேவ். 

அதில் இரு பெண்களும் அதிர்ந்து ஆர்வத்துடன் அவனை பார்த்தார்கள். ஆனால் புரிய வேண்டியவழுக்கு விசயம் புரிய வில்லை. கோபம் கண்ணை மறைக்க மூளை செய்யலிலந்து போனது. அவன் என்ன பேசினான் என ரிதம் காதில் விழ வில்லை. முழுக்க முழுக்க கோபம் ஆத்திரம் அகங்காரம் என மொத்தமும் தகித்துக் கொண்டிருந்தது. 

சோனா மற்றும் சோனாலி இருவரும் அவனை இமை வெட்டாமல் பார்த்தார்கள். இது unexpected ஆ இருந்தாலும் கடவுள் நினைச்ச விசயம். அதை முழுசா நம்பி அது கூட டிராவல் பண்றேன். என்னைக்கும் இதுல இருந்து மாற மாட்டேன். அண்ட் உங்களை பாராட்டியே ஆகணும் மனசுல பட்ட விசயத்தை வெளிப்படையா சொல்ல ஒரு தைரியம் வேணும். கூடிய சீக்கிரம் உங்க மேரேஜ் இன்விடேஷன்க்கு வெயிட் பண்றோம் நானும் ரித்தமும் என்றான் கைகளை துடைத்த படி. 

உங்களை மாதிரி ரெண்டு பேரை கண்டு பிடித்து நானும் சோனாவும் கட்டிப்போம் சார். ரிதம் ரொம்ப கொடுத்து வச்சவ லக்கி பெல்லோ என இருவரும் கூறி விட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு சென்றார்கள். வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவர்களை அனுப்பி வைத்தவள். கோபத்துடன் அவன் பக்கம் திரும்பினாள். 

சத்ய தேவ்..? 

சிவன்யா பரபரப்புடன்  ஆபிஸ் செல்ல டாக்சிகாக காத்திருக்க, சீறிக் கொண்டு வந்த கார் அவளின் அருகில் நின்றது. காரின் எண்ணை பார்த்ததும் அதே அலட்சிய பார்வையுடன் கார் கண்ணாடியை பார்த்தாள். மாஸ்க் மனிதன் கண்கள் சிரிக்க என்ன தாருணிகா இந்த பக்கம்? என கேட்டான். 

குட் மார்னிங் சார் இங்கே பெர்சனல் ஒர்க் அதான்! என கூறினாள். 

வாங்களேன் போலாம். 

இல்ல சார் எனக்கு! நீங்க போங்க நான் வரேன் என சிவன்யா சொல்ல.. வாங்க தாரு என சைத்து அழைத்தான். 

ஒரு பெரு மூச்சுடன் காரில் ஏறியவள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே லாக் செய்தாள். சைத்து வேலையை பற்றிய விவரத்தை கேட்பதற்கு முன் பாஸ் இன்னிக்கி ஸ்கெட்யுள் உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன் அதுல எதாவ்து change பண்ற மாதிரி இருந்தால் சொல்லுங்க மாத்திடுவோம் என்றாள் வேலை முனைப்புடன். 

இண்டஸ்ட்ரீஸ் விசிட் பண்ணனும்! என அவன் சொல்ல.. லாஸ்ட் add பண்ணிறுக்கேன் நேரத்தை மாத்திடவா? என கேட்டாள் சிவன்யா. 

எப்படி தாரு இவளோ க்லவரா இருக்கீங்க? நீங்க தான் என்னோட பிரயினுக்கு ஏத்த மாதிரி அதே டியோனொட ஒர்க் பண்றீங்க? எனக்கு அதிக பட்சமா ஒரு மூணு மாசம் தான் P.A இருப்பாங்க அதுக்கு மேலே அவங்களால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் நீங்க க்லவர் மா! என்றான் பாராட்டும் தொனியில். 

சரியா நம்ம வேலையை செஞ்சா போதும் பாஸ்! எந்த ரெக்கம்ன்டேசனும் தேவையில்லை தடுமாரவும் அவசியம் இல்ல. இங்கே நான் வந்தது வேலை செய்ய தான். சோ அதை சரியா செய்யறேன் என்றாள். 

அவளை சைத்துவால் மெட்ச்சாமல் இருக்க முடிய வில்லை. பாஸ் இன்னொரு விசயம்? 

சொல்லுங்க தாரு!! 

அது அன்னிக்கு உங்களை கொல்ல முயற்சி பண்ண கும்பலை பிக் பண்ணியாச்சா? என கேட்டாள். 

இல்ல மா! ஆனால் எனக்கு அது யார்ன்னு தெரியும். என்றான். 

அதற்கும் மேல் சிவன்யா எதுவும் கேட்க வில்லை.  அந்த உயர்ந்த அடுக்குமாடி கட்டிடம் வந்து விட்டது. சிவன்யா இறங்க போக..

தாருணிக்கா என அழைத்தான் சைத்து. 

சொல்லுங்க சார்! என சிவன்யா திரும்ப, சட்டென அவனது முகத்தில் இருக்கும் மாஸ்கை கலட்டியவன் நான் தான் சைத்ரேஷ்வரன் என்றான். 

ஓ!! என்றாள் அவ்வளவு தான் அவளது அதிக பட்ச பாவனை. 

உனக்கு சாக் இல்லையா? என சைத்ரேஷ்வரன் கேட்க.. சிவன்யா மென்மையாக சிரித்த படி இதுல சாக் ஆக என்ன இருக்கு? நான் உங்க ஒர்க்கர். இது உங்க பெர்சனல் இதை என் கிட்ட ஷோ பண்ணனும்னு அவசியம் இல்லை. ஆனாலும் நீங்க பண்ணிருக்கீங்க அதுக்கு காரணம் future ல உங்களுக்கு செக்யூரிட்டி பற்பஸ்க்காக இருக்கலாம் அப்டின்னு தோணுச்சு என professionalலாக பேசினாள் சிவன்யா. 

மென்மையாக புன்னகைத்த சைத்ரேஷ்வரன். அவளை பார்த்த படி நீங்க ரொம்ப ஸ்மார்ட் மா! அதையும் தாண்டி உங்க பிரயின் நல்லா யோசிக்கிது. Admired பண்ணாமல் இருக்க முடியல. Professional கூடவே உங்க கிட்ட சொல்ல தோணுச்சு. அதிகமா உங்க கூட தான் டைம் ஸ்பெண்ட் பண்றேன். எனக்கு independent தேவை படுது அதுக்கு தான். இப்போ உங்க முன்னாடி மாஸ்க் இல்லாம இருக்கலாமே! என்றான் நம்பிக்கையாக. 

ஓகே சார் என ஒற்றை பதிலுடன் முடித்துக் கொண்டாள் சிவன்யா. 

அவளை பார்க்க அவனுக்கு புதிராக இருந்தது. அதற்குள் இதழ் தேனிடம் இருந்து மெஸேஜ் வர இன்னும் குஷி ஆகி போனான் சைத்ரேஷ்வரன். இப்பொழுது தாருணிகாவில் இருந்து துவாரகா வந்து மூளையையும், இதயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டாள். 

Meet பண்ணலாமா டி! உன்னை பார்த்து கிட்ட தட்ட மாசத்துக்கு மேலாகுது! இதுக்கு மேலே தாங்காது! இப்போவே பார்க்கணும் தாரு என சொன்னவன் நாக்கை கடித்தபடி துவாரகா என கூறினான். 

இன்னிக்கு முடியாது! யாரது தாரு? என தெரிந்து கொண்டே தெரியாதது போல கேட்டாள் இதழ்.

என்னோட P.A செம்ம க்லவர் தெரியுமா என்றான் சைத்து. ம்ம் தெரியுமே என புன்னகைத்தாள் இதழ். 

எப்படி? இது வரை உன் கிட்ட அந்த பொண்ணை பத்தி நான் சொன்னதே இல்லையே! என்றான் சைத்து. 

அது உங்க கூட இருக்கவங்க எல்லாருமே அறிவாளி தான் என்றாள் சமாளிக்கும் விதமாக. ஆமா அதுல ஒரு ஆள் மட்டும் தான் கொஞ்சம் தத்தி! 

யாரது? 

இப்போ என் கிட்ட போன் பேசிட்டு இருக்க ஆள் தான் என்றான் சைத்து. 

சரி நீங்க பாருங்க நான் வைக்கிறேன் என அவள் கட் செய்ய. போக. 

மேடம் எந்த விசயத்துல தத்தின்னு தெரிஞ்சுக்காம போனால் எப்படி? என்றான் கிண்டல் தொனியில். 

சொல்லுங்க தெரிஞ்சிக்கிரேன் என அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. 

சைத்து சிரித்தபடி.. என்னை கட்டி அனைக்கும் விடயத்தில் கொஞ்சம் தத்தி, என் உதட்டோடு ஒட்டி இருக்கும் நேரத்தில்.. அப்புறம் கண்ணம் உரசும் போது நான் எதை எதிர்பார்ப்பேன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரியும் நடிக்கிற தத்தி  என்றான். அவளின் பதிலுக்காக..

இதழ் அவனை நினைத்து சிரித்தபடி இந்த முறை பாருங்க உங்கள எப்படி கவுக்குரேன்னு என்று நினைத்தவள். ஆமா இப்ப கூட என்கிட்ட பேசிட்டு இருக்கனால!  இந்த தத்தி உங்களுக்கு ஒட்டிகிச்சு  ட என்று கூறினாள்.

என்ன புரியவில்லையே என்று சைத்ரேஸ்வரன் கேட்க 

ஆமா இனிமே என்கிட்ட எதுவுமே கிடைக்காதுன்னு தெரிஞ்சுக்காம இருக்கிற நீங்களும் ஒரு தத்தி!  இனிமே முத்தா கிடையாது.  கொஞ்சம் கிடையாது.  என் மடியில எங்க படுத்துப்பீங்களா தலையை கோதி விடுட்ரீன்னு சொல்லுவீங்களே!  இனிமே அதுவும் கிடையாது. எதுவுமே கிடையாது இன்னைக்கு மீட்டிங் கேன்சல்…போடா  போடா சைத்து என்று ஃபோனை வெடுக்கென கட் செய்தாள்.  

சைத்ரேஸ்வரன் மீண்டும் அவளுக்கு அழைத்து சமாதானப்படுத்த சரி உண்மையாகவே இன்னைக்கு பார்க்க முடியாதுங்க என்று சிரிங்கினால் என்ன ஆச்சு என் கேட்க இன்னைக்கு அப்பா கூட கொஞ்சம் வெளியே போகணும் நம்ம செவ்வாய்க்கிழமை பார்க்கலாம் முருகன் கோவில் கிட்ட உங்களுக்கு ஓகேவா என்று கேட்டால் ஒரு அக்கியு லவ் யூ என்று அவன் கேட்க.. மிஸ் யூ! லவ் யூ! ஹக் யூ!  என்று கூறினாள் வரிசையாக…

நானும் உன்னை டைட்டா ஹக் யூ என சொல்லி போனை வைத்தான் சைத்து. 

விரல்களில் இருக்கும் நெயில் பாலிசை ரிமூவர் கொண்டு எடுத்தபடி அமர்ந்திருந்தாள் ஹரிணி. அவளின் அருகில் வந்து அமர்ந்து அதை அவளுக்கு செய்யும் பொருட்டு பிடுங்கினான் நிதின். 

விடு நிதின் என அவள் அவனிடம் மல்லு கட்டிட.. 

உனக்கு என்ன பிரச்னை என கேட்டான் நிதின். 

ஒன்னும் இல்ல என்று சொன்னவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 

கிளம்பு போலாம் இப்போவே? என்றான் நிதின். 

எங்கே எதுவும் பார்ட்டி இருக்கா? என ஹரிணி கேட்க.. 

முக்கியமா ஒரு இடத்துக்கு போகனும்! இப்படியே உன்னோட முகத்தை பார்க்க சகிக்கல! வா போலாம். என்னை பக்கத்திலயும் விட மாட்ற அதையும் மீறி வந்தால் கடைசி நேரத்துல ஒன்னும் நடக்க மாட்டிக்குது. நான் இன்னும் கன்னி பையனா இருக்கேன் டி! அது உனக்கு புரியுதா? என்றான் ஏக வருத்தத்துடன். 

அப்போ நீ வேற கல்யாணம் பண்ணிக்க! என அழுது கொண்டே கூறினாள் ஹரிணி. 

உன்னை கடிச்சு தின்றுவேன் ஒழுங்கா வா! கிளம்பு போலாம்! 

எங்கே? 

ஹான் ஹனிமூன் என்றான் நிதின். ஆனால் அவன் ஹரிணியை அழைத்துச் சென்றது மகி வீட்டுக்கு. சூர்யாவிடம் பேசி ஹரிணியை ராம் கீதாவிடம் பேச வைத்தால் தான் அவள் தன்னுடன் சேர்ந்து வாழ்வாள் என தோன்றியது. 

“தேன் நிலா” நீங்க சொன்ன நேம் என்ன? என கேட்டார் அந்த ஆபிசர். 

ருத்ரன் டாட் நேம் இன்ப ராகவன் என கூறினாள் நிலா. 

ஹான் அவங்க வந்தாச்சு? இப்போ டிரெய்னிங் பீரியட் ஸ்டார்ட் ஆக போகுது அதுக்கு முன்னாடி வெனா நீங்க மீட் பண்ணிட்டு வந்துடுங்க என்றார் ஆபிசர். 

இல்ல பார்க்க வேணாம்! சும்மா ஜஸ்ட் கேட்டேன் என கடந்து சென்றாள். தேன் நிலா என்னும் நிலா. 

ருத்ரன் சேர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டான். 

பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று. 

தொடரும்

EPISODE 164

சோனா மற்றும் சோனாலி இருவரும் சென்ற அடுத்த நொடி சத்யதேவ் ஒருவித பயத்துடன் பின்னால் திரும்பி பார்த்தான்.  ரிதமின் முகம் சட்டென மாறிப்போனது. அவளது மனதில் இப்போ நம்ம கோபப்படனுமா?  இவன் கிட்ட நாம எதுக்கு கோபப்படுற மாதிரி தெரிஞ்சா? இவன் ரொம்ப ஓவரா சீன் போடுவானே!! என கைகளை இறுக்கி மூடி கோபத்தை கட்டுபடுத்த நினைத்தாள். அவ்ளோ என்னை லவ் பண்ற?  லவ் பண்ற? அப்படின்னு நம்பள கிண்டல் பண்ணுவான். ஆனாலும் அந்த ஆடுகாளிங்க… மிம் வந்து என் முன்னாடி ரெண்டு பேரும் ஜோடி போட்டுட்டு கல்யாணம் பண்றேன்னு சொல்றாளுங்களே! லவ்!! ச்சீ கெட்ட வார்த்தை! எவ்வளவு கொழுப்பு இருக்கும்?  என்று நினைத்தவள்.  வெடுக்கென திரும்பினாள். 

ரிதம்!! என அழைத்தான் சத்ய தேவ். எனக்கு ரொம்ப தூக்கம் வருது! என்னை டிஸ்டர்ப் பண்ணாதே! என வேகமாக நடந்தாள் அறையை நோக்கி. 

சோனா சோனாலி ரெண்டு பேரும் எந்த ஸ்டேசன்? என கேட்டான் அவளை நிறுத்தும் பொருட்டு. 

எவ்ளோ ஏத்தம் f* you damit, you புல்ஷிட் என வாய்க்குள் முணகியவள் கோபத்துடன் திரும்பி பார்த்தாள். 

ஆமா உன்னோட  நுனி மூக்கு சிவந்து வேர்த்து இருக்கே angry யா இருக்கியா? Anything problem? ரிதம் என அவளின் வாயை கிலறினான் சத்ய தேவ். 

நா.. நானா? நான் எதுக்கு கோபமா இருக்கணும்? அதுக்கு என்ன அவசியம்? நான் ந.. நல்லாருக்கேனே! என அவனுக்கு முன் அமர்ந்தவள். நான் நல்லாருக்கேன்? எனக்கென்ன கோபம்? பாரு டீவி பார்க்கிறேன். என அமர்ந்து பாட்டை போட்டாள். அவளின் நேரமோ அவனின் நேரமோ வெகு பொருத்தமாக இருக்க முதல் பாடல் உன்னோட புருஷனாக வேலை போட்டு கொடு எனக்கு கூலி கூட தேவையில்லை சரவணா படத்தில் இருந்து என் தலைவன் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. 

சத்ய தேவ் அவளை பார்த்துக் கொண்டே அருகில் அமர்ந்தான். ரிதம் கால் மேல் கால் போட்ட படி கோபத்துடன் எழன புன்னகையுடன் அவனை பார்த்தாள். பாட்டு நல்லாருக்கு தான! இந்த பாட்டு! என்றாள். 

அவ்ளோ நல்லா இல்ல என்றான் சத்ய தேவ். ரிதம் கைகளை முறுக்கிய படி அப்புறம் என்னை டைவர்ஸ் பண்ணிட்டு பேசாம இவழுங்க ரெண்டு பேரையும் கட்டிக்கோயேன். உனக்கும் என் கிட்ட இருந்து விடுதலை கிடைக்கும். என்றாள் தீவிரமாக.  

ஏன் திடீர்னு இப்படி ஒரு யோசனை? என கேட்டான் சத்ய தேவ். அவளுங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்களாம்ன்னு தான். என்றாள். 

என்ன வாய்ப்பு? என சத்ய தேவ் கேட்க. என் கிட்ட உனக்கு எந்த சான்சும் கிடைக்காது. அதுக்கு தான் சொல்றேன் அக்காளும் தங்கச்சியும் நல்லாவே இருக்காளுங்க! உனக்கு.. என அவள் சொல்ல வர.. 

சான்ஸ் உருவாக்கிப்பேன்! இந்த பாட்டை போல “உன்ன நான் விட மாட்டேன் டி! நீ சொல்லாம தொட மாட்டேன் டி உன் காலை சுத்தி இருப்பேனடி! இனி இதை பத்தி எப்பவும் பேசாதே” என பாடிக் காட்டினான் சிரித்துக் கொண்டே. 

பிளா பிளா பிளா என அவள் அவனை பளிப்பு காட்டி கத்த ஆரம்பித்தாள்.

“உன் வேகத்தில உதட்டால

தினம் நடப்பத பார்ப்பேனே

உன் உடம்ப என் உடம்பால

தினம் எடை போட்டு பார்ப்பேனே!” என பாடிக்கொண்டே கண்ணடித்தவன் அவளின் அருகில் ஒட்ட.. நீ எனக்கு வேலைக்காரன் மட்டும் தான் போடா தள்ளி போ! போடா நாயே! என அவள் தள்ளிக் கொண்டே சென்றாள். 

சத்ய தேவ் மொத்தமாக அவள் மேல் படர்ந்து கொண்டவன். அவளின் மேல் உரசி உரசி கூசச் செய்தான். டேய் f* லீவ் மி யூ என கெட்ட வார்த்தையை கலந்து அடித்தாள் ரிதம். மெதுவாக ஹஸ்கி வாயிசில் அவளின் காதுக்குள் அன்னிக்கு உன் வீட்ல போர்ட்டிகோவில் உன்னை கட்டி பிடிச்ச போது எதோ ஒரு மாதிரி ரொம்ப ரொம்ப எதோ பன்னுச்சு டி! என குருத்து காது மடலை கொஞ்சம் கடித்தான். அப்படியே விடாமல் நுனி நாக்கால் வருடினான். அவளின் உடலில் உள்ள மொத்த சக்தியும்  சேர்த்து சக்தியே இழுத்துக் கொண்டிருந்தான். 

எனக்கு தூங்கனும் நகர்ந்து தொலை. உன்னை மாதிரி தண்டமா நான் இல்ல! என அவளின் தன் மானத்தை சீண்டும் பொருட்டு பேசிக் கொண்டே இருந்தாள். 

சத்ய தேவ் அதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நான் எதுக்கு வேலைக்கு போகனும் என் பொண்டாட்டி நீ போற! இது போதாதா! இனி press வேலைய விட்டுட்டு குழந்தை பெத்து குடும்பத்தை நடத்தலான்னு முடிவில் இருக்கேன் என்றான். 

அப்போ பொண்ணா மாற போரியா? என கொஞ்சம் சிரித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய, என் ஆண்பிள்ளை அவதாரத்தை மொத்தமா உன் கிட்ட காட்டிட்டா போதுமே உன் வயித்துல என்னோட ஆண்மை பெண்மையில் உருவாகும் அப்புறம் வெளியே வந்ததும் என் குழந்தைய நான் வளர்த்துப்பென் இப்போ உன்னை எப்படி பார்த்துக்கிறேன். அது போல.. என்றான் மென்மையுடன் 

டேய் உனக்கு கோபமே வராதா! பச்சை தாவரமே! சுரணை கெட்டவனா டா நீ! தயிர்சாதம் என வாய்க்கு வந்த படி திட்டினாள் ரிதம். அதற்குள் அவளை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தவன் உண்மைய சொல்லட்டா? பொய் சொல்லட்டா குதிரைவால் காரி! என கேட்டான்.

நீ தான்டா குதிரை! நீ ஒரு குரங்கு என்றாள் ரிதம். அவனுடன் போராடிக் கொண்டே. 

ஒபனா சொல்ல போனால் உன் கிட்ட எனக்கு வெட்கமே இல்ல டி! நீ என்ன சொன்னாலும் எனக்கு ம்ம் ஹும் சொரணையே வராது. என இதழ் விரித்து சிரித்தவன். விழி அகலாது மோகத்துடன் மேலும்  தாபம் கூட்டும் உதட்டை பார்த்தான். அவளின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்க, விரல் கொண்டு வருடியவன் மெல்ல மெல்ல உதடு கொண்டு உரசினான். அவ்ளோ தான் crashed உணர்வு நரம்புகள் வெடித்து சிதறியது. வேகமாக உதட்டை கவ்விக் கொண்டான். 

நெஞ்சமெல்லாம் எதோ போல ஒரு தாக்குதல் உள்ளுக்குள் அதை விட அடி வயிற்றில் மயிலிறகு வைத்து வருடுவது போல ஒரு உணர்வு அவனது நெருக்கம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்ளத் தான் மனம் வர வில்லை. விலகவும் முடிய வில்லை. கண்களை இறுக்க மூடி இருந்தாள். திறக்க முடியவில்லை. வெட்கமா? இல்லை இது எந்த மாதிரியான உணர்வு தெரிய வில்லை. ஆனால் முத்தம்! இந்த முத்தம் நல்லா கொடுக்கிறான்? யார் கிட்ட கத்திருப்பான்? அவள்(ரிதம்) கிட்ட இருந்து தான் கூடவே அதில் அவனது ஆதிக்கமான ஆண் வாசனை! வன்மை கொஞ்சம் கொஞ்சமாக எட்டி பார்க்க ஆரம்பிக்க.. 

அவனது முத்த யுத்தத்தில் இருந்து தாங்க முடியாதவள் இப்போ என்ன பண்றது? அய்யோ இன்னும் கொஞ்சம் விட்டால் இவன் அடுத்த கட்டத்துக்கு போயிடுவான் போலயே என நினைத்தவள் வேகமாக ஹான் சாங் மாத்தி சவுண்ட் வைக்கிறேன் என மாற்ற… அது இன்னும் வசதியாகி போனது அவனுக்கு. 

சாணக்யா சாணக்யா என ஒலிக்க.. சத்ய தேவ் முத்தமிட்டு கொண்டே சிரிப்பது நன்றாக தெரிந்தது. அவள் மூச்சுக்கு அவதிப்பட ஒரு நிமிடம் இடைவெளி விட்டான். அவள் நெஞ்சை பிடித்த படி அவனை கிறங்கிய விழிகளில் பார்க்க, சக்தி நீ சரி இல்லஅஅ! என டோன் மாற அதற்குள் அவன்  டாப்பை தூக்கி அவளின் இடையில் இடைவெளி இல்லாமல் ஒதுங்கினான். 

அய்யோ என அவள் உதட்டை கடித்து அவனது செய்கையை தாங்கிக் கொள்ள முடியாமல் திணறினாள். மூச்சு வாஙகியபடி பன் மடங்கு கூடிக் கொண்டே போனது. ரிதம் நெஞ்சு கூடு ஏறி இறங்க சக்தி பிளீஸ் விடு! என சொல்லும் போது டீவியில்.. 

சத்யா.. 

சொல்லு டி! என சிம்பு கேட்பது ஓடிக் கொண்டிருந்தது. 

அதற்கு அடுத்து வந்த வசனத்தை சத்ய தேவ் கூறிக் கொண்டே அவனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். 

“எனக்கு வேணும்! எப்போ தோணுதோ அப்போ முத்தம் கொடுப்பேன். இச்.. கடிப்பேன்! ஹூக் போடுவேன் உதட்டுகுள்ள! என்னோட இஷ்டம் நீ தான் அதுக்கும் மேலே எதுவும் பண்ண விட மாட்றியே! உன் கிட்ட தான் எல்லாம் எனக்கு வேணும் குட்டி குட்டி விசயத்தை கூட உன் கிட்ட நிறைவேத்திக்க.. இச்.. என மீண்டும் முத்த மழை.. இடைவிடாமல் அவனிடம் இருந்து அவளுக்கு. 

அதற்கும் மேல் அவன் எதுவும் எல்லை மீற மாட்டான் என தெரிந்து விட்டதால் மெதுவாக கொஞ்சம் தளர்ந்தாள். விடுவான் இல்லை இன்னும் மூழ்கி போனான். ரிதம் உதட்டை கடித்து அவனது தொடுகைக்கு எதிர்வினை செய்யக் கூடா வண்ணம் திடகாத்திரமாக இருந்தவளுக்கு ஒரு நாள் இதே போல இந்த பாடலில் வருவது போல என்று இருப்போம்? அது நடக்குமா என நினைத்தவழுக்கு இன்று நடந்து விட்டதால் உள்ளுக்குள் அந்த சந்தோஷம் வேறு ஆனால் அதை முழுமையாகத் தான் அனுபவிக்க முடியவில்லை. 

என்னை வச்சு ஆராய்ச்சி மயிரு எல்லாம் செய்வான். முத்தம் கொடுப்பான் கட்டி பிடிப்பான். ஆனால் அந்த மூணு வார்த்தையை சொல்ல மாட்டான். இவனுக்கு இவனை தவிக்க விடணும் என நினைத்துக் கொண்டே முகம் சிவந்து கிடந்தாள். அந்த வீடு முழுக்க முத்த சத்தம் தான். அய்யோ கேட்க கேட்க என்ன ஒரு இன்ப மயம். முத்தம் கொடுத்தே என்னை டயர்ட் ஆக்கிட்டான் பாவி என நினைத்தவள் அப்படியே உறங்கிப் போனாள். 

அவளிடம் சீரான மூச்சு வர சிவந்த உதட்டை பார்த்தபடி எழுந்தான் சத்ய தேவ். ராபரி ராவடி! என்ன ராபரி பண்ணா? உன் பொண்டாட்டி? என அவன் மூளை கேட்க! என்னைத் தான்! என்றவனின் உதடுகள் மீண்டும் முத்தமிட தோன்ற உடனே தாவி விட்டான் உதட்டுக்கு. 

அந்த நேரம் போன் அலறியது. புருவ முடிச்சுடன் போனை அட்டன் செய்தான் சத்ய தேவ். 

எங்கே இருக்க? 

என்னை வெறுபேத்த போன் பண்ணிருக்கியா? என்றான் கடுப்புடன். டேய் மயிறு… நான் மகிய பார்க்க போறேன். 

போ உன்னை இனி தடுக்க மாட்டேன்! Childish மாதிரி behave பண்ணாத மினிஸ்டர் மாதிரி நடந்துக்க! என்றான் சத்ய தேவ். 

டேய் f* சொல்றத முழுசா கேட்டு தொலை. ஹரிணி எப்போ பாரு அழுதுட்டு இருக்கா டா! என்றான் நிதின். 

*** சில கெட்ட வார்த்தைகள் * என சத்ய தேவ் கோபம் மின்ன போனை எடுத்துக் கொண்டு இஷ்டத்துக்கு பேச.. டேய் இர்ரா இரு! அவளுக்கு அவங்கப்பன் ஆத்தாளை பார்க்கணுமா! நான் இன்னும் விரதம் இருக்கேன் ரெண்டு வருஷமா! என்றான் நொந்து கொண்டே. 

ரொம்ப சந்தோசம் என சத்ய தேவ்க்கு பங்குக்கு ஒரு ஆள் கிடைத்து விட்டதை போல நிம்மதி. 

நிதின் பெரு மூச்சுடன் நீ வந்து கொஞ்சம் உங்க டாடி கிட்ட பேசி அவளை ராம் – கீதா ரெண்டு பேர் கிட்டயும் பேச வச்சு சேர்த்து விடு அப்போ தான் எனக்கு அவள் கிடைப்பா! இல்லன்னா ஹெல்த் இஸ்யூ கூட வர வாய்ப்பு இருக்கு! எப்போ பக்கத்தில் போனாலும் பீரியட்ஸ்ன்னு சொல்றா! என்றான் வருத்தத்துடன். 

சரி இப்போவே வரேன். என்றான் சத்ய தேவ். 

ம்ம் என போனை வைத்தவன் அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஹரிணியின் தலையை வருடி விட்டு மென் முத்தம் கொடுத்தான் நிதின். 

சத்ய தேவ் உள்ளே வந்ததும் உடையை மாற்றிக் கொண்டு ரிதம் அருகில் வந்தான். 

தொடரும்.. 

EPISODE 165

ஹலோ எங்கே டா இருக்க? நானும் இந்த ரெண்டு மாசமா பார்க்கிறேன். நீ ஒன்னும் சரி இல்லையே! டேய் நிவா! இப்போ சொல்ல போறியா இல்லையா? என கேட்டான் மிதுன். 

அண்ணா அது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை என்றான் நிவாஸ். உன்னோட முக்கிய வேலை தான் என்னன்னு தெரியுதே! என ஒரு சில நிமிடங்கள் அமைதியாகி விட்டான் மிதுன். ஒரு பெரு மூச்சை விட்ட நிவாஸ் சரி சாரி ப்ரோ இப்போ எங்கே இருக்க? சொல்லு நான் உடனே வரேன். என்றான் நிவாஸ். 

நான் வேணாம் நிவாஸ் இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என சொல்லிய படி போனை கட் செய்தவன் நேராக காலேஜை நோக்கி சென்றான். இன்று தான் பரீட்சையின் ரிசல்ட். சூர்யாவின் கிண்டல் கேலிகள் அனைத்தும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஐயோ என்ன ஆக போகுதோ! இந்த தடவை பாஸ் பண்ணல இன்னும் கொஞ்ச நஞ்ச மானமும் போயிடும் இப்போ அந்த சக்தி வேற வீட்டுக்கு வந்துட்டான். அவன் முன்னாடியே அவரு என்னை பங்கம் பண்ணுவாரே என நொந்து கொண்டான் மிதுன் தேவ். 

காரை ஒரு ஓரமாக போட்டு விட்டு நேராக கல்லூரியின் உள்ளே சென்றான். மகி பயமா இருக்கு டி மா! நீ மட்டும் தான் என்னை அந்த பிரச்னையில் இருந்து காப்பாற்றும் தெய்வத்தாய் என நினைத்தவன் அவனது டிப்பார்ட்மென்ட் பக்கம் சென்றான். ஏனோ ரிசல்ட்டை ஆன்லைனில் பார்க்க திராணி இல்லை. அங்கேயே சென்று பார்த்து விட்டு அப்படியே பெயில் ஆனால் அதற்கு சப்ளிமென்றி எப்பொழுது என கேட்டு வர சூர்யா உத்தரவு போட்டிருந்தார். ஆக மொத்தத்தில் நான் பெயில் ஆவேன்னு தான் அவரு என்னை நினைச்சிட்டு இருக்கார். என நொந்து கொண்டே சென்றான் மிதுன். 

இதோ அனைவரும் பேசிக் கொண்டிருக்க, மிதுன் தயக்கத்துடன் department பக்கம் சென்றான்.  result  காப்பி Enrolment வாரியாக இருக்க அந்த இடத்தை சுற்றி கூட்டம் அனைவரையும் தள்ளி விட்டு புக்லட்டை ஆலுமையுடன் பிடுங்கி பார்த்தான் மிதுன் தேவ். 

களுக் களுக் என சிரிப்பு சத்தத்துடன் அங்கிருக்கும் lecturers சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். EVS ல theoritical நாலு ஆறு வருசமா கஷ்ட பட்டு எழுதி செண்டமே ஒரு பையன் வாங்ருக்கான் என பேச்சு சத்தம் வர..  என்ன சொல்றீங்க? என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, மிதுன் எண்ணை பார்த்தான் நான் தானா! நான் தானா! ஐயோ ஐயோ அயோ நானே தான் f* பாஸ் பண்ணிட்டேன் அதுவும் செண்ட்டம் போட்டிருக்கேன். என சொல்லிக் கொண்டவனுக்கு உற்சாகம் தாள வில்லை உடனே வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தவன் போனில் wesite சென்று அவனுடைய எண்ணை உள்ளீடு செய்ய பாஸ் என காட்டியது. 

மகி பாஸ் பண்ணிட்டேன் டி! ஐயோ அம்மா! மகி மா! என உள்ளுக்குள் சந்தோஷம் தாள வில்லை. Graduation நடக்காது இருந்தாலும் ஒரு fake graduation மாதிரி create பண்ணி சரித்திரத்தில் இடம் பிடிக்கணும். இனி யாரும் என்னை கேட்டாள் கெத்தா சொல்லுவேன் என உற்சாகத்துடன் நடந்தான் மிதுன் தேவ்.

மான் விழியின் மைந்தனுக்கு  எதிரில் இமையானவள் இணையாக போகிறவள் வந்து கொண்டிருந்தாள் I mean இமையா.. ஹை டீச்சர் என்றவனுக்கு இந்த பரிட்சையில் அவன் வெற்றிக்கு காரணமான தேவதையே அவள் தானே என வேகமாக அவளை நோக்கி சென்றான். 

டீச்சர் என புன்னகையுடன் அவளை பார்த்தான். புருவம் சுருக்கியவள். ஹே ஹாய் இன்னிக்கு ரிசல்ட்? என்னாச்சு? பாஸ் பண்ணிட்டியா? என கேட்டாள். 

ம்ம் அது என அவனது முகம் மாற.. என்னாச்சு? என்றாள் பாவமாக.. 

பெயில் ஆகிட்டேன் டீச்சர். என மிதுன் தேவ் முகத்தை தொங்க போட்டுக் கொண்டான். இமையாவை சுற்றி டோலிகள் கூட்டம் இருக்க, ஹே ஹாய் ஹெண்ட்சம் நீங்க எந்த department என அவனை சுற்றினார்கள் பெண்கள் அனைவரும். அதில் அனைவரையும் முறைத்த இமையா கெட் அவுட் என கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். 

அதில் அனைவரும் கப் சிப் சத்தத்துடன் ஓட அவர்களை பார்த்து கண்ணடித்தான் மிதுன். ஹே அவன் அவன் நம்மல பார்த்து கண்ணடிச்சான் அழகா இருக்கான் டி! என அனைத்து பெண்களும் திரும்பி பார்க்க.. க்கும் என தொண்டையை கணைத்தாள் இமையா. 

டீச்சர் என அவன் சோகத்துடன் பார்த்தான். எத்தனை அறியர்? EVS பாஸ் பண்ணியா இல்லையா! என இமையா கேட்டாள். ஹான் EVS பாஸ் பண்ணிட்டேன். ஜஸ்ட் பாஸ் தான். இப்போ அதை நினைச்சா டென்ஷனா இருக்கு பிசிக்ஸ் வரவே வராது. கெமிஸ்ட்ரி என அவளை தலை முதல் கால் வரை பார்த்தவன் அது கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகும் டீச்சர் என்றான். 

அதில் கண்கள் மின்ன சிரித்தவள் கவலைய விடு! எனக்கு பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி கை வந்த கலை! உனக்கு நான் கைட் பண்றேன் வா food கோர்ட் போலாம். என அழைத்து சென்றாள் அவனும் பின்னாலயே சென்றான். உனக்கு என்ன வேணும்? என இமையா கேட்க.. எனக்கு ஒன்னும் வேணாம். என்றான் மிதுன். 

அப்போ எனக்கு ஒரு இஞ்சி டீ கூடவே சால்ட் பிஸ்கட் வாங்கிட்டு வாயேன் இந்த நோட்ஸ் எடுக்கணும் தலை வலிக்குது என்றாள். 

மிதுன் அவளை வினோதமாக பார்த்த படி அதென்ன ரெண்டு சால்ட் பிஸ்கட் அதை யாரும் டியில் டிப் பண்ணி சாப்பிடுவாங்களா? என முகத்தை சுலித்தான். 

டேய் போடா தம்பி அப்போ தான் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பாஸ் பண்ண ஹெல்ப் பண்ணுவேன் என்றாள் இமையா.. .

சரி போறேன் என்றவன் எழுந்து கொண்டு நடந்தான். 

 டேய் தம்பி..

சொல்லு கா! என்றான் கடுப்புடன். 

அப்படியே ஒரு கேலக்ஸி சாக்லேட் வேணும் என கண்ணை சிமட்டினாள். கஞ்சா கண்ணு டி உனக்கு என நினைத்துக் கொண்டவன் பெரு மூச்சை விட்டு அவள் சொன்னதை வாங்கிக் கொண்டு வந்தான். 

நீ எதுல வீக்கு என இமையா பிஸ்கட்டை டிப் செய்து சாப்பிட.. 

நல்லாருக்கா? என்றான் முகத்தை சுளித்த படி, try பண்ணு அப்புறம் சொல்லு என ஒரு பிஸ்கட்டை நீட்டினாள். 

டீ? என அவளை பார்த்தான் மிதுன். 

ம்ம் என கண் காட்ட இருவரும் ஒரே நேரத்தில் ஒரு கப் அண்ட் சாசரில் டிப் செய்து சாப்பிட்டார்கள். எப்டி இருக்கு என மொட்டு வாயை மெதுவாக அசைத்த படி கேட்டாள் இமையா. 

அவளின் உதட்டை பார்த்தவன். I think பிஸ்கட் சால்ட் கூடவே இந்த டீயில் சுகர் கூட லெஸ் பட் இது சுவீட்டா இருக்கு ரொம்ப என்றான். 

இமையா புரியாமல் அவனை பார்க்க..  டீச்சர் கை பட்டது எல்லாமே சுகர் கிரிஸ்டலா மாறிடுச்சு அதான் சுவீட்டா இருக்கு என்றான் பட்டும் படாமல்.. அவளின் கண்ணம் சிலித்து போக.. மூக்கின் நுனி வியர்க்க கண்ணாடியை மூக்குக்கு தள்ளினாள். 

ஆமா இது பவர் கிலாசா என அவன் வெடுக்கென கண்ணாடியை கழட்டி போட்டு பார்த்தான். டேய் தம்பி ஓவரா போற கொடு என பிடுங்க நினைத்தாள். இருங்க டீச்சர் நான் போட்டு பார்க்கிறேன் என கண்ணாடியை அவன் போட்டுக் கொண்டே எப்டி இருக்கேன்? என கேட்டான். 

ம்ம் அழகா தான் டா இருக்க? அப்போ உன் பின்னாடி பொண்ணுங்க சுத்தும் போலயே! கூடவே டீச்சரும் சுத்துவாங்க என்றான். 

அவளுக்கு டீ புரை ஏறிட… உடனே மிதுன் சரி செய்து கொண்டே இல்ல அடிக்க! திட்ட திரத்துவாக என சமாளித்து விட்டான். 

சரி சொல்லு நீ எதில வீக்கு? என இமையா கேட்க.. 

நான் ரொம்ப ஸ்ட்ராங் அதுவும் அந்த மாதிரி டைம்ல ரொம்ப ஆக்டிவ் இப்போ பார்த்ததும் ஆக்டிவ் என சென்சார் வார்த்தைகளை அள்ளி வீடினான். 

என்ன தம்பி? நீ சொல்றது எனக்கு ஒன்னும் புறியலயே என இமையா கேட்க..

அது நான் நான் வந்து என்ன சொல்லி சமாளிக்க கஞ்சா கண்ணி விரிச்சு பார்க்கிற மாதிரி இருக்கே! மிதுன் உன் வாய் தான் டா எடுத்ததும் அங்கே போனால்? ஐயோ கண்டு புடுச்சுட்டா போலயே! ஐயோ என அவன் யோசிக்க.. 

நீ பிசிக்ஸ்ல வீக்கா கெமிஸ்ட்ரில வீக்கா? என கேட்டாள். 

ப்பா அது ரெண்டும் தான் ஃபர்ஸ்ட் கெமிஸ்ட்ரி அப்புறம் பிசிக்ஸ்.. 

மேக்ஸ் எல்லாம்? 

சப்ப மேட்டர் சால்ட் வாட்டரு! அவ்ளோ பாஸ்ட் டீச்சர். 

நிஜமா என அவள் கேட்க.. யா என்றான். 

இங்கே இதை சால்வ் பண்ணி காட்டு? என அவள் note pen நீட்ட எடுத்து பார்த்தவன். யார் இவ eigan equation மொக்கை சம் நீட்றா? ஆனாலும் கண்ணு கஞ்சா மாதிரி இழுக்குது டா மிதுனே விட்றாத கொசு மாதிரி இருக்க அந்த வெற்றி எல்லாம் லவ் பண்றான். அந்த திமிர் புடிச்ச ருத்ரன் எட்டு வருசம் லவ் பண்ணிருக்கானாம் அப்போ இங்கே தண்டத்துக்கு இருக்கிறது நான் மட்டும் தான் கடலை மட்டும் போட்டால் என் தலைவன் சிம்பு மாதிரி அப்படியே இருக்க வேண்டியது தான் இப்படி எதாவது பண்ணி இவளை பிக் அப் பண்ணனும். இவளே இவளோ சாப்ட்டா இருக்கா அதை வுட இடியட்டா இருக்கா சோ ஈசியா என மன கணக்கை போட்டு அவளிடம் நீட்டினான் மிதுன். 

ஓ பரவாயில்லையே அடுத்து proof of induction லாகிரிதம் வச்சு இதை proof பண்ணு என நீட்டினாள். மிதுன் கைகள் வேகமாக அதில் ஓடிக் கொண்டிருக்க, இமையா இமைக்க மறந்தாள். 

ம்ம டன்னு என நீட்டினான். 

ரைட்டா இருக்குமா என அவள் வாங்கி பார்க்க.. நான் university என சொல்ல வந்தவன். பாருங்க டீச்சர் செக் பண்ணுங்க AI ல கூட பாருங்க என அந்த சேரில் நன்றாக சாயிந்தான் மிதுன். 

டேய் தம்பி சூப்பர் டா என கண்கள் விரிந்தவள். சரி டா உன் பேர் என்ன? 

மிதுன் என்றான். 

நைஸ்.. என அவள் சொல்லி முடிப்பதற்குள் டீச்சர் உங்க லாஸ்ட் நம்பர் 53 தான? என கேட்டான் மிதுன். 

இல்லையே 63 என்றாள் இமையா.. 

அப்போ ஃபர்ஸ்ட் ரெண்டு நம்பர் 80 ஆ? 

இல்ல தம்பி 90.. என்றாள் இமையா… ஓ அப்போ மிட்டில் number என அவன் அடுத்து கேட்க வர.. 

இப்போ உனக்கு என்ன டா வேணும்? என அதட்டலுடன் கேட்டாள் இமையா!! 

டீச்சர் அது நைட் பிசிக்கல் கெமிஸ்ட்ரில டவுட்டு வந்தால் எனக்கு யார் க்லியர் பண்ணுவா என இரு புருவங்களை தூக்கியவன். அவளின் கண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

வீட்டுக்குப் போனதும் நான் போன் எடுக்க மாட்டேன். Do not disturb போட்டுடுவென். இட்ஸ் ஓகே உங்க போனை கொடுங்க.. என்றான். 

எதுக்கு? என வினோதமாக கேட்டாள் இமையா.. இல்ல என்னோட நம்பர் உங்களுக்கு தரேன். ஒரு வெளை டீச்சர் ஃப்ரீயா இருந்தால் நைட் க்ளாஸ் நோட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம் என அவளிடம் கை நீட்டினான். 

அவள் என்ன செய்வது என யோசிக்க.. சரி இட்ஸ் ஓகே என அவன் எழ.. 

போனை அவன் பக்கம் தள்ளி வைத்தாள். உள்ளுக்குள் தவுசன் வாலா வெடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு. உதட்டுக்கு உள்ளே சிரிப்பை அடக்கி போனை எடுத்து அவனது எண்ணை type செய்தவன் name போட..  ஹே இங்கே கொடு நான் போடுறேன் என வாங்கியவள் மிதுன் தம்பி என சேவ் செய்தாள். 

மிதுன் உள்ளுக்குள் தம்பி உன்னை கஞ்சா கண்ணிக்கு ரொம்ப பிடிச்சிருக்காம் டா என சென்சாராக யோசித்தான். 

சரி டீச்சர் நம்பர்? என அவன் கேட்க.. 

நான் நானே போன் பண்றேன் ஃப்ரீயா இருந்தால் என இமையா சொல்ல..  நான் 9 மணிக்கு எல்லாம் தூங்கிடுவென். சோ.. 

போடா முதல்ல போ! நான் ஃப்ரீயா இருந்தால் கூப்பிடுறேன் என கூற.. ஓகே டீச்சர் என கண் சிமட்டியவன் தலையை கோதிய படி நடந்தான். 

கழுத்து செயினை முறுக்கி கொண்டே அவனை திரும்பி இரண்டு முறை பார்த்தவள். மிதுன்.. ம்ம் என்றவளுக்கு அருகில் இருக்கும் தம்பியைப் பார்த்ததும் ஒரு பெரு மூச்சுடன் லூசு மாதிரி எதையும் யோசிக்காத டி என தனக்கு தானே சொல்லிக் கொண்டு ஸ்டாப் ரூம் சென்றாள். 

ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் அப்பொழுது தான் வீட்டுக்கு வந்திருக்க, சோபாவில அப்படியே சாய்ந்து கொண்ட ரிதம் மகியின் மேல் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள். எதுக்கு டா பிள்ளை தூக்கத்தில் இருக்கும் போது கூட்டிட்டு வந்த? என மகி கேட்க.. வந்ததும் நல்லதா போச்சு அம்மா இப்போ தான் போன் பண்ணாங்க கோட்டை மாரியம்மன் கும்பாபிஷேகம் போயிட்டு வந்திடுளாம் ரெண்டு நாள் போன தடவையே அவசரவசரமா வந்துட்டோம் இந்த தடவை பொறுமையா போயிட்டு வரலாம் என்றார் சூர்யா. 

மிதுன் இரண்டு மூன்று பெரிய xeorox பேப்பருடன் வீட்டுக்கு வந்தவன் மகி மகி என புன்னகையுடன் கத்திக் கொண்டே வந்தான். 

சக்தி மற்றும் சூர்யா இருவரின் பார்வையும் மிதுன் மேல் பட..  எதுக்கு அண்ணா கத்துற என சொல்லிக் கொண்டே வந்தாள் இதழ். 

மிதுன் நேராக சூர்யா பக்கம் சென்றவன். தூரி இங்கே பாரு இதை உன் அப்பா கிட்டயும் உன் நொன்ன கிட்ட காட்டு நான் 100 out of 100 என சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டே கூறினான். 

அண்ணா என இதழ் பேச வர..  

இரு பாப்பா என மிதுன் சூர்யாவை பார்த்து பேச வர , சக்தி உதட்டை மடித்து சூர்யாவை பார்க்க அவரோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். 

அண்ணா என இதழ் மீண்டும் பேச வர.. 

இரு தூரி… என்றவன் என்ன அப்படி பார்க்கிறீர்கள்? இனி என்னை அரியர் நாய் அப்படி இப்படின்னு சொன்னீங்க.. என மிதுன் பேச வர.. 

டேய் தூறிகா என்ன சொல்ல வரான்னு கேளு! என மகி சொல்ல.. நீ கம்முன்னு இரு டி மகி! இனி யாரும் என்னை எதுவும் சொல்ல முடியாது நான் பாஸ் பண்ணிட்டேன் என மிதுன் கர்வத்துடன் சொல்ல… 

அடேய் அண்ணா இது எங்களுக்கு காலையிலேயே தெரியும் டாடி வெப்சைட்ல பார்க்க சொன்னாங்க. சோ எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ தான் லேட்டு என்றாள் இதழ். 

மிதுன்…? 

வருவான். 

EPISODE 166

அடேய் அண்ணா இது எங்களுக்கு காலையிலேயே தெரியும் டாடி வெப்சைட்ல பார்க்க சொன்னாங்க. சோ எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ தான் லேட்டு என்றாள் இதழ். 

அப்போ நான் தான் பில்ட் அப் கொடுக்கிறேனா? என மிதுன் எட்சிலய் விழுங்கிக் கொண்டே அங்கிருக்கும் அனைவரையும் பார்த்தான். 

அந்த நேரம் இன்ப ராகவன் விவேகா இருவரும் வீட்டுக்கு வர… என்னடா? திடீர்னு வந்திருக்க? என்று கேட்டார் சூர்யா. 

நான் எங்க வந்தேன்?  உன்னோட பையன் குட்டிக் குட்டன் தான் என்ன வர சொன்னாரு!  வந்தே ஆகணும்னு சரியான டார்ச்சர் டா!! நான் தான் என்னமோ ஏதோனு ஓடி வந்தேன்.  என்று தன் மகளைப் பார்த்தவர்.  என்னாச்சு இந்த நேரத்துல தூங்குறா? என்று கேட்க..

நைட் ஷிப்ட் போயிட்டு வந்தா!  மாமா அதனாலதான் தூங்கிட்டு இருக்கா என்று சத்யதேவ் கூறினான். 

அப்படியா சரி என்று கூறியவர். என்ன விஷயம் எதுக்குடா வர சொன்ன? என்று கேட்க..

சத்தியதேவ் சிரித்துக் கொண்டே தன் தமையனை பார்க்க, அய்யோ இவரை வேற வேற சொல்லிட்டனா?  நானே கண்டன்ட்டு கொடுத்து கூட்டிட்டு வந்த மாதிரி ஆகிப்போச்சே! என்னை பங்கம் பண்றதுதான் இவருக்கு வேலையே! என்று நொந்து கொண்டு நெளிந்து நின்றான். 

சூர்யா சிரித்தபடியே அதுதான இவன் ஒரு  அரியர் வச்சுட்டு தண்டமா சுத்திட்டு இருந்தான்ல மச்சி! அத பாஸ் பண்ணிட்டான்.  அதுக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்து இருக்கான்.  உன்கிட்ட சொல்றதுக்காக உன்னை வர சொல்லி இருக்கான். என்று கூறினார் சூர்யா. 

விவேகா சிரித்தபடி மிதுன் குட்டி பாஸ் பண்ணிட்டீங்களா?.என்று சந்தோஷமாக அவன் அருகில் செல்ல…  ரொம்ப பெருமை தான் மா உனக்கு?  நீ வேற என் கண்ணுகுட்டி யுபிஎஸ்சி எக்ஸாம்லையே பாஸ் பண்ணி ஃபர்ஸ்ட் பத்து இடத்துல வந்து இருக்கா! அதையே அவ பெருசா எடுத்துக்காம எதையும் கொண்டாடாம விட்டுட்டா!  ஆனா இந்த நாயி அரியர் எக்ஸாம் எழுதிட்டு அதை பெருசா ஜெராக்ஸ் வேற போட்டுட்டு வந்து வீட்ல ஓட்டறேன்னு ஆடிக்கிட்டு இருக்குது! நான் எங்க போய் சொல்றது? நான் பெத்ததுல இது ஒன்னு மட்டும் தான் இந்த ரகமா இருக்குது. ஒருவேளை இது கனடாவில் பிறந்ததால  இந்த மாதிரி குறையோடு பிறந்துவிட்டதோ! என சந்தேகத்துடன் யோசித்தார் சூர்யா. 

இதழ் ஒரு பக்கம் அமர்ந்திருக்க சத்ய தேவ் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தான். டாடி அண்ணா பாவம் கம்முன்னு இருங்க என சிரிப்பை அடக்கிக் கொண்டே இதழ் சொல்ல.. 

தேவையில்லாம பேசுறீங்க! அப்புறம் நடக்கிறதே வேற என்று மிதுன் தேவ் முகமெல்லாம்  உப்பிக்கொண்டே சூர்யாவை பார்க்க..   என்னாச்சு என்று கண்களை தேய்த்துக் கொண்டே ரிதம் எழுந்த அமர்ந்தாள்.

மகி சிரித்தபடி சரி சரி மிதுன் வாடா செல்லம்! என் தங்கம்  உனக்கு என்ன வேணும்? 

இவரை டைவர்ஸ் பண்ணிட்டு வா நம்ம கனடா போலாம் வருண் மாமாச்சி வீட்டுக்கு என்றான். 

பாரு டா இன்பா இப்படி தான் பேசிட்டு திரியுறான். என்ன பண்றது? 

என்னங்க கம்முன்னு இருங்க. நம்ம பார்த்துபோம்! உனக்கு பிடிச்சது எல்லாமே செஞ்சு வச்சிருக்கேன்.  ஆக்டோபஸ் உனக்காக வெயிட்டிங்  வாடா என்று அழைக்க.. 

போடி போ இக்கத்தில் தூக்கி வச்சுக்க  இது ஒன்றுதான் குறைச்சல் என்று சூர்யா கூற இனிமே யாரும் என்னை எதுவும் பேச வேண்டாம் சொல்லுங்க மா! என மிதுன் சொல்ல.. சரி நான் பார்த்துக்கிறேன் என்றவர். ரிதம் செல்லம் வா வா crab, snail பண்ணி வச்சிருக்கேன். என சொல்ல.. வழிசல் வழிய ரிதம் எழுந்து ஓடினாள். 

சத்ய தேவ் கொஞ்சம் அதிர்ச்சியுடன் நத்தை சாப்பிடுவாளா? என விவேகா கிட்ட கேட்க, அது மனுஷி இல்ல மிருகம் எல்லாமே தின்னும். நத்தை, சிப்பி, நண்டு, ஈசல், ரால், எல்லாமே தின்னுவா! என்றாள் விவேகா. 

சத்ய தேவ் இமை வெட்டாமல் பார்த்தான். இதழ் சிரித்த படி சக்தி அண்ணா மாட்டிகிட்டான் டாடி! அங்கே பாருங்களேன். என விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். 

மாமி! அய்யோ வேற லெவல் மாமி! அந்த கடாயில் புவா போட்டு பிசைஞ்சு ஊட்டி விடுங்க. என ரிதம் டைனிங்ல இருந்து கத்துவது இங்கே கேட்க..  மா எனக்கு என மிதுன் சொல்ல போடா எனக்கு தான் என ரிதம் சொல்ல.. ஹே நீ போடி என இருவரும் சண்டையிட்டு கொண்டு இருக்க, டேய் அண்ணி சொல்லல பல்லை உடைப்பேன் ராஸ்கல் என சூர்யா கத்த.. இன்பா சிரித்துக் கொண்டே சூர்யாவின் கையை பிடித்தார். 

என்ன டா? 

சந்தோசமா இருக்கேன் சூர்யா! ரிதம் ஹேப்பியா இருக்கா! என்றார் இன்பா. 

அந்த நேரம் கார் ஹாரன் சத்தம் கேட்க.. சத்ய தேவ் எழுந்து நின்றான். 

யாரு என சூர்யா கேட்க.. மினிஸ்டர் சாரும் ஹரிணியும் வந்திருக்காங்க. என்றான். 

என்ன திடீர்னு? என சூர்யா கேட்க… ஏன் டாடி அப்படி சொல்றீங்க! நிதின் அண்ணா வர கூடாதா! சூர்யா ப்பா எப்போவும் நான் அங்கே தேஜு மா வீட்டுக்கு போனால் எப்டி பாத்துக்குவார் தெரியுமா? நீங்க எதுக்கு இப்படி நினைக்கிறீங்க? என முகத்தை சுழித்தாள் இதழ். 

அட குக்கு அப்படி இல்ல தங்கம். உங்க அண்ணா மினிஸ்டர் திடீர்னு இங்கே வந்திருக்கான் அதுக்கு கேட்டேன். இனி அப்பா எதுவும் கேட்க மாட்டேன் என்றார். 

இல்ல இல்ல டாடி! நான் எதும் சொல்ல கூடாதா! என இதழ் கேட்க.. என் குக்கு எது வேணாலும் சொல்லலாம். என் தங்கமக என சூர்யா சொல்ல.. இதழ் தன் அப்பாவை அணைத்து முத்தமிட்டு விட்டு என் தங்க டாடி என சொல்லிக் கொண்டே நிதினை அழைக்க வெளியே சென்றாள். 

இன்பா அவரிடம் டேய் நான் கூட ரிதம ஃபாரின் அனுப்பினேன். ஆனால் நீ குக்குவை இப்படி பொத்தி பொத்தி வச்சிருக்க? எனக்கே டப் காம்பிடிசன் கொடுக்குற? அப்போ வீட்டோட மாப்பிள்ளை தானா! என கேட்க.. சூர்யா சிரித்தபடி இப்போ தான் டா நான் நிம்மதியா இருக்கேன். முன்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நடுங்குவா ஆனால் இன்னிக்கி பாரு எப்டி இருக்கா! என் பொண்ணு பழைய படி எனக்கு திரும்ப கிடைச்சிட்டா! என்றார் நிம்மதியுடன். ஆனால் இந்த நிம்மதி..? பார்ப்போம் என்ன நடக்கிறது என்று? 

மா அண்ணா நிதின் அண்ணா வந்திருக்காங்க! என சொல்லிக் கொண்டே இதழ் ஓடி உள்ளே செல்ல.. ரிதம் மற்றும் மிதுன் உணவை ஒரு கட்டு கட்டி விட்டு ஐஸ் கிரீம் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார்கள். ஹரிணி தயக்கத்துடன் இருக்க, உள்ளே வா என சத்ய தேவ் இருவரையும் அழைத்தான். 

அந்த நேரம் சூர்யாவுக்கு ஊரில் இருந்து நட்ராஜ் போன் செய்தார். சூர்யா போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்று விட. நிதின் செல்லம் என மகி அழைக்க, இன்பா மற்றும் விவேகா இருவரும் எழுந்து கொண்டு சரி மா நாங்க போயிட்டு வரோம். டிம்பிள் என அழைக்க, டாடி நான் ஈவ்னிங் வரேன். நம்ம வீட்டுக்கு என்றாள். 

அண்ணா எங்கே போறீங்க? இங்கேயே இருங்க! சாப்பிட்டு போங்க! விவேகா என மகி அழைக்க, இட்ஸ் ஓகே மா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு என இன்பா விடாப்பிடியாக நிற்க… மகி அழைக்க வர.. மமா விடுங்க மாமா போயிட்டு வரட்டும். மாமி நீங்க இங்கேயே இருங்கள் என சக்தி கூற..

விவேகா சரி என தலை அசைக்க, சரி ஈவ்னிங் வந்து பிக் அப் பண்ணிக்க வரேன். என சொல்லி விட்டு இன்பா சென்று விட்டார். விவேகா, மிதுன், இருவரும் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் ரிதமும் சேர்ந்து கொண்டாள். 

மா ஹரினிக்கி பசிக்கும். என சக்தி சொல்ல..

இல்ல அத்தை அதெல்லாம் வேணாம் என ஹரிணி நித்தினை விட்டுப் பிரியவில்லை.  ரிதம் அவ்வப்பொழுது சத்ய தேவை பார்த்துக் கொண்டிருக்க..  அவன் அவளை கண்டு கொண்டான் இல்லை.  மகி இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்து, உணவு மேஜையில் அமர வைத்தவர்.  சாப்பாடு போட்டு பரிமாறினார். 

சத்தியதேவ்  நித்தினுக்கு கண்காட்டிய படி நேராக சூர்யாவின் பக்கம் சென்றான். 

அவர் அப்பொழுது தான் போன் பேசிவிட்டு உள்ளே வர டாடி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.  என்ன ஆச்சுடா? என்ன ஹரிணியோட முகமே சரியில்ல! அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டையா? என்று சூர்யா கேட்க

அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல ஹரிணிக்கு மாமாவையும் அத்தையையும் ரொம்ப மிஸ் பண்றா என்று கூறினான் சத்தியதேவ். 

என்ன விஷயம் என்று சூர்யா கேட்க..   கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு போறோமே கும்பாபிஷேகத்துக்கு அங்க ராம் – கீதா இரண்டு பேரையும் வர சொல்லுங்க.. 

நான் கூப்பிட்டா அவங்க வருவாங்களா என்று சூர்யா அவனை பார்க்க.. 

நீங்க தாத்தா கிட்ட சொல்லி இன்வைட் பண்ண சொல்லுங்க! அவங்க ரெண்டு பேரும் வரணும் ஹரிணி இப்படி இருக்கிறது சரியில்ல டாடி.  அவங்க ரெண்டு பேரும் பேசிட்டா தான். ஹரிணி  அவனோட வாழ்க்கை அவ வாழவே ஆரம்பிப்பா என்று கூறினான்.

என்ன டா சொல்ற நீ என்பது போல் அதிர்ச்சியுடன்  பார்த்தார் சூர்யா. 

ஆமா நித்தன் சொன்னான் என்று கூறி முடிக்க அப்போ அவனும் அங்க வருவான் தானே! மீட்டிங் அப்படி இப்படின்னு வராம போயிட்டா எப்டி ராம் கீதா மனச மாத்த முடியும் என்று சூர்யா கேட்க..

அவனும் வருவான் டாடி!  நம்ம வீட்ல நம்ம எல்லாரும் போலாம் என்று கூற

அப்போ சரி நான் அப்பாகிட்ட சொல்லி ராமையும் கீதாவையும் வர சொல்றேன் என்று உடனே அந்த வேலையை ஆரம்பித்தார் சூர்யா 

எல்லாம் ஒருவழியாக பேசி முடித்ததும் உள்ளே வந்த சூர்யா நித்தின் மற்றும் ஹரிணி இருவரையும் பார்த்து ஊர்ல கும்பாபிஷேகம் இருக்க ரெண்டு பேரும் வரணும் என்று கூறினார்.

மகி புன்னகையுடன் நித்தின் தலையை வருடியவர் ஹரிணிமா நீயும் நித்தின் இரண்டு பேரும் கிளம்புங்க.  நம்ம சாமி கும்பிட்டு வரலாம் சரியா என்று அழைக்க.. 

அது வந்து என ஹரிணி  நித்தினை பார்த்தாள். நித்தின் சத்திய தேவி பார்க்க,  அவன் சைகை காட்டவும், சரி சித்தப்பா என்று சாப்பிட ஆரம்பித்தான். மகிக்கு நிம்மதியாக இருந்தது. 

ஏனென்றால் சூர்யாவிற்கும் நித்தின் பிரகாசுக்கும் எப்பொழுதும் பொருந்தாது. சூர்யாவுக்கு நித்தினை பிடிக்காது.  நித்தின் பிரகாஷ்க்கும் சூர்யாவை பிடிக்காது. ஆனால் இது அதிசயமாக நடந்திருக்கிறதே. 

இன்னைக்கு நைட்டு பேக் பண்ணுங்க நாளைக்கு காலையில என சூரியா ஆரம்பிக்க.. 

மகி நான் ஃபிளைட் அரேஞ்ச் பண்ணவா நம்ம எல்லாரும் போய் இறங்கிக்கலாம் என்ற நித்தின் கூற.

மகி பதட்டத்துடன் சத்தியதேவ் மற்றும் சூர்யா இருவரையும் பார்த்தாள்.  அதெல்லாம் ஒன்னும் வேணாம் நம்ம கார்ல போலாம்! நான் ரிதம் ஹரிணி நித்தின் ஒரு கார்ல அம்மா அப்பா இதழ் மிதுன் எல்லாம் ஒரு கார்ல என்று கூறினான். 

அப்ப அவங்க ரெண்டு பேரும் என்று சூர்யா சத்திய தேவை பார்க்க

அவங்கள தனியா வர சொல்லுங்க டாடி என்று சொல்லிவிட்டு சக்தி  வெளியே சென்றான். 

நித்தின சாப்பிட்டு முடித்ததும் வெளியே வர ஹரிணி அவனைப் பார்த்து இதுக்கு நம்ம போய் ஆகணுமா? எதுக்கு தான் இப்படி பண்ணிட்டு இருக்க?  நான் நல்லா தான் இருக்கேன் என்று கூற.. 

நீ கம்முனு வா எப்படியும் உனக்கு சத்யதேவ் கூட இருக்கறது பிடிக்கும் தானே! அப்போ போயிட்டு வரலாம் என்று கூறினான்.

எதுக்குடா இப்படி பேசுற? நான் எப்போ அப்படி சொன்னேன்? என்று ஹரிணி அவனின் இடைய பிடித்துக்கொள்ள..

ஸ்ஸ் ஹே வலிக்குது விடுடி என்று கூறியவன்.  சும்மா ஒரு சேஞ்சுக்கு தான். அங்க வில்லேஜ் ரொம்ப நல்லா இருக்கும்.  நான் ஒரு தடவை போயிருக்கேன்.  ஞாபகம் இருக்கு என்று கூறினான் நித்தன் .

அப்படியா சரி என்றவள் ஒரு பக்கம் அமர இதழ் அவளுக்கு கம்பெனி கொடுக்கும் பொருட்டு இன்னொரு பக்கம் வந்து ஹரிணியின் அருகில் இதழ்  ஹரிணி இருவரும் பேசிக் கொண்டிருக்க,  நித்தின் ஃபோனை நோண்டிக்கொண்டே அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மகி புன்னகை முகமாக வெளியே வந்தவர் விவேகா நாங்க கோயிலுக்கு போறோம் நீயும் வரியா என்று கேட்க

இல்லக்கா இவருக்கு டூட்டி வேற இருக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்.. என்ன என்னமோ சொல்றாரு அதனால வர முடியாது என்று விவேகா கூற.. 

அப்படியா சரி ஓகே ரிதம் அங்கு வந்து புடவை தான் கட்டணும் பறையாய் புடவை எடுக்க போலாம் கடைக்கு என்று சொல்ல..

மாமி அதெல்லாம் எனக்கு comfortable ஆ இருக்காது என்று கூற

இல்ல ஹரிணியும் புடவை தான் கட்டவா அவளுக்கும் உனக்கும் சேர்த்துதான் எடுக்கப் போறோம். ரெண்டு பேரும் புடவை தான் கட்டிட்டு கோயிலுக்கு வரணும் என்று மகி சிரித்துக் கொண்டே கூட..

 அவள் மீண்டும் அழைத்தாள் இல்ல புடவை கட்ட தான் போறோம் என்ற விவேகா அவளின் தொடையில் கிள்ளிவிட்டு அக்கா வாங்க எதுக்கு புது புடவை எடுத்துக்கிட்டு? உங்ககிட்ட எவ்வளவு புடவை  இருக்கு.  இவளுக்கு இவளுக்கு மூணு தடவை முகூர்த்த புடவை இருக்கு. அதெல்லாம் அப்படியே இருக்கு.  என்று சொல்ல

அது எதுக்கு? அதெல்லாம் வேண்டாம் என்று சத்திய தேவ்  கூறினான். 

அவன் கூறியதும் அனைவரது பார்வையும் அவன் மீது பட …

அது வந்து… அது எதுக்கு அதுக்கு அமௌன்ட் எல்லாம் ரிட்டன் பண்ணிட்டீங்களா மாமி என்று சத்தி  பேச்சை மாற்றினான். 

விவேகாவின் பார்வை நித்தின் மீது பட நிதின் இறும்பிக் கொண்டே உடனே வெளியே சென்று விட்டான்.

சத்தியதேவ் ரிதம் சிரித்துக் கொண்டே சரி சரி இப்ப புடவை தான கட்டணும்! நான் கட்டுரன் என்று அவள் கூற..

பொம்பளகெட் அப்ல   மாற போறியா என்று  மிதுன் சொல்ல..

நீ தான் போடா என்று ரிதம் விவேகா இருவரும் சண்டையிட்டு கொள்ள.. 

மிதுன் அவளின் காதில் அப்புறம் நல்லா சமைக்கிறானா?  அவன் என்று  கேட்க

சமைக்கிரான்! ஏதோ… ஆனால்  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என்று சோனா சோனாலி இருவரின் விவரங்களையும் கூறினாள் ரிதம்.

என்ன சொல்ற? அப்புறம் என்ன ஆச்சு? என்று மிதுன் கேட்க

எனக்கு எரிச்சலா வருதுடா இவன பேசாம கன் எடுத்து போட்டு விடலாம் என்று நினைத்தேன். 

போட வேண்டியது தானடி ஜாலியா இருக்குமே என்று மிதுன் சொல்ல..

ரிதம் அவனைப் பார்த்து முறைத்தாள்.

.ரிதம் என அதட்டலுடன் அழைத்தான் சத்ய தேவ். 

அவள் என்ன என நிமிர்ந்து பார்க்க.. 

சத்யதேவ்  மீண்டும் ரிதம் கொஞ்சம் மேல வா வேலை இருக்கு என்று அழைக்க.. 

ரிதம் கைகளைப் பிடித்து மிதுன் சொல்லு அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்க.. 

சத்தியதேவின் பார்வை ரிதமை துளைத்தது.  நான் போயிட்டு வரேன்.. என அவள் எழ கையை பிடித்த மிதுன். எதுக்கு உன்ன கூப்பிடறான்? இங்க அவனுக்கு என்ன வேலை?  நீ இரு பேசிட்டு போலாம்! நீ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே மாட்ற!  எனக்கு இப்போ மேட்ச் போட ஆளே இல்ல தெரியுமா?  என்று மிதுன் சொல்ல

சத்தி  தொண்டையைக் கணத்தபடி அவளை பார்த்தான். 

டேய் இரு  வந்து மேட்ச் போடலாம் என்று ரிதம் அவன் பின்னால் ஓட.. 

சத்யதேவ் வேகமாக அவனது அறைக்கு ஏறினான் 30 படிகளையும் இரண்டு  மூன்று எட்டில் தாண்டி விட்டான். ரிதம் தான் ஒவ்வொரு படிகளாக ஏறினாள். 

இவன் முகரைய கொஞ்சம் கூட சரியில்லயே…  அவளை ஏதும் பண்ண தான் கூட்டிட்டு போறான் போல!!   அப்படி தான் தெரியுது.  நல்லாவே தெரியுது இவளோ நேரம் பெரிய ரவுடி மாதிரி பேசின இந்த ரிதம் ! அவனை பார்த்ததும் மெல்ட் ஆகி போறாளே!  எப்படி உஷார் பண்றான்? அயொவ் இதெல்லாம் எனக்கு தெரிய மாட்டேங்குதே! அய்யோ!  நானும் எவ்வளவு ட்ரை பண்றேன்.  என்று போனை பார்த்தவனுக்கு இமையாளின் நினைவு வர..

போன் பண்ணுவாளா?  பண்ணட்டும்.. பண்ணுவா! அதுக்கு அப்புறம்  அவள வச்சுக்கிறேன் கச்சேரி என்று நினைத்துக் கொண்டான். 

அடுத்த நாள் அனைவரும் அந்த அடுத்த நாள் அனைவரும்  கோவில் கும்பாபிஷேகத்துக்கு கிளம்பினார்கள். 

இந்த கும்பாபிஷேகம் தான் பல திருப்பம் ஏற்பட போகிறது. 

அப்படி என்ன நடக்கும் பார்க்கலாம் 

வருவான். 

EPISODE 167

சத்ய தேவ்வை பின் தொடர்ந்து வந்தவள் அறைக்குள் சென்றதும் படி ஏறியதில் மூச்சு வாங்க எதுக்கு என்னை கூப்பிட்ட என்ன விசயம் சொல்லு என ரிதம் நிமிர்ந்து கேட்க.. அதற்குள் அவன் கதவை தாழ் போட்டான். 

என்ன விசயம் என அவள் கதவை பார்த்துக் கொண்டே அவனை பார்க்க, சத்ய தேவ் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. நேராக அவளின் அருகில் வந்தவன் அவளையே ஒரு சில நொடிகள் பார்த்தான். 

ஹே உன்னைத் தான் டா கேட்டுட்டு இருக்கேன். என்றவள் சாக் ஆகி “ஹக்” என துள்ளினாள். அவன் தான் வேகமாக அவளை கட்டி அணைத்தபடி அப்படியே படுக்கையில் விழுந்தான். 

டேய் மலைமாடு என்ன டா பண்ற? எதுக்கு என்னை கூப்பிட்ட? என ரிதம் மூச்சிரைக்க பேச.. சத்ய தேவ் அவனது முகத்தை அவளின் கழுத்து எலும்பில் புதைத்தான். ஹக் ஸ்ஸ் ம்ம்..  ஹிக்கிம்.. ம்ம் ஹிம்.. என்ன டா பண்ற? அய்யோ என் பிராணன் போகுதே! என அவள் நெளிய..  அதை நான் தான் டி சொல்லணும்! அவன் கூட போய் சாப்பிடுற? என்னை விட்டுட்டு! அவன் கூட கேம் விளையாடுற!! கொழுப்பா என அவனது கைகள் அவளின் பின் பக்கத்தை பிடித்தான். 

டேய் பண்ணி மாடு வலிக்குது டா!!  யூஊஊ! ராஸ்கல் என்ன டா கேடு? உனக்கு..  நான் அவன் கூட இப்போவா விளையாடுறேன். குட்டி வயசுல இருந்து எனக்கு தெரியும் பிறந்ததில் இருந்து எனக்கு மித்துவ தெரியும். நீ யாரு டா தடி மாடே! இதையெல்லாம் கொஸ்டின் பண்ற? உன்னை விட மிதுன எனக்கு 25 யியர்சா தெரியும். சோ உன்னை விட என அவள் சொல்ல.. சத்ய தேவ் பல்தடம் பதியும் படி அவளின் கழுத்தெலும்பில் கடித்தான். 

டேய் வலிக்கிது சக்தி உன்னை சும்மா விட மாட்டேன் டா! என அவள் அவனை கடித்து வைக்க, ரிதம் எதையோ தீவிரமாக யோசித்தவள். அப்போ சத்ய தேவ்க்கு ஜல்லஸ்ன்னு எடுத்துக்கவா? உனக்கு மிதுன் என் கூட பேசினா ஜலஸ்! இது தான் லவ் சிம்டம் என  ரிதம் அவனது முகத்தை பிடித்து முத்தமிட வர முத்தத்தில் வன்மை கொடுத்தவன். சொக்கி சொக்கி ரசித்து கிறங்கி உதடுகள் உணர்ச்சி தொலைக்க, நா வறண்டு மூச்சு தவித்து முத்தமிட்டான். அவளும் சலிக்காமல் கண்களை இறுக்கி மூடி லையத்து கிடந்தாள். 

முகமெல்லாம் சிவக்க அவளின் கழுத்தில் கடித்த பல் தடத்தை வருடி பார்த்தவன். அவளின் உதட்டில் ஒற்றி ஒற்றி முத்தமிட்ட படி. அது ஜலஸ் இல்ல நீ என்னோட property! So எனக்கு எப்போ கொஞ்ச தோணுதோ உன்னை பார்க்க தோணுதோ ரசிக்க தோணுதோ கடிக்க தோணுதோ எக்ஸ்ட்ரா கசக்க, வருட, பிடிக்க, ஒட்ட, உரச இப்படி எல்லாமே பண்ணுவேன். அதுவும் தோணும் போது. ஏன்னா நீ என் property!  என மொத்த விசயத்தையும் முத்தத்தின் இடைவெளியில் கூறினான் சத்ய தேவ். 

ரிதம் அவனை தள்ளி விட போராட.. அவளின் வாசத்தை மொத்தமாக உள் இழுத்தவன். கண்களில் மோகம் மின்ன கீழ் உதட்டை கவ்வி இழுத்தான். 

இனி மிதுன் கூட நான் விளையாடுவேன் டா! அவன் கூட தான் பேசுவேன். என்ன பண்ணுவயோ பண்ணிக்க. என ரிதம் ஆவேசத்துடன் சொல்ல..  அப்போ லவ் பைட்ஸ் எல்லாரும் நோட்டீஸ் பண்ற போல கொடுப்பேன். உனக்கு ஓகேவா! என்றான் விஷமமாக.. 

உன்னை என பற்களை கடித்து அவனை முறைத்து பார்த்தாள். விடைக்கும் மூக்கை கடித்தான். டேய்ய்!!  நீ எதுவும் பண்ணு உன்னோட வாலை கட் பண்றேன். கண்டிப்பா பண்ணுவேன்..  அதுக்கு கீழே இருக்க ரெண்டு என ஆரம்பிக்க..  சத்ய தேவ் அவளின் வாயை பொத்தியவன். ஓ அந்த அளவுக்கு வந்துட்டயா அப்போ உன்னோட கழுத்துக்கு கீழே இருக்க ரெண்டையும்  உன்னை மொத்தமா  சுருட்டி கடிச்சு தின்றுவென் என அவன் சொல்ல.. அவளின் உடல் கிறுகிறுக்க முக்கிய புள்ளி குறுகுறுத்தது. 

நீ பண்ணா நானும் பண்ணுவேன் டி! அத்தோட நிக்க மாட்டேன். நான் சொன்றதையும் மீறி நீ அவன் கூட போய் பப்ஜி, பாண்டா, போன்டா அப்டின்னு எதுவும் விளையாடு அப்புறம் மேலே கீழ என அவன் ஆரம்பிக்க.. வாயை பொத்தினாள் ரிதம். அவளின் கையில் முத்தமிட்டான். 

ச்சீ! என ரிதம் தட்டி விட.. இடுப்பை இறுக்கி நசுக்கி உதட்டில் இருந்து உள் தோல் உரிந்து இரத்தம் வரும் அளவுக்கு ஒரு முத்தம். இப்போ போகலாம் என்பது போல மொத்த சக்தியும் உறிஞ்சி கொண்டு விட்டான். அவள் தள்ளாடிக் கொண்டே உதட்டை பிதுக்கிய படி கண்ணாடியில் பார்க்க.. சத்ய தேவ் அத்தோடு நில்லாமல் அவளின் பட்ல வெடுக்கென ஒரு அடி! சுல்லென வலிக்க டேய் நானும் பொறுமையா போனால் நீ மிஞ்சி மிஞ்சி போற! என தேங்காய் எண்ணெய் பாட்டிலை அவன் மீது அடிக்க தூக்கினாள். 

ஹே ஹே வேணாம் டி! நான் உன் புருஷன் டி! என சத்ய தேவ் எழுந்து நகர முயற்சி செய்ய.. 

புருஷனாவது மயிறாவது என H. ராஜா போல பேசியவள். இது மாமி வீடுன்னு உன்னை விடுரென். இல்லன்னா நீ சால்னா டா! என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அறையை விட்டு வெளியே சென்றாள். அவன் கூட விளையாடின நான் சொன்னத கட்டாயம் செய்வேன் டி என சத்ய தேவ் எச்சரித்து அனுப்ப.. டேய்.. 

போடி.. போடி என காலரை தூக்கி விட்ட படி சட்டையை சரி செய்து கொண்டே நடந்தான் சத்ய தேவ். 

இரவு உணவு தயாராகிக் கொண்டிருக்க மிதுன் வீட்டுக்கு மாப் போட்டுக் கொண்டிருந்தான். விவேகா பாத்திரம் விளக்கி கொடுக்க, இதழ் உடைகளை மடித்துக் கொண்டிருந்தாள். என்ன டா மிதுனே மாப் போடுற? 

இது நீ செய்ய வேண்டியது டி! அந்த மகி என்னை செய்ய விடுறா! கோவிலுக்கு போறோம் வீட்டை சுத்தம் பண்ணிட்டு தான் போகனுமாம். அதுக்கு தான் என்னைய வேலை வாங்குது மகி என்றான் மிதுன். 

சத்ய தேவ் அவன் கையிலிருந்த மாப் வாங்கி துடைக்க ஆரம்பித்தான். நீ எதுக்கு சக்தி இதை பண்ற? அவன் பண்ணட்டுமே என சூர்யா சொல்ல.. அழுக்கு அப்படியே இருக்கு டாடி அது தான் நானே பண்றேன் என சக்தி ஸ்கோர் எடுக்க.. மிதுன் தாவிக் கொண்டு சத்ய தேவ் பக்கம் அடிக்க போக.. 

டேய் மிதுனே சொல்றத கேளு! அவன் சொன்னா சொல்லிட்டு போறான். வாடா என ரிதம் அழைக்க.. விட்ரி இப்போவே அவனை சும்மா விட மாட்டேன் என மிதுன் துள்ள…  மிதுனே சொல்றத கேளு என அழைக்க.. 

சக்தி இருவரையும் முறைத்துக் கொண்டே வேலையை செய்தான். ஹே விட்ரி என மிதுன் மீண்டும் சொல்ல.. போ போய் அவன் கிட்ட அடி வாங்கு அப்போ தான் அடங்குவ என ரிதம் விட்டு விட..

மிதுன் அவளை பார்க்க..   என்ன டி அவ்ளோ தானா என்று கேட்க  ரிதம் அவனை கடுப்புடன் பார்த்தவள்.  நானும் உன்னிடம் எத்தனை தடவை சொல்லிட்டு இருக்கேன்?  அவன் திருப்பி அடிச்சானா! நீ தாங்க மாட்ட டா! சுண்டல் தான் சாப்பிடறான் ஆனா அடிச்சா நம்ம பஞ்சர் ஆயிடுவான் என்று கூறினாள் ரிதம். 

அப்போ உன்னையும் அடிச்சிருக்கானா?  சொல்லுடி!  இப்பவே  இந்த நிமிசமே இறால் மீசை கிட்ட சொல்லிரு..

சாரி அது யாரு என்று ரிதம் கேட்க.. 

அது தாண்டி உங்க அப்பா!  சாரி கெடா மீசை கிட்ட சொல்லிடு அவ்ளோதான் இவனை புரட்டி எடுத்துடுவாங்க இன்று மிதுன் கூற.. 

அது அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது என்று ரிதம் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். 

இங்க என்ன நடக்குது?  யார்கிட்ட என்ன சொல்ல போறீங்க?  என்று சத்திய தேவ் முறைத்தபடி வந்து நிற்க.. ஒன்னும் இல்ல..  ஒன்னும் இல்ல நீ உன் வேலையை பாரு என்று ரிதம் மிதுனை அழைத்துக் கொண்டு செல்ல.. 

க்கும் என சத்யதேவ் தொண்டையை கணைத்தான்.

அவனை கண்டு கொள்ளாமல் மித்துன் ஒரு பெரும் மூச்சை விட்டபடி நம்ம மேட்ச் போடலாம் என்று அழைக்க.. சக்தி  முறைத்துக் கொண்டே ரிதமை பார்த்தான்.

ரிதம் தலையை குனிந்து கொள்ள..

ஹே வாடி உன்னோட போன் எங்க?  சரி விடு நான் ஐபேட்ல விளையாடரென். நீ என்னோட போன்ல விளையாடு இந்தா வா! ஃப்ரிட்ஜ் குள்ள உள்ளுக்குள்ள ஐஸ்கிரீம் இருக்கு சாக்லேட் பிளேவர் அவளை வம்படியாக இழுத்துக்கொண்டு சென்று விட்டான் மிதுன் தேவ். 

அவர்கள் செல்லும் இடமெல்லாம் சத்யதேவ் துடைத்துக் கொண்டே வர.. உன் புருஷனுக்கு என்னடி கேடு? எதுக்கு நம்ம போற இடமெல்லாம் வரான் என மிதுன் கேட்க.. 

ரிதம் ஒரு பெருமூச்சு விட்டபடி உன் கூட நான் விளையாடல கூடாதுன்னு என்னை கட்டு படுத்தி வச்சிருக்கான் இல்லன்னா என்னை.. என்னை.. என ரிதம் நகத்தை கடித்த படி யோசிக்க…  வாய்ப்பே இல்ல டி நீ பயப்படாத!  அவனாவது பழிவாங்கறதாவது அவ்வளவு சீன் இல்லடி அவன் தயிர்சாதம் என்று மிதுன் சொல்ல..

டேய் அவன் ஒன்னும் தயிர்சாதம் இல்ல!  நீ தான் தயிர் சாதம் இப்பதானே பயந்துகிட்டு இங்க வந்த! என ரிதம் சொல்ல..

இப்போ என்னதான் பண்ணனும் நினைக்கிறான்? 

நான் தான் சொல்றேனே!  அவன் என்னை ஏதாவது பண்ணிடுவான் டா!  எனக்கு பயமா இருக்கு! 

உன்னை  அடிப்பானா என மிதுன் கேட்க.. 

ஆமா அடிச்சு எனக்கு ரத்தமே வந்துடுச்சு என்று ரிதம் முத்தத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்க.. 

நானும் அவன அடிக்கிறேன் என்று மித்துன் தேரவ் கூற.. 

அய்ய நீ அடிச்சா அது தப்பாயிரும். அவன் என்னை அடிச்சது வேற. நீ அவன அடிக்கிறது வேற, ரெண்டு அடியும் ஒன்று கிடையாது.  என்று ரிதம் எடுத்து சொல்லிக் கொண்டிருக்க.. 

என்னடி புரியாம பேசுற? என்ன கமல் படம் பாத்தியா? என்று மிதுன்  கேட்க

இல்ல இப்ப நான் சொல்றதை கேளு என்று மீண்டும்  அவள்  முதலில் இருந்து ஆரம்பிக்க.. வந்து விட்டான் சத்ய தேவ்..

அவனை முதலில் பார்த்தது மனையாள் தான். சத்தியதேவ் நாக்கை மடித்து கீழ் உதட்டுக்குள் வைத்துக் கொண்டவன். அவளை முறைத்துக் கொண்டு பார்க்க.. 

அய்யோ வந்துட்டான் கடன்காரன் என்று ரிதம் முன்னாள் நின்று கொண்டிருக்கும் சத்யதேவ பார்த்தாள்.

ஹே ரித்து.. உன்னைத் தான் டி என மிதுன் அழைக்க…

உன்ன மாமி கூப்பிடறாங்க போ.. 

ஹான் என மிதுன் திரும்ப..

 அத்த என அழுத்தமாக உச்சரித்தான்.  உள்ளுக்குள்ளிருந்து.. அதுவே இருவரையும் பயமுறுத்தியது.  மிதுன் எட்சிலை விழுங்கிய படி பார்த்தான்.  ரிதம் இதுதான் சாக்கு என வேகமாக அந்த இடத்தில் இருந்து சென்று விட.. 

மிதுன் தேவ் அவளின் பின்னால் சென்றான்.  அவனை வளைத்து பிடித்தவன். கதவில் அழுத்த..

டேய் என்ன டா பண்ற? என மிதுன் முக்கிய படி பேச.. இனி அவளை வாடி போடி இந்த மாதிரி எதுவும் கூப்பிட்ட அப்புறம் கழுத்தை திருகி போடுவேன். ஓஹ என மிதுன் கையை ஓங்கிக் கொண்டே உனக்கு என்னடா? நான் அவளை எப்படி வேணாலும் கூப்பிடுவேன்! அவளை சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். என்று கூற

சத்யதேவ் அவனது முகத்துக்கு முன்னால் வந்தவன்.  நீ இப்ப கூப்பிட்டு தான் பாரேன் என்கிட்ட செமத்தியா வாங்க போற!  என்று  சொல்ல,  உனக்கு எதுக்குடா நான் பயப்படணும்?  ரிதம் உனக்கு பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னாடியே அவ என்னோட என மிதுன் ஆரம்பிக்க.. 

சத்ய தேவ் அவனது கையை முறுக்கி பிடித்தான். 

டேய் என்ன ஓவரா போற என்று மிதுன் ஆரம்பிக்க

அவளை மரியாதையா ரிதம்னு கூப்பிடு!  அப்படி இல்லன்னா அண்ணி என்று கூப்பிடு!  இது ரெண்டும் இல்லாமல் வாடி போடின்னு நீ கூப்பிட்டத  நான் பார்த்தேன்!  அதுக்கப்புறம்… சொல்ல மாட்டேன்.. 

என்ன பண்ணுவ! என்ன புதுசா அக்கறை? ரிதம் மேலே! அவளை அம்மா சொன்னதுக்காக தானே கல்யாணம் பண்ண? இப்போ ஓவரா பில்ட் அப் கொடுக்குற? என மிதுன் கேட்க.. 

சத்ய தேவ் கொஞ்சமாக சிரித்த படி ஓ அப்படியா இதை நான் அப்படியே மகி கிட்ட சொல்லுவேன். இதோ இப்போவே போறேன் என அவன் நகர, போடா போ போய் சொல்லு மகி எனக்கு எப்போவுமே சப்போட் பண்ணுவா! .

அப்படியா! ஆனால் என்னோட விசயம் அதுவும் கல்யாணம் விசயம் டோட்டலி இரு டி மித்து இப்போவே அம்மா கிட்ட கேட்டு உன்னோட டவுட்டை க்லியர் பண்றேன் என சத்ய தேவ் சென்றான். 

மிதுன் மனதில் ஒரு வேளை நம்ம கொஞ்சம் டூ மச்சா போறோமோ நமக்கு பயப்படுற.. நமக்கு சப்பொட் பண்ற ஒரே ஆளு மகி தான்! அய்யோ போறான்! டேய் இர்ரா என ஃபாலோ செய்தான். 

அனைவரும் இதோ கிளம்பி விட்டார்கள் கோவிலுக்கு. ரிதம், ஹரிணி, நிதின், சத்ய தேவ் நால்வரும் ஒரு காரில் வர அவர்களை சுற்றி பாதுகாப்பு படை வட்டமடித்து கொண்டு ஊர் வந்து இறங்கியது. அந்த நேரம் ரிதமுக்கு அழைப்பு வர, கூடவே சத்ய தேவ்க்கும் அழைப்பு வந்தது. 

என்னவா இருக்கும்? 

வருவான். 

EPISODE 168

மிதுன் மனதில் ஒரு வேளை நம்ம கொஞ்சம் டூ மச்சா போறோமோ நமக்கு பயப்படுற.. நமக்கு சப்பொட் பண்ற ஒரே ஆளு மகி தான்! அய்யோ போறான்! டேய் இர்ரா என ஃபாலோ செய்தான். 

இப்ப என்ன?   என் பின்னாடி சும்மா ஃபாலோ பண்ணிட்டு வந்தா? நான் டாடி கிட்டயும்  உன்னை சேர்த்துப்சொல்ல வேண்டி வரும் என சத்ய தேவ் சொல்ல..

இப்போ என்ன பண்ண சொல்ற? என்று மிதுன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டான். 

இனி நீ எப்பவுமே அவளை வாடி போடின்னு கூப்பிடவே கூடாது! என்ன சொல்ற என  சத்திய தேவ் கேட்க..

சரீ சரீ இனிமே பேர் சொல்லி கூப்பிடுறேன் என்று கூறினான் மிதுன். 

ஹான் அது! என்று கூறியவன் சிரித்துக் கொண்டே முன்னால் சென்றான். 

அனைவரும் இதோ கிளம்பி விட்டார்கள் கோவிலுக்கு. ரிதம், ஹரிணி, நிதின், சத்ய தேவ் நால்வரும் ஒரு காரில் வர அவர்களை சுற்றி பாதுகாப்பு படை வட்டமடித்து கொண்டு ஊர் வந்து இறங்கியது. 

சத்திய தேவ் தான் காரை ஓட்டி கொண்டு வந்தான்.  அதனால் ரிதம் பாதி தூரம் முழித்துக் கொண்டு வர கண்ணாடியில் அவளை கழுகு பார்வை பார்த்துக் கொண்டு காரை ஓட்டினான்.  என்ன? இப்படி பார்க்கிறான்? கடன்காரன்  கடங்காரன் என்று நினைத்தவள். இனி அவன் பாக்கவே கூடாது!  அதுக்கு நாம தூங்கி ஆகணும்! என்று ஒரு பக்கமாக தலை சாய்த்து  படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

இன்னொரு பக்கம் ஹரிணி அவளையும் கிட்டத்தட்ட அதே போல் தான் நித்தின் பார்த்துக் கொண்டிருந்தான்.  ஹே ஒரு நிமிஷம் காரணம் காரை அப்படியே நிறுத்து. 

 எதுக்கு என்று சத்திய தேவ்  கேட்க.. 

நான் போய் ஹரிணி பக்கத்தில் உட்கார்ந்துக்கிறேன் என்று கூறினான் நித்தின் பிரகாஷ். 

எதுக்கு அவ பக்கத்துல போய் உக்காருற? அங்க நல்லா தானே உட்கார்ந்துட்டு இருக்கா என்று அருகில் இருப்பவனை பார்த்தான் சத்திய தேவ்..

இல்ல அவளுக்கு தூக்கம் வந்துடுச்சு!  எங்க சாயிஞ்சு தூங்குவா அதனால கொஞ்சம் ஓரமா நிறுத்து.. நான் போய் அவ பக்கத்துல ஒக்காந்துக்கிட்டா, என் மேல சாய்ந்து தூங்குவா என்று கூறினான் நித்தின் பிரகாஷ். 

சத்யதேவ் கண்டுகொள்ளாமல் அவனது வேளையில் முனைப்பாக ஓட்டிக் கொண்டிருந்தான். டேய் உன்னை தான் டா காது கேக்குதா இல்லையா என்று நித்தின் பிரகாஷ் கோபத்துடன் அவனைப் பார்க்க சத்யதேவ் மெதுவான குரலில் நான் கார் ஓட்டிட்டு இருக்கேன் அப்போ நீயும் என் பக்கத்துல தான் உட்காரனும். 

இதுல என்ன லாஜிக் இருக்கு?  என்று நித்தின் கேட்க,  லாஜிக்கா நான் மட்டும் இங்க கார் ஓட்டிட்டு இருப்பேன்!  நீ போய் உன் பொண்டாட்டி கூட அவ சாஞ்சுகிட்டு தூங்க உன் நெஞ்ச கொண்டு போய் குடுப்பியா? நான் உங்களுக்கு கார் ஓட்டிட்டு வரணும்?  என்று  சத்திய தேவ்  சொல்ல

நித்தின் அவனை தினசாக பார்த்தான். என்னடா அப்படி பாக்குற நீங்க இங்க தான் உட்காரனும்.. கார் எல்லாம் என்னால நிறுத்த முடியாது.  அதுவும் இல்லாம  உன்னோட பூனை படையும்,  புலிப்படையும் காரை வட்டம் அடிச்சுக்கிட்டு இருக்கு. அதிலிருந்து இறங்குனா,  நமக்கு தான் பிரச்சனை. நீ எதுக்கு அங்க போற?  ஹரிணி அவ பாட்டுக்கு தூங்கிட்டு போறா! நீ எல்லாத்தையும் அடக்கிட்டு இங்கேயே உட்காரு என்று சத்திய தேவ் சொன்னான்..

உனக்கு என்னடா பொறாமை? அவளுக்கு என்ன புடிச்சிருக்கு!  அதனால நான் அவ பக்கத்துல போய் ஆகணும்! என்று நித்தின் பிரகாஷ் சத்திய தேவை  பார்க்க… அப்போ நீ கார் ஓட்டு! நான் பின்னாடி போறேன்..

நீ எதுக்கு போவ என்று நித்தின் பிரகாஷ் கோபத்துடன் கேட்டான். 

பாரு ரிதம் தூங்கிட்டா!  அவளை நான் என் நெஞ்சில் போட்டுக்கணும்ல்ல நீ சொன்ன மாதிரி என்று சத்திய தேவ் சொல்ல.. 

நீங்க ஒன்னும் லவ் கப்பில் இல்லையே!  இன்று நித்தின் கூற..

லவ் கப்பில் இல்லையா என்று சத்திய தேவ்  கேட்டான். 

ஆமா என்று நித்தின் பிரகாஷ் சொல்ல சத்தியதேவ் என்று  களுக் களுக் ஓசையுடன் வித்தியாசமாக சிரித்து வைத்தான்.

இப்போ எதுக்கு நாயி  சிரிக்கிற? என  நித்தின் பிரகாஷ் கோபத்துடன் பற்களை கடித்துக் கொண்டே கேட்க.. 

அதெல்லாம் உனக்கு புரியாது.  சரி ஓகே! ஆனால் கார மட்டும் நான் நிறுத்த மாட்டேன்.  நீ இங்க தான் இருக்கணும் என்று கூறினான் சத்தி

 டேய் நிறுத்துன்னு சொன்னேன்!  என்று நித்தின் பிரகாஷ் மீண்டும் அவன் கைகளைப் பிடிக்க வர.

சரி அவளோ தானே! ம்ம் தாராளமா நிறுத்தலாம்.. ம்ம் மொத்தத்தையும் நிறுத்திடுவேன். 

என்னடா பண்ணுவ என நித்தின் பிரகாஷ் கேட்க..

நீ படிச்ச டைம்ல ஒரு பொண்ணு கூட date பண்ண தானே அதை எல்லாம் அவகிட்ட சொல்ல மாட்டேன் என கண் சிமட்டி பார்த்தான் சக்தி.

நித்தின் பிரகாஷ் அப்பட்டமான அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க..

என்னடா எனக்கு எதுவும் தெரியாது நினைக்கிறியா?  எனக்கு தெரியும்.  உன்னை கழுகு மாதிரி ஃபாலோ பண்றது தான் என்னோட வேலை!  என்னை  நீ அப்படித்தானே பண்ண? மை டியர் பிரதர் உங்களுக்கு நான் எதும் செய்யலன்னா எப்டி? அதை தான் திருப்பி அடிக்க போறேன்.  என்ன?  சொல்லவா ஹரிணி கிட்ட! நான் எது சொன்னாலும் நம்புவா சத்ய தேவ் சொன்னான்.

சொல்லித் தொலையாத என்று நித்தின் பிரகாஷ் இன்னொரு  புறம் திரும்பிக் கொண்டான். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் பயணம் அதன் பின் அவர்கள் செம்மாண்டாம் பாளையம் வந்து சேர்ந்தார்கள். ரிதம் கை கால்களை முறுக்கிக் கொண்டே இறங்கினாள்.  

சூர்யா மகி இதழ் மிதுன் என மூவரும் நால்வரும் இன்னொரு காரில் இருந்து இறங்கி அவர்களின் வீட்டு பக்கம் கொஞ்ச தூரம் நடந்தார்கள்.  அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.  அதிகாலையை தொட்டுவிட்ட காரணத்தினால் நன்றாக விடிந்து இருந்தது.. ரிதம் தள்ளாடிக்கொண்டே போனை எடுத்தவள்.  நோண்டிக்கொண்டே நடந்தாள்.  ஓரிடத்தில் கல் இருந்து அதில் தடுக்கி விழப் போக அவளை வளைத்து பிடித்தவன்.  எங்கடி கண்ணு வச்சிருக்க?  பார்த்து நடக்க தெரியாதா?  என்று மிரட்டும் தொனியில் கூறினான் . 

அது அது வந்து என்று தயங்கியவள் இனி கரெக்டா நடக்கிறன். தூக்க கலக்கம் என்று கண்ணை சிமிட்டிக்கொண்டே கூறினாள் ரிதம். 

நித்தின் பிரகாஷ் அப்பட்டமான அதிர்ச்சியுடனும் ஹாட் அட்டாக்டனும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு வந்தான்..

ரிதம் எதுவும் பேசாமல் அப்படியே மகியுடன் சேர்ந்து கொள்ள.. இன்னொரு பக்கம் ஹரிணி சேர்ந்து கொண்டாள்.  சத்யதேவ் அவளை பிடித்து விடும் தூரத்தில் நடந்தவன்.  அவளைப் பார்த்துக்கொண்டே  பின் தொடர்ந்தான். நித்தின் பிரகாஷ் அருகில் வந்து விட்டான். 

இங்க என்ன நடக்குது? என நிதின் கேட்க.. 

நீ நான் எல்லாரும் நடக்குறாங்க என்று சத்திய தேவ்  கூறினான். 

டேய் f* நீ என்ன டா பண்ணிட்டு இருக்க? அவளை தாங்கு தாங்கு தாங்கு தாங்கின்னு அந்த தாங்கு தாங்குற? என நிதின் சொன்னான். 

சத்ய தேவ் அதை கண்டுகொள்ளாமல் நீயும்தான் அவளை தாங்கி தாங்குன்னு அந்த தாங்கு தாங்குறேன்னு எனக்கு மினிஸ்ட்ரியிலிருந்து இன்ஃபர்மேஷன் வந்திருக்கு.  நான் என்ன பண்ணட்டும்?  என்று சத்திய தேவ் திருப்பி கேட்க.

நாங்கள் லவ் கப்புல் அப்படித்தான் இருப்போம்! என்று நித்தின் கூறினான்.

நாங்க அரேஞ்ச் இருக்க போல் அதைவிட இருப்போம். என்று சத்திய தேவ்  கூறிக் கொண்டே உள்ளே கேட் பக்கம் நுழைந்தான். 

இதோ நடராஜ் உமா இருவரும் முகத்தில் புன்னகையுடன் நின்றுருந்தார்கள். திருமணத்திற்கு பின்பு கோவில் வேலைகள் மற்றும் வீட்டில் இதர வேலைகள் இருந்ததால் வயதான காலத்தில் சென்னை, பெங்களூர் இப்பொழுதுதெல்லாம்  வர முடியவில்லை.  அதனால் வீட்டிலேயே இருந்தார்கள். 

ரிதம் புன்னகையுடன் அவர்களை பார்க்க! வாங்க பொண்ணு! என்  அழகு ராசாத்தி!  எங்க வீட்டுக்கு குல விளக்கு.  கண்ணுக்குழியோட வந்திருக்கு. சகல சந்தோஷமும்,  செல்வமும் குறையாமல் இருக்கும் மகி.  என்று உமா கூற

சத்யதேவ் சிரித்துக் கொண்டே  ஆத்தா என்று அருகில் சென்றான். 

சக்தி பையா! என்  சக்தி ராசா என்று அழைத்தவர்.  இருவரையும் சேர்த்து ஆலம் கரைத்து சுற்றி போட்டார்.  ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க..  சத்திய தேவ்  அவளின் கைகளை கோர்த்துக் கொண்டான்.  உமாவிற்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. 

அப்படியே இன்பா  போலயே இருக்குதுல்ல என்று நட்ராஸ் சூர்யாவிடம் கேட்க..

அப்படியா தெரியுது?  அவங்க அம்மா மாதிரி பா என்று சூர்யா தன் தந்தையிடம் கூறினார். .

இல்ல சூர்யா அந்த பாப்பா அப்படியே அவங்க  அப்பா மாதிரி உரிச்சு வச்சு பிறந்து இருக்கா.  அவங்க தாத்தா மாதிரியும் என்று கூறினார். நட்ராஸ். 

சரிப்பா என்று சூர்யா சொல்ல அவங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்ல்ல ஏண்டா?! என்று நட்ராஸ் கேட்க,  இல்ல அவங்களுக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டாங்க என்று சூர்யா சொல்ல அதன் பின்  அனைவரும் வீட்டுக்குள் சென்றார்கள்.

அவங்க எப்ப வருவாங்க எதுவும் போன் பண்ணாங்களா என்று ராம் மற்றும் கீதா இருவரை பற்றியும் உமா சூர்யாவிடம் கேட்க..

அவங்க வந்துடுவாங்க வெயிட் பண்ணுங்க என்று கூறவும்,  உள்ளே வந்த மகியிடம் மகி பாப்பாவ கூட்டிட்டு போயி விளக்கு ஏத்த ஏற்பாடு பண்ணு மகி  என்று உமா சொல்ல குளிச்சிட்டு வரட்டுமே அத்தை என்று கூறினாள் மகி.‌

அதுவும் சரிதான் என்று உமா அந்த இடத்தை விட்டு நகர..  அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்க ரெண்டு பேர  மறந்துட்டீங்களா என்று இதழ் உதட்டை பிதுக்கியவாறு உமா பக்கம் நின்று கொண்டிருந்தாள்.

அட அழகு சாமி! என் பொண்ணு உங்கள நான் மறக்காமல் இருப்பேனா?  ஆத்தா உங்களுக்காக போய் ஜவுளி எடுத்துட்டு வந்து இருக்கேன்.  டெக்ஸ்ட்வேலியில் இருந்து. என   அழகாக பேசினார் உமா. 

அப்படியா என்று கண்கள் வெளியே விரிய இதழ் கேட்க..

எல்லாருக்கும் புது துணி சூப்பரா என்று அனைத்து ஜவுளி கட்டைப்பை  சாரி குச்சி பைகளை எடுத்து முன்னாள் வைக்க.. நித்தின் பிரகாஷ் மற்றும் ஹரிணி ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். 

நித்தன் கண்ணு வாங்க!  ஹரிணி பாப்பா உங்களுக்கும்தான் எடுத்து வச்சிருக்கேன் என்று உமா சொல்லிக் கொண்டே நகர.. 

மகி அவர்கள் அனைவரையும் அழைத்து  அவரவர்களுக்கு என்ன டிரஸ் அதை எடுத்து கொடுத்தார் ரிதம் அதை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க.. 

சத்தியத்தை அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். உமா கொண்டை போட்டுக் கொண்டே வெளியே வந்தவர்.  சரி சரி மகி பின்னாடி பக்கம் தண்ணி சுடச்சுட கொதிக்குது.  அப்படியே ஒவ்வொருத்தரா மேல ஊத்திக்கிட்டு வந்துட்டா, ஆறு மணிக்கு கும்பம் அபிஷேக ஆரம்பிச்சுடும்!  நம்ம போயிட்டு சாமி கும்பிட்டு வந்துடலாம் அங்கேயே சாப்பாடு தயாராகிறது வீட்டில் செய்ய சொன்னாலும் செஞ்சுபுடுவோம். எல்லாமே இருக்கு கிளம்புங்கம்மா சட்டுபுட்டுன்னு என்று உமா கூற

ரிதம் மகியின்  அருகில் நெருங்கினாள். என்ன ரிதம் குட்டி? அது வந்து மாமி! 

சொல்லு தங்கம்.

எனக்கு தூக்கம் வருது மாமி என்று கூறினாள்.  மகி  அவளின் சோர்வான முகத்தை பார்த்து கவலை படாதே செல்லம்!  நம்ம போயிட்டு சீக்கிரமா வந்துடலாம்!  ப்ளீஸ் டா தங்கம் என்று மகி சொல்ல.. 

அதற்குள் அவள் கண்கள் வெளியே வந்து விடும் அளவுக்கு பின்னால் திரும்பி  பார்த்தாள். சத்தியதேவ் தான் அவளின் இடைய பிடித்து அழுத்திக் கொண்டிருந்தான்.

ரிதம் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கியவள்.  சரிங்க மாமி..‌ அது  இல்ல எனக்கு தூக்கம் வரல பிரெஷா இருக்கேன்!  பாருங்க!  என்னோட கண்ண பாருங்க என்று முழித்துக் காட்டினாள். 

அதில் மகி சிரிக்க சிரித்துக் கொண்டே சரி சரி ஒன்னும் டென்ஷன் இல்ல.  நம்ம குளிச்சிட்டு அங்க அபிஷேகம் பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்கு வந்துட்டலாம்.  சரியா? அப்புறம் நீ எவ்வளவு நேரம் வேணாலும் தூங்கு நீங்க பெருசா எந்த வேலையும் இல்ல செல்லம்  என்று மகி மீண்டும் கூற

சரி மாமி என்று அவனைப் பார்த்தவள்.  இப்பவாச்சும் விட்டு தொலையேண்டா என்றாள் Sathya dev பிடித்திருக்கும் அவளின் இடையை பார்த்து.

நீ தூக்கம் வருதுன்னு சொன்னா? அடுத்து நான் என்ன செய்வேன் தெரியுமா?  என்று அவள் அருகில் வர.. தயவுசெய்து எல்லாரும் முன்னாடி எதுவும் செஞ்சு வைக்காத!  ப்ளீஸ்..  நான் தூங்கல போதுமா என்று இருக்கும் அவளுக்கான உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.மகி அவரவர் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அனைவரும் குளித்து முடித்து வெளியே வந்தார்கள். 

 மணி ஆறை தாண்டியது. அனைவரும் கோயிலுக்கு கிளம்பினார்கள்.  அந்த நேரம் பார்த்து ரிதமின் போன் சிணுங்கி கொண்டே இருக்க…  என்ன என எடுத்துப் பார்த்தாள். அந்த போதை பொருள் தடுப்பு பிரிவில் தான் இருக்கிறாள். அதை பற்றிய  ஒரு தீர்க்கப்படாத கேஸ் தீவிரமாக போய்க்கொண்டிருக்க..  அவளின் தலைமை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு புதிதாக இன்னொரு ஆள் வந்திருந்தார்.  நகத்தை கடித்தபடி ரிதம் அமர்ந்திருக்க.. 

என் காலங்காத்தால நகத்தை கடிச்சிட்டு இருக்க?  என்ன பழக்கம் டி இது?  என்று சத்திய தேவ்  அதட்டினான். 

போச்சி எல்லாமே போச்சு! என்னோட ஹெட்ட மாத்திட்டாங்க!  இப்ப உடனே என்னை  ஸ்டேஷன் வர சொல்றாங்க! புதுசா இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் ஆக போகுது!  மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்காங்கலாமா?  என்று கூறியவள். எனக்கு பயமா இருக்குடா! இப்போ உடனே பெங்களூர் போகனும் இதுக்கு தான் நான் வரமாட்டேன்னு  சொன்னேன் என்று ரிதம் சொல்ல.. 

அவளின் வாயை பொத்தியவன். வாயை மூட்ரி! வெயிட் பண்ணு!  அப்படி உடனே மாத்திர முடியாது!  என்றான்.

என்ன சொல்ற? அது எப்படி மாத்த முடியும்  என்று அவள் மீண்டும் பேச கொஞ்சம் அமைதியா பொறுமையா அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் உட்கார்ந்து என்ன பண்ணலாம்னு யோசி வழி கிடைக்கும்  என்று கூறியவன் எட்ட சென்று  யாருக்கோ போன் செய்தான். 

அடுத்த ஒரு சில நொடிகளில்  அவளுக்கு போனே வந்தது. 

ஹலோ என்று அவள் பயந்து கொண்டே எடுத்து பேசினாள். 

நீங்க நாளைக்கு வந்தா போதும் என்று மிகவும் பவ்யமான குரலில் பதில் வர..  சரி என  வைத்தவள் யோசனையுடன் சத்தியதேவ் பக்கம் சென்றாள். 

 சரி கிளம்பலாமா என்று  சத்ய தேவ் கேட்க..

ஹே இரு உன் கிட்ட ஒரு விசயம் பேசணும். என்றாள் ரிதம். 

என்ன சீக்கிரம் சொல்லு! என உடையை சரி செய்து கொண்டு சத்ய தேவ் முன்னால் நடந்தான். 

ஹே என்ன பண்ண?  நீ சொல்லி அஞ்சு நிமிஷம் கூட ஆகல?  அதுக்குள்ள எனக்கு போன் வருது. 

என்னன்னு?

நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க!  என்னடா பண்ண? இதுல நீ தான் எதோ பண்ணிருக்க? என போலீஸ் புத்தியுடன் அவனை துளைக்கும் பார்வை பார்த்தாள் ரிதம். 

வருவான். 

EPISODE 169

ஹே இரு உன் கிட்ட ஒரு விசயம் பேசணும். என்றாள் ரிதம். 

என்ன சீக்கிரம் சொல்லு! என உடையை சரி செய்து கொண்டு சத்ய தேவ் முன்னால் நடந்தான். 

ஹே என்ன பண்ண?  நீ சொல்லி அஞ்சு நிமிஷம் கூட ஆகல?  அதுக்குள்ள எனக்கு போன் வருது. 

என்னன்னு?

நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க!  என்னடா பண்ண? இதுல நீ தான் எதோ பண்ணிருக்க? என போலீஸ் புத்தியுடன் அவனை துளைக்கும் பார்வை பார்த்தாள் ரிதம். 

சத்ய தேவ்  டேய் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க.. சொல்லு எப்படி?  நீ சொன்னதுக்குள்ள எனக்கு போன் வந்தது.  என்னடா பண்ண? இப்ப எனக்கு தெரிஞ்சே ஆகணும்? என்று அவன் அருகில் நெருங்கினாள். 

ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல! என்று அவன் திரும்பிக் கொள்ள..  ரிதம் அவனை வழிமறித்து சொல்லு! யார்கிட்ட போன் பேசின? என்று கேட்க..  சத்யதேவ் அவளை பார்த்து சிரித்தான்.  டேய் ஒழுங்கா போன காட்டு?  என்று வேகமாக அவனது போனை பிடுங்கினாள். ம்ம் பார்த்துக்க! என புன்னகை உதிர்த்து கொண்டே அதில் ஒண்ணுமே இருக்காது.  நீ என்ன வேணாலும் செக் பண்ணிக்கோ! என்று கூறிக் கொண்டே நின்றான். 

இது யாரு? என கேட்க.. லூசு படி டி! அதுல என்ன போட்டிருக்கு? 

“கமாண்டர்”

“அது உன் டாடி தான்!” என்றான் சத்ய தேவ். 

ரிதம் அவனை உற்று பார்க்க, லூசு லூசு என்னோட nameஅ மாமா போன்ல  சோல்ஜர்ன்னு சேவ் பண்ணி வச்சிருப்பாங்க. நான் கமாண்டர்ன்னு பண்ணிருக்கென். என்றான். 

அப்படி சொல்லு! நீயே ஒரு வெட்டி பைய? நான் அப்போவே நினைச்சேன். எப்படிடா? இவன் போய் போன் பேசினதும்,  நமக்கு உடனே கால் வருதுன்னு! அப்பவே எனக்கு டவுட்டா இருந்துச்சு.. நீ ஒரு தண்டசோறு!  ஒன்னும் பிரச்சனை இல்ல என்று கண்ணுக்குளி தெரிய சிரித்தாள் ரிதம். 

அவளை வைத்த கண் வாங்காமல் சத்யதேவ் பார்த்துக் கொண்டிருந்தான். ஏய் என்ன அப்படி பார்க்கிற?  உனக்கு என்ன கோபம் வருதா?  என்ன அடிக்க போறியா? என்று அவள் கேட்க, ச்ச ச்ச என உச்சிக்கொட்டிக்கொண்டே சத்தமிட்டவன்.  அப்படி எதுக்கு நான் பண்ண போறேன்? நீ சொல்றது  கரெக்டு தான்.  நான் தண்ட சோறு தான்.  என் பொண்டாட்டி தான் வேலைக்கு போறால்ல.  அப்புறம் நான் எதுக்கு வேலைக்கு போயிட்டு?  தேவையே இல்லாம!  ஏன்?  நீ எனக்கு சம்பாதித்து கொட்ட மாட்டியா?  இப்போ வேலை பண்ணனும் அவ்ளோ தானே வேலையை நம்மை உருவாக்கிக்கணும் தெரியுமா!  என்று சத்யதேவ் கூறினான்.

நீ எந்த வேலைக்கு போக போற?  வெட்டி தண்டம் என்று அவள் மீண்டும் கேவலமாக பேச..   ஒரு வேலை இருக்கு! ஹான் ஒன்னு இல்ல  ரெண்டு வேலை என்று சத்திய தேவ்  கூறினான்.

என்ன?  உனக்கு  வேலை செய்யணும் தோணுதா?  ரொம்ப சந்தோஷம்!  என்னோட மாமா மாமிக்கு எந்த மாதிரி ஒரு பையன். உன்னை விட  மிது… என்று  ஆரம்பித்தவள். அப்படியே நிறுத்தினாள்.

சக்தி  கோபத்துடன் அருகில் நெருங்க..  ரிதம் பேக் அடித்தாள். சொல்லு!  இப்போ என்ன சொல்ல வந்த?  சொல்லு?  என்று அருகில் நெருங்கினான்.

ஒன்னும் இல்ல என்று ரிதம் அந்த இடத்தை விட்டு செல்ல போக..  சத்தியதேவ் அதே இடத்தில் நின்று கொண்டு, கொஞ்சம் கம்பீரமான குரலில் என்னை விட  எவ்வளவோ பரவால்ல அதுதான!  என்று கூறிவிட்டான்.

ரிதம் நாக்கை கடித்துக் கொண்டு அய்யோ கண்டுபிடிச்சிட்டானே என்று நினைத்தவள்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று சமாளித்தாள். 

ஹே நீ யாரு?  என்ன?  உனக்கு எங்க எவ்வளவு கொழுப்பு இருக்கு?  நீ எந்தெந்த இடத்தில எப்படி எல்லாம் பேசுவ?  எப்படி எல்லாம் கண் சிமிட்டுவ?  எப்படி ஆக்டிங் விடுவ? அப்டின்னு உன்ன பத்தி அக்கு வேரா ஆணிவேரா எனக்கு  தெரியும்டி!  சீன போடாத. ஆனால்  இதுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும் அப்போ உன்ன வெச்சிக்கிறேன் என்றவன். அப்போ அப்படியே  என் முன்னாடி விக்கித்து போய் நிப்ப!  கூடிய சீக்கிரம் அப்படி ஒரு நாள் வரப்போகுது என்று கூறினான் சத்திய தேவ். 

என்ன?  என்ன?  என்று ரிதம் அவனைப் பார்க்க, அது வந்து ஹான்  என்னோட ரெண்டு வேலையில வேலைய பத்தி சொல்றேன்! நான்   அப்பாவாகிக்கனும் அவ்வளவுதான். 

என்ன? நீ குழந்தை பெத்துக்க போறியா?  என்று ரிதம் ஆச்சரியத்துடன்  கேட்க.. 

ஆமா!! என்றான் சத்ய தேவ். 

எப்படி?! உனக்கு கர்ப்பப்பை இருக்கா? சத்திய தேவ் சிரித்தபடியே.. நீ எதுக்கு இருக்க?  அதுதான் உன்ன அம்மாவாக்கிட்டேனா!  ஆட்டோமேட்டிக்கா நான் அப்பாவாகிடுவேன்!  அப்புறம் குழந்தை பிறக்கும்.  எப்படியும் நீ அதை கவனிக்க மாட்டேன்!  எனக்கு தெரியும் டி!  என் குழந்தைய நான் கவனிப்பேன் என்று கூறினான். 

ரிதம் அவனை ஏற இறங்க பார்த்தவள். என்னோட  கண்டிஷன் என்னன்னு தெரியும்ல?   என்று கூற.. 

ஹான் ஹான்! என தலையை கோதியவன்.  உன்னோட அந்த ரெண்டையும் நான் பார்க்க கூடாது அவ்வளவு தான? என சத்ய தேவ் பார்வை அவளின்  புடவையில் இருக்கும் மாங்கனி பக்கம் சென்றது. உமா வாங்கி கொடுத்த புடவையில் இருக்கும் மாங்கனியை தான் நான் இங்கு பதிவு செய்கிறேன். ஹி ஹி ஹி! 

ரிதம்…? 

ஹரிணி கண்ணாடியின் முன் நின்று கொண்டிருக்க,  இப்போ வந்த இடத்துல இப்படி எதுக்கு முகத்தை வச்சுட்டு இருக்க? உனக்கு பிடிச்சவங்க எல்லாரும் உன்னை  சுத்தி இருக்காங்களே!  இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை?  என்று அவளது கொசுவ மடிப்புகளை கீழே அமர்ந்து ஹீட்டர் வைத்து சரி செய்து கொண்டே நிமிர்ந்து பார்த்தான் நிதின். 

அவனைப் பார்த்து அடுத்த நொடி புன்னகையுடன் இல்லல்ல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று முகத்தை மாற்றினாள் ஹரிணி. உன் கூட ஒரு வருஷம் இருக்கேன்.  அதுக்கும் முன்னாடி உன்னை இன்ச் இன்ச்சா நான் எல்லா இடத்திலும் நோட் பண்ணிட்டு இருக்கேன்!  புரியுதா? அவன் கூட இருக்கும்போது அப்படியே சிரிச்சு அவன் கையை கோர்த்து மயங்கி நின்னுட்டு இருப்ப?  இப்போ என்ன?  இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க?  சொல்லு இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல!  எப்படியும் இன்னும் அவன் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கவே மாட்டான். என்றான் நிதின். 

அப்படியா என ஹரிணி அவனிடம் அந்த அளவுக்கு உனக்கு தெரியுமா என்ன? உன்னை விட எனக்கு  சத்திய தேவை பற்றி தெரியும் என்றாள்.

அய்யோ! இல்ல  டி! நான் அவனை பத்தி பேசல!  சத்திய தேவ பற்றி எனக்கு எதுக்கு தெரியணும்? நான்  ரிதம்மை பத்தி எனக்கு தெரியும்!  என்று கூறினான். . ஹரிணிக்கு கோபம் வர வேகமாக அவனை தள்ளி விட்டாள். 

அவன் அவளைப் பார்த்து தீர்க்கமாக பக்கத்துல வந்தாலும் புடிக்க மாட்டேங்குது!  இப்படியே முகத்த வச்சுட்டு இருந்தா? என்ன அர்த்தம்? உனக்காக நான் என்ன பண்ணனும்னு சொல்லு! என்று  நித்தின் கேட்க..

இனி ஏதாவது ஒரு தடவை ரிதம்ம பத்தி பேசின?! உன்னை என்ன பண்ணுவேன்னு  எனக்கே தெரியாது என்று கூறினாள்  கோபமாக.

இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல? நான் பக்கத்துல வந்தாலும் என்னை எதுவும் பண்ண விட மாட்டேங்குற! நீயும் என்னை எதுவும் பண்ண மாட்டேன்ற! அவளை பத்தி நான் என்ன தப்பா பேசிவிட்டேன்? அவ மேல எனக்கு எந்த எண்ணமும் கிடையாது.  ஆனால் உன்ன பத்தி எனக்கு தெரியும். இப்போ கூட  சத்யதேவ் மேல உனக்கு இப்பவும் சாப்ட் கார்னர் இருக்கு. என்று நித்தின் உதட்டை கடித்துக் கொண்டே கூற..

 ஹே ஹே லூசு அப்படி அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.  என்று ஹரிணி அவனது கையை கோர்த்துக் கொண்டாள். 

உனக்கு நான் என்னதான் பண்ணனும்னு சொல்லு!  உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்று நித்தின் கூற…

அப்படியா அப்போ எனக்கு கும்பாபிஷேகத்தில் நிறைய பபுள்ஸ் வேணும் வாங்கி ஊதி தரியா!  என்று கேட்டாள் ஹரிணி . .

நித்தின் பிரகாஷ் அவளை குழந்தையாக பார்த்தவன்.   என்கிட்ட ஒரு குழந்தை கேட்டிருந்தேனா இந்நேரம் நம்ம தயார் பண்ணி இருக்கலாம். போயும் போயும் குழந்தைங்க விளையாடுறத போய் நீ விளையாடிட்டு இருக்க?! நீ எப்படி குழந்தை பெத்துக்குவ? என்று நித்தின் கேட்டான்.

ஹரிணி பேச வர..  அண்ணா ரெடியா என்று இதழ் புன்னகையுடன் அந்த இடத்திற்கு வர..  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு ரெடி போலாம் தூரி என்று வெளியே வந்தார்கள். 

*

உன்னோட அந்த ரெண்டையும் நான் பார்க்க கூடாது அவ்வளவு தான? என சத்ய தேவ் பார்வை அவளின்  புடவையில் இருக்கும்..  என சொல்லி முடித்தான். 

ச்ச்சி ராஸ்கல் என்று அவள் வாயில் முனக..

நான் பாக்க மாட்டேன் ஆனால் தொடுவென்.  எல்லாமே பண்ணுவேன்!! அங்கும் இங்கும் எதையோ தேடியவள். ஒரு துடைப்பத்தை எடுத்து  கொண்டவள்.  அவன் அருகில் நெருங்க.. 

ஹே ராவடி இராங்கி நான் லைட் ஆஃப் பண்ணிட்டு பண்ணுவேன் டி! என்று கூறினான் சத்திய தேவ். 

ரிதம் செல்லம் என்று மகின் குரல் கேட்க..  வேகமாக தொடப்பத்தை கீழே போட்டவள்.  உடையை சரி செய்து கொண்டு மாமி நான் ரெடி ஆயிட்டேன்! என்று வந்து நின்றாள்.

சத்யதேவ்  அவளின் பின்னால் கம்பீரமாக அந்த பட்டு வட்டி சட்டையில் அழகாக இருக்க இருவரையும் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டவள்.  அவ்வளவுதான் டைம் ஆயிடுச்சு அங்க கோவிலுக்கு போகணும் என்று அழைத்துக் கொண்டு கீழே வந்தார்கள். அவர்கள் எப்பொழுதும் வழக்கமாக போடும் மஞ்சள் தாலி சரடு மற்றும் சன்னமான மோப்பு வைத்த தாலிக்கொடி என ஹரிணி மற்றும் ரிதம் இருவருக்கும் உமா கொடுத்தார். 

ஹரிணி வாய் எடுக்க வர இத வேணாம்னு சொல்லக்கூடாது கண்ணு! நித்தினை போட்டு விட சொல்லு! கண்ணு உன் பொண்டாட்டிக்கு சக்தி இந்தாடா செல்லம் பாப்பாவுக்கு போட்டு விடு என்று கொடுக்க..  இருவரும் அவரவர் மனைவிகளின் கழுத்தில் போட்டு விட்டார்கள். 

சரியாக 6:00 மணிக்கு 6:30 மணிக்கு கோவிலுக்கு பக்கம் வந்தார்கள் மிகவும் விமர்சையாக கூட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் ஓமகுண்டத்தில் இருந்து வந்த மூலிகையின் வாசம் அந்தப் புகையின் வாசம் பரவிக் கொண்டிருந்தது அது நாசியை தொலைக்க அனைவர் உடைய மனமும் தெய்வீகமாக கடவுளை நினைத்து பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள் அந்த இடமே பச்சை பசேல் அந்த கோவிலை சுற்றி பச்சை பசேல் என்று மிகவும் ரம்யமான காட்சி ஒரு பக்கம் சிவன் கோவில் அதற்கு அடுத்து பெருமாள் கோவில் அடுத்த கோட்டை மாரியம்மன் அடுத்து ஊர் பொன் குழலி அம்மன். 

நட்ராஜ் மற்றும் உமா இருவரை பார்த்ததும் அங்கிருக்கும் ஊர் பெரியவர்கள் அனைவரும் வணக்கம் எடுத்தார்கள். மித்துன் தேவ் நடராஜன் அருகில் இருக்க, இதழ் ஹரிணியின் அருகில் இருந்தாள். சூரியதேவ் மகி ரிதம் சத்யதேவ் என கும்பலாக கோவிலுக்குள் நுழைந்தார்கள்.  கோவில் வெட்ட வெளியில் இருப்பதால், அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.  ஒரு பக்கம் போலீஸ் பாதுகாப்பு , இன்னொரு பக்கம் கார் , இன்னொரு பக்கம் சின்ன சின்ன திருவிழா கடைகள் என அந்த இடமே கலகலவென்று இருந்தது.  கொலுசு சத்தம் வளையோசை என மொத்தமும் ஒரு ரம்யமான காட்சியை மிதுன் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அங்கிருக்கும் அனைவரும் மிதுனுடைய உறவுக்கார பெண்கள்.  முறைப்பெண்கள் பாவாடை தாவணியில் பட்டாசாக வந்து இறங்கினார்கள்.  இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே வந்திருப்பேன் தாத்தா  என்று மிதுன் சொல்ல.. 

ஆமாண்டா மித்துன நீ வந்திருந்தால் நீயும் நானும் இங்கே வந்து கொஞ்சம் வேலையெல்லாம் பார்த்து இருக்கலாம் என்று நட்ராஜ் சொல்ல.. 

ஏன் தாத்தா என்னை நீங்க கூப்பிடல?  இனிமே பண்டிகையான டிங்டாங்ன்னு நான் வந்துடுவேன் என மிதுன் கூறினான். 

சூரியதேவ் அவனை பார்த்து  இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை உன்னை எல்லாம் எவளும் திரும்பி பார்க்க மாட்டாள் என்று கூற..

தாத்தா அவரை கம்முனு இருக்க சொல்லுங்க. நான் உங்ககிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.  அவருக்கு என்ன வந்துச்சு? எப்போ பாரு என்ன நோண்டிக்கிட்டே இருக்காரு . எனக்கு சுத்தமா பிடிக்கல என்று மிதுன் முகத்தை மாற்ற..

சூர்யா தேவை இல்லாம தங்கத்தை திட்டாதே என உமா அதட்ட..

அம்மா அவன் ஒரு தகரம் என்று சூர்யா கூற.. 

தாத்தா நான் அரியர் கூட கிளியர் பண்ணிட்டேன். தெரியுமா?  இவர்  ஏன் இப்படி இருக்காரு?  பேசாம நீங்க வேற ஒரு பையனை ஹாஸ்பிடல்ல தூக்கிட்டு வந்திருக்கலாம்.  ஹாஸ்பிடல்ல இருந்து என்று சொன்னான்.

அனைவரும் சிரித்தார்கள்.  சூர்யா உன்ன மாதிரியே பேசுறான். என உமா சொல்ல..

நான் எங்கம்மா இவன மாதிரி பேசிக்கிட்டு இருந்தேன்?  எதுக்குமா இவன போய் என் கூட கம்பேர் பண்றீங்க?  என்று சூர்யா கூறினார்.

சரி சரி அமைதியா வாங்க இன்று ஓம குண்டத்தின் பக்கம் சென்றார்கள்.  அங்கு கொஞ்சம் கூட்டமாகவே இருக்க ரிதம் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.‌

அப்படியே அவர்கள் கிட்ட தட்ட ரெண்டு மணி நேரம் கலசத்தில் தீர்த்தம் ஊற்றி பூஜை செய்யும் வரை அதை பார்த்துக் கொண்டே நின்றார்கள். நல்லபடியாக கும்பத்தில் அபிசேகம் செய்யப்பட்டு சிறப்பாக முடிந்தது.  அந்த நேரம் சூர்யாவுக்கு போன் வர ராம் தான் அழைத்திருந்தார். எங்கே டா இருக்க? என சூர்யா கேட்க.. நாங்க கோவில் பக்கம் வந்தாச்சு! நீ எங்கே இருக்க? என கேட்டு விட்டு இருவரும் அரசமரத்து பிள்ளையார் விக்ரகத்தின் பக்கம் காத்திருப்பதாக முடிவெடுத்தார்கள். 

இதழ், ஹரிணி, ரிதம் உற்சாகமாக அங்கிருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க, அதில் கண்ணாடி வகைகள், பச்சை குத்துதல் என அனைத்தும் இருக்க, அரிசியில் பெயர் எழுதல் பக்கம் சென்ற மிதுன் கஞ்சா கண்ணழகி என ஒரு பக்கம் எழுதி இன்னொரு பக்கம் இமையா என எழுதி வாங்கினான். 

இதழ் அனைவருக்கும் தெரியாமல் போய் அதே அரிசி பெயரில் எழுத சென்றாள். துவாரகா – சைத்து என ஹார்ட் போட்டு வாங்கினாள். ஏன் என்றால் அப்படி வாங்கினால் சந்தேகம் வராது. அவன் நேசம் உண்மை அவளின் நேசமும் உண்மை ஆனால் இடையில் பொய் அவளிடம். அது ஒரு இடத்தில் முடியும்.  அதுதுதுது!… 

ராம் சூர்யாவை பார்த்ததும் வழக்கமான புன்னகையுடன் நெருங்கினான். சூர்யா உடனே சத்ய தேவ்க்கு செய்தியை தட்டி விட.. அடுத்த பத்து நிமிடத்தில் அந்த இடத்திற்கு இதளுடன் வந்து சேர்ந்தாள் ஹரிணி. ஆனால் நிதின் அங்கு இல்லை. எங்கே சென்றான்? 

ஜாலியா இருந்தது தானே என ஹரிணி சொல்லிக் கொண்டே வந்தவள் அங்கு நின்றிருந்த ராம் கீதா ஆதவ் என மூவரையும் பார்த்து ஒரு நிமிடம் உறைந்து போனாள்.  அக்கா! என ஆதவ் தன் அன்னையின் காதில் கூற.. கீதா மெதுவாக நிமிர்ந்து பார்த்தார். ஹரிணியின் கண்கள் கலங்க நெஞ்சு குமுற நின்றிருந்தாள். சூர்யா அவரிடம் சொல்றத கேளு டா! எதோ தெரியாம பண்ணிட்டா! இப்போ அவள் குடிகாரனுக்கு வாக்கபட்டு வாழாவெட்டியாவா இருக்கா! மினிஸ்டர கட்டிருக்கா நிதின் அவளை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறான் என்றார். 

என்னால எத்துக்க முடியாது சூர்யா என அந்த இடத்தை விட்டு கிளம்ப போக.. கீதா உன் வீட்டில் எல்லாரும் சம்மதமும் வாங்கி தான் இவன் கல்யாணம் பண்ணானா? கோவிலாச்சேண்ணு பார்க்கிறேன். இல்லன்னா வண்ட வண்டயா என ஆரம்பிக்க, டாடி என அதட்டிய சக்தி ராம் மற்றும் கீதா இருவரின் அருகில் சென்று அத்தை, மாமா! ஆயிரம் இருந்தாலும்  நிதின் என்னோட தம்பி! அப்பா சொன்ன மாதிரி தான் அவள் அவன் கூட சந்தோசமா இல்ல என்றான். 

கீதா கண்ணீரை அடக்கிக் கொண்டே பார்க்க, அதுக்கு காரணம் நீங்க தான்! நாங்க என்ன பண்ணோம்? என ராம் பேச வர, சக்தியின் பொறுமை காற்றில் பறக்க உங்களால் அவளுக்கு  என்ன வேணாலும் ஆகலாம். அந்த அளவுக்கு உங்களையே நினைச்சிட்டு வாழ்க்கையை தொடங்காம இருக்கா! அதுக்கு காரணம் உங்க மேல வச்சிருக்க பாசம் தான்! சரி இதுக்கு மேலே சொல்ல எதுவும் இல்ல. என்னமோ பண்ணுங்க! என பெரு மூச்சுடன் நகர்ந்தான் சத்ய தேவ். 

ஹரிணி ஓரிடத்தில் விம்மி விம்மி அழுது கொண்டிருக்க அவளின் அருகில் வந்து அக்கா என அழைத்தான் ஆதவ்.  ஹரிணி அவனை பார்த்ததும் வேகமாக அணைத்துக் கொண்டாள். அக்கா அழாதே! சாரி தம்பி! நான் உன் கிட்ட அதிகமா பேசினது கூட இல்ல டா! என்றாள். ஆனால் எனக்கு உன்னை பிடிக்கும் கா! நீ கவலை படாதே அம்மா பேசுவாங்க என கூறிக் கொண்டிருக்கும் போதே கீதா இன்னொரு பக்கம் அமர்ந்து இருந்தார். மகி அருகில் செல்ல போக .

ஹே போகாதே! நமக்கு நம்ம வார்த்தைக்கு மதிப்பில்லாத இடத்துக்கு போக கூடாது என சூர்யா சொல்ல..  கீதாவின் பார்வை ஹரிணியின் திசை பக்கம் சென்றது. சக்தி அருகில் சென்று போடி போ அத்தை கிட்ட போ என அனுப்பி விட விசும்பி கொண்டே சென்றாள் ஹரிணி! போ கா என ஆதவ் தள்ள.. ம்மா என கண்ணீருடன் அழைத்தாள் ஹரிணி. 

கீதா எழுந்து கன்னத்தில் அறைந்தார். யாரும் எதிர் பார்க்க வில்லை. இன்னொரு கன்னத்தில் அறைய போக ஹே கீதாஆஆ! என கத்திக் கொண்டே அருகில் வந்தார் ராம். டாடிஇஇ! என அழுது கொண்டே அவரை கட்டிக் கொண்டாள் ஹரிணி! கீதா அவளின் கையை பிடித்து முத்தம் வைத்தாள். அவர்களின் காதல் அடையாளம் ஹரிணி தான். 

சூர்யா நிம்மதியுடன் பார்க்க, சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் செய்தி அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பி விட்டான். இருவரும் அவளை அருகில் அமர வைத்து கொஞ்சினார்கள் முத்தமிட்டார்கள். ஹரிணியின் உள்ளம் நிறைந்து இருந்தாலும் நித்திணை நொடிக்கு நொடி தேடியது. வேண்டும் அவன் வேண்டும் இனி ஆசை தீர வாழ வேண்டும். என ஏக்கத்துடன் தேடினாள். 

எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. சரி வீட்டுக்கு போலாம் சூர்யா சாயங்காலம் வருவோம். பொண்ணு கீதா வாங்க கிலன்புவோம் என அழைத்தார் நட்ராஜ். சரி என அனைவரும் கிளம்பினார்கள். 

ரிதம் கொட்டாவி விட்டுக் கொண்டே வந்தாள். மகி சிரித்த படி வீட்டுக்கு போனதும் சாப்பிட்டு தூங்கு தங்கம் என கூற, மிதுன் கொட்டாவி விட்டான். சூர்யா அவனை பார்த்த அடுத்த நொடி கட்ட காலையில் பத்து மணிக்கு அப்படி என்னடா தூக்கம் என திட்ட ஆரம்பித்தார். 

சத்ய தேவ், இதழ் உதட்டுக்குள் சிரிக்க, மாமா எதுக்கு மிதுன திற்றீங்க? பாவம் மாமா! என ரிதம் வக்காலத்து வாங்கினாள். மி பாவம் ரிதம் உனக்கு மட்டும் தான் அது தெரியுது என மிதுன் சொல்ல.. ரிதம் அவன் காதுக்கு அருகில் வந்து சீக்கிரம் கல்யானம் பண்ணிக்க அப்போ மாமா உன்னை திட்ட மாட்டார். 

அப்படியா சொல்ற? என மிதுன் தீவிர யோசனையுடன் கேட்க.. ஆமா என்று கூறினாள் ரிதம். 

சரி அதுக்கான வேலையில் இறங்குறேன் என சபதம் எடுத்துக் கொண்டான் மிதுன். 

அவர்கள் அனைவரும் இறங்க அவர்களை சுற்றி நீர் குமிழிகள் ( bubbles) பறந்து கொண்டிருந்தது. பாதுகாவலர்கள், பூனை படை என அனைவரும் கையில் சோப்பு திரவத்தை வைத்து ஊதி கொண்டிருந்தார்கள். இந்த மினிஸ்டர் அய்யோ என நொந்து கொண்டே.. 

அங்கே இறங்கிய அனைவரின் கண்களும் வியப்பில் ஆழ்த்த ஹரிணி கண்கள் மின்ன இறங்கினாள். 

ரிதம் வைத்த கண் வாங்காமல் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, இதழ் சக்தியிடம் அண்ணா நீ மண்ணிக்கு என்ன பண்ண போற? என கேட்டாள். 

சத்ய தேவ் சிரித்து மட்டுமே வைத்தான். மிதுன் அருகில் நின்று ரிதமை தேவையான அளவு ஏற்றி விட்டு சென்றான். 

அடுத்து என்ன நடக்கும் 

வருவான். 

சக்தி நீ தோர்த்து போடா! நான் ஜெயிக்கணும்? என்றாள் ரிதம். 

அப்போ வா வந்து எனக்கு முத்தம் கொடுத்து கட்டி பிடிக்கிற அதுவும் நீயாவே! அப்போ தான் நீ சொல்றத நான் செய்வேன். இல்ல இன்னும் நூறு தடவை play பண்ணாலும் நான் தான் ஜெயிப்பென். அந்த மினிஸ்டர் மண்டையன். குட்டி குட்டன் யாராலும் என்னை ம்ம் எதுவும் பண்ண முடியாது என சத்ய தேவ் கண் சிமட்டிய படி பார்க்க . இவனை எதுக்கு மிதுன் நாயே விளையாட்டுக்கு கூப்பிட்ட என நொந்து கொண்டே நின்றாள். 

EPISODE 170

அவர்கள் அனைவரும் இறங்க அவர்களை சுற்றி நீர் குமிழிகள் ( bubbles) பறந்து கொண்டிருந்தது. பாதுகாவலர்கள், பூனை படை என அனைவரும் கையில் சோப்பு திரவத்தை வைத்து ஊதி கொண்டிருந்தார்கள். இந்த மினிஸ்டர் அய்யோ என நொந்து கொண்டே.. 

அங்கே இறங்கிய அனைவரின் கண்களும் வியப்பில் ஆழ்த்த ஹரிணி கண்கள் மின்ன இறங்கினாள். அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அனைவரும் அவர்களின் பணியை முடித்துவிட்டு கடகடவென்று சென்று விட்டார்கள்.  

இவ்வளவு நேரமும் தூக்க கலக்கத்தில் வந்த மகராசி ரிதம் அந்த காட்சிகளை பார்த்ததும் தூக்கம் எல்லாம் பறந்து போனது.  பபுள்ஸ் என்று அவள் வாய் முணுமுணுக்கும் முன்னால் அவளின் காதோரம் பாத்தியா காதலோட பவர நிதின் அண்ணா ஹரிணிக்காக என்னென்ன பண்ணி இருக்கான்னு பாரு?  பபுல் எல்லாம் மெனக்கெட்டு உக்காந்து ஊதி இருக்கான்!  உனக்கே தெரியும் தானே. நிதின்  அண்ணாவுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.   ஆனா இந்த காதல்  ஒரு மனுசன என்னமோ ஆட்டி படைக்குது பாரேன்!  என்று தேவையான விசயத்தை பரப்பி பற்ற வைத்து விட்டு நிம்மதியாக  உள்ளே சென்றான் மிதுன். 

ரிதம் அதே இடத்தில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஹரிணியை தொடர்ந்து ராம் கீதா ஆதவ் சூர்யா மிதுன் இதழ் மகி உமா நட்ராஜ் சத்யதேவ்  என அனைவரும் வந்தார்கள். என்ன இது?  சின்ன புள்ளைங்க மாறி? யாரு இதெல்லாம் பண்றது? என்று உமா கேட்க..

இதழ் புன்னகைத்தபடி இதெல்லாம் நித்தின் அண்ணா ஓட வேலையா இருக்குன்னு நினைக்கிறேன்.  ஹரிணி அன்னிய சந்தோசப்பட வைக்கிறதுக்காக நித்தின் அண்ணா இதெல்லாம் செஞ்சிருக்காங்க ஆத்தா என்றாள். 

உமா நட்ராஜ் இருவரும் சிரித்தபடி நேராக வீட்டுக்குள் நுழைய ராமின் அருகில் வந்த சூர்யா.  பார்த்துக்கிட்டியா? உன் பொண்ணு இந்த பபுல் கேட்டாள்ன்னு என்ன பண்றான்?  மினிஸ்டரா இருக்கிறவன் இதை மெனக்கெட்டு வாங்கிட்டு வந்து பத்து பேர ரூல் பண்ணி இதெல்லாம் பண்ணி இருக்கான். ஆன்டி ஹீரோ மாதிரி தான் தெரிவான். ஆனால் உன் பொண்ணுக்காக என்ன வேணாலும் செய்வான்.  என்று காட்ட..  அவர்கள் இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஹரிணி தனது அம்மா அப்பா இருவரையும் பார்த்தவள். உங்களுக்கு நித்தன் பத்தி தெரியாது டாடி! அவன் ரொம்ப நல்ல கேரக்டர்!; வெளிய பாக்குறதுக்கு தான் கரடு முரடா இருப்பான்.  மத்தபடி என்னை எப்படி பார்த்துக்கொள்வான் தெரியுமா? உங்களுக்காக தான் இத்தனை நாளா நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.  என்கிட்ட பண்ண மாட்டான் எனக்கு என்ன புடிச்சிருக்கோ!  அதுதான் அந்த வீட்டில் நடக்கும்.  என்னை விட சத்யா ஒரு வருஷத்துக்கு சின்னவன் தான்.  ஆனால் அவனை நீங்க அக்செப்ட் பண்ணிக்கிட்டிங்க! நிதுனுக்கும்  எனக்கும் எனக்கும் ரெண்டு வருஷம் வித்தியாசம்.  ஆனா உங்களுக்கு ஏன் அவனை பிடிக்கலைன்னு தெரியல. ஆனா ஒருத்தரை கட்டாயப்படுத்தி பிடிக்கணும்னு அவசியமில்லை. உங்க விருப்பம்..  ஆனா நீங்க இப்போ என்கிட்ட பேசுனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக் கூறினாள்.

ஆதவ் அவளின் அருகில் வந்த அக்கா வா! உள்ள போயி மாமாவை பாக்கலாம். வேற எதுவும் சர்ப்ரைஸ் வச்சிருக்க போறாரு!  என்று சொல்லிக்கொண்டே சின்னத்தம்பி வர ஆதவை அழைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ஹரிணி. 

சத்யதேவ் பெரிதாக கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல..  வீடு முழுக்க பபுலாக இருந்தது.  அதனுடைய ஆயுட்காலம் சொடக்கு போடும் நிமிடமே ஆனாலும் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. ஹரிணி புன்னகை முகத்துடன் உள்ளே வர.. 

மேடம்க்கு இப்ப சந்தோஷமா?  இன்னும் எவ்வளவு நேரம் இப்படி ஊதிட்டு இருக்கணும்னு சொல்லு! நாள்  ஃபுல்லா பபுல் பண்றேன் என்று கொஞ்சமே கொஞ்சம் அவனுக்கு உண்டான இயல்பில் சிரித்து கொண்டே கூறினான். 

ஹே Average ரொம்ப ஹாப்பியா இருக்கேன் டா!; என்று அவளின் கை அவனது கையில் அழுத்தி பிடித்தவள்.  உண்மையாவே… அம்மா அப்பாவை என்கிட்ட சேர்த்து வச்சுட்ட அவங்க என்கிட்ட பேசிட்டாங்க என்று கூறினாள்.

ஹோ நான் average? நானெல்லாம் எதுவும் பண்ணல மா! என்றான் நிதின். 

நடிக்காத நீ தான் எல்லாத்தையும் பண்ண!  எனக்கு தெரியும் என்று ஹரிணி சொல்ல.. அப்போ  எனக்கென்ன பண்ணப் போற? என்று நித்தின் கேட்டான்.

உனக்கு என்ன வேணும் சொல்லு என்று ஹரிணி கேட்க,  அதோ வரானே சத்யதே அவனுக்கு முன்னாடி நம்ம குழந்தை பெத்துக்கணும்! அதுதான் என் வாழ்நாளோட லட்சியம் அதை பண்ணலாமா என்றான் கண்ணடித்து கொண்டே. 

அவளுக்கு வெட்கம் வந்து விட வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.  கொஞ்சமே அவளை பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தவன்.  ராம் கீதா உள்ளே வர,  ஐயையோ இவங்கள வேற சமாளிக்கணும்.  இவங்க கிட்ட எல்லாம் போய் பேசணும் என்று இன்றோவர்ட்டாக யோசித்தான் நித்தின். 

சத்யதேவ் அவன் அருகில் வந்து எல்லாம் ஓகேவா என்று கேட்க, அதெல்லாம் ஓகே! ஆனால்  அவங்க கிட்ட நான் எப்படி பேசுறது? எனக்கு சொல்லிக் கொடு! 

டேய் *#* என்று சத்திய தேவ் கெட்ட வார்த்தைகள் பேச.. டேய் ம* எனக்கு எல்லாம் அவங்கள பார்த்தாலே…  அது… எப்படி சொல்றது?  ஏதோ ஒரு மாதிரி! என்ன பேசணும்?  என்று நித்தின் கேட்க

சத்ய தேவ்  அவனை முறைத்தபடி எதுவும் பேசாத அது உன்னோட விருப்பம் என்று கடந்துவிட்டான்.  டேய் சொல்லி தொலைடா என்று பற்களை கடித்துக் கொண்டே அருகில் நெருங்கினான். 

எனக்கு தெரியாது இதெல்லாம் உன்னோட pet மிதுன் கிட்ட கேளு!  ஒருத்தரை எப்படி பிளாட் பண்றதுன்னு அவனுக்கு தெரியும் என்று கூறினான்  சத்தியதேவ்.

அவன் என்கிட்ட பேசி ஒரு வருஷம் ஆச்சு என்று கூறினான் நித்தின். 

என்ன என்று அதிர்ச்சியுடன் சத்திய தேவ் பார்க்க..  ஆமா அண்ணன் கிட்ட பேசலனா கூட அண்ணன் மேல ரொம்ப பாசம்!  என  நித்தின் சிரிக்க, 

யார் மேல சத்திய தேவ்  கேட்க,  உன் மேல தான்!! 

என்ன சொல்ற? என்று சத்தியதேவ் கேட்க..  ஆமா என்னைக்கு நான் ரிதம் கழுத்துல தாலி கட்டாமல் எந்திரிச்சு வந்தேனோ!  அப்போ இருந்து மிதுன் என்கிட்ட பேசுறது இல்ல. 

அது அவ மேல இருக்கிற பாசமா இருக்கலாம் என்று சத்ய தேவ் கூற, ஹரிணி என்னை கல்யாணம் பண்ணது மிதுனுக்கு பிடிக்கல.  என்று நிதின் கூறினான். இது வேறயா? இன்ட்ரஸ்டிங்கா இருக்கே! இந்த குட்டி குட்டன் இப்படியெல்லாம் யோசிக்கிறானா?  என் மேல பாசமா?  ரொம்ப ஹைபோத்தடிகலா இருக்கே! என்றான்  சத்திய தேவ். 

சரி  அவங்க கிட்ட போய் பேசு!  அப்பதான்  இப்ப நீ ஒரு சபதம்  சத்தியம்ன்னு  பண்ணியே! அது நிறைவேறும் என்றான் சத்தியதேவ்..

என்ன சத்யம்? என்ன சபதம்?  என்று புருவத்தை சுருக்கி நித்தின் கேட்க..  எனக்கு முன்னாடியே குழந்தை பெத்துக்கிறது என்று சத்திய தேவ் அவனை உருத்து பார்த்தான்.   அப்படியா?  நான் அப்படி சொல்லவே இல்லையே?  என்று நித்தின் சமாளிக்க.. நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும் நாயே!  போ போய் பேசி தொலை என்று சத்ய தேவ் அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான். 

 நித்தின் தயக்கத்துடன் ராம் மற்றும் கீதாவின் அருகில் சென்றான்.. என்ன செய்வது என்று தெரியவில்லை.  இருவரும் அவனை எப்படி எதிர்கொள்வோம்?  என்று நின்று கொண்டிருக்க.. 

அத்த மாமா என்று அழைத்தவன் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சட்டென காலில் விழுந்துவிட்டான்.  வேறு வழியில்லாமல் ராம் எழுந்திருங்க என்று சொல்ல… எழுந்திருங்க மாப்பிள்ளை!  என்று கீதா சொல்லவும்,  இரண்டு வார்த்தைகளில் பிரச்சனை சுமூகமாக முடிந்தது.  ஹப்பா எப்படியோ மாப்பிள்ளன்னு சொல்லிட்டாங்களே! என்று நித்தின் கண்களெல்லாம் சிரிக்க நிமிர்ந்து பார்த்தவன்.  சட்டென ராம் கைகளைப் பிடித்துக் கொண்டு,  கீதாவின் கைகளையும் சேர்த்துக் கொண்டவன்.  அவளை நான் நல்லா பாத்துப்பேன்! கவலைப்படாதீங்க! ம்ம் என்னை  உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். ஆனா இனி பிடிக்க வைக்க நான் முயற்சி பண்ணல. ஆனா நான் நல்லா நடந்துப்பேன்! என்று நித்தின் கூறினான். 

உடனே அவர்கள் இருவரும் பரவால்ல இங்க இருந்து கிளம்பும்போது, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வரணும்.அங்க தான் தங்கி இருக்கணும். இனி அடிக்கடி வீட்டுக்கு வரணும் என்று கீதாவும் சொல்ல..  ராம்  அவனை பார்த்து, ஆமாம் கட்டாயம் வரணும் ஒரு எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட உங்கள இன்ட்ரோ கொடுக்கணும்.என்று கூற

சரி கண்டிப்பா மா.. மா என்று அவர்கள் ராமை மீண்டும் அணைத்துக் கொண்டான்.  ராம் என்ன செய்வது என்று அப்படியே நிற்க..  கீதா முறைத்து பார்த்தார். ஒன்னும் பிரச்சனை இல்ல என்று அவர் தயங்கிக் கொண்டே பேச.. 

நீங்க என்னை நித்தின்னு கூப்பிடுங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது.  என்று கூறினான். ராம் மற்றும் கீதா இருவரும் தயங்க..  பரவால்ல கூப்பிடுங்க நான் உங்களுக்கு ஹரிணி மாதிரி தான்.  ஹரிணியை விட நான் சின்ன பையன் தான் என்று சிரித்துக் கொண்டே கூறினான். சரிங்க நித்தின் மாப்பிள்ளை என அவர்கள் இருவரும் அழைக்க..  சரி மாமா!  வாங்க வந்து உட்காருங்க என்று சமாளித்தான். 

அவர்களின் உறவு அங்கே சுமூகமாக ஆரம்பித்தது.  ஆனால் அது அப்படியே செல்லுமா?   பார்ப்போமே என்ன  நடக்கிறது என்று. 

*

 கும்பாபிஷேகம்  காரணமாக அனைவரும் காலையிலேயே நேரத்திலிருந்து கிளம்பிய காரணத்தினால் அனைவருக்கும் மிகவும் சோர்வாக  இருந்தது. அதனால் காலை உணவை கொஞ்சமாக மட்டும் சாப்பிட்டுவிட்டு அவரவர்கள் தூங்க சென்று விட்டார்கள்.  சத்யதேவ்  அறையில்  ரிதம் படுக்கையில் படுத்திருந்தாள். சத்ய தேவ் உள்ளே நுழைந்தவன்.  அருகில் வந்து  ஃபோனை எடுத்து நோண்டினான். அப்படியே அவளின் அருகில் வந்து அமர்ந்ததும் ரிதம் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். 

இன்று காலை சத்யதேவ் கட்டிய புது தாலி சரடு,  மோப்பு கொடியுடன் பின்னிக் கொண்டு அழகாக அவளின் கழுத்துக்குளியில் கீழே அவளை அனைத்தவாறு படுத்திருந்தது.  என்று கூறலாம் அத்தனை அழகு. 

இப்போ எதுக்கு முகத்தை இப்படி ஒரு மாதிரி வச்சிருக்க? என்று சத்திய தேவ் கேட்க,  அதற்கு ரிதமிடம் எந்த பதிலும் இல்லை.  ஹே உன்ன தான் கேட்கிறேன்.  இப்போ எதுக்கு இப்படி முகத்தை வைத்திருக்கிற?  என்று சத்திய தேவ்  மீண்டும் கேட்க.. 

அவள் பதிலே சொல்லாமல் இருக்கவும், கதவை சாத்திவிட்டு வந்தவன்.  அவளோடு ஒட்டிப் படுத்துக் கொண்டான். ச்ச என்று தீப்பட்டது போல எழுந்து நின்றாள். 

ஹே ரிதம் நீ ரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கடி! இது சரியில்ல…  காலையில அப்படித்தான் என்னை ரொம்ப மட்டம் தட்டி பேசின.  ஆனா அதை நான் சிரிச்ச மாதிரியே ஏத்துக்கிட்டேன்.  ஏன்னா எனக்கு கோபமே உன் மேல வரக்கூடாதுன்னு டெய்லி யோகா பண்ணிட்டு இருக்கேன். இதை தான்  வள்ளலார் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்.  ஆனா அதையும் மீறி நீ என்னை கோபப்படுத்தாதே என்று சத்யதேவ் கூறினான். 

ஆமா நீ கோபப்பட்டு என்னை அடிக்கணும். நீ அடிக்கிறத டாடி பார்க்கணும்! உன்னையும் அடிக்கணும். நம்ம ரெண்டு பேரையும் பிரிக்கணும். இதுதாண்டா என்னோட ஆசையே! என்று ரிதம் கூற.. சத்யதேவ் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்தவன்.  அட்டனகால் போட்டு கெத்தாக ஆட்டிக்கொண்டே அந்த மாதிரி என்னைக்குமே நடக்காது! புரியுதா?  நீ  என்னை அடிச்சுக்க? நான் கூட  உன்ன மூணு தடவை அடிப்பேன்.  ஆனா மாமா என்னை அடிக்கிறது எல்லாம் நடக்காதுடி என்று கூறினான். 

என்ன?  நீ மூணு தடவ டெய்லியும் அடிப்பியா? உன்னை நான் அடிச்சே கொல்லுவேண்டா என்று ரிதம் கூறினாள் ஆவேசமாக. 

 அப்படியா! ம்ம் வெளியில் அம்மா சத்தம் மாதிரி கேக்குதே? என்று சத்ய தேவ்  சொல்ல.. மாமியா?  என்று கதவை திறக்க சென்றவள்.  அப்படியே நின்றாள்.  உடனே சத்யதேவ் சிரிக்க ஆரம்பித்தான்.  இப்போ எதுக்கு சிரிச்சி தொலையுற?  அப்போ பொய் சொன்னியா?  என்று அருகில் வந்து அடிக்க ஆரம்பித்தாள். 

அவளை அப்படியே படுக்கையில் கிடைத்தியவன்.  இன்னைக்கு ராங்கி ராவடி! ஓவரா ரொம்ப ரொம்ப போறா!  அப்புறம் என்னோட பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்கும்.  என்று அவளின் கன்னத்தை கடித்தான். வலிக்குது நாயே என்று அவள் திட்ட.. இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை காலைல நல்லாத்தான இருந்த!  திடீர்னு இப்போ கார்ல இருந்து இறங்குனதும் மேடம் மூடு ஸ்பாயில் ஆகிப்போச்சு.  என்ன விஷயம்?  என்று தெரிந்து கொண்டே கேட்டான். 

ஒன்னும் இல்ல என்று ரிதம் சாதிக்க..  நான் சொல்லவா? 

என்ன? என்ன சொல்ல போற?

அந்த மினிஸ்டர் நாய் ஹரினிக்கு பபுள்ஸ் சர்ப்ரைஸ் கொடுத்தது.  வந்து ரிதம் பொறாமையா இருக்கு கரெக்டா?  என்று அவளைப் பார்த்தான்.  அதற்கு அவள் விட்டோதியாக சிரித்துக் கொண்டே ஆமா கரெக்ட் தான்! ஹரிணிய நித்தின் அவ்ளோ லவ் பண்றான்.  எனக்கு அந்த லவ் புடிச்சிருக்கு.  நிதின்னோட லவ் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.  அது ஹரிணி மேல அவன் வெளிக்காட்டுவது வேற மாதிரி! அதுவும் எனக்கு பிடிச்சிருக்கு. அந்த மாதிரி எனக்கு ஒரு காதல் கிடைக்கலையே?  என்று கூறினாள். 

 உடனே சத்திதேவ் எனக்கும் தான் கிடைக்கல என்று கூறினான்.

உனக்கெல்லாம் ஜென்மத்துக்கும் கிடைக்காது என்று ரிதம் சொல்ல, எதையோ  யோசித்தான். ஹான் ஏன் கிடைக்காது?  எனக்கெல்லாம் கிடைச்சது!  என்னை இதை விட  லவ் பண்ணாங்க என்றான். 

யாரு என்று ஆவேசமாக திரும்பினாள். 

நான் யாரையும் லவ் பண்ணல.  என்னை தான்  குதிரைவால்காரி தீவிரமா லவ் பண்ணிட்டு சுத்திகிட்டு இருந்தா  என்று கூறினான் சத்தியதேவ் .ஹோ என்னைத்தான் சொல்றானா?  என்று ரிதம் அவனைப் பார்க்க.. அவள் போட்டிருந்த பன்கொண்டையை உறுவி கூந்தலில் கைகளை நுழைத்தான். 

கையை எடுடா  பண்ணி! டேய் சத்யதேவ்!!  உன்னைத்தான் என ரிதம் கூற.. நீதான் என்னை  சின்ன வயசுல இருந்து லவ் பண்ணி இருக்கியே?  என்கிட்ட சொன்னியே!  என்று கூற.. அது கண்ணு தெரியாமல் லவ் பண்ணிட்டேன்.  என்று சளித்தாள் ரிதம்.

அப்படியா அப்போ தெரியாம கூட  என்னை தான் லவ் பண்ணி இருக்க! என்றான் சத்தி. 

தெரிஞ்சிருந்தா பண்ணி இருக்க மாட்டேனே!  தெரியாம பண்ணிட்டேன்ல்ல.. 

சக்தி சிரித்து பண்ணது பண்ணது தான்மா என்று நாக்கை கண்ணதுக்குள் அடக்கிக் கொண்டே அழகாக கூறினான். 

அவனை பார்த்ததும் ரிதம் வேறு புறம் திரும்பிக் கொள்ளப் போராட..  அவளை அணைத்துவாறு படுத்தவன்.  வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னை  விடுடா  மாடு!

மாட்டேன் என்று அருகில் நெருங்கி அவளது வாசத்தை உள் இழுத்துக் கொண்டு இருந்தான். ரிதம் உள்ளங்கையெல்லாம் வியர்க்க அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். 

கைய லூசா விடு! பாடிய லூஸ் பண்ணு! இப்படி என் கிட்ட உன் வீராப்பையும் விறைப்பையும் காட்டி சீன் போடாத என்றவன். அவள் மேல் ஒரு காலை தூக்கி போட்டுக் கொண்டான். அவளின் இமை குடைகள் கீழ் நோக்கி இருக்க, சத்ய தேவ் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கைகள் அவளின் வதனத்தை வருடி தடவியது. அவளின் கழுத்தை மீசை முடி வைத்து குறுகுருத்தான். அப்படியே உதட்டில் முத்தமிட வர… ரிதம்…? 

சுவற்றுடன் அவளை ஒட்ட வைத்து தேக நரம்புகள் அறுபட்டு அவளை எங்கும் செல்ல விடாமல் பின்னி கொள்வது போல, கொன்று கொண்டிருந்தான் முத்தத்தால். ஹரிணி மெய் மறந்து அவனில் விழ.. அவனது முத்தம் ஆவேசமாக இருந்தது. இந்த வேகம் போதுமா! ஆனால் என்னை அரக்கன் மாதிரி மாற்றினால் எனக்குள்ள இருக்க நிதின் காணாமல் போயிடுவான் உனக்கு ஓகேவா! என்றான் கரகரத்த குரலில். 

எப்போ சொன்னேன்? என ஹரிணி அவனது சட்டையை பிடித்தபடி கேட்க.. ஹே தாத்தா அம்மாச்சி அறுபதாம் கல்யாணத்தில் டெரஸ் மேலே உன்னை முத்தம் கொடுக்கும் போது சொன்னியே soft ஆ கொடுக்காத ஹார்சா கொடுடா அப்டின்னு நீ தானே சொன்ன? என்னோட ஹார்சை உன்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா? என கேட்டான் நிதின். 

வெடுக்கென அவனிடம் இருந்து விலகியவள். அப்போ அன் அன்னிக்கு முத்தம் கொடுத்தது நீ தானா? சத்யா இல்லையா? என ஹரிணி அதிர்ச்சியுடன் கேட்க.. நித்தின் வெற்றி பார்வையுடன் அன்னைக்கு நானா இருந்தது உனக்கு வருத்தமா இருக்கா?  இல்ல சத்யதேவ் இல்லை என என்று அவன் கேட்க..

என்னடா பேசுற?  என்று வேகமாக அவனை அணைத்துக் கொண்டவள்m  ஆவேசத்துடன் இதழை கவ்வி கொண்டாள்.  எட்டி நின்று சாவுகாசமாக கொடுக்க வேண்டிய இதழ் முத்தம்.  வேகமாக நடந்தது.  முத்தமிட்டபிள் அவனது கழுத்துக்குள் கை விட்டுக்கொண்டு இறுக்கிப்பிடி பிடித்த விலகவே முடியாதபடி ஒட்டிக்கொண்டாள்.  அவளது பாதங்கள் அவனது ராட்சச பாதங்களின் மேல் ஏறிக்கொண்டது.  நித்தின் அவளது அங்கங்களின் பக்கம் அழுத்தி பிடித்து அவனது நெஞ்சுக்குள் பிரிந்து பிரிந்து ஒட்டினான். 

ஒரு சில நொடிகள் கழித்து விலகிய ஹரிணி கண்கள் சொக்க அப்போ என்று சிரித்தபடி அன்னிக்கு நீ தான் கிஸ் பண்ணியா?  திருட்டு பயலே! எப்போ பாரு ஃப்ராடு வேலை மட்டும் தான் பண்ணுவியா நீ?  திருடா திருடன் டொங்கா என்று கூற.. 

கண்கள் விரிய பார்த்தவன். டொங்காவுக்கு முத்தா கொடு. நீ எனக்கு புடிச்சவ! சோ எனக்கு புடிச்ச பொண்ண, அதுவும் என்னை  விரும்புற பொண்ண நான் எதுக்கு அவனுக்காக விட்டு தருவேன்?! அவனே உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தாலிய அறுத்து போட்டு உன்னை தூக்கிட்டு வர வேண்டியதுதானே! என்று கூறினான் நித்தின். 

நீ  ராட்சசன் இல்லடா நீ ராவணன் என்று  அவள் கூற.. 

உங்களுக்கு ஏன் ராவணன் எப்பவும் தப்பா தெரிகிறார். ராவணன் நல்லவர்.  ராமன் தான் கெட்டவர்.  ஒரு பொண்ண மதிக்க தெரிஞ்சவன் உங்களுக்கு ஆன்டி ஹீரோவா தெரியுறான். ஆனா ஹீரோவா இருக்கவன் தான் தன்னை நம்பி வந்தவள நெருப்பு குள்ள நடக்க வச்சு கற்ப உறுதிப்படுத்திக்கிட்டான்.  அதனால இது என்னோட கருத்து மட்டும் தான்.  என்று நித்தின் பிரகாஷ் கூற. 

போதும் போதும் தெரியாம சொல்லிட்டேன்.  நீ ஆன்ட்டி ஹீரோ!  நீ ஹீரோ தான் என்று ஹரிணி சொல்ல.. .

நான் ஒன்னும் ராமன் கிடையாது என்று வெடுக்கென கூறினான் நித்தின். 

சாரி சாரி நீ ஹாண்டி ஹீரோ ராவணன் மாதிரி புரியுதா! ஒரு பொண்ண விருப்பப்பட்டு , அவளை காதல் கட்டாயப்படுத்தாமலும்,  கட்டாயப்படுத்தியும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட!  எனக்கு சந்தோஷம் என்ன கல்யாணம் பண்ணதுல போதுமா?  என்று ஹரிணி கூறி முத்தமிட்டாள்.  இன்னும் வேணும் நிறைய என அவளின் இதழ் பக்கம் நெருங்க.. 

ஒரு நிமிஷம் என்று ஹரிணி தடுக்க என்னுடைய என்று அதட்டலுடன் கேட்டான்.ஆமா அப்போ சத்திய தேவ யாரு முத்தம் கொடுத்திருப்பா?  சத்திய தேவ்? அவன்  கூட என்கிட்ட வந்து சாரி கேட்டானே?  என்று ஹரிணி கேள்வியுடன் யோசித்தாள். 

நிதின் பிரகாஷ் புன்னகைத்தபடி அவன் வேற யாருக்கு குடுத்திருப்பான்? நீ எதுக்கு அவனை நினைக்கிற?  அது நமக்கு எதுக்கு?  அது அவனுடைய பிரச்சனை?! அவன் யாருக்கு  முத்தம் கொடுத்து இருந்தால் என்ன?  இப்ப போய் அந்த விஷயத்தை போய் சக்தி கிட்ட சொண்ணன்னு வை! அதுவும் ரிதம்க்கு தெரிஞ்சது?  அவ பத்திரகாளி ஆடிடுவா என்று கூறினான். 

ஹரிணி கொஞ்சம் யோசனையுடன் எனக்கு என்னமோ இந்த ரிதம் தான் சத்திய தேவ்க்கு முத்தம் கொடுத்து இருப்பாள்னு தோணுது. 

நித்தின் பிரகாஷ் சிரித்தபடி நீ தப்பா சொல்ற?  அவளை இழுத்து சத்திய தேவ் தான்  முத்தம் கொடுத்து இருப்பான். 

இல்ல சத்யதேவ் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.  எப்படி அவன் அப்படி பண்ணுவான்?  வாய்ப்பே இல்லை என்று மல்லுக்கு நின்றாள்.  ஹரிணி..

ஒரு பொண்ணு பக்கத்துல வரும்போது அந்த பொண்ணோட வாசனை.. I mean  தனித்துவமான வாசனை அந்த பையனுக்கு தெரியும்.  உன்னோட வாசன நீ எங்க இருந்தாலும்,  நீ  இருட்டுல இருந்தாலும்,   உன்னுடைய எந்த பக்கத்தில் நான் கை விரல் வச்சாலும்,  அது எந்த இடம்ன்னு  கரெக்டா கண்டு பிடிப்பேன் டி! சோ நீ  எத்தனை வருஷமா அவன் கூட இருக்க? உன்னோட  வாசனை அவனுக்கு தெரியாதா என்ன?  அப்படியே தெரிந்திருந்தாலும்..  என்றவம் சிரித்தான். 

இப்போ எதுக்கு சிரிக்கிற? என ஹரிணி கேட்க..  உதட்டை கடித்து கொண்டே நிதின் அவளிடம் நீங்க பிசிகலா கிஸ்சாவது பண்ணி இருக்கணும். ஆனால்  அது கண்டிப்பா அங்க  நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.

அவளை பார்க்க…. 

ஹரிணி திரும்பி கொண்டாள்.

ஹே சொல்லு டி! நீ நிக்கிற திரணையே தெரியுது எனக்கும் முன்னாடி பிறந்து எனக்காகவே தேன் சுமந்து காத்திருக்கு இந்த ஹனி பேபி! என முத்தமிட நெருங்கினான். 

ஹரிணி வெட்கத்தில் சிரித்தவள் ஆனா சக்தி என ஆரம்பிக்க, ப்ச்  நமக்கு எதுக்கு அவனோட puzzle? அதை அவன்  கண்டுபிடிச்சுக்குவான். நம்மளோட வேலையை நாம பாப்போம். என்று கூறிவிட்டு முத்தத்தை தொடர்ந்தான்..

சத்யதேவ் அவளின் வாசனையை பிரத்தியேகமான வாசனையை உயிர் எழுத்த படி மூச்சு விட்டான். அவனது மூச்சு காற்றே அவளின் தேக கூட்டை சிலிர்க்க வைக்க, சத்ய தேவ் நுரையீரல் முழுவதும் மூச்சு குமில்களாக நிறைந்தது அவள் வாசம் மட்டுமே. 

வருவான். 

EPISODE 171

சத்யதேவ் அவளின் வாசனையை பிரத்தியேகமான வாசனையை உயிர் வரை  இழுத்த படி மூச்சு விட்டான். அவனது மூச்சு காற்றே அவளின் தேக கூட்டை சிலிர்க்க வைக்க, சத்ய தேவ் நுரையீரல் முழுவதும் மூச்சு குமில்களாக நிறைந்தது அவள் வாசம் மட்டுமே. 

இப்ப எதுக்குடா புசுபுசுன்னு மூச்சு விட்டுகிட்டு இருக்க? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அதுவும் என்  மேலே? நான் எப்படி தூங்குவேன்? இம்சை பிடிச்சவனே! என்று வாய்க்கு வந்தபடியே கண்டபிடி பேசினாள் ரிதம்.

சத்ய தேவ் ஒரு மார்க்கமாக மெதுவான குரலில் ஏன் என்ன பண்ணுது?  என்று சுதியுடன் கேட்டான். 

 என்ன பண்ணுதா என்று மூச்சு பிடிக்க முணுமுணத்தவள் மெதுவாக  அவன் பக்கம் திரும்பினாள். அந்த நொடி  இருவரின் விழிப் பார்வையும் மோதிக்கொண்டது.  அவள் வெடுக்கென நேராக திரும்ப போக.. 

சத்தியதேவ் கிடுக்கு பிடி போட்டு அவளை மீண்டும் அனைத்துக் கொண்டான்.  மிகவும் அவஸ்தையாவது போனது அவளுக்கு.  இவன் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்? எப்ப பாரு என்னை ஏதாவது பண்றதையே பொழப்பா வச்சிருக்கான்?  இம்சை புடிச்சவன் என்று நினைத்தவள். அவனை ஆவேசமாக தள்ளி விட்டாள். 

ஹே தண்ட மாடு கம்முனு படுக்க மாட்டியா டா?சும்மா சும்மா என்ன உனக்கு கட்டிக்க வேண்டியது இருக்கு? என ரிதம் நெண்டிக் கொண்டே கூற..  ஹே நீ ஏன் எப்போ பாரு கம்பளிப்பூச்சி மாதிரி நெண்டிக்கிட்டு இருக்க என சத்ய தேவ் அவளை உரசினான். 

 நீ நீ அப்படித்தான் என்னை  பண்ணிட்டு இருக்க?  அதனாலதான் நான் நெண்டிட்டு இருக்கேன்.  முதல்ல என்னை தொடாத! கையை எடு என்று கோபமாக பேசினாள் ரிதம். 

நான் தொடாமல் வேற யார் தொடவா என்று அவளின் இடையை இறுக்கிப்பிடித்தவன். கொஞ்சம் அழுத்தம் கொண்டான். அந்த இடை பகுதி சிவந்து போனது அவனது பிடி அப்படி இருக்க, ரிதம் வலியை பொறுத்துக் கொண்டே அவனை முறைத்தாள்.

உனக்கு கோபம் மூக்குக்கு மேல வருதுன்னு நினைக்கிறேன்.  அதனால மூக்குத்தி போட்டுக்கோ! கோபமே வராதாம் கேள்விப்பட்டேன்.  அப்புறம் அது போட்டா இன்னும் கொஞ்சம் அழகா தெரிவ என்று சத்திய தேவ் கூற.. 

நீ சொல்லி நான் ஏன் செய்யணும்? நீ ஒன்னும் என்னோட உயிர் இல்ல! என்னோட வெல் விசர் இல்ல. நான் வேலைக்கு போயி தான் நீயே சாப்பிடுற? உன்னை நம்பி நான் இல்ல. என்னை நம்பி தான் நீ இருக்க! என்னை அதை பண்ணு இதை பண்ணு அப்டின்னு சொல்ல உனக்கு அருகதை இல்லை. இதெல்லாம் என்னுடைய இஷ்டம். மூடிட்டு போ. முதல்ல என் மேல கைய வைக்காத எரிச்சலா இருக்கு. நீ தொட்டாலே எனக்கு எரியுது என்று கூறிவிட்டு வேகமாக அவனது கைகளை தள்ளி விட்டாள். 

இதற்கு மேல் அவளை தொட வேண்டுமா? என்ன? சத்ய தேவ்ககு ரோஷம் இருக்கு. இனி  அவளாக வரவேண்டும் என்று நினைத்தவனுக்கு,  அவனது தன்மானம் கொஞ்சம் தட்டிக் கேட்டது.  அவளிடம் இருந்து விலகியவன் தள்ளி படுத்து கொண்டான். 

அப்பாடி ரொம்ப ரொம்ப நிம்மதி என்று நினைத்தவள்.  நன்றாக படுத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள். அவனுக்கு அவன் மேலயே கோபம் வந்தது. இவளை.. இனி இவளா தேடி என்னை சுத்தனும் நான் இனி ம்ம் ஹி ம்ம்.. என திரும்பிக் கொண்டு போனை நோண்டினான். 

அனைவரும் தூங்கி எழுவதற்கு மாலை ஐந்து மணி ஆனது.  மகி அனைவருக்கும் என்னென்ன மாலை குடிக்க பிடிக்குமோ! டீ காபி பூஸ்ட் ஹார்லிக்ஸ் பிளாக் டீ என அனைத்தையும் போட்டு வைத்துவிட்டு காத்திருந்தார்.  அங்கு வந்த உமா மகியிடம் பிள்ளைங்க எல்லாருமே தூங்குது! அதனால கோவிலுக்கு நம்ம மட்டும் போயிட்டு வந்துடலாம் மகி!  நீ என்ன சொல்ற?  என்று கேட்க, சரிங்க அத்தை அப்படியே பண்ணிக்கலாம் என்று  கூறிவிட்டு மகி, சூரிய தேவ், ராம், கீதா மற்றும் உமா , நடராஜ் என இவர்கள் மட்டுமே கோவிலுக்கு மீண்டும் கிளம்பினார்கள். 

போகும்போது மகி அனைவருக்கும் அறையையும் தட்டி எழுப்பி விட்டு சென்று விட்டார். கண்களை தேய்த்துக்கொண்டு வெளியே வந்தவர்களுக்கு அங்கு யாருமே இல்லை.  மிதுன்  சோம்பல் முறித்துக் கொண்டே வந்த அமர்த்தவனுக்கு வீடு அமைதியாக இருக்க..   தூரிஇஇ! தூரிஇஇ!  என்று அழைத்தான்.

என்ன அண்ணா  என்று வேக வேகமாக போனை கட் செய்து விட்டு ஓடி வந்தாள் இதழ். 

எங்கே யாருமே இல்ல? எல்லாரும் எங்க போயிட்டாங்க?  மகிய காணுமே என்று நினைத்து கேட்க,  தெரியலையே இருங்க அம்மாவுக்கு போன் பண்றேன்.  என்று உடனே அழைத்தாள் இதழ். 

பாப்பா எல்லாருக்கும் டீ காபி போட்டு வச்சிருக்கேன் அண்ணாவுக்கெல்லாம் எடுத்து கொடு.  ராம் மாமா, கீதா அத்தை, அப்பா,  நானு தாத்தா ஆத்தா எல்லாரும் இங்க கோவிலுக்கு வந்துட்டோம். நீங்க எல்லாரும் அசந்து தூங்கிட்டு இருந்தீங்க.  அதுதான் உங்களோட டிஸ்டர்ப் பண்ணல. அதனால எல்லாத்துக்கும் எடுத்து சூடு பண்ணி ஊத்தி கொடுப்பியாம் நல்ல புள்ளையா என்று மகி சொல்ல.. 

சரி மா  நான் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். 

எங்கே அம்மா?  என்று மிதுன் தலையை கோதிக் கொண்டே கேட்க, அவங்க எல்லாரும் கோவிலுக்கு போயிட்டாங்களாமா அண்ணா என்று கூறினாள். 

 ச்ச முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நான் போயிருப்பேனே! அங்கே இன்னிக்கி சாயங்காலம் சூப்பர் சூப்பர் பிகரா கலர் கலரா கண்ணுக்கு குளிர்ச்சியாக மிஸ் பண்ணுதியே டா மிதுனு எப்படி அவங்களை எல்லாம் பார்க்கிறது என்று நினைத்தான் மிதுன் தேவ்.

அப்பொழுது தான்  எழுந்து வெளியே வந்தான் சத்திய தேவ். அங்கு மிதுன் இதழ் இருவரும் இருக்க..  அவனைப் பார்த்ததும் அண்ணா எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க. அம்மா இப்போ தான் போன் பண்ணாங்க. உனக்கு  பிளாக் காபி சூடு பண்றன் இரு என்று உள்ளே சென்றாள் இதழ்.

இருப்பாப்பா நான் போறேன் நீ வந்து உட்காரு.. 

இல்ல அண்ணா நான் பண்றேன் என இதழ் மீண்டும் சொல்ல..

நான் பண்றேன் என்று சத்யதேவ் கூறிக் கொண்டே சமையலறை சென்றவன்.  இதழ் மிதுன் தேவ் என இருவருக்கும் அவரவர் குடிக்கும் பானங்களை கோப்பைகளில் ஊற்றினான்.  போனை எடுத்துக்கொண்டு நித்தினுக்கு அழைத்தான். 

நித்தன் மற்றும் ஹரிணி இருவரும் கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

ப்ச் f*  என்று சொல்லிக் கொண்டே நித்தின் அழைப்பை ஏற்க..

உனக்கு இன்னும் என்ன தூக்கம் மூடிட்டு வெளியே வா! என்றான் கடுப்புடன். 

நிதின் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டே உனக்கென்ன டா! போ என்னால வர முடியாது. 

டேய்  நாங்கல்லாம் வெளியே இருக்கோம் ஒழுங்கா வெளியே வா! இல்ல… ஏண்டா * உனக்கென்ன கேடு இன்னிக்கு தான் நான் நிம்மதியா இருக்கேன். என நிதின் கூற.. நான் நிம்மதியா இல்ல ஒழுங்கா இப்போ வெளியே வர என சொல்லி விட்டு போனை வைத்தான் சத்ய தேவ். 

சிறிது நேரம் கழித்து மெதுவாக எழுந்த நித்தின் பிரகாஷ் அருகில் படுத்து கொண்டிருந்த ஹரிணியை பார்த்தான். மனம் நிறைவாக இருந்தது. அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்து எழுந்து  முகம் கழுவி பிரஷ் ஆகி அவளையும் எழுப்பி விட்டு மெதுவாக வெளியே வந்தான். 

அங்கே இதழ் மற்றும் மிதுன் இருவரும் அமர்ந்திருக்க  ஹரிணி மற்றும் நித்தின் இருவருக்கும் காபி பூஸ்ட்  என சூடு செய்து பாலை சூடு செய்து அதில் சேர்த்து கொண்டு வந்து நீட்டினான் சத்ய தேவ். 

நிதின் எதிரில் இருப்பவனின்  முகத்தை பார்க்க சத்தியதேவின் முகம் இறுகி இருந்தது.  இவனுக்கு என்ன கேடு வந்துச்சு? இப்படி முகத்தை வைத்திருக்கிறானே?  என்று  நினைத்துக் கொண்டிருக்க… 

ரிதமும் அங்க போயிட்டாளா? என்று மிதுன்  இதழிடம் கேட்க…  க்கும் சமையலறையில் இருந்து தொண்டை கணக்கும் சத்தம் கேட்டது. 

அய்யயோ இந்த கேடு வந்தவன் இங்க தான்  இருக்கானா? அவனோட பொண்டாட்டிய மரியாதையா கூப்பிடனும்னு வேற சொல்லி இருக்கானே? இப்போ வேற போயிட்டாளான்னு சொன்னது  கேட்ருக்குமா? என்று நாக்கை கடித்தவன். உடனே மிகவும் பவ்யமாக தூரி!!  அது ரிதம் இங்க வீட்ல இருக்காங்களா?  இல்ல அம்மா கூட போய்ட்டாங்களா என்று மெதுவாக கேட்க.. 

நிதின் மற்றும் ஹரிணி இருவரும் சிரித்தார்கள்.  அந்த நேரம் கண்ணை தேய்த்துக்கொண்டே ஆதம் வெளியே வந்தான்.  மொத்தத்தில் அங்கு அனைவரும் வந்துவிட ரிதம் மட்டும் இல்லை. மெலிதாக சிரித்துக் கொண்டே  அண்ணி மேலே தூங்கிட்டு இருக்கு! அண்ணி மேல  மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கே? என இதழ் கேட்க.. 

ஓ தூங்கிட்டு இருக்காங்களா என்று மிதுன் சொல்ல அந்த நேரம் சத்தியதேவ் சமையலறையில் இருந்து வெளியே வந்தான். ஆதவ் அருகில் வந்து ம்ம் என கோப்பையை நீட்டினான் சத்ய தேவ். 

ஹி ஹி ஹி! என சிரித்துக் கொண்டே  சட்டென மிதுன் திரும்பவும் அங்கே நித்தின் பிரகாஷ் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அய்யோ ப்ரோ வேற என்னையே பார்த்திட்டு இருக்காரு!  என நினைத்த மிதுன்.  சரி நான் போய் ரிதமை எழுப்பிட்டு வந்துடறேன்.  என்று அவன் எழுந்து செல்ல, ஒரு குளிர்ந்த பார்வை மித்துன் தேவை தாக்கியது.  சட்டென திரும்பிப் பார்க்க அங்கே சத்ய தேவ்  சாதாரணமாகத்தான் பார்த்தான்.  ஆனால் கொலை நடுங்கியது மிதுன் தேவ்க்கு.  எச்சிலை விழுங்கியபடி அதே இடத்தில் அமர்ந்து விட்டான்.

இதழ் அவனைப் பார்த்து என்ன ஆச்சுன்னா?  நீதான் அண்ணிய போய் கூட்டிட்டு வரேன்னு சொன்ன? போகலையா?  என்று கேட்க..

நானா அது நான் போய் எப்படி கூட்டிட்டு வர முடியும்?  அண்ணிய?  என்று மிதுன் பார்வை சத்யதேவ்ன் மீது பட..  உடனே இதழ் சிரித்துக்கொண்டே சரி நான் போய் கூட்டிட்டு வரேன் என்று எழுந்தாள். 

க்கும் தொண்டையை கனைத்தான் சத்யதேவ்.  உடனே இதழ் திரும்பி பார்க்க..   தூங்கி முழிச்சு அவங்களே வரப்போறாங்க!  நம்ம ஏன் தேவையில்லாம மத்தவங்களுக்கு வேலை செய்யணும் என்ன  குக்கூ?  என்று சத்ய தேவ்  சொல்ல.. 

அப்போ சம்பவம் ஏதோ பெருசா நடந்திருக்கு அதுதான் அண்ணன் இவ்வளவு கோவமா இருக்கான் என்று நினைத்தவள் சரி நான் யாரையும் போய் கூட்டிட்டு வரல. ஆதவு வாடா நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம் போன் எடுத்துட்டு வா!  ஆங்கிரி பேர்ட் விளையாடுவோம் என்று கூப்பிட.. 

அக்கா இதோ என்று ஆதவ்வ் வந்து விட்டான். மிதுன் சத்யதேவின் முகத்தை பார்க்க ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அச்சச்சோ?  எதுவும் பிரச்சினையாகி போச்சா?  இந்த ராவடி எதுல மாட்னா?  தெரியலையே?  என  நினைத்தவன் வேகமாக அவளுக்கு மெசேஜ் செய்தான்.  நிறைய மெசேஜ் எல்லா அனைத்து மெசேஜும் வேலைக்கு ஆகாமல் போக.  போன் செய்தான். 

ஒரு சில நிமிடங்கள் கழித்து போன் எடுக்க.. உடனே மிதுன்  ஹலோ நான் காலேஜ் ஒரு விசயம் கேட்கணும்  என்று போனை எடுத்துக் கொண்டே மித்தன் வெளியே சென்று விட்டான். 

ஹரிணி எழுந்து கொண்டு நேராக சத்ய தேவ் அருகில் சென்றாள். நிதின் எழுந்து மிதுன் கிட்ட பேச சென்றான். 

இங்கே ரிதம் என்னடா என்று கண்களை தேய்த்துக் கொண்டே கேட்க…

நீ எங்க இருக்க? சீக்கிரம் வெளியே வர மாட்டியா?  நீ ரொம்ப நேரமா தூங்கினதனால?  சத்ய தேவ் உன் மேல கோவமா இருக்கான்.  எங்க எல்லாரையும் முறைக்கிறான்.  என்று சொல்ல…

அந்த நாயை அதுக்கெல்லாம் முறைக்காதே!  என்று ரிதம் வாய்மொழியாக கூற…  அப்போ என்ன?  அவன் உன்னை  பண்ணிட்டானா? நீங்க ரெண்டு பேரும் என்று அவன் கேட்க வர..

எரும மாடு என்ன பேசுற தண்ட மாடு! என்று திட்ட மித்துன் சிரித்தான். 

அப்புறம் ஏன்டி அவன் எங்ககிட்ட குரங்கு மாதிரி பார்த்து  நாய் மாதிரி குரைச்சுக்கிட்டே இருக்கான்.  என்று மித்துன் சொல்ல.. 

தெரியல என்று கூறியவள் சரி நீ போனவை நான் வெளியே வரேன் என்று  எழுந்தாள்.

ஒரு சில நிமிடங்களிலேயே ரிதம் வெளியே வந்தாள்.  சத்யதே அவனுக்கான பிளாக்கா அவனுக்கான பிளாக்  காபியை போட்டுக் கொண்டு அமர ஹரிணி அவனை பார்த்து சிரித்து அழைக்கவும் சத்ய தேவ் அவளின் அருகில் போய் அமர்ந்தான்.

அந்த நொடி கங்கா சந்திர முகியா மாறினா! அதே நொடி ரிதம் மாறி போனாள். இந்த கேடு வந்த நிதின் எங்கே போனான்? என்ன ம* இவள் சிரிச்சு பேசுரா? என பற்றிக் கொண்டு வந்தது. நேராக இதழ் அருகில் சென்று அமர்ந்தாள் ரிதம். 

அண்ணி வந்தாச்சா? என இதழ் கேட்க..

என்ன குடிக்கிற எனக்கும் சூடா இஞ்சி தட்டி போட்ட டீ வேணும் தலை வலிக்குது என்றாள் ரிதம். 

இதழ் நிமிர சத்ய தேவ் பார்வை தங்கையின் மீது ஆழ்ந்து பதிந்ததில் அது அண்ணி ம்ம் சமையல் கட்டுக்கு உள்ளே மருமக மட்டும் தான் போகனும் அப்டின்னு ஆத்தா ஆர்டர் போட்டிருக்காங்க. நீங்களே போய் சூடு பண்ணி ஊத்திகொங்கலேன் என சொல்ல.. 

ரிதம் கொஞ்சம் அவமானத்துடன் திரும்பினாள். இதழ் மீண்டும் அழைக்க, நானே பார்த்துக்கிறேன். என ரிதம் உள்ளே சென்று சூடு செய்தாள். 

நிதின் மற்றும் மிதுன் இருவரும் சமாதானம் ஆகி உள்ளே வந்தார்கள். மிதுன் அவளை பார்த்ததும் ரிதம் போர் அடிக்குது கேம் விளையாடலாமா? என கேட்க… ம்ம் என சொல்லிக் கொண்டே போனை எடுத்தாள். 

அனைவரும் விளையாட்டில் ஐக்கியம் ஆகி விட மிச்சம் இருந்தது ஹரிணி, நிதின், சக்தி மூவரும் தான். ஆதவ் நித்தினிடம் மாமா வாங்க! மிதுன் மாமா ரொம்ப மோசம் சீட்டிங்! 

டேய் போடா! உனக்கு விளையாட தெரியல! என மிதுன் விளையாட! சக்தி மாமா நீங்க வாங்க ரிதம் அக்கா மிதுன் அண்ணாவை ஜெயிக்கவே முடியல! என அவன் கூற..  ஹரிணி சக்தியிடம் போனை தூக்கி போட்டவள். சத்யா வா ஒரு மேட்ச் போடலாம் என அழைத்தாள். 

நிதின் அதிர்ச்சியுடன் ஹரிணியை பார்க்க, ஹி ஹி ஹி! நீ அவனுக்கு தானே சப்போட் பண்ணுவ என் குட்டி தம்பி கேட்டிருக்கான். சோ மிதுன தோர்க்கடிச்சிடுவியா? என பார்த்தாள் ஹரிணி. 

நிதின் என்ன செய்வது என ஆதவ் மற்றும் மிதுன் இருவரையும் பார்க்க, நிதின் வா நம்ம பிளே பண்ணலாம்! என  ரிதம் அழைக்க… வந்துட்டா போச்சு பிளே பண்ணிடலாம். என மிதுன் பக்கம் வந்து அமர்ந்தான். 

சத்ய தேவ், ஹரிணி, ஆதவ் மூவரும் ஒரு பக்கம் இருக்க, மிதுன், ரிதம், நிதின் மூவரும் இன்னொரு பக்கம் இருந்தார்கள். இதழ் அவர்களுக்கு நடுவில் அமர்ந்து ஹ ஹை ஜாலி யாரு ஜெயிக்கிறதுன்னு பார்த்திடுவோம் என கூறினாள். 

சந்தேகமே வேணாம் நாங்க தான் என்றான் மிதுன். அப்போ ஒரு bet வச்சுக்கலாமா? என நிதின் மற்றும் ரிதம் இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல..  ஹரிணி நிதுனை முறைத்தபடி வச்சிட்டா போச்சு! என்றவள் சத்யா நீ தான் ஜெயிக்கனும் என ஹரிணி சொல்ல.. என்னோட லக்கி ஸ்டார் நீ இருக்கும் போது நான் தான் ஹனி ஜெயிப்பேன் சொல்லனுமா நீ என்றான் சத்ய தேவ். 

ரிதமின் கண்கள் சிவக்க கண்ணம் எல்லாம் உப்பி போனது. நிதுணை நருக்கென கிள்ளினாள். ஹே என்ன டி கில்லற? என தேய்த்துக் கொண்டே பார்த்தான். உன் பொண்டாட்டி ஓவரா போறா! அவளை அடக்கி வச்சுக்க மாட்டியா? அதை நானும் சொல்லலாம். என்றான் நிதின். 

ஒழுங்கா மூடிட்டு ஜெயிக்கிற வேலைய பாரு! அவளை இந்த பக்கம் கூப்புடுற! புரியுதா? என்றாள் அதட்டலுடன். 

என்ன ரெண்டு பேரும் அப்படி என்ன ரகசியத்தை பேசிக்கிரீங்க? என ஹரிணி கேட்க.. 

பிளான் பன்றோம் உங்களுக்கு என்ன? என புருவத்தை தூக்கினான். 

ஹனி செலக்ட் பண்ணு என அவளின் முகத்தை திருப்பினான்.  நிதின் சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டான். ஆனால் ரிதமுக்கு தான் இருப்பு கொள்ள வில்லை. மிதுனே!! 

சொல்லு டி! 

அவனை நீ அவுட் பண்ற! என ஆவேசமாக கூறினாள். 

ம்ம் என இருவரும் தம்ஸ் அப் போட்டு கொள்ள ஆட்டம் ஆரம்பித்தது. 

முதல் ஆட்டம் மிதுன் ஜெயித்தான். 

இரண்டாம் ஆட்டம் நிதின், ரிதம், மிதுன் என மூவரும் சுத்து போட்டு சத்ய தேவ் மற்றும் ஆதவ் இருவரையும் மொத்தமாக போட்டு தள்ளினார்கள். 

அவள் முகத்தில் வெற்றி களிப்பில் கண்ணகுளி இரண்டும் ததும்ப உற்சாகத்துடன் குதித்தாள். மூன்றாம் ஆட்டம் ஆரம்பிக்க, ஹே குட்டச்சி உள்ளிருந்து எதுவும் தீனி எடுத்திட்டு வா சாப்பிட்டு கிட்டே மொத்தமா சாயிக்களாம் என்றாள் ரிதம். 

அண்ணி இது டூ மச்சு! 

ஹே போடி! என அதட்டினாள் ரிதம் 

மாமா என்ன மாமா! என ஆதவ் சக்தியை பார்க்க, தம்பி இங்கே வா என அருகில் அமர வைத்து கொண்ட ஹரிணி சக்தியிடம் ம்ம் ஸ்டார்ட் பண்ணு சத்ய தேவ் என ஹரிணி கூற..

ஆரம்பிக்கலாம் என்ற சக்தி போனை எடுத்து கொண்டு அவர்கள் மூவரையும் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். 

நிதின் ஜெர்க் ஆகி மிதுன், ரிதம் அது தான் மூணு மேட்ச் நான் நான்ப வின் பண்ணிட்டோமே இதுவே போதுமே என கூற, வேணாம் இனி தான் ஜாலியா இருக்கும் ப்ரோ வா ப்ரோ இவன சும்மா விட கூடாது. என மிதுன் சொல்ல.. நொந்து கொண்டே அமர்ந்தான். 

ஆட்டம் ஆரம்பித்தது பத்து நிமிடங்களுக்கு குறைவான நேரத்திலேயே சுட்டு வீழ்த்தினான் சத்ய தேவ். அய்யோ அய்யோ என்னாச்சு? அதுக்குள்ள எப்படி என மிதுன் பார்க்க, ரிதம் அதற்கு மேல் அதிர்ச்சியில் இருந்தாள். நெக்ஸ்ட் என கைகளை உதறி விட்டு அசால்ட்டாக ஆடிய சத்ய தேவ் ஆதவ் போனில் இன்னும் கொஞ்சம் தடவி சொல்லிக் கொடுக்க மொத்தமாக வீழ்ந்தார்கள் மூவரும். 

போதும் இதோட நிருத்திக்களாம் என நிதின் சொல்ல. No என மிதுன் ரிதம் இருவரும் விடாமல் விளையாடி இப்பொழுது பத்தாவது முறையாக இருவரும் தோர்த்து நின்றார்கள். 

ரிதமின் முகம் உப்பிக் கொண்டு போக, மிதுன் அப்பட்ட அதிர்ச்சியில் இருந்தான். ஆதவ் சக்தியிடம் ஹை ஃப்பை காட்டிய படி மாமா ஜெயிச்சிட்டோம் இன்னிக்கி எனக்கு பறக்கிற போல இருந்தது. என குதித்தான். 

ஹரிணி மெதுவாக குரலில் விடு சக்தி உன் பொண்டாட்டி அப்புறம் அழுவா! என சொல்லி சிரிக்க.. முடியாது முதல்ல இருந்து பிளே பண்ணியே தீருவேன். என ரிதம் விடாப்பிடியாக நின்றாள். 

மிதினுக்கு தெரிந்து விட்டது. இந்த சக்தி ஒரு டாக்ஸிக் அவனுக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து இருக்கிறான். சும்மா இருப்பவனை சொரிந்து விட்டது போல ஆகி விட.. இப்பொழுது என்ன செய்வது என மிதுன் மூளை யோசிக்க ஆரம்பித்தது. 

அதற்குள் மகி, உமா, நட்ராஜ், கீதா என அனைவரும் வர, ஹே இப்போதைக்கு போதும் சாப்பிட்டு கண்டின்யூ பண்ணலாம். நைட்டு கூட ராஜா, ராணி, நிறைய விளையாட்டு விளையாடுவோம் என கூறி ஆட்டத்தை களைத்தான் மிதுன். 

Ok கண்டிப்பா அப்போ கூட சக்தி மாமா தான் ஜெயிப்பாங்க! என ஆதவ் கூற.. ரிதமை தனியாக அழைத்து சென்ற மிதுன் சில விசயங்களை கூற.. 

மாட்டேன் என்றாள். 

அப்போ ஹரிணி முன்னாடி நீ தான் அவமான பட போற!! என அவன் சென்று விட்டான். 

சக்தி நீ தோர்த்து போடா! நான் ஜெயிக்கணும்? என்றாள் ரிதம். 

அப்போ வா வந்து எனக்கு முத்தம் கொடுத்து கட்டி பிடிக்கிற அதுவும் நீயாவே! அப்போ தான் நீ சொல்றத நான் செய்வேன். இல்ல இன்னும் நூறு தடவை play பண்ணாலும் நான் தான் ஜெயிப்பென். அந்த மினிஸ்டர் மண்டையன். குட்டி குட்டன் யாராலும் என்னை ம்ம் எதுவும் பண்ண முடியாது என சத்ய தேவ் கண் சிமட்டிய படி பார்க்க . இவனை எதுக்கு மிதுன் நாயே விளையாட்டுக்கு கூப்பிட்ட என நொந்து கொண்டே நின்றாள்.   

ரிதம் என்ன பண்ண போறா? 

நாளை பார்க்கலாம். 

வருவான். 

EPISODE 172

ஹரிணி சத்யதேவை பார்த்து எனக்கு தெரியும் சத்யா எப்பவும் ஜெயிக்க பிறந்தவன். என்று சொல்ல, ஹே  உன் புருஷன் உன்ன தான் பாத்துட்டு இருக்கான்.  என்று  கூறிக் கொண்டே எதிரில்  மிக மிக அதிர்ச்சியுடன் அந்த கந்தர்வகோட்டையே ஆடிப் போயிருச்சு பொம்மாயி என்று அருந்ததியில் வரும் சீனரி போல உறைந்து நின்ற ரிதமை  அவன் பார்க்கையில்  வெற்றிகளிப்பு தாண்டவம் ஆடியது.  சத்தியதேவ முகத்தில். 

யாரு பார்த்தா?  எனக்கு என்ன ? உண்மையதான  சொல்ல முடியும்.  எனக்கு தெரியும் டா! நீ தான் ஜெயிப்பேன்னு.  என்று சந்தோஷமாக கூறினாள் ஹரிணி.

இதழ் இன்னொரு பக்கம் வந்து நின்று அவனை உற்சாகப்படுத்தினாள்.  மொத்தத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்க, நித்தின் பிரகாஷ் ஒரு பக்கமாக சென்று அமர்ந்து கொண்டான். 

ஹரிணி  நெற்றியை தேய்த்தபடி நித்தின் பக்கம் சென்றாள். அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிதுன்  மனதில் அப்போ  இப்போவே ரிதம் கிட்ட சொல்லி ஆகணும்.  இல்லனா இது வேலைக்காகாது.  என்று நினைத்தவன்.  அவளை அழைத்தான். 

ரிதம் ரிதம் என்று மீண்டும் மீண்டும் அழைத்தான் அவளும் பேயரைந்தது போல நின்று கொண்டிருந்தாள். 

ஏய் ரிதம் உன்ன தாண்டி கூப்பிடுறேன்!  எங்க கவனத்தை வச்சிருக்க என்று நாக்கை கடித்தவன்.  சுற்றிலும் பார்வையை பதித்துக் கொண்டே உன் புருஷன் கேட்டுட்டான்னு  வை!!என்ன கோழி அடிக்கிற மாதிரி அடிச்சு குருமா வச்சிடுவான்! என்று பார்த்துக் கொண்டே அவளை அழைத்துச் சென்றான் .என்று சொல்வதை விட  அவளை இழுத்துச் சென்றான் மித்துன் தேவ். 

ரிதம் அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள்‌. முகம் எல்லாம் வேர்த்து இருந்தது.  ஒன்றுமே பிடிபடவில்லை.. எப்படி? எப்படி? அவனால் இப்படி விளையாட முடிகிறது? அதுவும், இவ்வளவு வேகத்தில் விளையாடுகிறானே? அவன்  மண்டையில் மூளை இருக்கிறதா? இல்லை எலக்ட்ரானிக் சிப் போன்ற ஏதாவது இருக்கிறதா அது அவனுடைய மூளை புரோகிராம் பண்ண மிஷனா?  என்று ஆயிரம் யோசனையில் அவள் இருந்தாள்.

ரிதம் ரிதம் உன்னோட கவனத்தை எங்கடி வச்சிருக்க? என்று சுற்றிலும் முற்றிலும் பார்த்துக் கொண்டே அவளை உலுக்கினான். 

அது!  அது! எப்படி? அது எப்படி நடந்தது? என்று அவள் அதிர்ச்சி குறையாமல் கேட்க,  எதைப்பற்றி கேட்டுட்டு இருக்க? என்று மிதுன் பெருமூச்சுடன் பார்த்தான்.

எப்படி அந்த சத்திய தேவ்  இவ்வளவு சூப்பரா விளையாடுறான்?  அதுவும் உன்ன விட பாஸ்ட்டா?  இத்தனை வருஷத்துல நான் ஒரு தடவை கூட அவனை இந்த மாதிரி ஒரு ஸ்கிள் அவன் கிட்ட இருக்குன்னு நான் பார்த்ததே இல்லையே! என்று ரிதம் அதிசயம் மற்றும் ஆச்சரியமாக அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க… 

அதுதான் எனக்கும் தெரியல என்று கூறினான் மித்துன் தேவ். 

 எப்படியும் நம்மல ஜெயிச்சிடுவான் தான.  அதுதான் இன்னொரு மேட்ச் இருக்குன்னு சொல்லி இருக்கானே!  கண்டிப்பா நம்ம தான் டிரை பண்ணி ஜெயிக்கணும் என்று ரிதம் உறுதியுடன் பேச..  மிதுன் அவளை மேலும் கீழும் பார்த்தவன்.  ஏகத்தாள புன்னகையுடன் எப்படி டி மனசாட்சி இல்லாமல் இப்படி பேசுற? என்று கேட்டான். 

என்ன சொல்ற? நீதான சொன்ன? 

நான் என்ன சொன்னேன்?  அதான் ஆதவ்வ், சக்தி ரெண்டு பேரும் இன்னொரு மேட்ச் சாப்பிட்டதுக்கு அப்புறம் ஆடலாம்னு அவங்க கிட்ட நீ தானே டா சொன்ன?  இப்போ மாத்தி பேசுற மாதிரி இருக்கு என்று ரிதம் கேட்க..

எந்த நம்பிக்கையில் டி நம்ம ஜெயிப்போம்னு சொல்ற?  அவன் எப்படி ஆடுறான்னு பாத்தியா?  ப்ராக்சன் செகண்ட்ல பண்றான்! ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் டெக்னாலஜிய விட அவன் ரொம்ப ஃபாஸ்டா இருக்கான்.  இப்படி இருக்கும்போது எப்படி நம்மளால அவனை தோற்கடிக்க முடியும்னு நீ நம்பற?  கண்டிப்பா முடியாது! அவன் தான் ஜெயிப்பான் என்று உறுதியாக கூறினான் மிதுன். 

இல்ல எனக்கு ஜெயிக்கணும் என்று ரிதம் ஒரு முடிவுடன் கூறினாள். 

மிதுன் அவளின் அருகில் வந்தவன் அதுக்கு ஒரு வழி தான் இருக்கு என்று என்றான்.  அவளை பார்த்துக்கொண்டே. என்ன வழி என்று ரிதம் ஆவலுடன் கேட்க..  பெருசா ஒன்னும் இல்ல நீ போய் சத்திய தேவை தோக்க சொல்லு என்று கூறினான்.

என்ன என்று ரிதம் அதிர்ச்சியுடன் பார்க்க, என்ன அப்படியே ஷாக் ஆகுற மாதிரி பண்ற? அவன் கண்டிப்பா எத்தனை பேர் வந்தாலும் அவனை நம்மளால தோக்கடிக்க முடியாது.  பேசாம அவனுக்கு இருக்குற வீக்நசை தான் தூண்டிவிடனும் என்று கூறினான். 

அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற?  மகி மாமி எதுவும் சொன்னா அவன் மாறுவான்.  அப்படி இல்லன்னா சூர்யா மாமா பேசினா change ஆவான். நான் சொன்னா என்னத்த கேட்பான் என்று ரிதம் அவனைப் பார்த்தாள்.

இருந்தாலும் இங்க இருக்கிற எல்லார்த்த விட அவன் உனக்கு கொஞ்சம் பயப்படுறான்னு எனக்கு தோணுது அதனால நீ போய் அவன்கிட்ட பேசினா கண்டிப்பா நம்ம ஜெயிச்சிடலாம் 

ஏய் என்னால எல்லாம் முடியாது. நான் போய் அவன் கிட்ட பேச முடியாது.. என்னத்த பேச சொல்ற என்று ரிதம்  வெட்டிவிடும் நோக்கத்துடன் பேச.. 

மிதுன் அவளை பார்த்தபடி அப்போ ஒன்னும் பண்ண முடியாது.  நீ ஹரிணி முன்னாடி அவமானப்பட்டு தலை குனிஞ்சு நிக்கிறது தான்   நடக்கும்.  அவ்வளவுதான் அப்புறம் சத்தியதேவ் கைகட்டி சிரிப்பான் என்று கூறினான். 

 உனக்கு என்ன பைத்தியமா?  எப்படி அவன்கிட்ட போய் நான் கேட்க முடியும்?  என்று ரிதம் மீண்டும் அவனைப் பார்த்து கேட்க, எப்படி இருந்தாலும் அவன் முன்னாடி தான் அவமானப்பட போறோம்!  நீ கொஞ்சம் உருட்டி அதட்டி மிரட்டுனீன்னா ஒருவேளை வாய்ப்பு இருக்கு.  ம்ம் ஒரு ஐடியா! அவனுக்கு டைவர்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லு!  அதுல அவனோட மனசும் மூளையும் கொஞ்சம் டைவர்ட் ஆகும். ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும்போது நம்ம அவனை ஈஸியா ஜெயிச்சிடலாம்.  இது ஒன்னு தான் வழி என்று கூறினான் மிதுன் தேவ். 

என்னடா சொல்ற என்று ரிதம் மீண்டும் கேட்க,  இது ஒன்னு தாண்டி வழி!  அவனோட வீக்னஸை கொஞ்சம் ட்ரிக்கர் பண்ணி விட்டா போதும்.  கண்டிப்பா நம்ம தான் ஜெயிப்போம்.  அது உன்னால மட்டும் தான் முடியும்.  என்று தைரியம் சொல்லி அனுப்பினான் மிதுன் தேவ்..

டேய் அதெல்லாம் முடியாது என ரிதம் மீண்டும் கூற.. அப்போ ஹரிணி முன்னாடி நீ தான் அவமான பட போற!! என அவன் சென்று விட்டான். 

ரிதம் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டே நின்றவள்.  வேறு வழியில்லாமல் பெருமூச்சு விட்டபடி அவங்க கிட்ட கொஞ்சம் பூச்சாண்டி காட்டுவோம்.  பயப்படுற மாதிரி பேசுவோமே!  கண்டிப்பா நம்ம சொல்றத கேட்டுத்தான் ஆகணும் அவன் என்று நினைத்தவள் நேராக சத்திய தேவை பார்க்க சென்றாள். 

அந்த தேக்கு மர கட்டிலில் கிங் சைஸ்  மெத்தை மேல் அட்டனகால் போட்டுக் கொண்டே கெத்தாக படுத்திருந்தான் சத்யதேவ். ரிதம்  எச்சில கஷ்டப்பட்டு விழுங்கியபடி கதவையும் மெதுவாக திறந்து கொண்டு உள்ளே வந்தாள். சத்யதேவ் அவளை கண்டு கொண்டான் இல்லை… 

க்கும் என தொண்டையை கனைத்துக் கொண்டே நேராக அவனுக்கு எதிரில் வந்து நின்றாள் .

சரியாக அவள் வந்த நேரம் தான் விரல்கள் அனைத்தும் ஆட்டம் கண்டது.  சத்தியதேவ்  ஒவ்வொரு விரல்களையும்  ஸ்டைலாக ஆட்டிக் கொண்டே படுத்து இருந்தது.  பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல இருந்தது. அவனது ஆளை துளைக்கும் கூர்மையான கண்கள்,  அடர்ந்து வளர்ந்த கேசம் மற்றும் கூர்மையான நாசி தடித்த உதடுகள் , அதுவும் அழகான உதடுகள் , கூடவே பெண்களுக்கு இருப்பது போன்ற வசீகர கண்கள் அடர்ந்த நெருக்கிய இமை முடிகள் என அவனது புஜங்கள் நன்றாக உருண்டு திரண்டு இருக்க, அவனது தோள்கள் மிகவும் கடினமாக இருந்தது.  அவள் ஒரு கடி கடித்தால் கூட அச்சுப்பதியாது.  அந்த அளவுக்கு உருண்டு திரண்டு இருந்தது.  அவனது கழுத்து எலும்பு மற்றும்  கையில் உள்ள நரம்புகள் புடைத்து எழுந்து தனியாக தெரிந்தது. 

மொத்தத்தில் அழகன் தான் பேரழகன் தான் ஆண்மைக்கு இலக்கணமானவன்.  அவனது விரல்கள் ஒவ்வொன்றும் சரியான கிட்டத்தட்ட அந்த காலத்தில் ஆண்களுக்கே உரிய ஒரு வர்ணனை இருக்கும்.  ஒரு வலிமையான ஆண்மை கொண்ட ராஜாவைப் போல இருக்கும்.  ஒரு ஆணின் கைகள் அவனது முட்டியை தொடுமாம், அந்த அளவுக்கு சத்தியதேவின் விரல்கள் அவனது கைகள் மிகவும் நீளமாக இருக்க,  விரல்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. கொஞ்சம் கூட அதில் தேவையில்லாத நகங்கள் என்று இல்லை.  இப்படியே ரசித்துக்கொண்டிருந்தாள் அவனை மிரட்டு சென்றவள். 

இப்பொழுதாவது கண்டு கொண்டானா என்றால் அதற்கு இல்லை என்பதே பதில்.  சத்யதேவ் அதே பாணியில் இருக்க ரிதம் மெதுவாக பேச தொடங்கினாள்.

சக்தி என்று அழைக்க அவன் பார்த்தான். 

சக்தி நீ தோர்த்து போடா! நான் ஜெயிக்கணும்? என்றாள் ரிதம். 

அப்போ வா வந்து எனக்கு முத்தம் கொடுத்து கட்டி பிடிக்கிற அதுவும் நீயாவே! அப்போ தான் நீ சொல்றத நான் செய்வேன். இல்ல இன்னும் நூறு தடவை play பண்ணாலும் நான் தான் ஜெயிப்பென். அந்த மினிஸ்டர் மண்டையன். குட்டி குட்டன் யாராலும் என்னை ம்ம் எதுவும் பண்ண முடியாது என சத்ய தேவ் கண் சிமட்டிய படி பார்க்க . 

என்னால முடியவே முடியாது உன்ன என்னால கட்டிப்பிடிக்க முடியாது உனக்கு நான் முத்தமே கொடுக்க மாட்டேன் முடியவே முடியாது.  போடா!!  முடியவே முடியாது! என்று அவள் ஆவேசமாக கத்த.. 

ஆனால் சிறு சலனம் கூட அங்கு இல்லை.  சந்திரமுகியை போல விருட்டென அவனைப் பார்த்தாள்.  அறையை சுற்றிப் பார்த்தாள்.  அப்போ அவன் நம்மள முத்தம் கொடுக்க சொல்லலையா ? கட்டிப்பிடிக்க சொல்லலையா?  இதெல்லாம் என்னோட கனவு தானா! F* என்று ரிதம் இடையில் கை வைத்துக் கொண்டே பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள்.

அப்பொழுதும் சத்யதேவ் அவளை  பார்க்கவே இல்லை. இவனோட மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்?  நானும் எத்தனை தடவை கூப்பிட்டு இருக்கேன் என்ன கவனிக்காம இருக்கானே?  என்று ரிதம் பேச வர

அதற்குள் சத்யதேவுக்கு அழைப்பு வந்தது.  அவள் இரண்டடி எடுத்து வைக்கவும் சத்யதேவ் போனில் பேசுவது நன்றாகவே கேட்டது. 

ஹலோ சொல்லு ஹனி என்ற அவனது குரலில் தேன் ஊறியது.  இன்னொருத்திக்கு அமிலம் சுரந்தது ரிதம் கண்களில் தீப்பொறி பறக்க அவனைப் பார்க்க… உதட்டை அழகாக விரித்து புன்னகைத்த சத்யதேவ் நைட் வாக்கா போலாமே இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா வாய்க்கால் வரும்.  அதை விட நடந்து கொண்டே போனா கோவிலை வந்துடும் என்று சத்தியத்தை சொல்ல ஓ அவ கூட நடந்து போக போறியா எவ்வளவு கொழுப்பு இருக்கும் நான் உன் கண்ணு முன்னாடி நின்னுட்டு இருக்கேன் நீ அவ கூட நடந்து போறயா திமிர் புடிச்சவனே என்று ரிதம் நினைக்க.. 

உடனே சத்யதேவ் எதையோ யோசித்தவன்.  வேணாம் டி!  இங்கிருந்து கொஞ்ச தூரத்துல சோழங்கா பாளையம்னு ஒரு இடம் இருக்கு.  அங்க பேக்கரி சூப்பரா இருக்கும். அங்க போலாமா என்று கேட்டான். 

எப்படி போறது என ஹரிணி கேட்க.. 

அதுவா வண்டில போலாம் தாத்தாவோட டூவீலரு இருக்கு ஜாலியா போலாம்  வரியா? நான் வரட்டுமா என்று Sathya dev எழுந்து கொள்ள.. உடனே ரிதம் வேகமாக சென்று கதவை அடைத்தாள். அவன் போனை கட் செய்துவிட்டு திரும்பி பார்க்க..  ரிதம் கதவை அடைத்துக் கொண்டு நின்றாள். 

 ப்ச் என சத்யதேவ்  உச்சி கொட்டிக்கொண்டே கதவை திறக்கச் செல்ல..  ரிதம் வேகமாக வந்து எங்கே போற? என கதவை வழி மறித்தாள். சத்ய தேவ் வாய் திறக்கவே இல்லை. ஹே உன்னைத் தான் டேய் உன்னை தான்! நான் பேசுறது காதுல விழுதா இல்லையா? என ஆவேசத்துடன் கேட்டாள். 

அவன் அவளின் முகத்தை கூட பார்க்க வில்லை. டேய் நான் யாருன்னு தெரியுமா Deputy commissioner of police என்னயவே எதிர்க்க உனக்கு எவ்ளோ தில்லு இருக்கும்? ஹே உன் கிட்ட நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன். பேசு வாயை திற என ரிதம் கத்தினாள். 

சத்ய தேவ்வின் பார்வை போனில் நிலைத்து இருக்க ஆவேசமாக அவனின் கையில் இருந்து போனை பிடுங்கியவள். அவர்களின் படுக்கையில் வீசினாள். கோபம் மின்னும் கண்களுடன் அவளை பார்த்தான். அந்த பார்வை உயிரை உறையத்தான் வைத்தது ஆனால் பயப்படாதது போல பாவ்லா காட்டிக் கொண்டே நெஞ்சை நிமிர்த்தி நின்றவள். நான் பேசிட்டே இருக்கேன். நீ உன் இஷ்டத்துக்கு போன் நோண்டுற? என அதட்டலுடன் பார்த்தாள் ரிதம். 

சத்ய தேவ் கூர்மையான பார்வையுடன் கம்பளி பூச்சிஈஈஈ! என சொல்ல.. வெடுக்கென அவன் பக்கம் வந்து நின்றவள் எங்கே? என கேட்டாள். 

நீ தானே சொன்ன? நான் தொட்டால் எரியுது கம்பளி பூச்சி ஊருற போல நெண்டுதுன்னு சோ எனக்கும் மானம் தன்மானம் இருக்கு. இனி உன் கிட்ட நான் வச்சுக்க மாட்டேன். நீ நான் ரெண்டு பேரும் ஒரே படுக்கையில் தான் ஆனால் உன்னை நான்  dash பண்ண மாட்டேன். 

What dash? 

அந்த வார்த்தைய சொல்ல கூட எனக்கு பிடிக்கல பாரேன். 

பற்களை கடித்தபடி அவனை பார்த்தாள். உன்னை தொட மாட்டேன். என்றான் எங்கோ பார்த்தபடி. 

அப்படியா ரொம்ப நல்லது. சரி சரி அடுத்த மேட்ச்ல நீ தோர்க்கணும் இது என்னோட ஆர்டர். என்றாள் ரிதம். 

வாய்ப்பே இல்ல. ஜெயிப்பேன் எல்லா மேட்சும். என்றான் சக்தி.. 

கூடாது!

ம்ம் உனக்கு எங்கே டி எரியுது? என சத்ய தேவ் கிண்டலாக கேட்க.. எல்லா இடமும் எரியுது என்றாள் வீம்புடன். அப்படியா என்றவன் அருகில் இருக்கும் தண்ணீர் மக் மொத்தத்தையும் அவள் மேல் ஆவேசத்துடன் ஊற்றினான். 

ஹேய்ய்ய்! என அவளின் முகம் உப்பி போக.. அவளை பார்த்து சிரித்தவன். DSP யா இருந்தாலும் சரி, டிஸ்வாஷ் பவுடரா இருந்தாலும் சரி, நீ உலக அழகியாவே இருந்தாலும் எனக்கு நீ பொண்டாட்டி டிஇஇஇஇ!! என அழுத்தி கூறியவன். கண் சிமிட்டியபடி அங்கிருந்து கிளம்ப செல்ல.. ஹே என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் முன் நின்றவள் வேகமாக கதவை வழி மறித்தாள். 

ரிதம் டென்ஷன் பண்ணாத! என சத்ய தேவ் அவளை பார்க்க.. சாரி கேளு! கூடவே நீ game விளையாட போக கூடாது. என நெஞ்சு கூடு ஏறி இறங்க அவள் சொல்ல.. 

உனக்கென்ன டி! 

எரியுது போதுமா! என்றாள் வேண்டும் என்றே. 

எங்கேன்னு சொல்லு? என சத்ய தேவ் குறும்பாக கேட்க.. 

உன்னை kill you!.. 

அய்யோ நான் அணைக்க வர மாட்டேன். ம்ம் மிதுன், ம்ம் நிதின், ம்ம் கவின் ராவ், ஹான் விஷ்வா, இல்லல்ல பரணி யாரையாவது வர சொல்லவா? அவங்க அணைச்சா உடனே அணைஞ்சு போயிடும் என்றான் சத்ய தேவ். 

கோபம் உள்ளுக்குள் வெடிக்க, வேக மூச்சுடன் கண்கள் சிவந்து போக ஆவேசமாக குளியலறை சென்றாள். 

ஹே என்ன டி பண்ற? என சத்ய தேவ் எட்டி பார்க்க அவன் மேல் தொப்பலாக நனையும் பொருட்டு தண்ணிரை ஊற்றியவள். ம்ம் உனக்கு துடைக்க நான் வர மாட்டேன். அதுக்கு பதில் ஹரிணி, சோனியா, சோனாலி, ம்ம் வேற யாரு? ஹான் உன்னோட ஸ்கூல்  மெட் அந்த நிவேதிதா! பிரனிகா இவளுங்களை வந்து துடைச்ச விட சொல்லு என வேகமாக வெளியே செல்ல போக வளைத்து பிடித்தான் அவளை. 

என்ன திமிரா? 

இல்ல கொழுப்பு!! என சொன்னவள் வெளியே செல்ல எத்தனிக்க.. நீ தான் துடைக்கிற.. என அவளை இழுத்தான். 

அப்போ இரு நான் போய்  மிதுன், ம்ம் நிதின், ம்ம் கவின் ராவ், ஹான் விஷ்வா, இல்லல்ல பரணி யாரையாவது ஹெல்ப்  கூப்பிட்டுகிட்டு   ஃபர்ஸ்ட் நான் ஃப்ரெஷ் ஆகிறேன் அப்புறம். என ரிதம் சொல்லி முடிக்க வில்லை. அவளை இழுத்து தண்ணீர் தொட்டியில் உள்ளே தூக்கி  போட்டான். ரிதம் அவனது சட்டை பனியனை இழுத்து பிடித்தாள் விடா பிடியுடன். 

விட்ரி! அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ!

அறையேன் டா அறைஞ்சு தான் பாரேன். நானும் உன்னை கண்ணம் கண்ணமா அரைவென் என்றாள் விடா பிடியாக. 

சத்ய தேவ் ஆவேசமாக கழுத்தை பிடித்து இளுத்தவன் வளைத்து பிடித்து கவ்வினான் உதட்டை. ஒரு சில இழுத்து கடித்த moment’s க்கு பின் வேகமாக அவன் விலகி விட.. நானும் பண்ணுவேன் டா! என கோபத்துடன் அவனது உதட்டை கவ்வி முத்தமிட்டவள் கண்களில் கோபம் வடிந்து தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் விபரீதம் புரிய.. 

வேகமாக விலகினாள். அவளின் நெஞ்சு குழி டாப்பை பிடித்து இழுத்தவன். முத்தத்தை தொடர்ந்தான். சக்தி விடு! லீவ் மி! என அவளின் கண்கள் கிறங்கி பளபளக்க.. பேச விட வில்லை அவன். அவளின் தொண்டை குழி அடைக்க பட்டது போல ஒரு உணர்வு. அவளின் வதானத்தின் மேல் பொட்டு பொட்டாக கண்ணாடி போல நீர் துளிகள் மின்னிக் கொண்டிருக்க, அதை சுண்டி விட்டவன். அந்த game விட இந்த வாட்டர் game நல்லாருக்கே என்றான் கிறங்கும் குரலில். மீண்டும் அவள் பேச வர.. உதட்டை மொத்தமாக அவனது உதட்டுக்குள் அடக்கி இருந்தான். 

ம்ம்.. ம்ம்.. அம்.. முத்தம் முடிந்து போக தாவிக் கொண்டு தொட்டியில் இருந்து வெளி வந்தவன். அவளை வேகமாக தூக்கி நிற்க வைத்தான். ஒரு நிமிடம் தள்ளாடி போய் நின்றவள். உதட்டில் கசியும் இரத்தத்தை நாக்கில் தடவிக் கொண்டே அவனை முறைத்துப் பார்த்தாள். 

ஹே சேர்ந்து குளிக்கலாமா ஜாலியா இருக்கும்! என்னாச்சு உதட்டில் fruit ஜாம்மா! வீகன் தானே என  சொல்லிக் கொண்டே யோசித்தான். இல்ல டிராபிக் ஜாம்! என்ன டா பக்கத்தில் வர மாட்டேன்னு சொன்ன? இப்போ என்ன ம*துக்கு வந்த? டிராகுலா என் உதடுஉஉ! என அவள் சினுங்க… 

ஹே ஹே இர்ரி இர்ரி! வெட்க படு! சர்வ சாதாரணமாக சொல்ற!  

அதுக்கு நான் இன்னொரு ஜென்மம் தான் எடுத்து வரணும்! என அவன் அருகில் நெருங்கியவள். அடிக்க வர.. 

ச்சோ ச்சசோ ச்சோ!! என ஒரு சத்தம். பல்லி..

அய்யோ லிசார்ட் போக சொல்லு அதை துரத்து என அவள் கட்டிக் கொள்ள.. 

ஹெக் ஹேய் ராணி ராவடிக்கு லிசார்டுன்னா பயமா! Interesting என்றவன் அவளின் கழுத்தில் வட்டமாக  மின்னிக் கொண்டிருக்கும் தண்ணீரை உறிஞ்சி கொண்டான். 

டேய் என்ன டா பண்ற! பண்ணி! 

அறிவு தாகத்தை தீர்க்க புத்தகம் தேவை.. என்னோட இளமை தாகத்தை தீர்க்க இந்த இந்த… என அவன் இழுக்க.. அவனிடம் இருந்து வெடுக்கென விலகினாள் ரிதம். 

போச்சு லிசார்டு பறந்து வந்து உன் மேலே ஒட்டுது. என்றான் சத்ய தேவ். .அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள். ஹே வெளியே தூக்கிட்டு போ! எனக்கு பயமா இருக்கு என அவள் நடுங்கினாள். அது உண்மையான பயம் தான். 

ஹே இப்போ பல்லி போச்சு கரப்பான் பூச்சு வந்துருச்சு என சத்ய தேவ் கூற.. அவனிடம் இருந்து கீழே இறங்கியவள். எங்கே என தேடினாள். 

பயம் இல்லையா? என சத்ய தேவ் சோகமாக கேட்க.. 

No no அப்போ நீ பொய் சொன்னியா டா என்றவள் வேகமாக துரத்த.. சத்ய தேவ் வெளியே வந்தான். 

கட்டிலை சுற்றிக் கொண்டே அவனை துரத்தினாள் ரிதம். 

அவளின் வதனத்தை பார்த்தவன் உதட்டை கடித்த படி ஹே ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் சரியா ஆன்சர் பண்ணு பார்ப்போம். நீ பெரிய அறிவு பட்சின்னு ஒத்துக்குறேன் என கப்போர்டில் இருந்து துண்டை எடுத்த படியே நீட்டியவன். ஒரு கிளையில் காம்பில் தொங்கும் fruit டேஸ்டா இருக்குமா? என சொல்ல வந்தவன் அப்படியே பேக் அடித்து ஒன்னும் இல்ல விடு! என தலையை துவட்டினான். 

 ஹே முழுசா சொல்லு டா! 

வேணாம் அந்த அளவுக்கு நீ வளரல! சரி விடு. என அவன் உடைகளை கப்போர்ட்டில் இருந்து எடுத்தான். 

வெளியே போறியா? 

இல்ல! என்றான். 

அதில் கண்ணகுழி ததும்ப புன்னகைத்தவள். சரி எப்படி கேம் வின் பண்ற? எனக்கு சொல்லி கொடென். 

மாட்டேன். 

ஹே!! 

எனக்கு என்ன கிடைக்கும்? என்றான் சத்ய தேவ். 

சொல்லு என்ன வேணும்! 

முத்தம் கொடுக்கணும். அதுவும் நீயா வந்து என இரு புருவம் தூக்கியவன். அப்படியே கட்டிக்கனும். இப்படி எல்லாம் பண்ணா உனக்கு சொல்லி கொடுப்பேன் என்னையவே தோற்கடிக்கும் அளவுக்கு என்றான். 

ரிதம்…?       – வருவான். 

EPISODE 173

ரிதம் தலையை துவட்டியபடியே இப்போ நீ எங்க கிளம்பிட்ட? வெளியே போறியா? 

இல்ல! என்றான். 

அதில் கண்ணகுழி ததும்ப புன்னகைத்தவள் அதை மறைத்துக் கொண்டு ஏன் இப்போ தான் போன்ல வெளியே போறேன்னு சொன்ன அப்போ நீ போகலையா என்று கேட்டாள். 

முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ண எப்படி தொப்பெல்லாம் நெனச்சா காய்ச்சல் வந்துடும் என்று அக்கறையுடன் சொன்னவன் மணி ஆள்மோஸ்ட் இப்போ 8க்கு மேல ஆக போகுது இதுக்கு மேல அம்மா விட மாட்டாங்க என்று கூறிக் கொண்டே வெளியே நடந்தான் வெளியே செல்ல நடந்தான் சத்ய தேவ். 

ஓ அப்படியா அது இருக்கட்டும். இந்த அளவுக்கு இப்படி கேம் விளையாடுற எனக்கு இதை பத்தி தெரியவே தெரியாது சரி எப்படி கேம் வின் பண்ற? எனக்கு சொல்லி கொடென். 

மாட்டேன் என்றான் ஒரே வார்த்தையில். 

ஹே!! என அவள் அதட்ட.. எனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு சொல்லிக் கொடுத்தா?  என்றான் சத்ய தேவ். 

சொல்லு என்ன வேணும்! என தீர்க்கமான பார்வையில் கேட்டாள் ரிதம். 

என்ன கேட்டாலும் எது கேட்டாலும் கிடைக்குமா? என சத்ய தேவ் கேட்க, உனக்கு முதலில் என்ன வேணும்னு சொல்லு! எல்லாமே கிடைக்கும் என்றாள் ரிதம். 

அப்படியா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே!! சரி எனக்கு என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன்.. அவளைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடி ஒரு நிமிடம் மூடி முத்தம் கொடுக்கணும் என்று மோகமாக அவளைப் பார்த்தான்.  அதுவும் நீயா வந்து!  என்று இறப்புருவத்தை தூக்கியவன். அப்படியே என்னை கட்டிக்கணும்.  இறுக்கமா என்று பெரு மூச்சை விட்டவன்.  அதுவும் நீயா வந்து!!  இது ரெண்டும் நீ எப்ப எல்லாம் எனக்கு பன்றியோ?  அதை பொறுத்து உனக்கு நான் சீக்கிரம் சொல்லி கொடுத்துடுவேன்.  அதுவும் நீ இப்போ  ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்க?  சோ இத கேமை கத்துகிறது ரொம்ப ரொம்ப கஷ்டம் உன்னோட டெடிகேஷன் எப்படி இருக்கோ அதை பொறுத்து. இப்படி எல்லாம் பண்ணா உனக்கு சொல்லி கொடுப்பேன். அதுவும்  என்னையவே தோற்கடிக்கும் அளவுக்கு என்றான்.  

No way அதுக்கு சான்சே இல்ல என்னால உனக்கு அப்படி எல்லாம் பண்ண முடியாது.  எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து இப்படி எல்லாம் கேட்ப? என்று ரிதம் மூக்கு புடைக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து கூறினாள். 

சத்யதேவ் புன்னகைத்தபடி நான் உன்ன கட்டாயப்படுத்தினேனா? என்ன? நீ தானே என்கிட்ட வந்து அதை சொல்லிக் கொடு, இது சொல்லிக் கொடு என்று கேட்ட?  என் கிட்ட கேட்டா அதுக்கு தகுந்த ஒரு பேக்கேஜ் வாங்கிட்டு,  நான் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பேன். 

உடனே அவள்  ஆவேசமாக பேச வாய்  எடுக்க உனக்கு மட்டும் என்று அந்த வார்த்தையை அழுத்தி கூறியவன் கடை இதழை கடித்து சிரித்துக்கொண்டே வெளியே சென்றான். 

ஹே ஹே ஏய் இப்ப எங்கடா போற?  என்று ரிதம் கேட்டாள். 

அதுவா என மார்க்கமாக நெட்டி முறித்து உடலை வளைத்தவன். அடுத்த ரவுண்டுக்கு ரெடியாக வேணாமா என்று ஒற்றை கண் சிமிட்டி கொண்டே போய் டின்னர் முடிச்சிட்டு அடுத்த ரவுண்ட் ஆட்டத்துக்கு ரெடி ஆகணும். பேசாமல் நீஇஇஇ! என இழுத்தவன். கர்சீப் எடுத்துக்கிட்டு வந்திடு. எப்படியும் என்கிட்ட தோத்துட்டு அழுதுகிட்டு கண்ணீரோட நிக்க போற!  அதுதான் அங்க நடக்கப்போகுது. சோ அதுக்கு பிரிப்பேரா வந்துடு!  என்று கூறியவன்.  தலையை கோதியப்படி வேகமாக கீழே இறங்கினான். 

ரிதமுக்கு இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.  இப்படி எல்லாம் பேசுறானே?  எப்படி? பெரிய தனிப்பெரும் கருணை அப்படி இப்படின்னு சொல்லுவான். இப்போ இப்போ என்னன்னவோ பேசுறான்? என உதட்டை மடித்தாள். அவளது உதட்டில் இரத்த கசிவு நின்று அந்த இடம் கன்றி போயிருக்க ஸ்ஸ்ஸ் ஹா!!இவன் என்று அதே இடத்தில் சிணுங்கி ஆடியவள் வேகமாக வேறொரு உடைய எடுத்து மாத்திக் கொண்டாள். 

இங்கே நிதின் அவனது அறையில் போனை நோண்டிக் கொண்டிருந்தான். ஹரிணி அங்கும் இங்கும் நடந்தாள். உனக்கு கோபம் எதுவும் இல்லையே என்று அவனிடம் கேட்க.. இல்லை என்பது போல் புன்னகைத்தான்.  நிஜமா என்று ஹரிணி மீண்டும் கேட்க… இல்லடி என அவனது வேலையில் கண்ணாக இருந்தான்.

இல்ல நீ பொய் சொல்ற! எனக்கு என்னமோ நீ கோபமா இருக்கிற மாதிரியே தோணுது.  நான் சத்ய தேவ் கூட விளையாடுறது.  உனக்கு பிடிக்கல தானே!  என்று ஹரிணி கேட்க நினைத்தேன் ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போ ஆமான்னு சொன்னா! என்ன பண்ண போற?  இல்லன்னு சொன்னா மட்டும் என்ன பண்ண போற?  என்று கேட்டான். 

இப்படி குதர்க்கமாக பேசினால்? நான் என்ன சொல்ல முடியும் என்று ஹரிணிக் கொண்டே சொல்ல..  நித்தின் ஒரு சின்ன புன்னகையை வெளிப்படுத்தி நான் பீல் பண்ணல விடேண்டி என்றான். 

அதெப்படி ஃபீல் பண்ணாம இருக்க முடியும் என ஹரிணி இடையின் இரண்டு பக்கமும் கையை வைத்துக் கொண்டு அவனை பார்த்து கேட்டாள். அதை பக்கத்தில் வந்து கேளு சொல்றேன் என கூறினான். 

ம்ம் சொல்லு சொல்லு! என அவள் கேட்க.. இன்னிக்கி நீஇஇ! என்றவன் போனை தூக்கி படுக்கையில் போட்ட படி, அவளை அப்படியே பின்னால் திரும்ப வைத்தான். என்ன டா நிதின் பண்ற நீ! என ஹரிணி கேட்க..  

ப்ச்!! இந்த இடம் உனக்கு.. என உதட்டை மடித்து கடித்துக் கொண்டவன். நீ அதிகமா ஜீன் தானே போடுவ? அதுவும் டைட்டா! உனக்கு அன்கம்பட்டபிலா இருக்காதா?  அதுவும் ஸ்கேண்டில்ஸ் எப்போவும் ஹீல்ஸ் போடுவியா என்ன?  என்று நித்தின் கேட்க எனக்கு அதுதான் கம்பர்ட்டபிளா இருக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினாள் ஹரிணி. 

அவனது கைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி அவளின் பின்பக்கங்களின் வளைவுகளை இரண்டு பக்கமும் பிடித்துக் கொள்ள, ஹரிணி திக்கென அவனை திரும்பிப் பார்த்தாள். இந்த இடம் உனக்கு ரொம்ப அழகா இருக்கு!  அதைவிட உன்னோட ஹிப்பு பாரு கொஞ்சம் கூட அதுல தேவையில்லாத சதையே இல்லடி! அய்யோ! என பெரு மூச்சை விட்டவன். பதமா இருக்கு அப்படியே நான் உன்னை… என்று காதில் காதல் பேசியவன். அந்த  momentல இந்த பெல்லி ஹிப்பு மூமண்ட் ஆகும் போது. F*  என அவளை வேகமாக தள்ளி அவளின் மேல் படர்ந்தான். 

ஹரிணியின் முகம் வெட்கத்தில் சிவந்து இரண்டு கண்ணமும் பிளஷ் ஆகிப் போக.. உதட்டை கடித்து கண்களை மூடிக் கொண்டாள். ஹரிணிஇஇ! என்றவன் அப்படியே அவளின் உதட்டை வருடி பார்த்தான். கண்களை திறந்து அவனை பார்த்தவள். புதுசா பார்க்கிற மாதிரி அப்படியே பார்க்கிற? 

ஹிம்ம் எனக்கு புதுசா பார்க்கணும் நிறைய! அதுவும் இப்போவே! என்றவன் வேகமாக அவளின் புடவை மூந்தானையை வேகமாக ஹூக் கழட்டி வீசினான். ஹரிணி கொஞ்சம் அதிர்ச்சி ஆகி பின்னால் நகர்ந்து கொண்டே, நிதின் இங்கே வேணாம் டா! நம்ம வீட்டுக்கு போய் என அவள் சொல்ல.. ப்ச் எனக்கு இன்னிக்கி பார்த்தே ஆகணும்! இப்போ காட்ற வா என அவளை நடுவில் விட்டு இரண்டு பக்கமும் கையை முட்டு கொடுத்தவன் கண்களில் ஆர்வமும், மோகமும் அளவில்லாமல் மின்னியது. 

நிதினு! என ஹரிணி அழைக்க, ம்ம் வேணும் டி! என்னை தடுக்காத! என்று அவளின் பிளவுஸ் பக்கம் ஆரம்பித்தான். இரு டாஆஆ! சொல்றத கேலேன் வீட்டுக்கு போயிஇஇ! என அவள் கூற..

ம்ம் இனி எதுவும் கேட்க மாட்டேன் என ஆவேசமாக அவளிடம் இருந்து விலகி மீண்டும் போன் பட்சி புழுவாக தலையை கவிழ்த்தபடி எடுத்துக் கொண்டான்.  ஹரிணி வேகமாக முந்தானையை மேலே போட்டுக் கொண்டவள்.  அவனைப் பார்க்க…  முகத்தில் அவ்வளவு ஏமாற்றம்  பிரதிபலித்தது அதுவும் நன்றாகவே.  ஹரிணி அவன் அருகில் சென்றவள்.  நித்தின் என்று அழைத்தாள். சொல்லு என்று சுரத்தே இல்லாமல் பதிலளித்தான். 

இப்போ என்ன வேணும் தானே என அவரது முகத்தை நிமிர வைக்க விடா கண்டனாக.. எனக்கு எதுவும் வேணாம் நீ போ போய் குட்டி பசங்க கூட கேம் விளையாட  பாரு. கண்ணாமூச்சி கூட விளையாடு. அதுக்கு மட்டும் தான் நீ லாயக்கு! என்று கோபமாகவே கொஞ்சம் கடுமையுடன் கூறினான். இதுல வேற பெரிய பொண்ணுன்னு சொல்லிக்கிறா! பெரிய பொண்ணுங்கறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல.  அந்த ஹார்மோன் எல்லாம் ஒர்க் ஆகுதான்னு என்னால செக் பண்ணவும் முடியல!  என்ன வாழ்க்கை டா என்று சலித்துக் கொண்டான். 

இதுக்கு மேலே தாங்காது என நினைத்தவள். அவன் அருகில் உரசியது போல அமர்ந்தாள். நிதின் கண்டு கொள்ள வில்லை.. அவனது வேலையில் குறியாக இருந்தான். அவன் தொடையில் கைகளை வைத்தவள். ப்ச் நான் பக்கத்தில் வந்து உட்கார்ந்து இருக்கேன். உனக்கு என்ன போன்? என்னை விட போன் தான் முக்கியமா உனக்கு? என ஹரிணி கேட்க அந்த போனை என்னால நோண்ட முடியும் ஆனால் உன்னை என்று உதட்டை கடித்தான். 

ச்சீ ச்சீ! Dirty minded.. என அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்தாள். இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல போடி என்று நித்தின் கூறிக்கொண்டே எழுந்து செல்ல போக..  அவனது சட்டை காலரை பிடித்து அப்படியே படுக்கையில் உருண்டாள்‌.  அவனது உதட்டில் முத்தமிட, நித்தின் பிரகாஷ் அவளின் கண்களை பார்த்தவன் என்ன? என்பது போல் கேட்டான் கண் ஜாடையிலேயே.  ஹரினியின் கண்கள் அவனது உதட்டில் நிலை குத்தியிருக்க.. போனை அப்படியே பின்னால் போட்டவன்.  அவளை தோள்பட்டையை பிடித்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கைகள் கழுத்தை வளைத்து முத்தமிட ஆரம்பித்தான்.  வேகமாக அவளது  முந்தானை கசங்கிக் கொண்டே கீழிறங்க..  ஹரிணி அவனது சட்டை பட்டனை பனியனை தூக்கிவிட்டு படி கைகளில் உள்ளே கொண்டு சென்று அவனது முறுக்கேறி திரண்டு நிற்கும் பூச்சங்களையும்  ஆறடி படிக்கட்டையும் வருடி கொண்டவள் அப்படியே வதனம் வருடிய படி  கட்டியணைத்தாள். 

நிதின் பிரகாசின் கண்கள் அவளின் முன் பகுதி கொக்கியில் நிலை குத்தி நிற்க, இழுத்து அணைத்து கொண்டாள். ஹரிணிஇஇ ஜஸ்ட் ஃபோர் பிளே வேணும்! டிஇஇ! உன்னை தொட்டு பார்க்கவே இப்படி ஒரு யுகம் பண்ணாத டி! நான் எவ்ளோ கஷ்ட படுறேன்னு உனக்கு தெரியாது டி! என்றவன் வேகமாக அவளின் உதட்டை கவ்வினான். 

ம்ம் என்னமோ பண்ணிக்கோ! கேட்க மாட்டேன். என கைகள் இரண்டையும் விரித்தாள். ப்ச் இஸ்டமே இல்லாம பண்ண வேணாம். I will kill you.. என உதட்டை கடித்து இழுத்தாள் ஹே இரத்தம்!! 

ம்ம் எங்கே என ஹரிணி கண்ணை சுருக்கி பார்த்தவள். வரட்டும் இப்போ என்ன? என மீண்டும் உறிஞ்சி கொண்டாள். என் உதட்டை கடிச்ச உன்னை! என அவனது கண்களும் கைகளும் எக்கு தப்பாக சென்று பிடித்த இடம் கைகள் இரண்டும் தாவணி ஆனால் கனிகள் தித்திக்குமடி என்று வராக நதிக்கரை ஓரம் என நிதின் கண்கள் அவளின் சேலை தாவணியில் வழுக்கி விழுந்து எழ முடியாமல் மீண்டும் மீண்டும் விழுந்தவன். It’s amazing என கண்களை மொத்தமாக அவளின் மேல் ஸ்கேன் செய்து நிலை கொண்டு நிலையில்லாமல் அவனது உதடுகள்  ஆவேசமாக செய்த வேலையில் அவளின்   கனி சுமந்த காம்புகள் கன்றி போனது. 

நிதினுஉஉஉ it’s paining!! என அவள் கண்களை மூடி உதட்டை கடித்தபடி கூற அந்த இடுக்கில் பேசியவன் உன்னோட குரலை பார்த்தா அது சுகமான வலி மாதிரி தெரியுது ஹரிணி என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான். ஸ்ஸஸ் விடு டா வலிக்குது. என அவள் விலக.. இன்னொரு பக்கம் பற்றி கொண்டான். 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க.. 

ஹரிணி பயத்துடன் விளக்கப் போக அவளை இடுக்கு பிடி கொடுத்து பிடித்தவன் அதே மோனநிலையில் அவளின் உதட்டில் முத்தம் வைத்து யாரு என்று மெதுவான பவ்ய குரலில் கேட்டான் மாமா நான் தான் சாப்பிடற நேரம் வந்துடுச்சு அதுதான் அம்மா உங்கள வர சொன்னாங்க நான் சாப்பிட்ட தான் இருக்கேன் என்று நித்தின் கூற டேய் அவன் சின்ன பையன் டா அறிவு கெட்டவனே என்ன பேசுற என்று அவள் ஆவேசமாக பேச 

என்ன மாமா சொன்னீங்க என்று ஆதவ் மீண்டும் கேட்டான். அது ஒன்னும் இல்ல நீ போ நாங்க உடனே வரும் கொஞ்சம் லேட்டா என்று கூறினான் சரி என்று தலையை சைத்த ஆதவ் இரண்டு எட்டு வைத்தவன் என உடனே வரும் ஆனால் லேட்டாவா என்ன ஆச்சு இந்த மாமாவுக்கு என்று நினைத்தவன் மாமா என்று மீண்டும் ஆதவ் அழைக்க

வரும் போடா உங்க அக்கா முக்கியமான வேலையில் இருக்கா நானும் தான் இப்போ வந்துட்டு போ நல்ல பையனா என்று நிதின் ஆதம் சரி என சின்ன தலை அசைப்புடன் அங்கிருந்து சென்று விட்டான் இங்கே டைனிங் ஹாலில் ஒரு சில மணி நேரம் கழித்து இரண்டு உதட்டுகள் காய ரத்த காயத்துடன் கன்றி போய் அமர்ந்திருந்தது ஒன்று நித்தின் பிரகாஷ் இன்னொன்று ரிதம் 

வருவான்

நாளை மகி மிகவும் பதட்டத்துடன் கோவிலில் அமர்ந்திருந்தால் அவளின்  குலதெய்வ கோவிலில் ரிதம் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தால் என்னாச்சு அவளுக்கு என்று நித்தின் கேட்க மிதுன் கேட்க

சாமி வந்திடுச்சு 

EPISODE 174

சத்ய தேவ் ஒரு பக்கம் புன்னகையுடன் அமர்ந்திருக்க, ரிதம் இன்னொரு பக்கம் தலையை குனிந்து கொண்டே அமர்ந்திருந்தாள். மிதுன் அவளின் முகத்தை பார்த்தபடி என்ன இவள்? ஒரு வேளை இந்த சக்தி அவளை மிரட்டி இருப்பானா? என நினைத்த படி  அவளின் போனுக்கு செய்திகள் தட்டி விட்டான். 

நிதின் அதை விட உற்சாகமாக அமர்ந்திருக்க, வெட்கத்துடன் கூனி குறுகி அவனருகில் அமர்ந்திருந்தாள் ஹரிணி. கீதா அனைவருக்கும் பரிமாறியபடி நித்தின் மற்றும் ஹரினி இருவருக்கும் பன்மடங்கு கவனிப்புடன் உணவு வைத்தார்.  இன்னொரு பக்கம் மகி சக்திக்கும் ரிதமுக்கும் உணவுகளை பரிமாறினார். 

சாப்பிடுங்க! அமைதியா இருக்கீங்க மாப்பிள்ளை?  என்று கீதா அழைக்க..  நிதின்  புன்னகையுடன் மாப்பிள்ளை டி! என்னை  ஆண்டி அப்படித்தான் கூப்பிடுராங்க.  கேட்டுக்கோ.. 

 உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேலாக போகுது.  நீ மாப்பிள்ளை கிடையாது என்று மெதுவான குரலின் ஹரிணி கூற..நித்தின் புன்னகைத்தபடி நான் எப்பவுமே மாப்பிள தாண்டி என்று கூறினான். 

இந்த பக்கம் விரதம் மிகவும் அமைதியாகவே இருக்க… மிதுன் அவளை எண்ணுக்கு மீண்டும் மீண்டும் செய்திகளை அனுப்பினான். 

ஆனால் எந்த ஒரு  எதிர்வினையும் இல்லாமல் போகவே, ஹே உன்னுடைய ஃபோன்  எங்கே என  மெதுவான குரலில் அவளிடம் கேட்டான். 

போன ரூம்ல வச்சிட்டு வந்துட்டேன்  என்று கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள். 

மிதுன் அவளிடம் என்னாச்சு ஒரு மாதிரி  இருக்க அவன் முடியாதுன்னு சொல்லிட்டானா என்று மிதுன் கேட்க.. ஒன்னும் இல்ல விடு என்று ரிதம் சமாளித்தாள். 

சத்யதேவுக்கு மகி தனியாக சமைத்த அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்தார். ரிதம் சாப்பிடுவதற்கு சிரமப்பட , என்ன ஆச்சு ரிதம்?! என்று அருகில் வந்தார். 

அவள்  நிமிர்ந்து கேட்க..

அது உன்னோட உதட்டில் என்ன ஆச்சு?  ஏன் சாப்பிட ரொம்ப சிரமப்படுகிறாய், வயித்துக்கி  கடுப்பு, சூடு எதுவும் புடிச்சுகிச்சா! வாயில எதுவும் புண்ணு இருக்கா?  இங்க  காட்டு?  என்று கேட்க..  சத்யதேவ் உதட்டில்  புன்னகை தாண்டவமாடியாது. இன்னொரு பக்கம் நித்தின் கூட சாப்பிடுவதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்டான் மாப்பிள்ளை உங்களுக்கு என்ன ஆச்சு என்று கீதா கேட்க.. 

ரிதம் நிதின்  இருவரும் அவரவர் இணைகளை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். 

மிதுன் இதழ் இருவரும் அனைவரையும் புரியாமல் கவனிக்க..  சத்ய தேவ் அதை மாற்றும் பொருட்டு சரி சரி சீக்கிரம் சாப்பிடுங்க.  அடுத்த கேம் ஆடலாமா? வேணாமா என்று கேட்க..  ஆதவ் வேகமான தலையசைப்புடன் கண்டிப்பா மாமா!  ஜாலியா இருக்கப்போகுது.

உடனே இதழ்,  எனக்கு எல்லாம் இந்த வீடியோ கேம் விளையாட தெரியாது. மறுபடியும் நானு வரமாட்டேன்.  அதுக்கு பதிலா ஐடென்  சிக் பிளே பண்ணுவோம். அதை முடிச்சிட்டு வேணும்னா நீங்க கேம் விளையாடுங்க. ஆனா நான் வரமாட்டேன் என்று கூறினாள்.

 எனக்கு கூட டபுள் ஓகே என்று நித்தின் கூறினான். 

நான் வரல என்று ரிதம் கூறி விட..  மிதுன் அவளிடம் ஹே இந்த ஒரு விளையாட்ட, விளையாடிட்டு நம்ம தப்பிச்சு போயிடலாம்!  இல்லனா சத்தியதேவ் நம்மள பங்கம் பண்ண வேண்டி வரும்  என்று மிதுன் சொல்ல..

ஆமா ஆமா ஏற்கனவே அவ வெகு சிறத்தையா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கான். என்னால தான் அவன பேஸ் பண்ண முடியல.  அது என்ன சொல்றது ஏதோ ஒரு மாதிரி இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அப்போ ஐட்டன் சிக்கு விளையாடலாமா?  ஸ்ட்ரைடா ஃபயரே விளையாடுவோமா? என சத்யதேவ் கூறினார்.

ரிதம் அவனை பற்களை கடித்துக் கொண்டே பார்த்தாள்.  போடி என்று உதட்டில் அத்தனை குறும்பு தாண்டவம் ஆடியது அவனுக்கு. 

எனக்கும் ஸ்ட்ரெயிட்டா பிரிப்பயரே விளையாடலாம்  பா ஐட்டன் சிக் எல்லாம் வேண்டாம் என்று ஹரிணி கூற..  மிதுன் ஹரிணியை முறைத்துப் பார்த்தவன். ரிதம் கிட்ட.. பாரு அவ ஜாலியா இருக்கா!  ப்ரோவும் அவளை  எதுவும் கேட்கறது இல்ல. என முனுமுனுத்தார்.  இப்போ என்னை  என்னடா பண்ண சொல்ற இன்று ரிதம் சலிப்புடன் கேட்க..

நான் என்ன சொல்றதுக்கு  என்ன இருக்கு இனி உன்னோட விருப்பம் என்று மித்துன் கூறிவிட்டு எழுந்தான். 

சத்யதேவ் உற்சாகத்துடன் போனுக்கு சார்ஜர் போட்டுக் கொண்டே திரும்ப எதிரில் ரிதம் நின்றிருந்தாள்.  அவளை கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல.. டேய் நில்லு என்றாள்.  அவன் கண்டு கொண்டான் இல்லை..  வெளியே சென்று விட்டான்.

ஐயோ இவன என்று வேகமாக ரிதம் சத்ய தேவின்  அருகில் சென்றவள். அவனது பின் பணியினை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள். தண்டமாடு என்னடா சாப்பிடுற? புல்  சாப்பிட்டே இவ்ளோ குண்டா இருக்க கையடி முதல்ல இந்த சத்திய தேவ்  குறை கூறினான். 

சரி நீ சொல்ற மாதிரியே நான் பண்றேன் எனக்கு கேம் விளையாடனும் அதுவும் உன்னை தோக்கடிக்கணும் என்று ரிதம் சொல்ல..

அப்படியா ஆனா அதுக்கு நான் சொல்லிக் கொடுக்கணுமே!  இப்ப நான் சொல்லிக் கொடுத்தா நீ ஜெயிச்சிடுவியே? என்று சத்திய தேவ் கேட்க..  இப்போ என்ன பண்றது?  என்று ரிதம் கேட்டாள்.  அப்போ இந்த கேம் வேண்டாம் நான் இதை கேன்சல் பண்ண பொறுப்பு  ஆனா ஐட்டன் சிக் எனக்கு நிறைய வேணும் என்ன வேணும் திருட்டுத்தனம் தான் என்ன

திருட்டுத்தனம்ன்னா என்ன என அவள் கேட்க.. ஓ போலீஸ்க்கு திருட்டுத்தனம் தெரியாதோ என்று மேலும் கீழும் பார்த்தான்.  டேய் கடுப்பு அடிக்காம விஷயத்துக்கு வா! 

எனக்கு முத்தம் வேணும் நீயா வந்து கொடுக்கணும் என்று சத்ய தேவ் சொல்லு வேறு வழியில்லாமல் ரிதம் நொந்து கொண்டு சென்றாள். 

என்ன டிஇஇ! என புருவம் தூக்கி கேட்டான் சத்ய தேவ். 

ம்ம் சரி டா திருடா நான் திருட்டு தனம் பண்ண ரெடி வந்து தொலை போலாம். என்றாள் ரிதம். 

ஆட்டம் ஆரம்பித்தது. மிதுன், இதழ், ஆதவ் மூவரும் தான் மாறி மாறி அவுட் ஆனார்களே தவிர அந்த இரண்டு ஜோடிகளும் ஆளையே காணோம். 

இப்படியே நம்ம மட்டும் தான் விளையாடிட்டு இருக்கோம்! அவங்க எங்கே? என மிதுன் கடுப்புடன் கேட்க.. இதழ் போன் செய்து பார்த்தாள். குக்கு நாங்க தூங்க வந்துட்டோம் நீங்களும் தூங்குங்க என கூற.. ஹே போனை ரிதம் கிட்ட கொடு டா! என மிதுன் கத்த அதற்குள் போன் கட் ஆகி இருந்தது. 

மிதுன் கடுப்புடன் கைகளை மடக்கி மூடினான். என்னாச்சு அக்கா? என ஆதவ் கேட்க.. ஒன்னும் இல்ல ஆதவ் நம்ம தூங்க போலாம் இப்போவே மணி 9க்கு மேலே ஆகுது அதனாலே போலாம். அண்ணா டென்ஷன் ஆகாதே! வா போலாம் என தன் அண்ணனை சமாதானம் செய்து அனுப்பினாள். 

ஹே எதுக்கு டா பொய் சொன்ன? என ரிதம் இடையில் கை வைத்த படி கூற.. வாடி டைம் வேஷ்ட் பண்ணாத என இடையுடன் இழுத்தான் சத்ய தேவ். 

ஒரு பெரு மூச்சுடன் டூ வீளரில் சத்ய தேவின் பின்னால் அமர்ந்தாள் ரிதம். இறுக்கி பிடித்த டாப் வழக்கம் போல அவளின் கூந்தல் உச்சியில் கட்ட பட்டிருந்தது. 3/4 த் ட்ராக் என பன் கொன்டைக்காரி இன்று மிகவும் அழகாகவே இருந்தாள். 

இலகுவான வெள்ளை நிற காட்டன் சட்டையில் அடர்ந்த முடியை கோதி விட்ட படி மீசையை தடவியவன். கியர் வண்டியை முறுக்கினான் சத்ய தேவ் அவள் பாயிந்து கொண்டு அவனை அணைத்தாள். 

எங்கே கூட்டி போற? என ரிதம் கேட்க..

சொல்ல மாட்டேன். என வண்டியின் வேகத்தை கொஞ்சம் அதிக படுத்தினான் சத்ய தேவ் 

டேய் சொல்லு. 

திருட்டு தனம் பண்ண தான் உன்னை கூட்டி போறேன். 

அப்போ ரூம் போட்டு என்னை மேட்டர் பண்ண போறயா டா! நாயே என ரிதம் அதிர்ச்சியில் கேட்க..

எனி டைம் நீ இதே நினைப்போட தான் சுத்திட்டு இருக்கியா? அப்படி கூட வச்சுக்கோ! என்றான் குறும்பு மிளிர.. ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் மேல் சாய்ந்தாள். அந்த இரவு வான நட்சத்திரங்களும் நிலாவும் ராட்சச சத்ய தேவனையும், தேவ கன்னிகை ரிதமையும் பொறாமையுடன் பார்த்தது. வெளிச்சமாக மட்டுமே இருக்க முடிந்தது அந்த நிலாவாலும் நட்சத்திரத்தாலும். 

என்ன டி! ஓட்ட வாய் மாதிரி எதுவும் பேசிட்டே வருவ இன்னிக்கு அமைதியா இருக்க? என ஒவ்வொரு வேக தடையிலும் வேகமாக வண்டியை விட்டான் அவள் குதித்தாளோ இல்லையோ அவளின் அவளின் முயல் குட்டிகள் குதித்து அவன் மேல் மோதியது. 

ஏகாந்த நிலை அவனுக்கு. அவஸ்தை அவளுக்கு. டேய் மாடு! இப்போ எதுக்கு இப்படி ஓட்டுற என ரிதம் கேட்க.. அது கண்ணுக்கு தெரியல..  ஃபீல் பண்ண மட்டும் தான் முடிஞ்சது. I mean ரெண்டு வேக தடை மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது. ரோட்ல இருக்க வேகத்தடை தெரியல டி! என்றான் இரு பொருள் பட.

கொஞ்சம் மெதுவா போ! என்றவள் அவன் மேல் மோதாமல் அமர்ந்து கொண்டாள். அந்த பயணம் நீளமாக தெரிய வில்லை அவளுக்கு எப்பொழுதடா முடியும் என நினைத்தாள். @ night out என்ற ரெஸ்டாரன்ட் முன் வண்டியை நிறுத்தினான் சத்ய தேவ்.

ரிதம் கண்களை தேய்த்த படி அந்த இடத்தை பார்த்தவள். இங்கே எதுக்கு? என அவனை பார்த்தாள். அவளின் முகத்தை பார்த்தவனுக்கு இன்னும் கொஞ்சம் அவளை சீண்ட தோன்றியது.  அது ஒன்னும் இல்ல!  எப்பவும் நான் ஈரோடு வந்தேனா ஹரிணிய நைட் டைம்ல இந்த மாதிரி கூட்டிட்டு போவேன்.  இப்போ அவளை நான் கூட்டிட்டு போக முடியாதுல்ல..  அதுதான் உன்ன கூட்டிட்டு வந்தேன் என்று கூறினான் சத்திய தேவ் .

எரும சாணி என்று வாயில் முழங்கினாள்.  உன்ன மாதிரி அந்த விஷயத்துக்கு திருட்டுத்தனமான கூட்டிட்டு வரல.  சாப்பிட தான் கூட்டிட்டு வந்தேன்.  வேணாம்னா சொல்லு ரிட்டன் போயிடலாம். என்று  அவளை பார்த்தாம்.  சோறு தான் எனக்கு முக்கியம் நீ எனக்கு வேண்டாம் என்று வேகமாக ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தாள்.

அதில் புன்னகைத்தவன் அவளுக்கு பிரியமான அனைத்து உணவுகளையும் சாப்பிட வைத்தான். என்று சொல்வதைவிட அவளை அவளுக்கு இஷ்டமான அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்தாள்.  நாக்கு எல்லாம் செத்து கிடந்தது.  இந்த பருப்பு சோறையும், கூட்டு , கார குழம்பு இப்பதான் உணர்த்தியா இருக்கு என்றவன் நல்லவேளை மகராசன் என்னை எங்கே ருசித்து ரசித்து சாப்பிட்டாள்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு நேரம் சென்றது. 

சத்யதேவ் அவளுக்கு எதிரில் அமர்ந்தவன்.  ஒரு பார்வை அவள் மேலும் இன்னொரு பார்வை போன் மேலும் வைத்துக்கொண்டு நிறைய செய்திகள் அனுப்பினான். வேலை தொடர்பாக.  இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து அங்கிருந்து திரும்ப வீட்டுக்கு கிளம்பினார்கள். 

ரிதம் உடலை முறுக்கி நெளிய  ஹே மண்டு மண்டு இப்பதான சாப்பிட்ட உடனே சோம்பல் முறக்கிற அப்படி என்று சொன்னால் போடா என்று முறிக்கப்போனாள். கையைப் பிடித்தவன் உதறிட்டு நட..  வா வாக்கு போலாம் வா என்று அவளை அழைத்துக்கொண்டு கொண்டு சென்றான். 

போதும் போதும் என்று திரும்ப வீட்டுக்கு கிளம்பினார்கள். ஏனோ மனமெல்லாம் லேசாக இருந்தது. ரிதம் ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள்.  சத்யதேவ் அவளை கண்டு கொள்ளவில்லை மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பித்தது. 

இந்த நொடி அவளுக்கு இந்த பயணம் நீளாதா என்று தோன்றியது நீண்ட நாள் ஆசை போல அவனுக்கு அருகில் நெருங்கியவள்.  இடையே கட்டிப்பிடித்தபடி இரண்டு முயல் குட்டிகளுடன் மூன்றாவது முயலாக அவனை இறுக்கி அணைத்தால் 

அவள் அனைத்து நொடி சத்யதேவின் காதுகளில் குதிரை கத்தும் சத்தம் கேட்டது உடலை முறுக்கினான்.  டே என்ன பண்ற ஒழுங்கா இரு என்று அதட்டியவள் சத்யதேவியின் பிரத்தியேகமான வாசனையை உள்ளுக்குள் எழுத்தாள்.  அந்த அதிமதுரம் சந்தனம் அஸ்வகந்தா என அனைத்தும் அவளுக்கு போதை ஏற்றியது நலங்குமாவில் தானே இந்த பையன் குளிக்கிறான் அப்பா என்ன வாசனை என்ன வாசனை. 

டேய் என்னடி பண்ற என்று சத்யதேவ் கேட்க உன்னோட வாசனை செம்மையா இருக்குடா என்ற மோக குரலில் கூறினாள். 

சக்தி தேவை எதுவும் பேசாமல் இருக்க டேய் மாடு உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்?  என்று இன்னும் நெருங்கினாள்.‌ இப்போ எதுக்கு இப்படி பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்க?

தள்ளி உட்காரு என்று சத்தியதேவ் அவளை தள்ளி அமரச் சொல்ல..

ரிதம்மு க்கு புரிந்து விட்டது இவன் நம்ம கிட்ட நடிக்கிறான் போ இவன் கான்ஷியஸ் ல தான் இருக்கா என்னோட இஷ்டம் இல்லாம இவன் என்னை எடுத்துக்க மாட்டான்.  இந்த முத்தம் கட்டி பிடிக்கிறது இதெல்லாம் ?!என்கிட்ட அவன் மோதிக்கிட்டே இருக்கணும் என்பதால் தான் இப்படி பண்றான் . என்று ரிதமுக்கு உள்ளுக்குள் ஒரே குதூகலம் மின்சாரம் தாக்கியது போல இருக்க..

இன்னும் ஒட்டிய அமர்ந்தாள். இப்போது எதுக்குடா எதுக்குடா இப்படி ஒட்டி உட்கார தள்ளி உட்காரு! 

நான் அப்புறம் பெட்ரோல் டேங்க் மேல தான் ஏறி உக்காந்து ஓட்டணும் என்று சத்திய தேவ் சொல்ல..

இந்த வாசனை என் மேல புடிக்கணும் மாமி கிட்ட சொல்லி இந்த நலங்குமாக நானும் வாங்கி பூசிக்க போறேன் என்று ரதம் கூற

அதோட சீக்ரெட் இன்கிரிடியன்ஸ் எனக்கு மட்டும் தான் தெரியும் மதிக்க அதெல்லாம் தெரியாது என்று சத்திய கூற அப்படியா சரி சொல்லு அப்படியே நீ கஷ்டப்பட்டு குளித்து அந்த வாசனை உன் மேல கொண்டு வரணும். அதுக்கு இன்னொரு வழி கூட இருக்கு என்று சக்தியை கூறினான் என்ன வழி டெய்லி கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேனா!  இந்த வசன உனக்குள்ள வந்துரு

ஆனா என்னோட வாசனை போயிடுமே உன்னோட வாசனை எனக்குள்ள வந்துடும். 

அப்படியா என் மேல வாசனையா அடிக்குது?  என்று இரு பக்கமும் முகர்ந்து பார்த்தாள்.

ஆமா நீ ஒரு வெண்ணிலா பிளேவர் என்று கூறினால் சத்திய தேவ்  கூற..

வெண்ணிலா பிளேவரா? நான் அந்த பெர்ஃபியூம் எல்லாம் போடறது இல்லையே!; என்று ரிதம் சொல்ல.. சத்யதேவ் ஒரு நொடி விரைத்து தான் போனான்.  எதுவும் பேசாமல் அமைதியாக வர டேய் எதுவும் பேசு என்று இருக்கைகளையும் அவனது வயிற்றைப் பிடித்துக் கட்டிக் கொண்டாள். 

பேச ஒன்னும் இல்ல அமைதியா வா என்று  அவன் கூர.. ரிதம் அவனது முதுகில் தலை வைத்தபடி படுத்துக் கொண்டு அப்படியே வானத்தை விரித்துப் பார்த்தாள்.

ஒரு சில நொடிகள் கழித்து இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.  நீ என்ன லவ் பண்ணலாம்னு கூட இந்த மாதிரி போகணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!  இப்போ ஒரே ஒரு குறை தான்..  உன்னோட காதல் தான் என்கிட்ட எனக்காக இல்ல மத்தபடி நீ கூட இருக்க அது ரொம்ப வருத்தமா இருக்கு.  ஆனா காதலோட நீயும் நானும் நீ வைட் கலர் பிளாக் கலர் ஷர்ட் ல உள்ள இருக்க பனியன் தெரியிற மாதிரி ஷர்ட் போட்டுக்கிட்டு கொஞ்சமே போர்டு வைத்து முடி அப்படியே பரட்டை தலையோட ஸ்மார்ட்டா,  உன்னோட ஜாலியன் ரொம்ப அழகா இருக்கு.  நானும் கொஞ்சம் திருட்டுத்தனமா டிரஸ் பண்ணிக்கிட்டு,  உன்னை திருட்டுத்தனத்தோட பார்த்து திருட்டுத்தனத்தோட , பைக்ல ஏறி உன்ன கட்டி புடிச்சுகிட்டு வரணும்,  அப்ப நீ வளைந்து வளைந்து வேகமா போகணும்.  இது எப்ப நடக்கும் என்று அவள் கேட்டாள். 

அதான் நீ லவ் பண்றி காய்ச்சல் வவ்வால் இப்ப கூட நான் வழிஞ்சு வழிஞ்சு போவேன் என்று சத்தியத்தை கூறினால் நான்தான் நான் உன்ன லவ் பண்ணல இருந்தாலும் என்னால போக முடியும் தேவை இல்லை என்ற ரிதம் அமைதியாகிவிட்டாள்.

சத்யதேவ் மெதுவான குரல்  ஃபியூச்சர்ல அந்த மாதிரி என்று சத்திய தேவ்  சொல்ல வர வற்புறுத்தி உன்னிடம் இருந்து வர வளைக்க எனக்கு எதுவும் வேண்டாம் என்று முகத்தை திருப்பியவள். இப்ப நீ என்னோட புருஷன் அதனால உன்னை கட்டிக்கிறேன் என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.  அப்படியே தூங்கினால் அவர்கள் வீட்டுக்கு வர நடுசாமம் ஒன்றை தொட்டது. அங்கிருந்து மெதுவாக உள்ளே நுழைந்தவர்கள்.  நேராக அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள்.  அறையை திறந்ததும் இருவரும் ஒருமேலே இருந்தால் நொடி பார்த்துக் கொண்டார்கள். 

சத்ய தேவ் ஒரு அடி வைத்தவன் அவளை ஓர கண்ணால் பார்த்தான். ரிதம் மெதுவாக படுக்கை பக்கம் திரும்பினாள். Night out எப்டி இருந்தது என கரகரத்த குரலில் கேட்டான். ம்ம் மோமெண்டா போல இருந்தது என்றாள். அறையின் விளக்கை ஆஃப் செய்தான். 

இருவரும் படுக்கையில் படுத்தார்கள். நீண்ட நேரம் நெண்டிக் கொண்டே இருந்தனர். உள்ளுக்குள் ஒரே வைப். பெரு மூச்சுடன் அவள் பக்கம் திரும்பினான் சத்ய தேவ். அவளும் அதே போல அவனை பார்த்தாள். ஒவ்வொரு முறை அவளிடம் அசால்ட்டாக நெருங்கி அத்து மீறுபவன். இப்பொழுது தயங்கி தடுமாறினான். 

இரண்டு விழிகளும் மோகத்தில் தாபம் கொண்டு தவித்தது. க்கும் தூங்கிட்டியா! என மெல்லிய குரலில் கேட்டான். கண்களை அவள் மெதுவாக உருட்டி அவனை பார்த்தாள். 

எனக்கும் தூக்கம் வரல என்றவன் அவளின் அருகில் நெருங்கி படுத்தான். மறுக்க வில்லை அவள். எதோ நினைக்கிறேன் அட ஏனோ மறைக்கிரேன் பேசிடத்தான் வந்தேன் மொழி வர வில்லை. மவுனமாய் திரும்ப மனம் வர வில்லை என்பது போல கண்கள் இரண்டும் காதலில் கிரங்கியது. இதோ அவளின் கண்கள் தந்த உந்துதலில் உதடு வரை நெருங்கி விட்டான். 

உதடு வழியே உயிரை தொடும் காதல் ஆணவனுடையது. ஆனால் இந்த பெண்மையோ உதட்டில் உச்சரித்து காதலை உறுதி படுத்தடா என்கிறது. 

அவனின் கண்களில் இருக்கும் அதே மயக்கத்தை தன்னிடம் உணர்ந்தவள். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவன் பக்கம் கிடந்தாள். மெது மெதுவாக உதட்டை நெருங்கியவன் பட்டும் படாமல் மோவாய் பிடித்து ஒரே ஒரு முத்தமிட்டான். அவளின் இமை குடைகள் தாழ்ந்து இருக்க.. வேக மூச்சுடன் நேராக படுத்துக் கொண்டான். அது ஒரு சில நொடிகள் தான் மீண்டும் அவள் பக்கம் நெருங்கியவன். எதுவும் சொல்லாமல் அவளை அணைக்க தடுத்துக் கொண்டிருக்கும் தலையணை அனைத்தையும் தூர எறிந்தவன். வேக மூச்சுடன் முத்தமிட்டான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளின் நெஞ்சு கூடு ஏறி இறங்க.. உதடுகளில் மொத்த மோகத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். இவள் இதம் கொடுக்கும் ரிதம் எத்தனை முறை அந்த வெண்ணிலா பிளேவர் உதட்டை சுகித்தாலும் திகட்டாது. உதட்டின் வழியே உயிரை தொட்டவன் பத்து நிமிடங்கள் கழித்து தான் விலகினான். 

அவள் எதுவும் சொல்லாமல் முதுகு காட்டிய படி படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. 

இன்று மதியம் போல ஊருக்கு கிளம்புகிறார்கள் அனைவரும். அதனால் காலையிலேயே கிளம்புவதற்கு முன் குல தெய்வ கோவிலுக்கு மகி கிளம்பினார் கூடவே ரிதமை அழைத்துக் கொண்டு. 

உமா இன்று அசைவம் சமைத்துக் கொண்டிருக்கிறார். அது அனைத்தையும் மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என ஒரு மன கணக்குடன் மகியுடன் கோவிலுக்கு சென்றாள் ரிதம். 

இங்கே நட்ராஜ் சக்தியுடன் வயலுக்கு சென்றவர். வரும் போது கரையான் கட்டிய புற்று மண்ணை கொஞ்சம் வெட்டிக் கொண்டு வீட்டுக்கு சென்றார். 

இது என்ன தாத்தா என ஆதவ் கேட்க, இது கரையான் மண்ணு! இதை தண்ணில குலச்சு மேலுக்கு பூசி ஊற வச்சு குளிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லது சக்தி கண்ணா ரெடியா என நட்ராஜ் கேட்க..  மிம்மம் ரெடி தாத்தா என மண்ணை நன்கு பரப்பி நீர் விட்டு குலைக்க ஆரம்பித்தார்கள். 

இதை பொண்ணுங்க கூட பூசிக்களாமா தாத்தா என ஆதவ் கேட்க.. ம்ம் ரொம்ப ரொம்ப நல்லது இந்த மண்ணுல folic acid அதிகம் அது தான் இது ரொம்ப சிவப்பா இருக்கும் என கூற சத்ய தேவ்வின் நினைவுகள் ரித்தமுக்கு இதை பூசி விட்டால் எப்படி இருக்கும்? என கனவு காண ஆரம்பித்தான். 

இங்கே கோவில் மணி அடிக்க உடல் எல்லாம் முறுக்கேற ஆவேசத்துடன் கண்கள் உருல நின்றிருந்தாள் ரிதம். அத்தை அத்தை ரிதம பாருங்க என ஹரிணி கத்த..  கோவில் பூசாரி வேகமாக வெளியே வந்தார். 

ரிதம் அதே இடத்தில் அமர்ந்தவள். எதுக்கு டி வந்த? என மகியை பார்த்து கேட்டாள். 

அம்மா உங்களை பார்க்க தான் என மகி பேச வர..  என்னை தாண்டி தானே அந்த கோட்டை மாரிய பார்க்க போன? அவள் கிட்டயே போக வேண்டியது தானே! இப்போ எதுக்கு டி வந்த? என வேகமாக பன் கொண்டை விரிய ஆடினாள் ரிதம். 

பூசாரி மகியிடம் மன்னிப்பு கேளு மா! கிடாய் நேந்து விடுறேன்னு சொல்லு என எடுத்துக் கொடுக்க. 

 அதே இடத்தில் அமர்ந்தவள். நீ என்னை பார்க்காமல் போனாலும் என்னால அப்படி இருக்க முடியல டி சண்டாலி! உன் வீட்டு வம்சம் கூடிய சீக்கிரம் தழைக்கும் ஆனால் உயிர் இழப்பு நிச்சயம்  என சொன்னவள்  அப்படியே பொத்தென மயங்கி சரிந்தாள் ரிதம். 

மகி கண்களில் நீருடன் அழ ஆரம்பித்தார். அத்தை அத்தை என ஹரிணி ஒரு பக்கம் மகியை சமாதானம் செய்து கொண்டிருக்க அதற்குள் மிதுன் மற்றும் நிதின் இருவரும் ஓடி வந்தார்கள். 

பூசாரி தீவிர யோசனைக்கு பிறகு! குறி சொல்ற அம்மாவை ஒரெட்டு பார்த்திட்டு போங் கண்ணு! என சொல்லி விட்டு பூஜை செய்ய உள்ளே சென்றார். 

மஹியின் மனதில் இன்னும் பூகம்பம் கிளம்பியது. அந்த அம்மா வாயில் இருந்து வருவது அத்தனையும் பலிக்குமே! என நொந்து கொண்டார். ஆனால் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. நேராக கருவறையை பார்த்தவள் உயிர் சேதமா இருந்தால் அதில் போற உயிர் என்னோடதா இருக்கட்டும். யாருக்கும் எதுவும் நடக்க கூடாது என எழுந்து குறி சொல்லும் முதிய பெண்ணை பார்க்க கிளம்பினாள். 

ரிதமின் போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. கடமை அழைத்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்? யாரோட உயிர் ஆபத்தில் இருக்கு? பார்ப்போம் 

வருவான். 

EPISODE 175

அதே இடத்தில் அமர்ந்தவள். நீ என்னை பார்க்காமல் போனாலும் என்னால அப்படி இருக்க முடியல டி சண்டாலி! உன் வீட்டு வம்சம் கூடிய சீக்கிரம் தழைக்கும் ஆனால் அதே சமயம் வரவு ஒன்னு இருந்தால் அதுக்கு பதிலா உயிர் இழப்பு நிச்சயம்  என சொன்னவள்  அப்படியே பொத்தென மயங்கி சரிந்தாள் ரிதம். 

ஹரிணி அவளை தாங்கிக் கொள்ள.. மகியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்தார். தலை தலையாக அடித்துக் கொண்டே. அய்யோ இப்போ நான் என்ன செய்வேன். என ரிதமின் கைகளை பிடித்து மருகினார். 

இது யாரு கண்ணு? என பூசாரி கேட்க.. இது என்னோட மறுமக சாமி! என மகி அழுது கொண்டே கூற.. சரி சரி தீர்த்த தண்ணி எடுத்திட்டு வரேன் கண்ணு எலுமிச்சை பழம் கொடுத்து மலை இறக்கிடலாம் இன்னும் சாமி மலை இறங்குல.. அங்கே பாருங்க கால் பின்னி கையெல்லாம் முறுக்குது தண்ணி ஊத்தி பார்ப்போம். என பூசாரி அதற்கான வேலையை செய்ய ஆயத்தமானார். 

ஒரு சில நொடியில் நிதின் மற்றும் மிதுன் இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். என்னாச்சு ரிதமுக்கு! என இருவரும் பதட்டத்துடன் பார்க்க, ஹரிணி பயத்துடன் ரிதமுக்கு சாமி வந்திடுச்சு! என கூறினாள். 

வாட் என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்னால நம்ப முடியல என நிதின் போனை எடுத்து சக்திக்கு அழைக்க, மகி மிதுனை பார்த்து கோபமாக இது எக்காரணத்தைக் கொண்டும் சக்திக்கு தெரியக்கூடாது.  நீ நம்பலனா போடா!  அவளுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை.  இது நம்மளையும் மீறின சக்தி! அது அவ மேல ஏறி இருக்கு. அவர் நம்ம வீட்டு குலசாமி!  உனக்கு நம்பிக்கை இல்லைன்னா இந்த பக்கமே வர கூடாது.  இப்பவே வெளியே போ என்று அழுது கொண்டே கூறியவர். இது எக்காரணத்தைக் கொண்டும் நம்ம வீட்ல வேற யாருக்கும் தெரிய கூடாது. என அழுது கொண்டே கூறினார் மகி. 

தன் அம்மாவின் இந்த அவதாரத்தில் கொஞ்சம் ஜர்க் அடித்த மிதுன் அமைதியாக நின்றான்.  அதற்குள் பூசாரி அங்கு வந்து விட இரண்டு பக்கமும் தூக்கி  கிழக்கு பக்கமாக நிக்க வைத்து ரிதமுக்கு ஆரத்தி எடுத்து கற்பூரத்தை காட்டி அவள் மேல் தண்ணீரை ஊற்றி சாமி சாந்தமாக வேணும் எதாச்சும் பரிகாரம்.. என ஆரம்பிக்க மகி ரிதமின் காலில் விழுந்து விட்டார்.

அவள் கண்களை மூடிக் கொண்டே இது நடக்கிறது என் கையில இல்ல!  ஆனா நடந்தே தீரும்!  என்ன?  என்னோட மனசு அதிகமா குளிர வைத்தவ நீ தான் டி! அதனாலதான் வந்தேன்.  இனி இவ கூப்பிட்டு நான் வரமாட்டேன்! என்று சொன்ன ரிதம் அப்படியே மயங்கி சரிந்தாள். 

அம்மா இது சயின்ஸ்ல மேக்னடிக் தியரி இது என்று மிதுன் ஆரம்பிக்க… வாய மூடு என்று தலைதலையாக அடித்துக் கொண்டவள்.  ஒரு பக்கம் அழ ஆரம்பித்தாள். அத்த விடுங்கத்த இப்போ ரிதம பாக்கணும்ல்ல என்று ஹரிணி கூற..   மகி கண்களை துடைத்து புடவையை சொருகிக் கொண்டவள்.  சரி அவ ஆத்துல குளிச்சதா வீட்ல சொல்லிடுங்க.  இப்போ அவளுக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.  அதனால நீங்களும் அதே மாதிரி பேசுறீங்க.. என்று கூறினார் மகி. 

மேலும் மகி  மித்துனிடம்  பார்த்து முறைத்தபடி  நீ மட்டும் எதுவும் சொன்ன?  உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்த கூட நான் தயங்க மாட்டேன். என்று ஆவேசமாக பேச மிதுன் அதில் பயந்தவன் இல் இல்லம்மா அம்மா இல்ல!  நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்.  என நம்புங்கம்மா! ப்ளீஸ் என்று கூறினான். 

நித்தின் வா! வந்து ரெண்டு பேரும் அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க!  யாரு கேட்டாலும் அவ ஆத்துல குளிச்சா!  அதனால டயர்ட் ஆகிட்டா அப்படின்னு சொல்லிடுங்க என்று விவரமாக கூறி விட்டு  நேராக சாமியின் கருவறை பக்கம் சென்றார் மகி. 

பூசாரி தீவிர யோசனைக்கு பிறகு!  கண்ணு என அழைத்தார்.

“சொல்லுங்”

குறி சொல்ற அம்மாவை ஒரெட்டு பார்த்திட்டு போங் கண்ணு! அந்தம்மா இதுக்கு ஒரு நல்ல தீர்வை சொல்லும் ஆனா எது சொன்னாலும் மறுத்து பேசாம ஏத்துக்க கண்ணு நல்லதே நடக்கும் நீ கவலைப்படாமல் போயிட்டு வா என சொல்லி விட்டு பூஜை செய்ய உள்ளே சென்றார். 

மஹியின் மனதில் இன்னும் பூகம்பம் கிளம்பியது. அந்த அம்மா வாயில் இருந்து வருவது அத்தனையும் பலிக்குமே! என நொந்து கொண்டார். ஆனால் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. நேராக கருவறையை பார்த்தவள் உயிர் சேதமா இருந்தால் அதில் போற உயிர் என்னோடதா இருக்கட்டும். யாருக்கும் எதுவும் நடக்க கூடாது என எழுந்து குறி சொல்லும் முதிய பெண்ணை பார்க்க கிளம்பினாள். 

ஹரிணி மகிக்காக காத்திருக்க.. நீ போகலையா ஹரிணி என்று கேட்டார். 

இல்ல அத்தை உங்கள விட்டுட்டு எனக்கு போறதுக்கு மனசு இல்ல! அந்த சாமி..  நீங்க கவலை படாதீங்க!  அதான் ரிதம் அப்படி பேசும்போது என்னாலையே தாங்கிக்க முடியல.  எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது.  அதனாலதான் உங்களுடைய போலாம்னு வெயிட் பண்ணேன். என்று கூறினாள் ஹரிணி. 

இல்ல நீ வீட்டுக்கு போமா என்று மகி சொல்ல..  பரவால்ல வாங்க  அத்தை இப்போ நம்ம யார பாக்கணும் போலாம் என்று அஹரிணி அழைக்க மகி கேவி கேவி மீண்டும் அழுதாள்.

அத்தை அழாதீங்க சத்திய தேவ் யாருக்கு என்ன செஞ்சான்? அதே போல தான் நம்ம குடும்பம் யாருக்கும் எந்த கெட்டதும் பண்ணதில்லை! நீங்க கவலைப்படாதீங்க! எல்லாமே சரியாகிடும். நீங்க நல்ல விசயத்தை எடுத்துக்கோங்க! நம்ம வீட்டுக்கு புதுசா இன்னொரு உயிர் வரப்போகுது.  நான் அது சத்திய தேவ் ரிதம்முக்கு  குழந்தையை வர போகுது. அதையும்  சாமி சொல்லி இருக்காங்க. நீங்க ஏன் கெட்டது நினைக்கிறீங்க?  நல்லதை எடுத்துக்கோங்க.  உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா சாமி சொன்னாங்க. நீங்க கவலைப்படாதீங்க என்று ஹரிணி அவளின் மனதை மாற்ற முயற்சிக்க.. 

மகி அதற்கு மேல் எதுவும் பேசாமல் சரி போகலாம் என்று நேராக  சிவன் கோயிலுக்கு பின்னால் இருக்கும் ஒரு தொழுவும் பக்கம் சென்றாள் அங்கு மகிழம் மரத்தில் நிறைய மஞ்சள் கயிறு வளையல் ஊஞ்சல் என அனைத்தும் கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் காற்றில் ஆடும் மர கிளையை பார்த்துக் கொண்டிருந்தார் குறி சொல்லும் முதிய பெண். 

மகி கிட்ட தட்ட பதினான்கு வருடத்துக்கு முன் பார்த்த அதே பெண். உள்ளுக்குள் நடுக்கம் பரவியது. இருந்தாலும் வேறு வழி இல்லை கேட்டு தான் ஆக வேண்டும். நேராக அருகில் சென்றார். ஹரிணி ஆதரவுடன் கைகளை பிடித்துக் கொண்டாள். சொல்லு என்ன விசயம்? என்று புன்னகை தாண்டவம் ஆடியது அந்த குறி சொல்லும் பெண்ணுக்கு. 

அது வந்து என மகி அழ ஆரம்பிக்க, மூச்!! எந்த விஷயத்துக்கும் உன்னோட அழுகை தீர்வாகாது. புரிஞ்சுதா! என்றார் அந்த பெண் மணி! என்னோட குடும்பத்தில் யாருக்கும் எதுவும் ஆக கூடாது என மகி மடி பிச்சை கேட்க.. .

முத்து பற்கள் விரிய சிரித்தார் அந்த குறி சொல்லும் பெண். மகி மவுனமாக இருக்க, நீ என்ன தெய்வமா? கடவுளா? யாரடி நீ? கடவுளுக்கே இங்கே ஆயிரம் சோதனை இருக்கு! சாதாரண எலி பூனை பறவைக்கு கூட இங்கே பிரச்னை இருக்கு. இது இயற்கை நியதி யாராலும் மாற்ற முடியாது. என சோலியை உருட்டிய படி கூறினார் அந்த முதிய பெண். 

அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு? நான் என்ன பண்ணனும்? என மகி அழுது கொண்டே கேட்க.. ஒன்னும் பண்ணாதே! உன்னோட பையன் இழந்ததை மீட்டு கொடுப்பான். அவன் சக்தி இங்கே யாருக்கும் இல்லை என கூறினார். ஏனோ உள்ளுக்குள் ஒரு நிம்மதி பரவியது. சதி விதியா மாறி உன்னோட பையன் வாழ்க்கையில் வந்து சேரும் என்றார் முதிய பெண். 

என்ன அம்மா சொல்றீங்க? என மகி புரியாமல் பார்க்க, இது உன் பையனுக்கு புரிய வேண்டிய நேரத்தில் புரியும். நீ மறைச்சாலும் தெரிய வேண்டிய நேரத்தில் எல்லாமே தெரியும் என கூறினார் அந்த பெண் மணி. 

மகி அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, உனக்கு கஷ்டம் தான் தலையில் எழுதி இருக்கு. ஆனால் கவலை படாதே உன் புருசன் உன் பையன் உன்னை எப்பவும் கை விட மாட்டாங்க என நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். 

மகிக்கு இப்பொழுது நன்றாகவே புரிந்து போனது. கஷ்டம் சுகம் துன்பம் என அனைத்தும் அடங்கியது தான் வாழ்க்கை என தெரிந்து கொண்டாள். ஆனால் உள்ளுக்குள் எதோ ஒரு மிகப்பெரிய நெருடல் ஆட்டி படைக்க தான் செய்தது. 

கவலை இருக்க தன் செய்யும். ஆனால் நீ எதையும் கண்டுக்க வேணாம். உன்னோட அன்றாட வேலையை சரியா செய் என கூறினார். ஹரிணி எதோ ஒரு ஆர்வத்தில் அவரின் காலில் விழுந்து விட்டாள் ஆசிர்வாதம் வாங்க. என்ன டி இது ஹே உன்னை தான் டி பெரியூர் காரி! இவள் உன்னை விட இனி அதிகமா அனுபவிக்க போறா! என கூறினார். 

மஹிக்கு பயம் தொற்றிக் கொள்ள. ஹரினியோ புரியாமல் பார்த்தாள். அம்மா பிளீஸ் அப்படி சொல்லாதீங்க என மகி கெஞ்ச.. சோலியை உருட்டி எடுத்து வைத்த பெண்மணி, நீ பெத்த மனசை குளிர வச்சா எல்லாமே கிடைக்கும் ன்னு கனவு கானுற போல.. அது இங்கே இப்போதைக்கு நடக்காது. ஏன்னா நீ வாய்ச்ச குலம் ஆயிரம் புண்ணியம் பண்ண வேண்டி இருக்கு என்றார். 

அப்படின்னா என ஹரிணி புரியாமல் பார்க்க, பாவ கணக்கு அதிகமா இருக்கு என மகி நினைத்து கொண்டார். இப்போ என்ன பண்றது சாமி என ஹரிணி கேட்க.. நீ தவம் கிடந்து வேண்டி ஆசைப்படும் பொருள் உனக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது. உன்னோட வாழ்க்கையில் இன்னும் சூறாவளியே ஆரம்பிக்கல! அதுக்குள்ள க்ளைமேக்ஸ் வேணுமா உனக்கு போ போ! உன் புருசன் கைய என்னைக்கும் விடாதே என அனுப்பினார். 

ஹரிணி மீண்டும் பேச வர, வேணாம் மா இன்னும் நிறைய சொல்லுவாங்க! எல்லாமே மனசு கேட்டு வேதனை தான் படும் விடு கேட்க வேண்டாம் என கிளம்பினார்கள் இருவரும். அந்த நேரம் காற்றில் ஊஞ்சல் மற்றும் வளையல் சரசரவென கீழே அசைந்து விழுந்து விட.. இது கிடைக்க நீ வரம் கிடக்கணும். போ போ என அனுப்பி விட்டார். 

ஹரிணிக்கி ஒன்றும் புரிய வில்லை. பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று.

நிதின் மற்றும் மிதுன் இருவரும் ரிதமை வீட்டுக்குள் தூக்கி செல்ல புயலென முன்னால் வந்தான் சத்ய தேவ். .

அவளுக்கு என்ன ஆச்சு? என பூ போல பெண் அவளை கையில் வாங்கிக் கொண்டவன் பார்வை எதிரில் இருக்கும் இருவரையும் துளைத்தது. 

வருவான் 

EPISODE 176

176- அவளின் அகம்பாவம் அடக்க வருவான்! 

சத்ய தேவ் ரிதமுக்காக தனியாக மண்ணை பூச எடுத்து வைத்து விட்டு ஆதவ்க்கு இன்னொரு பக்கம் அமர்ந்து உடல் முழுக்க பூசி விட்டான். ஆதவ்வ் சிரித்த படி அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் கார்கள் அனுவகுக்க நிதின் கார் வந்து சேர்ந்தது. சத்ய தேவ் பார்வை அந்த பக்கம் திரும்ப, மிதுன் வேகமாக கதவை திறந்து விட நிதின் இறங்கிக் கொண்டு ஈரத்தில் தொப்பளாக நனந்த ரிதமை வெளியே தூக்கி கொண்டான். 

சத்ய தேவ்வின் பார்வை இடுங்க வேகமாக கார் இருந்த திசை பக்கம் சென்றவன். என்ன ஆச்சு? என கேட்டுக் கொண்டே ரிதமை வெடுக்கென கையில் வாங்கிக் கொண்டான். அவளின் முகத்தில் களைப்பு ஏகத்துக்கும் இருந்தது. என்னாச்சு? என சக்தி மீண்டும் மீண்டும் கேட்க.. 

மிதுன் கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கிய படி பார்க்க, நிதின் சாதாரண தொனியில் அவள் கால்வாய்ல நீச்சல் அடிச்சா சோ டயர்ட்ல தூக்கம் வந்திடுச்சு! அதான் அப்படியே தூக்கிட்டு வந்துட்டோம் என்றான். 

அண்ணா என மிதுன் ஒரு வித பயத்துடன் நிதின பார்க்க, சக்தி அவனது அறைக்கு தூக்கி சென்றான். என்ன டா ஆச்சு? கண்ணு குட்டிக்கு? என சூர்யா கேட்க.. அவள் தூங்கிட்டா என நிதின் கூறிக் கொண்டே உள்ளே வந்தான். 

சத்ய தேவ் அவளை அறைக்குள் தூக்கி சென்று படுக்க வைத்தவன். அவளுக்கான உடைகளை எடுத்து வைத்தான். மிதுன் நகத்தை கடித்த படி ரிதமின் அறைக்குள் நுழைய.. 

இங்கே என்ன பண்ற? வெளியே போ! 

அவள் அவள் எழட்டும் நான் போறேன். என மிதுன் சொல்ல..

வெளியே போ! எங்களுக்கு நிறைய வேலை இருக்கு என சக்தி அவளின் முகத்தை பார்த்தவன் வருடி விட்டு நெற்றியில் முத்தம் பதித்தான். 

மிதுன் பதட்டத்துடன் அய்யோ சாமிக்கு முத்தம் கொடுக்கிறானே? சாமி வந்து கண்ணை குத்த போகுது. கண்டிப்பா அது நடக்க தான் போகுது? அய்யோ போச்சு என பார்த்துக் கொண்டிருக்க, 

டேய் உனக்கு இங்கே என்ன டா வேலை வெளியே போடா! என சத்ய தேவ் கத்த.. டேய் இர்ரா இரு என சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிதின் வந்தான். 

உடனே மிதுன் அவசரத்துடன் அய்யயோ ப்ரோ அவன் சாமிக்கு முத்தம் கொடுக்கிறான். போச்சு எனக்கு வேற பயமா இருக்கு. மகி வேற திட்டுவா! இப்போ சாமிக்கு ஹெல்ப் பண்ண போறேன்னு இவன் எதுவும் பண்ணி பிரச்னை ஆகிடுச்சுன்னா? என்ன பண்றது? என கேட்டுக் கொண்டிருக்க, ஹே வெளியே போங்கன்னு சொன்னால் கேட்காதா? என சத்ய தேவ் உறும.. 

அதற்குள் அவன் கத்திய கத்தலில் ரிதம் எழுந்து விட்டாள். நிதினின் பார்வை ரிதம் மீது சென்று, அவள் அய்யோ தெய்வ குத்தம்.. என கன்னத்தில் போட்டுக் கொண்டவன். அவங்க  எழுந்துட்டாங்க! இனி அவங்க  சொல்லட்டும்.  நாங்க போகவா வேனாவான்னு! என மிதுன் கூறினான். 

சத்ய தேவ் திரும்பி பார்க்க, நிதின் அருகில் வந்து இப்போ நீ ஒகே வா! என கேட்க.. என்னாச்சு? என சத்ய தேவ் கைகளை முட்டுக்கு பிடித்துக் கொண்டே மெதுவாக அமர்ந்தாள். ஹே என்னாச்சு? காலையில் நல்லா தானே இருந்த? என அவளின் முகத்தை இரண்டு பக்கமும் திருப்பி கேட்டான். 

ரிதம் தீவிரமாக யோசிக்க உடல் எல்லாம் அடித்து போட்டது போல வலி. அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க சாமி? என மிதுன் கொஞ்சம் பயத்துடன் கேட்க, என்ன டா உனக்கு ஆச்சு? நான் நல்லாதான் இருக்கேன். ஆமா எப்படி என்னோட டிரஸ் இப்படி நனைஞ்சு போனது? என கேட்க.. சத்ய தேவ் புருவங்கள் இடுங்க, நிதின் மற்றும் மிதுன் இருவரையும் பார்த்தான். 

ஹே அண்ணி உங்களுக்கு மறந்து போச்சா? நீங்க தண்ணில வாய்க்காலில் நீச்சல் அடிச்சீன்க அதுல டயர்ட் ஆகிட்டீங்க என்றான் மிதுன். 

அப்படியா என தலையை பிடித்துக் கொண்டே யோசித்தாள். ஆனால் எதுவும் நினைவுக்கு வந்த பாடில்லை. தீவிரமாக யோசித்தாள் ரிதம். ஆனால் எதுவும் நினைவுக்கு வராமல் போக.. சத்ய தேவ் அருகில் அமர்ந்தான். மகி வேகமாக வீட்டுக்கு வந்தவர் நேராக சக்தியின் அறைக்கு விரைந்தார். 

ரிதம் என அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார். மாமி என அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்ய, இல்ல ஒன்னும் பிரச்னை இல்ல. நீ ரெஸ்ட் எடு! என மகி ரித்தமின் அருகில் அமர்ந்து கொண்டவர் வைத்த கண் வாங்காமல் அப்படியே ஒரு சில நிமிடங்கள் பார்த்திருந்தார். மா இங்கே என்ன நடக்குது? இந்த மிதுன் உலரிட்டு இருக்கான். இவளை அண்ணின்னு கூப்பொடுறான்? உன்னோட அக்கா பையன் மினிஸ்டர் கஷ்ட பட்டு பொய்ய சாதாரணமா சொல்ற மாதிரி சொல்றான்? என்ன நடக்குது இங்கே? என கேட்டான் சத்ய தேவ். 

ஒன்னும் இல்ல டா! சக்தி! அவள் தடுக்கி வாய்க்காலில் விழுந்துட்டா! என்றார் மகி! 

சத்ய தேவ் கோபத்துடன் ரிதமை பார்த்து முறைக்க, இல்ல டா எனக்கு நியாபகம் இல்ல. என ரிதம் மூளையை கசக்கி யோசிக்க, அவள் தண்ணியில் தான் விழுந்தா! நான் தான் தூக்கினேன். அப்படியே மயங்கிட்டா என சொல்லிக் கொண்டே ஹரிணி உள்ளே வந்தாள். 

சரி எல்லாரும் கிளம்புங்க! ட்ரெஸ் change பண்ணட்டும் என மகி எழுந்தார். மிதுன் நேராக நித்தினின் அருகில் வந்து இப்போ அவள் சாமியா இறுக்காளா? இல்ல ரிதமா இருக்காளா? என மிதுன் கேட்க.. மிதுணு நீ அந்த சத்ய தேவ்வை விட மோசம்! என்ன டா நீ? என அனைவரும் வெளியே சென்றார்கள். 

ஹே நீ என்ன பண்ற? வெளியே போ! என ரிதம் தள்ளாடிக் கொண்டே எழுந்தாள். அவளை கை தாங்களாக பிடித்துக் கொண்டவன். உன்னால தான் எதுவும் முடியல யே நானே change பண்ணி விடுகிறேன் என சத்ய தேவ் நெருங்க. 

சக்திஈஈஈ! வெளியே வா! என மகியின் குரல் கேட்க, போ வெளியே போ! என ரிதம் கை காட்டினாள். வரேன் மா! என அவளின் அருகில் நெருங்கியவன் என்னாச்சு? நீ ஓகே தானே என கண்களில் தவிப்பு கவலை அப்பட்டமாக தெரிந்தது. 

டேய் வெளியே போ! நான் நல்லாருக்கேன் என ரிதம் தலையை பிடித்துக் கொண்டே கூற, சத்ய தேவ் மனம் கேட்காமல் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். 

ரிதம் அவன் சென்றதும் உடல் வலி எடுக்க வேகமாக அந்த இடத்தை பிடித்த படி ஹீட்டர் ஸ்விட்ச் பக்கம் நகர்ந்து தட்டியவள். அப்படியே உடல் வலிக்க ஒரு பக்கம் அமர்ந்தாள். அவன் எடுத்து வைத்த உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். சுடு நீரில் குளித்து முடித்து வெளியே வந்தவள் உடையை மாற்றிக் கொண்டு படுத்து விட்டாள். முடி கூட இன்னும் காயாமல் இருந்தது. 

சத்ய தேவ் வெகு நேரம் காத்திருந்தவன். அவள் இன்னும் வெளியே வராமல் போக, நேராக அரை பக்கம் சென்றான். மிதுன் நேராக சுற்றிலும் பார்த்துக் கொண்டே மா சக்தி அங்கே ரிதம பார்க்க போறான். போய் முத்தம் கட்டி பிடிக்கிறது எதுவும் பண்ணிட போறான். முண்ணவே அவளை என மிதுன் ஆரம்பிக்க, மகி முறைத்தார். 

மகி try to understand me இப்போ அவள் சாமியா இருக்காளா? இல்ல ரிதமா இருக்காளான்னு தெரியலையே? ஒரு வேளை சாமிக்கு முத்தம் கொடுத்துட்டா! சாமி அவனை கொன்னு போடும் என அவன் முழுதாக சொல்லி முடிக்க வில்லை. பலார் என ஒரு அரை! மகி தான் அடித்திருந்தார். 

ஏ என்ன டி? என மிதுன் கன்னத்தை பிடித்தபடி நின்று  கொண்டிருக்க, இன்னிக்கி தான் டி உருப்படியா ஒரு வேலை பண்ணிறுக்க என சொல்லிக் கொண்டே சூர்யா வந்தார். 

என்னோட நியாயமான டவுட்ட கேட்டால் என்னை அடிக்கிற? போடி! என சென்று விட்டான் மிதுன். 

மகி கைகளை பிசைந்த படி அங்கும் இங்கும் நடந்தவர் வேகமாக விபூதியை எடுத்துக் கொண்டு சென்றார். கதவை தட்ட வர அதற்குள் சத்ய தேவ் கதவை திறந்தான். ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனார் மகி. 

என்ன மா? என்னாச்சு? என ஆராயும் தொனியில் கேட்டான். நீ திடு திப்புன்னு கதவை திறபன்னு எனக்கு எப்படி தெரியும்! நான் சாமி திருநீறு கொண்டு வந்தேன் டா! என அறையை எட்டி பார்த்தார். 

நீங்க எதோ மறைக்கிற போல இருக்கே? என சக்தி கேட்க.. மகி அவனை தள்ளி விட்ட படி உள்ளே நுழைந்தவர். அவளை தொல்லை பண்ணாத! சண்டை போடாதே! என்றார். அவளின் தலையை வருடி விட்ட படி நெற்றியில் திரு நீற்றை பூசி விட்டார். 

எதுக்கு எனக்கு அட்வைஸ் பண்றீங்க? அவள் உங்க கிட்ட சொன்னாளா? என சத்ய தேவ் கேட்க.. 

இல்ல அப்படி சொல்லல. உன்னை பார்த்தால் பயப்படுர மாதிரி தெரியுது. நீ அவளை மிரட்டாத! என்ன தான் நான் சொல்லி நீ கல்யாணம் செஞ்சிருந்தாலும் என மகி ஆரம்பிக்க, மாம் போதும் விடுங்க! அவளை நான் கஷ்ட படுத்த மாட்டேன். அவள் தூங்கட்டும் போங்க. என கூறினான். 

நீயும் வா! என அவனை கையோட அழைத்து செல்ல, என்ன மா! சும்மா! நான் என்னோட ரூமில் இருக்கேன். எதுக்கு என்னை கூப்பிடுரீங்க? என சத்ய தேவ் கேட்க.. 

மகி என்ன சொல்வது என தயங்கினார். மா நீ என்ன விசயம் என் கிட்ட சொல்லணும்? அதை நேரடியாக சொல்லு! சுத்தி வளைக்க வேணாம் என சத்ய தேவ் உடைத்து பேசினான். அவள் கூட நீ… எப்படி சொல்லுவேன். இங்கே இருக்கும் போது அவள் கூட நீ I mean பக்கத்தில் கணவன் மனைவியா நெருங்க கூடாது. என தயக்கத்துடன் கூறினார் மகி. 

மகி டென்ஷன் பண்ணாத மா! அவள் கிட்ட நான் அந்த அளவுக்கு எல்லாம் உரிமை எடுத்துக்கல என கூறினான் சத்ய தேவ். 

அப்போ உங்க வீட்டில் கட்டில் உடைஞ்சதே? அது? என மகி  கேட்க.. 

அது நான் இல்ல அதுக்கு காரணம் உன்னோட செல்ல புள்ளை மிதுன் தான்! என்னை பழி வாங்க அப்படி பண்ணிருக்கான் என்றான் சத்ய தேவ். 

மிதுன் மேல் இருந்த கோபத்தில் பற்களை கடித்த மகி, சரி நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும். இங்கே இருந்து போனதுக்கு அப்புறம் நீங்க என சொல்லி விட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினார். 

அயர்வுடன் உறங்கிக் கொண்டிருக்கும் ரிதமை பார்த்தவன். அவளின் கூந்தல் முடிச்சை அவிழ்த்து விட்டு நன்றாக காய வைத்தான். அவளின் கூந்தலை அள்ளி முகர்ந்து பார்த்ததில் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. நன்றாக காய விட்டு சிடுக்கு எடுத்து மென்மையாக ஈரத்தை போக்கி இருந்தவன். ரிதமின் அடர்த்தியான முடியை முகஎர்ந்து முத்தமிட்டான். குதிரைவால் காரி என சொல்லிக் கொண்டே அவளின் அழகு முகத்தை பார்த்தான். 

இங்கே கீழே அலறல் சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்னாச்சு? என சத்ய தேவ் எட்டி பார்க்க ஹரிணி, ஆதவ், இருவரும் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கினார்கள். மகி ஒரு வேப்ப குச்சியை உடைத்துக் கொண்டு மிதுணை அடிக்க துறத்தினார். ராம் கீதா இன்னொரு பக்கம் அமர்ந்து சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். இவளுக்கு என்ன கேடு வந்து புகுந்தது? என மிதுன் ஓட..

டேய் மிதுன் நில்லு நாயே! நானும் உன்னை கொஞ்சி தலையில் தூக்கி கொண்டாடினால் நீ மிஞ்சி போற? என்ன காரியம் பன்னிருக்க நீ? என மகி துரத்த.. தூறி எதுவும் பண்ணு! என மிதுன் இதழின் அறைக்குள் புகுந்தான். 

இதழ் சிரித்து கொண்டே நீ பண்ணது தப்பு அண்ணா! உன்னை யாரு கட்டிலில் இருக்கும் ஸ்க்ரூவை கழட்ட சொன்னது? இதுல அண்ணி இடுப்பு சுளுக்கிகிச்சு ரிதம் ரொம்ப கஷ்ட பட்டு போயிட்டா என்றாள். 

அய்யோ தூறி நீ எடுத்து கொடுக்காத! இப்போ மகி என்னை கொல்லாம விட மாட்டாள். நிதின் ப்ரோ நீ ஹெல்ப் பண்ணே! பிளீஸ் என சரணடைந்தான் மிதுன். 

காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் தூங்கியவள் மதியம் இரண்டு மணி போல எழுந்தாள் ரிதம். எழுந்ததும் அவள் தேடியது போன் தான். 

சத்ய தேவ் உள்ளே வந்தவன் ஹே தூங்கி எழுந்தாச்சா! வந்து சாப்பிடு! உனக்காக நான் மண் குளியல் போட எல்லாம் ரெடி பண்ணேன் ஆனால் நீ தான் வந்ததும் தூங்கிட்ட என விடாமல் பேசியவன் அவள் போனை எடுக்க முயல அவளது போனை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்தவன். வந்து சாப்பிட்டு முடிச்சிட்டு அப்புறம் போன் நோண்டு என கையோடு அழைத்து சென்று விட்டான். 

அவனை முறைத்த படி வேறு வழி இல்லாமல் நடந்தாள் ரிதம். மதிய உணவை பார்த்து பார்த்து பரிமாறினார் மகி.  சாப்பிட்டு முடித்ததும் அவள் அறைக்கு சென்று போனை ஓபன் செய்ய.  அவளுக்காக பழம் எடுத்து வந்தான் சத்ய தேவ். 

அவளின் கையில் போன் இருந்தது பார்த்து விட்டு வந்ததும் ஆரம்பிச்சுட்டயா டி! போன் இல்லாம இருக்க முடியாதா என அவன் பேச வர.. 

பளார் என அரை விட்டாள் ரிதம். சத்ய தேவ் அவளை அதிர்ந்து பார்க்க, ரிதம் பற்களை கடித்த படி இங்கே பாரு எனக்கு கமிஷ்னர் எத்தனை தடவை கால் பண்ணிறுக்கார்? வேலை இல்லாத வெட்டி நாயே! உனக்கு என்ன டா என்னோட வேலையின் அருமை பத்தி தெரிய போகுது? ச்ச உன்னை கல்யாணம் பண்ணி, என்னோட லைஃப் ஸ்பாயில் ஆகி போச்சு. என கண்ட படி பேசியவள் வேகமாக எண்ணை டயல் செய்து காதில் வைத்தாள். 

சத்ய தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ரிதம் பதட்டத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள் அழைப்பு ஏற்க பட்டது. ஹலோ குட் ஆப்ட்டர் நூன் சார் என ரிதம் நேராக நிமிர்ந்து பதில் கொடுக்க, மறு பக்கம் என்ன சொல்ல பட்டதோ! ரிதம் கெஞ்ச ஆரம்பித்தாள். No sir அப்படி இல்ல! என அவள் விளக்கம் கொடுக்க, உயர் அதிகாரி அவளிடம் உன் அப்பா ஜாயின்ட் கமிஸ்னரா இருந்தால் எனக்கு பயமா? இல்ல உன்னோட childhood friend மினிஸ்டர்ரா இருந்தால் நான் பணிஞ்சு போகணுமா? எல்லாம் அதிகார பவர்ல இருந்தால் நான் மிரண்டு விட மாட்டேன். என்றவர் ஒரு நிமிடம் விட்டு நீ கலெக்ட் பண்ண டிரக் சாம்ப்பில் நீ கேதர் பண்ண ரிப்போர்ட் எல்லாம் நாளைக்கு காலையில் சார்ப் 9 o clock சப்மிட் பண்ற! அப்படி இல்லன்னா இன்ப ராகவன் dept க்கு transfer வாங்கிட்டு போயிடு useless fellow என சொல்லி போனை வைத்தார். 

ரிதம் கண்களில் நீர் வழிந்தது. முகமெல்லாம் சிவந்து போக, அவள் வேகமாக உடையை பேக் செய்தாள். 

சத்ய தேவ் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தான். அனைத்தையும் எடுத்து வைத்தவள் அங்கிருந்த சொம்பை ஆவேசமாக கீழே வீசி உதைத்தாள். 

ஹே என்ன அப்படியே நிக்கிற? கிளம்பி வா! மகி மாமிய என்னால கஷ்ட படுத்த முடியாது. என் கூட பெங்களூர் வரைக்கும் வா! நடுவில் நீ வராமல் இருந்தாலும் எனக்கு நிம்மதி தான். Irritating.. என திட்டினாள். 

சத்ய தேவ் அமைதியாக கிளம்ப ரிதம் அவளின் கழுத்தில் இருக்கும் உமா போட்டு விட்ட தாலி கொடி, தாலி சரடு என அனைத்தையும் கழட்டி வைத்தவள் சத்ய தேவ் கட்டிய தாலி அது மோப்பு கொடியாக மகி மாற்றி இருக்க அதை மட்டும் கழுத்தில் போட்டுக் கொண்டாள். எதுவும் பிடிக்க வில்லை. எரிச்சலாக இருந்தது. 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இருவரும் கீழே இருந்தார்கள். மகி, சூர்யா, ராம், கீதா, நட்ராஜ், இதழ், மிதுன், நிதின், ஹரிணி என அனைவர் பார்வையும் அவர்கள் மீது இருக்க, இப்பொழுது சத்ய தேவ் பேசினான். முக்கியமா வேலை இருக்கு மா! நான் கிலம்பனும். என உமாவின் காலில் விழுந்தான். ரிதம் கடுப்புடன் அவன் கூடவே சேர்ந்து விழுந்தாள். 

உங்களுக்காக தான் கண்ணு கிடாய் என நட்ராஜ் ஆரம்பிக்க, இல்ல தாத்தா முக்கிய வேலை போயே ஆகணும்! என சத்ய தேவ் கூற,  சரி சீக்கிரம் அடுத்த லீவுக்கு வாங்க என சொல்லி அனுப்பினார். 

மகி ரிதமிடம் சரி அவன் எதோ கோபத்தில் இருக்கான் போல. நீ எதுவும் அவனை கண்டுக்க வேணாம் செல்லம். அவன் தொந்தரவு பண்ணா சொல்லு சாமி! நான் கேட்கிறேன் என கூறினார். 

ம்ம் சரிங்க மாமி! என ரிதம் சொல்லி விட்டு அவனுக்காக காத்திருக்க, சத்ய தேவ் வந்து விட்டான். நிதுனும் கிளம்பி விட.. நிதின் சித்தி கூட வா! அவன் போகட்டும் என மகி சொல்ல, மிதுனும் நிதின் கைகளை பிடித்துக் கொண்டான். 

சரி என நிதின் இருந்து விட மதியம் மூன்று மணிக்கு ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் பெங்களூர் நோக்கி கிளம்பினார்கள். கொல்லேகால் அந்தியூர் ரோட்டின் மார்க்கமாக பெங்களூர் கிளம்பினான் காரில். ரிதம் பதட்டத்துடன் நிறைய போன் கால்கள் செய்தாள். கிட்ட தட்ட 10 மணிக்கு அவர்களின் வீட்டை அடைந்தார்கள். 

ரிதம் அவளின் டீம்மிடம் பேசி முடித்து நாளை அனைத்து எவிடன்ஸ் மற்றும் விவரங்கள் கோப்புகள் என அனைத்தையும் சமர்பித்து போதை பொருள் வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்தையும் தயார் செய்த நிம்மதியில் படுத்தாள். 

அந்த நேரம் சத்ய தேவ்க்கு போன் வர உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான். சத்ய தேவ் இரவே முக்கிய வேலையாக கிளம்பி விட்டான். வீட்டில் அவன் இல்லை. ரிதம் அலாரம் வைத்து நேரமே எழுந்தவள் காக்கி உடை ப்ளூ தொப்பி என பக்காவாக தயார் ஆனவள். ஜீப்புக்காக காத்திருந்தாள். கேஸ் பற்றிய விவரங்கள் அனைத்தையும் மூளையில் ஓட்டி பார்த்தவள் அனைத்து விவரத்தையும் சரியாக சொல்லி முடிக்க வேண்டும் என கிளம்பினாள். 

இங்கே மகி வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் விவேகாவிடம் இருந்து ரிதமின் ஜாதகத்தை வாங்கி சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவருக்கும் ஒரு முறை பொருத்தம் பார்க்கலாம் என முடிவெடுத்தார். 

சத்ய தேவ் எங்கே போனான்? 

அடுத்து என்ன நடக்கும்? 

– வருவான்

ஆனாலும் ரிதம் இவ்வளவு பேசி இருக்க கூடாது. ரொம்ப மோசம் அவள். அதுக்கு எல்லாம் அவள் அணுபவிப்பா. என்னோட சக்திய அடிச்சுட்டா. பார்த்துக்கிறேன். 

கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம் அடுத்த twist நாளைக்கு reveal ஆகும்.. 

என்ன twist இருக்கும் அப்டின்னு நீங்க நினைக்கிறீங்க? எதுவும் ஐடியா இருக்கா? சொல்லிட்டு போனால் ரெண்டு நாலைக்குள்ள ஒரு சூப்பர் ud இருக்கு. பார்ப்போம் 

இந்த ருத்ரன் எங்கே ஆளையே காணோம்? இந்த சர்வா இந்த கதையில் இருந்து leave ஆகிட்டானா? இப்படி கேள்வி இருக்கும். முதல்ல சத்ய தேவ் – ரிதம் கதைய டுவிஸ்ட்டா வச்சு முடிச்சிட்டு அப்புறம் மற்றது பார்ப்போம். 

ஆகஸ்ட் மாசம் புது கதை யாருக்கெல்லாம் வேணுமோ! வாட்ஸ் அப் சேனல் or Pradhanya Kuzhali puthinangal facebook ல என்னை follow பண்ணிக்கோங்க 

நிறைய காதலுக்கும் ரொமான்சுக்கும் நான் கேரண்டி! ம்ம் பார்க்கலாம். 

சக்தி டார்லிங் உனக்கு நான் வெயிட்டிங் என்ன twist இருக்கும் அப்டின்னு நீங்க நினைக்கிறீங்க? எதுவும் ஐடியா இருக்கா? சொல்லிட்டு போனால் ரெண்டு நாலைக்குள்ள ஒரு சூப்பர் ud இருக்கு. பார்ப்போம் 

இந்த ருத்ரன் எங்கே ஆளையே காணோம்? இந்த சர்வா இந்த கதையில் இருந்து leave ஆகிட்டானா? இப்படி கேள்வி இருக்கும். முதல்ல சத்ய தேவ் – ரிதம் கதைய டுவிஸ்ட்டா வச்சு முடிச்சிட்டு அப்புறம் மற்றது பார்ப்போம். 

ஆகஸ்ட் மாசம் புது கதை யாருக்கெல்லாம் வேணுமோ! வாட்ஸ் அப் சேனல் or Pradhanya Kuzhali puthinangal facebook ல என்னை follow பண்ணிக்கோங்க  

நிறைய காதலுக்கும் ரொமான்சுக்கும் நான் கேரண்டி! ம்ம் பார்க்கலாம்.  

சக்தி டார்லிங் உனக்கு நான் வெயிட்டிங் 

EPISODE 177

காலையில் அலாரம்  வைத்து நேரமே எழுந்தவள் காக்கி உடை ப்ளூ தொப்பி என பக்காவாக தயார் ஆனவள். ஜீப்புக்காக காத்திருந்தாள். கேஸ் பற்றிய விவரங்கள் அனைத்தையும் மூளையில் ஓட்டி பார்த்தவள் அனைத்து விவரத்தையும் சரியாக சொல்லி முடிக்க வேண்டும் என கிளம்பினாள். தன்னை மிகவும் நிதான படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ரிதம். 

ஸ்டேஷன்ல யாரு இருக்கா? நான் வராம இருந்த இந்த ரெண்டு நாளும் உங்களுக்கு நிறைய வேலை இருந்திருக்குமே! என ரிதம் கேட்டுக் கொண்டே நடந்தாள். இல்ல மேடம்! எல்லார்க்கும் வேலை சரியா இருந்தது.  ரைட்டர் கான்ஸ்டபிள் ரெண்டு பேரும் ஸ்டேசன்ல இருந்தாங்க. இன்ஸ்பெக்டர் கேஸ் விசயமா பிஸி மேடம். பெருசா இஸ்யூ இல்ல என்றார் அந்த காவலாளி.

சரி சரி எல்லாமே பக்கா தானே என ரிதம் கமிஷ்னர் ஆபிஸ்சின் உள்ளே நுழைந்தாள். வீரகர்ணன் SP  Superintendent of police  என பளபளத்துக் கொண்டிருந்தது. தெனாவட்டாக பத்து வருட அனுபவத்தில் நரைத்த முடியுடன் கம்பீரமாக அமர்ந்து இருந்தார். அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ் ம்ம் I.V. ரிதம். என எகத்தாளம் நிறைந்தது அவரின் குரலில். 

ரிதம் சல்யூட் அடித்தபடி நிற்க, அப்படி என்னத்த கண்டு புடிச்ச? சொல்லு law and order அ எவ்ளோ தூரம் ஃபாலோ பண்ணிருக்க அப்டின்னு பார்ப்போம் என்றார். வீர கர்ணன் ஆளும் கட்சியின் ஆள். கூடவே இன்ப ராகவன் தன்னை விட வயது குறைந்தவன் ஜாயின்ட் கமிஷ்னர் சிறப்பு பொறுப்பு என அனைத்திலும் இன்பா இருக்க.. அது கர்ணனுக்கு பிடிக்க வில்லை. அதை விட ரிதமுக்கு கொடுக்க பட்டிருக்கும் இந்த கேஸ் விவகாரம் பிடிச்ச கேஸ். ரிதமை வைத்து இன்ப ராகவனை அவமான படுத்த வேண்டும் அவளை வேலையில் விட்டு தூக்க வேண்டும். இன்பாவை கீழே சரிக்க வேண்டும். கொலை கூட அதற்கு தகும். ரிதம் இருக்கும் ஸ்டேசனுக்கு கர்ணனின் மருமகன் தீபன் வர வேண்டியது. அதனால் அனைத்து இடத்திலும் பிரச்னை ரிதமுக்கு. 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க, சரி proceed பண்ணுங்க நீங்க அப்படி என்ன கேதர் பண்ணிருக்கீங்கன்னு பார்ப்போம் என எழுந்தார். யெஸ் சார் என அனைத்தையும் விளக்க ஆரம்பித்தாள் ரிதம். ட்ரக்  பதுக்கி வச்சிருக்கிறது எல்லாமே விசாரிச்ச வரைக்கும்  அக்ரகாரம் பக்கத்தில் தான்னு information வந்திருக்கு. சட்ட விரோதமாக பொண்ணுங்களுக்கு டிரக் inject பண்ணி அப்யூஸ் பன்றதாவும் என அவள் சொல்லிக் கொண்டே போக.. 

எழுத்து பூர்வம், தர்க்கம் எதுவும் இங்கே எடுபடாது. இந்த பொண்ணுங்க கேஸ்ல தேவையே இல்லாம டிரக்கை கொண்டு வந்து விட்டிருக்க? பார்ப்போம் proceed என்றார். ரிதம் சல்யூட் அடித்து விட்டு கிளம்பினாள். .. அவள் நடக்க நடக்க கர்ணன் சொன்னது காதில் விழுந்து கொண்டே இருந்தது. இந்த ஒரு சிட்டி தான் உன்னோட கண்ட்ரோல் விட்டால் மொத்தமும் உனக்கு கீழன்னு நினைசுக்க வேணாம் என முடித்தார். அவளின் மொத்த படையும் சென்று துப்பு துலக்க இருந்த கொஞ்ச நஞ்ச ஆதாரமும் காற்றில் கரைந்தது போல ஆனது. 

சார் இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க! என ரிதம் வாய் விட்டு கேட்டாள். ம்ம் எடுத்துக்கோங்க முடிவு என்னன்னு எனக்கு தெரியும். சீக்கிரம் முடிக்கணும் மேடம். பாருங்க முடியலனா இதை CBI க்கு மாத்த சொல்லி மேல் இடத்தில் இருந்து பிரஸர். நாட்டை ஆளும் மினிஸ்டர் உங்க பக்கம் இருந்தாலும் இங்கே ஸ்டேட்ல அது எடு படாது என பேசி விட்டு கட் செய்தார். 

இரண்டு நாட்கள் சோறு தண்ணி இல்லாமல் அழைந்தாள் ரிதம். மேடம் நீங்க சொன்ன இடத்தில போய் பார்த்தால் அங்கே டிரக் use பண்ணதுக்கான எந்த டிரேஸ்சும் நமக்கு கிடைக்கல என்றார் சப் இ்ன்ஸ்பெக்டர். இதே விசயம் ஒரு வாரம் முன்னாடி இதே இடத்தில பார்த்தோமே சார்? அது எப்படி? என ரிதம் பற்களை கடித்த படி கேட்க, பெரு மூச்சை விட்டவர் மேடம் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். வெளிப்படையா இங்கே குற்றமும் போதையும் நடந்திட்டு தான் இருக்கு. ஆனால் நம்மால ஒன்னும் பண்ண முடியாது. 

ஏன் சார் என அவள் கோபத்துடன் கேட்க, ஏன்னா இங்கே பெரிய சினிமா பிரபலங்கள், கட்சி பிரபலங்கள் இதுல சம்மந்த பட்டிருக்கு, நீங்க அடி ஆழம் வரைக்கும் தோண்டி துருவி போனாலும் எல்லாமே கண்டு பிடிச்சு அடுத்த லெவல் போனால் கற்பூரம் காற்றில் கரையிற மாதிரி கொக்கைன் மொத்தத்தையும் தண்ணியில் கரைச்சு விட்டுடுவாங்க. நீங்க எதையும் ஆதாரமா காட்ட முடியாது என்றார் அந்த காவலாளி. 

அப்போ அந்த பொண்ணுங்க அநியாயமா செத்தது? என ரிதம் கைகளை முறுக்கிய படி கேட்க.. காவலாளி மவுனமாக இருந்தார். அப்புறம் எதுக்கு இந்த போலீஸ்? இந்த காக்கி சட்டை? என கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அதே கோபத்துடன் வீட்டுக்கு சென்றாள். 

களைப்புடன் வீட்டுக்கு வந்தவளை காரசாரமான உணவுகள் வாசத்துடன் அழைத்தது. இதோ நாசியை துளைத்தது. சத்ய தேவ்வை அன்று அடித்தது நினைவு வர பேச தோன்ற வில்லை. நிறைய ஆல்கஹால் ஆர்டர் செய்து அவன் சமைத்த அசைவ உணவுகளை சாப்பிட்டாள். ரிதம் எப்பொழுதும் வயிற்றுக்கு வஞ்சனை வைப்பதில்லை. 

இன்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. டாடி! என ரிதம் போதையில் அழைக்க, அந்த வீர கர்ணன் ஓவரா பேசுறானா? டிம்பிள்? இதுக்கு தான் சொன்னேன் வேற dept வேற சிட்டி வாங்கிட்டு போயிருக்கலாம் நீ! Control room choose பண்ணிக்க பேபி! டிராபிக் dept change பண்ணிக்கறியா என கேட்டார். 

ரிதம் கஷ்ட பட்டு சுயநினைவுக்கு வந்தவள். இல்ல டாடி! நான் விட மாட்டேன். என்னை என்ன பண்ணிருவானுங்க? நான் பார்த்துக்கிறேன்? இதுல அந்த ஆக்டர் ஆரவ் பொண்ணு ஸ்ருதி இதுல சம்மந்த பட்டிருக்கா! என உலறிக் கொண்டே கூறினாள். 

பேபி! பேபி! நான் சொல்றத கேளு? இதுல கொஞ்சம் பொறுமையா போலாம். நிதானம் ரொம்ப அவசியம் டிம்பிள் என இன்பா எவ்வளவோ விளக்க.. டாடி நான் சும்மா விட மாட்டேன் ஒருத்தரையும் என சொல்லி விட்டு பேச பேச போனை வைத்தாள். 

காலையில் ஐந்து ஆறு அலாரங்கள் என அவளை அழைக்க கூடவே போன் கால்சும் நடுவில் ஒலிக்க போனை எடுத்தாள். மேடம் என பதட்டத்துடன் சப் இன்ஸ்பெக்டர் குரல் என்ன சார்? என ரிதம் தலையை பிடித்துக் கொண்டே கேட்டாள். நம்ம ஸ்டேஷனுக்கு பின்னாடி ஃபயர் ஆக்சிடன்ட் நடந்ததில் ஸ்டேஷன் உள்ளுக்குள் இருந்த எல்லா proof எவிடன்ஸ்சும் போயிடுச்சு. 

சார் இன்னும் எந்த காலத்தில் இருக்கீங்க? எல்லாமே சாப்ட் காப்பியில் இருக்கு. மேடம் அது என பெரு மூச்சை விட்ட இன்ஸ்பெக்டர் அனைத்து விசயமும் கூற, உடனே sp லைனில் அழைத்தார் நேரடியாக, gud morning sir என ரிதம் பேச.. நீ நேரா ஸ்டேசன் வா! என சொல்லி போனை வைத்தார். 

ரிதம் கலக்கத்துடன் வேகமாக கிலம்பியவள் ஸ்டேசன் சென்று பார்க்க, உள்ளம் கனத்து போனது. சோனாலி மற்றும் சோனா இருவரும் மப்டியில் வந்திருந்தார்கள். டியூட்டி இல்லை. இது அவர்களின் சரகம் கிடையாது. சத்ய தேவ்வை பார்க்க வேண்டும் என நினைத்தவர்கள் அவன் பிரஸ் என்பதால் இங்கு செய்தி சேகரிக்க வருவான் என வந்து சேர்ந்தார்கள். 

அந்த இடத்தை பார்த்ததும் ஆவேசத்துடன் கர்ணன் பக்கம் சென்றவள். சார் இதை பார்த்தால் ஆக்சிடன்ட் மாதிரி தெரியல, பிளான் பண்ணி கொளுத்தி போட்ருக்காங்க! அந்த சிஸ்டம் அந்த cctv எல்லாம் அடிச்சு நொறுக்க பட்டிறுக்கு. 

உன்னோட வேகம் தான் இந்த ஸ்டேசன் நிலைமைக்கு காரணம் என்றார் கர்ணன். இதை investigation பண்ணயே ஆகணும் என ரிதம் கோபத்தில் கொந்தலித்தாள். நீ எரிச்சது போதும் இந்த கேஸ்ஸ அதாவது அந்த பொண்ணுங்க கொலை கேஸ் CBI க்கு மாத்தியாச்சு. கூடவே ஒரு வாரத்தில் ஸ்டேசன் ரெடி ஆகிடும் அதுக்கு அப்புறம் law and order அ நிலை நாட்டுங்க என எகத்தாளமாக பேசி விட்டு வெளியே சென்றார். 

ரிதம் அவரின் பின்னால் ஓட அதற்குள் பிரஸ் ரிப்போர்ட்டர் என அந்த இடம் இன்னும் பரபரப்பானது. இதோ வந்து விட்டான் சத்ய தேவ். இது எப்படி ஆச்சு? எதுவும் investigation ஸ்டார்ட் பண்ணிருக்கீங்களா? இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கு? இதுக்கு பின்னாடி வேற காரணம் இருக்கா? என கேட்டுக் கொண்டே வந்தார்கள். 

கர்ணன் முகம் தீவிரமாக கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சு சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துவோம். இது வரை இந்த பெங்களூர் சிட்டில பட்டிகுலரா இந்த இடத்தில இப்படி? ரொம்ப மிஸ்டீரியஸ்சா இருக்கு பார்ப்போம் என கடந்து விட்டார். 

ரிதம் உடைந்த மனதுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். இன்பா திரும்ப திரும்ப போன் செய்ய, டாடி நான் ஓகே நீங்க பாருங்க என அவள் தவிர்த்து விட.. ஒரு வாரம் எப்படி சென்றதென தெரிய வில்லை. நடை பிணமாக இருந்தாள். 

அதே நேரம் ஹரிணி பெங்களூருக்கு  க்ரைம் பிரான்ச் மாற்றம் செய்ய பட்டு வாங்கி வந்திருந்தாள். அதுவும் செவி வழி தகவலாக வந்து சேர்ந்தது. சோனா மற்றும் சோனாலி இருவரும் அடிக்கடி சத்ய தேவ்விடம் அதிகமான உரையாடலில் இருக்கிறார்கள். 

அவனையும் கிட்ட தட்ட இரண்டு வாரங்களாக பார்க்க முடிய வில்லை. ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது. ம்ம் சொல்லுங்க சார் என ரிதம் கேட்க…  சிபிஐ கிட்ட கேஸ் details share பண்ணனும் கூட ஒருத்தர் எல்லாத்தையும் explain பண்ணனும் கர்ணன் சார் உங்களை தான் அதை பண்ண சொன்னாரு  மேடம். என்றார். 

யாரு வரா? எங்கே வரணும் நான்? என ரிதம் கேட்க, நம்ம ஸ்டேசன் வாங்க மேடம் என வைத்தார். 

ரிதம் ஸ்டேசன் கிளம்பினாள். அதே தோரணையில் ஆனால் முகம் முழுக்க கவலை அப்பி கிடந்தது. வந்தாச்சா? என கேட்டுக் கொண்டே நுழைந்தாள். 

Enforcement officer and central bureau of investigation CBI ரெண்டு பேரும் வந்திருக்காங்க. என சொல்லிக் கொண்டே சப் இன்ஸ்பெக்டர் பின் தொடர்ந்தார் ரிதமை..

ஒரு நிமிடம் நின்றவள் இதுல Enforcement officer எதுக்கு வந்திருக்காங்க? என கேட்க.. ஸ்டேசன் ஆக்சிடன்ட் ஆனது suspect பண்ண மாதிரி தோணுது. அதை விட அந்த CBI ஆபிசர பார்த்தாலே கொஞ்சம் பயமா தான் இருக்கு மேடம். 

எவனா இருந்தால் எனக்கென்ன? என்னத்தை கண்டு பிடிச்சு கிழிக்கிறான்னு பார்க்கறேன். என சொல்லிக் கொண்டே நுழைந்தாள். 

சத்ய தேவ் நோட் பேட் மற்றும், ஆப்பிள் I pad என வைத்துக் கொண்டு நின்றான். அவனை பார்த்தவள் எகத்தாளம் நிறைந்த குரலில் இவன் இங்கே என்னத்தை கண்டு பிடிக்க extra luggage ஆ சுத்திட்டு இருக்கான்? சாதாரண நியூஸ் ரிபொட் கெதர் பண்ண முதல்வன் பட அர்ஜுன் அளவுக்கு சீன்! Irritating disgusting என சொல்லிக் கொண்டே அவளின் அறைக்கு சென்று அனைத்தையும் தயார் செய்தாள். 

எங்கே அந்த CBI ஆபிசர கொஞ்சம் வர சொல்லுக.. என ரிதம் கோப்பை புரட்டி கொண்டே சப் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்ல.. மேடம் சாரு லைன்ல இருக்காரு! இந்தாங்க.. 

ரிதம் கடுப்புடன் * கெட்ட வார்த்தையை வாயில் ஓட்டியவள். என்னத்தை கிழிக்க போறான். என்றவள் போனை வாங்கிக் கொண்டு அனைத்தையும் கூறினாள். 

ம்ம் கொட்டியது மறு பக்கம். அவ்வளவே. 

ரிதம் போனை நீட்ட சப் இன்ஸ்பெக்டர் வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார். கான்ஸ்டபிள் போனில் பேசி விட்டு மேடம் கர்ணன் சாரு இந்த கேஸ் விசயமா உங்களை மீட் பண்ண சொன்னாரு. எதோ பேசனுமாம் என்றார். 

ஹான் ஓகே சார் என ரிதம் தொப்பியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். ஜீப் அவளுக்காக காத்திருக்க, ஏறிக்கொண்டாள். ஜீப் ஸ்டார்ட் ஆகி நகர போக.. மேடம் மேடம் என ஒரு குரல்.. 

என்ன சார் சும்மா? என ரிதம் தலையை தேய்த்தபடி கேட்க.. அந்த CBI ஆபிசரயும் பிக் அப் பண்ணிடுங்க. அவரையும் கர்ணன் சார் பார்க்க வர சொன்னார். என கான்ஸ்டபிள் கூற..  சீக்கிரம் வர சொல்லுங்க என சொல்லிய படி ரிதம் ஆயாசமாக அமர்ந்திருக்க…  

“போலாம்”என ஒரு குரல்.. 

ம்ம் வண்டிய எடுங்க என ரிதம் பார்வையை சாலையில் செலுத்தினாள். 

கார் நேராக sp ஆபிஸ் சென்றது. ரிதம் இறங்கிய படி முன்னால் நடந்தாள். சட்டென திரும்பி பார்த்தாள். மேடம் என டிரைவர் அழைக்க.. 

அந்த ஆளு CBI எங்கே? என ரிதம் கேட்க.. டிரைவர் சுற்றிலும் முற்றிலும் தேடி பார்க்க, சரி விடுங்க சார் என அன்ன நடையுடன் தன் உழைப்பு அனைத்தும் மண்ணாய் போனதை எண்ணி உள்ளுக்குள் கோபம் வெடிக்க ஆனால் அது எதற்கும் உதவ போவதில்லை என தெரிந்து கொண்டவள் பெரு மூச்சுடன் நடந்தாள். 

இன்னும் எவ்ளோ நேரம் மா? என வெளியில் கர்ணனின் விசுவாசி அவளை கரித்து கொட்ட.. எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தாள் ரிதம். 

எக்ஸ்கியூஷ் மி சார் என கதவை தட்டி கொண்டு உள்ளே நுழைந்தது ஆறடி உயரம். ஆறடி காற்று.. 

இனி நீங்க பார்த்த கேஸ் மொத்தமும் CBI பார்த்துக்கும். அவங்களுக்கு தேவையான விசயத்தை மட்டும் சொல்லுங்க போதும் என சொல்ல.. பார்த்துக்கோங்க மிஸ்டர் என கர்ணன் சொல்ல.. 

ஓகே சார் என கூறினான். 

இது ரிதம் இன்ப ராகவன் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ் உங்க கேஸ்க்கு ஹெல்ப்பா இருப்பாங்க CBI  ல இருந்து இனி இவர் தான் மீட்  மிஸ்டர் சத்ய தேவ் DSP என கர்ணன்  கூற..

ரிதம் திரும்பினாள். 

அடடே!! 

நாளை பார்ப்போம் 

வருவான். 

EPISODE 178

இது ரிதம் இன்ப ராகவன் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ் உங்க கேஸ்க்கு ஹெல்ப்பா இருப்பாங்க.. and CBIல இருந்து இனி இவர் தான் மீட்  மிஸ்டர் சத்ய தேவ் DSP என கூறினார் கர்ணன். 

ரிதம் திடுக்கிட்டு அப்படியே திரும்பி பார்க்க, சத்ய தேவ் அசராமல் கர்ணனை பார்த்த படி நின்றவன். அவனது கூலர்சை போட்ட படி திரும்பி வெளியே சென்றான். இங்கே என்ன நடக்குது? இவன்? இவனா? அய்யோ? இது கனவா? இல்ல நிஜமா? என உள்ளுக்குள் நடுக்கம் பரவ, நீ ஏன் நிக்கிற என்பது போல spயின் பார்வை அவள் மீது படிய, தள்ளாட்டத்துடன் வெளியே வந்தாள். 

உள்ளுக்குள் திடீரென நடுக்கம் பரவியது. எட்சிலை கஷ்ட பட்டு விழுங்கினாள் ரிதம். அவனை அடித்தது, கேவலமாக பேசியது அதன் கூடவே வேலை இல்லாத வெட்டி நாய், அது மட்டுமா? என கதி கலங்கி அவள் எங்கு செல்கிறோம்? என தெரியாமல் நடந்தாள். இப்போ அவன் கண்ணு முன்னாடி போய் நான் எப்படி முழிப்பேன்? அய்யோ இனி என்னன்ன நடக்க போகுதோ என ரிதம் பதட்டத்துடன் இதயம் படபடக்க காரின் பக்கம் வந்தாள். 

அங்கே சத்ய தேவ் இல்லை. ரிதம் வேகமாக சுற்றிலும் முற்றிலும் அவனை தேடினாள். உடனே தன் தந்தைக்கு அழைத்தாள். டாடிஇஇ! அந்த சத்ய தேவ்! அவனை நான் அது ? அந்த சக்தி! என மூச்சு வாங்கியது அவளுக்கு. 

நீ சக்திய  இப்போ அடிச்சிட்டயா? என இன்பா கேட்க, டாடிஈஈ! இல்ல என ஆவேசமாக கத்திய ரிதம் அது அவன் CBI ஆ? என்னோட கேஸ்சை ஹேண்டில் பண்ண வந்திருக்கான். 

அப்படியா? நான் கூட பயந்துட்டென் என்றார் இன்பா. 

டாடி அப்போ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என் கிட்ட ஏன் டாடி நீங்க சொல்லல.. 

டிம்பிள்! இல்ல டா தங்கம் எனக்கே தெரியாது. அவன் போலீஸ்ன்னு நீ சொல்லி தான் எனக்கே தெரியுது. பாரேன் என் கிட்டயே மறைச்சிட்டான். வீட்டுக்கு வரட்டும் அவனை சும்மா விட மாட்டேன் என இன்பா சொன்னார். 

வீடு என்றதும் தான் ரிதமுக்கு பயம் தொற்றிக் கொள்ள, அய்யயோ நான் எப்படி இவனை face பண்ண போறேன். என நொந்த படி நேராக அவளது ஸ்டேசன் சென்றாள். சத்ய தேவ் தான் ரிதமின் கணவன் என யாருக்கும் தெரியாது. ஒரு சில பெரிய வீட்டு திருமணம் மற்றும் நிகழ்வுகள் நபர்கள் என அனைத்தும் ரகசியமாக தான் வைத்திருப்பார்கள். அதனால் தான் வசந்தன் சொன்ன வரவேற்பு கூட செய்கிறோம் என்றார்களே தவிர அதை பற்றி பெரிதாக கண்டு கொள்ள வில்லை. 

ரிதம் ஸ்டேசன் சென்றதும் அவளின் இடத்தில் சென்று அமர்ந்தவள். வேகமாக மிதுனுக்கு அழைத்தாள். அவனுக்கும் தெரிய வில்லை. அடுத்ததாக நிதினுக்கு அழைத்தாள். சொல்லு? 

அந்த சக்தி? அவன்? என ரிதம் தயங்க.. என்ன டி? சக்தியா? எதுவும் பிரச்னை பண்ணாணா? சொல்லு அவனை கை கால் கட்டி தூக்கி போட்டு விடுறேன் என நிதின் சொல்ல, டேய் அவன் போலீஸ் ஆகிட்டான் டா என ரிதம் சொல்லி முடிக்க, 

என்ன சொல்ற? என அதிர்ச்சியுடன்  கேட்டான் நிதின். 

ஆமா! அவன் போலீஸ் ஆகிட்டான் டா! எப்படி? அதுவும் CBI? உன் பொண்டாட்டி அதுக்கு தான் இங்கே மாற்றுதல் வாங்கிட்டு வந்தாளா? என ரிதம் கேட்க.. ஹே எனக்கே நீ சொல்லி தான் தெரியும்? ஹரினிக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல. அவளை நடுவில் இழுத்து விடாதே! என்றான் நிதின். 

சரி என ரிதம் சொல்ல, ஹே நிஜமாவே போலீஸ் ஆகிட்டானா இல்ல நீ கனவு கண்டியா? என்னால நம்ப முடியல டி! சாக் ஆ இருக்கு?  என்னால நம்பவே முடியல! பாவம் உன்னை நினைச்சா இன்னும் பாவமா இருக்கு. என நிதின் சொல்ல.. ந.. நான் என்ன பண்ணேன்? என ரிதம் தடுமாற்றத்துடன் கேட்க.. சின்ன வயசில இருந்து அவனை நீயும், மிதுன், நானும் மூணு பேரும் அவனை படுத்தி எடுத்திருக்கோம். இப்போ அது விசயம் இல்ல நீ அவனை கல்யாணம் பண்ணிட்டியே? அது தான் இப்போ இடிக்கிது சரி எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு அவனை நான் பார்த்துக்கிறேன். என நிதின் கூற.. ம்ம் என்றாள். சரி எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என சொல்லி விட்டு நிதின் போனை வைத்தான். 

ரிதம் நடுக்கத்துடன் இருந்தாள். போச்சு! போச்சு பேசாமல் நான் மாமி வீட்டுக்கு போயிடுறேன் என முடிவெடுக்க, அவர்கள் அனைவரும் மை விழி வீட்டில் அவளுக்கு உடம்பு சரியில்லை அதனால் குடும்பமே கார்த்திக் மை விழி வீட்டில் இருக்கிறது. தன் வீட்டுக்கு சென்றால், டாடி விவேகா முன் தன்னை எதுவும் செய்து விட்டால்? அய்யோ! அவன் அடிச்சா நான் தாங்குவெனா? இந்த வேலையில் இவன் இப்போ சேர்ந்த மாதிரி இல்லையே? ரொம்ப வருஷமா மப்டியில சுத்திட்டு இருக்கான். நான் தான் இதுல லூசர்ரா? அப்போ இது ஹரிணிக்கு தெரியுமா? இவனை எப்படி ஃபேஸ் பண்ண போறோம் என அப்படியே இருந்தாள். 

ரிதமின் கைகளை எல்லாம் வியர்த்து கொட்டியது. மாலையும் ஆனது வீட்டுக்கு போகவே பயம்! இதோ கிளம்பி விட்டாள். ஜீப்பில் ஏறி அமர்ந்தாள். 

ஒரு வித பதட்டத்துடன் வீட்டை நோக்கி சென்றாள். அவளே கதவை திறக்க உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதி . அப்போ வீட்டுக்கு அவன்  வரலயே! அப்படியே வந்தாலும் கொஞ்சம் தைரியமா மெயின்டைன் பண்ணுவோம் என உள்ளே சென்றவள் heat stroke வந்தவள் போல வியர்த்து வழிந்தது அவளுக்கு. அவன் வரதுக்குள் சாப்பிட்டு படுத்திடனும் என நினைத்தபடி வேக வேகமாக குளித்து முடித்து வந்தவள் உணவுகளை ஆர்டர் செய்யும் நேரம் காலிங் பெல் அடித்தது. 

அவளின் போன் கை தவறி கீழே விழுந்தது விட்டது. போச்சு வந்துட்டான். அய்யோ வந்துட்டான்! என இதயம் வேகமாக கங்கம் டான்ஸ் ஆடியது. மோயி மோயி ஆங்கில வர்சனில் வளம் வந்து கொண்டிருந்தவள் இப்பொழுது ஹிந்தி வர்சன் போல ஆகி விட்டாள். 

மீண்டும் மீண்டும் காலிங் பெல் தட்ட பட ஒரு வித படபடப்புடன் வெளி காட்டாமல் கதவை திறந்தாள். அவன் தான் அவனே தான்! நீ ரிதம் இன்பா உனக்கு பயம் என்னும் அத்தியாயமே இல்லை. அவன் யாரா இருந்தால் என்ன என கதவை திறந்தாள். 

ஆறடி கிரேக்க சிற்பம் மேல் காற்று உரசி மோதிக் கொண்டு சென்றால் சிலைக்கு சேதாரம் ஆகுமா என்ன? அவனது கேச முடி காற்றில் அசைய, அந்த காக்கி சட்டையில் central bureau of investigation என எழுதபட்ட மத்திய அரசின் அரசாங்க முத்திரை அதற்கு கீழ் சத்ய தேவ் என அவனது பெயரின் மீது பார்வை எதேட்சையாக செல்ல ரிதம் தலையை தாழ்த்தி கொண்டு உள்ளே சென்றாள். அவன் மெதுவாக உள்ளே வந்தான். எதிரில் இருக்கும் சோபாவில அமர்ந்தவன் படுக்கை அறை பக்கம் செல்பவளை க்கும் என தொண்டையை சிரும்பினான். 

கண்களை மூடிய படி தைரியத்தை வரவளைத்தவள் அவன் பக்கம் திரும்பினாள். சத்ய தேவ் கால் மேல் கால் போட்ட படி அவளை பார்த்தான். என்..  என்ன? என காற்றுக்கே கேட்காத குரலில் அவனை பார்த்தாள். சத்ய தேவ் பார்வை ஷூ மீது இருக்க, ஓ நான் இவனுக்கு ஷூ கழட்டி விடனுமா? அய்யோ சிவ சிவா! என்னை இப்படி ஏமாத்தி கழுத்தை அறுத்துட்டல்ல என கைகளை இறுக்கி மடக்கி மூடியவள் வேறு வழி இல்லாமல் அவன் அருகில் சென்றாள். 

சத்ய தேவ் கேசத்தை கோதியவாறு பார்க்க வேறு வழி இல்லாமல் ஷி கழட்டி கீழே போட்டாள். ம்ம் க்கும் என சத்தம் போட்டான் சத்ய தேவ். ஷூ இரண்டையும் வெளியே கொண்டு சென்று சரியாக இடத்தில் வைத்தாள். மீண்டும் அதே தொனியில் அவன் பார்க்க, உதட்டை பிதுக்கிய படி அவன் காலில் இருக்கும் சாக்சை கழட்டி அதை அழுக்கு கூடையில் கொண்டு சென்று போட்டாள். 

உதடு மட்டும் பிதுங்கிய நிலையில் இருக்க, ஹெக் ஹேய்  என சத்தம் வர, ரிதம் பறந்து அவன் முன் வந்தாள். வா வந்து சேர்ட் பட்டனை கழட்டி விடு! கண்ணாடி , பெல்ட் விட்டால் சென்சார் ஜிப் கூட சொல்லி இருப்பான். ரிதம் வாய் விட்டு சொல்லவும் முடிய வில்லை, மெல்லவும் முடியாத நிலை. 

ஹீட்டர் போடு! என்றான். போனாளே போட்டாளே ரிதம். ஹே காபி போட்ரி என சத்ய தேவ் பக்கமிருந்து சத்தம் வர, எதிர்த்து பேச திராணி இல்லை. ம்ம் என பாவமாக உம் கொட்டியவழுக்கு கண்ணம் உப்பி கொண்டது. கிஸ்ஸன் சென்றாள்.

இது என்ன மில்க்? என பார்த்தான். 

பால் தான்! என ரிதம் மெதுவாக கூற 

ஹே பாதாம் மில்க்கா?

அய்யயோ என நாக்கை கடித்தவள். இல்லைங்க அய்யோ மரியாதையா? இவள் வாயிலாகவா? 

என்ன சொன்ன? 

இல்லைங்க என ரிதம் சொல்ல..

ஹான் சத்தமா! 

இல்லைங்க என மீண்டும் சொல்ல.. 

அட அட அட! என்னா இனிமை போ போய் பாதாம் மில்க் ல போடு நான் வீகன்னு தெரியும் தானே! என்றான் Sathya dev. 

ம்ம்ம் சரிங்க என ரிதம் வேகமாக சென்று அவன் சொன்னதை போலவே எடுத்து வந்து நீட்டினாள். 

வாங்கிக் கொண்டவன். வந்து என் தலையை பிடிச்சு அமுக்கி விடு! அப்படியே ஒரு மசாஜ் பண்ணிடு எண்ணைய பதமா காய்ச்சி எடுத்துட்டு வந்து செய் வா! வா! என்றான் கால் மேல் கால் போட்டு கொண்டே.. 

நான் எதுக்கு போவேன் போடா! என ரிதம் தைரியத்தை வர வளைத்துக் கொண்டு கத்தினாள். 

ஓ என சத்ய தேவ் எழுந்து நிற்க..  இல்ல இல்ல இதோ போறேன் என உள்ளே சென்றாள். 

டீவி ஆன் பண்ணு டி! கைய பிடிச்சு விடு டி! தண்ணி கொண்டு வா டி! ஊட்டி விடு டி! உதட்டை துடைத்து விடு டிஇஇ! என அவன் சொல்ல சொல்ல அனைத்தையும் செய்தாள். 

ஹே சவுண்ட கம்மி பண்ணு டிஈஈஈ! ஹே சவுண்ட் கம்மி பண்ணு என சத்தம் அதிகமாக வர, சட்டென அடித்து பிடித்து எழுந்தாள் ரிதம். மேடம் என்னாச்சு என ட்ரைவர் கேட்க.. தன்னை சுற்றிலும் முற்றிலும் பார்த்துக் கொண்டாள். பெங்களூர் டிராபிக் நடுவில் ரிதம் கார். 

அப்போ இதெல்லாம் கனவா? கனவே இவளோ கொடூரமா இருக்கே! அப்போ நிஜம்!! அய்யோ என அவள் புலம்பிக் கொண்டிருக்க, மேடம் என மீண்டும் அழைத்தார் டிரைவர். 

ஒன்னும் இல்ல சார்! என நெஞ்சை நீவி தன்னை ஆசுவாச படுத்தி மூச்சு விட்டாள். அதன் பின் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து சேர்ந்தாள். மேடம்! மேடம்.. 

“ஹான் சொல்லுங்க சார்”

நாளைக்கு காலையில எத்தனை மணிக்கு வரட்டும்? என டிரைவர் கேட்க.. ஒன்பது மணிக்கு வாங்க என சொல்லி விட்டு அவளின் உடமைகளை அனைத்தையும் எடுத்துக் கொண்டவள் அப்பார்ட்மென்டை கண்கள் விரித்து பார்த்தாள். 

இன்னிக்கி என்னல்லாம் பண்ண போரானோ? ஒரு வேளை கனவை விட உக்கிரமாக இருப்பானோ? இருந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல. என புலம்பிய படி அவளின் வீட்டு பக்கம் சென்றாள். லிஃப்ட் ஏறி இறங்கி உள்ளே நுழைந்தாள். அவளின் பொருட்கள் அனைத்தையும் சரியாக எடுத்து வைத்தாள். இனி இஷ்டத்துக்கு தூக்கி போட்டால் யாரு எடுத்து வைப்பா? அவன் ஒன்னும் சும்மா இல்லையே! சென்ட்ரல் கவர்மென்ட் அது கூடவே பில்ட் அப் அதிகமா இருக்கும். என நினைத்தவள் போனை எடுத்து உணவு ஆர்டர் செய்யு போக காலிங் பெல் சத்தம். 

இதயம் வெளியே குதித்து விடும் போல… ஆனால் நிதர்சனம் தான்! உண்மை தான். ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. என பெரு மூச்சை விட்ட படி கதவை திறந்தாள். ஆறடி உயரத்தில் கிரேக்க சிற்பம் ஆனால் காக்கி சட்டை இல்ல..  நார்மல் சேர்ட் பேண்ட் என வந்து நின்றான். 

ரிதம் அப்படியே நிற்க அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே வந்தவன். நேராக குளியலறை சென்றான் குளித்து முடித்து வெளியே வந்தான். அவள் ஒன்றும் புரியாமல் விதிர்வுதிர்த்து பார்த்துக் கொண்டிருக்க, டி என சத்ய தேவ் அவளிடம் கேட்க..

இதோ போ போட்டு வரேன் என அவள் எழுந்தாள். 

போட தெரியுமா? உனக்கு என சத்ய தேவ் கேட்க.. அவளிடம் பதில் இல்லை. ஒரு சில நொடிகளில் அவளுக்கும் அவனுக்கும் சேர்த்து கொண்டு வந்தான். 

இப்பொழுது கனவில் இருக்கிறோமா? இல்லை நிஜத்தில் இப்படி நடக்கிறதா? என உள்ளுக்குள் எதோ ஒரு குடைச்சல். அருகில் வந்தான் அவளிடம் கோப்பையை நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் வேகமாக பருகினாள். 

எனக்கு கொஞ்சம் தலை வலி என சத்ய தேவ் சொல்ல, தைலம் தேய்ச்சு மசாஜ் பண்ணி வுடனுமா? என ரிதம் எழுந்து கொண்டாள். 

அவளை மேலும் கீழும் பார்த்தான் சக்தி. ரிதம் முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மட்டும் தான் இருந்தது. எப்பொழுது மாறுவாள்? என அவளுக்கே தெரியாது. 

என்னாச்சு எதுவும் பிரச்சனையா? இப்படி எல்லாம் நீ சொல்ற ஆள் இல்லையே! என் அம்மா உன் கிட்ட இந்த மாதிரி சொன்னால் நீ செய்யனும்னு அவசியம் இல்ல புரியுதா?  என சொன்னான் சத்ய தேவ். 

இல்ல என தலையாட்டினாள் ரிதம். 

இன்னிக்கி நைட்டு சிம்பிளா செஞ்சுக்களாம்ன்னு சொல்ல வந்தேன். உனக்கு நல்லா சாப்பிடணும்ன்னா நீ ஆர்டர் பண்ணிக்கோ! என்றான் சத்ய தேவ். 

ரிதம் எதுவும் சொல்லாமல் நேராக அவளது அறைக்கு சென்று விட்டாள். மண்டையே வெடித்து விடும் அளவுக்கு ஆனது. என்ன இவன் இப்படி இருக்கான்? என அவளுக்கே தோன்றியது. உடனே போன் எடுத்து வீணாவுக்கு அழைத்தாள். 

ஹலோ இன்னிக்கி தான் நான் நியாபகம் வரேனா? தேவ் கூட ஜாலியா இருக்க போல என வீணா கேட்க, ரிதம் நொந்து போய் நீ ஏன் டி பத்தாத குறைக்கு அனைத்தையும் கூற ஆரம்பித்தாள். கேட்க கேட்க வீணாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. நீ எதுக்கு டி அவனை கல்யாணம் பண்ண? பேசாம அவனை கொடுமை பண்றத விட்டுட்டு அவனை விட்டு பிரிஞ்சிடு! உன் மண்டையில அறிவு இருக்கா இல்லையா? என கண்டபடி பேசினாள். 

இப்போ என்ன? நான் அவனை கொடுமை பண்றேன் அதான! நான் இப்போவே அவனை வேணாம்னு டைவர்ஸ் பண்றேன். என கோபமாக ரிதம் போனை வைத்தாள். அங்கும் இங்கும் நடந்தாள். இதோ இப்பவே போறேன் அவன் கிட்ட சொல்லியே ஆகனும். என வேகமாக வெளியே சென்றாள். 

சத்ய தேவ் சமைத்து முடித்தபடி சோர்வுடன் கைகளை முறுக்கியவன். பெரு மூச்சுடன் திரும்ப, உன் கிட்ட முக்கியமா பேசணும்! என ரிதமின் கால் பரபரத்தது. கண்கள் அலைப்புறுதலுடன் பார்த்தாள். 

என்ன விசயம் சொல்லு! என சத்ய தேவ் அவளை பார்க்க, நீ வந்து…  நம்ம..  நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்திடுறேன். என்றாள் சம்மதமே இல்லாமல். 

என்ன திடீர்னு? என சத்ய தேவ் கேட்க, அது அது வந்து என அவளின் உதடுகள் தந்தி அடித்தது. சொல்லு! என்ன திடீர்னு? என அவன் கேட்டுக் கொண்டே அருகில் நெருங்கினான். 

அவள் யோசித்தபடி அவனை பார்க்க, அதற்குள் அவன் அருகில் வந்திருந்தவன் வளைத்து பிடித்து தோல் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அறைக்கு விரைந்தான் சத்ய தேவ். 

ஹக் என துள்ளியவள். டேய் விட்ரா!! என்ன பண்ற? என ரிதம் கேட்க… அப்படியே தூக்கி வந்து படுக்கையில் கிடத்தியவன். அவள் மேல் விழுந்தான் மொத்த எடையுடன் சக்தி என அவள் பேச வர,  ம்ம்ம் என ஒரு உறுமல் இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டவன் விவாகரத்து கேட்ட உதட்டை விழுங்கிக் கொண்டிருந்தான். முதலில் திண்டாடி போனவள். அதன் பின் ஒத்துழைக்க ஆரம்பித்தாள். 

ஒவ்வொரு முத்தத்துக்கும் இடைவெளியில் நீ எது பண்ணாலும் எனக்கு கோபமே வராது. என்னை விட்டு போறேன்னு சொன்னால் விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும்.  அப்போவும் கோப பட மாட்டேன் உணக்குள்ளயே சமாதானம் தேடுவேன். என்றவன் அவளின் முயல் குட்டியை முட்டி அழுத்தமாக தலையை தேய்த்தான். 

ரிதம் கண்களை இறுக்கி மூடியவள் அவனிடம் இருந்து விலக முடியாமல் திணறினாள். மெது மெதுவாக அவளை ஊடுறுவியவன். இதழ் கொய்து இடை வருடி கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் தஞ்சம் அடைய துகில் உரிக்க ஆரம்பித்தான். அவளின் சட்டையை விடுத்து இடையில் வழுக்கி கொண்டு சென்ற விரல்கள் மெல்ல மெல்ல கீழிறங்க.. சட்டென அடி வயிற்றில் மாற்றம். 

அது அவளின் முகத்தில் அப்பட்டமாக வெளிபடுத்த சக்தி நகரு..  என.. எனக்கு பீரியட்ஸ் என அவளின் முகம் வியர்த்து போக.. சட்டென எழுந்து கொண்டவன் நெற்றியிலும் உதட்டிலும் மாறி மாறி முத்தமிட்டான். 

குளிக்கிறயா? ஹீட்டர் போடவா? ஸ்டோமக் பெயின் வருமா? இப்போ என்ன சாப்பிட வேணும்? என அவளை வளைத்து வளைத்து மூச்சடைக்க செய்தான் முன்பு முத்தத்தில் இப்பொழுது மூச்சு விடாத சொற்களில். மறுபடியும் என்னால குளிக்க முடியாது. எனக்கு கால் வலிக்கும். நீ போ எனக்கு குட்டி வேலை இருக்கு. நீ தயவு செஞ்சு என்னை டிஸ்டப் பண்ணாத என மெதுவாக எழுந்தாள். 

ஆனால் அப்பொழுதும் விட வில்லை அவன். இதோ வந்து விட்டான். ரிதம் வயிற்றை பிடித்துக் கொண்டு சோர்வுடன் பார்க்க, வயிற்றை நீவி விட வந்து விட்டான். 

ரிதம்…? 

EPISODE 179

எங்கே வலிக்குது? என சத்ய தேவ் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் நெருங்க.. எதுக்கு டா இப்படி என்னை கொடுமை பண்ற? இப்படி நச்சு பண்ணாத என தலையை பிடித்த படி கூற.. விடுவானா அவன். பொறுமையின் சிகரம் அவளை மிகவும் பொறுமையாக கையாண்டான். சரி இதை குடி! இப்போ உனக்கு என்ன சாப்பிடணும்? என அவளிடம் மிகவும் பொறுமையாக நடந்தான். 

ரிதம் அவனை முறைத்த படி போனை நோண்டினாள். உனக்கு த்ரீ டேஸ் லீவ் சொல்லிடறேன். என போனை நோண்டிக் கொண்டே பதில் கூறினான். ரிதம் அவனை ஓர கண்களால் பார்த்தாள்‌. 

என்ன அப்படி பார்க்கிற?  எதுவும் கேட்கணுமா?  என்று சாதாரணமாக அவளைப் பார்க்காமலேயே பேசினான்.

அவள் அப்பட்டமான அதிர்ச்சியுடன் எப்படி? எப்படி? உனக்கு தெரியும்?  நான் உன்ன பார்க்கிறேன்ன்னு என்று கேட்க,  அதெல்லாம் எனக்கு தெரியும்.  என்ன விஷயம் சொல்லு?  என்றான் இப்பொழுது அவளை பார்த்துக் கொண்டே. 

ரிதம் தலையை குனிந்து கொண்டே எப்படி நீ சிபிஐ ஆபீஸரா வந்திருக்க? எப்படி நீ போலீஸ்? எனக்கு உன்னோட டிஎஸ்பி ஹிஸ்டரி தெரியணும் என்று உதட்டை மடித்தபடி கேட்டாள். 

அதற்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலளித்தான். ஹிஸ்டரி தெரிஞ்ச என்ன பண்ண போற? நீ எப்பவும் போல பண்ற வேலையும் பண்ணு தேவையில்லாதது நினைச்சு மனசு போட்டு குழப்பிக்காத என்று கூறினான் சத்தியதே 

ரிதம் அவனைப் பார்க்க வழக்கம்போல என்னை திட்டு இந்த கன்னத்தில் அடி! அந்த அடியோடு சேர்த்து நாலு வேற மாதிரியான அடியை கூட கொடு. 

ஏன் இந்த கன்னத்தில் கூட அடி  வேணுமா?  என்று அவள் புரியாமல் கேட்க

கன்னத்தில விட உதட்டுல என கண்களை சிமிட்டிக் கொண்டே கூறினான். ரிதம் தலையைப் பிடித்தபடி கீழே குனிந்து கொள்ள சத்யதேவ் நாக்கை கன்னத்துக்குள் அடக்கிக் கொண்டே,  என்ன எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்திருக்கிற?  நடிக்காதடி!  புதுசா முத்தம் கொடுக்கிற மாதிரி சீன் போடுற?  நீயா எத்தனை தடவை வந்து கொடுத்திருக்க?

நான்!!  நானெல்லாம் உனக்கு ஒன்னும் கொடுத்ததில்லை.  என ரிதம் முடியை காதுக்கு ஒதுக்க…  இதை காதுல பூ சுத்திட்டு எங்க வீட்ல மிதுன் தேவ்ன்னு  ஒருத்தன் உட்கார்ந்து இருப்பான்.  அவன் கிட்ட போய் சொல்லு. என்று சத்திய தேவ் சிரித்தான். 

டேய் என்னடா?  நான் எப்ப உனக்கு முத்தம் கொடுத்தேன்?  என்று ரிதம் அவனை பார்க்க.. 

இப்படி பச்சப் பொய் சொல்லிட்டு திரியாத!  நீயா தானே என் மேல வந்து வந்து விழுந்த?  இதோ இங்க ஏறி  என அவனது இடுப்பை காட்டினான். சத்தியதேவ். அப்படியே  அவளை அப்பட்டமாக பார்த்து ரசித்தான். 

உனக்கு வெட்கமே இல்லையா? என்ற ரிதம் கேட்க,  முத்தம் கொடுக்கறதுக்கு எதுக்கு வெட்கப்படனும்?  அதுக்கு எல்லாம் வெட்கப்பட்டா நாளைக்கு எப்படி என்னை மாதிரி அமைதியான ஒரு குழந்தை வரும்?  அப்போ நான் அடாவடின்னு  சொல்ல வரியா? 

இதுல என்ன சந்தேகம் என்று சத்யதேவ் கேட்க..  டேய் பேச்சை மாத்தாத!  நான் உன்னை எவ்வளவு அவமானப்படுத்துறன்? உன்னை எவ்வளவு திட்டுறன்,  வேலைக்காரன் மாதிரி ட்ரீட் பண்றேன்.  அப்பவும் உனக்கு சொரனையே இல்லையாடா? என்று ரிதம் கேட்டாள்.

எனக்கு நிறையவே சொரணை இருக்கே!  நீ தொட்டா எனக்கு சொரணை தானா வரும்.  சில விஷயம் சுரந்து கூட வரும். என புன்னகை தான் ரிதம் அவனை புரியாமல் பார்க்க..  வியர்வையை சொன்னேன் என்றவன் மனதில் தெரியாம இருக்கிறது நல்லது என்று சிரித்துக் கொண்டான். 

“ஹே!”

அதுதான் பார்த்தேனே! உன்னோட சொரணை எவ்வளவு அதிகமா இருக்குன்னு!  ஒவ்வொரு நிமிஷமும் அப்படியே தைய தக்கான்னு குதிச்சுக்கிட்டே இருக்க? அது தான் உன் கிட்ட இருந்து கேஸ் இப்போ என் கிட்ட வந்திருக்கு என்றான் சத்ய தேவ். 

உடனே அவளுக்கு கோபம் தலைக்கு ஏறிட, ஹே ஹே சும்மா குதிக்காத. முதல்ல உன்னோட வேலையில் பொறுமை வேணும்.  எப்போ பாரு உன் கிட்ட அவசரம் மட்டும் தான் இருக்கு. உன்னோட சொரணை உன்னை ரொம்ப துள்ள வைக்கிது போல. அதனால் உனக்கு அவமானம் மட்டும் தான் கிடைச்சிருக்கு. என்னைக்கு நீ ஒரு விசயத்தை பொறுமையா ஹாண்டில் பண்றயோ அப்போ தான் எல்லாமே சரியா ஒர்க் அவுட் ஆகும். எல்லா விஷயத்திலும் பொறுமை வேணும் டாக்டர் வேகமா ஆப்ரேஷன் பண்ணா என்ன நடக்கும் வண்டி ஓட்டுறவன் இன்னும் கொஞ்சம் வேகமா ஓட்டினால் என்ன நடக்கும் அது போல தான் போலீஸ் ரொம்ப பொறுமையா இருக்கணும் அப்பதான் திருடனை பிடிக்க முடியும் என்று கிளாஸ் எடுத்தான் சத்திய தேவ். 

உடனே ரிதம் இதுதான் சாக்கு என இதே மாதிரி எல்லா  பொண்ணுங்க கிட்டயும் பொறுமையா இருப்பியா என்ன? எல்லா பொண்ணுங்க கிட்டயும் என்று அவள் கேட்க..  சத்யதேவ் யோசித்தான். 

நானும் தான் உனக்காக கிட்டத்தட்ட 25 வருஷமா பொறுமையா காத்துக்கிட்டு இருந்தென். இருக்கேன்.  உன்கிட்ட காதலை சொன்னேன் நீ தான் என்ன காதலிக்கலைன்னு சொல்லிட்டல்ல உன்னோட அட்வைஸ் மயிர் எல்லாம் எனக்கு வேண்டாம் எடுத்துட்டு போடா. 

சத்யதேவ் அவளை ஆழ்ந்து பார்த்தவன் ஓ பொறுமையா இருந்தியா?  நீ எப்போ என்ன லவ் பண்றேன்னு சொன்ன?  இதுவரைக்கும்  எனக்கு ஒரு புரபோஸ் பண்ணி இருப்பியா ப்ரொபோஸ் பண்ணிருப்பியா?

ம்ம் அப்போ நீ என்ன லவ் பண்றேன்னு சொல்லிடுவியா?  அதுவும் எல்லாரும் முன்னாடியும் என்னை காதலிக்கிறான்னு சொல்லணும். சொல்லுவியா என்று ரிதம் ஆர்வத்துடன் கேட்க.. 

காதலிச்சு என்ன பண்ண போறோம்?  அடுத்த கட்டம் என்ன என்று சத்தி கேட்டான். காதலிச்சா அடுத்து என்ன பண்ண போறோம் என்று ரிதம் யோசிக்க..  சொல்லு காதலிச்சா என்ன பண்ணுவோம் என்று சத்தி  கேட்டான். 

கல்யாணம் பண்ணிப்போம்.. 

சரி அதுக்கப்புறம் வேற என்ன?  என்று ரிதம் யோசிக்க.. காதலை சொல்லுவோம் கல்யாணம் பண்ணிப்போம் குழந்தை பெத்துப்போம் கரெக்டா! 

“சரி”

அதே தான் இப்போ  நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட! நீ என்னை காதலிக்கிற! நம்ம ஸ்ட்ரைட்டா குழந்தை பெத்துக்கலாமே!  அத பத்தி நீ என்ன நினைக்கிற என்று சத்யதேவ் கேட்க..

ரிதம் அங்கு இருக்கும் தலயணையை எடுத்து அவன் மேல் வீசினாள் . இப்போ என்னடி தப்பா சொல்லிட்டேன். அதுதான் நீ என்ன லவ் பண்றியே! அது போதாதா!

நீ என்னை லவ்வே பண்ண மாட்டியா ? என ரிதம் கேட்க.. ம்ம் அது how to tell you? ம்ம்.. 

ஹே மூடிட்டு சொல்லு! என ரிதம் அவனை பார்க்க, முடியாது. என கண்ணை சிமட்டிய படி கூறினான். 

ரிதம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தவள். வேகமாக அவளது போனை எடுத்து அனைத்திலும் ஸ்டேட்டஸ் மாற்றினாள். 

என்ன பண்ற? 

சிங்கிள்ன்னு போடுறேன். யாரும் என் கூட டேட்டிங் வந்தால் அப்படியே try பண்ணலாம்ன்னுதான் என்றாள். அப்படியா எவன் வரான்னு நானும் பார்க்கிறேன் என சத்ய தேவ் அமைதியாக அவளை பார்த்தான். 

ஹி ஹி ஹி! என ரிதம் கண்ணகுளி தெரிய சிரிக்க, என்னா டி!! என கோபமாக கேட்டான். 

பாரேன் insta ல இப்போவே ப்ளூ டிக்கு.. இதோ face book ல அதுக்கும் மேல, X ல கூட ஜஸ்ட் கொஞ்ச மினிசத்துல அதிகம் என்றாள் ரிதம். 

அவளின் மூக்கை அழுத்தி பிடித்து இழுத்தவன் நிமிசம்.. நிமிசம்.. என்றான். அட போடா! என ரிதம் ஆர்வத்துடன் chat செய்ய ஆரம்பித்தாள். சத்ய தேவ் புன்னகையுடன் கடந்து விட்டான். 

அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்று. அடுத்த இரண்டு நாட்கள் ரெஸ்ட் முடித்து ஜாயின்ட் ஆகி விட்டாள். தொடர்ந்து அவளின் எண்ணுக்கு மெஸேஜ் வந்தது. யாரென பார்க்க காஜிஸ் என நிறைய நபர்கள் செய்திகளில் நிறைந்து இருந்தார்கள். 

பாதி பேருக்கு நேரடியாக கெட்ட வார்த்தையை தட்டி விட்டவள் சைபர் கிரைமுக்கு நிறைய எண்களை அனுப்பி விட்டாள். சத்ய தேவ் ஸ்டேசன் வந்து விட்டான். கூடவே ஒரு போலிஸசை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றான். அவளுக்கு உதவி செய்ய ஒன்பது கைகள், ஒன்று ஹரிணி, இன்னொரு இரட்டை கைகள் சோனா சோனாலி என இருவரும் பறந்து பறந்து உதவி செய்து கொண்டிருந்தார்கள். 

ரிதம் அவனை கண்டு கொள்ளாமல் போனில் சேட் செய்ய அகிலன் IPS என profileலில் இருந்து செய்தி வந்தது. Hi… Hi.. thumbs up என செய்திகள் வரிசை கட்டி வர, ஹே ஹாய் என தட்டி விட்டாள். எங்கே இருக்கீங்க? எப்டி இருக்கீங்க தமிழா? என கேள்வி வர, ஹான் நான் ஸ்டேசன்ல இருக்கேன் என அனுப்பினாள். 

எந்த ஸ்டேசன்? என அகிலன் கேட்க.. ரிதம் அனுப்பி விட்டாள். ஓ கூல் நீங்க ரிதம் இன்ப ராகவன் கரெக்ட்? என அவன் தட்டி விட ஆமா. இப்போ லஞ்ச் டைம் பாய் என ரிதம் தட்டி விட்டு உணவு சாப்பிட கிளம்பினாள். அதற்கு முன் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வெளியே வர சார் அகிலன் சார் வந்திருக்கார். அகிலன் சாரு டி என அங்கு கொஞ்சம் கலவரம் கிளம்ப, ரிதம் முகத்தை துடைத்த படி வெளியே வர ஹே ஹாய் ஐம் அகிலன் என புன்னகையுடன் நின்றான். 

நீ..  நீங்க அதுக்குள்ள இங்கே எங்கே? என ரிதம் பார்க்க, லஞ்ச் போலாமா! என கேட்டுக் கொண்டே வந்தான். அது என நெற்றியை தேய்த்தவள்.  இவன் வேற தெரியாம மெஸேஜ் பண்ணிட்டேன் எப்போ டா இடம் காலி ஆகுண்ணு கிடக்கரானுங்க! என நினைத்தவள். எனக்கு வேலை இருக்கே என சிரிப்புடன் கூறினாள். 

என்ன மேடம் என சிரிப்புடன் அகிலன் கேட்க.. ஒன்னும் இல்ல என தடுமாறினாள். வாங்க அது தான் ஸ்டேசன் ல சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில்ஸ் எல்லாருமே இருக்காங்களே! மினி லஞ்ச் தானே! வாங்க ரிதம் என முகமெல்லாம் புன்னகையுடன் அழைத்தான். 

ரிதம் உன் கிட்ட இந்த details என சொல்லிக் கொண்டே வந்த சத்ய தேவ் அங்கு நின்றிருந்தவனை பார்த்ததும் அமைதி ஆகி விட்டான். நீயா! என அகிலன் தெனாவட்டாக பார்க்க, போடா என சக்தியின் பார்வை ரிதமை ஊடுருவ சாரி மிஸ்டர் சத்ய தேவ் இது லஞ்ச் டைம் நான் போயிட்டு வந்துடுறேன். அதுக்கு அப்புறம் உங்களுக்கு தேவையான details எல்லாம் share பண்றேன் என நடந்தாள். 

அகிலன் கண்ணாடியை போட்ட படி முன்னால நடந்தவன். எகத்தாள பார்வையுடன் சென்று விட்டான். சத்ய தேவ் அதே இடத்தில் நின்றான். எதிரில் ஹரிணி வர, வந்துட்டா அவனுக்கு ஒத்து என அகிலன் சொல்லி விட்டு போக.. உங்களுக்கு தெரியுமா அகிலன்? என ரிதம் கேட்க.. தெரியுமே! ஹரிணி க்ரைம் பிரான்ச், இந்த சத்ய தேவ் சென்ட்ரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன். என ஜீப்பில் ஏறினான். 

ரிதம் புருவத்தை உயர்த்திய படி அவனுடன் ஜீப்பில் ஏறினாள். 

என்ன டா மயிரு பண்ணிட்டு இருக்க? அவள் எவ்ளோ தைரியம் இருந்தால் அவன் கூட ஜீப்பில் போவா! உன்னை ரொம்ப கேவலமா நடந்துறாலாமே பொழுக்குண்ணு ஒன்னு விட வேண்டியது தானே! என நிதின் கண்ட படி போனில் திட்டிக் கொண்டிருந்தான். 

சத்ய தேவ் சிரித்துக் கொண்டே விடு டா அடிச்சிட்டு போறா! என்றான். 

எனக்கு போன் பண்ணா! உன்னை பத்தி பொரிஞ்சு தள்ளினாள் என்றான் நிதின். என்ன சொன்னா? என சத்ய தேவ் சிரித்த படி கேட்க, டேய் அவளுக்கு நீ ரொம்ப ரொம்ப இடம் கொடுக்கிற? கொஞ்சம் தட்டி வை டா! என நிதின் கூற, எங்கே போயிட போறா! அவளுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கா! என்றான் சத்ய தேவ். 

நீ திருந்த மாட்ட! என சொல்லி போனை வைத்தான் நிதின். சத்ய தேவ் வழக்கம் போல அவனது வேலையை பார்க்க ஆரம்பித்தான். அனைத்தும் சுமூகமாகவே சென்றது. ரிதம் சாயங்காலம் தாமதமாகவே வீட்டுக்கு வந்தாள். 

வழக்கம் போல அவனிடம் எந்த ஒரு எதிர் வினையும் இல்லை. இரவு உணவு அனைத்தும் தயாராக இருக்க, எனக்கு வேணாம். நான் வெளியவே சாப்பிட்டேன் என்றாள் ரிதம். 

நான் உனக்கு சமைக்கவே இல்லையே! என்பது போல சத்ய தேவ் பார்த்தான். இதில் ஏமார்ந்து போனது ரிதம் தான். ஆனால் வெளி காட்டி கொள்ள வில்லை. அவன் முன் வந்து அகிலன் கிட்ட போன் பேசினாள். 

வீட்டின் கதவு தட்ட பட சத்ய தேவ் சென்று கதவை திறந்தான். அங்கே சோனா மற்றும் சோனாலி இருவரும் நின்றிருக்க,  உள்ளே வாங்க என்பது போல் சைகை செய்தான்..

ரிதம் போன் பேசிக் கண்டே வந்தவள் அந்த இரட்டை சகோதரிகளை பார்த்ததும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.  இதுதான் தன் பொருளை யாராவது பார்த்துவிட்டாலோ,  பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டாலோ, தாங்க முடியாது. ஆனால் என்ன செய்ய?  இந்த சக்தி  என்ன செய்தாலும் அந்த ஐ லவ் யூ டி! உன்னை பிடிச்சிருக்கு டி! உன்ன லவ் பண்றேன் டி! நீ தாண்டி என் இதயத்தோட ரிதமிக் சவுண்டு அப்படின்னு சொல்லவே மாட்டான். 

ரிதம் பற்களை கடித்த படி சோபாவில் அமர்ந்திருக்க,  சத்தியதேவ் அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

பாஸ் நீங்க சொன்ன மாதிரி அந்த பிளட் சாம்பிள்ஸ் எல்லாம் எடுத்தாச்சு.  அப்புறம் இந்த வீக் பெங்களூர்ல இருக்க சாட்டர்டே நைட் கிளப்ல பாசஸ் வாங்க சொன்னிங்களே! அதுவும் வாங்கியாச்சு. டூ பாசஸ் பாஸ் என சோனா மற்றும் சோனாலி இருவரும் மாறி மாறி பதில் கூறினார்கள். 

சூப்பர் என்று சொன்ன சத்திய தேவ்  அந்த பிளட் சாம்பிள்ஸ் அனைத்தையும் வாங்கி பார்த்தான்.  இதுவரைக்கும் உங்க பாஸ் அப்படி என்னத்த கழட்டி கண்டுபிடிச்சிட்டான்? என்று ரிதம்  மரியாதை இல்லாமல் பேச,  சோனா மற்றும் சோனாலி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சத்திய தேவ்வை தயக்கத்துடன் பார்த்தார்கள்.  சத்தி  புன்னகைத்தபடி ரிதமை  எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். அதே போல  அவளுக்கு அவங்க அம்மாவோட வயித்துல  இருக்கும்போதே தெரியும்.  அந்த அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு என்று கண்ணை சிமிட்டிய படி கூறினான்.

அப்படியா பாஸ் நீங்க ரெண்டு பேரும் ரிலேஷனா என்று கேட்க, 

ரிதம் நாக்கை சப்பு கொட்டி  கேட்டதுக்கு நான்  கேட்டதுக்கு பதில் சொல்லுங்க!  அப்படி என்ன கழட்டி கண்டுபிடிச்சிட்டீங்க மூணு பேரும்? சேர்ந்து என கேட்க..  மூணு பேரும் சேர்ந்து நிறைய பண்றோம் என்று கூறினான்.

ரிதம் முறைத்தபடி பார்க்க உடனே அவன் நீ ஒரு ஆதாரத்தை தானே தொலைச்சிட்டு நின்ன.  கிட்டத்தட்ட அந்த பொண்ணுங்களோட கொலை கேஸ்ல நான் ஒரு ஊர் முழுக்க ஆதாரத்தை ரெடி பண்ணி இருக்கேன் என்று கூறினான்.

 என்ன என்று ரிதம் அதிர்ச்சியுடன் கேட்க,  ஆமா அந்த அக்ரஹாரம் பக்கத்துல இருக்க எல்லா லேடிஸோட பிளட் சாம்பிள்சயும் எடுத்து செக் பண்ணதுல மோஸ்ட்லி எல்லாமே ட்ரக்கோட அளவு அவங்களோட ரத்தத்துல ரொம்ப அதிகமா மிக்ஸ் ஆகி இருக்குன்னு கண்டுபிடிக்கப்பட்டிருக்கு என்றான்.

ரிதம் அவனை  அதிர்ச்சியுடன் பார்க்க அவ்வளவுதான்… சக்தி மேலும்  அடுத்ததா நீதான சொன்ன!  இதுல அந்த ஆக்டரோட தங்கச்சி சுருதி அவளுக்கு சம்பந்தம் இருக்குனு,  அடுத்து அவளை நேக்கா பிடிக்க போறேன்.  கொஞ்சம் கொஞ்சமா மெது மெதுவா எங்களுடைய கேஸ் விஷயம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு.  சீக்கிரமா சால்வ் பண்ணிடுவேன் என்று  உத்வேகத்துடன் கூறினான். ஆமா அதுக்காக தான் நாங்களும் பாஸ் கூட அசிஸ்டெனடா ஜாயின் பண்ணி இருக்கோம். என்றார்கள் இரட்டை பெண்கள். 

அப்ப நீங்க ரெண்டு பேரும் போலீஸ் வேலைய பாக்கலையா?  இவன் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கீங்களா?  என்று  ரிதம் பற்களை கடித்த படி கேட்க,  அது என்ன ரிதம் இப்படி பேசிட்ட!  காலையில டியூட்டி போயிடுவோம்! 

அப்போ நைட் என்று ரிதம் முறைத்தபடி கேட்க, 

அது அப்படி இல்ல ஷிப்ட் எப்படி இருக்கோ!  அதை பொறுத்து நடுவுல கேப் கிடைச்சாலும் இந்த கேசையும் நாங்க சால்வ் பண்றோம்.  ஏன்னா நாங்க பாஸ்கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும் என்று இரு பெண்களும் கூறினார்கள். 

சரி இப்ப எதுக்கு வந்திருக்கீங்க என்று ரிதம் கேட்க,  இந்த கேஸ் விஷயமா பேசறதுக்கு தான்  சொல்லிட்டு bossஅ பாத்துட்டு போலாம்னு என்று இரு பெண்களும் முடியை காதுக்கு ஒதுக்கினார்கள். 

ரிதம் கைகளை முறுக்கிய படி அவர்களை பார்க்க, உங்களுக்காக தான் பாதாம் பால்ல பால் கொழுக்கட்டை பண்ணி இருக்கேன் சாப்பிடுறீங்களா என்று சத்திய தேவ் கேட்க,  பாதாம் பால்லயா? ஆமால்ல நீங்க வீகன்  தானே என்று சோனா கேட்க.. 

ஆமா சாப்பிடுறீங்களா பால் கொழுக்கட்டை என்று சத்திய தேவ் உள்ளே சென்றான்.   ஆம் பாஸ் என்று புன்னகையுடன் கூறினார்கள் இரு பெண்களும்.  ரிதமுக்கு அவர்களின்  பேச்சுக்கள் அனைத்தும் கடுப்பாக இருக்க,  எனக்கு தூக்கம் வருது என்று கூறினாள். சக்தி அவளை பார்த்து  போய் தூங்கு என்று பாசத்துடன் கூறினான். 

ரிதம் அவனை முறைத்த படி எவ்ளோ கொழுப்பு? தினமும் அவளை அணைத்து தூங்குபவன்.  இன்று நீயே போய் தூங்கு என்கிறானே?  எல்லாம் இந்த மேனா மினுக்கிங்க வந்ததும் பேச்ச மாத்துறான்.  இவனோட மனசுல அப்படி என்ன நினைச்சுட்டு இருக்கான்?  என்று அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. அந்த நேரம் அகிலனிடமிருந்து போன் வர,

ரிதம் போனை பார்த்தவள். உடனே சரி எனக்கு தூக்கம் வரல நான் அகிலன் கிட்ட பேசிட்டு வரேன் என்று அவள் போனை எடுக்க.. 

அகிலன்  ஐபிஎஸ் சாரா அவரு ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு என்று கேள்விப்பட்டேனே என்று சோனா கூற..  அப்படியா ஆனா என்கிட்ட ரொம்ப ஸ்வீட்டா பேசுவாரு என்று ரிதம் முடியை  காதுக்கு ஒதுக்கினாள். 

 ஆனால் சத்யதேவ் முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அவர்கள் இரவு இன்னொரு படுக்கையறையில் தங்கிக் கொள்ள,  சத்யதேவ் ஹாலில் தூங்கினான். அடுத்த நாள் காலை கேஸ் விஷயமாக துப்பு துலக்க கிளம்பி விட்டார்கள்.  ரிதமுக்கு தான் மிகவும் கடுப்பாக இருந்தது.  எந்த ஒரு விஷயத்திலும் சத்தியதேவ் அவளை சேர்த்துக் கொள்ளவே இல்லை.  கோபம் கோபமாக வந்தது. 

அந்த நேரம் பார்த்து அகிலன் அவளுக்கு அழைத்தான். சொல்லுங்க என்று அவள் பதிலளிக்க..  இந்த வீக் எண்ட் சாட்டர்டே ஒரு பர்த்டே பார்ட்டி இருக்கு. பப்புக்கு வர முடியுமா?  என்று அவன் கேட்க ஓ தாராளமா என்று உடனே பதில் அளித்தாள்‌. அது மட்டுமா ரிதம் அவனுடன் பேசும்போது ஸ்பீக்கரில் போட்டிருந்தாள். சத்யதேவ் கேட்க வேண்டும் என்று.

ஆனால் அவன்?

ஆனால் அவன் அவளைக் கண்டு கொண்டான் இல்லை சென்று விட்டான். 

இவனோட மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கான்? என்னை   ஏதாவது கேள்வி கேட்கிறானா? மலை மாடு, தன்ட மாடு, எருமை மாடு! ஹிப்போபாட்டமஸ்!  இவனுக்கு பொசசிவ்னசே வராதா?  ஏன் இப்படி பண்றான்?  என்று கோபம் கோபமாக வந்தது. 

 ஆனால் ரிதம் அங்குதானே சத்திய தேவ்வின் இன்னொரு அவதாரத்தை ரிதம் பார்த்தாள்‌. 

வருவான். 

EPISODE 180

சத்ய தேவ் ஸ்டேஷனில் இருக்கும் ரெக்கார்ட்ஸ் ரூமில் இன்னும் சில தகவல்கள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் அங்கு வேலை செய்யும் காவலாலிகளின் கிசுகிசுக்கள் காதில் விழுந்தது. ஹே இப்போவெல்லாம் நம்ம ACP மேடமை அகிலன் சார் தான் வந்து பிக் அப் பண்றாரு. லஞ்ச் கூட ரெண்டு பேரும் சேர்ந்து தான் தெரியுமா? என அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அந்த நொடியே சக்தியின் முகத்தில் அத்தனை மாற்றம். உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த கோப்புக்களை அழுத்தம் கொடுத்து பிடித்தான். 

அப்பொழுது தான் உணவுகளை முடித்து விட்டு அகிலன் அவளை கொண்டு வந்து விட்டான். இருவரும் சிரித்து பேசிய படி சிறிது நேரம் இருந்து விட்டு அவன் கிளம்பினான். ரிதம் உள்ளே வந்தவள் நேராக அவளின் இடத்துக்கு சென்று அமர்ந்தாள். ரெக்கார்ட் ரூமில் அசைவு தெரிய தண்ணீர் பாட்டிலை எடுத்தவள் அதை பருகிய படி நேராக அந்த பக்கம் சென்றாள். தன் கணவன் தான்! வெள்ளை சட்டை காக்கி பேன்ட் என கம்பீரமாக எதையோ தீவிரமாக தேடிக் கொண்டும்ம் குறிப்புகள் எடுத்துக் கொண்டும் இருந்தான்.  வெள்ளை சட்டை அவனது தோற்றத்துக்கு எடுப்பாக இருந்தது. அவனது தலை முடியில் இருந்து முத்து போல வழிந்து வந்த வியர்வை துளி அப்படியே மெல்ல மெல்ல பின்  கழுத்தில் இறங்கி காணாமல் போக, உள்ளுக்குள் எது எதோ செய்தது. சத்ய தேவ் சும்மா நின்றாலே அழகு தான். அவனை வளைத்து பிடித்து முத்தமிட தோன்றாமல் இல்லை. ஆனால் வீம்பு வீராப்பு திமிர் அவனுக்கு இருக்கும் போது அதில் பாதியாவது எனக்கும் இருக்கும் என்பதை போல ரிதம் நின்றாள். 

சார் இதுவா என லேடி கான்ஸ்டபிள்ஸ் மற்றும் போதாத குறைக்கு சோனா, சோனாலி, சுண்டெளிகள் இரண்டு, தம்பி பொண்டாட்டி ஹரிணி என எத்தனை பெண்கள் இவனை வளைத்து போட சுற்றுகிறார்கள்? இவனை இப்படியே விட கூடாது. மீண்டும் டைவர்ஸ் கேட்க வேண்டும் அப்போ தான் என் பின்னால் கெஞ்சுவான். என்னை வளைத்து பிடித்து முத்தமிடுவான் என உள்ளுக்குள் குதுகாலமானவள்  வேகமாக அவனருகில் சென்றாள் ரிதம். 

க்கும் என தொண்டையை கணைக்க அந்த உதவி பெண்கள் இருவரும் பதட்டத்துடன் ஓடி விட்டார்கள். சத்ய தேவ் அவளை கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் மீதிருந்து வீசும் நலங்கு மாவின் வாசம் அவளை கட்டி இழுத்தது. கசங்காமல் கத்தி போல இருக்கும் சட்டையை கசக்க தோன்றியது. ஃபார்மல் சேர்ட்ல இத்தனை அழகா இருக்கானே! என பெரு மூச்சை விட்டாள். 

சத்ய தேவ்வின் கூரான விழிகள் கோப்பின் மேல் இருக்க, என்ன முடிவு பண்ணிருக்க? என்றாள் அருகில் இருக்கும் கோப்பை புரட்டிக் கொண்டே, 

அவன் அவளை ஒரு முறை பார்க்க, காது கேட்குதா? நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல போல? என்ன முடிவு பண்ணிருக்க? என மீண்டும் கேட்டாள். 

எதை பத்தி? என சக்தியின் கவனம் file மேல் இருந்தது. டைவர்ஸ் பத்தி என ரிதம் அவனை எதேட்சையாக பார்ப்பதை போல கேட்க, சத்ய தேவ் அவளை பார்த்தான். 

ம்ம் என புருவம் தூக்கினாள். சரி பிராசஸ் பண்ணலாம் என மீண்டும் ஃபைலில் கவனம் செலுத்தினான். ரிதமுக்கு திடீரென புரை ஏறிட இப்போ என்ன சொன்ன? என கேட்டாள். 

அது தான் புரோசஸ் பண்ணிட வேண்டியது தான். உனக்கு டைவர்ஸ் தர எனக்கு டபுள் ஓகே என்றவன் file எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். தன்னை கட்டி அணைப்பான் என நினைத்தவளுக்கு எட்டி நிறுத்தி விட்டு செல்கிறான்? என்றதும் உள்ளுக்குள் கோபம் அப்படியே அழுகையாக மாறி விட டாடிஇஇஇ! என உதட்டை பிதுக்கினாள் ரிதம். 

சத்ய தேவ் வீட்டுக்கு வந்ததும் பேசலாம் என மனதை திட படுத்திக் கொண்டு ஒரு ரிப்போர்ட்டர் மிஸ்ஸிங் கேஸ் பற்றி இன்வெஸ்டிகேசன் கேஸ்சில் பிசியாகி விட்டாள். அப்படியே ஈவ்னிங் வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைய கம கம உணவின் வாசம் ஆனால் அனைத்தும் சைவம் எப்படி தான் இப்படி சமைக்க கத்துக்கிட்டிருப்பானோ? என வாசனையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு வந்தாள். 

ஸ்லீவ்லஸ் பனியன், 3/4th பெர்முடா பாட்டம் என சமையலறைக்கும், உணவு மேஜைக்கும் நடந்து கொண்டிருந்தான். குளித்து முடித்து ஃப்ரெஷ்சாக வெளியே வந்தவள். டைனிங் டேபிளில் உணவை அப்படியே வாசத்துடன் உள் இழுத்துக் கொண்டு தட்டில் போட்டாள். 

சத்ய தேவ் அவளுக்கு எதிரில் உணவை போட்டுக் கொண்டு அமர்ந்தவன் சாப்பிடும் வரை எதுவும் பேச வில்லை. ரிதம் அமைதியாக உணவை முடித்தவள் எழுந்து செல்ல போக, ஒரு நிமிஷம் என்றான். 

என்ன என சப்பு கொட்டிக் கொண்டே ஒவ்வொரு விரலையும் தனி தனியாக வாயில் சப்பிக் கொண்டு அவனை பார்த்தாள். சத்ய தேவ் பார்வையை உணவில் பதித்தவன். நாளைக்கு காலையில இருந்து டைவர்ஸ் வாங்குற வரைக்கும் உனக்கு தனியா குக் ஏற்பாடு பண்ணிருக்கேன். அவங்க வந்து சமைப்பாங்க என்றான். 

ரிதமின் முகம் இதை கேட்டதும் மாறிப்போனது. அவள் முகமெல்லாம் உப்பி போக அவனை பார்த்தாள். சத்ய தேவ் கண்டு கொண்டான் இல்லை. நேராக கை கழுவ சென்று விட்டான். வேகமாக அவளின் அறைக்கு சென்றவள் உடனே கிளம்பி விட்டாள். சத்ய தேவ் அவளிடம் எதுவும் கேட்க வில்லை கால் மேல் கால் போட்ட படி டீவி பார்த்துக் கொண்டிருந்தான். 

ரிதம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கதவு வரை சென்றவள் சமையல் காரங்களை வர சொல்லிடு என்று விட்டு கிளம்பினாள். ம்ம் என ஒற்றை பதிலுடன் சத்ய தேவ் முடித்துக் கொண்டான். எங்கே போற? எதுக்கு போற? என ஒரு வார்த்தை கூட அந்த கிராதகன் கேட்க வில்லை.  அவனுக்கு தெரியாமல் விம்மி அழுதவள் வேகமாக சென்றாள். 

அவள் சென்றதும் சத்ய தேவ் நிதினுக்கு அழைத்தான். “என்ன சொல்லு?”

என்ன பண்ற? 

என்ன டா பண்ணுவாங்க மயிறு? இந்நேரத்துக்கு எதுக்கு போன் பண்ண? என நிதின் கேட்க.. அந்த இராவடி ஆடிட்டிட்டு வெளியே போயிட்டா! 

அதுக்கு நான் என்ன பண்ணட்டும் என நிதின் கேட்க.. எங்கே போயிருக்கான்னு கேட்டு சொல்லு! உடனே எனக்கு போன் பண்ற! 

முடியாது என நிதின் சொல்ல..  சரி நான் அங்கே வரேன் ஹரிணி பக்கத்தில் இருக்காளா! என சக்தி கேட்க.. உன்னை * என சில கெட்ட வார்த்தைகளை பேசி போனை வைத்த நிதின் உடனே ரிதமுக்கு அழைத்தான். 

அதற்குள் ஆல்கஹால் அவளின் நரம்புகளில் பரவி விட்டது. ரிதம் போதைக்கு சென்று விட்டாள். உடன் இருப்பது பழக்க பட்ட ஆண் குரல். மிதுன் தேவ் தான். என்ன ஆச்சு? திடீர்னு குடிச்சிருக்க? என நிதின் கேட்க.. எனக்கு ஒருத்தனை கொல்லனும் நீ தான் கொள்ளணும் எனக்காக கொல் கொல்வியா நிதின்? என ரிதம் கேட்க.. யாரு அது சத்ய தேவ்வா! 

ஆமா ஆமா ப்ரோ எனக்கும் அவனை கொல் கொல்லனும் என மிதுன் லெக் பீசை எடுத்து ரிதமின் கையில் நீட்டினான் இந்த துப்பாக்கி வச்சு கொல்லி எப்டி ஐடியா? சூப்பர் என ரிதம் வாங்கி சாப்பிட்டாள். 

சரி நான் போன் வைக்கிறேன் என அவன் போனை வைக்க  போக… ஹே அவனை கொல்ல வேணும் உடனே வாடா என ரிதம் அழைக்க.. இதோ முதல்ல அவனை கொன்னுட்டு வரேன் என நிதின் போனை வைத்தான். 

மிதுன் அங்கு இருக்கிறான் என தெரிந்ததும் வேகமாக அவ்விடத்துக்கு சென்றவன். தன் தமயனை இரண்டு உதை எட்டி உதைத்து விட்டு மிதுன் இருக்கும் போஸ் அப்படியே பிடித்து அனானிமஸ் மெயிலில் சூரியாவுக்கு அனுப்பி வைத்து விட்டு தன் 50 கிலோ வெண்ணிலா ஐஸ்கிரீம் சிற்பத்தை தூக்கி கொண்டு வந்தான். 

அவனை கொல்லவும்! என பிதற்றிக் கொண்டே வந்தாள் ரிதம். அவளை அறையில் படுக்க வைத்தவன் ஆசை தீர பார்த்தான். கள் குடித்த உதட்டை கவ்வினான் போதை தான். பின்னால் திருப்பி அடித்தான். மிதுன் உன்னை அடிப்பேன் டா உன்னை தூக்கி என்னோட மீன் தொட்டில போடுவேன் அப்புறம் மீன் உன்னை முழுங்கிடும். என ரிதம் பிரண்டு கொண்டே சொல்ல.. சத்ய தேவ் அவளை புரட்டி எடுத்தவன் இடையின் பின் வட்டமாக கடித்து வைத்தான். 

ஹே வலிக்குதுஉஉஉ! நாயே! என ரிதம் அழ ஆரம்பிக்க.. வலிக்கட்டும் டி நல்லா வலிக்கட்டும் என சொன்னவன் உதட்டில் மீண்டும் முத்தமிட்டு விட்டு அவனது படுக்கை அறைக்கு சென்றான். 

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். ஏன் என்றால் இன்று இரவு தான் பார்ட்டி. ( போதை மருந்து மற்றும் போதை பழக்கம் மது அருந்துதல் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் உயிரை கொல்லும்) 

இரவு ஆனது ரிதம் பல சிந்தனைகளுடன் பார்ட்டிக்கு கிளம்பினாள். எப்டி என்னை டைவர்ஸ் பண்ணுவேன்னு சொல்லுவான்? நீ தானே டி சொன்ன? என ஒரு குரல் கேட்க..  நான் சொல்லுவேன். என்ன வேணாலும் சொல்லுவேன். அதுக்குன்னு அவன் எப்படி சொல்லலாம். அவன் இப்போ மட்டுமா சொல்றான் எப்போவும் உன்னை வேணாம்னு தான் சொல்றான். என கண்ணாடி பிம்பம் அவளை பார்த்து சிரித்தது. 

அகிலன் மீண்டும் மீண்டும் அழைக்க, இதோ கிளம்பிட்டேன் வரேன் என புறபட்டாள். பார்ட்டி வியற் அதுவும் பப்புக்கு ஏற்பது போல உடையணிந்து இருந்தாள். அவளின் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்டு, வெண்ணிலா பிளேவரில் பெர்ஃப்யூம், சங்கு கழுத்தை இறுக்கி பிடித்த படி நட்சத்திர கற்கள்  பதித்த ஒரு நெக்லஸ் அவளின் கழுத்தை இன்னும் கவர்ச்சியாக காட்டியது. இரண்டு இன்ச் இடையில் பெல்லி பட்டனில் பதித்திருக்கும் கர்கள் அழகாக எடுத்துக் காட்ட நெட் திரை போல தேகத்தை காட்டாமல் ஒரு உடையை அணிந்திருந்தாள். டார்க் ரெட்டில் கவர்ச்சியாக லிப்ஸ்டிக் என அப்சரஸ் போல தயாராகி கிளம்பினாள். 

சோனா, சோனாலி, இருவரும் பப்பின் எதிரில் சத்ய தேவ்க்கு காத்து கொண்டிருக்க, வந்து விட்டான். அனைவரும் புளூ டூத்தில் கனெக்ட் ஆகி இருந்தார்கள். பாஸ் இன்னிக்கி ஸ்ருதி கூட வர வேண்டிய பையன நாங்க டைவர்ட் பண்ணிட்டோம் நீங்க போங்க என கூறினார்கள். 

ம்ம் குட் நீங்க எப்டி உள்ளே வரது? என சக்தி கேட்க, நாங்க வந்திடுவோம் நீங்க முதல்ல அவள் முன்னாடி போய் நில்லுங்க பாஸ் என கூறினார்கள் இரு பெண்களும். ஹே பாஸ் எங்கே டி? என பெண்கள் இருவரும் தேட…  சத்ய தேவ் முகத்தில் அவனது கண்களை மறைக்கும் பொருட்டு மொத்தமாக ஒரு பிளாக் மாஸ்க் அணிந்திருந்தான். 

ரிதம் அவளின் பட்டாளம் வருவதற்காக காத்திருந்தாள். வீணா ஆக்னஸ் என இருவரும் வந்து விட  அகிலன் மெய் மறந்து பார்த்தான் மூன்று பெண்களையும். ஹலோ பாஸ் பார்த்தது போதும் உள்ளே போலாமா என ஆக்னஸ் கூற, அகிலன் தலையை கோதிய படி உள்ளே நுழைந்தான். ரிதம் மற்றும் ஆக்னஸ் இருவரையும் உள்ளே அழைத்து செல்ல அகிலனின் நண்பர்கள் வந்திருந்தார்கள் அனைவரும் கலகலவென சிரித்த படி உள்ளே நுழைந்தார்கள். 

சத்ய தேவ் போனை எடுத்துக் கொண்டு ஸ்ருதிக்கு எதிரே நின்றவன். ஹனி இப்போ வர முடியுமா என கேட்க, நிதின் வேகமாக போனை பிடுங்கி கொண்டு வெளியே சென்றவன். இனி அவளை கூப்பிடும் வேலையை வச்சுக்காத! இப்போ தான்டா அவளுக்கு பீரியட்ஸ் முடிஞ்சிருக்க சும்மா சும்மா எதுக்கு டா அவளை கூப்புர்ர உன்னை kill you என கூறினான். 

இப்போ அவள் தூங்கும் நேரம் நாளைக்கு ஆரம்பி! என சத்ய தேவ் உண்மையை கூற திரும்பி பார்த்தான் நிதின். ஹரிணி கண்கள் சொக்க அமர்ந்திருந்தாள். சக்தி you** என கெட்ட வார்த்தையை கூற கண்களை மூடிய படி போனை வைத்தான். 

ஹலோ எக்ஸ்கியூஸ் மி என ஒரு குரல்.. மாஸ்க் மனிதனாக சக்தி திரும்பி பார்க்க, அவனது கண்களில் மயங்கிய சுருதி முடியை காதுக்கு ஒதுக்கிய படி, அழைத்தாள். 

சக்தி மெல்ல திரும்பினான். If you don’t mind.. நீங்க தமிழா? என கேட்டாள். 

ம்ம் ஆமாங்க! என சக்தி மென்மையுடன் பேச, அப்பாடி என சொல்லியவள் அவனது கைகளை கோர்த்துக் கொண்டு நம்ம ரெண்டு பேரும் உள்ளே போலாமா? என கேட்க.. சுருதி தன்னை பிடித்திருந்த கைகளை மாறி மாறி பார்த்தான். சாரி மிஸ்டர் என மெதுவாக கைகளை எடுத்துக் கொண்டாள். அவள் எடுத்துக் கொண்ட கையை மெதுவாக பிடித்தவன். இங்கே கையில் என்ன என அவளின் மடக்கு கையில் இருந்த ஊசி குத்தபட்ட கையை பார்த்து வருடி ஊதினான். 

ஸ்ருதி கண்கள் விரிய அவனை பார்த்தவள். அது வந்து எனக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு ஹேன்ட்சம் என்றாள். உள்ளே போலாமா என கைகளை நீட்டினான். ம்ம் என அவனை வளைத்து பிடித்தவள் உள்ளே சென்றாள் சக்தியுடன். 

உள்ளே சென்றதும் சக்தி அவளிடம் இருந்து விலக, அதான் கூட யாரும் வரலயே என சொல்லிய படி அவன் மேல் சாய்ந்து கொண்டவள். அவனது சட்டை பட்டனை திருகிய படி அவளின் விரலால் கொஞ்சம் கொஞ்சமாக மாஸ்க் பக்கம் சென்றது. கம்பனி கொடுக்கிறேன் ஆனால் மாஸ்க் பக்கம் கை என எடுத்து விட்டான். 

உன் பேர் என்ன? என இரண்டு ட்ரிங்க்ஸ் எடுத்து அவனுக்கு ஒன்று நீட்டினாள். சக்தி மெதுவான குரலில் இந்த போதை எனக்கு பத்தாது என்றான். வேற? வேற என்ன வேணும்? என அவள் திடுக்கிட்டு பார்க்க, எனக்கு வேற மாதிரி போதை வேணும். என கொஞ்சம் உதடுகள் தந்தி அடிக்க கூறினான் சக்தி. 

ஹே என்னாச்சு உன் கைக்கு? என ஸ்ருதி தெரியாததை போல கேட்க, ஆமா எனக்கு ஒயிட் சுகர் வேணும்! என கண்களை மூடிய படி கேட்டான். ஸ்ருதி உதட்டை கடித்துக் கொண்டு வெயிட் பண்ணு பேபி இப்போவே வேணுமா என அவளின்  பேர்சில் இருந்து இரண்டு எடுத்து நீட்டினாள். சக்தி கைகள் நடுங்க அதை வாங்கியவன் வேகமாக அவளின் கையில் பணத்தை தினித்தான். தேங்க்ஸ் பேபி! Thank you so much உன்னால தான் எனக்கு என அவன் திணற, ஓகே ஓகே ஃபர்ஸ்ட் போட்டுக்க என ஸ்ருதி சிரித்துக் கொண்டே கூற, இதோ இப்போவே என சக்தி அவனது பாக்கெட்டில் இருந்து ஒயிட் குளுகோஸ் பாக்கெட் இரண்டை வாயில் கொட்டியவன் கண்களை இறுக்கி மூடி போதையில் உச்சம் எய்துவதை போல நின்றான். 

மூச்சு வாங்கிக் கொண்டே எப்படி உங்க கிட்ட? என சக்தி கேட்க.. நானும் இதுக்கு அடிமை என ஸ்ருதி மூச்சு வாங்க கூற, அப்டியா! எனக்கு இப்போ சப்ளை கிடைக்க மாட்டிக்கிது. எனக்கு கொஞ்சம் கிடைக்குமா? என மாஸ்க் மனிதனான சத்ய தேவ் கேட்க.. 

அப்போ என் கூட date வருவியா? உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என ஸ்ருதி அவனுக்கு முத்தமிட வர, சக்தி யோசிப்பது போல பாவனை செய்தான். ஸ்ருதி அவனை பார்க்க, போன் நம்பர்? என சக்தி நீட்ட..  உன் பேர் என்ன? என ஸ்ருதி கேட்டாள். 

ரிதமுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போல ஒரு உணர்வு எவ்வளவு திமிர்? என கண்ணம் உப்பிக் கொள்ள வேகமாக அவளின் பேர்ஸ் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பி விட்டாள். 

சக்தி என கூறினான். அதற்குள் சோனா ப்ளூ டூத்தில் பாஸ்.. இங்கே ரிதம் கோபமா கிளம்பி போறா! உங்களை பார்த்த்திட்டா போல! நீங்களும் ஸ்ருதி கூட இருக்கிறத.. என கூற.  

ஸ்ருதி கொஞ்சம் வாட்டர் வேணும் என சக்தி அவளிடம் கூறி விட்டு, இங்கே இருந்து போறதே நல்லது என சக்தி மெதுவாக கூற, பாஸ் வெளியே டிரக் use பண்ணிக்கிட்டு ரவுடி பசங்க சுத்த்திட்டு இருக்கானுங்க அது தான் கொஞ்சம் பயமா இருக்கு அவள் அகிலன் சார் கூட போகல தனியா வெளியே போயிட்டா! இட்ஸ் ஓகே பாஸ் நீங்க ஸ்ருதிய பாருங்க நாங்க பார்த்துக்கிறோம் என அவர்கள் செல்ல போக.. 

No no நான் போறேன். நீங்க ரிஸ்க் எடுக்க வேணாம் என சொன்னவன். ஸ்ருதிஇஇ! என அழைத்தான். 

வாட்டர் என அவள் நீட்ட.. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் ஜஸ்ட் டென் மினிட்ஸ் என அவன் கூற, சீக்கிரம் வா! என அவனது கன்னத்தில் முத்தம் பதித்தாள் ஸ்ருதி. 

ம்ம் என புன்னகைத்தவன் வேகமாக ரெஸ்ட் ரூம் பக்கம் செல்வதை போல சென்று விட்டு அங்கிருந்து உடையை மாற்றிக் கொண்டு ரிதமை தேடி சென்றான். ரிதம் கார் எடுத்து வர வில்லை டாக்சி புக் செய்து விட்டு உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள் நின்று கொண்டிருக்க, ரவுடி கூட்டம் அவளை நோட்டமிட்ட படி சுற்றி வளைத்தது. 

ஹாஹாஹா! அம்மாஆஆஆ!! என வலியில் துடித்தவன் சரியாக கை முட்டி மடக்கும் இடத்தில் குண்டு துளைத்துக் கொண்டு போக இரத்தம் பீறிட்டு கொட்டியது. சீப் ருத்ரனுக்கு குண்டடி பட்டிருச்சு என வாக்கி டாக்கியில் பேசிய படி தகவல் கொடுக்க, அவனை அப்படியே நம்ம ஸ்பாட்டுக்கிட்ட வர சொல்லுங்க இங்கே ஃபர்ஸ்ட் எயிட் டாக்டர்ஸ் இருக்காங்க. என சொல்லி முடிக்க ருத்ரன் மெல்ல மெல்ல உருண்டு ஸ்பாட்டுக்கு வந்து மயக்கம் அடைந்தான். 

தீவிரவாதிகளின் துப்பாக்கி சூடு தீவிரமாக போய் கொண்டிருக்க, இரத்தம் நிறைய கொட்டுது புளைப்பானா? என அங்கிருப்பவர்கள் கேட்டு கொண்டிருந்தார்கள். இல்லையெனில் குறைந்த காயங்கள் இருக்கும் மற்றவர்களை கவனிக்க சென்று விடுவார்கள் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்ற வேண்டும். நிறைய நேரம் செலவலித்து ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு பதில் நான்கு பேர் உயிரை காப்பாற்ற தான் முன்னுரிமை கொடுப்பார்கள். 

டாக்டர் தேன் நிலா வந்தாச்சு என குரல் கேட்க..  ருத்ரன் மெதுவாக கண் மணியை உருட்டினான்.  இங்கு வந்ததில் இருந்து அனைத்து ஆர்மி வீரர்களும் அதிகமாக ஒரு பெண்ணை பற்றி தான் பேசுவார்கள். ருத்ரன் காதுகளில் அதிகம் இந்த பெயர் கேட்டு கேட்டு சலித்து விட்டது. ஆனால் அவளை பார்க்க வேண்டும் என முயற்சி செய்ததும் இல்லை இங்கு வந்ததில் இருந்து அவளை அவன் நேரில் பார்த்ததும் இல்ல. அவள் யார் என ருத்ரனுக்கு  தெரியாது.

இதோ அந்த பெயர் கேட்க, எதோ ஒரு உந்துதலில் கண்மணிகளை மெதுவாக உருட்டினான். தூரத்தில் தெரிந்த உருவம் மெது மெதுவாக அருகில் தெரிய ஆரம்பித்தது. இவளாஆஆஆ!! என பற்களை கடித்தான். 

ஆனால் நிலாவின் முகத்தில் அவனை பார்த்ததில் எந்த வெளிப்பாடும் இல்லை. சாந்த சொருபினியாக அருகில் நெருங்கியவள். அவனை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. நீ டிரீட் பண்ணி தான் நான் பிழைக்க வேணும்னா அதுக்கு நான் செத்து போறேன் டி! என குருதி கொட்டி பலம் இழந்த போதிலும் உதட்டை கடித்தபடி கூற.. அப்படியாஆஆ! ஒரே ஒரு favor சாரி ஆசை! என்னோட கையில் கொல்றேன் என சொன்ன நிலா கைகளில் கிளவ்ஸ்  போட்டுக் கொண்டு ருத்ரனின் கையில் இருக்கும் புல்லட்டை அனாதீசியா இல்லாமல் மெடிக்கல் அப்பாரட்டஸ் கொண்டு எடுத்தாள். 

ஸ்ஹாஆ! என ருத்ரன் வலியில் முனக, இன்னும் ரெண்டு குத்து குத்தினால் நிச்சயம் பரலோகம் தான் என நிலா பேசிய படியே தையல் போட்டாள். அவ்ளோ சீக்கிரம் நான் சாக மாட்டேன் டி! பாவமா பண்ண நீ, உன்னோட மினிஸ்டர்  நொண்ணன் , இன்னொருத்தன் நிவாஸ் பெல்லோ மொத்தத்தில் உன் குடும்பத்தில்  எல்லாரும் நல்லாருக்கும் போது எனக்கென்ன டிஇஇ! என பேசிக் கொண்டே இருந்தான். 

நிலா அவன் பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனுக்கு சரியான சிகிச்சை அளித்து முடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

ரிதம்…? 

சத்ய தேவ்…?

அய்யோ கடுப்படிக்கிற ஸ்ருதி..? 

நிலா…? 

ருத்ரன்…? 

நிலாவோட தைரியம் எப்படி இருக்கு? போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?  கமெண்ட் பண்ணுங்க.. பார்ப்போம் 

-வருவான் 

You may also like

Leave a Comment